திறன் மேம்பாட்டில் உள்ள சவால்கள் - தினேஷ் சூத்

 பட்ஜெட் முன்மொழிவுகள்: அமலாக்கம் முக்கியமானது


மத்திய நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திறன் குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய, திறனை ஊக்குவிக்க மூன்று புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட மாதிரி திறன் கடன் திட்டம்


உயர்நிலை திறன் படிப்புகளுக்கான அதிகபட்ச கடன் தொகை ₹1.5 லட்சம் ரூபாயிலிருந்து ₹7.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டடுள்ளது.

இதில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 1.5% ஆக இருக்கும். இது மேம்பட்ட நிலை திறன் படிப்புகளை இளைஞர்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடன் அணுகல் மேம்பாடுகள்:

 

திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Skill Development and Employment (MSDE)) இப்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (non-banking finance companies (NBFCs)) குறு நிதி நிறுவனங்கள் (micro-finance institutions) ஆகியவற்றில் மாற்றங்களை செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் கடன் தொகையில் 75% வரை உத்தரவாதத்துடன் ₹7.5 லட்சம் ரூபாய்  வரை அடமானம் இல்லாத கடன் பெறலாம். ஆண்டுதோறும் 25,000 ஆர்வலர்களை ஆதரிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது. ஜூலை 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் (Credit Guarantee Fund Scheme), ₹1.5 லட்சம் ரூபாய் சிறிய கடன் அளவு கொண்டது. மேலும், தனியார் வங்கிகள் அரசாங்க திட்டங்களுக்கு நிதியளிப்பதில் மெதுவாக உள்ளன.  கடந்த பத்தாண்டுகளில் 10,077 கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ₹115.75 கோடி ரூபாய்  கடன்களை வழங்கியுள்ளன.


புதிய திறன் முயற்சிகள்


   நிதிநிலை அறிக்கையில், மாதிரி திறன் கடன் திட்டம் (Model Skill Loan Scheme) சுகாதாரம், அழகு-ஆரோக்கியம், தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, அறிவியல், மேகக் கணினி  பயன்பாடுகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல்,  அனிமேஷன், கேமிங், கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


    மேலும் நிதிநிலை அறிக்கையில், ₹ 60,000 கோடி  ரூபாய்  ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை சார்ந்த திறன்களை வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை  மேம்படுத்துவதை இது உள்ளடக்குகிறது. 500 சிறந்த நிறுவனங்களில் வேலை முன் ஏற்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும், இது ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது .இந்த திட்டம் இளைஞர்களின் வேலையின்மையைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும்  வேலை முன் ஏற்பாட்டிற்கான முயற்சிகள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு  மிகவும் பயனளிக்கும்.


எதிர்காலத்தில், நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயிற்சியாளர்களை எடுத்துக்கொள்வதற்கும், அவர்களின் பெருநிறுவன சமூக பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகள் மூலம் பயிற்சிக்கு நிதியளிப்பதற்கும் அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும். இந்த திட்டங்கள் பொருத்தமான அனுபவத்தை வழங்குவதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெரிதும் மேம்படுத்தும். இருப்பினும், அவற்றின் வெற்றி சரியான செயல்படுத்தல், செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறலைப் பொறுத்தது.


கட்டுரையாளர், ஓரேன் இன்டர்நேஷனலின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர். மேலும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எஸ்.டி.சி) பயிற்சி கூட்டாளர் ஆவார்.



Original article:

Share:

கேரளா தனது ஒற்றைப் பயிரிடுதல் முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா? -லாஸ்ய சேகர்

 வயநாடு பேரழிவு தரும் நிலச்சரிவுகளை எதிர்கொள்வதால், கேரளா தனது ஒற்றைப் பயிர் தோட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.


வயநாட்டின் விவசாய நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதன் விவசாய நடவடிக்கைகளில் 50%க்கும் அதிகமானவை. கூடுதலாக, ஒரு காலத்தில் மூங்கில் புதர்கள் இருந்த வயநாட்டின் காடுகளில் சுமார் 39% தேக்கு மற்றும் யூகலிப்டஸ் பயிர்களால் மாற்றப்பட்டுள்ளன. வயநாடு வனவிலங்கு சரணாலயம், வடக்கு வயநாடு வனப்பிரிவு மற்றும் தெற்கு வயநாடு வனப்பிரிவு ஆகிய மூன்று காடுகளில் 90,000 ஹெக்டேரில் 35,000 ஹெக்டேரில் தேக்கு, யூகலிப்டஸ் மற்றும் கருவேலம் பயிரிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கை காடுகளை அழித்து கேரள வனத்துறை அவற்றை நட்டது என்று வயநாடு இயற்கை பாதுகாப்பு மன்ற (Wayanad nature protection forum)) தலைவர் பதுஷா கூறினார்.


வயநாடு சுற்றுலாப் பயணிகளிடையே ஒரு பசுமை சொர்க்கமாக கொண்டாடப்பட்டாலும், வரையறுக்கப்பட்ட பல்லுயிர் பெருக்கத்தை வழங்கும் விரிவான தேயிலைத் தோட்டங்கள் காரணமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பசுமையான பாலைவனம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. மாவட்டத்தின் சமீபத்திய நிலச்சரிவுகள் அடைமழையால் தூண்டப்பட்டன. ஆனால் நிலப் பயன்பாடு மற்றும் ஒற்றைப் பயிர் சாகுபடியின் மாற்றத்தின் பங்கை நிராகரிக்க முடியாது.


விவசாய நிலங்களில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கு மற்றும் பிற பணப்பயிர்கள் வயநாட்டில் ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு முக்கிய எடுத்துக்காட்டுகள்.


ஜப்பானில் இருந்து 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, 'பல்லுயிர் பெருக்கம் ஆழமற்ற நிலச்சரிவு ஆபத்து குறைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்’ என்கிறது.  இது தாவரங்களின் இடஞ்சார்ந்த மற்றும் தற்காலிக நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதை வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஒற்றை கலாச்சாரத்தை நிலச்சரிவுகளுடன் இணைக்கும் நேரடி அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை என்றாலும், இதை கவனிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒரு சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கின்றனர்.


2018-ஆம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு தேயிலைத் தோட்டத்தின் விளிம்பில் ஏற்பட்டது. தேயிலைச் செடிகளின் வேர்கள் மண்ணுடன் பிணைக்க முடியாது. தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட நிலத்தின் கீழ் பகுதியில் மண்ணைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது, எனவே இது மேல் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்று சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான ஹியூம் மையத்தின் (Hume Centre for Ecology and Wildlife Biology) இயக்குனர் சி.கே.விஷ்ணு தாஸ் கூறினார்.


கேரளாவில் 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒற்றை வளர்ப்பு மரத் தோட்டங்களில் உள்ள மண்ணில் இயற்கை தாவரங்களிலிருந்து மாற்றப்பட்ட பிறகு குறைந்த மண்ணில் கரிம கார்பன் (கார்பனை வைத்திருக்கும் மண்ணின் திறன்) உள்ளது என்று கண்டறியப்பட்டது. ஒற்றை வளர்ப்பு மரத் தோட்டங்கள் உலகளவில் இரண்டு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


பல்லுயிர் இழப்பு மற்றும் கார்பனின் நிகர உமிழ்வுகள் மானுடவியல் நடவடிக்கைகள் மற்றும் புவியியல் காரணிகளின் கலவையால் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மண் குழாய் (soil piping) போன்ற புவியியல் பிரச்சினைகளால் நிலச்சரிவுகள் தூண்டப்படலாம். வயநாட்டின் மலைப்பாங்கான நிலப்பரப்பு, அதன் மெல்லிய மண் அடுக்கு, திட்டமிடப்படாத விவசாய முறைகளால் மாற்றப்படும்போது பேரழிவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகிறது  என்று கேரளாவில் ஒற்றைப் பயிர் தோட்டங்கள் குறித்த 2021 ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஜோ டி கூறினார்.


தேயிலை போன்ற நார்ச்சத்து வேர் அமைப்புகளைக் கொண்ட தாவரங்கள் மண்ணை திறம்பட வைத்திருக்க போராடுகின்றன. ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறை முதன்மைக் காரணியாக இல்லாவிட்டாலும், இது நிச்சயமாக மண் உறுதியற்ற தன்மைக்கு பங்களிக்கிறது என்று கூறினார். குறிப்பாக கேரளாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பலபயிர்ச் சாகுபடி (polyculture) ஊக்குவிக்க மாநில அரசை வலியுறுத்தினார்.


ஒற்றைப் பயிர் பெருந்தோட்டங்கள் நிலச்சரிவுகளுக்கு எளிதில் பாதிக்கப்படுவதற்கு பங்களிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். தேயிலைத் தோட்டங்களில், மண் அரிப்பு மிகவும் கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்" என்று வயநாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சமூக வேளாண் பல்லுயிர் மைய இயக்குநர் வி ஷகீலா கூறினார்.


ஒற்றைப் பயிரிடுதல் முறை ஏன்?


ஒற்றைப் பயிர்கள் பல்லுயிர் பெருக்கத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. மறுபுறம், ஒற்றைப் பயிரிடுதல் பல தலைமுறைகளாக பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் ஒருங்கிணைந்துள்ளது. 2021-22 -ஆம் ஆண்டில் இந்தியாவின் ரப்பர் உற்பத்தியில் 72%, ஏலக்காய் உற்பத்தியில் 91%, காபி உற்பத்தியில் 20.4% மற்றும் தேயிலையில் 4.5% கேரளாவின் பங்களிப்பு இருந்தது. 2013-ஆம் ஆண்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்நிய செலாவணிக்கான துறையின் பங்களிப்பு மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் காரணமாக கேரளா தோட்டத் துறையை ஊக்குவித்தது.


ஒரு காலத்தில் வீட்டுத் தோட்டங்களுக்கு பிரபலமாக இருந்த கேரளா, உலகளவில் தொழில்துறை விவசாயம் தொடங்கிய பிறகு ஒற்றை சாகுபடியை தேர்ந்தெடுத்தது. பணப்பயிர்களான ரப்பர், தென்னை, பாக்கு, தேயிலை, மிளகு போன்றவை அதிக அளவில் பயிரிடப்பட்டன.


ஒற்றைப் பயிர் சாகுபடி விவசாயத்தை லாபகரமாக்குகிறது. கேரளாவின் தொழிலாளர் செலவு நாட்டிலேயே மிக அதிகம். ஒற்றை வளர்ப்பு விவசாயிகளுக்கு அவர்களின் இடுபொருள் செலவைக் குறைக்க உதவுகிறது, மேலும் இயந்திரமயமாக்கவும் எளிதானது என்று ஷகீலா கூறினார்.


1853-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்ட வயநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் விவசாய சவால்களை முன்வைக்கின்றன. "பலாப்பழம் மற்றும் புளி போன்ற பல்வேறு உள்நாட்டு மரங்களை ஆதரிக்கக்கூடிய காபி தோட்டங்களைப் போலல்லாமல்,  "தேயிலை தோட்டங்கள் " அத்தகைய பன்முகத்தன்மைக்கு இடமளிக்க முடியாது" என்று ஷகீலா கூறினார். நிழல் வழங்கும் மரங்கள் தேயிலை இலைகளின் தினசரி அறுவடை பயிர் பல்வகைப்படுத்தலை சாத்தியமற்றதாக ஆக்குகிறது மற்றும் விளைச்சலை பாதிக்கிறது.


முன்னோக்கி செல்லும் வழி


பிப்ரவரி 2024-ல், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (Union commerce and industry ministry) கேரளாவில் ரப்பரை நடவு செய்ய அல்லது மறு நடவு செய்வதற்கான மானியத்தை தற்போதைய தொகையான ரூ.25,000-லிருந்து ரூ.40,000ஆக உயர்த்த ஒப்புதல் அளித்தது. தேயிலை உர மானியம் ஒரு வாரத்திற்கு முன்பு ₹2000 லிருந்து ₹4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஒற்றைப்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பொருளாதார பலன்களை அளிக்கிறது. கேரள மாநில பல்லுயிர் உத்திகள் மற்றும் கேரள மாநில பல்லுயிர் உத்திகள் மற்றும் செயல் திட்டம் 2022-32ன் படி, மாநிலம் வீட்டு நிலங்களில் பல பயிர் சாகுபடி முறையை ஊக்குவிக்க உள்ளது. "உணவு பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை, குறிப்பாக பழங்குடியினர் / இன சமூகங்கள், பச்சை இலைகள் மற்றும் பிற காய்கறிகள் மற்றும் கிழங்குகள், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு சாத்தியமுள்ளவை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டு பிரபலப்படுத்தப்பட வேண்டும்," என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


இந்த உத்திகள் அடிமட்ட அளவில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "செயல் திட்டம் பலபயிர்ச் சாகுபடி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அதற்காக மாநிலத்தில் எந்தக் கொள்கைகளும் இல்லை" என்று பாதுஷா கூறினார்.


எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (M S Swaminathan Research Foundation (MSSRF) போன்ற அமைப்புகள் வேளாண் காடுகளை ஆதரித்து வருகின்றன. "நிலையான விவசாய நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கற்பிப்பதற்காக நாங்கள் வழக்கமான பயிற்சி அமர்வுகளை நடத்துகிறோம். பலபயிர்ச் சாகுபடியை ஊக்குவிக்க, பல்வேறு பாரம்பரிய காய்கறி வகைகளின் விதைகளை இலவசமாக வழங்குகிறோம். பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் விவசாயிகளையும் நாங்கள் அங்கீகரித்து விருது வழங்குகிறோம்" என்றார் ஷகீலா.


ஒரு சில பகுதிகளில், சுகுமாரன் உன்னி போன்ற விவசாயிகள் உள்நாட்டு பலபயிர்ச் சாகுபடியில் கவனம் செலுத்துகின்றனர். "ஒற்றை விவசாயம் இந்திய விவசாயத்தின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை. எனது ஐந்து ஏக்கர் நிலத்தில், காபி, மிளகு, மஞ்சள் மற்றும் இஞ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை வளர்க்கிறேன், "என்று அவர் இந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார்.



Original article:

Share:

முஹம்மது யூனுஸுக்கு முன்பு, தங்கள் நாட்டை வழிநடத்திய நோபல் பரிசு வெற்றியாளர்கள் -அர்ஜுன் சென்குப்தா

 2006-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை (Nobel Peace Prize) வென்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தை (interim government) வழிநடத்த உள்ளார். ஆனால், தனது நாட்டை வழிநடத்தும் முதல் நோபல் பரிசு பெற்றவர் இல்லை.


2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் இன்று காலை டாக்கா வந்தடைந்தார். அவர், இன்று இரவு 8 மணியளவில் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்க உள்ளார்.


பின்னர் தங்கள் நாட்டை வழிநடத்தும் முதல் நோபல் பரிசு பெற்ற நபராக யூனுஸ் ஆக மாட்டார். அவருக்கு முன் ஐந்து பேர் இதைச் செய்திருக்கிறார்கள்.


1.லெஸ்டர் பி பியர்சன், கனடா (1897-1972)


பியர்சன் 1963 முதல் 1968 வரை கனடாவின் பிரதமராகவும், லிபரல் கட்சியின் (Liberal Party) தலைவராகவும் இருந்தார். ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தி வந்தாலும், அவர் ஒரு தேசிய ஓய்வூதியத் திட்டம் (national pension plan), ஒரு குடும்ப உதவித் திட்டத்தை (family assistance program) அறிமுகப்படுத்தியதுடன், முதியோர் பாதுகாப்பு நலன்களை (old-age security benefit) விரிவுபடுத்தினார். மேலும், கனடாவில் அனைவருக்குமான சுகாதாரத்திற்கான (universal healthcare) அடித்தளத்தை அமைத்தார். சூயஸ் நெருக்கடியைத் (Suez Crisis) தீர்ப்பதில் பியர்சன் வகித்த பங்கிற்காக 1957-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.


ஜூலை 26, 1956 அன்று, எகிப்து ஜனாதிபதி கமால் அப்தெல் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். அதுவரை, பிரெஞ்சு மற்றும் இங்கிலாந்துக்கு சொந்தமான சூயஸ் கால்வாய் நிறுவனத்தின் (Suez Canal Company) கீழ் இருந்தது. ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலான இணைப்பாக கால்வாயின் உத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கமால் அப்தெல் நாசரின் முடிவு சர்வதேச பதட்டங்களை தூண்டியது. இது பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் இறுதியில் கால்வாயை பாதுகாக்க ஒரு இராணுவ நடவடிக்கையை தொடங்கின.


ஒரு தொழில்முறை இராஜதந்திரியான பியர்சன், கனடாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் மற்றும் சூயஸ் நெருக்கடி வெடித்தபோது ஐக்கிய நாடுகள் சபைக்கான நாட்டின் பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கினார். ஆரம்பத்தில், அவர் ஒரு இராஜதந்திர தீர்வைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தினார். ஆனால், அக்டோபரில் போர் தொடங்கிய பின்னர், ஐக்கிய நாடுவின் முதல் பெரிய அளவிலான அமைதிப் படையின் (peacekeeping force) யோசனையை அவர் முன்மொழிந்தார். நவம்பரில் அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த பிறகு, பியர்சன் ஒரு தீர்வை முன்மொழிந்தார். இந்தத் தீர்வு, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற அனுமதிக்கும் அதே வேளையில், அவர்கள் தோற்கடிக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பியர்சனை "உலகைக் காப்பாற்றினார்" (saved the world) என்று நோபல் தேர்வுக் குழு (Nobel selection committee) பாராட்டியது.


2. லெக் வலேசா (Lech Walesa) (பிறப்பு 1943)


வலேசா 1990-95 வரை போலந்தின் ஜனாதிபதியாக பணியாற்றிய இவர், 1926-க்குப் பிறகு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார். ஒரு கம்யூனிச அதிருப்தியாளரான அவர், 1989-ல் போலந்தில் கம்யூனிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த Solidarity தொழிற்சங்கத்தை நிறுவி வழிநடத்திய கப்பல் கட்டும் தள மின்சார வல்லுநராக (shipyard electrician) இருந்தார். போலந்தில் சுதந்திரமான தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அகிம்சை போராட்டத்திற்காக 1983-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.


1967-ல் க்டான்ஸ்க் கப்பல் கட்டும் தளத்தில் (Gdansk shipyard) வேலை செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்தே, அவர் தொழிலாளர் செயல்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1970-களில், அவரும் இதே போன்ற செயல்பாட்டாளர்களும் அடிக்கடி தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் கம்யூனிஸ்ட் அல்லாத, அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களை அமைப்பதால், அவர்கள் அரசாங்கத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 1980-ல், Wałęsa Gdansk கப்பல் கட்டும் தளத்தில் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார். இந்த வேலைநிறுத்தம் விரைவில் நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பரவியது, வலேசா இதற்கு தலைவராக இருந்தார். பின்னர், அதிகாரிகள் இறுதியில் ஒப்புக்கொண்டதால், ஆகஸ்ட் 31 அன்று, புதிய Gdansk ஒப்பந்தம் (Gdansk Agreement) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கும் அவர்களது சொந்த சுதந்திர தொழிற்சங்கத்தை (own independent union) அமைப்பதற்கும் உரிமையை வழங்கியது.


இருப்பினும், 1981-ல், வலேசாவின் ஒற்றுமையால் தொழிற்சங்கம் தடை செய்யப்பட்டது. இதனால், வலேசா கைது செய்யப்பட்டு, அவர் 1982-ல் கடுமையான கண்காணிப்பில் விடுவிக்கப்பட்டார். ஆயினும்கூட, அவர் தனது செயல்பாட்டைத் தொடர்ந்தார். இது மக்கள் செல்வாக்கற்ற கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இறுதியில், சோவியத் ஒன்றியம் பலவீனமடைந்ததால், போலந்து அரசாங்கம் வலேசாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது மற்றும் 1990-ல் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டன.


3. ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) (பிறப்பு 1945)


2010-களில் இராணுவ ஆட்சியிலிருந்து, பகுதி ஜனநாயகத்திற்கு மியான்மர் மாறுவதற்கு வழிவகுத்த பின்னர் 2016 முதல் 2021 வரை மியான்மரின் மாநில ஆலோசகராக சூகி பணியாற்றினார். மியான்மரில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடியதற்காக 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 1988 எழுச்சியின் போது சூகி இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கை (National League for Democracy (NLD)) நிறுவியபோது முக்கியத்துவம் பெற்றார். 1990 தேர்தலில், ஜனநாயகத்திற்கான தேசிய லீக் நாடாளுமன்றத்தில் 81% இடங்களை வென்றது. ஆனால், இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தை ஒப்படைக்க மறுத்தது. இது மியான்மரின் நிலைமை குறித்து சர்வதேச அளவில் கலவரத்திற்கு வழிவகுத்தது. 1989 மற்றும் 2010-க்கு இடையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இது அவரை உலகின் மிக முக்கியமான அரசியல் கைதிகளில் ஒருவராகவும், உலகளாவிய தெற்கில் ஜனநாயகத்திற்கான சின்னமாகவும் ஆக்கியது. 2015-ல் ஆட்சிக்கு வந்த பின்னர், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் (Rakhine state) ரோஹிங்கியா மக்கள் துன்புறுத்தப்படுவதற்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் மறைமுகமாக ஆதரவளித்ததற்காக சூகி பரவலான கண்டனங்களைப் பெற்றார். 2021-ல், ஒரு சதி ஏற்பட்டது, இராணுவம் மீண்டும் மியான்மரைக் கைப்பற்றியது. இந்த சதிப்புரட்சியை தொடர்ந்து சூகி கைது செய்யப்பட்டார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் இப்போது 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.


4. நெல்சன் மண்டேலா, (1918-2013) தென்னாப்பிரிக்கா


நெல்சன் மண்டேலா 1994 முதல் 1999 வரை தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றினார். இவர், நாட்டின் முதல் பல இன தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின ஜனாதிபதியாக ஆவார். 1993-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரடெரிக் வில்லெம் டி கிளர்க்குடன் (Frederik Willem de Klerk) இணைந்து "நிறவெறி ஆட்சியை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஒரு புதிய ஜனநாயக தென்னாப்பிரிக்காவிற்கான அடித்தளங்களை அமைத்ததற்காகவும்" அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


1943-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் (African National Congress) மண்டேலா சேர்ந்தார். பின்னர் 1958-ல் தேசியக் கட்சியால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தென்னாப்பிரிக்காவில் இனப் பிரிவினைக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1956 தேசத்துரோக விசாரணையிலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது, ஆனால் விசாரணை வெற்றிபெறவில்லை.


இறுதியில், 1962-ம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அடுத்த 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார். இந்த காலகட்டத்தில், அவர் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தில் எதிர்ப்பின் அடையாளமாக சர்வதேச அளவில் பிரபலமானார். நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச அழுத்தம் அதிகரித்தபோது, தென்னாப்பிரிக்காவில் இனவெறி உள்நாட்டுப் போர் பற்றிய அச்சங்கள் மிகவும் அழுத்தமாக மாறியபோது, டி கிளர்க் (de Klerk) 1990-ல் மண்டேலாவை விடுவித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில், இருவரும் நிறவெறிக்கு அமைதியான முடிவுக்கு பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஜோஸ் ராமோஸ் ஹோர்டா (பிறப்பு 1949)


ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா 2022 முதல் கிழக்கு திமோரின் (East Timor) ஜனாதிபதியாக இருந்து வருகிறார். முன்னதாக அவர் 2007 முதல் 2012 வரையும், 2006 முதல் 2007 வரை பிரதமர் பதவியையும் வகித்தார். 1996-ம் ஆண்டில் "கிழக்கு திமோரில் மோதலுக்கு நியாயமான மற்றும் அமைதியான தீர்வை நோக்கி" பணியாற்றியதற்காக கார்லோஸ் பிலிப் சிமெனெஸ் பெலோவுடன் (Carlos Filipe Ximenes Belo) இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.


திமோர் தீவு ஆஸ்திரேலியாவின் வடக்கிலும், இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் தென்கிழக்கிலும் அமைந்துள்ளது. காலனித்துவ நூற்றாண்டில், டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் தீவை பாதியாக பிரித்தனர். 1949-ம் ஆண்டில் டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவின் சுதந்திரத்தை முறையாக அங்கீகரித்த பின்னர் தீவின் மேற்குப் பகுதி இந்தோனேசியாவுக்குச் சென்றது. 1975 வரை போர்த்துக்கேயர்கள் கிழக்கு திமோரை நிர்வகித்தனர். இருப்பினும், போர்த்துகீசிய ஆட்சியின் முடிவில், இந்தோனேசியா முழு தீவையும் ஆக்கிரமித்தது.


இவ்வாறு கிழக்கு திமோரை விடுவிக்க ஒரு எதிர்ப்பு இயக்கம் தொடங்கியது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு மோதல் தொடர்ந்தது. ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா கிழக்கு திமோரின் சுதந்திரத்திற்காக உலகம் முழுவதும் சென்று மன்றாடிய எதிர்ப்பின் தலைவர்களில் ஒருவர் ஆவார். 1992-ம் ஆண்டில் அவர் ஒரு அமைதித் திட்டத்தை (peace plan) முன்வைத்தார். இது இறுதியில் கிழக்கு திமோரிலிருந்து இந்தோனேசியர்கள் வெளியேறுவதற்கும் அதன் மக்களின் சுயமாக முடிவெடுப்பதற்கும் அடித்தளமாக அமைந்தது. 2002-ம் ஆண்டில், திமோர்-லெஸ்டே (Timor-Leste) என்றும் அழைக்கப்படும் கிழக்கு திமோர் 21-ம் நூற்றாண்டின் முதல் புதிய இறையாண்மை கொண்ட நாடாக மாறியது.



Original article:

Share:

இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உணவுப் பணவீக்கம் கொள்கைப் பாதையை வகுக்கும் -Editorial

 பயிர்கள் அறுவடை மற்றும் புதிய கிடங்கு (mandi) வரவு காரணமாக, விலை குறையத் தொடங்கும். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) உணவு விலைக் குறியீட்டின் (food price index) மூலம் குறிப்பிட்டப்படி, உலகளாவிய உணவு விலைகள் ஏற்கனவே ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


ஆகஸ்ட் கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (monetary policy committee(MPC)) வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கவும், அதன் இருப்பைத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டை பராமரிக்கவும் முடிவு செய்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டால் (consumer price index) அளவிடப்படும் மொத்த சில்லறை பணவீக்கம், மே மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகரித்துள்ளது. இதற்கு முன், ​​இரண்டாவது காலாண்டில் விலைகளில் சாதகமான நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. முழு ஆண்டுக்கான பணவீக்கத்தை 4.5 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனை தொடர்ந்து வளர்ச்சியானது, இந்த ஆண்டு பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நாணயக் கொள்கைக் குழு (monetary policy committee(MPC)) கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது கருத்துக்களில், "பணவீக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும்" என்றும், "நீடித்த அடிப்படையில் பணவீக்கத்தின் இலக்கான 4 சதவீதத்திற்கு சீரமைப்பதில்" கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


ஜூன் மாதத்தில், உணவு விலைக் குறியீடு (food price index) முந்தைய மாதத்தில் 8.69% லிருந்து 9.36% ஆக அதிகரித்துள்ளது. தானியங்கள் (cereals), பருப்பு வகைகள் (pulse) மற்றும் காய்கறிகள் (vegetables) போன்ற உணவு வகைகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. அதிக உணவு பணவீக்கத்தால், வீட்டு உபயோகப் பொருட்களின் பணவீக்கத்தின் (household inflation) எதிர்பார்ப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கவலைகள் உள்ளன. சமீபத்திய மாதங்களில், அதிக உணவு விலைகள் காரணமாக பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார். உணவு பணவீக்கம் அதிகமாக இருந்து அதன் எதிர்பார்ப்புகள் இணைக்கப்படாமல் இருந்தால், அது முக்கிய பணவீக்கமாகப் (core inflation) பரவக்கூடும். உணவு மற்றும் எரிபொருளை உள்ளடக்காத முக்கிய பணவீக்கம் (core inflation) ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. உண்மையில், சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டது போல், முக்கிய பணவீக்கம் மே மற்றும் ஜூன் மாதங்களில் 3.1 சதவிகிதம் "வரலாற்றுக் குறைவாக" (historic low) இருந்தது. இந்த நிலைமை முக்கிய பணவீக்கத்திற்கும் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.


முக்கியப் பொருளாதாரங்களில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளன. ஜூன் மாதத்தில், ஐரோப்பிய மத்திய வங்கி (European Central bank) வட்டி விகிதங்களைக் குறைத்ததுடன், சமீபத்தில், இங்கிலாந்து வங்கியும் (Bank of England) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் (US Federal Reserve) தனது செப்டம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகித குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்திய, அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவு (US labour market data) எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக இருந்தது. இது பெடரலால் ஆழமான விகித வெட்டுக்களை எதிர்பார்க்க வழிவகுத்தது. அடுத்த, நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் அக்டோபரில் நடைபெற உள்ளது. இது, பயிர் அறுவடை மற்றும் புதிய கிடங்கு வரவுகளால் விலை குறைய ஆரம்பிக்கலாம். உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உணவு விலைக் குறியீட்டின்படி (food price index) உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் ஜூலை மாதத்தில் குறைந்தன. இது உணவுப் பணவீக்கப் போக்குகளைப் பற்றிய தெளிவான பார்வையை நாணயக் கொள்கைக் குழுவுக்கு (MPC) அளிக்கும். இதன் விளைவாக, வட்டி விகித மாற்றங்களைக் கணிப்பது எளிதாக இருக்கும்.



Original article:

Share:

ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார். இந்தியாவின் அகதிகள் கொள்கை என்ன?

 அகதிகள் குறித்து அதிகாரப்பூர்வ கொள்கை இல்லாத போதிலும், முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டில் தங்க அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அகதிகள் அனுமதிக்கப்படும்போது என்ன கேள்விகள் எழுகின்றன, அவர்கள் திரும்புவதற்கு எந்த விதிகள் வழிகாட்டுகின்றன?


ஐக்கிய இராச்சியம் (United Kingdom) செல்வதற்கான அவரது திட்டங்கள் "தொழில்நுட்ப  தடையை" எதிர்கொண்டதால், முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறிது காலம் இந்தியாவில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. ஹசீனா தனது அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பங்களாதேஷில் இருந்து தப்பி இந்தியா வந்தார்.


ஹசீனாவும் அவரது சகோதரியும் தங்கள் குடும்பம் வசிக்கும் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், ஒரு நபர் இங்கிலாந்தில் இருந்தால் மட்டுமே புகலிடக் கோரிக்கைகளை செயல்படுத்த முடியும் என்று இங்கிலாந்து குடியுரிமை விதிகள் கூறுகின்றன. ஹசீனா அங்கு பயணம் செய்வதற்கான விசாவையும் கொண்டிருக்கவில்லை.


அதிகாரப்பூர்வ அகதிகள் கொள்கை இல்லாத போதிலும், ஹசினாவை தங்க அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அகதிகளால் ஏற்படும் பிரச்சினை இதற்கு முன்பும் வந்துள்ளது, குறிப்பாக, மியான்மரில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் வந்த போதும் நடந்தது.


அகதி என்பவர் யார்?


அகதிகளின் நிலை குறித்த 1951-ஆம் ஆண்டில் நடைபெற்ற  ஐ.நா மாநாடு மற்றும் 1967 நெறிமுறையின்படி, ஒரு அகதி என்பவர் இனம், மதம், தேசியம், சமூகக் குழு அல்லது அரசியல் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு பயந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத ஒருவர் ஆவார். இதில் நாடற்ற நபர்களும் அகதிகளாக இருக்கலாம், அங்கு பிறந்த நாடு வசிப்பிடத்தின் நாடு  என்று புரிந்து கொள்ளப்படுகிறது.


ரோஹிங்கியா நெருக்கடியை உலகின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி என்று ஐ.நா விவரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டில் மியான்மரின் ராக்கைன் மாநிலத்தை விட்டு வெளியேறிய ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமை உருவாக்கினர். பெரும்பாலும் முஸ்லிம்களாக இருக்கும் ரோஹிங்கியாக்களை பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களாக மியான்மர் கருதுகிறது.


ரோஹிங்கியா அகதிகளுக்கு இந்தியாவின் பதில்


இந்தியாவுக்கு தப்பிச் சென்ற சுமார் 40,000 ரோஹிங்கியாக்களுக்கு இந்தியா தெளிவற்ற பதிலைக் கொண்டுள்ளது. அவர்களின் நிலையை சரிபார்க்கவும் சில அடையாள அட்டைகளை வழங்கவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (United Nations High Commissioner for Refugees (UNHCR)) அரசாங்கம் அனுமதி அளித்தது. ஆனால், ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (solicitor-general) துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் அவர்களை சட்டவிரோத குடியேறியவர்கள் என்று குறிப்பிட்டார். பொது மற்றும் அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் அவர்களை நாடுகடத்த வேண்டும் என்று கோருகின்றன.


இந்தியா & ஐ.நா மாநாடு


திபெத்தியர்கள், பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் உட்பட கிட்டத்தட்ட 3,00,000 அகதிகளை இந்தியா கடந்த காலங்களில் ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியா 1951-ஆம் ஆண்டில் ஐ.நா மாநாடு அல்லது 1967 நெறிமுறையில் கையெழுத்திடவில்லை, மேலும் ஒரு குறிப்பிட்ட அகதிகள் கொள்கை அல்லது சட்டம் இல்லை.


இது அகதிகளைக் கையாள்வதில் இந்தியாவுக்கு நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. அரசாங்கம் அகதிகளை சட்டவிரோத குடியேறியவர்களாக வகைப்படுத்தி வெளிநாட்டினர் சட்டம் (The Foreigners Act) அல்லது இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் (Indian Passport Act) கீழ் நிவர்த்தி செய்யலாம். மதத்தின் அடிப்படையில் வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) 2019 அகதிகள் கொள்கைக்கு மிக நெருக்கமான இந்தியாவைக் கொண்டுள்ளது.


நாடு கடத்தல் மற்றும் திருப்பி அனுப்பாமை


2021-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ரோஹிங்கியாக்கள் சட்டவிரோத குடியேறியவர்கள் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் ஆதரித்தது. 300 ரோஹிங்கியா உறுப்பினர்களை தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற மனுவை நிராகரித்தது. 1946-ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.


2021-ஆம் ஆண்டில் அசாமில் இருந்து 14 வயது ரோஹிங்கியா சிறுமியை நாடு கடத்துவதற்கான தோல்வியுற்ற முயற்சியால் நாடு கடத்தப்படுவது சிக்கலானது என்பதைக் காட்டுகிறது. மியான்மர் அவரை ஏற்க மறுத்தது. சட்டபூர்வமாக நாடு கடத்தப்படுவதற்கு மற்ற நாடு, நாடுகடத்தப்பட்டவரை தனது சொந்த குடிமகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். காக்ஸ் பஜாரில் இருந்து ரோஹிங்கியாக்களை திரும்ப அழைத்துச் செல்ல மியான்மரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்தன. மேலும்,  இந்தியா ஒரு சிலரை மட்டுமே சிரமத்துடன் திருப்பி அனுப்ப முடிந்தது.


ஆனால் இந்தியாவில் உள்ள ரோஹிங்கியாக்களை "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என அடையாளம் கண்டு, அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதாக உறுதியளித்ததில், இந்தியா கையொப்பமிட்டதாகக் கூறப்படும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை போன்ற "மீள்நிரப்பாத" (non-refoulement) கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. மறுபரிசீலனை செய்யாதது என்பது, எந்த ஒரு அகதியும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் எந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.


2018-ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியா இந்த கொள்கை நீர்த்துப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது, மேலும் அகதி அந்தஸ்து வழங்குவதற்கான தடையை உயர்த்துவதற்கு எதிராக வாதிட்டது.


அகதிகளை வித்தியாசமாக நடத்துதல்


இந்தியா பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை வித்தியாசமாக நடத்துகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விஷயத்திலும் தெரிகிறது. அவர்களில் பலர் தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகிறது மற்றும் அவர்கள் வேலை தேடவும், அவர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும் அனுமதிக்கிறது. 2009-ஆம் ஆண்டு தொடங்கிய போர் தற்போது முடிவடைந்த நிலையிலும், அவர்கள் தானாக  முன்வந்து நாடு திரும்பும் முறையை இந்தியா ஊக்குவித்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர்(UNHCR) தன்னார்வ திருப்பியனுப்புதல் மற்றும் திரும்பி வருபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது அதன் சொந்த மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க உதவுவதற்கு பிறப்பிடமான நாட்டின் முழு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.



Original article:

Share:

அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்தியாவிற்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது.

 பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana), 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வரி நிதியளிக்கப்பட்ட தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் (national health insurance scheme) உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், ஏழை மற்றும் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு, வருமானத்தை தாண்டிய செலவுகள் உள்ளது.


வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச பொது சுகாதார காப்பீடு வழங்குவது அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) அடைவதற்கு முக்கியமானது. ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவ சேவையை அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவில் பயன்பெறவும், இந்திய அரசாங்கம் 2008-ல் ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (Rashtriya Swasthya Bima Yojana (RSBY)) எனப்படும் வரி-நிதி சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் 2008-ல் 1% க்கும் குறைவான சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்கியது. 2018-ல் அரசாங்கம் காப்பீட்டுத் தொகையை 12%-ஆக உயர்த்தியது. இருப்பினும், இது கைமீறிய செலவை (Out-of-Pocket Expenditure (OOPE)) குறைக்கவில்லை.


ஏழைக் குடும்பங்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் 2018-ல் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய (Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)) யோஜனாவைத் தொடங்கியது. இந்தத் திட்டம் 500 மில்லியன் மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. இந்த திட்டத்தால் 40% ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா முந்தைய ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தை மேம்படுத்தி, பாதுகாப்பு வரம்பை ரூ. 30,000 லிருந்து ரூ. 500,000 ஆக உயர்த்தி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்புக்கான கூடுதல் சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு (socio-economic caste census (SECC)) 2011-ன் பற்றாக்குறை மற்றும் தொழில்சார் அளவுகோல்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் பயனடைவதில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா நோக்கமாகக் கொண்டுள்ளது.


பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பொது சுகாதார காப்பீட்டில் உள்ள இடைவெளிகளை எந்தளவுக்கு நிவர்த்தி செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் செயல்திறனை மதிப்பிடுவது முக்கியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022-23ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (household consumption expenditure survey (HCES)) தரவுகளின்படி, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில குறிப்பிட்ட காப்பீடு உள்ளிட்ட பொது சுகாதார காப்பீட்டுத் திட்டங்களின் பாதுகாப்பு அதிகரித்திருந்தாலும், அது இன்னும் குறைவாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தக் குழுவில் 30%-க்கும் குறைவானவர்களே பாதுகாக்கப்படுகிறார்கள். மக்கள் தொகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 50 கோடி பேரில் சுமார் 13 கோடி பேர் காப்பீடு செய்துள்ளதாக வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவு தெரிவிக்கிறது. கூடுதலாக, மொத்த பொது சுகாதார காப்பீட்டில் 50%-க்கும் அதிகமானவை அதிக வருமானம் உள்ளவர்களுக்கு செல்கிறது.


 மருத்துவமனை சேவைகளைப் பயன்படுத்திய ஏழ்மையான 40% மக்களில் சுமார் 25% பேர் பொது சுகாதாரக் காப்பீட்டை பயன்படுத்தினர். காப்பீடு உள்ளவர்களில், 34% பேர் பலன்களைப் பெற்றனர். மாறாக, அதிக வருமானக் குழுக்களில் உள்ள 36% பேர் பலன்களைப் பெற்றனர். 2017-18-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவக் காப்பீட்டின் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்தாலும், ஒட்டுமொத்தப் பயன்பாடு குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு மற்றும் மருத்துவ சேவைகளுக்கான விநியோகம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் மேலும் ஆராயப்பட வேண்டும்.


கணக்கெடுப்பு தரவுகளின் பகுப்பாய்வு, குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுடன் ஒப்பிடும்போது நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வருவாய் குழுக்கள் பொது சுகாதார காப்பீட்டு திட்டங்களில் (public health insurance programs) அதிகம் பங்கேற்கின்றன என்பதை தரவு முடிவுகள் காட்டுகிறது. இந்தப் போக்கு பல மாநிலங்களில் உள்ள முழு மக்களுக்கும் பொது காப்பீடு நீட்டிக்கப்படுவதால் இருக்கலாம். ஆனால், காரணங்கள் மேலும் ஆராயப்பட வேண்டும்.


வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவுகள் 68% மருத்துவமனை நோயாளிகள் அரசாங்க வசதிகளில் சிகிச்சை பெற்றதாகக் காட்டுகிறது. இதன் பொருள் பொது சுகாதார காப்பீடு உள்ளவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை சிகிச்சை பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்த முறை 2017-18 ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. கூடுதலாக, பொது சுகாதார காப்பீடு இல்லாதவர்களில் 50%-க்கும் அதிகமானோர் அரசாங்க சலுகைகளை பயன்படுத்தினர். காப்பீடு  இருந்தாலும், உள்நோயாளிகள் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். 


அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பை (Universal Health Coverage (UHC))    அடைவதற்கு, கைமீறிய செலவை (Out-of-Pocket Expenditure (OOPE)) தடுக்க நிதிப் பாதுகாப்பை வழங்க வேண்டும். தேசிய மாதிரி அலுவலகம் ஆய்வகத்தின் (National Sample Survey Office (NSSO)) 75-வது கணக்கெடுப்பின் படி 2018, முதல் இரண்டு உயர் நிலைகளில் உள்ளவர்கள் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளர் பராமரிப்பு இரண்டிற்கும் கடைசி இரண்டு நிலைகளில் உள்ளவர்களை விட அதிக கைமீறிய செலவை எதிர்கொண்டனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும், 2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவு, உள்நோயாளிகளுக்கான சேவைகளுக்காக குறைந்த வருமானத்திலிருந்து உயர் வருமானக் குழுக்களுக்கு இந்த சுமை மாற்றப்படுவதைக் சுட்டிக்காட்டுகிறது. குறைந்த வருமானக் குழுக்களுக்கு கைமீறிய செலவுகளில் (OOPE) பொது சுகாதார காப்பீட்டின் நேர்மறையான தாக்கத்தை இது அறிவுறுத்துகிறது. ஆனால், உயர்ரக பரிசோதனை தேவை. வெளிநோயாளர் பராமரிப்புக்கான நிதிச் சுமை மாறாமல் உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் இன்னும் அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன.


வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவுகள், ஏழ்மையான 40% மக்களுக்கு மருத்துவமனை செலவுகள் குறைந்துள்ளதாகக் காட்டினாலும், அவர்கள் இன்னும் மருத்துவமனை பராமரிப்புக்காக அதிகம் செலவுசெய்கின்றனர். சராசரியாக, அனைத்து வருமானக் குழுக்களிலும் உள்ளவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக ஒரு நபருக்கு ரூ.6,700 செலவிடுகிறார்கள். இது 2023 தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) அறிக்கையுடன் பொருந்துகிறது, பொது சுகாதார காப்பீட்டில் பயனடைபவர்கள் இன்னும் சில செலவுகளை தங்கள் சொந்த நிதியில்  இருந்து செலுத்த வேண்டும் என்று கண்டறியப்பட்டது.


2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (household consumption expenditure survey (HCES)) தரவு, இந்தியாவில் அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) நோக்கிய முன்னேற்றம் இரண்டு முக்கிய பகுதிகளில் மெதுவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. இலக்கு மக்கள்தொகை பாதுகாப்பு. ஏழை 40% மக்களுக்கான பாதுகாப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. நிதிப் பாதுகாப்பு, மிகக் குறைந்த இரண்டு வருமானக் குழுக்களில் உள்ளவர்கள் அதிக மருத்துவச் செலவுகளை செய்கின்றனர்.


2022-23-வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு தரவானது கேள்விகள் மற்றும் கால இடைவெளிகளின் காரணமாக, 2017-18 முதல் தேசிய மாதிரி அலுவலகம் ஆய்வகத்தின் (National Sample Survey Office (NSSO)) 75-வது கணக்கெடுப்புடன் நேரடியாக ஒப்பிடப்படவில்லை என்றாலும், ஒரு பரந்த ஒப்பீடு மெதுவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பொது சுகாதாரக் காப்பீட்டில் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வருமானக் குழுக்கள் அதிகமாகப் பங்குபெறும் அதே வேளையில், குறைந்த வருமானக் குழுக்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. பயனாளிகளைக் கண்டறிந்து சேர்ப்பதில் உள்ள சிரமங்கள், குறைந்த பாதுகாப்பு மற்றும் பலவீனமான நிதிப் பாதுகாப்பு போன்ற முந்தைய தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதை இந்தச் சிக்கல்கள் எடுத்துக்காட்டுகின்றன.


கட்டுரையாளர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான  மையத்தில் (Centre for Social and Economic Progress (CSEP)) சுகாதாரப் பிரிவில் ஆராய்ச்சி இணையாளராக உள்ளார்.



Original article:

Share:

வக்ஃபு சட்டத்தில் சர்ச்சைக்குரிய திருத்தங்கள் என்னென்ன? அதன் தாக்கங்கள் என்ன? -ஆர்த்ரிகா பௌமிக்

 'வக்ஃபு' சொத்துக்களை (‘waqf’ properties) ஒழுங்குபடுத்துவதில் பெரும் மாற்றங்களை முன்மொழியும் மசோதா ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் சர்ச்சைக்குரிய விதிகளுக்கு முஸ்லிம் அமைப்புகள் ஏன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன? மற்றும் இதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?


வக்ஃப் சட்டம்-1995 (Waqf Act-1995) ஐ திருத்தம் செய்வதற்கான புதிய மசோதாவை ஒன்றிய அரசு ஆகஸ்ட் 8-ம் தேதி வியாழக்கிழமை, மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மூலம், வக்ஃப் சொத்துக்கள் மீதான ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலமும், முஸ்லிம் அல்லாதவர்களை முதல் முறையாக வக்ஃப் வாரியங்களில் சேர அனுமதிப்பதன் மூலமும் இந்த சட்டத்தை சீர்திருத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வரைவுச் சட்டமானது, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்-2024 (Unified Waqf Management, Empowerment, Efficiency, and Development Act-2024) என்று மறுபெயரிடப்பட இந்தப் புதிய சட்டத்தின் மூலம், வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான செயல்திறனை" மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான மறுசீரமைப்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்த வாரியங்களின் பங்குதாரர்களிடம் போதிய ஆலோசனை இல்லாமல் மசோதாவை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியதாக பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை மீறுவதுடன், திருத்தங்கள் மூலம் வக்ஃப் வாரியங்களை வலுவிழக்கச் செய்து, அவற்றை "குரலற்ற பார்வையாளர்களாக" (mute spectators) மாற்றும் என்றும், பல மதச் சுதந்திரங்களை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ளும் என்றும் எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.


இந்தியாவில் 'வக்ஃப்' சட்டம் (‘Waqf’ law in India)


இஸ்லாமிய சட்டத்தில், வக்ஃப் (waqf) என்பது மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை குறிக்கிறது. பொது நலனுக்காக ஒதுக்கப்பட்ட எந்தவொரு அசையும் அல்லது அசையாச் சொத்துக்களும் இதில் அடங்கும். இது முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களின் தொண்டுக்கான செயல்களை நீட்டிக்க அனுமதிக்கும் ஒரு பக்தியான செயலை உள்ளடக்கியது. ஒரு வக்ஃப் ஒரு முறையான பத்திரம் அல்லது ஆவணம் (formal deed or document) மூலம் நிறுவப்படலாம் அல்லது ஒரு சொத்து நீண்ட காலத்திற்கு மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை வக்ஃப் என்று கருதலாம். இத்தகைய சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானம் பொதுவாக மசூதிகளை பராமரிக்கவும், பள்ளிகளுக்கு நிதியளிக்கவும் அல்லது ஏழைகளுக்கு உதவவும் பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், வக்ஃப் (waqf) என தீர்மானிக்கப்பட்டவுடன், சொத்தை பரம்பரை மூலம் மாற்றவோ, விற்கவோ அல்லது கொடுக்கவோ முடியாது. ஒரு முஸ்லிமல்லாதவர் (non-Muslim) ஒரு வக்ஃப்பை உருவாக்க அனுமதிக்கப்படுகிறார். இருப்பினும், அதை உருவாக்குவதன் நோக்கம் இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போக வேண்டும்.


இந்தியாவில், வக்ஃப்கள் 1995 சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், வக்ஃப் சொத்துக்கள் கண்டறியப்பட்டு, மாநில அரசு நடத்தும் கணக்கெடுப்பின் மூலம் வரையறுக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு கணக்கெடுப்பு ஆணையர் (survey commissioner) நியமிக்கப்படுகிறார். இந்த ஆணையர் உள்ளூர் விசாரணைகளை நடத்தி, சாட்சிகளின் சாட்சியங்களை சேகரித்து, பொது ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் சொத்துக்களை அடையாளம் காட்டுகிறார். அடையாளம் காணப்பட்ட பிறகு, இந்த சொத்துக்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் (State's official gazette) பதிவு செய்யப்படுகின்றன. மாநில வக்ஃப் வாரியம் (State Waqf Board) இந்த சொத்துகளின் பட்டியலை பராமரிக்கிறது. ஒவ்வொரு வக்ஃபும் அதன் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஒரு அறக்காப்பாளர் அல்லது பாதுகாவலர் (mutawalli or custodian) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. வக்ஃப் என்பது 1882-ன் இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் (Indian Trusts Act) கீழ் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையைப் போன்றது. இருப்பினும், ஒரு அறக்கட்டளையைப் போலன்றி, ஒரு வாரியத்தால் வக்ஃப் அமைப்பை கலைக்க முடியாது.


வக்பு வாரியத்தின் பங்கு


1995-ம் ஆண்டு சட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் வாரியங்கள் மூலம், தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள வக்ஃப் தொடர்பான சொத்துக்களை நிர்வகிப்பதற்குப் பொறுப்பாகும். அவர்கள் நீதித்துறை நபர்களாக (juristic persons) அங்கீகரிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்ளலாம். ஒவ்வொரு மாநில வக்ஃப் வாரியத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். இந்த வாரியத்தில் மாநில அரசாங்கத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நபர்கள் உள்ளனர். முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் வக்ஃப்களின் அறக்காப்பாளர் (mutawalli) ஆகியோரும் வாரியத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். ஒவ்வொரு வாரியத்திற்கும் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மாநில அரசாங்கத்தில் துணை செயலாளர் (Deputy Secretary in State government) பதவியில் இருக்க வேண்டும்.


வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் இழந்த சொத்துக்களை மீட்பதற்கும் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கும் வக்ஃப் வாரியத்திற்கு (Waqf Board) அதிகாரம் உள்ளது. இது விற்பனை (sale), பரிசு (gift), அடமானம் (mortgage), பரிமாற்றம் (exchange) அல்லது குத்தகை (lease) மூலம் அசையா வக்ஃப் சொத்தை மாற்றுவதற்கும் வாரியம் ஒப்புதல் அளிக்கலாம். இருப்பினும், இதற்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும். 1995-ம் ஆண்டு சட்டத்தில், 2013-ல் திருத்தங்கள் வாரியத்தின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியது மற்றும் வக்ஃப் சொத்துக்களை விற்பதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியது. ஏனெனில், இந்த சொத்துக்களை விற்க அறக்காப்பாளருக்கோ (mutawalli) அல்லது வாரியத்திற்கோ உரிமை இல்லை.


மாநில வக்ஃப் வாரியங்களுக்கு கூடுதலாக, இந்த சட்டத்தின் மூலம் ஒன்றிய வக்ஃப் ஆணையத்தை (Central Waqf Council) உருவாக்குகிறது. இது சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆலோசனை அமைப்பாகச் (national advisory body) செயல்படுகிறது. நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்கள் தொடர்ந்து நிர்வகிக்கப்படுவதை இந்த ஆணையம் உறுதி செய்கிறது. இதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார். வக்ஃப் வாரியம் தொடர்பான பிரச்சனைகளிலும் இந்த ஆணையம் ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது. இதில் கொள்கைகளை உருவாக்குதல், வக்ஃப் தொடர்பான சட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.


முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள முக்கிய மாற்றங்கள்


இந்த மசோதாவின் கீழ், குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாக இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் சட்டபூர்வமான சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே முறையான பத்திரங்களை நிறைவேற்றுவதன் மூலம் 'வக்ஃப்' சொத்துக்களை உருவாக்க அதிகாரம் உள்ளது. இந்தத் திருத்தம், 'பயன்பாடு மூலம் வக்ஃப்' (waqf by use) என்ற கருத்தை நீக்குகிறது. இதன் உண்மையான பத்திரம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு சொத்தை வக்ஃப் எனக் கருத அனுமதிக்கிறது. பாரம்பரியமாக, வக்ஃப் சொத்துக்கள் பெரும்பாலும் வாய்வழி ஒப்பந்தங்கள் (oral agreements) மூலம் அர்ப்பணிக்கப்பட்டன. பின்னர்தான், முறையான ஆவணங்கள் நிலையான நடைமுறையாக மாறியது.


எந்தவொரு, மோசடியான வக்ஃப் உரிமைகோரல்களைத் (waqf claims) தடுக்க, வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் வக்ஃப் சொத்தாக அங்கீகரிக்கப்படாது என்று இந்த திருத்த மசோதா கூறுகிறது. கூடுதலாக, விதவைகள் (widows), விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் (divorced women) மற்றும் ஆதரவற்றோர்கள் (orphans) வக்ஃப் சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தின் பயனாளிகளாக இருக்க சட்டம் அனுமதிக்கிறது.


முன்பு 1995 சட்டத்தின் கீழ், கணக்கெடுப்பு ஆணையரால் நிர்வகிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை ஆய்வு செய்யும் பொறுப்பு, இப்போது மாவட்ட ஆட்சியர்கள் அல்லது அதற்கு சமமான நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும். வக்ஃப் வாரிய சொத்து பதிவுகளின் துல்லியத்தை மேம்படுத்த, ஒரு மையப்படுத்தப்பட்ட பதிவு முறையை (centralised registration system) இந்த திருத்த மசோதா முன்மொழிகிறது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் வக்ஃப் சொத்துக்கள் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த போர்ட்டலில் (portal) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், எந்தவொரு புதிய வக்ஃப் சொத்து பதிவுகளும் இந்த போர்டல் மூலம் பிரத்தியேகமாக வக்ஃப் வாரியங்களுக்கு சமர்ப்பிக்கப்படவும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.


ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு தகுதியுடையதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்ஃப் தீர்ப்பாயங்களுக்கு (waqf tribunals) முன்பு வழங்கிய அரசியலமைப்புப் பிரிவு-40ஐ இந்த மசோதா நீக்குகிறது. மாறாக, இது போன்ற விஷயங்களில் மாவட்ட ஆட்சியரை இறுதி தீர்ப்பு நடுவராக நியமிக்கிறது. இதை நிர்ணயம் செய்யப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் இந்த வாரியத்தின் வருவாய் பதிவேடுகளை புதுப்பித்து, மாநில அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், ஆட்சியர் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சர்ச்சைக்குரிய சொத்தை வக்ஃப் சொத்தாகக் கருத முடியாது என்று மசோதா தெளிவுபடுத்துகிறது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் இறுதி முடிவெடுக்கும் வரை, சர்ச்சைக்குரிய நிலத்தை வக்பு வாரியம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்பதையும் இது தெளிவுபடுத்தியுள்ளது.


இந்த திருத்த மசோதாவின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்று, முக்கியமான வக்ஃப் நிறுவனங்களில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க முன்மொழியப்பட்டதாகும். இந்த நிறுவனங்களில் ஒன்றிய வக்ஃப் ஆணையம் (Central Waqf Council), மாநில வக்ஃப் வாரியங்கள் (State Waqf Boards) மற்றும் வக்ஃப் தீர்ப்பாயங்கள் (waqf tribunals) ஆகியவை அடங்கும். இந்த புதிய மசோதாவின் மாற்றங்கள் ஒன்றிய வக்ஃப் ஆணையத்துக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசை அனுமதிக்கிறது. இதில் மக்களவையிலிருந்து இருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவர். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் புதிய விதியில் குறிப்பிடவில்லை. ஆனால் முன்னதாக, 1995-ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. கூடுதலாக, இதேபோல், புதிய திருத்த மசோதாவின்படி, மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இருவரையும், இரண்டு பெண்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.


வக்ஃப் தீர்ப்பாயங்களின் அமைப்பு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பிலிருந்து இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயம் இனி மாவட்ட நீதிபதி மற்றும் மாநில அரசின் இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியைக் கொண்டிருக்கும். முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, ஆறு மாதங்களுக்குள் நீதிமன்றங்கள் தகராறுகளைத் தீர்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் இந்த காலகட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்.


கடுமையான நிதி மேற்பார்வை (Stringent financial oversight)


இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller and Auditor General of India (CAG)) நியமிக்கப்பட்ட ஒரு தணிக்கையாளர் அல்லது அந்த நோக்கத்திற்காக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியாலும் எந்த நேரத்திலும், எந்தவொரு வக்ஃப் வாரிய கணக்கையும் தணிக்கை செய்ய இந்த திருத்த மசோதா ஒன்றியத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், வக்ஃப் வாரியங்கள் தங்கள் கணக்குகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து தணிக்கையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில், முறையான கணக்குகளை பராமரிக்க தவறினால், அறக்காப்பாளர் (mutawalli)  என்ற பாதுகாவலர் மீதும் அபராதம் விதிக்கப்படும்.


நீதித்துறை ஆய்வு (Judicial review)


வக்ஃப் தகராறுகளில் நீதிமன்றங்கள் தலையிட முன்மொழியப்பட்ட இந்த சட்ட மசோதாவானது அனுமதிக்கிறது. இது வக்ஃப் தீர்ப்பாயங்கள் (waqf tribunals) எடுக்கும் முடிவுகளின் இறுதித் தன்மையை நீக்கி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது. இது நீதித்துறையின் மேற்பார்வையை (judicial oversight) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், வக்ஃப் வாரியங்கள் அல்லது தீர்ப்பாயங்கள் தன்னிச்சையாக அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.


சாத்தியமான விளைவுகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி


பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பிரபல கல்வியாளரும், துணை வேந்தருமான பேராசிரியர் (Vice Chancellor of Chanakya National Law University) பைசான் முஸ்தபா, தி இந்துவிடம் கூறுகையில், இந்த திருத்தங்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இதில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மீறாமல் வக்ஃப் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது முக்கியம் என்றும், அதே நேரத்தில், இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 25-வது பிரிவு உத்தரவாதம் அளிக்கும் மத சுதந்திரத்தை மீறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.  “நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நிர்வாக அதிகாரிகளால் எடுத்துக்கொள்ள முடியாது. இது நியாயமான நீதித்துறை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.


வக்ஃப் வாரியச் சொத்து நிர்வாகத்தின் அதிகரித்த மையமயமாக்கல் முஸ்லிம் மத நிறுவனங்களின் சுயாட்சியைக் (autonomy of Muslim religious institutions) குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள இந்துக் கோயில் வாரியங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று முஸ்தபா கேள்வி எழுப்பினார். மேலும், அரசாங்கத்தின் அதிகப்படியான கட்டுப்பாடு பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் முரண்படுவதாகவும் அவர் கூறினார்.


இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கூடுதல் ஆய்வுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (joint parliamentary panel) அனுப்பப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்த சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி எதிர்த்ததால் இது நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், 1995 சட்டத்தின் பல்வேறு விதிகளை எதிர்த்து 120 மனுக்கள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தது.



Original article:

Share: