முக்கியமான கனிமங்களை பாதுகாப்பதற்கான ஒரு உத்தி -சந்திரஜித் பானர்ஜி

 திறன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயலூக்கமான ஒழுங்குமுறை தவிர, நிலையான விநியோகத்தை உறுதிசெய்ய இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்திருக்க வேண்டும்.


மேம்பட்ட பொருட்கள் (Advanced materials), அரிதான கனிமங்கள் (critical minerals) மற்றும் உலோகங்களின் (metals) அடிப்படையில் நாடுகள் எவ்வாறு முன்னேறுகின்றன. மேலும், அவை தொழில்துறை மற்றும் முக்கியத் துறைகளில் இதன் பயன்பாடு அதிகம் செலவிடப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் மின்னணு மற்றும் சுகாதாரம் வரை, இந்த பொருட்கள் கண்டுபிடிப்புகளுக்கு இன்றியமையாதவை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மேம்பட்ட வள செயல்திறன் போன்ற முக்கிய சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


தொழில்நுட்ப வளர்ச்சியின் விரைவான வேகம் காரணமாக இத்தகைய பொருட்களுக்கான உலகளாவிய தேவை சீராக அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, அரிய பூமி கூறுகள் (rare earth elements), லித்தியம் (lithium), கோபால்ட் (cobalt), இண்டியம் (indium) மற்றும் பல பொருட்கள் உயர் தொழில்நுட்ப சாதனங்கள், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் மற்றும் மேம்பட்ட சுகாதார தொழில்நுட்பங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இருப்பினும், ஒரு சில நாடுகள் மட்டுமே முக்கியமான தாதுக்கள் மற்றும் உலோகங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முன்னணியில் உள்ளன. இதனால், உலகளாவிய சந்தையில் குறிப்பிடத்தக்க நிலையை கட்டுப்படுத்துகின்றன. இந்த நிலையால் விநியோகச் சங்கிலியின் பாதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. இதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள நாடுகள் இப்போது தங்கள் ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும் நாடுகள் சார்ந்து இருப்பதைக் குறைக்கவும் தீவிரமாக முயன்று வருகின்றன.


இதில், முக்கியமான தாதுக்கள், பொருட்கள் மற்றும் உலோகங்களின் உலகின் மிகப்பெரிய நுகர்வோரில் இந்தியாவும் ஒன்றாகும். அதன் விரிவடைந்து வரும் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பால் வேகமாக வளர்ந்து வரும் தேவை உள்ளது.


தொழில்துறை ஆலோசனைகள் மூலம், மேம்பட்ட பொருட்கள், முக்கியமான பொருட்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் 10 முக்கியமான பகுதிகளை இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) அடையாளம் கண்டுள்ளது.


உயிரி பொருட்கள், மட்பாண்டங்கள், கலவைகள், கிராபீன், அரிய பூமி வளங்கள், மறுசுழற்சி பொருட்கள், டைட்டானியம், குறைக்கடத்தி பொருட்கள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவை இதில் அடங்கும். இப்பொருட்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டாலும், அதிகரித்து வரும் எதிர்காலத் தேவையை நிறைவு செய்ய பேரளவு உற்பத்தி குறைந்துள்ளது.


இந்த விஷயத்தில் மிக முக்கியமான சவால்களில் ஒன்று மூலப்பொருட்கள் கிடைக்காதது தொடர்பானது. உதாரணமாக, இந்தியாவில் அரிய பூமியின் தனிமங்களின் வளங்கள் குறைவாகவே உள்ளன. உலோகங்களுக்கும் உயர்தர கல்கரி செறிவுகள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்றன.


இதில், மற்றொரு சவால் என்னவென்றால், மூலப்பொருட்கள், கனிமங்கள் மற்றும் உலோகத் துறைகளில் திறமையான மனிதவளத்தின் பற்றாக்குறை ஆகும். இது முதன்மையாக சிறப்புப் பயிற்சி, மேம்பட்ட திறன்கள் மற்றும் ஒத்துழைப்புகளில் உள்ள இடைவெளிகள் காரணமாகும். ஒழுங்குமுறைகள், தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய பிற சவால்கள் ஆகும்.


முக்கியமான தாதுக்கள் மற்றும் உலோகங்களுக்கான வலுவான உள்நாட்டு விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா அங்கீகரித்துள்ளது. நாட்டிற்குள் இந்த வளங்களின் ஆய்வு, சுரங்கம் மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்கியுள்ளது.


நிதிநிலை அறிக்கை 2024-2025 உள்நாட்டு உற்பத்தி மற்றும் தாமிரம் மற்றும் லித்தியம் போன்ற முக்கியமான தாதுக்களின் மறுசுழற்சியை அதிகரிக்க கிரிட்டிகல் மினரல்ஸ் மிஷனை  (Critical Minerals Mission) அறிவித்தது. இந்த திட்டம், நவீன தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாத அத்தியாவசிய கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.


முன்னோக்கிச் செல்லும்போது, பல செயல்கள் தேவை:


முதலாவதாக, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆராய்ச்சி மற்றும் கல்வி நிபுணர்களின் நுண்ணறிவுகளை இணைப்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும். புதிய பொருட்கள் அல்லது நுட்பங்கள் சரியாக ஒழுங்குபடுத்தப்படுவதை உறுதிசெய்ய இந்த தற்போதைய செயல்முறை உதவுகிறது. இதன் விளைவாக, உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கான நுழைவுத் தடைகளைக் குறைக்கலாம்.


இரண்டாவதாக, பொருட்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் பல்வேறு மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களை பின்பற்றுவது முக்கியம்.


மூன்றாவதாக, தொழில்நுட்பக் கல்வித் திட்டங்களுடன் செய்முறைப் பயிற்சியை ஒருங்கிணைப்பதன் மூலம் திறனை மேம்படுத்துதல், மேம்பட்ட மூலப்பொருட்கள் உற்பத்திக்கென பிரத்யேகமான திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்களில் தொழில்நுட்ப மாணவர்களுக்கு கோடைகால பயிற்சியை ஊக்குவித்தல் ஆகியவை பயனுள்ளதாக இருக்கும்.


நான்காவதாக, தொழில்சார் கல்வித்துறை ஒத்துழைப்புத் திட்டங்கள், அதிநவீன சோதனை மற்றும் சரிபார்ப்பு மையங்களை அமைத்தல், ஒழுங்குமுறை இணக்கங்கள் பற்றிய புரிதல் மற்றும் சர்வதேச தரங்கள் பற்றிய அறிவு ஆகியவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.


ஐந்தாவதாக, கல்வி மற்றும் தேசிய ஆய்வகங்களிலிருந்து புத்தொழில் நிறுவனங்கள் அல்லது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்குவது மிகவும் முக்கியமானது. கல்வி மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரே மாதிரியான முயற்சிகளைத் தடுப்பதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் புதுமைகளை ஊக்குவிக்கவும் உதவும்.


இறுதியாக, முக்கியமான பொருட்களின் மாறுபட்ட மற்றும் நிலையான விநியோகத்தைப் பெற இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. முக்கியமான தாதுக்கள் மற்றும் உலோகங்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்கள், பலதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நாடுகளின் இராஜதந்திர கூட்டணிகள் நிலையான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க உதவும்.


நிலையான சுரங்கத்தை (sustainable mining) ஏற்றுக்கொள்வது முக்கியமான தாதுக்கள் மற்றும் உலோகங்களை பொறுப்பான முறையில் பிரித்தெடுப்பதை உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் நெறிமுறை ஆதார நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இதில் அடங்கும்.


கட்டுரையாளர் இந்திய தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry (CII)) தலைமை இயக்குநர் ஆவார்.



Original article:

Share:

வங்கதேசம், மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் விஷயத்தில், இந்தியா ஏன் ஆச்சரியமடைந்தது? -விவேக் கட்ஜு

 இப்போது நடைமுறையில் உள்ள பெரிய பாதுகாப்பு கட்டமைப்புகள் இருந்தபோதிலும் இது நடந்தது. ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் (turf) காரணமா அல்லது தவறான தீர்ப்புகள் இருந்தனவா?


கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் மூன்று அண்டை நாடுகளில் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நலன்கள் கடுமையான பின்னடைவுகளை சந்தித்துள்ளன. ஆகஸ்ட் 5 அன்று, இந்தியாவின் வங்கதேச கொள்கையின் முக்கிய ஆதாரமான பிரதமர்  ஷேக் ஹசினா, பெரிய  வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் குறுகிய அறிவிப்பில் இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி வந்தார். நவம்பர் 17, 2023-ஆம் ஆண்டில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முகமது முய்சு மாலத்தீவின் அதிபராக பதவியேற்றார். இலங்கையில் இந்தியாவின் பங்கைக் குறைக்கவும், சீனாவின் இருப்பை அதிகரிக்கவும் அவர் உறுதி பூண்டுள்ளார். அவருக்கு முன் பதவியில் இருந்த இப்ராஹிம் சோலிஹ் இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். மேலும், ஆகஸ்ட் 15, 2021-ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்குப் பொறுப்பானவர்களின் தவறான முடிவுகளின் விளைவாக இந்த மோசமான பின்னடைவுகள் ஏற்பட்டதா அல்லது இந்த முக்கியமான பகுதிகளில் கொள்கை உருவாக்கும் கட்டமைப்புகளில் காரணங்கள் உள்ளனவா?


அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பிரச்சினைகளில் சுயபரிசோதனை செய்வது அவசியம். இதில் அளவுக்கு  அதிகமாக நாடு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. உண்மையில், வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிக்கு விளக்கமளிக்க ஆகஸ்ட் 6, அன்று ஒன்றிய அரசு  ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்கதேச விவகாரங்களில் அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இந்த அரசாங்க-எதிர்க்கட்சி உரையாடல் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் தொடர வேண்டும். மேலும், கொள்கை உருவாக்கும் கட்டமைப்புகளின் பரிசீலனைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 


 இறுதியில், அரசாங்கம், அதன் உயர்மட்ட தலைமையின் தீர்ப்பு மற்றும் இந்தியாவின் வெளிப்புற நலன்களைக் கையாளும் பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய தொழில்முறை ஆலோசனையை நம்பியிருக்க வேண்டும். அவர்கள் இணக்கமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் குறித்து மேற்கோள் காட்டப்பட்ட வழக்குகளில் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒரு சுருக்கமான பரிசீலனை பொருத்தமற்றதாக இருக்காது.


வெளியுறவு அமைச்சகம் (The Ministry of External Affairs (MEA)) நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது. இது இந்திய வெளியுறவு சேவையால் (Indian Foreign Service (IFS)) நிர்வகிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் வெளிநாட்டு நலன்களைக் கவனிப்பதாகும். அண்டை நாடுகளில், இந்தியாவின் தூதரகங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில்  கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் பதவி வகிக்கும் நாடுகளின் அரசியல் தலைவர்களின் சிந்தனைகள், விருப்பங்கள் மற்றும் நிர்பந்தங்கள் மட்டுமல்ல, நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளைக் கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் தலைமைக்கு உரிய ஆலோசனை வழங்க வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட நிர்வாகமும் இதே போன்ற திறன்களைக் கொண்டுள்ளது.


1968-ஆம் ஆண்டில், இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் நிலங்களை ஆராய்ந்து வெளிக்கொணர்வதற்கான திறன்களை வளர்ப்பதை உறுதி செய்யும் நோக்குடன் இந்தியா தனது வெளிநாட்டு புலனாய்வு சேவையை (intelligence service) உருவாக்கியது. இப்பிரிவு, அண்டை நாடுகளுடன் ஒரு நல்ல நட்புறவை கொள்ள உதவியது. வெளிநாட்டிற்கான தூதர்கள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு, வெளியுறவு அமைச்சகம், பிற சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் தேசிய நலனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கான முறைகளை கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் பொறுப்புகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெளிப்புற சேவைக்கான திட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.


2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரான புகழ்பெற்ற வெளிநாட்டு தூதரான பி.எஸ்.ராகவன், 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்தார். இந்தியா ஒரு அணு ஆயுத நாடாக மாறியதாலும், அதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில், இயற்கையாகவே, புதிய மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டியிருந்தது. இவை மாறிவரும் உலகளாவிய சக்தி சமன்பாடுகள், சைபர் மற்றும் விண்வெளித் துறைகளில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவந்தவை. அவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தின. கூடுதலாக,  சீனாவின் எழுச்சி மற்றும் இந்தியா மீதான அதன் தொடர்ச்சியான விரோதப் போக்கு ஆகியவற்றால் அண்டை நாடுகளின் கவலைகள் அதிகரித்துள்ளன.


புதிய கட்டமைப்புகளின் உருவாக்கம், 1999-ஆம் ஆண்டில் பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழு (National Security Council), ஒரு இராஜதந்திர கொள்கையை உருவாக்கியது. மிக முக்கியமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor (NSA)) பதவியை உருவாக்கியது. இந்த புதிய கட்டமைப்புகளுக்கு சேவை செய்வதற்காக ஒரு தேசிய பாதுகாப்பு ஆணைய செயலகம் (National Security Council Secretariat (NSCS)) நிறுவப்பட்டது.


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) பிரதமருக்கு வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி பிரச்சினைகள் (உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு தவிர) போன்ற காலகட்டத்தில் பிரமருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும்,  நெருக்கடி காலங்களின்போது ஒரு வெளிநாட்டு அரசை அணுகுவதற்கு  விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள வழி, தேசிய பாதுகாப்பு முகமை என்று ராகவன் குறிப்பிடுகிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA)-ன் முக்கியத்துவத்துடன், தேசிய பாதுகாப்பு ஆணைய செயலகம் (National Security Council Secretariat (NSCS)) குறிப்பிட்ட அளவில் வளர்ந்துள்ளது. 2018-ஆம் ஆண்டிற்க்குப் பிறகு, இது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளின் பல்வேறு பகுதிகளைக் கையாளும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) தரவரிசையில் நான்கு அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து, கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்துள்ள அதிகாரி ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, தற்போது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு கூடுதலாக விரிவான பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணைய செயலகம் (National Security Council Secretariat (NSCS))  இன் இறுதி நோக்கம் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பதாகும். ஆனால், ராகவன் எழுதுவது போல், சில நேரங்களில் ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் (turf) எழுகின்றன.


ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்விகளைக் கருத்தில் கொள்வதில் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கை சரியாக இல்லை என்று ஒரு அறிகுறியைக் கொண்டிருந்தாலும், அதன் இறுதி மாற்றங்களை கண்டு இந்திய அரசு ஏன் ஆச்சரியப்பட வேண்டும் என்பதுதான். இந்திய நலன்களின் அமைப்பில், இப்போது பெரிய கட்டமைப்புகள் உள்ள போதிலும் இந்த ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. ஆக்கிரமிப்பு சிக்கல்கள் (turf) அவை எவ்வளவு உயரத்தை அடைகின்றன? அல்லது தவறான தீர்ப்புகள் தொடர்ச்சியாக இருந்தன, அப்படியானால், யாரால்?



Original article:

Share:

உலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day) -ரோஷினி யாதவ்

 சமீபத்திய ஆண்டுகளில் உயிரி எரிபொருள்கள் ஏன் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன? எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது ஆகியவற்றுடன் உயிரி எரிபொருள்கள் எவ்வாறு தொடர்புடையவை?


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10-ம் தேதியை உலக உயிரி எரிபொருள் தினமாகக் (World Biofuel Day) கடைப்பிடிக்கிறோம். இந்த நாள் ஒரு நிலையான ஆற்றல் மூலமாக உயிரி எரிபொருளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 9, 1893 இல், ஜெர்மன் பொறியாளர் சர் ருடால்ஃப் டீசல் (Sir Rudolf Diesel), கடலை எண்ணெயைப் (peanut oil) பயன்படுத்தி ஒரு இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கினார் என்பதையும் அது நினைவில் கொள்கிறது.


சமீபத்திய ஆண்டுகளில், காலநிலை மாற்றம் குறித்து அதிகரித்து வரும் கவலைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாட்டால் ஏற்படும் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் உயிரி எரிபொருள்கள் அதிக கவனத்தை ஈர்த்தன. 


எனவே, தேசிய மற்றும் உலக அளவில் பாரம்பரிய எரிபொருள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களுக்குப் பதிலாக உயிரி எரிபொருள் ஒரு நிலையான மாற்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


தாவரங்கள் அல்லது விலங்குகளின் கழிவுகளிலிருந்து பெறப்படும் எரிபொருள், உயிரி எரிபொருள் (biofuel) என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக சோளம், கரும்பு மற்றும் மாட்டு சாணம் போன்ற விலங்கு கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆதாரங்கள் புதைபடிவ எரிபொருள்களைப் போலன்றி புதுப்பிக்கத்தக்கவை என்பதால், அவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் கீழ் வருகின்றன. 


மிகவும் பொதுவான இரண்டு உயிரி எரிபொருள்கள் எத்தனால் (ethanol) மற்றும் பயோடீசல் (biodiesel) ஆகும்.


1. எத்தனால் : சோளம் மற்றும் கரும்பு போன்ற பயிர்களின் எச்சங்களை நொதிக்க வைப்பதன் (fermentation) மூலம் இது தயாரிக்கப்படுகிறது. நொதித்தலுக்குப் பிறகு எத்தனால் பெட்ரோலியத்துடன் கலக்கப்படுகிறது. இது பிந்தையதை நீர்த்துப்போகச் செய்து உமிழ்வைக் குறைக்கிறது. எத்தனால்-10 அல்லது இ-10 (Ethanol-10 or E10) என்பது மிகவும் பொதுவான கலவையாகும். இதில், 10 சதவீதம் கலவை எத்தனால் ஆகும்.


2. பயோடீசல் : இது பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் (cooking oil), மஞ்சள் கிரீஸ் (yellow grease) அல்லது விலங்கு கொழுப்புகளிலிருந்து (animal fats) தயாரிக்கப்படுகிறது. அதன் உற்பத்தியின் போது, சமையல் எண்ணெய் அல்லது கொழுப்பு ஒரு வினையூக்கியின் (catalyst) முன்னிலையில் ஆல்கஹால் உடன் எரிக்கப்படுகிறது. இதன் மூலம், பயோடீசலை உற்பத்தி செய்கிறது.


சுற்றுச்சூழல் நன்மைகள் : உயிரி எரிபொருள்கள், பெரும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஏனெனில், அவை பசுமைஇல்ல வாயு மாசுபாடு மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களின் குறைவு போன்ற புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் சில எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகளைத் தணிக்கும் திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த கழிவு மேலாண்மைக்கான முக்கியத்துவத்தையும் வழங்குகின்றன.


எரிசக்தி பாதுகாப்பு : இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் மற்றும் அதன் தேவைகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்துள்ளது. அதிகரித்து வரும் எரிசக்தி தேவை மற்றும் இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பது ஆகியவை இந்தியாவுக்கு ஆற்றல் பாதுகாப்பு சவால்களை முன்வைக்கின்றன. இந்தச் சூழலில், எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்ய உயிரி எரிபொருள் உதவும் என்று நாம் கூறலாம்.


பொருளாதார நன்மைகள் : உயிரி எரிபொருளின் அதிகரிப்பு இறக்குமதி எண்ணெய் தேவையை குறைக்கும். இந்த மாற்றம் இந்தியாவின் இறக்குமதி கட்டணத்தை குறைக்கும். மக்காச்சோளம் மற்றும் கரும்பு போன்ற பயிர்களில் இருந்து உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாய வருமானத்தை அதிகரிக்க முடியும். இது அதிகப்படியான உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரை விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவும்.


உயிரி எரிபொருள் குறித்த அரசின் முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகள்


உயிரி எரிபொருளின் கலவையை அதிகரிக்க இந்திய அரசு பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. இறக்குமதி தொடர்பான சார்புநிலையைக் குறைப்பது, விவசாயிகளின் ஊதியத்தை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வது, அத்துடன் சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட உயிரி எரிபொருட்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.


1. உயிரி எரிபொருளுக்கான தேசிய கொள்கை


இந்திய அரசு 2018-ம் ஆண்டில் "உயிரி எரிபொருளுக்கான தேசிய கொள்கைக்கு" ஒப்புதல் அளித்தது. எரிபொருள் கலவையை ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பயோஎத்தனால் (bioethanol), பயோடீசல் (biodiesel) மற்றும் பயோ-சிஎன்ஜி (bio-CNG) ஆகியவற்றை மையமாகக் கொண்டு, அதன் முக்கிய பகுதிகள் எத்தனால் கலக்கும் திட்டம் (Ethanol Blending Programme (EBP)), இரண்டாம் தலைமுறை எத்தனால் உற்பத்தி (காடு மற்றும் விவசாய எச்சங்களிலிருந்து பெறப்பட்டவை), "இந்தியாவில் தயாரித்தல்" (Make in India) திட்டத்தின் கீழ் எரிபொருள் சேர்க்கைகளின் உற்பத்திக்கான திறனை அதிகரித்தல், எத்தனால் உற்பத்திக்கான தொடக்கப் பொருளான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உற்பத்தி மற்றும் இந்த இலக்குகளை அடைவதற்கான நிதிச் சலுகைகள் ஆகியவை அடங்கும்.


மே 2022-ல், உயிரி எரிபொருள் முன்னேற்றங்கள் காரணமாக, பல மாற்றங்களை அறிமுகப்படுத்த கொள்கை திருத்தப்பட்டது. இதில், மிக முக்கியமான திருத்தம் 20% கலப்புக்கான தேதியை (blending date) எத்தனால் விநியோக ஆண்டு (Ethanol Supply Year (ESY)) 2030 முதல் 2025-26 வரை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுப்பதாகும்.


2. உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (Global Biofuels Alliance (GBA))


உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (GBA) என்பது அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்களை உள்ளடக்கிய பல பங்குதாரர் கூட்டணியாகும். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, அர்ஜென்டினா, சிங்கப்பூர், வங்காளதேசம், மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் புதுதில்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது இதை முறையாக தொடங்கி வைத்தார். 


இந்தக் கூட்டணி சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குவதையும், நிலையான உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது உலகளாவிய உயிரி எரிபொருள் வர்த்தகத்தை  (global biofuel trade) எளிதாக்குவதையும், தேசிய உயிரி எரிபொருள் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டணியில் சேர 24 நாடுகளும், 12 சர்வதேச அமைப்புகளும் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளன.


3. எத்தனால் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டது 


எத்தனால் கலப்பதை ஊக்குவிக்க, எத்தனால் கலந்த பெட்ரோல் (Ethanol Blended Petrol (EBP)) திட்டத்தின் கீழ் கலப்பதற்கான நோக்கம் கொண்ட எத்தனால் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) விகிதத்தை 18 சதவிகிதத்திலிருந்து  5% வரை அரசாங்கம் குறைத்துள்ளது.


4. பிரதம மந்திரி ஜி-வான் யோஜனா (Pradhan Mantri JI-VAN Yojana)


பிரதான் மந்திரி JI-VAN யோஜனா திட்டத்தை, அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இரண்டாம் தலைமுறை (Second Generation (2G)) எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது செல்லுலோசிக் (cellulosic) மற்றும் லிக்னோசெல்லுலோசிக் (lignocellulosic) பொருட்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் மூலங்களிலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த இலக்கை அடைய நிதி உதவி வழங்கப்படும்.


சமீபத்திய ஆண்டுகளில் எத்தனால்-பெட்ரோல் கலப்பு திட்டத்தில் (ethanol-petrol blending program) இந்தியா ஆரம்பத்தில் சவால்களை சமாளித்து வெற்றியை அடைந்துள்ளது. இந்த வெற்றி, 2030-ம் ஆண்டின் உண்மையான இலக்கிலிருந்து 2025-26 வரை காலக்கெடுவை நகர்த்துவதன் மூலம் தொகுதி வாரியாக 20% அன்ஹைட்ரஸ் எத்தனால் (anhydrous ethanol) மற்றும் 80% மோட்டார் பெட்ரோல் எரிபொருள் அளவின் கலவையான E-20 பெட்ரோலின் நாடு தழுவிய வெளியீட்டை விரைவுபடுத்த அரசாங்கத்தை வழிநடத்தியது. 


இந்த திருத்தப்பட்ட காலக்கெடுவை சந்திக்கும் பயணத்தில் நாடு உள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது. கூடுதலாக, டீசலை பொருத்தமான உயிரி எரிபொருளுடனும், இயற்கை எரிவாயுவை உயிரி வாயுவுடனும் கலப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.


உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி நிலையான ஆற்றலில் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த தகவல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட "எத்தனால் புக்லெட் 2023"-ல் இருந்து வருகிறது.


எத்தனால் மீதான கவனம் சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் நேர்மறையாக பாதித்துள்ளது. 2013-14-ல் 38 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டது. இது எத்தனால் வழங்கும் ஆண்டில் (ESY) 10 மடங்கு அதிகரித்து 408 கோடி லிட்டராக இருந்தது. 2021-2022 நிதியாண்டில் சுமார் 25,750 கோடி ரூபாய்க்கு எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டது. அதில், பெரும்பகுதி நமது விவசாயிகளின் வரவுக்குச் சென்றுள்ளது. இது குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் எத்தனால் குறிப்பேடு 2023 தெரிவிக்கிறது.


உயிரி எரிபொருட்களுடன் தொடர்புடைய சில சிக்கல்கள் மற்றும் சவால்கள் உள்ளன:


1. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் : உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாடு சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிலம் மற்றும் நீர் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுதல் ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, உயிரி எரிபொருளுக்கான தேவை அதிகரிப்பது பயிர் முறைகளை மாற்றி பயிர் கிடைக்கும் தன்மையை பாதிக்கும்.


அறிக்கையின்படி,


சர்க்கரையில் இருந்து ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க சுமார் 2,860 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.


2. உணவு மற்றும் எரிபொருள் சவால் : உயிரி எரிபொருட்களின் பின்னணியில் மூலப்பொருள்களின் தேர்வு மற்றும் உற்பத்தி செயல்முறை ஆகியவற்றைப் பொறுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு இடையிலான சமநிலை குறித்தும் கவலை உள்ளது.


எனவே, நிலையான ஆற்றலை அடைய, நன்கு சமநிலையான உத்தியைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தியானது நாட்டின் உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.



Original article:

Share:

ஆஸ்திரேலியாவின் பெரும் தடுப்புப் பவளத்திட்டில் (Great Barrier Reef) கடல் வெப்பநிலை இப்போது 400 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் : ஒரு புதிய ஆய்வு என்ன கூறுகிறது?

 மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) பாதிப்பை ஏற்படுத்துகிறது.


ஆஸ்திரேலியாவின் பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர் வெப்பநிலை 400 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளை (largest coral reef) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த ஆராய்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இது மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை வரலாற்று சூழலில் வைக்கிறது. மற்ற ஆய்வுகள் குறுகிய காலத்தில் பாறைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மட்டுமே கண்டறிந்துள்ளன. வடக்கு குயின்ஸ்லாந்தின் கடற்கரையில் இருந்து சுமார் 2,400 கிமீ தொலைவில் பாறைகள் நீண்டுள்ளது.


முதலில், பவளப்பாறைகள் என்றால் என்ன?


பவளப்பாறைகள் பொதுவாக அடிப்படையில் விலங்குகள். அவை தண்டு இல்லாத (sessile) விலங்கு வகையாகும். அதாவது, அவை நிரந்தரமாக கடலின் தளத்துடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன. அவை, தங்கள் சிறிய கூடாரம் போன்ற கைகளைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து உணவைப் பிடித்து தங்கள் வாயில் செலுத்துகின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட பவள விலங்கும் ஒரு பாலிப் (polyp) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான மரபணு ரீதியாக ஒத்த பாலிப்களின் குழுக்களில் வாழ்கிறது. அவை ஒரு 'காலனியை' (colony) உருவாக்குகின்றன.


பவளப்பாறைகள் பெரும்பாலும் கடினமான பவளம் (hard corals) அல்லது மென்மையான பவளம் (soft coral) என வகைப்படுத்தப்படுகின்றன. கடினமான பவளப்பாறைகள் தான் பவளப்பாறைகளின் கட்டிடக் கலைஞர்கள் ஆகும். இது,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டப்பட்ட சிக்கலான முப்பரிமாண கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. "மென்மையான பவளப்பாறைகளைப் போலல்லாமல், கடினமான பவளப்பாறைகளில் சுண்ணாம்புக் கற்களால் செய்யப்பட்ட கல் எலும்புக்கூடுகள் (stony skeletons) உள்ளன. அவை பவள பாலிப்களால் (coral polyps) உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலிப்கள் இறக்கும்போது, அவற்றின் எலும்புக்கூடுகள் பின்னால் விடப்பட்டு புதிய பாலிப்களுக்கான அடித்தளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன," என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.


பவளப்பாறைகள், "கடலின் மழைக்காடுகள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன, கிட்டத்தட்ட 450 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன.


பவளப்பாறைகள் ஏன் முக்கியம்?


கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில், பவளப்பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பாறையில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் வாழ்வதைக் காணலாம். உதாரணமாக, "பெரும் தடுப்புப் பவளத்திட்டு 400-க்கும் மேற்பட்ட பவள இனங்கள், 1,500 மீன் இனங்கள், 4,000 மொல்லஸ்க் இனங்கள் மற்றும் உலகின் ஏழு கடல் ஆமை இனங்களில் ஆறு ஆகியவற்றைக் கொண்டுள்ளது" என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பவளப்பாறைகளிலும் அதைச் சுற்றியும் கண்டுபிடிக்கப்படாத மில்லியன் கணக்கான உயிரினங்கள் வாழக்கூடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகிறது.


இந்த பெரிய கட்டமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 375 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன. உலகெங்கிலும் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு, வருமானம் மற்றும் புயல் மற்றும் வெள்ளத்திலிருந்து கடலோரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பவளப்பாறைகளை நம்பியுள்ளனர். பவளப்பாறைகள் அலைகள், புயல்கள் மற்றும் வெள்ளத்திலிருந்து 97% ஆற்றலை உறிஞ்சும் தன்மை கொண்டது. இது உயிர் இழப்பு, வளங்களின் சேதம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றைத் தடுக்கிறது.


ஆய்வின் கண்டுபிடிப்புகள் என்ன?


ஆஸ்திரேலியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் குழு, பவளப்பாறைகளைத் துளையிட்டு, ஒரு மரத்தில் உள்ள வளையங்களை எண்ணுவதைப் போலவே, 1618-ம் ஆண்டுக்கு முந்தைய கோடைகால கடல் வெப்பநிலையை அளவிட மாதிரிகளை பகுப்பாய்வு செய்தது.


நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலையானதாக இருந்த கடல் வெப்பநிலை 1900 முதல் மனித செல்வாக்கின் விளைவாக உயரத் தொடங்கியது என்று ஆராய்ச்சி முடிவு செய்தது.


1960 முதல் 2024 வரை, ஆய்வின் ஆசிரியர்கள் ஜனவரி முதல் மார்ச் வரை சராசரியாக ஒரு பத்தாண்டிற்கு 0.12 டிகிரி செல்சியஸ் வருடாந்திர வெப்பமயமாதலைக் கவனித்தனர்.


2016 முதல், பெரும் தடுப்புப் பவளத்திட்டு தீவிர பவள வெளுப்பின் ஐந்து கோடைகாலங்களை அனுபவித்துள்ளது. வெப்ப அழுத்தம் காரணமாக பவளத்திட்டின் பெரிய பகுதிகள் வெள்ளை நிறமாக மாறும் போது, அவை இறப்புக்கான அபாயத்தில் உள்ளன.


கடந்த நான்கு நூற்றாண்டில், ஆறு வெப்பமான ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் இந்த கோடைக்காலம் இருந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் கல்வியாளரும், ஆய்வின் இணை ஆசிரியருமான பெஞ்சமின் ஹென்லி, "உலகம் அதன் முக்கிய அடையாளங்கள் ஒன்றை இழந்து வருகிறது" என்றார். அவர் அதை "ஒரு முழுமையான சோகம்" என்று அழைத்தார். ஹென்லி மேலும் கூறியதாவது, நம் வாழ்நாளில் இது இப்படி நடக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. எனவே இது மிகவும் வருத்தமாக கருதுகிறேன் என்றார்.


இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான வெப்பநிலை தரவுகள் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச அளவாகும். ஹென்லியின் கூற்றுப்படி, இது மற்ற ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது.



Original article:

Share:

பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசின் தூய தாவரத் திட்டம் (Clean Plant Programme) எவ்வாறு திட்டமிடுகிறது? - ஹரிகிஷன் சர்மா

 பிப்ரவரி 2023-ல், ஒன்றிய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் உரையில்  தூய தாவரத் திட்டம் (Clean Plant Programme) நாடு முழுவதும் பழ பயிர்களின் தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தியாவில் தோட்டக்கலை பயிர்களின் மகசூல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட தூய தாவரத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.


தூய தாவரத் திட்டத்திற்காக வேளாண் அமைச்சகம் ரூ.1,765 கோடி நிதி கோரியுள்ளது. தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான மிஷன் (Mission for Integrated Development of Horticulture (MIDH)) வரவு-செலவுத் திட்டத்தில் பாதிப் பணம் கிடைக்கும். மற்ற பாதி ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank (ADB)) வளர்ச்சி நிதியில் இருந்து கடனாக இருக்கும். 


பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கும் வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் நுண்ணுயிரி இல்லாத (virus-free), உயர்தர நடவுப் பொருட்களைப் (தாவரப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் தாவரங்கள்) பெற விவசாயிகளுக்கு உதவுவதற்கு இந்தத்திட்டம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. அவை:



ஒன்பது தூய்மையான தாவர மையங்களை (Clean Plant Centers (CPCs)) உருவாக்குதல், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை வழங்குதல், நாற்றங்கால் தோட்டங்களுக்கு (nurseries) அனுப்பப்படும் தாய் செடிகளை உருவாக்குதல், வணிகப் பயன்பாட்டிற்காக உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து நடவுப் பொருட்களையும் தனிமைப்படுத்துவார்கள். 


உள்கட்டமைப்பு மேம்பாடு: தூய்மையான தாவர மையங்களில் தாய் செடிகள் நாற்றங்கால் தோட்டங்களில் வளர்க்கப்படும். வளர்க்கப்பட்ட செடிகள் பின்னர் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். நடவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் முழுமையான பொறுப்புணர்வையும் கண்டறியும் தன்மையையும் உறுதிசெய்ய ஒழுங்குமுறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையை உருவாக்குதல்.


பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2013-14 முதல் 2023-24 வரை, தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு 24 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 28.63 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், உற்பத்தியும் அதிகரித்தது. மேலும், உற்பத்தி 277.4 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து  352 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.


புதிய பழங்களின் முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. 2023-24 நிதியாண்டில், இந்தியா $1.15 பில்லியன் மதிப்புள்ள புதிய பழங்களை ஏற்றுமதி செய்தது. அதே காலகட்டத்தில், இந்தியா $2.73 பில்லியன் மதிப்புள்ள பழங்களை இறக்குமதி செய்தது. நாட்டில் பழ நுகர்வு அதிகரித்து வருவதால்,  வெளிநாட்டு ஆப்பிள்கள், வெண்ணெய்ப் பழங்கள் மற்றும் புளுபெர்ரி போன்ற பழங்கள் அதிக தேவை உள்ளது.


தரவுகளின் படி, 2018-20-ஆண்டிற்கு இடையில், பழச் செடிகளின் நடவுப் பொருட்களின் இறக்குமதிக்கான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை (Export-Import (EXIM)) குழு 2018-ல் 21.44 லட்சம் ஆப்பிள் செடிகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. இது 2020-ல் 49.57 லட்சமாக அதிகரித்துள்ளது. 2020-ல் ஆலைகள் 26,500-ஆக அதிகரித்தது. அதேபோல், புளுபெர்ரி செடிகள் இறக்குமதிக்கான அனுமதி 2018-ல் 1.55 லட்சத்தில் இருந்து 2020-ல் 4.35-லட்சமாக அதிகரித்துள்ளது.


தற்போது, ​​தாவரங்களை இறக்குமதி செய்வது மிகவும் சிக்கலானது, இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்கள் இரண்டு வருடங்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட வேண்டும். தூய்மையான தாவர மையங்கள் (Clean Plant Centers (CPCs)) தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஆறு மாதங்களாக குறைக்கும். இது இந்தியாவில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நோயற்ற மற்றும் உண்மையான நடவுப் பொருட்களை விவசாயிகள் பெற எளிதாக்கும்.


தூய தாவரத் திட்டம் (Clean Plant Programme) என்ற கருத்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள திட்டங்களைப் போன்றது.



Original article:

Share:

ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar) : தேசிய அறிவியல் விருது குறித்து

 விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்கு அதிக நிதி தேவை, தேசிய விருதுகள் மட்டும் போதாது.


இந்த மாத இறுதியில் 33 விஞ்ஞானிகளுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar (RVP)) விருது வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் விஞ்ஞானிகளை கௌரவிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை இதுவாகும். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழு  (Council of Scientific and Industrial Research (CSIR)) முன்பு 45 வயதுக்குட்பட்ட விஞ்ஞானிகளுக்கு வழங்கிய சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (Shanti Swarup Bhatnagar (SSB)) விருதுகளை ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதாக  அரசு மாற்றியுள்ளது. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளில் சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் கூடுதல் பணச் சலுகைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.


ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar (RVP)) விருதுகளில் இப்போது பதக்கம் மற்றும் சான்றிதழ் இடம் பெற்றிருக்கும். மேலும், இளம் விஞ்ஞானிகளுக்கான விருது விக்யான் யுவா-எஸ்.எஸ்.பி என மறுபெயரிடப்பட்டுள்ளது. விக்யான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் தவிர, விக்யான் ஸ்ரீ, விக்யான் ரத்னா மற்றும் விக்யான் அணி விருதுகள் போன்ற பிற ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளும் உள்ளன. விஞ்ஞான் குழு விருது 45 வயதுக்கு மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது. சாதனைகளுடன் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் குழுக்களையும் இந்த விருதுகள் அங்கீகரிக்கிறது.


ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளின் மொத்த எண்ணிக்கை கோட்பாட்டளவில் 56-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகபட்ச வரம்பைவிட இந்த ஆண்டு குறைவான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (Indian Space Research Organisation’s) சந்திரயான்-3 குழுவுக்கு, குழு விருது வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தொழில்நுட்பமாக இருக்கலாம். மேலும், இது விருதுகளின் முதல் பதிப்பு என்பதால், இது ஒரு மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். விருது பெற்றவர்களின் பட்டியல் வானியற்பியல் முதல் விவசாயம் வரை பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கியது. இந்த பரந்த வரம்பு ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார்க்கு தனித்துவமானது அல்ல. விருது பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் உள்ள ஒன்றிய நிதியுதவி மற்றும் உயரடுக்கு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இவற்றில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institutes of Technology), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (Institutes of Science Education and Research), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆணையம் (Council of Scientific & Industrial Research (CSIR)) மற்றும் அணுசக்தி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.


தனிப்பட்ட அறிவியல் துறைகளால் பல விருதுகள் வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் மற்றும் அறிவியல் துறைகளின் தலைவர்கள் 2022-ல் முடிவு செய்த பின்னர் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar (RVP)) விருதுகள் உருவாக்கப்பட்டன. விருதுகளின் எண்ணிக்கையைக் குறைத்து தேசிய விருதுகளாக தங்கள் நிலையை உயர்த்துவது அவசியம் என்று அவர்கள் உணர்ந்தனர். மற்ற துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட விருதுகளின் உண்மையான நோக்கம் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர ஊக்குவிப்பதாகும். இது முக்கியமானது, ஏனென்றால் ஆராய்ச்சி முடிவுகள் எப்போதும் உடனடியாகத் தெரியாது, அவற்றின் தாக்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு நேரம் ஆகலாம். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது கடினம் என்பது போல இந்திய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடைத்ததில்லை. இது பல அரசாங்கங்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் போன்ற தேசிய விருதுகள் நோபல் பரிசுகளை மாற்றுவதற்கோ அல்லது நோபல் பரிசுகளுக்கு ஒரு படிக்கல்லாகவோ செயல்படும் நோக்கம் கொண்டவை அல்ல. விஞ்ஞானிகள் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் மட்டுமே தேடுகிறார்கள் என்று அரசாங்கம் கருதக்கூடாது.


இந்தியாவில் பல விஞ்ஞானிகள் குறைந்த நிதி, குறைந்த தரமான உபகரணங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் சூழலில் வேலை செய்கிறார்கள். இது அதிநவீன ஆராய்ச்சியில் போட்டியிடுவதை அவர்களுக்கு கடினமாக்குகிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை அதிகரிப்பதும், இந்தியாவில் அதை அதிக பலனளிப்பதாக மாற்றுவதும் வெறுமனே விருதுகளை வழங்குவதைவிட அறிவியலுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும்.



Original article:

Share:

பனிப்போர் அணுசக்தி சோதனைகள் இன்றைய காலநிலை மாதிரிகளில் சிக்கலைத் தூண்டுகின்றன -கார்த்திக் வினோத்

 தாவரங்கள் எவ்வளவு காலம் கரிமத்தினை (Carbon) வைத்திருக்கின்றன என்பதை காலநிலை மாதிரிகள் மிகைப்படுத்தி மதிப்பிடக்கூடும் என்று புதுப்பிக்கப்பட்ட கணக்கீடு தெரிவிக்கிறது.


பில்லியன் கணக்கான ஆண்டுகளாக, கரிம (Carbon) சுழற்சி என்பது வளிமண்டலத்திலிருந்து அதிகப்படியான கார்பனை அகற்றுவதற்கான இயற்கையின் வழியாகும். இயற்கையில், எரிமலை வெடிப்புகள் மற்றும் உயிரினங்கள் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை (CO2) வெளியிடுகின்றன. தாவரங்களும் மரங்களும் ஒளிச்சேர்க்கையின் போது இந்த கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி சேமிக்கின்றன.


சமீபத்தில், கரிம (Carbon) சுழற்சி காலநிலை தணிப்பு முயற்சிகளில் முக்கிய மையமாக மாறியுள்ளது. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் கார்பனை தாவரங்கள் உறிஞ்ச முடியும். புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இரண்டும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டன. ஏனெனில், அவை அதிகரித்து வரும் கரிமத் (Carbon)  தடங்களை ஈடுசெய்ய முற்படுகின்றன. இருப்பினும், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவால் சமீபத்தில் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, தாவரங்கள் எதிர்பார்த்ததை விட வளிமண்டலத்திலிருந்து அதிக கார்பன் டை ஆக்சைடையை உறிஞ்சுகின்றன என்று கூறுகிறது. தாவரங்கள் இந்த கரிமத்தை மீண்டும் தங்கள் சுற்றுப்புறங்களில் வெளியிடுவதற்கு முன்பு நினைத்ததைவிட குறுகிய காலத்திற்கு சேமித்து வைக்கின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த கண்டுபிடிப்புகளை அடைய, ஆராய்ச்சியாளர்கள் 1960-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நடத்திய அணுகுண்டு சோதனைகளை ஆய்வு செய்தனர். இந்த பகுப்பாய்வு செய்ய அவர்கள் காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தினர்.


பனிப்போரின் நினைவுச்சின்னங்கள்


போர் காலத்தில், டஜன் கணக்கான அணுகுண்டு சோதனைகள் உலகளாவிய கவலையை உருவாக்கின. இந்த சோதனைகள் விஞ்ஞானிகளுக்கு காலநிலை ஆராய்ச்சிக்கான வாய்ப்பையும் வழங்கின. லண்டன் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College) காலநிலை இயற்பியலாளரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ஹீதர் கிராவன், சோதனைகள் பயங்கரமானவை என்றாலும், அவை விஞ்ஞானிகளுக்கு பயனுள்ளதாக இருந்தன என்று விளக்கினார்.


இந்த அணுகுண்டு வெடிப்புகள் கணிசமான அளவு கதிரியக்கப் பொருட்களை வளிமண்டலத்தில் வெளியிட்டன. அத்தகைய ஒரு பொருள் கார்பன் -14 (carbon-14) ஆகும். இது ரேடியோகார்பன் (radiocarbon) என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான கார்பன்-12யை விட அதன் கருவில் இரண்டு நியூட்ரான்களைக் கொண்டுள்ளது. கதிரியக்க கார்பன் இயற்கையாகவே சிறிய அளவில் காணப்பட்டாலும், அணுகுண்டு சோதனைகள் வளிமண்டலத்தில் அதன் செறிவை அதிகரித்தன.


1963-ஆம் ஆண்டில், பனிப்போர் நாடுகள் வரையறுக்கப்பட்ட சோதனை தடை ஒப்பந்தத்தில் (Limited Test Ban Treaty (LTBT)) கையெழுத்திட்டன.  இது நிலம், காற்று மற்றும் நீருக்கடியில் அணுசக்தி சோதனைகளை தடை செய்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, வளிமண்டலத்தில் கதிரியக்க கார்பனின் செறிவு அதிகரிப்பது நிறுத்தப்பட்டது. டாக்டர் கிரேவனும் அவரது குழுவும் 1963-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை ரேடியோகார்பன் அளவுகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்காணிக்க மாதிரிகளைப் பயன்படுத்தினர். மேலும், அது படிப்படியாகக் குறைந்து வருவதைக் கண்டறிந்தனர்.


ரேடியோகார்பன் பெரும்பாலும் ஆக்ஸிஜனுடன் பிணைந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்குகிறது. இது ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள், மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் உறிஞ்சுகின்றன. கதிரியக்க கார்பன் வளிமண்டலத்தில் இருந்து தாவரங்களுக்கு நகர்வதாக மாதிரிகள் பரிந்துரைப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.



முழு அமைப்பும் வேகமாக சுழற்சியில் ஓடுகிறது


தாவரங்கள் உயிர்வாழ உணவு தேவை, அவை அதை தாங்களே உற்பத்தி செய்கின்றன. அவை ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி குளுக்கோஸை உருவாக்க பயன்படுத்துகின்றன. தாவரங்கள் சிறிது குளுக்கோஸை உட்கொள்கின்றன மற்றும் சிலவற்றை அவற்றின் இலைகளில் ஸ்டார்ச்சாக சேமிக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது, தாவரம் சுவாசத்தின் போது கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும்போது சிறிது கார்பன் இழக்கப்படுகிறது.


தாவரங்கள் கார்பனை இழக்கும் மற்றும் பெறும் விகிதங்களை விஞ்ஞானிகளால் நேரடியாக அளவிட முடியாது. இருப்பினும், உலகளவில் தாவரங்களில் எவ்வளவு கார்பன் சேமிக்கப்படுகிறது என்பதை மதிப்பிடுவதற்கு அவர்கள் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாவரங்களில் சேமிக்கப்படும் கார்பனின் அளவை மதிப்பிடுவதற்கு காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தினர். முந்தைய ஆய்வுகள் இந்த மதிப்பு உலகளவில் ஆண்டுக்கு 43-76 பில்லியன் டன் கார்பன் என்று மதிப்பிட்டுள்ளன. ஆனால், புதிய ஆய்வு இது ஆண்டுக்கு சுமார் 80 பில்லியன் டன்களாக இருக்கலாம் என்று கூறுகிறது, பெரும்பாலான கார்பன் தாவரங்களின் மரம் அல்லாத பாகங்களான இலைகள் மற்றும் நுண்ணிய வேர்களில் சேமிக்கப்படுகிறது.


இந்த அதிக மதிப்பு துல்லியமானது என்றால், தாவரங்கள் முன்பு நினைத்ததை விட விரைவில் தங்கள் கார்பனை வெளியிட வேண்டும் என்று அர்த்தம். இல்லையெனில், செயற்கைக்கோள் தரவுகளால் மதிப்பிடப்பட்டதைவிட தாவரங்களில் அதிக கார்பன் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். தாவரங்களுக்கும் வளிமண்டலத்திற்கும் இடையிலான கார்பன் பரிமாற்றம் முன்பு நம்பப்பட்டதை விட வேகமாக நடக்கிறது என்றும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. டாக்டர் கிரேவன் "முழு அமைப்பும் நாம் முன்பு நினைத்ததை விட வேகமான சுழற்சியில் ஓடுகிறது" (The whole system is kind of cycling faster than what we thought before) என்று கூறினார்.


இருப்பினும், இந்த ஆய்வில் ஈடுபடாத ஐ.ஐ.டி பம்பாயின் காலநிலை விஞ்ஞானி ரகு முர்துகுடே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தரவு மாதிரிகளில் நிச்சயமற்ற தன்மை காரணமாக கார்பன் சுழற்சியில் உண்மையான தாக்கத்தைப் புரிந்துகொள்வது சவாலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மாதிரிகளில் செய்யப்பட்ட அனுமானங்கள் மாற்றப்பட்டால் முடிவுகளை கணிசமாக மாற்றக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.


ஆய்வின் இணை ஆசிரியரும், வளிமண்டல ஆராய்ச்சிக்கான அமெரிக்க தேசிய மையத்தின் காலநிலை விஞ்ஞானியுமான வில் வைடர், டாக்டர் முர்டுகுட்டேவின் எச்சரிக்கையுடன் உடன்பட்டார், ஆனால் அதை "குறுகிய பார்வை" (short-sighted) என்று அழைத்தார்.


கதிரியக்க பிரதிநிதித்துவம்


1995-ஆம் ஆண்டில், உலக காலநிலை ஆராய்ச்சி திட்டம் (World Climate Research Program) இணைக்கப்பட்ட மாதிரி ஒப்பீட்டு திட்டத்தை (Coupled Model Intercomparison Project (CMIP)) நிறுவியது. இது ஐ.நா.வின் காலநிலை அறிக்கைகளுக்கான காலநிலை கணிப்புகளை தயாரிக்கிறது. இணைக்கப்பட்ட மாதிரி ஒப்பீட்டு திட்டத்தை (CMIP) பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள அறிவியல் நிறுவனங்கள் தங்கள் தனிப்பட்ட காலநிலை மாதிரிகளை ஒன்றிணைத்து சிறந்த கணிப்புகளை உருவாக்குகின்றன. இருப்பினும், இந்த மாதிரிகளில் பெரும்பாலானவை ரேடியோகார்பன் தரவுகளுடன் சோதிக்கப்படவில்லை.


டாக்டர் கிராவனின் கூற்றுப்படி, இந்த மாதிரிகளில் ரேடியோகார்பன் தரவைச் சேர்ப்பது கடினம் அல்ல. ஆனால்,  அவர்களில் சிலர் அவ்வாறு செய்ய உண்மையில் கவலைப்படவில்லை. யு.எஸ். யுனிவர்சிட்டி கார்ப்பரேஷன் ஃபார் வளிமண்டல ஆராய்ச்சியால் (U.S. University Corporation for Atmospheric Research) உருவாக்கப்பட்ட 'கம்யூனிட்டி எர்த் சிஸ்டம் மாடல் 2' (Community Earth System Model 2) என்ற ஒரே ஒரு மாதிரி, அதன் உருவகப்படுத்துதல்களில் கதிரியக்க கார்பனைக் கணக்கிட்டது. இருப்பினும், தாவரங்கள் டாக்டர் கிராவனின் குழு கண்டறிந்ததை விட மிகக் குறைவான ரேடியோகார்பனை உறிஞ்சியுள்ளன என்று அது கணித்தது.


காலநிலை மாதிரிகள் எப்போதும் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளன. டாக்டர் முர்டுகுடே அவை தவறானவை அல்ல, அபூரணமானவை என்று கூறினார். அவற்றை ஒரு பக்கமாக இழுக்கக்கூடிய காருடன் ஒப்பிடுகிறார். ஆய்வில் பயன்படுத்தப்படும் இணைக்கப்பட்ட மாதிரி ஒப்பீட்டு திட்டத்தை (Coupled Model Intercomparison Project (CMIP))  மாதிரிகளில் சில சமீபத்திய பதிப்புகள் (5 மற்றும் 6) அடங்கும். டாக்டர் வைடரின் கூற்றுப்படி, ஆய்வின் கண்டுபிடிப்புகள் காலநிலை மாடலிங் (climate modelling) குறித்த எதிர்கால ஆராய்ச்சிக்கான ஒரு படிக்கல்லாகும், குறிப்பாக இணைக்கப்பட்ட மாதிரி ஒப்பீட்டு திட்டத்தை (CMIP) 7 மற்றும் அதற்கு அப்பால் மாதிரிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.


காலநிலைக் கணிப்புகளில் ரேடியோகார்பனுக்கு சிறந்த பிரதிநிதித்துவம் தேவை என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து காலநிலை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டனர். இந்த ஆய்வில் ஈடுபடாத பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science, Bengaluru) காலநிலை இயற்பியலாளர் கோவிந்தசாமி பாலா, மாதிரிகளில் ரேடியோகார்பனைச் சேர்ப்பது நிதி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் போன்ற வளங்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மாதிரிகளில் ஐசோடோப்புகள், பனி தாள் இயக்கவியல் (ice sheet dynamics) மற்றும் நிலத்தடி உறைபனி (permafrost) ஆகியவற்றின் பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் வேகத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.


கார்த்திக் வினோத், அறிவியல் பத்திரிகையாளர் மற்றும் எட் பப்ளிகாவின் (Ed Publica) இணை நிறுவனர் ஆவார்.



Original article:

Share: