துறைமுகங்கள் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். -ஆர் லட்சுமணன், அக்ஷிமா காட்

 ஒரு இந்திய பொது-தனியார் கூட்டமைப்பின் (PPP) முன்முயற்சியானது, பசுமை தொழில்துறை வழித்தடங்கள் மற்றும் கப்பல் கடற்படைகளை உருவாக்க முடியும். இந்தியாவின் துறைமுகங்கள் பசுமை எரிசக்தி மையங்களாக (green energy hubs) உருவாகலாம்.


தேசிய மற்றும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் மற்றும் கடல்சார் நிலப்பரப்புகளை மாற்றியமைக்கும் வகையில் இந்திய துறைமுகங்கள் தனித்துவமாக முன்னணியில் உள்ளன. குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுகம், தீன்தயாள் துறைமுகம் மற்றும் பாரதீப் துறைமுகம் ஆகியவை முறையே பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. துறைமுகத்துடன் இணைக்கப்பட்ட மதிப்புச் சங்கிலியில் தொழில்துறை வல்லுநர்கள் ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.


சமீபத்திய சந்தையின் அறிக்கைகள் இந்தியாவின் போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்துகின்றன. உரத் துறைக்கான இந்திய சூரிய எரிசக்தி கழகத்தின் (Solar Energy Corporation of India Limited (SECI)) பசுமை அம்மோனியா ஏலமானது சராசரியாக டன் ஒன்றுக்கு $600 என்ற விலைநிலையை கண்டறிந்தது. ஜெர்மனி போன்ற ஒப்பிடக்கூடிய உலகளாவிய ஏலங்களை விட கிட்டத்தட்ட 45 சதவீதம் குறைவாகும். பசுமை மெத்தனாலுக்கும் இதேபோன்ற போக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன, இது பசுமை மின் எரிபொருட்களின் செலவு குறைந்த உற்பத்தியாளராக இந்தியாவின் திறனைக் காட்டுகிறது. துறைமுகங்கள் பசுமை ஹைட்ரஜன் மையங்களாக பல நன்மைகளைக் கொண்டுள்ளன.  தொழில்துறை வழித்தடங்களுக்கு அருகில் இருப்பது, நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான அணுகலை வழங்குதல் போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளன.


இந்த மாற்றத்தால், துறைமுகங்கள் பசுமையான கப்பல் கடற்படைகளுக்கான ஆசியாவின் புதிய நுழைவாயிலாக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை, 'பசுமைக்கான நுழைவாயில்' (Gateway to Green) - RMI மற்றும் இந்திய துறைமுக சங்கம் (Indian Port Association(IPA)) வெளியிட்ட, இந்தியாவிற்கு பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான துறைமுக தயார்நிலையை மதிப்பிடுகிறது. இந்திய துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் மையங்களாக மாறுவதற்கான முதலீட்டு தேவைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள துறைமுக அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இது கோடிட்டுக் காட்டுகிறது.


வளர்ந்து வரும் வாய்ப்புகள்


வளர்ந்து வரும் பசுமை ஹைட்ரஜன் நிலப்பரப்பு, துறைமுகங்கள் வெறும் வர்த்தகச் செயல்பாட்டாளர்களாக இருந்து பசுமை ஹைட்ரஜன் மதிப்புச் சங்கிலியில் முக்கிய பங்குதாரர்களாக உருவாவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் தேவையை எளிதாக்கும் தன்மைகளை ஒருங்கிணைக்கிறது. சரியான நடவடிக்கைகள் மூலம், துறைமுகங்கள் இப்போது பசுமையான ஹைட்ரஜன் சுற்றுச்சூழலை செயல்படுத்துவதில் மிகவும் பங்கு வகிக்க முடியும்.


தீனதயாள் (கண்ட்லா), பாரதீப் மற்றும் வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுகம் (தூத்துக்குடி) ஆகிய மூன்று நியமிக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் துறைமுக மையங்கள் கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளன. இந்த நிலம் உற்பத்தி, சேமிப்பு, பதுங்கு குழி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்கட்டமைப்பிற்கானது.  இந்த அடிப்படை கட்டமைப்பை உருவாக்க, உரங்கள், அம்மோனியா மற்றும் எஃகு போன்ற ஹைட்ரஜன் வழித்தோன்றல்களை எடுத்துக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு அடுக்கு நில ஒதுக்கீடு உத்தி (tiered land allocation strategy) அறிமுகப்படுத்தப்படலாம். அத்தகைய உத்தி நில பயன்பாட்டு திறனை உறுதி செய்யும். மேலும், தேவையை தூண்டும் மற்றும் ஹைட்ரஜன் சார்ந்த தயாரிப்புகளில் வர்த்தகத்தை ஆதரிக்கும்.


இந்திய துறைமுகங்கள் ஏற்கனவே ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டன் அம்மோனியா மற்றும் மெத்தனாலைக் கையாளுகின்றன. வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் போன்ற துறைமுகங்கள், ஏற்கனவே அம்மோனியா மற்றும் பசுமை அம்மோனியா சரக்குகளை பிரத்யேக சேமிப்பகத்துடன் கையாளுகின்றன. தற்போதுள்ள இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, அவற்றின் விருப்பங்களை விரைவாகக் கண்காணிக்க முடியும்.


பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பு மூலம் மைய அடிப்படையிலான மாதிரியை ஏற்றுக்கொள்வது ஒரு நடைமுறையின் அணுகுமுறையாக இருக்கலாம். பொதுவான பயனர் உள்கட்டமைப்பு (common user infrastructure (CUI)) அமைப்புகளைப் பின்பற்றும் துறைமுகங்கள் தேவையற்ற மூலதனச் செலவைக் குறைப்பதன் மூலம் உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் குறைக்கலாம்.


தற்போது, இந்திய பசுமை அம்மோனியாவை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதில் மானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மானியங்களில் மின்சார கட்டண தள்ளுபடிகள் மற்றும் மூலதன ஆதரவு ஆகியவை அடங்கும். அவை உற்பத்தி செலவுகளை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைக்கலாம். இது இந்திய பசுமை அம்மோனியாவை உலகளாவிய ஏல விலைகளுடன் ஒப்பிடக்கூடியதாகவோ அல்லது மலிவாகவோ ஆக்குகிறது. இது ஜெர்மனியில் நடந்த H2Global ஏலத்தில் காணப்பட்டது.


உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் தொழில்துறைக்கு நம்பகமான ஏற்றுமதி இல்லாதது ஒரு முக்கிய சவாலாக உள்ளது. பசுமைக் கப்பல் வழித்தடங்களை நிறுவுதல் (பூஜ்ஜிய உமிழ்வு எரிபொருட்களுக்கு உகந்த கப்பல் பாதைகள்) போன்ற துறைமுக அடிப்படையிலான தலையீடுகள் இதைத் தணிக்க முடியும். இந்த பசுமை விநியோகச் சங்கிலி மாதிரியானது, உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சந்தையில் இந்தியாவின் விலைப் போட்டித்தன்மையை நிறைவுசெய்யும்.


துறைமுகங்கள் ஆற்றலில் ஒரு சேவை முறை என்ற புதிய வணிக மாதிரிகளைப் பயன்படுத்தலாம். அங்கு அவை ஹைட்ரஜன் உற்பத்தியாளர்களுக்கு நிலம் மற்றும் உள்கட்டமைப்பை குத்தகைக்கு எடுத்து, செயல்திறனின் அடிப்படையில் வருவாயைப் பகிர்ந்து கொள்கின்றன.  பசுமை தொழில்துறை அமைப்புகளை நடத்துவதன் மூலமும், பசுமை ஹைட்ரஜன் தேவைக்காக வட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் அவை புதுமை மையங்களாக மாறலாம்.


லட்சுமணன் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் இணைச் செயலாளர் (துறைமுகங்கள், பிபிபி, சிஎஸ், சாகர்மாலா-I, & ஐடி) ஆவார். காதே RMIயின் நிர்வாக இயக்குநர் ஆவார்.

                 

Original article:

Share:

புதிய மகத்தான புவிசார் அரசியல் ஆட்டத்துடன், இந்தியா தாலிபான்கள் மற்றும் காபூலுடன் உறவு மேற்கொள்ள வேண்டும். - விவேக் கட்ஜு

 இந்தியாவின் ஆப்கானிஸ்தான் அணுகுமுறைகள் அதன் மேற்கத்திய அண்டை நாடுகளில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் இந்தியா நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு ஆப்கானிஸ்தானில் வலுவான இருப்பு முக்கியமானது.


ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் இந்திய வருகை, எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதோடு, கடந்த கால இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளையும் நினைவு கூர்வதற்கான ஒரு தருணமாகும். இது ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறை நேர்மறையானதாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும், அதன் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் குடியரசின் மீது முன்பு காட்டிய நம்பத்தகாத நம்பிக்கையைத் தவிர்க்கும்.


ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் அணுகுமுறை அதன் மேற்கு அண்டை நாடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்த பிராந்தியத்தில் உடனடியாகவும் நீண்ட காலத்திலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சீனாவும் இங்கு தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. பாகிஸ்தானுடனான அதன் உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன. ஈரான் மற்றும் அரேபிய தீபகற்பத்திலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ரஷ்யா தலிபான்களுக்கு இராஜதந்திர அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ரஷ்யாவும் ஈரானுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானின் தொடர்ச்சியான விரோதத்தை கையாளும் அதே வேளையில், இந்தியா தனது மேற்கத்தியநாடுகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக முத்தாகி இந்தியாவுக்கு வருகை தருவதும் இந்தப் பிராந்திய சூழலில்தான் நிகழ்கிறது.


வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அக்டோபர் 10-ம் தேதி முத்தாகியை சந்தித்தார். காபூலில் இந்தியா தனது தூதரக பணியை மீண்டும் தொடங்கும் என்று அவர் அறிவித்தார். ஜூன் 2022ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் தலைநகரில் இந்தியா ஒரு தொழில்நுட்பக் குழுவைக் கொண்டுள்ளது. எனவே, அதன் தூதரகத்தை முறையாக மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை தாமதமானது. ஜெய்சங்கர், தற்போதைக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்று குறிப்பிட்டார். சர்வதேச ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, தாலிபான்களுக்கு முழுமையான இராஜதந்திர அங்கீகாரத்தை கொடுக்க இந்தியா விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது. இது சரியான அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.


இது தலிபான்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மாஸ்கோ-பெய்ஜிங் முகாமில் இந்தியா இணைந்திருப்பதை வாஷிங்டனை வருத்தப்படுத்தாது என்பதை இது உறுதி செய்கிறது. குறிப்பாக, சமீபத்தில் மாஸ்கோ கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் எந்த நாடும் இராணுவக் கட்டமைப்புகளை வைத்திருக்கக் கூடாது என்று இந்தியா ஒருமித்த கருத்துடன் இணைந்திருப்பதால், இதை அடையாளம் காட்டுவது அவசியம். விரைவில், தலிபான்கள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு உறவுகளை முடிவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா தெளிவுபடுத்த வேண்டும். இதில் வேறு யாரும் தலையிடக்கூடாது.


காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மீண்டும் திறந்தால், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை தலிபான்கள் கட்டுப்படுத்த விரைவில் அனுமதிக்க வேண்டும். அது ஆப்கானிஸ்தான் அமீரகத்தின் கொடியை பறக்கவிடும் என்பதையும் குறிக்கும். இது இந்தியாவுக்கு எந்த இராஜதந்திர சீர்குலைவையும் ஏற்படுத்தக்கூடாது. ஏனெனில், இது முறையான இராஜதந்திர அங்கீகாரத்தை குறிக்காது. 2021-ல் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து தலிபான்கள் அனைத்து ஆப்கானிஸ்தான் பிரதேசங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்ற உண்மையைப் புறக்கணிக்க முடியாது. அதை வீழ்த்தும் திறன் கொண்ட உள் அல்லது வெளிப்புற எதிர்ப்பு எதுவும் இல்லை. முழு சர்வதேச சமூகமும் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


மனித உரிமைகள் தொடர்பாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை தாலிபான்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கைகள் தொடரும். இருப்பினும், தாலிபான்கள் இதற்கு இணங்க வாய்ப்பில்லை. ஷரியாவின் தியோபந்தி-வஹாபி (Deobandi-Wahhabi) விளக்கத்தை இந்தக் குழு பின்பற்றுகிறது. அது அதன் இறையியல் நம்பிக்கைகளை கைவிடாது. மேலும், மனித உரிமைகள் குறித்து விவாதிப்பதை ஜெய்சங்கர் புத்திசாலித்தனமாகத் தவிர்த்தார்.


இந்த அணுகுமுறை கடந்த காலத்திலிருந்து வேறுபட்டது. நவம்பர் 2023-ல் இந்தியா-அமெரிக்கா 2+2 கூட்டு அறிக்கை குறிப்பிட்டதாவது, "பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட அனைத்து ஆப்கானியர்களின் மனித உரிமைகளை மதிக்கவும், பயண சுதந்திரத்தை நிலைநாட்டவும் அமைச்சர்கள் தலிபான்களை வலியுறுத்தினர்." இந்தப் பிரச்சினையில் ஜெய்சங்கரின் மௌனம், இந்தப் பிரச்சினைகளில் இந்தியா தலிபான் அணுகுமுறையை ஆதரிப்பதாக அர்த்தமல்ல. மாறாக, தாலிபான்களைப் போன்ற கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகளை இந்தியா வரலாற்று ரீதியாகக் கையாண்டுள்ளது. ஆனால், அவர்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள். எனவே, மேற்கத்திய நாடுகளில் உள்ள மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் மனித உரிமைகள் மீதான அவர்களின் அணுகுமுறையைக் கண்டும் காணாமலும் இருக்க விரும்புகிறார்கள்.


ஜெய்சங்கர் தனது தொடக்கக் கருத்துக்களில், "நமது இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் பகிரப்பட்ட அச்சுறுத்தல்களை" குறிப்பிட்டார். பாகிஸ்தானின் மறைமுக மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தலிபானுடன் இணைந்து செயல்படுவதை இது குறிக்கிறது. பொதுவாகவே, பாகிஸ்தானும் சீனாவும் பாதுகாப்புத் துறையில் இந்தியா-தலிபான் ஒத்துழைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்கும். இருப்பினும், இந்த ஒத்துழைப்பு ஒரே காலாண்டில் இருவரும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தர்க்கரீதியான விளைவாகும்.


இருபதாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் தலிபான்களை ஆதரித்ததால் இது முரண்பாடாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தலிபான்கள் இராஜதந்திர ரீதியில் தோல்வியை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது. காபூலில் அதிகாரத்தில் இருக்கும் மற்ற ஆப்கானிஸ்தான் ஆட்சிகளைப் போலவே, தலிபான்களும் அதன் இந்தியக் கொள்கைகளில் தலையிடுவதை ஏற்க மாட்டார்கள் என்பது பாகிஸ்தான் வெளிப்படையாகக் கவனிக்க தவறிவிட்டது. காக்கி உடை அணிந்த ஆண்களிடம் அதன் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan (TTP)) உறவினரையும் அது ஒப்படைக்காது. சிந்து நதியின் எதிர் கரையில் உள்ள மக்களுக்கு இடையே நீண்டகாலமாகவும் தீவிரமாகவும் உள்ள முரண்பாடுகளையும் பாகிஸ்தான் புறக்கணித்தது.


உணவு முதல் சுகாதாரம் வரை பயிற்சி மற்றும் கல்வி வரை இந்தியா ஆப்கானிஸ்தான் மக்களுடன் ஒத்துழைக்கும் பகுதிகளை ஜெய்சங்கர் விவரித்தார். மேலும், நிறுத்தப்பட்ட திட்டங்களை இந்தியா நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார். இந்த பகுதிகளில் இந்திய உதவியை தலிபான்கள் வரவேற்கும் ஆனால் அது மாணவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான விசா முறையில் அதிக தாராளமயமாக்கலை எதிர்பார்க்கிறது. பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு அதிகமான ஆப்கானிஸ்தான் பார்வையாளர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயங்கக்கூடாது. இருநாடுகளின் உறவை முன்னோக்கி கொண்டு செல்ல இது இன்றியமையாதது மற்றும் ஆப்கானியர்கள் இந்தியாவில் நிரந்தரமாக குடியேற விரும்புவதில் குறைந்தளவில் ஆபத்து உள்ளது. சுரங்கம் (mining) மற்றும் ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தின் பிற துறைகளில் அதிக இந்தியாவின் ஈடுபாட்டை முத்தாகி விரும்பினார் என்பதும் ஊக்கமளிக்கிறது. தலிபான்கள் அதிக முதலீட்டின் தேவையை கவனத்தில் கொண்டாலும், சீனாவின் பொருளாதார அடிமையாக மாற விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. மேற்கு சீனாவுடன் ஆப்கானிஸ்தான் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவதை இந்தியா அனுமதிக்க முடியாது.


இந்தியாவுடனான உறவுகளில் பெரும் வல்லரசு நாடுகளின் தொடர்புகளையும் பாகிஸ்தானின் அழுத்தங்களையும் தாலிபான் கையாள வேண்டியிருகும். இதை அடைய, ஆப்கானிஸ்தானில் மேம்படுத்தப்பட்ட இந்திய ஈடுபாட்டை விரும்புகிறது. இது பாரம்பரிய ஆப்கானிய கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானில் வலுவான இருப்பு இருப்பது மிக முக்கியம். அதன் மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும் சக்தி புவிசார் அரசியலில் இருந்து வெளிப்படும் எந்த எதிர்மறையான விளைவுகளையும் வெற்றிகரமாக நிர்வகிப்பதை உறுதிசெய்வதற்கு முக்கியமானது.


எழுத்தாளர் ஒரு முன்னாள் வெளியுறவுத் தூதுவராவர்.



Original article:

Share:

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை மேம்படுத்துதல் மிகவும் முக்கியமானது. - அமித் கபூர்

 குழந்தைகளுக்கு வலுவான அடிப்படைத் திறன்கள் இல்லையென்றால், பலர் இடைநிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறி, வாழ்நாள் வருமானம் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும்.


2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற திட்டத்தை நோக்கி இந்தியா இலக்காகக் கொண்டுள்ளதால், இந்த மாற்றத்திற்கான அடித்தளம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. மேலும், உள்ளடக்கிய வளர்ச்சியின் மையத்தில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (Foundational Literacy and Numeracy (FLN)) உள்ளது. அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலானது (FLN) கல்வி மற்றும் அடிப்படை எண்கணிதம் போன்ற கல்வித் திறன்கள் 3-ம் வகுப்பிற்குள் உள்ளடக்கியது. இது வாழ்நாள் முழுவதும் கற்றல், பொருளாதார பங்கேற்பு மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது. ஆரம்பகால குழந்தைப் பருவம், குறிப்பாக 3-6 வயது, கல்வியறிவு மற்றும் எதிர்கால கற்றல் திறனை வளர்க்கும் அடிப்படைத் திறன்களை உருவாக்குவதற்கு முக்கியமானது.


அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலின் (FLN) முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசாங்கம், இந்தியாவில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலின் (FLN) சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை எடுத்துரைத்து, புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசிப்பதில் நிபுணத்துவத்திற்கான தேசிய முன்முயற்சியை (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN Bharat)) துவக்கியது. 2026-27 நிதியாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுடன், ஒவ்வொரு குழந்தையும் 3-ம் வகுப்பிற்குள் அடிப்படை திறன்களைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு லட்சிய இலக்காக இருந்தாலும், இந்தியா தனது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அதை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் நாடு தழுவிய அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலை (FLN) செயல்படுத்துவது சிக்கலானது. இதில் அடிப்படைக் கற்றலைக் கையாள்வது அவசியம். ஆனால், நாட்டில் உள்ள மொழியியல் சிக்கல்கள் காரணமாக பிராந்தியங்களுக்கு இடையே முன்னேற்றம் மாறுபடும்.


பன்மொழி சவால்


இந்தியாவின் பன்மொழி பன்முகத்தன்மை, ஆரம்பக் கல்வியில் சவால்களை உருவாக்குகிறது. குறிப்பாக, ஆரம்ப ஆண்டுகளில் குழந்தைகளின் மொழியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உள்ளடக்கும். இது கல்வியறிவுக்காக ஒரு மொழியைப் பயன்படுத்துவது பல்வேறு பின்னணிகளுக்கு இடமளிக்கும் சிக்கலான தன்மையை வலியுறுத்துகிறது. மொழியியல் மற்றும் உளவியல் வளர்ச்சிக்கு, நம்பிக்கை மற்றும் அடையாளத்தை ஊக்குவிப்பதற்கு, குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழி அல்லது பழக்கமான மொழியில் கற்பிப்பது அவசியம். இருப்பினும், பன்மொழிக் கல்வியை அளவிடுவதற்கு பொருத்தமான பொருட்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் நிதியுதவி போன்றவை தேவைப்படுகிறது. இது திட்டத்தை செயல்படுத்துவதை மிகவும் சிக்கலாக்குகிறது. இவை இல்லாமல், பள்ளிகள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் மொழியை, பொதுவாக ஆங்கிலத்தை, முக்கிய கற்பித்தல் மொழியாக நம்பியுள்ளன. இது தற்செயலாக மற்ற மொழிகளை ஓரங்கட்டி, சமமற்ற கற்றல் விளைவுகளை ஏற்படுத்தி, சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்.


2021-ம் ஆண்டில் போட்டித்திறனுக்கான நிறுவனம் மற்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) ஆகியவற்றின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவு அறிக்கை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கூட்டமைப்பிற்கும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலையும் (FLN) முதலீடு செய்வது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.39 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று செலவு-பயன் பகுப்பாய்வு அமைப்பு பரிந்துரைத்தது. ஒரு வலுவான அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) திறன்கள் இல்லாமல், பல குழந்தைகள் இடைநிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே கைவிடப்படலாம், வாழ்நாள் வருவாய் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற பலன்களை இழக்க நேரிடும். அடிப்படைத் திறன்களை மேம்படுத்துவது இந்தியாவின் கல்வி முறைக்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.



இராஜதந்திர ரீதியில் அணுகுமுறை


இந்தியாவில், அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலின் (Foundational Literacy and Numeracy (FLN)) முழுத் திறனையும் பெறுவதற்கு, அது ஒரு இராஜதந்திர ரீதியில் அணுகுமுறையை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். முதலாவதாக, அதிக இலக்கு கொண்ட தலையீடுகளை ஆதரிக்க அலகு-அளவிலான தரவை (unit-level data) அறிமுகப்படுத்துவதன் மூலம், தேசிய சாதனை கணக்கெடுப்பு (National Achievement Survey) மற்றும் அடிப்படை கல்வியறிவு ஆய்வு (Foundational Literacy Study) போன்ற நாடு தழுவிய மதிப்பீடுகளின் பயன்பாட்டை இந்தியா மேம்படுத்த முடியும். அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் தற்போதைய மதிப்பீடுகள் பாலின வேறுபாடுகளின் அடிப்படையிலான கட்டமைப்பு மற்றும் சமூக சிக்கல்களைக் கைப்பற்றவில்லை.


பல்வேறு சமூகப் பொருளாதார சூழல்களில் செயல்திறன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள, சமமான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கு முக்கியமானது. அடிப்படை கல்வியறிவு ஆய்வு (FLS) மற்றும் தேசிய சாதனை கணக்கெடுப்பில் (NAS) அலகு-அளவிலான தரவை அறிமுகப்படுத்துவது முக்கியமானது. பங்குதாரர்கள் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும், சமூக மற்றும் பாலின குழுக்களில் சமமான கல்விக்கான உத்திகளை வடிவமைக்கவும் தற்போதைய ஆய்வுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு விரிவான தரவுத்தளமானது கொள்கைகளை தெரிவிக்கவும், இந்தியா முழுவதும் கற்றல் விளைவுகளை அதிகரிக்கவும் முடியும். மேலும் தரவுகளுக்கு அப்பால், ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) தலையீடானது கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கருத்துகளை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்பான பிரிவுகள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை அரசாங்கம் வளர்க்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட அறிவு மையங்களை (centralized knowledge hubs) உருவாக்குவது இந்த செயல்முறையை மிகவும் திறமையானதாக்கும்.

தொழில்முறை மேம்பாடு (Professional development)


அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) சுற்றுச்சூழல் அமைப்பின் மற்றொரு முக்கியமான பகுதியாக ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு (Teacher professional development) உள்ளது. தொடர்ச்சியான கலப்பின பயிற்சி திட்டங்களானது அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலில் (FLN) குறிப்பாக பன்மொழி அமைப்புகளில் கல்வியியல் நிபுணத்துவத்தை உருவாக்க முடியும். தொழில்நுட்ப ரீதியாக அதிகாரம் பெற்ற அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) திட்டங்கள் தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழி கற்பவர்களுக்கு ஆதரவாக, மொழியியல் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட வேண்டும். இதை செயல்படுத்த, பல்வேறு சமூகங்களில் இருந்து மொழிசார் ஆசிரியர்களை பணியமர்த்துவது இன்றியமையாதது. ஏனெனில், குழந்தையின் முதல் மொழியில் பெற்ற அடிப்படை திறன்கள் கூடுதல் மொழிகளுக்கு மாற்றப்படலாம் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த உதவும். அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், குழந்தை நட்பு வட்டாரங்களை மேம்படுத்தவும், இதனால், பள்ளிக்குத் தயார்நிலையை குழந்தைகள் வருவதை மேம்படுத்துவதற்கு வழக்கமான கலந்துரையாடல் அமர்வுகளை (interactive sessions) நடத்தவும் உதவ வேண்டும்.


அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) என்பது கற்றல் மற்றும் வளர்ச்சியின் அடித்தளமாகும். எனவே, 2026-27 ஆண்டுக்குள் புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசிப்பதில் தேர்ச்சிக்கான தேசிய முயற்சியின் (NIPUN Bharat) லட்சிய இலக்கை அடைவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும். ஆனால் அடித்தளமே சீரற்றதாக இருக்கும்போது என்ன நடக்கும்? அதை எப்படி இணக்கமாக்க முடியும்? மேலும், உள்ளடக்கிய மற்றும் சமமான அடிப்படைக் கற்றலுக்கான உத்தியின்  அணுகுமுறையின் மூலம் முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் பதில் உள்ளது. வலுவான அடித்தளத்தை உருவாக்க, இந்தியாவில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) விளைவுகளை பாதிக்கும் உள்ளடக்கத்தில் உள்ள இடைவெளிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதிகமான தரவுகளை விட, சிறந்த தரவு எவ்வாறு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் நாம் ஆழமாக ஆராய வேண்டும்.


எழுத்தாளர் போட்டித்திறன் (Institute for Competitiveness) நிறுவனத்தின் தலைவர் ஆவார்.



Original article:

Share:

விளிம்புநிலை இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு என்பது பொருளாதார ரீதியாக அவசியமான ஒன்றாக இருக்க வேண்டும். -ஜோதி சர்மா

 தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொழில்களில், சிறப்பு தொழில்நுட்ப திறன்களுக்கான தேவையானது, விநியோகத்தை விட வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், தரமான பயிற்சிக்கான அணுகல் இல்லாதவர்கள் பெருகிய முறையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். விளிம்புநிலை இளைஞர்களின் திறமையில் தோல்வி என்பது பில்லியன் கணக்கான உற்பத்தித் திறனைக் குறிக்கிறது.


இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.  மேலும், நாட்டின் இளைஞர்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக இணைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் தொகை 35 வயதுக்குட்பட்டவர்கள். இது இந்த டிஜிட்டல் வளர்ச்சியிலிருந்து பயனடைய நாட்டிற்கு வாய்ப்பளிக்கிறது. ஆனால், இந்த முன்னேற்றம் நகரங்களுக்கு வெளியே வாழும் மக்களையும், பின்தங்கிய பின்னணியில் இருந்து வருபவர்களையும் சென்றடைய வேண்டும்.


தொழில்நுட்பம் சார்ந்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate social responsibility (CSR)) திட்டங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுமார் 90 சதவீத நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், இத்தகைய செலவினங்களில் 4.5 சதவீதம் மட்டுமே நாட்டின் மக்கள்தொகையில் 17.5 சதவீதத்தைக் கொண்ட ஆர்வமுள்ள மாவட்டங்களைச் சென்றடைகிறது. இந்த இடைவெளி ஒரு அடிப்படை சவாலை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. ஆனால், அது மிகவும் தேவைப்படும் மக்களை நாம் சென்றடையவில்லை.


இன்றைய தொழில்கள் தொழில்நுட்ப திறன்களை மட்டும் கோரவில்லை. ஆனால் தகவமைப்பு, டிஜிட்டல் சரளமாக மற்றும் தொழில்முறை தொடர்பு பாரம்பரிய கல்வி வழங்குவதை விட அதிகமாக உள்ளன. விளிம்புநிலையில் உள்ளஇளைஞர்களுக்கு, தடைகள் இன்னும் சிக்கலானவை மற்றும் தொழில்நுட்ப திறன்களுக்கு அப்பாற்பட்டவை. தகவல் தொடர்பு திறன், தொழில்முறை வெளிப்பாடு மற்றும் முறையான பெருநிறுவன கட்டமைப்புகளுக்குத் தகவமைப்பு ஆகியவை பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தடைகளாக மாறும். இது திறமையான நபர்கள் அடுக்கு-1 (Tier 1) தொழில்நுட்ப சூழல்களில் வெற்றிபெறுவதைத் தடுக்கிறது.


இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) 2022ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2047-ம் ஆண்டிற்குள் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 40 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரக்கூடும். 2030-ம் ஆண்டுக்குள், உலகத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இந்தியர்களாக இருப்பார்கள். இது ஒரு வாய்ப்பு மற்றும் முக்கியமான பொறுப்பு இரண்டையும் முன்வைக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் எண்ணிக்கையின் அளவு வெற்றிகரமான திறன் முயற்சிகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதாகும். இருப்பினும்கூட, வேலைச் சந்தையானது மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களுக்கு வெகுமதிகளை வழங்குவதால், ஏற்கனவே இருக்கும் பிளவுகளை நாம் தீவிரப்படுத்துகிறது. 


தற்போதைய வேலைச் சந்தையில் அதிக திறன் கொண்ட தொழிலாளர்களின் மீதான சார்பு, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கட்டமைப்புத் தடைகளை உருவாக்கி, பொருளாதார சமத்துவமின்மையை விரிவுபடுத்துகிறது. தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொழில்களில், சிறப்பு தொழில்நுட்ப திறன்களுக்கான தேவை விநியோகத்தை விட வேகமாக வளர்கிறது. இதனால், தரமான பயிற்சிக்கான அணுகல் இல்லாதவர்கள் பெருகிய முறையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். விளிம்புநிலையில் உள்ள இளைஞர்களுக்கு திறன் வழங்கத் தவறுவது பில்லியன் கணக்கான உற்பத்தித்திறனை இழக்க வழிவகுக்கிறது. இது இந்தியா தனது மிகவும் மதிப்புமிக்க சொத்தை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. திறன் வளர்ப்புக்கான தேவை மிகவும் விரிவானது. இது அடிப்படை தொழில்நுட்பக் கருத்துகள் முதல் மேம்பட்ட ஆழமான தொழில்நுட்ப சிறப்புகள் வரை உள்ளது. சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளுக்கு கூட தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. இந்த திறன் இடைவெளி அனைவரையும் பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது. தற்போது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. ஆனால், எவ்வளவு விரைவாக நீங்கள் தகவமைத்து வளர முடியும் என்பதுதான் முக்கியம். இன்று, தகவமைப்புத் தன்மை மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவை வெற்றிக்கான உண்மையான திறவுகோல்கள் ஆகும்.

திறமைக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை. அடிப்படையான டிஜிட்டல் கல்வியறிவிலிருந்து (basic digital literacy) இளைஞர்களை தரவு பகுப்பாய்வு, UI/UX வடிவமைப்பு, குற்றவியல் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் மேம்பாடு போன்ற மேம்பட்ட நிபுணத்துவங்களுக்கு அழைத்துச் செல்லும். தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் தரநிலையாக மாற வேண்டும். அங்கு, திறன்கள் வாய்ப்புக்கான கதவுகளைத் திறக்கும். இந்தச் சான்றிதழ்கள் முதலாளிகள் நம்பும் தரப்படுத்தப்பட்ட அளவுகோல்களை வழங்குகின்றன. கல்வி அல்லது சமூகப் பின்னணியைக் காட்டிலும் திறன்கள் முக்கியமானதாக இருக்கும் விளையாட்டுக் களத்தை உருவாக்குகிறது. விளிம்புநிலையில் உள்ள இளைஞர்களுக்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படும்போது, ​​அவர்கள் பங்கேற்பது மட்டுமின்றி சிறந்து விளங்குகிறார்கள்.


வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட மாதிரிகள், வழிகாட்டுதல், நேர்காணல் தயாரிப்பு மற்றும் முதலாளிகளுடனான நேரடி தொடர்புகள் ஆகியவை எதிர்காலமாகும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அப்பால், இந்த மாதிரிகள் நம்பிக்கை, நிறுவனம் மற்றும் நீண்டகால சுதந்திரத்தையும் உருவாக்குகின்றன. பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்புக்கு தடையற்ற மாற்றத்தை உருவாக்க, வழிகாட்டுதல், நேர்காணல் தயாரிப்பு மற்றும் பணியமர்த்தல் நிறுவனங்களுடன் நேரடி கூட்டாண்மைகளை இணைப்பதன் மூலம் இந்தத் திட்டங்கள் பாரம்பரிய வகுப்பறை கற்றலுக்கு அப்பால் செல்கின்றன.

தொழில்நுட்பத்தில் உள்ள பெண்கள் தொடர்ச்சியான தடைகளை எதிர்கொள்கின்றனர். அதை இலக்காகக் கொண்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் இந்தத் தடைகளைத் தீர்க்க உதவும். கிராமப்புற திறன்பேசி பயன்பாடு (Rural smartphone) அதிகமாக இருந்தாலும், பாலின இடைவெளி உள்ளது. 44 சதவீத சிறுவர்களுடன் ஒப்பிடும்போது 20 சதவீத பெண்கள் மட்டுமே திறன்பேசிகளை வைத்துள்ளனர். இந்த டிஜிட்டல் அணுகல் இடைவெளி தற்போதுள்ள சமூகத் தடைகளை ஒருங்கிணைக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் செழிக்க பெண்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆதரவான, நெகிழ்வான பயிற்சி சூழல்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.


பொது-தனியார் கூட்டாண்மை பெரிய அளவிலான தாக்கத்தை உருவாக்க முடியும். அவை அரசாங்கக் கொள்கை, தொழில் நிபுணத்துவம் மற்றும் கல்வி வளங்களை ஒருங்கிணைக்கின்றன. இந்த அணுகுமுறை தனிமைப்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகளை முறையான மாற்றமாக மாற்றும். குறிப்பாக, அடுக்கு-2 மற்றும் 3 நகரங்களில் கவனிக்கப்படாத திறமையாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.  தனியார் துறையானது, நிதியளிப்பவர்களாக மட்டுமல்லாமல், பாடத்திட்டத்தை இணைந்து உருவாக்கி உள்ளூர் திறமைகளை ஆதரிக்க வேண்டும். இது பயிற்சித் திட்டங்கள் சந்தை தேவைகளுடன் பொருந்துவதையும் வேலைகளுக்கு நேரடி பாதைகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது. இது நகர்ப்புற-கிராமப்புறப் பிரிவினையான இடம்பெயர்தலை தேவையில்லாமல் குறைக்க முடியும், சிறிய நகரங்களில் இருந்து திறமையான நபர்கள் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் தரமான வேலை வாய்ப்புகளை அணுக முடியும்.


உண்மையான உள்ளடக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு உறுதியளிப்பதைக் குறிக்கிறது. தொழில்நுட்பம் மாறும்போது, ​​பணியாளர் மேம்பாட்டிற்கான நமது அணுகுமுறையும் மாற வேண்டும். இடைவெளிகளை உடைத்து, அரசாங்கம், தொழில்துறை மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும். இந்த குழுக்கள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இந்தியாவின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்கும் முழு ஆதரவு வலையமைப்புகளை அவர்கள் உருவாக்க வேண்டும்.


இந்தக் கூட்டாண்மை மாதிரியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது திறன் மேம்பாடு நடைபெறும் விதத்தை மாற்றியமைக்கும். இது தனிப்பட்ட திறன்களை நிகழ்நேர வேலை வாய்ப்புகளுடன் பொருத்த முடியும். இதன் மூலம் கற்பவரின் வேகம் மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை உருவாக்க முடியும். மேலும், பயிற்சி பெற்ற நபர்களை அவர்களின் குறிப்பிட்ட திறன்களைத் தேடும் முதலாளிகளுடன் நேரடியாக இணைக்க முடியும். இது இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களை இந்தியா தொழிலாளர் மேம்பாட்டில் உலகளாவிய தலைவராக மாற்ற உதவும்.


எழுத்தாளர் நாஸ்காம் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share:

மண் உருவாகும் செயல்முறை என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் :


கோதுமை-விதைப்பு பருவத்திற்கு (wheat-sowing season) முன்னதாக, பலர் மண்ணின் வளம் மற்றும் பஞ்சாபின் விவசாய உற்பத்திதிறனில் வெள்ளத்தின் (Floods) தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புவதற்கு வழிவகுத்தது.


வெள்ளம் வெவ்வேறு வழிகளில் மண்ணை பாதிக்கிறது? இந்தக் கேள்விக்கு எளிய பதில் இல்லை. அதாவது வெள்ளத்தின் வகை, அது எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மண்ணின் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து சரியான பாதிப்புகள் மாறுபடும். இருப்பினும், இரண்டு முக்கிய வகையான தாக்கங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.


அரிப்பு (first is erosion) : 


மண் அரிப்பு முதல் காரணமாக உள்ளது. விவசாயிகளின் முயற்சி மூலம் மேம்படுத்திய வளமான மேற்பரப்பு மண்ணை வெள்ள நீர் (Floodwaters) அடித்துச் செல்கிறது. இந்த மேற்பரப்பு மண் முக்கியமானது. ஏனெனில், இதில் பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் கார்பன் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பயிர்கள் வளர உதவுகிறது.


வண்டல் படிவு (depositing of silt) :  


இரண்டாவது காரணம் வண்டல் படிவு ஆகும். வெள்ளமானது, பஞ்சாபின் பல பகுதிகளில், குறிப்பாக ஆற்றங்கரைக்கு அருகில் அல்லது ஆற்றின் படுகைகளில் உள்ள மேற்பரப்பு மண்ணை மூடியிருக்கும் வண்டல் படிவுகளை கொண்டு வருகிறது.


இருப்பினும், அனைத்து வண்டல் மண்ணும் மோசமானவை அல்ல. வெள்ளம் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் வளமான வண்டல் மண்ணையும் கொண்டு வரக்கூடும். கடந்த காலங்களில், ஆறுகளுக்கு அருகில் நிலங்களைக் கொண்ட விவசாயிகள் இந்த இயற்கை நிரப்புதலால் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டும் இதுவே நடக்கிறது.


இருப்பினும், நீண்ட காலம் நீர் தேங்குவது மண்ணின் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும், மண்ணின் காற்றோட்டம் மற்றும் ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கலாம். இந்த காரணிகள் ஒன்றாக உற்பத்தித்திறனைக் குறைக்கின்றன.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களிலிருந்து லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் (PAU) சேகரித்த மண் மாதிரிகள் சில பகுதிகளில், மண் சேதப்படுத்தப்பட்டதாக முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நிலை இன்னும் சமாளிக்கக்கூடியது.


நீர் தேங்குவதால் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் வெளியேறி மண்ணின் pH அளவில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்பரப்பு மண் அரிக்கப்பட்ட பகுதிகளில், ஊட்டச்சத்தின் அளவுகள் குறைந்துள்ளன. ஆனால் ஆழமான உழவு, மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களைச் சேர்ப்பது மற்றும் கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


ஒட்டுமொத்தமாக, முறையான மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம்மண் வளத்தை பராமரிக்க முடியும் என்பதை சோதனைகள் காட்டுகின்றன. பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் அடுத்த பருவத்திற்கு உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தனித்தனியாக மண் பரிசோதனை செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கின்றன.


மீட்பு உத்தி மண்ணின் வகை மற்றும் வண்டல் மண் ஆழத்தைப் பொறுத்தது. வண்டல் மண் இரண்டு முதல் மூன்று அங்குல ஆழத்தில் இருந்தால், சாதாரண உழவு அதை மண்ணுடன் கலக்கலாம். இலகுவான மண்ணில், ஒன்பது அங்குலங்கள் வரை ஆழமான வண்டல் அடுக்குகளை ஆழமான உளி மூலம் (deep chiselling) கையாளப்படலாம்.


மண் அமைப்பை மீட்டெடுக்க உரம் அல்லது கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதும் அறிவுறுத்தப்படுகிறது. மிக முக்கியமாக, ஆரம்பகால தலையீடு விவசாயிகள் தங்கள் வயல்களை ராபி பயிர் சுழற்சிக்கான நேரத்தில் தயார் செய்ய அனுமதிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வெள்ளத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட களைகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், சரியான நேரத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


பஞ்சாப் அரசு, விவசாயிகள் தங்கள் நிலத்தில் குவிக்கப்பட்ட மணல் அல்லது வண்டல் மண்ணை “ வயலின் உரிமையாளருக்குச் சொந்தமானது” (Jisda Khet Usdi Ret’) என்ற கொள்கையின் கீழ் விற்கலாம் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக, மணல் படிவு அதிக அளவில் சாகுபடிக்கு இடையூறாக இருந்தால் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


வண்டல் படிவுகள் அதிகமாக இல்லாத பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர் சுழற்சிகளை திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கலாம் என்று விவசாய நிபுணர்கள் நம்புகின்றனர். அதிக வண்டல் படிவுகள் உள்ள பகுதிகளில் கூட, விரைவான நடவடிக்கை விவசாயிகள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்ற உதவும்.


உங்களுக்குத் தெரியுமா? :


மண்ணின் வகைப்பாடு (Soil Classification) என்பது ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட (வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல்) மண்ணை புவியியல் ரீதியாகக் குறிப்பிடப்பட்டு மற்றும் வரைபடமாக்கக்கூடிய அலகுகளாக வகைப்படுத்துவதைப் பற்றியது. மண் மிகவும் சிக்கலான இயற்கை வளமாகும். மண் என்பது காற்று மற்றும் நீரை விட மிகவும் சிக்கலான இயற்கை வளமாகும்.


அசோக் குலாட்டி குறிப்பிடுவதாவது, மண் சேதமடைந்துள்ளதாகவும் கரிம கார்பன் இல்லாததாகவும் சுட்டிக்காட்டுகிறார். உலக உணவுப் பரிசு பெற்ற (World Food Laureate) ரத்தன் லால் கருத்துப்படி மண்ணின் கரிம கார்பனின் (soil organic carbon (SOC)) சிறந்த அளவு 1.5 முதல் 2 சதவீதம் வரை உள்ளது. இருப்பினும், இந்தியாவில், 60 சதவீதத்திற்கும் அதிகமான மண்ணில் 0.5 சதவீதத்திற்கும் குறைவான மண்ணின் கரிம கார்பன் உள்ளது.



Original article:

Share:

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியல் என்பது என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்:


- அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) உலக மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமை அன்று, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், தேசிய அளவிலான ஐந்தாண்டு (2025-2030) மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதலை வெளியிட்டார்.


- மதிப்பீட்டுத் திட்டத்தின்படி, இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு நிலையை துல்லியமாக வெளிக்காட்டும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட, பங்கேற்பு மற்றும் மேம்படுத்தக்கூடிய 'சிவப்பு பட்டியல்' (Red Listing) அமைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.


- சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் என்பது 160 உறுப்பு நாடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொது சமூகக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய அமைப்பாகும். அவை சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. உலகப் பாதுகாப்பு மாநாடு (World Conservation Congress) பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் முன்னுரிமைகளை உருவாக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது.


- சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் அவ்வப்போது உயிரினங்களின் ஆரோக்கியம் மற்றும் அவற்றின் அழிவு அபாயங்களை ஆய்வு செய்கிறது. மேலும், இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் சிவப்பு பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் பாதுகாப்பு நிலையைப் பொறுத்து, இனங்கள் அழிந்துவிட்டன, காடுகளில் அழிந்துவிட்டன, மிகவும் ஆபத்தானவை, அழிந்து வருபவை, பாதிக்கப்படக்கூடியவை, அச்சுறுத்தலுக்கு அருகில், குறைந்த பாதுகாப்பு கொண்டவை, தரவு குறைபாடு அல்லது மதிப்பீடு செய்யப்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன.


- இந்த மதிப்பீடு கொள்கை வகுப்பாளர்களுக்கும் வனவிலங்கு நிபுணர்களுக்கும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்றவும், அத்தகைய உயிரினங்களுக்கு வளங்களை நேரடியாக வழங்கவும் திட்டங்களை உருவாக்க உதவுகிறது.


- இந்தியாவில் பாசி, பூஞ்சை மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட 55,726 பதிவு செய்யப்பட்ட தாவர இனங்கள் உள்ளன. இந்த 6.33%-இல், 3,501 தாவர இனங்கள் மற்றும் 27 பூஞ்சை இனங்கள் உலகளாவிய சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றிய சிவப்புப் பட்டியலுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.


- இந்தியாவில் 1,04,561 பதிவு செய்யப்பட்ட விலங்கு இனங்கள் உள்ளன. IUCN சிவப்பு பட்டியலில் இவற்றில் 7,516 இனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது மொத்த இனங்களில் 7.2% ஆகும். இந்த முடிவுகள் கவலையளிக்கின்றன. ஏனெனில், 1,012 இனங்கள் (13.4%) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. மேலும், 289 இனங்கள் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ளவை என பட்டியலிடப்பட்டுள்ளன.


- IUCN சிவப்புப் பட்டியலின்படி, இந்தியாவில் 6,568 மதிப்பிடப்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றில் 1,582 இனங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை உள்ளூர் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது அவை நாட்டின் காட்டு வாழ்விடங்களில் மட்டுமே இயற்கையாகவே உள்ளன. குறிப்பாக நீர்வீழ்ச்சிகள் (79%) மற்றும் ஊர்வன (54.9%) ஆகியவற்றில் உள்ளூர் தன்மை அதிகமாக உள்ளது.


- இந்தியாவின் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை ஆய்வு செய்யும் 'தேசிய சிவப்பு பட்டியல்' (national red list) ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழிநடத்தும். இந்த திட்டம் இந்திய தாவரவியல் ஆய்வு, இந்திய விலங்கியல் ஆய்வு மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.





உங்களுக்குத் தெரியுமா?:


- சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) உலக பாதுகாப்பு மாநாடு ஐக்கிய அரபு அமீரகயத்தில் உள்ள  அபுதாபியில் 2025 அக்டோபர் 9 முதல் 15 வரை நடைபெறுகிறது.


- இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இது 1,400-க்கும் மேற்பட்ட சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றிய உறுப்பினர் குழுக்களுக்கு வாக்களித்து மிக முக்கியமான இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கிறது. இது மக்கள் பூமியை எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதை வழிநடத்த உதவுகிறது.



Original article:

Share:

பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் (GEI) இலக்கு விதிகள் -என் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய செய்தி:


— 2025ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான (Greenhouse Gas Emission Intensity (GEI)) முதல் அதிகாரப்பூர்வ விதிகளை ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.


- இந்த விதிகள் அலுமினியம், சிமென்ட், குளோர்-காரம் மற்றும் கூழ் மற்றும் காகிதம் போன்ற அதிக உமிழ்வை உருவாக்கும் நான்கு தொழில்களுக்குப் பொருந்தும்.


- உமிழ்வு இலக்குகள் அக்டோபர் 8 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


— உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு யூனிட் பொருளுக்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை விதிகள் நிர்ணயிக்கின்றன.


வேதாந்தா, ஹிண்டால்கோ, பாரத் அலுமினியம், JSW சிமென்ட், அல்ட்ராடெக், நால்கோ, ஜேகே சிமென்ட், டால்மியா சிமென்ட், ஸ்ரீ சிமென்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேகே பேப்பர் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இந்த இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.


கார்பன் வரவு வர்த்தக திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS))


- இந்த விதிகள், கார்பன் வரவு வர்த்தக திட்டம் (CCTS), 2023இன் மூலம் இந்தியாவின் கார்பன் சந்தையைத் செய்யல்பட்டிற்கு கொண்டு வர உதவும்.


- கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு அமைப்பை அமைப்பதற்கும், கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide (CO2)) உமிழ்வைக் குறைப்பதற்கும், 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் காலநிலை இலக்குகளை ஆதரிப்பதற்கும் கார்பன் கடன் வர்த்தக திட்டம் தொடங்கப்பட்டது.



பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் 2015 மற்றும் இந்தியா


- 2005ஆம் ஆண்டு அளவை விட, 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகளின் அளவை 45% குறைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இது உலகளாவிய காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் வாக்குறுதியின் ஒரு பகுதியாகும்.


குறிப்பு: தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் மாற்றம் அடையும் நாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின்படி பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் கோரும் சர்வதேச ஒப்பந்தமான கியோட்டோ நெறிமுறையின் (Kyoto Protocol) பிரிவு 17 இன் கீழ், கூடுதல் உமிழ்வு அலகுகளைக் கொண்ட நாடுகள்  பயன்படுத்தாத உபரியை தங்கள் இலக்குகளை மீறிய நாடுகளுக்கு விற்கலாம்.


பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான (Greenhouse Gas Emission Intensity (GEI)) விதிகள்


ஒட்டுமொத்த நோக்கம்: காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்களில் நவீன, சூழல் நட்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும்.


2025-26 மற்றும் 2026-27ஆம் ஆண்டுகளுக்கான மொத்தம் 282 பெரிய மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தேவையான உமிழ்வு வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த 282 அலகுகள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன: அதன் படி,


  • 186 சிமெண்ட் அலகுகள்


  • 13 அலுமினிய அலகுகள்


  • 30 குளோர்-கார அலகுகள்


  • 53 பல்ப் (pulp) மற்றும் காகித அலகுகள்


- ஒவ்வொரு யூனிட் வெளியீடு அல்லது தயாரிப்புக்கும் உற்பத்தி செய்யப்படும் டன் கார்பன் டை ஆக்சைடு (tCO2e) அளவை அடிப்படையாகக் கொண்டு விதிகள் GEI இலக்குகளை நிர்ணயிக்கின்றன.


— tCO2e என்பது அனைத்து பசுமை இல்லவாயுக்களின் தாக்கத்தையும் அளவிடப் பயன்படுத்தப்படும் நிலையான அலகு ஆகும். இது நமது பூமியை வெப்பமாக்கும் அவற்றின் திறனை அடிப்படையாகக் கொண்டது.


பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு தீவிரம் அல்லது பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம்


- பசுமை இல்ல வாயு அல்லது பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் என்பது உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவாகும்.


- பசுமை இல்ல வாயுக்கள் என்பது வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வாயுக்கள் ஆகும். இதனால் பூமியின் மேற்பரப்பு ‘பசுமை இல்ல விளைவு’ (greenhouse effect) மூலம் வெப்பமடைகிறது.


- வளிமண்டலத்தில் ஐந்து மிக அதிகமான பசுமை இல்ல வாயுக்கள் உள்ளன அவை நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் போன்றவையாகும். மற்ற சுமை இல்ல வாயுக்களில் குளோரோபுளோரோகார்பன்கள் (chlorofluorocarbons (CFCs)) மற்றும் ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள் (hydrochlorofluorocarbons (HCFCs)) போன்ற செயற்கை புளோரின் வாயுக்கள் (synthetic fluorinated gases) அடங்கும்.


- கார்பன் டை ஆக்சைடு முக்கிய பசுமை இல்ல வாயுவாக இருப்பதால், அதை வர்த்தகம் செய்வது ‘கார்பன் சந்தையில்’ (carbon market) கார்பன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது.


கார்பன் வரவுகள்


- தொழிற்சாலைகள் தங்கள் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கும்போது, ​​அவை கார்பன் வர்த்தக திட்டத்தின் (carbon credit trading scheme) கீழ் கார்பன் வரவுகளைப் பெறுகின்றன.


— இந்த வரவுகளை உள்நாட்டு கார்பன் சந்தையில் வர்த்தகம் செய்யலாம்.


- எரிசக்தி திறன் பணியகம் அதிகாரப்பூர்வ கார்பன் வரவு சான்றிதழ்களை வழங்கும்.


- தொழிற்சாலைகள் தங்கள் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடையவில்லை என்றால், அதை ஈடுசெய்ய கார்பன் சந்தையிலிருந்து கார்பன் வரவுகளை வாங்க வேண்டும்.


-அவர்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவர்களுக்கு சுற்றுச்சூழல் அபராதம் விதிக்கும்.


— இதேபோன்ற கார்பன் வரவு சந்தைகள் உலகின் பிற இடங்களில் செயல்படுகின்றன. அவை ஐரோப்பா மற்றும் சீனாவில் முறையே 2005 மற்றும் 2021 முதல் செயல்பட்டு வருகின்றன.


— ஒன்றிய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் பணியகத்தின் மேற்பார்வையுடன், இந்திய கார்பன் சந்தை தளத்தின் மூலம் கார்பன் வரவுகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

செயல்திறன், அடைதல் & வர்த்தகம்  (Perform, Achieve, Trade (PAT))


— முதல் முறையாக பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத்தை குறைப்பதற்கான இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், செயல்திறன், அடைதல் & வர்த்தகம் (PAT) எனப்படும் ஆற்றல் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

எடுத்துக்காட்டு:


— பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (GEI) இலக்குகள் மூலம் தொழில்கள் கார்பன் வரவுகளைப் பெறுவதற்கு சரியாக என்ன அடைய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும். இந்த இலக்குகளை அடைய அவர்கள் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.


- பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், அகற்றுதல் அல்லது தவிர்ப்பதன் மூலம் குறைந்த பசுமை இல்ல வாயுவை உற்பத்தி செய்யும் அதே வேளையில் தொழில்கள் வளர உதவுவதே முக்கிய நோக்கமாகும்.


- உதாரணமாக, ஒரு சிமென்ட் ஆலை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் தூய்மையான மற்றும் பசுமையான செயல்முறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத்தை குறைக்க முடியும். இது நிலக்கரியின் பயன்பாட்டை உயிரி எரிபொருளுடன் மாற்றலாம். மேலும் தூய்மையான, அதிக ஆற்றல் திறன் கொண்ட முறைகளை ஏற்றுக்கொள்ளலாம்.


காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான இந்திய அரசின் முக்கிய முயற்சி


— 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (National Clean Air Programme (NCAP)), 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 130 நகரங்களை உள்ளடக்கியது. இதன் நோக்கம், 2017-18ஆம் ஆண்டு முதல் 2025-26ஆம் ஆண்டுக்குள் காற்றின் தரத்தில் கணிசமான முன்னேற்றத்தை அடைவதும், துகள்களின் அளவை 40% வரை குறைப்பதும் ஆகும்.


- காற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் புதுப்பிக்க சாதனை படைக்காத நகரங்களில் காற்று மாசுபாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான (Portal for Regulation of Air-Pollution in Non-Attainment cities (PRANA)) இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.


- விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) விதிகள்: நெகிழிக் கழிவுகள், டயர் கழிவுகள், மின்கல கழிவுகள், பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கழிவுகள் மற்றும் மின்-கழிவுகள் ஆகியவை பொருளாதாரத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுற்றுச்சூழல் நல்ல முறையில் கழிவுகளை நிர்வகிக்க உதவும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளன.


- கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI)): சதுப்புநிலங்களை ஒரு தனித்துவமான, இயற்கை சூழல் அமைப்பாக மீட்டெடுக்கவும் மேம்படுத்தவும் மற்றும் கடலோர வாழ்விடங்களின் நிலைத்தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்தவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.


- நகர் வான் யோஜனா (Nagar Van Yojana): தேசிய காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியம் (National Afforestation and Eco-development Board (NAEB)) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. நகரவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதைத் தவிர, காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் மற்றும் பசுமையை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சுற்றுச்சூழலுக்கான நன்மைகள் ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது..


- பாதுகாப்பான வாழ்க்கை முறை (Mission LiFE): வளங்களை கவனமாகவும் சிந்தனையுடனும் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மக்கள் வாழ ஊக்குவிப்பதற்காக இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய திட்டமாகும். இது ஏழு முக்கிய தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை: பின்வருவன,


  • தண்ணீர் சேமிப்பு


  • ஆற்றல் சேமிப்பு


  • விரயத்தை குறைக்கும்


  • மின்னணு கழிவுகளை நிர்வகித்தல்


  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழித்தல்


  • நிலையான உணவு முறைகளை ஊக்குவித்தல்


  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல்



— சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்திகளுக்கான விதிகள் (Eco-mark Rules): இது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle for Environment (LiFE)) என்ற கருத்தை ஆதரிக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும். குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும், வள-திறனுள்ள மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை ஆதரிக்கும் தயாரிப்புகளை ஊக்குவிப்பதை அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. தயாரிப்பு குறிப்புகள்(labels) துல்லியமாக இருப்பதையும் தவறான தகவல்களை வழங்காமல் இருப்பதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.


- காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change (NAPCC)) : இது அனைத்து காலநிலை முயற்சிகளுக்கும் விரிவான கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் சூரிய ஆற்றல், மேம்பட்ட ஆற்றல் திறன், நிலையான வாழ்விடங்கள், தண்ணீர், இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளைத் பாதுகாத்தல், பசுமை இந்தியா, நிலையான விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய முக்கியமான அறிவு ஆகியவற்றிற்கான சிறப்புப் பணிகளை கொண்டுள்ளது.



Original article:

Share: