PM SVANIdhi கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கம் என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் 2020-ல் தொடங்கப்பட்டது.


புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டமானது, கடன் வழங்கும் காலத்தை டிசம்பர் 31, 2024 முதல் மார்ச் 31, 2030 வரை நீட்டித்தது. இந்த நீட்டிப்பு 1.15 கோடி பயனாளிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 50 லட்சம் பேர் புதிய பயனாளிகளாக இருப்பார்கள் என்று அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.


அறிக்கையின்படி, கடனின் முதல் தவணை ரூ.10,000-லிருந்து ரூ.15,000 ஆகவும், இரண்டாவது தவணை ரூ.20,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்தப்பட்டதாகவும், மூன்றாவது தவணை ரூ.50,000 ஆகவும் உள்ளது. இந்தத் திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறையுடன் இணைந்து செயல்படுத்தும்.


இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.7,332 கோடியாக இருக்கும். ஜூலை ஜூலை 30-ம் தேதி நிலவரப்படி, 68 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.13,797 கோடி மதிப்பிலான 96 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள் முதல் தவணையை செலுத்தியவுடன், அவர்கள் இரண்டாவது தவணைக்கு தகுதியுடையவர்கள் மற்றும் அதேபோல, இரண்டாவது தவணை திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, அவர்கள் மூன்றாவது தவணையைப் பெறலாம்.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட திட்டம், விற்பனையாளர்களுக்கு சலுகைகளையும் வழங்குகிறது. இதில், சில்லறை மற்றும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக அவர்கள் ரூ.1,600 வரை பணம் திரும்பப் பெறலாம் (Cashback).


உங்களுக்கு தெரியுமா? 


இந்தியாவில் 50-60 லட்சம் தெருவோர வியாபாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் காணப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பொதுவாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 10-12 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.


நிரந்தரக் கடை இல்லாத எவரும் தெருவோர வியாபாரியாகக் கருதப்படுவார்கள். அரசாங்க மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த (விவசாயம் அல்லாத) நகர்ப்புற முறைசாரா வேலைவாய்ப்பில் 14 சதவீதம் தெருவோர வியாபாரம் செய்பவர்கள் ஆவர்.


தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014 (Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act) பொது இடங்களில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இந்த மசோதா, மக்களவையில் செப்டம்பர் 6, 2012 அன்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்ஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.


எந்தவொரு பொது இடத்திலோ அல்லது தனியார் பகுதியிலோ, தற்காலிகமாக கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பில் இருந்து அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதன் மூலம், அன்றாட உபயோகம் அல்லது பொது மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் "தெரு வியாபாரி" (street vendor) என சட்டம் வரையறுக்கிறது.


சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. NASVI-ன் கூற்றுப்படி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர, நகர விற்பனைக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. மேலும், தெரு வியாபாரிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை தொடர்கிறது.


உலகளாவிய தெற்கில், தெரு வியாபாரம் பாலினம் மற்றும் சாதி-வர்க்க காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெரு உணவு விற்பனையாளர்களில் பெண்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெரு உணவுக் கடைகளில் சுமார் 70–80% அவர்களால் நடத்தப்படுகின்றன.


மேலும், 2010-ம் ஆண்டு டெல்லியில் தெருவோர குழந்தைகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், நகரத்தில் சுமார் 51,000 தெருக் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் தெருவில் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள். இவர்களில் 36% தலித்துகள் மற்றும் 17% ஆதிவாசிகள் ஆவர்.

 

Original article:

Share:

மேக வெடிப்புகள் (cloudburst) என்றால் என்ன? மேக வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றனவா? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


செவ்வாய்கிழமை பிற்பகலில் கோவிலுக்குச் செல்லும் வழியில், ஏற்பட்ட மேக வெடிப்பைத் தொடர்ந்து அத்குன்வாரி அருகே முப்பத்தி நான்கு பேர் இறந்தனர். அதே நேரத்தில், அதிகாலையில் மலைப்பாங்கான தோடா மாவட்டத்தில் நான்கு பேர் மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் அவர்களின் இறப்புகள் ஏற்பட்டன.


காயம் அடைந்த 13 பயணிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்க கத்ராவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற ஜம்மு & காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “மேக வெடிப்பு ஏற்பட்டு, அதில் அர்த்குவாரியில் பக்தர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்" என்று அவர் கூறினார். இது இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரிடர் என்றும், இதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார். "அவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.


கோவிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை காலை முதல் ஹிம்கோட்டி மலையேற்றப் பாதையில் பயணம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மதியம் 1:30 மணி வரை பழைய பாதையில் அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.


24 மணி நேரத்தில், ஜம்முவில் செவ்வாய்க்கிழமை 380 மிமீ மழை பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 1910-ம் ஆண்டு முதல் 24 மணிநேரத்தில் ஜம்முவில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதற்கு முன் செப்டம்பர் 25, 1988-ல் 270.4 மி.மீ மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு தெரியுமா? 


மேக வெடிப்பு என்பது உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆனால் மிகவும் தீவிரமான மழைப்பொழிவு ஆகும். இது ஒரு சிறிய பகுதியில் நடைபெறும் ஒரு குறுகியகால தீவிர மழைப்பொழிவைக் குறிக்கிறது. சில நேரங்களில் புரிந்து கொள்ளப்படுவது போல், ஒரு மேகம் உடைந்து பெரிய அளவிலான நீரை வெளியேற்றுவது அல்ல. மேக வெடிப்புகளுக்கு மிகவும் குறிப்பிட்ட வரையறை உள்ளது.


இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) மேக வெடிப்பு என்பது, சுமார் 20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவு பகுதியில் மணிக்கு 100மிமீ (அல்லது 10 செமீ)க்கு மேல் எதிர்பாராத மழைப்பொழிவு என வரையறுக்கிறது. இது போன்ற கனமழை கணிசமான அளவில் மழை வெள்ளத்தை ஏற்படுத்தலாம்.


அடிப்படையில், மேக வெடிப்புகளின் அனைத்து நிகழ்வுகளும் குறுகிய காலத்தில் அதிக மழையை உள்ளடக்கியது. ஆனால், குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் அனைத்து நிகழ்வுகளும் இந்த அளவுகோலுக்கு பொருந்தவில்லை என்றால் மேக வெடிப்புகள் அல்ல.



Original article:

Share:

மின்கல மின்சார வாகனங்கள் (Battery Electric Vehicles (BEV)) - குஷ்பு குமாரி

 சமீபத்தில், மாருதி சுசுகியின் முதல் உலகளாவிய உத்தி மின்கல மின்சார வாகனமான 'e VITARA'-வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். BEVகள் என்றால் என்ன? மேலும், மற்ற வகையான மின்சார வாகனங்கள் (EV) யாவை?


தற்போதைய நிகழ்வு : 


ஆகஸ்ட் 26 அன்று, அகமதாபாத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டார் ஆலையில், மாருதி சுஸுகியின் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மின்கல மின்சார வாகனமான “'e VITARA' வை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த BEV-கள் ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற மேம்பட்ட சந்தைகளுக்குக்கூட ஏற்றுமதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


குஜராத்தில் உள்ள TDS லித்தியம்-அயன் மின்கல ஆலையில், கலப்பின மின்கல மின்முனைகளின் (hybrid battery electrodes) உள்ளூர் உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம் இந்தியாவின் மின்கல சுற்றுச்சூழல் அமைப்பின் அடுத்த கட்டத்தையும் அவர் திறந்து வைத்தார். தோஷிபா, டென்சோ மற்றும் சுஸுகியின் கூட்டு முயற்சியான இந்த ஆலை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுத்தமான எரிசக்தி கண்டுபிடிப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மின்கல மதிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.


முக்கிய அம்சங்கள் :


1. மாருதி சுசுகி தனது மின்சார வாகனத்தின் (EV) வணிக உற்பத்தியை ஆகஸ்ட் 26 அன்று தொடங்கும். இந்த உற்பத்தி அகமதாபாத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள அதன் ஆலையில் நடைபெறும். இந்த ஆலை இந்தியாவின் முதல் கதி சக்தி மல்டிமோடல் சரக்கு முனையமாகும். இந்த முனையம் கார்களை கொண்டு செல்வதற்கு உதவும் ஒரு ரயில்வே பாதையும் ஆகும்.


2. குறிப்பாக, 2030-ஆம் ஆண்டுக்குள் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் 80 சதவீதத்தையும், பேருந்துகளில் 40 சதவீதத்தையும், தனியார் கார்களில் 30 சதவீதத்தையும் மின்சாரத்தில் இயக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. இதற்காக, 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மின்சார வாகனங்களுக்கு சக்தி அளிக்கும் லித்தியம்-அயன் மின்கலகளை (lithium-ion batteries) உருவாக்கும் பல்வேறு பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கை உள்நாட்டு மின்கல உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு உந்துதலாகும்.


3. முக்கியமாக, இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஒரு புதிய ஆய்வு வெளியிடப்பட்டது. இது IIT ரூர்க்கி மற்றும் சர்வதேச தூய்மை போக்குவரத்து குழுமம் (International Council on Clean Transportation (ICCT)) ஆகியவற்றால் நடத்தப்பட்டது. இந்தியாவில் மின்கல மின்சார வாகனங்கள் (BEV) பயணிகள் கார்கள் பிரிவில் உள்ள உள்-எரிப்பு இயந்திர வாகனங்களை (internal combustion engine vehicles (ICEV)) விட ஒரு கிலோமீட்டருக்கு 38% குறைவான கார்பன்-டை-ஆக்சைடுக்கு சமமான (CO2e) வெளியிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மின் கட்டமைப்பு தூய்மையானதாக மாறினால், உமிழ்வு சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு கூறியுள்ளது.


4. e-AMRIT போர்ட்டலின் படி, நான்கு வகையான மின்சார வாகனங்கள் உள்ளன.


(i) மின்கல மின்சார வாகனம் (BEV) : இது உள்-எரிப்பு இயந்திரத்தை (ICE) வாகனங்களுக்குப் பதிலாக லித்தியம்-அயன் மின்கல (Li-ion battery) மூலம் முழுமையாக மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. கலப்பின மற்றும் பிளக்-இன் கலப்பின வாகனங்களுடன் (plug-in hybrid vehicles) ஒப்பிடும்போது இது மிகவும் திறமையானது.


(ii) ப்ளக்-இன் கலப்பின மின்சார வாகனம் (Plug-in Hybrid Electric Vehicle (PHEV)) : இந்த வாகனங்கள் உள்-எரிப்பு இயந்திரம் (internal combustion engine) மற்றும் மின்கல இரண்டையும் பயன்படுத்துகிறது. வாகனத்தில் ஒரு பிளக் இருப்பதால், மின்கல வெளிப்புற மின்பொருத்தியில் இருந்து மின்னேற்றம் செய்யப்படுகிறது. வாகனத்தின் மின்கல எந்திரத்தை விட மின்சாரத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. இது கலப்பின மின்சார வாகனங்களை (HEVs) விட அதிக திறன் கொண்டது. ஆனால், மின்கல மின்சார வாகனங்களை (BEVs) விட குறைவான திறன் கொண்டது.


(iii) கலப்பின மின்சார வாகனம் (Hybrid Electric Vehicle (HEV)) : இந்த வாகனம் உள் எரிப்பு இயந்திரம் (பொதுவாக பெட்ரோல்) மற்றும் மின்கலத்தில் இயங்கும் மோட்டார் இரண்டையும் பயன்படுத்துகிறது. பெட்ரோல் இயந்திரம் வாகனத்தை இயக்குகிறது மற்றும் அது காலியாக இருக்கும்போது மின்கலத்தை சார்ஜ் செய்கிறது. இந்த வாகனங்கள் முழு மின்சார வாகனம் அல்லது பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் போல் திறமையானவை அல்ல.


(iv) எரிபொருள் செல் மின்சார வாகனம் (Fuel Cell Electric Vehicle (FCEV)) : இது மின் ஆற்றலை உருவாக்க இரசாயன ஆற்றலைப் பயன்படுத்துகிறது. ஹைட்ரஜன் FCEV ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த செயல்பாட்டில் வெப்பம் மற்றும் தண்ணீரை மட்டுமே உற்பத்தி செய்கிறது. அவை முழுவதுமாக மின்சாரத்தால் இயக்கப்படுவதால், FCVகள் EVS-ஆகக் கருதப்படுகின்றன. ஆனால் மின்கல மின்சார வாகனங்கள் (BEVகள்) போலல்லாமல், அவற்றின் ஓட்டுநர் வரம்பு சாதாரண கார்கள் மற்றும் லாரிகளைப் போன்றது. அவற்றின் எரிபொருள் நிரப்பும் செயல்முறையும் வழக்கமான வாகனங்களைப் போன்றது.


5. மின்சார வாகனத்தை (EV) ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் முக்கியமான திட்டங்கள்,


(a) ​​புதுமையான வாகன மேம்பாட்டில் PM Electric Drive Revolution (PM E-Drive) : இது 2024-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இது மார்ச் 2024-ல் முடிவடைந்த மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல் (FAME) கொள்கை போன்ற முந்தைய முதன்மை முயற்சிகளை மாற்றியது. இது மூன்று மாதங்கள் நீடித்து செப்டம்பர் 30, 2024-ல் முடிவடைந்த மின்சார இயக்க ஊக்குவிப்புத் திட்டத்தையும் (Electric Mobility Promotion Scheme (EMPS)) மாற்றியது. இந்தத் திட்டம் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முன்கூட்டியே சலுகைகளை வழங்குகிறது. இது முக்கியமான EV மின்னேற்ற உள்கட்டமைப்பை நிறுவுவதையும் ஆதரிக்கிறது.


(b) e-AMRIT : இது கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்ட EVகள் பற்றிய ஒரு இணைய தளமாகும். இந்த தளத்தை NITI ஆயோக் உருவாக்கியது. இந்த தளம் EV ஏற்றுக்கொள்ளுதல், கொள்முதல், முதலீட்டு வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் மானியங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.


(c) இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உபகரணத் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (PLI-Auto) : ஏப்ரல் 2020-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, PLI திட்டம் தற்போது 14 துறைகளை உள்ளடக்கியது. குறைந்த பட்சம் 50% உள்நாட்டு மதிப்பு கூட்டல் (Domestic Value Addition (DVA)) கொண்ட மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்ப (Advanced Automotive Technology (AAT)) தயாரிப்புகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வாகன உற்பத்தி மதிப்பு சங்கிலியில் முதலீடுகளை ஈர்க்கவும் இது நிதிச் சலுகைகளை வழங்குகிறது.


(d) PM e-Bus Sewa-Payment Security Mechanism (PSM) திட்டம் : கடந்த ஆண்டு ரூ.3,435.33 கோடி, பொதுப் போக்குவரத்து அதிகாரிகளால் (Public Transport Authorities (PTA)) மின்சார-பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கானது. இந்தத் திட்டம் நாட்டில் 38,000க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு உதவும்.


சோடியம்-அயன் (Na-ion) மின்கலம்


1. சமீபத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research (JNCASR)) ஆராய்ச்சிக் குழு, கடந்த ஆறு நிமிடங்களுக்கு மேல் 80 சதவீதம் மின்னேற்றம் செய்யும் சோடியம்-அயன் (Na-ion) மின்கலத்தை உருவாக்கியுள்ளது.


2. லித்தியம்-அயன் வேதியியலுக்கு மாற்றாக இந்தியா எடுக்கும் முயற்சிகளில் இது ஒரு நம்பிக்கைக்குரிய படியாகும். மின்கல உற்பத்தியில் லித்தியம்-அயன் மிகவும் பொதுவான தனிமம். இந்தத் துறையின் மீது சீனா கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மறுபுறம், சோடியம் லித்தியத்தைவிட மிக அதிகமாக உள்ளது. இது கடல் நீரிலிருந்தும் குறைந்த விலையில் பிரித்தெடுக்கப்படலாம். இருப்பினும், லித்தியம் ஒரு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.


3. புதிய மின்கலமானது ‘NASICON-type’ (Na-Super-Ionic Conductor) வேதியியலை அடிப்படையாகக் கொண்டது. இது எலக்ட்ரோகெமிக்கல் பொருட்களில் (electrochemical applications) அறியப்பட்ட கட்டமைப்பைக் கொண்ட பாலியானோனிக் பொருட்களின் (polyanionic materials) வகுப்பாகும்.



Original article:

Share:

டிரம்பின் வரிவிதிப்பு ஒரு மீறல் மற்றும் இந்தியாவிற்கான ஒரு படிப்பினை -ஜெயந்த் தாஸ்குப்தா

 அமெரிக்க வரிகள் உலக வர்த்தக அமைப்பின் கீழ் அதன் உறுதிமொழிகளை மீறுகின்றன. இந்தியா அதன் ஏற்றுமதிகளையும், அவற்றுக்கான சந்தைகளையும் பன்முகப்படுத்த வேண்டும்.


ஆகஸ்ட் 27 முதல் இந்திய தயாரிப்புகளுக்கு (சில விதிவிலக்குகளுடன்) கூடுதலாக 25 சதவீத "இரண்டாம் நிலை வரியை" அமெரிக்கா விதித்துள்ளது. இது ஆகஸ்ட் 7 முதல் ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத "பரஸ்பர வரிக்கு" கூடுதலாக வருகிறது. இருப்பினும், மருந்துகள், குறைக்கடத்திகள், மொபைல் போன்கள், மரப் பொருள்கள் மற்றும் சில இரசாயனங்கள் இப்போதைக்கு விலக்கப்பட்டுள்ளன.


பிப்ரவரி 13 அன்று வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய சந்திப்பிற்குப் பிறகு, இரு நாடுகளும் 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு பொருட்கள் வர்த்தகத்தை $500 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை அறிவித்தன. இரண்டு பகுதி வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கவிருந்தன. தனது உறுதிப்பாட்டைக் காட்ட, சொகுசு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீதான வரிகளை இந்தியா விரைவாகக் குறைத்தது. முந்தைய அமெரிக்க நிர்வாகங்கள் எதிர்த்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான சமநிலை வரியையும் அது திரும்பப் பெற்றது.


டிரம்பின் பத்திரிகை அறிக்கைகளிலிருந்து, இந்தியா பல்வேறு பொருட்களுக்கு மிகக் குறைந்த அல்லது கிட்டத்தட்ட பூஜ்ஜிய வரிகளை வழங்கியதாகத் தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறை பொருட்கள் மற்றும் சில விவசாய பொருட்கள் அடங்கும். உலகளாவிய வர்த்தகத்தில், தொழில்துறை பொருட்கள் சுமார் 90% ஆகும். இதில் வேளாண் பொருட்கள் சுமார் 10% மட்டுமே உள்ளது. எனவே, இந்தியாவின் சலுகை அமெரிக்காவிற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது.


இருப்பினும், இந்தியா தெளிவான வரம்புகளை நிர்ணயித்தது. ஆரம்பத்தில் இருந்தே, மரபணு மாற்றப்பட்ட உணவு, சோயா, மக்காச்சோளம், சில தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் மீதான பேச்சுவார்த்தைகளை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா கூறியது. சிறு மற்றும் குறு விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு மீதான கவலைகள் இதற்கான காரணங்களாக இருந்தது.


கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, அமெரிக்காவின் கவனம் GMOகள் மற்றும் பிற பண்ணை பொருட்களிலிருந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு மாறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகியவை ரஷ்ய எரிசக்தியை அதிகம் வாங்குபவர்களாக இருந்தாலும், அமெரிக்கா அவற்றின் மீது வரிகளை விதிக்கவில்லை. இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருந்தாலும், ரஷ்ய பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை நிறுத்துதல், BRICS-ஐ விட்டு வெளியேறுதல் அல்லது பிற கூட்டாளி நாடுகளின் நாணயங்களில் வர்த்தகத்தைத் தவிர்ப்பது போன்ற கோரிக்கைகளை அமெரிக்கா மாற்றியிருக்கலாம்.


இரண்டாவதாக, டிரம்ப்பின் முக்கியக் கவலையாக இருந்த வர்த்தக இடைவெளியைக் குறைக்க அமெரிக்காவிடமிருந்து அதிக எரிசக்தியை வாங்க இந்தியா முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவதாக, எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இரு தரப்பினருக்கும் பயனளிக்க வேண்டும். மேலும், இந்தியா தனது ஆர்வமுள்ள சில தயாரிப்புகளுக்கு அமெரிக்க வரிகளைக் குறைக்க விரும்பியது. நான்காவதாக, EU போன்ற பிற சாத்தியமான FTA கூட்டாளிகளும் இதே போன்ற நன்மைகளை எதிர்பார்ப்பார்கள். எனவே, நடுத்தர மற்றும் நீண்டகால விளைவைக் கருத்தில் கொள்ளாமல் இந்தியா அதிகப்படியான சலுகைகளை வழங்க முடியாது.


அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் 89 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களில் சுமார் 55% வரிகளால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முக்கியமாக மருந்துகள், மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. மருந்துகள் மற்றும் மொபைல் போன்களைத் தவிர, பிற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் மிகக் குறைந்த வரிகளை எதிர்கொள்வதால், இந்தியாவின் குறைந்த முதல் நடுத்தர மதிப்புள்ள ஏற்றுமதி ஆர்டர்கள் பல அவற்றிற்கு மாறக்கூடும். ஆகஸ்ட் 12 அன்று சீனா 90 நாள் நீட்டிப்பைப் பெற்று 30% வரி விகிதத்தை எதிர்கொள்வதால், இந்த சூழ்நிலையிலிருந்து அது லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.


அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளில் கனிம எரிபொருள் மற்றும் எண்ணெய், வெட்டப்படாத மற்றும் மெருகூட்டப்படாத வைரங்கள், இயந்திரங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள், கரிம இரசாயனங்கள், பிளாஸ்டிக், பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவை அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை மூலப்பொருட்கள் அல்லது இடைநிலை பொருட்கள். அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதன் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தால், அது அதன் சொந்த உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். பழிவாங்கல் சேவைகளில் எதிர் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும், இது தவிர்க்கப்பட வேண்டும்.


சீனாவைத் தவிர பெரும்பாலான முக்கிய நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை ஏற்றுக்கொண்டன (இங்கிலாந்து மட்டுமே 10 சதவீதத்திற்கு ஒப்புக்கொண்டது). இதனால், இந்தியா குறுகிய காலத்தில் நிவாரணம் பெறுவது சாத்தியமில்லை. இருப்பினும், 2026 நவம்பரில் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு அதிகரித்து வரும் பணவீக்கம், வேலை இழப்புகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு ஆகியவை டிரம்ப் தனது நடவடிக்கைகளை மென்மையாக்கும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு வாய்ப்பு என்னவென்றால், அத்தகைய வரிகள் அமெரிக்க அதிபரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்று நீதித்துறை தீர்ப்பளிக்கலாம். இது அமெரிக்க உச்சநீதிமன்றத்தை அடையக்கூடும். டிரம்ப் நிர்வாகம் அங்கு தோற்றாலும், அதே இலக்கை அடைய பிற சட்டங்களைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.


WTO இரண்டு கட்ட தகராறு தீர்வு முறையைக் கொண்டுள்ளது. இரண்டாவது கட்டம் என்பது மேல்முறையீட்டு அமைப்பு (AB) எனப்படும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர அமைப்பின் மூன்று உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படும் மேல்முறையீடு ஆகும். ஏழு உறுப்பினர்களும் WTO உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், புதிய உறுப்பினர்களை நியமிப்பதைத் தடுத்தார். 2019ஆம் ஆண்டு முதல், மேல்முறையீட்டு அமைப்பில் எந்த உறுப்பினர்களும் இல்லை. இதனால் இந்த அமைப்பு செயல்படவில்லை. இதன் பொருள் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புகாரைத் தாக்கல் செய்வது வெறும் அடையாளமாக மட்டுமே இருக்கும். அது பயனுள்ளதாக இருக்காது.


இந்த வரிகள், அனைத்து WTO உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளுக்கு எதிரானவை. அவை மிகவும் விரும்பப்படும் நாடு என்ற கொள்கையையும் மீறுகின்றன. அதாவது நாடுகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால், வரிகளின் அடிப்படையில் வேறுவிதமாக நடத்தப்படக்கூடாது. டிரம்பின் நடவடிக்கைகள், வளர்ந்த நாடுகளின் அமைதியான ஒப்பந்தத்துடன் சேர்ந்து, 1947-ல் GATT உடன் உருவாக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக அமைப்பு (பின்னர் 1995-ல் WTO ஆனது) இப்போது சிக்கலில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.


இந்த வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா சில நடவடிக்கைகளை எடுக்க முடியும்.


இந்தியாவின் ஏற்றுமதிகள் ஒரு சில துறைகளை மட்டுமே உள்ளடக்கியது மற்றும் அமெரிக்காவை (நமது பொருட்களின் ஏற்றுமதியில் 17%) மற்றும் ஐரோப்பிய யூனியனையும் பெரிதும் நம்பியுள்ளது. இந்த அபாயத்தைக் குறைக்க, இந்தியா அதன் ஏற்றுமதி தயாரிப்புகள் மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகள் இரண்டையும் பன்முகப்படுத்த வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும். மேலும், இதற்கு அரசாங்கத்திற்கும் தனியார்துறைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவைப்படும்.



Original article:

Share:

140 கோடி இந்தியர்களுக்கு ஆரோக்கியத்தை கட்டமைத்தல் -சங்கீதா ரெட்டி

 இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பு ஒரு திருப்புமுனையில் உள்ளது. மேலும், அது ஒரு சலுகையாக இருந்து ஒவ்வொரு இந்தியரின் உரிமையாக மாற வேண்டும்.


இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு முறை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதற்கான பணி இரண்டு மடங்கு உள்ளது. கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்கு அணுகலை விரிவுபடுத்துதல், அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில் மலிவு விலையை உறுதி செய்தல் வேண்டும். இதை அடைய, காப்பீட்டை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல், விதிகளை தெளிவுபடுத்துதல் மற்றும் நீண்டகால முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றின் மூலம் இந்த அமைப்பு மிகவும் இணைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் செயல்பட வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட வழியில் பணியாற்றுவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய, மலிவு விலையில், உலகிற்கு ஒரு வலுவான முன்மாதிரியாக விளங்கும் ஒரு சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை இந்தியாவால் உருவாக்க முடியும்.


மலிவு விலையின் அடித்தளமாக காப்பீடு


விலையுயர்ந்த சுகாதாரப் பராமரிப்பை மலிவு விலையில் வழங்குவதற்கான சிறந்த வழி காப்பீடு மூலம் ஆபத்தைப் பகிர்ந்து கொள்வது தான். ஒரு நபருக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை அல்லது ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை போன்ற சிறிய கட்டணங்கள் கூட பல லட்சங்கள் மதிப்புள்ள காப்பீட்டை வழங்க முடியும். இது குடும்பங்களை பெரிய மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது. இருப்பினும், இதன் பரவலாக்கம் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் வெறும் 15%-18% மக்கள் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளனர், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் காப்பீட்டு சந்தா விகிதம் 3.7% ஆக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 7% உடன் ஒப்பிடும்போது குறைவாகும். இந்த இடைவெளி குறிப்பிடத்தக்கது, ஆனால் வாய்ப்பும் பெரியது, ஏனெனில் மொத்த எழுதப்பட்ட சந்தாக்கள் 2024-ல் ஏற்கனவே $15 பில்லியனாக உள்ளன மற்றும் 2030 வரை 20%-க்கு மேல் ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


காப்பீட்டை மட்டும் நம்பி மலிவு (Affordability) விலை இருக்க முடியாது. காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இணைந்து அதிக மக்களைப் பாதுகாக்கவும், நோயைத் தடுப்பதில் கவனம் செலுத்தவும், அவசரநிலைகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு கருவியாக மாற்றும்போது உண்மையான தாக்கம் ஏற்படும்.


இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு முறை, மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு நல்ல பராமரிப்பை எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளது, உலகம் இதை இப்போது தான் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஒரு காந்த ஒத்திசைவு படமெடுப்பு  எடுத்தால் (Magnetic resonance imaging (MRI)) ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு பரிசோதனை படங்களைக் கையாளக்கூடிய நிலையில், இந்தியாவில் அதே இயந்திரம் அந்த அளவைவிட பல மடங்கு அதிகமாக நிர்வகிக்கிறது. தரத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் வளங்களை நீட்டிக்கும் இந்த திறன் தற்செயல் நிகழ்வு அல்ல. இது மருத்துவர்-நோயாளி விகிதங்கள், பணிப்பாய்வு வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பயன்பாட்டில் பல ஆண்டுகால புத்திசாலித்தனத்தின் விளைவாகும்.


அடுத்த கட்டம் எளிமையானது: இந்தியாவின் பரந்த மையப்பகுதிக்கு இந்தத் திறனை விரிவுப்படுத்த வேண்டும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் போதுமான சேவையைப் பெறவில்லை. ஆனால், அவை உண்மையான எல்லையைக் குறிக்கின்றன. இந்தப் பகுதிகளில் இந்தியா தனது நகர்ப்புற செயல்திறனைப் பிரதிபலிக்க முடிந்தால், அது அணுகல் இடைவெளியை மட்டும் நிரப்பாது. அளவு, புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை சுகாதாரப் பராமரிப்பை எவ்வாறு மறுவடிவமைக்க முடியும் என்பதற்கான உலகளாவிய அளவுகோலை இது அமைக்கக்கூடும்.


ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana, or PM-JAY))) போன்ற திட்டங்கள் அணுகலை மறுவரையறை செய்துள்ளன. ஏறக்குறைய 500 மில்லியன் மக்களை உள்ளடக்கி, ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மேம்பட்ட பராமரிப்புக்காக, PM-JAY ஆனது பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மில்லியன் கணக்கான பணமில்லா சிகிச்சைகளை செயல்படுத்தியுள்ளது. பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் புற்றுநோய் சிகிச்சைகள் ஏறக்குறைய 90% அதிகரித்துள்ளதாக அதன் தாக்கம் தெரியவந்துள்ளது.


அடுத்த 500 மில்லியனை எட்டுவதற்கு அரசு ஆதரவு திட்டங்களில் தனியார் மருத்துவமனை பங்களிப்பை விரிவுபடுத்துவது அவசியம். ஆனால், இது நியாயமான திருப்பிச் செலுத்துதல் மற்றும் வெளிப்படையான செயல்முறைகளில் தொகுக்கப்பட வேண்டும். வழங்குநர்களுக்கான நம்பகத்தன்மையையும் நோயாளிகளுக்கான உண்மையான மதிப்பையும் உறுதி செய்கிறது.


தடுப்பே மிகவும் சக்திவாய்ந்த செலவு-சேமிப்பு முறையாகும்


பஞ்சாபில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காப்பீடு உள்ள குடும்பங்கள்கூட மிக அதிக செலவுகளை எதிர்கொண்டதாகக் காட்டியது. இந்தத் தீர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, வழக்கமான மருத்துவர் வருகைகள் மற்றும் பரிசோதனைகளை உள்ளடக்கும் வகையில் காப்பீட்டை மாற்றுவது, இரண்டாவதாக, நோய்களைத் தடுக்க நாடு முழுவதும் ஒரு பெரிய முயற்சியைத் தொடங்குவது. ஆனால், பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் இது முழுமையடையாது.


காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் சேர்ந்து, மக்கள் அபாயங்களைத் தவிர்ப்பது, கவனமாக இருப்பது மற்றும் விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் நோயைத் தடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்கு பணம் செலவிடுவது பின்னர் மருத்துவ சிகிச்சைகளில் அதிக சேமிப்பை அளிக்கிறது. பள்ளிகள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் அனைவரும் நோய்த்தடுப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்தியா வளர்ந்து வரும் நோய்களின் பிரச்சனையைக் குறைத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.


இந்தியா ஆரம்பத்தில் தொலை மருத்துவத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது, இப்போது செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கடுமையான தொற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய, சோதனை முடிவுகளை வரிசைப்படுத்த அல்லது மருத்துவர்கள் தொலைதூரத்தில் இருந்து நோயாளிகளை அணுக அனுமதிக்கும் கருவிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணித்திறனையும் மேம்படுத்துகின்றன.


 தொலை மருத்துவ ஆலோசனைகள் என்பது ஒரு பெருநகரத்தில் உள்ள ஒரு இருதயநோய் நிபுணர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு சிகிச்சையை வழிகாட்ட முடியும் என்பதாகும். அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்துடன் இணைந்து, இத்தகைய கண்டுபிடிப்புகள் நாடு முழுவதும் உலகளாவிய சுகாதார பதிவுகளையும் தொடர்ச்சியான பராமரிப்பையும் செயல்படுத்த உதவும்.


விடுபட்ட இணைப்பாக கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கை


புதிய சுகாதாரப் பராமரிப்பு தொழில்நுட்பங்கள் நம்பிக்கைக்குரியவை. ஆனால், சிக்கல்கள் இன்னும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மாசுபாடு அதிக சுவாச நோய்களை ஏற்படுத்துவதால், புது தில்லியில் உள்ள காப்பீட்டாளர்கள் சந்தா கட்டணங்களை 10% முதல் 15% வரை உயர்த்த விரும்புகிறார்கள். சுற்றுச்சூழல் சுகாதாரப் பராமரிப்பை எவ்வாறு அதிக விலைக்குக் கொண்டுவருகிறது என்பதை இது காட்டுகிறது. மக்களைப் பாதுகாக்க விதிகள் இல்லாமல், பலர் காப்பீடு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதலாம். இதனால்தான் வலுவான கட்டுப்பாடு முக்கியமானது. காப்பீட்டு உரிமைகோரல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன மற்றும் புகார்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை மேம்படுத்த நிதி அமைச்சகம் காப்பீட்டு ஆணையத்திடம் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) கேட்டுள்ளது. ஏனெனில், அதிகமான மக்கள் காப்பீடு வாங்க நம்பிக்கை முக்கியமானது. கோரிக்கைகள் நியாயமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பவில்லை என்றால், அவர்கள் காப்பீட்டை விரும்ப மாட்டார்கள். அதிகமான மக்கள் காப்பீடு பெறவும் காப்பீட்டைப் பற்றி நம்பிக்கையுடன் உணரவும் உதவும் நல்ல விதிகள் மற்றும் நியாயமான விலைகள் தேவை.


2023-ஆம் ஆண்டில், இந்தியாவின் சுகாதாரத் துறை தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதனத்தில் $5.5 பில்லியனை ஈர்த்தது, இது டிஜிட்டல் சுகாதாரம், மருந்தக வலைப்பின்னல்கள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்குவித்தது. ஆனால், மூலதனம் பெருநகரங்களை நோக்கியே உள்ளது. உண்மையான சோதனை இதை அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களுக்கு வழிநடத்துகிறது. முதன்மை வலைப்பின்னல்களை உருவாக்குகிறது மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கமாக மாற்றும் வகையில் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.


இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. காப்பீடு வழக்கமான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மருத்துவர்களும் மருத்துவமனைகளும் புத்திசாலித்தனமான முறையில் வளர வேண்டும். நோயைத் தடுப்பது காலப்போக்கில் பணத்தை மிச்சப்படுத்தும், மேலும் தொழில்நுட்பம் அதிகமான மக்கள் சிகிச்சை பெற உதவும். சரியான முதலீடுகள் மற்றும் அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான வலுவான குழுப்பணி மூலம், நியாயமான, வலுவான மற்றும் நீடித்த ஒரு சுகாதார அமைப்பை நாம் உருவாக்க முடியும். சுகாதாரப் பராமரிப்பு ஒரு ஆடம்பரமாக இருக்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உரிமையாக இருக்க வேண்டும்.


சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.



Original article:

Share:

எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் ஒரு வெடிகுண்டாக இந்தியாவின் மக்கள் தொகைப் பயன் -மார்ட்டின் வைட்ஹெட், அமர் ஆனந்த் சிங், ரிது குல்ஸ்ரேஸ்தா

 கல்விக்கும் நிஜ உலகத் திறன்கள், பட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதால், இந்தியாவின் மக்கள்தொகை 'சொத்து' (asset) - அதன் பெரிய இளைஞர் மக்கள் தொகை - ஒரு 'பொறுப்பாக' (liability) மாறும் அபாயத்தில் உள்ளது.


நோபல் பரிசு பெற்றவரான ரவீந்திரநாத் தாகூர், “ஒரு குழந்தையை உங்கள் சொந்த கற்றலுக்கு மட்டுப்படுத்தாதீர்கள், ஏனெனில் அவள் வேறொரு காலத்தில் பிறந்தவள்” என்று ஒருமுறை கூறினார். இந்தியாவின் கல்வி முறையின் பின்னணியில், இந்த மேற்கோள் இன்று குறிப்பாக பொருத்தமாக உள்ளது. இந்தியாவின் கல்வி முறை பழமையானது. நாம் மாணவர்களை வேகமாக மறைந்து கொண்டிருக்கும் அல்லது பரிணமித்து வரும் வேலைகளுக்கு தயார்படுத்துகிறோம்.


இதற்கிடையில், வேலையின் எதிர்காலம் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) தலைமையில் உள்ளது. அவை அனைத்தையும் விட மிகவும் இடையூறு விளைவிக்கும். செயற்கை நுண்ணறிவானது, நாம் எவ்வாறு செயல்படுகிறோம் மற்றும் சிந்திக்கிறோம் என்பதை மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக, உலகளவில் தற்போதைய வேலைகளில் 70% வரை பாதிக்கப்படும் என்றும், தற்போதைய பல வேலைகளில் 30% வரையிலான பணிகள் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் என்றும் எங்கள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. நாம் பேசும்போது செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் தொடர்பான ஏராளமான புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த தொழில்நுட்ப மாற்றம் ஏற்கனவே உலகத்தையும் வேலை சந்தையையும் மாற்றுகிறது. அதேசமயம் எங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்ட புதுப்பிப்பு சுழற்சி மூன்று ஆண்டு சுழற்சிகளில் இயங்குகிறது. இது சிறந்த முறையில் அதிகரிக்கும். இந்த மெதுவான முன்னேற்றம், பல மாணவர்களுக்கு புதிய திறன்கள், பல்வேறு திறன்களைக் கற்றுக் கொடுத்து, மீண்டும் கற்றுக்கொள்ள உதவாவிட்டால், பல மாணவர்கள் பின்தங்கிவிடுவார்கள்.


இந்தியாவின் 'மக்கள்தொகை பயன்' (demographic dividend) நாட்டின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக நீண்டகாலமாகப் பேசப்படுகிறது. 35 வயதிற்குட்பட்ட 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு, அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த மக்கள்தொகை சார்ந்த 'சொத்து', கல்விக்கும் நிஜ-உலகத் திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மற்றும் பட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் விரிவடைவதால், ஒரு 'பொறுப்பு' ஆகிவிடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த இடைவெளியை குறைக்கவிட்டால், இந்தியாவின் இளம் மக்கள்தொகை ஒரு நன்மைக்குப் பதிலாக ஒரு பெரிய பிரச்சனையாக மாறக்கூடும்.


இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பட்டதாரிகளை உருவாக்கும் அதே வேளையில், இந்த பட்டதாரிகளில் பலர் குறைந்த வேலையில் உள்ளனர் மற்றும் பெருகிய முறையில் வேலையற்றவர்களாக மாறுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பிரபலமான நம்பிக்கை இருந்தபோதிலும், இது சமூக அறிவியல் அல்லது அல்லாத அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (science, technology, engineering and mathematics (STEM)) அல்லாத  மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மட்டுமல்ல. கடந்த பத்தாண்டுகளில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டதாரிகளில் 40%-50% பேர் வேலையில் சேர்க்கப்படவில்லை என்று தரவுகள் காட்டுகின்றன. இது கல்விக்கும் தொழில்துறைத் தேவைகளுக்கும் இடையே உள்ள கவலைக்குரிய இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. அதிகமான இளைஞர்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள். இருப்பினும், சரியான திறன்களைக் கொண்ட திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் இருப்பதாக முதலாளிகள் தெரிவிக்கின்றனர். காலதாமதமாக, கல்வியாளர்கள் பிரச்சனையை ஒப்புக்கொண்டுள்ளனர். இன்று 61% உயர்கல்வித் தலைவர்கள் பாடத்திட்டங்கள் வேகமாக மாறிவரும் வேலைச் சந்தைத் தேவைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். 


உயர்நிலைப் பள்ளியில் பொருத்தமின்மை தொடங்குகிறது


செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) புரட்சி துரிதப்படுத்தப்படுவதால், இந்தியா கடுமையான திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 10 வேலைகளில் கிட்டத்தட்ட 7 வேலைகள் ஆட்டோமேஷனால் பாதிக்கப்படலாம் என்று McKinsey அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஆனால், இது எல்லாம் மோசமாக இல்லை - உலக பொருளாதார மன்றத்தின்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் 170 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கும். இருப்பினும், அதே நேரத்தில் சுமார் 92 மில்லியன் வேலைகளும் இழக்கப்படும். இதன் விளைவாக, திறன் மேம்பாடு (skilling) ஒரு முக்கியமான தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும்.


இந்திய இளைஞர்கள் எவ்வாறு பணியிடத்தில் நுழைகிறார்கள் என்பதில் சவால் உள்ளது. காலாவதியான அல்லது பொருத்தமற்ற திறன்களுடன் கணிசமான நபர்கள் அவ்வாறு செய்கிறார்கள். இந்த தவறான சீரமைப்பு உயர்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. அங்கு இருக்கும் பல வாழ்க்கைப் பாதைகளைப் பற்றி மாணவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். 8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான இந்திய மாணவர்களில் 93% பேர் ஏழு தொழில் வாய்ப்புகளை பற்றி மட்டுமே அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் அல்லது ஆசிரியர் போன்ற பாரம்பரியப் பாத்திரங்கள் என்று 2022-ஆம் ஆண்டின் மைண்ட்லர் தொழில் விழிப்புணர்வுக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. இதற்கு நேர்மாறாக, நவீன பொருளாதாரம் 20,000க்கும் மேற்பட்ட தொழில் பாதைகளை வழங்குகிறது. ஆச்சரியப்படும் விதமாக, வெறும் 7% மாணவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் முறையான தொழில் வழிகாட்டுதலைப் பெறுவதாக தெரிவிக்கின்றனர். இந்த விழிப்புணர்வு இல்லாதது, மில்லியன் கணக்கான சிறந்த மற்றும் பிரகாசமான, அவர்களின் திறன்கள் அல்லது சந்தைத் தேவைகளுக்குப் பொருந்தாத பட்டங்களைத் தொடர வழிவகுக்கிறது. எங்கள் வார்த்தையை நம்ப வேண்டாம். 2024-ஆம் ஆண்டின் இந்திய திறன் அறிக்கையின்படி, உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளில் 65%-க்கும் மேற்பட்டோர் தங்கள் ஆர்வங்கள் அல்லது திறன்களுக்கு ஏற்ற பட்டங்களைத் தொடரவில்லை. இந்த கவலையளிக்கும் உண்மை, மாணவர்கள் வேகமாக மாறிவரும் வேலை சந்தைக்கு தயாராக இல்லாமல் பட்டங்களைப் பெறுகிறார்கள் என்பதையும், இந்தியாவின் வேலையின்மை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது என்பதையும் காட்டுகிறது.


டிஜிட்டல் கருவிகள், ஆனால் பழைய சிந்தனைமுறை (analog mindsets)


இன்று, இந்தியாவில் பெரும்பாலான மாணவர்கள் ஏதோ ஒரு வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஏனெனில், திறன் பேசிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. மேலும், அரசாங்கம் கணினி மற்றும் AI ஆய்வகங்களை அமைக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகள் இன்னும் பழைய பாரம்பரிய மற்றும் தேர்வு மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. மாணவர்கள் தொழில் வாழ்க்கையை ஆராயவோ அல்லது நிஜ உலக வேலைத் திறன்களைக் கற்றுக்கொள்ளவோ ​​உதவுவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. தொழில் ஆய்வு அல்லது வேலைக்குத் தயாராக இருக்கும் திறன்களை வளர்ப்பதில் குறைந்த கவனம் மட்டுமே உள்ளது. ஆனால் முதலாளிகள் விரும்பும் நடைமுறை அனுபவம் அவர்களிடம் இல்லை. உண்மையில், மெர்சர்-மெட்ல் தயாரித்த பட்டதாரி திறன் குறியீடு 2025, இந்திய பட்டதாரிகளில் 43% பேர் மட்டுமே வேலைக்குத் தயாராக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளுடனான எங்கள் அனுபவத்தில், இந்த எண்ணிக்கை, ஏதேனும் இருந்தால், பிரச்சினையின் அளவைக் குறைத்து மதிப்பிடுகிறது.


கல்வி தொழில்நுட்ப தளங்கள் முதன்மையாக தொழில் கண்டுபிடிப்பு அல்லது திறன் மேம்பாட்டைவிட, தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் மனப்பாடம் கற்றலில் கவனம் செலுத்துகின்றன. Coursera மற்றும் Udemy போன்ற தளங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்தன. ஆனால், அவற்றின் சான்றிதழ்கள் மதிப்பு குறைந்து வருகின்றன. பள்ளிப் பாடங்கள் இன்றைய வேலைச் சந்தையுடன் இன்னும் இணைக்கப்படவில்லை. எனவே, மாணவர்கள் எதிர்கால வேலைகளுக்குத் தயாராக இல்லை. ஒரு சில மாநில வாரியங்களும் மத்திய அமைப்புகளும் மட்டுமே தொழில் தயார்நிலை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், சில நிறுவனங்கள்கூட வளர்ந்துவரும் தொழில் பாதைகளை தங்கள் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்துள்ளன.


இந்திய அரசாங்கம், திறன் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.  அவற்றில் முக்கியமானது, திறன் இந்தியா திட்டம் (Skill India Mission) ஆகும். இது 2022-ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெரிய அளவிலான நிதி இருந்தபோதிலும், இந்த இலக்கு இலக்கை அடையவில்லை. இந்த தோல்விக்கு பல முறையான சிக்கல்கள் பங்களித்துள்ளன: திறன் இந்தியா இயக்கம் தவிர, பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா  (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)), பிரதான் மந்திரி கௌஷல் கேந்திரங்கள் (Pradhan Mantri Kaushal Kendras (PMKK)), ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான் (Jan Shikshan Sansthan (JSS)), பிரதான் மந்திரி யுவ யோஜனா (Pradhan Mantri Yuva Yojana (PMYY)), சங்கல்ப் (Skills Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion (SANKALP)), பிரதமரின் பயிற்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் அடங்கும். இவை அனைத்தும் திறன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


இந்தியாவிற்குத் தேவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை தொழில்துறை தேவைகளுடன் இணைக்கும் ஒருங்கிணைந்த உத்தியாகும். நாங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதற்கான ஒரு தளத்தை வடிவமைத்துள்ளோம். இந்தத் தீர்வை உண்மையானதாக மொழிபெயர்க்க நிதி ஆயோக், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (Association of Indian Universities (AIU)) மற்றும் திறன் அமைச்சகத்துடன் நாங்கள் உரையாடி வருகிறோம். திறன் மேம்பாட்டிற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசு தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம்.


தீர்க்கமான பத்தாண்டுகள்


டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகத் தலைவராக இந்தியா மாற விரும்புகிறது. இதைச் செய்ய, தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைகளை ஒரு தெளிவான, தேசிய திட்டத்தில் இணைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் உலகில் வெற்றிபெற இளைஞர்கள் திறன்களைப் பெறவில்லை என்றால், அவர்கள் பின்தங்க நேரிடும். இது கல்வி அல்லது வேலைகளில் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல - இது அமைப்பின் மீதான நம்பிக்கையை உடைக்கக்கூடிய ஒரு பெரிய சமூகப் பிரச்சனை. 1990ஆம் ஆண்டு, மண்டல் ஆணையம் போராட்டங்களின்போது, ​​இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக, காவல்துறையினருடனான மோதல்களாக, சொத்து அழிப்புகளாக, சில சமயங்களில் காவல்துறை துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழப்புகளாக மாறக்கூடிய பேரழிவைச் சாட்சியமளிக்கிறது. இந்தியா இப்போது செயல்படத் தவறினால், அதிக கல்வியறிவு பெற்ற, படித்த ஆனால் வேலையில்லாத இளைஞர்களின் தலைமுறையை உருவாக்கும் அபாயம் உள்ளது. அவர்கள் ஒரு எப்போது  வேண்டுமானாலும் வெடிக்கும் வெடிகுண்டாக மாறக்கூடும். The World Bank Economic Review இந்த முரண்பாட்டை லான்ட் ப்ரிட்செட் எழுதிய “எல்லாக் கல்வியும் எங்கே போனது? (Where Has All the Education Gone?)” என்ற கட்டுரையில் பெரிய அளவில் திறம்படப் பதிவு செய்துள்ளது. இத்தகைய நெருக்கடியின் விளைவுகள் மிகவும் மோசமானவை. நல்ல செய்தி என்னவென்றால், இது முற்றிலும் சரிசெய்யக்கூடிய பிரச்சினை. இந்தியா தனது இளைஞர்களை நேற்றைய வேலைகளுக்காக அல்ல, நாளைய தொழில் வாழ்க்கைக்காக தயார்படுத்த வேண்டும். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது, இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையை ஒரு சொத்தாகவோ அல்லது பொறுப்பாகவோ மாற்றுவது நம்மைப் பொறுத்தது.


மார்ட்டின் வைட்ஹெட் ஒரு நடத்தை பொருளாதார நிபுணராகவும், பி.டபிள்யூ.சி.யின் முன்னாள் பங்குதாரராகவும் உள்ளார். அமர் ஆனந்த் சிங் தற்போது ஆரோவில் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாகவும், ஆரோ குழும நிறுவனங்களின் நிறுவனராகவும் உள்ளார்.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்கள் இழப்பீடு பெற வேண்டுமா? -டி சி ஏ ஷரத் ராகவன்

 பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திரதின உரையின்போது, ​​அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) சீர்திருத்தங்கள் வடிவில் மக்களுக்கு ‘தீபாவளி பரிசை’ வழங்க இருப்பதாக அறிவித்தார். இந்தச் சீர்திருத்தங்களில் பெரும்பகுதி, தற்போதைய நான்கு அடுக்கு அமைப்பிலிருந்து (four-tier system) 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு கட்டமைப்பிற்குள் (two-tier structure) சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வருவதையும், சராசரி வரி விகிதத்தை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதையும் உள்ளடக்கியது என்று நிதி அமைச்சகம் பின்னர் கூறியது.  இந்த திட்டம் வருவாயில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? மேலும், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டுமா? T.C.A. ஷரத் ராகவன் நடத்தும் உரையாடலில் பிரதிக் ஜெயின் மற்றும் மனோஜ் மிஸ்ரா இந்தக் கேள்விகளைப் பற்றி விவாதிக்கின்றனர். திருத்தப்பட்ட சுருக்கம் :


சராசரி வரி விகிதம் குறையும் நிலையில், அரசாங்கம் வருவாயை எவ்வாறு பராமரிக்கும் என்று நினைக்கிறீர்கள்?


மனோஜ் மிஸ்ரா: சரக்கு மற்றும் சேவை வரி விகிதக் குறைப்புகளைப் பற்றி பேசும்போதெல்லாம், உண்மையில் எவ்வளவு வருவாயை விட்டுக்கொடுக்கிறோம் என்பது பற்றிய உடனடி கவலை எப்போதும் எழுகிறது. அட்டவணையில் உள்ள முன்மொழிவுகளைப் பார்த்தால், அது பல அடுக்குகளை இரண்டாகப் பிரிப்பதாக இருந்தாலும் சரி  அல்லது 28% அல்லது 12% அடுக்கை 18% அல்லது 5% ஆகக் குறைப்பது, குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய மதிப்பீட்டின்படி, அந்தக் குறைப்பு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி முதல் ரூ.1,00,000 கோடி வரை பாதிக்கலாம். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 0.2-0.3% ஆகும். நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் (நிதியாண்டு 2025-26), புதிய கட்டமைப்பு ஆண்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்தும்போது, ​​பாதிப்பு ரூ.45,000 கோடியை நெருங்கும். ஆனால், இந்த இழப்பு நிரந்தரமாக இருக்காது. ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% அதிக வரி விதிப்பது இழந்த பணத்தை மீட்டெடுக்க உதவும். மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நீடித்த பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்போது, ​​மக்கள் அதை அதிகமாக வாங்குவார்கள். அதிகமான மக்கள் சரியான விலைக்கட்டணம் முறைகளைப் (Billing system) பயன்படுத்தத் தொடங்கினால், வரி மோசடி குறையும். இதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். எனவே, என் பார்வையில், முதலில் சில இழப்புகள் இருக்கலாம். ஆனால், வளர்ந்து வரும் இணக்கமும் தேவை அதிகரிப்பும் அதை பெருமளவில் ஈடுசெய்யும்.


சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் சுமார் 70%, 18% அடுக்கிலிருந்து வருகிறது. அந்த அடுக்கு (slab) பெரிய அளவில் மாறப்போவதில்லை. எனவே, இந்த ஒட்டுமொத்த விகிதக் குறைப்புகளின் தாக்கம் மிகப் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?


பிரதிக் ஜெயின்: நீங்கள் சொல்வது சரிதான். இது போன்ற காரணிகளால் தான் 18% அடுக்கு மாற்றப்படவில்லை. 12% மற்றும் 18% அடுக்குகளை இணைப்பது என்பது ஒரு திட்டமாகும். ஆனால் அது நடக்கவில்லை. ஏனெனில், வருவாய் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 18% அடுக்கில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.


12% வரி அடுக்கிலிருந்து 5% வரி அடுக்கிற்கு மாறுவதாலும், பல பொருட்கள் 28% வரி அடுக்கிலிருந்து 18% வரி அடுக்கிற்கு மாறுவதாலும் வருவாய் தாக்கங்கள் ஏற்படும். இருப்பினும், இந்த தாக்கங்கள் 18% வரி அடுக்கை 13% அல்லது 14-15% ஆகக் குறைப்பதைப் போல கடுமையாக இருக்காது.


வரிகள் குறைக்கப்பட்ட பிறகு சரக்கு மற்றும் சேவை வரியின் சராசரி விகிதம் என்னவாக  இருக்கும்?


பிரதிக் ஜெயின்: சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதற்கு முன்னர், சராசரி வரி நிகழ்வுகள் வெளிப்படையாக 15% ஆக இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னரும், விகிதக் குறைப்புக்குப் பிறகும் இது சுமார் 11.5% ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது, இது 11.5 சதவீதமாக உள்ளது. ஒன்றிய அரசு முன்மொழிந்த வட்டி விகிதக் குறைப்புகளைச் செயல்படுத்திய பிறகு இது 10%-க்கு அருகில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவை வளர்ந்த பொருளாதாரங்களில் (developed economies) சிறந்த நாடுகளுடன் இணைக்கிறது. எனது கருத்துப்படி, 10% என்பது மிகவும் மிதமான விகிதமாகும். அது உண்மையில் நம்மை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக உற்பத்தியை ஈர்க்க நாங்கள் விரும்புகிறோம்.


சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை மாநிலங்களுக்கு சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளனவா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரிக் குறைப்பினால் ஏற்படும் வருவாய் சமமாகப் பிரிக்கப்படுமா?


மனோஜ் மிஸ்ரா: வருவாய் பகிர்வு சமமாக இல்லை. சரக்கு மற்றும் சேவை வரி விகிதக் குறைப்புகளைப் பற்றி நாம் பேசும்போது, ​​அதன் தாக்கம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வலுவான நகர்ப்புற மையங்களைக் கொண்ட உற்பத்தி மற்றும் சேவை அதிகமாக உள்ள மாநிலங்களாகும். உபகரணங்கள் அல்லது மின்னணுவியல் மீது சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டால், இந்த மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து உடனடி வருவாய் வசூல் பாதிக்கப்படும். மறுபுறம், பீகார் அல்லது உத்தரபிரதேசம் போன்ற விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள மாநிலங்கள், வருவாயில் அதே விகிதத்தைப் பார்க்காமல் இருக்கலாம். இதற்கு காரணம், சிறிய மாநிலங்களில் உள்ள மக்கள் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்கள். அவை ஏற்கனவே வரி இல்லாதவை அல்லது அந்த பொருட்களுக்கு குறைந்த விகிதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகின்றன. எனவே, 2018ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைக்கப்பட்டபோது, ​​மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்கள் தங்கள் மாதாந்திர வரி வசூலில் 3–4% வீழ்ச்சியைக் கண்டன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களைப் போலவே சிறிய மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக குறைந்த வரியை வசூலிப்பதால் அவை அதிகம் பாதிக்கப்படவில்லை.


மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டுமா?


பிரதிக் ஜெயின்: 2017ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ​​ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு உத்தரவாதத்தை (compensation guarantee) வழங்கியது. அந்த நேரத்தில், ஐந்து ஆண்டுகள் ஒரு மாற்றத்திற்கான நீண்ட காலம் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், அந்த காலம் முடிந்த பிறகு மாநிலங்கள் தங்கள் காலில் நிற்கத் தொடங்கும். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தொழில்நுட்ப ரீதியாக, எந்த இழப்பீடும் (வழங்கப்பட) இல்லை. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழக்கமான வரிக்கு இழப்பீடு வழங்குவது மிகவும் கடினம். ஆனால், வரி விதிப்பைப் பொறுத்தவரை, மாநிலங்கள் தங்கள் சொந்த அமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் பார்க்கத் தொடங்க வேண்டும். கசிவுகளை (leakages) எவ்வாறு அடைப்பது, வரி தளத்தை எவ்வாறு அதிகரிப்பது, மேலும் அதிக முதலீட்டை எவ்வாறு சரி செய்வது, இதனால் அவர்கள் வரியில் எவ்வாறு தன்னிறைவு பெற முடியும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும். நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு, வரிவிதிப்பு இழப்பிற்கு மாநிலங்களுக்கு வழக்கமான இழப்பீடு வழங்குவது ஒரு விருப்பமாக இருக்காது.


மனோஜ் மிஸ்ரா: பிரதிக் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் சமமான விநியோகம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, பெரிய உற்பத்தி வசதிகளைக் கொண்ட பெரிய மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் அதிகப் பங்கைப் பெறுகின்றன. அதே நேரத்தில் சிறிய, குறைந்த தொழில்மயமான மாநிலங்கள் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மிகக் குறைந்த பங்கைப் பெறுகின்றன. இந்த மாநிலங்களுக்கு ஈடுசெய்ய ஏதேனும் ஒரு வழிமுறை இருக்க வேண்டும். இது எப்போதும் இழப்பீட்டு வரி (compensation cess) எனப்படும் சிறப்பு வரி மூலம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மற்றொரு வழிமுறை இருக்கலாம். இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திற்குள் (Consolidated Fund of India) ஒரு வழிமுறை இருக்கலாம். சரக்கு மற்றும் சேவை வரியை செயல்படுத்திய பல வளர்ந்த நாடுகளில், ஆரம்பத்தில் இந்த வகையான செயல்முறை பின்பற்றப்பட்டது என்று நான் நினைக்கிறேன். ஒருபுறம், இந்த நாடுகள் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வந்த இழப்பீட்டை வழங்கின. இது ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய இழப்பீடு போன்றவை. மறுபுறம், இந்த நாடுகள் சிறப்பு தொகுப்புகள் வடிவில் தங்கள் ஒருங்கிணைந்த நிதிகள் (consolidated funds) மூலம் ஆதரவையும் வழங்கின.


பிரதிக் ஜெயின்: ஒரு தனி நிதியை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக வரி விதித்தது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரியின் ஒரு பகுதி தற்செயல் நிதிக்கு செல்லலாம். அங்கு ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட சூழ்நிலையைப் பொறுத்து,சரக்கு மற்றும் சேவை வரி  குழு நிதியை ஒதுக்க முடிவு செய்யலாம். மாநிலங்கள் இதை (விகிதக் குறைப்பு மற்றும் பகுத்தறிவு) ஒரு பெரிய சீர்திருத்தமாகப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்: இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதற்கும், அதிக உற்பத்தி மற்றும் அதிக முதலீட்டை இந்தியாவிற்குள் ஈர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த நடவடிக்கையாகும். ஆம், நீங்கள் வரி விகிதத்தை குறைக்கும்போது, ​​உங்கள் வரி அடிப்படை அதிகரிக்கிறது என்பதை பொருளாதார கோட்பாடுகள் மற்றும் கடந்தகால அனுபவங்கள் உங்களுக்குச் சொல்லும். ஆனால், வெளிப்படையாக, மாநிலங்கள் உண்மையில் இது எவ்வாறு உருவாகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எனவே, இந்த நேரத்தில், நிச்சயமாக சில பதட்டம் இருக்கும். இருப்பினும், அவர்கள் ஒன்றிணைந்து, எந்தவொரு வரி சீர்திருத்தத்தின் நீண்டகால நன்மைகளைப் பாராட்டவும் புரிந்துகொள்ளவும் வேண்டும்.


இதுவரை, சரக்கு மற்றும் சேவை வரி குழு அதன் வரலாற்றில் இரண்டு முறை ஒருமித்த கருத்துடன் அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி குழு உண்மையில் ஒன்றிய அரசு முன்மொழியும் மாற்றங்களைச் செயல்படுத்தும் என்றும், இதற்கு உடன்படாத மாநிலங்களால் வழி  மாறாமல் இருக்கவும் நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?


மனோஜ் மிஸ்ரா: அவர்கள் ஏற்கனவே நன்றாகத் தயாராகிவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில், பிரதமர் தனது சுதந்திர தின உரையில் இதை அறிவித்திருக்க மாட்டார். எனவே, சரக்கு மற்றும் சேவை வரி குழு விகிதக் குறைப்புகளை எதிர்க்கும் வாய்ப்பு மிகக் குறைவு. இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சில பேச்சுக்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வரிக் குறைப்புகளை அங்கீகரிக்காமல் இருப்பது மிகக் குறைவு என்று நான் நினைக்கிறேன்.


பிரதிக் ஜெயின்:  பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டார். பின்னர், பல அரசு அதிகாரிகளால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. சில ஒருமித்த கருத்து உள்ளது. உதாரணமாக, சில தயாரிப்புகள் 5% அல்லது 18% அடுக்கில் வர வேண்டுமா என்பது பற்றி விவாதங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது இதை எப்போது பயனுள்ளதாக்குவது என்பது பற்றிய விவாதங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் - ஒருமித்த கருத்துடன் இல்லாவிட்டால், ஒரு வாக்கெடுப்புடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். அடுத்து நடைபெறவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி குழு கூட்டத்தில் அது நடக்க மிகவும் வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் காண்கிறேன்.


மனோஜ் மிஸ்ரா, கிராண்ட் தோர்ன்டன் பாரத் பங்குதாரர்; பிரதிக் ஜெயின், பிரைஸ் வாட்டர்ஹவுஸ் & கோ LLP -ல் பங்குதாரர்.



Original article:

Share: