நீதிமன்றம் வளைவதில்லை

இந்துப் பெரும்பான்மையினருக்கு மதமாற்றத்தால் எந்த அச்சுறுத்தலும் ஏற்பட வில்லை. இந்த அடிப்படை தரவை உயர்நிதிமன்றங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

இன்றைய உலகில், மீண்டும் மீண்டும் சத்தமாகசொல்லப்படும் பொய்கள் உண்மையை விட அதிகமாக இருக்க முடியுமா? இதுதான் 'உண்மைக்குப் பிந்தைய' காலத்தின் சாராம்சம். இருப்பினும், பல நிறுவனங்கள் உண்மைத் துல்லியத்தை நிலைநிறுத்துவதற்குப் பணிபுரிகின்றன. இந்தியாவில், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் முக்கியமானவை. 

இருப்பினும், அவர்களின் தீர்ப்புகள் தெளிவான தரவுகளுடன் முரண்படும் போது அல்லது நிறுவப்பட்ட சட்ட முன்மாதிரிகளை விட அகநிலை ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும்போது, ​​அது கவலைக்குரியது மற்றும் ஆபத்தானது. உதாரணமாக, இந்துக்கள் சிறுபான்மையினராக மாறலாம் என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்து இதற்கு ஒரு கவலைக்குரிய உதாரணம். 

 மொத்த கருவுறுதல்  விகிதத்தின் (Total fertility rate)  உண்மைத்தன்மை 

இந்தியாவின் கருவுறுதல் போக்குகள் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று நிலைக்குக் கீழே குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்துக்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் கருவுறுதலில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். இந்த விகிதங்கள் இந்துக்களின் பெரும்பான்மை நிலை பாதுகாப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  

 1992-93 மற்றும் 2019-21 க்கு இடையில், முஸ்லீம் மொத்த கருவுறுதல் விகிதம் 2 புள்ளிகள் குறைந்து 2.4 ஆகவும், இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 1.3 புள்ளிகள் குறைந்து 2 புள்ளிகள் ஆகவும் உள்ளது. ஆழமாக பார்த்தால், கருவுறுதல் வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் மதம் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இடையே உள்ள வேறுபாடு இதற்கு முக்கிய காரணமாகும். 

உதாரணமாக, பீகாரில், இந்துக்களின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.88 ஆகும். கர்நாடகாவில் இந்துக்களின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.05 இல் உள்ள முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விகிதம் விட அதிகமாக உள்ளது. இந்த வேறுபாடு பெரும்பாலும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் காரணமாக அதிக கருவுறுதல் விகிதங்களுக்கு வழிவகுக்கிறது.

 யதார்த்தமற்ற நீதி

நீதிபதிகள் சில நேரங்களில் முறையான நீதிமன்ற நடவடிக்கைகளை விட தனிப்பட்ட பேச்சுகளின் மூலம்  தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்கள், அவை அரசியல் அமைப்பில் கூறப்பட்ட கருத்தை தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உதாரணமாக, ’தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்குப் பதியப்பட வேண்டும்’  அல்லது ’மனைவி என்பவள் சீதை தெய்வத்தைப் போல இருக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றங்கள் பரிந்துரைப்பது கீழ் நீதிமன்றங்களை எதிர்மறையாக பாதிக்கும். மோதலை ஊக்குவிக்கும் நபர்கள் ஏற்கனவே உள்ளனர்.எனவே, நமது நீதிமன்றங்கள் நடுநிலையையும் பகுத்தறிவு கொள்கைகளையயும் முன்னெடுக்க வேண்டும்.

original link:

https://timesofindia.indiatimes.com/blogs/toi-editorials/court-dont-contort/


Share:

பொது நிதித்துறையில் பெண் தலைவர்கள் : பாலின- பொறுப்புணர்வு பட்ஜெட் (gender-responsive budgeting) மூலம் பாலின விளைவுகளை மேம்படுத்துதல் -அபுலா சிங்

சமமான பிரதிநிதித்துவம் நிலையானதாக இருக்க வேண்டும் என்றாலும், நாம் நியாயமான பிரதிநிதித்துவத்திலிருந்து தலைமைக்கு மாற வேண்டும். 
மனித வளர்ச்சி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் உலகளவில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. பெண்கள் இன்னும் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் சட்ட உரிமைகள் ஆகியவற்றை பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலாச்சார தடைகளுடன், சமமற்ற வாய்ப்புகளுக்கும்  வழிவகுக்கிறது. 

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (women’s labour force participation rate) ஆண்களின் 58% உடன் ஒப்பிடுகையில் 25% குறைவாக உள்ளது. சராசரியாக, ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் 34% குறைவாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம், சமூகப் பாதுகாப்பிற்கான அணுகல், நிலம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். கோவிட்-19க்குப் பிறகு பாலின இடைவெளி அதிகரித்துவிட்டது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (World Economic Forum’s) 2023-ன் படி, தற்போதைய பாலின இடைவெளியை குறைப்பதற்கு இன்னும் 131 ஆண்டுகள் ஆகும். 

வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வள ஒதுக்கீட்டில் உறுதியான நடவடிக்கை அவசியம். வள விநியோகத்தில் பாலின சமத்துவம் ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கிறது. அரசாங்கங்கள் தங்கள் திட்டமிடல் மற்றும் பட்ஜெட் முடிவுகள் மூலம் முக்கிய பங்கு வகிக்க முடியும். வலுவான பொது நிதி மேலாண்மை (Public Finance Management (PFM)) அமைப்புகள் அரசாங்க செலவினங்கள் பொது சேவைகளை மேம்படுத்துகிறது, வறுமையை குறைக்கிறது, சம வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்துகிறது.
அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை பொது சேவைகளுக்காக செலவிடுகிறது. இந்த செலவின முடிவுகளுக்கு பாலினக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துவது பாலின விளைவுகளை பெரிதும் மேம்படுத்தும். 
தலைமைப் பதவிகளில் உள்ள பெண்கள் செயல்திட்டத்தை மேலும் தொடரலாம்    

நிதி நிறுவன வாரியங்களில் பெண் தலைமை மற்றும் பன்முகத்தன்மை அதிக நிதி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியம், பாலின வியூகம் 2022 -ஆம் ஆண்டு அறிக்கை (IMF’s Gender Strategy 2022) கூறுகிறது. பெண் அரசியல் தலைவர்கள் உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரித்து பெண்களின் கல்வியை மேம்படுத்துகின்றனர். இந்திய பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் மீதான ஆராய்ச்சி, பெண் தலைவர்கள் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, சுகாதாரம், கல்வி மற்றும் இளம் பெண்களின் தலைமைத்துவ தேவை அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.  
பொது நிர்வாகத்தில் அதிகமான பெண்கள் அரசாங்கத்திற்கு அதிக பொறுப்புணர்வை உருவாக்குகிறார்கள், சேவை தரத்தை மேம்படுத்துகிறார்கள் மற்றும் குடிமக்களின் நம்பிக்கையை வளர்க்கிறார்கள். தனியார் துறையில், நிர்வாகத்தில் உள்ள பெண்கள் சிறந்த தலைவர்களாகவும், ஊழியர்களுக்கு ஆதரவாகவும், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துகின்றனர். பெண் தலைவர்கள் பெண்களின் தேவைகளை அறிந்து நியாயமான முடிவுகளை எடுக்கிறார்கள். 

குறிப்பாக, பொது நிதித்துறையில் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். 11% நாடுகளில் மட்டுமே நிதியமைச்சகங்களில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண் நிதி அமைச்சரைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், அரசாங்கத்தின் அடுத்த அடுக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.  

மாநிலங்களில், டெல்லியில் மட்டுமே ஒரு பெண் நிதி அமைச்சர் உள்ளார். ஒன்றிய  நிதி ஆணையம் (Central Finance Commissions (CFC)), வள ஒதுக்கீட்டில் முக்கிய பங்காற்றி வருகிறது.  ஆணையத்தில்  பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.  16-வது ஒன்றிய  நிதி ஆணையத்தில்  ஐந்து உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். கடைசி ஆறு ஒன்றிய  நிதி ஆணையங்களில்   இரண்டில் மட்டுமே பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். பெண்களின் பிரதிநித்துவம் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இருந்து வருகிறது.
 
இந்திய அரசின் நிதித் துறைகளில் பணிபுரியும் பெண்களில் 22% மட்டுமே பெண்கள் என்று புள்ளிவிவர அமைச்சக அறிக்கை (statistics ministry report) காட்டுகிறது. மாநில நிதித் துறைகளில், பெண்கள் 27% மட்டுமே உயர் பதவிகளை வகிக்கின்றனர். மேலும் ஒரு மாநிலத்தில் மட்டுமே பெண் நிதித் துறைத் தலைவர் உள்ளனர். 

திறமைக் குழுவில் கணிசமான பகுதியைக் கொண்டிருந்தாலும், நிதி மற்றும் பொது நிதி ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. உலகளவில், அவர்கள் பொருளாதார பட்டதாரிகளில் சுமார் 30% மற்றும் வணிக பட்டதாரிகளில் 50% உள்ளனர் என்று 2018-ஆம் ஆண்டு  சர்வதேச நிதி நாணயத்தின் (International Monetary Fund (IMF)) அறிக்கை  கூறியது. 
 
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் பட்ஜெட் உருவாக்கம், ஒப்புதல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் பாலின-பொறுப்புணர்வு கொள்கைகள் மற்றும் வள ஒதுக்கீட்டிற்காக வாதிடுகின்றனர். 

பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம், 2023 (Women Reservation Act, 2023) மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இட ஒதுக்கீடு  கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும் என்று பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கூறுகிறது. சில மாநிலங்கள் பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குகின்றன. 

சமமான பிரதிநிதித்துவத்தை அடைவது முக்கியம். ஆனால், அரசியல் மற்றும் நிதியில் தலைமைப் பாத்திரங்களை ஏற்க பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் பெண் நிதியமைச்சர் நியமனம் பொது நிதி நிர்வாகத்தில் (Public Financial Management (PFM)) பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அதிக தகுதி வாய்ந்த பெண்களை பொது நிதி நிர்வாகத்தில் சேர்ப்பது  மற்றும் தலைமைப் பயிற்சி வழங்குவது, சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். 

பாலின ஏற்றத்தாழ்வுகளை விரைவாக குறைக்க முடியாது என்றாலும், பாலினப் பொறுப்பு பட்ஜெட் (Gender Responsive Budgeting (GRB)) வேலைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாலின இடைவெளிகளைக் குறைக்க உதவும். பாலின சமத்துவத்தை மேம்படுத்த பாலினப் பொறுப்பு பட்ஜெட்டை பயன்படுத்தும் 100 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், அதன் பயன்பாடு குறைவாக உள்ளது. 

அரசாங்க திட்டமிடல் செயல்முறைகளின் வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் போது பாலின சமத்துவம் முழுமையாகக் கருதப்படுவதில்லை. அனைத்து அரசாங்க திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள துறைசார் வரவு செலவுத் திட்டங்களில் பாலினப் பொறுப்பு பட்ஜெட்டை  சேர்ப்பதன் மூலம் பாலின இடை வெளியை குறைத்து, முக்கிய தேசிய வளர்ச்சி இலக்குகள் மற்றும் உத்திகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த முயற்சிகளை செய்ய பெண்களை விட சிறந்தவர் யார்?  
அபுலா சிங், குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்ரஹா மையத்தின் மேலாளராக உள்ளார்.  

original link:


Share:

விமான நிலைய மேற்க்கூரை விபத்துக்கள் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் காட்டுகின்றன

 செயல்பாட்டு பொறுப்புகள் குறித்த தெளிவின்மை கவலையளிக்கிறது.

டெல்லி, ராஜ்கோட், லக்னோ மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில் விமான நிலைய மேற்க்கூரைகள் விழுந்தன. இந்த விபத்துகள் இரண்டு கோணங்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. முதலாவதாக, இது இந்த மேற்க்கூரைகளின் வடிவமைப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  கடுமையான மழை, மற்றும் புயல் இருந்தாலும், தாங்கும் திறன் ஏன் இல்லை? டெல்லி அதன் முழு பருவமழையில் மூன்றில் ஒரு பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றதாக நம்பப்படுகிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் இனி அரிதானவை அல்ல. இன்றைய கட்டிடங்கள் இந்த காரணியை கணக்கில் கொள்ள முடியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


விவரங்கள் தெரியவில்லை, ஆனால் மேற்க்கூரையில் வேகமாக சேகரமாகும் மழை நீருக்கு போதுமான  வடிகால்கள் இல்லாமல் இருக்கலாம். மழை நீரை மேற்க்கூரையின் கீழ் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த விபத்துக்கள் தொழில்நுட்ப அலட்சியத்தையும், பராமரிப்பில் அலட்சியத்தையும் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு நாட்டிற்கு இது கவலையளிக்கிறது.


இரண்டாவதாக, பொறுப்புக்கூறலை நிறுவுவதற்கான தெளிவான விதிகள் அல்லது சட்டங்கள் இல்லை. தனியார் கூட்டமைப்பு அல்லது பிரதான ஆபரேட்டர் பொறுப்பேற்க வேண்டும். விபத்துக்குள்ளான விமான நிலையங்கள் ஒரு கூட்டமைப்பால் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டமைப்பு இந்திய விமான நிலைய ஆணையத்துடன் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Operation, Management and Development Agreement (OMDA)) கையெழுத்திட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 74:26 என்ற விகிதத்தில் விமான நிலையத்தின் பங்குதாரராக. உள்ளன. இருந்தாலும், இந்த நிகழ்வில் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தின் நோக்கம் தெரியவில்லை.  


விமான நிலையங்களின் பல்வேறு பகுதிகளை நிர்மாணிக்கும் பணிகளை இந்த கூட்டமைப்பு பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறது. ஒப்பந்தச் சட்டத்தின்படி, முதன்மை ஒப்பந்தக்காரர் அல்லது கூட்டமைப்பு முதன்மை பொறுப்பாகும். இருப்பினும், கூட்டமைப்பு மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் தன்மை தெரியவில்லை. துணை ஒப்பந்தக்காரர்கள் பராமரிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அப்படியானால், சட்ட நிலைப்பாடு தெளிவாக இல்லை.  குறைபாடுகள் நிரூபிக்கப்பட்டால் முகவர் பொறுப்பேற்க முடியும். டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இடையேயான வழக்கில் ஜூலை 2022 இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கட்டணங்கள் மற்றும் வருவாய் பகிர்வு தொடர்பான மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Operation, Management and Development Agreement (OMDA)) இன் அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது. 

பயணிகள் மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பயனர் மேம்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் விமான நிலையப் பயனர்கள், விபத்துகளின் போது பற்றாக்குறையாக உணர்கிறார்களா? கூட்டமைப்புக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்க்கும் இடையிலான வருவாய் பகிர்வு மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.  

இந்தியாவின் உள்கட்டமைப்பு ஒழுங்குமுறை மற்றும் செயல்பாடுகள் பல தெளிவற்ற பகுதிகளைக் கொண்டுள்ளன.   இந்த பிரச்சினைகளை கொள்கை முன்னுரிமையாக மாற்றுவது முக்கியம்.  

original link:
Share:

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு ஓர் உள்நாட்டு பாதுகாப்பு திட்டம் (internal security plan) ஏன் தேவை?

 ஒரு நாடு உள்நாட்டில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறது மற்றும் அதன் வேறுபாடுகளை எவ்வளவு நன்றாகத் தீர்த்துக் கொள்கிறது என்பதன் அடிப்படையில் உலகளவில் அதன் வலிமையைக் காட்டுகிறது. பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ வளரக்கூடிய பகுதிகள் இருக்கக் கூடாது.

    தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இப்போது உறுதியாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதமர் ஏற்கனவே நிறைய சாதித்துள்ளார். சர்வதேச அளவில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உச்சத்தில் உள்ளது. நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இனி இந்தியாவை மிரட்ட முடியாது என்பதை சீனா முதல் முறையாக உணர்ந்துள்ளது. கடுமையான மோதலாக இருந்தாலும், சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. 

    அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அரசாங்கம் நன்கு திட்டமிடப்பட்ட திட்டத்தை வைத்திருக்க வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய ஒன்பது முக்கிய குறிப்புகள் தீவிர கவனம் தேவை.

    ஒன்று, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு தேசிய பாதுகாப்பு கோட்பாடு (national security doctrine (NSD)) தேவை. தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (National Security Advisory Board) அதற்கான திட்டங்களை வரைந்துள்ளது. ஆனால், அறியப்படாத காரணங்களுக்காக அவை ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை. அனைத்து முக்கிய நாடுகளும் தேசிய பாதுகாப்பு உத்தியை (National Security Strategy (NSD)) கொண்டுள்ளன. இந்த ஆவணம் நாடு எதிர்கொள்ளும் உள் மற்றும் வெளிப்புற சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளுடன் கோடிட்டுக் காட்டுகிறது. முழு தேசிய பாதுகாப்பு உத்தியை உருவாக்குவதில் சிக்கல்கள் இருந்தால், குறைந்தபட்சம் எளிமையான உள்நாட்டு பாதுகாப்புப் பகுதியையாவது முதலில் உருவாக்கலாம். குறிப்பாக அரசாங்கங்கள் மாறும்போது உள்நாட்டு பாதுகாப்பு சவால்கள் சீரற்ற முறையில் கையாளப்படுகின்றன.  

    இரண்டு, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மிகவும் நிர்வகிக்க கடினமானதாகவும், அதனால் விதிமுறைக்கு அப்பாற்பட்டதாகவும் மாறிவிட்டது. உடனடி கவனம் தேவைப்படும் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில், அவர்கள் தகுதியான உடனடி மற்றும் முழுமையான கவனத்தை அடிக்கடி பெறுவதில்லை.  உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் ஓர் இளம் அமைச்சருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக்கான சுதந்திரமான பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த அமைப்பு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ராஜேஷ் பைலட் நிருபித்தார். 

    மூன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து பயங்கரவாத சம்பவங்கள் 66% குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினாலும், நிலைமை சாதாரணமாக இல்லை. சமீபத்தில் ஜம்மு பகுதியில் 4 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் உண்மையில் "நயா காஷ்மீர்" (Naya Kashmir) நிலையை சீர்குலைக்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானின் முக்கியமான அரசின் நோக்கங்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசாங்கம் விரைவாக பாதுகாப்பை மறுசீரமைக்க வேண்டும். ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் மற்றும் சட்டமன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    நான்கு, பிரதமர் வடகிழக்கு பகுதியை, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி" என்று அழைத்தார். துரதிர்ஷ்டவசமாக, இதன் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடிய சிக்கல்கள் உள்ளன. நாகா கிளர்ச்சியாளர்களுடனான 2015 கட்டமைப்பு ஒப்பந்தம் நம்பிக்கையை அளித்தது.  ஆனால், இந்த நம்பிக்கைகள் நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (National Socialist Council of Nagaland(NSCN)) (IM) இன் தனிக் கொடி மற்றும் அரசியலமைப்பிற்கான கோரிக்கையின் காரணமாக நிறைவேறவில்லை. அரசாங்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மிரட்டி பணம் பறிப்பதையோ அல்லது வலுக்கட்டாயமாக ஆட்களை சேர்ப்பதையோ தடுக்க வேண்டும். மணிப்பூர் இன மோதல்கள் மற்றும் ஆங்காங்கே வன்முறைகளை எதிர்கொள்கிறது. உள்துறை அமைச்சகத்தின் பல இன அமைதிக் குழு பலனளிக்கவில்லை. நிலைமையை பிரதமர் தனிப்பட்ட முறையில் பேசுவது இப்போது அவசியமாகப் பார்க்கப்படுகிறது. சட்டவிரோத இடம்பெயர்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் முழுமையான உத்தி தேவை. 


    ஐந்து, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பிப்ரவரி 7 அன்று மாநிலங்களவையில், "தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்" (national policy and action plan) குறைந்த வன்முறைக்கு வழிவகுத்தது மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் (left-wing extremism (LWE)) பாதிக்கப்பட்ட பகுதியைக் குறைத்தது என்று கூறினார். 2010-ல் இருந்து வன்முறை மற்றும் இறப்புகள் 73% குறைந்துள்ளன. 2010-ல் 96 மாவட்டங்களில் 465 காவல் நிலையங்களில் இருந்து 2023-க்குள் 42 மாவட்டங்களில் 171 நிலையங்களான சம்பவங்கள் குறைந்துள்ளன. இப்போது, ​​நக்சல்கள் தளத்தை இழந்துள்ளதால், சமரச முயற்சிகளுக்கான நேரம் இதுவாக உள்ளது.


ஆறு, புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau (IB)) மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation(CBI)) ஆகிய இரண்டு முக்கிய மத்திய காவல் நிறுவனங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். புலனாய்வுப் பணியகம் (IB) டிசம்பர் 23, 1887-ல் நிர்வாக உத்தரவு மூலம் நிறுவப்பட்டது. அரசியல் ஆதாயத்திற்காக உளவுத்துறையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இப்போது சட்டப்பூர்வமாக நிறுவப்பட வேண்டும். மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) ஏப்ரல் 1, 1963 அன்று ஒரு தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது. தில்லி சிறப்புக் காவல் உருவாக்கச் சட்டம் (Delhi Special Police Establishment Act), 1946-ல் இருந்து விசாரிக்கும் அதிகாரத்தைப் பெறுகிறது. நாடாளுமன்றக் குழுவின் 24-வது அறிக்கை, மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (CBI) வலுவான சட்ட அதிகாரங்கள், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிக வளங்கள் தேவை என்று தெரிவிக்கிறது.


ஏழு, பிரதமர் அலுவலகமானது, மக்கள் பிரதமர் அலுவலகமாக (People's PMO) செயல்பட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இது நடக்க வேண்டும்! ஆனால் அதைவிட முக்கியமானது ஆங்கிலேயரிடம் இருந்து நமக்குக் கிடைத்த "ஆளும் காவல்" (Ruler's Police) என்பதை "மக்கள் காவல்" (People's Police) ஆக மாற்றுவது ஆகும். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ராபர்ட் பீல், அந்நாட்டின் காவல்துறையை சீர்திருத்தியதற்காக இன்னும் நினைவுகூரப்படுகிறார். நமது பிரதமருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு மற்றும் சவாலாகும்.


எட்டு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட மத்திய ஆயுதக் காவல் படைகள் குறிப்பிடத்தக்க உள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. திட்டமிடப்படாத வளர்ச்சி, சீரற்ற பணியமர்த்தல், போதிய பயிற்சியின்மை, ஒழுக்கம் தரநிலைகள் சரிவு, உயர் அதிகாரி தேர்வுக்கான தெளிவற்ற அளவுகோல்கள் மற்றும் தரபிரிவு (cadre) மற்றும் அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு இடையேயான பதட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். இப்பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்விற்காக அரசு உயர் அதிகாரம் கொண்ட குழுவை நியமிப்பது நல்லது.


ஒன்பது, இந்தியாவில் காவல் பணியை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. இது அவர்களின் செயல்திறனைப் பெருக்க முடியும். 2021ல் லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில், உயர் ஆற்றல் கொண்ட தொழில்நுட்ப பணியை அமைக்க வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தார். காவல்துறை எதிர்கொள்ளும் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களைச் சமாளிக்க சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைப் பரிந்துரைப்பதே இதன் வேலையாக இருக்கும். பயங்கரவாதிகளையோ தீவிரவாதிகளையோ வளர விடாமல், உள்நாட்டில் ஒன்றுபட்டு, வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் போது, ​​ஒரு நாடு தனது வலிமையை உலகளவில் வெளிப்படுத்துகிறது. தொலைநோக்குடனும் கற்பனையுடனும் நடவடிக்கை எடுப்பது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்தும்.

original link:

https://indianexpress.com/article/opinion/columns/india-internal-security-plan-next-five-years-9409874/


Share:

மேற்கு ஆசியாவில் தற்போதைய மோதல்கள் : இஸ்ரேல் - ஹமாஸ் போர் மற்றும் ஏமனில் நிலைமை

 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏன் மேற்கு ஆசியாவில் மோதல்களை அதிகரிக்க வழிவகுக்கிறது? இது மற்ற முன்னேற்றங்களை எவ்வாறு சிக்கலாக்குகிறது மற்றும் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை எவ்வாறு  பாதிக்கிறது?

கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்தது. இது பாலஸ்தீன விவகாரத்தில் அனைவரின் கவனத்தியும் ஈர்த்தது. இது போன்ற மோதல்கள், போர் பதற்றத்தை மீண்டும் தீவிரப்படுத்தியது மற்றும் மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுடனான அரபு இயல்புநிலை போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலும் சிக்கலாக்கியது.

ஏமன் மோதல் மற்றொரு எடுத்துக்காட்டு. நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர், பத்தாண்டுக்கு மேலாக நீடித்து வரும் மோதலைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக மாறியது. நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் சிக்கிக் கொண்டு பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் செங்கடலில் கப்பல் தாக்குதலைத் தொடங்கியதால் அமைதிக்கான பேச்சுவார்த்தை மேலும் சிக்கலாக்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள சூழ்நிலையை ஆராய்வதற்கு முன், ஏமன் மோதலுக்கான காரணத்தைக் பார்க்கலாம்: இந்த மோதல் 2011 அரபு வசந்த எழுச்சியுடன் (Arab Spring) தொடங்கியது, அங்கு பல மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேற்கு ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் 2011 இல்  ஏமனில் மோதல் தொடங்கியது. இப்பகுதியில் உள்ள மற்றவர்களைப் போலவே ஏமனியர்களும் சிறந்த வேலைகள், நியாயமான அரசாங்கம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்தப் போராட்டங்களில் இணைந்தனர். 

துனிசியா அல்லது எகிப்து போல இல்லாமல், எதிர்ப்புக்கள் அதிகரித்தவுடன் ஆட்சி கவிழ்ந்தது. ஏமனியர்கள் அப்துல்லா சலேவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு கடுமையாக போராட வேண்டியிருந்தது. வளைகுடா ஒத்துழைப்பு  சபை (Gulf Cooperation Council) தலைமையிலான மாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2012-ல் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகினார். அதனை தொடர்ந்து துணை அதிபராக இருந்த  அப்தோ ரப்பு மன்சூர் ஹாடி, போட்டியின்றி தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபரானார். தேசிய உரையாடல், அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய தேர்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு வருட மாற்ற காலத்தை மேற்பார்வையிட ஹாடி தேர்வு செய்யப்பட்டார். எவ்வாறாயினும், செப்டம்பர் 2014-ல் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிபர் ஹாடியின் அரசாங்கத்தைக் கவிழ்த்தனர் இதன் காரணமாக பல்வேறு முன்னேற்றங்கள் தடைபட்டது.  இந்த நிகழ்வுகள் ஏமனில் நீண்ட கால மோதல்களுக்கு வழிவகுத்தது.  

நடந்து கொண்டிருக்கும் மோதல்

ஏமனில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சூடான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 10 நாடுகளின் கூட்டணியை சவுதி அரேபியா தலைமையில் இராணுவ ரீதியாக அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.  

 கூட்டணி மார்ச் 2015-ல்  ”தீர்க்கமான புயல் செயல்முறை” (Operation Decisive Storm) என்ற குறியீட்டு பெயரில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. பின்னர் ஏப்ரல் 2015-ல் நம்பிக்கையை மீட்டெடுக்கும் செயல்பாடு (Operation Restoring Hope) என மறுபெயரிடப்பட்டது. முக்கியமான துறைமுக நகரமான ஏடன் உட்பட தெற்கு யேமனில் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை வெளியேற்றுவதே அவர்களின் இலக்காக இருந்தது.  

அரேபிய கடலுக்கும் செங்கடலுக்கும் இடையிலான ஒரு முக்கிய பாதையான பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை (Bab al-Mandeb strait ) கட்டுப்படுத்துவதால் ஏடன் முக்கியமானது. இதன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு தினமும் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் அனுப்பப்படுகிறது.    

இருப்பினும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை (internationally recognised government (IRG)) மீட்டெடுக்கவோ அல்லது தலைநகரான சனாவிலிருந்து கிளர்ச்சியாளர்களை வெளியேற்றவோ கூட்டணியால் முடியவில்லை. வரும் ஆண்டுகளில், இந்த மோதல் அரபு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றை அழிக்கும். 30 மில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் உலகளவில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை விவரித்தது. 


ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் படி, உணவுப் பற்றாக்குறை, சுகாதாரப் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்பு போன்ற மறைமுக காரணங்களால் 131,000 பேர் உட்பட, மோதலில் சுமார் 233,000 பேர் இறந்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, 18.2 மில்லியன் ஏமன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. 17.6 மில்லியன் மக்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். மேலும், 4.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  


இதற்கிடையில், வடக்கு யேமன் மற்றும் தெற்கு இயக்கத்தில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் அல்லது அல்-ஹிராக் அல்-ஜானூபி, நிலவும் நிச்சயமற்ற சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். 


ஈரானின் ஆதரவுடன் ஹவுதிகள் வடக்கு ஏமனில் தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்தினர். இதற்கிடையில், தெற்குப் படைகள், குறிப்பாக 2017-ல் உருவாக்கப்பட்ட தெற்கு இடைக்கால கவுன்சில் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன், தெற்கு யேமனின் சுதந்திரத்திற்காக வாதிடுகின்றனர். இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் இன்னும் விரும்பிய முடிவுகளை அடையவில்லை.


இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ஏமன் நெருக்கடி

2016-ஆம் ஆண்டு முதல் சில சுற்று முடிவில்லாத அமைதிப் பேச்சுக்களைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை 2022 ஏப்ரலில் ஒரு போர் நிறுத்தத்திற்கான  பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அக்டோபர் 2022-ல் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களும், வடக்கே ஏமனை எல்லையாகக் கொண்ட சவுதி அரேபியாவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. மார்ச் 2023-ல், சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த சீனா உதவியது. இது ஏமனுடனான  மோதலைத் தீர்க்க உதவும் என்று சில பார்வையாளர்கள் நம்பினர்.


இருப்பினும், அக்டோபர் 7-ஆம் தேதி  ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக "அல்-அக்ஸா செயல்முறை" (Operation Al-Aqsa Storm) பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இஸ்ரேல் "வாள்கள் இரும்பு செயல்முறை"  (Operation Swords of Iron) மூலம் எதிர் தாக்குதல் நடத்தியது மற்றும் காசாவில் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள தற்போது நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

  

இதன் காரணமாக, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்து, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர். ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் பதில் தாக்குதல் நடத்தியது.


மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் அதன் போரின் காரணமாக ஏற்படும் கடுமையான விளைவுகளின் நிமித்தம் ஹூதிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.  இதன் காரணமாக ஏமனில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பு மேலும் சிக்கலாகியது.

இந்தியா பற்றிய கவலைகள் 

     

மேற்கு ஆசியாவின் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. நிச்சயமற்ற பாதுகாப்பு சூழ்நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பே இந்தியாவின் முதன்மையான நோக்கமாகும்.

  எனவே, ஏமனில் நிலைமை வன்முறையாக மாறியதால், இந்தியா தனது 4,741 இந்தியர்களையும், 41 நாடுகளைச் சேர்ந்த 1,947 வெளிநாட்டினரையும் ஏப்ரல் 2015-ல் ஆபரேஷன் ரஹத் (Operation Rahat) திட்டத்தின்  ஏமனில் இருந்து வெளியேற்றியது. இதையடுத்து, அது தனது தூதரகத்தை ஜிபூட்டிக்கு (Djibouti) மாற்றியது.

ஏமனில் ஐக்கிய நாடுகள் சபையின்  போர்நிறுத்த முயற்சிகளுக்கு இந்திய தனது ஆதரவை வழங்கியது. ஏமன் உடனான வரலாற்று மற்றும் நட்புறவு காரணமாக, இந்தியா ஏமன் நாட்டிற்கு உதவ ஏமன் நண்பர்கள் குழுவில் (Friends of Yemen Group) இணைந்தது. கூடுதலாக, இந்தியா ஆகஸ்ட் 2012 மற்றும் மார்ச் 2013-ல் தலா $2 மில்லியன் மதிப்புள்ள அரிசி மற்றும் கோதுமையை மனிதாபிமான அடிப்படையில் வழங்கியது. 

ஏப்ரல் 2015-ல் மருத்துவ உதவியை வழங்கியது மற்றும் ஏமன் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 2017-டிசம்பரில் இந்தியா$1 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உதவியை வழங்கியது. மார்ச் 2021-ல், COVAX திட்டத்தின் கீழ் இந்தியா 360,000 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏமனுக்கு இந்தியா வழங்கியது. இருப்பினும், நடந்து கொண்டு இருக்கும் போரின் காரணமாக இந்தியா-ஏமன் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2010-11-ல் $2,258.00 மில்லியன்களாக இருந்த வர்த்தக அளவு 2017-18-ல் $716.52 மில்லியனாக குறைந்துள்ளது. 

ஏமனில் இருந்து இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி குறைந்துள்ளது. வளைகுடாவில் இருந்து இந்தியாவின் மொத்த எரிசக்தி இறக்குமதியில் ஏமனின் பங்கு சிறியதாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த மதிப்பிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. 2009-10-ல் வளைகுடாவில் இருந்து இந்தியாவின் மொத்த எரிசக்தி இறக்குமதியில் 2.80 சதவீதமாக இருந்த இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியில் ஏமனின் பங்கு 2015-16ல் பூஜ்யமாகக் குறைக்கப்பட்டது. 

கூடுதலாக, தற்போதைய பிராந்திய மோதல்கள் இந்தியாவின் நலன்களை கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அதன் ஆற்றல் தேவைகளை பெரிதும் சார்ந்துள்ளது. வளைகுடா நாடுகள் இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவைகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வழங்குகின்றன.  

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம் மற்றும் சாபஹர் துறைமுகம் போன்ற முன்முயற்சிகள் மூலம் பிராந்திய இணைப்பு,  வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சி, பிராந்தியத்தில் நிலைத்தன்மையை  மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 


எனவே, இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள தீவிரம் மற்றும் எண்ணற்ற உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு ஆகியவை பிராந்தியத்திற்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் வல்லரசுகளுக்கும் மிகவும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.    

original link:

https://indianexpress.com/article/upsc-current-affairs/upsc-essentials/conflicts-in-west-asia-israel-hamas-war-yemen-conflict-upsc-9430046/


Share:

அந்நிய முதலீட்டை ஈர்க்க மோடி பொருளாதாரம் (Modinomics) ஏன் தவறிவிட்டது? -ஜோஷ் ஃபெல்மன் , அரவிந்த் சுப்ரமணியன்

 தனியார் முதலீடு பலவீனமாக உள்ளது, ஏனெனில் அது வருமானத்தைப் புரிந்துகொள்கிறது, ஆனால் அபாயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

தனியார் முதலீடு ஏன் மிகவும் பலவீனமாக உள்ளது? பதில் : மோடி பொருளாதாரம் (Modinomics) வருவாயைப் புரிந்துகொள்கிறது. ஆனால், இதைச் சார்ந்த அபாயத்தை எதிர்கொள்வதில்லை. உண்மையில், மோடி பொருளாதாரம் என்பது முதலீட்டை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய உத்தியாகும். முக்கியமாக, "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முன்முயற்சியின் கீழ் முதலீடுகளை அதிகரிப்பதையும், உலகளாவிய உற்பத்தியை வற்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தியில் முதலீடு செய்ய உள்நாட்டு நிறுவனங்களும் தயக்கம் காட்டி வருகின்றன. ஒரு புதிய சிந்தனை தொடங்குகையில், கேள்வி இதுதான்: என்ன தவறு நடந்தது? அந்நிய நேரடி முதலீடு (foreign direct investment (FDI)) குறைந்து ஒட்டுமொத்த முதலீடுகள் தேக்கமடைந்து வருவது ஏன்?

இந்த நிலைமை அரசாங்கத்தை கவலையடையச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக, முதலீட்டை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி விகிதம் (corporate tax rate) குறைக்கப்பட்டுள்ளதால், தாராளமானதாக உற்பத்திக்கான மானியங்கள் கிடைக்கின்றன. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. நீண்ட கால கடன்களை அனுமதிக்க வங்கி இருப்புநிலைக் குறிப்புகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் கணிசமான அளவில் வேலையும் பொதுச் செலவும் தேவைப்பட்டன. ஆனால் இதுவரை, தனியார் துறையின் பதில் கிடப்பில் உள்ளது.

ஏன்? இதன் நடவடிக்கைகள் மூலம், பல செலவுகளைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. சிலர் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். மற்றவர்கள் வரிக்குப் பிந்தைய லாபத்தை அதிகரிக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் ஒரு பொதுவான இலக்கு உள்ளது. முதலீட்டிற்கான வருமானத்தை அதிகரிப்பது ஆகும்.  

நிறுவனங்கள் வருமானத்தை முதன்மைபடுத்துகின்றன. ஆனால், அவை அபாயங்களை நிர்வகிப்பதற்கு சமமான நடவடிக்கையை கொண்டுள்ளன. மீள்தன்மை மற்றும் அளவிடுதல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி பல அபாயங்களை நிர்வகிக்க முடியும். உதாரணமாக, போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை விரைவாக திரும்பப் பெறலாம். இது ஆரம்பகால முதலீடுகளை ஊக்குவிக்கிறது. இதனால்தான் அந்நிய நேரடி முதலீடு  வரவாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சேவை நிறுவனங்கள் அளவிடுதலைப் பயன்படுத்தி ஆபத்தை நிர்வகிக்கின்றன. தகவல் தொழில்நுட்ப சேவைகளை (IT services) விற்க, ஒருவருக்கு சில திறமையான நபர்கள், சில கணினிகள் மற்றும் நல்ல இணைப்பு தேவை. வியாபாரம் வெற்றி பெற்றால், அதை படிப்படியாக அளவிட முடியும்.

உற்பத்தி முற்றிலும் வேறுபட்டது. இந்தத் துறையில் முதலீடுகள் கணிசமானவை, சிறிய பகுதிகளாகப் பிரிக்க முடியாது, ஒரு முறை செய்த பின் செயல்தவிர்ப்பது கடினம். குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன் மேலாளர்கள் அபாயங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.  

நரேந்திர மோடியின் முதல் பதவிக்காலத்தில், முதலீட்டுக்கான அபாயத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட ஆட்சியை அறிமுகப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலம் பேரியல் நிலைத்தன்மையை (macro stability) மீட்டெடுக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக இருந்தது. கடன்கள் தவறாக நடந்தால், புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code(IBC)) வழியாக வங்கிகளுக்கு சட்டப்பூர்வ உதவியை வழங்குவதன் மூலம், வங்கிகளுக்கான அபாயங்களைக் குறைக்க அரசாங்கம் முயற்சித்தது. 

இருப்பினும், மோடியின் இரண்டாவது பதவி காலத்தின் போது, இடர் மேலாண்மை திறம்படக் கையாளப்படவில்லை. சில நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் ஆபத்தை அதிகரித்தன.  ஒரு முதலீட்டாளரின் கண்ணோட்டத்தில், அபாயங்களானது, போட்டியாளர்களுக்கு சாதகமான செயல்கள், கட்டாயப்படுத்தும் செயல்கள் மற்றும் விநியோகச் சங்கிலியை பாதிக்கும் செயல்கள் என மூன்று வகையான மாநில நடவடிக்கைகளிலிருந்து வருகின்றன. இதில், ஒவ்வொன்றையும் கருத்தில் கொள்வோம். 

முதலாவது "தேசிய சாம்பியன்களின் ஆபத்து" (national champions risk) என்று அழைக்கப்படலாம். பல சந்தர்ப்பங்களில், ஒரு தேசிய சாம்பியனை ஊக்குவிக்கும் வாய்ப்பைப் பார்த்தபோது, ​​அரசாங்கம் திடீரென கொள்கை கட்டமைப்பை மாற்றியுள்ளது. அத்தகைய அணுகுமுறையின் ஈர்ப்பு வெளிப்படையானது: அது வெற்றியடைந்தால், ஒரு இந்திய நிறுவனம் முதலீடு செய்து, பெரியளவிலும், வெற்றியடையும் மற்றும் உலகளாவிய களத்தில் நுழையும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த நாடுகளின் உத்தியானது ஒரு குறைபாட்டைக் கொண்டுள்ளது. இது மற்ற அனைத்து உள்நாட்டு நிறுவனங்களையும் ஒரே உற்பத்தி இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ நுழைவதைத் தடுக்கிறது. அவர்களின் மாற்ற முடியாத முதலீடு செய்யப்பட்டவுடன், கொள்கை கட்டமைப்பானது அவர்களுக்கு பாதகமாக மாறக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். 

இந்த ஆபத்துக்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம். இது ஆன்லைன் மற்றும் உடல் சில்லறை விற்பனை, விமான நிலையங்கள், சிமென்ட், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகங்களில் தோன்றியுள்ளது. எங்கள் "2A களங்கப்படுத்தப்பட்ட முதலாளித்துவம்" (2A stigmatised capitalism) என்ற சொல் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமங்கள் அனுபவிக்கும் சலுகை அந்தஸ்தைக் குறிக்கிறது. இது ஒரு முழக்கம் மட்டுமல்ல, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல நிறுவனங்களுக்கு ஒரு யதார்த்தம் அல்லது கவலையாக உள்ளது. 

 இரண்டாவது ஆபத்து ஆக்கிரமிப்பு வரி வசூல் (aggressive tax collection) போன்ற நேரடி மற்றும் கட்டாய அரசு நடவடிக்கையிலிருந்து வருகிறது. இதுபோன்ற கொள்கைகள் அரசுக்கு நன்மை பயக்கும். வருமான வரி வருவாயில் சுமார் 40 சதவீதம் (பெருநிறுவன மற்றும் தனிநபர்) கூடுதல் வரி கோரிக்கைகளிலிருந்து வருகிறது. இருப்பினும், அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate(ED)) அல்லது வரி அதிகாரிகளின் (tax authorities) தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனை, அல்லது ஒழுங்குமுறை நிறுவனங்கள் தன்னிச்சையான தீர்ப்புகளை வழங்கினால், அல்லது நடவடிக்கைகள் மிரட்டி பணம் பறிப்பது போல் தோன்றினால், இந்த ஆபத்திற்கான கருத்து இன்னும் மோசமடைகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் இது நடந்தது. இதனால், லட்சக்கணக்கான கோடி முதலீடுகள் அழிக்கப்படலாம். வெளிப்படையான வருவாய் தொடர்பான சாதகமான விளைவு நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஏனெனில், பெரும்பாலான கூடுதல் வரி கோரிக்கைகள் நீதிமன்றங்களில் நிராகரிக்கப்படுகின்றன.

முக்கிய சந்தர்ப்பங்களில், கெய்ர்ன் / வேதாந்தா மற்றும் வோடஃபோன் ஆகியவை அரசாங்கத்தின் முன்தேதியிட்டு வரிகளை சமன் செய்ய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களைப் பயன்படுத்தின. அவர்களின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் உறுதி செய்தபோது அரசாங்கம் தயங்கியது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் வரியை திரும்பப் பெற்றது. ஆனால், அது மெதுவாகவும் தயக்கமாகவும் இருந்தது. மேலும், அதன் அனைத்து இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களும் காலாவதியாகி, முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் வழிமுறையாக இல்லாமல் அவற்றை ஒரு பிரச்சனையாகக் கருதியது. 

இறுதியாக, விநியோகச் சங்கிலி (supply chain) ஆபத்து உள்ளது. இன்று கிட்டத்தட்ட எந்த உற்பத்தி பொருளும் உள்நாட்டு பொருட்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படவில்லை. இந்தியா சர்வதேச அளவில் போட்டியிடவும், "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முதலீடுகளை ஈர்க்கவும், நிறுவனங்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீடுகள் தேவை. ஒவ்வொரு முறையும் ஒரு கட்டண உயர்வு விதிக்கப்படும்போது, ஒரு தயாரிப்பு தடை விதிக்கப்படும்போது, அல்லது இதுபோன்ற நடவடிக்கைகள் விவாதிக்கப்படும்போது, நிறுவனங்கள் குறைந்த விலை விநியோகங்களை அணுகுவது குறித்து கவலைப்படுகின்றன.

இந்த அபாயங்களுக்கு எதிராக முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எவ்வாறு உறுதியளிக்க முடியும்? முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். சில செயல்கள் கருத்தியல் ரீதியாக எளிமையானவை. எடுத்துக்காட்டாக, வியட்நாம் அனைத்து முக்கிய வர்த்தக சக்திகளுடனும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் விநியோகச் சங்கிலி அபாயங்களைத் தணித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு இப்போதும் எதிர்காலத்திலும் விநியோகங்களுக்கான அணுகலாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இருப்பினும், ஆபத்தை குறைக்க பொதுவாக தொடர்ச்சியான நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. ஒரு நல்ல அபாயகரமான சூழலை சேதப்படுத்துவது எளிது, ஆனால் அதை உருவாக்குவது மற்றும் நிலைநிறுத்துவது கடினம்.

சில வழிகளில், ஆபத்து மற்றும் வருமானத்தைப் பார்ப்பது சீனாவைப் பின்பற்ற முயற்சிக்கும் மோடி பொருளாதாரத்தில் (Modinomics) உள்ள சிக்கல்களையும் காட்டுகிறது. ஆரம்பத்தில், சீனாவின் வெற்றி மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மூலம் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இருந்தது. அரசு தங்கள் ஆபத்தை குறைக்கும் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளிப்பதும் இதில் அடங்கும். இந்த இராஜதந்திரத்தை சீனா சமீபத்தில் கைவிட்டதால் அதன் வளர்ச்சி குறைந்து நம்பிக்கை சரிந்துள்ளது.

மேலும், எப்போதும் சீனாவைப் போல் இருப்பது ஒன்று ஆனால் சீனாவைப் போல் மாறுவது வேறு காரணமாகும். இந்தியாவில், அரசாங்கம் அதன் அமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ள ஜனநாயக மற்றும் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. மையப்படுத்துவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியா ஒருபோதும் சீனாவை ஒத்திருக்க முடியாது.

கெட்ட செய்தி மற்றும் நல்ல செய்தி இரண்டும் உள்ளன. மோசமான செய்தி என்னவென்றால்,  அதிக ஆபத்துள்ள இடம் என்ற இந்தியாவின்  பெயரை மாற்றுவது கடினம். நல்ல செய்தி என்னவென்றால், சீனாவின் பிரச்சினைகள் முதலீட்டாளர்களை தங்கள் விருப்பங்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன. இதனால் அவர்கள் இந்திய ஆபத்தை ஏற்க அதிக விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால். இதற்கான வரம்புகள் உள்ளன. வரி மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைகள் மூலம் பறிமுதல் செய்யப்படலாம் என்று கவலைப்பட்டால், அவர்களின் முதலீடுகள் அரசாங்கத்திற்கு சாதகமான போட்டியாளர்களால் பாதிக்கப்படலாம் என்றால், மற்றும் நேற்றைய தாராளமயமாக்கல் கொள்கைகளை இன்று மாற்றியமைக்க முடியுமா என்று முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். 

கொள்கை நடவடிக்கைகள் வருமானத்தை அதிகரிக்கலாம். ஆனால், அபாயங்களைக் குறைப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் மோடி பொருளாதாரம் போதுமானதாக இல்லை. 

ஃபெல்மேன் JH Consulting இல் முதல்வர். சுப்பிரமணியன் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸில் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆவார்.


Share:

இங்கிலாந்து ஒரு புதிய அரசாங்கத்தைப் பெறக்கூடும் – இந்த முறை இந்தியாவுக்கு தொழிற்கட்சி சிறந்ததாக இருக்கலாம் -சி.ராஜா மோகன்

இந்தியாவுக்கு பிரிட்டனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. பிரிட்டனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர்கள் ஆகும். இது ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும். 

 

பிரிட்டனில் உள்ள டோரிகள் (Tories) நாளைய தேர்தல்களில் வரலாற்றுத் தோல்வியை சந்திக்கும் நிலையில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் இருதரப்பு உறவை முன்னேற்றுவதற்கு இந்தியா நன்கு தயாராக உள்ளது. கன்சர்வேடிவ் கட்சி அதன் கடுமையான சூழ்நிலையான 15 வருட பதவிக் காலத்திற்கான விமர்சனங்களுக்கு மிகவும் தகுதியானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு வரும்போது, ​​லண்டனுக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவுகளில் நேர்மறையான மறுசீரமைப்புக்கு டோரிகள் தலைமை தாங்கினார்கள் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து காலனித்துவத்தில் சிலவற்றை உதறித் தள்ளிவிட்டு, இந்தியா தொடர்பான இங்கிலாந்து கொள்கையை பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் காரணிகளிலிருந்து கட்சி பிரித்துள்ளது. பரந்த இந்தோ-பசிபிக் கட்டமைப்பில் அவர்கள் ஈடுபாட்டை வடிவமைத்துள்ளனர்.    

பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மாற்றுவதற்கான ஒரு வரைபடத்தையும் டோரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த துறைகளில் பசுமை மாற்றம், பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். சட்டவிரோத குடியேற்றத்தின் சவாலை இரு தரப்பினரும் எதிர்கொள்ளவும், இங்கிலாந்தில் இந்திய திறமைகளின் வேகத்தை எளிதாக்கவும் இடம்பெயர்வு மற்றும் நடமாட்ட ஒப்பந்தம் (Migration and Mobility Agreement) உதவியது. எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. இங்கிலாந்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனுபவித்து வருவதாகத் தோன்றும் தண்டனையிலிருந்து விலக்களிப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இங்கிலாந்தின் நிரந்தர தலைமையிலிருந்து ஒரு புதிய உறவுக்கு நீடித்த எதிர்ப்பு உள்ளது. இந்தியாவில், இடது மற்றும் வலதுபுறத்தில் "காலனித்துவ எதிர்ப்பு" (anti-colonial) நிலைப்பாடுகள், இங்கிலாந்துடனான முழு அளவிலான சாத்தியக்கூறுகளையும் கைப்பற்றுவதிலிருந்து சாத்தியக்கூறுகளையும் தடுக்கிறது.

தொழிற்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இருதரப்பு உறவுகள் குறித்த இந்தியாவின் கவலைகளை மீண்டும் கொண்டுவரும். 1990-களின் பிற்பகுதியில் இரண்டாம் எலிசபெத் மகாராணி இந்தியாவிற்கு பயணம் செய்தபோது தொழிற்கட்சி தலைமை தாங்கியபோது இந்திய-இங்கிலாந்து உறவுகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான திருப்பமே இதற்குக் காரணமாகும். இந்தியாவின் சுதந்திரத்தின் 50-வது ஆண்டு விழாவில் பிந்தைய காலனித்துவ நல்லிணக்கத்தை கொண்டுவரும் நோக்கில், இந்த பயணம் முக்கிய இராஜதந்திர நிகழ்வுகளை எவ்வாறு ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கான பாடமாக இது மாறியது.  

பாகிஸ்தானில் தங்கியிருந்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ராபின் குக், காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய தலைமை ஈடுபடுவது குறித்து பேசினார். அந்த நேரத்தில் எகிப்தில் இருந்த இந்தியப் பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் இந்த வாய்ப்பை நிராகரித்தார். அவர் இங்கிலாந்தை ஒரு "மூன்றாம் தர வல்லரசு" (third-rate power) என்று அழைத்தார். உலகில் அதன் ஏகாதிபத்தியத்திற்குப் பிந்தைய செல்வாக்கைப் பற்றிய மாயத்தோற்றமாக உள்ளது. ஜாலியன் வாலாபாக் 1919 படுகொலைக்கு மன்னிப்பு கேட்க ராணி திட்டமிட்டார், இது விஜயத்தின் புனிதமான சிறப்பம்சமாக இருக்கும். ஆனால் ஜாலியன் வாலாபாக் இறப்பு எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று ராணியின் ராயல் கன்சார்ட் இளவரசர் பிலிப் குறிப்பிட்டு இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் சேதத்தை குறைக்க முயன்றாலும், பாக்கிஸ்தான் மற்றும் காஷ்மீர் மீதான சண்டைகள் தொழிற்கட்சியின் பதவிக்காலத்தின் கீழ் இருதரப்பு உறவுகளின் மீது நிழலைத் தொடர்ந்தன. "நெறிமுறை வெளியுறவுக் கொள்கை" (ethical foreign policy) பற்றிய ராபின் குக்கின் யோசனை தொழிலாளர் கட்சிக்குள் ஆதரவைக் கொண்டிருந்தது. இருப்பினும், அடையாள அரசியலை ஆதரிப்பதும், இந்தியாவுக்கு எதிரான பிரிவினரை திருப்திப்படுத்துவதும் டெல்லி-லண்டன் உறவுகளை சிதைத்தது. 

2010-ம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியை வெற்றிக்கு வழிநடத்திய டேவிட் கேமரூன் தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். வரலாற்றுப் பிரச்சினைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். எவ்வாறாயினும், மாற்றத்திற்கு இந்தியா தயாராக இல்லை. மேலும், இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மைக்கான ஒரு லட்சிய பார்வையை இரு தரப்பினரும் நிபந்தனைகளை முன்வைக்க மற்றொரு பத்தாண்டுகள் ஆனது.

தொழிலாளர் கட்சி மீண்டும் பழைய கருத்து வேறுபாடுகளை திறக்க முடியுமா? என்றால், வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது. தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கார்பின் தொடங்கிய இந்திய எதிர்ப்பு சர்ச்சைகளை ஸ்டார்மர் நிறுத்தியுள்ளார். 2019 தேர்தலின் போது, ​​காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்ட தொழிலாளர் அறிக்கை டெல்லியில் கோபத்தை ஏற்படுத்தியது மற்றும் இந்து வாக்காளர்கள் டோரிகளை ஆதரிக்க வழிவகுத்தது. ஸ்டார்மர் இப்போது தீவிரமான கருத்துக்களை அடக்குவதையும், இந்தியாவுக்கு எதிரான குழுக்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டோரிகள் வகுத்த கொள்கைகளைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.

உள்நாட்டில், தொழிற் கட்சி டோரிக்களைப் போலவே இந்து வாக்காளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். ஸ்டார்மர் கிங்ஸ்பரியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்குச் சென்று, இங்கிலாந்தானது இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால் 1.2 மில்லியன் (இந்திய புலம்பெயர்ந்தோர் 1.5 மில்லியன்) மக்கள் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோர் உட்பட மற்ற சிறுபான்மையினரை புதிய தொழிலாளர் கட்சி புறக்கணிக்க முடியாது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட காலிஸ்தானி குழுக்கள் இந்தியாவிற்கு எதிரான செயல்திட்டத்தை முன்வைக்க புதிய அரசாங்கத்தை தொடர்ந்து வற்புறுத்துகின்றன.

இந்தியாவின் உள்நாட்டு அரசியலின் செல்வாக்கு மற்றும் தெற்காசியாவிற்குள் உள்ள பிளவுகள் வெளிநாடுகளில் உள்ள தெற்காசிய சமூகத்தின் மீது தில்லியால் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கிலாந்தில், பல ஜனநாயக நாடுகளைப் போலவே, உள்ளூர் அரசியலும் குறிப்பிட்ட வாக்காளர் குழுக்களிடையே ஆதரவைக் கட்டியெழுப்புகிறது. எனவே, டெல்லி இரட்டை சவாலை எதிர்கொள்கிறது. ஒன்று, இங்கிலாந்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அழுத்தத்தைத் தக்கவைப்பது. இங்கிலாந்தின் பெரிய மற்றும் வளர்ந்து வரும் தெற்காசிய புலம்பெயர்ந்தோரால் எழும் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கான விவேகமான நெறிமுறைகளை வகுக்க, இங்கிலாந்தில் உள்ள "முக்கியமான அரசு" உடனான தனது ஈடுபாட்டையும் டெல்லி தீவிரப்படுத்த வேண்டும்.

எதிர்மறை காரணிகளின் முக்கியத்துவத்தை குறைக்கும் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துவது ஒரு அணுகுமுறை. இங்கிலாந்து பற்றிய தவறான எண்ணங்களை அகற்றுவதும் சமமாக முக்கியமானது. பிரிட்டனை "மூன்றாம் தர வல்லரசு" (third-rate power) என்று முத்திரை குத்தி குஜ்ரால் தவறு செய்தார். 1990-களின் நடுப்பகுதியில், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருந்தது. இன்று, இந்தியாவின் பொருளாதாரம் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை விட சற்றே பெரியதாக உள்ளது, $3.5 டிரில்லியன் உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட $4 டிரில்லியன் ஆகும். இருப்பினும், இந்தியாவின் தனிநபர் வருமானம் $3,000க்கும் குறைவாக உள்ளது. அதே சமயம் இங்கிலாந்தின் தனிநபர் வருமானம் $50,000 ஆகும். இருந்தபோதிலும், லண்டனுடனான வலுவான கூட்டாண்மையால் இந்தியா பெரிதும் பயனடைகிறது.

இந்தியாவுக்கு இங்கிலாந்தின் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதை இந்தியா நிறுத்த வேண்டும். இன்று இங்கிலாந்துடனான இந்தியாவின் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர், ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு பின்தங்கி  இருந்தாலும், இங்கிலாந்து முன்னணி நடுத்தர வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதன் நிதி செல்வாக்கு, தொழில்நுட்ப முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய வீச்சு ஆகியவை வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இங்கிலாந்து ஒரு சக்தியாக ஆக்குகின்றன. தொழிலாளர் கட்சியை அரசியல் மிதவாதத்தை நோக்கி நகர்த்தும் ஸ்டார்மர், இங்கிலாந்துடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறார்.

அடுத்த வெளியுறவுச் செயலாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் டேவிட் லாம்மி, சமீபத்தில் இந்தியாவுடனான இங்கிலாந்தின் உறவுக்கான தனது லட்சிய திட்டங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க உரையை வழங்கினார். இந்திய உறவில் டோரிகள் அதிகமாக வாக்குறுதி அளித்ததற்காகவும், மிகக் குறைவாக வழங்குவதாகவும் லாம்மி விமர்சிக்கிறார். தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (free trade deal) முடிப்பதற்கும், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பில் முன்னேறுவதை அரசியல் ரீதியாக விரைவுபடுத்தவும் தொழிற்கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.

லாம்மி, தொழிலாளர் கட்சியின் உலகக் கண்ணோட்டத்தை "முற்போக்கு யதார்த்தவாதம்" (progressive realism) என்று அழைக்கிறார். அதை அவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார். குக் மற்றும் கோர்பின் (Cook and Corbyn) யதார்த்தத்துடன் பொருந்தாத "மதிப்பு அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையில்" (values-based foreign policy) கவனம் செலுத்தினர். இப்போது, ​​ஸ்டார்மரும் லாம்மியும் இங்கிலாந்து உலகை அப்படியே எதிர்கொள்ள வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

கட்டுரையாளர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராகவும், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சர்வதேச விவகாரங்கள் குறித்த பங்களிப்பு ஆசிரியராகவும் உள்ளார். 


Share:

பொருளாதார வல்லுநர்கள் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தரவுகளை ஏன் நம்பியிருக்கிறார்கள் ? -மதன் சப்னாவிஸ்

 பொருளாதாரத்தின் நிலையை அளவிடுவதற்கு இது பொருத்தமான குறிகாட்டிகளில் ஒன்றாகும்.

 கோவிட் -19 (Covid-19) க்கு பிந்தைய, பொருளாதார குறிகாட்டிகள் அந்த ஆண்டில் ஏற்படும் மாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது பெரும்பாலும் தவறான செய்திகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 8% வளர்ச்சி அடைந்துள்ளது. 2023-24ல் முடிவடைந்த ஐந்தாண்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 34 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஐந்தாண்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.42 லட்சம் கோடியாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில், பொருளாதாரத்தின் நிலையை ஒருவர் எவ்வாறு அளவிடுவது?

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) வசூல் தரவு பொருளாதாரத்தின் நிலையை அளவிட ஒரு நல்ல குறிகாட்டியாகும். இது உண்மையான சேகரிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த தரவு மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. மற்ற பெருநிலைப் பொருளியல் (Macroeconomics) தரவு குறிகாட்டிகளுக்கு சில மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த தரவு  சேகரிப்பு பல காரணங்களுக்காக முக்கியமானது. 

முதலாவதாக, சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) வசூல், நுகர்வு அடிப்படையிலான வரி என்பதால் நுகர்வு அதிகரித்து வருகிறதா என்பதைக் ஆராய்கிறது. 2018-19-ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தனியார் நுகர்வு செலவில் 10.5% ஆக இருந்தது.  2023-24-ல் தனியார் நுகர்வு செலவு 11.3% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டு ஆண்டு பாதிப்பிற்கு பிறகு, நுகர்வு வளர்ச்சி குறைந்து, கடுமையான  சரிவை ஏற்படுத்தியது. இப்போது, ​​சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சீராக வளர்ந்து வருவதால், பொருளாதாரம் சரியான பாதையில் செல்வதைக் இந்த குறியீடுகள் காட்டுகிறது.  

 இரண்டாவதாக, இந்தத் தரவு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதால், இது பல்வேறு பிராந்தியங்களில் நுகர்வு முறைகளை வெளிப்படுத்துகிறது. நிறுவனங்களுக்கு இந்தத் தரவு மிகவும் முக்கியமானது. இந்தத் தகவலின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும். ஏனெனில், அவர்கள் சந்தைகளுக்கு ஏற்றவாறு உத்திகளை வடிவமைக்க முடியும். 

மூன்றாவதாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு மறைமுக வரிகள் (indirect taxes) குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால், பட்ஜெட் இலக்குகள் எவ்வளவு சிறப்பாக அடையப்படுகின்றன என்பதை சரக்கு மற்றும் சேவை வரி தரவு குறிப்பிடுகிறது. இந்த தகவல் அரசாங்கத்திற்கும் சந்தைகளுக்கும் முக்கியமானது. இது அரசாங்க வருவாய்கள், நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் சந்தை கடன்களை பற்றி திட்டமிட உதவுகிறது. மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி தரவு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.

நான்காவதாக, பொருளாதாரத்தை முறைப்படுத்தியதன் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் அதிகரித்துள்ளது.  இதுவும் இத்துறையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. நுகர்வுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் விரைவாக அதிகரிக்கவில்லை. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகமாக இருந்தால், அது முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தின் நிலையைக் குறிக்கலாம்.

கடைசியாக, தரவுகளில் இழப்பீட்டு மேல்வரி (compensation cess) பற்றிய தகவல்கள் உள்ளன. இது மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய நுண்ணறிவை  வழங்குகிறது.  

ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில், சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) தரவு, பொருளாதார செயல்திறனை அடிக்கடி மதிப்பிடுவதற்கான மிகவும் நம்பகமான குறிகாட்டிகளில் ஒன்றாகும். கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டைப் (Purchasing Managers Index) போல் இல்லாமல், உண்மையான தொழில்துறை உற்பத்தித் தரவுகளிலிருந்து வேறுபடலாம். சரக்கு மற்றும் சேவை வரி  தரவு நிகழ்நேர நுண்ணறிவுகளை  வழங்குகிறது. வங்கிக் கடன்கள், உண்மையான கடன் வாங்குதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிக்கின்றன, அவை பருவகால காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. எனவே, விரிவான ஜிஎஸ்டி தரவுகளை தொடர்ந்து வெளியிடுவது தொடர வேண்டும். 

எழுத்தாளர், பாங்க் ஆஃப் பரோடா-வின் தலைமைப் பொருளாதார நிபுணர், மற்றும் ’Corporate Quirks: The Darker side of the sun’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.    


Share: