இரண்டு தேர்தல் ஆணையர்களின் நியமனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது ஏன்? -அஜய் சின்ஹா கற்பூரம்

 தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான சமீபத்திய சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? நியமனங்களும் சட்டமும் ஏன் கேள்விக்குள்ளாக்கப்பட்டன அல்லது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன? எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்திற்கு தடை விதிக்க முடியும்?


ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மார்ச் 21 அன்று  நிராகரித்தது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 (Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) நியமனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதை இடைநீக்கம் செய்யவும் அது மறுத்துவிட்டது. 


நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா (Sanjiv Khanna) மற்றும் தீபங்கர் தத்தா (Dipankar Datta) ஆகியோர், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போது அதற்கான நியமனங்களை இடைநிறுத்துவது குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கும் என்று விளக்கினார்.  


தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் சவாலின் ஒரு பகுதியாக நியமனங்களை இடைநிறுத்துமாறு ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reform) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது.


சட்டம் எப்படி வந்தது? நியமனங்களும் சட்டமும் ஏன் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன? எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்திற்கு தடை விதிக்க முடியும்?


நியமன முறை எப்படி வந்தது?  


மார்ச் 2023 இல், அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம் (Anoop Baranwal vs Union of India) வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பதில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களைச் செய்தது. இந்த முடிவுக்கு முன்பு, பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். 


உச்சநீதிமன்றம் ஒரு தற்காலிக திட்டத்தை வகுத்தது. அதன் அடிப்படையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருடன் ஒரு குழுவை அமைத்து தேர்தல் ஆணையரின் நியமனங்களைக் கையாள்கின்றனர். பிரிவு 324 (2) இன் படி, இந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


இருப்பினும், டிசம்பர் 2023 இல், இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக "பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரை" (a Union Cabinet Minister to be nominated by the Prime Minister) குழு உறுப்பினராக நியமிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதாவது, தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றிய அரசுக்கு இப்போது பெரும்பான்மை வாக்குகள் உள்ளன.


தேர்தல் ஆணைய சட்டம் ஏன் சவால் செய்யப்பட்டது?


இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, மருத்துவ நிபுணரும் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினருமான டாக்டர் ஜெயா தாக்கூர் (Dr. Jaya Thakur) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய சட்டத்தின் (Election Commission Act) 7வது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட தேர்வுக் குழுவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை  (constitutionality of the selection committee) எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்தார்.


டாக்டர் தாக்கூர் தனது மனுவில், தேர்தல் ஆணைய சட்டமானது (Election Commission Act) அனூப் பரன்வால் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று வாதிட்டார். இந்த சட்டம் ஒன்றியத்தில் ஆளும் கட்சி நியமன செயல்முறையில் அதிக செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது. இது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தலுக்கான உரிமையை முற்றிலும் பாதிக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணைய சட்டத்தை எதிர்த்து டாக்டர் தாக்கூருடன் இணைந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் (Association for Democratic Reforms(ADR)) ஒரு மனுவை தாக்கல் செய்தார்.


கடந்த காலங்களில், உச்ச நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்புகளுக்கு முரணான சட்டங்களை ரத்து செய்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஜூலை 2021 இல், நீதிமன்றம் தீர்ப்பாய சீர்திருத்தங்கள் அவசரச்சட்டம் (Tribunals Reforms (Rationalisation and Conditions of Service) Ordinance), 2021 ஐ ரத்து செய்தது. இந்த, அவசரச் சட்டம் 2020 நவம்பரில் நீக்கப்பட்டதைப் போன்ற தீர்ப்பாய உறுப்பினர்களின் பணி நிலைமைகள் தொடர்பான பல விதிகளை அறிமுகப்படுத்தியது.


காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிகளுக்கு நியமனங்களை பரிந்துரைக்க தேர்வுக் குழு கூடியிருந்த அதே நாளில், மார்ச் 15 ஆம் தேதி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் விண்ணப்பத்தை நீதிமன்றம் விசாரித்தது. இருப்பினும், தேர்வுக் குழு ஒரு நாள் முன்னதாக கூடி ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமித்தது.


தேர்தல் ஆணையர், அருண் கோயல் மார்ச் 9 அன்று திடீரென ராஜினாமா செய்ததால், தேர்தல் ஆணையத்தில் இரண்டு காலிப்பணி இடங்கள் உருவாகின. எனவே, மக்களவைத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், என்ற ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்தல் ஆணையத்தில் இருந்தார்.


மார்ச் 15 அன்று, தேர்தல் ஆணையர் நியமனங்களுக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது. அவர்களின் விண்ணப்பத்தில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், "இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முன் கூட்டியே... 14.03.2024 அன்று தேர்வுக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது" என்று கூறியுள்ளது. அவ்வாறு செய்வதற்கான சரியான செயல்முறையை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க முடியும்.


எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையரின் பெயர்களைக் கோரினார். ஆனால் அவற்றை முன்கூட்டியே பெறவில்லை என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கூறியது. இதனால், தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு பட்டியலிடப்பட்ட பெயர்களை மதிப்பாய்வு செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையரின் திறன்களை மதிப்பிடவும் நேரம் இல்லை என்பதே இதன் பொருள். 


இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசு எப்படி பதிலளித்தது?


மார்ச் 20 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசானது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், தேர்வுக் குழுவில் நீதித்துறை உறுப்பினர் இருப்பதன் மூலம் "உருவாகாது" என்று தெரிவித்தது. மேலும், நீதித்துறை உறுப்பினர்கள் இல்லாத தேர்வுக் குழுக்கள், எப்போதும் ஒருபக்கச் சார்பானதாக இருக்கும் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுநாள் நிறுத்தி வைப்பதற்காக தேர்வுக் குழு கூட்டம் (selection committee meeting) மார்ச் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அரசு சாரா அமைப்பு (NGO) தெரிவித்துள்ளது. அருண் கோயல் ராஜினாமா செய்ததால், கூட்டத்தை மார்ச் 9-ம் தேதிக்கு மாற்றியதாக அரசு தெரிவித்தது. நீதித்துறையின் நடைமுறைகளில் தலையிட எந்த முயற்சியும் இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியது.  


மார்ச் 13 ஆம் தேதி சௌத்ரிக்கு, வேட்பாளர்கள் பட்டியலை வழங்கியதால் அவருக்கு பெயர்கள் தாமதமாக கிடைத்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், தேடல் குழு (search committee) தங்கள் வேலையை முடிக்காததால் அவர்களால் இன்னும் குறுகிய பட்டியலை அவருக்கு வழங்க முடியவில்லை. 

 

உச்ச நீதிமன்றம் எப்போது ஒரு சட்டத்திற்கு தடை விதிக்க முடியும்?


தற்போதைய சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய சட்டத்தின் பிரிவு 7 ஐ நிறுத்த மறுத்துவிட்டது. இது, "விதிவிலக்கான சூழ்நிலைகள்" (exceptional circumstances) இல்லாவிட்டால் சட்டங்களை இடைநிறுத்த முடியாது என்று அவர்கள் கூறினர்.


"அரசியலமைப்பின் அனுமானம்" (presumption of constitutionality) கோட்பாட்டின் காரணமாக நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை நீதிமன்றங்கள் இடைநிறுத்துவது சாதாரணமானவை இல்லை. பொதுவாக, இந்த கோட்பாடு அரசியலமைப்பை மீறுவதாக நிரூபிக்கப்படாத வரை, சட்டம் செல்லுபடியாகும் என்று கருதப்படுகிறது. 

 

பவிஷ் டி. பாரிஷ் vs இந்திய ஒன்றியம் (Bhavish D. Parish vs Union of India) 2000 வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு கொள்கையை விளக்கியது. ஒரு சட்டத்தை தற்காலிகமாக அமுல்படுத்துவதைத் தடுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் போது, அந்தச் சட்டம் தெளிவாக நியாயமற்றதாகவோ அல்லது தெளிவாக அரசியலமைப்புக்கு எதிராகவோ இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். அதைத் தடுக்க அவசரப்படக்கூடாது என்பதை நீதிமன்றங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஒரு சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுவதால், விவாதத்திற்குரிய பிரச்சினை கொண்டுவரப்படுவதால், இந்த விஷயத்தைப் பார்க்க நீதிமன்றங்களை நம்ப வைப்பதால், அந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை சட்டமியற்றுபவர்களின் நோக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.




Original article:

Share:

மத்திய அரசின் 'உண்மை சரிபார்ப்பு பிரிவுக்கு' (‘Fact Check Unit’) உச்ச நீதிமன்றம் தடை விதித்தது ஏன் ? - அபூர்வா விஸ்வநாத்

 மத்திய அரசின் 'உண்மை சரிபார்ப்பு பிரிவை’ எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விதிகளுக்கு தடை கோரும் மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளிக்கும் முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்தை நிறுத்த முடியுமா? 


மார்ச் 21, வியாழக்கிழமை, உச்ச நீதிமன்றம், தகவல் தொழில்நுட்ப  விதிகளில் (IInformation Technology (IT) Rules) மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றங்களுக்கு தடை விதித்தது. இந்த மாற்றங்கள் "உண்மை சரிபார்ப்பு பிரிவு" (“Fact Check Unit” (FCU)) மூலம் சமூக ஊடகங்களில் "போலி செய்திகளை" (“fake news”) கண்டறியும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Union Electronics and IT Ministry) மார்ச் 20 அன்று உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைத்தது. 


"உண்மை சரிபார்ப்பு பிரிவு" (“Fact Check Unit” (FCU)), பத்திரிகை தகவல் பணியகத்தின் ஒரு பகுதியாகும். சமூக ஊடக தளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களைப் பற்றி தவறாகக் கண்டறியும் தகவல்களை அடையாளம் காண அதற்கு அதிகாரம் உள்ளது. உண்மை சரிபார்ப்பு பிரிவை உருவாக்க அமைச்சகத்தை அனுமதிக்க 2021 இல் தகவல் தொழில்நுட்ப விதிகள் மாற்றப்பட்டன. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 2023 இல் அறிவிக்கப் பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 31 அன்று, இரண்டு நீதிபதிகள் புதிய விதிகள் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர். இந்த கருத்து வேறுபாட்டின் மீது மூன்றாவது நீதிபதி இறுதி முடிவை வழங்க வேண்டும். இருப்பினும், மார்ச் 11 அன்று, இந்த  மூன்றாவது நீதிபதி "உண்மை சரிபார்ப்பு பிரிவு" உருவாக்குவதை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். பின்னர், மார்ச் 13 அன்று, நீதிபதிகள் அமர்வு  2-1 பெரும்பான்மையுடன்,  உண்மை சரிபார்ப்பு பிரிவின் அறிவிப்பை இடைநிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்தது.


ஏப்ரல் 2023 இல், தகவல் தொழில்நுட்ப விதிகள் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும்  மின்னணு  ஊடக நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 இல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மாற்றம் இரண்டு விஷயங்களைச் செய்தது. முதலாவதாக, இது இணைய வழி விளையாட்டு சூழல் (online gaming eco-system) அமைப்பிற்கான சட்ட கட்டமைப்பை நிறுவியது. இரண்டாவதாக, அதன் நடவடிக்கைகள் தொடர்பான இணையவழி  உள்ளடக்கத்தை உண்மையைச் சரிபார்க்க அரசாங்கத்திற்கு ஒரு வழியை அறிமுகப்படுத்தியது. சமூக வலைதளங்கள் ஒன்றிய அரசைப் பற்றி தவறான தகவல்களைப் பகிரக்கூடாது என்று விதிகளின் அடிப்படையில்  இது  அமைந்தது. இந்த மாற்றங்கள் அரசாங்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகள் (government business) பற்றியும் உண்மை என்ன என்பதை தீர்மானிக்கும் ஒரே ஒன்றாக உண்மை சரிபார்ப்பு பிரிவு மாறும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளன. 


பல நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் ஒரு குறிப்பிட்ட விதியை சவால் செய்தன. ஸ்டாண்ட்அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, இந்திய இதழ்களின் சங்கம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, செய்தி சேனல் டிவி 18 பிராட்காஸ்ட் லிமிடெட் மற்றும் பென்னட், கோல்மன் & கம்பெனி லிமிடெட் ஆகியவை இதில் அடங்கும். அவர்கள் தகவல் தொழில்நுட்ப  விதிகள் 2021ன் விதி 3(1)(b)(v) க்கு எதிராக வாதிட்டனர். இது அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 19(1)(a), 19(1)(g), மற்றும் 21 க்கு எதிரானது என்று அவர்கள் கூறினர். இது பிரிவு 79 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, ஆகியவற்றை மீறுவதாகவும் அவர்கள்கூறுகின்றனர்.


தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் விதி (3 (1) (b)(v)) க்கான மாற்றம் "போலி செய்தி" (fake news) என்பதன் வரையறையை விரிவுபடுத்தியது. இப்போது, இது அரசாங்க நடவடிக்கைகள் (government business) பற்றிய போலி செய்திகளையும் உள்ளடக்கியது. ஆரம்பத்தில், 2021 இல், விதி தெளிவாக தவறானது அல்லது தவறாக வழிநடத்தும் ஆனால் உண்மையாகத் தோன்றக்கூடிய தகவல்களைப் பற்றியது. 2023 திருத்தம் இந்த வரையறையில் ஒரு பகுதியைச் சேர்த்தது. "இயற்கை" (“nature”) என்ற வார்த்தைக்குப் பிறகு, ஒன்றிய அரசின் வணிகம் தொடர்பான போலி அல்லது தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை உள்ளடக்கியது. இந்த தகவலை ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு அடையாளம் காண வேண்டும். அதிகாரப்பூர்வ அரசாணையில்  அறிவிப்பு மூலம் இந்த பிரிவை அமைச்சகம் அறிவிக்கும். இந்த விதியை நீதிமன்றத்தில் சவால் செய்தவர்கள், இது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறினர். இந்த நடவடிக்கை, மக்களை சுதந்திரமாக பேசுவதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 (IT Act Section 69), சில தகவல்களை அணுகுவதைத் தடுக்க இணைய வழங்குநர்களிடம் கூற அரசாங்கத்தை அனுமதிக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிகள் உருவாக்கப்பட்டன. 


அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பின் மூன்றாம் பகுதிக்கு (Part III) எதிராக நாடாளுமன்றம் விதிகளையோ சட்டங்களையோ உருவாக்க முடியாது. இந்த விதிகள் பேச்சு சுதந்திரத்தை மீறுகின்றனவா, நியாயமற்றவையா என்று பம்பாய் உயர் நீதிமன்றம் (Bombay High Court) ஆய்வு செய்தது. ஜனவரி 31 அன்று நீதிபதிகள் ஜி.எஸ்.படேல்  (Justices G S Patel) மற்றும் நீலா கோகலே (Neela Gokhale) ஆகியோர் தங்கள் தீர்ப்பை வழங்கினர். நீதிபதி படேல் மாற்றப்பட்ட விதிகளை ரத்து செய்தார். ஆனால் நீதிபதி கோகலே அவற்றுடன் உடன்பட்டார். ‘குடிமக்களிடம் உண்மையான தகவல்கள் இருந்தால் ஒழிய, வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான அல்லது தவறான தகவல்களால் ஏமாற்றப்படாவிட்டால், அவர்களால் ஜனநாயகத்தில் முழுமையாக ஈடுபட முடியாது’ என்று நீதிபதி கோகலே கூறினார். எது உண்மை, எது பொய் என்பதை அரசால் தீர்மானிக்க முடியாது என்று நீதிபதி படேல் கூறினார். 


இரு வேறு பட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், பெரும்பான்மை முடிவை உருவாக்க மூன்றாவது நீதிபதி மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டியிருந்தது. பிப்ரவரி 7 அன்று, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா நீதிபதி அதுல் எஸ் சந்துர்கரை மூன்றாவது நீதிபதியாக நியமித்தார். பிரதான விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு, விதிகள் இப்போதைக்கு நிறுத்தப்பட வேண்டுமா என்பதை நீதிபதி சந்துர்கர் தீர்மானிக்க வேண்டியிருந்தது. விதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. எனவே, நீதிபதி சந்துர்கர் மாற்றப்பட்ட விதிகளை இடைநிறுத்தவில்லை. பின்னர், இடைக்கால இடைநிறுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை விசாரிக்க ஒரு நாள் முன்பு, அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 2023 விதிகளை அறிவித்தது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது அரசாங்கம் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கு இந்த விதிகள் முக்கியம். மும்பை உயர் நீதிமன்றம் தனது இறுதி முடிவை எடுக்கும் வரை மாற்றப்பட்ட விதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) டி.ஒய்.சந்திரசூட் (D Y Chandrachud) அமர்வு தடை விதித்துள்ளது. ஒரு நீதிபதி (நீதிபதி படேல்)  அறிவிப்பை முழுவதுமாக ரத்து செய்துள்ள நிலையில், விஷயங்கள் இப்போது இருப்பதைப் போலவே இருக்க வேண்டுமா என்பதே முக்கிய கேள்வி என்று தலைமை நீதிபதி கூறினார். 


அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளிக்கும் முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்தை நிறுத்த முடியுமா? 


நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது. யாராவது நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தை சவால் செய்தால், அது அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நீதிமன்றங்கள் வழக்கமாக சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டவையா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு நிறுத்துவதைத் தவிர்க்கின்றன. சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கும் அவற்றை உருவாக்க பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கும் இடையில் சமநிலைப்படுத்துகின்றன.


இருப்பினும், இந்த வழக்கில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன.


முதலாவதாக, விவாதிக்கப்படும் விதிகள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அல்ல, ஆனால் அவை பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் அமைச்சகத்தால் உருவாக்கப்படுகின்றன. நாடாளுமன்றம் என்ன விரும்புகிறது என்பதை அவை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஒரு சட்டம் அரசியலமைப்பு என்று கருதப்படும் நிலை மாறுபடலாம்.  


இரண்டாவதாக, ஒரு சட்டம் தெளிவாக அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கண்டறியப்பட்டால் மட்டுமே தற்காலிக நிறுத்தம் ஏற்பட முடியும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு கூறியுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்களில் இருந்து, நீதிபதி படேலின் 148 பக்க விரிவான தீர்ப்பு, வேறு பட்ட முடிவின் ஒரு பகுதியாக இருந்தாலும், அரசியலமைப்பிற்கு முரணானது என்பதற்கான தெளிவான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், வேலைகள் மற்றும் பள்ளிகளில் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மகாராஷ்டிரா (Maharashtra law) சட்டத்தை உச்ச நீதிமன்றம் தற்காலிக உத்தரவு மூலம் நிறுத்தி வைத்தது. 2021 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றமும் தற்காலிக உத்தரவுடன் வேளாண் சட்டங்களை (farm laws) நிறுத்தியது. பின்னர் அவை ரத்து செய்யப்பட்டன. 




Original article:

Share:

கானமயில் (Bustard) பாதுகாப்பை நிலையான ஆற்றல் இலக்குகளுடன் சமநிலைப்படுத்த நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம் -தி ஹிந்து பீரோ

 நிலத்தடி மற்றும் மேல்நிலை மின்சார வயர்களை கொண்டிருப்பது எவ்வளவு சாத்தியம் மற்றும் பொருத்தமானது என்பதைக் கண்டுபிடிப்பதே இந்தக் நிபுணர் குழுவின் வேலை. இந்த வயர்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பறவைகளின் பாதுகாப்பிற்கு முக்கியமான இடங்களில் இருக்கும்.  

ஆபத்தான நிலையில் உள்ள இந்திய கானமயில் (Great Indian Bustard) பறவையைப் பாதுகாப்பதற்கும் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்குமான ஒரு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் மார்ச் 21 அன்று உருவாக்கியது.  


இந்திய கானமயில் (Great Indian Bustard bird) அழிவின் விளிம்பில் உள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அவற்றின் வாழ்விடங்களுக்கு அருகிலுள்ள உயர் சக்தி மின்சார கேபிள்களில் சிக்கி அவை அடிக்கடி காயமைடைவதும் இறப்பதும் இதற்கு ஒரு காரணம்.   

  

 இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, ஏப்ரல் 2019  அன்று வெளியிடப்பட்ட முந்தைய நீதிமன்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்று கூறினார். இந்த உத்தரவு உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின்னழுத்த மின் கேபிள்களை நிலத்தடியில் புதைப்பது பற்றியது. இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இயக்குனர், ஹரி சங்கர் சிங், நிரஞ்சன் குமார் வாசு, பி. மஜும்தார் மற்றும் தேவேஷ் காத்வி போன்ற வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு நிபுணர்களை நீதிமன்றம் தேர்வு செய்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லலித் போஹ்ரா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் இந்த குழுவில் நியமிக்கப்பட்டனர்.


இந்த குழுவில் மத்திய மின்சார ஆணையத்தில் பவர் சிஸ்டம்ஸ் உறுப்பினரான (Member of Power Systems at the Central Electrical Authority) அசோக் குமார் ராஜ்புத் மற்றும் பி.சி. சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டின் தலைமை இயக்க அதிகாரி (Chief Operating Officer of the Central Transmission Utility of India Limited) கார்க். குழுவின் பணியானது, நிலத்தடி மற்றும் தரைக்கு மேல் மின் பாதைகளை அமைப்பது எவ்வளவு சாத்தியம் மற்றும் பொருத்தமானது என்பதைக் கண்டுபிடிப்பதாகும். இந்த கேபிள்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பறவைகள் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான இடங்களில் இருக்கும்.     


இந்த குழு நிலையான வளர்ச்சி மற்றும் பறவை பாதுகாப்பு ஆகிய இரண்டையும் அடைவதற்கான வழிகளைத் தேடும். பறவைகளைப் பாதுகாப்பதற்கு முக்கியமான பகுதிகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கலாம். ஜூலை 31ம் தேதிக்குள் இந்த குழு தனது முடிவுகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.




Original article:

Share:

'மக்கும் நெகிழிகளை' தடை செய்வதற்கான புதிய விதிகளில் உள்ள குழப்பங்கள் -ஜேக்கப் கோஷிசாகோவ் கோஷி

 மக்கும் பிளாஸ்டிக்குகள். எந்த நுண்நெகிழிகளையும் (microplastics) விட்டு வைக்காமல், மண், நிலப்பரப்பு போன்ற குறிப்பிட்ட சூழலில் உயிரியல் செயல்முறைகளால் சிதைவடையும் திறன் கொண்ட பொருட்கள் என வரையறுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகள், ஒருமுறை தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருட்களை தயாரிப்பவர்களை பாதிக்கிறது. அவர்கள், தங்கள் தயாரிப்புகளை இனி 'மக்கும்' (biodegradable) என்று முத்திரை குத்த முடியாது. அவர்களின் தயாரிப்புகள் நுண்நெகிழிகளை (microplastics) விட்டுச் செல்லக்கூடாது என்று விதி கூறுகிறது.

 

இந்தியாவில் அதிகரித்து வரும் நெகிழிக் கழிவு பிரச்சினையை சமாளிக்க இரண்டு முக்கிய தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன: நுண்ணுயிரிகளால் மட்கக்கூடிய நெகிழி (biodegradable plastic) மற்றும் மட்கக்கூடிய நெகிழி (compostable plastic) ஆகும். நுண்ணுயிரிகளால் மட்கக்கூடிய நெகிழி (biodegradable plastic) தூக்கி எறியப்பட்ட பிறகு காலப்போக்கில் இயற்கையாகவே சிதைந்துவிடும். இந்த நெகிழிகள் சிதைவிற்கு உட்பட்டு சோதனையளிக்கப்படுகின்றன. இருப்பினும், அவை இன்னும் முழுமையாக சிதைந்துவிட்டதா என்பதை நிரூபிக்க எந்த சோதனையும் இல்லை. மட்கும் நெகிழி சிதைந்து போகலாம். ஆனால், அவை தொழில்துறை அல்லது பெரிய கழிவு மேலாண்மை வசதிகளில் பதப்படுத்தப்பட வேண்டும்.


நுண் நெகிழி பயன்பாடு இல்லை


இந்தியா தனது நெகிழி கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள் (India’s Plastic Waste Management (Amendment) Rules) 2024 இல் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்த புதிய திருத்தங்கள், கடந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்டன, மக்கும் பிளாஸ்டிக்குகள் “... மண், நிலப்பரப்பு போன்ற குறிப்பிட்ட சூழலில் உயிரியல் செயல்முறைகளால் சிதைவடையும்...” என்று வரையறுக்கிறது. முக்கியமாக, எந்த நுண் நெகிழியையும் விட்டுவிடக்கூடாது. சிம்பொனி சுற்றுச்சூழல் இந்தியாவின் (Symphony Environmental India) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் பன்வார் புதிய விதிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினார். ஒரு தயாரிப்பானது, நுண்ணிய நெகிழிகளை விட்டு வெளியேறவில்லை என்பதை நிரூபிக்க எந்த வேதியியல் சோதனைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. நுண் நெகிழிகளில் பயன்பாடுகளில் எவ்வளவு குறைப்பு தேவை என்பதையும் அவர்கள் கூறவில்லை. மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை மக்கும் தொழில்நுட்பத்துடன் சிம்பொனி சுற்றுச்சூழல் (Symphony Environmental) நிறுவனம் வழங்குகிறது.


"சுற்றுச்சூழலில் நுண் நெகிழியின் பல ஆதாரங்கள் உள்ளன. அது நீர், மண், உரம் தயாரிக்கும் வளங்கள் மூலம் வரலாம். தற்போதைய தரநிலைகள் அடிப்படையில், இந்தியாவில் நுண் நெகிழியின் அளவைக் கண்டறிய செய்யக்கூடிய சோதனைகளை மட்டுமே பரிந்துரைக்கின்றன. ஆனால், அதற்கான ஒரு உறுதியான சோதனையை பரிந்துரைக்கவில்லை... நுண்ணிய நெகிழிற்கான தரநிலை இறுதியில் தீர்மானிக்கப்பட வேண்டுமானால், அது நியாயமாக அளவில், மக்கும் பொருட்கள் மற்றும்  மக்கும் நெகிழிகள் இரண்டையும் சேர்க்க வேண்டும்” என்று அவர் தி இந்துவிடம் தெரிவித்தார்.


ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்குத் (single-use plastic) தடை


நுண் நெகிழிகள் (Microplastics) என்பது சிறிய நெகிழித் துகள்கள். அவற்றை தண்ணீரில் கரைக்க முடியாது. அவை, 1 μm முதல் 1,000 μm வரை இருக்கும். அவை, ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை (single-use plastic) மத்திய அரசு தடை செய்த பிறகு, மக்கும் நெகிழியானது பயன்பாட்டில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து தி இந்து மார்ச் 2023 இல் செய்தி வெளியிட்டது. மக்கும் நெகிழியைப் பயன்படுத்த அவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் மக்கும் நெகிழி (biodegradable plastic) என்றால் என்ன என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Central Pollution Control Board (CPCB)) இருந்து 'தற்காலிக சான்றிதழ்' (provisional certificate) பெறாததால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் தயாரிப்புகளை மக்கும் தன்மை கொண்டவை என்று உரிமம் பெற இந்த சான்றிதழ் அவசியம். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்  அவர்களுக்கு சான்றிதழை வழங்கவில்லை. ஏனெனில், பயன்பாட்டில் உள்ள நெகிழியில் 90% சிதைந்துவிட்டால் மட்டுமே மக்கும் தன்மை கொண்டது என்று ஏற்றுக்கொள்கிறது. இந்த சிதைவடையும் நெகிழியின் செயல்முறை குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆக வேண்டும். தங்கள் மாதிரிகள் 45 நாட்களில் 5% சிதைந்துவிட்டன என்பதை நிரூபித்த உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. அத்தகைய சான்றிதழிற்கு எவ்வளவு மட்கும் தன்மை (degree of degradation)  தேவைப்படும் என்பதை விதிகள் தெளிவாகக் குறிப்பிடவில்லை.




Original article:

Share:

இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட திறன்கள் : MIRV உடன் Agni-V

 அக்னி-5 பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனம் (multiple independently targetable reentry vehicle (MIRV))  இந்திய இராணுவத்தின் திறனை அதிகரிக்கிறது.


மார்ச் 11 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தி பல அணு ஆயுதங்களை அனுப்பும் நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்துள்ளதாக அறிவித்தார். இந்த நாடுகள் ஒரே ஏவுகணையைப் பயன்படுத்தி பல அணு ஆயுதங்களை ஏவ முடியும். அக்னி-5 விண்கலத்தின் முதல் சோதனை மூலம் இந்த சாதனை சாத்தியமானது. அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 


இதில் பல இடங்களை சுயாதீனமாக குறிவைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் (independently targetable). இந்த தொழில்நுட்பம் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு ஏவுகணை (Multiple Independently Targetable Re-entry Vehicles (MIRVs)) தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சோதனைக்கு 'மிஷன் திவ்யஸ்திரம்' (Mission Divyastra) என்று பெயரிடப்பட்டது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) நடத்தியது.  


அக்னி-5 ஏவுகணை கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோதனை செய்யப்பட்டது. அப்போதிருந்து, இது பல முறை சோதிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பெரிய முன்னேற்றம் அதன் கேனிஸ்டரைசேஷன் (canisterisation) ஆகும். இந்த மேம்பாடு ஏவுகணையை கையாளுவதையும் இயக்குவதையும் எளிதாக்குகிறது. பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு  (Multiple Independently Targetable Re-entry Vehicles (MIRVs)) ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்புகள் (avionics systems) அடங்கும். இது அதிக துல்லியமான சென்சார்களையும் கொண்டுள்ளது. இவை ஏவுகணை அதன் இலக்குகளை துல்லியமாக தாக்குவதை உறுதி செய்கின்றன. 


இந்த முன்னேற்றம் இந்தியாவின் அணு ஆயுத திட்டத்திற்கு ஒரு பெரிய படியாகும். இரண்டாவது, தாக்கும் திறன் எனப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியாவின் திறனை இது மேம்படுத்துகிறது. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தக்கூடாது என்பதே இந்தியாவின் அணுசக்தி கொள்கை என்பதால் இது முக்கியமானது. இது அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு பதிலடியாக மட்டுமே பயன்படுத்துகிறது, குறைந்தபட்ச ஆனால் நம்பகமான தடுப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை 1998 ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனைகளைத் தொடர்ந்து 2003 இல் கோடிட்டுக் காட்டப்பட்டது.


அக்னி-5 ஏவுகணையில் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (Multiple Independently Targetable Re-entry Vehicles (MIRVs)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு முக்கியமானது. அக்னி-5 என்பது மூன்று நிலை திட எரிபொருள் இயந்திரம் கொண்ட ஏவுகணையாகும். இந்த தொழில்நுட்பம் ஒரு ஏவுகணை பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும். அதன் வீச்சு காரணமாக இது முக்கியமாக சீனாவை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 2018 இல், பிரதமர் மோடி மற்றொரு அறிவிப்பை அறிவித்தார். இந்தியா தனது முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் (INS Arihant) தனது முதல் ரோந்துப் பணியை நிறைவு செய்தது. இது, நிலம், காற்று மற்றும் கடலில் இருந்து அணு ஆயுதங்களை ஏவுவதற்கான இந்தியாவின் திறனை உறுதிசெய்ததன் மூலம் இந்தியாவின் அணுசக்தி முக்கோணத்தை (nuclear triad) நிறைவு செய்தது.


பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு  வாகனம் (Multiple Independently Targetable Re-entry Vehicles (MIRVs)),  ஏவுகணை தொழில்நுட்பத்தில் ஒரு முக்கியமான படியாகும். நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா, தனது அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருகிறது மற்றும் ஏற்கனவே பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு  (MIRVs) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. 1970ல் அமெரிக்கா இதை முதன்முதலில் பயன்படுத்தியது. பாகிஸ்தானும் இந்த தொழில்நுட்பத்தை சோதனை செய்ததாக கூறியுள்ளது.


இந்தியாவின் இந்த வளர்ச்சியின் மூலம்,  சீனா, பாகிஸ்தான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களுக்கு இடையே இராணுவ திறன்களில் போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. ’அதிகரிப்பு இயக்கவியல்’ (escalation dynamics) என்று அழைக்கப்படும் இந்த போட்டி வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தும். இந்த ஆயுதப் போட்டியும் காலப்போக்கில்  அதிக செலவினமுடையதாக மாறும்.




Original article:

Share:

ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு பதவிகளை ஏற்கலாமா ? -ஆர்த்ரிகா பௌமிக்

 ஒரு நீதிபதி ஓய்வு பெற்ற பிறகு அரசாங்க பதவியை ஏற்றுக்கொண்டால், அவர்களின் தீர்ப்புகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று மக்கள் கேள்வி எழுப்பலாம். 


சமீபத்தில், கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாஜகவில் இணைவதாக அறிவித்தார். அரசியலில் சேரும் நீதிபதியின் முடிவும், அது எடுக்கப்பட்ட விதமும் நீதித்துறை முறைகேடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. "நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடுவதை சிலர் விரும்புவதில்லை. ஏனெனில், அது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." இருப்பினும், அரசாங்கத்தில் உள்ளவர்கள் உட்பட மற்றவர்கள், இத்தகைய பதவிகளுக்கு பெரும்பாலும் மிக உயர்ந்த நேர்மையான நீதித்துறை பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், இதற்கு அரசியலமைப்பு தடை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு பதவிகளை ஏற்கலாமா? நீதிபதி தீபக் குப்தா மற்றும் சஞ்சய் ஹெட்ஜ் ஆகியோர் ஆரத்ரிகா பௌமிக் நடத்தும் உரையாடலில் இந்த தலைப்பைப் பற்றி விவாதிக்கின்றனர்.


நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததை உச்சநீதிமன்றம் நீதித்துறை விதிகளை மீறியதாக பார்க்க வேண்டுமா? ஆம் எனில், அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள், ஓய்விற்குப் பிறகு அரசு பதவிகளில் சேருவதை வெளிப்படையாக தடை செய்ய நீதித்துறை சீர்திருத்தங்களை உருவாக்க வேண்டுமா?


நீதிபதி தீபக் குப்தா: நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயாவின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சட்டரீதியான கட்டுப்பாடு இருப்பதாக நான் நம்பவில்லை. இருப்பினும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்பார்ப்புகளை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீதித்துறை நடத்தைக்கான பெங்களூர் கோட்பாடுகள் (Bangalore Principles of Judicial Conduct) (2002) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சமீபத்தில் நீதிபதி ஒருவர் ராஜினாமா செய்து அரசியல் கட்சியில் சேர்ந்த சம்பவம் நீதித்துறை சுதந்திரத்தை மோசமாக பிரதிபலிக்கிறது. தற்போதைய அமைப்பிலிருந்து அவர்கள் பயனடைவதால், கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த அரசாங்கத்தை நம்புவது நம்பத்தகாதது. அதற்கு பதிலாக, நீதிபதிகள் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, ஓய்வு பெற்றாலும் அல்லது ராஜினாமா செய்தாலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை நீதித்துறை நிறுவ வேண்டும்.  

 

சஞ்சய் ஹெட்கே: ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகள் அதிகாரப்பூர்வ பதவிகளை ஏற்பதற்கு எதிராக அரசியலமைப்பில் எந்த விதியும் இல்லை என்று நீதிபதி குப்தா கூறுகிறார். ஆனால், அனைத்து நீதிபதிகளும் இதுபோன்ற பதவிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமற்றது. சில பதவிகளுக்கு சில நீதிபதிகளின் தனித்துவமான திறன்கள் தேவைப்படலாம். நீதிபதி கங்கோபாத்யாயாவின் முக்கிய பிரச்சினை என்னவென்றால், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்கூட்டியே அவரது பதவியை ராஜினாமா செய்தார். இது, இப்போது தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக ஒரு நீதிபதியை ராஜினாமா செய்யச் சொல்வது, அதுவும் ஆளும் கட்சி கோரும் போது, அது தவறானதாகத் தெரிகிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அரசியல் பணிகளைப் பொறுத்தவரை, நீதித்துறை அதன் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன். மேலும், புதிதாக பணிகளில் சேருபவரிடம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தீவிரமாக அரசியலில் நுழைய மாட்டோம் என்று உறுதிமொழி பெற வேண்டும்.


சட்ட ஆணையமும் இதற்கு முன்பு தணியும் காலத்தை (cooling off period) பரிந்துரைத்துள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால், அது எவ்வளவு காலத்திற்கு இருக்க வேண்டும்?


சஞ்சய் ஹெட்ஜ்: தணியும் காலம் (cooling off period) இருப்பது ஒரு நல்ல நடைமுறை. இது குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீளமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நீதிபதி 62 வயதில் உயர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகிறார். பிறகு, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பணியைத் தொடரலாம். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, தணியும் காலம் (cooling off period) முடியும் போது அவர்களுக்கு 68 வயதாக இருக்கும்.

 

நீதிபதி தீபக் குப்தா: "நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அரசுப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரோஜர் மேத்யூஸ் vs சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் (2019) (Roger Mathews v. South Indian Bank Ltd (2019)) வழக்கில் எனது சிறுபான்மைத் தீர்ப்பில் (minority judgment) இந்தக் கருத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த பெரிய பிரச்சனையை, என் கருத்துப்படி, மக்கள் இதை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதுதான். சில நேரங்களில் நீதிபதிகள் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் ஓய்வுக்கு முன் தீர்ப்பு சரியாக வந்ததால், ஓய்வு பெற்ற பிறகு பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அது தாக்கம் செலுத்தியதாக பொதுமக்கள் நினைக்கலாம். சாதாரண குடிமக்கள் பெரும்பாலும் இந்தியாவின் மிகப்பெரிய வழக்காடுநரான அரசாங்கத்திற்கு எதிராக சட்டப் போராட்டங்களில் தங்களைக் ஈடுபடுத்துகிறார்கள். ஒரு நீதிபதி, ஓய்வு பெற்ற பிறகு அரசாங்கத்திடமிருந்து ஒரு பணியை ஏற்றுக்கொண்டால், அவர்களின் தீர்ப்புகள் நியாயமானவையா அல்லது செல்வாக்கு செலுத்தப்பட்டதா என்று மக்கள் சந்தேகிப்பார்கள். ரோஜர் மேத்யூஸ் வழக்கில், 'ஓய்வெடுக்கும் நிலையில், ஓய்வு பெற்ற பிறகு அதிகாரம் வாய்ந்த பதவிகளை தேடுபவர்களிடம் நியாயமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது' என்று நான் எழுதியிருந்தேன்.  


அரசுக்கு ஆதரவாக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஓய்வுக்குப் பிந்தைய பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், கடந்த காலங்களில் வழிகாட்டுதல்களை உருவாக்க உச்ச நீதிமன்றம் தயக்கம் காட்டியுள்ளதால், ஒன்றிய சட்டத்தை இயற்றுவதில் தீர்வு இருக்கிறதா?


நீதிபதி தீபக் குப்தா: துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் எந்த புதிய சட்டங்களையும் இயற்றாது. ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் பணிகளை எந்த திறமையான வழக்கறிஞரும் கையாள முடியும் என்று நான் நம்புகிறேன். நீதிபதிகள் நேர்மையாகவும், உயர்தரமாகவும் இருக்க வேண்டும். நீதிபதிகள் அதிகாரத்திற்கு அதிகமாக ஆசைப்பட்டால், அது நீதித்துறைக்கு மோசமான விளைவாகக் கருதப்படும்.


சஞ்சய் ஹெட்ஜ்: ஆம், ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நீதிபதி எதையாவது எதிர்பார்க்கிறார் என்றால், அவர்களுக்கு உதவக்கூடியவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். எனவே, நியமனங்களை நியமிக்கும் அல்லது பரிந்துரைக்கும் அதிகாரம் நீதித்துறையிடம் இருக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான ஒதுக்கீடு முறை நிறுவப்பட்டால், நீதிபதிகள் நீதித்துறை செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட முடியும். வரவிருக்கும் காலியிடங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு அரசாங்கத்தால் தெரிவிக்கப்படலாம். பின்னர், அடுத்த தகுதியான நீதிபதிக்கு அந்த பணியிடங்களை ஒதுக்கலாம்.


நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது பெரும்பாலும் அத்தகைய நடைமுறையைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணி காலத்தைப் பொறுத்தவரையில்,  அமெரிக்காவின் முன்னுதாரணத்தை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முன்மொழிவுகளுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?


சஞ்சய் ஹெட்கே: ஆம், ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தீர்வாக இருக்கலாம். இருப்பினும், நீதித்துறையின் பணிகளை விரும்பும் இளம் வழக்கறிஞர்களுக்கு இது நியாயமாக இருக்காது. மக்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதால், சிறப்பாக செயல்படும் நீதிபதிகள் தற்போதைய ஓய்வு வயதைத் தாண்டி தொடர அனுமதிக்கப்படலாம்.


அமெரிக்காவில், நீதிபதிகளின் வாழ்நாள் நியமனங்களை (lifetime appointments) மறுபரிசீலனை செய்வது பற்றி ஒரு விவாதம் உள்ளது. அடுத்த நாற்பதாண்டுகளாக சட்டத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய இளம் நீதிபதிகளை நியமிப்பது  எந்த ஒரு குடியரசு நிர்வாகங்களுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாழ்நாள் நியமனங்கள் சுமையை மேலும் ஏற்படுத்தக்கூடும் மற்றும் புதிய திறமைகள் நுழைவதைத் தடுக்கலாம். 


நீதிபதி தீபக் குப்தா: நான் சஞ்சயின் கருத்துடன் உடன்படுகிறேன். இந்தப் போக்கு ஆபத்தானது. காலப்போக்கில், அது உங்கள் மனதையும் உடலையும் பாதிக்கலாம். இதனால், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரே வயதில் ஓய்வு பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் வெவ்வேறு வயதில் ஓய்வு பெறுவதால், உயர் நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் மீது வலுவான செல்வாக்கு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குச் சமம் என்றாலும், உண்மையில், இந்த சமத்துவம் கடைப்பிடிக்கப்படவில்லை.


தீர்ப்பாயங்கள் மற்றும் ஆணையங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் பெரும்பாலும் உயர் நீதித்துறையின் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையை வழங்குகின்றன. இந்த நியமனங்களுக்கு அவர்கள் இன்றியமையாதவர்களாக ஆக்குகின்றன. அத்தகைய நியமனங்களைப் பெறுவதற்கு ஒரு பொதுவான சேவை அல்லது எழுத்துத் தேர்வு ஒரு நம்பத்தகுந்த மாற்றமாகுமா?

சஞ்சய் ஹெட்கே: அந்த வயதில், எழுத்துத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. சேவையின் அடிப்படையில், நீதித்துறையில் நாம் எவ்வளவு அதிகமாக கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவு சுதந்திரமான நீதித்துறை (judicial) அல்லது நீதிமுறை சார்புடைய (quasi-judicial) பதவிகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இறுதியில், எங்களிடம் ஒரு சில நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே இருப்பார்கள். நாம் நீதிபதிகளாக இருந்தாலும் சரி, வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி, தேசத்துக்கும், மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கும் உதவும்போது, மக்கள் நம் தொழிலை நம்புகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


நீதிபதி தீபக் குப்தா: பல்வேறு வகையான தீர்ப்பாய சேவைகள் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எடுத்துக்காட்டாக, வரி விஷயங்களுக்கான வரி நிர்வாக சேவை மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (Central Administrative Tribunal (CAT)) மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் (State Administrative Tribunals (SAT)) போன்ற அமைப்புகளுக்கு சேவை தீர்ப்பாய சேவை இருக்கலாம். இளைஞர்கள் இந்த சேவைகளில் சேரலாம் மற்றும் இந்த நிறுவனங்களை வழிநடத்தும் வழியில் பணியாற்றலாம். இந்த அமைப்புகளை வழிநடத்த உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை ஏன் நியமிக்க வேண்டும்?


நீதிபதி குப்தா, இந்த மாதிரியான நியமனங்களை நீதிபதிகள் நம்பியிருப்பதைக் குறைக்க ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியத்திற்குப் பிந்தைய பண சலுகைகள் அதிகரிக்கப்பட வேண்டுமா?


நீதிபதி தீபக் குப்தா: நீங்கள் நீதிபதியாகும்போது, ஓய்வு பெறும்போது என்ன கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். சிலர் பணத்திற்காக ஓய்வுக்குப் பிந்தைய வேலைகளை விரும்ப மாட்டார்கள். ஆனால், அது கொண்டு வரும் அதிகாரத்திற்காக இருக்கலாம். நீங்கள் திறமையானவராக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு ஒரு நடுவர் (arbitrator) அல்லது சட்ட ஆலோசகராக (legal advisor) போதுமான வேலையைக் காணலாம்.


நீதிபதி தீபக் குப்தா உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.  சஞ்சய் ஹெக்கே டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்.




Original article:

Share:

உலகளாவிய தண்ணீர் சவால்கள்: சிக்கல்களை வழிநடத்துதல் -டிம் கர்டிஸ்

 பருவநிலை மாற்றம் தொடர்பான அழுத்தங்களின் பின்னணியில், தண்ணீர் பகிர்வு தொடர்பாக மேம்பட்ட ஒத்துழைப்பை உலகம் வளர்க்க வேண்டியது அவசியம்.

 

உலகளவில் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் இன்னும் சுத்தமான தண்ணீரைப் பெற போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தண்ணீரின் தேவை அதிகரித்து கொண்டு செல்கிறது. இந்த பற்றாக்குறை அடிப்படை மனித தேவைகளை மட்டும் அச்சுறுத்தாமல்,  நமது ஒட்டுமொத்த செழிப்பு மற்றும் அமைதியை பாதிக்கிறது. 


இன்று மார்ச் 22, 2024, அது 31வது உலக தண்ணீர் தினம் (World Water Day). இந்த ஆண்டின் கருப்பொருள் "அமைதிக்காக தண்ணீரை மேம்படுத்துதல்" (“Leveraging water for peace”) என்பதாகும். யுனெஸ்கோ, உலக நீர் மதிப்பீட்டு திட்டத்தின் மூலம்  (World Water Assessment Programme), 2024 ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கையை (United Nations World Water Development Report) "வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தண்ணீர்" (“Water for Prosperity and Peace”) என்ற தலைப்பில் வெளியிடுகிறது. 35 ஐக்கியநாடுகளவையின் நிறுவனங்கள் மற்றும் 48 பிற  சர்வதேச பங்குதாரர்கள் குழு தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்து வருகிறது.   


சிந்து, நைல், டைகிரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு அருகில் உள்ள பல புகழ்பெற்ற நாகரிகங்களுக்கு தண்ணீர் இன்றியமையாததாக இருந்துள்ளது. இருப்பினும், மெசபடோமிய (Mesopotamian) நகரங்களான லாகாஷ் (Lagash) மற்றும் உம்மா (Umma) இடையே நன்கு அறியப்பட்ட பதட்டங்களைப் போலவே இந்த நாகரிகங்களிலும் தண்ணீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளன. வரலாற்றின் மிகப் பழமையான போர்களில் ஒன்றான இந்த மோதல் வளமான நிலம் மற்றும் நீர்வளங்களை மையமாகக் கொண்டது. சுவாரஸ்யமாக, மெசிலிம் ஒப்பந்தம் (Treaty of Mesilim),  உலகின் முதல் அமைதி ஒப்பந்தத்திற்கு (first peace treaty) வழிவகுத்தது. இது  மனிதகுலத்தின் பழமையான சட்ட ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  


கடினமான காலகட்டத்தில் தண்ணீர் இராஜதந்திரம்


இன்று, கடுமையான வெப்ப அலைகள் முதல் கடுமையான வெள்ளம் போன்ற பல தீவிர வானிலை நிகழ்வுகளை உலகம் எதிர்கொண்டுவருகிறது. இது காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையில் அதன் தாக்கம் குறித்து மக்களை அதிகம் கவலைப்பட வைக்கிறது. உதாரணமாக, இந்தியாவில், பருவமழை காலப்போக்கில் கணிக்க முடியாததாகிவிட்டது, இது இந்தியாவின் $3 டிரில்லியன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான துறையான விவசாயத்திற்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கூடுதல் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, நீர் பகிர்வு மற்றும் சர்வதேச நீர் சட்டத்திற்கான உலகளாவிய கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் சிறந்த ஒத்துழைப்பு தேவை. பகிரப்பட்ட நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதன் மூலமும், நிலையான நீர் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், நீரை அமைதிக்கான கருவியாகப் பயன்படுத்தி, மேம்பட்ட நீர் ராஜதந்திரத்தை நாம் நோக்கமாகக் கொள்ள முடியும். நீர் இன்றியமையாதது, ஆனால் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை அங்கீகரித்து, நாடுகளிடையே நியாயமான மற்றும் திறமையான நீர் விநியோகத்தை உறுதி செய்ய கூட்டு  முயற்சி அவசியம். இது பிராந்திய ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் நீர், காலநிலை மற்றும் சர்வதேச ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவுகளைப் பற்றிய புரிதலை வளர்க்கிறது. 


தண்ணீர் இராஜதந்திரம் எல்லைகளைக் கடந்து தொடர்புகளைக் கொண்ட பழங்குடி மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும். நீர் பங்கீடு பிரச்னைகளை தடுக்கவும், குறைக்கவும், தீர்க்கவும்  குடுமையியல் சமூகம் மற்றும் கல்வி கூட்டமைவுகளும் முக்கியம். இந்த ஆண்டு தண்ணீர் அறிக்கை உலகளவில் நீரின் தர தரவு பற்றாக்குறை பற்றி பேசுகிறது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தையும் சுட்டிக்காட்டுகிறது, "அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லாமல் ஐந்து பேரில் நான்கு பேர் கிராமப்புறங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்”. 


இந்தியாவில், கிராமப்புறங்களில் உள்ள 70% மக்கள் தங்கள் வீடுகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக, விவசாயம் அவர்களின் முக்கிய வேலை. இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் விவசாயம் உலகின் மொத்த நன்னீரில் 70% பயன்படுத்துகிறது. மேலும், கிராமப்புறங்களில் தண்ணீர் கிடைப்பதை எளிதாக்கினால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தண்ணீரில் அதிக முதலீடு செய்வதன் மூலம் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, அடிப்படை மனிதத் தேவைகளைப்  பூர்த்தி செய்தல் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் நேர்மறையான முடிவுகளைக் கொண்டுவர முடியும்.


விவசாயத்தில், செயற்கை நுண்ணறிவு (artificial intelligence AI)) போன்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பயிர் மற்றும் உணவு கழிவுகளைக் குறைப்பதன் மூலமும், ரசாயன பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும் தண்ணீரைச் சேமிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியா உட்பட நாடுகளுக்கு இடையே பகிரப்படும் எல்லை தாண்டிய நீர் பற்றி இந்த அறிக்கை பேசுகிறது.  


எல்லை தாண்டிய நீர் பிரச்சினை


இந்தியா, பரந்த நிலப்பரப்புடன், பல நீண்ட நதிகளைக் கொண்டுள்ளது. அவை அதன் சொந்த மற்றும் அதன் அண்டை நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தெற்காசியாவில், குறிப்பாக மேக்னா, பிரம்மபுத்திரா, கங்கை மற்றும் சிந்து போன்ற நதிகளில் நீர் மாசுபாடு சமீபத்திய ஆண்டுகளில் மோசமாகியுள்ளது என்று 2024 ஆண்டு  அறிக்கை எச்சரிக்கிறது.


இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, உலகிற்கு மேம்பட்ட எல்லை தாண்டிய நீர் மேலாண்மை தேவைப்படுகிறது. இதன் பொருள் நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிடையே நீர் நியாயமான மற்றும் பயனுள்ள விநியோகத்தை உறுதி செய்வதாகும்.  ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரஅமைப்பின்  (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO))  194 உறுப்பு நாடுகள் மற்றும் 12 இணை உறுப்பினர்களில், 153 நாடுகள் நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது உலகின் நன்னீர் ஓட்டத்தில் 60% ஆகும். இந்த 153 நாடுகளில், 24 நாடுகள் மட்டுமே பகிரப்பட்ட நீரில் ஒத்துழைப்பதில் முழுமையாக உடன்பட்டுள்ளன என்று, "எல்லை கடந்த நீர் ஒத்துழைப்பில் முன்னேற்றம்" (“Progress on transboundary water cooperation”) என்ற தலைப்பில் யுனெஸ்கோ  வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு காட்டி 6.5.2  2021  (Sustainable Development Goal indicator 6.5.2)  அறிக்கை தெரிவிக்கிறது.


காலத்தின் தொடக்கத்திலிருந்து, அமைதியை உருவாக்குவதில் நாம் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், நன்னீர் தீர்ந்துவிட்டால், அது நம் நல்வாழ்வுக்கும் அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும். 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (Sustainable Development Goal (SDGs)) அடைய இது முக்கியமானது. எல்லைகளைத் தாண்டி தண்ணீரை நிலையான முறையில் நிர்வகிக்க ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், சிறந்த ஆரோக்கியம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பு, கல்வி, மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகள், வேலைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் போன்ற பலன்களை நாம் அனுபவிக்க முடியும். 


டிம் கர்டிஸ் (Tim Curtis) ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரஅமைப்பின்  (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) தெற்காசியாவிற்கான புது தில்லி பிராந்திய அலுவலகத்தின் இயக்குநராகவும், இந்தியாவுக்கான யுனெஸ்கோ பிரதிநிதியாகவும் உள்ளார்.




Original article:

Share: