தொழிலாளர் சட்டங்கள் பணியாளர்களையும் தொழில்துறையையும் மீட்டெடுக்க முடியும், ஆனால் இன்னும் இடைவெளிகள் உள்ளன. -சஞ்சயா மரிவாலா

 ஒரு கூட்டு, துறைவாரியான அணுகுமுறை தொழிலாளர் சட்டங்களை ஒரு முழுமையாக வளர்ந்த கட்டமைப்பாக உறுதி செய்கிறது.


இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள் 29 சட்டங்களை நான்கு கட்டமைப்புகளாக ஒருங்கிணைக்கின்றன, சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துகின்றன. மேலும், உற்பத்தி மற்றும் உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்க இணக்கத்தை எளிதாக்குகின்றன. டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தெளிவான விதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கின்றன. ஆனால், பெரிய இடைவெளிகள் இன்னும் நீடிக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்துப் பொருட்கள் (nutraceuticals) மற்றும் மேம்பட்ட உற்பத்தியில் – அங்கு சிக்கலான விநியோகச் சங்கிலிகள் மற்றும் துல்லியமான செயல்பாடுகள் இன்னும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.


இன்னும் கவனிக்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் இங்கே உள்ளன


துணை ஒப்பந்தம்: தொழிலாளர் குறியீடுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முதன்மை ஒப்பந்தக்காரர்கள்மீது கடுமையான கடமைகளை விதிக்கின்றன, ஆனால் மூலப்பொருள் கொள்முதல், மூன்றாம் தரப்பு பேக்கேஜிங் மற்றும் ஆதரவு செயல்முறைகளைக் கையாளும் வணிகங்களில் பொதுவான, பல அடுக்கு துணை ஒப்பந்தத்தை (multi-level subcontracting) தெளிவாகக் குறிப்பிடவில்லை. அரசாங்கம் ஒப்பந்தக்காரர் பதிவு மற்றும் உரிமங்களை வழங்கினாலும், ஒப்பந்தக்காரர் சங்கிலியில் உள்ள துணை நிலைகள் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தணிக்கைகளுக்கு (audits) பெரும்பாலும் வெளியே உள்ளன. இந்த “சங்கிலிக் கசிவு” (chain leakage) என்பது அரசாங்க சுற்றறிக்கைகள் அல்லது தொழில்துறை ஆய்வுகளால் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது.


உயர்திறன் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள்: இந்தச் சட்டங்கள் ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு மற்றும் நிரந்தர ஊழியர்களுடன் சமத்துவத்தில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், அறிவியல் துறைகளில் குறுகியகால கண்டுபிடிப்பு சுழற்சிகளின் தனித்துவமான தன்மையைக் கவனிக்கவில்லை. ஊட்டச்சத்து மருந்து (Nutraceutical) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பெரும்பாலும் 6 முதல் 9 மாத திட்டங்களை உள்ளடக்கியது, இதில் சிறப்பு வாய்ந்த நிபுணர்கள், புள்ளியியல் வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பு கலவை விஞ்ஞானிகள் ஈடுபடுவர். இந்தப் பணிகளுக்கு நிலையான வேலைவாய்ப்பு விதிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்துவது கூட்டுழைப்பைக் (collaboration) குறைக்கலாம் மற்றும் செயல்பாட்டு உணவுகள் மற்றும் ஆரோக்கிய ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றத்தை மெதுவாக்கலாம். ஒரு தனித்துவமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  இணக்கக் கட்டமைப்பு அவசரமாகத் தேவை என்கின்றனர்.


கடுமையான வேலைநேர விதிகள்: அரசாங்க வழிகாட்டுதல்கள் கட்டுப்படுத்தப்பட்ட கூடுதல் நேரத்துடன் (overtime) 8 மணிநேர நாள் மற்றும் 48 மணிநேர வாராந்திர வரம்பை வலியுறுத்துகின்றன. ஆனால், தூய்மை அறைகள், நொதித்தல் பிரிவுகள், தெளிப்பு உலர்த்தும் அலகுகள் மற்றும் சில கட்டுப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து உற்பத்தி செயல்முறைகளை திடீரென நிறுத்த முடியாது. இவை தொடர்ச்சியாக இயங்க வேண்டும், அடிக்கடி பணியாளர்களை மாற்ற முடியாது, மேலும் ஓய்வு இல்லாமல் சுழற்சி முறையில் நடக்க வேண்டியவை. புதிய சட்டங்கள் கட்டாயமாக கடுமையான பணிமாற்ற நேரத்தைக் கொண்டுவந்தால், உற்பத்தியின் துல்லியம் பாதிக்கப்படலாம் அல்லது மாசு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.


தரவுப் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு: தொழிலாளர் தரவுகளைப் பாதுகாக்க தேசிய அளவில் குறியீடு (encryption), அணுகல் கட்டுப்பாடு, தரவு சேமிப்புக் கால எல்லை, நோக்க வரம்பு போன்ற தெளிவான விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ தெளிவாக இல்லை என்கின்றனர். டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்ட இணக்கம் பற்றி பொதுவாகச் சொல்லப்பட்டிருந்தாலும், அரசு மற்றும் தொழில் ஆவணங்களில் ஊழியர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவு (உடல்நலம், பின்னணி சோதனை, செயல்திறன் கண்காணிப்பு போன்றவை) எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான நடைமுறைத் தரங்கள் இல்லை. இந்தக் குறைபாடு மிகவும் பெரிய பிரச்சினையாக உள்ளது.


சில தீர்வுகள்


* பிளாக்செயின் மூலம் துணை ஒப்பந்தக்காரர்களின் இணக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் தொழிலாளர் விநியோகச் சங்கிலியை முழுவதும் பார்க்க முடியும். இந்தியாவில் பொருட்களைக் கண்காணிக்க பிளாக்செயின் பயன்பட்டாலும், தொழிலாளர்களுக்காக இது இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவேடு,  ஊதியம், சான்றிதழ், பாதுகாப்பு அனுமதி போன்றவற்றை மாற்ற முடியாமல் பதிவு செய்து, எல்லா நிலைகளிலும் தெளிவான வெளிப்படைத்தன்மையைத் தரும் என்கின்றனர்.


* அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட "புதுமைத் திட்டம்" என்ற வேலைவாய்ப்பு வகையின் மூலம், ஊட்டச்சத்து மருந்து (Nutraceutical) மற்றும் மருந்து நிறுவனங்கள்  நிரந்தரப் பதவிகளை உருவாக்காமல், குறுகியகால விஞ்ஞான நிபுணர்களைப் பணியமர்த்தலாம். கடுமையான வெளிப்பாடு மற்றும் தணிக்கைகளுடன், இந்த வகை வேலைவாய்ப்பு, தெளிவான வெளியீடுகள் மற்றும் காலக்கெடுவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு  அல்லது தொழில்நுட்ப திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும்.


* உலகின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பணிச்சுழற்சி அபாய மதிப்பீட்டுக் கருவிகள், கடுமையான வேலை நேர வரம்புகளை நுண்ணுயிரி அற்ற அல்லது உயர் ஆபத்து உள்ள இடங்களின் தேவைகளுடன் சமன்படுத்த முடியும் என்கின்றனர். இந்தக் கருவிகள் தொழிலாளிகளின் சோர்வு, ஆபத்து வெளிப்பாடு மற்றும் தொடர்ச்சியான பணி தேவைகளை ஆராய்ந்து, சிறந்த இடைவேளைகளையும் தொழிலாளர் மாற்று அட்டவணையையும் பரிந்துரைக்கின்றன.


* தொழிலாளர் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரு உலகத் தரம் வாய்ந்த தரவுப்பாதுகாப்பு முறை மிகவும் அவசியமாகிறது. அதில் குறியீடாக்கப்பட்ட சேமிப்பு (encryption), தேவைக்கு மட்டுமே அனுமதி (purpose-limited access), தெளிவான சம்மதம் ஆகியவை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதை தேசிய தொழிலாளர் தரவுத்தளத்துடன் இணைப்பதன் மூலம், ஊழியர்களின் தனியுரிமையைக் காக்கும் அதே நேரம் செயல்திறனையும் பெருக்க முடியும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 


தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் முன்னோக்குச் சிந்தனை கொண்டது, ஆனால் அதற்கு நுணுக்கமும் நெகிழ்வுத்தன்மையும் தேவை. இவை இல்லாமல், சிக்கலான மேற்பார்வை அது வழங்க விரும்பும் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், தொழில்துறை ஆகியவை இணைந்து, துறைக்கேற்ற விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி செய்தால் மட்டுமே தொழிலாளர் சட்டங்களை நவீனமாக, நடைமுறைக்கு ஏற்றதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. 


எழுத்தாளர், ஆம்னிஆக்டிவ் ஹெல்த் டெக்னாலஜிஸின் (OmniActive Health Technologies) நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.


Original article : Labour Codes can revive workforce and industry, but gaps remain -Sanjaya Mariwala

Share:

விதை மசோதா உழவர்கள் கேட்டது இல்லை. -ராமஞ்சநேயுலு ஜி.வி.

 

இது 'விவசாயத்தை எளிதாக்குதல்' என்பதற்குப் பதிலாக 'தொழில் செய்வதை எளிதாக்குதல்' என்ற நோக்கில் வரைவு செய்யப்பட்ட ஒரு ஆவணம்போல வாசிக்கப்படுகிறது.


இந்தியா விதைகளை நிர்வகிக்கும் முறையை அமைதியாக மாற்றிக்கொண்டு வருகிறது. சமூக விதை வங்கிகளுக்கான புதிய விதிகள் மற்றும் தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் (Protection of Plant Varieties and Farmers’ Right (PPV&FR)) சட்டத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளுடன், விதை மசோதா (draft Seeds Bill), 2025-ன் வரைவு, பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் சேர்ந்து, வரும் ஆண்டுகளில் விதைகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படும், வர்த்தகம் செய்யப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் என்பதில் ஆழமானக் கட்டமைப்பு மாற்றத்தைக் குறிக்கின்றன. ஆனால், இந்த மாற்றங்களில் விதை மசோதா முக்கியப் பங்கு வகிக்கிறது. சட்டம் உண்மையில் யாருக்கு உதவுகிறது என்பது குறித்த கவலைக்குரிய கேள்விகளை இது எழுப்புகிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, விவசாயிகள், மாநில அரசுகள் மற்றும் சமூகக் குழுக்கள் விதை முறையை நியாயமானதாகவும், தெளிவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் ஒரு புதிய விதைச் சட்டத்தை எதிர்பார்த்து வருகின்றனர். முதல் வரைவு 2004-ல் வெளிவந்தது. மற்றொன்று 2019-ல் வெளிவந்தது. இரண்டும் போட்டித்தன்மை வாய்ந்த கோரிக்கைகளின் காரணமாக தோல்வியடைந்தன. விவசாயிகள் பாதுகாப்பைக் கேட்டனர், தொழில்துறை சுதந்திரத்தைக் கேட்டது மற்றும் மாநிலங்கள் ஒழுங்குமுறை அதிகாரங்களைக் கோரின - இதுவரை இது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.


முதல் பார்வையில், இந்த மசோதா பதிலளிக்கக்கூடியதாகத் தோன்றுகிறது: இந்த மசோதா பதிவுசெய்யப்பட்ட விதை வகைகளைக் கண்காணிக்க வேண்டும். தண்டனைகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், விலைகளைக் கட்டுப்படுத்துவதை ஆதரிக்க வேண்டும் - குறைந்தபட்சம் காகிதத்தில் இதை வெளியிட வேண்டும். ஆனால், இந்த மாற்றங்கள் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசின் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் பெரிய முடிவுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.


அங்கீகார அமைப்பு (Accreditation system)


மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் பிரிவு 17(8) மூலம் வருகிறது. இது ஒரு மத்திய அங்கீகார முறையை உருவாக்குகிறது. இந்த வழிமுறையின்கீழ், மையத்தால் அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனம் அனைத்து மாநிலங்களிலும் தானாகவே "பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது - அந்த நிறுவனம் அதன் எல்லைக்குள் செயல்பட வேண்டும் என்று மாநிலம் விரும்புகிறதோ இல்லையோ. மாநிலங்கள் உடனடியாக பதிவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தொழில்நுட்ப, நிதி அல்லது உள்கட்டமைப்பு அடிப்படையில் விண்ணப்பங்களை நிராகரிப்பதில் இருந்து வெளிப்படையாகத் தடை செய்யப்பட வேண்டும். இது கூட்டுறவு கூட்டாட்சி முறை அல்ல; இது மாநில அதிகாரத்தை (cooperative federalism;) அழிக்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடும். மகாராஷ்டிராவில் பருத்தி முதல் தெலுங்கானாவில் மிளகாய் வரை விதை தோல்விகள் உள்ளூர் விளைவுகளை கடுமையாக ஏற்படுத்தியுள்ள நேரத்தில், தங்கள் விதைச் சந்தைகளில் யார் நுழைகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களின் திறனை நீக்குவது ஜனநாயக விரோதமானது.


விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கேட்டு வந்த இழப்பீட்டையும் இந்த மசோதா புறக்கணிக்கிறது. மோசமான அல்லது போலி விதைகள் பயிரிழப்பை ஏற்படுத்தினால், அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், அந்தப் பணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அல்ல, மாநில கருவூலத்திற்குச் செல்கின்றன. இந்த வரைவு தானியங்கி, காலக்கெடு கொண்ட இழப்பீட்டு வழிமுறையையோ, விதை பொறுப்பு நிதியையோ, விவசாயிகள் யதார்த்தமாக அணுகக்கூடிய பொறுப்புணர்வு கொண்ட பாதையையோ வழங்கவில்லை. பலவருட நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் அரிதான இழப்பீட்டு உத்தரவுகளுக்குப் பிறகு - பெரும்பாலும் பொதுமக்களின் அழுத்தத்திற்குப் பிறகு தெளிவான ஆதரவு இல்லாதது ஒரு தவறான நடவடிக்கையாக உணரப்படுகிறது. விதை நிறுவனங்களுடன் முறைசாரா அல்லது எழுதப்படாத ஒப்பந்தங்களின்கீழ் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் இதே பிரச்சினை உள்ளது.


விலைக் கட்டுப்பாடு பற்றிய குறிப்பு வெறுமையாகத் தெரிகிறது. "அவசரகால சூழ்நிலைகளில்" மட்டுமே விதை விலையில் ஒன்றிய அரசு தலையிட இந்த மசோதா அனுமதிக்கிறது. ஆனால், விதை விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. மேலும், தனியார் கலப்பின விதைகள் பொதுவானவை. விவசாயிகளுக்கு அவ்வப்போது உதவி செய்வது மட்டுமல்லாமல், நிலையான பாதுகாப்பும் தேவைப்படுகிறது.


பின்னர் வெளிநாட்டு சோதனைகள் மற்றும் சான்றிதழ் பிரச்சினை உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான மதிப்பு (Value for Cultivation and Use (VCU)) சோதனைகளை நடத்தி விதைகளை சான்றளிக்க அனுமதிப்பதன் மூலம், இந்த மசோதா இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research (ICAR)) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியாவின் கடின உழைப்பால் வென்ற உள்ளூர் வேளாண்-காலநிலை சோதனை முறையை பலவீனப்படுத்துகிறது. விதைகள் நன்றாகவோ அல்லது மோசமாகவோ வளர்வது உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்தது. மண், வானிலை, பூச்சிகள் மற்றும் விவசாய முறைகள் வேறுபட்ட நாடுகளில் அவை எவ்வாறு வளர்கின்றன என்பதன் அடிப்படையில் அல்ல. வெளிநாட்டு தரவுகளை இந்திய சந்தைகளுக்குள் ஒரு சட்டப்பூர்வ நுழைவாயிலாக வழங்குவது ஆபத்தானது. இந்தியாவின் முறைசாரா விதை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறிய விதை உற்பத்தியாளர்களின் நிலை என்ன? மசோதாவின் விரிவாக்கப்பட்ட பதிவு, கண்டறியும் தன்மை மற்றும் இணக்க நடைமுறைகள் - உள்ளூர் விதை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள் குழுக்கள் என பல சிறிய நிறுவனங்கள் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றன. பெரிய நிறுவனங்கள் முழு நாட்டின் சந்தையிலும் நுழைவதற்கு எளிதான வழியைப் பெறுகின்றன. அதே, நேரத்தில் உள்ளூர் விதை முறைகள் வெளியே தள்ளப்பட்டு அதன் முக்கியத்துவம் கணிசமாக குறைந்துவிட்டன.


விதைகள் மசோதா, 2025, விவசாயிகள் விதை சந்தையை நம்பவும், நியாயமற்ற நடைமுறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும், இந்தியாவின் விதை முறையை வலுப்படுத்தவும் உதவியிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு விவசாயத்தை எளிதாக்குவதை (ease of farming) விட நிறுவனங்களுக்கு வணிகத்தை எளிதாக்க (ease of doing business) வரைவு செய்யப்பட்ட ஆவணம் போல வாசிக்கப்படுகிறது.


இந்தியாவின் விதை எதிர்காலம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு உண்மையிலேயே உதவ இந்தச் சட்டம் மாற்றப்பட வேண்டும். ஒன்றிய அரசு அல்லது பெரிய நிறுவனங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதற்குப் பதிலாக, விவசாயிகளின் உண்மையான தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். இந்திய விவசாயத்தின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மைகளை (ecological diversity) ஆதரிக்க வேண்டும்.


எழுத்தாளர் நிலையான வேளாண்மைக்கான மையத்தில் பணிபுரிகிறார்.


Original article : Seeds Bill isn’t what the farmer ordered. -Ramanjaneyulu GV

Share:

அரசு தனது பங்கை மீண்டும் பெற்று, டிஜிட்டல் சந்தைகளை வடிவமைக்க வேண்டும். -பாயல் மாலிக், நிகிதா ஜெயின்

 இந்தப் பொது உள்கட்டமைப்பு நெறிமுறை, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI) பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் (zero-cost rail for users) என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையில் காணலாம். இது டிஜிட்டல் உள்கட்டமைப்பை திறந்ததாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருப்பதற்கான அரசின்  உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


பெரும்பாலான இந்தியர்கள் பெரிய டிஜிட்டல் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும் டிஜிட்டல் சந்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளில் தொழில்நுட்பம், தரவு, மென்பொருள் மற்றும் பயனர்களுக்கான சேவைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். அவை இயற்கையாக வளரவில்லை. ஆனால், சக்திவாய்ந்த நிறுவனங்களால் கவனமாக உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன. இந்த நிறுவனங்கள் இயக்க முறைமைகள், செயலி அங்காடிகள் மற்றும் தரவு ஓட்டங்கள் போன்ற அடிப்படை அடுக்குகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த நிறுவனங்கள் சந்தைகளில் பணமும் சலுகைகளும் எவ்வாறு ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறும் என்பதைத் தீர்மானிக்கின்றன.


இதுபோன்ற பல டிஜிட்டல் அமைப்புகள் இருப்பது போட்டியைக் குறிக்கலாம். ஆனால், அது ஒரு தோற்றம் மட்டுமே. இந்த நிறுவனங்கள் மற்றவற்றைத் தடுக்க இதே போன்ற உத்திகளைப் பயன்படுத்துகின்றன. முக்கிய சேவைகளை தொடர்புடைய சேவைகளுடன் இணைப்பது, முக்கியமான தரவைக் கட்டுப்படுத்துவது மற்றும் பயனர்கள் தளங்களுக்கு இடையில் மாறுவதை கடினமாக்குவது போன்ற பணிகளை செய்கினறன. இதன் காரணமாக, சந்தைகள் நியாயமானவையாகவோ அல்லது போட்டிக்கு திறந்தவையாகவோ இல்லை. டிஜிட்டல் சந்தைகள் போட்டியிலிருந்து கட்டுப்பாட்டுக்கு மாறும்போது, ​​ஒரு கேள்வி எழுகிறது: அரசு இந்த சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக நிறுவனக் கட்டமைப்பு மூலம் மறுவடிவமைப்பு செய்ய முடியுமா?


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) மீதான இந்தியாவின் அணுகுமுறை, அனைவரும் பயன்படுத்த அடிப்படை டிஜிட்டல் அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான திட்டமாகும். இந்த அடிப்படை அமைப்புகள், பல்வேறு சேவை வழங்குநர்கள் தனியார் நிறுவனங்களை நம்பியிருக்காமல் புதிய சேவைகளை வழங்க அனுமதிக்கின்றன. இந்தப் பொது உள்கட்டமைப்பு நெறிமுறை, பயனர்களுக்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கும் (zero-cost rail for users) என்ற RBI-யின் சமீபத்திய மறு உறுதிமொழியில் தெளிவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் திறந்ததாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) சந்தையை வடிவமைக்க உதவுகிறது. இந்தியா ஸ்டேக்குடனான இந்தியாவின் அனுபவம், அரசாங்கம் இந்த அமைப்புகளை முன்கூட்டியே பயன்படுத்துவதன் மூலமும், இந்திய தேசிய கட்டணக் கழகம் (National Payments Corporation of India (NPCI)) போன்ற முக்கியமான நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலமும், வடிவமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் எவ்வாறு வழிநடத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. டிஜிட்டல் சந்தைகள் எந்த நிலைமைகளின்கீழ் உருவாகின்றன என்பதைத் தீர்மானிக்கும் ஒரு கட்டமைப்பாளராக அரசின் பங்கை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மறுவடிவமைக்கிறது.


இருப்பினும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும். அவை பயனுள்ள வடிவமைப்பு மற்றும் சரிபார்ப்புகள் மற்றும் சமநிலைகள் மூலம் முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டும். சேவைகள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன, வழங்கப்படுகின்றன அல்லது தரவு எவ்வாறு கையாளப்படுகிறது போன்ற முக்கியப் பகுதிகளை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் பெரிய நிறுவனங்கள் மீண்டும் கட்டுப்படுத்தக்கூடும். இதனால் மற்றவர்கள் போட்டியிடுவது கடினமாகிவிடும். கட்டுப்பாடு வலைத்தளங்களிலிருந்து விநியோகம் அல்லது பணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு மாறக்கூடும். பல DPI அமைப்புகள் பொது-தனியார் கூட்டாண்மைகள் (Public-Private Partnership (PPP)) மூலம் கட்டமைக்கப்படுகின்றன. அங்கு தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் முக்கியமான தொழில்நுட்ப விதிகளை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வோடு இல்லை. சிக்கல்களைத் தடுக்க, நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை, தரவின் வரையறுக்கப்பட்ட பயன்பாடு மற்றும் முடிவெடுப்பதில் வெவ்வேறு குழுக்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்கான தெளிவான விதிகள் இருக்க வேண்டும்.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் (DPI) "பொது" என்பது அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், அரசாங்கத்தால் மட்டும் வழங்கப்படாமல் தெளிவான விதிகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பதாகும். உள்கட்டமைப்பு பொதுவாக இருந்தாலும், தரவு பெரும்பாலும் ஒரு சில தனியார் கிளவுட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது கட்டுப்பாடு, அணுகல் மற்றும் இந்த நிறுவனங்களைச் சார்ந்திருத்தல் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. ஆய்வுகள் இதை 'ஒரு சேவையாக இறையாண்மை' என்று அழைக்கப்படுகிறன. இங்கு அரசாங்கங்கள் பொறுப்பில் இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் கட்டுப்படுத்தாத தனியார் மேகக் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. இதைச் சரிசெய்ய, மேகக் கணினி சேவைகளின் பொது உரிமை, அமைப்புகள் ஒன்றாகச் சிறப்பாகச் செயல்பட உதவும் விதிகள் மற்றும் இந்த அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதில் தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டப் பொறுப்புகள் போன்ற யோசனைகள் நமக்குத் தேவை.


தற்போதைய விதிகள் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை (partial protection) மட்டுமே வழங்குகின்றன. பொதுத் தரவு எவ்வாறு விற்கப்படுகிறது அல்லது தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் மோசமான கண்காணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகளை தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டிருக்கவில்லை. பொது-தனியார் கூட்டாண்மைகளில் பொறுப்பு வெவ்வேறு குழுக்களிடையே வழங்கப்பட்டிருப்பதால் அது ஒரு நிர்வாக வெற்றிடத்தை (governance vacuum) உருவாக்குகிறது. தனியார் நிறுவனங்கள் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அனுபவம், அரசு டிஜிட்டல் சந்தைகளின் கட்டமைப்பை தீவிரமாக வடிவமைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இது வடிவமைப்பு மூலம் திறந்த தன்மை, உள்ளடக்கம் மற்றும் போட்டித்தன்மையை உருவாக்க முடியும். இந்த நிறுவன அணுகுமுறை இன்றைய வேரூன்றிய ஏகபோகங்களை எதிர்ப்பது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு போன்ற நாளைய தொழில்நுட்பங்களை நிர்வகிப்பதற்கான அடித்தளங்களையும் உருவாக்குகிறது.


பகிரப்பட்ட வளங்களின் வழிகாட்டியாகவும் பராமரிப்பாளராகவும் பொறுப்பேற்பதன் மூலம், பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் செழித்து வளரும் சூழலை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். இருந்தபோதிலும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்பார்வைக்கான தேவையைக் குறைக்காது.


எழுத்தாளர்கள் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில்  (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) Prosus மையத்தில் உள்ளனர்.


 Original article : State should reclaim its role, shape digital markets. -Payal Malik, Nikita Jain

Share:

கோவா இரவு கேளிக்கை விடுதி தீ விபத்து, தீ பாதுகாப்பு பற்றிய கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. -குஷ்பூ குமாரி

 கோவா இரவு விடுதி தீ விபத்து: தீ விபத்து தொடர்பாக ஆர்வலர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தீ பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், குறியீடுகள் மற்றும் சட்டங்கள் யாவை?


தற்போதைய செய்தி : 


வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தொழில்நுட்ப மதிப்பாய்வில், அவசரகால குழு விரைவாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும், "அடிப்படை தீ பாதுகாப்பு உள்கட்டமைப்பு இல்லாதது மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆபத்தான வெளிப்புற நடவடிக்கைகள் சம்பவத்தின் தீவிரத்திற்கும் உயிர் இழப்புக்கும் முக்கியக் காரணியாக இருந்தன.


தீயணைப்புத் துறையால் தொகுக்கப்பட்ட தொழில்நுட்ப தீ பாதுகாப்பு சம்பவ அறிக்கை, தீயணைப்புத் துறையின் பதிவுகளின்படி, அந்த உணவகம் தீயணைப்புத் துறையிடமிருந்து செல்லுபடியாகும் தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate (NOC)) பெறவில்லை என்று கண்டறிந்துள்ளது. இந்த உணவகத்தில் தேவையான தீ பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உயரமான கட்டிடமும் பொது கட்டிடமும் தீ பாதுகாப்புக்கான ஒப்புதலை கண்டிப்பாக பெற வேண்டும். இந்திய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code) கட்டிடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தீ பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த விதிகள் பரிந்துரைகள் மட்டுமே, கட்டாயமல்ல. தடையில்லாச் சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்புதல்கள் மாநில அரசு அல்லது உள்ளூர் குடிமை அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன.


2. கோவாவின் தீ பாதுகாப்பு சட்டங்கள் முதன்மையாக கோவா, டாமன் மற்றும் டையூ தீயணைப்பு படை சட்டம், 1986-ல் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின்படி, அதிக ஆபத்துள்ள கட்டிடங்களுக்கு கட்டாய தீ அனுமதி தேவை, எச்சரிக்கை கருவிகள், தீ அணைப்பான்கள் மற்றும் தெளிவான வெளியேறும் வழிகள் ஆகியவை அடங்கும். உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க முடியும். கோவா தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இந்த விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை சரிபார்க்கின்றன. அவசரகாலத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்ற தீயணைப்பு பாதுகாப்பு விதிகள் திறந்தவெளிகளும் கட்டாயமாக தேவைப்படுகின்றன.


3. தீயணைப்பு சேவை என்பது இந்திய அரசியலமைப்பின் XII அட்டவணையில் பிரிவு 243(W)-ன்கீழ் நகராட்சி செயல்பாடாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு மாநிலப் பட்டியலில் இருப்பதால், அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலத்திடமே உள்ளது. இருப்பினும், இந்தியா முழுவதும் தீயணைப்பு சேவைகளை மாதிரி தீயணைப்பு மற்றும் அவசர சேவை மசோதா (Model Fire service Bill), இந்திய அரசு 1958-ல் ஒரு நிலையான தீயணைப்பு சேவை மசோதாவையும் 2019-ல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் பகிர்ந்து கொண்டது. மசோதாக்களை ஏற்றுக்கொள்வதற்காக சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது


3. தீ பாதுகாப்பு, பசுமை கட்டிடம், பாதுகாப்பு மற்றும் நடைமுறை விதிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட திட்டமிடல் மற்றும் செயல்திறன் விதிமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள் அல்லது முன்வடிவுகளை வழங்குவதற்காக, மாதிரி கட்டிட துணைச் சட்டங்கள்  (Model Building Bye-Laws, 2016) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.


4. கடந்தமாதம், அசாம் அமைச்சரவை, மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியான தீ பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதற்காக, அசாம் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மசோதா (Assam Fire and Emergency Services Bill), 2025-ஐ அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது. 2022ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச அரசு உத்தரப் பிரதேச தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் சட்டம் (Uttar Pradesh Fire and Emergency Services Act), 2022-ஐ அமல்படுத்தியது.


5. 2025ஆம் ஆண்டு மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், 15வது நிதிக் குழு மாநில அளவில் தீயணைப்பு சேவைகளை வலுப்படுத்த ரூ.5000 கோடி ஒதுக்க பரிந்துரைத்ததால், அரசாங்கம் 2023ஆம் ஆண்டில் "மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை" தொடங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவித்தது.


6. “தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல்" என்ற 2021-2026ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான நிதியும் அடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் சிறந்த தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு அமைப்புகளை உருவாக்க உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (National Disaster Response Fund (NDRF)) ரூ. 5,000 கோடியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.


மாதிரி தீ பாதுகாப்பு மசோதா (Model Fire Safety Bill) 2019 என்றால் என்ன?


1. 2019ஆம் ஆண்டு மாதிரி தீ பாதுகாப்பு மசோதா, மாநிலங்கள் முழுவதும் தீ பாதுகாப்புக்கான ஒரே மாதிரியான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இந்த மசோதா மாநிலம் முழுவதும் ஒரே ஒரு தீயணைப்பு மற்றும் அவசர சேவை இருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு மற்றும் அவசர சேவையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் துணைப் பதவிகளில் இருப்பவர்கள் தீயணைப்பு மற்றும் அவசர சேவையின் எந்தவொரு கிளையிலும் பணியமர்த்தப்படுவதற்கு பொறுப்பாவார்கள் என்றும் கூறுகிறது.


2. இந்த மசோதாவின்படி, தீ விபத்து காரணமாக மட்டுமே ஏற்படாத எந்தவொரு பேரழிவையும் நிர்வகிப்பதில் உதவுவதற்காக அனைத்து தீயணைப்பு சேவைகளும் அவசர சேவைகளாகக் கருதப்படும். இந்த மசோதா, பல ஆபத்து மீட்புப் பிரிவாக தீயணைப்பு சேவையின் (Multi-Hazard Response Unit) பங்கைக் குறிப்பிடுகிறது.


3. இந்திய தேசிய கட்டிடக் குறியீடுகளைப் பின்பற்றி, கட்டிட உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதும் பராமரிப்பதும் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளரின் பொறுப்பு என்று மசோதா கூறுகிறது.


4. பல மாடி மற்றும் சிறப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் தீ ஏற்படுவதைத் தடுக்க அல்லது அணைக்க தானியங்கி தெளிப்பான் அமைப்புகள் (automatic sprinkler systems), தீயணைப்பு எச்சரிக்கைகள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை பொருத்துவது கட்டாயம் என்று மசோதாவில் ஒரு விதி உள்ளது. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் அல்லது கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய ஒரு தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.


உபார் சினிமா தீ விபத்து


1. 1997ஆம் ஆண்டு தேசிய தலைநகரில் நடந்த உப்ஹார் சினிமா தீ விபத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த ஆர்வலர் நீலம் கிருஷ்ணமூர்த்தி, கோவா சம்பவத்தை “முன்பு கண்டதை போன்ற உணர்வு” ஏற்பட்டதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள் இரவு விடுதி தரையில் மக்கள் நடனமாடும்போது துப்பாக்கிகள் போன்ற எரியக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


2. இந்த ஆண்டு ஜூன் 13, 1997 அன்று நடந்த உபார் சினிமா தீ விபத்துக்கு 28வது ஆண்டு நினைவு நாளாக இருந்தது. இந்த தீ விபத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 59 பேர் இறந்தனர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


3. உபார் தீ விபத்து தொடர்பான விசாரணையில், முறையான பொது அறிவிப்பு அமைப்பு இல்லாதது, வெளியேறும் வழிகளைத் தடுத்தது மற்றும் மின்மாற்றிகளைப் பராமரிக்காதது உள்ளிட்ட ஏராளமான ஊழல்கள் மற்றும் தீ விதி மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. விதிமுறைகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், உபார் திரையரங்க உரிமையாளர் சுஷில் அன்சாலும் அவரது சகோதரர் கோபால் அன்சாலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான மக்களை அரங்கிற்குள் அனுமதித்தாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.


4. துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அன்சால் சகோதரர்களை குற்றவியல் விதிகளை பின்பற்றதற்காக குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து. அதிகபட்சமாக அவர்களுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஒரு வருடம் கழித்து, டெல்லி உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. ஆனால்,  தண்டனையை ஒரு வருடமாகக் குறைத்தது.


5. உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஏறக்குறைய பத்தாண்டு காலம் நீடித்தது. 2017ஆம் ஆண்டில், இரண்டு சகோதரர்களும் தலா ரூ.30 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த சுஷில் அன்சலுக்கு 77 வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டார். அவரது சகோதரர் கோபாலுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


Original article : Goa nightclub blaze renews spotlight on fire safety. -Khushboo Kumari

Share:

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய குறிப்புகள்:


— உலகின் அதிக மாசுபாடு அடைந்த நகரங்களில் ஒன்றாக இருந்த பெய்ஜிங், இப்போது மிகவும் சுத்தமான காற்றைக் கொண்ட நகரமாக மாறியதற்கு வலுவான கொள்கைகளும் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுமே காரணமாகும்.


— 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, பெய்ஜிங் அரசாங்கம் அவசர மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. வாராந்திர காற்றின் தர அறிக்கைகளை வெளியிட்டது, மேலும் மாசுபாட்டின் மூலங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க அமைப்புகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.


— முக்கியமாக, ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னரும் கூட சீனா இந்த சுற்றுச்சூழல் மாசு தடுப்பு முயற்சிகளைத் தொடர்ந்தது. செப்டம்பர் 2013-ஆம் ஆண்டில், பெய்ஜிங் ஒரு ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதில் நகரின் காற்று மாசுபாடு "தீவிரமானதாக" ஆகிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டது — இதுவே தொடர் நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய முதல் படியாகக் கருதப்படுகிறது. 


— தேசியத் திட்டம் தெளிவான இலக்குகளை, கடுமையான கார்பன் உமிழ்வுத் தரநிலைகள், மற்றும் வலுவான அமலாக்கத்தை நிர்ணயித்தது, இதில் போக்குவரத்துத் துறையில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தப்பட்டது.


— பெய்ஜிங் நகரம், குறிப்பாகப் பொதுப் போக்குவரத்தில், மின்சார வாகனங்களுக்கான சீனாவின் மாற்றத்திற்கு வழிகாட்டியது. மற்ற நகரங்களும் அதைப் பின்பற்றத் தூண்டியது. 2017-ஆம் ஆண்டில், ஷென்சென் நகரம் தனது 16,000 பொதுப்போக்குவரத்துப் பேருந்துகள் அனைத்தையும் மின்மயமாக்கிய உலகின் முதல் நகரமாக ஆனது. ஷாங்காய் மற்றும் ஹாங்க்சோ நகரங்கள் இந்த நடவடிக்கையைப் பின்பற்றின.


— பெய்ஜிங்கில், புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார் வாங்க விரும்புவோர் உரிமத்திற்காக நகர அளவில் நடக்கும் குலுக்கல் முறையில் பங்கேற்க வேண்டியிருந்தது. அதேசமயம், மின்சாரக் கார் வாங்குபவர்கள் இலகுவாக உரிமத் தகடுகளைப் பெற முடிந்தது, இது அவர்களுக்கு ஓர் ஊக்கத்தை அளித்தது. மேலும், இந்தத் திட்டம் பழைய கார்களைப் பயன்படுத்தாமல் அப்புறப்படுத்தவும், பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு ஆய்வுகளை அதிகரிக்கவும் கட்டாயப்படுத்தியது.


— போக்குவரத்து கட்டுப்பாடுகளை முதன்மையாகக் கொண்ட, சீனாவின் திட்டமானது மேலும் நிலக்கரி மூலம் இயங்கும் கொதிகலன்களையும், தெளிவான ஊக்கத்தொகைகள் மற்றும் அபராதங்களுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட தொழில்துறைகளையும் குறிவைத்து, கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க திட்டமிட்டது. மேலும், இது பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளை மேம்படுத்துவதன் மூலமும், நகரத்தில் பசுமையான இடங்களை அதிகரிப்பதன் மூலமும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


— காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது அதிக செலவை ஏற்படுத்தியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஐக்கியநாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி (United Nations Environment Programme), பெய்ஜிங்கின் செலவு 2013-ஆம் ஆண்டில் வெறும் 450 மில்லியன் டாலரிலிருந்து 2017-ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


— மின்சாரம் மற்றும் தொழில்துறைக்காக நிலக்கரியை நம்பியிருப்பதைச் சீனா குறைத்துள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டையும் அதிகரித்துள்ளது, என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் லீ குறிப்பிட்டுள்ளார். பல தொழில்களுக்கான மாசுபாடு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், கனரகத் தொழில்கள் பொதுவாக தலைநகருக்கு வெளியே இயங்க ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். 


— இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. டெல்லியில் காற்றுமாசு மோசமடைந்து வரும் நிலையிலும், 300 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பல அனல் மின் நிலையங்கள், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) வெளியேற்றத்தைக் குறைக்க அத்தியாவசியமான, 'ஃப்ளூ வாயு கந்தகநீக்கம் (flue gas desulphurisation (FGD))' கருவிகள் இல்லாமல் இன்னும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.


— சல்ஃபர் டை ஆக்சைடு (Sulphur dioxide) மற்ற காற்றுச் சேர்மங்களுடன் (air compounds) இணைந்து, மிகநுண் துகள்கள் (Particulate Matter 2.5 (PM 2.5)) எனப்படும் மிகச்சிறிய துகள்களை உருவாக்குகிறது. இந்தத் துகள்கள் 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவாக இருப்பதால், வெறும் கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை.


— அக்டோபர் மாதத்தில், பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில், தேசிய தலைநகர் பகுதியில் நீடித்திருக்கும் பனிப்புகை (smog) ஏற்படுவதற்கு வாகனப் புகையே ஒரு முக்கியக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதைத் துரிதப்படுத்தவும், மின்னேற்று நிலையங்களை விரிவாக்கவும், மற்றும் அமலாக்கத்தை வலுப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழானது கடந்த மாதம் செய்தி வெளியிட்டுள்ளது.


— காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள் இதுவரை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. 2013-ஆம் ஆண்டு நாட்டின் மாநில கூட்டமைப்பு வெளியிட்ட தேசிய காற்று மாசுபாட்டு செயல் திட்டம், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹெபே பகுதியில் உள்ள நகரங்களுக்கும், யாங்சே மற்றும் பேர்ல் நதிகளின் டெல்டாக்களுக்கும் PM 2.5 வரம்புகளை நிர்ணயித்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— உலகின் பெரும்பாலான மின்சார உற்பத்தியானது இன்னும் நிலக்கரியில் இருந்தே வருகிறது. இந்தியாவில், 70 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரி மூலமே தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் மிகக்குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் தனிநபர் மின்சாரப் பயன்பாடு குறைவாகவே உள்ளது எனக் கூறப்படுகிறது. 


— கால அட்டவணையின் குழு 16-ல் உள்ள உலோகம் அல்லாத சல்பர், அமில ஆக்சைடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக சல்பர்-டை-ஆக்சைடு (SO₂), இது முக்கியமாக நிலக்கரி எரி மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் ஒரு முக்கிய காற்று மாசுபடுத்தியாகும். சல்பர்-டை-ஆக்சைடானது (SO₂) அமிலப் புகைமூட்டம், அமில மழை மற்றும் இரண்டாம் நிலை ஏரோசோல்களை (secondary aerosols) ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. 


— அமெரிக்காவில், சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) என்பது தூய காற்றுச் சட்டத்தின்கீழ் (Clean Air Act) ஒரு அளவுகோல் மாசுபடுத்தியாக வரையறுக்கப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency (EPA)) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டமானது, 1981 (Air (Prevention and Control of Pollution) Act, 1981), குடியிருப்பு/தொழில்துறை பகுதிகளுக்கு ஆண்டு சராசரி சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) வரம்பை 50 µg/m³ ஆகவும், சூழலியல்ரீதியாக உணர்திறன் மண்டலங்களுக்கு 20 µg/m³ ஆகவும் நிர்ணயித்துள்ளது. இரண்டு பகுதிகளுக்கும் 24-மணி நேர சராசரி வரம்பு 80 µg/m³ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


µg/m³ = Micrograms per cubic meter என்பது 1 கன மீட்டர் (1 m³) காற்றில் எத்தனை மைக்ரோகிராம் (µg) தூசி, புகை, PM2.5, PM10 போன்ற மாசுக்கள் இருக்கின்றன என்பதைக் காட்டும் அளவீடு ஆகும்.



— நிலக்கரியில் 0.5–6 சதவீதம் சல்பர் உள்ளது. இது கரிம (organic) சல்பர் (கார்பனுடன் பிணைக்கப்பட்டது) மற்றும் கனிம (inorganic) சல்பர்  முதன்மையாக இரும்புப் பைரைட்டுகளாக (FeS2) உள்ளது. கனிம (inorganic) சல்பரை பகுதியளவில் கழுவுதல் மற்றும் தூளாக்குதல் மூலம் அகற்றலாம். மற்ற முக்கிய SO2 ஆதாரங்களில் பெட்ரோலிய சுத்திகரிப்பு, தாமிரத்தை உருக்குதல் மற்றும் சிமென்ட் உற்பத்தி ஆகியவை அடங்கும்.


Original article : What are the steps taken by the government to curb air pollution? -Khushboo Kumari

Share:

ஸ்ரீநகர் நகர்ப்புற மற்றும் சுற்றுலாத் தலமாக மாறிவரும் நிலையில், நகரின் கழிவு மேலாண்மைப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான ஒரு திட்டம் தேவை. -ஃபாஸ் லுல் ஹசீப்

 புதிய திட்டத்தின்கீழ், ஸ்ரீநகர் நகராட்சி நிறுவனம் அறிவியல் வழிமுறைகள் மூலம் ஏற்கனவே உள்ள மரபு கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் அகழ்வாராய்ச்சி, நிலைப்படுத்துதல், பதப்படுத்துதல், சுத்திகரிப்பு மற்றும் அப்புறப்படுத்துவார்கள்.


பல ஆண்டுகளாக ஸ்ரீநகர் நகரம் நிறைய மாறிவிட்டது. வாழ்க்கை வேகமாகிவிட்டது, மேலும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இது புதிய வீடுகள் மற்றும் காலனிகள் கட்டப்படுவதற்கு வழிவகுத்தது. சுற்றுலா மேம்பட்டுள்ளதால், புதிய ஹோட்டல்கள் உருவாகியுள்ளன, விருந்தினர் மாளிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மக்கள் தங்கள் குடியிருப்பு வீடுகளை தங்குமிடங்களாக மாற்றுகின்றனர். இளம் தொழில்முனைவோர் சிற்றுண்டியகம் (cafes) மற்றும் உணவகங்கள் மற்றும் உணவு வண்டிகளை அமைத்து வருகின்றனர். மேலும், நகரம் முழுவதும் சிறிய கடைகள் (kiosks) தோன்றத் தொடங்கியுள்ளன. 2012-ல் ஒரு நாளைக்கு 238 டன் கழிவுகளை (tonnes of waste per day (TPD)) உற்பத்தி செய்த நகரம் இப்போது ஒரு நாளைக்கு 525 டன் உற்பத்தி செய்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த அளவு ஒரு நாளைக்கு 800 டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரத்தில் அரிதாகவே அறிவியல் பூர்வமான கழிவுகளை அகற்றும் திட்டம் உள்ளது. மேலும் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள அச்சனில் உள்ள அதன் ஒற்றை குப்பைக் கிடங்கையே முக்கியமாக நம்பியுள்ளது.


1980-களில் அச்சன் எனும் பகுதி ஒரு குப்பைக் கிடங்காக அமைக்கப்பட்டது. கடந்த நாற்பதாண்டுகளாக நகரத்தின் முதன்மை குப்பைக் கிடங்காக செயல்பட்டு வருகிறது. ஸ்ரீநகர் நகராட்சியின் மதிப்பீடுகள் மற்றும் கணக்கெடுப்புகளின்படி, அச்சனில் கொட்டப்படும் மொத்த கழிவுகள் 11 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாகும். இதனால் அதன் அறிவியல் ரீதியான அகற்றல் மற்றும் மேலும் கழிவு மேலாண்மை குறித்து பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நகர தூய்மை இந்தியா திட்டம்-2.0-ன் (Swachh Bharat Mission Urban) கீழ் நிதியுதவியுடன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின்கீழ் உள்ள ஸ்ரீநகர் நகராட்சி, ஸ்ரீநகர் மக்களை இந்த துர்நாற்றம் வீசும் மற்றும் அறிவியல் பூர்வமற்ற கழிவு மேலாண்மையிலிருந்து விடுவிப்பதற்காக, தற்போதுள்ள மரபு கழிவுகளை சரிசெய்ய ஒரு வலுவான திட்டத்தை வகுத்துள்ளது.


இந்தத் திட்டத்தின்கீழ், நகராட்சி, அறிவியல் வழிமுறைகள் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், தற்போதுள்ள மரபு கழிவுகளை அகழ்வாராய்ச்சி, நிலைப்படுத்துதல், பதப்படுத்துதல், சுத்திகரிப்பு மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளும். மின்னணு எடைப் பாலத்தை (electronic weigh bridge) நிறுவுவதன் மூலம், கொட்டப்படும் இடம் நச்சுத்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளிலிருந்து மீட்கப்படுவதையும், ஸ்ரீநகர் குடியிருப்பாளர்களுக்கு ஒரு கண்கூடாக இருந்த குப்பை மலையை அகற்றுவதையும் உறுதிசெய்ய, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 30,000 மெட்ரிக் டன் கழிவுகளை "அறிவியல் ரீதியாக" 30 மாதங்களுக்கு சுத்திகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016-ன் (Solid Waste Management Rules) படி முழு கழிவுகளும் பதப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தள மேலாண்மை ஒப்பந்தக்காரர் (Site Management Contractor(SMC)) போதுமான எண்ணிக்கையிலான உருளைச் சல்லடைகள் (trommel), பொருட்களை எடுத்துச் செல்லும் நாடா இயந்திரங்கள் (conveyors), பிணைக்கும் இயந்திரங்கள், காந்தப் பிரிப்பான்கள் மற்றும் காற்று அடர்த்தி பிரிப்பான்களை நிறுவும். இந்த செயலாக்கம் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருள் (refuse-derived fuel(RDF)), மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், செறிவூட்டப்பட்ட மண் மற்றும் உரம் போன்ற பல துணைப் பொருட்களை உற்பத்தி செய்யும். கழிவுகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருள் (RDF) மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை முறையே சிமென்ட் தொழிற்சாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்பவர்களுடன் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்தப்படும். மேலும், உரிய செயலாக்கத்திற்குப் பிறகு மீட்கப்படும் கசிவு மற்றும் கன உலோகங்கள் இல்லாத நல்ல மண், உள்ளூர் மட்டத்தில் கட்டுமானம் மற்றும் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். மீட்கப்படும் எந்தவொரு மந்தக் கழிவுகளும் மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் அபாயகரமான கழிவுகளிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானது. மந்தக் கழிவுகளை அடிப்படையில் "மறுசுழற்சி செய்ய முடியாதது", "எரியாதது" மற்றும் "மக்கும் தன்மையற்றது" என்று வரையறுக்கலாம். இதற்காக, "சரிசெய்தல் செயல்முறை" எந்த வகையான மந்தக் கழிவுகளையும் விட்டுவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, SMC ஒரு "மந்தக் கழிவுகளை அகற்றும் பகுதியை" தயாரிக்க வழிவகுக்கும்.


பல ஆண்டுகளாக, உயிரி மருத்துவக் கழிவுகள் (biomedical waste) அச்சானில் (Achan) ஊடுருவி இருக்கலாம். மேலும், தற்போது குப்பைக் கிடங்கில் ஆக்கிரமித்துள்ள மிகப்பெரிய குப்பைக் குவியலின் ஒரு பகுதியாக இருக்கலாம். குப்பைக் கிடங்கை முழுமையாக மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக, இந்தச் செயல்பாட்டின் போது மீட்கப்படும் எந்தவொரு உயிரி மருத்துவக் கழிவுகளும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு, உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள்-2016-ன் (Bio-Medical Waste Management Rules) படி அகற்றப்படுவதை SMC உறுதி செய்யும். கண்டறியப்படும் அபாயகரமான கழிவுகள், ஏதேனும் இருந்தால், அபாயகரமான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள்-2016-ன் (Hazardous Waste (Management and Handling) Rules) படி தனித்தனியாக அகற்றப்பட வேண்டும்.


ஒவ்வொரு குப்பைக் கிடங்கும் "கசிவு" பிரச்சினையை எதிர்கொள்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board (CPCB)) படி, கசிவு என்பது இருண்ட, மணமான திரவமாக (dark, smelly liquid) வரையறுக்கிறது. இது திடக்கழிவுகளின் வழியாக கசிந்து அல்லது உருவாகிறது மற்றும் அதிலிருந்து கரைந்த அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது. கசிவைச் சேகரிக்க, சுத்திகரித்து, அப்புறப்படுத்த ஒரு "கசிவு குளம்" உருவாக்கப்படும். இதற்காக, கசியும் கசிவை குளத்திற்குள் கொண்டு செல்ல வாய்க்கால்கள் உருவாக்கப்படும். அதைத் தொடர்ந்து உயிரி கலாச்சாரங்கள் (bio cultures) தெளிக்கப்பட்டு, அமுக்கி விசைக் குழாய்களைப் பயன்படுத்தி காற்றோட்டம் செய்யப்படும். இருண்ட மற்றும் கொந்தளிப்பான கசிவில் இடைநிறுத்தப்பட்ட மாசுபடுத்தும் திடப்பொருட்களை ஜீரணிக்க சேர்க்கப்பட்ட நுண்ணுயிரிகளுக்கு காற்றோட்டம் உதவும். எந்தவொரு கழிவு சுத்திகரிப்பு செயல்முறையிலும் துர்நாற்றக் கட்டுப்பாடு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், இது துர்நாற்றத்தைக் குறைக்கவும் உதவும். கூடுதலாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை கிலோமீட்டர்களுக்கு பரவக்கூடிய துர்நாற்றத்திலிருந்து பாதுகாக்க உயிரி நொதிகள் மற்றும் மூலிகைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.


முழு செயல்முறையின் பொறுப்புணர்வு உறுதி செய்வதற்காக, மரபுவழிக் கழிவுகளின் அளவை மதிப்பிடுவதற்கும், கழிவுகளின் அளவு குறைப்பு முறையாகக் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு புதிய விளிம்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரு துணை விளிம்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இது அகற்றப்பட்ட கழிவுகளின் சரியான அளவைக் காண்பிக்கும் மற்றும் தற்போதைய கழிவுகளை மறுசீரமைப்புக்குப் பிறகு மீதமுள்ள கழிவுகளுடன் ஒப்பிட மாநகராட்சிக்கு உதவும். முழு செயல்முறையும் திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016 (Solid Waste Management Rules), ஒலி மாசு விதிகள்-2000 (Noise Pollution Rules), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) வழிகாட்டுதல்களின் வரம்பிற்குள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். SMC-ன் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் செயல்பாடுகள் பார்க்கப்படும். மேலும், ஒவ்வொரு நாளும் பதப்படுத்தப்படும் கழிவுகளின் அளவு குறித்து கடுமையான கண்காணிப்பைப் பராமரிக்க மின்னணு எடைப் பாலத்தில் இருந்து, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் (Integrated Command and Control Centre (ICCC)) தரவை பெறலாம்.


மரபுவழி கழிவுகள் மற்றும் புதிய கழிவுகளுக்கு இடையே ஒரு தனித்துவமாக பிரித்தெடுப்பதை உறுதி செய்வதற்காக, பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இது எந்த கலவையும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும், புதிய கழிவுகள் தினமும் வந்து கொண்டிருக்கும் போது மாநகராட்சி மரபுவழிக் கழிவுகளை சுத்திகரித்து செயலாக்க முடியும். புதிய கழிவுகள் பின்னர் மாநகராட்சி அமைக்கும் புதிய ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை ஆலையால் சுத்திகரிக்கப்படும். இருப்பினும், திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அது மற்றொரு முறை உள்ளடக்கப்படும்.


ஹசீப் ஸ்ரீநகர் நகராட்சி ஆணையர் மற்றும் ஸ்மார்ட் சிட்டி ஸ்ரீநகரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


Original article : As Srinagar becomes an urban and tourist hub, a scientific plan to deal with the city’s waste management problem -Faz Lul Haseeb

Share:

சீர்திருத்த வாக்குறுதிக்குப் பின்னால், இந்திய உயர்கல்வி ஆணைய (HECI) மசோதா உயர்கல்வியின் தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது. -காஞ்சன் மற்றும் நரேந்தர் தாக்கூர்

 தேசிய கல்விக் கொள்கை-2020 இன் (National Education Policy(NEP) கீழ் இந்திய உயர்கல்வி ஆணையத்தால் (HECI) வகுக்கப்பட்ட பாதை, உள்ளடக்கிய சிறப்பிற்கு வழிவகுக்கும் ஒன்றா அல்லது ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் உருவாக்கி அதிகப்படுத்தும் ஒரு அடுக்குப்படுத்தப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட அமைப்பை நோக்கிச் செல்லும் ஒன்றா என்பதுதான் கேள்வி. 


இந்திய உயர்கல்வி முறை பல பத்தாண்டுகளாக அதன் மிக முக்கியமான ஒழுங்குமுறை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் மூலக்கல்லான முன்மொழியப்பட்ட இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) மசோதா, விவாதத்திற்கும் சாத்தியமான ஒப்புதலுக்கும் தயாராக உள்ளது. செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை நோக்கிய நகர்வாக வடிவமைக்கப்பட்டாலும், மசோதாவின் கட்டமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அடிப்படையிலான தத்துவத்தை நெருக்கமாக ஆராய்வது, உலகின் மிகப்பெரிய கல்வி முறைகளில் ஒன்றில் தனியார்மயமாக்கலை விரைவுபடுத்துதல், மையப்படுத்தலை அதிகரித்தல் மற்றும் சமூக-பொருளாதார பிளவுகளை அதிகரிப்பது பற்றிய வலுவான கவலைகளை வெளிப்படுத்துகிறது.


பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All India Council of Technical Education (AICTE)) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (National Council for Teacher Education (NCTE)) போன்ற ஏற்கனவே உள்ள அமைப்புகளை நான்கு அடுக்கு அமைப்புடன் மாற்ற இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த கட்டமைப்பில் தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை கவுன்சில் (National Higher Education Regulatory Council (NHERC)), தேசிய அங்கீகார கவுன்சில் (National Accreditation Council (NAC)), உயர் கல்வி மானியக் கவுன்சில் (Higher Education Grants Council (HEGC)), மற்றும் பொதுக் கல்வி கவுன்சில் (General Education Council (GEC)) ஆகியவை அடங்கும். காகிதத்தில், இது நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைக்கு உறுதியளிக்கிறது. இருப்பினும், இது ஒரு சிக்கலான, வளங்கள் நிறைந்த அதிகாரத்துவத்தை உருவாக்குகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கல்விக்கான பொது நிதி குறைந்து வரும் நேரத்தில் இது வருகிறது. புதிய அமைப்பு தரமான மற்றும் அணுகக்கூடிய கல்வியை வழங்குவதற்கான முக்கிய இலக்கிலிருந்து பற்றாக்குறையான வளங்களை பறிக்கக்கூடும். இது தனியார் நிறுவனங்கள் நிரப்பத் தயாராக இருக்கும் ஒரு இடைவெளியை விட்டுச்செல்லக்கூடும்.


தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் வழிகாட்டும் நெறிமுறையான "இலகுவான ஆனால் இறுக்கமான" ஒழுங்குமுறை குறிப்பாக சர்ச்சைக்குரியது. இது இலவச தனியார் நுழைவு மற்றும் செயல்பாட்டு சுதந்திரங்களை அனுமதிக்கிறது. ஆனால் கல்வி தன்னாட்சி, குறைந்த பொது நிதி மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் செயல்முறைகளை கட்டுப்படுத்துவதில் "இறுக்கமாக" உள்ளது. இந்த முரண்பாடான அணுகுமுறை, சந்தை நிலைகளுக்கான கயிற்றைத் தளர்த்தும் அதே வேளையில், புதிய ஆணையத்திற்கு அதிகாரத்தை அளிக்கிறது. இந்த கொள்கை நிறுவனங்களுக்கான "சுய-ஆட்சி" (self-governance) மற்றும் "சுயாட்சி" (autonomy) ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இருப்பினும், "சுய-நிதியுதவி"க்கான ஒரு ஊக்குவிப்பதற்காகவே பெருகிய முறையில் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், சுயாட்சி என்பது கல்வி சுதந்திரத்தைப் பற்றி குறைவாகவும், சந்தை சுதந்திரத்தைப் பற்றி அதிகமாகவும் தோன்றுகிறது. சந்தைக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து தனியார் வருவாய் வழிகளைத் தேடும் சுதந்திரமாக இந்தக் கொள்கை செயல்படுகிறது.


இந்த சந்தை சார்ந்த தர்க்கம் கொள்கை முழுவதும் இயங்குகிறது. "கற்றல் விளைவு அணுகுமுறை"க்கான தேசிய கல்விக் கொள்கையின் (NEP) உந்துதல், அறிவு உருவாக்கத்தை வெறும் உற்பத்தி வெளியீடாகக் கருதுவதற்காக விமர்சிக்கப்படுகிறது. இந்த யோசனை தனியார் வணிகப் பொருளாதாரத்திலிருந்து வருகிறது. கல்வியை இந்த வழியில் நடத்துவது கற்றலின் தனிப்பட்ட, கூட்டு மற்றும் பெரும்பாலும் அருவமான தன்மையை புறக்கணிக்கிறது. கற்றல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முழு கல்வி சமூகத்தையும் உள்ளடக்கியது. இதேபோல், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (Vocational Education and Training (VET) படிப்புகளை பிரதான உயர்கல்வியில் தீவிரமாக ஒருங்கிணைப்பது இரண்டின் தரத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் உள்ளது. போதுமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், உயர்கல்வி நிறுவனங்கள் தரமற்ற தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (VET) வழங்கக்கூடும். அதேநேரத்தில், உயர்கல்வியின் கல்வி கடுமை அதன் அடிப்படை இலக்குகளுக்குப் பொருந்தாத படிப்புகளால் சமரசம் செய்யப்படலாம்.


ஒருவேளை மிக முக்கியமான மாற்றம், இந்தக் கொள்கையில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களை வெளிப்படையாக சமமாக நடத்துவதுதான். சமமான களமாக வடிவமைக்கப்பட்டாலும், இது நடைமுறையில் தனியார்மயமாக்கலை சட்டப்பூர்வமாக்குகிறது மற்றும் ஊக்குவிக்கிறது. கல்வியில் லாபத்தை மையமாகக் கொண்ட முதலீடு அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல் ஊக்குவிக்கப்படுவதையும் இது காட்டுகிறது. தவிர்க்க முடியாத விளைவு என்னவென்றால், கட்டண கட்டமைப்புகள் மீதான கட்டுப்பாட்டை சந்தை இயக்கவியலுக்கு விட்டுக்கொடுப்பது. கல்வியை அதிக விலைக்கு ஆளாக்குவது மற்றும் பலருக்கு எட்டாததாக மாற்றுவது. இது முன்மொழியப்பட்ட தரப்படுத்தப்பட்ட அங்கீகாரம் மற்றும் சுயாட்சி மாதிரியால் மேலும் அதிகரிக்கிறது. இது உயர் மதிப்பீடு பெற்ற (பெரும்பாலும் தனியார்) நிறுவனங்கள் அதீதக் கட்டணங்களை வசூலிக்கும் ஒரு அடுக்கு அமைப்பை உருவாக்கக்கூடும். இது கல்வித் தரத்தை செல்வம் தீர்மானிக்கும் ஒரு சுழற்சியை ஏற்படுத்தி, சமூக-பொருளாதார இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறது.


முன்மொழியப்பட்ட நிர்வாக அமைப்பு, தன்னாட்சி நிறுவனங்களுக்கான நிர்வாகக் குழு வாரியங்கள் (Boards of Governors (BoG)) மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது நிர்வாகத்தை தொழில்முறைமயமாக்கும் நோக்கில், நிர்வாகக் குழு வாரியங்களுக்கு (BoG) அவைகளி கல்விச் சான்றுகளைக் குறிப்பிடாமல் பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த வழிமுறை ஒப்பந்த ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதையும் ஊக்குவிக்கிறது. கல்வியை தனியார்மயமாக்குதல் மற்றும் ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவது என்பது கல்வி சீர்திருத்தம் அல்ல, மாறாக "அறிவு உற்பத்தி செலவை" குறைப்பதற்கான ஒரு சந்தை உத்தியாகும். இந்த அணுகுமுறை வேலை பாதுகாப்பு, கல்வி சுதந்திரம் மற்றும் கற்பித்தல் தரத்தை அச்சுறுத்துகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் (higher education institutions (HEI)) தற்போதுள்ள சமூக-பொருளாதார சமத்துவமின்மை, பின்தங்கிய சாதிகள் மற்றும் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கனவே பொது மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். இது மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) கட்டமைப்பால் இயக்கப்படும் தனியார் நிறுவனங்களின் அதிகரித்த முக்கியத்துவம், சமத்துவத்திற்கும், தரத்திற்கும் இடையில் ஒரு கடினமான பரிமாற்றத்தை உருவாக்குகிறது.


இந்திய உயர்கல்வி ஆணைய (HECI) மசோதா நாடாளுமன்ற ஆய்வுக்காக காத்திருக்கும் நிலையில், பங்குதாரர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கடுமையான விவாதத்தை வலியுறுத்துகின்றனர். சீர்திருத்தம் தேவையா என்பது கேள்வி அல்ல, இந்திய உயர்கல்வி முறைக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் உயர்தரம் தேவை. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் கீழ் இந்திய உயர்கல்வி ஆணையத்தால் (HECI) வகுக்கப்பட்ட பாதை, உள்ளடக்கிய சிறப்பிற்கு வழிவகுக்கும் ஒன்றா அல்லது ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் உருவாக்கி வலுப்படுத்தும் ஒரு அடுக்கு, வணிகமயமாக்கப்பட்ட அமைப்பை நோக்கிச் செல்லும் ஒன்றா என்பதுதான் கேள்வி. உள்ளடக்கிய அறிவு உற்பத்தியை அடைவது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு மிக முக்கியமானது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவது, உயர்கல்வி பொதுப் பொருளாக இருக்கிறதா அல்லது தனியார்மயமாக்கப்பட்ட பொருளாக மாறுகிறதா என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.


காஞ்சன் டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய கல்வி நிறுவனத்தில் கற்பிக்கிறார். தாக்கூர் டெல்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் கற்பிக்கிறார்.


Original article : Behind promise of reform, the HECI Bill promotes privatisation of higher education -Kanchan and Narender Thakur

Share:

79 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அரசியலமைப்பு சபை தனது முதல் கூட்டத்தை நடத்தியது. நடந்தது என்ன?

 இந்திய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது அரசியலமைப்பு சபை (Constituent Assembly) கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முடித்த ஒரு மகத்தான பணியாகும். சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946 அன்று மற்ற நாடுகளின் வாழ்த்துக்களுடன் மற்றும் தலைவரின் உரையுடன் நடைபெற்றது.


இந்திய அரசியலமைப்பு ஒரு சவாலான சூழலுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவு செயல்பாட்டில் ஈடுபட்ட மக்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருந்தது. விரைவில் சுதந்திரம் பெறவிருக்கும் ஒரு நாட்டின் பல்வேறு நிலைமைகள் மற்றும் நம்பிக்கைகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது.


பணியை மேலும் சிக்கலாக்கியது என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்மட்ட மக்கள் குழு (group of rather elite people) பல்வேறு மத, பிராந்திய மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட, பெரும்பாலும் படிப்பறிவில்லாத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தியது.


1946 அமைச்சரவை மிஷன் திட்டத்தால் (Cabinet Mission plan) வகுக்கப்பட்ட ஒரு திட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டப்பூர்வத்தன்மையைப் பெற்றனர். மொத்தத்தில், 292 உறுப்பினர்கள் மாகாண சட்டமன்றங்கள் (Provincial Legislative Assemblies) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர், 93 உறுப்பினர்கள் இந்திய சமஸ்தானங்களை (Indian Princely States) பிரதிநிதித்துவப்படுத்தினர், மேலும் நான்கு உறுப்பினர்கள் தலைமை ஆணையர்களின் மாகாணங்களை (Chief Commissioners’ Provinces) பிரதிநிதித்துவப்படுத்தினர்.


இருப்பினும், ஜூன் 1947-ம் காலகட்டத்தில், மவுண்ட்பேட்டன் திட்டம் (Mountbatten Plan) பாகிஸ்தானுக்கு ஒரு தனி அரசியலமைப்பு சபையை உருவாக்க வழிவகுத்தது. மேலும், இந்திய அரசியலமைப்பு சபைக்கான இறுதி எண்ணிக்கை 299 ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர், இந்திய அரசியலமைப்பை உருவாக்க அவர்களுக்கு 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆனது. டிசம்பர் 9, 1946 அன்று சட்டமன்றம் முதன்முதலில் கூடியபோது நடந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கீழே குறிப்பிட்டுள்ளன,


அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்துக்கள்


உறுப்பினர்கள் புதுதில்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் சம்விதான் சதன் (Samvidhan Sadan) என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு சபைக்கு வந்தனர். நாடாளுமன்றத்தின் வலைத்தளம் குறிப்பிடுகையில், “இந்த நிகழ்விற்காக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த சபை, அன்று உயரமான கூரைகளிலிருந்தும் அதன் சுவர்களில் உள்ள அடைப்புக்குறிகளிலிருந்தும் பிரகாசமான விளக்குகளின் தொகுப்பால் புதிய தோற்றத்தைக் கொண்டிருந்தது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, குடியரசுத் தலைவர் மேடையை (Presidential dais) எதிர்கொள்ளும் ஒரு அரை வட்ட வரிசைகளில் அமர்ந்தனர்.”


பல முக்கியத் தலைவர்கள் முன் வரிசையில் அமர்ந்தனர். அவர்களில் ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், மௌலானா அபுல் கலாம் ஆசாத், சர்தார் வல்லபாய் படேல், ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் அடங்குவர். சபையின் தளத்திற்கு மேலே உள்ள காட்சியகங்களில் பத்திரிகை பிரதிநிதிகள் மற்றும் பிற பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்.


அரசியலமைப்பு சபையின் தொடக்க அமர்வு காலை 11 மணிக்கு சட்டமன்றத்தின் தற்காலிகத் தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை அறிமுகப்படுத்தி தொடங்கியது. அவர் பீகாரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினருமான அவர், கூட்டத்தில் மூத்த உறுப்பினராகவும் இருந்தார்.


மூன்று நாடுகளிலிருந்து வந்த வாழ்த்துச் செய்திகளைப் படித்து அவர் தொடங்கினார். "நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் மகத்தான பணியின் வெற்றிகரமான முடிவுக்கு... அமெரிக்க அரசாங்கம் தனது உண்மையான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தது" என்று செய்தி மேலும் கூறியது. "உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு இந்தியா பெரும் பங்களிப்பைச் செய்ய உள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை மதிக்கும் மக்கள் சட்டமன்றத்தின் பணிகளை மிகுந்த ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் பார்ப்பார்கள் என்றும் அது மேலும் கூறியது."


அடுத்து, சீனா (அப்போது அது தற்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சியால் வழிநடத்தப்படவில்லை) தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, "உங்கள் மாபெரும் சட்டமன்றம் ஒரு ஜனநாயக மற்றும் வளமான இந்தியாவிற்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் வெற்றி பெறும்" என்று மனதார நம்புவதாகக் கூறியது.


அவர்களுக்குரிய இடத்தை அளித்த நிகழ்வுகளை “ஆழ்ந்த ஆர்வத்துடனும் பரிவுடனும்” கவனித்து வந்ததாகக் கூறியது. ஆகவே, ஆஸ்திரேலிய அரசு, அரசியல் நிர்ணய சபையின் தொடக்கத்தை இந்தியாவுக்கு ஒரு புதிய யுகத்தின் வெளிப்புற அடையாளமாக வரவேற்று, அரசியல் நிர்ணய சபையின் பிரதிநிதிகளுக்கு அவர்களது பணியில் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தது.




தலைவரின் உரை, இக்பால் மற்றும் பைபிளிலிருந்து மேற்கோள்கள்


தனது தொடக்க உரையில், ஒரு அரசியலமைப்பு என்னவாக இருக்க வேண்டும், இந்தியா எவ்வாறு பிற நாடுகளிடமிருந்து உத்வேகத்தைப் பெறலாம் என்ற தலைப்பில் பல அரசியல் கோட்பாட்டாளர்கள், கவிஞர்கள் மற்றும் பிற எழுத்தாளர்களை சின்ஹா ​​மேற்கோள் காட்டினார்.


1936 டிசம்பரில் ஃபைஸ்பூரில் (Faizpur) இந்திய தேசிய காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தையும் அவர் குறிப்பிட்டார். அதில், "இந்தியாவில் உண்மையான ஜனநாயக அரசை காங்கிரஸ் ஆதரிப்பதாக அந்தத் தீர்மானம் கூறியது. அரசியல் அதிகாரம் மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றும், அரசாங்கம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது, நாட்டின் அரசியலமைப்பை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு அரசியலமைப்பு சபை மூலம் மட்டுமே அத்தகைய அரசை உருவாக்க முடியும்" என்று கூறியது.


தனது உரையின் முடிவில், சட்டமன்ற உறுப்பினர்களின் பணி வெற்றிபெற வாழ்த்தினார். மேலும் "உங்கள் நடவடிக்கைகள் நல்ல அறிவு, பொது உணர்வு மற்றும் உண்மையான தேசபக்தியால் மட்டுமல்ல, அனைவருக்கும் ஞானம், சகிப்புத்தன்மை, நீதி மற்றும் நியாயத்தாலும் குறிக்கப்பட வேண்டும் என்றும்; எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவை அதன் பழமையான மகிமைக்கு மீட்டெடுக்கவும், உலகின் பெரிய நாடுகளிடையே அதற்கு மரியாதை மற்றும் சமத்துவத்தை வழங்கவும் கூடிய ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டும் என்றும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பிரார்த்தித்தார்."


கவிஞர் இக்பாலின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டி, "யுனான்-ஓ-மிஸ்ர்-ஓ-ரோமா சப்மித் கயே ஜஹான் சே, பாகி அபி தலக் ஹை நம்-ஓ-நிஷான் ஹமாரா. குச் பத் ஹை கே ஹஸ்தி மித்-தி நஹின் ஹமாரி, சடியோன் ரஹா ஹை துஷ்மன் தௌர்-இ-ஜமான் ஹமாரா" சபையில் குறிப்பிட்டார்.


"கிரீஸ், எகிப்து மற்றும் ரோம் அனைத்தும் பூமியின் மேற்பரப்பில் இருந்து மறைந்துவிட்டன. ஆனால் இந்தியாவின் பெயரும் புகழும், நமது நாடு, காலத்தின் அழிவுகள் மற்றும் யுகங்களின் பேரழிவுகளிலிருந்து தப்பிப்பிழைத்துள்ளது. நிச்சயமாக, நிச்சயமாக, வானங்கள் பல நூற்றாண்டுகளாக நம்மை நோக்கி விரோதம் மற்றும் பகைமை உணர்வில் சுழன்று கொண்டிருந்த போதிலும், நம்மை அழிக்கும் அனைத்து முயற்சிகளையும் விரக்தியடையச் செய்த ஒரு நித்திய கூறு நம்மில் உள்ளது" என்று சின்ஹா ​​கூறினார்.

"ஒரு பரந்த மற்றும் திறந்த பார்வையுடன் தங்கள் வேலையை அணுகுமாறு அவர் சபையை வலியுறுத்தினார். தொலைநோக்கு இல்லாமல் மக்கள் தோல்வியடைவார்கள் என்ற பைபிளின் போதனையை அவர்களுக்கு நினைவூட்டினார்.'"


பின்னர் முறையான நடவடிக்கைகள் தொடங்கின. அங்கு கூடியிருந்த 207 உறுப்பினர்களும் தங்கள் சான்றுகளை அவரிடம் சமர்ப்பித்தனர். அவர்கள் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் தங்கள் பெயர்களிலும் கையெழுத்திட்டனர்


Original article : 79 years ago today, the Constituent Assembly held its first meeting. Here’s what happened

Share:

இந்தியாவில் ஓய்வூதிய சீர்திருத்தங்களின் பரிணாம வளர்ச்சி -ஸ்ரேயா பட்டாச்சார்யா, அக்ஷயா ரங்கநாத்

 நலத்திட்ட அடிப்படையிலான உதவியிலிருந்து, மக்கள் பங்கேற்பு மிக்க கட்டமைப்பை நோக்கி படிப்படியாகவும் உறுதியாகவும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

இந்தியாவில் அதிகரித்துவரும் வயதான மக்கள்தொகை ஒரு பெரிய ஓய்வூதிய சவாலாக மாறியுள்ளது. இன்று, 153 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மேலும் இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் 347 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வயதான இந்தியர்கள் முறையான ஓய்வூதிய அமைப்புகளால் பயனடைந்தாலும், 88 சாதவீதத்துக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இன்னமும் பெரிய முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு ஓய்வூதியங்கள் அல்லது நம்பகமான சமூக பாதுகாப்பு இல்லை (விளக்கப்படம் 1). இந்தக் கட்டுரை, முறைசாரா துறையில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த ஓய்வூதிய திட்டங்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை ஆராய்கிறது.


இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOAPS)), 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. பிந்தைய சீர்திருத்தங்கள் தகுதியை விரிவுபடுத்தி ஆதரவை அதிகரித்தன. இது அதிக எண்ணிக்கையிலானோர் திட்டத்தில் சேர வழிவகுத்தது. முறைசாரா மற்றும் பொருளாதாரரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் உள்ள வயதானவர்களுக்கு ஒரு வழக்கமான வருமானத்தை வழங்கிய முதல் பெரிய தேசிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், அமைப்புசார்ந்த துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (Old Pension Scheme (OPS)) கொண்டு வரப்பட்டனர்.


ஆராய்ச்சியின்படி, நலத்திட்டங்களைப் போலல்லாமல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்கள் (contributory pension schemes) வளரும் நாடுகளில் முறையான சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க உதவுகின்றன. 2015-16-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana - APY), 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஓய்வூதியக் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தும் ஒரு பங்களிப்புத் திட்டமாகும். ஓய்வுபெறும்போது, அவர்கள் திரட்டப்பட்ட தொகையை வட்டியுடன் பெறுவார்கள்; வருமானம் (returns) குறைவாக இருந்தால், அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. முறைசாரா துறையில், குறிப்பாக விவசாயத்தில், அவ்வப்போது வருமானம் வரும் முறையைக் கருத்தில் கொண்டு, அடல் ஓய்வூதியத்  திட்டத்தில் மாதந்தோறும் பங்களிப்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை – மாதாந்திரம், காலாண்டு அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை என்று விருப்பப்படி பங்களிப்பு செலுத்தலாம் என்கிற முறை பின்பற்றப்படுகிறது. 


முறைப்படுத்தப்பட்ட துறைக்கு, பங்களிப்புத் திட்டமான புதிய ஓய்வூதியத் திட்டத்தால் (New Pension Scheme (NPS)) பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)) 2004-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டமானது, அனைத்து பெருநிறுவன ஊழியர்களுக்கும் சேமிப்புக் கணக்குடன் கூடிய ஒரு பெருநிறுவன மாதிரியையும் உள்ளடக்கியது. சமீபத்தில், புதிய ஓய்வூதியத் திட்டம் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது 100 சதவீதப் பங்கு முதலீட்டை அனுமதிக்கிறது மற்றும் நெகிழ்வான பல-திட்ட விருப்பங்களைத் தருகிறது – இது இளம் வயது, அதிக ஆபத்தை ஏற்கத் துணியும் அதிகம் கவரும் ஒரு அம்சமாகும். அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) இரண்டும் துறைகள் முழுவதும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு வலுவான நீண்டகால நிதிப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குகின்றன.


புதிய தொழிலாளர் சட்டங்கள் 'ஊதியம்' என்பதற்கு ஒரு சீரான வரையறையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, அடிப்படை ஊதியம் (basic pay) மொத்த வருவாயில் (total earnings) குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும். இதன் மூலம், நிறுவனங்கள் சலுகைகளை (allowances) அதிகரிப்பதன் மூலம் அடிப்படை ஊதியத்தைக் குறைக்கும் பழைய முறை மாற்றப்பட்டுள்ளது. ஓய்வூதியம், பணிக்கொடை (gratuity), மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு பணபலன்கள் ஆகியவை இப்போது ஒரு உயர்வான அடிப்படைத் தொகையின் (higher base) அடிப்படையில் கணக்கிடப்படுவதால், தொழிலாளர்கள் வலுவான நிதிப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.


இந்தியாவின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ஒரு தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன, ஒவ்வொரு கட்டத்திலும் முன்னர் கண்டறியப்பட்ட தேவைகளை அவை நிவர்த்தி செய்கின்றன. ஒரு சமூக நலக் கண்ணோட்டத்தின் (social-welfare lens) வழியாகப் பார்க்கும்போது, அரசாங்கம் முதலில் மூத்த குடிமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஆதரவளிக்க இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அடிப்படைப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டபிறகு, கவனம் நிதிசார் உள்ளடக்கத்தை நோக்கியும், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் பின்னர் புதிய ஓய்வூதியத் திட்டம் 2.0 (NPS 2.0) மூலம் சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கங்களை மேம்படுத்துவதை நோக்கியும் மாறியது. துறைசார் இடைவெளியைக் குறைக்க (sectoral gap), இதே போன்ற நடத்தை ஊக்கத் திட்டங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) மூலம் முறைசாராத் துறை தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.



இந்தத் திட்டங்களில் பல வறுமைக் கோட்டிற்கு கீழே (Below Poverty Line (BPL)) உள்ள நபர்களை இலக்காகக் கொண்டுள்ளன. மேலும், முறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களை உள்ளடக்குவதற்காக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பல தகுதியான நபர்களுக்கு இன்னும் இந்தத் திட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. இந்தியாவின் நெடுங்கால முதுமை ஆய்வின்படி (Longitudinal Ageing Survey of India (LASI), 2017–18 ஆம் ஆண்டில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் 42 சதவீதம் அளவிலான தகுதி வாய்ந்த முதியவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அதன் தகுதி விதிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. (விளக்கப்படம் 2).


சமூகநலத் திட்டங்கள் குறித்த குறைந்த விழிப்புணர்வையும் மற்றும் துண்டிக்கப்பட்ட அணுகலையும் நிவர்த்தி செய்ய, அரசு அமைப்பு சாரா துறை  தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளமாக 'இ-ஸ்ரம்' (e-SHRAM) இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இது, தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்யவும், அவர்கள் தகுதி பெறும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அணுகவும் உதவுகிறது. மேலும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களில், சுமார் 75.6 சதவீதம் பெண்கள் மற்றும் 68 சதவீதம் ஆண்கள் அமைப்பு சாரா துறையில் பணிபுரிகின்றனர் என்று இந்தியாவின் நெடுங்கால முதுமை ஆய்வின் (LASI) தரவுகள் தெரிவிக்கின்றன.


இ-ஸ்ரம்' (E-SHRAM) என்பது முறைசாரா தொழிலாளர்களை நாட்டின் முறையான சமூகப் பாதுகாப்பு அமைப்பின்கீழ் கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான படி என்றாலும், அதன் வெற்றி என்பது முறையான பதிவு, விழிப்புணர்வு, மற்றும் சரியான பலன்களை வழங்குதல் போன்ற முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதில்தான் உள்ளது என்கின்றனர். உதாரணமாக, பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை இணைப்புடன் கூடிய தொலைபேசி எண் மற்றும் ஒரு சேமிப்பு வங்கி கணக்கு தேவைப்படுகிறது, இது சிலர் விடுபட வழிவகுக்கும்.  மேலும், இந்தியாவின் விரிவான ஆண்டு தொகுதி ஆய்வுவின்படி (Comprehensive Annual Modular Survey of India) (2022-23), முதியவர்களில் 63 சதவீதம் பேருக்கு இணையத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை, இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்  ஒதுக்கிவைக்கப்படுவாதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.


இந்தியாவின் ஓய்வூதியத் திட்டங்கள் பழைய நலத்திட்ட அடிப்படையிலான உதவியிலிருந்து, பங்களிப்பு அடிப்படையிலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றன. திட்டம் சார்ந்த விழிப்புணர்வு இன்னும் குறைவாக இருந்தாலும், e-SHRAM போன்ற திட்டங்கள் முதியோருக்கான தரவு அடிப்படையிலான கொள்கைகளை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. இந்தத் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஓய்வூதியக் கொள்கைகளை உருவாக்கவும், முதியவர்களின் பங்களிப்பை மதிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : The evolution of pension reforms in India. -Shreya Bhattacharya and Akshaya Ranganath

Share: