வேளாண்துறைக்கான ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் - பகீரத் சௌத்ரிகாட் மாய்

     நலத்திட்டங்களுக்கு பதிலாக வேளாண் ஆராய்ச்சியில் முதலீடுகளை அதிகரிப்பது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியமாகும்.


பசுமைப் புரட்சிக்குப் பிறகு முதல் முறையாக, இந்தியா உணவு தானிய விநியோகத்தில் குறைவு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறது. முழு தானியக் களஞ்சியங்கள் மற்றும் உணவு தானிய மற்றும் தோட்டக்கலை உற்பத்தியில் அதிக அளவு இருந்தபோதிலும், காலநிலை மாற்றம் கணிக்க முடியாத வானிலையை ஏற்படுத்துகிறது. இந்த வானிலை மாறுபாடு உணவு உற்பத்தி, உணவு கிடைக்கும் தன்மை மற்றும் பணவீக்கத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது. இதன் விளைவாக, பலர் அரசாங்கம் வழங்கும் இலவச பொதுவிநியோக குடிமைப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை நம்பியுள்ளனர்.


உணவுப் பாதுகாப்பின்மை குறித்த உரையாடல் ஒரு கடினமான உண்மையாகும். உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் கொள்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. கையிருப்பைக் கட்டுப்படுத்துதல், ஏற்றுமதி வரிகளை விதித்தல், இறக்குமதி சுங்கவரிகளைக் குறைத்தல் மற்றும் அரிசி முதல் சர்க்கரை வரை விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இந்தக் கொள்கைகள் இந்தியாவின் 140 கோடி மக்களை பாதிக்கின்றன.


இந்தியாவின் வேளாண் வர்த்தக உபரி குறைந்து வருகிறது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் சமநிலையற்றத் தன்மை உள்ளது, மேலும் உணவுப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. இந்த இறக்குமதிகள் சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள் முதல் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் தானியங்கள் போன்ற விலங்கு தீவனங்கள் வரை உள்ளன. 2023ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்க வர்த்தகக் கொள்கை மன்றத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிலிருந்து அல்பால்ஃபா (alfalfa) வைக்கோலை இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் கால்நடைத் துறைக்கு கால்நடைத் தீவனத்தின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.


இந்தியாவில், பாமாயில், சோயாபீன் எண்ணெய், பருப்பு, பட்டாணி, கொண்டைக்கடலை, வாஷிங்டன் ஆப்பிள் மற்றும் கலிபோர்னியா பாதாம் ஆகியவற்றை மக்களுக்காக இறக்குமதி செய்வதைத் தவிர, இப்போது கால்நடைகள் மற்றும் எருமைகளுக்கான அல்ஃப்ல்ஃபா வைக்கோலை இறக்குமதி செய்வதற்கான உந்துதல் உள்ளது. கடந்தகால வெற்றிகளால் மறைக்கப்பட்ட விவசாயத்தின் தற்போதைய நிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி 1960கள் மற்றும் 1970களின் பசுமைப் புரட்சியின் முழக்கங்களில் கவனம் செலுத்துகிறது.


கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா தனது விளை நிலங்களை 1950-ல் 97.3 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 2023-24-ல் 132.2 மில்லியன் ஹெக்டேராக விரிவுபடுத்தியுள்ளது, இது ஆண்டுக்கு சராசரியாக 0.47% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இதற்கிடையில், உணவு தானிய உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது, 1950-ல் 50.8 மில்லியன் டன்னிலிருந்து 2023-24-ல் 350 மில்லியன் டன்னாக, ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.85%. அதிக மகசூல் தரும் விதை வகைகள், அதிகரித்த நீர்ப்பாசனம், இயந்திரமயமாக்கல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சியின் காரணமாக உற்பத்தித்திறனில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி மூலம் வலுவான நிறுவன ஆதரவுடன் விவசாய உற்பத்தியை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை பசுமைப் புரட்சி எடுத்துக்காட்டுகிறது.


இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய ஆய்வுகள் விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் முதலீடுகள் மூலம் கணிசமான வருமானத்தை எடுத்துக்காட்டுகின்றன. செலவழித்த ஒவ்வொரு ரூபாய்க்கும், விவசாய ஆராய்ச்சிக்கு ₹13.85, விரிவாக்க சேவைகள் ₹7.40, கால்நடைத் துறைக்கு ₹20.81 கிடைக்கும். இந்த வருவாய் பொருளாதாரத்தில் மற்ற துறைகளைவிட அதிகமாக உள்ளது. இதேபோல், 2008ஆம் ஆண்டு ரிசர்வ்வங்கி ஆய்வில், விவசாய ஆராய்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு ரூபாய்க்கு ₹13.45 வருமானம் கிடைக்கிறது. விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வது விவசாய வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கிறது மற்றும் வறுமையைக் குறைக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.


இந்த கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், விவசாய முதலீடுகள் கடந்த இருபது ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்வியைவிட நலன்புரித் திட்டங்களை அதிகளவில் விரும்பியுள்ளன. விவசாய ஆராய்ச்சி மற்றும் நலன்புரி முதலீட்டின் விகிதம் 4:1 லிருந்து 15:1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையானது, 2013-14ல் ₹21,190 கோடியிலிருந்து 2023-24ல் ₹1,15,532 கோடியாக, சுமார் 450% அதிகரித்து, நலன்புரி முதலீட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் வேளாண் ஆராய்ச்சிக்கான முதலீடுகள் ₹4,881 கோடியிலிருந்து ₹9,504 கோடியாக உயர்ந்துள்ளது, இது 90% அதிகரிப்பைக் குறிக்கிறது.


விவசாய ஆராய்ச்சிக்கான தற்போதைய பட்ஜெட் ஒதுக்கீடு விவசாய நலன் மற்றும் பண உதவிக்கான மொத்த பட்ஜெட்டில் 8% மட்டுமே. இந்த சிறிய அளவிலான வளங்கள் ஒரு பெரிய தேசிய வேளாண் ஆராய்ச்சி முறையை ஆதரிக்கிறது. இந்த அமைப்பில் 103 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும நிறுவனங்கள், 72 மாநில மற்றும் மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் உள்ளனர். கூடுதலாக, 731 க்ரிஷி விக்யான் கேந்திராவில் (கேவிகே) பணிபுரியும் 25,000 கல்வியாளர்கள் மற்றும் சுமார் 11,000 விரிவாக்க வல்லுநர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, விவசாய ஆராய்ச்சிக்கான நிதியில் கிட்டத்தட்ட 90% சம்பளத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 10% நிர்வாகச் செலவுகளுக்குச் செல்கிறது, உண்மையான ஆராய்ச்சிக்கு ஒரு சிறிய பகுதியை மட்டுமே விட்டுச்செல்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் பல புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு காலாவதியானது மற்றும் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.


கடுமையான  சட்டங்கள்


பூச்சிக்கொல்லிகள், உயிர்-தூண்டுதல்கள் (bio-stimulants) மற்றும் பயோடெக் பண்புகளுக்கான பயன்பாடுகளின் தேக்கத்துடன் இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது. பாரம்பரிய விவசாய முறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது, இது பயனளிக்காது. விவசாயத்திற்கு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 மற்றும் உரக் கட்டுப்பாடு ஆணை 1985 ஆகிய இரண்டு கடுமையான சட்டங்களிலிருந்தும் சுதந்திரம் தேவை. இந்தியா தனது அறிவியல் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சட்ட நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் பொதுத்துறை முதலீட்டை அதிகரிப்பது முக்கியமானது.


உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, உணவு, தீவனம், நார்ச்சத்து மற்றும் எரிபொருள் துறைகளில் இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம். விஞ்ஞானத்தால் உந்தப்பட்ட உணவு தன்னிறைவு மற்றும் விவசாயிகளின் செழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, பொதுமக்களுக்கான திட்டங்களுக்கு மேல் 'நலன்புரி அறிவியலை' நோக்கி இந்தியா மாற வேண்டும்.


எழுத்தாளர்கள் ஜோத்பூரில் உள்ள தெற்காசிய பயோடெக்னாலஜி மையத்தில் உள்ளனர்.  

Share:

விளம்பரங்களுக்கான தன்னுறுதிச் சான்று (Self-declaration certificate) செயல்முறை மெருகேற்றப்பட வேண்டும்.

     இணையதளங்கள் மெதுவாக இருப்பதால், செயல்முறை சிக்கலானது மற்றும் பதிவேற்றம் செய்ய நீண்டநேரம் எடுப்பதால் விளம்பரதாரர்கள் விரக்தியடைந்துள்ளனர். 


உச்சநீதிமன்றம் ஒளிபரப்பாளர்கள் மற்றும் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு அவர்களின் விளம்பரங்கள் தற்போதுள்ள விதிகளின் கீழ் உறுதியாக செயல்பட வேண்டும் மே 7, 2024 அன்று உத்தரவிட்டது. பதஞ்சலி ஆயுர்வேதம் தங்கள் விளம்பரங்களில் தவறான கூற்றுக்களை வெளியிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் மற்ற விளம்பரதாரர்கள் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதை இந்த உத்தரவு நோக்கமாக கொண்டிருந்தது. 


இந்த உத்தரவைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்தில் (Press Council of India site) அச்சு மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களும், ஒளிபரப்பு சேவா வலைத்தளத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களும் இதில் அடங்கும். இதுவரை, 28,000-க்கும் மேற்பட்ட தன்னுறுதிச் சான்றிதழ்கள் (self-declaration certificates (SDCs)) பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சேவா தளத்தில் எண் தெளிவாக இல்லை. விளம்பரதாரர்கள் இந்த தளங்களில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். தளங்கள் அடிக்கடி செயலிழந்து பதிவேற்றும் செயல்முறை மெதுவாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது விளம்பரங்களை வெளியிடுவதில் தாமதமாகிறது. ஊடக நிறுவனங்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகள் வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வலைத்தளம் (GST portal)  தொடங்கப்பட்டபோது இருந்த சிக்கல்களைப் போலவே உள்ளன.

 

இது போன்ற பெரிய அளவிலான திட்டங்களை மேற்கொள்வதற்குமுன் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்திய செய்தித்தாள் சங்கம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து விளம்பரங்களும் தன்-உறுதிச் சான்றிதழ்களை பெறுவதற்கு எதிராக வாதிடுகிறது. பதஞ்சலி விளம்பரங்களில் தவறான உரிமைகோரல்களால் சிக்கல் எழுந்ததால், எந்த உரிமைகோரல்களும் இல்லாத விளம்பரங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக, அரசு மற்றும் பொதுத்துறை விளம்பரங்கள் அல்லது சட்டப்பூர்வ விளம்பரங்களுக்கு தன்னுறுதிகள் தேவையில்லை. பல்வேறு விளம்பர அளவுகள், பதிப்புகள் மற்றும் மொழிகளுக்கான தன்னுறுதிச் சான்றிதழ்கள் நிர்வகிப்பது பணிச்சுமையை அதிகரிக்கிறது.


டிஜிட்டல் ஊடகம், இப்போது அச்சு ஊடகத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. டிஜிட்டல் விளம்பரங்கள் பெரும்பாலும் அச்சு விளம்பரங்களுடன் வருகின்றன.  தன்னுறுதிச் சான்றிதழ்களை ஒரே நேரத்தில் கையகப்படுத்த வேண்டும். டிஜிட்டல் விளம்பரங்கள் காணொளிகள் முதல் பதாகை விளம்பரங்கள் வரை பரவலாக வேறுபடுவதால் இது சவாலானது. விளம்பரதாரர்கள் தங்களது முழு மீடியா திட்டத்தையும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால், போட்டித்தன்மையை இழக்க நேரிடும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நடவடிக்கை, தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கும்போது, ​​செயல்படுத்துவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. விளம்பரத் துறையுடன் கூடுதல் விவாதங்களும் தேவைப்படுகிறது.



Share:

ஹமாரே பாரா மற்றும் இந்தியாவின் முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பு பற்றிய கட்டுக்கதை. . . -சரோஜினி நாடிம்பல்லி, கீர்த்தனா கே டெல்லா

     2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து மக்கள்தொகையை விட முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. 2001 மற்றும் 2011-க்கு இடையில் இருவருக்கும் இடையிலான இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை இதை சார்ந்த சர்ச்சை மறைத்தது.


ஜூன் 13 அன்று, இந்திய உச்சநீதிமன்றம், ஹம் தோ, ஹமாரே பரா (நாம் இருவர், எங்களுடைய பன்னிரெண்டு) என்று முதலில் அழைக்கப்பட்ட ஹமாரே பாரா (நம்முடைய பன்னிரண்டு) திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்து, இறுதி முடிவை எடுக்க பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. ஜூன் 19 அன்று, பாம்பே உயர்நீதிமன்றம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சில காட்சிகளை அகற்றி, படத்தின் வெளியீட்டை அனுமதித்தது. பல அரசியல்வாதிகள் முஸ்லிம்களை குறிவைக்க "ஹம் பாஞ்ச், ஹமாரே பச்சீஸ்" (நாங்கள் ஐந்து, எங்களுடைய 25) என்ற கோஷத்தை பயன்படுத்துகின்றனர். இந்த முழக்கம் முஸ்லீம் ஆண்களுக்குப் பொதுவாக பல மனைவிகள் மற்றும் குழந்தைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது, இது முஸ்லிம்களிடையே விரைவான மக்கள்தொகை வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. முஸ்லிம்கள் இறுதியில் இந்துக்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்பதை இந்த நம்பிக்கை உணர்த்துகிறது. எனவே, முஸ்லீம் கருவுறுதலை ஒரு அச்சுறுத்தலாகக் கருதும் இந்தக் கண்ணோட்டத்தை சவால் செய்யும் தரவை மதிப்பாய்வு செய்து வலியுறுத்துவது மிகவும் முக்கியமானது.


இந்தியாவின் முஸ்லீம் மக்கள்தொகை 'வெடிப்பு' பற்றி


சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare (MoHFW)) நடத்திய சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2019–20 (National Family Health Survey (NFHS–5)), பல மாநிலங்கள் ஏற்கனவே கருவுறுதலில் மாற்று அளவை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் நிலையான சரிவு விகிதம் உள்ளது என்பதைக் காட்டுகிறது. மொத்த கருவுறுதல் விகிதங்கள் (total fertility rates (TFR)) தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NHFS-5) தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதங்கள் (TFR) 2021 வரை ஒரு பெண்ணுக்கு 2.0 குழந்தைகளாக உள்ளது. இது ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகளின் கருவுறுதல் அளவைவிட சற்று குறைவாக உள்ளது. பொருளாதார ஆய்வு 2018-19 மற்றும் 2017ஆம் ஆண்டிலிருந்து மாதிரி பதிவு அமைப்பு (Sample Registration System (SRS)) தரவுகளும் இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் வீழ்ச்சியைப் பற்றி இதே போன்ற கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தன.


2011-ல், இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து மக்கள் தொகையைவிட முஸ்லீம் மக்கள் தொகை வேகமாக வளர்ந்துள்ளது. இருப்பினும், இதில் கவனம் செலுத்துவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தை வளர்ச்சி விகிதங்களில் உள்ள வேறுபாடு உண்மையில் 2001 முதல் 2011 வரை குறைந்துவிட்டது என்ற உண்மையை மறைத்தது. இந்த முக்கியமான தகவலில் கூறப்பட்ட சில கூற்றுகளுக்கு முரணானது. 2001 மற்றும் 2011-ம் ஆண்டின் தரவுகளைப் பயன்படுத்தி இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே கருவுறுதல் விகிதங்களைப் பார்க்கும்போது, ​​அவர்களின் கருவுறுதல் விகிதங்கள் மிகவும் ஒத்ததாக இருப்பதைக் காண்கிறோம். இருப்பினும், முந்தைய ஆய்வுகள் காட்டியுள்ளபடி, இந்த மாற்றம் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் குழுக்களில் வேறுபடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


முஸ்லிம்களுக்கு மற்றவர்களை விட அதிகமான குழந்தைகள் இருக்கிறார்களா? 


கருவுறுதல் குறைவு மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் வீழ்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்ட மற்றொரு சமீபத்திய பகுப்பாய்வு, கடந்த இரண்டு தசாப்தங்களில் முஸ்லீம்களின் கருவுறுதல் வீழ்ச்சியை விட இந்துக்களின் கருவுறுதல் வீழ்ச்சி ஐந்து சதவீதம் குறைவாக உள்ளது, அங்கு முஸ்லீம் மக்கள்தொகை வளர்ச்சி வேகமாக குறைந்துள்ளது. இந்துக்களை விட விகிதம். இந்த பகுப்பாய்வு 2030க்குள் இந்து-முஸ்லிம் கருவுறுதல் விகிதங்களில் "முழுமையான ஒருங்கிணைப்பு" இருக்கலாம் என்று பரிந்துரைத்தது.


கடந்த இருபது ஆண்டுகளில் அனைத்து மத சமூகங்கங்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது என்பதை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) தரவு வெளிப்படுத்துகிறது. முஸ்லீம்களின் குடும்ப அளவு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. அவர்களின் கருவுறுதல் விகிதம் 1992-93-ல் 4.4 ஆக இருந்து 2020-21-ல் 2.4 ஆக குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது. இந்தியாவில் உள்ள மதக் குழுக்களிடையே கருவுறுதல் விகிதங்களில் ஒட்டுமொத்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மத சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் குறைந்து வருவதாகவும் பியூ ஆராய்ச்சி மைய ஆய்வு (Pew Research Centre study) கூறியுள்ளது.


கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் கருவுறுதல் விகிதங்களை பாதிக்கிறது என்று இந்திய மக்கள் தொகை அறக்கட்டளை கண்டறிந்துள்ளது. குறைந்த வளங்களைக் கொண்ட பீகாருடன் ஒப்பிடும்போது கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைவாக உள்ளது. கருவுறுதல் விகிதம் மதத்தைவிட சமூக-பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.


சவாலான தவறான தகவல்


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS) தரவு உயர்கல்வி பெற்ற தாய்மார்கள் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. முஸ்லீம்கள் பொருளாதார குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர், உயர்கல்வியில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை உட்பட குறைந்த கல்வி மற்றும் சுகாதார விளைவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2006-ல் சச்சார் கமிட்டி அறிக்கை (Sachar Committee Report) முஸ்லிம்கள் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எனவே, மக்கள்தொகை வளர்ச்சி பற்றிய விவாதங்கள் கல்வி, பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரங்கள், உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் மற்றும் பாலின நீதி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, கருவுறுதல் மற்றும் கருத்தடை மற்றும் இனப்பெருக்க சுகாதார பராமரிப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் குறைவாக உள்ளன.


முஸ்லீம் குடும்பங்களில் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்ற பேச்சு முஸ்லிம் பெண்களின் குழந்தைகளைப் பெறுவதற்கான விருப்பங்களைப் பாதிக்கிறது. இது அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மீறுகிறது மற்றும் அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் பாதிக்கிறது. எனவே, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பற்றிய உரையாடலை மாற்றி, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஒரு சமூகத்தை விமர்சிப்பதற்காக தவறான தகவல்களை பரப்புவதும், அவர்களின் அநீதியை சாதாரணமாக நடத்துவதும் தவறானது. இது பாரபட்சமானது, புண்படுத்துவது, தவறாக வழிநடத்துவது மற்றும் மக்களைப் பிரிக்கிறது. பெண்ணியவாதிகளாக, உண்மைகள், தரவுகள் மற்றும் இனப்பெருக்கத் தேர்வுகள் பற்றி முடிவெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதன் மூலம் நம்மைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.


கட்டுரையாளர்கள் பாலினம், கருவுறுதல், இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.


Original link : https://indianexpress.com/article/opinion/columns/hamare-baarah-and-the-myth-of-indias-muslim-population-explosion-9414996/


Share:

சீனாவின் நிலவின் மாதிரிகளை எடுத்துவரும் திட்டத்தின் வெற்றி ஏன் முக்கியமானது? - அலிந்த் சௌகான்

         ஜூன் 1-ஆம் தேதி சந்திரனின் மேற்பரப்பில் இறங்கிய லேண்டர், 2,500 கி.மீ அகலமுள்ள தென் துருவ-ஐட்கென் (South Pole-Aitken (SPA)) நிலப்பரப்பில் உள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய சந்திர பள்ளங்களில் ஒன்றிலிருந்து பாறைகள் மற்றும் மண்ணை சேகரிக்க இரண்டு நாட்கள் செலவிட்டது.


சாங்'இ-6 (Chang’e-6) செயற்கைக் கோளில் ஒரு லேண்டர் இருந்தது. இது சந்திரனைச் சுற்றி வரும் சாங்'இ-6 ஆர்பிட்டருக்கு மாதிரிகளை எடுத்துச் செல்லும் ஏற்றம் தொகுதியை அறிமுகப்படுத்தியது. ஜூன் 21 அன்று, ஆர்பிட்டர் ஒரு சேவையை வெளியிட்டது. இது சேகரித்த மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது.


ஜூலை 1969-ல், அமெரிக்க அப்பல்லோ-11 மிஷன் (US Apollo 11 mission) 50 பாறைகள் உட்பட 22 கிலோ சந்திர மேற்பரப்பு பொருட்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது. செப்டம்பர் 1970-ல், சோவியத் லூனா 16 மிஷன் (Soviet Luna 16 mission), முதல் ரோபோ மாதிரி திரும்பும் பணி, சந்திரன் மாதிரிகளையும் மீட்டெடுத்தது. மிக சமீபத்தில், டிசம்பர் 2020-ல், சாங்'இ -5 (Chang’e-5) ஆனது, 2 கிலோ சந்திர மண்ணை மீண்டும் கொண்டு வந்தது. இந்த மாதிரிகள் அனைத்தும் சந்திரனின் அருகிலுள்ள பக்கத்திலிருந்து வந்தவை. இது அடையவும் தொடர்பு கொள்ளவும் எளிதானது. கடினமான நிலப்பரப்பு, ராட்சத பள்ளங்கள் மற்றும் தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்புகொள்வதில் உள்ள சிரமம் ஆகியவை பூமி எதிர்கொள்ளாத பக்கத்தில் ஒரு விண்கலத்தை தரையிறக்க தொழில்நுட்ப ரீதியாக சவாலாக இருந்தது. இதனால், நமது அருகில் உள்ள ஒரு பக்கத்தை மட்டுமே நாம் காண்கிறோம். 2019-ம் ஆண்டில், Chang'e-4 இந்த சிரமங்களை சமாளித்து, யுடு-2 ரோவரை (Yutu-2 rover) தொலைதூர நிலவின் மேற்பரப்பில் வைத்தது. இப்போது, ​​Chang'e-6 தொலைவில் தரையிறங்கியது மட்டுமல்லாமல், அங்கிருந்து மாதிரிகளுடன் திரும்பியுள்ளது. "இது சீனாவின் ஒரு பெரிய சாதனை... சந்திரனில் இருந்து எந்த மாதிரிகளையும் மீட்டெடுப்பது கடினம். ஆனால், வேறு எந்த நிறுவனமும் எடுக்காத நடவடிக்கையானது, தொலைதூரத்தில் இருந்து இதுபோன்ற செயல்பாட்டை மேற்கொள்ளச் செய்வது குறிப்பாக தகவல்தொடர்புகள் கடினமாக இருக்கும் ஒரு உண்மையான தொழில்நுட்ப சாதனை,” என்று லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் பேராசிரியரான மார்ட்டின் பார்ஸ்டோ தி கார்டியனிடம் கூறினார். சாங்'இ-6 போன்ற மாதிரி மீண்டும் பூமிக்கு திரும்பும் பணி சந்திரன் போன்ற வேற்று கிரக இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்லது பகுப்பாய்விற்காக பூமிக்கு செவ்வாய் மாதிரி பாறைகள் அல்லது மண்ணாக இருக்கலாம் அல்லது சில மூலக்கூறுகளாகவும் இருக்கலாம்.


விண்வெளியில் அல்லது பிற கிரகங்களில் ரோபோ ஆய்வுகள் சிறிய, அடிப்படை கருவிகளைப் பயன்படுத்துகின்றன. இந்த கருவிகள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், ஆனால் பாறை தோற்றம் அல்லது வயது போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய முடியாது.


விண்வெளியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டால், மறுபுறம், விஞ்ஞானிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த ஆய்வக கருவிகளைப் பயன்படுத்தி அவற்றை ஆய்வு செய்யலாம். "வேற்று கிரக மாதிரிகளின் வேதியியல், ஐசோடோபிக், கனிமவியல், கட்டமைப்பு மற்றும் இயற்பியல் பண்புகளை மேக்ரோஸ்கோபிக் மட்டத்திலிருந்து அணு அளவு வரை, ஒரே மாதிரியில் அடிக்கடி படிக்க முடியும்" என்று நாசாவின் கிரக அறிவியல் பிரிவின் இயக்குனர் லோரி எஸ் கிளேஸ் ஜனவரி 2020 இல் எழுதியுள்ளார்.


மேலும், சேகரிக்கப்பட்டு திரும்பிய மாதிரிகள் பல பத்தாண்டுகளாக பாதுகாக்கப்படலாம். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால தலைமுறையினரால் ஆய்வு செய்யப்படலாம். 1960கள் மற்றும் 1970களில் அப்பல்லோ பயணங்களால் மீண்டும் கொண்டு வரப்பட்ட மாதிரிகள் இன்னும் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் சந்திரன், பூமி மற்றும் உள் சூரிய குடும்பத்தின் வரலாற்றைப் பிரித்தெடுக்கின்றனர்.


தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்டு வரும் இந்தியாவின் சந்திரயான்-4 பணியும் ஒரு மாதிரி திரும்பும் பணியாக இருக்கும். சந்திரயான்-3 கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கிமீ தொலைவில் தரையிறங்கியது.


சந்திரனின் தூரப் பக்கம் நாம் பார்க்கும் பக்கத்திலிருந்து வேறுபட்டது. இது தடிமனான மேலோடு, அதிக பள்ளங்கள் மற்றும் எரிமலைக்குழம்பு பாய்ந்த சில சமதளப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆனால், விஞ்ஞானிகளுக்கு இரண்டு பக்கங்களும் ஏன் மிகவும் வேறுபட்டவை என்று தெரியவில்லை. மேலும், Chang'e-6 மாதிரிகளை ஆய்வு செய்தால் சில பதில்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தென் துருவ-ஐட்கென் (South Pole-Aitken (SPA)) படுகையில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சந்திரன் பள்ளம் எப்போது ஏற்பட்டது என்பதைக் காட்டலாம். இந்த தென் துருவ-ஐட்கென் (SPA) படுகையை உருவாக்கிய தாக்கம் சந்திரனின் கீழ் மேலோடு மற்றும் மேல் அடுக்கில் இருந்து பொருட்களை தோண்டி எடுத்திருக்கலாம். இது சந்திரனின் வரலாறு மற்றும் அதன் சாத்தியமான தோற்றம் பற்றிய தடயங்களை வழங்க முடியும்.


எதிர்கால நிலவு மற்றும் விண்வெளி ஆய்வுக்கு சந்திர வளங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகளையும் மாதிரிகள் பரிந்துரைக்கலாம். உதாரணமாக, 3D பிரிண்டிங் (3D printing) மூலம் எதிர்கால சந்திர ஆராய்ச்சித் தளங்களை உருவாக்க செங்கற்களை உற்பத்தி செய்ய சந்திர மண்ணைப் பயன்படுத்தலாம். சந்திரனின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியின் சாத்தியமான இருப்பு குறித்து விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். நீர், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனுக்காக பனியை ஆய்வு மூலம் மேற்கொள்ளலாம் மற்றும் பிந்தைய இரண்டை ராக்கெட் உந்துசக்தியில் (Rocket propellant) பயன்படுத்தலாம்.


2023-ம் ஆண்டில், இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திர பயணத்தைத் தொடங்கின. 2030-ம் ஆண்டளவில், அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் 100-க்கும் மேற்பட்ட நிலவு பயணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency)  தெரிவித்துள்ளது.


சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் 2030-ம் ஆண்டிற்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை வைக்க விரும்புகின்றன. Chang'e-6 இன் வெற்றியானது சீனாவின் இந்த இலக்கை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.


இன்றைய சந்திரப் பயணங்கள் சந்திரனில் நீண்ட காலம் தங்கி அதன் வளங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த ஆய்வு 20-ம் நூற்றாண்டின் அமெரிக்கா-சோவியத் ஒன்றியம் (US-USSR) விண்வெளிப் போட்டியுடன் முரண்படுகிறது. இது தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் மேலாதிக்கத்தைத் தொடர்ந்தது. கூடுதலாக, எதிர்காலத்தில் சந்திரனை ஆழமான விண்வெளி ஆய்வுக்கான ஏவுதளமாக மற்றும் பிற வேற்றுக்கிரக உயிரினங்களுக்கான பயணங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு திட்டங்கள் உள்ளன.


Share:

புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை சவால்: அரசியலுடன் பொருளாதாரம் - மன்ஜீத் கிருபளானி

             இந்தியா பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டுள்ளது மற்றும் உலகளாவிய நிர்வாகத்தில் பங்கு வகிக்கிறது. இது பலமுனை உலக ஒழுங்கை நோக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது, அங்கு அமெரிக்க டாலரின் மேலாதிக்கம் அல்லது சீன யுவானின் இருப்பு நாணயத்தின் மீது கவனம் செலுத்துவது முற்றிலும் இல்லை.


ஜூன் 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசு பதவியேற்றது. கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது இதுவே முதல் முறையாகும். ஒரு கூட்டணி அரசாங்கம் இந்தியாவின் உள் கொள்கைகளைப் பாதிக்கும், ஆனால் வெளியுறவுக் கொள்கை நிலையானதாக இருக்கும். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவை உலகளாவிய தலைவராக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இந்தியாவை விஸ்வபந்துவாக - உலகிற்கு நண்பனாகக் காட்டும் பாரதிய ஜனதா கட்சியின் இலக்கை இந்த பார்வை ஆதரிக்கிறது.


ஜூன் 2022 பிராட்டிஸ்லாவா மன்றத்தில் (Bratislava Forum), ஜெய்சங்கர் இந்தியா மீதான உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றினார், ஐரோப்பா அதன் சொந்தப் பிரச்சினைகளை உலகம் தீர்க்கும் என்று எதிர்பார்ப்பதைவிட அதைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் செய்தி ஐரோப்பாவிற்குள்ளும், உலகளாவிய தெற்கு நாடுகளிலும் உட்பட பரவலாக எதிரொலித்தது. ஒரு வருடம் கழித்து, முனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஜெய்சங்கரின் கண்ணோட்டத்தை ஒப்புக்கொண்டார், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் நடுநிலை மற்றும் அமைதியான சக்தியாக இந்தியாவின் பங்கை எடுத்துக்காட்டினார்.


2023 ஆம் ஆண்டில் ஜி 20க்கு இந்தியா தலைமை தாங்கியது, ஆப்பிரிக்க ஒன்றியத்தை உறுப்பினராக சேர்த்தது. அறிவு பகிர்வு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, உலகளாவிய தெற்கிற்கான முன்முயற்சிகளையும் பிரதமர் மோடி தொடங்கினார், இது சாதனைகளிலிருந்து உறுதியான விளைவுகளை நோக்கி மாற்றத்தை சமிக்ஞை செய்கிறது. பல்வேறு பலதரப்புக் குழுக்களில் பங்கேற்கும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற முக்கிய நாடுகளுடன் இந்தியா வலுவான உறவுகளைப் பேணி வருகிறது. தனது எல்லையில் சீனாவின் இராணுவ இருப்பு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா தனது இராஜதந்திர உறவுகளை கவனமாக நிர்வகிக்கிறது.


வல்லரசு நாடுகளுடனான வர்த்தக ஆட்சிகளில் காலடி எடுத்து வைப்பது முன்னேற்றத்தில் உள்ள அதே வேளையில், இந்தியா தனது உலகளாவிய ஈடுபாட்டை அரசியலில் இருந்து பொருளாதார பகுதிகளுக்கு தீவிரமாக மாற்றுகிறது, மேக்-இன்-இந்தியா முன்முயற்சியை ஊக்குவித்து அதன் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி திறன்களை மேம்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்திற்கு அப்பால் ஒரு சேவை ஏற்றுமதியாளராக அங்கீகரிக்கப்படுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது, உலகளாவிய தெற்கில் முன்னணியில் உள்ளது. 


அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு ஒரு புதிய நோக்கம் தேவை. இந்த நோக்கம், நாட்டின் 8.2% GDP வளர்ச்சி, உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களில் நுழைவது மற்றும் அதன் டிஜிட்டல் மாதிரி ஆகிய மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தும். இந்த நேரத்தில் அரசியலையும் பொருளாதாரத்தையும் ஜெய்சங்கர் எப்படி சமன் செய்வார்?


தொடரும் மாற்றங்கள்


1. இந்தியாவின் புதிய அரசாங்க பதவியேற்பு விழாவில் தெற்காசியாவின் ஒற்றுமை வெளிப்பட்டது, இதில் அண்டை நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பங்குதாரர்களான மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் கலந்துகொண்டன. பாகிஸ்தான் இல்லாமல் இருந்தது, பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் ஒற்றுமைக்கான உந்துதலைக் குறிக்கிறது.


2. 2023-ல் இந்தியாவின் G20 தலைவர் பதவியில் இருந்தபோது, ​​G20-ல் ஆப்பிரிக்க யூனியனைச் சேர்ப்பதன் மூலம் உலகளாவியத் தெற்கில் கவனம் செலுத்தப்பட்டது. அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், உள்ளூர் திறனை வளர்க்கவும் (தக்ஷின்) மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வு முன்முயற்சி குளோபல் சவுத் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் (Development and Knowledge Sharing Initiative Global South Centre for Excellence to share knowledge and build local capacity(Dakshin)) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆரம்ப முயற்சிகள் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.


3. இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் 2+2 மந்திரி பேச்சுவார்த்தைகள் மூலம் உரையாடலைப் பேணி, குறிப்பாக அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. இது G20, Quad, SCO, BRICS, I2U2 மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பலதரப்பு மன்றங்களில் பங்கேற்கிறது. எல்லைப் பிரச்சினைகளில் சீனாவுடன் பதட்டங்கள் இருந்தாலும், இந்தியா இராஜதந்திர தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது, உலக வல்லரசுகளுக்கு இது  ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


இந்தியா புவியியல் ரீதியாக ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு நெருக்கமாக உள்ளது, அத்துடன் 2019 முதல் G7 உச்சிமாநாட்டிற்கு நிரந்தர அழைப்பாளராக உள்ளது.


சக்திவாய்ந்த நாடுகளுடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா இன்னும் தீவிரமாக பங்கேற்கவில்லை. மாறாக, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நான்கு ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத EFTA நாடுகள் போன்ற நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய முயற்சிகளில் முன்னணியில் உள்ளன.


இந்தியாவின் உலகளாவிய கவனம் அரசியலில் இருந்து பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். டெல்லி முதலீட்டாளர்களுக்கு பல விஷயங்களை உறுதியளித்துள்ளது, சீனாவுக்கு நம்பகமான மாற்றாக இந்தியா செயல்படமுடியும் என்பது மிக முக்கியமானது. இது மேக்-இன்-இந்தியா போன்ற முன்முயற்சிகளில் அதிக முயற்சிகள் மற்றும் விநியோகச் சங்கிலி மற்றும் உள்கட்டமைப்பு மேலாண்மை மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும். கார்ப்பரேட் இந்தியா உற்பத்தியில் அதிக முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்.


தவகல் தொழில்நுட்பத் சேவைகளுக்கு அப்பால், குறிப்பிடத்தக்க சேவை ஏற்றுமதியாளராக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மனித வளம் நிறைந்த உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகள் இந்த விஷயத்தில் இந்தியாவின் வழியைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.


அரசாங்கத்தில் ஒரு புதிய கூட்டணி பங்காளியான தெலுங்கு தேசம் கட்சி, தொழில்நுட்பத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு போட்டியாகவும், உலக அளவில் போட்டியிடவும் வடிவமைக்கப்பட்ட நவீன தலைநகரான அமராவதியின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.


இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மாதிரியானது, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் உட்பட உலகளவில் பாராட்டப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இருதரப்பு மற்றும் பிராந்திய ரீதியாக அதிக வர்த்தக ஒப்பந்தங்களை நம்பிக்கையுடன் மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. ஒரு வெற்றிகரமான தெற்காசிய வர்த்தக ஒப்பந்தம் அடிவானத்தில் இருக்கும்.


பிரதமர் மோடியின் வழியை தொடர்ந்து இந்திய தூதர்கள் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்னதாக, சில தூதரகங்களில் ஜூனியர் வணிக இணைப்புகள் இருந்தன; இப்போது, ​​இந்த நிலை அதிக சீனியாரிட்டி மற்றும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவிட், ரஷ்யா-உக்ரைன் மோதல், காசா நெருக்கடி மற்றும் பெரிய சக்திகளின் பொருளாதாரத் தடைகள் போன்ற நிகழ்வுகளால் உலகளாவிய உறுதியற்ற தன்மை குறிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென் கொரியா, சவுதி அரேபியா, துருக்கி, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி போன்ற மத்திய சக்திகள் தங்கள் பொருளாதார, பிராந்திய மற்றும் இராணுவ பலம் காரணமாக செல்வாக்கு பெறுகின்றன.


இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ மற்றும் இந்தோனேசியா ஆகியவை குறிப்பிடத்தக்க திறமை மற்றும் மக்கள்தொகையுடன் வளர்ந்து வரும் நடுத்தர சக்திகளாக உள்ளன. இந்த நாடுகளுடன் இந்தியா தனது ஈடுபாட்டை அதிகரிக்கும்.


சமீபகாலமாக, இந்தியாவை பல்வேறு சித்தாந்தங்களின் அரசாங்கங்கள் அணுகி அனைவருடனும் ஈடுபாட்டைக் கோருகின்றன. மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்றார். அங்கு அவர் ஜூன் 13 அன்று G7 கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜூலையில் SCO உச்சிமாநாடு மற்றும் குறிப்பாக அக்டோபர் மாதம் ரஷ்யாவில் நடைபெறும் BRICS உச்சிமாநாடு ஆகியன அவரது வரவிருக்கும் வெளிநாட்டுப் பயணங்களில் அடங்கும்.


பல பழைய மற்றும் புதிய சர்வதேசக் குழுக்களில் இந்தியா பங்கேற்கிறது. இது பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் நியாயமான உலகளாவிய நிர்வாகத்தை ஆதரிக்கிறது. இது வளர்ந்து வரும் பலபரிமாண உலகத்தை பிரதிபலிக்கிறது, அங்கு டாலரின் மேலாதிக்க நிலை அல்லது யுவானின் இருப்பு நாணயமாக இருப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளாவிய உறுதித்தன்மைக்கு பங்களிக்கும், தற்போதைய உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவின் இராஜதந்திர நிலைப்பாடு முக்கியமானது.


கட்டுரையாளர் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர், கேட்வே ஹவுஸ்: உலகளாவிய உறவுகளுக்கான இந்திய கவுன்சில்.


Original link : https://indianexpress.com/article/opinion/columns/india-the-new-governments-foreign-policy-challenge-economic-with-the-political-9412593/


Share:

யூரேசியா முழுவதுமான பெரும் அதிகாரப் போட்டியில், இந்தியாவுக்கான ஒரு வாய்ப்பு -சி.ராஜா மோகன்

     ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மத்திய நாடுகள் எழுச்சி பெறுவதால், இந்தியா தனது தேசியப் பாதுகாப்பை  வலுப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வாரம் வடகொரியா மற்றும் தைவானுக்கு பயணம் செய்தார். அமெரிக்காவில் இந்த வாரம் நடக்கவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தல் விவாதத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வுகள் ஐரோப்பிய மற்றும் ஆசிய பாதுகாப்பிற்கு இடையே உள்ள சிக்கலான மற்றும் ஆழமான தொடர்புகளை எடுத்துரைக்கும். இந்த இணைப்புகள் இந்தியா போன்ற நடுத்தர சக்திகளுக்கு புதிய  வாய்ப்புகளை வழங்கும். 


யூரேசியாவில் புவிசார் அரசியல் இயக்கவியல் நான்கு முக்கிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது :


வரலாற்று ரீதியாக, ஆசியா ஒரு செயலற்ற பிராந்தியமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் வளங்களுக்காக ஆசியாவை சுரண்டின. உதாரணமாக, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்தின் வளர்ச்சிக்காக இந்திய இராணுவ வளங்கள் சுரண்டப்பட்டன. முதல் உலகப் போரில் ஒரு மில்லியன் இந்திய வீரர்களும், இரண்டாம் உலகப் போரில் இரண்டு மில்லியன் இந்திய வீரர்களும், இரண்டு உலகப் போர்களிலும் பிரிட்டிஷ் மற்றும் மேற்கத்திய இராணுவ வெற்றிகளுக்கு இந்திய ஆயுதப் படைகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தன.


இன்று ஆசிய நாடுகள் ஐரோப்பிய அரசியலில் தீவிரமாக செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற உக்ரைன் அமைதி மாநாட்டின் போது, உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள கீவ் மற்றும் அதன் மேற்கத்திய நட்புநாடுகள் ஆசியாவின் ஆதரவைக் கோரின. மாறாக, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆசிய நாடுகளை ரஷ்யா வலியுறுத்தியது. ஆசிய நாடுகளின் செல்வாக்கு அதிகரித்து ஆசிய நாடுகள் இப்போது உலகளாவிய மோதல்களில் முக்கிய அங்கமாக உள்ளன. வடகொரியா ரஷ்யாவுக்கு வெடிமருந்துகளை வழங்குகிறது. அதே நேரத்தில் தென்கொரியா உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் முதல் பெரிய போரில் இராஜதந்திரம் மற்றும் மேற்கத்தியரல்லாத பொதுக் கருத்துக்கு ஆதரவை திரட்டுவது முக்கியமானது. கூடுதலாக, இந்த ஐரோப்பிய மோதலில் ஆசியா ஒரு குறிப்பிடத்தக்க ஆயுத வழங்குநராக  மாறியுள்ளது.


கொரிய தீபகற்ப நாடுகள் இப்போது உக்ரைனில் கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்கும் முக்கிய நாடாக மாறியுள்ளது. இதற்கிடையில், தென்கொரிய ஆயுதங்கள் உக்ரைனை நோக்கி பாயும். சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பவில்லை ஆனால் மாஸ்கோவின் போர் முயற்சியை வேறு வழிகளில் ஆதரிக்கிறது. ஏவுகணைகளின் கூட்டு உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா ஜப்பானிற்கு அழுத்தம் கொடுக்கிறது. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உக்ரைன் மற்றும் பிற நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் வகையில் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தாராளமயமாக்க ஜப்பானை வலியுறுத்துகிறது.


தற்போதைய மோதலின்போது ஆசிய நாடுகள் பெரும் வல்லரசுகளுடன் கையாள்வதில் தங்களை அதிகமாக உறுதிப்படுத்திக் கொள்கின்றன. புடினின் சமீபத்திய பியோங்யாங் மற்றும் ஹனோய் பயணங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. பனிப்போருக்குப் பிறகு, மாஸ்கோ பியோங்யாங்குடனான தனது நெருங்கிய உறவைக் குறைத்துக்கொண்டு பொருளாதார சக்தியாக மாறியுள்ள சியோலுடனான உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. தற்போது, ​​வடகொரியாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்த ரஷ்யா ஆர்வமாக உள்ளது. 24 ஆண்டுகளில் முதல்முறையாக கடந்த வாரம் வடகொரியாவிற்கு சென்ற புதின், பரஸ்பர பாதுகாப்பு உதவி மற்றும் கிம் ஜாங்-உன்னுக்கு ஆதரவாக பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். வடகொரியாவை மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் திசை திருப்புகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 கிம் ஜாங்-உன் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்க ரஷ்யாவை பயன்படுத்துகிறார்.  இது தென் கொரியா அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் மிகவும் குறிப்பிடத்தக்க நட்புநாடாக மாற வழிவகுக்கும். வடகொரியாவின் அணுசக்தித் திறனை ரஷ்யா ஆதரித்தால், அணு ஆயுதம் ஏந்திய தென்கொரியாவுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு குறையலாம். சமீபத்தில், தென்கொரியாவுடனான கூட்டணியை வலுப்படுத்தவும், சியோல் மற்றும் டோக்கியோவுடன் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் பிடன் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடனான தனது முத்தரப்பு ஒத்துழைப்பை சீனாவும் புதுப்பித்துள்ளது.


கடந்த ஒன்பது மாதங்களில் ஜோ பைடன், ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரின் வருகைகளை நடத்திய ஒரே நாடாக வியட்நாம் தனித்து நிற்கிறது. வியட்நாம் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதன் மூலம் ஒரு நுட்பமான நடைமுறையைக் கடைபிடிக்கிறது. அதே நேரத்தில் வாஷிங்டனுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்கிறது. ரஷ்யாவுடனான உறவுகளைப் புதுப்பிப்பதன் மூலம், ஹனோய் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அதன் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆசிய நாடுகள் அனைவருடனும் நட்பு பாராட்டி வருவதால், மேற்குநாடுகளிடம் இருந்து சவால்கள் எழுகின்றன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை விவாதங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான முன்னுரிமைகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதுதான்.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஆதிக்கம் செலுத்தியது. பிப்ரவரி 2022-ல் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு சற்று முன்பு வெளிப்படுத்தப்பட்ட ரஷ்யா-சீனா கூட்டணியைத் தொடர்ந்து, இரு பிராந்தியங்களிலும் இந்த சக்திகளால் முன்வைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க சவால்கள், அமெரிக்கா தனது முதன்மை சவாலை அடையாளம் காண அழுத்தத்தை எதிர்கொள்கிறது.


சில குடியரசுக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்களால், உக்ரைன் மோதலில் ஈடுபடுவதை விட, அமெரிக்கா தனது இராணுவ முயற்சிகளை ஆசியாவில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுத்துள்ளது. பைடன் நிர்வாகம் சீனாவை முக்கிய சவாலாகப் பார்க்கிறது. ஆனால் உக்ரைனிடம் இருந்து ஆதரவை முழுமையாக திரும்பப் பெற முடியாது. இந்த வாதங்கள் அமெரிக்கா தேர்தல் விவாதத்தின் போது டிரம்ப் மற்றும் பைடன் இடையே இந்த வாரம் விவாதிக்கப்படலாம்.


மேலும், தீர்வு ஐரோப்பாவில் அதன் பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை கையாள்வதில் உள்ளது. இது பைடன் மற்றும் டிரம்ப் ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறது. அடிப்படையில், ரஷ்யாவையும் சீனாவையும் சமநிலைப்படுத்துவதில் ஐரோப்பிய நாடுகள் முன்னேற வேண்டும். அமெரிக்காவின் சுமையை எளிதாக்க வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது. ஐரோப்பா அதன் பாதுகாப்புத் திறன்களில் செயல்படும் அதே வேளையில், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளன.


ஐரோப்பா ரஷ்யாவைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. ஆனால், சீனாவை எவ்வாறு கையாள்வது என்பதில் ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லை. அமெரிக்காவுடன் கருத்து வேறுபாடு உள்ளது. ரஷ்யாவிற்கு சீனாவின் ஆதரவைப் பற்றி ஐரோப்பா கவலைப்படும் அதே வேளையில், பெய்ஜிங் மாஸ்கோவைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்புகிறது. யூரேசியாவின் கிழக்கில் உள்ள ஐரோப்பாவிற்கும் சீனாவின் தொழில்துறை மையங்களுக்கும் இடையிலான பல ஆண்டுகளாக பொருளாதார உறவுகள் ஐரோப்பிய தலைவர்களை பெய்ஜிங்கை எதிர்கொள்வது குறித்து எச்சரிக்கையாக இருக்கச் செய்கின்றன. இருப்பினும், ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கும் அமெரிக்கா விடுத்த அழைப்புகளை ஐரோப்பா புறக்கணிக்க முடியாது. இதற்கிடையில், வாஷிங்டன் அதன் ஆசிய நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென்கொரியாவையும் ஐரோப்பிய பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வலியுறுத்துகிறது.



Share:

இந்தியாவின் தேர்வு முறைக்குத் தேவையான டிஜிட்டல் புரட்சி -ஹிமான்ஷு ராய்

     சோதனை செயல்பாட்டில் (testing process) நம்பிக்கையை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம்பகமான மற்றும் திறமையான சோதனையை உறுதி செய்வதற்கான தீர்வுகளை வழங்குகின்றன.


இந்தியாவில் போட்டித் தேர்வுகளின் நியாயத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. நீட்-பிஜி தேர்வு (NEET-PG exam) மற்றும் ஒத்திவைப்பு ஆகியவை இந்த கவலைகளில் அடங்கும். அண்மையில், ஆறு நகரங்களில் நீட்-யுஜி மறுதேர்வின் (NEET-UG retests) போது வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்திய அரசு விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமை மாற்றங்களைச் செயல்படுத்துவது இதில் அடங்கும். நிபுணர் குழுக்களை நிறுவுவதும் அவற்றில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான தெளிவான அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. தேர்வு செயல்முறையின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதே அவர்கள் முக்கிய நோக்கமாக உள்ளது.


தேர்வு வெளிப்படையானது, சீரானது மற்றும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்த, கல்வி அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கக்கூடிய பரிந்துரைகளை வழங்கும். இந்த பரிந்துரைகள் தேர்வு செயல்முறைகளை சீர்திருத்தும், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்தும் மற்றும் தேசிய தேர்வு முகமையை (National Testing Agency (NTA)) மறுகட்டமைக்கலாம். இது எதிர்காலத்தில் தேர்வு மீறல்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கும். மேலும், மத்திய புலனாய்வுப் பிரிவின் (Central Bureau of Investigation (CBI)) ஈடுபாடு ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த விசாரணையானது பொறுப்பானவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அத்தகைய மீறல்கள் ஏற்பட அனுமதிக்கும் அமைப்பு ரீதியான பலவீனங்களையும் கண்டறியும். மேலும், அரசு பொதுத் தேர்வுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் நியாயமற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதையும், சாத்தியமான தவறு செய்பவர்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்க அரசு பொதுத் தேர்வு சட்டத்தையும் (Public Examination Act) இயற்றியுள்ளது. தேர்வு நேர்மையில் சமரசம் செய்பவர்களுக்கு ரூ .1 கோடி வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் தவறுகளைத் தடுப்பதையும், தேர்வுகளின் நேர்மையைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


உடனடி நடவடிக்கைகள் வலுவானவை மற்றும் அவசியமானவை என்றாலும், தேர்வுமுறையின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு மேலும் நடவடிக்கைகள் முக்கியமானவை. இணையவழித் தேர்வுகளுக்கு, அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க மேம்பட்ட குறியாக்க நுட்பங்கள் (encryption techniques) மற்றும் பல காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது முக்கியம். பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain technology) தேர்வுத் தாள்கள் உருவாக்கம் முதல் மதிப்பீடு வரை பாதுகாப்பாக கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும், எந்தவொரு சேதத்தையும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.


வழக்கமான, நேரடித் தேர்வுகளில், ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். சேதமடையாத பேக்கேஜிங், பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் கையாளுதலின் அனைத்து நிலைகளிலும் முழுமையான சோதனைகள் ஆகியவை இதில் அடங்கும். கருவிகள் மற்றும் டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங் ஆகியவற்றிற்கான நிகழ்நேர ஜி.பி.எஸ் கண்காணிப்பும் (real-time GPS tracking) வினாத்தாள் கசிவைத் தடுக்க உதவும். செயற்கை நுண்ணறிவு இயங்கும் Proctoring அமைப்புகள் மோசடியைக் குறைக்க தேர்வுகளைத் திறம்பட கண்காணிக்க முடியும். பயோமெட்ரிக் சரிபார்ப்பு (Biometric verification) வேட்பாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பின் மற்றொரு அடுக்கை சேர்க்கிறது. தேர்வு முறையின் நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய இந்த நிலைமைகள் அவசியம்.


கூடுதலாக, சுதந்திர அமைப்புகளால் அடிக்கடி மற்றும் முழுமையான தணிக்கைகள் தேர்வு செயல்பாட்டில் பலவீனங்களைக் கண்டறிய உதவும். வழக்கமான மதிப்புரைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதையும், ஏதேனும், சிக்கல்களை விரைவாக சரிசெய்யப்படுவதையும் உறுதி செய்கின்றன. கேள்வித்தாள்களை விநியோகிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் டிஜிட்டல் சேமிப்பகங்களின் எதிர்கால தோல்விகளைத் தவிர்க்க, கடுமையான பராமரிப்பு அட்டவணைகள் மற்றும் காப்புப் பிரதி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வழக்கமான சோதனைகள், தேர்வுகளுக்கு முன் டிஜிட்டல் சேமிப்பகங்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்யும். மேலும், மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பான நேரடி அவசரகால நடைமுறைகளில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் இடையூறுகளை குறைக்கும் மற்றும் தேர்வு நேர்மையை பராமரிக்கும்.


நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நற்பண்புகளை வலியுறுத்தும் ஒருமைப்பாடு பயிற்சி வகுப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை உள்ளடக்கிய வழக்கமான உரையாடல்களுடன், தேர்வுக்கான ஒருமைப்பாட்டை கணிசமாக மேம்படுத்தக்கூடிய செயலூக்கமான நடவடிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்குதாரர்களை ஈடுபடுத்துவது விழிப்புடன் இருக்கும் சமூகத்தை வளர்க்கும். இதன் மூலம் பதில்களுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு எதிராக பாதுகாக்கும். இந்த முன்முயற்சிகள் உடனடி கவலைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், தேர்வுச் செயல்பாட்டில் நீண்டகால மேம்பாடுகளுக்கான அடித்தளத்தையும் அமைக்கின்றன.


தேசிய தேர்வு முகமையின் (NTA) கீழ் பல்வேறு தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்கிறார்கள். மேலும், 2023-ம் ஆண்டில் மட்டும் குறிப்பிடத்தக்க 12.3 மில்லியன் போட்டி மாணவர்கள், தேர்வு நடத்துவதில் தேசிய தேர்வு முகமையானது (NTA) ஒரு முன்னணி உலகளாவிய அமைப்பாகும். இந்தியாவின் இளைஞர்களின் விருப்பங்களை வடிவமைப்பதில் தேர்வுகளின் குறிப்பிடத்தக்க பங்கை இந்த எண்ணிக்கை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் வலுவான கல்வி முறையைக் கருத்தில் கொண்டு, நீண்டகால ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் செயலூக்கமான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இந்த நடவடிக்கைகள் உடனடி சவால்களை எதிர்கொள்கின்றன மற்றும் மில்லியன் கணக்கான மாணவர்களின் கனவுகளைப் பாதுகாக்க வலுவான அடித்தளத்தை உருவாக்குகின்றன. இந்த அணுகுமுறை நம்பிக்கையை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினருக்கு நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் உறுதியளிக்கிறது.


இந்திய போட்டித் தேர்வுகளின் எதிர்காலம் நியாயம் மற்றும் செயல்திறனுக்கான புதுமையான உத்திகளைப் பொறுத்து அமைகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கல்வியை வடிவமைக்கும்போது, குறியாக்கம் மற்றும் இணையவழித் தேர்வுகளுக்கான அங்கீகாரம் போன்ற வலுவான டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பாகும். இந்த நடவடிக்கைகள் தேர்வு ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பங்குதாரர்களின் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. தரவு பகுப்பாய்வு மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் உத்திகள் கடைபிடிப்பு ஆகியவற்றைத் தழுவுவது தேர்வு சார்ந்த கருவிகள் மற்றும் வள ஒதுக்கீட்டை மேலும் மேம்படுத்தலாம். மேலும், சாதகமான நிர்வாகம் மற்றும் குறைவான செயல்பாட்டு சவால்களை உறுதி செய்யலாம்.


இந்த உத்திகளைத் தழுவுவதன் மூலம், இந்திய போட்டித் தேர்வுகள் செயல்முறைகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் முடியும். கல்வியில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறப்பை நிலைநிறுத்துவது மாணவர்களின் விருப்பங்களை ஆதரிக்கிறது மற்றும் நாட்டின் கல்வி முறையை பலப்படுத்துகிறது.


கட்டுரையாளர் இந்திய மேலாண்மைக் கழகம் இந்தூரின் இயக்குநர் ஆவார்.


Original link : https://indianexpress.com/article/opinion/columns/the-digital-revolution-that-indias-exam-system-needs-9415059/


Share:

மகாராஷ்டிராவின் நீர் நெருக்கடியை ஆய்வு செய்தல் -வீணா சீனிவாசன்

     மகாராஷ்டிராவின் வெவ்வேறு பகுதிகள் ஏன் மாறுபட்ட அளவிலான நீர் தட்டுப்பாட்டை அனுபவிக்கின்றன? குறைந்த மழை பெய்யும் பகுதிகளுக்கு கரும்பு உற்பத்தி ஏற்றதாக இல்லை ஏன்? மழை மறைவு விளைவு என்றால் என்ன? வழங்கல் பக்க தீர்வுகள் நிலைமைக்கு எவ்வாறு உதவ முடியும்?


கடந்த ஆண்டு, குறைந்த மழை காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக மகாராஷ்டிர அரசு அறிவித்தது. இந்த கோடையில், கிணறுகள் வறண்டு போனதால் பற்றாக்குறையின் விளைவுகள் தெளிவாகத் தெரிந்தன. குடிநீர் மற்றும் பாசனத்திற்கு அதிகாரிகள் தண்ணீர் வாகனங்களை கொண்டுவர வேண்டும். இதற்கிடையில், மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் அதிக மழைப்பொழிவுடன் எதிர் பிரச்சினையை எதிர்கொண்டன, இதனால் பரவலான வெள்ளம் ஏற்பட்டது. மராத்வாடாவின் சவால்கள் அதன் இடம், நிலப்பரப்பு, மண் வகை, விவசாய முறைகள் மற்றும் பயிர் தேர்வு ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன.


 

மழை மறைவு விளைவு என்றால் என்ன?


மேற்குத் தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசத்தில் அமைந்துள்ள மராத்வாடா, அரபிக்கடலில் இருந்து வரும் ஈரமான காற்று இந்த மலைகள் மீது மோதும் போது அதன் மேற்கு பகுதியில் அதிக மழையை (2,000-4,000 மிமீ) பெறுகிறது, இதனால் அவை உயர்ந்து குளிர்ச்சியடைகின்றன. இருப்பினும், மலைத்தொடரைக் கடந்து மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவில் காற்றானது இறங்கிய பிறகு, இந்த காற்றுகள் ஈரப்பதத்தை இழக்கின்றன, இதன் விளைவாக மராத்வாடாவில் மிகவும் வறண்ட நிலை (600-800 மிமீ) ஏற்படுகிறது.


ஐஐடி காந்திநகரின் ஆராய்ச்சியாளர்களின் 2016ன் ஆய்வின்படி, காலநிலை மாற்றம் மத்திய மகாராஷ்டிராவில் நிலைமைகளை மோசமாக்குகிறது. இப்பகுதியில் வறட்சியின் தீவிரம் மற்றும் அதிகரிப்பு காணப்படுகிறது. இதன் விளைவாக, மராத்வாடா மற்றும் வட கர்நாடகா ஆகியவை இப்போது ராஜஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது வறண்ட பகுதிகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.


இது பயிர்களை எவ்வாறு பாதிக்கிறது?


மராத்வாடாவின் விவசாயம் குறைந்த மழைப் பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயத்திற்க்கு போதுமான தண்ணீர் இல்லை, கரும்பு விவசாயத்திற்கு ஆண்டுக்கு 1,500-2,500 மிமீ தண்ணீர் தேவைப்படுகிறது. குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் பருப்பு வகைகள் மற்றும் தினைகளைப் போலன்றி, கரும்புக்கு தினசரி தண்ணீர் தேவைப்படுகிறது. 1950களில் இருந்து, கரும்பு விவசாயம் மரத்வாடாவில் சீராக வளர்ச்சியடைந்துள்ளது, இப்போது அதன் விவசாய நிலத்தில் 4% உள்ளது, ஆனால் அதன் பாசனத்தில் 61% பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுச்சியால் மேல் பீமா ஆற்றுப் படுகையில் தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது. கரும்புக்கான அரசு மானியங்கள் அதன் சாகுபடியை விரிவுபடுத்தி, மற்ற பயிற்களை பாதித்துள்ளன. டிசம்பர் 2023 முதல், கரும்பு சாறை மூலமாகக் எத்தனால் தேவைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது, இது நீர் பாசன பற்றாக்குறை பகுதிக்கான கவலைகள் இருந்தபோதிலும். மகாராஷ்டிராவின் நீர் மற்றும் பாசன ஆணையம், 1999-ல், 1,000 மி.மீ.க்கும் குறைவான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் கரும்புக்குத் தடை விதிக்க வலியுறுத்தியது, ஆனாலும் சாகுபடி தொடர்கிறது.


மண், நிலப்பரப்பு எவ்வாறு முக்கியமானது?


மராத்வாடா முக்கியமாக களிமண் கருப்பு மண்ணைக் கொண்டுள்ளது, இது உள்நாட்டில் "ரெகூர்" என்று அழைக்கப்படுகிறது, இது வளமானது மற்றும் ஈரப்பதத்தை நன்கு தக்க வைத்திருக்கிறது. இருப்பினும், இது குறைந்த ஊடுருவல் விகிதத்தைக் கொண்டுள்ளது. மழை பெய்யும்போது, நிலத்தடி நீரை நிரப்புவதற்கு மழை நீரை நிலத்திற்கு கீழே ஊடுருவலைத் தடுக்கிறது நிலத்தின் மேற்பரப்பில் நீர் சேகரிக்கிறது. மகாராஷ்டிரா ஏராளமான அணைகளைக் கட்டுவதன் மூலம் இந்த சிக்கலை குறைக்கலாம், இதனால் மழைநீரை சேகரிக்க இந்தியாவிலேயே மிக அதிகமான அணைகளைக் (1,845) கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.


மண்ணில் குறைந்த ஹைட்ராலிக் கடத்துத்திறன் உள்ளது மற்றும் மழைக்குப் பிறகு நீண்டநேரம் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த நிலைமைகளால் விவசாயிகள் அடிக்கடி பயிர் இழப்பை சந்திக்கிறார்கள் என்று இப்பகுதியில் WELL ஆய்வகங்களின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.


மராத்வாடாவில், தண்ணீர் பற்றாக்குறை பரவலாக வேறுபடுகிறது. இப்பகுதியில் தென்கிழக்கு நோக்கிப் பாயும் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் இணையான துணை நதிகள் உள்ளன. ஒவ்வொரு துணை நதியும் மெதுவாக சாய்வான மலைகளால் பிரிக்கப்பட்ட ஒரு பள்ளத்தாக்கு வழியாக செல்கிறது. பள்ளத்தாக்குகள் வற்றாத நிலத்தடி நீரைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் உயர்நிலங்களில் பருவகால நிலத்தடி நீர் உள்ளது, ஏனெனில் நீர் மெதுவாக உயர்நிலங்களிலிருந்து நிலத்தடி பள்ளத்தாக்குகளுக்கு நகர்கிறது. பருவமழை பெய்த சில மாதங்களில் மேட்டுப்பாங்கான பகுதிகளில் உள்ள கிணறுகள் வறண்டு விடுவதால், அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்தப் பகுதிகள் இயற்கை சவால்களை எதிர்கொள்கின்றன மற்றும் சிறப்பு உதவி தேவை.


மராத்வாடா நீர் நெகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா?


தண்ணீர் வழங்கல் பக்கத் தீர்வுகள் கிடைக்கக்கூடிய வளங்களை அதிகப்படுத்துவதை உள்ளடக்கியது. இதில் பாரம்பரிய நீர்நிலை மேலாண்மைப் பணிகள் அடங்கும், அதாவது விளிம்பு அகழிகள், மண் கட்டுகள் போன்ற நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவை. இந்தக் கட்டமைப்புகள் பெரும்பாலும் விவசாய வயல்களில் இருந்து மழைநீர் வடிகால் கொண்டு செல்லும் வண்டல் மண்ணை சேகரித்து, நீர் ஊடுருவலைத் தடுக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி, வண்டல் மண் அள்ளும் வழிமுறைகளை செயல்படுத்தலாம் மற்றும் விவசாயிகளுக்கு வழக்கமான மண் அள்ளுதல் குறித்த பயிற்சிகளை நடத்தலாம்.


குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில், நீர்த் தேவையை நிர்வகித்தல் என்பது நீர்-திறனுள்ள நீர்ப்பாசன முறைகளைக் கடைப்பிடிப்பது, வறட்சியை எதிர்க்கும் பயிர்களை வளர்ப்பது மற்றும் வாழ்வாதாரங்களை பல்வகைப்படுத்துவது ஆகியவை அடங்கும். உதாரணமாக, மராத்வாடாவில் குறைந்த நீர் தேவைப்படும் அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு மாற வேண்டும், அதே நேரத்தில் கரும்பு உற்பத்தி உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு மாற்றப்பட வேண்டும்.


விவேக் கிரேவால் வெல் லேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் (தொழில்நுட்ப ஆலோசனை). வீணா சீனிவாசன், வெல் லேப்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர்.


Original link: https://www.thehindu.com/todays-paper/2024-06-26/th_chennai/articleGCKCVOLT0-7185404.ece


Share: