டிரம்பின் வரிவிதிப்புப் போர் : பன்முகத்தன்மையின் முடிவு? -பார்த்தாபிரதிம் பால் & பார்த்தா ரே

 அமெரிக்க வரி உயர்வுகளால் இந்தியா மோசமாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வேளையில், ஏப்ரல் 2-ஆம் தேதி, "பெரிய மற்றும் தொடர்ச்சியான அமெரிக்க பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறைகளுக்கு வழிவகுக்கும் வர்த்தக நடைமுறைகளை சரிசெய்ய பரஸ்பர வரியுடன் இறக்குமதிகளை ஒழுங்குபடுத்துதல்" என்ற நிர்வாக ஆணையை அவர் வெளியிட்டார்.


இந்த ஆணையில், ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்து, அமெரிக்க உற்பத்திக் களம் வீழ்ச்சியடைந்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்து, ஒரு வணிகவாத அணுகுமுறையுடன், இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரிய மற்றும் தொடர்ச்சியான வர்த்தகப் பற்றாக்குறைகளில் கவனம் செலுத்தியது. வர்த்தக உறவுகளில் நியாயமின்மையின் விளைவாக இந்தப் பற்றாக்குறைகள் காணப்பட்டன. மேலும், அது தொடர்ந்து குறிப்பிடுவதாவது,


"இந்த நிலைமை வேறுபட்ட வரிவிதிப்பு விகிதங்கள் மற்றும் வரி அல்லாத தடைகளால் நிரூபிக்கப்படுகிறது. இது அமெரிக்க உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதை கடினமாக்கும். முக்கிய அமெரிக்க வர்த்தகக் கூட்டணி நாடுகளுடன் பொருளாதாரக் கொள்கைகள் உள்நாட்டு ஊதியங்கள் மற்றும் நுகர்வைக் குறைக்கின்றன. அதன் மூலம் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான தேவையைக் குறைத்து, உலகளாவிய சந்தைகளில் தங்கள் பொருட்களை அதிக போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகின்றன. இந்த நிலைமைகள் இந்த ஆணைகளை சரிசெய்யும் நோக்கில் தேசிய அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன.


இது பன்முகத்தன்மை மற்றும் அதன் மிகவும் சாதகமான நாடு (Most Favoured Nation (MFN)) கொள்கையின் முடிவா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளையும் சமமாக நடத்துவதற்கான கொள்கையா?


இந்த "பரஸ்பர வரிவிதிப்பு" கூட்டணி நாடுகளால் வசூலிக்கப்படும் வரிவிதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படவில்லை. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (Office of the US Trade Representative (USTR)) குறிப்பிடுவது போல், "அமெரிக்காவிற்கும், ஒவ்வொரு வர்த்தகக் கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையை சமநிலைப்படுத்த தேவையான பரஸ்பர வரிகள் கணக்கிடப்படுகிறது.


மேலும், விதிக்கப்பட்ட சரிசெய்யப்பட்ட பரஸ்பர வரிவிதிப்பின் பகுப்பாய்வு பல சுவாரஸ்யமான வடிவங்களை வெளிப்படுத்துகிறது (வரைபடத்தைப் பார்க்கவும்). முதலாவதாக, முதல் 41-50 சதவீத வரம்பில், இலங்கை, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற ஆசிய நாடுகள் முக்கியமாக உள்ளன.



இரண்டாவதாக, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, சுவிட்சர்லாந்து, தைவான், சீனா, வங்காளதேசம், தாய்லாந்து அல்லது மொரீஷியஸ் போன்ற நாடுகள் 31-40 சதவீத வரம்பின் கீழ் வரி விதிக்கின்றன. மூன்றாவதாக, ஜப்பான், மலேசியா, தென்கொரியா அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியா 21-30 சதவீத வரம்பில் தோன்றுகிறது. இறுதியாக, நைஜீரியா, வெனிசுலா, நார்வே, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள்/குழுக்கள் மிகக் குறைந்த 10-20 சதவீத வரம்பின் கீழ் வருகின்றன.


ஃபென்டானைல் (fentanyl) என்பது முதன்மையாக வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மிகவும் சக்திவாய்ந்த செயற்கை பைபெரிடின் ஓபியாய்டு ஆகும். இது ஹெராயினைவிட 30 முதல் 50 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.


மெக்சிகோ மற்றும் கனடா இந்த பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அமெரிக்கா எதிர்கொள்ளும் ஃபெண்டானில் (fentanyl) மற்றும் இடம்பெயர்வு பிரச்சினைகளில் (migration issues) அவற்றின் பங்கு காரணமாக அவை 25 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.


இந்தப் பட்டியலில் சீனாவிற்கு 34 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20 சதவீத வரிக்கு மேல் இருக்கும். இதனால், அமெரிக்காவிற்கு சீன இறக்குமதிகள் மீதான வரி 54 சதவீதமாகிறது. மற்ற அனைத்து நாடுகளும் 10 சதவீதம் என்ற அடிப்படை வரியை எதிர்கொள்கின்றன.


இந்தியா மீதான தாக்கம்


ஏப்ரல் 2 அறிவிப்பிலிருந்து, இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. 11-20 சதவீதம் வரி உயர்வைக் கொண்ட 16 நாடுகளில், ஒன்பது நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை, இரண்டு நாடுகள் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவை. நார்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இந்தக் குழுவில் உள்ளன.


இருப்பினும், இந்த நாடுகள் அதிக ஊதியத்தைக் கொண்டுள்ளன. மேலும், இந்தியா அமெரிக்க சந்தையில் அவர்களுடன் நேரடியாகப் போட்டியிட வாய்ப்பில்லை. ஆசியாவிலிருந்து சிறந்த அணுகுமுறையைப் பெற்ற ஒரே வளரும் நாடு பிலிப்பைன்ஸ் மட்டுமே ஆகும்.


21-30 சதவீத வரியில், இந்தியா ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் இந்தியாவை விட 1-3 சதவீத வரி நன்மையைக் கொண்டுள்ளன. எனவே, அமெரிக்க சந்தையில் அதன் பிற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒப்பீட்டு நிலை மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.


மேலும், சில பொருட்களுக்கு இந்த பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தாமிரம், மருந்துகள், குறைக்கடத்திகள் மற்றும் மரப் பொருட்கள் ஆகியவை அடங்கும். மருந்துகள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருளாக இருப்பதால் இது இந்தியாவிற்கு முக்கியமானதாகும்.


பொதுவாக வரியானது, உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்க வரிகள் விதிக்கப்படுகின்றன. மேலும் இறக்குமதியை அதிக விலைக்குக் கொண்டு வருவதன் மூலம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை டிரம்பும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.


எனவே, அமெரிக்காவிற்கான மற்ற ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியா மோசமாக இல்லாவிட்டாலும், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகப் போட்டியை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், அமெரிக்கா மிக அதிக ஊதியம் பெறும் நாடாக இருப்பதால், அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் குறைந்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திப் பொருளுக்கான  விலையில் போட்டியிடுவது கடினமாக இருக்கும்.


டாலர் மதிப்பு உயர்வு (Dollar appreciation)


மேலும், கடந்த ஆண்டு அமெரிக்க டாலர் கணிசமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிக வரி விதிப்புகளின் சில நன்மைகளைக் குறைத்துள்ளது. இருப்பினும், இந்த வரி விதிப்புகள் அமெரிக்காவில் இந்திய ஏற்றுமதிகளின் விலையை அதிகரிக்கும். டிரம்ப் வரிவிதிப்பின் இரண்டாவது குறிக்கோள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தியை அமைக்க ஊக்குவிப்பதாகும். அதிக வரி விதிப்புகளை விதிப்பதன் மூலம், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் இந்த கட்டணங்களைத் தவிர்க்க வெளிநாட்டு நேரடி முதலீட்டை (foreign direct investment (FDI)) பயன்படுத்த விரும்புகிறார்கள்.


இந்த புதிய வரி விதிப்புக் கொள்கைக்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) ஆண்டு அறிக்கை இந்தியாவுக்கான மூன்று முக்கிய கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.


முதலாவதாக, விவசாயம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு வகையான தயாரிப்புகளில் இந்தியா மிக அதிக வரி விகிதங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, பல தயாரிப்புகளுக்கான இந்தியாவின் கட்டுப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வரி விகிதங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி, பொருட்களின் மீதான வரி விகிதங்களை அதிகரிக்க இந்தியாவுக்கு அனுமதிக்கிறது. இறுதியாக, 2014 முதல், இந்திய அரசாங்கம் இந்த நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தி வரிவிதிப்பு விகிதங்களை அதிகரித்துள்ளது.


இந்தியா அமெரிக்காவுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரிகள் மற்ற நாடுகளை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படலாம் என்பதால், இங்கு கவனமாக இருக்க வேண்டும்.


இந்தியா இந்த செயல்முறையைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், வரிக் கொள்கைகளை உருவாக்கும் போது அது வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற அதன் உள்நாட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டும். இது விவசாயப் பொருட்களுக்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு பெரிய மானியங்களை வழங்குகிறது. இது அவர்களின் தயாரிப்புகளை மிகக் குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்கிறது.


இருப்பினும், இந்தியா தனது பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவை அதிகமாகச் சார்ந்திருப்பதால், இந்தியா கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் (வணிகம் மற்றும் சேவைகள்) கிட்டத்தட்ட 20 சதவீதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது. இரண்டாவதாக, அமெரிக்கா இந்தியாவின் மீது "தள்ளுபடி பரஸ்பர வரியை" (discounted reciprocal tariff) விதித்துள்ளது. அதாவது, இந்தியா செயல்படத் தவறினால் வரிகள் அதிகரிக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவின் தீவிரமான கொள்கை மாற்றம் பரவலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒத்துழைப்பு முதல் மோதல் வரை பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பதில்களை ஈர்க்கக்கூடும்.


ஒரு முழுமையான வர்த்தகப் போரை நிராகரிக்க முடியாது. நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை மீண்டும் மேம்படுத்த முயற்சிப்பதால் பெரியளவிலான விநியோக அதிர்ச்சிகள் இருக்கும். மேலும், இது உலகளாவிய முதலீட்டு ஓட்டங்களை பாதிக்கும். அதன் பரந்த தாக்கம் வர்த்தகக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் பணவீக்கம், பணவியல் கொள்கைகள் மற்றும் மாற்று விகிதங்களையும் பாதிக்கும்.


பால் ஐஐஎம் கல்கத்தா, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். ரே என்ஐபிஎம், புனேவைச் சேர்ந்தவர்.


Original article:
Share:

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை

 உச்சநீதிமன்றத்தின் 33 நீதிபதிகளும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பொதுவில் வெளியிடுவதாக அறிவித்தது, நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.


மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற (HC) நீதிபதியின் குடியிருப்பு வளாகத்தில் பணத்தாள்களின் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது நீதித்துறையின் நற்பெயரை கடுமையாக பாதித்தது. இருப்பினும் இந்த சம்பவம், உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அவரது மூல அமர்வான (parent bench) அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி, உள் விசாரணையை அறிவித்தது. நீதித்துறைக்குள் நேர்மையை உறுதி செய்வதற்கும் சாத்தியமான ஊழலை ஒழிப்பதற்கும் நீதித்துறை சரியானளவில் சோதனைகள் நடைமுறையில் உள்ளதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் 33 நீதிபதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பொதுவில் வெளியிடுவதாக அறிவித்ததை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும். நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இது உதவும். நிச்சயமாக, அது நீதித்துறையின் நேர்மையை கவனத்தில் கொண்டுள்ளது என்ற அறிக்கையை வெளியிடும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட துறைகளில் முன்மாதிரியாக இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் பொது நடத்தையில் உயர்ந்த தரத்தைப் பேணுவதில் சமரசம் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும். நீதித்துறையின் பிற பகுதிகள் உச்சநீதிமன்றத்தின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.


நீதிபதிகள் தங்கள் வருவாய், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பொதுவில் வெளியிட வேண்டுமா என்பது பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. 1997-ம் ஆண்டில், உச்சநீதிமன்றம் நீதித்துறை வாழ்க்கையின் மதிப்புகளை மறு மதிப்பீடு செய்வது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது ஒவ்வொரு உச்சநீதிமன்ற நீதிபதியும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை இந்திய தலைமை நீதிபதியிடம் அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த தலைமை நீதிபதிகளிடம் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், இது நீதித்துறைக்குள் ஒரு உள்தேவையாக இருந்தது. மேலும், அவை பொது ஆய்வுக்கு கிடைக்கச் செய்வதற்கு நீட்டிக்கப்படவில்லை. 2009-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் பொது வெளிப்படுத்தலை ஆதரிப்பதாகக் கூறினாலும், அதை கட்டாயமாக்காது என்று குறிப்பிட்டிருந்தது. பின்னர், பொது நலன் பொது வெளிப்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால் தகவல் இரகசியமாக இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


எந்தவொரு நிறுவனத்தையும் போலவே, நீதித்துறையும் அதன் கருப்பு ஆடுகளைக் கொண்டுள்ளது. கவனக்குறைவுகளை முன்கூட்டியே கண்டறிந்து நீக்கும் வகையில், இந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதே சவாலானதாகும்.


Original article:
Share:

நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான பிற காரணங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு : சோன்பத்ராவின் நிலத்தடி நீரில் அதிகப்படியான ஃப்ளோரைடு (fluoride) இருப்பது முதன்முதலில் 2013-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பல குடியிருப்பாளர்கள் சுகாதார பிரச்சினைகள் குறித்து புகார் அளித்ததை அடுத்து, பதரச் கிராமத்திலிருந்து ஒரு மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது.


முக்கிய அம்சங்கள் :


1. உத்தரபிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ரா, ஒரு எரிமலைப் பாறையான கிரானைட் படிவுகள் நிறைந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  இந்த நிலப்பரப்பில் உள்ள, நிலத்தடி நீரில் "அதிகப்படியான" ஃப்ளோரைடைக் கசிந்து, அதை மக்கள் நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்கியுள்ளது. இது, சமீபத்தில் மாநில நீர் ஆணையமான ஜல் நிகாமின் (Jal Nigam) மார்ச் மாத அறிக்கையில் அரசாங்கம் கவனத்தில் கொண்ட ஒரு பிரச்சனையாகும்.


2. சமீபத்தில் லக்னோவிற்கு மாற்றப்பட்ட சோன்பத்ராவின் ஜல் நிகாமின் நிர்வாகப் பொறியாளரான மகேந்திர சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் வசிக்கும் 120 குக்கிராமங்களில் நிலத்தடி நீரில் "அதிகப்படியான" ஃப்ளோரைடு இருப்பதை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.


3. விஜய் குமார் என்ற நபரின் ஃப்ளோரோசிஸ் நோயறிதலை உறுதிப்படுத்திய சோன்பத்ரா தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் அஸ்வனி குமார், “ஃப்ளோரோசிஸ் என்பது ஆபத்தானது அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இது வயதானவர்களுக்கு, மூட்டு வலி (joint pain), இறுக்கம் (stiffness), எலும்பு குறைபாடுகளை (bone deformities) ஏற்படுத்தும். இது இயக்கம் தொடர்பான பிரச்சினைகள், தசை பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். குழந்தைகளில், மிகவும் பொதுவான அறிகுறியாக பற்களில் மஞ்சள் கறைகளாக இருக்கும்.


4. 2019-ம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷனின் (Jal Jeevan Mission) கீழ் ஹர் கர் ஜல் யோஜனா (Har Ghar Jal Yojana) தொடங்கப்படுவதற்கு முன்பு, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் திட்டங்கள் 2012-13ஆம் ஆண்டில் ஜல் நிகாம் (Jal Nigam) மூலம் தொடங்கப்பட்டன என்று மாவட்ட ஆட்சியர் பத்ரிநாத் சிங் கூறுகிறார்.


5. இதற்கிடையில், மாசுபாடு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பதராச் கிராமத்திற்கு குடிநீர் வழங்க 2013 முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட மேற்பரப்பு நீரை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


உங்களுக்குத் தெரியுமா?


1. 'இந்தியாவின் எரிசக்தி தலைநகரம்' (energy capital of India) என்று அழைக்கப்படும் சோன்பத்ரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய நாடுகளுடன் அதன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. மாவட்டத்தின் ஐந்து பகுதிகளான துதி, மியோர்பூர், பாபானி, கோன் மற்றும் சோபன் ஆகிய இடங்களில் அதிக கிரானைட் படிவுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


2. மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதராச் கிராமம், 300 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது. இது ஃப்ளோரோசிஸால் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். மண்வீடுகளில் வசிக்கும் பெரும்பாலான கிராமவாசிகள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கை பம்புகளை நம்பியிருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


3. "கொதித்தல் ஃப்ளோரைடு செறிவை அதிகரிக்கிறது" (boiling increases fluoride concentration) என்பதால் நிலத்தடி நீரை கொதிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உடலில் ஃப்ளோரைடின் தாக்கத்தைக் குறைக்க எலுமிச்சை மற்றும் புளியை தவறாமல் உட்கொள்ளவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.


Original article:
Share:

பிரபலமாகும் கிப்லி (Ghibli) ஓவியத்திற்கும் அப்பால் : இந்திய ஓவிய பாணிகள் பற்றிய ஒரு பார்வை. -ரோஷ்னி யாதவ்

 கிப்லி ஓவியங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ள நிலையில், பரபரப்பையும் அது எழுப்பும் கவலைகளையும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


மார்ச் 25 அன்று செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ChatGPT அதன் 4o மாதிரியை மேம்படுத்தி, துல்லியமான ஒளி யதார்த்தமான வெளியீடுகளைக் கொண்ட பலவகை பூர்வீக மாதிரியைக் கொண்ட, சொந்த பட உருவாக்க திறன்களைச் சேர்த்தது. பயனர்கள் பல்வேறு பிரபலமான கலை பாணிகளைப் பிரதிபலித்துள்ளனர். குறிப்பாக, ஸ்டுடியோ கிப்லியின் தனித்துவமான அனிமேஷனை பயன்படுத்தியுள்ளனர். கிப்லி சமூக ஊடகப் போக்கு உலகளவில் பாரம்பரிய கலை பாணிகளில் ஆர்வத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், பரவலாலாகிக் கொண்டிருக்கும் கிப்லி மற்றும் இந்தியாவின் சில பிரபலமான ஓவிய பாணிகளைப் பற்றி அறிந்துகொள்வது மிக முக்கியமானது.


ஸ்பிரிட்டட் அவே (2001) மற்றும் தி பாய் அண்ட் தி ஹெரான் (2023) போன்ற அகாடமி விருது பெற்ற அனிமேஷன் படங்களுக்குப் பின்னால் உள்ள ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோவான ஸ்டுடியோ கிப்லியின் ரசிகர்கள், இந்த வாரம் ChatGPT-ன் 4o மாடல் புகைப்படங்களை கிப்லி பாணியாக மாற்ற அனுமதித்தபோது மகிழ்ச்சியடைந்தனர், மேலும் சில மணி நேரங்களுக்குள், ChatGPT மாற்றப்பட்ட கிப்லி பாணி புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் பரவலாகின.


இருப்பினும், பதிப்புரிமை பெற்ற படைப்புகளில் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளால் மனிதக் கலைஞர்களின் எதிர்கால வாழ்வாதாரங்களுக்கு என்ன நேரும் என்பது பற்றிய சட்ட மற்றும் நெறிமுறை கவலைகளையும் இந்தப் போக்கு எடுத்துக்காட்டியது. இந்தச் சூழலில், மியாசாகியின் ஒரு பழைய கிளிப் மீண்டும் வெளிவந்துள்ளது. அதில் கலையை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அவர் கடுமையான சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார். 2016-ஆம் ஆண்டில், மியாசாகியின் செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய அனிமேஷனால் தான் வெறுப்படைந்ததாகவும், அதை "வாழ்க்கைக்கே அவமானம்" என்றும் கூறினார்.


ஸ்டுடியோ கிப்லி


ஸ்டுடியோ கிப்லி என்பது 1985-ஆம் ஆண்டு புகழ்பெற்ற அனிமேட்டர்களான ஹயாவோ மியாசாகி, இசாவோ தகாஹாட்டா மற்றும் தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். அதன் படங்களில், குறைந்த பட்ச கணினி நுட்பங்களைப் பயன்படுத்தி, அதீத நிறங்கள் மற்றும் அக்ரிலிக் வண்ணப்பூச்சுகளுடன் கையால் வரையப்பட்ட சட்டங்கள் இடம்பெற்றுள்ளன. "கிப்லி" என்ற சொல் இத்தாலிய மொழியில் "சஹாரா பாலைவனத்தில் வீசும் வெப்பக் காற்று" என்பதாகும்.


செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட கிப்லி-பாணி படங்களின் சமீபத்திய போக்கு சமூக ஊடக பயனர்களைக் கவர்ந்துள்ளது. ஆனால், பதிப்புரிமை (copyright) கவலைகளையும் எழுப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் உண்மையான கலைஞர்களின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை, பெரும்பாலும் அவர்களின் அனுமதியின்றி என்று எழுத்தாளர் சுதான்ஷு மிஸ்ரா சுட்டிக்காட்டுகிறார். OpenAI-ன் சமீபத்திய கருவி மிகவும் சர்ச்சையைத் தூண்டியது. சில மணி நேரங்களுக்குள், பதிப்புரிமை சிக்கல்கள் காரணமாக சில கலை பாணிகளை அது மட்டுப்படுத்த வேண்டியிருந்தது . செயற்கை நுண்ணறிவு மற்றும் படைப்புப் பணிகளைச் சுற்றியுள்ள நெறிமுறை கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.




சில முக்கிய இந்திய ஓவிய பாணிகள்


ஓவியம் என்பது மிகவும் நுட்பமான கலை வடிவங்களில் ஒன்றாகும். இது மனித எண்ணங்களையும் உணர்வுகளையும் கோடுகள் மற்றும் வண்ணங்களின் மூலம் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஏராளமான ஓவிய பாணிகள் உள்ளன. மேலும், இந்த கலை வடிவங்கள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகின்றன. ஒவ்வொரு ஓவிய பாணியும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அனுப்பப்படும் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் மற்றும் சித்தாந்தங்களை பிரதிபலிக்கிறது. 


சில பிரபலமான இந்திய ஓவிய பாணிகளில் இங்கே


மதுபனி ஓவியங்கள் (Madhubani Paintings) 


மிதிலா ஓவியம் (Mithila painting) என்றும் அழைக்கப்படும் மதுபானி கலை, இந்தியா மற்றும் நேபாளத்தின் மிதிலா பகுதியில் இருந்து வருகிறது. இது கி.பி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் பாரம்பரியமாக பெண்களின் தலைமுறைகளுக்கு வரையப்பட்டது. முதலில், கலைஞர்கள் இந்த ஓவியங்களை உருவாக்க கிளைகள், விரல்கள் மற்றும் இயற்கை சாயங்களைப் பயன்படுத்தினர்.


மதுபானி கலையின் கருப்பொருள்கள் பெரும்பாலும் கிருஷ்ணர், ராமர், சிவன், துர்க்கை, லட்சுமி, காளி மற்றும் சரஸ்வதி போன்ற இந்து கடவுள்களைக் கொண்டுள்ளன. சூரியன், சந்திரன், துளசி போன்ற புனித தாவரங்கள் மற்றும் திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகள் ஆகியவை பிற பொதுவான பாடங்களில் அடங்கும். 2007-ஆம் ஆண்டில், மதுபானி ஓவியங்கள் அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரித்து புவியியல் குறியீடு (Geographical Indication (GI)) அங்கீகாரத்தைப் பெற்றன. இன்று, இந்த பாரம்பரிய கலை கித்தான் (கேன்வாஸ்), காகிதம், துணி மற்றும் டிஜிட்டல் தளங்களிலும் உருவாக்கப்படுகிறது.





புவியியல் குறியீடு (Geographical Indication (GI))


புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் அந்த பகுதிக்கே உரித்தான தனித்துவமான பண்புகளைக் கொண்ட பொருட்களுக்கு வழங்கப்படும் அடையாளமாகும். இந்த குறியீடு பொருளின் தனித்துவத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு பொருளுக்கு இந்தக் குறியீடு கிடைத்தால், வேறு எவரும் அதே பெயரில் அதே போன்ற பொருளை விற்க முடியாது. இந்த குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு அதைப் புதுப்பிக்கலாம்.


பட்டாசித்திர ஓவியங்கள் (Patachitra Paintings)


பட்டாசித்திர ஓவியம் ஒடிசாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. கலைஞர்கள் துணியில் கை வண்ணங்களால் புராண கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை சித்தரிக்கிறார்கள். இதில் பெரும்பாலும் இயற்கை வண்ணங்களான நீலம், வெள்ளை, சிவப்பு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.


பிதோரா ஓவியங்கள்


பிதோரா ஓவியங்கள் சுவர்களில் வரையப்படுகின்றன. இதில் ஏழு குதிரைகள் வரையப்படுவது குஜராத் மற்றும் மத்திய பிரதேச எல்லையில் உள்ள ஏழு மலைகளைக் குறிக்கிறது. இந்த ஓவியங்களை ரத்வா சமூகத்தினர் வரைகிறார்கள். தானிய தேவனான பிதோராவுக்கு காணிக்கையாக இவை வரையப்படுகின்றன. பெரும்பாலும் குஜராத்தின் சோட்டா உதய்பூர் பகுதியில் ஆண்கள் மட்டுமே இதை வரைகிறார்கள்.


இந்த ஓவியங்களில் யானைகள், ஆண்கள், பெண்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள், திருமணங்கள், விழாக்கள் போன்ற அன்றாட வாழ்க்கை காட்சிகள் இடம்பெறுகின்றன. வண்ணங்களை நிறமிகளுடன் பால் மற்றும் மகுடா மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மதுபானத்தை கலந்து தயாரிக்கிறார்கள். மூங்கில் குச்சிகள், பஞ்சு மற்றும் மர அச்சுகளைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைகிறார்கள். இது பாரம்பரியமாக சுவர் ஓவியமாக மட்டுமே நடைமுறையில் இருந்தாலும், இன்றைய தலைமுறை பித்தோரா ஓவியர்கள் வணிக ரீதியாக விற்கும் காகிதம் மற்றும் கேன்வாஸைப் பயன்படுத்துகின்றனர்.


வார்லி ஓவியம்


வார்லி ஓவியம் மகாராஷ்டிராவின் வார்லி பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான கலையாகும். இது பண்டைய குகை ஓவியங்களை ஒத்திருக்கிறது. பாரம்பரியமாக, கார்வி குச்சிகளால் ஆன சுவர்களில் களிமண் மற்றும் சாணம் பூசி, அதன் மீது அரிசி மாவால் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. 2014-ல் இது GI குறியீடு பெற்றது.


கலம்காரி ஓவியம்


கலம்காரி ஓவியம் சிக்கலான வடிவங்களுக்கும் பிரகாசமான வண்ணங்களுக்கும் பெயர் பெற்ற பாரம்பரிய இந்தியக் கலையாகும். “கலம்காரி” என்றால் “கலம்” அல்லது தூரிகை கொண்டு உருவாக்கப்படுவது என்று பொருள். பாரம்பரியமாக, கருப்பு, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீபகாலமாக வெளிர் நீலமும் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறுகிறார்.


கலம்காரி கலை நவீன கால ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வருகிறது. இது இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அதன் விரிவான மற்றும் நுட்பமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றது.


கலம்காரியில் உள்ள பொதுவான மையக்கருத்துகளில் ஊட்டச்சத்தை குறிக்கும் வாழ்க்கை மரம், ராமாயணம், மகாபாரதம் மற்றும் புத்த கருப்பொருள்களின் காட்சிகள் ஆகியவை அடங்கும். சிக்கலான வடிவங்கள் மற்றும் இயற்கை வண்ணங்களின் பயன்பாடு கலம்காரியை உலகெங்கிலும் உள்ள மக்களால் போற்றப்படும் ஒரு காலத்தால் அழியாத கலை வடிவமாக ஆக்குகிறது.



தஞ்சாவூர் ஓவியங்கள் (Thanjavur Paintings)


தஞ்சாவூர் ஓவியம் என்பது தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் தோன்றியது. இது அதன் பிரகாசமான வண்ணங்கள், செழுமையான மேற்பரப்பு விவரங்கள் மற்றும் சிறிய அமைப்புக்கு பெயர் பெற்றது. இந்த பாணியின் ஒரு தனித்துவமான அம்சம் தங்கப் படலத்தைப் பயன்படுத்துவதாகும். இது ஓவியங்களுக்கு பளபளப்பான, அலங்கார தோற்றத்தை அளிக்கிறது. தஞ்சாவூர் ஓவியங்களில் முதன்மை கருப்பொருள்கள் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்கள், துறவிகள் மற்றும் இந்து புராணங்களின் அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கும். தஞ்சாவூர் ஓவியம் தென்னிந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இந்த ஓவிய பாணி 2007-ல் புவிசார் குறியீட்டைப் பெற்றது.


கோண்ட் ஓவியங்கள்


கோண்ட் ஓவியம் என்பது மத்தியப் பிரதேசத்தின் கோண்ட் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற கலை வடிவமாகும். இது பிரகாசமான வண்ணங்கள், தடித்த கோடுகள் மற்றும் சிக்கலான வடிவங்களைப் பயன்படுத்தி இயற்கையையும் அன்றாட வாழ்க்கையையும் படம்பிடிக்கிறது. இந்த கலை பாணி கோண்ட் மக்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.


கலைஞர்கள் நுண்ணியக் கோடுகள், புள்ளிகள் மற்றும் கோடுகளைப் பயன்படுத்தி விரிவான அமைப்புகளை உருவாக்குகிறார்கள். பெரும்பாலும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் புராணக் கதைகளை சித்தரிக்கிறார்கள். 2023-ஆம் ஆண்டில், கோண்ட் ஓவியம் புவியியல் குறியீட்டைப் பெற்றது.


இன்று, கோண்ட் கலை பாரம்பரிய வடிவங்களைத் தாண்டி பரிணமித்து விரிவடைந்துள்ளது. இது இப்போது நகர்ப்புற கருப்பொருள்களையும் உள்ளடக்கியது மற்றும் புத்தகங்கள், சுவரோவியங்கள் மற்றும் வீட்டுப் பொருட்களில் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் வரும் கோடுகள் மற்றும் சிறிய புள்ளிகளின் பயன்பாடு இந்த தனித்துவமான கலை பாணியின் முக்கிய அம்சமாகத் தொடர்கிறது.



காங்க்ரா ஓவியங்கள் (Kangra Paintings)


காங்க்ரா ஓவியம் என்பது இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய கலை பாணியாகும். இது அதன் வளர்ச்சியை ஆதரித்த ஒரு முன்னாள் சுதேச மாநிலமாகும். பசோலி ஓவியப் பள்ளி வீழ்ச்சியடைந்ததால், 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது பிரபலமடைந்தது. காலப்போக்கில், காங்க்ரா ஓவியம் பல கலைப்படைப்புகளை உருவாக்கியது. இதனால், முழு பஹாரி ஓவிய பாணியும் அதன் பெயரால் அறியப்பட்டது.


காங்க்ரா ஓவியங்கள் பெரும்பாலும் இயற்கை, புராணம் மற்றும் ஆன்மீகத்தை சித்தரிக்கின்றன. மனித உணர்ச்சிகளுக்கும் இயற்கை உலகிற்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் காட்டுகின்றன. அவை நேர்த்தியான கோடுகள், மென்மையான வண்ணங்கள் மற்றும் விரிவான தூரிகை வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. குறிப்பிடத்தக்க வகையில், காங்க்ரா ஓவியங்கள் 2014-ல் புவியியல் அடையாளக் குறியைப் பெற்றன.


Original article:
Share:

மூத்த குடிமக்கள் தங்கள் பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோ தங்கள் சொத்திலிருந்து வெளியேற்ற முடியுமா? உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ன? -அஜோய் சின்ஹா ​​கர்புரம்

 2007-ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் சட்டம் (Senior Citizens Act) இது போன்ற வழக்குகளைக் கையாள சிறப்பு தீர்ப்பாயங்களையும், எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்ய தனி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களையும் அமைக்கிறது.


பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன்புரிச் சட்டம், 2007-ஐப் பயன்படுத்தி, வயதான தம்பதியினர் தங்கள் மகனை வீட்டிலிருந்து வெளியேற்ற முயன்ற வழக்கை மார்ச் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் நிதி உதவி இல்லாத மூத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து பராமரிப்பு கோரி வழக்குத் தொடர, இந்தச் சட்டம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை வழங்குகிறது.


இந்தச் சட்டம் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளையோ அல்லது உறவினர்களையோ தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றும் உரிமையை வெளிப்படையாக வழங்கவில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் அத்தகைய வெளியேற்ற உத்தரவுகளை அனுமதிக்கும் வகையில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான விதியை உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.


சட்டம் என்ன சொல்கிறது?


மூத்த குடிமக்கள் சட்டம், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் சொந்த வருமானம் அல்லது சொத்தை வைத்து தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாத நிலையில், தங்கள் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளிடம் நிதி உதவி கேட்டு வழக்குத் தொடர அனுமதிக்கிறது. பெற்றோர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுவது இந்தக் குழந்தைகள் அல்லது உறவினர்களின் கடமை என்று சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டம் இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயங்களையும், எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்ய மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களையும் அமைக்கிறது.


முக்கியமாக, சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான பிரிவு 23 ஆகும். பெற்றோர்கள் தங்கள் சொத்தை பரிசாகவோ அல்லது மாற்றவோ செய்த பிறகும் ஆதரவைப் பெற உதவுகிறது. பிரிவு 23(1)-ன் படி, ஒரு மூத்த குடிமகன் ஒருவருக்கு சொத்தை வழங்கினால், அந்த நபர் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற நிபந்தனையின் பேரில், பராமரிப்பு வழங்கப்படாவிட்டால், சட்டம் அந்த மாற்றத்தை வலுக்கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ செய்ததாகக் கருதுகிறது. இதுபோன்ற சூழல்களில், மூத்த குடிமகன் தீர்ப்பாயத்திற்குச் செல்லலாம். மேலும், பரிசு அல்லது பரிமாற்றத்தை ரத்து செய்யலாம்.


பிரிவு 23(2) மூத்த குடிமக்களுக்கு சொத்திலிருந்து பராமரிப்பு பெற உரிமை உண்டு என்று கூறுகிறது. சொத்து மாற்றப்பட்டால், புதிய உரிமையாளருக்கு எதிராக இந்த உரிமையை செயல்படுத்த முடியும், அவர்கள் அதை அறிந்திருக்கும் வரை.


வெளியேற்றும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் எவ்வாறு பெற்றது?


2020-ஆம் ஆண்டில், மூத்த குடிமக்கள் சட்டத்தைப் பயன்படுத்தி, மூத்த பெற்றோரும் அவர்களது மகனும் மருமகளை குடும்ப வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பிய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டியிருந்தது. இரு தரப்பினரும் நிலுவையில் உள்ள விவாகரத்து நடவடிக்கைகள் மற்றும் மருமகள் கணவருக்கு எதிராக தாக்கல் செய்த ஜீவனாம்ச வழக்கு உள்ளிட்ட பிற நடந்து வரும் மற்றும் இணையான வழக்குகளை விசாரித்தனர்.


முன்னதாக, ஜூன் 2015-ல், பெங்களூரு வடக்கு துணைப் பிரிவின் உதவி ஆணையர் சொத்து பெற்றோருக்குச் சொந்தமானது என்றும் மருமகள் அங்கு மட்டுமே வசித்து வந்ததாலேயே அவளுக்கு சொத்தில் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.


2020-ஆம் ஆண்டில், மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (Women from Domestic Violence Act) கீழ், பகிரப்பட்ட குடும்பத்தில் இருந்து அவரை நீக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. வீட்டிற்குச் சொந்தமாக இல்லாவிட்டாலும் அல்லது அதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமைகளும் இல்லாவிட்டாலும் கூட இந்தப் பாதுகாப்பு பொருந்தும். இருப்பினும், மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு தீர்ப்பாயத்திற்கு ஒருவரை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட அதிகாரம் உள்ளதா என்பதையும் நீதிமன்றம் ஆராய்ந்தது.


மூத்த குடிமகனைப் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் தேவைப்பட்டால், வீட்டை விட்டு வெளியேற ஒரு தீர்ப்பாயம் உத்தரவிடலாம் என்று அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகள் குழு முடிவு செய்தது. பிரிவு 23(2)-ன் கீழ், மூத்த குடிமக்கள் தங்கள் சொத்திலிருந்து ஆதரவைப் பெற உரிமை உண்டு என்றும், ஒருவரை வெளியேற்றும் அதிகாரம் அந்த உரிமையில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.


மூத்த குடிமகனைப் பராமரிக்கும் கடமை மீறப்பட்டால், ஒரு மூத்த குடிமகனின் சொத்திலிருந்து ஒரு குழந்தை அல்லது உறவினரை வெளியேற்ற (eviction) தீர்ப்பாயம் உத்தரவிடலாம் என்ற வாதத்திற்கும் நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்தது. இருப்பினும், வழக்கில் இரு தரப்பினரையும் வாதங்களை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்ப்பாயம் வெளியேற்ற உத்தரவிட முடியும் என்று நீதிமன்ற அமர்வு  கூறியது.


இந்த வழக்கில் வெளியேற்றம் ஏன் மறுக்கப்பட்டது?


பெற்றோர்கள் தங்கள் மகனை வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பிய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க வேண்டியிருந்தது. தங்களை கவனித்துக்கொள்வதில்லை என்றும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்று  பெற்றோர்கள் கூறினர். 2019-ஆம் ஆண்டில், மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ் ஒரு தீர்ப்பாயம் பெற்றோருக்கு சிறிது நிவாரணம் அளித்தது. மகனுக்கு வீட்டின் மற்ற பகுதிகளுக்குள் அவர்களின் அனுமதியின்றி நுழையக்கூடாது என்று அது கூறியது. கட்டிடத்திலிருந்து அவர் நடத்திய பாத்திரக் கடையையும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அறையையும் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. மகன் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது மீண்டும் அவர்களை காயப்படுத்தினாலோ மட்டுமே பெற்றோர் மீண்டும் வெளியேற்றக் கோர முடியும் என்றும் தீர்ப்பாயம் கூறியது.


தீர்ப்பாயத்தின் உத்தரவில் பெற்றோர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் மேல்முறையீடு செய்து பின்னர் 2023-ல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர். ஆனால், முந்தைய உத்தரவுக்குப் பிறகு அவர்களின் மகன் கிருஷ்ண குமார் தங்களைத் தவறாக நடத்தியதற்கான எந்த ஆதாரமோ புகாரோ இல்லை என்று நீதிமன்றம் கூறியது. ஒவ்வொரு வழக்கிலும் வெளியேற்றம் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. அது சூழ்நிலையைப் பொறுத்து இருக்கும் என்று தெளிவுபடுத்தியது.


Original article:
Share:

இந்தியாவின் வறுமை நிலைகள் குறித்து ‘பல பரிமாண வறுமைக் குறியீடு’ என்ன குறிப்பிட்டுள்ளது? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி:


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசாங்க நலத்திட்டங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளதாக உள்ளது. இந்த முயற்சிகள் சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு பெருமளவில் உதவியுள்ளன. அனைத்து சமூகங்களிலும் வறுமை குறைந்துள்ளது. என்று ஷமிகா ரவி எழுதியுள்ளார்.


முக்கிய அம்சங்கள்:


ஜனநாயகம் என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது அல்லது அமைதியான முறையில் தலைவர்களை மாற்றுவது மட்டுமல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் அந்தக் குழுக்கள் அவர்களுக்கு வாக்களிக்காவிட்டாலும்கூட அவர்களை கவனித்து கொள்ள வேண்டும்.


. இந்தக் கட்டுரையில், 2011-12 முதல் 2023-24 வரை பல்வேறு சமூக மற்றும் மதக் குழுக்களிடையே வறுமையை அரசாங்கம் எவ்வளவு சிறப்பாகக் குறைத்துள்ளது என்பதை அளவிட விரும்புகிறோம்.


. வறுமை அடிப்படைத் தேவைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், மக்களின் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை தடுக்கிறது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இது மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக உள்ளது.


• முதலில், வறுமையை எவ்வாறு அளவிடுகிறோம் என்பதை சுருக்கமாக விவாதிப்பது அவசியம். 2014-ல் C.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்த ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் 2011-12ஆம் ஆண்டிற்கான வறுமைக் கோட்டைப் பயன்படுத்துகிறோம்.


• இந்திய அரசு இந்த வறுமைக் கோட்டை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.


• 2023–24க்கு, ரங்கராஜன் வறுமைக் கோட்டை (Rangarajan poverty line) மதிப்பிடுவதற்கும், அதன்படி ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் வறுமைக் கோடுகளைப் புதுப்பிப்பதற்கும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவிலான நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தரவைப் பயன்படுத்துகிறோம்.


• கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வறுமையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. கிராமப்புறங்களில், வறுமை 30.4%-லிருந்து 3.9% ஆகவும், நகர்ப்புறங்களில், அது 26.4%-லிருந்து 3.9%-ஆகவும் குறைந்துள்ளது. இதே போன்ற கண்டுபிடிப்புகளை சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகியோர் தெரிவித்தனர்.


அனைத்து இந்தியர்களுக்கும் வறுமை குறைந்துள்ளது


• குறிப்பாக, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற இரண்டு பெரிய மதக் குழுக்களிடையே வறுமை  குறைந்துள்ளது.


• இந்தக் கட்டுரை 2011–12 மற்றும் 2023–24-ஆம் ஆண்டுகளில் தேசிய ஆய்வுகளிலிருந்து விரிவான வீட்டுத் தரவுகளைப் பயன்படுத்தி முக்கிய மத மற்றும் சமூகக் குழுக்களிடையே வறுமைக் குறைப்பை ஆய்வு செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• வறுமை என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்கு அடிப்படை குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை வழங்க நிதி ஆதாரங்கள் இல்லாத ஒரு நிலை என்று வரையறுக்கலாம். "வறுமைக் கோடு" (poverty line) என்று அழைக்கப்படும் ஒரு வரம்பிலிருந்து நுகர்வு செலவினத்தில் ஏற்படும் பற்றாக்குறையை பொருளாதார வல்லுநர்களும் கொள்கை வகுப்பாளர்களும் "முழுமையான" (absolute) வறுமை என்று மதிப்பிடுகின்றனர். "வறுமைக் கோடு தொகுப்பு" (poverty line basket (PLB)) எனப்படும் அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்குத் தேவையான பணத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு அமைந்துள்ளது. இந்த கோட்டிற்குக் கீழே எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவதன் மூலம் வறுமை அளவிடப்படுகிறது. இது தலை எண்ணிக்கை விகிதம் என்று அழைக்கப்படுகிறது. வறுமையின் "ஆழம்" (depth) இந்த மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே எவ்வளவு தூரம் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


• இதுவரை, ஆறு அதிகாரப்பூர்வ குழுக்கள் இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டுள்ளன. அவை:


1962-ல் பணிக்குழு


1971-ல் வி.என். தண்டேகர் மற்றும் என்.ரத் குழு


1979-ல் ஒய்.கே.அலாக் குழு


          1993-ல் டி.டி.லக்டவாலா குழு


           2009-ல் சுரேஷ் டெண்டுல்கர் குழு


          2014-ல் சி.ரங்கராஜன்  குழு 


ரங்கராஜன் குழுவின் அறிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை.


Original article:
Share:

BIMSTEC என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி:


டெல்லி சர்வதேச மற்றும் நேரடி ஒப்பந்தங்களை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. பிராந்திய வளர்ச்சி மற்றும் இணைப்பை அதிகரிக்க  தன்னாட்சி நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.


முக்கிய அம்சங்கள் :


• இந்த வாரம் BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதே நேரத்தில், ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு முக்கிய உறுப்பினரான மியான்மருக்கு உதவ இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தப் பேரழிவு மற்றொரு உறுப்பினரான தாய்லாந்தையும் பாதித்துள்ளது. தெற்காசியாவில் உள்ள பூட்டான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை பிம்ஸ்டெக்கின் மற்ற உறுப்பினர்களாகும்.


• மியான்மருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில், நீண்டகால நன்மைகளுக்காக BIMSTEC மன்றத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதில் அவர் ஒரு பெரிய சவாலில் கவனம் செலுத்த வேண்டும்.


• தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்புக் குழுவான சார்க் அமைப்புக்கு மாற்றாக மக்கள் பெரும்பாலும் BIMSTEC அமைப்பை பார்க்கிறார்கள். இந்த அமைப்பு சிறப்பாக செயல்படவில்லை. 2014ஆம் ஆண்டு சார்க் உச்சி மாநாடு தோல்வியடைந்த உடனேயே இந்திய அரசாங்கம் BIMSTEC அமைப்பை ஊக்குவிக்கத் தொடங்கியதால் இந்தக் கருத்து பிரபலமடைந்தது.


• வங்காள விரிகுடா வரலாற்று தொடர்புகளைக் கொண்ட ஒரு இயற்கைப் பகுதி. இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்த இணைப்புகளை மீட்டெடுப்பது கடினமாகிவிட்டது.


பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​இப்பகுதி ஒரு காலனித்துவ அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. பர்மா, சிங்கப்பூர் மற்றும் வங்காள விரிகுடாவை தென் சீனக் கடலுடன் இணைக்கும் மலாக்கா ஜலசந்தியை ஒட்டிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். அவர்கள் விரிகுடாவைச் சுற்றியுள்ள நிலங்கள் மற்றும் நீர்நிலைகளிலும் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தினர்.


• வங்காள விரிகுடாவில் பிராந்திய ஒத்துழைப்பை பல காரணிகள் குறைத்துள்ளன. சார்க்கில் பாகிஸ்தானைப் போல, BIMSTEC அமைப்பில் எந்த நாடும் முடிவுகளைத் தடுக்க முடியாது. இருப்பினும், இன்னும் சவால்கள் உள்ளன. ஆசியானைப் போலல்லாமல், நாடுகள் தங்கள் சர்ச்சைகள் இருந்தபோதிலும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. BIMSTEC உறுப்பினர்கள் இன்னும் அந்த அளவிலான நம்பிக்கையை உருவாக்கவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)) என்பது ஜூன் 6, 1997 அன்று பாங்காக் பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்தியக் குழுவாகும்.


முதலில், இது BIST-EC (வங்காளதேசம்-இந்தியா-இலங்கை-தாய்லாந்து பொருளாதார ஒத்துழைப்பு) என்று அழைக்கப்பட்டது. பின்னர், மியான்மர் டிசம்பர் 22, 1997 அன்று இணைந்தது. பூட்டான் மற்றும் நேபாளம் பிப்ரவரி 2004-ல் உறுப்பினர்களாயின.


வங்காளதேசம், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாங்காக்கில் சந்தித்து BIST-EC-ஐ நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது இந்த அமைப்பு தொடங்கியது.


Original article:
Share: