மாதிரி மாநில நீர் ஒழுங்குமுறை கட்டமைப்பு (State water regulation framework) போதுமான அளவு வலுவானதா? -எஸ்.கே. சர்க்கார்

 ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை மசோதாவின் (Integrated Water Resource Management Bill) நோக்கத்தில் குறைபாடுகள் உள்ளன.


சமீப காலம் வரை, பொதுத்துறையை திறமையாக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் நாடாளுமன்ற அரசாங்க முறை போதுமானது என்று மக்கள் நம்பினர். நீண்ட காலமாக, அரசாங்கம் ஒரு சேவை வழங்குநராக தனது பங்கை கொள்கை வகுப்பாளராக இருந்து பிரிக்கவில்லை. இதில் செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் நுகர்வோர் நலன்களுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.


1990 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் இந்த அணுகுமுறை மாறியது. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் சுதந்திரமான ஒழுங்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த மாற்றம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் தொடங்கி பின்னர் 11 மாநிலங்களில் நீர் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும், நான்கு மாநிலங்கள் (மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர்) மட்டுமே நீர் ஒழுங்குமுறை அமைப்புகளை அமைத்துள்ளன. இது 2022-ஆம் ஆண்டில் பஞ்சாபில் தொடங்கப்பட்டது.


உள்கட்டமைப்புத் துறையில், ஒரு ஒழுங்குமுறை அமைப்பு மூன்று முக்கிய முறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை: முக்கிய செயல்பாடுகள், பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஆலோசனை வழங்குதல். இருப்பினும், 12 மாநிலங்களில் உள்ள நீர் விதிமுறைகளின் பகுப்பாய்வு, அனைத்து மாநிலங்களிலும் பொதுவான விதிகள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது.


மாநிலங்களில் நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் (Water Regulatory Authority (WRA)) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வெளிப்படையான செயல்முறை இல்லை. நீர் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WRA) தலைவர் பதவி அதிகாரிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஒழுங்குமுறை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, ஒழுங்குமுறை அமைப்பின் பொறுப்புதன்மை மற்றும் நீர் துறையில் பங்குதாரர்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


நீர் துறையில் சுதந்திரமான ஒழுங்குமுறைக்கான பல முக்கிய செயல்பாடுகளும் மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவை, நுகர்வோர் நலனைப் பாதுகாத்தல், பாதுகாப்புக்கான தரங்களை வகுத்தல், பங்குதாரர்களை ஈடுபடுத்துவதில் உள்ள சச்சரவுகள் மற்றும் வேறுபாடுகளைத் தீர்ப்பது, போட்டியை ஊக்குவித்தல், நீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை வழங்குவதில் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் உரிம விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில், தற்போதைய நீர் ஒழுங்குமுறை கட்டமைப்பு  "சந்தை அடிப்படையிலான அணுகுமுறை" மற்றும் அரசாங்கத்தின் "சமூக உறுதிமொழிகள்" ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை உறுதி செய்யவில்லை.


தற்போதைய அணுகுமுறை


ஒன்றிய அரசு, மாதிரி மாநில ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை (Model State Integrated Water Resource Management (IWRM)) 2024 மசோதாவின் வரைவைத் தயாரித்துள்ளது. இந்த மசோதா, நீர் ஒழுங்குமுறை ஆணையம் (Water Regulatory Authority) என்றும் அழைக்கப்படும் ஒரு மாநில IWRM ஆணையத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பு நிர்வாகத்தின் மூலம் மாநிலத்தில் நீர் வளங்களை நிர்வகிப்பதும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். நீர் வளங்களைப் பயன்படுத்துவதில் சமத்துவம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.


மாதிரி மாநில ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை (Model State Integrated Water Resource Management (IWRM)) மசோதாவின் விதிகளை அட்டவணை காட்டுகிறது. மாதிரி சுதந்திரமான ஒழுங்குமுறை கட்டமைப்போடு (model independent regulatory framework) (TERI 2000) ஒப்பிடும்போது மசோதாவில் உள்ள குறைபாடுகளையும் இது எடுத்துக்காட்டுகிறது.



நடவடிக்கைக்கான செயல்திட்டங்கள்


மாதிரி IWRM மசோதாவின் நோக்கம், உள்கட்டமைப்புத் துறையில் வழக்கமான சுதந்திரமான ஒழுங்குமுறை நோக்கத்துடன் பொருந்தவில்லை. சுதந்திரமான ஒழுங்குமுறையில் பெரும்பாலும் நீர் துறையின் சரியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நீர் ஒழுங்குமுறை ஆணையத்தை (WRA) அமைப்பதும் இதில் அடங்கும். இது நீர் பாதுகாப்பு, நியாயமான விலை நிர்ணயம், வெளிப்படையான மானியக் கொள்கைகள் மற்றும் திறமையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு கொள்கைகளை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வழிகாட்டுதல்களுடன் இணங்க மாதிரி மசோதா மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.


இரண்டாவதாக, நீர் ஒரு மாநிலப் பொருள் ஆகும். மாதிரி மசோதாவை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள, முதலில் ஒரு ஒன்றிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 249 அல்லது பிரிவு 252 பயன்படுத்தி நாடாளுமன்றம் சட்டத்தை பரிசீலிக்க வேண்டும்.


மூன்றாவதாக, முன்மொழியப்பட்ட ஒன்றிய சட்டத்தில் மின்சாரத் துறையில் நடைமுறையில் உள்ள "மாநில நீர் ஒழுங்குமுறை மன்றத்தை" உருவாக்குவது குறித்த ஒரு விதி இருக்க வேண்டும்.  இது மின்சாரத் துறையில் இருப்பதைப் போன்றது ஆகும். இந்த மன்றம் நீர் துறையில் சீரான விதிமுறைகளை உறுதிப்படுத்த உதவும். இது வெவ்வேறு நீர் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு (WRA) இடையே கட்டண விதிகள் மற்றும் பிற ஒழுங்குமுறை விஷயங்களில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும்.


நான்காவதாக, ஒரு மாநிலத்தில் நீர் ஒழுங்குமுறை ஆணையம் (WRA) அமைக்கப்படும் வரை, ஒரு இடைக்கால நிலைக்குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் சுதந்திரமான நீர் நிபுணர்கள் இருக்க வேண்டும். அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட வரைவு முடிவுகள் மற்றும் விதிமுறைகளை மதிப்பாய்வு செய்வதே இதன் பங்கு. அரசாங்கம் நீர் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படும் நேரங்களில் இது ஆலோசனைகளையும் வழங்கும். இந்த ஆலோசனை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.


எஸ்.கே. சர்க்கார், எழுத்தாளர், புது தில்லியில் உள்ள TERI இன் புகழ்பெற்ற உறுப்பினர் மற்றும் நீர்வள அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஆவார்.



Original article:

Share:

தொகுதி மறுவரையறை விவாதத்திலிருந்து பெண்கள் தங்களை விலக்கிக் கொண்டார்களா? -ஷிகா முகர்ஜி

 மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், தொகுதி மறுவரையறை (delimitation of constituencies) குறித்த வளர்ந்து வரும் விவாதத்தில் பெண்கள் ஏன் இல்லை என்பது குழப்பமாக உள்ளது. அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையம் இடங்களை குறைப்பதாஅல்லது அதிகரிப்பதா என்பதை முடிவு செய்தாலும், இந்த விவாதத்தில் சேருவதில் பெண்களுக்கு ஒரு வரலாற்றுப் பொறுப்பும் முக்கிய ஆர்வமும் உள்ளன. 2023 ஆம் ஆண்டு 106வது அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ((Women’s Reservation Act (Nari Shakti Vandan Adhiniyam)) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இது மிகவும் முக்கியமானது.


மார்ச் 22 அன்று சென்னையில் நடைபெறும் கூட்டுக் குழுவில் (mini conclave) பெண்கள் இல்லாதது கவலைக்குரியது. திராவிட முன்னேற்றக் கழகத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  அரசியல் தலைவர்களை, முக்கியமாக கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை ஒன்றிணைக்கும். நாடாளுமன்றத்தால் தொகுதி மறுவரையறை ஆணையம் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் அரசியல் உத்திகளைப் பற்றி விவாதிப்பார்கள். 


இருப்பினும், இந்தக் கூட்டத்தில் பெண்கள் இல்லாதது அரசியலில் அவர்களின் எதிர்காலத்தையும் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறனையும் பாதிக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்களில் பங்கேற்பதை பெண்கள் வேண்டுமென்றே தவிர்ப்பது போல் தெரிகிறது. தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்களில் பெண்கள் பேசவோ அல்லது பங்கேற்கவோ விரும்பவில்லை. அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்திற்கான சிறப்புப் பிரிவில் எத்தனை பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை இது தீர்மானிக்கிறது.  பெரும்பாலும் ஆண் அரசியல் தலைவர்கள் பெண்களின் கருத்துக்களைக் கேட்காமல் முடிவுகளை எடுக்கும் பழைய நடைமுறையே தொடர்கிறது.


அரசியலில் பெண்கள் தங்கள் செல்வாக்கை தங்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு சட்டமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு சிறப்பு சலுகை அல்ல. அது நீண்டகால கோரிக்கை ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கீதா முகர்ஜி இதை வலியுறுத்தி, 1996 ஆண்டில் ஒரு கூட்டுத் தேர்வுக் குழுவை அமைத்தார்.  இப்போது இந்த ஒதுக்கீடு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதால், அன்பு சகோதரி (Ladli Behena) அல்லது தாய்க்கு மரியாதை (Maiya Samman) போன்ற திட்டங்களால் அவர்கள் பெரும்பாலும் குறிவைக்கப்படுகிறார்கள். இதனால் வாக்கு வங்கிகளுக்கு மேல் பெண்களுக்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்கள் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வலுவான குழுவாக ஒன்றுபடாதது ஆச்சரியமாக இருக்கிறது.


புதிய எல்லை நிர்ணயம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கவலை தெரிவித்தார். இது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும் என்று தெரிவித்தார். மக்கள்தொகை வளர்ச்சி மெதுவாக உள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படலாம். அதே நேரத்தில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற அதிக வளர்ச்சி கொண்ட மாநிலங்கள் மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தால் அதிக இடங்களைப் பெறக்கூடும் என்பது கவலை அளிக்கிறது.


ஒரு தொகுதியில் உள்ள மக்கள்தொகை அளவு மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஏற்கனவே சிக்கலானது. 1951-52 ஆம் ஆண்டு முதல், வரலாற்று ரீதியாக மக்கள் தொகை குறைவாக இருந்த வடகிழக்கு தவிர, அனைத்து தொகுதிகளிலும் ஒரு வாக்குக்கு சம மதிப்பு என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. 84வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் 2026  ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் புதிய தொகுதி மறுவரையறை செயல்முறை, முந்தைய நான்கு முறைகளிலிருந்தும் வேறுபட்டது. தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பும் இதற்கு தேவைப்படுகிறது.


வரவிருக்கும் தொகுதி மறுவரையறை செயல்முறை, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் இன்னும் எத்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். முதல் முறையாக பெண்களுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதையும் இது தீர்மானிக்க வேண்டும். கூடுதலாக, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் இடஒதுக்கீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


106வது அரசியலமைப்புத் திருத்தம், பெண்கள் இடஒதுக்கீடு தொடங்கி தேர்தல்கள் நடைபெறும் நேரத்திலிருந்து 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறுகிறது. இந்த ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தர்க்கரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், முதல் சுற்று இடஒதுக்கீடு வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியமானது.


அரசியலில் பெண்கள் "செயலற்ற சார்புடையவர்களாக" செயல்படக்கூடாது, மாறாக வலுவான மற்றும் தன்னாட்சி பாத்திரத்தை ஏற்க வேண்டும். பெண்கள் சில நேரங்களில் வரையறுக்கப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை மாற்றியமைக்கிறார்கள் என்று தத்துவஞானி மார்த்தா நஸ்பாம் குறிப்பிட்டார். இருப்பினும், பெண் அரசியல்வாதிகள், குறிப்பாக இட ஒதுக்கீடு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிக பொறுப்பைக் கொண்டுள்ளனர். கடந்த காலத்தில், பஞ்சாயத்து மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பெண்கள் தங்கள் கணவர்கள் கட்டுப்பாட்டை எடுக்க அனுமதித்தனர், இது பஞ்சாயத்து தலைவன் (panchayat pati) என்ற அதிகாரப்பூர்வமற்ற பாத்திரத்திற்கு வழிவகுத்தது. அங்கு ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.


பெண்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களில் உள்ள ஆண்கள் தங்கள் அரசியல் பாத்திரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். இதில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தனித்து நிற்கிறது. ஏனெனில், 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் அதன் 29 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 37.9% பெண்கள். இருப்பினும், இங்கும் கூட, வட இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார ரீதியாக பழமைவாத மாநிலங்களைப் போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் பொறுப்புகளை ஆண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


நிபுணர்கள் மதிப்பிட்டபடி, மக்களவையின் இடங்களின் அளவு சுமார் 848 இடங்களாக அதிகரிக்கக்கூடும் என்றால், ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை நிரப்ப அரசியல் கட்சிகள் 279 பெண்களை தேர்வு செய்ய வேண்டும்.  17வது மக்களவையில் இருந்த 78 பெண்களில், தற்போதைய 18வது மக்களவையில் 74 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான சவாலாக இருக்கும். தொகுதி மறுவரையறைக்கு  பிறகு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது  மாநில சட்டமன்றங்களை பாதிக்கும் என்பதால், பெண்களை தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சவால் இன்னும் கடினமாகிறது.


தொகுதி மறுவரையறை, அரசியல் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து விவாதிக்கப்படும் அவையில் பெண்கள் இல்லாதது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. 2024-ம் ஆண்டின் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் (Global Gender Gap Index) 146 நாடுகளில் 129 வது இடத்தில் உள்ள இந்தியா, பணியில் பெண்களின் பங்கேற்பில் மோசமான சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது. பிரதிநிதிகளாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற பெண்களை கொண்டுவரும் பொறுப்பு அரசியல் கட்சிகளிடம் உள்ளது. இந்த யதார்த்தத்தை நிவர்த்தி செய்ய தற்போதுள்ள அமைப்புகளில் மாற்றங்கள் தேவை. இருப்பினும், தொகுதி மறுவரையறை, குறித்த எதிர்க்கட்சிகளின் சமீபத்திய கூட்டம், பெண்களைச் சேர்ப்பதற்கான  அதிக ஆதரவைக் காட்டவில்லை.


ஷிகா முகர்ஜி கொல்கத்தாவின் மூத்த பத்திரிகையாளர்.



Original article:

Share:

தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் கருத்துத் தடை : பிரிவு 79-ஐ அரசாங்கம் பயன்படுத்துவதை X வலைத்தளம் ஏன் முறையீடு செய்துள்ளது?. -அஜோய் சின்ஹா ​​கர்புரம், அர்னவ் சந்திரசேகர்

 உள்ளடக்க மதிப்பீட்டிற்காக வடிவமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் இந்த விதியைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது.


எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான X வலைத்தளம் (முன்னர் ட்விட்டர்), தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act) பிரிவு 79(3)(b) ஐ அரசாங்கம் பயன்படுத்துவதை சவால் செய்துள்ளது. இந்தப் பிரிவு சமூக ஊடகங்களிலிருந்து உள்ளடக்கத்தை குறைப்பதற்கும் அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.


உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-ல் உள்ள பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் விதியை தவறாகப் பயன்படுத்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது.


ஷ்ரேயா சிங்கால் & பிரிவு 69A


ஷ்ரேயா சிங்கால் vs இந்திய ஒன்றியம் 2015 (Shreya Singhal vs Union of India)  வழக்கில், உச்ச நீதிமன்றம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 66A-ஐ ரத்து செய்தது. இந்தப் பிரிவு "எரிச்சல் அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக" (for the purpose of causing annoyance or inconvenience) தவறான தகவல்களை அனுப்புவதை குற்றமாக்கியது. இதற்கு, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன் மற்றும் ஜே. செலமேஸ்வர் ஆகியோர் இந்த விதி "அரசியலமைப்புக்கு முரணானது" (unconstitutionally vague) என்று தீர்ப்பளித்தனர். இது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு பரந்த, கட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கியது.


இந்த முடிவிற்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A இந்த பிரச்சினையில் முக்கிய சட்டமாக மாறியது. இந்தப் பிரிவு "எந்தவொரு கணினி வளத்திலும் உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட அல்லது தலைமை செய்யப்பட்ட எந்தவொரு தகவலையும்" தடுக்க ஒன்றியத்தை அனுமதிக்கிறது. இருப்பினும், பிரிவு 66A-ஐப் போல் அல்லாமல், இது ஷ்ரேயா சிங்கலில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல், தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்புகளை உள்ளடக்கியது.


பிரிவு 69A-ன் கீழ் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு, இந்த விதி "அவசியம்" என்று ஒன்றிய அரசு முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், இது அரசியலமைப்பின் பிரிவு 19(2) இன் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, இது பேச்சு சுதந்திரத்திற்கு நியாயமான வரம்புகளை அனுமதிக்கிறது. இந்த வரம்புகள் இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, பிற நாடுகளுடனான உறவுகள், பொது ஒழுங்கு, கண்ணியம், ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் தொடர்பான வழக்குகளுக்குப் பொருந்தும்.


மக்கள் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்குத் தொடரும் வகையில், தடை உத்தரவில் அரசாங்கம் அதன் காரணங்களை குறிப்பிட வேண்டும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 இன் அரசாங்கத்தின் பயன்பாடு


ஷ்ரேயா சிங்கால்  வழக்கில், ஐடி சட்டத்தின் பிரிவு 79 எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் விளக்கியது. இந்தப் பிரிவு, பயனர்கள் இடுகையிடும் (post)  உள்ளடக்கத்திற்கு (X போன்ற) ஆன்லைன் தளங்கள் பொறுப்பேற்காமல் பாதுகாக்கிறது. இது ஒரு "பாதுகாப்பான இடம்"  போன்று செயல்படுகிறது, அதாவது பயனர்கள் பகிரும் விஷயங்களுக்கு தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்காது.


இருப்பினும், பிரிவு 79(3)(b) சட்டவிரோத தகவல்களை அகற்றவில்லை என்றால் இடைத்தரகர் பொறுப்பேற்கப்படலாம் என்று கூறுகிறது. இது உண்மையான தகவலைப் பெற்ற பிறகு அல்லது பொருத்தமான அரசாங்கம் அல்லது அதன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு உடனடியாக செய்யப்பட வேண்டும்.


உச்ச நீதிமன்றம் இந்த விதிக்கான வரம்பைக் குறைத்தது. அதாவது, பிரிவு 79(3)(b) நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அல்லது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. இந்த அறிவிப்பில் பதிவு உள்ளடக்கமானது பிரிவு 19(2) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் கீழ் வரும் என்று குறிப்பிட வேண்டும்.


இருப்பினும், அக்டோபர் 2023-ஆம் ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)), மாநில அரசுகள் மற்றும் காவல்துறைக்கு ஒரு உத்தரவை அனுப்பியது. பிரிவு 79(3)(b) இன் கீழ் தகவல் தடுப்பு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று அது கூறியது. ஒரு வருடம் கழித்து, அக்டோபர் 2024-ம் ஆண்டில், MeitY “Sahyog” என்ற போர்ட்டலைத் தொடங்கியது. இந்த தளம் குறிப்பிடப்பட்ட அதிகாரிகளுக்குத் தடுப்பு உத்தரவுகளை வெளியிடவும் பதிவேற்றவும் அனுமதித்தது.


X வலைத்தளத்தின் முறையீடு என்ன சொல்கிறது?


கர்நாடக உயர் நீதிமன்றத்தில் X வலைத்தளம்  தொடர்ந்த வழக்கு, MeitY உத்தரவுகள் பிரிவு 69A-வில் உள்ள விதிகளைப் புறக்கணிக்கின்றன என்று கூறுகிறது. இந்த மனு, ஷ்ரேயா சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிடுகிறது. மேலும், பிரிவு 69A-வின் செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலமோ அல்லது நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ மட்டுமே உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய முடியும் என்று கூறுகிறது.


பிரிவு 79 மூன்றாம் தரப்பு இடுகையிடும் (post) உள்ளடக்கத்திற்கு இடைத்தரகர்கள் பொறுப்பேற்கப்படுவதிலிருந்து மட்டுமே பாதுகாக்கிறது என்றும் X நிறுவனம் வாதிடுகிறது. பிரிவு 79 இயற்றப்பட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகும், தற்போதைய பதிப்பு நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசாங்கம் பிரிவு 79 ஐ தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


எந்தவொரு கடுமையான நடவடிக்கையிலிருந்தும் தற்காலிக பாதுகாப்பு கோரி, மார்ச் 17 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் X நிறுவனம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இருப்பினும், நீதிபதி எம். நாகபிரசன்னா இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, மனுதாரர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் திரும்பி அனுகலாம் என்று நீதிமன்றம் கூறியது. பின்பு, வழக்கு மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


X நிறுவனத்தின் AI சாட்போட் Grok 3, இந்தி மொழிப் பயன்பாடு மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் பதில்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ள நேரத்தில், X நிறுவனத்தின் மனு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக Xநிறுவனத்திற்க்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றாலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றியம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.


பிரிவு 79 போன்ற "பாதுகாப்பான இடம்" (safe harbour) போன்ற  விதிகள் புதிய சிக்கலை Grok சர்ச்சையாக அறிமுகப்படுத்துகிறது. பொதுவாக, பயனர்கள் இடுகையிடும் இடுகைகளுக்கு (post) X நிறுவனம் போன்ற தளங்கள் பொறுப்பல்ல. இருப்பினும், Grok மூலம் வெளியிடப்படும் தகவல்களுக்கு X நிறுவனம்  பொறுப்பா என்பது தெளிவாகத் தெரியவில்லை. AI-உருவாக்கும் பதில்கள் "மூன்றாம் தரப்பினரின்" தகவலாகக் கருதப்படுகிறதா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டும்.



Original article:

Share:

இந்தி திணிப்பு தெற்கில் மட்டுமல்ல, அனைத்து பிராந்திய மொழிகளையும் அச்சுறுத்துகிறது. -ரோஹின் பட்

 மக்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக மற்ற மொழியை திணிக்கும்போது அவை அரிதாகவே செழித்து வளர்கின்றன. இந்தியர்களாகிய நாம் அனைவரும் அரசியலமைப்பின் கீழ் சமமானவர்கள். இருப்பினும், நமது கலாச்சார மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரை, நாம் பல மொழிகளைப் பேசும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட குழுவாக இருக்கிறோம்.


குஜராத்தில் வளர்ந்த நான், குஜராத்தி பெருமை (குஜராத்தி அஸ்மிதா) பற்றி மக்கள் அடிக்கடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இந்தப் பெருமை பல விஷயங்களிலிருந்து வந்தது. இதில், நமது கலாச்சாரம், நமது நடனங்கள் மற்றும் உணவு போன்றவற்றை உள்ளடக்கியது. ஆனால், இதில் மிக முக்கியமான பகுதி குஜராத்தி மொழியாகும். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து, பாஜகவும் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தில் பெருமை என்ற கருத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.


சமீபத்தில், நான் இதைப் பற்றி நிறைய யோசித்து வருகிறேன். இதற்கு ஒரு முக்கியக் காரணம், நான் சலீல் திரிபாதியின் ”The Gujaratis: A Portrait of a Community” என்ற புத்தகத்தைப் படித்து முடித்ததுதான். மற்றொரு காரணம், தேசிய கல்விக் கொள்கை (National Education Policy) குறித்த சமீபத்திய விவாதம் ஆகும். இந்த விவாதம் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையிலான மோதலாக மாறி வருகிறது.


இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிநடத்துகிறார். தேசிய பொருளாதாரக் கொள்கையால் பரிந்துரைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை மாநிலம் ஏற்றுக்கொள்ளாததால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிலிருந்து நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலாக, தமிழ்நாடு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளுடன் மட்டுமே தொடர்கிறது என்று குறிப்பிட்டுருந்தார். 


 மோடியின் கௌரவ யாத்திரை 'ஜெய் ஜெய் கர்வி குஜராத்' (‘Jai Jai Garvi Gujarat’) என்று குறிப்பிடும்போது குஜராத்தி அஸ்மிதாவிற்கும் மொழியியல் பெருமைக்கும் என்ன ஆனது என்று நான் அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன். பாஜக ஆட்சியின் கீழ் உள்ள குஜராத், இந்தி மொழியை பின்பற்றியிருக்கலாம். இருப்பினும், இந்தப் பிரச்சினை வழக்கமான விவாதத்தை விட பெரியது என்று இந்தப் பகுதியில் நான் வாதிட விரும்புகிறேன். இது அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட இந்தியாவின் கருத்துக்கு எதிரானது.


மொழியியல் அடிப்படையில் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் பிரிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு மாநில மறுசீரமைப்பு குறித்த ஆய்வு, இந்தியா பல மக்களால் உருவானது என்பதைக் காட்டுகிறது. இது மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். 1953-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் (States Reorganisation Commission), மொழியியல் மாநிலங்களை உருவாக்குவதை ஆதரித்தது. அதன் அறிக்கையில், மொழியியல் மாநிலங்களுக்கான கோரிக்கை கலாச்சார மறுமலர்ச்சி மட்டுமல்ல என்று ஆணையம் கூறியது. வெவ்வேறு மொழியியல் குழுக்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார நீதியைப் பெறுவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது. 


பி.ஆர். அம்பேத்கார், தார் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ‘மகாராஷ்டிரா ஒரு மொழியியல் மாகாணம்’ (Maharashtra as a Linguistic Province) என்ற தலைப்பிலான குறிப்பாணையானது மற்றொரு பார்வையை வழங்கியது. இது, மொழியியல் மாகாணங்களை ஆதரிப்பவர்கள் இந்த பிராந்தியங்கள் தனித்துவமான மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள் என்பதை அது விளக்கியது. இந்த மாகாணங்கள் தங்கள் மொழிகளையும் கலாச்சாரங்களையும் முழுமையாக வளர்க்க சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதாவது, இந்த மாகாணங்கள் ஒரு தனித்துவமான தேசியத்தின் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளன. அவர்கள் முழு தேசமாக வளர சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்


அரசியலமைப்புப் பிரிவு 351 ஆனது, இந்தி மொழியின் பரவலை ஊக்குவிக்கும் கடமையை இந்திய ஒன்றியத்தின் மீது விதிக்கிறது. அரசியலமைப்புச் சபை விவாதங்களின் போது, ​​ஒடிசாவைச் சேர்ந்த லட்சுமிநாராயண் சாஹு, இந்தக் விதி ஒவ்வொரு மாகாண மொழியின் நலன்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று வாதிட்டார். இது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று அவர் நம்பினார். மேலும், அரசியலமைப்புப் பிரிவு 351 இன் குறிப்பிட்டுள்ளபடி, கல்வி நிதியை நிறுத்தி வைத்து பள்ளிகளில் இந்தி கற்பிக்க ஒரு மாநிலத்தை ஒன்றியம் கட்டாயப்படுத்த முடியாது. ஒன்றிய அரசு இந்தி மொழியை ஊக்குவிக்க விரும்பினால், அதற்கான அரசியலமைப்பு அதிகாரம் அதற்கு உண்டு. 


இருப்பினும், ஒரு மாநிலத்தை இதைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்த ஒன்றிய அரசை இந்தப் பிரிவு அனுமதிக்கவில்லை. அரசியலமைப்புப் பிரிவு-256 இன் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலத்திற்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஒன்றிய அரசு முயற்சித்தால், அது அவ்வாறு செய்ய முடியாது. இந்த அதிகாரம் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், புதிய கல்விக் கொள்கை அந்தச் சட்டங்களில் பொருந்தவில்லை.


இரண்டாவதாக, அரசியலமைப்பின் 29-வது பிரிவானது, “இந்தியாவின் பிரதேசத்திலோ அல்லது அதன் எந்தப் பகுதியிலோ வசிக்கும் எந்தவொரு குடிமக்களும், தனக்கென ஒரு தனித்துவமான மொழி, எழுத்து வடிவத்தை அல்லது கலாச்சாரத்தைக் கொண்டிருந்தால், அதைப் பாதுகாக்க உரிமை உண்டு.” அரசியலமைப்பில் முன்னர் குறிப்பிடப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அரசியலமைப்புப் பிரிவு 29ஐப் புரிந்து கொள்ள வேண்டும். “எந்தவொரு பிரிவு குடிமக்கள்” (any section of citizens) என்ற சொற்றொடர் தமிழ்நாடு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலிருந்தும் மக்களை உள்ளடக்கியது. இது குஜராத், மகாராஷ்டிரா, அசாம், வங்காளம், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். இந்த மக்களுக்கு அவர்களின் மொழி மற்றும் எழுத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் உரிமை உண்டு. மாநில அரசு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும்.


மக்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக மற்ற மொழியை திணிக்கும்போது அவை அரிதாகவே செழித்து வளர்கின்றன. இந்தியர்களாகிய நாம் அனைவரும் அரசியலமைப்பின் கீழ் சமமானவர்கள். இருப்பினும், நமது கலாச்சார மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரை, நாம் பல மொழிகளைப் பேசும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட குழுவாக இருக்கிறோம். நாம் பல வேறுபட்ட மொழிகளைப் பேசுகிறோம். வெவ்வேறு கடவுள்களை வணங்குகிறோம், வெவ்வேறு உணவுகளை உண்கிறோம், வெவ்வேறு ஆடைகளை அணிகிறோம். இங்குள்ள பெரிய குறிக்கோளானது, இந்தக் கருத்துக்குப் பொருந்தாத மற்ற அனைத்தையும் புறக்கணித்து, ஒற்றை அடையாளத்தை உருவாக்குவதாகும். இது ஒரு அர்த்தமற்ற பணியாகும். 


அல்போன்ஸ் டாடெட்டின் சிறுகதையான ”இறுதிப் பாடம்” (The Last Lesson) என்ற சிறுகதையில், கதாநாயகன் இரண்டாம் உலகப் போரின் போது தனது பிரெஞ்சு ஆசிரியர் நீக்கப்பட்டபோது, ​​பிரான்சில் ஜெர்மன் கட்டாயமாகும்போது. அவர், "புறாக்களைக் கூட ஜெர்மன் மொழியில் பாட வைப்பார்களா?" என்று கேட்டார்.  தற்போது, ஹிந்தியைப் பற்றியும் எனக்கும் அதே சந்தேகம் தான்.


ரோஹின் பட் 'தி அர்பன் எலைட் வி யூனியன் ஆஃப் இந்தியா'வின் ஆசிரியரும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் வழக்கறிஞருமாவார்.



Original article:

Share:

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டால், தொகுதி மறுவரையறை கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தக்கூடும். -டி. ராஜா

 2026-ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை அனைத்து மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். 


மே 2023 ஆம் அண்டில், பிரதமர் நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்தபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதல் இருக்கைகள் தேவை என்று குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை பணிகள் 2026 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்த விவாதம் கவனத்தை ஈர்த்துள்ளது. தொகுதி மறுவரையறையில் பயன்படுத்தப்படும் சூத்திரம், பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டாட்சி முறை குறித்த கலவையான பதிவுகள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையிலான சீரற்ற மக்கள்தொகை வளர்ச்சி போன்றவை தொகுதி மறுவரையறை குறித்த விவாதம் நியாயம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. 


 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இது தொடர்பாக விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே, தொகுதி மறுவரையறை என்றால் என்ன? அது ஏன் நிறுத்தப்பட்டது? அது நமது அரசியலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு விவாதத்தை நடத்த வேண்டும்.


அரசியலமைப்பின் 82-வது பிரிவு, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்கள்தொகை மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், நாடாளுமன்றம் ஒரு தொகுதி மறுவரையறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 170, மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் மாநில சட்டமன்றங்களின் அமைப்பை தீர்மானிக்கிறது. பிரிவு 55, குடியரசுத்தலைவர் தேர்தலில் மாநிலங்களின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. பிரிவு 81 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து மக்கள்தொகை அடிப்படையில் அவற்றைப் பகிர்ந்தளிக்கிறது. 1976 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 42வது திருத்தத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்தது. குடும்பக் கட்டுப்பாடு மூலம் தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு இது  பாதகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது. பின்னர், வாஜ்பாய் அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பை 2026 ஆம் ஆண்டு  வரை நீட்டித்தது.


வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த தொகுதி மறுவரையறையானது, தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அதே வேளையில், வட இந்திய மாநிலங்களுக்கான இடங்களை அதிகரிக்கும். தற்போது, ​​உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை 543 மக்களவை இடங்களில் 174 இடங்களை (32%) கொண்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை 129 இடங்களை அல்லது 24 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மொத்த மக்களவை இடங்கள் 543 ஆக இருந்தால், வட இந்திய மாநிலங்கள் தங்கள் இடங்களை 205 ஆக அதிகரிக்கலாம். அதே, நேரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 103 ஆகக் குறையலாம். இடங்கள் 888 ஆக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கொள்ளளவு விரிவடைந்தால், வட இந்திய மாநிலங்களுக்கு 324 இடங்கள் (39%) இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு 164 இடங்கள் (19%) இடங்களைப் மட்டுமே பெறும்.


1971-ஆம் ஆண்டில், பீகாரும் தமிழ்நாட்டும் ஒரே மாதிரியான மக்கள்தொகையையும் சமமான மக்களவை இடங்களையும் கொண்டிருந்தன. காலப்போக்கில், பீகாரின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்தது. எனவே, அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது தமிழ்நாட்டை விட அதிகமான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, வட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப் பெரிய தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு, வரவிருக்கும் தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களுக்கு உள்ள சவாலை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா மக்கள் தொகையில் வட மாநிலங்கள் இப்போது 50சதவித்தை கொண்டுள்ளன. இது 1971 ஆம் ஆண்டில் 43% ஆக இருந்தது. அதே, நேரத்தில் தென் மாநிலங்களின் பங்கு 25% இலிருந்து 20% ஆகக் குறைந்துள்ளது.


2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநிலங்கள் பல காரணங்களுக்காக கவலை கொண்டுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு மூலம் அவர்கள் தங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அவர்களின் இடங்களைக் குறைக்கக்கூடும். அரசியல் ரீதியாக, கர்நாடகாவை தவிர, தென்னிந்தியாவில் பாஜக அதிக ஆதரவைப் பெறவில்லை. தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது தென் மாநிலங்களை இதற்காகத் தண்டிக்க ஒரு வழியாக இருக்கலாம்.


மற்றொரு முக்கிய கவலை கூட்டாட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தலாகும். இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்தல், கேரளா போன்ற மாநிலங்களுக்கு எதிரான நிதி பாகுபாடு, புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் மாநில நலத்திட்டங்களில் தலையிடுதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்ற கவலைகளை இந்த நடவடிக்கைகள் அதிகரிக்க செய்துள்ளது.


தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், வட மாநிலங்களை விட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வரி வருவாய் விகிதாச்சாரத்தில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன. இருப்பினும், இந்த மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஆபத்தில் உள்ளது. பிரதிநிதித்துவம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் பொருளாதார அநீதி பற்றிய கவலைகளையும் எழுப்புகின்றன. சுகாதாரம், கல்வி மற்றும் சமூக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதலீடு செய்த மாநிலங்கள் தண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்தக் கவலைகளைத் தீர்க்க, அரசியலமைப்பு பாதுகாப்புகள் அவசியம். தொகுதி மறுவரையறை செயல்முறை மக்கள்தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொகுதி மறுவரையறை பங்களிப்புகள், வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் நிர்வாக வெற்றியை கருத்தில் கொள்ள வேண்டும். இது அனைத்து பிராந்தியங்களுக்கும் நியாமான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்கும் அதே வேளையில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் ஒரு அமைப்பு நீதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையாகும். நியாயமற்ற தொகுதி மறுவரையறை செயல்முறை, நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களித்த பகுதிகளை விலக்கக்கூடும்.


டி. ராஜா, எழுத்தாளர்  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலாளர்.



Original article:

Share:

வரவு செலவு அறிக்கை விவகாரங்களில் ஓரங்கட்டப்பட்ட இந்திய நாடாளுமன்றம் -வினோத் பானு

 தற்போதுள்ள வரவு செலவு அறிக்கை செயல்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கைக் குறைத்து, ஜனநாயகப் பொறுப்புணர்வை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.


வரவு செலவு அறிக்கை என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நாட்டின் முன்னுரிமைகள், பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் நிர்வாக முறையைக் காட்டுகிறது. ஜனநாயக நாடுகளில், நாடாளுமன்றங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துகின்றன.  வரவு செலவுத் திட்டங்களை வடிவமைக்க உதவுகின்றன. நிதி ஒழுக்கத்தைப் பராமரிக்கின்றன மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன. 


இந்தியாவில், வரவு செலவு அறிக்கையில் நாடாளுமன்றத்திற்கு குறைவான பங்கே உள்ளது. அரசாங்கம் செயல்முறையை கட்டுப்படுத்துகிறது.  சட்டமியற்றுபவர்களுக்கு நிதிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது வடிவமைக்க மிகக் குறைந்த வாய்ப்பையே வழங்குகிறது. நாடாளுமன்றத்தின் வரவு செலவு அறிக்கைளை அங்கீகரிப்பதில் இருந்து பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்க உதவ வேண்டும். இதற்கு வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரவு செலவு அறிக்கை  அலுவலகத்தை (Parliamentary Budget Office (PBO)) நிறுவுதல் போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.  


வரவு செலவு அறிக்கை ஜனநாயகத்தின் தூண்  


வரவு செலவு அறிக்கை, என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை இது தீர்மானிக்கிறது மற்றும் அரசாங்கத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை அமைக்கிறது. வரலாறு முழுவதும், சட்டமன்றங்கள் பொது நிதியைக் கட்டுப்படுத்தப் போராடியுள்ளன. 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றம் முதல் நவீன ஜனநாயகங்கள் வரை, வரவு செலவு அறிக்கையின் மேற்பார்வை அரசாங்கத்தின் அதிகப்படியான அணுகலைத் தடுக்க உதவியுள்ளது.


உலகளவில், நாடாளுமன்றங்கள் வரவு செலவு அறிக்கை மீது வெவ்வேறு கட்டுப்பாட்டு நிலைகளைக் கொண்டுள்ளன. சில  நாடுகள் வரவு செலவு அறிக்கைகளை உருவாக்கி மாற்றியமைக்கின்றன மற்றவை அவற்றை வெறுமனே அங்கீகரிக்கின்றன. சில நாடுகள் விரிவான விவாதங்களை நடத்துகின்றன.  மற்றவை நிதிக் குழுக்களை நம்பியுள்ளன. ஆனால், ஒன்று தெளிவாக உள்ளது. அதிக வரவு செலவு அறிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஈடுபாடு சிறந்த சமூக மற்றும் பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


இந்தியாவில் வரவு செலவு அறிக்கை உருவாக்கம் மற்றும் அதை ஆய்வு செய்வதில் நாடாளுமன்றத்தின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமானது. நிதி அமைச்சகம் வரவு செலவு அறிக்கையை தனியாகத் தயாரிக்கிறது.  வரவு செலவு அறிக்கை மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் வரை கேபினட் அமைச்சர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைக்கப்டுகிறது. மற்ற மசோதாக்களைப் போல் இல்லாமல், வரவு செலவு அறிக்கை நாடாளுமன்றத்தை அடைவதற்கு முன்பு அமைச்சரவையில் முழுமையாக விவாதிக்கப்படுவதில்லை. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் இந்த செயல்முறை பலவீனமான விவாதங்களுக்கும் மோசமான மேற்பார்வைக்கும் வழிவகுக்கிறது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் முக்கிய கொள்கைகளை பலவீனப்படுத்துகிறது.


மக்களவை  ஒரு ஜனநாயக அமைப்பாக இருந்தாலும், வரவு செலவு அறிக்கை விவாதங்களில் அதன் பங்கு மிகக் குறைவு. விந்தையாக, இந்தியா ஒரு நிதியமைச்சரை மாநிலங்களவை உறுப்பினராக  இருக்க அனுமதிக்கிறது. ஆனால், அவர்களால் மக்களவையில் தங்கள் சொந்த வரவு செலவு அறிக்கை முன்மொழிவுகளில் வாக்களிக்க முடியாது.  இது பிரிட்டிஷ் சபையிலிருந்து மிகவும் வித்தியாசமானது. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தாலும், நிதிச் சட்டங்களில் ஓரளவு அதிகாரம் செலுத்துகிறது.


வரவு செலவு அறிக்கை மீதான நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு பலவீனமடைந்துள்ளது. விவாதங்கள் குறுகியதாகவும் தரம் குறைந்ததாகவும் உள்ளது. குழுக்கள் வரவு செலவு அறிக்கை  விவரங்களை திறம்பட மதிப்பாய்வு செய்வதில்லை. மேலும், சட்டமியற்றுபவர்கள் வரவு செலவு அறிக்கை முடிவுகளை மாற்ற முடியாது. அவர்களின் பங்கு பெரும்பாலும் கேள்வி இல்லாமல் ஒப்புதல் அளிப்பதாகவே உள்ளது.இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் பொறுப்புணர்வைக் குறைக்கிறது.





வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்கள்


வரவு செலவு அறிக்கை தயாரிப்பில் நாடாளுமன்றம் தனது உரிமையை மீண்டும் பெற இரண்டு முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும். வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற வரவு செலவு அறிக்கைக்கு அலுவலகத்தை உருவாக்குதல்.


வரவு செலவு அறிக்கை செயல்பாட்டில் பயனுள்ள ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக, மழைக்கால கூட்டத்தொடரின் போது வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்களை நாடாளுமன்றம் நிறுவனமயமாக்க வேண்டும். ஐந்து முதல் ஏழு நாள் வரையிலான ஒரு பிரத்யேக விவாத காலம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நிதி ஆரோக்கியத்தை மதிப்பிடவும், வரவு செலவு அறிக்கை முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டவும், அரசாங்கத்தின் பரிசீலனைக்காக ஒரு பரந்த பொருளாதார கட்டமைப்பை முன்வைக்கவும் அனுமதிக்கும். இத்தகைய விவாதங்கள் பாடக் குழுக்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும், தகவலறிந்த உள்ளீடுகளை வழங்குவதற்கான அவர்களின் திறனை மேம்படுத்தும்.


வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்கள் வரவு செலவு அறிக்கை தயாரிக்கும் செயல்முறையை ஜனநாயகமாக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்களின் கவலைகளை எழுப்பலாம், நியாயமான வள விநியோகத்தை பரிந்துரைக்கலாம் மற்றும் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கலாம்.  மிக முக்கியமாக, இந்த விவாதங்கள் பொதுமக்களை அதிக அளவில் ஈடுபடுத்தும் மற்றும் நிதி முடிவுகளை தெளிவாகவும் நம்பகமானதாகவும் மாற்றும்.


வரவு செலவு அறிக்கை தயாரிப்பில் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தால், வாக்காளர்களை மகிழ்விக்க அவர்கள் பொறுப்பற்ற முறையில் பணத்தை செலவிடக்கூடும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். சில பொருளாதார வல்லுநர்கள் இது நிதி ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், மேற்பார்வை இல்லாமல் அரசாங்கம் எப்போதும் பொதுமக்களின் நலனுக்காக செயல்படும் என்று நம்புவது நடைமுறைக்கு மாறானது. உண்மையில், எந்த அரசாங்கமும் பொருளாதாரத்தில் நியாயத்தை அதன் சொந்தமாக உறுதி செய்ததில்லை. 

ஆரோக்கியமான ஜனநாயகம் அதிகாரத்தை சமநிலைப்படுத்துகிறது. நிர்வாகம் நிதி விருப்புரிமையைத் தக்க வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளமாகும்.


வரவு செலவு அறிக்கை சீர்திருத்தத்தின் ஒரு முக்கிய அம்சம், நாடாளுமன்றத்தின் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்துவதாகும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தன்னாட்சி மற்றும் பாரபட்சமற்ற வரவு செலவு அறிக்கை பகுப்பாய்வை வழங்கும் நிறுவன வழிமுறை இந்தியாவில் இல்லை. 


தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மற்றும் நிபுணர் பொருளாதார முன்னறிவிப்புகள் இருப்பதால், பாராளுமன்ற வரவு செலவு அறிக்கை அலுவலகம் (PBO) நிறுவுவது இந்த இடைவெளியைக் குறைக்கும். அமெரிக்க காங்கிரஸின் வரவு செலவு அறிக்கை  அலுவலகம் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒத்த அமைப்புகளை மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் நன்கு கட்டமைக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை அலுவலகம் அரசாங்க செலவினம், வருவாய் கணிப்புகள் மற்றும் நிதிக் கொள்கைகளை பகுப்பாய்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். 


இது தன்னாட்சி பொருளாதார முன்னறிவிப்புகளை நடத்தும், முன்மொழியப்பட்ட கொள்கைகளின் நிதி தாக்கத்தை மதிப்பிடும் மற்றும் நடுத்தர கால மற்றும் நீண்ட கால வரவு செலவு அறிக்கைகளை மதிப்பிடும்.


கூடுதலாக, வரவு செலவு அறிக்கை  அலுவலகம் (PBO) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமியற்றுபவர்களுக்கு கொள்கை விளக்கங்களை வழங்கும். அவர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். இது அரசாங்கத்தின் கொள்கைகளில் தலையிடாது. ஆனால், வரவு செலவு அறிக்கை ஆய்வு உறுதியான ஆராய்ச்சியின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அதை ஆதரிக்கும். இது அரசாங்கத்தை பொறுப்பு ஏற்க வைக்கும் நாடாளுமன்றத்தின் திறனை வலுப்படுத்தும் மற்றும் அடிப்படை கொள்கை விவாதங்களை ஊக்குவிக்கும்.



நாடாளுமன்ற அதிகாரத்தை மீண்டும் பெறுதல்


தற்போதைய, வரவு செலவு அறிக்கை செயல்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கைக் கட்டுப்படுத்துகிறது. ஜனநாயக பொறுப்புணர்வைக் குறைக்கிறது. வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்களும் நாடாளுமன்ற வரவு செலவு அறிக்கை அலுவலகமும் (Parliamentary Budget Office (PBO)) நாடாளுமன்றம் வரவு செலவு அறிக்கைகளை அங்கீகரிப்பதில் இருந்து அவற்றை தீவிரமாக வடிவமைப்பதற்கு உதவும்.


இந்த சீர்திருத்தங்கள் சிறிய மாற்றங்கள் மட்டுமல்ல. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகளாகும். அவை அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் மட்டும் அல்லாமல் கூட்டு விவாதத்தின் மூலம் நிதி முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும். இது வலுவான நாடாளுமன்ற ஈடுபாடு நியாயமான பொருளாதாரக் கொள்கைகள், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் நிதி அமைப்புக்கு வழிவகுக்கும்.


வினோத் பானு, புது டெல்லியில் உள்ள சட்டமன்ற ஆராய்ச்சி மற்றும் வழக்குரைத்தல் மையத்தின் (Centre for Legislative Research and Advocacy (CLRA)) இயக்குனர் ஆவார்.

Original article:

Share:

இந்தியாவின் தலைமையின் கீழ் பெருங்கடல் சார்ந்த அமைப்பிற்க்கான (Indian Ocean Rim Association (IORA)) பாதையை திட்டமிடுதல் -பூஜா பட்

 அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள உள்ளூர் நிர்வாகத்திற்கு புது டெல்லி ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும்.


இந்தியப் பெருங்கடல் சார்ந்த அமைப்பு (Indian Ocean Rim Association (IORA)) என்பது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நாடுகளை இந்தியப் பெருங்கடல் வழியாக இணைக்கும் ஒரு சிறந்த பிராந்தியக் குழுவாகும். தற்போது துணைத் தலைவராக உள்ள இந்தியா, நவம்பர் 2025 முதல் IORA-வை வழிநடத்தும். அதன் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், மீள்தன்மையை அதிகரிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இரண்டு ஆண்டுகளுக்கு IORA தலைவராக, மூன்று முன்னுரிமைகளில் இந்தியா கவனம் செலுத்தும். அவை: நிதியை அதிகரித்தல், சிறந்த தரவு மற்றும் கொள்கை வகுப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் கல்வி கூட்டாண்மை மூலம் கடல்சார் படிப்புகளை உருவாக்கும்.


இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் இந்தியப் பெருங்கடல் சார்ந்த அமைப்பு (Indian Ocean Rim Association (IORA))


இந்தியப் பெருங்கடல் பகுதி (Indian Ocean Region (IOR)) இந்தோ-பசிபிக் பகுதியின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் வளமான கடல்வாழ் உயிரினங்களுக்கு தாயகமாக உள்ளது. கடல் உலக வர்த்தகத்தில் 75% மற்றும் தினசரி எண்ணெய் பயன்பாட்டில் 50% ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பொருட்கள் மற்றும் சேவைகளில் $1 டிரில்லியன் ஈட்டுகிறது.  2023 ஆம் ஆண்டில் IORA-விற்குள் வர்த்தகம் $800 பில்லியனை அடைந்துள்ளது. இருப்பினும், இந்தப் பகுதி மோசமான வளர்ச்சி, சிக்கலான அரசியல் அமைப்புகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதி கடற்கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இந்த உலகளாவிய சவால்களுக்கு இக்குழுவின் நாடுகள்  அதன் தீர்வுகளுக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


பிராந்தியக் குழுக்களில் மிகப் பழமையான ஒன்றான இந்தியப் பெருங்கடல் சார்ந்த அமைப்பு, அதன் உறுப்பினர்கள் கலாச்சார மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை விவாதங்கள் மூலம் ஒத்துழைக்க உதவுகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நட்பு நாடுகளாக இருந்தாலும், IORA முக்கியமாக நடுத்தர மற்றும் சிறிய சக்திகளால் வழி நடத்தப்படுகிறது. அதன் செல்வாக்கை அதிகரிக்க அதற்கு வலுவான முயற்சிகள் தேவைப்படுகிறது.



இந்தியப் பெருங்கடல் சார்ந்த அமைப்பு (Indian Ocean Rim Association (IORA)) எதிர்கொள்ளும் பிரச்சினைகள்


இந்தியப் பெருங்கடல் பகுதியில் மோதல்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், நிதி போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. IORA-வின் வரவு செலவு அறிக்கை அதன் உறுப்பினர்களைச் சார்ந்துள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் தவிர, பெரும்பாலான உறுப்பினர்கள் வளரும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். IORA-வின் வரவு செலவு அறிக்கை சில மில்லியன் டாலர்கள் மட்டுமே உள்ளது.  ஐந்து நாடுகளை மட்டுமே கொண்ட இந்தியப் பெருங்கடல் ஆணையம், 2020-25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை $1.3 பில்லியன் கொண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, கடல்சார் பாதுகாப்பு, மீன்வளம், பேரிடர் மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் அதன் விரிவடையும் பணிகளை ஆதரிக்க IORA-வின் நிதி மிகவும் குறைவாக உள்ளது. 


குறிப்பாக, இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஏராளமான வளங்களும் தொடர்ச்சியான முயற்சிகளும் தேவைப்படுகின்றன. கடல்சார் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதே அதிக நிதி திரட்டுவதற்கான ஒரு வழியாகும். நீலப் பொருளாதாரத்திற்கு கப்பல் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் கடல் சுற்றுலா ஆகியவை முக்கியம். இந்தத் தொழில்கள் கடல்சார் கொள்கைகளை வடிவமைக்கவும், IORAவின் நிதியுதவியை ஆதரிக்கவும் உதவும். IORA மொரிஷியஸில் குறைந்த ஊழியர்களைக் கொண்ட ஒரு சிறிய செயலகத்தைக் கொண்டுள்ளது. தரவு செயலாக்கத்தில் அரசாங்க அமைப்புகள் சிரமப்படுவதால், தொழில்நுட்பத்தால் நிர்வாகத்தை மேம்படுத்த முடியும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவு பராமரிப்பு மூலம் விரைவான மற்றும் திறமையான கொள்கை பகுப்பாய்வை எளிதாக்கும்.


இந்தியாவிற்கான பிற பரிந்துரைகள்


இந்தியாவின் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (India’s Security and Growth for All (SAGAR)) தொலைநோக்குப் பார்வை இந்தியப் பெருங்கடல் சார்ந்த அமைப்பு (Indian Ocean Rim Association (IORA))  இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய IORA உறுப்பினர்களுடனான தனது வலுவான உறவுகளை இந்தியா பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளன. பிரான்சும் சிங்கப்பூரும் கடல்சார் தொழில்நுட்பத்தில் வலுவாக உள்ளன. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியவை IORA-ன் முன்னுரிமைப் பகுதிகளில் முதலீடு செய்யலாம். இலங்கை, சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸ் போன்ற கடலோர மற்றும் தீவு நாடுகள் நிலையான கடல் மேலாண்மைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய பாரம்பரிய அறிவைக் கொண்டுள்ளன. சிறந்த முடிவுகளை அடைய IORA ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.


இறுதியாக, கடல்சார் மற்றும் கடல்சார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருப்பதால், தொழில்துறைத் தலைவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து சவால்களைத் தீர்க்கவும், தொழில்துறையை மையமாகக் கொண்ட புதிய படிப்புகளை உருவாக்கவும் பணியாற்ற வேண்டும். கடல்சார் கணக்கியல் (Marine accounting) என்பது நீலப் பொருளாதாரத்தை ஆதரிக்கக்கூடிய ஒரு பயனுள்ள பாடமாகும். பிராந்தியத்தில் திறமையான மக்கள் இருந்தால், நிபுணர்கள் பயனுள்ள தீர்வுகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.


பிராந்திய வளர்ச்சிக்கு IORA முக்கிய பங்காற்றியுள்ளது. நிறுவன மட்டத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை சமாளிக்க இந்தியா தனது தலைமையைப் பயன்படுத்த வேண்டும்.


பூஜா பட், சோனிபட்டில் உள்ள ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் (O.P. Jindal Global University) இணைப் பேராசிரியராக உள்ளார் மற்றும் கடல்சார் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய அமைப்புகள் பற்றி கற்பிக்கிறார்.



Original article:

Share: