இந்தியாவின் புதிய பல்லுயிர்த் திட்டம், 2030-ஆம் ஆண்டுக்குள் 30% சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்விட மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டுள்ளது

 இந்தத் திட்டம் குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் இலக்குகளைப் (Kunming-Montreal Global Biodiversity Framework) பின்பற்றுகிறது.


இந்தியா புதுப்பிக்கப்பட்ட பல்லுயிர் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 2030-ஆம்-ஆம் ஆண்டுக்குள் அதன் நிலம், உள்நாட்டு நீர் மற்றும் கடல் பகுதிகளில் 30% பாதுகாக்க விரும்புகிறது.  இது உலகளாவிய பல்லுயிர் இலக்குகளுடன் பொருந்துகிறது.


புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் திட்டம் மற்றும் செயல் திட்டம் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) கொலம்பியாவின் கலியில் நடந்த 16வது ஐ.நா பல்லுயிர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டது. இது 23 தேசிய இலக்குகளைக் கொண்டுள்ளது.  இவை குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் 23 உலகளாவிய இலக்குகளுடன் பொருந்துகின்றன. 2022-ஆம் ஆண்டில் கனடாவில் நடைபெற்ற 15-வது ஐ,நா பல்லுயிர் மாநாட்டில் இந்த கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


குன்மிங்-மாண்ட்ரீல் கட்டமைப்பானது 2030-ஆம் ஆண்டளவில் உலகின் 30% நிலம் மற்றும் பெருங்கடல்களை பாதுகாக்க விரும்புகிறது. சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளையும் சரி செய்ய விரும்புகிறது. காடுகள், ஈரநிலங்கள், ஆறுகள் ஆகியவையும் இதில் அடங்கும். இது சுத்தமான நீர் மற்றும் காற்றை தொடர்ந்து வழங்க உதவும்.


பன்முகத்தன்மை கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இது 1994-ஆம்-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டில் இணைந்தது.  உலகில் அறியப்பட்ட உயிரினங்களில் 7-8% இந்தியாவில் உள்ளது.  இது உலக நிலப்பரப்பில் வெறும் 2.4% மட்டுமே.


2017-2018-ஆம் ஆண்டு முதல் 2021-2022-ஆம் ஆண்டு வரை பல்லுயிர் பெருக்கத்திற்காக இந்தியா ₹32,200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 2029-2030-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமார் ₹81,664.88 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது.


இந்தியாவின் பல்லுயிர் இலக்குகள் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளன. முதலாவது, 'பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தல்களைக் குறைத்தல்'. அதற்கு எட்டு இலக்குகள் உள்ளன.  அவற்றில் ஐந்து இலக்குகள் பெரும் அச்சுறுத்தல்களைக் கையாள்கின்றன. இவை நிலம் மற்றும் கடல் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், மாசுபாடு, உயிரினங்களின் அதிகப்படியான பயன்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகியவை அடங்கும். மூன்று இலக்குகள் சுற்றுச்சூழல் அமைப்புகளை சரிசெய்தல், உயிரினங்களை நிர்வகித்தல் மற்றும் காட்டு இனங்களை சட்டப்பூர்வமாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.


இரண்டாவது பகுதி "நிலையான பயன்பாடு மற்றும் பகிர்வு நன்மைகள் மூலம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்". இதற்கு ஐந்து இலக்குகள் உள்ளன.  இவை விவசாயம், விலங்கு பராமரிப்பு, மீன்பிடித்தல் மற்றும் காடுகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகள் கிராமப்புற சமூகங்கள் வாழ உதவுகின்றன.  இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள், பழங்குடியினர் மற்றும் காடுகளில் வசிப்பவர்கள் உள்ளனர். காட்டு உயிரினங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை நிர்வகித்தல், நகர மக்களுக்கு பசுமையான இடங்களுக்கு அணுகலை வழங்குதல், நன்மைகளை நியாயமாகப் பகிர்தல் மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெறுதல் போன்றவற்றையும் இலக்குகள் உள்ளடக்கியது.


மூன்றாவது பகுதி "செயல்படுத்துவதற்கான கருவிகள் மற்றும் தீர்வுகள்". அதற்கு பத்து இலக்குகள் உள்ளன. இவை வளர்ச்சி இலக்குகளுடன் பல்லுயிர் பெருக்கத்தில் இணைகின்றன.  அவை நிலையான உற்பத்தி மற்றும் குறைவான கழிவுகளை ஊக்குவிக்கின்றன.  தீங்கு விளைவிக்கும் நிதியை மாற்றுதல், திறன்களை உருவாக்குதல், அறிவைப் பகிர்தல், வளங்களைப் பெறுதல் மற்றும் பல்லுயிர் பற்றி நியாயமான முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துகின்றன.


இந்தியாவின் இலக்கு 3, நாட்டின் 30% நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்த விரும்புகிறது. இந்த இலக்கு பல்லுயிர் பாதுகாப்பில் சமூகங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது, அதே நேரத்தில் நிலையான பயன்பாட்டை உறுதி செய்கிறது.


இந்தியாவின் இலக்கு 2 சுற்றுச்சூழல் சேதத்தை அங்கீகரிக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் 30% சேதமடைந்த நிலம் மற்றும் நீர் அமைப்புகளை மீட்டெடுக்க விரும்புகிறது.


சுதந்திரத்திற்குப் பிறகு பல காரணிகள் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதிக்கின்றன. விவசாய வளர்ச்சி, தொழில்கள், சாலைகள், சுரங்கம் மற்றும் நகரங்கள் ஆகியவை இதில் அடங்கும். இயற்கை வளங்களையும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது சுற்றுச்சூழல் அமைப்புகள் வழங்கும் பலன்களைக் குறைத்துள்ளது. அதனால் தான் மறுசீரமைப்பு  தற்போது முக்கியமானது.


NBSAP இன் இலக்கு 16 பல்லுயிர் இழப்புக்கான மூலக் காரணங்களாக அதிகப்படியான நுகர்வு மற்றும் கழிவு உற்பத்தியைக் குறிப்பிடுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்காக இந்தியா மிஷன் லைஃப் தொடங்கியுள்ளது


உலகின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்காக 1992-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட, உயிரியல் பன்முகத்தன்மைக்கான மாநாடு (CBD) நாடுகள் தேசிய அளவில் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கும் நீடித்துப் பயன்படுத்துவதற்கும் ஒரு முக்கிய கருவியான NBSAP ஐ உருவாக்க வேண்டும்.  ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் அவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிவிக்க வேண்டும்.

                  



Original article:

Share:

மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் பெறுவதற்கான விதிகள் திருத்தம்: மாற்றங்கள் என்ன? அவை ஏன் எதிர்க்கப்படுகின்றன? - நிகில் கானேகர்

 விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளை கடுமையாக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், தகுதிகாண் பருவ ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் தனது மாற்றுத்திறனாளி மற்றும் சாதி சான்றிதழை மோசடி செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (திருத்தம்) விதிகள், 2024 (Rights of Persons with Disabilities (Amendment) Rules, 2024) ஆகியவற்றை அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட உடல் குறைபாடு அடையாள அட்டைகளுக்கு (unique disability identity cards (UDID)) விண்ணப்பிப்பது மற்றும் வழங்கும் செயல்முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. 


விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளை கடுமையாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை ( Department of Empowerment of Persons with Disabilities) இந்த திருத்தங்களை செய்துள்ளது. சமீபத்தில், தகுதிகாண் பருவ ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் தனது மாற்றுத்திறனாளி மற்றும் சாதி சான்றிதழை மோசடி செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 


விதிமுறைகளில் மாற்றங்கள் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கானவை என்று அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குழுக்கள் விண்ணப்ப செயல்முறையை சிக்கலானவை என்று கூறி அவற்றை திரும்பப் பெற அழைப்பு விடுத்துள்ளன. 


எந்த செயல்முறைகள் திருத்தப்பட்டுள்ளன? 


மாற்றுத்திறனாளிகளுக்கு திருத்த விதிகள் விதி 17 மற்றும் விதி 18-ல் மாற்றங்களைச் செய்துள்ளன. விதி 17 விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் அதிகாரம் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பானது. விதி 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட உடல் குறைபாடு அடையாள அட்டைகளை (UDID) வழங்குவது மற்றும் அவற்றை வழங்குவதற்கான காலக்கெடு தொடர்பானது. 


UDID போர்டல் ஏற்கனவே இயலாமையின் அடிப்படையில் வண்ண குறியிடப்பட்ட அட்டைகளை வழங்கினாலும், திருத்தப்பட்ட விதிகள் இப்போது வெள்ளை, மஞ்சள் மற்றும் நீல அட்டைகள் வழங்கப்படும் என்று குறிப்பிடுகின்றன. 40 சதவீதத்திற்கும் குறைவான குறைபாடு கொண்டவர்களுக்கு வெள்ளை நிறமும், 40-80 சதவீத இயலாமை உள்ளவர்களுக்கு மஞ்சள் நிறமும், 80 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குறைபாடு கொண்டவர்களுக்கு நீலமும் இருக்கும். 


மார்ச் மாதத்தில் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் 'மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை' பயன்படுத்தி இயலாமையின் தீவிரம் ஆராயப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி இருபத்தியொரு வெவ்வேறு வகையான குறைபாடுகள் மற்றும் அவற்றின் தீவிரம் மதிப்பிடப்படுகின்றன. 


இந்த செயல்முறைகளில் என்னென்ன மாற்றங்கள்? 


விண்ணப்பங்களின் செயல்முறை குறித்த விதி 17 கீழ், மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பத்தை UDID போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது UDID அட்டைகளுக்கு சட்டப்பூர்வ ஆதரவையும் வழங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட முந்தைய விதிகளில், டிஜிட்டல் ஊடகம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது குறித்து குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை. மேலும், UDID அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை. 


விண்ணப்பதாரர் வசிக்கும் மாவட்டத்தின் "மருத்துவ அதிகாரி அல்லது வேறு ஏதேனும் அறிவிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரிக்கு" மட்டுமே விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். இந்த மாற்றம் முக்கியமானது. ஏனெனில், விதிகளின் முந்தைய பதிப்பு விண்ணப்பத்தை "தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரியிடம்" மட்டுமே சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவில்லை. 


மேலும், விதி 17 (2) இன் கீழ், விண்ணப்பதாரர்கள் இப்போது அடையாளச் சான்று மற்றும் ஆறு மாதங்களுக்கு மேற்படாத புகைப்படத்துடன் தங்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும்.  முன்னதாக, விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் இரண்டு சமீபத்திய புகைப்படங்கள் விண்ணப்பிக்க போதுமானதாக இருந்தன. 


வழங்கல் விதிகளின் கீழ், சான்றிதழ் மற்றும் UDID அட்டை இப்போது முன்பு இருந்ததற்கு பதிலாக மூன்று மாதங்களுக்குள் வழங்கப்படலாம். சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்பு மாற்றுத்திறனாளிகளை பரிசோதிக்கும் மருத்துவமனைகளின் பின்னூட்டங்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். 


மேலும், புதிய விதிகளின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியால் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், ஒரு விண்ணப்பம் செல்லாது என்று கருதப்படும். 


மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள் ஏன் அதை திரும்பப் பெற முயன்றன? 


பல்வேறு மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் இந்த திருத்தங்களை விமர்சித்துள்ளனர். ஏனெனில், இந்த மாற்றங்கள் மோசடிகளைத் தடுக்கும் பொறுப்பை அரசாங்கத்தை விட விண்ணப்பதாரர்கள் மீது சுமத்துகின்றன. 


உதாரணமாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய தளம் (National Platform for the Rights of the Disabled (NPRD)) UDID போர்ட்டல் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் சமூகம் டிஜிட்டல் ஊடகங்களுடன் வசதியாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியது. 


"அறிவிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்" தேவை குறித்து, இயலாமையை சான்றளிக்கும் செயல்பாட்டின் போது மருத்துவ வாரியங்களுக்கு உதவும் அறக்கட்டளைகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய தன்னாட்சி மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் உதவியை இது பறிக்கிறது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். 


சான்றிதழ்கள் மற்றும் UDID அட்டைகளை வழங்க அதிகாரிகளுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கும் பிரச்சினையில், இது செயல்முறையை தாமதப்படுத்தும் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். கல்வி விண்ணப்பங்களுக்கு அல்லது இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்கு அவசர அடிப்படையில் சான்றிதழ் தேவைப்படும் நிகழ்வுகள் உள்ளன என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். நீண்ட குறைந்தபட்ச  அளவை வழங்குவது,  இந்த செயல்முறையை நீட்டிக்கும் என்று அவர்கள் கூறினர். 


ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள பழமையான புகைப்படங்கள் போன்ற கூடுதல் துணை ஆவணங்களைக் கோருவது, உணர்ச்சி மற்றும் இயக்கம் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு அதிக சுமையை சேர்க்கிறது என்று NPRD குறிப்பிடுகிறது.




Original article:

Share:

இந்திய கூட்டாட்சி என்பது ஒரு உரையாடல் - டி ஒய் சந்திரசூட்

 இது எளிதானதாக இருக்கலாம் அல்லது அமைப்புகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தலாம். கூட்டாட்சி முறை தழைத்தோங்க இவை இரண்டும் சம அளவில் முக்கியமானவை. 


அரசியலமைப்பு பற்றிய உரையாடல்கள், குறிப்பாக அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு அப்பால் செல்பவை. அவை வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் தலைப்புகளாக மட்டுமே காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, எவ்வாறாயினும், இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் அதில் உள்ளடங்கிய ஒவ்வொரு முடிவுகளாலும் பாதிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். இந்த தாக்கத்தை குடிமக்களாகவும், ஜனநாயகத்தில் பங்கேற்பவர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் உணர்கிறோம்.


அத்தகைய அரசியலமைப்பு தேர்வில் ஒன்று அரசியல் அதிகாரப் பகிர்வு  கூட்டாட்சி. கேம்பிரிட்ஜ் அகராதி (Cambridge Dictionary ) கூட்டாட்சி என்பதை ஒரு மத்திய அரசாங்கத்தின் கீழ் தனித்தனி மாநிலங்களை ஒழுங்கமைக்கும் ஒரு அரசியல் அமைப்பாகும் என்று வரையறுக்கிறது.  இது "சுய ஆட்சி மற்றும் பகிரப்பட்ட ஆட்சி ஆகியவற்றின் கலவையின் அடிப்படையில் ஓரளவான அரசியல் ஒருங்கிணைப்பு" என்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. 


பிரிவினையை வரலாற்றுப் பின்னணியாலும், சுதந்திரத்தின் அடிப்படையிலும், நாட்டின் வேறு சில பகுதிகள் எதிர்கொண்ட பிரிவினைவாத அச்சுறுத்தல்களாலும் இந்தியா கூட்டாட்சி முறையை ஏற்றுக்கொண்டது. பி.ஆர்.அம்பேத்கர் அரசியலமைப்பில் கூட்டாட்சி என்ற வார்த்தையை சேர்க்கும் யோசனையை எதிர்த்தார். 'ஒன்றியம்' என்ற வார்த்தையின் பயன்பாட்டை விளக்கினார். 


மேலும் அது அழிவற்றது என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், மத்திய மற்றும் மாநிலங்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட சட்டமன்றங்களில் சுதந்திரமான கூட்டாட்சி அமைப்பு என்பதும், மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு அடிபணிந்தவை அல்ல என்பதும் தெளிவாக இருந்தது. 


கூட்டாட்சி என்பது ஒரு மதிப்பிற்குரிய அரசியலமைப்பு மதிப்பு என்றும், அது எல்லா முறையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாம் அடிக்கடி கருதுகிறோம். அமெரிக்காவில் அடிமை முறைக்கு ஆதரவான முக்கிய வாதங்களில் ஒன்றாக கூட்டாட்சிக் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது என்று நான் சொன்னால் அது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  


இதற்கு மாறாக, இந்திய அரசியலமைப்பு பாகுபாட்டை ஆக்கப்பூர்வமான முறையில் கையாண்டது.  ஏழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்களாக துறைகளை வரையறுப்பதன் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டமியற்றும் திறன் வரையறுக்கப்படுகிறது. அடிப்படையில், இந்த பட்டியல்கள் பாகுபாடு எதிர்ப்பு மற்றும் அடிப்படை உரிமை விதிமுறைகளை மாநிலங்களுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ முழுமையாக ஒதுக்கவில்லை. 


கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் மிக முக்கியமானது என்னவென்றால், அரசியலமைப்பை ஆதரிக்கும் சில மதிப்புகள் உள்ளன. இந்த மதிப்புகள் பெரும்பான்மையினரின் விருப்பத்தை முறியடிக்க கூடியதும் ஆகும். கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் என்று இன்று எந்தவொரு குடிமகனும் பறைசாற்றக்கூடியது ஒரு முக்கியக் கோட்பாடு ஆகும்.


அமெரிக்க அரசியலமைப்பு ஒற்றையாட்சியை விட கூட்டாட்சி என்றும்,  இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சியை விட ஒற்றையாட்சி என்றும் சட்ட அறிஞர்கள் வாதிடுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். இந்திய அரசியலமைப்பு ஒரு மையப்படுத்தும் போக்கைக் கொண்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? இந்திய அரசியலமைப்பின் "மையப்படுத்தும் போக்கு" (centralising tendency), அதன் இரண்டு அம்சங்களிலிருந்து உருவாகிறது என்று அடிக்கடி வாதிடப்படுகிறது.


 ஒன்றியத்தின் அவசரகால அதிகாரங்கள் மற்றும் மத்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட எஞ்சிய அதிகாரங்கள்  இதை நான் அதீத எளிமைப்படுத்தலின் விகாரம் என்று அழைக்கிறேன்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மையப்படுத்தும் அம்சங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அரசியலமைப்பு ஒரு சமநிலையையும் வழங்குகிறது. 


உதாரணமாக, அரசின் அதிகாரங்களைப் பாதிக்கும் அரசியலமைப்பு விதிகளைத் திருத்துவதற்கு ஒரு கடுமையான நடைமுறை உள்ளது. அதேபோல், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்குகிறது.  இருப்பினும், அரசியலமைப்பின் விதிகள் மாநிலங்கள் ஒன்றியத்திற்கு "கீழ்ப்படிந்தவை" (subordinate) அல்ல என்பதை உறுதிப்படுத்த ஆளுநரின் பங்கையும் கட்டுப்படுத்துகின்றன. 


கூட்டாட்சி என்பது ஒரு ஒற்றைக் கருத்து அல்ல. 1977-ஆம் ஆண்டில்,  உச்ச நீதிமன்றம் முதல் முறையாக இந்தியாவில் கூட்டாட்சியின் மாதிரியை முக்கியமாக "கூட்டுறவு" (cooperative) என்று விவரித்தது.  கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒரு ஆட்சி முறையாகும். அங்கு மாநில மற்றும் மத்திய அமைப்புகள் ஒன்றிணைந்து வளர்ச்சியின் பொதுவான இலக்கை அடைய ஆளுமையில் எழும் வேறுபாடுகளை "சரிசெய்ய" செயல்படுகின்றன. 


2022-ஆம் ஆண்டில் நான் எழுதிய ஒரு தீர்ப்பில், மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இடையிலான "ஒத்துழைப்பு" (cooperation) மட்டுமே கூட்டாட்சி கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி என்பது அவசியமில்லை என்று வாதிட்டேன்.  இந்திய கூட்டாட்சியை ஒரு உரையாடலாகப் பார்ப்பது அவசியம். இது எளிதானதாக இருக்கலாம் அல்லது அமைப்புகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடும். கூட்டாட்சி முறை தழைத்தோங்க இவை இரண்டும் சம அளவில் முக்கியமானவை. 


இந்தியாவில் கூட்டாட்சியின் வடிவத்தைப் பற்றி கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான புள்ளி, "சமச்சீரற்ற கூட்டாட்சி" (asymmetric federalism) என்று நாம் குறிப்பிடுகிறோம். இந்த வெளிப்பாட்டை இரண்டு மட்டங்களில் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்தந்த துறைகளில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்தின் சுதந்திரம், மற்றும் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றியத்துடன் பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான மற்றும் சமச்சீரற்ற உறவு.  


நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், அனைத்து மாநிலங்களையும் ஒரு பெட்டியில் அடைத்து, ஒன்றியத்துடன் ஒப்பிடுகையில் அவற்றை ஒரே மாதிரியாக நடத்துவது சாத்தியமில்லை. அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டாட்சியின் பிற வெளிப்பாடுகளின் விளக்கங்கள் மூலம் கூட்டாட்சி அமைப்பை வடிவமைக்கின்றன. 


என்னைப் பொறுத்தவரை, கூட்டாட்சி குறித்த இந்திய அரசியலமைப்பு சட்டவியலை மையநோக்கு (centripetal) சகாப்தம் மற்றும் மையவிலக்கு (centrifugal) சகாப்தம் என இரண்டு சகாப்தங்களாகப் பிரிக்க வேண்டும். எஸ்.ஆர்.பொம்மை vs இந்திய ஒன்றியம் (S R Bommai vs Union of India) என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முந்தைய காலத்தை மையநோக்கு சகாப்தம் என்று நான் அழைக்கிறேன். இங்கு, நீதிமன்றம் ஒரு மையநோக்கு தாக்கத்துடன் விளக்கங்களை ஏற்றுக்கொண்டது.  


அதாவது, அது ஒரு மையப்படுத்தும் போக்கைக் கொண்டிருந்தது. இது மத்திய அரசுடன் அதிகாரத்தைக் குவிக்க வழிவகுத்தது. கூட்டாட்சி மாநிலங்களிலிருந்து விலகிச் சென்றது.  எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்புக்குப் பிந்தைய சகாப்தத்தை மையவிலக்கு சகாப்தம் என்று நான் அழைக்கிறேன். இந்த காலகட்டத்தில், நீதிமன்றம் ஒரு மையவிலக்கு தாக்கத்தைக் கொண்ட ஒரு விளக்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.


 அதாவது கூட்டாட்சி மாநிலங்களின் சுயாட்சியை மேம்படுத்தும் ஒரு விளக்கம்.  எஸ்.ஆர். பொம்மை வழக்கில், மாநிலங்கள் மத்திய அரசின் வெறும் பிறசேர்க்கைகள் அல்ல என்றும், மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் பாதையை நீதிமன்றம் எடுக்க முடியாது என்றும் கூறப்பட்டது. 


கூட்டாட்சிக் கோட்பாட்டின் மூலம் ஜனநாயக நிர்வாகத்தை உறுதி செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பை சமீபத்திய உதாரணத்தின் உதவியுடன் விளக்க விரும்புகிறேன். 


விதி 200, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநருக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன என்று அரசியலமைப்பு கூறுகிறது. முதலாவது, அவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். இரண்டாவது, அவர் மசோதவை நிறுத்தி வைக்க முடியும். மூன்றாவதாக, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாவை அவர் ஒதுக்கி வைக்கலாம். 


இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு அவையைக் கேட்டுக் கொள்ளும் செய்தியுடன் ஆளுநர் மசோதாவை சபைக்கு அனுப்பலாம் என்று குறிப்பிடுகிறது. எனது தலைமையிலான அமர்வின் முன் இரண்டாவது விருப்பத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுந்தது. அதாவது, ஆளுநர் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியுமா?, அப்படி இருந்தால் அந்த மசோதா "இயற்கை மரணம்" என்று குறிபிட்டேன். ஆளுநருக்கு ரத்து செய்யும் அதிகாரம் வழங்குவது என்ற இரண்டாவது விருப்பத்தை வாசிக்க முடியாது என்று நாங்கள் கருதினோம். ஏனெனில், அது கூட்டாட்சி மற்றும் பிரதிநிதித்துவ ஆட்சி என்ற கோட்பாட்டை அரித்துவிடும். மறுபரிசீலனைக்கு அனுப்புவதற்காக மட்டுமே ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 


விவாதத்தின் சாராம்சம் இதுதான்: நமது அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி அமைப்பு. அறிஞர் மார்க் கலன்டர் இந்திய அரசியலமைப்பு "குழுக்களுக்கு இடையிலான உறவுகளை தீவிரமாக மறுசீரமைப்பதாகும். பழைய உரிமைகள் ஒழிக்கப்படுகின்றன, புதிய உரிமைகள் நிறுவப்படுகின்றன" என்று வாதிட்டார்.  இன்று இந்த "புதிய உரிமைகள்" என்ன?, கூட்டாட்சி எவ்வாறு வடிவமைக்கிறது? இவைதான் நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். 


அரசியலமைப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, தரவு தனியுரிமை மற்றும் சைபர் குற்றங்கள் பிராந்திய எல்லைகளைக் கடந்தவை. அவை கூட்டாட்சி அமைப்புகளின் அடிப்படையை உருவாக்கின.  இந்த புதிய சவால்கள் மத்திய மற்றும் மாநிலங்களின் வழக்கமான வடிவங்களுக்குப் பொருந்தாது.


கடந்த ஆண்டுகளில் கூட்டாட்சி என்பது சட்டமியற்றும் அதிகாரங்களின் அடிப்படையில் அரசியல் யதார்த்தங்களுடன் சரிசெய்வதாக இருந்தால், வரும் ஆண்டுகளில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு இலட்சியங்களான சமத்துவம், சுதந்திரம், கண்ணியம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான அதன் திறனின் அடிப்படையில் கூட்டாட்சி மதிப்பீடு செய்யப்பட வேண்டும். 


மாநிலங்கள் மற்றும் ஒன்றியம் இரண்டும் அரசியலமைப்பின் படைப்புகள். நவீன கால பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளைக் காண்பதில் அவர்கள் கூட்டுவிளைவு, ஒத்துழைப்பு மற்றும் அரசியலமைப்பு வரம்புகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். 


இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான நமது திறன், நமது முழுமையற்ற கூட்டாட்சி மற்றும் அதன் மீதான வடிவமைப்பாளர்களின் நம்பிக்கைக்கான லிட்மஸ் சோதனையாகும். கூட்டாட்சி அமைப்புகளின் பொதுவான அரசியலமைப்பு இலக்குகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர விசுவாசத்துடன் இந்த தீர்வுகளை நாம் இறுதியில் காண்போம் என்று நான் நம்புகிறேன். 


டி ஒய் சந்திரசூட்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.




Original article:

Share:

இந்தியாவில் கிராமப்புற வறுமையை நிர்ணயிக்கும் சமூக பொருளாதார காரணிகள் - ரித்விக் பட்கிரி

 இந்தியாவில் கிராமப்புற வறுமையின் தீர்மானிக்கும் முக்கிய சமூக பொருளாதார காரணிகள் எவை?  அவை எவ்வாறு  வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் இரண்டையும் பாதிக்கின்றன? 


உலகின் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஏழைகள் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர். உலகின் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது என, உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கை (Global Multi dimensional Poverty Index (MPI)) 2024 கண்டறிந்துள்ளது.  


உலகின் ஏழைகளில் கிட்டத்தட்ட 84 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை விட ஏழைகளாக உள்ளனர் என்றும் அறிக்கை குறிபிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கொள்கை வகுப்பாளர்களுக்கு கிராமப்புற வறுமை ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது.  


இந்தியாவில் கிராமப்புற வறுமை பிரச்சினையை ஆராய்ந்து, கிராமப்புற வறுமை என்றால் என்ன? அது எவ்வாறு அளவிடப்படுகிறது? அதன் நிலைத்தன்மைக்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்போம்.  


உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீடு (MPI), சபீனா அல்கிரே  மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தாலும் (United Nations Development Programme (UNDP)) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறையை அளவிடுகிறது,  பண வறுமையை  (monetary poverty) அல்ல .  


இந்திய அரசாங்கத்தின், நிதி ஆயோக் (NITI Aayog), UNDP மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (Oxford Poverty and Human Development Initiative (OPHI)) ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பல பரிமாண வறுமையைக் கண்காணிக்க தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை (National Multidimensional Poverty Index) உருவாக்கியது.  

 

இந்த ஆண்டு ஜனவரியில், நிதி ஆயோக் 2005-06 ஆண்டு  முதல் இந்தியாவில் பல பரிமாண வறுமை என்ற தலைப்பில் ஒரு விவாத அறிக்கையை வெளியிட்டது.  இது 2013-14 ஆம் ஆண்டில் 29.17 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 11.28 சதவீதமாக பல பரிமாண வறுமையில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டதாகக் கூறுகிறது. 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.  


2030-ஆம் ஆண்டுக்குள் பல பரிமாண வறுமையை பாதியாகக் குறைப்பது என்ற நிலையான வளர்ச்சி இலக்கு 1.2-யை அடைய இந்தியா முன்னேறி வருகிறது என்ற நேர்மறையான செய்தியை இந்த விவாத அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கிராமப்புற இந்தியா பல பரிமாண வறுமையில் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுக்கு இடையில், கிராமப்புற இந்தியாவில் வறுமை 32.59 சதவீதத்திலிருந்து 19.28 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற வறுமை 8.65 சதவீதத்திலிருந்து 5.27 சதவீதமாக குறைந்துள்ளது.  


இருப்பினும், நிதி ஆயோக்கின் வறுமை கணிப்புகள், குறிகாட்டிகளின் தேர்வு; சேவை வழங்கலின் குறியீடு என்றும் குறிப்பிடப்படும் முறையியல்  அணுகுமுறை; வீட்டு கணக்கெடுப்பு தரவுகளை சார்ந்து இருத்தல்; ஜூலை 2013 முதல் வறுமை புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படாததால் சமீபத்திய வறுமை தரவு இல்லாதது ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 


எனவே, மிகவும் பயனுள்ள கிராமப்புற கொள்கை மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஆதரவளிக்க அடிக்கடி வறுமை தரவு தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. 


கிராமப்புற வறுமை என்பது கிராமப்புறங்களில் நிலவும் வறுமையைக் குறிக்கிறது.  இது மோசமான வாழ்க்கை நிலைமைகள், விவசாயத்தை பெரிதும் சார்ந்து இருத்தல், நிலமின்மை மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வகைப்படுத்தப்படுகிறது.  கூடுதலாக, கிராமப்புற ஏழைகள் பெரும்பாலும் சாதி, பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் சமூகக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.  இது சமூக இயக்கம் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும். 


உதாரணமாக, கல்வி குறித்த 2018 தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey (NSS)) அறிக்கை குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது.  நகர்ப்புறங்களில் 87.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புற கல்வியறிவு 73.5 சதவீதமாக உள்ளது. மேலும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை 76-வது சுற்று அடிப்படை சேவைகளை அணுகுவதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 4 சதவீதத்திற்கு மாறாக, கிராமப்புறங்களில் சுமார் 29 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் மற்றும் நகர்ப்புறங்களில் 20 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் வீட்டிற்குள் குடிநீர் வசதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.  


இந்தியாவில் பற்றாக்குறை மற்றும் பல பரிமாண வறுமையைப் புரிந்துகொள்வதற்கு தரவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னோக்கு தேவை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும், இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். ஆனால், விகிதாசாரமற்ற அளவில் சுமார் 90 சதவீதம் நாட்டின் ஏழைகள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.  


கிராமப்புற தொழிலாளர்களில் சுமார் 59 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு தரவு (Periodic Labour Force Survey) காட்டுகிறது. விவசாயத் தொழிலாளர்களிடையே, தொழிலாளரா, சாகுபடியாளரா அல்லது தற்காலிக கூலித் தொழிலாளியா என்பதை அடிப்படையாகக் கொண்டு   ஏற்றத்தாழ்வு  உள்ளது.  


சாகுபடியாளர்களைவிட விவசாயத் தொழிலாளர்களிடையே வறுமையின் நிகழ்வு அதிகமாக உள்ளது. உதாரணமாக, 2004-05 ஆண்டு நிலவரப்படி, விவசாயிகளில் 21.5 சதவீதம் பேர் ஏழைகளாகவும், விவசாய தினக்கூலி தொழிலாளர்களில் 46.4 சதவீதம் பேர் ஏழைகளாகவும் உள்ளனர். கிராமப்புற விவசாயம் அல்லாத தொழிலாளர்களிடையே, விவசாயம் அல்லாத வேலை செய்பவர்களின் வகை முக்கியமானது. விவசாயம் அல்லாத வேலைகளில், சுய வேலை அல்லது கட்டுமானம் போன்ற நிலையற்ற மற்றும் சாதாரண பண்ணை சாரா வேலைகள் வறுமை குறைப்பிற்க்கு வழிவகுக்காது.  


கிராமப்புற வறுமையைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி, நிலம் மற்றும் நில உரிமைக்கான அணுகலைப் பார்ப்பதாகும். சிறிய (1-2 ஹெக்டேர் நிலம்) மற்றும் குறு (1 ஹெக்டேருக்கும் குறைவாக) விவசாய குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழை குழுக்கள் என்று தரவு வெளிப்படுத்துகிறது.  


தெற்காசியாவில் ஆண் தலைமைத்துவக் குடும்பங்களுடன் ஒப்பிடுகையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடையே வறுமை கணிசமாக அதிகமாக உள்ள ஒரே நாடு இந்தியாவாகும். இந்தியாவில் 19.7 சதவீத பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஏழைகளாகவும், 15.9 சதவீத ஆண் தலைமைத்துவ குடும்பங்கள் ஏழைகளாகவும் உள்ளன.  


எனவே, பிராந்திய காரணிகளுடன், பாலினம், சாதி மற்றும் மதம் ஆகியவையும் இந்தியாவில் வறுமையைப் புரிந்துகொள்வதில் முக்கியமான தீர்மானகரமான காரணிகளாக உள்ளன. உதாரணமாக, இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் இருவருமே அவர்களின் மக்கள்தொகை பங்கீட்டைவிட பல பரிமாண வறுமைக்கு அதிக பங்களிப்பு செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 


கிராமப்புற வறுமை, இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வையும் கண்டுள்ளது. 2020-21 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு புலம்பெயர்ந்தவர்கள். நகர்ப்புறங்களில் மொத்த மக்கள் தொகையில் 34.6% பேர் புலம்பெயர்ந்தவர்கள். இது "வறுமையின் நகரமயமாக்கல்" (urbanisation of poverty) குறித்த விவாதங்கள் அதிகரிக்க வழிவகுத்தது.  


நகர்ப்புற மையங்களுக்கு இடம்பெயர்வது அதிகரிக்கும் போது, வீட்டுவசதி, நீர், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையைக் குறைப்பதற்கு சுகாதாரம், ஊட்டச்சத்து, மகப்பேறு சுகாதாரம் மற்றும் அணுகக்கூடிய மருத்துவ வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகள் முக்கியமானவை.  


மாநிலம், பிராந்தியம், சாதி, பாலினம் மற்றும் மதம் ஆகியவற்றால் வேறுபடும் இந்தியாவில் வறுமையின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த இடம் சார்ந்த மற்றும் சமூக பரிமாணங்களைக் கருத்தில் கொள்ளாமல் வறுமையை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அல்லது தீர்க்கவோ முடியாது என்பது தெளிவாகிறது.




Original article:

Share:

குழந்தை திருமணம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: தண்டனைக்கும் அப்பால் செல்லவேண்டியது ஏன் முக்கியம்? -அணிந்திட பட்நாயக்

 குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் முயற்சிகள், அதைத் தடுப்பதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. ஏற்கனவே குழந்தைத் திருமணங்களை மேற்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை விளக்க அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.


 அறிவொளி மற்றும் தன்னார்வ நடவடிக்கைக்கான சமூகம் VS இந்திய ஒன்றியம் (Enlightenment and Voluntary Action v. Union of India) வழக்கில் சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, குழந்தைத் திருமணம் தொடர்பான குற்றச் செயல்களுக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது.

 

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதை தாண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வலியுறுத்துகிறது. ஏற்கனவே குழந்தைத் திருமணங்களை மேற்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை விளக்க அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey) தரவுகளின்படி, 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட 20-24 வயதுடைய பெண்களின் சதவீதம் 2005-ல் 47.4% ஆக இருந்து 2016-ல் 26.8% ஆகவும், 2021-ல் 23.3% ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும், 2030-க்குள் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal (SDG)) சவாலாகத் தெரிகிறது. 


நிறுவனங்களின் அணுகல் பெரும்பாலும் குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் சமீபகாலமாக குற்றவாளிகளை தண்டிப்பது பற்றியது. உதாரணமாக, அசாமில் மைனர் பெண்களை திருமணம் செய்துள்ள ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குழந்தைத் திருமணம்  தொடர்பான சட்டம் என்றால் என்ன?

 

குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006-ன் படி  (Prohibition of Child Marriage Act, (PCMA)), கணவர் 21 வயதிற்குட்பட்டவராகவோ அல்லது மனைவி 18 வயதிற்குட்பட்டவராகவோ இருந்தால் அது  “குழந்தை திருமணமாக” கருதப்படும். இது போன்ற திருமணங்கள் சட்டப்படி "செல்லுபடியாகாது". அதாவது, திருமணத்தின் போது குழந்தையாக இருந்த தரப்பினருக்கு அதை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது - அத்தகைய ரத்து ஏற்படும் வரை, திருமணம் செல்லுபடியாகும் மற்றும் தொடரும்.


கர்நாடகா மற்றும் ஹரியானா மாநில சட்டங்கள் அனைத்து குழந்தை திருமணங்களும் ஆரம்பத்தில் இருந்தே செல்லாது என்று தெரிவித்து வருகின்றன.


ரத்துசெய்தல் (Annulment) செய்வது விவாகரத்திலிருந்து வேறுபட்டது. திருமணம் ரத்து செய்யப்பட்டால், அது நடக்காதது போல் கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு திருமணமாகாதவர்களாகக் கருதப்படுகிறார்கள்.


விவாகரத்து (divorce) மறுபுறம், விவாகரத்து ஒரு திருமணம் முடிவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்ததை அங்கீகரிக்கிறது. விவாகரத்துக்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் விவாகரத்து பெற்றதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது.


விவாகரத்து பெற, விவாகரத்துக்கு குறிப்பிட்ட காரணங்களை நிரூபிக்க வேண்டும். பொதுவான காரணங்களில் கொடுமை அல்லது தவறான   நடவடிக்கை ஆகியவை அடங்கும். விவாகரத்துக்கான காரணங்கள் தம்பதியருக்கு பொருந்தும் தனிப்பட்ட சட்டத்தைப் பொறுத்தது.


பராமரிப்பு, குடியிருப்பு உத்தரவுகள் மற்றும் திருமணத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வரதட்சணைகளைத் திரும்பப் பெறுதல் போன்ற பிற தீர்வுகளையும்  குழந்தை திருமணத் தடைச் சட்டம் வழங்குகிறது.  குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்படாவிட்டால் அது நீடிக்கும் என்றாலும், குழந்தை திருமணம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குற்றமாக்கப்படுகின்றன. 


குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ், குழந்தை திருமணத்தை நடத்துவது அல்லது ஊக்குவிப்பது, மற்றும் ஒரு ஆண் வயது வந்தவர் வயது வராத பெண்ணை திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படும்.  குழந்தை திருமணத்திற்குள் உட்பட  வயது வராத பெண்ணுடன் தொடர்பு கொள்வது  என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (Protection of Children from Sexual Offences Act (POCSO)) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita, (BNS)) ஆகியவற்றின் கீழ் குற்றமாகும். 


PCMA, BNS மற்றும் POCSO ஆகியவற்றில் உள்ள குற்றவியல் விதிகள் ஒரு பெண்ணின் குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும். இதில் அவரது பெற்றோர், கணவர் மற்றும் மாமியார் உள்ளனர். இந்த சூழ்நிலை அந்தப்பெண்ணை சுதந்திரமாக வாழ உதவியின்றி தனியாக விட்டுவிடலாம்.


2008 முதல் 2017 வரையிலான 73 தீர்ப்புகளை வளர்ச்சியில் சட்டத்தின் கூட்டாளிகள் (Partners for Law in Development) ஆய்வு செய்தனர். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுடன் ஒப்பிடும்போது, ​​இளைஞர்கள் தாங்களாகவே திருமணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் PCMA-ன் குற்றவியல் விதிகள் இருமடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 


2024-ல், என்ஃபோல்ட் ப்ரோஆக்டிவ் ஹெல்த் டிரஸ்ட் மற்றும் சிவிக் டேட்டா லேப் 174 PCMA வழக்குகளை ஆய்வு செய்தன. இந்த வழக்குகள் அசாம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவை. 49.4% திருமணங்கள் விருப்பப்படி நடந்தவை என்று கண்டறிந்தனர்.


குற்றவியல் நடவடிக்கை உதவாது என்பதை இந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இது உண்மையில் தங்கள் சொந்த தேர்வுகளை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.


பல சந்தர்ப்பங்களில், புறக்கணிப்பு, அல்லது கட்டாயத் திருமணத்தின் அச்சுறுத்தல் போன்ற கடினமான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க வயது குறைந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளத் தேர்வு செய்கிறார்கள். இந்த குழந்தை திருமணங்கள் இளைஞர்கள் ஆணாதிக்க சமூகத்தில் தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் உறவுகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு இது போன்ற செயல்களை செய்கிறார்கள்.


குழந்தை திருமணத்தை விட்டுவிடுவது சமூக மற்றும் பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குழந்தைத் திருமணங்களை விட்டு வெளியேறும் பெண்களுக்கு திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி மற்றும் பொருளாதார ஆதரவை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தைக் கோருகிறது. புனர்வாழ்வு சேவைகள், கண்காணிப்பு மற்றும் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்க உதவும் பின்தொடர்தல் ஆதரவு ஆகியவையும் இதில் அடங்கும். கூடுதலாக, பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பெண்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க பரிந்துரைக்கிறது.


சில பெண்கள் திருமணத்தில் இருக்க விரும்புகிறார்கள். ஆனால், தங்கள் சொந்த விருப்பங்களைச் செய்வதற்கு உதவி தேவை. குழந்தைகளைப் பெற்றெடுப்பது, வேலை செய்வது மற்றும் படிப்பது பற்றி பேச அவர்களுக்கு ஆதரவு தேவை. உச்சநீதிமன்றம் இளம் பருவத்தினருக்கு பாலியல் கல்வியை வலியுறுத்துகிறது, அத்தகைய திருமணங்களில் இருப்பவர்களுக்கு அவர்களின் உறவுகளை திறம்பட வழிநடத்தும் அறிவு மற்றும் திறன்களுடன் அதிகாரம் அளிக்கிறது.


குழந்தைத் திருமணம் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றிய புரிதலுடன் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்போது, குறிப்பாக இளைஞர்கள் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முழுமையான மற்றும் அதிகாரமளிக்கும் வழியை வழங்குகின்றன. இந்த அணுகுமுறை குற்றவியல் வழக்குகளில் கவனம் செலுத்துவதை விட சிறந்ததாக இருக்கும்.




Original article:


Share:

ஒத்திவைப்பு மற்றும் நிலுவை வழக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி.. -பக்லேகர் ஆகாஷ் குமார்

 இந்த பிரச்சனை குறித்து குடியரசுத் தலைவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் உள்ளன.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அடிக்கடி நீதிமன்றங்களை ஒத்திவைக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் கூறினார். செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் உச்ச நீதிமன்றத்தால் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் அவர் இதைப் பற்றி பேசினார். ஏழை மற்றும் கிராமப்புற மக்கள் நீதிமன்றங்களில் ஏற்படும் நீண்ட காலதாமதங்களின் காரணமாக அமைதியாக அநீதிக்கு ஆளாகின்றனர் என்று குடியரசுத் தலைவர் தனது கவலைகளை வெளிப்படுத்தினர்.


குடியரசுத் தலைவரின் கவலை நியாயமானது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழும், சுதந்திரத்திற்குப் பிறகும், உரிமையியல் நீதிமன்றங்கள் (civil courts) அனைத்து வகையான உரிமையியல் பிரச்சினைகளையும் உரிமையியல் நடைமுறைச் சட்டத்தைப் பின்பற்றி கையாண்டன. மற்றொன்று, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகளைக் குற்றவியல் நீதிமன்றங்கள் கையாளுகின்றன. இவை தவிர, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் அரசியலமைப்பு நீதிப்பேராணை மற்றும் மேல்முறையீட்டு அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நீதிமன்றங்கள் இன்றும்  செயல்படுகின்றன.


பின்னடைவுக்கான காரணங்கள் 


உரிமையியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க, 42-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நீதிமன்ற தீர்ப்பாயம் (tribunal system) 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு சிறப்புப் பாடங்களைக் கையாளுகிறது. இதேபோல், குறிப்பிட்ட சிக்கல்களுக்கு சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் வழக்குத் தீர்வுக்கான காலக்கெடுவை உருவாக்குகின்றன. சில நேரங்களில், கொல்கத்தாவில் பாலியல் வன்முறை  செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு பெண் மருத்துவரின் உயிரிழப்பு  வருத்தத்தை ஏற்படுத்தியது போன்ற பொது கோபத்தை தணிக்க, வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்ய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.  


ஆனால், எந்த வழக்குகளும் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படவில்லை. நீதிபதி-மக்கள் தொகை விகிதாச்சாரம் இதற்கு முக்கிய காரணமாகும். 2024-ஆம் ஆண்டில், மக்களவையில் சட்ட அமைச்சர் அளித்த பதிலில், ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்ற இந்திய சட்ட ஆணையத்தின் 120-வது அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிராக ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 21 நீதிபதிகளே உள்ளனர். 


இரண்டாவது பிரச்சனை, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படுவதில்லை. மூன்றாவது பிரச்சினை, ஒரு நீதிபதிக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்றங்களுக்குப் பொறுப்பு வழங்கப்படுவது, பொதுக் கவலைகளைத் தீர்ப்பதற்காக விரைவாக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களால் வழக்குகளை கையாளமுடியவில்லை. நான்காவது பிரச்சினை, நீதித்துறையில் உள்ள சிக்கலைகளை முதலில் தீர்க்காமல் சட்டங்களை இயற்றுவது. ஐந்தாவது பிரச்சனை சாட்சிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதில் ஏற்படும் நீண்ட கால தாமதம். 


நீதிபதிகளின்  எண்கள் 


உயர்நீதிமன்றங்களில் நிலுவைத் தொகையைப் பொறுத்தவரை, டிசம்பர் 31, 2023 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,114 ஆகும். மக்கள் தொகை மற்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு. அக்டோபர் 30, 2024 நிலவரப்படி, 770 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 30% காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதிப்பேராணை (writ matters) விவகாரங்களைக் கையாள்வதுடன், உயர்நீதிமன்றங்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. அவர்கள் மேல்முறையீடுகள், திருத்தங்கள், இடமாற்றங்கள், வழக்குகளை ரத்து செய்தல், ஜாமீன், அவமதிப்பு மற்றும் பிற இதர அதிகாரங்களைக் கையாள்கின்றனர்.


2021-ஆம் ஆண்டில், ஆறு சிறப்பு நீதிமன்றங்கள் மூடப்பட்டன. மேலும், அவற்றின் பொறுப்புகள் உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. சராசரியாக, ஒரு வழக்கை முடிப்பதற்கு ஆறு முதல் ஏழு ஆண்டுகள் தேவைப்படுகிறது.


உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகளுடன் செயல்பட்டுவருகிறது.  உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் பல்வேறு சட்டங்கள் உள்ளன. இது எழுத்து மற்றும் மேல்முறையீட்டு அதிகாரங்களையும் கொண்டுள்ளது. பல முடிவுகள், குறிப்பாக வட இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு எதிரானவை, இந்த தீர்ப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி  பிரிவு 136-ன் கீழ் உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்படுகின்றன. இதனால் உச்சநீதிமன்றத்திலும் கணிசமான அளவு வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.


மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நீதிபதிகளும், நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை கையாள கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர். உதாரணமாக, குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பல பொறுப்புகளைக் கொண்டிருக்கிறார் புதிய வழக்குகளை அறிந்துகொள்ள வேண்டும், விசாரணை நடத்த வேண்டும், தீர்ப்புகளை வழங்க வேண்டும், கைதுகள் (காவல் வைப்பு), தனிப்பட்ட புகார்கள், ஜாமீன்கள், மரண வாக்குமூலங்களை பதிவு செய்தல் மற்றும் பிற இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவருக்கு வேறு நீதிமன்றத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டால், அந்த நீதிமன்றத்தின் வேலையும் செய்ய வேண்டும். இதனால், ஒரே நாளில் கிட்டத்தட்ட 100 வழக்குகளை கையாள்வது நீதிபதிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இதனால், தீர்ப்புகளை எழுதும்போது அவரால் கவனம் செலுத்த முடியாமல் போகலாம், இது பிழைகளுக்கு வழிவகுக்கும். இது மேலும் தாமதத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 


சில ஆலோசனைகள் 


"மத்தியஸ்தம்" என்பது சர்ச்சைகளைத் ஒரு மாற்று வழிமுறையாகும். அங்கு இரு தரப்பினரும் தகராறுகளை இணக்கமாக தீர்க்க தங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும். ஆனால், நீதிமன்ற மன்றத்தில் ஒரு தரப்பு வழக்கு தொடர விரும்பினால், ஒவ்வொரு சட்டத்திற்கும் நீதிபதி எம். ஜகந்நாத ராவ் கமிட்டியின் பரிந்துரையைப் பின்பற்றுவது முக்கியம். இந்த குழு ஒவ்வொரு புதிய சட்டத்திற்கும் "நீதித்துறை தாக்க மதிப்பீட்டை" செய்ய பரிந்துரைத்தது. 


ஒவ்வொரு மசோதாவும் ஒரு புதிய மசோதாவால் எழக்கூடிய கூடுதல் வழக்குகளின் செலவுகளை மதிப்பிட வேண்டும் என்றும், புதிய மசோதாவால் எழக்கூடிய  குடிமை மற்றும் கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை, தேவைப்படும் நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. 2005-ஆண்டு நடைபெற்ற சேலம் வழக்கறிஞர் சங்கம் (II) VS இந்திய ஒன்றியம் வழக்கில் உச்சநீதிமன்றமே குழுவின் அறிக்கையைப் பாராட்டியது. இது தவிர, மாவட்ட நீதித்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையை ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்க உயர்நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு நீதிபதிக்கு கூடுதல் பொறுப்பு எதுவும் வழங்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் தனது நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் கவனம் செலுத்த முடியும்.


பக்லேகர் ஆகாஷ் குமார் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார் 




Original article:

Share: