முக்கிய அம்சங்கள் :
1. இந்தியாவின் ரூ.10,370 கோடி மதிப்புள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் (IndiaAI Mission) கீழ் ஆதரவுக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் புத்தொழில் சர்வம் (Sarvam) ஆகும். இந்த திட்டம் ஒரு AI மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்கம் தற்போது நூற்றுக்கணக்கான பிற திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது. சர்வம் திட்டத்தின் மாதிரி பகுத்தறிவு திறன் கொண்டது. இது குரலுக்காக வடிவமைக்கப்பட்டது மற்றும் இந்திய மொழிகளில் சரளமாக பேசக்கூடியதாகவும் இருக்கும். இது மக்கள்தொகை அளவிலான பயன்பாட்டிற்கும் தயாராக இருக்கும்.
2. ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், நிறுவனம் 4,000 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (graphics processing units (GPUs)) வடிவில் அரசாங்க ஆதரவைப் பெறும். நிறுவனம் தனது மாதிரியை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் உதவும் வகையில் இதற்கான செயல்பாடு ஆறு மாதங்களுக்குக் கிடைக்கும். இந்த மாதிரி கட்டற்ற மென்பொருள்களில் உருவாக்கப்படாது. ஆனால், இந்திய மொழிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் AI தரவு மையங்களை நிறுவ அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களால் GPUகள் வழங்கப்படும்.
3. சர்வம் திட்டத்தின் LLM திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் மூன்று மாதிரி வகைகளை உருவாக்கி வருகிறது. இவற்றில் மேம்பட்ட பகுத்தறிவு மற்றும் உருவாக்கத்திற்கான பெரியளவிலான சர்வம் (Sarvam-Large) அடங்கும். நிகழ்நேர ஊடாடும் பயன்பாடுகளுக்கான சிறியளவிலான சர்வம் (Sarvam-Small for real-time interactive applications) வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வம்-எட்ஜ் (Sarvam-Edge) சாதனத்தில் சிறிய பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நிறுவனத்தின் இரண்டு இணை நிறுவனர்களில் ஒருவரான பிரத்யுஷ் குமார் பகிர்ந்து கொண்டார்.
4. இந்த வளர்ச்சி டீப்சீக்கின் (DeepSeek) விரைவான எழுச்சியுடன் அதே நேரத்தில் நிகழ்கிறது. டீப்சீக் (DeepSeek) என்பது சீனாவிலிருந்து வந்த குறைந்த விலையிலான அடித்தள மாதிரியாகும். இது AI துறையை சீர்குலைத்துள்ளது. இது கட்டற்ற மென்பொருள் மற்றும் துல்லியமானதாக அறியப்படுகிறது. இது அதன் அமெரிக்க போட்டியாளர்களின் செலவில் ஒரு பகுதியிலேயே கட்டமைக்கப்படுவதாகவும் கூறுகிறது. டீப்சீக்கின் R1 மாதிரி திறந்த ஏஐ (OpenAI) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த சக்திவாய்ந்த GPUகளில் பயிற்சி பெற்றதால், அதன் வெளியீடு என்விடியாவின் (Nvidia) பங்கு வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
5. சர்வம் திட்டத்தின் மாதிரி இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும். இது உள்ளூர் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் மற்றும் புதிய தலைமுறை இந்திய திறமையாளர்களால் உருவாக்கப்படும். நிறுவனத்தின் செய்திக்குறிப்பின்படி, இந்த முயற்சி உத்திக்கான தன்னாட்சியை (strategic autonomy) மேம்படுத்துவதாகும். இது உள்நாட்டு கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவதையும், நீண்டகாலத்திற்கு இந்தியா AI-ல் முன்னணிப் பங்கை வகிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 18,693 GPU-களை வழங்க 10 நிறுவனங்களை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது. இவை இயந்திர கற்றல் கருவிகளை உருவாக்கத் தேவையான உயர்நிலை சில்லுகள் (high-end chips) ஆகும். இந்தக் கருவிகளை ஒரு அடிப்படை மாதிரியை உருவாக்கப் பயன்படுத்தலாம். இந்த எண்ணிக்கை இந்தியா செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் (IndiaAI Mission) உண்மையான இலக்கைவிட அதிகமாகும். அந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் 10,000 GPU-களை மட்டுமே வாங்க திட்டமிட்டிருந்தது.
உங்களுக்கு தெரியுமா? :
1. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது கணினி அறிவியலின் ஒரு துறையாகும். இதில், கணினி அமைப்புகள் (computer systems) மனிதர்களைப் போல சிந்திக்கவும், பகுத்தறிவு செய்யவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் வைப்பதே இதன் நோக்கமாகும். இந்த அமைப்புகள் மனிதனைப் போலவே சிக்கலான சிக்கல்களைத் தீர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2. கணினிகள் மனிதர்கள் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்ள உதவ, இயந்திர கற்றல் (machine learning (ML)) பயன்படுத்தப்படுகிறது. நேரடி அறிவுறுத்தல்கள் தேவையில்லாமல், கணினிகள் தாங்களாகவே பணிகளைச் செய்ய ML அனுமதிக்கிறது. இது தன்னியக்கமாகச் செயல்படுதல் (acting autonomously) என்று அழைக்கப்படுகிறது. தரவுகளுடன் கணினிகளுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் ML செயல்படுகிறது. பயிற்சி பெற்றவுடன், கணினிகள் புதிய தகவல்களின் அடிப்படையில் கணிப்புகளைச் செய்ய முடியும். "பயிற்சி" (training) என்ற சொல் எதிர்கால விளக்கங்களில் மேலும் விளக்கப்படும்.
3. டீப்சீக் (DeepSeek) வெளியிட்ட AI மாதிரியானது இந்தியாவிற்கு ஒரு பாடமாகும். இது நம்பிக்கையையும் தருகிறது. AI மேம்பாட்டு பயணத்தைத் தொடங்குவது ஒருவரின் சொந்த விதிமுறைகளில் சாத்தியம் என்பதை இது காட்டுகிறது. பெரியளவிலான தரவு மையங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதற்கான தீர்வுகளை மேம்படுத்துவதற்கு பெரிய அளவிலான தரவைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
4. டீப்சீக் அதன் குறைந்த விலையில் அடித்தள மாதிரியை (low-cost foundational model) அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் தொழில்நுட்ப பங்குகள் சற்று குறைந்தன. அதன் பிறகு விரைவில், மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ஒரு பெரிய நடவடிக்கையை அறிவித்தார். இது, அரசாங்கம் இப்போது ஒரு உள்நாட்டு பெரிய மொழி மாதிரியை (large language model (LLM)) உருவாக்கி வருகிறது. இது ரூ.10,370 கோடி மதிப்புள்ள IndiaAI திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.