நிதி ஆயோக்கின் (NITI Aayog) வறுமை பற்றிய அறிக்கை ஊக்கமளிக்கிறது ஆனால் கேள்விகளைத் தூண்டுகிறது

 குறைக்கூறுபவர்கள் என்ன சொன்னாலும், நிதி ஆயோக்கின் (National Institution for Transforming India (NITI Aayog)) சமீபத்திய விவாதக் கட்டுரையைப் (discussion paper on reduction in multi-dimensional poverty (MDP) in the country) பற்றி நம்பிக்கை கொள்ள ஒரு காரணம் இருக்கிறது. நிதியாண்டு-23 வரை ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் பல பரிமாண வறுமையை (multidimensional poverty (MDP)) குறைப்பது பற்றி இந்த கட்டுரை பேசுகிறது. இது கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உட்பட 12 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பல பரிமாண வறுமை (multidimensional poverty (MDP)) வரையறையின் ஆய்வறிக்கையின்படி, இந்த குறிகாட்டிகளால் வரையறுக்கப்பட்ட வறுமை, நிதியாண்டு-14 இல் 29.17% ஆக இருந்து நிதியாண்டு-23 இல் 11.28% ஆக குறைந்துள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. சுமார் 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையின் (MDP) அடிப்படையில் மதிப்பிட்டுள்ளன. இவற்றில், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களும் சிறப்பாக செயல்படுகின்றன.


பல பரிமாண வறுமை (MDP) குறியீடுகள், 2005-06, 2015-16 மற்றும் 2019-21 இல் வெளியிடப்பட்ட மூன்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளிலிருந்து (National Family Health Surveys), இனி, வரவிருக்கும் ஆண்டுகளுக்கான கணிப்புகளைச் செய்ய அவர்கள் கடந்த காலத் தரவைப் பயன்படுத்துகின்றனர். 2005-06 முதல், வங்கிக் கணக்குகளைச் சேர்ப்பது, சொத்துக்களை வைத்திருப்பது, பள்ளிக்குச் செல்வது, மின்சாரம் மற்றும் சுத்தமான நீர் பெறுவது போன்ற துறைகளில், குறிப்பாக 2015-16க்குப் பிறகு, இந்தியாவில் முன்னேற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. இருப்பினும், சமையல் எரிபொருள், சுகாதாரம், வீட்டுவசதி, தாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகல் இன்னும் கவலையளிக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தரவுகள்  மோசமாக இருந்தன. இந்த குறியீடுகள் எத்தனை பேர் இழந்துள்ளனர் மற்றும் அவர்களின் பற்றாக்குறை எவ்வளவு கடுமையானது என்பதை கருத்தில் கொள்கிறது. ஆனால் இவற்றின் பற்றாக்குறையை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட வறுமையை வரையறுக்க தெளிவான வழி இல்லை என்பதால் அறிக்கை எழுத்தாளர்கள் இதை தெளிவுபடுத்த வேண்டும். வருமான அடிப்படையிலான வறுமையைப் பற்றி பேசுகையில், உலக வங்கியின் மதிப்பீட்டை (World Bank’s assessment) அறிக்கை குறிப்பிடுகிறது. இது 2017-ல் ஒரு நபரின் வருமானம் $2.15 என பயன்படுத்தி, இவற்றின் வறுமை விகிதம் 2015 இல் 18.73% இல் இருந்து 2021 இல் 11.9% ஆகக் குறைந்துள்ளது.


பல பரிமாண வறுமை (MDP) கண்டுபிடிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிக் குறியீட்டைப் (UN HDI) போலன்றி, பல பரிமாண வறுமை (MDP) வருமானத்தை வெளிப்படையாகக் கருதுவதில்லை. ஆனால் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வீடுகள் மாற்றாகச் செயல்படும். ஒரு நபரின் வருமானத்தின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு சமமான முக்கியத்துவத்தை மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index (HDI)) வழங்குகிறது. வறுமையை மதிப்பிடுவதற்கு வருமானம் அல்லது கலோரி அடிப்படையிலான நடவடிக்கைகளைப் பார்ப்பதில் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், வருமானத்தைக் குறைப்பது சிறந்த யோசனையல்ல. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி நிதியாண்டு-18 மற்றும் நிதியாண்டு-23 க்கு இடையில் குறைந்துள்ளது. மேலும் நல்ல பல பரிமாண வறுமை (MDP) முன்னேற்றம் அடைந்த நான்கு மாநிலங்களின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2012-22 இலிருந்து தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. இந்த குறைந்த வளர்ச்சி விகிதங்கள் இருந்தபோதிலும் பல பரிமாண வறுமை (MDP) கணிசமாக குறைந்துள்ளது சுவாரஸ்யமானது.


ஜன்தன் யோஜனா (Jan Dhan Yojana), போஷன் அபியான் (Poshan Abhiyaan) மற்றும் கரிப் கல்யாண் யோஜனா (Garib Kalyan Yojana) போன்ற அரசின் திட்டங்களால் இந்த வெற்றி இருக்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், இது ஒரு கவலையை எழுப்புகிறது: வலுவான வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த 'அந்தியோதயா' திட்டங்களை மக்கள் இறுதியில் இல்லாமல் செய்ய முடியுமா? உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் இரண்டும் கைகோர்த்துச் செயல்படும்போது வறுமைக் குறைப்பு சிறப்பாகச் செயல்படும்.




Original article:

Share:

சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் ரயில்வே: இந்தியாவின் எல்லையில் சீனா இருக்க முடியுமா? -பி. ஸ்டோப்டன்

 மத்திய ஆசியாவுடனான நேரடி இரயில்வே இணைப்பை நிறுவுவது இந்தியாவிற்கு அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யாமல் சாத்தியமாகும். இதை அடைய, இந்தியா யூரேசிய பிராந்தியத்தில் தனது நலன்களைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் ஆற்றல் சமநிலையை மாற்றும் சூழலில் வளர்ந்து வரும் பிராந்திய இயக்கவியல் மற்றும் விதிமுறைகளை திறமையாக வழிநடத்த வேண்டும்.


சீனாவின் ஜின்ஜியாங்கை (Xinjiang) தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுடன் இணைக்கும் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று கஷ்கரில் (Kashgar) இருந்து குஞ்சேரப் (Khunjerab) கணவாய் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) செல்கிறது, மற்றொன்று காஷ்கரில் இருந்து இர்காஷ்டம் (Irkashtam) கணவாய் வழியாக கிர்கிஸ்தானுக்கு (Kyrgyzstan) செல்கிறது. பாமிர் மலைகள் (Pamir Mountains) வழியாக தஜிகிஸ்தானுக்குள் (Tajikistan) செல்லும் ஒரு குறுகிய சாலையும் உள்ளது.


பல ஆண்டுகளாக கஜகஸ்தானின் புல்வெளியில் சாலைகள், இரயில் பாதைகள் மற்றும் குழாய்கள் உட்பட விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீனா ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், 1990 களில் இருந்து தொடரப்பட்ட ஃபெர்கானா பள்ளத்தாக்குக்கு (Fergana Valley) ரயில் பாதையை விரிவுபடுத்தும் லட்சிய இலக்கு பல புவிசார் அரசியல் தடைகளை எதிர்கொண்டது மற்றும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.


யூரேசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்து வருவதால், சீனா இந்த பிராந்தியத்தில் வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது. உக்ரைன் நெருக்கடி, விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் ரஷ்யாவைக் கடந்து செல்ல மாற்றுப் பாதைகளுக்கான கோரிக்கை போன்ற காரணிகளால் உந்தப்பட்ட சீனா சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வேயை (China-Kyrgyzstan-Uzbekistan railway (CKU-R)) நிறைவேற்றுவது ஒரு சமீபத்திய உதாரணம். 


2023 இல் சியானில் (Xi'an) நடைபெற்ற பெல்ட் அண்ட் ரோடு (Belt and Road) முன்முயற்சியின் 10வது ஆண்டு உச்சிமாநாட்டின் போது சீனா இந்தத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. உஸ்பெகிஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது இந்தத் திட்டத்தை சாத்தியமானதாக மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. 454-கிலோமீட்டர் (CKU-R) ஆனது காஷ்கரை (Kashgar) ஓஷ் (Osh) மற்றும் ஆண்டிஜானுடன் (Andijan) இணைக்கும் மற்றும் இறுதியில் துர்க்மெனிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கியைக் கடந்து ஐரோப்பிய இரயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கும்.


சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே சீனாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர மற்றும் பொருளாதார நன்மையாக இருக்கும். இது முடிந்ததும், இந்தியா உட்பட எட்டு நாடுகளின் எல்லையில் உள்ள ஜின்ஜியாங், யூரேசியாவின் மையத்தில் உள்ள ஃபெர்கானா பள்ளத்தாக்குடன் இணைக்கப்படும். இந்த பள்ளத்தாக்கு மத்திய ஆசியா, டிரான்ஸ்-காஸ்பியன், தெற்காசியா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு ஒரு குறுக்குவழியாக செயல்படுகிறது. இந்த இரயில்வே மத்திய ஆசியா மற்றும் தெற்கு காகசஸில் (South Caucasus) சீனாவின் இருப்பை மேம்படுத்தும், நீண்ட ரஷ்ய பாதையைத் தவிர்த்து ஐரோப்பாவிற்கு அதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் மற்றும் பிராந்தியத்தை வணிக மையமாக மாற்றும்.


கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் மத்திய ஆசியா மீண்டும் அதன் முக்கிய பங்கை பெறும். முன்மொழியப்பட்ட டிரான்ஸ்-ஆப்கான் ரயில்வே மூலம் சீன ரயில்கள் இந்தியாவை நெருங்கும்.


இருப்பினும், CKU-R திட்டம் பல சவால்களை எதிர்கொள்கிறது. ஃபெர்கானா (Fergana) தீவிர சலாபி-ஜிஹாதி (Salafi-Jihadi) பயங்கரவாத குழுக்களின் கோட்டை என்பதை சீனா அறிந்திருக்கிறது. வல்லுநர்கள் இந்த நடைபாதையை இரட்டை முனைகள் கொண்ட வாளாகப் பார்க்கிறார்கள்.  மத்திய ஆசியாவின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைப்பதற்கு இது அவசியம், ஆனால் இது ரஷ்யாவிற்கு சட்டவிரோதமான பொருட்களை கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்ற அபாயத்தையும் கொண்டுள்ளது.


இப்பகுதி ஏற்கனவே சாம்பல்-சந்தை (grey zone trade) வர்த்தகத்திற்கு பெயர் பெற்றது. உக்ரைன் நெருக்கடிக்குப் பின்னர், மேற்கத்திய விநியோகஸ்தர்களிடமிருந்து கிர்கிஸ்தானுக்கான இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கு விரிவான கடத்தலைக் குறிக்கிறது.


கிர்கிஸ்தானில் அரசியல் மற்றும் நிதி சிக்கல்கள் இருப்பதால், சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே திட்டத்தில் தாமதம் ஏற்படுகிறது. பிஷ்கெக் (Bishkek) இரயில்வேயை விரும்புகிறது. ஆனால், அதன் பாதையின் ஒரு பகுதியை கட்டுவதற்கு தேவையான $4.7 பில்லியன் பணம் இல்லை. முதலீடுகளை ஈர்ப்பது சவாலானது. மேலும், கிர்கிஸ்தான் ஏற்கனவே சீனாவுக்கு $2 பில்லியன் கடன்பட்டிருப்பதால் கடனைப் பெறுவது இன்னும் கடினமாக உள்ளது, மேலும் அவர்கள் மேலும் கடனில் விழுவார்கள் என்று அஞ்சுகிறார்கள், இது அவர்களின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.


கிர்கிஸ்தான் சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே ஒரு ராஜதந்திர திட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. மேலும், மற்ற கட்சிகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கட்டுமான செலவுகளை ஈடுசெய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு வாதம் என்னவென்றால், போக்குவரத்து நாடான, கிர்கிஸ்தான், நிதிச் சுமையைத் தாங்க வேண்டியதில்லை. அடிப்படையில், அவர்கள் திட்டத்தை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு அவர்களே பணம் செலுத்த வேண்டியதில்லை.


இந்த திட்டம் "சீன விரிவாக்கத்துடன்"  இணைக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் பலருக்கு கவலையாக உள்ளது. சிர் (Syr) மற்றும் அமு தர்யா (Amu Darya) பகுதியை சீனா கடைசியாக 7 ஆம் நூற்றாண்டில் கட்டுப்படுத்தியது. சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே திட்டம் சீன குடியேற்றத்தை கொண்டு வரும் என்று கிர்கிஸ் மக்கள் கவலைப்படுகிறார்கள். இது அவர்களின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக கூட இருக்கலாம்.


திட்டத்திற்கு ஆதரவளிக்க சீனாவிடம் நிதி உள்ளது. ஆனால் அவர்களுக்கு அதற்கு ஈடாக ஏதாவது வேண்டும். கிர்கிஸ்தானின் மிகப்பெரிய இரும்புத் தாது மற்றும் தங்கச் சுரங்கத் தளமான (Zhetim Too) $50 பில்லியன் மதிப்புடையது. இது சீனா-கிர்கிஸ் எல்லைக்கு அருகில் உள்ள நரினில் அமைந்துள்ளது, மேலும் இது சீனா திசை திருப்ப விரும்பும் குறிப்பிடத்தக்க பனிப்பாறை நீர் பகுதியில் அமைந்துள்ளது.


கிர்கிஸ்தான் இந்த திட்டத்திற்க்கு ஒப்புக்கொள்ளத் தயாராகும் வரை சீனா காத்திருக்க முடியும். பெய்ஜிங்கில் 2023 பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி மன்றத்தில் "பரபரப்பான கால அட்டவணையை" மேற்கோள் காட்டி ஜனாதிபதி சடிர் ஜபரோவ் கலந்து கொள்ள விரும்பவில்லை. இருப்பினும், சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே திட்டத்தைப் பற்றி விவாதிக்க பிரீமியர் லீ கியாங் உடனடியாக பிஷ்கெக்கிற்குச் சென்றார்.


சீனா பொதுவாக கடனை தள்ளுபடி செய்வதில்லை. 2011 ஆம் ஆண்டில், தஜிகிஸ்தான் தனது கடன் காரணமாக 1,122 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு வழங்கியது.


சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே கட்டுமானம் 2024 இல் தொடங்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், உஸ்பெக் நிபுணர்கள் ஏற்கனவே கிர்கிஸ் மற்றும் சீன நிபுணர்களுடன் இணைந்து தொழில்நுட்ப அறிக்கைகளில் பணியாற்றியுள்ளனர். இருப்பினும், இந்த திட்டம் செயல்படுமா என்பது சிலருக்கு சந்தேகம்.


மத்திய ஆசிய புவிசார் அரசியல் சிக்கலானதாக இருக்கலாம். கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் மாஸ்கோவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன. உஸ்பெகிஸ்தான் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது மற்றும் தலிபான்களுடன் கூட ஈடுபட்டுள்ளது. தஜிகிஸ்தான் தலிபான் அரசாங்கத்தை ஏற்கவில்லை, ஆனால் அதன் எல்லை அபின் கடத்தலுக்கு பெயர் பெற்றது.


சீனா தனது ஒப்பந்த விதிமுறைகளை மாற்றியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை(Shanghai Cooperation Organisation (SCO)) நம்புவதற்குப் பதிலாக, அவர்கள் 5+1 வடிவமைப்பு மற்றும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (Belt and Road Initiative (BRI)) திட்டங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். கஜகஸ்தானுடனான சீனாவின் வர்த்தகம் 21.7 பில்லியன் டாலர்கள் ஆகும். இது, ரஷ்யாவின் 18.9 பில்லியன் டாலர்களை விட அதிகம். அதேபோன்று, உஸ்பெகிஸ்தானுடனான சீனாவின் வர்த்தகம் 12.23 பில்லியன் டாலராகவும், ரஷ்யாவின் வர்த்தகம் 8.86 பில்லியன் டாலராகவும் உள்ளது.


ரஷ்யாவின் மோதல் அணுகுமுறைக்கு மாறாக, சீன அரசியல்வாதிகள் மிகவும் நுட்பமான மற்றும் இராஜதந்திரமாக இருக்கிறார்கள்.


சீன ரயில்கள் 2022 இல் ஆப்கானிஸ்தானின் ஹைரட்டான் நகரத்தை அடைந்தன. ஹைரதானிலிருந்து காபூலுக்கும் பின்னர் பெஷாவர் வழியாக பாகிஸ்தானுக்கும் 753-கிலோமீட்டர் டிரான்ஸ்-ஆப்கான் இரயில்வேயை (TAR) அமைக்க உஸ்பெகிஸ்தான் விரும்புகிறது. இருப்பினும், இந்த திட்டம் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்கிறது.


ரஷ்யா இன்னும் சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வேக்கு வலுவாக பதிலளிக்கவில்லை. ஆனால், இது ரஷ்யாவை மையமாகக் கொண்ட வடக்கு-தெற்கு இணைப்புகளை சீனா தலைமையிலான கிழக்கு-மேற்கு நெட்வொர்க்குடன் மாற்றும் என்பதால் இது மாறக்கூடும்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில், காரகம் பாலைவனத்தில் உள்ள ரஷ்ய ரயில் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போட்டியில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இப்போது, சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இரயில்வே சீனாவுக்கு இமயமலையை விரிவுபடுத்தவும், இந்தியாவை அடையவும் உதவும்.


இந்தியாவின் சபஹார் இணைப்பு சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்தியா தனது நலன்களைப் பாதுகாத்து. அதிகார மாற்றங்களுக்கு மத்தியில் பிராந்திய விதிமுறைகளுடன் செயல்பட்டால், மத்திய ஆசியாவிற்கான நேரடி இரயில் பாதையை நிலத்தை விட்டுக் கொடுக்காமல் செய்ய முடியும்.


எழுத்தாளர் மத்திய ஆசியாவில் பணியாற்றிய முன்னாள் இராஜதந்திரி ஆவார்.




Original article:

Share:

நியாயமான சந்தைகளுக்கான இந்திய போட்டி ஆணையத்தின் உறுதிமொழி -ரவ்னீத் கவுர்

 75 ஆண்டுகால சுதந்திரத்தை நாம் கொண்டாடும் போது, இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) இந்தியாவின் பொருளாதாரப் பாதையை போட்டி நிறைந்த, உள்ளடக்கிய மற்றும் வலுவான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


அம்ரித் கால் (Amrit Kaal) விரைவான தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களைக் குறிக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தத் தொடர் இந்தக் காலகட்டத்தை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், இந்த சிக்கலான மாற்றங்களைக் கையாள்வதில் எங்களின் பங்கை விளக்க விரும்புகிறேன்.


சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு மூடிய பொருளாதாரத்திலிருந்து உலக சந்தையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. இப்போது, நாம் குறிப்பிடத்தக்க சவால்களையும் வாய்ப்புகளையும் எதிர்கொள்கிறோம். டிஜிட்டல் புரட்சி, புதிய வணிக மாதிரிகள் மற்றும் உலகளாவிய சந்தை இணைப்புகள் நமது தற்போதைய பொருளாதாரத்தை வடிவமைக்கின்றன. இந்த மாற்றங்கள் வாக்குறுதியை அளிக்கும் அதே வேளையில், நியாயமான போட்டியை உறுதிப்படுத்த மேற்பார்வை தேவைப்படும் புதிய சவால்களையும் அவை கொண்டு வருகின்றன.


நியாயமான போட்டியை ஊக்குவிப்பதிலும், நியாயமற்ற நடைமுறைகளைத் தடுப்பதிலும் இந்தியப் போட்டி ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இரண்டு அணுகுமுறைகள் மூலம் இதைச் செய்கிறோம்: அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் வக்காலத்து நடவடிக்கைகள். அமலாக்கச் செயல்கள் சாத்தியமான நியாயமற்ற நடைமுறைகளுக்குத் தகுந்த தண்டனைகள் மற்றும் தீர்வுகளை விதிப்பதன் மூலம் ஈடுபடுத்தப்படுகின்றன. சந்தைகளில் போட்டியை ஊக்குவிப்பதற்கும், போட்டி விதிகளைப் பின்பற்றுவதற்கு அவர்களை வழிநடத்துவதற்கும் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற நடவடிக்கைகள் உள்ளடக்குகின்றன.


போட்டிக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை நீக்குதல், போட்டியை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல், நுகர்வோர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பரந்த ஆணையை இந்தியப் போட்டி ஆணையம் கொண்டுள்ளது. வணிகங்களுக்கு இடையே உள்ள எந்தவொரு போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்களையும் நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்போம். இதில் கார்டெலைசேசன் (cartelisation), விலை நிர்ணயம் (price-fixing) மற்றும் ஏல மோசடி (bid-rigging) மற்றும் போட்டிக்கு தீங்கு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் அடங்கும். ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் விதத்திலும் நாங்கள் ஆய்வு செய்கிறோம். அநீதியான விலை நிர்ணயம், சந்தை அணுகலை மறுப்பது மற்றும் பிரத்தியேக ஒப்பந்தங்கள் போன்ற நடைமுறைகள் ஆரோக்கியமான போட்டி சூழலை பராமரிக்க ஆய்வு செய்யப்படுகின்றன.


நிறுவனங்கள் ஒன்றிணைக்கும் போது அல்லது ஒரு நிறுவனம் மற்றொன்றை வாங்கும் போது, அவை பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாறும். இது சில நேரங்களில் நுகர்வோருக்கு நல்லது.  ஏனெனில் இது செயல்திறன்களுக்கு வழிவகுக்கும், ஆனால் ஆபத்தும் உள்ளது. இந்த பெரிய நிறுவனங்கள் நியாயமற்ற விலைகளை நிர்ணயித்தல், நுகர்வோருக்கான தேர்வுகளை கட்டுப்படுத்துதல் அல்லது சிறிய போட்டியாளர்களின் இருப்பை கடினமாக்குதல் போன்ற தங்கள் சக்தியை தவறாக பயன்படுத்தக்கூடும்.


ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சில பெரிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தும் சந்தையை உருவாக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்தியப் போட்டி ஆணையம் (CCI) இந்த கார்ப்பரேட் நடவடிக்கைகளை கவனமாக ஆய்வு செய்கிறது. சந்தையை நியாயமானதாகவும் போட்டித்தன்மையுடனும் வைத்திருப்பதற்கு இந்த மேற்பார்வை முக்கியமானது. இது பொருளாதாரத்தின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானது. இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI) பங்கு சமநிலையை உருவாக்குவது, வணிகங்களை வளர அனுமதிப்பது, ஆனால் சந்தையில் நியாயமற்ற ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் செயல்களை நிறுத்துவது ஆகியவையாகும். 


போட்டியின் நன்மைகள் குறித்து பங்குதாரர்களுக்கு இந்தியப் போட்டி ஆணையம் (CCI) அறிவுறுத்துகிறது மற்றும் கேட்கப்படும் போது போட்டி தொடர்பான கொள்கைகள் பற்றிய கருத்துக்களை வழங்குகிறது. இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI) முக்கிய பங்கு நுகர்வோரைப் பாதுகாப்பதாகும். இதன் பொருள் நுகர்வோர் நியாயமான விலைகள், நல்ல தயாரிப்புகள் மற்றும் சந்தையில் நிறைய தேர்வுகள் கிடைப்பதை உறுதி செய்வதாகும். தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக சந்தை மாறும் போது, இந்திய சந்தையை நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதில் இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI) பங்கு மிகவும் முக்கியமானது.


வழக்குகளை விரைவாக தீர்க்க இந்தியப் போட்டி ஆணையம் (CCI) அதன் செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளது.  இது விசாரணை மற்றும் முடிவெடுக்கும் நேரத்தை குறைக்கிறது. இது சந்தையை சிறப்பாக செயல்பட வைப்பது மட்டுமல்லாமல், புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது முழு பொருளாதாரத்திற்கும் பயனளிக்கிறது.


ஒரு சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் பொருளாதாரம் (digital economy), சிறப்பு சவால்களைக் கொண்டுவருகிறது. இந்த பெரு நிறுவனங்கள், பெரிய வளங்கள் மற்றும் தரவு மீதான கட்டுப்பாட்டுடன், போட்டி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது நுகர்வோரை பாதிக்காமல் தடுப்பதில் இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI) கவனம் உள்ளது. நியாயமற்ற விலை நிர்ணயம், பிரத்தியேக ஒப்பந்தங்கள் மற்றும் போட்டியை நியாயமானதாக வைத்திருக்க தரவைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடைமுறைகளை நாங்கள் கவனிக்கிறோம்.


இந்தியப் போட்டி ஆணையம் (CCI) இந்த புதிய சவால்களை விதிகள், வாதிடுதல் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் சமாளிக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் நியாயமான போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்காக அதன் விதிகள் இன்னும் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய, தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளில் விரைவான மாற்றங்களை இது தொடர்கிறது. அனைவருக்கும் சந்தையை நியாயமானதாக வைத்திருக்கும் அதே வேளையில் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நெகிழ்வான அணுகுமுறை முக்கியமானது.


சந்தை மாறும் போது நமது விதிகளும் மாற வேண்டும். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எங்கள் விதிகளைப் புதுப்பிக்க உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் நாங்கள் பலருடன் பேசுகிறோம். அவர்கள் வலுவாக இருக்க வேண்டும், ஆனால் எதிர்கால சவால்களை கையாளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


இந்தியாவின் பொருளாதாரம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும். இந்தியப் போட்டி ஆணையம் (CCI) வளர்ச்சி மற்றும் நியாயமான போட்டியை சமநிலைப்படுத்த செயல்படுகிறது. பல விதிகள் புதுமையைத் தடுக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் மிகச் சிலவே சந்தையில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, சந்தையில் நியாயம் மற்றும் சுதந்திரத்தைப் பின்பற்றும் கவனமாக விதிகளை உருவாக்குகிறோம்.


நுகர்வோர்கள் எங்கள் முன்னுரிமை. நுகர்வோர் வெவ்வேறு விருப்பங்களிலிருந்து நல்ல விலையில் தேர்வு செய்யலாம் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். நியாயமற்ற போட்டியால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தியப் போட்டி ஆணையம் (CCI) உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மாறிவரும் பொருளாதாரத்தின் சவால்களைச் சமாளிப்பதற்கு குழு முயற்சி தேவை. இந்தியப் போட்டி ஆணையம் (CCI) மற்ற கட்டுப்பாட்டாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச குழுக்களுடன் இணைந்து நியாயமான விதிகளை உருவாக்குகிறது. இந்த குழுப்பணி அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், ஒன்றாகச் செயல்படும் விதிகளை உருவாக்கவும், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் உதவுகிறது.


முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியப் போட்டி ஆணையம் (CCI) எங்கள் விதிகளில் நெகிழ்வாகவும் விரைவாகவும் இருப்பதில் கவனம் செலுத்தும். சந்தையில் உள்ள சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து, போட்டியை வலுவாகவும் நியாயமாகவும் வைத்திருக்க விரைவாக பதிலளிக்க விரும்புகிறோம். நாங்கள் ஆராய்ச்சியிலும் முதலீடு செய்வோம், புதிய சந்தைகளைப் பற்றி அறிந்து கொள்வோம், மேலும் விதிகளை சிறப்பாகச் செயல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்.


இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. மேலும் போட்டி, கண்டுபிடிப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை முக்கியமான சந்தையை உருவாக்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (CCI) உறுதிபூண்டுள்ளது. 75 ஆண்டுகால சுதந்திரத்தை நாம் கொண்டாடும் போது, இந்தியாவின் பொருளாதாரத்தை நியாயமான, போட்டித்தன்மையுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டுவதாக இந்தியப் போட்டி ஆணையம் (CCI) உறுதியளிக்கிறது.


எழுத்தாளர் இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர்.




Original article:

Share:

2023ல் சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சரிந்தது ஏன்? - ரிஷிகா சிங்

 2016 முதல், மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate(TFR)) (ஒரு பெண் சராசரியாக, தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) சீனாவில் குறைந்து வருகிறது. 2023 இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இதன் தாக்கங்கள் கீழே, 


2023 ஆம் ஆண்டில் சீனாவில் 11.1 மில்லியன் இறப்புகள் மற்றும் 9 மில்லியன் பிறப்புகள் காணப்பட்டன. இந்த தரவு நாட்டின் மொத்த மக்கள்தொகை குறைந்துள்ள இரண்டாவது ஆண்டாகும். அதே ஆண்டில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியது. புதன்கிழமை ஜனவரி 17, வெளியிடப்பட்ட எண்ணிக்கையில், மொத்த மக்கள் தொகை 1.4 பில்லியனாக இருப்பதாக சீன அரசாங்கம் கூறியது. இந்த வீழ்ச்சியின் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் சீனாவிற்கு அதன் சாத்தியமான தாக்கம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.  


வீழ்ச்சியானது சமீபத்திய மக்கள்தொகை போக்குகளின் ஒரு பகுதியாகும்.


2016 முதல், சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate(TFR)) குறைந்து வருகிறது. மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை. மற்றொரு முக்கிய கருத்து மாற்று விகிதம் (replacement rate), இது எதிர்காலத்தில் தற்போதைய மக்கள்தொகையை பராமரிக்க தேவையான குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.


2020 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) ஒரு பெண்ணுக்கு 1.3 பிறப்புகள் ஆகும். இது 2010 மற்றும் 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 1.2 மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) விட சற்று அதிகமாகும் ஆனால் மாற்று விகிதமான (replacement rate) 2.1 ஐ விட மிகக் குறைவு.




சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சிக்கு ஒரு குழந்தை கொள்கைதான் (One-child policy) காரணமா?


1980 ஆம் ஆண்டில், சீனா ஒரு குழந்தை கொள்கையை (One-child policy) அறிமுகப்படுத்தியது. இது தம்பதிகள் ஒரே ஒரு குழந்தையைப் பெறுவது அல்லது அதற்கு மாற்றாக தண்டனையை எதிர்கொள்வது. இந்தக் கொள்கையானது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாகவும், 1949 முதல் ஆட்சியில் இருக்கும் ஒன்று, இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் முயற்சியில் இவ்வாறு மேற்கொண்டது.


பல ஆண்டுகளாக, சீன அரசாங்கம், மாவோ சேதுங் (Mao Zedong) ஜனாதிபதியாக இருந்தபோது, பிறப்பு கட்டுப்பாடு பற்றி விவாதித்தது, ஆனால் அதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில், அவர்களின் கவனமானது மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் (Great Leap Forward) (1958-62) என்ற பொருளாதாரத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கமாக கொண்டது. ஆனால் அதன் விளைவாக மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியால் இறந்தனர்.


1970களில், பிறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாமதமான திருமணங்களை ஊக்குவிப்பது, குழந்தை பிறப்பிற்கிடையே நீண்ட இடைவெளிகள் மற்றும் குறைவான குழந்தைகளை இலக்காகக் கொண்டது. இந்த நேரத்தில், சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) மிகவும் குறைந்துள்ளது.


இந்த பத்தாண்டுகளில், சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) குறைந்துள்ளது. உண்மையில், 1980 இல் அமல்படுத்தப்பட்ட கடுமையான கொள்கையின் அவசியத்தை மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். தனியுரிமை மற்றும் அரசாங்கத்தின் ஊடுருவல் பற்றிய கவலைகள் மட்டுமல்ல, முதலில் இந்த கடுமையான கொள்கைகள் தேவையா என்பது பற்றியும் கேள்வி எழுப்பினர்.


வலுவான பொருளாதார வளர்ச்சி (robust economic growth) மற்றும் தன்னார்வ குடும்பக் கட்டுப்பாடு (voluntary birth planning) முயற்சிகள் மூலம் அண்டை நாடுகளான கிழக்கு ஆசிய நாடுகள் கருவுறுதல் விகிதங்களில் கணிசமான குறைப்புகளை அடைந்து, சீனாவின் ஒரு குழந்தை கொள்கையால் (One-child policy) ஏற்படும் கடுமையான பிரச்சினைகளைத் தவிர்த்து, இது சீனாவை மோசமாகப் பிரதிபலிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் சமீபத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.


வேறு என்ன காரணிகள் பொறுப்பு?


2016 ஆம் ஆண்டில், சீனா ஒரு குழந்தை கொள்கையை (One-child policy) முடிவுக்குக் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதிக்கப்படுகிறது. 2021 இல், இந்த வரம்பு மூன்று குழந்தைகளாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த மாற்றங்கள் எதிர்பார்த்த மக்கள்தொகை வளர்ச்சியின் இலக்குகளை அடைய இது உதவவில்லை.


சீனா, அதன் அண்டை நாடுகளைப் போலவே, ஓரளவு படித்த மக்கள்தொகையால் இவர்களுக்கான சவால்களை எதிர்கொள்கிறது. பெண்களின் கல்வியும் வேலை வாய்ப்பும் குழந்தைகளைப் பெறுவது பற்றித் தேர்வு செய்யும் சுதந்திரத்தை வழங்குகிறது. வேலைப் போட்டி போன்ற நவீன சமூகத்தின் அழுத்தங்களும் குறிப்பிட்டுள்ள முக்கிய காரணியாகும்.


Associated Press அறிக்கையின்படி, மக்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள், சில சமயங்களில் குழந்தைகளைப் பெற வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள்.  அதிகப் போட்டி நிறைந்த கல்விச் சூழலில் நகரங்களில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கு அதிகச் செலவு இருப்பதால் பெரும்பாலும்  ஒரே ஒரு குழந்தையை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.


Financial Times இன் சமீபத்திய அறிக்கையில், “இது ஒரு தீய சுழற்சி. பொருளாதாரம் மந்தமாகும்போது, இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தாமதப்படுத்துகிறார்கள். கருவுறுதல் விகிதங்களில் இந்த வீழ்ச்சி இறுதியில் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன் விகிதங்களைக் குறைக்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. 



குறையக்கூடிய மக்கள் தொகை சீனாவை எவ்வாறு பாதிக்கலாம்?


மக்கள்தொகையில் ஏற்படும் இறப்புகளில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் 2024 இல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த போக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.


Associated Press அறிக்கையின்படி, உழைக்கும் வயது மக்கள் தொகை (15 முதல் 59 வயது வரை) மொத்த மக்கள் தொகையில் 61% ஆக குறைந்துள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், மேம்பட்ட சுகாதார அமைப்புகளின் விளைவாக காலப்போக்கில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.


குறுகிய காலத்தில், நோய்த்தடுப்பு சிகிச்சை உட்பட முதியோர் சிகிச்சையில் அதிக முதலீடுகள் தேவை. மேலும், அதிக மருத்துவ நிபுணர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களை பணியமர்த்த வேண்டிய போக்கு ஏற்படும். நீண்ட காலமாக, 'சார்ந்தவர்களை' (15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 59 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆதரிக்க இளம் மக்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருக்கும். அதே சமயம், 2000களில் எட்டிய உச்சநிலைக்கு இன்னும் செல்லாத நேரத்திலும் இது வருகிறது.


கடந்த அக்டோபரில் சீன அதிபர் ஜி ஜின்பிங், திருமணம், பெற்றோர் மற்றும் குடும்பம் குறித்த இளைஞர்களின் கருத்துகளுக்கு வழிகாட்டுதலை வலுப்படுத்துவதும், பெற்றோரை ஆதரிக்கும் கொள்கைகளை மேம்படுத்துவதும், மக்கள்தொகையின் முதுமையை தீவிரமாகச் சமாளிப்பதும் அவசியம் என்று கடந்த அக்டோபரில் கூறியதை Associated Press அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. "குடும்பப் பழக்கவழக்கங்களைப் பற்றி நாம் நல்ல கதைகளைச் சொல்ல வேண்டும், சீன தேசத்தின் பாரம்பரிய நற்பண்புகளை மேம்படுத்துவதிலும், நல்ல குடும்ப பழக்கவழக்கங்களை நிலைநிறுத்துவதிலும், குடும்ப நாகரீகத்தின் புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பெண்களுக்கு ஒரு தனித்துவமான பங்கை அளிக்க வழிகாட்ட வேண்டும்," என்று அவர் மேற்கோள் காட்டினார்.




Original article:

Share:

இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குதல் -ஹர்ஷ் வி. பண்ட், கார்த்திக் பொம்மகந்தி

 ராஜ்நாத் சிங்கின் இங்கிலாந்து பயணம், இரு நாடுகளும் கூட்டு கடற்படை பார்வைக்கான புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.


பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 22 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து சென்றார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட கடந்த சில வருடங்கள் புதிய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளன. சீனாவின் இராணுவ சக்தியின் வளர்ச்சி மற்றும் இந்தியப் பெருங்கடலில் அதன் இருப்பு, இந்தியாவை அச்சுறுத்துகிறது மற்றும் இங்கிலாந்திற்க்கு முக்கியமான கடல் தகவல் தொடர்புகள் (Sea Lines of Communications (SLOCs)) ஆகியவை ஆங்கிலேயர்களை தங்கள் இராஜதந்திர முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தன.


சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையுடன் (People’s Liberation Army Navy (PLAN)) ஒப்பிடுகையில், இந்திய கடற்படை அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளது. திரு.ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பயணத்தின் போது, முக்கிய தொழில்நுட்பங்களைப் பெறுவது செயல் திட்டத்தின் முக்கியமான பகுதியாக இருந்தது. சீனர்களுக்கு எதிராக இந்தியக் கடற்படையின் தொழில்நுட்ப இடைவெளிகளைக் குறைக்க உதவும் நிலையில் இங்கிலாந்து உள்ளது.


லண்டனுக்கும் புது தில்லிக்கும் இடையிலான ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க பகுதி விமானம் தாங்கி கப்பல்களுக்கான மின்சார உந்துவிசை துறையில் உள்ளது. தற்போது, இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள் மின்சார உந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. இதற்கு நேர்மாறாக, ராயல் நேவியின் குயின் எலிசபெத் கிளாஸ் விமானம் தாங்கிகள் மின்சார உந்துவிசையைப் பயன்படுத்துகின்றன, மேலும் ராயல் கடற்படை இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தேர்ச்சி பெற்றுள்ளது.


திரு.ராஜ்நாத் சிங்கின் வருகைக்கு முன்னதாக, மின்சார உந்துவிசை தொழில்நுட்பத்தைப் (electric propulsion technology) பெறுவதில் இந்திய கடற்படையின் ஆர்வம் குறித்து இந்திய மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்களுக்கு இடையே முதல்கட்ட விவாதங்கள் நடைபெற்றன. சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை, மின்சார உந்துதலுடன் தொடர்புடைய தொழில்நுட்ப தடைகளை சமாளிப்பதில் சவால்களை எதிர்கொண்டாலும், 054B வகை உட்பட அதன் போர்க்கப்பல்களில் மின்சார உந்துவிசையை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வளர்ந்து வருகின்றன. 


இந்திய கடற்படை செயலற்றதாக இருக்கக்கூடாது மற்றும் எதிர்காலத்தில் அதன் மேம்பட்ட மேற்பரப்பு போர்க் கப்பல்களுக்கு முக்கியமான கடல்சார் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் சீனக் கடற்படை குறிப்பிடத்தக்க நன்மையைப் பெறுவதைத் தடுக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போர்க்கப்பல்களில் மின்சார உந்துவிசையைப் பயன்படுத்துவதன் நன்மை குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பல்கள் அமைதியானவை. உந்துவிசை அமைப்பிலிருந்து பிரதான இயந்திரத்தை பிரிப்பதன் மூலம் இதை அடையமுடியும். கூடுதலாக, மின் உற்பத்தியை அதிகரிப்பதன் பலன் உள்ளது. இந்த கூடுதல் சக்தி போர்டில் உள்ள சிறிய அமைப்புகளை ஆதரிக்கிறது. இந்திய கடற்படையின் பெரிய போர்க்கப்பல்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


"இந்தியா-இங்கிலாந்து மின்சார உந்து திறன் கூட்டாண்மை" (India-UK electric propulsion capability partnership) என்று பெயரிடப்பட்ட ஒரு கூட்டு பணிக்குழுவை நிறுவுவது பிப்ரவரி 2023 இல் முதன்முதலில் சந்தித்தது. அதன் பிறகு ராயல் கடற்படை போர்க்கப்பலான HMS லான்காஸ்டரில் (HMS Lancaster) ஒரு பிரதிநிதி அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இது கடந்த மார்ச் மாதம் கொச்சிக்கு துறைமுக பயணத்தை மேற்கொண்டது. எதிர்காலத்தில் இந்தியக் கடற்படையின் முக்கிய மேற்பரப்புப் போர் வீரர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் கடல்சார் மின்சார உந்துவிசையில் ராயல் கடற்படையின் அனுபவத்தை மாற்றுவது குறித்து அடுத்த மாதம் விரிவான விவாதம் நடைபெறவுள்ளது.


நவம்பர் 2023இல், இந்தியா-இங்கிலாந்து இந்திய கடற்படையின் எதிர்கால போர்க்கப்பல்கள் மின்சார உந்துவிசை தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை விவாதிக்க மின்சார உந்து திறன் கூட்டாண்மை மீண்டும் சந்தித்தது. மின்சார உந்துவிசை அமைப்பை உருவாக்குவதற்கு தேவையான அத்தியாவசிய உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு பயிற்சி, உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கு இங்கிலாந்து உறுதிபூண்டுள்ளது.


 ஆரம்பத்தில், தொழில்நுட்பம் தரையிறங்கும் தளக் கப்பல்துறைகளில் (landing platform docks) சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் (missile destroyers) போன்ற மேற்பரப்பு கப்பல்களில் செயல்படுத்தப்படும், அவை 6,000 டன்களுக்கு மேல் இடமாற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா-இங்கிலாந்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருந்தாலும் பாதுகாப்பு உறவில், நீடித்த சவால்கள் உள்ளன. ஒரு முதன்மைக் கவலையானது மரபு சார்ந்த பிரச்சனைகளை உள்ளடக்கியது, குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான அதன் உறவுகளில் சமநிலையை ஏற்படுத்த லண்டனின் முயற்சி. வரலாற்று ரீதியாக, அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அரசாங்கங்கள் இரு நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை வழங்கியுள்ளன அல்லது ஆயுத ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளன.  இது துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் நோக்கங்கள் தொடர்பாக இந்தியாவில் விரக்தியை ஏற்படுத்தியது.


காலிஸ்தான் மற்றும் சீக்கிய பிரிவினைவாதம் போன்ற சிக்கலான விஷயங்கள் உறவைப் பாதிக்கலாம். எவ்வாறாயினும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு பெரிய கடற்படை சக்தியாக சீனாவின் தோற்றம் இராஜதந்திர யதார்த்தங்களை மாற்றியுள்ளது. இது இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதற்கு ஒரு வலுவான காரணத்தை உருவாக்குகிறது.


இரு நாடுகளும் ஏற்கனவே பல கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன, மேலும் ஆழமான பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான திட்டங்கள் உள்ளன. திரு. ராஜ்நாத் சிங்கின் வருகையின் போது, பிரிட்டிஷ் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் ஒரு கடலோரப் பதிலளிப்புக் குழுவையும் (littoral response group), ஒரு பிரத்யேக ஆம்பிபியஸ் போர்க் குழுவையும் (specialized amphibious warfare group), 2025 இல் ஒரு கேரியர் ஸ்டிரைக் குழுவையும் (carrier strike group) நிலைநிறுத்துவதற்கான தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வளர்ந்து வரும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.


திரு. ராஜ்நாத் சிங்கின் இங்கிலாந்து விஜயமானது, லண்டனின் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் சூயஸ் கால்வாயின் கிழக்கே உள்ள பகுதிகளில் நுழைவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றைக் குறிக்கிறது. 


ஹர்ஷ் வி. பந்த் மற்றும் கார்த்திக் பொம்மகாந்தி ஆகியோர் Observer Research Foundation (ORF) அமைப்பில் பணியாற்றுகிறார்கள். 




Original article:

Share:

சிறிய குடிமக்கள்: இந்தியாவின் கல்வி அமைப்பில் உள்ள இடைவெளிகள் பற்றி . . .

 இந்தியாவின் கல்வி முறை, அதிகரித்த சேர்க்கை இருந்தபோதிலும் தொடர்ந்து இடைவெளிகளை எதிர்கொள்கிறது. 


தொற்றுநோய் இந்தியாவின் குழந்தைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டு கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER) 2023) அடிப்படைகளுக்கு அப்பால் (Beyond Basics) என்ற தலைப்பில் சிவில் சமூக அமைப்பான பிரதம் (Pratham) நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பு, சில கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறது. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட கிராமப்புற மாணவர்களை மையமாகக் கொண்ட இந்த கணக்கெடுப்பில், அவர்களில் 50% க்கும் அதிகமானோர் அடிப்படைக் கணிதம் கூட தெரியவில்லை, 3 மற்றும் 4 ஆம் வகுப்பு கணிதத்தை கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.


இந்த கணக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக, 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் 34,745 மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணித திறன்களை மதிப்பீடு செய்தது. இந்த வயதிற்குட்பட்ட மாணவர்களில் சுமார் 25% பேர் 2 ஆம் வகுப்பு பாடத்தை கூட தங்கள் தாய்மொழியில் படிக்க முடியாது என்பதையும் இது கண்டறிந்துள்ளது. எண்கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்புத் திறனில் சிறுமியரை விட சிறுவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த சவால்கள் இருந்தபோதிலும், 14-18 வயதுடைய 86.8% மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இருப்பினும், வயதாகும்போது இடைவெளிகள் அதிகம் உள்ளன, 18 வயதுடையவர்களில் 32.6% பேர் பள்ளிக்குச் செல்லவில்லை, அதே சமயம் 14 வயதுடையவர்களில் 3.9% பேர் மட்டுமே பள்ளிக்குச் செல்லவில்லை.


பாடத் தேர்வுகளைப் பொறுத்தவரை, 11 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் மானுடவியலை தேர்வு செய்கிறார்கள். ஆண்களுடன் (36.3%) ஒப்பிடும்போது பெண்கள் அறிவியல் பாடத்தை (28.1%) தேர்வு செய்வது குறைவு, மேலும் 5.6% பேர் மட்டுமே தொழில் பயிற்சி தொடர்புடைய படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.


நாடு முழுவதும் 2018ல் 25%ஆக இருந்த குழந்தைகளின் தனிப்பட்ட கல்வி 2022ல் 30% ஆக அதிகரித்துள்ளது. கணக்கெடுக்கப்பட்ட இளைஞர்களில் ஏறக்குறைய 90% பேர் திறன்பேசிகளை (smartphone) வைத்திருக்கிறார்கள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரிகிறது, இருப்பினும் அவர்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இந்தப் போக்குகள் கல்வி அமைப்பில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக வாசிப்பு மற்றும் அடிப்படை கணித திறன்கள். தேசியக் கல்விக் கொள்கை 2020, 2025 ஆம் ஆண்டிற்குள் தொடக்கப் பள்ளியில் உலகளாவிய அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் நிபுன் பாரத் மிஷனின் (NIPUN Bharat Mission) கீழ் முயற்சிகளை மேற்கொண்டாலும், இந்தியாவின் பரந்த தன்மைக்கு இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளன.


சேர்க்கை அதிகரிப்பு ஒரு நேர்மறையான வளர்ச்சியாக இருந்தாலும், கட்டாய பள்ளி சுழற்சியை 8 ஆம் வகுப்பை முடித்த பிறகு மாணவர்களுக்கான வாய்ப்புகள் எப்போதும் நம்பிக்கைக்குரியதாக இல்லை. பெரும்பாலும் உயர்நிலை மட்டத்தில் இருக்கும் பாடத்திட்டத்தை சமாளிப்பதற்காக அவர்கள் சிரமப்படுகிறார்கள். 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் கல்விக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்திருந்தாலும், அதன் நோக்கத்தை முழுமையாக உணர்ந்து, சட்டத்தின் உண்மையான உணர்வில் ஒவ்வொரு குழந்தையும் அதிலிருந்து பயனடைவதை உறுதிசெய்வதற்கு இன்னும் பல இடைவெளிகள் உள்ளன.




Original article:

Share:

செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் காப்புரிமை பெற்ற தகவல் ஆதாரங்களை பயிற்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டுமா? -பி.ஜே. ஜார்ஜ்

 டிசம்பர் 27, 2023 அன்று, நியூயார்க் டைம்ஸ் OpenAI மற்றும் Microsoft காப்புரிமையை மீறியதாகக் கூறி வழக்கு தொடர்ந்தது. அனுமதி அல்லது கட்டணம் இல்லாமல் ChatGPTக்கு பயிற்சி அளிக்க OpenAI தனது ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் பயன்படுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது ChatGPT ஐ நியூயார்க் டைம்ஸ்க்கு போட்டியான தகவல் ஆதாரமாக மாற்றியுள்ளது. அதன் வணிகத்தை பாதிக்கிறது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் காப்புரிமை பெற்ற தகவல் ஆதாரங்களை பயிற்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்பது பற்றிய விவாதத்தில், அருள் ஜார்ஜ் ஸ்காரியா, சிசிலியா ஜினிட்டி ஆகியோர் பங்கேற்றனர்.  பி.ஜே. ஜார்ஜ் நடுவராக செயல்பட்டுள்ளார். அவர்களின் உரையாடலில் இருந்து சில திருத்தப்பட்ட பகுதிகள் இங்கே.


நியூயார்க் டைம்ஸ் vs. OpenAI வழக்கில், காப்புரிமை பெற்ற தகவல் ஆதாரங்களை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதோடு நியாயமான பயன்பாட்டுக் கோட்பாடு (fair use doctrine) எவ்வாறு தொடர்புடையது?


சிசிலியா ஜினிட்டி: அமெரிக்க  காப்புரிமைச் சட்டத்தின் (Copyright Act) 107வது பிரிவின்படி நியாயமான பயன்பாடு (fair use) நிர்வகிக்கப்படுகிறது என்று விளக்குகிறார். இது நான்கு விதமான சோதனையை உள்ளடக்கியது. இது கணிப்பது சவாலானது. OpenAI மற்றும் நியூயார்க் டைம்ஸ் இரண்டும் சரியான வாதங்களைக் கொண்டுள்ளன. முதலாவது, நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்விற்குள் செல்லும் முதல் காரணி பயன்பாட்டின் நோக்கம் மற்றும் தன்மை ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், OpenAI ஏன் தகவல் ஆதாரங்களை பயன்படுத்துகிறது. இரண்டாவது, காப்புரிமை பெற்ற படைப்பின் தன்மை, இது மிகவும் ஆக்கப்பூர்வமானதா? மூன்றாவது OpenAI எவ்வளவு தகவல்களை பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறது. நான்காவது, OpenAI இன் பயன்பாடு நியூயார்க் டைம்ஸின் அசல் படைப்பின் சந்தை மதிப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்கிறது. நியாயமான பயன்பாட்டிற்கு இந்த காரணிகளின் சமநிலை தேவைப்படுகிறது. OpenAI இன் வாதம் என்னவென்றால், அதன் பயன்பாடு மாற்றத்தக்கது, அதாவது நியூயார்க் டைம்ஸின் பயன்பாட்டை இது மாற்றாது. Google புத்தகங்கள், சிறுபடங்கள் அல்லது ஸ்கிராப்பிங் சம்பந்தப்பட்ட வழக்குகளை OpenAI குறிப்பிடும். அங்கு அவற்றை மாற்றாமல் படைப்புகளைப் பயன்படுத்துவது உருமாற்றம் மற்றும் நியாயமான பயன்பாடாகக் கருதப்படுகிறது.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா:  இது செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட ஒரு தனித்துவமான வழக்கு, மேலும் இரு தரப்பினரும் வலுவான வாதங்களைக் கொண்டுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் அதன் உள்ளடக்கத்தை நேரடியாக நகலெடுத்ததற்கான ஆதாரங்களைத் தயாரித்துள்ளது. நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வு (fair use analysis) மிகவும் சவாலானது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நியூயார்க் டைம்ஸ் கட்டுரையிலிருந்து செயற்கை நுண்ணறிவு ஒரு பகுதியை உருவாக்க குறிப்பிட்ட தூண்டுதல்கள் இருந்தால், நியூயார்க் டைம்ஸ்க்கு சந்தா செலுத்துவதற்கான மாற்றாக அது பார்க்க முடியுமா? இதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கான காப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது மீறலாகக் கருதப்படக்கூடாது. ஏனெனில் அது பரந்த நியாயமான பயன்பாட்டு விதிவிலக்கின் (fair use exception) கீழ் வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட வரம்புகள் ஏதுமின்றி, அமெரிக்க நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வு (U.S. fair use analysis) பரந்த அளவில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள நான்கு காரணிகள் அல்லது பிற தொடர்புடைய காரணிகள் மூலம் நீதிமன்றத்தை நம்ப வைக்க முடிந்தால், அதை நியாயமான பயன்பாடாக உபயோகிக்கலாம். இந்தியாவில், பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட விதிவிலக்குகளுடன் நியாயமான விதிவிலக்கு மேற்கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக, உரை மற்றும் தரவுச் செயலாக்கத்திற்கு (text and data mining) ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கு இல்லை. எனவே, இந்தியாவில் இதேபோன்ற வழக்கு எழுந்தால், நியாயமான கையாளுதலின் கீழ் மட்டுமே பயிற்சி நியாயப்படுத்தப்படும். இந்த வழக்கில், நீதிமன்றம் பயிற்சிக்கு இடமளிக்கும் பட்டியலிடப்பட்ட நோக்கங்களின் தாராளமான விளக்கம் சிறந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக, கனடா போன்ற பிற நாடுகளில் இருந்து நீதிமன்றங்கள் இதேபோன்ற நியாயமான கையாளுதல் விதிகளுக்கு தாராளவாத அணுகுமுறையை எடுத்துள்ளன.


சிசிலியா ஜினிட்டி:  ஜார்ஜ் வாஷிங்டனின் எழுத்துக்களை நகலெடுப்பது தொடர்பான வழக்கு 1841 ஆம் ஆண்டிலிருந்து நியாயமான பயன்பாடு (Fair use) பற்றிய கருத்து. ’ஒரு வாழ்க்கை’ வரலாற்றாசிரியர் வாஷிங்டனின் ஆவணங்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தார். மேலும் ஒருவர் 353 பக்கங்களை நகலெடுத்தார். இன்றும் நாம் பயன்படுத்தும் சமநிலை சோதனையை (balancing test) நீதிமன்றம் கொண்டு வந்தது. 1984 ஆம் ஆண்டில், பீட்டாமேக்ஸ் வீடியோ டேப் ரெக்கார்டிங் டெக்னாலஜி (BetaMax video tape recording technology (VCR)) மற்றும் உலகளாவிய கலைக்கூடத்தை (Universal Studios) உருவாக்கிய சோனி சம்பந்தப்பட்ட வழக்கு இருந்தது. உலகளாவிய கலைக்கூடம் (Universal Studios) இந்த தொழில்நுட்பத்தை காப்புரிமை மீறலுக்குப் பயன்படுத்தலாம் என்று வாதிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இது நேரத்தை மாற்றுதல் போன்ற மீறல் இல்லாத பயன்பாடுகளைக் கண்டறிந்தது.  காப்புரிமைச் சிக்கல்களை நிர்வகிக்க இணைய தளங்களுக்கு உதவும் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமைச் சட்டம் (Digital Millennium Copyright Act) போன்ற சட்டமியற்றும் தீர்வும் இருக்கலாம்.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: சிசிலியா ஜினிட்டி, நியூயார்க் டைம்ஸ் வழக்கில், நியூயார்க் டைம்ஸால் வைக்கப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் (digital protection measures) செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டபோது, அவை மீறப்பட்டன என்பது சுவாரஸ்யமான கூற்றுகளில் ஒன்றாகும். அமெரிக்காவில் நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வில் (fair use analysis) இது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


சிசிலியா ஜினிட்டி: காப்புரிமைதாரரின் உரிமைகளில் ஒன்று, நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வின் (fair use analysis) உள்ளடக்கம் எவ்வாறு காட்டப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துவது. இவற்றில் உரிமைத் தகவலை அகற்றுவது மற்றொரு சிக்கலாகும், ஆனால் அது நியாயமான பயன்பாடாகக் கருதப்பட்டால், அது காப்புரிமை மீறலும் அல்ல, எந்தக் உரிமைக்கோரிக்கையும் இல்லை. மேலும், நியாயமான பயன்பாடு என்பது குற்றத்திற்கு எதிரான தற்காப்பு அல்ல, ஏனெனில் காப்புரிமை இவற்றின் பயன்பாட்டை உள்ளடக்காது.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: இந்தியாவில், உரை மற்றும் தரவுச் செயலாக்கம் (text and data mining) தொடர்பான வழக்குகள் எதையும் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஒன்று இருந்தால், அது காப்புரிமைச் சட்டத்தின் (Copyright Act) பிரிவு 52 (1a) இல் வழங்கப்பட்ட நியாயமான நடத்தைக்கான விதிவிலக்கின் (fair dealing exception) கீழ் வரும். நியாயமான பகுப்பாய்விற்கான சட்டத்தில் மூன்று வகை பயனர்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளனர். இருப்பினும், கனடா போன்ற பிற நாடுகளில் உள்ள பல அறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்கள், குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு நீதிமன்றங்கள் தளர்வான அணுகுமுறையை எடுக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. பயிற்சி தொடர்பான மீறல்களுக்கான உரிமைகோரல்கள் வரும்போது, நீதிமன்றத்தில் ஒரு வலுவான வாதம் அது பரந்த ஆராய்ச்சி நோக்கத்தின் கீழ் வருகிறது. பயிற்சி நோக்கங்களுக்காக காப்புரிமை பெற்ற பொருட்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க விரும்பினால், காப்புரிமைச் சட்டத்தில் உரை மற்றும் தரவுச் செயலாக்க (text and data mining) விதிவிலக்கைச் சேர்ப்பது அல்லது நியாயமான நடத்தைக்கான விதிவிலக்கை (fair dealing exception) நியாயமான பயன்பாட்டு விதிவிலக்காக (fair use exception) மாற்றுவது பற்றி இந்தியா பரிசீலிக்க வேண்டும்.  குறிப்பாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நிவர்த்தி செய்ய, நியாயமான நடத்தைக்கான விதிவிலக்கைப் (fair dealing exception) பின்பற்றிய சில அதிகார வரம்புகள் ஏற்கனவே அதை நியாயமான பயன்பாட்டு விதிவிலக்காக (fair use exception) மாற்றியுள்ளன.


செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை பற்றிய சட்டம் என்ன?


சிசிலியா ஜினிட்டி: அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகம் (Copyright Office), செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை காப்புரிமை பெற முடியாது என்று கூறியுள்ளது. முன்னுதாரணங்கள் ஒரு மனிதனின் தேவையைப் பற்றி பேசுவதால் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியான வழக்கு ஒரு குரங்கைப் பற்றியது. இந்தோனேசியாவில் ஒரு குரங்கு செல்ஃபி (selfies) எடுப்பது ஒரு சுவாரஸ்யமான முன்னுதாரணமாகும். இதன் விளைவாக காப்புரிமைக்கான சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில், அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, காப்புரிமைச் சட்டத்திற்கு அடையாளம் காணக்கூடிய ஆசிரியர் தேவைப்படுவதால், புகைப்படக் கலைஞரோ அல்லது குரங்கோ காப்புரிமை கோர முடியாது. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (generative AI) விஷயத்தில், ஆசிரியர் யார் என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக, நீங்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு பகுதியைத் திருத்தச் சொன்னால், பின்னர் நீங்கள் திருத்தங்களைச் செய்தால், நான் எந்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக ஆசிரியராக இருக்கிறேன்? இவை சவாலான கேள்விகள், தற்போது, முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் காப்புரிமைப் பாதுகாப்பைப் பெறாது என்று காப்புரிமை அலுவலகம் (Copyright Office) சுட்டிக்காட்டியுள்ளது.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: இந்திய காப்புரிமை அலுவலகத்துடன் (Indian Copyright Office) நிலைமையை விவாதிக்கலாம். ஆரம்பத்தில், செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய ஓவியத்தின் காப்புரிமைக்கான விண்ணப்பத்தை அவர்கள் நிராகரித்தனர். பின்னர், ஒரு மனிதனுக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான ஒத்துழைப்பாக விண்ணப்பம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டபோது, அது சரியான மறுபரிசீலனையின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால், காப்புரிமையை திரும்பப் பெறுவதாக காப்புரிமை அலுவலகம் (Copyright Office) அறிவித்தது. இருப்பினும், அது இன்னும் நிலுவையில் இருப்பதாக சமீபத்திய பதிவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் 1957 இன் காப்புரிமைச் சட்டத்தின்படி (Copyright Act), மனிதரல்லாத நிறுவனங்களுக்கு காப்புரிமைப் பாதுகாப்பை வழங்க முடியாது. இதற்கு நேர்மாறாக, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதா மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விண்ணப்பதாரர்கள் வெளிப்படுத்த வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் (U.S. Copyright Office) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்றைய சூழலில் இத்தகைய வெளிப்பாடு என்பது முக்கியமானது ஆகும்.


செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சி அல்லது செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்ட படைப்புகள் மற்றும் காப்புரிமையைச் சுற்றி உருவாகும் சூழ்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


சிசிலியா ஜினிட்டி: நாப்ஸ்டர் (Napster-பிரபலமான இசை பகிர்வு தளம்) மற்றும் பியர்-டு-பியர் (peer-to-peer) ஆவணப் பகிர்வு தோன்றியபோது, இணையதளத்தில் இசையை வாங்குவதற்கான சந்தை தீர்வு இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. iTunes ஆனது, இணையவழி பாடல்களை வாங்குவதற்கு அனுமதித்தது. இது Spotify மற்றும் Amazon Music போன்ற சேவைகளுக்கும் வழி வகுத்தது. புதுமையான படைப்புகளுக்கு இதேப்போன்ற சந்தை அடிப்படையிலான தீர்வு வெளிப்படும். அங்கு கலைஞர்களின் காப்புரிமை பெற்று ரசிகர்களின் கலை அல்லது பிற படைப்புகளை ஊக்குவிக்கும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: இந்தியா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாக காப்புரிமை பெற்ற பொருளின் உரிமையை தவறவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். படைப்பாற்றலை மேம்படுத்துவதே காப்புரிமையின் முக்கிய நோக்கம் என்பதை நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும், பயிற்சி நோக்கங்களுக்காக காப்புரிமை பெற்ற பொருளைப் பயன்படுத்துவது பொதுவாக நியாயமான பயன்பாடாகக் கருதப்பட வேண்டும். இருப்பினும், திறந்த செயற்கை நுண்ணறிவு அல்லது வேறு எந்த நிறுவனமும் காப்புரிமை பெற்ற பொருளைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தினால், செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு காப்புரிமைப் பாதுகாப்பை அவர்கள் நாடக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.


Original article:

Share: