புத்தொழில் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்தல் -சிந்தன் வைஷ்ணவ், பொய்னி பட், சுஹைல் ஷேக்

 மாநிலங்கள் பொது கொள்முதலுக்கான அளவை அதிகரிக்க வேண்டும்.


புத்தொழில் நிறுவனங்களின் சாதனையானது இரண்டு முக்கிய காரணிகளைப் பொறுத்து அமைகிறது. அவை, மூலதனம் (capital) மற்றும் சந்தைகள் (markets) ஆகும். கடந்த பத்தாண்டுகளில், புத்தொழில் நிறுவனங்கள் விரைவான அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், சந்தைகளை அணுகுதல் என்பது புத்தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் ஒரு சவாலாக உள்ளது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது கொள்முதல் (Public procurement) சுமார் 25% ஆகும். இந்த இடைவெளியை நிரப்புவதில் இது ஒரு பெரிய பங்கை வகிக்க முடியும். அரசு மின் சந்தை (Government eMarketplace (GeM)) மூலம் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், முன் அனுபவம் (prior experience) மற்றும் முன்பண வைப்புத்தொகை (Earnest Money Deposits (EMD)) போன்ற தேவைகளை இது நீக்கியுள்ளது. இது புத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பதை எளிதாக்கியுள்ளது. இருப்பினும், அரசாங்க ஒப்பந்தங்களில் புத்தொழில் நிறுவனங்களின் திறனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.


முன்பண வைப்புத்தொகை (earnest money deposit (EMD)): நல்லெண்ண வைப்புத்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. வாங்குபவர் ஒரு விற்பனையாளரிடம் செய்யும் ஒரு சிறிய வைப்புத்தொகையாகும், இது ஒரு வீடு அல்லது சொத்து போன்ற வாங்குதலில் அவர்களின் உண்மையான ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது.


மார்ச் 2023 நிலவரப்படி, அரசு மின் சந்தையின் (GeM) புத்தொழில் நிறுவனங்களின் தளங்களானது ₹11,865 கோடி மதிப்புள்ள கொள்முதல் ஆணைகளைச் செயல்படுத்த உதவியுள்ளது. இருப்பினும், இதில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 12% மற்றும் மொத்த பொது கொள்முதலில் 6% மட்டுமே அடங்கும். அரசுடன் இணைந்து பணியாற்ற புத்தொழில் நிறுவனங்களை இந்தியா எளிதாக்கினால், பொது கொள்முதலில் அவர்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரிக்கும்.


ஒரு பொருளாதார மடங்கு


அரசு ஒப்பந்தங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கு பல வழிகளில் உதவுகின்றன. அவை, சரிபார்ப்பை வழங்குவதன் மூலம் புத்தொழில் நிறுவனங்கள் வளர உதவுகின்றன. மேலும், வேலைகளை உருவாக்குகின்றன மற்றும் நிலையான வருமானத்தை உறுதி செய்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் நிச்சயமற்ற துணிகர மூலதனத்தைச் (venture capital) சார்ந்திருப்பதையும் குறைக்கின்றன.


புத்தொழில் நிறுவனங்கள் பொது சேவைகளை மேம்படுத்தும் புதிய மற்றும் செலவு குறைந்த தீர்வுகளைக் கொண்டு வருகின்றன. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமீபத்தில் புதிய தயாரிப்புகளை வாங்குவதை எளிதாக்கியுள்ளது. இந்த மாற்றம் புத்தொழில் நிறுவனங்கள் வழங்கக்கூடிய மதிப்பைக் காட்டுகிறது.


பல உலகளாவிய முன்முயற்சிகள் புத்தொழில் நிறுவனங்களின் கொள்முதலில் நன்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்கா சிறு வணிக கண்டுபிடிப்பு ஆராய்ச்சி (Small Business Innovation Research (SBIR)) திட்டம், இஸ்ரேலின் 'இஸ்ரேலுக்காக வாங்கும்' (Buy for Israel) கொள்கையானது உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் புத்தொழில்களின் கொள்முதல் (Startup Procurement) முயற்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முன்முயற்சிகள் உதாரணங்களாக செயல்பட முடியும்.


இலக்கு கொள்முதல் திட்டங்களுடன் இந்தியா வெற்றி கண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள iDEX முன்முயற்சியானது, ஆயுதப்படைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க புத்தொழில் நிறுவனங்களுக்கு ₹25 கோடி வரை வழங்குகிறது.


மகாராஷ்டிரா புத்தொழில் வாரம், பாரம்பரிய டெண்டர் செயல்முறையைத் தவிர்த்து, வெற்றிபெறும் புத்தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ₹15 லட்சம் ஒப்பந்தங்களை வழங்குகிறது. மும்பையின் ஸ்மைல் குழுமம் (SMILE Council) குடிமை-தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை வரிசைப்படுத்தத் தயாரான தீர்வுகளுக்கான உத்தரவாத ஒப்பந்தங்களுடன் ஆதரிக்கிறது.


ஆந்திரப் பிரதேசத்தில் DPIIT-ல் பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக ₹50 லட்சம் வரை நேரடி கொள்முதல் செய்யும் முன்னுரிமை சந்தை அணுகல் முயற்சியை ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்தது. இந்த மாதிரிகளை நாடு முழுவதும் அளவிடுவது மிகவும் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்திற்கு அவசியம்.


மூன்று மாதிரிகள்


மூன்று மாதிரிகள் இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களின் கொள்முதலுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதன் மூலம், அவற்றில் அரசாங்க முதலீடுகளின் வருவாயைப் பெருக்க உதவும்.


திறந்த கொள்முதல் (Open Procurement) : இந்தியா முழுவதும் 450 அரசு ஆதரவு இன்குபேட்டர்கள் (government-supported incubators) உள்ளன. இந்த இன்குபேட்டர்கள் புத்தொழில் நிறுவனங்கள் அரசு மின் சந்தையில் (GeM) பதிவு செய்ய உதவும். இது பொது நிறுவனங்களுக்கு புத்தொழில் நிறுவனங்களை மேலும் தெரியும்படி செய்யும்.


சவால் அடிப்படையிலான கொள்முதல் (Challenge-Based Procurement) : iDEX மற்றும் மகாராஷ்டிரா புத்தொழில் வாரத்தைப் போலவே, அரசாங்கத் துறைகளும் புதுமைக்கான சவால்களை வெளியிடலாம். இதில் வெற்றிபெறும் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கலாம்.


நேரடி கொள்முதல் ஆணை (Direct Procurement Mandate) : ஒன்றிய அமைச்சகங்களுக்கான 25 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) கொள்முதல் ஆணையைப் போலவே, ஒரு புத்தொழில் நிறுவனங்களின் கொள்முதலுக்கு ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் வளர்ச்சியின் அடிப்படையில் துறை வாரியாக சரிசெய்யப்படும்.


இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பிறகும், புத்தொழில் நிறுவனங்களின் கொள்கை வகுப்பாளர்கள் கொள்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும். இது ஒரு நெகிழ்வான பொது கொள்முதல் அமைப்பை உருவாக்க உதவும். புத்தொழில் நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கு ஒரு தெளிவான வழி இருப்பதையும் இது உறுதி செய்யும்.


பொது கொள்முதலில் புத்தொழில் நிறுவனங்களின் திறனை உண்மையாக உணர, இந்தியா முன்னோடி திட்டங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 (Atal Innovation Mission)-ன் கீழ் உள்ள துறைரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் (Sectoral Launchpad programme) ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த திட்டம் புத்தொழில் நிறுவனங்களை முக்கிய தொழில்களில் ஒருங்கிணைக்க உதவுகிறது.


வைஷ்ணவ், அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக்கில் முன்னாள் இயக்குநர் திட்டம் மற்றும் வருகைதரு ஆய்வாளர் ஆவார். பட், ஒரு புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசகர் மற்றும் சைன்-ஐஐடி பாம்பேயின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். ஷேக், அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக்கில் புத்தாக்கத் தலைவர் ஆவார்.



Original article:

Share:

வடக்கு-தெற்கு சண்டை அல்ல, அனைவருக்குமான நீதிக்கான ஒரு போர் - எஸ்பன் பார்த் ஈடே 

 ஜனநாயகம், விதிகள் சார்ந்த ஒழுங்கு மற்றும் பலதரப்பு அமைப்பு போன்ற அடிப்படைக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதில் நார்வேயும் இந்தியாவும் நெருக்கமாகவும் ஒற்றுமையாகவும் உள்ளன.


நாம் மிகவும் சவாலான மற்றும் நிலையற்ற உலகளாவிய சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். உலகம் முழுவதும் போர்கள் நடக்கின்றன. இதனால், சர்வதேச சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவைகள் உள்ளன. சாத்தியமான வர்த்தக மற்றும் வரிவிதிப்பு மோதல்களுக்கு நாம் நெருக்கமாக இருக்கிறோம். இருப்பினும், இந்தக் கடுமையான நேரத்தில் வாய்ப்புகளையும் கொண்டு வரக்கூடும். ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றுபடலாம், வலுவான கூட்டாண்மைகளை உருவாக்கலாம் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் புதிய பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தலாம்.


இந்த பலதரப்பட்ட சூழ்நிலையின் மத்தியில், எனது இந்திய சகாவும், நண்பருமான வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான உரையாடல்களிலிருந்து நான் உத்வேகத்தையும், உறுதியையும் கண்டேன். நார்வேயும் இந்தியாவும் புவியியல் ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், நாம் நெருக்கமாக இருக்கிறோம். ஜனநாயகம், சர்வதேச சட்டம் மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்கு போன்ற முக்கியமான மதிப்புகளைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. நாம் நம்முடைய பலதரப்பு அமைப்பையும் ஆதரிக்கிறோம். இது கூட்டாண்மைகளுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், புவிசார் அரசியலில் இந்தியாவின் பங்கு இப்போது எப்போதையும்விட வலுவாக உள்ளது.


மதிப்புமிக்க ரைசினா உரையாடலில் பங்கேற்பதற்காக, இந்திய வருகைக்காக நான் என்னுடன் கொண்டு வந்த எண்ணங்கள் இவை. நார்வேயும் இந்தியாவும் இணைந்து எதைச் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்துடனும், உயர்ந்த விருப்பங்களுடனும் நான் இங்கு வருகிறேன். 


இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் கருப்பொருள் : "காலசக்ரா: மக்கள், அமைதி மற்றும் பூமி" (Kalachakra: People, Peace, and Planet) ஆகும். இந்த கருப்பொருள் இன்று மிகவும் பொருத்தமானது.


இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை (United Nations (UN)) நிறுவப்பட்டதிலிருந்து 80 ஆண்டுகளையும் குறிக்கிறது. இரண்டு உலகப் போர்களைக் கடந்து வாழ்ந்த மக்களால் ஐ.நா. உருவாக்கப்பட்டது. தேசியவாதமும், சாதகமற்ற உலகளாவிய நிர்வாகமும் இரண்டாம் உலகப் போருக்குக் களம் அமைக்க உதவிய 1930-ம் ஆண்டுகளையும் நிறுவனர்கள் கொண்டிருந்தனர்.


ஐ.நா.வை நிறுவியவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைவிட அதிகமாகச் செய்ய விரும்பினர். நாடுகளின் அமைதியின் அடிப்படையில் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதை அடைய, அவர்கள் ஐ.நா. சாசனத்தைத் தயாரித்தனர். சாசனத்தில் உள்ள ஒரு முக்கியமான கொள்கை என்னவென்றால், நாடுகள் ஒருவருக்கொருவர் இறையாண்மையை மதிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் மனித உரிமைகள் சாசனத்தையும் உருவாக்கினர். அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இந்த ஆவணம் கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், இந்த அமைப்பு சவால் செய்யப்படுகிறது. இது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது.


உலகளாவிய நிர்வாக அமைப்பில் சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது அதிக பிரதிநிதித்துவமாக மாற வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஆகும். மேலும், இந்த சர்வதேச அமைப்புகளில் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கான இந்தியாவின் முயற்சிகளை நாம் ஆதரிக்கிறோம்.


தற்போதுள்ள சர்வதேச அமைப்புகளைப் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் முக்கியம். உலகளாவிய விவகாரங்களில் நாம் இரட்டைத் தரங்களைக் கொண்டிருக்கக்கூடாது. நாடுகளின் அனைத்து மோதல்களுக்கும் ஒரே சர்வதேச சட்டங்கள் பொருந்தும். இதில் காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், மியான்மர், மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஆகியவை இதில் அடங்கும். நாம் உண்மையிலேயே சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த விரும்பினால், அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.


காலநிலை நெருக்கடி போன்ற நமது தலைமுறை இதுவரை கண்டிராத மிகப்பெரிய சவால்களில் சிலவற்றை நமது உலகம் எதிர்கொள்கிறது. நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். பொருளாதார நிலைத்தன்மை நம்மை வலிமையாக்குகிறது. இதற்கு நல்ல சர்வதேச வர்த்தக உறவுகள் முக்கியம். வர்த்தகக் கட்டுப்பாடுகள் பிற நாடுகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இந்த நடவடிக்கைகள் உலகளாவிய சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.


நார்வேக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று நான் நம்புகிறேன். மார்ச் 10 அன்று, இந்தியாவிற்கும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்க (European Free Trade Association (EFTA)) நாடுகளுக்கும் (நார்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன்) இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (Trade and Economic Partnership Agreement (TEPA)) முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, ​​அது எதிர்காலத்தில் நமது நாடுகளுக்கு இடையே அதிக வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு வழிவகுக்கும். இன்று, TEPA நெருக்கமான உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஒரு நேர்மறையான எடுத்துக்காட்டாகத் தனித்து நிற்கிறது.


இந்த ஆண்டு, பிரதமர் மோடியை தலைநகர் ஒஸ்லோவிற்கு அழைத்தோம். இந்தியாவுடன் ஒப்பிடும்போது நார்வே ஒரு சிறிய நாடு ஆகும். இருப்பினும், இது உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. நார்வே அழகான ஒஸ்லோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இது மூன்றாவது நார்டிக்-இந்தியா உச்சிமாநாட்டையும் (Nordic-India Summit) நடத்தும். இந்த நாடானது, பல பொதுவான ஈடுபாட்டையும், மதிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறோம். இவற்றில் ஒன்று நிலையான பெருங்கடல்கள் (sustainable oceans) ஆகும்.


இந்தியாவின் லட்சிய நிலைத்தன்மை இலக்குகள் மற்றும் உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக மாறுவதற்கான இலக்கு ஆகியவை நோக்கமாக கொண்டு பங்களிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய நன்மைக்கும் பயனளிக்கும். பகிரப்பட்ட உலகளாவிய இலக்குகளை அடைய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நார்வே தயாராக உள்ளது. இது அவர்களின் ஒன்றிணைவதற்கான பலங்கள், அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.


காலத்தின் சக்கரமான காலச்சக்ரா, ஏற்கனவே நேர்மறையான வழிகளில் திரும்பத் தொடங்கிவிட்டது என்பதில் நான் எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளைக் குறைக்க நாம் ஒன்றாக நடவடிக்கை எடுக்கலாம். நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கும் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நாம் பாடுபடலாம். இந்தியா மற்றும் பிற ஒத்த எண்ணம் கொண்ட கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து நார்வே இந்த முயற்சிகளுக்கு உறுதியுடன் உள்ளது.


எஸ்பென் பார்த் எய்டிஸ், நார்வேயின் வெளியுறவு அமைச்சர் ஆவார்.



Original article:

Share:

சமத்துவம், ஒழுக்கம் மாநிலங்களின் நிதி நடத்தைக்கு வழிகாட்ட வேண்டும்

 பல மாநிலங்கள் அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொண்டு மக்கள் நலத் திட்டங்களில் (populist schemes) தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் நிலைமை மோசமாகிவிட்டது.


திங்களன்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க முடியாது என்று கூறினார். மாநிலத்தின் நிதி நிலைமை நிலையற்றது என்று அவர் மேலும் விளக்கினார். நிதியில் போராடும் ஒரே மாநிலம் தெலுங்கானா அல்ல. அரசியல் நலன்களுக்காக மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிக மாநிலங்கள் செலவிடுவதால் பிரச்சினை மோசமடைந்துள்ளது.


பல்வேறு மாநிலங்களில் பணத் தட்டுப்பாடு (cash crunch) வித்தியாசமாக நடந்து வருகிறது. சில மாநிலங்களில், நிதி நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் கூட, மக்கள் நலத்திட்டங்களுக்கு இடமளிக்கும் வகையில், மூலதனச் செலவுகள் உட்பட முக்கியமான தலைவர்களிடமிருந்து அரசாங்கங்கள் நிதியைத் திருப்பி விடுகின்றன. மற்றவற்றில், பற்றாக்குறை மற்றும் கடன் இரண்டும் சக்திக்கு அப்பாற்பட்ட செலவினங்களின் காரணமாக பெருகும். மாநிலங்கள் ஒன்றியத்தைவிட அதிகமாக செலவழிப்பதால், அவர்களின் நிதி நடத்தை பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. மாநிலங்களின் நிதி நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?


மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அனைவருக்கும் வேலை செய்யும் ஒற்றைத் தீர்வு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது. வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு நிதி சூழ்நிலைகள் உள்ளன. அவர்களின் நிதிச் சிக்கல்கள் அல்லது பிரச்சினைகள் இல்லாமை பெரும்பாலும் கடந்தகால பிரச்சினைகளிலிருந்து வருகின்றன. நிதி கூட்டாட்சி குறித்த வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளுடன் இணைந்தால், பிரச்சினை இன்னும் சிக்கலானதாகிறது. 16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டவுடன், அதிக விவாதம் இருக்கும். இது ஒன்றிய அரசால் வரிகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன மற்றும் சில மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தும்.


மாநில நிதிகளை சரியான திசையில் வழிநடத்த ஒரு தெளிவான உத்தி தேவை. இந்த உத்தி சமத்துவம் மற்றும் ஒழுக்கத்தின் சமநிலையைப் பயன்படுத்த வேண்டும். கடந்தகால பிரச்சினைகளை சரிசெய்வதில் உள்ள சவால்களை சமத்துவம் குறைக்க வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால செலவுகள் பொறுப்பானவை என்பதை ஒழுக்கம் உறுதிசெய்ய வேண்டும். அரசியல் இந்த இலக்கில் கவனம் செலுத்தவில்லை என்றால், மாநில நிதி மேம்படாது. பல வாக்காளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு அரசியல் எதிர்வினையாற்றக்கூடும். இருப்பினும், நிதிநிலை பரந்த பொருளாதாரப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.



Original article:

Share:

எரிசக்தி பாதுகாப்பிற்கான உத்திகள் -மனிஷ் மட்டும்

 டிரம்பின் தன்னிறைவு அணுகுமுறை குறுகியகால ஆதாயங்களைக் கொண்டுள்ளது. ஆனால், மோடியின் பன்முகப்படுத்தப்பட்ட மூலதனத்திற்கான உத்தி நீண்டகாலத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும்.


2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் குளிர்ந்த இரவில், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவியேற்பு உரையில், எரிசக்தி சந்தைகள் ஒரு வழக்கமான சவாலுக்குத் தயாராகின. "அமெரிக்கா ஒருபோதும் வெளிநாட்டு எரிசக்தியால் பிணைக் கைதியாக இருக்காது" என்று அவர் அறிவித்தார். அவரது வார்த்தைகள் அவரது முதல் பதவிக் காலத்திலிருந்தே எரிசக்தி சுதந்திரம் குறித்த வலுவான நிலைப்பாட்டை பிரதிபலித்தன.


இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் முக்கிய கூட்டாண்மைகளைப் பேணுவதன் மூலமும், இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதன் மூலமும் இராஜதந்திர சுயாட்சியைத் தழுவி ஒரு வித்தியாசமான போக்கை வகுத்துள்ளது. அவர்களின் மாறுபட்ட அணுகுமுறைகள் ஒரு அடிப்படை கேள்வியை எடுத்துக்காட்டுகின்றன. எரிசக்தி பாதுகாப்பிற்கான போரில், நாடுகள் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட வேண்டுமா அல்லது இராஜதந்திர ரீதியில் நெகிழ்வுத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா?


உலகளாவிய மின் இயக்கவியலில் எரிசக்தி என்பது எப்போதும் முக்கியமானதாக உள்ளது. வளங்களைக் கட்டுப்படுத்தும் நாடுகள் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரத்தில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளன. இன்றைய நிலையற்ற புவிசார் அரசியல் நிலப்பரப்பில், எரிசக்தி என்பது வெறும் ஒரு பண்டம் மட்டுமல்ல, ஒரு உத்தியின் ஆயுதமாகும். இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதை மோடி ஆதரிக்கிறார். டிரம்பின் கவனம் சுயசார்பில் இருந்தது, இது வெளிநாட்டு எரிசக்தியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், மாறிவரும் எரிசக்தி நிலப்பரப்பு உண்மையான மீள்தன்மை தனிமைப்படுத்தலில் இருந்து வராமல் போகலாம் என்பதைக் காட்டுகிறது. மாறாக, அது புதிய யதார்த்தங்களுக்கு ஏற்ப மாறுவதிலிருந்து வருகிறது.


இராஜதந்திர தன்னாட்சி மற்றும் ஆற்றல் ஆதிக்கம் : இராஜதந்திர தன்னாட்சி என்பது எந்தவொரு விநியோகர்களையும் அதிகமாகச் சார்ந்து இருக்காமல் இறையாண்மை ரீதியில் எரிசக்திக்கான முடிவுகளை எடுக்கும் இந்தியாவின் திறனைக் குறிக்கிறது. மோடியின் தலைமையின் கீழ், இந்தியா அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கத்தாருடன் நீண்டகால LNG ஒப்பந்தங்களைப் பெற்றது. அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளின் தடைகளை மீறி தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணெய் ஒப்பந்தங்கள் மூலம் ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்தியது.


இந்த உத்திக்கான விலை ஏற்ற இறக்கத்தைக் குறைக்கிறது. இது, விநியோகச் சங்கிலி இடையூறுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. உள்ளூர் தேவைகளுடன் உலகளாவிய பிரச்சினைகளை சமநிலைப்படுத்துவதற்கான நடைமுறைக்கான அணுகுமுறையை இது காட்டுகிறது. அணுசக்தி, மின்சார இயக்கம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள், உலகளாவிய எரிசக்தி அதிர்வுகளைக் கையாளும் இந்தியாவின் திறனை வலுப்படுத்துகின்றன.


இதற்கு நேர்மாறாக, டிரம்பின் 'அமெரிக்கா முதலில்' (America First) என்பதன் அடிப்படையில் எரிசக்திக் கொள்கை, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது. இது வெளிநாட்டு விநியோகர்களை நம்பியிருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அவரது 'எரிசக்தி ஆதிக்க' (Energy Dominance) உத்தியானது, அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான ஆய்வுகளை ஊக்குவித்தது. இது கடலில் தோண்டுதல் (offshore drilling) மற்றும் நிலக்கரித் தொழிலின் மறுமலர்ச்சியையும் (coal industry revival) ஆதரித்தது. இந்த நடவடிக்கைகள் குறுகியகால பொருளாதார ஆதாயங்களைக் கொண்டு வந்தன. இருப்பினும், அவை உலகளாவிய கூட்டணிகளை பலவீனப்படுத்தி சுற்றுச்சூழல் அபாயங்களை அதிகரித்தன.


பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. கனடா மற்றும் மெக்சிகோ போன்ற எரிசக்தி கூட்டணி நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை விதித்தார். இது விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, தனிமைப்படுத்தும் அணுகுமுறையின் வரம்புகளைக் காட்டியது. சமீபத்தில், டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் ஒரு வரிவிதிப்புப் போரைத் தொடங்கினார்.


பல்வகைப்படுத்தல் (Diversification) Vs தன்னிறைவு (Self-Sufficiency)


மோடிக்கும் டிரம்பின் கொள்கைகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு, அவர்கள் ஆபத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதுதான். மோடி பன்முகப்படுத்துவதன் (diversification) மூலம் ஆபத்தை குறைக்கிறார். நாட்டை தன்னிறைவு (self-sufficiency) பெறச் செய்வதன் மூலம் ஆபத்தை நீக்க டிரம்ப் முயன்றார். இருப்பினும், முழுமையான எரிசக்திக்கான சுதந்திரத்தை அடைவது கடினமாகி வருகிறது.


ஷேல் உற்பத்தியில் (shale production) அதிகரிப்பு இருந்தாலும், அமெரிக்கா இன்னும் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ஏனெனில், அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் எப்போதும் உள்ளூர் எண்ணெய்க்கு ஏற்றதாக இல்லை மற்றும் சந்தை காரணிகள் (market factors) காரணமாக இது நிகழ்கிறது. இந்தியாவும் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சார்ந்துள்ளது. இது, நெகிழ்வுத்தன்மையின் அவசியத்தைக் காட்டுகிறது. உண்மையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இருவரும் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிர்வகிக்க வேண்டும். அவர்களால் முழு சுதந்திரம் அல்லது முழுமையான சார்பு கொள்கைகளை கண்டிப்பாக பின்பற்ற முடியாது.


புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இந்தியாவின் உந்துதல் உலகளாவிய நிலைத்தன்மைக்கான இலக்குகளை ஆதரிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் 500 GW புதைபடிவமற்ற எரிபொருள் திறனை நாடு இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கு சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Alliance) போன்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகும். நீண்டகால எரிசக்தி பாதுகாப்பு காலநிலை மீள்தன்மையைச் சார்ந்துள்ளது என்பதை மோடியின் கொள்கை அங்கீகரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க முதலீடுகள், புதைபடிவ எரிபொருளின் விலை மாற்றங்களுக்கான வெளிப்பாட்டைக் குறைக்க உதவுகின்றன என்று அது கூறுகிறது. மேலும், இந்த முதலீடுகள் மின் கட்டமைப்புக்கான நிலைத்தன்மையையும் (grid stability) மேம்படுத்துகின்றன.


இதற்கு நேர்மாறாக, டிரம்பின் புதைபடிவ எரிபொருளை மையமாகக் கொண்ட உத்திக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளை திரும்பப் பெற்றது. நிலைத்தன்மையைவிட குறுகியகால ஆற்றல் மிகுதியை ஆதரிக்கிறது. அவரது அணுகுமுறை நிலைத்தன்மையைவிட குறுகியகால எரிசக்தி அதிகரிப்பை ஆதரித்ததுடன்,  நிர்வாகம் சுத்தமான எரிசக்தி இறக்குமதிகளுக்கு வரிகளை விதித்தது. இது பலதரப்பு காலநிலை முயற்சிகளையும் எதிர்த்தது. இது நட்பு நாடுகளுடன் பதற்றத்தை உருவாக்கியது. கடுமையான தன்னிறைவு எவ்வாறு புவிசார் அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுகிறது.


இதற்கிடையில், மோடியின் எரிசக்தியின் இராஜதந்திரம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுகிறது. இது உலகளாவிய பதட்டங்கள் இருந்தபோதிலும் நிலையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகள் இருந்தபோதிலும், இந்தியா ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய முடிந்தது. இது நெகிழ்வான கூட்டணிகளின் வலிமையைக் காட்டுகிறது.


மாறாக, டிரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். முக்கியமான கூட்டணி நாடுகளுடன் அவருக்கு வரிவிதிப்பு மோதல்களும் இருந்தன. இந்த நடவடிக்கைகள் கூட்டணி நாடுகளை சீர்குலைத்தன. இது எரிசக்தி தனிமைப்படுத்தல் எவ்வாறு பாதிப்பைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.


ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் முழுமையான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை டிரம்பின் கொள்கைகள் காட்டுகின்றன. நாட்டிற்குள் பொருட்களை உற்பத்தி செய்வது பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இருப்பினும், வெளிப்புற இடையூறுகள் அல்லது அரசியல் அழுத்தங்களைத் தடுக்க முடியாது. மறுபுறம், மோடியின் அணுகுமுறை இராஜதந்திர ரீதியில் நெகிழ்வுத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. இது பல்வேறு கூட்டாண்மைகளை உருவாக்கி அதன் எரிசக்தி ஆதாரங்களை சரிசெய்வதன் மூலம் இந்தியா நெருக்கடிகளைக் கையாள உதவுகிறது.


இறுதியில், ஆற்றல் பாதுகாப்பு என்பது நாடுகளின் உறவுகளைத் துண்டிப்பதில் இல்லை மாறாக சார்புகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதில் உள்ளது. ஒத்துழைப்புடன் இறையாண்மையை சமநிலைப்படுத்துதல், பலதரப்பட்ட விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் இராஜதந்திர ரீதியில் கணக்கியலில் நிலைத்தன்மையை ஒருங்கிணைத்தல், தகவமைப்புப் பின்னடைவில் தேர்ச்சி பெற்ற நாடுகளுக்கு எதிர்காலம் சொந்தமானது. கடுமையான புவிசார் அரசியல் மற்றும் விரைவான தொழில்நுட்ப மாற்றத்தின் உலகில், இந்த மாறும் சமநிலையை ஏற்றுக்கொள்பவர்கள் ஆற்றல் அதிர்ச்சிகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால், உலகளாவிய ஆற்றல் தலைமையின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்.


எழுத்தாளர் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஜூனியர் ஃபெலோ.



Original article:

Share:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், ஒரு நுகர்வு ஊக்கி. -சுர்ஜித் கார்த்திகேயன்

 ஓய்வுக்குப் பிறகு உறுதியான வருமானம், சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான நுகர்வு அளவை ஊக்குவிக்கும்.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) ஏப்ரல் 1, 2025 அன்று நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது. இது அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவர்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை மாற்றக்கூடும். கோட்பாட்டளவில் இது இந்தியப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வோம்.


பொருளாதாரத்தில் நுகர்வு செயல்பாட்டுக் கோட்பாடுகள் வாழ்நாள் முழுவதும் முடிவெடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. காலப்போக்கில் மக்கள் எவ்வாறு நிலையான வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை அவை விளக்குகின்றன. வருமான மாற்றங்கள் வாழ்க்கை முறைகளையும் செலவு பழக்கங்களையும் பாதிக்கின்றன. எனவே, அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட வருமான அளவை இலக்காகக் கொண்டுள்ளனர்.


பொருளாதாரத்தில் வாழ்க்கைச் சுழற்சி கருதுகோள் (life cycle hypothesis), மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சமநிலையான வாழ்க்கை முறையைப் பராமரிக்க தங்கள் செலவுகளையும் சேமிப்பையும் திட்டமிடுகிறார்கள் என்று கூறுகிறது. இது அவர்களின் செலவினங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது.


ஆரம்ப ஆண்டுகளில், ஒருவர் கல்விக் கடன் வாங்குகிறார். வேலை கிடைத்த பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்துவதோடு, பணத்தையும் மிச்சப்படுத்துகிறார்.


இந்தச் சேமிப்புகளும் முதலீடுகளும் அவர்களின் முதுமைத் தேவைகள், பாதுகாப்பான வருமானத் தேவைகள், அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகள் போன்றவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நிரந்தர வருமானக் கோட்பாடும் இந்த வாழ்க்கைச் சுழற்சி கருதுகோள் கருத்துடன் ஒத்துப்போகிறது.


நுகர்வு முறை எவ்வாறு மாறுகிறது?


அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஏனெனில், அவர்களின் ஓய்வூதிய வருமானம் சந்தை செயல்திறனைப் பொறுத்து இருக்கும். அதனால் பலர் நிலையான வருமானத்தை உறுதி செய்வதற்காக, நிலையான வைப்புத்தொகை அல்லது பிற பாதுகாப்பான சேமிப்பு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள்.


கோவிட்-19 காலத்தில், மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை அவசர சுகாதாரச் செலவுகளுக்காகச் சேமித்து வைத்தனர். இது நுகர்வுக்கான விளிம்பு நாட்டத்தை (marginal propensity to consume (MPC)) குறைத்தது. மக்கள் தங்கள் வருமானத்தில் குறைவாகவே பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவழித்து, வரலாற்றிலேயே குறைந்த அளவை அடைந்தனர்.


பெருந்தொற்று காலத்தில், நுகர்வு அதிகரிக்கவும், வருமானம் மற்றும் வளர்ச்சியைத் தக்கவைக்கவும், நிதி மற்றும் பணவியல் கருவிகள் மூலம் பணப்புழக்கத்தை அரசாங்கம் செலுத்த வேண்டியிருந்தது.


புதிய ஓய்வூதியத் திட்டம் சம்பளம் வாங்கும் வகுப்பினரின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும். இல்லையெனில் அது சேமிப்பு அல்லது முதலீடுகளுக்குச் சென்றிருக்கும்.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.


இருப்பினும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான வருமானத்தை உறுதி செய்கிறது. ஓய்வூதியதாரர் ஓய்வுக்குப் பிறகு இறந்தால், அவர்களின் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட மனைவிக்கு கடைசி ஊதியத்தில் 60% கிடைக்கும்.


இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகள், அவரது பணிக் காலத்தில் நுகர்வு அதிகரிப்பதிலோ அல்லது MPC அதிகரிப்பதிலோ பிரதிபலிக்கின்றன. இதனால் வாழ்க்கை வசதியை உறுதி செய்யும் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது. நுகர்வு நீடித்த பொருட்கள் அல்லது சொத்து வடிவில் இருக்கலாம்.


பொருளாதாரத்தில் தாக்கம்


நடுத்தர வர்க்கப் பிரிவின் பெரும்பகுதியினருக்கு சம்பளம் வாங்கும் ஊழியர்களாக உள்ளனர். அதிக செலவழிப்பு வருமானம் அதிக நுகர்வுக்கு வழிவகுக்கிறது.  இது பொருளாதாரத்தில் அதிகமான விளைவை ஏற்படுத்துகிறது.


ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கைக்காக மக்கள் தங்கள் சொந்த கிராமங்கள்/நகரங்களிலும் முதலீடு செய்கிறார்கள். இது உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.


நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பணக்காரர்களைவிட தங்கள் வருமானத்தில் அதிக பகுதியை செலவிடுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, அவர்களுக்கு அதிகப் பணம் கொடுப்பது ஒட்டுமொத்த செலவினங்களை அதிகரிக்கிறது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.


நுகர்வுக்கான அதிக விளிம்பு நாட்டம் (MPC) வருமானம் மற்றும் முதலீட்டில் வலுவான பெருக்க விளைவை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பொருளாதாரத்திலிருந்து பணக் கசிவைக் குறைக்கிறது.


இந்தியாவில் ஏராளமான உற்பத்தி திறன் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளன. வரவு செலவு அறிக்கை திட்டங்கள் அதிக முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், சமீபத்திய ரெப்போ விகிதத்தில் குறைப்பு மலிவான வங்கிக் கடனுக்கு வழிவகுக்க வேண்டும் . இது முதலீட்டை அதிகரிக்கும். 


எனவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) நுகர்வு ஊக்கியாக இருக்கும்.


எழுத்தாளர் மத்திய நிதி அமைச்சகத்தில் இயக்குநராக உள்ளார்.



Original article:

Share:

இந்தியா மற்றும் நியூசிலாந்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்த பிறகு, ஐந்து கண்கள் புலனாய்வு கூட்டணியின் நட்பு நாடான நியூசிலாந்துடன் இந்தியா ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதாக ஒப்புக்கொண்டது.


முக்கிய அம்சங்கள்:


• இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நிறுவனமயமாக்கவும் இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாகவும், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பிற்கான சாலை வரைபடம் தயாரிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.


• இந்தியாவும் நியூசிலாந்தும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிப்பதாக மோடி கூறினார். "நாங்கள் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளோம், விரிவாக்கத்தில் அல்ல” என்று கூறினார். இது பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. 


• இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள கடினமான சூழ்நிலை குறித்து தானும் பிரதமர் மோடியும் பேசியதாக நியூசிலாந்து பிரதமர் கூறினார். பொதுவான பிரச்சனைகளில் பணியாற்றுவதற்கும், பிராந்தியத்தை வளப்படுத்த உதவுவதற்கும் நியூசிலாந்து உறுதியாக உள்ளது என்று லக்சன் கூறினார்.


• கூட்டு அறிக்கையின்படி, உலகம் மேலும் நிச்சயமற்றதாகவும் ஆபத்தானதாகவும் மாறி வருவதாக பிரதமர்கள் தெரிவித்தனர். கடல்சார் நாடுகளாக, இந்தியாவும் நியூசிலாந்தும் சர்வதேச விதிகளைப் பின்பற்றி இந்தோ-பசிபிக் பகுதியைத் திறந்த, நிலையான மற்றும் வளமானதாக வைத்திருப்பதில் வலுவான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.


• கூட்டறிக்கையின்படி, பிரதமர்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா-நியூசிலாந்து ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான விவாதங்களை உறுதி செய்யும். கடல் வழிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து வழக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஒப்புக்கொண்டனர்.


• நியூசிலாந்து ஒருங்கிணைந்த கடல் படையில் இந்தியா சேர்வதை வரவேற்றது மற்றும் நியூசிலாந்து கட்டளை பணிக்குழு 150-ன் போது பாதுகாப்பு உறவுகளில் முன்னேற்றத்தை வரவேற்றது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2023-24 ஆம் ஆண்டில், நியூசிலாந்து இந்தியாவிற்கு $0.84 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை விற்று இந்தியாவிலிருந்து $0.91 பில்லியன் வாங்கியுள்ளது. அவர்களின் மொத்த வர்த்தகம் $1.75 பில்லியன் ஆகும். இந்தியா நியூசிலாந்திலிருந்து கம்பளி, இரும்பு மற்றும் எஃகு, பழங்கள், விதைகள் மற்றும் அலுமினியத்தை இறக்குமதி செய்கிறது. அதற்கு ஈடாக, இந்தியா மருந்துகள், இயந்திரங்கள், ஜவுளி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்களை நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.



Original article:

Share:

29-வது காலநிலை மாநாடு முடிவுகள் எவ்வாறு இந்தியா போன்ற நாடுகளை தங்கள் காலநிலை இலக்குகளை மறுமதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்துகின்றன? -அபினவ் ராய்

 இந்தியாவில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDCs)) மற்றும் எதிர்கால காலநிலை செயல் திட்டங்களுக்கு போதுமான காலநிலை நிதி இல்லாததால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?


உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதன் மூலம் காட்டப்பட்ட சர்வதேச காலநிலை முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதற்கான அமெரிக்காவின் முடிவு ஒரு முக்கியப் பிரச்சினையாகும். சமீபத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியத்தின் வாரியம் தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. காலநிலை பேச்சுவார்த்தை, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உண்மைகளைப் பற்றி நிறைய பேசுகிறது.


காலநிலை மாநாடு (COP29) முடிவுகள் வளரும் பொருளாதாரங்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகள் பலவீனமடைந்தன. ஏனெனில், காலநிலை நிதிக்கு $300 பில்லியன் மட்டுமே வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், காலநிலை சவால்களைச் சமாளிக்க ஆண்டுக்கு $1 டிரில்லியனுக்கும் அதிகமாகத் தேவைப்படுவதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.


வளர்ந்த நாடுகளிடமிருந்து போதுமான நிதி உதவி தேவை என்பதை இந்தியா பலமுறை வலியுறுத்தியுள்ளது. வளரும் நாடுகள் தங்கள் காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற இந்த ஆதரவு மிக முக்கியமானது. இருப்பினும், நிதிப் பற்றாக்குறை இந்தியாவையும் பிற வளரும் நாடுகளையும் தங்கள் காலநிலை இலக்குகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை மறுமதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்தக்கூடும்.


2035 வரையிலான காலக்கெடுவிற்கு தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDCs)) சமர்ப்பிக்க பிப்ரவரி 10-ஆம் தேதி கடைசி தேதியை இந்தியாவும் பல நாடுகளும் தவறவிட்டன. டிசம்பர் 2024-ல், இந்தியா தனது முதல் ஈராண்டு வெளிப்படைத்தன்மை அறிக்கையை (Biennial Transparency Report (BTR)) சமர்ப்பிக்கவில்லை. BTR என்பது ஒரு புதிய அறிக்கை வடிவமாகும். இதில் நாடுகள் உமிழ்வுகள் குறித்த விரிவான தரவை வழங்க வேண்டும். இந்தியா இப்போது இந்த அறிக்கையை 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கூடுதலாக, ரிசர்வ் வங்கி அறிக்கை, இந்தியா அதன் பசுமை மாற்ற இலக்குகளை அடைய 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2.5%-ஐ காலநிலை நிதிக்காக செலவிட வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த முன்னேற்றங்கள், காலநிலை நிதி, இந்தியாவின் காலநிலை உறுதிமொழிகள் மற்றும் அவற்றை அடைவதற்கான அதன் திட்டங்களைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதைக் காட்டுகிறது.


காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற, இந்தியா போன்ற நாடுகள் பசுமை உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு, நிறைய நிதி தேவைப்படுகிறது. தகவமைப்பு மேம்படுத்த, தணிப்பை வலுப்படுத்த மற்றும் உமிழ்வைக் குறைக்க காலநிலை நிதியில் பெரிய முதலீடுகள் அவசியம்.


காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)), காலநிலை நிதி என்பது காலநிலை மாற்றத்தை சமாளிக்கப் பயன்படுத்தப்படும் நிதியாகும். இது உள்ளூர், தேசிய அல்லது சர்வதேச மட்டங்களில் பொது, தனியார் மற்றும் பிற மூலங்களிலிருந்து வருகிறது. இந்த நிதி தணிப்பு (காலநிலை தாக்கத்தைக் குறைத்தல்) மற்றும் தழுவல் (காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்தல்) ஆகியவற்றை ஆதரிக்கிறது.


2021-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடந்த 26-வது காலநிலை மாநாட்டில், இந்தியா தனது பஞ்சாமிருத காலநிலை செயல் திட்டத்தை (Panchamrit climate action plan) அறிவித்தது. இந்தத் திட்டம் குறுகிய மற்றும் நீண்ட கால காலநிலை இலக்குகளை நிர்ணயித்தது. இந்தியாவின் பஞ்சாமிருத காலநிலை செயல் திட்டத்தில் பின்வரும் இலக்குகள் உள்ளன:


2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


2030-ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து குறைந்தபட்சம் 50% ஆற்றலைப் பெறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.


2030-ஆம் ஆண்டிற்குள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை 1 பில்லியன் டன் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


2005-ஆம் ஆண்டு அளவை விட, 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் தீவிரத்தை 45% குறைக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.


2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது.


2024-ஆம் ஆண்டு அக்டோபரில், இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 GW-ஐத் தாண்டியது.  இது நாட்டின் மொத்த மின் திறனில் 46.3% ஆகும். இந்த முன்னேற்றம் 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 500 GW ஐ அடையும் இந்தியாவின் இலக்கை ஆதரிக்கிறது. இந்தியாவின் 200 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மைல்கல்லிற்கு பங்களிக்கும் முக்கிய ஆதாரங்கள்:


. சூரிய சக்தி - 92.12 கிகாவாட் 

. காற்றாலை சக்தி - 47.72 கிகாவாட் 

          . பெரிய நீர் மின் திட்டங்கள் - 46.93 கிகாவாட் 

          . சிறிய நீர் மின் உற்பத்தி - 5.07 கிகாவாட் 

           . உயிரி ஆற்றல் - 11.32 கிகாவாட் 

           . அணுசக்தி திறன் - 8,180 மெகாவாட் 


2030-ஆம் ஆண்டிற்குள் 20 GW அணுசக்தியை உற்பத்தி செய்வதையும், 2047-ஆம் ஆண்டிற்குள் மொத்த மின்சாரத் தேவையில் அணுசக்தியை 9%-ஆக அதிகரிப்பதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அணுசக்திச் சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டம் உள்ளது. இந்த மாற்றம் தனியார் நிறுவனங்கள் சிறிய அணு உலைகளை உருவாக்க அனுமதிக்கும். இது இந்தியாவின் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு இந்தியா மாறுவதை ஆதரிப்பதற்காக நிதிநிலை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு ₹26,549.38 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹17,298.44 கோடியுடன் ஒப்பிடும்போது இது 53.48% அதிகமாகும். 2021-ஆம் நிதியாண்டு முதல், அமைச்சகத்தின் நிதி 904% அதிகரித்துள்ளது.


இந்த ஆண்டு அணுசக்தி திட்டத்திற்காக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ₹20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்-இயக்க முயற்சிகளுக்கான நிதி 2025-நிதியாண்டில் ₹4,435 கோடியிலிருந்து (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) நிதியாண்டு 2026-ஆம்  நிதியாண்டில் ₹5,322 கோடியாக அதிகரிக்கும்.


இந்தியாவின் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு நிதி உதவி வழங்குவதன் மூலமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமும் பல திட்டங்கள் உதவுகின்றன. இவற்றில் பின்வருவன:


பிரதம மந்திரி  சூரிய சக்தி மூலம் வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் (PM Surya Ghar Muft Bijli Yojana)


பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் திட்டம் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) 


  • மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்துதல்.


  •  சூரிய மின்சக்தி கூரை கட்டம் II-சூரிய மின் பலகை பயன்பாட்டை    

  ஊக்குவித்தல்.


  • ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை ஊக்குவித்தல்.


  •  தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கான நிதியை அதிகரித்தல்.


இருப்பினும், நிதியுதவி ஒரு பெரிய சவாலாகும். 29-வது காலநிலை மாநாடு முடிவுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை ஏமாற்றமடையச் செய்தன. வளர்ந்த நாடுகள் 2035ஆம் ஆண்டு முதல் காலநிலை நிதிக்கு $300 பில்லியன் வழங்குவதாக மட்டுமே உறுதியளித்தன. அதே நேரத்தில் உண்மையான தேவை ஆண்டுக்கு $1 டிரில்லியன் ஆகும். 2024-25-ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு இதை பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதில் பெரும் தோல்வி என்று கூறியது.


பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை புதுப்பிக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டில், பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் 2035 வரையிலான காலத்திற்கான தங்கள் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தியா உட்பட பல நாடுகள் இந்த காலக்கெடுவைத் தவறவிட்டன. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பங்களிப்புச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, 2028-ஆம் ஆண்டில் COP33 காலநிலை மாநாட்டை நடத்த இந்தியா திட்டமிட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மாநாட்டை நடத்தும் நாடுகள் வழக்கமாக மாநாட்டிற்கு முன்னதாக புதிய காலநிலை முயற்சிகளை அறிவிக்கின்றன. அவை தங்கள் தலைமையை நிரூபிக்கவும், மிகவும் அர்த்தமுள்ள விளைவுக்கான உத்வேகத்தை உருவாக்கவும் உதவுகின்றன. இந்தியாவும் அதன் 2030 காலநிலை இலக்குகளை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலக நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியா தனது காலநிலை உத்தியை சரி செய்து வருகிறது. பல நாடுகளைப் போல உமிழ்வைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்தியா தகவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வளங்கள் குறைவாக உள்ள வளரும் நாடான இந்தியா, உமிழ்வைக் குறைப்பதை விட தகவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தகவமைப்பு என்பது காலநிலை மாற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு சமூகங்கள் வலுவாகவும் சிறப்பாகவும் தயாராகவும் இருக்க உதவுவதாகும்.


காலநிலை நிதி வகைப்பாட்டின் தேவை


இந்த மாற்றத்துடன் இணைந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 2024-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை உரையில், "காலநிலை தழுவல் மற்றும் தணிப்புக்கான மூலதனத்தின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்காக காலநிலை நிதிக்கான வகைப்பாட்டை நாங்கள் உருவாக்குவோம். இது இந்தியாவின் காலநிலை இலக்குகள் மற்றும் பசுமை மாற்றத்தை ஆதரிக்கும் என்று கூறினார்.


காலநிலை நிதி வகைப்பாடு (Climate finance taxonomies) என்பது எந்தெந்த பொருளாதார நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு நிலையானவை என்பதை வரையறுக்கும் விதிகள் ஆகும். அவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலீடுகளைச் செய்ய உதவுகின்றன. இருப்பினும், இந்தியாவின் வகைப்பாடு இன்னும் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இறுதி பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 2024 ஏப்ரல் நிலவரப்படி, உலகளவில் இதுபோன்ற 47 வகைப்பாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா முன்னணியில் இருந்தன. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்கள் சொந்த வகைபிரித்தல்களை உருவாக்கியுள்ளன அல்லது உருவாக்கி வருகின்றன.


காலநிலை மாற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவாக வேகமாக நிகழ்ந்து வருகிறது. உமிழ்வை மாற்றியமைக்கவும், குறைக்கவும் இந்தியா எடுக்கும் முயற்சிகள் அதன் பொருளாதார நிலைத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்தும். இருப்பினும், இலட்சிய இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், இந்தியா தனது வளங்களை எவ்வாறு ஒதுக்குவது என்று முடிவு செய்துள்ளது.



Original article:

Share: