சிறப்புரிமை மீறல் அறிவிப்பு என்றால் என்ன? -சௌபத்ரா சாட்டர்ஜி

 நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் பேசுவதற்கு  நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. இருப்பினும், மற்றொரு சட்டமியற்றுபவரின் பெயரைக் குறிப்பிட்டால், அவர்கள் பதிலளிக்க உரிமை உண்டு.


புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் தாக்கல் செய்தார். பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் பேசிய சில பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் அதை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் அவர் இவ்வாறு செய்தார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர்களுக்கு சில சலுகைகள் உண்டு. அவர்களைப் பற்றி சட்டமன்றத்தில் தவறான தகவல்களைப் பரப்ப முடியாது. அவர்கள் சபையில் பேசியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர  முடியாது. மற்றொரு சட்டமியற்றுபவர் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டால், அவர்களுக்குப் பதிலளிக்க உரிமை உண்டு. சட்டமன்ற அமர்வுகளின் போது, ​​அரசாங்கக் கொள்கை அல்லது சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சட்டமியற்றுபவர்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். இதனால்தான், நாடாளுமன்ற  கூட்டத்தொடர் நடக்கும் போது, ஒன்றிய அமைச்சரவை எடுக்கும்  முடிவுகளை, ஒன்றிய  அரசு வெளியிடுவதில்லை.


ஒரு உறுப்பினர் அல்லது அமைச்சர் ஆதாரமற்ற கருத்தைச் சொன்னாலோ, அல்லது யாரேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நற்பெயருக்குக் எதிராக தவறான கருத்துக்களை கூறினாலோ அல்லது அவர்களின் வேலையைச் செய்யவிடாமல் தடுத்தாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர்சட்டத்தை மீறியதாக சபாநாயகரிடம் (அல்லது மாநிலங்களவை தலைவரிடம்) புகார் அளிக்கலாம். 


நவம்பர் 22, 1978 அன்று, அவசரநிலை  முடிவடைந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, மக்களவையின் சிறப்புரிமைக் குழு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவையை அவமதித்த குற்றத்திற்காகக் கண்டிதது. ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர் குஹா தலைமையிலான குழு, சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிர்மாய் போசுவின் புகாரை விசாரித்தது. 1975-ல் அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மாருதி பற்றிய தகவல்களை சேகரிக்க அதிகாரிகளுக்கு இந்திரா காந்தியின் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியதாக போசு கூறினார். இந்திரா காந்தியும் 1978-ல் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  


அனுராக் தாக்கூரின் முழு உரையாயும் பிரதமர் வெளியிட்டார். ஆனால் அந்த உரையின் சில வார்த்தைகள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட வார்த்தைகளை பகிரங்கப்படுத்துவது சிறப்புரிமை மீறலாகும் என்று சரண்ஜித் சிங் சன்னி கூறுகிறார். பொதுவாக, நீக்கப்பட்ட சொற்கள் அல்லது கருத்துக்களை வெளியிட முடியாது.


சிறப்புரிமைக் (privilege) கேள்வியை எழுப்ப விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர், கேள்வி எழுப்பத் திட்டமிடும் நாளில் காலை 10:00 மணிக்கு நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் விதி 223 கூறுகிறது. 


அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கு முன்பு சபாநாயகர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும். இந்த வழக்கில், சபாநாயகர் அறிவிப்பின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பின்னர் முடிவு செய்வார் என்று அரசியலமைப்பின் விதி 222 கூறுகிறது. அத்தகைய எந்தவொரு அறிவிப்புக்கும் சபாநாயகர் தனது ஒப்புதலை வழங்கினால், அது வழக்கமாக உரிமைக் குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்படும். குழு தனது அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் புகார்தாரர் இருவரையும் அழைக்கும்.  



Original article:

Share:

இந்திய நகரங்கள் ஏன் ஒருபோதும் பருவமழைக்குத் தயாராக இருப்பதில்லை? -கௌசிக் தி குப்தா

 இந்தியாவின் பருவமழை துயரங்களுக்குப் பின்னால் மோசமான நகர பராமரிப்பு,  உள்கட்டமைப்பு குறைபாடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இடையில் அத்தியாவசிய தொடர்புகளை உருவாக்குவதில் கொள்கை வகுப்பாளர்களின் தோல்வி ஆகியவை உள்ளன. 


டெல்லி மற்றும் அதள் சுற்றுப்புற நகரங்களில் பெய்த  பலத்த மழை, நகரங்களை  நீரில் மூழ்கடித்து, போக்குவரத்தை முடக்கி, உயிர்களை பறித்தது.  இதில் தவிர்க்க முடியாமல் எழும் கேள்வி என்னவென்றால், இந்திய நகரங்கள் ஏன் பருவமழைக்கு ஒருபோதும் தயாராக இல்லை? என்பது தான். அதற்கு வடிகால் அமைப்பு இல்லாதது தான் ஒரு முக்கிய காரணமாக  உள்ளது. பண்டைய மற்றும் இடைக்கால நாகரிகங்கள் தண்ணீரை கொண்டு செல்வதற்கான வழிகளைக் கொண்டிருந்தன. அதற்கு சான்று சிந்து சமவெளி நகரங்களின் வடிகால் அமைப்பு முறை ஆகும். ஆனால் நவீன காலங்களில், தரை முழுவதும் கான்கிரீட் மற்றும் தார்சாலைகள் அமைக்கப்படுதலால், நகரத் திட்டமிடுபவர்கள் அதனை அரிதான முறையிலேயே, கடந்த காலத்திலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். மழையினால் வெளியேறும் கழிவுநீர் சரியான வடிகால் வசதியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்குகிறது. இதனால் சாலைகள், பாதாளச் சாக்கடைகள், வீடுகள், அலுவலகங்கள், ரயில் பாதைகள் மற்றும் அடித்தளங்களில் வெள்ளம் ஏற்படுகிறது.

இதனால், இந்தியாவில் பருவக் காலங்களில் தீவிர மழையை எதிர்கொள்ளுதல் பெரும் சவாலாகவே உள்ளது.  


காலநிலை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அதிக உள்ளூர் மழைப்பொழிவு (hyper-local torrential rainfall) ஆகும். ஜூலை 26ல், டெல்லியில் 

99 மிமீ மழை பெய்தது. மறுநாள், பழைய ராஜிந்தர் நகரில் ஒரு வடிகால் வெடிப்பில் மூன்று இளம் உயிர்கள் பறிபோயின. இச்சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பூசாவில் 58 மிமீ மழை பதிவாகியுள்ளது.  இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department(IMD)) 64 மிமீ மழையை கன மழையாக  கருதுகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையான டெல்லியின் வடிகால் அமைப்பு 50 மிமீ மழையைக் கூட கையாள முடியாமல் திணறுகிறது.  


கடந்த வாரம், 26 வயதான நிலேஷ் ராய் என்பவர், தண்ணீர் தேங்கியுள்ள தெருவை தவிர்க்க முயன்றார். அவர் ஒரு உலர்ந்த பகுதியின் குறுக்கே குதித்து, தனது கட்டிடத்தின் அருகே ஒரு இரும்பு கேட்டைப் பிடித்தார். துரதிர்ஷ்டவசமாக,  அந்த  இரும்பு கேட் ஒரு மின்சார கம்பியுடன் தொடர்பு கொண்டு இருந்ததால், நிலேஷ் ராய் மின்சாரம் தாக்கி இறந்தார். குருகிராமில் வெள்ளத்தில் மூழ்கிய மெட்ரோ நிலையம் அருகே,  உயர் அழுத்த மின்சார கம்பி விழுந்து மூன்று பேர் இறந்தனர்.


 கடந்தகால நகரங்களில் பெரும்பாலானவை உயரமான தளத்தில் அமைந்திருந்தன. அவை தண்ணீரை திறம்பட வெளியேற்ற அவர்களுக்கு உதவியது. ஆனால் பிந்தைய காலங்களில் நகரத் திட்டமிடல் என்ற முறையைப் பின்பற்றியது. நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவை நகர வளர்ச்சிக்கு முக்கியமானவை. இவை பெரும்பாலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, டெல்லியில் மழைநீரை முதலில் சேகரிக்கும் இடங்களில் ஒன்றான மின்டோ சுரங்கப்பாதை, உயரமான நிலத்தால் சூழப்பட்ட தாழ்வான பகுதியாகும். தற்போது பெய்த மழையில், பாதாள சாக்கடை மற்றும் பழைய ராஜிந்தர் நகர் ஆகிய இரண்டும் வெள்ளத்தில் மூழ்கின.


நீரியல் புறக்கணிப்பு (neglect of hydrology) மிகவும் மாறுபட்ட புவியியல் அம்சங்களைக் கொண்ட நகரங்கள் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு இதேபோன்ற நீர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வழிவகுத்தது. மலைகளை சமன் செய்து கடலில் இருந்து நிலத்தை மீட்டு மும்பை உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்டு சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்தது. இது தாழ்வான பகுதிகள் மற்றும் மலைகளின் கலவையாகும். மழை பெய்யும் போது, ​​நகரின் மையப் பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. மழைக்காலங்களில், குறைந்தது ஒரு நாளாவது, கிட்டத்தட்ட முழு நகரமும் தண்ணீருக்கு அடியில் செல்கிறது, அதன் உயிர்நாடியான, ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது. உயர் அலைகள் நிலைமையை மோசமாக்குகின்றன. 2005 ஆம் ஆண்டின் பேரழிவு தரும் வெள்ளத்திற்குப் பிறகு, நகரத்தின் மோசமான வானிலை நாட்கள் நீண்டுகொண்டே வருகின்றன.


காலநிலை மாற்றம் அனைவரையும் பாதிக்கிறது. எவ்வாறாயினும், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் கடுமையான குளிர் ஆகியவற்றின் தாக்கத்தை ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களே எதிர்கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. நகர்ப்புற இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாடு இந்த பிரிவினருக்கு நியாயம் செய்யவில்லை. அரசியல்வாதிகள் அவர்களின் வாக்குகளின் சக்தியை அறிந்திருந்தாலும், நகரங்களை உருவாக்கும் சமூகங்களின் குடிசைப்பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் உட்பட முறைசாரா குடியிருப்புகளுக்கு முழுமைத் திட்டங்கள் அரிதாகவே காரணியாக உள்ளன. கழிவுநீர் வலைப்பின்னலுக்கு வெளியே, நகர்ப்புறங்களில் இருந்து வரும் கழிவுகள், மழைநீர் வடிகால் அமைப்பில் நுழைந்து அதை அடைத்துக் கொள்கின்றன. கடுமையான மழைப்பொழிவு என்பது  குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து, அவர்களுக்கு நோய்கள் மற்றும் வாழ்வாதார இடையூறுகளைக் ஏற்படுத்துகிறது.


பயிற்சி மையத்தில் ஏற்பட்ட சம்பவம் மற்றும் நிலேஷ் ராயின், துயரங்கள் திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பிற தொடர்புகளையும் உருவாக்கத் தவறியதைக் காட்டுகின்றன. ராஜீந்தர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பிரிவினை அகதிகளின்  குடியிருப்புகளாக உருவாக்கப்பட்டன. டெல்லியின் சமூக பொருளாதார வரைபடம் இன்று நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் குடியிருப்புகள், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்விற்கு தயார் செய்பவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் ஒரு அறை குடியிருப்புகள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கான பகுதிகளை குறிக்கும்.


நவீனத்திற்கு முந்தைய டெல்லியில், சிற்றோடைகள் மற்றும் சிறிய நீரோடைகள் ஒரு காலத்தில் ஆரவல்லிகளிலிருந்து புதிய நீரைக் கொண்டு வந்தன. மேலும் மழைக்காலங்களில் அவை புயல் நீர் வடிகால்களாக மாறி, கனமழை பெய்த சில மணி நேரங்களுக்குள் டெல்லியில் விரைவாக வடிகட்டின. இன்று, அவற்றை முறையாக காலத்திற்கேற்ப பாரமரிக்கவில்லை. ராஜீந்தர் நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரோல் பாக்கில் உள்ள ஜர்ஹல்லியா அத்தகைய ஒரு நீர் வழித்தடமாகும். இன்று, அது மூடப்பட்டுள்ளது.


இயற்கையான நீரை வெளியேற்றும் அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டதால், நவீன வடிகால் அமைப்புகளால் இந்த முறை புறக்கணிக்கப்படுகின்றன. டெல்லியின் வடிகால் அமைப்பு 1976 ஆம் ஆண்டுக்கு முந்தையது. இந்த கண்டா கால்வாய்களில் சில மூடப்படவில்லை. மும்பையின் வடிகால் அமைப்பு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. குருகிராமின் மட்டுப்படுத்தப்பட்ட வடிகால் திறன், இதன் விளைவாக பாட்ஷாபூர் வடிகால் கனமழையின் போது நிரம்பி வழிகிறது மற்றும் இயற்கை நீர் வெளியேற்றங்களின் ஓட்டத்தை சீர்குலைக்கிறது. இது இந்தியாவின் மில்லினியம் நகரம் (Millennium City) என்ற கூற்றுக்கு எதிரானது. இந்த வடிகால் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான லிட்டர் கழிவுநீரைக் கொண்டு சென்று டெல்லியின் நஜாஃப்கர் நல்லாவில் வெளியேற்றுகிறது.  இது 18 ஆம் நூற்றாண்டின் முகலாய அதிகாரி மிர்சா நஜாப் கானின் பெயரிடப்பட்டது மற்றும் பறவைகள் நிறைந்த ஒரு ஜீலின் ஒரு பகுதி, மானாவாரி சாஹிபி நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் சிந்து நாகரிக நகரங்களின்  பண்பாட்டு அடையாளங்கள் காணப்படுகின்றன.


 மழையின் போது பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்வை தொடர்ந்து, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வடிகால்களை ஒழுங்குபடுத்துவது குறித்து வரவேற்கத்தக்க உரையாடல்கள் தொடங்கியுள்ளன. அதற்கு இன்னும் நிறைய வடிகால் அமைப்பு சார்ந்த திட்டங்களை தொடங்க வேண்டும். திட்டமிடுபவர்கள் நகரங்களின் வடிகால் அமைப்பு, நீர்நிலைகளை பாராமரித்தல், காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.



Original article:

Share:

போபால் விஷவாயு சம்பவம் நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேசம் ஏன் நச்சுக் கழிவுகளை அகற்றத் தொடங்குகிறது? -ஆனந்த் மோகன் ஜே

 போபால் விஷவாயு சம்பவம் (Bhopal gas tragedy) நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் (Union Carbide facility) இருந்து 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை எரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.


போபால் விஷவாயு துயரச் சம்பவம் (Bhopal gas tragedy) நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து 337 மெட்ரிக் டன் (Metric Tons (MT)) நச்சுக் கழிவுகளை எரிக்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு இறுதியாக முன்னெடுத்துச் செல்லும். இதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் 4-ம் தேதி ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

போபால் விஷவாயு விபத்து (Bhopal Gas Tragedy) என்றால் என்ன?


டிசம்பர் 2, 1984 அன்று, இரவு மத்தியப் பிரதேசத்தின் போபாலில் மிகப்பெரிய தொழில்துறை பேரழிவுகளில் ஒன்று ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது,  நகரின் புறநகரில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (Union Carbide India Limited (UCIL)) நிறுவனத்திற்கு சொந்தமான பூச்சிக்கொல்லி ஆலையில் (pesticide plant) இருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனேட் (Methyl Isocyanate (MIC)) வாயு கசிந்ததில் சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.


இதில், உயிர் பிழைத்தவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோல் நோய் (skin disease), பெண்களின் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சினைகள் (reproductive health problems in women) மற்றும் பிறக்கும் குழந்தைகளின் பிறவி உடல்நலப் பிரச்சினைகள் (congenital health issues in children born) ஆகியவை இதில் அடங்கும்.


சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவு மிகப்பெரிய அளவில் இருந்தது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் மாசுபட்டிருந்தன மற்றும் பல கைப்பம்புகள் (hand pumps) சீல் வைக்கப்பட்டன.


அமெரிக்காவை தளமாகக் கொண்ட யூனியன் கார்பைட் கார்ப்பரேஷனின் (Union Carbide Corporation (UCC)) துணை நிறுவனமும், தற்போது டௌ கெமிக்கல்ஸின் (Dow Chemical) ஒரு பகுதியுமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (Union Carbide India Limited (UCIL)) நிறுவனம், தங்களின் துன்பங்களுக்கு நியாயமான இழப்பீடு கோரி உயிர் தப்பியவர்களால் பொறுப்பேற்க வைக்கப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் கார்ப்பரேஷனின் (Union Carbide Corporation (UCC)) வாரிசு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் இழப்பீடு கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை (curative petition) உச்ச நீதிமன்றம் 2023-ல் தள்ளுபடி செய்தது.


கழிவுகளை அகற்றும் பணியை தொடங்க ஏன் நாற்பதாண்டுகள் ஆனது?


சமூக ஆர்வலர் அலோக் பிரதாப் சிங், என்பவர் 2004-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை (Public interest Litigation (PIL)) தாக்கல் செய்தார். அந்த இடத்தில் மாசுபாட்டிற்கு டெள கெமிக்கல்ஸ் (Dow Chemicals) பொறுப்பு என்றும், சுத்தம் செய்வது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசின் இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனத் துறை செயலர் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்தது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய (Central Pollution Control Board (CPCB)) நிபுணர்கள் 2005-ம் ஆண்டில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள பருச் என்விரோ-இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Bharuch Enviro-Infrastructure Limited (BEIL)) நிறுவனத்திற்கு சொந்தமான உலகத் தரம் வாய்ந்த எரியூட்டியை பாதுகாப்பாக அகற்றுவதற்காக குறிப்பிட்டுள்ளனர். 2007-ல் குஜராத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் 2009-ல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, இது கைவிடப்பட்டது.


ஹைதராபாத்தில் உள்ள துங்கிகல் (Dundigal) மற்றும் மும்பையில் உள்ள தலோஜா (Taloja) உள்ளிட்ட பிற சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி (Treatment, Storage, and Disposal Facility (TSDF)) உள்ளிட்ட தளங்களை பணிக்குழு அடையாளம் கண்டது. 2010-ம் ஆண்டில், மத்திய பிரதேசத்தின் பிதாம்பூரில் உள்ள சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியில் (TSDF) 346 மெட்ரிக் டன் கழிவுகளை எரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த முடிவை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசானது சவால் செய்துள்ளது. மேலும், 2012-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனுவை (Special Leave Petition) தாக்கல் செய்தது. அதில் "போபால் வாயு நச்சுக் கழிவுகளை எரிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாக இந்த வசதி வலுவாக இல்லை எனவும், இது தொழில்துறை கழிவுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அபாயகரமானது" என்று வாதிட்டது.


பொதுவாக, ஜெர்மனியில் கழிவுகளை அகற்ற ரூ.24.56 கோடி மதிப்புள்ள திட்டத்தை சமர்ப்பித்த Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit GmbH (GIZ), அமைப்பானது தங்கள் குடிமக்களின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து 2012-ல் அதை திரும்பப் பெற்றது.


2015-ம் ஆண்டில், ஒன்றியமானது பிதாம்பூர் சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியில் ஒரு சோதனை நிகழ்வை நடத்தியது. ஆனால், குடியிருப்பாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேலும் திட்டங்களை நிறுத்த வேண்டியிருந்தது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படாமல், ஏழு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


மார்ச் 4, 2024 அன்று, நீதிமன்றங்களின் அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு, கழிவுகளை அகற்ற ஒன்றிய அரசு ரூ.126 கோடியை வழங்கியது.


நச்சுக் கழிவுகளை அகற்றுவதற்கான திட்டம் என்ன?


இந்த திட்டத்தின்படி, மத்திய பிரதேச போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறையின் (Bhopal Gas Tragedy Relief and Rehabilitation (BGTRR)) கண்காணிப்பில், ஜூலை 2024 முதல் இந்தூரின் பிதாம்பூரில் உள்ள சுத்திகரிப்பு சேமிப்பு அகற்றல் வசதியின் எரியூட்டியில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து (Union Carbide facility) நச்சுக் கழிவுகளை அகற்றுதல் நடைபெறும்.


இந்த திட்டம் 180 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 20 நாட்களில், கழிவுகள் மாசுபட்ட இடத்திலிருந்து அகற்றும் இடத்திற்கு பேக் செய்யப்பட்ட டிரம்களில் (packed drums) கொண்டு செல்லப்படும். பின்னர், இந்த கழிவுகள் சேமிப்பிலிருந்து ஒரு கலவை கொட்டகைக்கு (blending shed) மாற்றப்படுகின்றன. அங்கு, அது சில வேதிப்பொருட்களுடன் கலக்கப்பட்டு (mixed with regents) பின்னர் 3-9 கிலோ எடையுள்ள சிறிய பைகளில் அடைக்கப்படுகிறது.


எரித்தல் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பல துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 76-வது நாளில் மட்டுமே உண்மையான எரித்தல் நடக்கும். இந்த உண்மையான அகற்றல் தொடங்குவதற்கு முன்பு காற்றின் தரம் மோசமடையாது மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளின்படி எரித்தல் நடைபெறுகிறது.


இந்த நடைமுறைக்கு ரூ.126 கோடி செலவாகும். இது 2012-ல் Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit GmbH (GIZ) அமைப்பு வழங்க முன்வந்த ரூ.24.56 கோடியை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

தளத்தில் உள்ள மாசுபாட்டின் அளவு என்ன?


போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறையால் (BGTRR) ஆதரவளிக்கப்பட்ட 2010 அறிக்கை யூனியன் கார்பைடு வளாகத்திற்குள் (Union Carbide premises) ஒன்பது இடங்களில் மாசுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியது. அந்த இடத்தில் 320,000 கன மீட்டர் மண் சீரமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுபோன்ற துயர சம்பவத்திற்கு முன்னரே அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டிருந்தது. மேலும், அப்பகுதிக்கு அருகிலுள்ள ஐந்து கிணறுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.


2021-ம் ஆண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) அறிக்கை, தொழிற்சாலைக்கு வடக்கே அமைந்துள்ள சூரிய ஆவியாதல் குளங்களை (Solar Evaporation Ponds (SEP)) சரிசெய்ய உத்தரவிட்டது. துயரச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் உள்ள தண்ணீரில் மாங்கனீஸ் (manganese) மற்றும் நிக்கல் (nickel) போன்ற கன உலோகங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குளோரின் (chlorine) மற்றும் மொத்த கடினத்தன்மை (total hardness) போன்ற இயற்பியல் வேதியியல் அளவுருக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளை மீறி கூடுதலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.


செயல்முறையில் உள்ள அபாயங்கள் என்ன?


2015-ம் ஆண்டு விசாரணையின் சோதனை அறிக்கையில், எரியூட்டியில் இருந்து தப்பியோடிய உமிழ்வு (fugitive emissions ) எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறியது.


"எரியூட்டியைச் சுற்றியுள்ள சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்ட அளவுருக்களான PM-10 (10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள்), சல்பர் ஆக்சைடுகள் (SOx), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx), ஆர்சனிக் (arsenic), ஈயம் (lead) மற்றும் பென்சீன் (benzene) ஆகியவற்றிற்கான தேசிய சுற்றுப்புற காற்று தர தரங்களுக்குள் (National Ambient Air Quality standards) இருந்தது. சுற்றுப்புற காற்றில் நிக்கல் இணக்கமாக இருந்தது. இருப்பினும், சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி (TSDF) வளாகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்கு இது இல்லை, ”என்று அறிக்கை கூறியது.


இந்த கூற்று வாயு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக செயல்படும் சமூக குழுக்களால் மறுக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board (CPCB)) அறிக்கையானது, சோதனையின் கண்டுபிடிப்புகள் குறித்து வெளிப்படுத்தியது. இதில், ஏழு சோதனை நிலைமைகளில் ஆறு நிலைமையின் போது குடியிருப்பாளர்கள் அதிக அளவு டையாக்ஸின்கள் (Dioxins) மற்றும் ஃபுரான்களுக்கு (Furans) ஆளாகியுள்ளனர். இவை இரசாயன மாசுக்களை எரிப்பதன் மூலம் உருவாகின்றன. அவை மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்  மற்றும் தோல் கோளாறுகள் (skin disorders), கல்லீரல் பிரச்சினைகள் (liver issues) மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை (immune system) பாதிக்கலாம்.



Original article:

Share:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இட ஒதுக்கீடு மாதிரியை அடிப்படையாக வைத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் உள்ள மேல்நிலையினரை (creamy layer) அடையாளம் காணுதல் -ஷியாம்லால் யாதவ்

 அத்தகைய கொள்கையை எவ்வாறு உருவாக்குவது? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு மாதிரி ஒரு வரைபடத்தை வழங்க முடியும்.


பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes)  சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீட்டுக்கு (sub-classification) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் உள்ள மேல் நிலையினரை (creamy layer), அரசு அடையாளம் காண நீதிபதி பி.ஆர்.கவாய் (Justice B R Gavai) உத்தரவிட்டுள்ளார்.  பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் மேல் நிலையினர் (creamy layer) நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். அத்தகைய கொள்கையை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC) இடஒதுக்கீடு மாதிரியை அடிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 


மேல் நிலையினர் (creamy layer) என்ற கருத்து 1992-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட  இந்திரா சஹானி தீர்ப்பிலிருந்து வந்தது. ஆகஸ்ட் 13, 1990-ஆம் ஆண்டு, வி.பி.சிங் அரசு, மத்திய அரசுப் பணிகளில் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC) இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதை எதிர்த்து இந்திரா சஹானி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


நவம்பர் 16, 1992-ஆம் ஆண்டு,  நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC) இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. மேல் நிலையினர் (creamy layer) அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC)களில் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறிய உறுப்பினர்களை விலக்கி 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. இடஒதுக்கீட்டுப் பலன்கள் மிகவும் தேவைப்படுபவர்களுக்குப் சென்று சேர வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டது.


மேல் நிலையினர் (creamy layer) என்பது உள் ஒதுக்கீட்டிலிருந்து (sub-classification) வேறுபடுகிறது. உள் ஒதுக்கீடு பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையிலான ஒரு முறையை மாற்றுகிறது. மேல் நிலையினர் (creamy layer) என்பது ஒரு சாதி அல்லது சமூகத்தில் உள்ள வசதியான மக்களைக் குறிக்கிறது.


நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான நிபுணர் குழு மேல் நிலையினர் (creamy layer) என்பதை வரையறுத்தது. செப்டம்பர் 8, 1993-ஆம் ஆண்டு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DOPT)) ஆறு மேல் நிலையினர் (creamy layer) வகைகளைப் பட்டியலிட்டது. இவர்களில் சட்டமுறையான பதவி சார்ந்தவர்கள், குழு 'ஏ' மற்றும் 'பி' அதிகாரிகள், உயர் பதவியில் உள்ள இராணுவ வீரர்கள், சில தொழில் வல்லுநர்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் வருமான வரி மதிப்பீட்டாளர்கள் அடங்குவர்.


மேல் நிலையினர் (creamy layer) இரண்டு முக்கிய குழுக்களை உள்ளடக்கியது: அரசு ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகள். தனியார் துறையைப் பொறுத்தவரை, பெற்றோரின் வருமானம் மேல் நிலையினர் (creamy layer) நிலையை தீர்மானிக்கிறது. அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, இது தரவரிசையை அடிப்படையாகக் கொண்டது. வருமான வரம்பு ஆரம்பத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயாக இருந்தது. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இம்முறை திருத்தப்படும். 2017-ஆம் ஆண்டு இது 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எந்த திருத்தமும் நடக்கவில்லை.  2015-ஆம் ஆண்டில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (National Commission for Backward Classes (NCBC)) இதை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்தது.


அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, பெற்றோரில் ஒருவர் குரூப்-ஏ அதிகாரியாக இருந்தால் அல்லது 40 வயதுக்கு முன்பு குரூப்-ஏ நிலையில் இருந்தால், அக்குழந்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)  இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றது. பெற்றோர் இருவரும் குரூப்-பி அதிகாரிகளாக இருந்தால், ஒருவரை மேல் நிலையினர் (creamy layer) பிரிவில் வைக்கிறார்கள். இராணுவத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் குழந்தைகளும் இதில் அடங்குவர்.


மார்ச் 2019-ஆம் ஆண்டு, இந்த அளவுகோல்களை மறுஆய்வு செய்ய பி.பி. சர்மா தலைமையில் ஒரு குழுவை அரசாங்கம் அமைத்தது. அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பழங்குடியினருக்கான மேல் நிலையினர் (creamy layer) அளவுகோல்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  அளவுகோல்களிலிருந்து வேறுபடலாம் என்று நீதிபதி கவாய் கூறினார்.  ஆனால் அவர் குறிப்பிட்ட அளவுகோல்களை வழங்கவில்லை.  நீதிபதி பங்கஜ் மித்தல் கல்வி ஒரு காரணியாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படிக்கும் குழந்தையை கிராமப்புற பள்ளி மாணவனுடன் ஒப்பிட முடியாது என்று அவர் கூறினார். 


மேல் நிலையினர் (creamy layer) என்பது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. உறுதியான நடவடிக்கையின் பலன்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட வகுப்பினரின் வரலாற்று அநீதிகளை அழிக்க முடியுமா?, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக அளவுகோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மேல்நோக்கிய நிலைக்கு அனுமதிக்கலாம். ஆனால், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின பிரிவுகளுக்கும் இதையே கூற முடியாது.   


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மேல் நிலையினர் (creamy layer) விதிவிலக்கு உருவாக்கம் குறித்த இறுதி முடிவை மாநிலங்களுக்கு விட்டுவிடுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீட்டிற்காக நீதிபதி ஆர்.என்.பிரசாத் குழுவைப் போன்ற குழுக்களை மாநிலங்கள் அமைக்க வேண்டும். 



Original article:

Share:

பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி : வழக்கு எதைப் பற்றியது ? -அபூர்வா விஸ்வநாத்

 2004-ம் ஆண்டில், இடஒதுக்கீடு நோக்கங்களுக்காக பட்டியலிடப்பட்ட வகுப்பினரை (Scheduled Castes) துணைக்குழுக்களாகப் (sub-groups) பிரிப்பது சமத்துவ உரிமையை மீறும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் குழுவை, ஒரே ஒருங்கிணைந்த குழுவாகக் கருத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது.


1 ஆகஸ்ட் 2024, வியாழக்கிழமை அன்று, உச்ச நீதிமன்றம் 6:1 என்ற விகிதத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் அனுமதித்தது. இந்த முடிவானது குறைவான பிரதிநிதித்துவ குழுக்களுக்கு பரந்த பாதுகாப்பை வழங்குகிறது. 


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இது, பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் துணை வகைப்பாடு இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கப்படுமா என்பதை அவர்கள் முடிவு செய்தனர்.


இந்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது, இடஒதுக்கீடு இருந்தபோதிலும், ஆதிக்கம் செலுத்தும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (dominant scheduled castes) என்று அழைக்கப்படுபவர்களுடன் ஒப்பிடுகையில், சில வகுப்பினர்களுக்குப் பரந்த பாதுகாப்பை அளிக்க விரும்பும் மாநிலங்களுக்கு இந்தத் தீர்ப்பு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும். "பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் ஒரே மாதிரியான வர்க்கம் அல்ல என்பதை வரலாற்று மற்றும் அனுபவ சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன" என்றும் நீதிமன்றம் கூறியது.


இந்த அமர்வு 2004-ம் ஆண்டு ஈ.வி.சின்னையா vs ஆந்திரப் பிரதேச மாநிலம் (EV Chinnaiah vs State of Andhra Pradesh) வழக்கின் தீர்ப்பை ஆராய்ந்தது. அந்த வழக்கில், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒரே மாதிரியான வகுப்பினர் குழுவை உருவாக்கினர் என்று நீதிமன்றம் கூறியது. எனவே, அவர்களுக்குள் எந்த உட்பிரிவும் இருக்க முடியாது. மேலும், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று இந்த நீதிமன்ற அமர்வு இப்போது பரிசீலித்து வருகிறது. 


துணைப்பிரிவு (sub-categorization) பற்றி உச்ச நீதிமன்றம் முன்பு என்ன முடிவு எடுத்தது? 


பிப்ரவரி 8, 2024 அன்று, நீதிமன்ற அமர்வு அது குறித்த குறிப்பு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. துணைப்பிரிவு (sub-categorization) அனுமதிக்கப்படாவிட்டால், அவர்களில் மிகவும் முன்னேறிய நபர்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 


இந்நிலையில், 2004-ம் ஆண்டு தீர்ப்பு ஆய்வு செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் எந்தெந்த சமூகங்கள் இடஒதுக்கீடு சலுகைகளுக்குத் தகுதியானவர்கள் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இதை மாற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்தது.    

      

1975-ல் பஞ்சாப் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான (SC) 25% இடஒதுக்கீட்டை இரண்டு வகைகளாகப் பிரித்தது. முதல் பிரிவில், பால்மிகி மற்றும் மசாபி சீக்கிய சமூகத்தினருக்கு (Balmiki and Mazhabi Sikh communities) மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றன. கொள்கையின்படி, கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு முதல் முன்னுரிமை பெறுவார்கள். இரண்டாவது பிரிவில் மீதமுள்ள பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) சமூகங்கள் அடங்கும்.


இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. இருப்பினும், அது 2004-ல் சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டது. அந்த ஆண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு ஆந்திரப் பிரதேசத்தின் இதே போன்ற சட்டத்தை ரத்து செய்தது. இந்த சட்டம் 2000-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கில் ஈ.வி. சின்னையா, ஆந்திரப் பிரதேச பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் (ஒதுக்கீடுகளை பகுத்தறிவுபடுத்துதல்) சட்டம் (Andhra Pradesh Scheduled Castes (Rationalisation of Reservations) Act), 2000-க்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இந்தச் சட்டம் மாநிலத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) சமூகங்களின் நீண்ட பட்டியலைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சமூகமும் பெறும் இடஒதுக்கீடு பலன்களையும் இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.


துணை வகைப்பாடு (sub-categorisation) சமத்துவத்திற்கான உரிமையை மீறும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. ஏனெனில், இது பல்வேறு வகைகளில் வெவ்வேறு சமூகங்களை வெவ்வேறு வழிகளில் நடத்தும் என்று பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒரே குழுவாகக் கருத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பு குறிப்பிட்ட வகுப்பினரை ஒரு அட்டவணையில் வகைப்படுத்துவதால், அவர்கள் தீண்டாமை காரணமாக வரலாற்று ரீதியாக பாகுபாட்டை எதிர்கொண்டதால், அவர்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக நடத்தப்பட முடியாது. நீதிமன்றம் அரசியலமைப்பின் 341 வது பிரிவை முன்னிலைப்படுத்தியது.  


இடஒதுக்கீடு நோக்கங்களுக்காக பட்டியலிடப்பட்ட வகுப்பின  சமூகங்களின் பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை இந்த அரசியலமைப்புப் பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. இந்த பட்டியலில் மாநிலங்கள் தலையிடவோ மாற்றவோ முடியாது என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. துணை வகைப்பாடுகளை உருவாக்க முடியாத நிலையும் இதில் அடங்கும்.


உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம், டாக்டர் கிஷன் பால் vs பஞ்சாப் மாநிலம் (Dr. Kishan Pal vs. State of Punjab) வழக்கை மறுஆய்வு செய்தது. இந்த வழக்கில் 1975-ம் ஆண்டு அறிவிக்கையை நீதிமன்றம் ரத்து செய்தது.


அக்டோபர் 2006-ல், பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவிப்பை ரத்து செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பஞ்சாப் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகளில் இட ஒதுக்கீடு) சட்டம் (Punjab Scheduled Caste and Backward Classes (Reservation in Services) Act), 2006 ஐ நிறைவேற்றுவதன் மூலம் பஞ்சாப் அரசாங்கம் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முயன்றது.  இந்தச் சட்டம் பால்மிகி மற்றும் மஜாபி சீக்கிய சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளித்தது. 


2010-ல், உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த விதியை ரத்து செய்தது. இதையடுத்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 


2014-ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலத்திற்கு எதிரான தாவீந்தர் சிங் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த மேல்முறையீட்டை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு நீதிமன்றம் மாற்றியது. காரணம், 2004 ஈ.வி.சின்னையா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். இந்த மதிப்பாய்வுக்கு பல அரசியலமைப்பு விதிகளை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. அரசியலமைப்பை விளக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தின் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஈ.வி.சின்னையா தீர்ப்பை மறுபரிசீலனை செய்தல்


2020-ம் ஆண்டில், ஒரு அரசியலமைப்பு அமர்வு 2004 முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒரே மாதிரியானவர்கள் என்பதை அவர்கள் ஏற்கவில்லை. "பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் சமத்துவமற்றவர்களும் உள்ளனர்" என்று அவர்கள் கூறினர். 


பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒரே மாதிரியான குழு என்ற கருத்துடன் தீர்ப்பு உடன்படவில்லை. பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரிடையே வேறுபாடுகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீட்டில் இருந்து "மேல்நிலையினர்" (creamy layer) என்ற கருத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. 2018-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் இதை உச்ச நீதிமன்ற பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தியது.   


2018-ம் ஆண்டு ஜர்னைல் சிங் vs லச்மி நரேன் குப்தா (Jarnail Singh vs Lachhmi Narain Gupta) வழக்கில், உச்ச நீதிமன்றம் பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் "மேல்நிலையினர்" (creamy layer) என்ற கருத்தை உறுதி செய்தது. இந்த கருத்து இட ஒதுக்கீடு பெறக்கூடியவர்களுக்கு வருமான வரம்பை அமைக்கிறது. இது முதன்முதலில் 2018 இல் பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.


துணை-வகைப்பாடு (sub-classification) என்பது மேல்நிலையினர் விதிமுறையைப் (creamy layer formula) பயன்படுத்துவது போன்றது என்று மாநிலங்கள் கூறுகின்றன. வசதி படைத்த வகுப்பினருக்கு விலக்குவதற்குப் பதிலாக, மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கிறது.


இதை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. அவர்களின் தீர்ப்பு முந்தைய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் முடிவை இரத்து செய்யலாம்.


இது பஞ்சாபில் பால்மீகிகள் மற்றும் மசாபி சீக்கியர்கள் (Balmikis and Mazhabi Sikhs), ஆந்திராவில் மடிகா (Madiga), பீகாரில் பேஸ்வான்கள் (Paswans), உத்திர பிரதேசத்தில் ஜாடவர்கள் (Jatavs) மற்றும் தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் (Arundhatiyars) ஆகியோரைப் பாதிக்கிறது. 


இரு தரப்பிலும் வாதங்கள்


பஞ்சாபின் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங், அரசியலமைப்பின் 341வது பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வகுப்புகளை மாநிலங்கள் மாற்ற முடியாது என்று ஈ.வி. சின்னையா கூறியது தவறு என்று வாதிட்டார்.  

 

அரசமைப்புச் சட்டத்தின் 16(4) வது பிரிவில் உள்ள கருத்துக்களைக் குறிப்பிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (backward classes) இடஒதுக்கீடு வழங்க அந்தச் சட்டப்பிரிவு மாநிலத்தை அனுமதிக்கிறது என்று குறிப்பிட்டார். இது மாநில சேவைகளில் "போதுமான பிரதிநிதித்துவம்" (adequately represented) இல்லாதவர்களுக்கானது. மேலும், இந்த விதியானது "சமமாக" (equally) என்பதற்குப் பதிலாக "போதுமான" (adequately) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால், குடியரசுத் தலைவர் பட்டியலிடப்பட்ட வகுப்பினரில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரே வாய்ப்புகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அவர் வாதிட்டார்.


பஞ்சாபின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஷதன் ஃபராசத், அரசியலமைப்பின் 342A பிரிவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டினார். ஈ.வி. சின்னையாவின் முடிவு இனி பொருந்தாது என்பதை இந்தப் புதிய விதி உணர்த்துகிறது. பிரிவு 342A, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் (Economically Backward Classes) சொந்த பட்டியலை பராமரிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இந்த பட்டியல் குடியரசுத் தலைவர் வழங்கிய பட்டியலிலிருந்து வேறுபட்டிருக்கலாம். 


துணைப்-பிரிவு அல்லது உள் ஒதுக்கீட்டிற்கு (sub-classification) ஆதரவாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார். ஈ.வி.சின்னையா வழக்கில் இருந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் சமூகத்தின் நலிந்த பிரிவினர் பின்தங்கி விடுவார்கள் என்றார். இது இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே குலைத்துவிடும். 


எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள அனைத்து சமூகத்தினரும் "தீண்டாமைக் களங்கத்தால்" (the taint of untouchability) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார். அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly) எந்த சமூகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  



Original article:

Share:

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வைக் கையாள்வதில் ஒன்றிய அரசு நியாயமற்றதாக உள்ளதா? -ஜாஸ்மின் நிஹலானி

 ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.  பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த  கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அல்லாத மாநிலங்களை ஒன்றிய அரசு நியாயமற்ற முறையில் நடத்துகிறது என்று அவர்கள் கூறினர்.  மாநில நிதி ஒதுக்கீடுகளில் ஒன்றிய அரசு அநீதி இழைக்கிறதா? என்ற வாதத்துடன், பினாகி சக்ரவர்த்தியும் ஆர்.ராமகுமாரும் இந்தப் பிரச்சினையை விவாதிக்கிறார்கள்.  இந்த உரையாடலை ஜாஸ்மின் நிஹலானி நடத்துகிறார். 


வளங்கள் ஒதுக்கீட்டில் (resource allocation) பாரபட்சம் குறித்த எதிர்க்கட்சிகளின் கவலை சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


பினாகி சக்ரவர்த்தி : பாரபட்சங்களைப் பற்றி பேசும்போது ஓரிரு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் (economic liberalisation) பிறகு, நிதிநிலை அறிக்கை என்பது ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு வளங்களை ஒதுக்குவதற்கான ஒரு கருவி என்ற நிலையிலிருந்து இந்த நிதிநிலை அறிக்கை கணிசமாகக் பின்வாங்கியுள்ளது. பொதுத்துறை திட்டங்களின் அடிப்படையில் இனி மாநிலங்களுக்கு வளங்கள் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் உரை பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான திட்டங்களைப் பற்றி கணிசமான அளவு நேரத்தை ஒதுக்கியுள்ளது. அத்தகைய திட்டங்களின் நிதி தாக்கங்கள் மதிப்பிடப்பட வேண்டும். மாநிலங்களுக்கு மொத்த வளங்களின் பின்னணியில், அத்தகைய திட்டங்களின் நிதி தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


ஆர். ராமகுமார் : ஒன்றியத்திலிருந்து மாநிலங்களுக்கு பல்வேறு வகையான நிதிப் பரிமாற்றங்கள் உள்ளன. இதில், வரிகள் (taxes), கடன்கள் (loans), நிதிக் குழு மானியங்கள் (finance commission grants) மற்றும் நிதிக் குழு அல்லாத மானியங்கள் (non-finance commission grants), இவை அடிப்படையில் விருப்பமான மானியங்கள் ஆகும். இங்குதான் உண்மையான பிரச்சனை இருக்கிறது. விருப்பமான மானியங்களில், ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு பெற வேண்டும் என்பதை தீர்மானிக்க எந்த அளவுகோலும் இல்லை. இதன் விளைவாக, தன்னிச்சையான ஒரு கூறு உள்ளது. இது கூட்டுறவு நிதி கூட்டாட்சியின் (cooperative fiscal federalism) ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமானதல்ல.


கடந்த 10 ஆண்டுகளில் கவனித்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கு பல தொகுப்புரீதியான அறிவிப்புகள் செய்யப்பட்டன. அவை, அரசியல் முன்னுரிமையுடன் ஒத்துப்போகின்றன. எவ்வாறாயினும், இந்த முடிவுகளுக்கான காரணங்கள் அல்லது தொகைகள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இந்த முறை தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் தொடர்கிறது.


திட்டக் குழு மாற்றியமைத்த NITI ஆயோக் குறியீடுகள் மற்றும் தரவரிசை மாநிலங்களை உருவாக்கி, போட்டிக்கான கூட்டாட்சியை (competitive federalism) வளர்ப்பதற்கு பதிலாக குறைக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 


பினாகி சக்ரவர்த்தி : திட்டக் குழு ஒழிப்பு (Abolition of the Planning Commission) ஒரு சூழலில் மேற்கொள்ளப்பட்டது. இது பெரும்பாலான மாநிலங்களால் நிதிப் பரிமாற்றங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக கருதப்பட்டது மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பரிமாற்ற வழிமுறைக்கு வெளியே இருந்தது. எனவே, வளர்ச்சிக்கான திட்டமிடல் (planning for development) மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் (transfers) பற்றிய விவாதம் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியது.  கட்டுப்பாடற்ற வளங்கள் மூலம் மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை மாற்றாகக் கருதப்பட்டது. மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வு 42% ஆக உயர்த்தப்பட்டபோது, ​​பணப் புழக்கம் கட்டவிழ்க்கப்பட்டதாலும் (money was untied), அதிகரித்த அதிகாரப்பகிர்வு காரணமாகவும் திட்டமிடுவதில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும். பிராந்தியங்களுக்கு இடையேயான சமத்துவமின்மை அதிகரித்து வருவதால், NITI ஆயோக், மத்திய நிதியுதவித் திட்டங்களில் (centrally sponsored schemes (CSS)) காணப்படுவது போல் தீவிரத்தன்மையின் கூறுகளை அறிமுகப்படுத்தாமல், மாநிலங்களுடனான ஆலோசனை செயல்முறை மூலம் மூலதன மானியங்களை வழங்க முடியும்.  

 

ஆர்.ராமகுமார் : முன்னதாக, திட்டக் குழு முடிவு செய்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்து மாநிலங்கள் புகார் அளித்தன. ஆயினும் கூட, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய பொது முதலீட்டைப் பயன்படுத்துவதிலும், ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரு நிறுவன தலையீட்டாளராகவும் இது முக்கிய பங்கு வகித்தது. எனவே மாநிலங்களுக்கு நிதிப் பரிமாற்றம் குறித்து புகார்கள் இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு மன்றத்தில் அவர்கள் ஈடுபடலாம். தற்போது, NITI ஆயோக்கில் அந்த வாய்ப்பு இல்லை.


தேசிய வளர்ச்சி கவுன்சிலும் (National Development Council (NDC)) கலைக்கப்பட்டுள்ளது. NITI ஆயோக்கிற்கு எந்த அதிகாரமும் இல்லை. இது ஒரு சிந்தனைக் குழுவாக மட்டுமே செயல்படுகிறது மற்றும் நிதி அதிகாரம் இல்லை. அதன் அதிகாரங்கள் நிதியமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. நிதி குழுவின் பரிந்துரைகளைத் தவிர்த்து, பரிமாற்றங்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிதி அமைச்சகம் இப்போது எடுக்கிறது.


நமக்குத் தேவையானது ஒரு புதிய, நம்பகமான அமைப்பு ஆகும். இது அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கருதப்படக்கூடாது. மேலும், மாநிலங்கள் ஒன்றியத்துடன் அமர்ந்து வெளிப்படையாக விஷயங்களை விவாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நிதிக் குழுவின் பரிந்துரைகளுக்கு வெளியே உள்ள அனைத்து நிதிப் பரிமாற்றங்களும் விருப்பமின்றி இருக்க வேண்டும் மற்றும் விதி அடிப்படையிலான பரிமாற்றங்களாகவும் இருக்க வேண்டும்.


ஒன்றிய வரி ஆதாரங்களை மாநிலங்களுக்கு இடையே விநியோகிப்பது குறித்து, ஒரு தரப்பு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் அதிக பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. மற்ற மாநிலங்கள் நாடு முழுவதும் ஒப்பிடக்கூடிய அளவிலான சேவைகளை வழங்க விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் கவலையைப் போக்க 16-வது நிதிக் குழு என்ன செய்ய வேண்டும்?


பினாகி சக்ரவர்த்தி : வரி விநியோகத்திற்கான அளவுகோலாக சேகரிப்பு அல்லது மூலத்தைப் (origin) பயன்படுத்துவது சிக்கலைத் தீர்க்காது. ஒரு சில முக்கிய வணிகப் பகுதிகளில் முக்கிய வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இந்த வாதத்தை நாம் பயன்படுத்தினால், வளங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பதில் சமத்துவமின்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.


தனிநபர் வருமான தரவரிசையின் அதிகரிப்பு குறிப்பிட்ட மாநிலங்களுகான நிதிப் பரிமாற்றங்களில் தொடர்ச்சியான சரிவைக் காண காரணமாக இருந்தால், அது அவர்களின் நிதி நிலைத்தன்மைக்கு சவால்களை உருவாக்குகிறது. இந்த சிக்கலை மானியத்தின் செயல்முறையுடன் தீர்க்க வேண்டும்.


மேலும், நிதி சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதால், அதிகாரப் பகிர்வு மூலம் அனைத்து மாநிலங்களின் தேவைகளையும் தீர்க்க முடியாது. இது தனிநபர் வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், அதிக வருமானம் உள்ள மாநிலங்கள் அதனால் பலன் அடையப் போவதில்லை. எனவே, எங்களுக்கு ஒரு மாநிலம் சார்ந்த தேவை இருந்தால், மானியங்களை வழங்குவதே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். மாநிலங்கள் தங்களிடம் உள்ள தேவைகள் மற்றும் சவால்கள் மற்றும் அந்த சவால்களை எதிர்கொள்ள எவ்வளவு பணம் தேவைப்படுகிறது, என்பதை நிதிக் குழுவுடன் விவாதிக்க வேண்டும். 

 

ஆர். ராமகுமார் : ஒரு அதிகாரப்பகிர்வுக்கான விதிமுறை அனைத்து மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனவே, மாநிலங்கள் முழுவதும் அதிகாரப் பகிர்வுக்குப் பிந்தைய வேறுபாடுகள் அகற்றப்படுவதை உறுதிசெய்ய நாம் மானியங்களை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பகிர்வின் பங்களிப்பு 50% ஆக வகுக்கக்கூடிய தொகுப்பில் உயர வேண்டும்.    

 

மொத்த வரி வருவாயில் விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா அல்லது அவற்றின் மீதான நம்பிக்கையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டுமா?


பினாகி சக்ரவர்த்தி : காலப்போக்கில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மட்டுமே அதிகரித்துள்ளன. ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அதன் தொடர்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை.  அதிகரிப்புக்கு ஒரு காரணம் மத்திய நிதியுதவி திட்டத்தின் வளர்ச்சி ஆகும்.


ஆர்.ராமகுமார் : நிகர வருவாயில் இருந்து அதிகாரப் பகிர்வின் பங்கு 32% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டபோது, ஒன்றிய அரசு தனது பங்கின் வீழ்ச்சியை இரண்டு வழிகளில் ஈடுசெய்ய முயன்றது. ஒன்று, செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், அவை நிகர வருமானத்திற்கு வெளியே வைக்கப்பட்டன. இரண்டு, மத்திய நிதியுதவி திட்டங்களின் செலவின விகிதத்தை மாற்றுவதன் மூலம் 40% சுமையை மாநிலங்களின் மீது செலுத்தப்பட்டன. 


2015-16 மற்றும் 2024-25 க்கு இடையில் இந்த அரசாங்கம் வசூலித்த மொத்த செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களைச் சேர்த்தால், அது ஒட்டுமொத்தமாக சுமார் ₹36 லட்சம் கோடியாக இருக்கும். இந்தத் தொகையிலிருந்து ஒரு பைசா கூட கட்டப்படாத வடிவத்தில் (untied format) மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.


செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல. ஆனால், அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும். இருப்பினும், அவற்றில் பல ஆண்டுகளாக தொடர்ந்தன. சில முடிவுக்கு வந்தன. ஆனால் அடுத்த ஆண்டு வேறு பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டன. மற்ற பிரச்சனை என்னவென்றால், பல செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் வசூல் நோக்கங்களுக்காக ஓரளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எனவே செஸ்கள் எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு வசூலிக்கப்பட வேண்டும். நிதிக் குழுவால் என்ன செய்ய முடியும் என்றால், அதிகாரப் பகிர்வில் மாநிலத்தின் பங்கை 41% லிருந்து 50% ஆக அதிகரிக்கலாம். ஏனெனில், ஒன்றியம் அனைத்து செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களையும் முழுமையாக வைத்திருக்கிறது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட ஈவுத்தொகை போன்ற வரி அல்லாத வருவாயில் இருந்து எந்த வகையிலும் பங்கீடு செய்யாது.


மாநிலத்திற்கான வருவாய் பற்றாக்குறை மானியங்கள் குறைந்துவிட்டன. கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது மற்றும் வகுக்கக்கூடிய தொகுப்பில் அதன் பங்கின் வீழ்ச்சியால் மாநிலம் வருவாயை இழந்துள்ளது என்று கேரளாவின் நிதிக் குழு வாதிட்டது. 


பினாகி சக்ரவர்த்தி : நிதிக் குழு மதிப்பீட்டின்படி, வரிப் பகிர்வுக்குப் பிறகு பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதிகாரப் பகிர்வுக்குப் பிறகும் இடைவெளி இருந்தால், வருவாய் பற்றாக்குறை மானியத்திற்கு மாநிலம் தகுதி பெறும். கேரளாவின் கடன் வரம்புகளைப் பொறுத்தவரை, ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே கடன் வாங்கும் அதிகாரத்தில் வேறுபாடு உள்ளது. மாநிலங்கள் கடுமையான நிதிநிலை அறிக்கை கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இருப்பினும், மாநில அளவில் இந்த கடுமையான நிதிநிலை அறிக்கையின் கட்டுப்பாடுகள் பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கு (macroeconomic stabilization) அவசியம். பேரியல் பொருளாதார நிலைப்படுத்தல் முக்கியமானது என்பதால், ஒன்றிய அரசு அதன் பற்றாக்குறை மற்றும் கடனை குறைக்க வேண்டும். இருப்பினும், இரு மாநிலங்களும் ஒன்றிய அரசும் நிதி வரம்புகள் இல்லாமல் சுதந்திரமாக கடன் வாங்க அனுமதிப்பது பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மாநில அளவில் நிதிநிலை அறிக்கை மீதான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளின் குறிப்பிட்ட நிலை ஒரு தனி பிரச்சினையாக உள்ளது.


ஆர். ராமகுமார் : கேரளா கடுமையான நிதிநிலை அறிக்கை கட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது. இது நிதி பொறுப்பின்மையால் ஏற்படவில்லை. மாறாக, கேரளா தனது சமூகத் துறையில் வரலாற்று ரீதியாக அதிக முதலீடு செய்திருப்பதே இதற்குக் காரணம். இதன் விளைவாக, கேரளாவுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் (revenue deficit grant) தொடர்ந்து தேவைப்படும். மாறாக, மற்ற மாநிலங்கள் தங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிப்பதாகத் தெரிகிறது. சமூகத் துறையில் குறைவான முதலீடு செய்வதால் அவர்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் தேவையில்லை. அத்தகைய விவேகம் ஒரு சமூக செலவோடு வருகிறது. அதிகாரப் பகிர்வு நடவடிக்கையில் கேரளா சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. அதன் இழப்பை மானியத்துடன் ஈடுகட்ட வேண்டும். வருவாய் பற்றாக்குறை மானியம் (Revenue deficit grant) என்பது ஒரு வகை மானியம் ஆகும். இந்த மானியங்களை 16-வது நிதிக்குழு தொடர்ந்து வழங்கும் என நம்புகிறேன்.


பினாகி சக்ரவர்த்தி, புதுதில்லியில் உள்ள தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில்  வருகைப்பேராசிரியராக உள்ளார்.  

ஆர்.ராமகுமார், மும்பையில் உள்ள Tata Institute of Social Sciences இல் உள்ள School of Development Studies இல் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share: