இந்திய நீதி அறிக்கை 2025, நீதி அமைப்பு சாதாரண குடிமகனை எவ்வாறு தோல்வியடையச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது -மாதுரிமா தனுக

 தாமதமான விசாரணைகள், நகர்ப்புற காவல் துறை சார்பு, சிறைச்சாலை நெரிசல் மற்றும் சட்ட நிறுவனங்களில் பொறுப்புத்தன்மை இல்லாமை ஆகியவற்றின் மீது பெரும்பாலும் பாரபட்சம் காட்டுகிறது.


இந்த மாதம் வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (India Justice Report (IJR)) 2025 இன் நான்காவது பதிப்பு, நீதித்துறையின் நான்கு முக்கிய துறைகளான நீதித்துறை, காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் உள்ள முக்கியமான சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் நீதி அமைப்பை பலவீனமாகவும், மெதுவாகவும், பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு நீதி வழங்க முடியாததாகவும் மாற்றியிருக்கும் அமைப்பில் கடுமையான இடைவெளிகள் இருப்பதை இது காட்டுகிறது.


"அநீதி" (injustice) பற்றிய சொற்றொடர் பொதுவானவை. அவற்றைப் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், செய்தி சேனல்களில் பார்க்கிறோம், அல்லது திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் பார்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்படும் காட்சிகளைக் கண்டு நம்மில் சிலர் தயங்குகிறோம். நீதிமன்றங்கள் பெரும்பாலும் வழக்குகளை ஒத்திவைப்பதை நாம் கவனிக்கிறோம். ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் நீண்ட குற்றவியல் நடைமுறைகளில் சிக்கித் தவிப்பதையும் நாம் காண்கிறோம். இருப்பினும், பலர் அதை "சாதாரணமானது" என்றும் வழக்கமான வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


நீதித்துறையின் பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கின்றன. காவல்துறையினர் நம்மைப் பாதுகாக்க வேண்டியிருந்தாலும், அவர்களை அணுக நாம் பயப்படுகிறோம். வழக்குகள் முடிவடைய அதிக நேரம் எடுப்பதால் நாம் நீதிமன்ற அமைப்பு முறையை நம்பவில்லை. காவல் வன்முறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை தவறாக நடத்துவதற்கு நாம் பழகிவிட்டோம். மேலும், பொறுப்பானவர்களை அரிதாகவே பொறுப்பேற்க வைக்கிறோம். இந்த பிரச்சினைகளை நாம் புறக்கணிக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், நீதி அமைப்பு தோல்வியடையும் போது நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம்.


எனவே, பிரச்சினை எங்கே உள்ளது? இது வெறும் விருப்பமின்மை அல்லது திறனின்மையா, அல்லது முழு அமைப்பும் குறைபாடா? மாநிலங்கள் எவ்வளவு சிறப்பாக நீதியை வழங்க முடியும் என்பதை தரவரிசைப்படுத்துவதன் மூலம் பிரச்சினையின் ஆரம்பத்தை கண்டறிய இந்திய நீதி அறிக்கை (IJR) முயற்சிக்கிறது. இது நான்கு முக்கிய பகுதிகளைப் பார்க்கிறது. அவை மனித வளங்கள், உள்கட்டமைப்பு, பட்ஜெட்டுகள் மற்றும் பணிச்சுமை போன்றவை ஆகும். இந்த அமைப்பு எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டது என்பதையும் இது ஆராய்கிறது. நீதியை மேம்படுத்த அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றிய நுண்ணறிவுகளை இந்திய நீதி அறிக்கை (IJR) வழங்குகிறது. இந்த ஆண்டு, இது தடயவியல் போராட்டங்களையும் எடுத்துக்காட்டுகிறது மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களையும் பார்க்கிறது.


காவல் துறையைப் பொறுத்தவரை, காவல் வளங்கள் முக்கியமாக நகரங்களில் இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. 2017ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில் கிராமப்புற காவல் நிலையங்கள் குறைந்துள்ளன. காவல்துறை-மக்கள் தொகை விகிதம் 100,000 பேருக்கு 155 அதிகாரிகள், இது 197 என்ற இலக்கை விடக் குறைவு. இது நீண்ட விசாரணைகளுக்கும் பொதுப் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கிறது.


நீதித்துறையைப் பொறுத்தவரை, நிலுவையில் உள்ள வழக்குகளில் 20% அதிகரிப்பு இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவை ஐந்து கோடியைத் தாண்டியுள்ளன. போதுமான நீதிமன்ற அரங்குகள் இல்லை. மேலும், நீதிமன்றங்களில் பல காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள் முறையே 33% மற்றும் 21% ஆகும். மாவட்ட நீதிமன்றங்கள் பணிச்சுமையை அதிகரித்து வருகின்றன.  ஒவ்வொரு நீதிபதியும் 2,200 வழக்குகளைக் கையாளுகின்றனர். இருப்பினும், வழக்கு தீர்வு விகிதம் 94% ஆகும். இது மெதுவான நீதிக்கு வழிவகுக்கிறது மற்றும் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது.


சிறைகளில், நெரிசல் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சில சிறைச்சாலைகள் அவற்றின் திறனில் 400% க்கும் அதிகமாக இயங்குகின்றன. 76 சதவீத கைதிகள் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த கைதிகள் இன்னும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படவில்லை. மேலும், அவர்கள் நீண்ட காலம் காவலில் உள்ளனர். நான்கு கைதிகளில் ஒருவர் தங்கள் விசாரணைக்காக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கிறார். சிறை ஊழியர்களைப் பொறுத்தவரை, 30% பதவிகள் காலியாக உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், ஒவ்வொரு 699 கைதிகளுக்கும் ஒரு சீர்திருத்த அதிகாரியும், ஒவ்வொரு 775 கைதிகளுக்கும் ஒரு மருத்துவரும் உள்ளனர். ஒரு கைதிக்கு சராசரியாக ஒரு நாளைக்குச் செலவிடும் தொகை ரூ.121 மட்டுமே.  இது நிதி, சரியான உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் இல்லாததைக் காட்டுகிறது. இது மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம், 2023 இன் (Model Prisons & Correctional Services Act) இலக்குகளை அடைவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.


சட்ட உதவி பற்றிய அறிக்கை சில கவலைகளை எழுப்புகிறது. நிதியை திறம்பட பயன்படுத்துதல், வளங்களை சீரற்ற முறையில் விநியோகித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான சட்ட உதவி சேவைகளின் சரிவு ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை இது சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சட்ட மருத்துவமனை 163 கிராமங்களுக்கு சேவை செய்கிறது. சட்ட உதவிப் பணியாளர்களில் 41,553 வழக்கறிஞர்கள் மற்றும் 43,050 துணை சட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். இந்தியா ஒரு சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பையும் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு மாவட்ட நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. சட்ட சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 12 லட்சத்திலிருந்து 2024ஆம் ஆண்டில் 15.5 லட்சமாக அதிகரித்துள்ளது.  இது தேசிய கட்டணமில்லா உதவிஎண் (national toll-free helpline), இணையவழி தளம் (online portal) மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தொடர்பு (targeted outreach) காரணமாக இருக்கலாம்.


தடயவியல் தொடர்பான சிக்கல்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றில் நீண்டகால நிதி பற்றாக்குறை, காலாவதியான உள்கட்டமைப்பு மற்றும் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியவை அடங்கும். மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் சவால்களை எதிர்கொள்கின்றன. மூத்த பதவிகளில் பல காலியிடங்கள் மற்றும் புகார்களைக் கையாள பலவீனமான அமைப்புகள் உள்ளன.


தரவு, பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகள் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், முக்கிய குழுக்கள் சிந்தித்து செயல்பட நேரம் எடுத்துக் கொண்டால் மட்டுமே. நீதித்துறை, மாநில அரசுகள், காவல்துறை, சிறைச்சாலைகள், தடயவியல் துறைகள் மற்றும் சட்ட சேவைகள் அதிகாரிகள் இந்த இடைவெளிகளை நேர்மறையான நடவடிக்கைகளுடன் சரிசெய்ய திட்டங்களை உருவாக்க முடியும். முறையான மாற்றம் கடினமானது. ஆனால், சீர்திருத்தத்திற்கான வழி ஒவ்வொரு பிரச்சினையையும் படிப்படியாகக் கையாள்வதாகும். மிக முக்கியமானது பிரச்சினையை ஒப்புக்கொள்ளும் விருப்பமும் அதைத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பும் ஆகும்.


நீதி அமைப்பை சீர்திருத்துவதற்கு தேவையான உந்துதலாக IJR செயல்படும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.


எழுத்தாளர் ஒரு வழக்கறிஞர், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் மற்றும் இந்தியாவின் காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியில் சிறை சீர்திருத்தங்களுக்கான முன்னாள் திட்டத் தலைவர்.


Original article:
Share:

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் : விவாதம் மற்றும் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

 இந்தியாவின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025, சாதிவாரி தரவு குறித்த அரசியல் விவாதம் : எதிர்க்கட்சிகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில் இந்த முடிவு வந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதை ஒரு முக்கிய பிரச்சினையாக மாற்றியுள்ளார்.


சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா 2025 : அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Political Affairs (CCPA)) வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை, ஏப்ரல் 30 அன்று இதை அறிவித்தார்.


"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சாதிவாரி கணக்கெடுப்பை தற்போது, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சேர்க்க முடிவு செய்துள்ளது. இது சமூகம் மற்றும் நாட்டின் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.


எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு முக்கிய பிரச்சினையாக மாற்றியுள்ள நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த வகையான சாதி தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது?


1951ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சுதந்திர இந்தியாவில் நடந்த ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், பட்டியலிடப்பட்ட வகுப்புகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பற்றிய தரவு வெளியிடப்பட்டது. இருப்பினும், இது மற்ற சாதிகள் பற்றிய தரவுகளை வெளியிடவில்லை. 1931ஆம் ஆண்டுக்கு முன்பு, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் சாதி பற்றிய தரவு சேர்க்கப்பட்டது.


1941-ஆம் ஆண்டில்,சாதி தொடர்பான தரவு சேகரிக்கப்பட்டது.  ஆனால், அது பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக இருந்த M. W. M. Yeats, இந்த அறிக்கை நாடு தழுவிய சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையாக இருக்காது என்று விளக்கினார். அது மிகப் பெரியது, விலை உயர்ந்தது, இனி தேவையில்லை என்று அவர் கூறினார். இது இரண்டாம் உலகப் போரின் போது நடந்தது.


இத்தகைய தரவு இல்லாமல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), அவர்களின் உட்பிரிவுகள் அல்லது பிற சாதிகளின் மக்கள்தொகை பற்றிய துல்லியமான மதிப்பீடு இல்லை. மண்டல் கமிஷன் OBC மக்கள்தொகையை 52% என மதிப்பிட்டுள்ளது. வேறு சில மதிப்பீடுகள் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவை அடிப்படையாகக் கொண்டவை. மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகளும் தங்கள் சொந்த மதிப்பீடுகளைச் செய்கின்றன.


கிட்டத்தட்ட ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுப்பப்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மற்றும் கேள்விகளின் பதிவுகள் இதைக் காட்டுகின்றன. இந்தக் கோரிக்கை பெரும்பாலும் OBCகள் மற்றும் பிற பின்தங்கிய பிரிவுகளிடமிருந்து வருகிறது. இருப்பினும், உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் பொதுவாக அதை எதிர்க்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?


தற்போதைய அரசாங்கம் புதன்கிழமை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இருப்பதாக அறிவித்தது. இருப்பினும், ஜூலை 2021ஆம் ஆண்டில், அத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.


மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் பதிலளித்ததாவது, “மக்கள் தொகை கணக்கெடுப்பில் SC மற்றும் ST தவிர, சாதி வாரியான மக்கள்தொகையை கணக்கிட வேண்டாம் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.


ஆனால், ஆகஸ்ட் 31, 2018ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்தது. பின்னர் பத்திரிகை தகவல் பணியகம், “முதல் முறையாக OBC பற்றிய தரவுகளைச் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டக் கோரிக்கையை தாக்கல் செய்தது. அவர்கள் ஒரு கூட்டத்தின் நிமிட அறிக்கையைக் (minutes of a meeting) கேட்டனர். இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (Office of the Registrar General of India (ORGI)) கோரிக்கைக்கு பதிலளித்தது. OBCகள் பற்றிய தரவுகளைச் சேகரிப்பது குறித்து உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) ஆகஸ்ட் 31, 2018 அன்று அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு நடைபெற்ற விவாதங்களின் பதிவுகள் தங்களிடம் இல்லை என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (ORGI) கூறியது. கூட்டத்தின் நிமிட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (ORGI) கூறியது.


இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) எங்கே நின்றது?


2010ஆம் ஆண்டில், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர்கள், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி மற்றும் சமூகத் தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.


மார்ச் 1, 2011 அன்று, மக்களவையில் ஒரு சுருக்கமான விவாதத்தின் போது, ​​உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் பல பிரச்சினைகளை எழுப்பினார். OBCகளின் ஒன்றியப் பட்டியல் மற்றும் மாநில-குறிப்பிட்ட பட்டியல்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சில மாநிலங்களில் எந்தப் பட்டியலும் இல்லை. மற்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்ற உட்பிரிவுடன் கூடிய பட்டியல் உள்ளது. ஆதரவற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் போன்ற திறந்த பிரிவுகள் போன்ற பிரச்சினைகளையும் பொதுப் பதிவாளர் (Registrar General) குறிப்பிட்டார்.  சில சாதிகள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் OBC பட்டியல்களில் காணப்படுகின்றன. கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்திற்கு மாறும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு மாநிலங்களில் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். சாதி வகைப்பாட்டின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் மற்றும் கலப்புத் திருமணங்களிலிருந்து வரும் குழந்தைகளின் நிலையும் தெளிவாக இல்லை.


இந்த குழப்பங்களுக்கு மத்தியில், அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். பின்னர், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் முழு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை (Socio Economic Caste Census (SECC)) நடத்த முடிவு செய்தது.


சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை (Socio Economic Caste Census (SECC)) தரவு என்ன ஆனது?


ரூ.4,893.60 கோடி அங்கீகரிக்கப்பட்ட செலவில், சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC) ரூ.4,893.60 கோடி செலவில் கிராமப்புறங்களில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தாலும், நகர்ப்புறங்களில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தாலும் நடத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டில், சாதித் தரவைத் தவிர்த்து, இரண்டு அமைச்சகங்களும் SECC தரவை இறுதி செய்து வெளியிட்டன.


சாதித் தரவு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியாவின் கீழ் ஒரு நிபுணர் குழுவை அமைத்து தரவுகளை வகைப்படுத்தவும் உதவியது. அது தனது அறிக்கையை சமர்ப்பித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.


ஆகஸ்ட் 31, 2016 அன்று, கிராமப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு மக்களவை சபாநாயகரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அது SECC பற்றி சில கருத்துக்களை தெரிவித்தது. சாதி மற்றும் மதத் தரவுகளில் 98.87% பிழைகள் இல்லாதது என்று குழு குறிப்பிட்டது. இருப்பினும், இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (Office of the Registrar General of India (ORGI)) 1,34,77,030 பேருக்கான தரவுகளில் பிழைகளைக் கண்டறிந்தது. இது மொத்த SECC மக்கள்தொகையான 118,64,03,770 இல் இருந்தது. பிழைகளை சரிசெய்ய மாநிலங்களிடம் கேட்கப்பட்டது.


முரணான பார்வை என்ன?


செப்டம்பர் 2024ஆம் ஆண்டில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) சாதி கணக்கெடுப்பை ஆதரிப்பதாகக் கூறியது. இருப்பினும், இந்தத் தரவை அரசியல் அல்லது தேர்தல் தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அது மேலும் கூறியது.


ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். விளம்பரப் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் அமைப்பின் கருத்தை விளக்கினார். சாதித் தரவு நல நடவடிக்கைகளுக்கு உதவும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது என்றார். இது இன்னும் பின்தங்கிய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் சமூகங்கள் அல்லது சாதிகளுக்கு குறிப்பாக உண்மை.


"நலப்பணிகளுக்காக, குறிப்பாக பின்தங்கிய சமூகங்கள் அல்லது சாதிகளுக்கு உதவுவதற்கும், சிறப்பு கவனம் தேவைப்படுவதற்கும், அரசாங்கம் சில நேரங்களில் தரவுகளை சேகரிக்க வேண்டியிருக்கும் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இது கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளது. இது  மீண்டும் செய்யப்படலாம். இருப்பினும், இது அந்த சமூகங்களின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல்களின் போது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


இருப்பினும், அந்த அமைப்பு முன்னதாகவே இந்த யோசனையை எதிர்த்தது. மே 24, 2010 அன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பு ஒரு  விவாதத்தின் போது, ​​அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி நாக்பூரிலிருந்து ஒரு அறிக்கையில் "நாங்கள் வகைகளைப் பதிவு செய்வதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், சாதிகளைப் பதிவு செய்வதற்கு எதிரானவர்கள்" என்று கூறினார்.


அரசியல் சாசனத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் முன்வைத்துள்ள சாதியற்ற சமுதாயம் என்ற கருத்துக்கு எதிராக சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடப்பதாகவும், இது சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.


Original article:
Share:

யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை -ரோஷ்னி யாதவ்

 யுனெஸ்கோ அதன் உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலைதளத்தில் (Global Geoparks Network) 16 புதிய தளங்களைச் சேர்த்துள்ளது. இந்த தளங்கள் 11 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவை. இந்த ஆண்டு, வலைதளத்தில் அதன் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.  புதிய புவிசார் பூங்காக்கள் சீனா, வட கொரியா, ஈக்வடார், இந்தோனேசியா, இத்தாலி, நார்வே, தென் கொரியா, சவுதி அரேபியா, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் வியட்நாமில் ஆகியவற்றில் அமைந்துள்ளன.


முக்கிய அம்சங்கள் :


1. யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) என்பது ஒருங்கிணைந்த மற்றும் இணைக்கப்பட்டப் புவியியல் பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் முக்கியமான புவியியல் மதிப்பைக் கொண்ட தளங்கள் மற்றும் நிலப்பரப்புகள் உள்ளன. இந்த பகுதிகளின் மேலாண்மை ஒரு விரிவான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த அணுகுமுறை பாதுகாப்பு, கல்வி மற்றும் நிலையான வளர்ச்சியை உள்ளடக்கியது.


2. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, "யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) அதன் புவியியல் பாரம்பரியத்தைப் பயன்படுத்துகிறது. இப்பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மற்ற அனைத்து அம்சங்களுடனும், நமது பூமியின் வளங்களை நிலையானதாகப் பயன்படுத்துதல், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணித்தல் மற்றும் இயற்கை ஆபத்திலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைத்தல் போன்ற சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துகிறது."


3. உலகளாவிய புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) கீழ்-மேல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அவை, தொடர்புடைய உள்ளூர் மற்றும் பிராந்திய பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய போது, ​​நிலையான வளர்ச்சியுடன் பாதுகாப்பை இணைக்கின்றன.


4. தற்போது, ​​50 நாடுகளில் 229 யுனெஸ்கோ புவிசார் பூங்காக்கள் (Global Geoparks) உள்ளன. யுனெஸ்கோ புவிசார் பூங்கா (Global Geoparks) வலைதளத்தில் தனது தளத்தைச் சேர்த்து வட கொரியா தனது வரலாற்றுச் சாதனையை முதன்முதலில் பதிவு செய்தது. அதே நேரத்தில், சவுதி அரேபியா புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு புவிசார் பூங்காக்களுடன் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


                 மார்ச் 5, 2025 அன்று, யுனெஸ்கோ சர்வதேச புவி அறிவியல் மற்றும் புவிசார் பூங்காக்கள் திட்டத்தின் (International Geoscience and Geoparks Programme) 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்தத் திட்டம் புவி அறிவியலில் யுனெஸ்கோவின் முக்கிய முயற்சியாகும்.


5. ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி, இந்தியாவில் யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் எதுவும் இல்லை.  இந்தியா பல புவியியல் பாரம்பரிய தளங்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் புவிசார் பூங்காக்களை உருவாக்குவதற்கான யோசனையை ஆராய்ந்து வருகிறது. ஆனால், எதுவும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்படவில்லை.


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் இருப்பதற்கான அளவுகோல்கள்


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காவாக மாற, ஒரு பகுதி யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்களுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள சில விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காவில் நான்கு முக்கிய விஷயங்கள் இருக்க வேண்டும். அவை:




1. சர்வதேச மதிப்புள்ள புவியியல் பாரம்பரியம் :


இந்தப் பகுதி முக்கியமான புவியியல் பாரம்பரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த பாரம்பரியம் சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும்.


2. பயனுள்ள மேலாண்மை அமைப்பு :


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் ஒரு அமைப்பால் நிர்வகிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு சட்டப்பூர்வ அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். இது தேசிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


3. தெரிவுநிலை (Visibility) :


யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் உள்ளூர் பொருளாதாரத்தை நிலையான முறையில் வளர்க்க உதவுகின்றன. அவை முக்கியமாக புவிசார் சுற்றுலா மூலம் இதைச் செய்கின்றன. புவிசார் சுற்றுலாவை ஊக்குவிக்க, புவிசார் பூங்கா காணக்கூடியதாகவும் நன்கு அறியப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.


4. வலைதள அமைப்பு (Networking) : 


யுனெஸ்கோவின் உலகளாவிய புவிசார் பூங்காவாக இருக்க, அது உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பின் ((Global Geoparks Network (GGN))) உறுப்பினராக இருக்க வேண்டும். 


உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பு (Global Geoparks Network (GGN)) என்றால் என்ன?

                   இது, 2004ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலகளாவிய புவி பூங்காக்கள் வலையமைப்பு (GGN) என்பது ஆண்டு உறுப்பினர் கட்டணத்துடன் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.



யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்களின் பதவி நிலையானதா?


யுனெஸ்கோ நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தளத்திற்கு உலகளாவிய புவிசார் பூங்கா என்ற பட்டத்தை வழங்குகிறது. அதன் பிறகு, அந்த தளம் இன்னும் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்கிறதா என்பதைப் பார்க்க மறுமதிப்பீடு எனப்படும் ஒரு செயல்பாட்டில் மீண்டும் கவனமாக சரிபார்க்கப்படுகிறது. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்பட,


1. கள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பகுதி இன்னும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், அது யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காவாகவே இருக்கும். இந்த நிலை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரும். இது "பச்சை அட்டை" (green card) என்று அழைக்கப்படுகிறது.


2. அந்தப் பகுதி இனி தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், இரண்டு ஆண்டுகளுக்குள் சிக்கலைச் சரிசெய்ய நிர்வாகக் குழுவிடம் கூறப்படும். இந்த எச்சரிக்கை "மஞ்சள் அட்டை" (yellow card) என்று அழைக்கப்படுகிறது.


3. "மஞ்சள் அட்டை" பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அது அதன் யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்கா அந்தஸ்தை இழக்கும். இது "சிவப்பு அட்டை" (red card) என்று அழைக்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


உலகம் முழுவதும் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO)) முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதகுலத்திற்கு மிகவும் மதிப்புமிக்க தளங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து, இதை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். யுனெஸ்கோ உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பான மாநாட்டால் வழிநடத்தப்படுகிறது. இந்த சர்வதேச ஒப்பந்தம் 1972ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


1. யுனெஸ்கோவின் உலக நினைவகம் (Memory of the World (MoW)) திட்டம், 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது ஒரு சர்வதேச ஒத்துழைப்புக்கான உத்தியாகும். இது ஆவணப்பட பாரம்பரியத்தை, குறிப்பாக அரிதான மற்றும் அழிந்து வரும் பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் அணுகல் மற்றும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


2. 1997ஆம் ஆண்டில் தொடங்கி, 2017 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில் நீண்ட இடைவெளியைத் தவிர்த்து, ஒன்பது (1999 இல்) மற்றும் 78 (2017 இல்) சேர்த்தல்களுடன் பதிவேடு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் இரண்டு சமர்ப்பிப்புகள் சேர்க்கப்படும்.


3. சமீபத்தில், பகவத் கீதை மற்றும் பாரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தின் கையெழுத்துப் பிரதிகள் யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகப் பதிவேட்டின் நினைவகம், பட்டியலில் உள்ள இந்தியாவின் மொத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.


நாட்டியசாஸ்திரம் (Natyashastra) : நாட்டியசாஸ்திரம் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு பண்டைய புத்தகம் ஆகும். இது நிகழ்த்து கலைகளைப் (performing arts) பற்றியது. இந்த புத்தகம் பாரம்பரியமாக பரத முனிவருக்குக் கூறப்பட்டுள்ளது. இதில் 36,000 வசனங்கள் உள்ளன.  யுனெஸ்கோவின் கூற்றுப்படி, நாட்டியசாஸ்திரம் நாடகம் (நாட்டியம்), நிகழ்ச்சி (அபிநயம்), அழகியல் அனுபவம் (ரசம்), உணர்ச்சி (பாவம்) மற்றும் இசை (சங்கீதம்) ஆகியவற்றுக்கான முழு விதிகளையும் வழங்குகிறது.


பகவத் கீதை : பகவத் கீதை என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புத்தகம், 700 வசனங்கள் 18 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது பண்டைய இந்திய இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். மேலும், பீஷ்ம பர்வம் எனப்படும் அதன் ஆறாவது பிரிவில் காணப்படுகிறது. இந்த புத்தகம் வியாச முனிவரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

ராமசரிதமானஸ் (Ramcharitmanas) : இந்த கையெழுத்துப் பிரதி கோஸ்வாமி துளசிதாஸால் எழுதப்பட்டது.


பஞ்சதந்திரம் (Panchatantra) : விஷ்ணு சர்மாவால் எழுதப்பட்ட இந்த விலங்குக் கதைகளின் தொகுப்பு, ஒரு பண்டைய இந்தியப் படைப்பாகும். இதில் கவிதைகள் மற்றும் உரைநடை இரண்டும் அடங்கும்.


சஹ்ருதயலோக-லோகனா : இதன் அழகியல் முக்கியத்துவம் காரணமாக, 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு காஷ்மீரி அறிஞர்களான ஆச்சார்ய ஆனந்தவர்தன் மற்றும் அபிநவகுப்தர் ஆகியோரால் இது எழுதப்பட்டது.

Original article:
Share:

தேசிய குடிமை உதவியாளருக்கான (national civic assistant) வழக்கு - சித்தார்த் கபூர்

 படிவங்கள் (forms), பதிவிறக்கங்கள் (downloads) அல்லது சிக்கலான வழிசெலுத்தல் (complex navigation) ஆகியவற்றின் தேவையை நீக்கி, மக்கள் தங்களின் குறைகளை எளிய மொழியில் தெரிவிக்கும் வகையில், AI-இயங்கும் சாட்பாட் அமைப்புகளை (AI-powered chatbot) பயன்படுத்தப்பட வேண்டும்.


புத்தொழில் மகாகும்பம்-2025 (Startup Mahakumbh) நிகழ்வில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில் சீனாவின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில், உணவு விநியோக பயன்பாடுகள் மற்றும் ஆடம்பர சேவைகள் உள்ளிட்ட நுகர்வோரை மையமாகக் கொண்ட மாதிரிகளில் இந்திய புத்தொழில்களின் கவனம் குறித்து கேள்வி எழுப்பினார். இது, சுற்றுச்சூழல் அமைப்பு உயர்ந்த இலக்கை அடையவும், தொழில்நுட்பத்தில் இந்தியாவை மேலும் தன்னிறைவு பெறவும் அவர் ஊக்குவித்தார். வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக நுகர்வோரை மையமாகக் கொண்ட புத்தொழில்களை ஆதரித்த தொழில்துறை தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றபோது, ​​​​அவரது கருத்துக்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பின. அவை, இந்தியாவின் உலகளாவிய இருப்பை எந்த வகையான கண்டுபிடிப்பு வரையறுக்க வேண்டும்?


புத்தொழில்கள் சீனாவின் தொழில்நுட்பப் பாதையில் இருந்து உத்வேகம் பெறலாம் என்றாலும், அதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பும் அதன் மூலம் பொறுப்பும் உள்ளது என்பதை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். இந்த வாய்ப்பு பொதுவாகவே உலகளாவிய மாதிரிகளை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல, மாறாக ஒரு படி மேலே சென்று பொது நிர்வாகத்தில் புதுமைகளை உருவாக்குவதன் மூலம் ஒரு முன்மாதிரியை அமைக்க உள்ளது.


பொதுத் தேவைகளை மையமாகக் கொண்ட அமைப்புகளை உருவாக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. இந்த அமைப்புகள் நியாயமானதாகவும், திறந்ததாகவும், குடிமக்களுக்கு விரைவாக பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்புகளை உருவாக்குவது பொது சேவைகளை மேம்படுத்தவும், மக்கள் உண்மையிலேயே கேட்கப்படுவதை உணரவும், தனியார் நிறுவனங்கள் மற்றவர்களை நகலெடுப்பதற்குப் பதிலாக அசல் மற்றும் அர்த்தமுள்ள புதுமைகளை உருவாக்க ஊக்குவிக்கவும் உதவும்.


பொது நிர்வாக தளங்கள்


இந்தியாவில் ஏற்கனவே பொது நிர்வாகத்தில் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில்கள் தொடர்ந்து புதியவற்றை அறிமுகப்படுத்துகின்றன. இருப்பினும், தெரு விலங்குகள், குப்பைகள், குழிகள் மற்றும் உடைந்த உள்கட்டமைப்பு போன்ற பொதுவான பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும்போது குடிமக்கள் இன்னும் சிக்கல்களையும் குழப்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சில நகரங்கள் மற்றும் மாநிலங்கள் தங்களுக்கென சொந்த குடிமை தளங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, டெல்லியில் MCD 311 மற்றும் கிரீன் டெல்லி, ஆந்திரப் பிரதேசத்தில் புரசேவா, கர்நாடகாவில் ஜனஹிதா ஆகியவை உள்ளன. CPGRAMS என்பது புகார்களுக்கான ஒரு தேசிய போர்டல் ஆகும்.


Centralised Public Grievance Redress and Monitoring System (CPGRAMS) : மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.


இந்த இயங்குதளங்களில் பெரும்பாலானவை ஒரே மாதிரியான செயல்முறைகளைப் பின்பற்றுகின்றன. இதில், பயனர்கள் ஒரு வகையைத் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் சிக்கல் தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கம் விவரிக்கப்பட வேண்டும். சில சமயங்களில் புகைப்படங்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்ற வேண்டும். பொதுவாக, இயங்குதளங்கள் இயற்கையான, கட்டமைக்கப்படாத பயனர் உள்ளீட்டைப் பொறுத்து கடினமான பணிப்பாய்வுகளை நம்பியுள்ளன. சில தளங்களில், புகார்தாரர்கள் பரந்த அளவிலான விருப்பங்களின் பட்டியலிலிருந்து பொருத்தமான துறையைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது பெரும்பாலும் சிக்கலானது மற்றும் சவாலானது. குறிப்பாக, துறைசார் அதிகார வரம்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக அணுக முடியாத போது. இதன் விளைவாக, புகார்தாரர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனால் செயல்முறை பாதியிலேயே கைவிடப்படலாம்.  டிஜிட்டல் அமைப்பில் வசதியில்லாதவர்கள் அல்லது தங்கள் பிரச்சினைகளை முறையான மொழியில் விவரிக்கவும் தெரிவிக்கவும் முடியாதவர்களுக்கு தற்போதைய அமைப்புகள் சவாலாக உள்ளன. மேலும், காலாவதியான பயனர் இடைமுகங்களின் (outdated user interfaces) சிக்கல் மற்றும் தற்போதைய அமைப்புகளுக்குள் சீரற்ற இயங்குதளப் பதிலளிக்கும் தன்மை உள்ளது. எனவே, பல தளங்களில் முழு அனுபவமும் தடையின்றி உள்ளது.


மக்கள் புகார்களைத் தாக்கல் செய்து தீர்க்கும் முறையை மேம்படுத்த அரசாங்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. குடிமை உதவியாளராகச் செயல்படும் தேசிய, AI-இயங்கும் அமைப்பை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்யலாம். இந்த அமைப்பு மக்கள் தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது பேசுவதன் மூலமோ எளிய மொழியில் பிரச்சினைகளைப் புகாரளிக்க அனுமதிக்கும். உதவியாளர் புகாரைப் புரிந்துகொள்வார், சரியான துறை மற்றும் அதிகாரியைக் கண்டுபிடிப்பார், முறையான சமர்ப்பிப்பை எழுதுவார். மேலும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மக்களை அனுமதிப்பார். முழு செயல்முறையும் ஒரு சாட்பாட் மூலம் நடக்கும், படிவங்கள், பதிவிறக்கங்கள் அல்லது சிக்கலான படிகள் தேவையில்லாமல் பயன்படுத்த எளிதாக்குகிறது.


அணுகக்கூடிய இயங்குதளம் (Accessible dashboard)


புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அது ஒரு பொது இயங்குதளத்தில் சேர்க்கப்பட வேண்டும். இந்த இயங்குதளத்தில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், நிலுவையில் உள்ள அனைத்து புகார்களையும் பகுதி, துறை வாரியாக, அவை எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன என்பதையும், பிற விவரங்களுடன் காட்ட வேண்டும். இது பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கண்காணித்து உறுதிப்படுத்த உதவும்.


பல குறை தீர்க்கும் அமைப்புகள் தெளிவாக இல்லை. இதனால் குடிமக்கள் தங்கள் புகார்கள் பெறப்படுகிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஒரு இயங்குதளத்தில் இந்த சிக்கலை தீர்க்கவும், அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும். உதாரணமாக, ஒரு சாலையின் பள்ளம் 45 நாட்களுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், அதன் தாமதம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒரு பகுதியில் தெருநாய்கள் குறித்து பல புகார்கள் இருந்தால், அந்த புகார்கள் தெளிவாக இருக்கும். ஒரு உள்ளூர் கவுன்சில் மற்றொரு உள்ளூர் கவுன்சிலை விட விரைவாக பிரச்சினைகளை தீர்த்தால், அந்த வித்தியாசத்தை அளவிடுவது எளிதாக இருக்கும். இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த கடைசி படியை அது இன்னும் தீர்க்கவில்லை.


உருவாக்கக்கூடிய AI மாதிரிகள், பொது நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடியது. உதாரணமாக, AI குடிமை உதவியாளர்கள் என்பது ஒரு எளிய மற்றும் அடையக்கூடிய யோசனையாகும். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில புத்தொழில் நிறுவனங்கள் உரையாடல் AI கருவிகள் மற்றும் பொது புகார் இயங்குதளங்களை உருவாக்குவதன் மூலம் இந்தப் பகுதியில் புதுமைகளை உருவாக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், இந்த முயற்சிகள் இன்னும் குறைவாகவே உள்ளன. மேலும், அவை பரவலாக அறியப்படவில்லை. அதாவது அவை பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.


AI குடிமை உதவியாளர் போன்ற ஒரு அமைப்பு அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு முயற்சியாக இருக்க வேண்டும். இது தூய்மை இந்தியா இயக்கம் (Swacch Bharat Abhiyaan) அல்லது "LPG மானியத்தை விட்டுகொடு" (Give up LPG subsidy) பிரச்சாரத்தைப் போலவே வலுவான பொது மக்கள் தொடர்பு மற்றும் நிலையான தெரிவுநிலையால் ஆதரிக்கப்பட வேண்டும். இது நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் அதைப் பயன்படுத்துவதற்குத் தகவல் அளிக்கப்படுவதையும் அதிகாரம் பெறுவதையும் உறுதிசெய்ய உதவும். முக்கியமாக, இந்த இயங்குதளம் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். மாறாக வேறு வழியில் அல்ல. இந்த திட்டம் "ஒரு நாடு, ஒரு குடிமை இயங்குதளமாக" (One nation, one civic dashboard) இருக்கலாம்.


இது போன்ற ஒரு அமைப்பு, தெளிவாக வடிவமைக்கப்பட்டால், மக்கள் அரசாங்கத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மாற்ற முடியும். இது தனித்தனி புகார் சேனல்களை ஒரு புத்திசாலித்தனமான அமைப்பாக மாற்றும். இது நிர்வாகத்திற்கான புதிய தரத்தை அமைக்கும். இந்திய அரசு ஒரு முன்மாதிரியாக இருந்து நல்லாட்சி எப்படி இருக்கும் என்பதைக் காட்ட வேண்டும். நாம் வெற்றி பெற்றால், மற்ற நாடுகள் நாம் அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக இந்தியாவை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கக்கூடும்.


இறுதியாக, இதில் கேள்வி என்னவென்றால், பயனுள்ள குடிமை அமைப்புகளை உருவாக்க முடியுமா என்பது அல்ல. மாறாக, மக்கள் அவற்றை உருவாக்கத் தேர்ந்தெடுப்பார்களா என்பதுதான்.


சித்தார்த் கபூர் ஒரு வழக்கறிஞர் மற்றும் பொதுக் கொள்கை மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர் ஆவர்.


Original article:
Share:

பணியாளர் பற்றாக்குறை : இந்தியா மற்றும் நிரந்தர அறிவியல் ஆய்வாளர்கள் குறித்து

 இந்தியா உறுதியான விஞ்ஞானிகளின் சேவைகளைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.


இந்தியாவில் பொது நிதியுதவி பெறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை பகுப்பாய்வு செய்யும் சமீபத்திய அறிக்கை, எச்சரிக்கையை எழுப்ப வேண்டிய சில குறிப்புகளைக் கொண்டிருந்தது. ஆய்வு செய்யப்பட்ட 244 நிறுவனங்களில் பலவற்றில், முந்தைய ஆண்டை விட 2022-23ஆம் ஆண்டில் நிரந்தர, அறிவியல் ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டது.


 நிரந்தர ஊழியர்களை பணியமர்த்துவதாக அறிவித்த முந்தைய ஆண்டை விட 2022-23ஆம் ஆண்டில் குறைவான நிறுவனங்களும் இருந்தன. 2022-23ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்கள் மொத்தமாக 19,625 ஒப்பந்த ஊழியர்களையும் 12,042 நிரந்தர ஊழியர்களையும் கொண்டிருந்தன. குறுகிய கால ஒப்பந்தங்களில் அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் பணியமர்த்தலில் ஏற்பட்ட மந்தநிலை ஈடுசெய்யப்பட்டது ஆச்சரியமல்ல. இந்த ஒப்பந்த ஊழியர்கள் 2021-22 ஐ விட 14% அதிகரிப்பு. அறிவியல் நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தர ஊழியர்களை விட அதிகமாக உள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம்.

இந்தத் தகவல் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்விலிருந்து வருகிறது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும் பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற 'இராஜதந்திரத் துறைகள்' இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. 


கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின்படி, இந்தியாவின் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான சிறந்த நிறுவனங்களில் ஒன்றான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research (TIFR)) அறிவியல் பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பதவிகளில் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்று இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. TIFRக்கு முதன்மையாக அணுசக்தித் துறையால் நிதியளிக்கப்படுகிறது. மேலும், முக்கிய அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அணு மின் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பதவிகளில் சராசரியாக நான்கில் ஒரு பங்கு காலியாக இருப்பதாக நாடாளுமன்ற அறிக்கை கண்டறிந்துள்ளது. 


ஒருபுறம், குவாண்டம் கணினிகளை உருவாக்குவதற்கும், அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் பணிகளை அறிவித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சியுடன் இணைப்பதற்கான அதன் நோக்கத்தையும் அது அறிவித்துள்ளது. இருப்பினும், அதிநவீன ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களில் நீண்ட காலம் பணியாற்றும் விஞ்ஞானிகள், முழுநேரமாக ஈடுபட்டுள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் இல்லாமல் இவை எதுவும் பலனளிக்காது. அரசாங்கம் ஒரு காலத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (Indian Institutes of Science Education and Research (IISER)) போன்ற நிறுவனங்களை அமைத்து, அடிப்படை அறிவியலில் நான்கு ஆண்டு இளங்கலை திட்டங்களை அறிமுகப்படுத்தியது. நல்ல தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கு ஊதியம், போதுமான நிதி மற்றும் சரியான உபகரணங்கள் போன்ற நல்ல ஆராய்ச்சி நிலைமைகள் அதிக இடங்களில் கிடைப்பதை இந்தியா இப்போது உறுதி செய்ய வேண்டும்.


Original article:
Share:

ஒரு நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் தாக்கம் -அமித் ரஞ்சன், நபீலா சித்திக்

 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாம். ஆனால், இது அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு வலுவான நடவடிக்கையாக, The Resistance Front அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்த முடிவு செய்தது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக நிறுத்தும் வரை அது நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியது. இதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரக்கூடும். இருப்பினும், 1960ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், ஒரு நாடு மட்டும் அதை ரத்து செய்ய அனுமதிக்காது. IWTஇன் பிரிவு XII (4) ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு புதிய அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக்கொண்டால் மட்டுமே அது முடிவுக்கு வர முடியும்.


பல இந்திய ஆய்வாளர்கள் வியன்னா ஒப்பந்த சட்டத்தின் (Vienna Convention on the Law of Treaties (VCLT)) உட்பிரிவுகள் 60 மற்றும் 62-ன் கீழ் உள்ள விதிகளைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்று வாதிடுகின்றனர். இந்தியா VCLT அமைப்பில் உறுப்பினராக இல்லை. இதில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அதை உறுதிப்படுத்தவில்லை. VCLTஇன் உட்பிரிவு 62-இன் கீழ் உள்ள விதிகளை IWT-இல் பயன்படுத்துவது எளிதாக தோன்றினாலும், அதை நிரூபிப்பது கடினம். IWT-ஐ நிறுத்தி வைப்பது இரு விரோத நாடுகளுக்கிடையேயான நீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கக்கூடும். மூன்று வெவ்வேறு சட்ட வழிகள் உள்ளன. பாகிஸ்தானின் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அகீல் மாலிக், உலக வங்கியில் (World Bank) இந்த பிரச்சினையை எழுப்புவது, நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் (Permanent Court of Arbitration) அல்லது ஹேக்கில் (Hague) உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) இந்தியா 1969ஆம் ஆண்டு  VCLTஐ மீறியதாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பது அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UN Security Council) இந்த பிரச்சினையை எழுப்புதல் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு சட்ட வழிகள் உள்ளதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.


நீர் ஓட்டத்தை நிறுத்துதல்


பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளப்படும் நதி நீரைப் பயன்படுத்துவதில் இந்தியா இப்போது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு நீர் ஓட்டத் தகவல்களை வழங்குவதை நிறுத்தவும், அதன் நீர்த்தேக்கங்களை காலி செய்யவும், நீர் மின் திட்டங்களைக் கட்டுவதிலும் அல்லது இயக்குவதிலும் இனி கட்டுப்பாடுகள் இல்லை. வறண்ட காலங்களில் இந்தியா தண்ணீரைச் சேமித்து, கனமழையின் போது அதை வெளியிட முடியும்.  இது பாகிஸ்தானில் வறட்சி அல்லது வெள்ளத்திற்கு வழிவகுக்கும். மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவை பாகிஸ்தானின் விவசாயம், தினசரி நீர் பயன்பாடு மற்றும் மின்சார உற்பத்திக்கு மிகவும் முக்கியமானவை.


பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரோட்டத்தில் ஏற்படும் தாக்கம் அந்நாட்டில் மாகாணங்களுக்கிடையேயான நீர் சர்ச்சைகளை மேலும் தீவிரப்படுத்தலாம். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கு நீர் சண்டைகளில் நீண்ட வரலாறு உள்ளது. தற்போது, அவை ஆறு கால்வாய்கள், குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் கோலிஸ்தான் (Cholistan) பாலைவனப் பகுதியை பாசனம் செய்ய கோலிஸ்தான் கால்வாய் அமைக்கும் திட்டம் குறித்து விவாதித்து வருகின்றன. சிந்து மாகாணத்தில் போராட்டங்கள் வெடித்த நிலையில், சர்ச்சைக்குரிய கால்வாய் திட்டங்களை நிறுத்த பாகிஸ்தான் மத்திய அரசு முடிவு செய்தது.


சிந்து நதி ஒப்பந்தத்தில் தனது அரசியல் முடிவை நடைமுறைப்படுத்த, இந்தியாவிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா 3.60 மில்லியன் ஏக்கர் அடி (million acre-feet (MAF) நீரைச் சேமிக்க, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் 1.34 மில்லியன் ஏக்கர் பாசன நிலத்தை உருவாக்க, மேற்கத்திய நதிகளில் ஓடைப்போக்கில் அணைகளைக் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவிற்கு 1 MAF சேமிப்பு திறன் மட்டுமே உள்ளது மற்றும் 0.642 மில்லியன் ஏக்கர் பாசனத்தை உருவாக்கியுள்ளது. கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றில், பக்ரா, பாங் மற்றும் ரஞ்சித் சாகர் அணை போன்ற பெரிய திட்டங்களால் ஆதரிக்கப்படும் 33 MAF ஒதுக்கப்பட்ட நீரில் 90%க்கும் அதிகமானவற்றை இந்தியா பயன்படுத்துகிறது.


மேற்கத்திய நதிகளில் இந்தியாவின் நீர்மின் திட்டங்களான கிஷங்கங்கா நீர்மின் திட்டம் (Kishanganga Hydroelectric Project), ராட்டில் அணை (Ratle Dam), சலால் அணை (Salal Dam), நிமூ பாஸ்கோ (Nimoo Bazgo) மற்றும் பாகலிஹார் அணை (Baglihar Dam) ஆகியவை IWTஇன் கீழ் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட நீர் பங்கைப் பயன்படுத்தி, இந்து, ஜீலம் மற்றும் சென்னாப் நதிகளின் நீர் வளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த திட்டங்கள் பல்வேறு சேமிப்பு திறன்களைக் கொண்டுள்ளன. கிஷங்கங்கா 18.35 மில்லியன் கன மீட்டர், ராட்டில் அணை 78.71 மில்லியன் கன மீட்டர், சலால் அணை 285 மில்லியன் கன மீட்டர் மற்றும் பாகலிஹார் அணை 475 மில்லியன் கன மீட்டர் ஆகும். வரவிருக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட திட்டங்களான ராட்டில் அணை, கிரு அணை (Kiru Dam) மற்றும் பகல் துல் அணை (Pakal Dul Dam) ஆகியவை சென்னாப் நதி மற்றும் அதன் துணை நதிகளைப் பயன்படுத்தும். இருப்பினும், பாகிஸ்தானுக்குள் பாயும் நீரைப் தடுத்துப் பயன்படுத்தும் இந்தியாவின் திறன் இந்த திட்டங்களின் திறனால் வரையறுக்கப்பட்டுள்ளது.  அதிக நீரோட்ட காலங்களில் பெரும் அளவிலான நீரை தேக்கி வைக்க இந்தியாவிற்கு பெரிய சேமிப்பு உட்கட்டமைப்பு இல்லை.


இந்தியா தனது நீர் பங்கை அதிகரிக்கவும், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரோட்டத்தைக் குறைக்கவும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தொடங்கியுள்ள போதிலும், பெரும்பாலான மேற்கத்திய நதித் திட்டங்கள் குறைந்த சேமிப்புடன் உள்ளன. சவாலான இமயமலை நிலப்பரப்பு மற்றும் அதிகாரத்துவத் தாமதங்களைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த உரிமைகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பைக் ஏற்படுத்த பத்தாண்டு அல்லது அதற்கு மேலாக ஆகலாம்.


முடிவுரை


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான தனது நிலைப்பாட்டை இந்தியா நியாயப்படுத்தலாம். இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்ற அண்டை நாடுகளை அரசியல் ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் திருப்திப்படுத்தவில்லை எனில், இந்த இடைநீக்கம் இந்தியாவின் மற்ற நாடுகளுடனான உறவுகளை பாதிக்கலாம். உதாரணமாக, பல இந்திய நதிகளுக்கு மேலாற்றுப் பகுதியிலுள்ள சீனா, திபெத்திலிருந்து இந்தியாவில் பாயும் நதிகளில் உள்ள நீர் கட்டமைப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding (MoU)) புதுப்பிக்காமல் இருக்க, அல்லது நீர்த் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் இடைநீக்கத்தை தனக்கு சாதகமாக மேற்கோள் காட்டலாம். 


சட்லஜ் மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் சீனாவுடன் இந்தியாவின் தரவுப் பகிர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது மற்றும் இந்தியாவின் நீர்வள அமைச்சகத்தின் இணையதளம் கூறுவதைப் போல், இது புதுப்பித்தல் செயல்முறையில் உள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் டோக்லாம் நெருக்கடியின் போது, சீனா இந்தியாவுடன் நீர்த் தரவுகளை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், வங்கதேசத்துடன் பகிர்ந்து கொண்டது. இரண்டாவதாக, 2026ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ள கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்தியாவும் வங்கதேசமும் ஒப்புக்கொண்டுள்ளதால், சர்வதேச நீர் விநியோக ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.  தற்போது, ​​இந்தியாவும் வங்கதேசமும் மிக நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியாவின் நீர் முடிவுகள் நேபாள மக்களின் ஒரு பிரிவினரை இந்தியாவுடனான நீர் தொடர்பான மற்றும் பிற ஒப்பந்தங்களில் அரசாங்கத்தை எச்சரிக்க தூண்டக்கூடும். இலங்கையிலிருந்து சில விமர்சகர்களும் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது "கவனமாக" இருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.


அமித் ரஞ்சன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்; நபீலா சித்திக், உதவிப் பேராசிரியை, விநாயகா Mission’s Law School, விநாயகா, Missions Research Foundation-Deemed University, சென்னை.


Original article:
Share: