பாலின இடைவெளியைக் குறைத்தல் -சங்கீதா கொரானா, நிதி பாசின், பத்ரி நாராயணன் கோபாலகிருஷ்ணன்

 நிலம் மற்றும் சொத்து தொடர்பானவற்றைகளுக்கு சமமற்ற அணுகல் இருப்பது, ஒரு பெரிய தடையாக உள்ளது.


பாலின சமத்துவம் சமூகத்திற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உந்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பெரும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இருப்பினும், பாலின சமத்துவத்தை நோக்கிய அதன் பயணம் முன்னேற்றத்தையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. பாலின சமத்துவமின்மை குறியீடு (Gender Inequality Index (GII)) 191 நாடுகளில் இந்தியாவை 122வது இடத்தில் வைத்திருக்கிறது. உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு (Global Gender Gap Index (GGGI)) இந்தியாவை 146 நாடுகளில் 135வது இடத்தில் தரவரிசைப்படுத்துகிறது.


பாலின இடைவெளியைக் குறைக்க குறிப்பிடத்தக்க வேலையின் அவசியத்தை இவை எடுத்துக்காட்டுகின்றன.


மோடி 3.0-ன் முதல் 100 நாட்களில் அரசாங்கம் முன்முயற்சிகளைத் தொடங்கியது. இந்த முயற்சிகள், கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. 2024 பட்ஜெட்டில் நாரி சக்தி முயற்சிகளுக்கு (Nari Shakti initiatives) ₹3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த முயற்சிகள் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பகுதிகளை குறிவைக்கின்றன.


இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்களிப்பு (female labor force participation) அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில், பெண் பங்கேற்பு 32.7 சதவீதமாகவும், ஆண் பங்கேற்பு 76.8 சதவீதமாகவும் இருந்தது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குறைவாக சமூகப் பாதுகாப்பு உள்ள முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர்.


நில உரிமை (Land ownership)


நிலம் மற்றும் சொத்துக்களுக்கான சமத்துவமின்மையானது இந்தியாவில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. ஏறக்குறைய 66 சதவீத பெண்களுக்கு தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட எந்த நிலத்தின் உரிமையும் இல்லை. நிலம் பெரும்பாலும் கடன்களுக்கு பிணையமாகப் பயன்படுத்தப்படுகிறது. சொந்தமாக நிலம் இல்லாததால், பெண்கள் கடன் பெற சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தொழில் தொடங்குவது கடினம்.


நில உரிமை என்பது பொருளாதார சக்தியைவிட அதிகமாக பாதிக்கிறது. வளங்கள் மீது பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு இருக்கும்போது, ​​அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் சமூகத்தில் முன்னேற உதவுகிறது. இது பெண்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலையும் மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. நில உரிமையில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பது பாலின அதிகாரமளிப்புக்கு முக்கியமானது.


பல காரணங்களால் நிலைமை சிக்கலானது. பல இளைஞர்கள் வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வியைப் பெறுவதில்லை. சமூக விதிமுறைகள் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை அணுகுவதை கடினமாக்குகின்றன. கிராமப்புறங்களில், இளமைப் பருவ திருமணங்கள் (early marriages) பொதுவானவை. இதன் விளைவாக, இந்தியாவில் இளம் பருவ கர்ப்பங்களின் விகிதம் அதிகமாக உள்ளது. 2022-ம் ஆண்டில், 15-19 வயதுடைய ஒவ்வொரு 1,000 பெண்களில் 16 பேர் பிரசவிக்கின்றனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் (maternal mortality ratio (MMR)) 1,00,000 நேரடி பிறப்புகளுக்கு 103 இறப்புகள் ஆகும். மகப்பேறு சுகாதாரப் பராமரிப்பில் அதிக முதலீடு தேவை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது. கிராமப்புறங்களில், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஸ்டாண்ட்-அப் இந்தியா (Stand-Up India) மற்றும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana (PMMY)) ஆகியவை பெண்கள் தொழில்களைத் தொடங்கவும் நிதி உதவி பெறவும் உதவுகின்றன. பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் (Beti Bachao Beti Padhao programme) பாலின-தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளைத் தடுக்கவும் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் மாவட்ட பணிக்குழுக்கள் மற்றும் தொகுதி பணிக்குழுக்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் கிராமப்புறங்களை மிகவும் திறம்பட அடைய உதவுகின்றன.


மகிளா சக்தி கேந்திரா முன்முயற்சியானது (Mahila Shakti Kendra initiative) சமூகம் சார்ந்த தலையீடுகள் மூலம் பெண்களுக்கு தகவல், வளங்கள் மற்றும் அரசாங்க திட்டங்களை அணுகுவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க உதவுகிறது. உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான அரசியல் இடஒதுக்கீடு முடிவெடுக்கும் செயல்முறைகளில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க நகர்வை பிரதிபலிக்கிறது.


அரசால் சரியாக அங்கீகரிக்கப்பட்டபடி, பெண் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வது முக்கியமானது. நீண்டகால சமூக விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பாலின உணர்திறன் கல்வி தேவை. பெண்கள் மற்றும் சிறுமிகளை மதிக்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க இது முக்கியம். இது நிகழும்போது, ​​இந்தியா அதன் முழுத் திறனை அடைய முடியும். மேலும், யாரும் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்ய முடியும்.


சங்கீதா கொரானா (Khorana) WTO பாலின மையத்தின் உறுப்பினராகவும், பாசின் டெல்லி பொருளாதாரப் பள்ளியின் வர்த்தகத் துறையின் பேராசிரியராகவும் (சர்வதேச வணிகம்), மற்றும் கோபாலகிருஷ்ணன் இந்திய அரசாங்கத்தின் NITI ஆயோக்கின் குடியுரிமை அல்லாத உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share:

2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, 12% ஆண்டு வளர்ச்சி விகிதம் தேவை : கணக்கெடுப்பு -திவ்யா சந்திரபாபு

 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 14-ம் தேதி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது கடைசி முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது.


2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 8% வளர்ச்சி விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற திமுக அரசு இலக்கு வைத்துள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வின்படி, இந்த இலக்கை அடைய மாநிலம் 12% ஆண்டு வளர்ச்சி விகிதத்தைத் தக்கவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


"தமிழ்நாடு உள்ளடக்கிய கொள்கைகளின் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம், குறிப்பிடத்தக்க பொருளாதார மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. 2021-22 முதல் தொடர்ந்து 8% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சி விகிதங்களை எட்டியுள்ளது" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 2024-25ஆம் ஆண்டில் மாநிலம் 8%-க்கும் மேல் வளர்ச்சி விகிதத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக, மாநிலத்தின் பொருளாதாரம் உலகளாவிய சந்தை போக்குகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி முறையுடன் ஒப்பிடும்போது உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் இது அதிகம் பாதிக்கப்படுகிறது.


2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 14-ம் தேதி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது கடைசி முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. “வழக்கமாக பட்ஜெட் மாநிலத்தின் வளர்ச்சிக்கான அனைத்து புதிய திட்டங்களையும் அறிவிக்கும். மேலும், மக்களின் பொருளாதாரத்தின் நிலை, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாநிலம் கவனம் செலுத்த வேண்டிய சாத்தியக்கூறுகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் இதுவே முன்னோடியாகும்” என மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறினார். "இது மக்களால் பொருளாதாரம் பற்றிய தகவலறிந்த விவாதத்திற்கு வழிகாட்டியாக இருக்கும்," என்றும், உலகளாவிய நிகழ்வுகளின் கணிக்க முடியாத தன்மை ஒரு பெரிய சவாலாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


உலகப் பொருளாதாரம் 2023-ம் ஆண்டில் 3.33% உண்மையான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது மற்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2022-23-ல் 7.61%, 2023-24ஆம் ஆண்டில் 9.19% மற்றும் 2024-25-ல் 6.48% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2022-23ல், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹2.78 லட்சமாக இருந்தது, இது தேசிய சராசரியான ₹1.69 லட்சத்தை விட அதாவது, 1.6 மடங்கு அதிகமாகும். இது பல ஆண்டுகளாக தேசிய சராசரியை விட தொடர்ந்து முன்னேறி வருகிறது" என்று அறிக்கை கூறியது. இதன் மூலம் தனிநபர் வருமானத்தில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைப் போலல்லாமல், ஒரு பெருநகர மையத்தைச் சுற்றி பொருளாதார நடவடிக்கைகள் குவிந்துள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பல நகர்ப்புற மையங்களில் சமமாக விநியோகிக்கப்படுகிறது என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. முதலீடுகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாண்டி கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு நகர்ப்புற-கிராமப் பிரிவினையைக் (urban-rural divide) குறைக்க உதவுகின்றன.


இருப்பினும், ஒரு டிரில்லியன் இலக்கை அடைய, தமிழ்நாடு கிராமப்புற தொழில்முனைவோரை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கணக்கெடுப்பு கூறியது. இது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரப்ப உதவும். மாநிலம் அதன் மக்கள்தொகைக்கான நன்மையைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பதன் மூலமும், பெண்கள் பணியிடத்தில் சேர ஊக்குவிப்பதன் மூலமும், அதிக மதிப்புள்ள உற்பத்தி மற்றும் சேவைகளை ஊக்குவிப்பதன் மூலமும் இதைச் செய்ய முடியும். எல்லைப்புற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதையும் அது பரிந்துரைத்துள்ளது.


"தமிழ்நாடு ஏற்கனவே இந்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது என்பது ஊக்கமளிக்கிறது. குறைக்கடத்தி (semiconductor) மற்றும் மேம்பட்ட மின்னணுத் தொழிற்துறைக்கான (advanced electronics industry) கொள்கைகளை மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கைகள் வணிகரீதியிலான நட்பு சூழலை உருவாக்க உதவுகின்றன. இதன் விளைவாக, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகள் விரிவடைந்து வருகின்றன."


2023-24ஆம் ஆண்டில், 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 8-வது மிகக் குறைந்த சில்லறை பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது. தமிழ்நாட்டில் நகர்ப்புற பணவீக்கம் 2019-20ஆம் ஆண்டில் 6% ஆக இருந்து 2024-25ஆம் ஆண்டில் (ஜனவரி 2025 வரை) 4.5% ஆகக் குறைந்துள்ளது.  கிராமப்புற பணவீக்கம் 5.4% ஆக இருந்தது. “நிலத்தடி நீர் குறைவு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை தமிழ்நாடு எதிர்கொண்டால் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைய முடியும்” என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


2024-ம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு, ₹6.64 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்தது. இந்த முதலீடுகள் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தனது பணியாளர்களை மறுதிறன் மூலம் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கணக்கெடுப்பு கூறியுள்ளது. இது தொழிலாளர்கள் தொழில் 4.0 தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்கும்.


வங்கி நெட்வொர்க்குகளில் தமிழ்நாடு 24,390 ATM-களுடன் நாட்டிலேயே முன்னிலை வகிக்கிறது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத் துறை (service sector in Tamil Nadu) வலுவாக மீண்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்புற பணியாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் பணியாற்றினர். இது தேசிய சராசரியான 58.07%-க்கு நெருக்கமாக உள்ளது. அவர்களில், 16.28% பேர் வர்த்தகம் மற்றும் மோட்டார் வாகன பழுதுபார்ப்பில் பணியாற்றினர். 7.53% பேர் போக்குவரத்து மற்றும் சேமிப்புத் துறைகளில் பணிபுரிந்தனர். 6.28% பேர் தகவல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரிந்தனர். 5% பேர் கல்வித் துறையிலும், 4.86% பேர் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளிலும் பணிபுரிந்தனர். 2.84% பேர் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளிலும் பணிபுரிந்தனர். 11.84% பேர் பிற சேவைகளிலும் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு அரசு அதன் சமூகத் துறை செலவினங்களை அதிகரித்து வருகிறது. 2019-20ஆம் ஆண்டில், இது ₹79,859 கோடியாக இருந்தது. 2023-24 வாக்கில், இது ₹1.16 லட்சம் கோடியை எட்டியது. இதன், முக்கிய முயற்சிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமும் அடங்கும். இந்தத் திட்டம் பள்ளி வருகை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களுக்கான திட்டங்களையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஒரு திட்டம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ₹1,000 ரொக்கமாக வழங்குகிறது. மற்றொன்று அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறது போன்ற முயற்சிகளும் அடங்கும்.


2023-24ஆம் ஆண்டில், சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினத்தில் தமிழ்நாடு முக்கிய மாநிலங்களில் 4-வது இடத்தைப் பிடித்தது. இந்த தரவரிசை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள் இரண்டிற்கும் பொருந்தும். அதேபோல், ஆண்டு தனிநபர் வருமானத்திலும் மாநிலம் 4-வது இடத்தைப் பிடித்தது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அடிக்கடி இயற்கைப் பேரிடர்களை, முக்கியமாக வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இதனால், காலநிலை மாற்ற சவால்களைச் சமாளிப்பதில் கவனம் செலுத்துமாறு ஆணையம் மாநிலத்திற்கு முதன்மையாக அறிவுறுத்தியது.



Original article:

Share:

சாகர் முதல் மகாசாகர் வரை: இந்தியாவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துதல் -குர்ஜித் சிங்

 உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளும் தங்கள் வரலாற்றுத் தொடர்பை வலுப்படுத்தி, நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் ஒரு கூட்டாண்மையை உருவாக்க முடியும்.


இந்த வாரம் மொரீஷியஸுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய-மொரிஷியஸ் உறவுகளை மேம்படுத்துவதையும், வலுப்படுத்துவதையும் எடுத்துக்காட்டி, முழு அரசாங்க அணுகுமுறையின் ஒரு பகுதியாக அன்பான வரவேற்பைப் பெற்றார். போர்ட் லூயிஸில் மொரிஷியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் (Navin Ramgoolam) பிரதமருக்கு அளித்த அன்பான வரவேற்பு அவர்களுக்கிடையேயான இராஜதந்திர மற்றும் கலாச்சார பிணைப்பை வெளிப்படுத்தியது.


மொரிஷியஸின் முதன்மை பாதுகாப்பு வழங்குநராகவும், முன்னணி வளர்ச்சிக்கான நட்பு நாடாகவும் இந்தியா நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நாடு இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் கொள்கையின் முக்கியப் பகுதியாக உள்ளது. மேலும், பிரதமர் மோடியின் வருகை 2015-ம் ஆண்டில் அவரது முந்தைய பயணத்தைத் தொடர்ந்து, இரண்டு முறையும் மொரீஷியஸின் தேசிய தினமான மார்ச் 12 அன்று தலைமை விருந்தினராக வருகை தருகிறார். இந்த தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இது மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற தண்டி யாத்திரையைக் குறிக்கிறது.


தெற்கு இந்தியப் பெருங்கடலில் இராஜதந்திர ரீதியாக அமைந்துள்ள மொரிஷியஸ், மடகாஸ்கர், கொமொரோஸ், ரீயூனியன், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்தியா தன்னை முன்னணியான நட்பு நாடாக நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு முக்கியமான பிராந்தியத்தை உருவாக்குகிறது. கடந்த காலத்தில், மொரீஷியஸ் அமெரிக்கா மற்றும் பிரான்சுடனான அதன் உறவுகளைப் பயன்படுத்திக் கொண்டது. இருப்பினும், இந்தியப் பெருங்கடலில் இந்த நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையானது, இந்த உறவுகளை தனது சொந்த நன்மைக்காகப் பயன்படுத்தும் மொரீஷியஸின் திறனைக் குறைத்துள்ளது. மொரீஷியஸுக்கு முக்கிய மாற்று சீனா, ராம்கூலம் தனது முந்தைய பதவிக் காலத்தில் பயன்படுத்திய ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.


தங்கள் வளர்ச்சிக்காக சீனாவுடன் பொருளாதார உறவுகளைப் பேணுவதற்கு நாடுகள் சுதந்திரமாக உள்ளன என்பதை இந்தியா ஒப்புக்கொள்கிறது. எவ்வாறாயினும், இதுபோன்ற ஈடுபாடுகள் இந்திய வணிகங்களுக்கு ஒரு நியாயமான போட்டியை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இராஜதந்திர ரீதியில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடாது என்று இந்தியா எதிர்பார்க்கிறது. ஏனெனில், முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியமும் (Indian Ocean Region (IOR)) இந்தியாவிற்கும் முக்கியமானதாக உள்ளது. மோடியின் 2015-ம் ஆண்டு பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (Security and Growth for All in the Region (SAGAR)) கோட்பாட்டின் அறிவிப்பு இந்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், மொரிஷியஸ், இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (Indian Ocean Rim Association (IORA)) செயலகத்தின் நடத்துவதால், பிராந்திய ஒத்துழைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போது, ​​மோடி மொரீஷியஸுடனான உறவை வலுப்படுத்தி, அதை ஒரு விரிவான இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையாக மேம்படுத்துவதாக அறிவித்துள்ளார். SAGAR கோட்பாடு MAHASAGAR (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) ஆகவும் பரிணமித்து வருகிறது. இது வளர்ச்சிக்கான வர்த்தகத்தையும், நிலையான வளர்ச்சிக்கான திறன் மேம்பாட்டையும், பிராந்தியத்தில் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான பரஸ்பர பாதுகாப்பையும் அதிகரிக்கும். மொரீஷியஸ் இப்போது இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA), இந்தியப் பெருங்கடல் ஆணையம் மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாகும்.


அரசியல் இயக்கவியல் மாறி வருகிறது. மறுசீரமைப்பு தேவை


இந்தியா மொரிஷியஸை ஒரு அண்டை நாடாகப் பார்க்கிறது. ராம்கூலம் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றன. அதே நேரத்தில், பிற உலகளாவிய கூட்டாண்மைகளையும் ஆராய்ந்து வருகின்றன. மாற்றத்திற்கான கூட்டணி (Alliance du Changement) அக்டோபர் 9, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இது நவம்பர் 2024 மொரிஷியஸ் பொதுத் தேர்தலுக்கான தயாரிப்பாக செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை மூன்று தலைவர்கள் வெளியிட்டனர். ரிச்சர்ட் டுவால், நவின் ராம்கூலம் மற்றும் பால் பெரெங்கர் போன்றோர் ஆவர். ரிச்சர்ட் டுவால் புதிய ஜனநாயகக் கட்சியை (ND) பிரதிநிதித்துவப்படுத்தினார். நவின் ராம்கூலம் தொழிலாளர் கட்சியைச் (PTr) சேர்ந்தவர். பால் பெரெங்கர் மொரீஷியப் போராளி இயக்கத்தைச் (Mauritian Militant Movement (MMM)) சேர்ந்தவர் ஆவர். எவ்வாறாயினும், கடந்த பத்தாண்டுகாலத்தில், பிரவிந்த் ஜக்நாத் தலைமையிலான அரசாங்கம், இந்தியாவிற்கு முன்னுரிமை அளிப்பதில் மிகவும் உறுதியுடன் இருந்தது. இதன் விளைவாக, இருதரப்பு உறவு செழித்தோங்கியது. ஜக்னாத்தின் கட்சி நவம்பர் 2024-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது. ராம்கூலம் வலுவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த மாற்றத்திற்கு இந்திய-மொரிஷிய உறவுகளை மறுசீரமைக்க வேண்டும். இந்தியாவின் உறுதியைக் காட்ட மோடி ஒரு விரைவான பயணத்தை மேற்கொண்டார். மொரிஷியஸ் மாலத்தீவுகள் அல்லது இலங்கையின் பாதையைப் பின்பற்றுவதை இந்தியா தடுக்க விரும்புகிறது. இந்த நாடுகளில், இந்தியாவின் செல்வாக்கு வெளிப்புற வீரர்களால், குறிப்பாக சீனாவால் சவால் செய்யப்பட்டது.


மேம்பாடான கூட்டாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு


கோவிட்-19 தொற்றுநோயின்போது, ​​இந்தியா மொரிஷியஸுக்கு வலுவான ஆதரவை வழங்கியது. இதில் மோசமாக நோய்வாய்ப்பட்ட நவின் ராம்கூலத்தை மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்புவதும் அடங்கும். இந்த சிகிச்சை அவரது மீட்பு மற்றும் அரசியல் மீட்சியில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. ராம்கூலம் விமான நிலையத்தில் மோடியைச் சந்தித்தபோது, ​​அவரது அன்பான சைகை நன்றியுணர்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மொரீஷியஸ் தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மீது அதிக கவனம் செலுத்தக்கூடும் என்றும் அது பரிந்துரைத்தது. ஒரு காலத்தில் மிகவும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட ராம்கூலம், ஒரு வெளிப்படையான மாற்றத்தைக் காட்டினார். அவர் மோடியைப் போல உடை அணிந்து கிரிக்கெட்டைப் பற்றி பேசினார்.


மொரிஷியஸின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $11,600 ஆக உயர்ந்திருந்தாலும், இந்தியா மொரிஷியஸுக்கு தாராளமான வளர்ச்சிக்கான நட்பு நாடாக இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்தியா $1.1 பில்லியனுக்கும் அதிகமான வளர்ச்சிக்கான உதவிகளை வழங்கியுள்ளது. இதில் $750 மில்லியன் கடன் வரிகளும், மீதமுள்ளவை மானியங்களும் அடங்கும். இந்திய ஆதரவு திட்டங்கள் மொரிஷியஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம், உச்ச நீதிமன்ற கட்டிடம், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கணினிகள் மற்றும் டேப்லெட்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


இந்தப் புதிய திட்டங்கள் சைபர் சிட்டி, இந்திரா காந்தி இந்திய கலாச்சார மையம் மற்றும் சுவாமி விவேகானந்தா சர்வதேச மாநாட்டு மையம் போன்ற முந்தைய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. நீர் வடிகால் அமைப்புகளுக்கான ரூபாய் அடிப்படையிலான கடன் ஒரு புதிய முயற்சியாகும். இது எக்ஸிம் வங்கிக்கு (Exim Bank) பதிலாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆல் சேவை செய்யப்படும்.

நவீன உலகில் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல நாடுகள் பரிவர்த்தனை அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், இந்தியா மொரிஷியஸை தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இது மொரிஷியஸை ஆப்பிரிக்க நாடாக இல்லாமல் அண்டை நாடாகவே நடத்துகிறது. இந்தியா மொரிஷியஸ் (Mauritius) மற்றும் சீஷெல்ஸை (Seychelles) அதன் வெளியுறவு அமைச்சகத்தின் இந்தியப் பெருங்கடல் பிரிவின் கீழ் வைத்துள்ளது. அவை, ஆப்பிரிக்கா பிரிவின் ஒரு பகுதியாக இல்லை. இது இந்தியாவிற்கு அவற்றின் இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியில் ஒத்துழைப்பு


இராஜதந்திர ரீதியில், மொரிஷியஸ் கடலோர காவல்படையை வளர்ப்பதில் இந்தியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது மற்றும் மொரீஷியஸின் பிரத்யேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone (EEZ)) மற்றும் நீலப் பொருளாதாரத்தை (blue economy) சுரண்டுவதில் வளர்ந்து வரும் ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில் அதன் ஆதரவை தொடர்ந்து மேம்படுத்துகிறது. முன்னதாக, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக இராஜதந்திர ரீதியில் அமைந்துள்ள தொலைதூர தீவான அகலேகாவில் வசதிகளை உருவாக்க இந்தியாவை அனுமதிக்க ராம்கூலம் தயங்கினார். இருப்பினும், முந்தைய அரசாங்கத்தின் கீழ், இந்தியாவுடனான ஒத்துழைப்பு ஒரு படகு நிறுத்துமிடம் (jetty), ஒரு விமான ஓடுதளம் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பைக் கட்டுவதற்கு வழிவகுத்தது. இது சிடோ சூறாவளி (cyclone Chido) மற்றும் மனிதாபிமான உதவி (humanitarian assistance) மற்றும் பேரழிவு நிவாரண முயற்சிகளின் (disaster relief efforts) போது விலைமதிப்பற்றதாக நிரூபிக்கப்பட்டது. இந்த வசதிகளுக்கு இப்போது மேலும் விரிவாக்கம் தேவைப்படுகிறது. மொரிஷியஸுக்கு பயனளிக்கும் அதே வேளையில் சீனாவுக்கு எதிரான உத்தியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை.


மோடியின் மொரீஷியஸ் பயணம் வெறும் விழாவுக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் அதன் முக்கிய கடல்சார் நட்பு நாட்டுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திக்கான முயற்சியாகும். புவிசார் அரசியல் நிலப்பரப்புகள் மாறும்போது, ​​இந்தோ-மொரிஷியஸ் உறவுகளை வலுப்படுத்துவது முக்கியமானதாக இருக்கும். உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளும் தங்கள் வரலாற்றுத் தொடர்பை வலுப்படுத்தி, நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் ஒரு கூட்டாண்மையை உருவாக்க முடியும்.


எழுத்தாளர் ஜெர்மனி, இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஆசியான் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான முன்னாள் இந்தியத் தூதர் ஆவார்.



Original article:

Share:

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி:


தேர்தல் ஆணையம் மற்றவர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கக்கூடாது. அது தனது சொந்த அமைப்புகள் மற்றும் நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கி அவற்றை சரி செய்ய வேண்டும்.


முக்கிய அம்சங்கள்:


  • ஒரே EPIC எண்ணை வைத்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்களால் உருவாக்கப்பட்ட குழப்பமான சூழ்நிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் (EC) கடந்த வாரம் அறிவித்தது.


  • தேர்தல் ஆணையத்தின் கடந்த வார செய்திக்குறிப்பில், "அடுத்த மூன்று மாதங்களில் தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட CEOக்களுக்குள் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இந்த நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினையை இப்போது தீர்க்க முடிவு செய்துள்ளது" என்று கூறுகிறது.


  • தேர்தல் ஆணையம் (EC), மாதிரி நடத்தை விதிகளை மீறுவதில் "தேர்ந்தெடுக்கப்பட்ட சகிப்புத்தன்மை" கொண்டதாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இது தவிர, மூன்று பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி தேர்தல் செயல்முறையை சிக்கலாக்கியுள்ளன: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machines), வாக்காளர் பட்டியல், மற்றும் படிவம் 17 போன்றவை ஆகும். இந்த மூன்று பிரச்சினைகள் பெரும்பாலும் "நரக மும்மூர்த்திகள்" என்று அழைக்கப்படுகின்றன. 


  • அசாதாரண மாற்றங்கள் காரணமாக வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. சில வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் மற்றும் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி.எம்.சி தலைவர் நகல் வாக்காளர் அடையாள எண்கள் பற்றிப் பேசுவதற்கு முன்பே, பிற அரசியல் கட்சிகள் ஏற்கனவே கவலைகளை எழுப்பியிருந்தன. மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பது குறித்து அவர்கள் கவலைப்பட்டனர். இது மே மாதம் பொதுத் தேர்தலுக்கும் நவம்பர் 2024 சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் சில மாதங்களுக்குள் நடந்தது. டெல்லியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்கள் குறித்த கவலைகளும் இருந்தன. தேர்தல் ஆணையம் இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.


  • வாக்களிப்புச் செயல்பாட்டின் மிக முக்கியமான பகுதி வாக்காளர் பட்டியல். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அவர்களிடம் EPIC (தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) இருந்தாலும் கூட அவர்கள் வாக்களிக்க முடியாது. இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) சுகுமார் சென், வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யும் வரை முதல் நாடாளுமன்றத் தேர்தலை தாமதப்படுத்தினார். பிரதமர் நேரு விரைவில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் இரண்டு முறை அறிவித்த போதிலும் இது நடந்தது. ஒரு நபர் ஆணையமாக இருந்த போது, சென் நாடு முழுவதும் பயணம் செய்து வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தார். இன்று, மூன்று தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல்கள் முடிந்தவரை துல்லியமாக இருப்பதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும், குறைந்தபட்ச பிழைகளுடன்.


உங்களுக்குத் தெரியுமா?:


  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மோசடி செய்யப்பட்டுள்ளதா, அதை மோசடி செய்ய முடியுமா என்பது இரண்டு வெவ்வேறு கேள்விகள் ஆணையத்தின் முன் உள்ளது. தேர்தல் ஆணையம் (EC) இந்த கவலைகளை எழுப்புபவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும். இது உறுதியான பதில்களையும் தீர்வுகளையும் கண்டறிய உதவும்.


  • கேள்விகளை முக்கியமற்றவை, எரிச்சலூட்டும் அல்லது தவறாக வழிநடத்தும் என்று புறக்கணிப்பது மக்களை மேலும் சந்தேகப்பட வைக்கும். தேர்தல் ஆணையம் (EC) ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சட்டமன்றத் தொகுதிகளில் 100% வாக்குச் சீட்டுகளையும் எண்ண வேண்டும். இது தவறுகள் அல்லது கையாளுதல் குறித்த ஏதேனும் சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.


  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலக் குறியீட்டைப் பகிர்வது குறித்து அது தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்த யோசனை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு தவறான பயன்பாட்டையும் தடுக்க வலுவான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.


  • தேர்தல் ஆணையம் மற்றவர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கக்கூடாது. அது தனது சொந்த அமைப்புகள் மற்றும் நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கி அவற்றை சரி செய்ய வேண்டும்.


Original article:

Share:

இந்தியாவின் நீர் இராஜதந்திரம்: பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திர நலன்களை சமநிலைப்படுத்துதல். - அனுதீப் குஜ்ஜெட்டி

 இந்தியா தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு அண்டை நாடுகளுடன் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது, குறிப்பாக சீனாவுடன் ஒப்பிடும்போது? திட்டமிட்ட நீர் பகிர்வுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை எந்த முக்கிய ஒப்பந்தங்கள் காட்டுகின்றன?

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்றிருந்தார். அங்கு இந்தியா-மொரிஷியஸ் கூட்டுறவின் நிலையை "மேம்படுத்தப்பட்ட இராஜதந்திர கூட்டாண்மைக்கு" உயர்த்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.


உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திரா நதியின் மீது கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவை கவலையடையச் செய்கிறது. ஏனெனில், அது நதியின் கீழ் பகுதியில் உள்ளது. நீர் பகிர்வு ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த நிலைமை காட்டுகிறது. இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற பிற அண்டை நாடுகளுக்கு இடையிலான நீர் பங்கீட்டின் சிக்கலான தன்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது.


எல்லைகளைக் கடந்து பாயும் பிரம்மபுத்திரா மற்றும் சிந்து நதிகள் போன்றவை பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் ஒப்பந்தங்கள் நாடுகள் ஒத்துழைக்கவும் பகிரப்பட்ட நீர் தொடர்பான மோதல்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. *ஹெல்சிங்கி விதிகள், 1966 (Helsinki Rules) இந்த நதிகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. இப்போது, ​​இந்தியாவின் அண்டை நாடுகளுடனான நீர் பகிர்வு ஒப்பந்தங்களை ஆராய்வோம்.


சிந்து நீர் ஒப்பந்தம்


ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் இரண்டு நீர்மின் திட்டங்களான கிஷெங்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு அம்சங்களுக்கு பாகிஸ்தானின் ஆட்சேபனைகள் தொடர்பாக சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty (IWT) சமீபத்தில் செய்திகளில் உள்ளது. 


சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீரின் விநியோகத்தை தீர்மானிக்க, செப்டம்பர் 19, 1960 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் IWT கையெழுத்திட்டன. இது உலக வங்கியின் தரகு மற்றும் கராச்சியில் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வளர்ந்த அரசியல் பதட்டங்களைப் பொருட்படுத்தாமல் சிந்து நதி அமைப்பின் சமமான நிர்வாகத்தை செயல்படுத்தும் ஒரு கட்டமைப்பை IWT நிறுவியது.


ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் உள்ளிட்ட கிழக்குப் படுகை நதிகளின் முழுக் கட்டுப்பாட்டையும் இந்தியாவுக்கு வழங்கியது, அதேசமயம் பாகிஸ்தான் மேற்குப் படுகை ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றிற்கான பிரத்யேக அணுகலைப் பெற்றது. அதே நேரத்தில் நீர்மின் உற்பத்தி போன்ற நுகர்வு அல்லாத பயன்பாட்டிற்கு இந்திய வசதிகளை அனுமதித்தது. 


"நிரந்தர சிந்து ஆணையம்" (“Permanent Indus Commission”) என்பது ஒப்பந்தத்தின் இன்றியமையாத அங்கமாகும். இதன் மூலம் இரு தரப்பும் தரவைப் பகிர்ந்துகொள்ளும் போது நிறுவப்பட்ட மூன்று-படி தகராறு தீர்வு கட்டமைப்பின் பகுதியாகும். மீதமுள்ள இரண்டு விதிகள் நடுநிலை நிபுணர் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க அனுமதிக்கின்றன.  அதே நேரத்தில் நடுவர் நீதிமன்றம் மற்றொரு தகராறு தீர்க்கும் நெறிமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 


இந்த ஒப்பந்தத்தின் கீழ் உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணர், இரண்டு நீர்மின் திட்டங்கள் தொடர்பான இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தகராறை முடிவு செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக தீர்ப்பளித்தார். இது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை ஆதரிக்கிறது.


இந்த ஒப்பந்தம் நடந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அதில் மாற்றங்களைக் கோரி இந்தியா தனது முதல் அறிவிப்பை ஜனவரி 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு அனுப்பியது. பாகிஸ்தான் ஒப்பந்தத்தைப் பின்பற்ற மறுத்து, இரண்டு திட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்தியா இதைச் செய்தது.


2016 ஆண்டு உரி தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று கூறினார். இந்த அறிக்கை இந்தியாவின் நீர் ராஜதந்திரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தியாவும் வங்காளதேசமும் 54 நதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தப் பகிரப்பட்ட நதிகளை நிர்வகிக்க, இந்தோ-வங்காளதேச கூட்டு நதிகள் ஆணையம் (Indo-Bangladesh Joint Rivers Commission (JRC)) 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.


பருவமழைக் காலத்தில், இந்தியாவும் வங்காளதேசமும் தண்ணீரை நிர்வகிக்கவும் வெள்ளத்தை முன்னறிவிக்கவும் இணைந்து செயல்படுகின்றன. கங்கை, தீஸ்தா, பிரம்மபுத்திரா மற்றும் பராக் போன்ற முக்கிய ஆறுகளில் நீர் விநியோகத்தை அவர்களின் நீர்வள அமைச்சகங்கள் மேற்பார்வையிடுகின்றன. இந்த ஒத்துழைப்பில் ஒரு பெரிய நகர்வாக கங்கா நீர் ஒப்பந்தம் (Ganga Water Treaty) இருந்தது. இது டிசம்பர் 12, 1996 அன்று  இந்தியப் பிரதமர் எச்.டி. தேவகவுடா மற்றும் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரால் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் கங்கை நதியின் நீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.


ஃபராக்கா அணை கட்டப்பட்ட பிறகு நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்தது. ஜூன் 2024ஆம் ஆண்டில் ஹசீனாவின் கடைசி இந்திய வருகையின் போது, ​​1996 ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன. இந்த தொழில்நுட்ப விவாதங்கள் முடிந்த பிறகு 2026ஆம் ஆண்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட உள்ளது.


டீஸ்டா நீர் பகிர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான மற்றொரு முக்கிய இருதரப்பு ஒப்பந்தமாகும். இருப்பினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 2011ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் தேங்கியுள்ளன. 


டீஸ்டா நதிநீர் பங்கீடு விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் விவசாயம் மற்றும் நுகர்வுக்கு டீஸ்டாவின் தண்ணீரை கணிசமாக நம்பியுள்ளது. அதே நேரத்தில் டீஸ்டாவின் தண்ணீரை வங்காளதேசத்துடன் பகிர்ந்து கொண்டால், வடக்கு வங்காளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டினார். 


கங்கை நதி நீர் ஒப்பந்தம் வெற்றியடைந்தாலும், இந்தியாவின் அணைக் கட்டுமானத்துடன் நீர் பாய்ச்சலைக் குறைப்பதும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு விவாதப் புள்ளியாகத் தொடர்கிறது. இருந்த போதிலும், இந்த ஒப்பந்தம் எல்லை தாண்டிய நீர் மேலாண்மையில் ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.


நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீர் ஒத்துழைப்பு 1894ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் தொடங்கியது. நேபாளமும் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக சுதந்திர நாடுகளாக ஈடுபடுவதற்கு முன்பே, சாரதா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே முறையான நீர் பகிர்வு ஒப்பந்தங்களின் தொடக்கமாக அமைந்தது. இரு நாடுகளுக்கும் நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்காக மகாகாளி ஆற்றின் மீது (இந்தியாவில் சாரதா என்றும் அழைக்கப்படுகிறது) பன்பாசா தடுப்பணையை கட்ட இந்த ஒப்பந்தம் அனுமதித்தது. 


சாரதா கால்வாயில் இருந்து கோடைக்காலத்தில் வினாடிக்கு குறைந்தபட்சம் 1000 கனஅடி (கனஅடி) மற்றும் குளிர்காலத்தில் அதிகபட்சமாக 150 கனஅடி நீரைப் பயன்படுத்தும் உரிமையை நேபாளம் பெற்றுள்ளது. இருப்பினும், நேபாளம் இந்த வளங்களை மகாகாளி நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் 1997ஆம் ஆண்டு முடித்த பின்னரே அதிகரிக்கத் தொடங்கியது.


1954ஆம் ஆண்டின் கோஷி ஒப்பந்தம் ஹனுமான் நகர் வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடுப்பணையைக் கட்டுவதற்கு உதவியது, ஆனால் இறையாண்மை மற்றும் திருப்தியற்ற நீர்ப்பாசன விளைச்சல்கள் மீதான கவலைகள் காரணமாக நேபாளம் 1966ஆம் ஆண்டில் திருத்தங்களைக் கோரியது. இதேபோல், கந்தக் ஒப்பந்தம் 1959ஆம் ஆண்டில் கையெழுத்திட்ட பிறகு 1964ஆம் ஆண்டில் திருத்தங்களுக்கு உட்பட்டது. இது பைசலோடன் தடுப்பணையை இந்தியா கட்ட அனுமதிக்கும். இருப்பினும், எதிர்பார்த்த தண்ணீர் விநியோகத்தை அடைய நேபாளம் போராடியது. 


1996 ஆம் ஆண்டு மகாகாளி ஒப்பந்தம் (Mahakali Treaty) பல ஒப்பந்தங்களை ஒன்றிணைத்து பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டம் மின்சாரம் உற்பத்தி செய்வதையும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நேபாளம் இன்னும் நீர் அணுகல் குறித்து கவலை கொண்டுள்ளது. இது செயல்படுத்துவதில் தாமதம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் திட்டத்தை மெதுவாக்கியுள்ளன.


இந்தியா-பூடான் உறவுகளின் வலுவான தூண்களில் ஒன்று 1961ஆம் ஆண்டில் ஜல்தாகா திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் தொடங்கியபோது தொடங்கிய நீர்மின்சார வளர்ச்சியாகும். இருப்பினும், 1987ஆம் ஆண்டில்  60:40 மானியம் மற்றும் கடன் அடிப்படையில் இந்தியாவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட 336 மெகாவாட் சுக்கா நீர்மின் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது மற்றும் இது இரு நாடுகளுக்கும் ஒரு மைல்கல்லாக இருந்தது. 


இந்தத் திட்டம் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. அத்தகைய திட்டங்களில் ஒன்று 1,020 மெகாவாட் தாலா நீர்மின்சாரத் திட்டம் ஆகும். இது மிகப்பெரிய கூட்டு முயற்சிகளில் ஒன்றாகும். இதுவும் அதே நிதி முறையைப் பின்பற்றியது.


பூட்டானின் வாங்சு, சங்கோஷ் மற்றும் மனாஸ் போன்ற ஆறுகள் நீர்மின் உற்பத்திக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. பூட்டானின் நீர்மின் துறையை வளர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது. 2006ஆம் ஆண்டில், இந்தியாவும் பூட்டானும் "நீர்மின் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்" (Agreement on Hydropower Cooperation) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் நீர்மின் மேம்பாட்டில் அவர்களின் கூட்டாண்மையை முறைப்படுத்தியது.


இந்தியாவும் பூடானும் 2008ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் காரணமாக 600 MW Kholongchhu திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 


பூட்டானின் பொருளாதாரத்திற்கு நீர்மின்சாரம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இது  நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 63% ஆகும். இது இந்தியாவின் மின் தேவையையும் பூர்த்தி செய்கிறது.  பூட்டானின் வாங்சு, சங்கோஷ் மற்றும் மனாஸ் நதிகள் நீர்மின் உற்பத்திக்கான அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளன. மேலும், தொழில்துறையின் வளர்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது.


இந்தியாவின் நீர் ராஜதந்திரம் அதன் தேசிய நலன்களுடன் ஒத்துழைப்பை சமநிலைப்படுத்துகிறது. பகிரப்பட்ட நதிகளை நிர்வகிக்க திட்டமிடப்பட்ட நீர் பகிர்வு ஒப்பந்தங்களை இது பின்பற்றுகிறது. சிந்து நீர் ஒப்பந்தம், கங்கை ஒப்பந்தம் மற்றும் மகாகாளி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் நியாயமான நீர் விநியோகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன.


இந்த சந்தர்ப்பங்களில் இந்தியா ஒரு மேல்நோக்கிய நாடாக இருந்தாலும், நீர் ஓட்டத்தில் அது எப்போதும் தெளிவான நன்மையையோ அல்லது கட்டுப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை.


சீனா எப்போதும் சர்வதேச நீர் பகிர்வு விதிகளைப் பின்பற்றுவதில்லை. இது மீகாங் நதியை நிர்வகிக்கும் விதத்தில் காணப்படும் சிக்கல்களை உருவாக்குகிறது. சீனாவின் நடவடிக்கைகள் நீர்-மேலாதிக்க என்ற கருத்துடன் ஒத்துப்போகின்றன. இதன் பொருள் பகிரப்பட்ட நதிப் படுகையில் ஒரு சக்திவாய்ந்த நாடு அதன் நிலை, செல்வம், இராணுவ வலிமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் வளங்களைக் கட்டுப்படுத்துகிறது.


இந்த சவால்களை கருத்தில் கொண்டு, பெய்ஜிங்குடன் நியாயமான நீர் பகிர்வு ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த புது தில்லி கடினமாக உழைக்க வேண்டும். மேலும், அதன் அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களையும் மேம்படுத்த வேண்டும். இது பிராந்தியத்தை நிலையானதாக வைத்திருக்க உதவும்.



Original article:

Share:

பெரிய நிக்கோபார் தீவு திட்டம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி :


மத்திய பழங்குடி விவகார அமைச்சர் ஜுவல் ஓரம் புதன்கிழமை மாநிலங்களவையில் பேசினார். பெரிய நிக்கோபார் உள்கட்டமைப்பு திட்டத்திற்கான ஆட்சேபனைகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த ஆட்சேபனைகள் பெரிய நிக்கோபார் தீவுகளின் பழங்குடி கவுன்சிலால் எழுப்பப்படவில்லை அல்லது மானுடவியலாளர் விஸ்வஜித் பாண்ட்யாவின் வீடியோ அறிக்கையில் ஆவணப்படுத்தப்படவில்லை.


முக்கிய அம்சங்கள் :


  • கேள்வி நேரத்தின் போது மத்திய பழங்குடி விவகார அமைச்சர் ஜுவல் ஓரம் குறிப்பிட்டது, இந்தத் திட்டம் தேசிய நலனுக்கானது என்றார். இந்தத் திட்டத்தில் ஒரு போக்குவரத்து துறைமுகம், விமான நிலையம், எரிவாயு மின் உற்பத்தி நிலையம் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும். இது எந்த சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார். இது எந்த பழங்குடியினரையும் இடம்பெயரச் செய்யாது என்றும் அவர் கூறினார். 2004 சுனாமியைப் பற்றி ஓரம் குறிப்பிட்டார். அந்தப் பகுதி தாழ்வானது என்று அவர் விளக்கினார். இதன் காரணமாக, பழங்குடி சமூகங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெளியேறினர். பழங்குடியினரின் ஆட்சேபனைகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். டி.எம்.சியின் சாகேத் கோகலேவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஓரம் இந்த அறிக்கைகளை வெளியிட்டார்.


  • யாரும் இடம்பெயர மாட்டார்கள். 7.144 சதுர கி.மீ பழங்குடியினரின் இருப்பு நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும். மீதமுள்ள நிலம் வன நிலம். கோகலே குறிப்பிட்டது போல் எந்த ஆட்சேபனையும் இல்லை. கிராம சபையும் அதை ஏற்றுக்கொண்டு முடிவை நிறைவேற்றியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • நிக்கோபார் தீவுகளின் தெற்கே உள்ள மற்றும் மிகப்பெரிய தீவு பெரிய நிக்கோபார் ஆகும். இது 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டுள்ளது. இந்த தீவு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது மற்றும் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பெரிய நிக்கோபாரில் அமைந்துள்ள இந்திராமுனை, இந்தியாவின் தெற்கே உள்ள புள்ளியாகும். இது சபாங்கிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் மட்டுமே உள்ளது. சபாங் இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான சுமத்ராவின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.


  • பெரிய நிக்கோபாரில் இரண்டு தேசியப் பூங்காக்கள், உயிர்க்கோளக் காப்பகம், ஷொம்பென் மற்றும் நிக்கோபரீஸ் பழங்குடியினர் மற்றும் சில ஆயிரம் பழங்குடியினர் அல்லாத குடியேற்றங்கள் உள்ளன.


  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 836 தீவுகளைக் கொண்ட ஒரு குழு. இந்த தீவுகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்தமான் தீவுகள் வடக்கில் உள்ளன, அதே நேரத்தில் நிக்கோபார் தீவுகள் தெற்கில் உள்ளன. இரண்டு குழுக்களும் 150 கி.மீ அகலமுள்ள டென் டிகிரி கால்வாயால் பிரிக்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டு பிப்ரவரியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் செய்தார். தனது பயணத்தின் போது, ​​தீவுக்கூட்டத்தின் சில பழங்குடி மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.


  • இந்த மெகா உள்கட்டமைப்பு திட்டத்தை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (Andaman and Nicobar Islands Integrated Development Corporation (ANIIDCO)) செயல்படுத்துகிறது. இதில் பல முக்கிய மேம்பாடுகள் அடங்கும். முதலாவதாக, இது ஒரு சர்வதேச கொள்கலன் ஏற்றுமதி இறக்குமதி முனையம் (International Container Transshipment Terminal (ICTT) கொண்டிருக்கும். இரண்டாவதாக, ஒரு  பசுமை சர்வதேச விமான நிலையம் கட்டப்படும். இந்த விமான நிலையம் 4,000 பயணிகளைக் கையாளக்கூடிய உச்ச நேரத் திறனைக் கொண்டிருக்கும். கூடுதலாக, திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு தனி நகரம் உருவாக்கப்படும். இறுதியாக, ஒரு எரிவாயு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவப்படும். முழு திட்டமும் 16,610 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கும்.


  • நிதி ஆயோக்கின் அறிக்கைக்குப் பிறகு பெரிய நிக்கோபார் தீவின் "முழுமையான வளர்ச்சிக்கான" திட்டம் செயல்படுத்தப்பட்டது. தீவின் இராஜதந்திர இருப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை முன்-சாத்தியக்கூறு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்தத் தீவு இலங்கையில் கொழும்பிலிருந்து தென்மேற்கே தோராயமாக சமமான தொலைவில் உள்ளது. மலேசியாவில் உள்ள போர்ட் கிளாங்கிலிருந்து தென்கிழக்கே சிங்கப்பூருக்கும் சமமான தொலைவில் உள்ளது.


  • முன்மொழியப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு தீவின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் எதிர்ப்பை எதிர்கொண்டது. பல்வேறு குழுக்கள் இந்த திட்டத்தை எதிர்கொண்டன. இவர்களில் வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், மானுடவியலாளர்கள், அறிஞர்கள் மற்றும் குடிமை சமூகம் ஆகியவை அடங்கும். காங்கிரஸ் கட்சியும் இதை எதிர்த்தது. ஷோம்பன் பழங்குடியினருக்கு ஏற்படக்கூடிய பேரழிவு தாக்கம்தான் முக்கிய கவலை. ஷோம்பன் ஒரு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழு (Particularly Vulnerable Tribal Group (PVTG). அவர்கள் வேட்டையாடுபவர்கள் மற்றும் அவர்களில் சில நூறு மக்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் தீவில் உள்ள ஒரு பழங்குடி காப்பகத்தில் வசிக்கின்றனர்.


  • இந்தத் திட்டம் பழங்குடி மக்களின் உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தீவின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மரங்கள் வெட்டப்படும். துறைமுகத் திட்டம் பவளப்பாறைகளை அழிக்கும் என்ற கவலைகள் உள்ளன. இது உள்ளூர் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தத் திட்டம் நிலப்பரப்பு நிக்கோபார் மெகாபோட் பறவைக்கும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, இது கலாதியா விரிகுடா பகுதியில் கூடு கட்டும் தோல் முதுகு ஆமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.


Original article:

Share:

இந்தியா தனது அதிகரித்து வரும் மின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்? -திஷா அகர்வால், ஷாலு அகர்வால்

 காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அழுத்தம் மின்சாரத் தேவையை அதிகரிக்கும் ஒரு முக்கியக் காரணியாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலும் இந்த உயர்வுக்கு பங்களிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், விரைவான தேவை வளர்ச்சி காரணமாக இந்தியா மின் பற்றாக்குறையை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை நம்பகத்தன்மையுடனும் மற்றும் செலவு குறைந்ததாகவும் பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு திட்டமிட்டு செயல்பட வேண்டும்?


வேகமாக வெப்பமடைந்து வரும் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக, இந்தியாவின் மின் தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. 2021 நிதியாண்டு முதல், இந்தியாவின் மின் நுகர்வு ஆண்டுக்கு 9% ஆக உயர்ந்துள்ளது. முந்தைய பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 5% ஆக இருந்தது. மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)) 2022 மற்றும் 2030ஆம் ஆண்டுக்கு இடையில் 6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (Compound Annual Growth Rate (CAGR)) மின் தேவை வளரும் என்று கணித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய போக்குகள் இந்த மதிப்பீடுகளை மிகைப்படுத்துவதற்கான வலுவான வாய்ப்பைக் கூறுகின்றன. இந்தியாவின் மின் துறை இந்த தேவை மற்றும் அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்கதாக மாறுவதைத் தொடர முடியுமா?


இந்தியாவின் மின்சாரத் தேவையை உயர்த்துவது எது?


பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் தவிர, பருவநிலை மாற்றத்தால் தூண்டப்படும் வெப்ப அழுத்தம், கோடைகாலங்களில் அதிகமாக குறிக்கப்படுகிறது. இது மின்சாரத் தேவையை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்தியாவில் மின்சாரப் பயன்பாடு மூன்று முக்கிய துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்த மின்சார நுகர்வில் தொழில்கள் 33% ஆகும். வீடுகள் 28% பயன்படுத்துகின்றன, விவசாயம் 19% பயன்படுத்துகிறது. இருப்பினும், வீட்டு மின்சாரத் தேவை கடந்த பத்தாண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது.


2024 கோடையில் காற்று குளிர்விப்பான் (air conditioner) விற்பனை முந்தைய ஆண்டைவிட 40-50% அதிகரித்துள்ளது. வருமானம் அதிகரிப்பதாலும், அதிக வெப்பநிலையாலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. மே 30, 2024 அன்று, அகில இந்திய உச்ச மின்சாரத் தேவை 250 GW-ஐத் தாண்டியது. இது திட்டமிடப்பட்ட தேவையை விட 6.3% அதிகமாகும். 2025ஆம் ஆண்டில், இந்தியா 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதம் வெப்பமான நிலையைப் பதிவு செய்தது. இப்போது, ​​நாடு நீடித்த வெப்ப அலைகளுக்குத் தயாராக வேண்டும். கூடுதலாக, உச்ச மின்சாரத் தேவை 9-10% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவின் மின்சாரத் தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் தன்மையும் மேலும் மேலும் நிச்சயமற்றதாகி வருகிறது.


இந்தியா இதுவரை அதிகரித்து வரும் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்துள்ளது?


2000 ஆம் ஆண்டின்  முற்பகுதியில் இருந்து, இந்தியாவின் மின் உற்பத்தி திறன் கணிசமாக வளர்ந்துள்ளது. இது தற்போது நான்கு மடங்கு அதிகரித்து 460 GW அளவை எட்டியுள்ளது. இது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய மின்சார உற்பத்தியாளராக ஆக்குகிறது.


இந்தியாவின் மின்துறை ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இந்த மாற்றம் சுத்தமான ஆற்றலின் தேவையால் இயக்கப்படுகிறது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy (RE)) தொழில்நுட்பங்கள் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


2010ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலக்கை நிர்ணயித்தது. 2020ஆம் ஆண்டுக்குள் 20 GW அளவை  எட்டுவதே இலக்காக இருந்தது. இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், இந்த இலக்கு 2022ஆம் ஆண்டுக்குள் 175 GW ஆக அதிகரிக்கப்பட்டது.


2021ஆம் ஆண்டில், இந்தியா தனது இலக்கை மேலும் உயர்த்தியது. 2030ஆம் ஆண்டுக்குள் 500 GW புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் திறனை அடைவதே புதிய இலக்காகும்.


தேவை அதிகரிப்பை சமாளிக்க அரசாங்கம் நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டில், மின் துறைக்கான நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரித்தது. ரயில்வே மூலம் நிலக்கரி போக்குவரத்திற்கும் முன்னுரிமை அளித்தது. கூடுதலாக, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனில் செயல்பட அறிவுறுத்தியது. சில மாநிலங்கள் குறிப்பிடத்தக்க சூரிய சக்தியைச் இதில் சேர்த்தன. இந்த மாநிலங்கள் பகலில் தேவையை பூர்த்தி செய்ய உபரி சூரிய ஆற்றலைப் பயன்படுத்தின. இருப்பினும், இரவில் உச்ச தேவையை நிர்வகிப்பது ஒரு சவாலாகவே உள்ளது.


2024ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (RE) இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. நாடு சாதனை அளவாக 28 GW புதிய RE திறனைச் சேர்த்தது. இது மின்சார கலவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை 13.5% ஆக அதிகரித்தது. மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பயன்பாடு குறைந்தது. திறன் கலவையில் அதன் பங்கு 50% க்கும் கீழே குறைந்தது. இருப்பினும், நிலக்கரி இன்னும் இந்தியாவின் மின்சார தேவையில் 75% ஐ வழங்குகிறது.


இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் திறன் இப்போது 165 GW அளவை எட்டியுள்ளது. 2025ஆம் ஆண்டில் கூடுதலாக 32 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030 இலக்கை அடைய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சேர்க்க வேண்டும்.


இந்தியா ஏன் அதன் தூய்மையான எரிசக்தி லட்சியங்களை மேலும் உயர்த்த வேண்டும்?


கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி தேவை வேகமாக அதிகரித்து வருவதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. நம்பகமான மற்றும் செலவு குறைந்த எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய மற்றும் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு திட்டமிட்டு செயல்பட வேண்டும்? 


எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) ஒரு புதிய ஆய்வை நடத்தியது. இது 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மின் துறைக்கு ஆறு வெவ்வேறு சூழ்நிலைகளை உருவகப்படுத்தியது. 2030ஆம் ஆண்டுக்குள் 500 GW சுத்தமான எரிசக்தி திறனை அடையத் தவறினால் மின் பற்றாக்குறை மற்றும் அதிக செலவுகள் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தேவை மிதமான விகிதத்தில் வளர்ந்தாலும் இது நடக்கும்.


உதாரணமாக, இந்தியா 400 GW-ஐ மட்டுமே அடைந்தால், மொத்த தேவையில் 0.26% பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும். இந்த சிறிய பற்றாக்குறை சுமார் 1 மில்லியன் வீடுகளுக்கு மின்சார விநியோகத்தை பாதிக்கலாம். இந்த வீடுகள் தினமும் சுமார் 2.5 மணிநேரம் மின்வெட்டை எதிர்கொள்ளக்கூடும். அமைப்பு கட்டுப்பாடுகள் காரணமாக வட இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்படும்.


2023 மற்றும் 2030ஆம் ஆண்டுக்கு இடையில் மின் தேவை 5.8%-க்கு பதிலாக 6.4% CAGR அளவில் வேகமாக வளர்ந்து. இந்தியா அதன் 500 GW இலக்கை அடைந்தால், பெரிய பற்றாக்குறையைத் தடுக்க நாட்டிற்கு இன்னும் அதிக மின் உற்பத்தி தேவைப்படும்.


இந்தியாவிற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளதைவிட 6 GW புதிய நிலக்கரி திறனைச் சேர்ப்பது. இரண்டாவது வழி, திட்டமிடப்பட்ட 500 GW-க்கு மேல் 100 GW புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) திறனைச் சேர்ப்பது.


இந்தியா முதல் விருப்பத்தைத் தேர்வுசெய்தால், அது தேவையை பூர்த்தி செய்யும். இருப்பினும், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும். இது அதிக வேலையில்லா நேரத்தை ஏற்படுத்தும். இது எதிர்பாராத பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் மற்றும் செலவுகளை அதிகரிக்கக்கூடும். இரண்டாவது வழி  வெவ்வேறு மாநிலங்களில் 100 GW புதிய புதுப்பிக்கதக்க திறனைச் சேர்ப்பது ஒரு சிறந்த தீர்வாகும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.


2030ஆம் ஆண்டுக்குள் 600 ஜிகாவாட்டை இந்தியா எப்படி இலக்காகக் கொள்ள முடியும்?


தேவைக்கு ஏற்றவாறு 2030ஆம் ஆண்டுக்குள் 600 ஜிகாவாட் சுத்தமான ஆற்றலை இந்தியா அடைய வேண்டும். இது 2030ஆம் ஆண்டில் மட்டும் 42,400 கோடி ($5 பில்லியன்) வரை கொள்முதல் செலவில் சேமிக்கப்படும் மற்றும் குறைந்த செலவில் நம்பகமான மின்சாரத்தை நாட்டிற்கு வழங்க உதவும். இது 1,00,000 புதிய வேலை வாய்ப்புகள் (2025-2030-ல்) மற்றும் 2030ஆம் ஆண்டில் 23% வரை குறைந்த காற்று மாசுபாடுகளுடன் அதிக சமூக மற்றும் சுகாதார நலன்களை வழங்கும்.


600 GW இலக்கை அடைய, 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் 70 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (RE) சேர்க்க வேண்டும். இது நடைமுறைக்கு மாறானதாகத் தோன்றலாம். நடைமுறையிலும் மின் கட்டமைப்பிலும் பல சவால்கள் ஏற்கனவே மின் உற்பத்தியை மெதுவாக்குகின்றன. இந்த சவால்கள் மின் உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியை வாங்குவதில் ஆர்வத்தையும் குறைத்துள்ளன.


 பொருத்தமான நிலத்தைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் ஒரு பெரிய சவாலாகும். மற்றொரு பிரச்சினை பரிமாற்ற உபகரணங்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதம். மாநிலங்களுக்கு இடையேயான மின் உற்பத்தி நிலையங்களுக்கான சலுகைகள் குறித்தும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. கூடுதலாக, மின் உற்பத்தி நிலையங்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  உடன் சமநிலைப்படுத்துவது சிக்கலானது.


இந்த சவால்கள் காரணமாக, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருப்பது மிகவும் நடைமுறை விருப்பமாகத் தோன்றலாம். இருப்பினும், இது மலிவு விலையில் எரிசக்தி என்பது நம்பகமானதாக இருக்காது. நிலக்கரி திட்டங்கள் செயல்பட ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதை வரலாற்றுத் தரவு காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, மின் உற்பத்தி நிலையங்கள் வேகமாக அமைக்கப்படலாம் மற்றும் அவற்றால் மலிவான மின்சாரத்தை வழங்க முடியும்.


இந்தியா எவ்வாறு விரைவாக புதுப்பிக்கத்தக்கவைகளை சேர்க்க முடியும்?


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) திறனை 600 ஜிகாவாட் (GW) ஆக அளவிடுவது அவசரமானது மற்றும் அடையக்கூடியது. இருப்பினும், அதற்கு சரியான சந்தை அறிகுறிகள் தேவை.


இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான மூன்று முக்கிய உத்திகள் தேவைப்படுகின்றன. 


முதலாவதாக, புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) திட்டங்கள் அதிக இந்திய மாநிலங்களில் அமைக்கப்பட வேண்டும். தற்போது, ​​ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் நான்கில் மூன்று பங்கைக் கொண்டுள்ளன. மாநில ஏலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (inter-State transmission system (ISTS)) கட்டணங்களை முழுமையாக தள்ளுபடி செய்வது ஒரு சில பிராந்தியங்களில் அதிக முதலீடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இது அந்த பகுதிகளில் நில அழுத்தத்தை அதிகரித்துள்ளது.


ஒடிசா, மத்தியப் பிரதேசம், பீகார், பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்களுடன் அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) மேம்பாட்டிற்கான சிறந்த சூழலை உருவாக்க உதவும்.


இதை அடைய, ISTS தள்ளுபடி ஜூன் 2025ஆம் ஆண்டுக்கு அப்பால் நீட்டிக்கப்படக்கூடாது. இருப்பினும், சேமிப்பு ஆலைகள் விதிவிலக்காக இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) மற்றும் PM சூர்யா கர் திட்டம் (PM Surya Ghar Scheme) போன்ற திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்பட்ட RE திட்டங்களையும் ஊக்குவிக்கும்.


இரண்டாவதாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் காற்றாலை மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை ஏற்கனவே உள்ள மற்றும் புதிய சூரிய மின் திட்டங்களுடன் இணைந்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இது நிலம் மற்றும் பரிமாற்ற அமைப்புகளை திறம்பட பயன்படுத்த உதவும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கட்டத்தில் ஒருங்கிணைப்பதையும் இது ஆதரிக்கும்.


CEEW ஆய்வின்படி, இந்தியாவிற்கு 280 GWh பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் 100 GWh பம்ப் செய்யப்பட்ட நீர் சேமிப்பு தேவைப்படும். 2030 ஆம் ஆண்டுக்குள் 600 GWh புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைக்க இது அவசியம்.


இவற்றில், BESS-க்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதை ஆறு மாதங்களுக்குள் கட்டமைக்க முடியும். இது வேகமான வேகத்தில் மிகவும் மலிவு விலையில் மாறி வருகிறது.


மூன்றாவதாக, ஏலம் மற்றும் ஒப்பந்த வடிவமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) கொள்முதலை விரைவுபடுத்தவும், மின் பரிமாற்றங்களில் அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கச் செய்யவும் உதவும். 2024 நிதியாண்டில், இந்திய சூரிய ஆற்றல் கழகம் போன்ற இடைத்தரகர்கள் பல பெரிய சூரிய மற்றும் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டெண்டர்களை நடத்தினர். இருப்பினும், இந்த டெண்டர்களில் இருந்து ஆற்றலை வாங்குவதில் மாநிலங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதலுக்கான தேவையை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இது சிறந்த டெண்டர் வடிவமைப்புகளையும் உருவாக்க வேண்டும் மற்றும் ஏதேனும் சிக்கல்களை தீவிரமாக தீர்க்க வேண்டும். நேரடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதலைத் தவிர, மின் பரிமாற்றங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  கிடைக்கும் தன்மையை மேம்படுத்த வேண்டும். வேறுபாடு ஒப்பந்தக் குழுவை ஆதரிப்பதன் மூலம் அரசாங்கம் உதவலாம்.  இது RE விற்பனையாளர்களுக்கான நிதி அபாயங்களைக் குறைக்கும்.


கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (RE) இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தத் துறையில் நாடு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. நம்பிக்கையுடன், இது இன்னும் பெரிய இலக்கை அடைய முடியும். அதன் உற்பத்தி கலவையில் சுத்தமான எரிசக்தியின் பங்கை இரட்டிப்பாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பங்கு 2030ஆம் ஆண்டுக்குள் 25% இலிருந்து 50% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திஷா அகர்வால் மூத்த ஒருங்கிணைப்புத் தலைவராகவும், ஷாலு அகர்வால் CEEW  ஒருங்கிணைப்பு இயக்குநராகவும் உள்ளார்.



Original article:

Share: