மறுசுழற்சி சீர்தர இயக்கச் செய்முறையானது(Sops), மின்கல வணிகங்களுக்கு உத்வேகம் அளிக்குமா? -பாரதி கிருஷ்ணன்டிபி பிரபு

 

Sops :  Standard Operating Procedure -  இதற்கு சீர்தர இயக்கச் செய்முறை அல்லது நிலையான இயக்க முறைமை என்று பொருள். இது ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிமுறைகளையும், பின்பற்ற வேண்டிய தரங்களையும் விவரிக்கும் ஒரு ஆவணமாகும்.


இந்த திட்டம், செயல்பாட்டு செலவு ஆதரவில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் நிறுவனங்கள் பொருள் மீட்பு தொடங்கியவுடன் அவை அளவிட ஊக்குவிக்கப்படும்.


தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டத்தின் (National Critical Minerals Mission) கீழ் ₹1,500 கோடி ஊக்கத் திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. லித்தியம்-அயன் மின்கலங்கள், மின்-கழிவுகள் மற்றும் பிற கனிம வளம் மிக்க கழிவுகளின் உள்நாட்டு மறுசுழற்சியை அதிகரிப்பதே இதன் குறிக்கோள். மேலும், இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இதில், ₹8,000 கோடி தனியார் முதலீட்டை ஈர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 270,000 டன் மறுசுழற்சி திறனை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் 40,000 டன் முக்கியமான கனிமங்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.


2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்கல தர முக்கியமான கனிமங்களுக்கான (battery-grade critical minerals) தேவை 800 டன்கள் ஆகும். மின்சார வாகனங்கள் மற்றும் சுத்தமான எரிசக்தி விரிவடைவதால், இந்த தேவை 2047-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 2.6 லட்சம் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மானியம் முக்கியமான கனிமங்களை பிரித்தெடுப்பதற்கு மட்டுமே பொருந்தும், கோபால்ட், மாங்கனீசு மற்றும் லித்தியம் ஆகியவற்றின் தூள் கலவையை உருவாக்கும் இடைநிலை செயல்முறைகளுக்கு அல்ல. பெரிய மறுசுழற்சி நிறுவனங்கள் ₹50 கோடி வரை பெறலாம். அதே நேரத்தில், சிறிய நிறுவனங்கள் ₹25 கோடி வரை பெறலாம். இந்த ஆதரவு மூலதனம் மற்றும் இயக்க செலவுகள் இரண்டையும் உள்ளடக்கியது. இந்தத் திட்டம் இந்தியாவின் இளம் மின்கல மறுசுழற்சித் துறையை ஊக்குவிக்குமா மற்றும் அமெரிக்காவில் உள்ள ரெட்வுட் மெட்டீரியல்ஸ் அல்லது அசென்ட் எலிமென்ட்ஸ் போன்ற பில்லியன் டாலர் வணிகங்களை உருவாக்க உதவுமா என்பது முக்கிய கேள்வி.


இந்தியாவின் மின்கல மறுசுழற்சி தொழில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவானது. முறைசாரா ஆபரேட்டர்கள் (informal operators) ஆதிக்கம் செலுத்தும் பிற கழிவு நீரோடைகளைப் (waste streams) போலல்லாமல், மின்கல மறுசுழற்சிக்கு தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் இரண்டும் தேவை. இதன் காரணமாக, இவை முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், பெரும்பாலான மின்கல சேகரிப்பு இன்னும் முறைசாரா அமைப்புகள் வழியாகவே நடக்கிறது.


அட்டெரோ (Attero), லோஹம் க்ளீன்டெக் (Lohum Cleantech), பேட்எக்ஸ் எனர்ஜிஸ் (BatX Energies), மினி மைன்ஸ் (Mini Mines), எக்ஸிகோ (Exigo) உள்ளிட்ட சில நிறுவனங்கள் இன்று செயல்பாட்டில் உள்ளனர். இதில், ஒரு வருடத்திற்கு 200 டன்களுக்கும் குறைவான மொத்த சுத்திகரிக்கப்பட்ட உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை கருப்புப் பொருளை உற்பத்தி செய்வதை நிறுத்துகின்றன. இதில், முக்கியமாக மின்கல தூள் ஆகும். சுத்திகரிப்பு மற்றும் உலோக பிரித்தெடுத்தலை சோதிக்க அவர்கள் உற்பத்தி ஆலைகளையும் (pilot plants) நடத்தி வருகின்றனர். சுத்திகரிப்பு தொழில்நுட்பம் உலகளவில் நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு செல்வது கடினம். மறுசுழற்சியாளர்கள் பல வேறுபட்ட மின்கல வேதியியல்களை கையாள வேண்டும். அவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் மகசூல் பெற வேண்டும் மற்றும் விநியோகத்தின் தரத்தை பூர்த்தி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த செயல்முறை ஆபத்தானது மற்றும் தீ விபத்துக்குள்ளாகும். எனவே சிறிய விபத்துகள் கூட செயல்பாடுகளை நிறுத்தலாம்.


ஆண்டுக்கு 5,000 டன் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது விலை உயர்ந்தது. ₹100 கோடிக்கு மேல் செலவாகும். கழிவுப்பொருள் (scrap) வாங்குவதற்கும் சுத்திகரிக்கப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்கும் இடையே மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்பதால், பணி மூலதனத் தேவைகளும் அதிகமாக உள்ளன. விலைகள் கணிக்க முடியாதவை. ஏனெனில், அவை கழிவுப்பொருள் (scrap) அல்ல, புதிய கனிமங்களின் விலையைப் பின்பற்றுகின்றன. இதனால் லாபம் நிச்சயமற்றதாகிறது.


இருப்பினும், சுத்திகரிப்புக்கான யூனிட் பொருளாதாரம் மின்கல பொருளை விற்பனை செய்வதை விட மிகச் சிறந்ததாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 1 கிலோ மின்கல கழிவுப்பொருள்களின் (scrap) விலை ₹100–150 ஆகும். இரண்டு கிலோ கழிவுப்பொருள் ஒரு கிலோ மின்கல பொருளை உற்பத்தி செய்கிறது. இது சுமார் ₹300/கிலோவுக்கு விற்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட எந்த லாபத்தையும் அளிக்காது. இருப்பினும், கழிவுப்பொருள் (scrap) பொருளை சுத்திகரித்தால், 1 கிலோ ₹300 வரை மதிப்புள்ள சுமார் 20 கிராம் லித்தியத்தை உற்பத்தி செய்யலாம். இது நிக்கல், கோபால்ட் மற்றும் தாமிரத்தையும் உற்பத்தி செய்வதுடன், கூடுதலாக  ₹380–680 சேர்க்கிறது. சுத்திகரிப்பு உண்மையான மதிப்பை உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.


VC (வென்ச்சர் கேபிட்டல்) ஆர்வம்


மின்கல மறுசுழற்சி ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளை தீர்க்கிறது. இது, வளர்ந்து வரும் மின்கல கழிவுகளை கையாளுவது மற்றும் வீட்டிலேயே கனிம தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற நிலைகளை முன்வைக்கிறது. அதனால்தான், இந்த துறை ஏற்கனவே வென்ச்சர் கேபிட்டலை ஈர்த்துள்ளது. லோஹம் க்ளீன்டெக் சீரிஸ் பி (Series B) நிதியுதவியை திரட்டியுள்ளது. அதே நேரத்தில், பேட்எக்ஸ் எனர்ஜிஸ், மெட்டாஸ்டேபிள் மெட்டீரியல்ஸ் (Metastable Materials) மற்றும் மினி மைன்ஸ் ஆரம்பகால மூலதனத்தை பெற்றுள்ளன. சுத்திகரிப்பு ஆலைகளை கட்டுவதற்கு VC-கள் மட்டும் வழங்க முடியாத அளவுக்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. சாத்தியமான பாதை என்னவென்றால், புத்தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் சுத்திகரிப்பை காட்டியதும், ரிலையன்ஸ், டாட்டா, அதானி, க்ளென்கோர் (Glencore) அல்லது CATL போன்ற இராஜதந்திர நிறுவனங்களில் வாங்குபவர்கள் நுழைவார்கள்.


உலகளவில், பல பெரிய மறுசுழற்சி நிறுவனங்கள் உள்ளன. சில துணிகர ஆதரவு பெற்ற யூனிகார்ன்கள், சில பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. வென்ச்சர் ஆதரவு பெற்ற யூனிகார்ன்களில் அமெரிக்காவில் ”ரெட்வுட் மெட்டீரியல்ஸ்” (Redwood Materials) அடங்கும். கேத்தோடு ஆக்டிவ் மெட்டீரியல் (CAM) மற்றும் செப்பு படலம் தயாரிக்க இது $3.8 பில்லியனுக்கும் அதிகமாக திரட்டியுள்ளது. மற்றொன்று அசென்ட் தனிமங்கள் (Ascend Elements), இது $1.5 பில்லியனை திரட்டி பெரிய CAM ஆலைகளை உருவாக்குகிறது. கனடாவில் லித்தியம்-மறுசுழற்சி (Li-Cycle) ஒரு காலத்தில் $1.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டது. அதன் ரோசெஸ்டர் வசதியில் செலவு அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இது இப்போது போராடி வருகிறது.


பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், பெல்ஜியத்தில் உமிகோர் (Umicore) வினையூக்கிகள், மின்கலங்கள் மற்றும் மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், சீனாவில் ஜெம் (GEM) லித்தியம்-அயன் மின்கலங்கள், மின்-கழிவுகள் மற்றும் தொழில்துறை கழிவுப்பொருள்களை (scrap) கையாள்வதன் மூலம் கேத்தோடு பொருள் மற்றும் சிறப்பு உலோகக் கலவைகளை உற்பத்தி செய்கிறது.


இந்தியாவின் புதிய மறுசுழற்சி திட்டம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும் : நிதி விநியோகத்திற்கு தெளிவான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உருவாக்க வேண்டும். மூலதன செலவை விட செயல்பாட்டு செலவு ஆதரவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால், பொருள் மீட்பு தொடங்கியவுடன் இது நிறுவனங்களை அளவிட ஊக்குவிக்கும். 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) ஒரு பட்ஜெட்டை வழங்க வேண்டும். இது மறுசுழற்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் சிறப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் தனிநபர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் திறக்கப்பட வேண்டும்.



Original article:

Share:

சர்க்கரை பானங்கள் மீது தீவினை வரி (Sin tax), விதிப்பது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. -அஞ்சு விர்மணி ரேகா ஹரிஷ்டிசிஏ அவ்னி

 இந்த வரி, அடையாள குறியீடுகளில் ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீதான வரம்புகளுடன் இணைந்து, பொது நல்வாழ்வை மேம்படுத்த உதவும்.


இந்தியாவில் வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராட உதவும் வகையில், அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் மீதான வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் அதிகரித்துள்ளது. சர்க்கரை கொண்ட காற்றூட்டப்பட்ட பானங்கள், பழங்களை அடிப்படையாகக் கொண்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் கலந்த பானங்கள் மீதான ஜிஎஸ்டி 28% இலிருந்து 40% ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மற்ற மது அல்லாத பானங்கள் இப்போது 18% க்கு பதிலாக 40% வரி விதிக்கப்படுகின்றன.  அதிக வரிகள் போன்ற நிதி நடவடிக்கைகள் "தேர்வு தண்டிப்பு" (punishing choice) பற்றியது அல்ல, மாறாக நுகர்வுக்கான உண்மையான சமூக செலவுகள் பெரும்பாலும் மறைக்கப்படும் சந்தையின் ஏற்றத்தாழ்வை சரிசெய்வது ஆகும். சோடாக்கள், குளிர்ந்த தேநீர், புத்துணர்ச்சி பானங்கள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மீது "தீவினை வரிகளை" (sin taxes) விதிப்பதன் மூலம், அரசாங்கம் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஆரோக்கியம் முதன்மையானதாக உள்ளது.


சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தொழில்களை ஒழுங்குபடுத்துவது எப்போதும் கடினம். பண விளையாட்டு தளங்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 2025 தொடர்பான விவாதங்கள் இந்த சவாலை காட்டுகின்றன. இது அரசாங்கத்தின் அத்துமீறல் என்றும், வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறைந்த வளர்ச்சி கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் வாதிட்டனர். இருப்பினும், போதைப்பொருள், நிதி இழப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற கட்டுப்பாடற்ற சந்தைகளின் கடுமையான தீங்குகளை அவர்கள் பெரும்பாலும் கவனிக்கவில்லை.


சர்க்கரை பானங்கள் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கின்றன. இருப்பினும், அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 2019ஆம் ஆண்டு BMJஇல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது இறப்பு அபாயத்தை 62 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு லான்செட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு முக்கிய பங்களிப்பதாக காட்டப்பட்டுள்ளது. சர்க்கரை போதைப்பொருள், மேலும் வலுவான விளம்பரங்களுடன் இணைந்து, சர்க்கரை பானங்கள் மீண்டும் மீண்டும் உட்கொள்வதை ஊக்குவிக்கின்றன. இயற்கை உணவுகளைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகள் குறிப்பாக கவர்ச்சிகரமானதாகவும் எதிர்க்க கடினமாகவும் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.


உடல் பருமன் அதிகரிக்கும்


அதிகரித்து வரும் உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் ஆரம்பகால இறப்புகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நிறுவனங்கள் ஏற்கவில்லை. மாறாக குடும்பங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகளே ஏற்கின்றன. அதிகரித்து வரும் உடல் பருமனால், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, இந்தியா கடுமையான உடல்நலம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அதன் விளைவுகளைக் கையாள முடியாத ஏழை சமூகங்களிடையே இந்தப் பிரச்சினை மோசமாக உள்ளது. 


ICMR-NIN உணவுமுறை வழிகாட்டுதல்கள் (2024) படி, இந்தியாவின் நோய் சுமையில் 56 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆரோக்கியமற்ற உணவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்திற்காக, பொது சுகாதார நிபுணர்கள் நீண்ட காலமாக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான "விரும்பதாகத வரிகளை" ஆதரித்து வருகின்றனர். அவை சிறிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. ஆனால், பெரும் தீங்கு விளைவிக்கின்றன. மக்களுக்கு ஊட்டச்சத்துக்காக சேர்க்கப்பட்ட சர்க்கரை தேவையில்லை என்றும், சர்க்கரை பானங்களின் விலையை குறைந்தது 20 சதவீதம் அதிகரிப்பது அவர்களின் நுகர்வைக் குறைக்கும் என்றும் WHO குறிப்பிட்டுள்ளது.


சமீபத்திய தரவுகள் அவசர நடவடிக்கை தேவை என்பதைக் காட்டுகின்றன. பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கை, வீட்டுச் செலவினங்களை பகுப்பாய்வு செய்து, அனைத்து வருமானப் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அதிக அளவில் பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதாகக் கண்டறிந்துள்ளது. கிராமப்புறங்களில், கீழ்மட்ட 20% குடும்பங்கள் 2011-12ஆம் ஆண்டில் 3.2%ஆக இருந்த செலவினத்தை 2022-23ஆம் ஆண்டில் 5.5% ஆகவும், மேல்மட்ட 20% குடும்பங்கள் 4.7% இலிருந்து 6.9% ஆகவும் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், கீழ்மட்ட 20% குடும்பங்கள் 3.7% இலிருந்து 6.4% ஆகவும், மேல்மட்ட 20% குடும்பங்கள் 6.1% இலிருந்து 8.2% ஆகவும் உயர்ந்துள்ளன. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் இந்த வளர்ந்து வரும் நுகர்வு கவலைக்குரியது. ஏனெனில், இது குடும்ப ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, சுகாதாரச் செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது.


GST கவுன்சிலின் சமீபத்திய துணிச்சலான நடவடிக்கை இந்தியாவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார உத்திகளை ஆதரிக்கிறது. அத்தகைய உணவுகள் மீதான வரிகளை உயர்த்துவது முக்கியமாக வருவாய்க்காக அல்ல. இது ஒரு பொது சுகாதார தலையீடாகும். தொழில்துறை எதிர்ப்பை எதிர்பார்த்த போதிலும், குறுகிய கால நிறுவன லாபத்தை விட குடிமக்களின் நீண்டகால ஆரோக்கியத்தை அரசாங்கம் மதிப்பதாகக் காட்டியுள்ளது. இது பிரதமர் மோடியால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்துடன் (Swasth Bharat mission) ஒத்துப்போகிறது. இது ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் வலுப்படுத்துகிறது. இது தினை மற்றும் பிற கரிமப் பொருட்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிக்கிறது.


சர்க்கரை அட்டவணைகள்


போஷன் 2.0, பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)), மற்றும் ”சரியாக சாப்பிடுங்கள் என்ற இந்தியாவின் பிரச்சாரம்” (Eat Right India campaign) போன்ற முதன்மைத் திட்டங்கள், சத்தான உணவுக்கான அணுகலை விரிவுபடுத்தவும், சமச்சீர் உணவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் சர்க்கரை தொடர்பான அட்டவணைகளை கட்டாயமாக்கியது. அனைத்து பள்ளிகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பிற பொதுவான இடங்களில் தகவல் காட்சிகள், அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கும், ஆரோக்கியமான மாற்று வழிகளை பரிந்துரைப்பதற்கும் நோக்கமாக உள்ளது. சுகாதார கல்வியறிவை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான விருப்பங்களை மலிவு விலையில் ஆக்குவதன் மூலம், மற்றும் தீங்கு விளைவிக்கும் UPF நுகர்வுகளை ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தியா ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குகிறது.


இந்தப் பின்னணியில், வரிவிதிப்பு என்பது, சர்க்கரை கலந்த பானங்களின் (SSB) உண்மையான சமூகச் செலவை அவற்றின் விலையில் இணைத்து, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்வதற்கும், சந்தைகளை அதிகப் பொறுப்பான தயாரிப்பு கண்டுபிடிப்புகளை நோக்கித் தள்ளுவதற்கும் அதிகாரம் அளிக்கிறது. எவ்வாறாயினும், பொதுவாக UPF-ஐச் சமாளிக்க கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறது. இதில், கவலைக்குரிய பிற ஊட்டச்சத்துக்களான உப்பு மற்றும் கொழுப்பை, குறிப்பாக முன்-தொகுப்பு செய்யப்பட்ட உணவுகளில் (pre-packaged foods) பாதுகாப்பான நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமையல் எண்ணெயை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு மோடி அறிவுறுத்தியது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். NAPi ஆனது, மொழித் தடைகளை மிஞ்சும் கடுமையான முன்-தொகுப்பு அடையாள குறியீடுகள் (Front-of-Package Labelling (FOPL)) ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் மற்றும் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரித்ததன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.


உணவுகள் மீதான வரி நடவடிக்கைகள் வளர்ந்த நாடுகளில் செயல்படுத்துவது மிகவும் கடினம். அதிக வருமானம் உள்ள நாடுகளில் கூட கடினம்; இந்தியாவில், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கும் என்ற கவலைகள் காரணமாக இது இன்னும் கடினமாக உள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, FOPL எச்சரிக்கைகள், நுகர்வோர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துதல், சந்தைப்படுத்தல் விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்ட தவறான விளம்பரங்களுக்கு வலுவான தடைகளை பரிந்துரைக்கிறது.


சிலி முதல் மெக்சிகோ வரையிலான சர்வதேச அனுபவம், தெளிவான எச்சரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான கல்வியுடன் இணைந்தால் வரிகள் சிறப்பாக செயல்படும் என்பதைக் காட்டுகிறது. பலதரப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சீர்திருத்தம், இந்தியாவின் உணவு மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களில் ஒரு தலைமுறை மாற்றத்தைத் தொடங்கக்கூடும்.


விர்மானி புது தில்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் & ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் இயக்குநராக உள்ளார். ஹரிஷ் பொது நலனுக்கான ஊட்டச்சத்து  உறுப்பினராகவும், ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் பேராசிரியராகவும், குழந்தை மருத்துவத் தலைவராகவும் உள்ளார். அவ்னி இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் உதவி ஊடக ஆலோசகராக உள்ளார்.



Original article:

Share:

உள்ளீடு வரி கடன் என்பது என்ன? –ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை, ஒரு தனிநபர் அல்லது அவரது குடும்பத்தினரால் வாங்கப்படும் சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பலரை ஒன்றாக உள்ளடக்கிய குழு காப்பீட்டுக் கொள்கைகள் இன்னும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும், காப்பீட்டு நிறுவனங்களுக்கான மறுகாப்பீட்டு சேவைகள் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


— செப்டம்பர் 22 முதல், காப்பீட்டு நிறுவனங்கள் தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கான  பங்குகள் போன்றவற்றிற்கு செலுத்திய சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப் பெற முடியாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


— வெளியீட்டு சேவைகள் விலக்கு அளிக்கப்படுவதால், பிற உள்ளீடுகள், தரகுகள் போன்ற உள்ளீட்டு சேவைகளின் உள்ளீட்டு வரி வரவு (input tax credit (ITC)) வெளியீட்டின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி பொறுப்புக்கு எதிராக சரிசெய்யப்பட்ட உள்ளீடுகளுக்கு செலுத்தப்படும் வரி  மாற்றியமைக்கப்படும் என்று கூறியது.


— உள்ளூர் விநியோக சேவைகளுக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி  கட்டணம் வசூலிக்கப்படும். விநியோக சேவையை வழங்கும் நபர் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்களே சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்த வேண்டும். ஆனால் விநியோக நபர் பதிவு செய்யப்படவில்லை என்றால், மின்னணு வர்த்தக ஆபரேட்டர் (ஆன்லைன் தளம் போன்றவை) சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்த வேண்டும்.



— ஜொமாட்டோ, ஸ்விகி போன்ற மின்னணு வர்த்தக (E-commerce) இயக்குநர்கள் மற்றும் பிளிங்கிட், ஜெப்டோ போன்ற விரைவு வணிக நிறுவனங்கள் மூலமான விநியோக சேவைகள் செப்டம்பர் 22 முதல் விநியோக கட்டணங்களில் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்கொள்ள உள்ளன.


— கடந்த காலங்களில், இதுபோன்ற தளங்கள் டெலிவரி தொழிலாளர்களின் சார்பாக டெலிவரி கட்டணங்களை மட்டுமே வசூலிப்பதாகவும், அது அவர்களின் வருவாயின் ஒரு பகுதியாக இல்லை என்றும் கூறி வந்தன. எனவே, அவர்கள் சேவைக்கு சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இது ஒரு தன்னிச்சையான விற்பனையாளரான டெலிவரி தொழிலாளியால் நிறைவேற்றப்படுகிறது.


— அரசாங்கத்தின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மாற்றத்தை எளிதாக்கும் என்றும் எதிர்காலத்தில் சிக்கல்கள் அல்லது சட்ட மோதல்களைக் குறைக்கும் என்றும் வரி நிபுணர்கள் தெரிவித்தனர்.


உங்களுக்குத் தெரியுமா?


— 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் ஒரு பெரிய சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு 2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் சிக்கலான வரி முறையை எளிமையாக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவும் மாற்றுவதற்காகவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகளை மாற்றுவதற்காகவும் இது உருவாக்கப்பட்டது.


- செப்டம்பர் 3 அன்று நடந்த கூட்டத்தில், தனிநபர்களுக்கான சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் செப்டம்பர் 22 முதல், முன்பு வசூலிக்கப்பட்ட 18% சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்த வேண்டியதில்லை என்று சரக்கு மற்றும் சேவை வரி குழு முடிவு செய்தது.


- ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படும் ஒரு குழுவாக குடியரசுத்தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி குழுவை உருவாக்கினார். இது அரசியலமைப்பின் பிரிவு 279A எனப்படும் ஒரு சிறப்பு விதியின் கீழ் செய்யப்படுகிறது. இந்த குழுவிற்கு ஒன்றிய நிதி அமைச்சர் தலைவராகவும், ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சராகவும், ஒவ்வொரு மாநிலமும் நிதி, வரிவிதிப்பு அல்லது வேறு எந்த தொடர்புடைய பகுதிக்கும் பொறுப்பான ஒரு அமைச்சரை உறுப்பினராக பரிந்துரைக்கலாம்.


-இந்த குழுவின் முக்கிய பணி, சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய முக்கியமான விதிகளை பரிந்துரைப்பது. அதாவது எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இருக்க வேண்டும் அல்லது விலக்கு அளிக்கப்பட வேண்டும் மற்றும் மாதிரி சரக்கு மற்றும் சேவை வரி சட்டங்களை உருவாக்குவதும் ஆகும்.



Original article:

Share:

உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் மீள்தன்மையை வெளிப்படுத்துகிறது. -ஜனனி ரங்கன்

 இதன் இலக்குக்கான சீர்திருத்தங்கள், ஒரு வலுவான உள்நாட்டு சந்தையுடன் இணைந்து தொழில்களை நிலைப்படுத்தலாம், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கலாம் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்கலாம்.


உலகளாவிய சூழல் பல சவால்களை எதிர்கொள்கிறது. வர்த்தக மோதல்களுக்கு அப்பால் புவிசார் அரசியல் நெருக்கடிகள் அதிக நிச்சயமற்ற தன்மையைச் சேர்க்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் எரிசக்தி சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தது. அதே நேரத்தில், காசாவில் மோதல் மேற்கு ஆசியா முழுவதும் உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது. இந்தியாவின் அண்டை நாடான, நேபாளத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பலவீனம் பிராந்திய பதட்டங்களை அதிகரிக்கிறது. இந்த நெருக்கடிகள் அனைத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளை பாதிக்கின்றன மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய ஓட்டங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில், பரந்த புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பின் தாக்கங்கள் போன்ற முக்கியத்துவத்தை வரிவிதிப்புகள் பெற வாய்ப்பில்லை. அவை, இப்போது உலகளாவிய ஆபத்தான உணர்வையும் இந்தியாவின் வெளிப்புற சூழலையும் வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.


இந்த நிச்சயமற்ற சூழ்நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் வலிமையைக் காட்டுகிறது. ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 1.55 சதவீதமாக இருந்தது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கின் வரம்பிற்குக் கீழே, உலகளாவிய அபாயங்கள் அதிகரித்தால், விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கிறது. 2025-26 முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்ந்தது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் மிக விரைவான வளர்ச்சியாகும். 


இந்த உயர்வு உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டிலும் வலுவான செயல்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த உந்துதலின் ஒரு குறிகாட்டியானது கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (Purchasing Managers’ Index (PMI)) ஆகும். இது வணிகங்கள் தேவை, வெளியீடு மற்றும் வேலைவாய்ப்பை எவ்வாறு பார்க்கின்றன என்பதைக் காட்டும் மாதாந்திர கணக்கெடுப்பாகும். ஆகஸ்ட் 2025-ல், இந்தியாவின் உற்பத்தி PMI 58.8 ஐ எட்டியது. இது ஒரு பத்து ஆண்டுகளில் அதிகபட்சமாக இருந்தது. அதே நேரத்தில், சேவைகளின் PMI ஜூலையில் 60.5 இலிருந்து 62.9 ஆக அதிகரித்தது. (50 க்கு மேல் PMI விரிவாக்கத்தைக் குறிக்கிறது.)


இந்த பொருளாதார வலிமை உலகளவில் கவனிக்கப்படுகிறது. வலுவான உள்நாட்டு தேவையை மேற்கோள் காட்டி ஃபிட்ச் மதிப்பீடுகள் (Fitch Ratings) 2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.9 சதவீதமாக மேம்படுத்தின. மோர்கன் ஸ்டான்லி நடுத்தர காலத்தில் 7 சதவீத வரம்பில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. மேலும், IMF அதன் திட்டத்தை 6.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதில் ஒன்றாக, இந்த குறிகாட்டிகள் இந்தியா உலகளாவிய குழப்பத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், நீடித்த வளர்ச்சிக்கான அதன் அடித்தளங்களை தீவிரமாக வலுப்படுத்துகிறது.


இருப்பினும், மீள்தன்மை என்பது தடைக்காப்பு நிலையைக் குறிக்காது. நெசவு, இரத்தின கற்கள் மற்றும் நகைகள் மற்றும் இரசாயனங்கள் போன்ற இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த துறைகள் இன்னும் உலகளாவிய இடையூறுகளுக்கு ஆளாகின்றன. வரிவிதிப்புகள் போன்ற கொள்கைகள் விதிக்கப்படுவதற்கு முன்பே குழப்பத்தின் உண்மையான செலவுகள் தொடங்கலாம். நிச்சயமற்ற தன்மை மட்டுமே முதலீடுகளை தாமதப்படுத்துவதன் மூலமோ, ஆபத்தான சந்தைகளைத் தவிர்ப்பதன் மூலமோ அல்லது பாதுகாப்பான உள்நாட்டு விநியோகச் சங்கிலிகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலமோ நிறுவனங்களை எச்சரிக்கையாக மாற்றும். 


சிறிய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் விரிவாக்கத்தை ஒத்திவைக்கிறார்கள் அல்லது சந்தைகளை முற்றிலுமாக வெளியேற்றுகிறார்கள். இந்தத் துறைகள் பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (SMEs) உருவாக்கப்படுவதால், வேலைவாய்ப்புகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரங்கள் ஆகியவற்றின் மீதான சிறிய விளைவுகள் பெருகி, ஒட்டுமொத்த தாக்கத்தை தீவிரமாக்குகின்றன. உலகளாவிய வர்த்தக கொள்கை மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நிச்சயமற்ற தன்மை நம்பிக்கையைக் குறைக்கும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் நுகர்வு 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தியாவை வேறுபடுத்துகிறது. இந்த அமைப்பு வெளிப்புற தாக்கங்களுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பாக செயல்படுகிறது. இது உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்களுக்கு பாதிப்பை குறைக்கிறது. பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் நுகர்வு பங்கு நிதியாண்டில் 60.2 சதவீதத்திலிருந்து 2025 நிதியாண்டில் 61.4 சதவீதமாக அதிகரித்தது. இது இருபதாண்டுகளில் மிக அதிகமாகும். இந்த உயர்வு 2025-ல் தனியார் இறுதி நுகர்வு செலவில் 7.2 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இது 2024-ல் 5.6 சதவீதமாக இருந்தது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organisation (SCO)) இந்தியாவின் பங்கேற்பு ரஷ்யா, சீனா மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த உறவுகளை மேம்படுத்துவது, மறுவடிவமைக்கும் பிராந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கை மேம்படுத்தும். அதே நேரத்தில், பன்முகத்தன்மை முக்கியமானது. இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் மூலம் வளரும் நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் வளர்ந்த நாடுகளுடன் பொருளாதார கூட்டமைப்புகளை தீவிரமாக்குதல் ஆகியவை இராஜதந்திர ரீதியில் சுதந்திரத்தைப் பராமரிக்கும் போது இந்தியா புதிய வாய்ப்புகளைப் பெற உதவும்.


நாடு ஒரு நுட்பமான சமநிலைப்படுத்தும் செயலை எதிர்கொள்கிறது. உலகளாவிய குழப்பங்கள் மத்தியில் ஏற்றுமதி மற்றும் நிதி ஓட்டங்களை அச்சுறுத்துகிறது. இருப்பினும், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் குறைந்த பணவீக்கம் கொள்கை வகுப்பாளர்களுக்கு சூழ்ச்சிக்கு இடமளிக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், உதாரணமாக, உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் நோக்கத்தை அறிக்கை செய்கின்றன. 


இருப்பினும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக மில்லியன் கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தும் நெசவு போன்ற தொழிலாளர்-தீவிர துறைகளில் லாப வரம்புகளைக் குறைக்கலாம். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சீர்திருத்தங்கள், ஒரு நெகிழ்வான உள்நாட்டு சந்தையுடன் இணைந்து, தொழில்களை நிலைப்படுத்தலாம், வேலைகளைப் பாதுகாக்கலாம் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க முடியும். இந்தியா வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வலுவாக வெளிப்படுவதையும் உறுதி செய்கிறது.


எழுத்தாளர் மஹிந்திரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளியின் உதவிப் பேராசிரியர்.



Original article:

Share:

இந்தியாவின் டிஜிட்டல் பயணம் ஆப்பிரிக்காவிற்கு எவ்வாறு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும்? -சமீர் பட்டாச்சார்யா

 இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான டிஜிட்டல் ஒத்துழைப்பின் இலக்கானது, உள்ளடக்கிய மேம்பாடு, பரஸ்பர திறன்-வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப சுதந்திரம் ஆகியவற்றிற்கான பகிரப்பட்ட இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கூட்டு டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் (joint digital innovation) உலகளாவிய தெற்கில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்க முடியுமா?


ஜூலை 1 2025 அன்று, இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் (Digital India initiative) பத்து ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இந்தத் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவை வழங்கலை கணிசமாக மேம்படுத்தியது. இணைய பயனர்களின் எண்ணிக்கை, 2014-ல் 251 மில்லியனிலிருந்து 2024-ல் கிட்டத்தட்ட 970 மில்லியனாக அதிகரித்தது. 2,18,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிவேக இணைய வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டன. டிஜிட்டல் பொருளாதாரம் இப்போது தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பங்களிக்கிறது மற்றும் 2022–23 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.74 சதவீதமாக உள்ளது.


டிஜிட்டல் இந்தியாவை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்க்கம், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு, உள்ளடக்கம், மலிவு மற்றும் பொது சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகும். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாராக இருப்பதால், இந்திய அனுபவம் அவர்களுக்கு செலவு குறைந்த மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மாதிரியை வழங்க முடியும். இந்த மாதிரியானது, தங்கள் டிஜிட்டல் பிளவுகளை நிவர்த்தி செய்யவும் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தவும் விரும்பும் ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.


ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் விருப்பங்களில் இந்தியாவின் பங்கு


டிஜிட்டல் மாற்றத்தில் ஆப்பிரிக்கா பல சவால்களை எதிர்கொள்கிறது. இந்தச் சவால்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்டதைப் போலவே உள்ளன. இதில் குறைந்த இணைய ஊடுருவல், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பிரிவினையான பொது சேவை வழங்கல் ஆகியவை அவற்றில் அடங்கும். நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி, விரைவாகச் செல்ல ஆப்பிரிக்கா டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டும்.


எனவே, இந்தச் சூழலில், இந்தியாவின் டிஜிட்டல் பயணத்திலிருந்து ஆப்பிரிக்கா கற்றுக்கொள்ளலாம். அளவிடக்கூடிய கொள்கை கட்டமைப்புகள் மற்றும் செலவு குறைந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எவ்வாறு கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது. 


இந்தியாவின் பயோமெட்ரிக் டிஜிட்டல் அடையாளத் திட்டமான ஆதார் ஒரு வலுவான உதாரணம். இது, ஒரு அடையாளத்திற்கு தோராயமாக USD 1 செலவில் ஒரு பில்லியன் நபர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் அடையாள உள்கட்டமைப்பு, நேரடிப் பலன் பரிமாற்றங்கள், நிதிச் சேர்த்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இப்போது உள்ளடக்கிய மற்றும் திறமையான நிர்வாகத்திற்கான உலகளாவிய மாதிரியாகக் காணப்படுகிறது.


நீண்ட கால தொழில்நுட்ப மற்றும் கல்வி ஒத்துழைப்பு 


ஆப்பிரிக்காவுடன் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் காட்டியுள்ளது. இந்த முயற்சிகள் ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு (India-Africa Forum Summit (IAFS)) மூலம், ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த இந்தியா பல்வேறு திட்டங்கள் மற்றும் தலையீடுகளைத் தொடங்கியுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் (information and communications technology (ICT)) உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிப்பதற்கான இருதரப்பு நிதி உதவி, மானியங்கள் மற்றும் கடன் வரிகள் (Lines of Credit (LoCs)) ஆகியவை இதில் அடங்கும்.


சில உதாரணங்களை மேற்கோள் காட்ட, கென்யா, போட்ஸ்வானா, உகாண்டா, தான்சானியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களை நிறுவுவதற்கு இந்தியா உதவியுள்ளது. இது பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேம்பட்ட கணினி உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது மற்றும் மொரிஷியஸில் உள்ள சைபர் டவர் மற்றும் கானாவில் உள்ள ICT இன் கோஃபி அன்னான் மையம் (Kofi Annan Centre) போன்ற முதன்மை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பங்களித்தது. எகிப்தில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில், இளைஞர்களிடையே டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்காக, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த மையத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளித்தது.


2023-ம் ஆண்டில் தான்சானியாவின் சான்சிபாரில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology (IIT)) முதல் வெளிநாட்டு வளாகத்தை இந்தியா நிறுவியபோது குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. இந்த வளாகம் மேம்பட்ட தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை வழங்குகிறது. இது நீண்ட கால கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கான டிஜிட்டல் திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குறிக்கிறது.


இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பயன்பாடு 


2009-ம் ஆண்டில், இந்தியாவானது பான் ஆப்ரிக்கா இ-வலையமைப்பை (Pan Africa e-Network) அறிமுகப்படுத்தியது. இது தொலைதூரக் கல்வி மற்றும் தொலைதூர மருத்துவ சேவைகளை எளிதாக்கும் ஒரு கண்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். 2019ஆம் ஆண்டில், இந்த முயற்சி e-VidyaBharti (தொலைதூரக் கல்வி) மற்றும் e-ArogyaBharti (தொலைதூரக் மருத்துவம்) திட்டத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டது, இது e-VBAB என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் ஆப்பிரிக்க மாணவர்களையும் நோயாளிகளையும் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.


e-VBAB திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்காக ஆப்பிரிக்க மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள குடிமக்கள் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை அணுக உதவியது மற்றும் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை எளிதாக்கியுள்ளது. குறைந்த விலையில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மாதிரியானது (low-cost, high-impact model) ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பயணத்தை ஆதரிப்பதில் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பயன்பாட்டை நிரூபிக்கிறது.


இந்தியா-ஆப்பிரிக்கா டிஜிட்டல் ஈடுபாட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் தனியார் துறையும் முக்கிய பங்கு வகித்துள்ளது. உதாரணமாக, பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான Xtelify, சமீபத்தில் நைஜீரியா அரசாங்கத்துடன் பல ஆண்டு, பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நைஜீரியாவின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த, 14 ஆப்பிரிக்க சந்தைகளில் செயல்பாட்டு திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை வழங்கலை மேம்படுத்த, AI-இயக்கப்பட்ட தளங்களைப் பயன்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகத்தில் ஆர்வம் அதிகரித்து வருகிறது 


மேலும், ஆப்பிரிக்க அரசாங்கங்கள் அதிகளவில் இந்திய ஆட்சிமுறை மற்றும் நிதி உள்ளடக்கத்தை பிரதிபலிக்கின்றன. அதாவது நமீபியா, இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு முறைகளைப் (India’s electronic voting systems) பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில், கானா உஜ்வாலா எல்பிஜி (Ujjwala LPG) விநியோக கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் பொது விநியோக முறைகள் செயல்படுத்தப்படுவதைப் புரிந்துகொள்வதற்காக பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு ஆய்வுச் சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் நிர்வாக வழிமுறைகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தை இந்த ஈடுபாடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


பயனுள்ள டிஜிட்டல் ஆளுகை, பொது சேவைகளுக்கான அணுகலை செயல்படுத்துதல், பாதுகாப்பான நிதி பரிவர்த்தனைகள் மற்றும் எல்லை தாண்டிய மின் வணிகம் ஆகியவற்றிற்கு டிஜிட்டல் அடையாள அமைப்புகள் அவசியம். இந்தியாவின் ஆதார் அமைப்பு, சேவை வழங்கலை மேம்படுத்தவும், திறமையின்மையை குறைக்கவும், நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் விரும்பும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு குறிப்பிட்ட மாதிரியை வழங்குகிறது.


ஏறக்குறைய 19 சராசரி வயதுடன், ஆப்பிரிக்கா உலகளவில் இளைய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த மக்கள்தொகை நன்மையைப் பயன்படுத்த, டிஜிட்டல் திறன் மேம்பாட்டில் கணிசமான முதலீடு தேவைப்படும். திறன் இந்தியா (Skill India), டிஜிட்டல் சக்சர்தா அபியான் (Digital Saksharta Abhiyan) மற்றும் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (Indian Technical and Economic Cooperation (ITEC)) திட்டம் போன்ற முன்முயற்சிகளுடன் இந்தியாவின் அனுபவம் ஆப்பிரிக்க சூழல்களில் தனிப்பயனாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு உத்திகளை உருவாக்க மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.


ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வேகமாக வளர்ந்துவரும் விரிவாக்கம்


இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க, புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஆதரிக்க உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு (startup ecosystem), குறிப்பாக நிதி-தொழில்நுட்பம் (fintech), சுகாதார-தொழில்நுட்பம் (health-tech) மற்றும் வேளாண்மை-தொழில்நுட்பம் (agri-tech) ஆகியவற்றில், வளர்ந்து வரும் சந்தைகளில் நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை வளர்ப்பதற்கான போதனை மாதிரிகளை வழங்குகிறது.


ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரம் இன்னும் தொடக்கமாக இருந்தாலும், அது வேகமாக வளர்ந்துவரும் விரிவாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இணைய ஊடுருவல் 2005-ல் 2.1 சதவீதத்திலிருந்து 2024-ல் தோராயமாக 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023-ல், மொபைல் துறையானது துணை-சஹாரா ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $140 பில்லியன் அல்லது 7 சதவீதமாக பங்களித்தது. இது 2030-ல் எந்த எண்ணிக்கை $170 பில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்பிரிக்க கண்டத்தின் தடையில்லா வர்த்தகப் பகுதி (African Continental Free Trade Area (AfCFTA)) ஆப்பிரிக்கா முழுவதும் ஒற்றை சந்தையை உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்க, ஆப்பிரிக்கா டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்த வேண்டும். அது வலுவான புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உருவாக்க வேண்டும் மற்றும் தரவு நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த மாற்றியமைக்கும் செயல்முறைக்கு பங்களிக்க நல்ல நிலையில் உள்ளனர்.


முன்னோக்கி வழி


இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான டிஜிட்டல் ஒத்துழைப்பானது, உள்ளடக்கிய மேம்பாடு, பரஸ்பர திறன்-வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப சுதந்திரம் ஆகியவற்றிற்கான பரந்த அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்காவது தொழில்துறை புரட்சியின் சிக்கல்களை இரு பிராந்தியங்களும் வழிநடத்தும் போது, ​​அவர்களின் கூட்டமைப்பு டிஜிட்டல் யுகத்தில் தெற்கிலிருந்து தெற்கிற்கான ஒத்துழைப்பு South-South cooperation) ஒரு வலுவான கட்டமைப்பை வழங்குகிறது.


உள்ளடக்கிய நிர்வாகத்தை ஊக்குவிக்க இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த அனுபவம் ஆப்பிரிக்க நாடுகள் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை வழங்குகிறது. வலுவான அரசியல் விருப்பம், நெகிழ்வான கொள்கை கட்டமைப்புகள் மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு ஆகியவற்றுடன், இந்தியாவும் ஆப்பிரிக்காவும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் உலகளாவிய தெற்கில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்பட வேண்டும்.



Original article:

Share:

இந்திய சட்டங்கள் அவதூறு என்பதை எவ்வாறு வரையறுத்துள்ளன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— பிரதிவாதி (defendant) அவதூறை நிரூபிக்க முடியாது என்று உறுதியாக நம்பினால் மட்டுமே நீதிமன்றம் ஒரு தடை உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்றும், அவதூறு சந்தேகிக்கப்படும் போது மட்டும் ஏற்படுவது அல்ல என்றும் பொன்னார்ட் தரநிலை கூறுகிறது.


— 2024ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் போனார்ட் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் Zee Entertainment பற்றிய கட்டுரையை ப்ளூம்பெர்க் நீக்க வேண்டிய தற்காலிக தடை உத்தரவை ரத்து செய்தது..


— செப்டம்பர் 6 அன்று டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவு (blanket gag order) பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா தாகுர்தா, மற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழங்கப்பட்டது. இது அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பற்றி கூறப்பட்ட அவதூறு உள்ளடக்கத்தை வெளியிடுவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. இது உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த வரம்பிற்கு எதிரானது.


— வியாழக்கிழமை செப்டம்பர் 18அன்று  நான்கு பத்திரிகையாளர்களான ரவி நாயர், அபிர் தாஸ்குப்தா, அயஸ்காந்த தாஸ் மற்றும் ஆயுஷ் ஜோஷி ஆகியோரின் சவாலைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 6அன்று வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. குஹா தாகுர்தா தாக்கல் செய்த தனி மேல்முறையீட்டை விசாரிக்கும் மற்றொரு மாவட்ட நீதிபதி, இப்பொழுது வழக்கை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


— கீழ் நீதிமன்றத்தின் உத்தரவு குஹா தாகுர்தா மற்றும் பிற பத்திரிகையாளர்களை வாதியைப் பற்றி ‘சரிபார்க்கப்படாத, ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை’ (ex facie defamatory reports) வெளியிடுவதிலிருந்து தடுக்கிறது.


— இந்த "முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை" (prior restraint) என்று அழைக்கப்படும் இந்த வகையான கட்டுப்பாடு, உள்ளடக்கம் உண்மையில் அவதூறானதா என்பதை முழு விசாரணை முடிவு செய்வதற்கு முன்பு வெளியிடுவதைத் தடுக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான அரசியலமைப்பிற்கு முரணான வரம்பாக இத்தகைய முன்கூட்டிய கட்டுப்பாடு கருதப்படுகிறது.


— பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அரசியலமைப்பின் பிரிவு 19(2) கீழ் காணப்பட வேண்டும். இது ‘நியாயமான கட்டுப்பாடுகளை’ (reasonable restrictions) பட்டியலிடுகிறது. இதில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு மற்றும் குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவை அடங்கும்.


— மக்கள் பேசுவதை முன்கூட்டியே தடுக்கும் சட்டங்கள், பிரிவு 19(2) இன் கீழ் இது அனுமதிக்கப்படுகிறது என்பதை வலுவாக நிரூபிக்க வேண்டும்.


— ப்ளூம்பெர்க் வழக்கில் உச்ச நீதிமன்றம், பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் விரைவான உத்தரவுகளை வழங்குவதற்கு முன்பு நீதிமன்றங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியது. மேலும், தெளிவான காரணங்கள் இல்லாமல் அத்தகைய உத்தரவுகளை பிறப்பித்ததற்காக விசாரணை நீதிமன்றத்தை விமர்சித்தது.


— விசாரணை தொடங்குவதற்கு முன்பு நீதிமன்றங்கள் கவனக்குறைவாக தற்காலிக தடைகளை வழங்கினால், அது முக்கியமான பொது விவாதங்களை நிறுத்திவிடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதிவாதியால் முன்வைக்கப்பட்ட வாதங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணையில் தோல்வியடையும், மேலும், நீதிமன்றங்கள் ஒரு தரப்பினருக்கு எதிராக தடை உத்தரவுகளை வழங்கக்கூடாது.




உங்களுக்குத் தெரியுமா?


— பிரிவு 19 இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் (பகுதி III) ஒரு பகுதியாகும்.


— பிரிவு 19 பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது, இது முக்கியமாக தனிநபர்களை அரசிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுகிறது. தீண்டாமை, கடத்தல் மற்றும் அடிமைத் தொழிலை தடைசெய்யும் சில அடிப்படை உரிமைகள் அரசு மற்றும் பிற தனிநபர்களுக்கு எதிராக வெளிப்படையாக வழங்கப்பட்டுள்ளன.


— இது குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.  வெளிநாட்டவர்களுக்கு அல்ல.


பேச்சு சுதந்திரம் போன்ற சில உரிமைகளின் பாதுகாப்பு


(1) அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கும்


(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்;


(b) அமைதியாகவும் ஆயுதங்கள் இல்லாமலும் கூடுவது;


(c) சங்கங்கள் அல்லது  அமைப்புகளை உருவாக்குவது;


(d) இந்தியாவின் மாநிலங்கள் முழுவதும் சுதந்திரமாக நடமாடுவது;


(e) இந்தியாவில் உள்ள மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் வசிப்பது மற்றும் குடியேறுவது; மற்றும்


(f) நீக்கப்பட்டது


(g) மக்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு வேலை, வர்த்தகம் அல்லது தொழிலையும் செய்ய உரிமை உண்டு.


குறிப்பு: முதலில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(f) மற்றும் பிரிவு 31-இன் கீழ் மக்களுக்கு சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையை வழங்கியது. இதன் பொருள் மக்கள் சொத்துக்களை வாங்கலாம், வைத்திருக்கலாம் மற்றும் விற்கலாம். ஆனால், அரசாங்கம் அதை சட்டத்தின் மூலம் பொது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம்.


— இருப்பினும், 1978ஆம் ஆண்டு 44வது திருத்தம் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(f) மற்றும் பிரிவு 31-இல் இருந்து நீக்கப்பட்ட பிறகு சொத்துரிமை ஒரு அடிப்படை உரிமையாக (right to property) இருப்பதை நிறுத்தியது.



Original article:

Share:

புவிவெப்ப ஆற்றல் மீதான தேசிய கொள்கை 2025 -குஷ்பூ குமாரி

 சமீபத்தில், அரசாங்கம் தேசிய புவிவெப்ப ஆற்றல் கொள்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், புவிவெப்ப ஆற்றல் (geothermal energy) என்றால் என்ன? இந்தியாவின் சுத்தமான ஆற்றல் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் புவிவெப்ப ஆற்றல் திறன் எவ்வளவு முக்கியமானது?


தற்போதைய செய்தி ?


பயன்படுத்தப்படாத புவிவெப்ப ஆற்றல் வளங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சியை எளிதாக்குவதற்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) தேசிய புவிவெப்ப ஆற்றல் கொள்கையை (2025) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புவிவெப்ப ஆற்றலை பயன்படுத்துவதற்கான பணிக்குழு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தால்  2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமைக்கப்பட்ட பிறகு இந்த கொள்கை வந்துள்ளது.


இந்த கொள்கையானது புவிவெப்ப ஆற்றலை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2070ஆம் ஆண்டு நிகர பூஜ்ஜிய இலக்கு(Net Zero Goal) அடைவதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது மற்றும் ஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. புவிவெப்ப ஆற்றல் என்பது பூமியின் உட்புறத்தில் இருந்து வரும் வெப்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் குறிக்கிறது. பூமியின் ஆழம் அதிகரிக்கும்போது படிப்படியாக வெப்பமாவதால் புவி வெப்ப ஆற்றல் உள்ளது. புவிவெப்ப சாய்வு (geothermal gradient) விரைவாக அதிகரிக்கும் இடங்களின்  அருகில் அதிக வெப்பநிலை காணப்படுகிறது.


2. அதிக வெப்பநிலை காரணமாக, அத்தகைய பகுதிகளில் நிலத்தடி நீர் பாறைகளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி சூடாகி, அது நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி விசையாழிகளை சுழற்றி மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இது தொலைதூர/உள் பகுதிகளின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற ஒரு தளம் சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகும்.


3. இந்தியாவில் புவிவெப்ப ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான வெப்ப நீரூற்றுகள் (hot springs) உள்ளன. இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India (GSI)) நாடு முழுவதும் 35°C முதல் 89°C வரையிலான மேற்பரப்பு வெப்பநிலையுடன் 381 வெப்ப நீரூற்றுகளை வரைபடமாக்கியுள்ளது.


4. இந்தியாவில் மதிப்பிடப்பட்ட 10.6 ஜிகாவாட் புவிவெப்ப ஆற்றல் திறன் உள்ளது. இது மேலும் ஆய்வுகளுடன் அதிகரிக்கலாம்.  முக்கிய இடங்கள் இமயமலை புவிவெப்ப மாகாணத்தில் (Himalayan Geothermal Province) அமைந்துள்ளன.  இதில் உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கும்  மற்றும் குஜராத்தில் உள்ள காம்பே கிராபன் போன்ற பகுதிகளில் பல கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகிறது.


5. கொள்கை ஆவணத்தின் படி, புவியியல் ஆய்வு மையத்தால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவின் 10 புவிவெப்ப பகுதிகள் (i) இமயமலை புவிவெப்ப மாகாணம் (Himalayan Geothermal Province); (ii) நாகா-லுசாய் ; (iii) அந்தமான் நிக்கோபார் தீவுகள்; (iv) சோன்-நர்மதா தாபி ; (v) மேற்கு கடற்கரை  (vi) காம்பே கிராபன்; (vii) அரவல்லி (viii) மகாநதி ; (ix) கோதாவரி ; (x) தென்னிந்திய கிராடானிக்  போன்றவை ஆகும்.


6. உலகளவில், 17 ஜிகாவாட்க்கும் குறைவான புவிவெப்ப திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் ஐஸ்லாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகள் இந்தத் துறையில் புதுமையான தொழில்நுட்பங்களில் முன்னோடியாக உள்ளன.


7. சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் (International Energy Agency (IEA)) கூற்றுப்படி, ‘சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா அடுத்த தலைமுறை புவிவெப்ப மின்சாரத்திற்கான மிகப்பெரிய சந்தை திறனைக் கொண்டுள்ளன. இது உலகின் மொத்த புவிவெப்ப ஆற்றலில் முக்கால் பங்கை உருவாக்குகிறது. இந்தியாவின் புவிவெப்ப ஆற்றல் 2035ஆம் ஆண்டுக்குள் 4.2 ஜிகாவாட்டாகவும், 2045ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 100 ஜிகாவாட்டாகவும் உயரும் என்று சர்வதேச ஆற்றல் நிறுவனம் கணித்துள்ளது.


8. புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்: புவிவெப்ப ஆற்றலைத் தொடங்குவது விலை உயர்ந்தது மற்றும் ஆய்வு அபாயங்களை உள்ளடக்கியது. 1 மெகாவாட் (மெகாவாட்) திறன் கொண்ட மின்சாரத்தை உருவாக்குவதற்கு சுமார் ரூ.36 கோடி செலவாகும். புவிவெப்ப ஆற்றல் குறித்த தேசிய கொள்கை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே ஆராய்ச்சி, முன்னோடித் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்கு நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது. ஒரு நம்பகத்தன்மை இடைவெளி நிதி (viability gap funding (VGF)) திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


9. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment) அனுமதிக்கப்படுகிறது. கொள்கை ஆவணத்தின் படி, உள்ளூர் புதுமையான துளையிடுதல் மற்றும் கீழ்நோக்கிய அளவீடு/கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்த்தேக்க மேலாண்மையை (reservoir management) ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதி உபகரணங்களை சேர்ந்திருப்பதை குறைப்பதற்காக உள்நாட்டு புவிவெப்ப தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வகைகள்


1. சூரிய ஆற்றல் (Solar Energy): சூரிய ஆற்றல் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து பெறப்படுகிறது. இதை சூரிய பேனல்கள் (photovoltaic cells) பயன்படுத்தி மின்சாரமாக மாற்றலாம் அல்லது மாற்றாக சூரிய வெப்ப அமைப்புகள் (solar thermal systems) மூலம் வெப்பத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம்.

2. காற்று ஆற்றல் (Wind Energy): இது காற்றின் இயக்க ஆற்றலை (kinetic energy) காற்று டர்பைன்களைப் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றுவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா (342 GW) மற்றும் அமெரிக்கா (139 GW) போன்ற பல நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையில் கடலோர மற்றும் கடல் காற்றாலைகள் முக்கிய நாடுகளாக  மாறியுள்ளன.


3. நீர்மின் ஆற்றல் (Hydropower): இது ஆறுகள், அணைகள், அருவிகள் முதலியவற்றில் பாயும் நீரின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது மிகவும் பழமையான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வடிவங்களில் ஒன்றாகும். சீனா, பிரேசில் மற்றும் கனடா உலகம் முழுவதும் நீர்மின் ஆற்றலின் மிகப்பெரிய பயன்படுத்துநர்களாக உள்ளன.


4. உயிரிசக்தி ஆற்றல் (Biomass Energy): உயிரிசக்தி ஆற்றல் தாவர எச்சங்கள், விலங்கு கழிவுகள் மற்றும் மரம் போன்ற கரிம பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதை வெப்பப்படுத்தலாம் அல்லது பயன்பாட்டுக்காக திரவ அல்லது வாயு எரிபொருட்களாக மாற்றலாம். இதன் பயன்பாடு வெப்பமாக்கல், மின்சார உற்பத்தி அல்லது போக்குவரத்துக்கான உயிரி எரிபொருட்கள் (biofuels) ஆகியவற்றை உள்ளடக்கியது.


5. ஓத மற்றும் அலை ஆற்றல் (Tidal and Wave Energy): இது கடல் நீரின் இயக்கத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அலை ஆற்றல் சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையை சார்ந்துள்ளது. அதே நேரத்தில் ஓத மற்றும் அலைகளின் சக்தியைப் பயன்படுத்துகிறது. தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அலை ஆற்றலைப் பயன்படுத்தும் முன்னணி நாடுகளாக உள்ளன.



Original article:

Share: