BRICS புதிய மற்றும் ஆச்சரியமான வழிகளில் மாறி வருகிறது. - த்ரிதி முகர்ஜி பிபில்

 இந்தக் குழு வலுவான மக்கள்தொகையையும், நல்ல உணவுப் பாதுகாப்பையும் மற்றும் சொந்த நிதி அமைப்பையும் கொண்டுள்ளது. இப்போது பன்முக நிர்வாகத்திற்கான தேவையும் உள்ளது.


BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் அடங்கும். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் குறியீட்டு குழுவாகத் (symbolic coalition) தொடங்கியது. இப்போது, உலகளாவிய நிர்வாகம் பற்றிய புதிய யோசனைகளுக்கான ஒரு தீவிர தளமாக மாறி வருகிறது. 2024-ம் ஆண்டில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸில் இணைந்தன. சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா விரைவில் சேரக்கூடும். இன்று, BRICS உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46% ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வாங்கும் சக்தி சமநிலையால் (purchasing power parity) அளவிடப்படும் போது இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% ஆகும். இந்த மாற்றம் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பது பற்றியது அல்ல. மாறாக, இது ஒரு நியாயமான, பல துருவ உலகளாவிய அமைப்புக்கான வளர்ந்து வரும் தேவையைக் காட்டுகிறது.


ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அதன் சொந்த இலக்குகள் உள்ளன. இதனால், ஈரான் தடைகளைத் தவிர்க்க விரும்புகிறது. மேலும், எண்ணெய் இராஜதந்திரத்திற்கான அதன் அணுகுமுறையை ஐக்கிய அரபு அமீரகம் மாற்றி வருகிறது. வளர்ச்சி நிதியில் அதிக செல்வாக்கைப் பெற எத்தியோப்பியா இலக்கு வைத்துள்ளது. ஆப்பிரிக்க-அரபு உறவுகளை இணைக்க எகிப்து செயல்படுகிறது. குழு வளரும்போது, அதன் உள் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. இந்த புதிய ஒழுங்கு எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க சவாலாகும்.


மக்கள்தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டி, BRICS உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழு உலகின் அரிசியில் 52%க்கும் அதிகமானதையும் அதன் கோதுமையில் 42% க்கும் அதிகமானதையும் உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதி தடைகள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் உலகில், இது BRICS உலகளாவிய உணவு முறைகளில் வலுவான செல்வாக்கை அளிக்கிறது. 2025 ரியோ உச்சி மாநாட்டில், BRICS உறுப்பினர்கள் உணவு ஏற்றுமதியை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் பேசினர். அவர்கள் மனிதாபிமான நிலைத்தன்மையின் பாதுகாவலர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். இருப்பினும், இந்த குழுவிற்குள் அதிகமான பதட்டங்கள் உள்ளன. மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப தளங்களை ஊக்குவிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் விவசாயத் துறையைத் திறக்க இந்தியா அழுத்தத்தில் உள்ளது. இதனால், அழுத்தத்தை இந்தியா எதிர்த்தது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மற்றும் 2025 இந்திய எஃகு மீதான வரிகள் போன்ற கடந்த கால நிகழ்வுகள், வெளிப்புற தாக்கங்கள் ஒரு நாட்டின் உள் அமைப்புகளை எவ்வாறு சீர்குலைத்து நம்பிக்கையைக் குறைக்கும் என்பதைக் காட்டுகின்றன.


சாதகமற்ற நிதி


IMF மற்றும் உலக வங்கி மீது அதிருப்தி உள்ளது. இந்த நிறுவனங்கள் இன்னும் காலாவதியான ஒதுக்கீடுகள் மற்றும் அரசியல் சார்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, BRICS அதன் சொந்த நிதி அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank (NDB)) 96 திட்டங்களுக்கு $32 பில்லியனை வழங்கியுள்ளது. கான்டிஜென்ட் ரிசர்வ் ஏற்பாடு (Contingent Reserve Arrangement (CRA)) $100 பில்லியன் அளவு கொண்டுள்ளது. பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களைப் (Bretton Woods institutions) போலல்லாமல், BRICS சமமான வாக்களிக்கும் உரிமைகளை வழங்குகிறது. அவற்றுக்கும் குறைவான நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன.


இருப்பினும், மிகப்பெரிய மாற்றம் BRICS Pay ஆகும். இது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் கட்டண முறையாகும். இது 2025-ல் தொடங்கியது மற்றும் இந்தியா, UAE, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவை இணைக்கிறது. இந்த அமைப்பு பணம் அனுப்புதல் மற்றும் சிறு வணிக வர்த்தகத்திற்கான நிகழ்நேர, குறைந்த விலை பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. இது SWIFT இன் புவிசார் அரசியல் கட்டுப்பாட்டை சவால் செய்கிறது.


2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா ரூபாய்-ரூபிள் தீர்வுகளில் சிக்கல்களை எதிர்கொண்டது. ரஷ்யாவும் ஈரானும் உலகளாவிய கட்டண நெட்வொர்க்குகளிலிருந்து விலக்கப்பட்டன. இந்தப் பிரச்சினைகள் இறையாண்மை மாற்றுகளுக்கான அவசரத் தேவையைக் காட்டின.


இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூன் 2024-ல் மட்டும், UPI 14.3 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. இது ஏற்கனவே சிங்கப்பூர், UAE மற்றும் கென்யாவில் உள்ள கட்டண முறைகளுடன் இயங்கக்கூடியது. இதன் காரணமாக, UPI உலகளாவிய தெற்கில் அளவிடக்கூடிய மற்றும் பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான ஒரு மாதிரியாக மாறி வருகிறது.


அதே நேரத்தில், BRICS புதிய அமைப்புகளை உருவாக்குவதில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், நிர்வாகம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ரியோ உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் இல்லாததும், முக்கியமான கனிம சார்பு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்களும் தீவிரமான பிரச்சனைகளை எடுத்து காட்டுகின்றன. BRICS நாடுகளின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனா 70 சதவீதத்தை உருவாக்குகிறது. மேலும், குழுவிற்குள் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த விரும்புகிறது. இதில் புதிய மேம்பாட்டு வங்கி (NDB), BRICS ஊதிய தரநிலைகள் மற்றும் டிஜிட்டல் விதிமுறைகள் மீதான கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். மறுபுறம், இந்தியா பரவலாக்கப்பட்ட அமைப்புகளை ஆதரிக்கிறது. இது விதிகள் சார்ந்த கட்டமைப்புகளையும் வலியுறுத்துகிறது.


இந்தப் போட்டி அரசியலைப் பற்றியது மட்டுமல்ல. இது கட்டமைப்பு ரீதியானது. விமான குத்தகை, துறைமுக தளவாடங்கள், மறுகாப்பீடு மற்றும் குறைக்கடத்திகள் போன்ற முக்கியமான துறைகள் இன்னும் டாலர் அடிப்படையிலான அமைப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன. உலகளாவிய விமான குத்தகைகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. லண்டனின் லாயிட்ஸ் அல்லது உலகளாவிய குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளுக்கு BRICS இன்னும் வலுவான மாற்றுகளை உருவாக்கவில்லை. பாதுகாப்புகள் மற்றும் பகிரப்பட்ட விதிகள் இல்லாமல், BRICS அமைப்பானது வாஷிங்டனின் ஒருமித்த கருத்தை பெய்ஜிங்கின் ஒருமித்த கருத்துடன் மாற்றக்கூடும்.


BRICS இனி வெறும் புகார் கூறும் குழு அல்ல. உணவு அமைப்புகள், நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொதுப் பொருட்களுக்கான புதிய யோசனைகளை இப்போது முயற்சித்து வருகிறது. ஆனால் பெரிய இலக்குகளுக்கு நல்ல திட்டமிடல் தேவை. வலுவான நிறுவனங்கள், நியாயமான முடிவெடுப்பது மற்றும் தெளிவான விதிகள் இல்லாமல், BRICS தான் தவிர்க்க விரும்பும் அதே பிரச்சினைகளை மீண்டும் செய்யக்கூடும்.


எழுத்தாளர் IIIFT உடன் தொடர்புடையவர் ஆவார்.



Original article:

Share:

இந்தியாவில் செயல்திறன் மிக்க திட்ட விநியோகம் : ஒரு ‘குடிமக்களை மையமாக’க் கொண்ட புரட்சி. -அங்கித் கோயல்

 பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் ஒரு மூத்த குடிமகனை கற்பனை செய்து பாருங்கள். அவர் பல ஆவணங்களை சுமந்து அரசு அலுவலகங்களுக்கு இடையே நடந்து செல்கிறார். இதில் ஆதார், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் போன்றவை அடங்கும். ஓய்வூதியத் திட்டத்தை அணுக அவருக்கு இவை தேவை. இந்த ஆவணங்கள் மாநிலத்தால் வழங்கப்படுகின்றன. மேலும், அவர் தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இருப்பினும், ஏற்கனவே தனது தரவை வைத்திருக்கும் அதே அமைப்பில் அவர் இன்னும் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு இதுவே உண்மையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் தகுதி பெற்றிருந்தாலும், அரசாங்கத் திட்டங்களை அணுகுவது இன்று எளிதானது அல்ல. இதற்கு முக்கிய காரணம் மறைக்கப்பட்ட தரவு ஆகும். வருவாய்த் துறைகள் வருமானம் மற்றும் சாதியைப் பதிவு செய்கின்றன. உணவுத் துறைகள் ரேஷன் கார்டுகளை நிர்வகிக்கின்றன. சுகாதாரத் துறைகள் மருத்துவமனை வருகைகளைப் பதிவு செய்கின்றன. ஆனால் இந்த அமைப்புகள் அனைத்தும் தனித்தனியாக வேலை செய்கின்றன. ஆனால், தரவைப் பகிர்ந்து கொள்வதில்லை.


ராஜஸ்தானில், 2022ஆம் ஆண்டு வெளியான CAG தணிக்கையில் 1.2 லட்சம் ஓய்வூதிய பயனாளிகள் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. பதிவுகள் சரியாக புதுப்பிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தகுதியுள்ள பல மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில், 2020 கோவிட்-19 நிவாரணம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தவறவிட்டது. ரேஷன் கார்டுகள் அவர்களின் சொந்த ஊர்களுடன் இணைக்கப்பட்டிருந்தன அவர்களின் தற்போதைய முகவரிகளைக் காட்டாததால் இது நிகழ்ந்தது. மகாராஷ்டிராவில், விவசாயிகள் விவசாய மானியங்களைப் பெறுவதில் நீண்ட தாமதங்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில், காசோலைகள் கைமுறையாக(manually) செய்யப்படுகின்றன. ஜார்க்கண்டில், பழைய 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே விண்ணப்பித்த சுமார் ஏழு லட்சம் பேர் இன்னும் காத்திருக்கிறார்கள்.


செலவு மிக அதிகம். குடிமக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்கும்போது ஊதியத்தையும் கண்ணியத்தையும் இழக்கிறார்கள். அதே நேரத்தில், அரசாங்கங்கள் கைமுறை வேலை (manual work) மற்றும் தவறுகளை சரிசெய்வதற்கு நிறைய செலவிடுகின்றன. இந்தத் தவறுகளில் சேர்த்தல் பிழைகளும் அடங்கும். அங்கு தகுதியற்றவர்களுக்கு நன்மைகள் செல்கின்றன. முன்கூட்டிய திட்ட விநியோகம் ஒரு சிறந்த தீர்வாகும். இந்த அணுகுமுறையில், அரசு தேவைகளை எதிர்பார்த்து நேரடியாக நன்மைகளை வழங்குகிறது. இந்த முறை குடிமக்கள் மீது கவனம் செலுத்துகிறது மற்றும் இந்த தடைகளை உடைக்கிறது.


முன்கூட்டிய திட்ட விநியோகம் (Proactive delivery) குடிமக்களை முதன்மைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாற்றுகிறது. தகுதியான குடும்பங்களை தானாகவே சேர்க்க குடிமக்களின் ஒற்றை தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது, எனவே அவர்கள் சலுகைகளைப் பெற அலைய வேண்டியதில்லை. ஆதார், வருமானம், குடும்ப அளவு மற்றும் பிற விவரங்களை இணைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட, நிகழ்நேர தரவுத்தளம், ஓய்வூதியம், வீட்டுவசதி அல்லது சுகாதார காப்பீடு போன்ற திட்டங்களுடன் மக்களை எளிதாகப் பொருத்த முடியும்.


இந்த அமைப்பு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை நிஜ உலக எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. ஹரியானாவின் பரிவார் பெஹ்சான் பத்ரா (Parivar Pehchan Patra (PPP)) 2020-ல் தொடங்கியது. இது 65 லட்சம் குடும்பங்களை, அதாவது 2 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்களைக் கண்காணிக்கிறது. இது ஓய்வூதியம், எரிவாயு மானியங்கள் மற்றும் சுகாதார நலன்களுக்கு அவர்களை தானாகவே சேர்க்கிறது. 2023ஆம் ஆண்டு வாக்கில், பரிவார் பெஹ்சான் பத்ரா (Parivar Pehchan Patra (PPP)) நகல் பதிவுகளை அகற்றுவதன் மூலம் ₹500 கோடியை மிச்சப்படுத்தியது. இது மில்லியன் கணக்கானவர்களுக்கு சேவைகளை விரைவாக அணுக உதவியது.


கேரளாவின் ஸ்மார்ட் கிச்சன் திட்டம் (Smart Kitchen Scheme) 2021-ல் தொடங்கியது. இது 1.25 லட்சம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையலறை உபகரணங்களை வழங்க ரேஷன் கார்டு மற்றும் வருமானத் தரவைப் பயன்படுத்துகிறது. இது சுமார் 5 லட்சம் குடிமக்களை உள்ளடக்கியது. இது மக்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.


உத்தரபிரதேசம் அதன் குடும்ப அடையாள அட்டை முறையைப் பயன்படுத்துகிறது. இது முதியோர் ஓய்வூதியத்தை வழங்க ஆதாருடன் பதிவுகளை இணைக்கிறது. மூத்த குடிமக்கள் தகுதி பெற்றவுடன் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் விவரங்களை விண்ணப்பிக்கவோ அல்லது சரிபார்க்கவோ தேவையில்லை.


இந்த அமைப்புகள் குடும்ப நிலையில் தரவுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. PMAY வீட்டுவசதி மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்கு இது முக்கியமானது. இந்தத் திட்டங்கள் வீட்டு விவரங்களின் அடிப்படையில் தகுதியைச் சரிபார்க்கின்றன. அவை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக நன்மைகளை வழங்க உதவுகின்றன. இந்த அணுகுமுறை செயல்திறன் மற்றும் நியாயத்தன்மை இரண்டையும் மேம்படுத்துகிறது.


ஒரு முன்னெச்சரிக்கையான, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்பை உருவாக்குவது குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்கிறது. அவை உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக தீர்க்கப்பட வேண்டும்:


தரவு பிரித்தல் மற்றும் துல்லியமின்மை : பீகாரின் 2021ஆம் ஆண்டு கிராமப்புற கணக்கெடுப்பு 30% வீடுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட வருமானச் சான்றிதழ்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதன் காரணமாக, இந்த வீடுகள் அரசாங்க நலத்திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டன.


தனியுரிமை மற்றும் தவறான பயன்பாட்டின் அபாயங்கள் : கர்நாடகாவின் 2023ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரக்குறிப்பு பற்றிய அச்சத்தின் மீது பொதுமக்களின் கோபத்தை ஏற்படுத்தியது. இது மில்லியன் கணக்கான பதிவுகளை வெளிப்படுத்தும் கடந்த ஆதார் தரவு மீறல்களால் அதிகரித்த கவலையாகும்.


உள்கட்டமைப்பு இடைவெளிகள் : 2024ஆம் ஆண்டு IAMAI தரவுகளின்படி, 60% கிராமப்புற இந்தியர்களிடம் திறன்பேசிகள் போன்கள் இல்லை. இதன் விளைவாக, டிஜிட்டல் அமைப்புகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை விட்டுவிடக்கூடும்.


நம்பிக்கைக் குறைபாடுகள் : 2019ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் அதன் நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியது. இருப்பினும், டிஜிட்டல் செய்யப்பட்ட தலைப்புகளில் 15% இயற்பியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது மற்றும் மக்களின் நம்பிக்கையைக் குறைத்தது. இதன் விளைவாக, பல சலுகைகள் தாமதமாகின அல்லது நிறுத்தப்பட்டன.


விலக்கு பிழைகள் : 2021-ம் ஆண்டில், பஞ்சாப் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், தகுதியான விவசாயிகளில் 10% பேர் விடுபட்டனர். பயன்படுத்தப்பட்ட பதிவுகள் காலாவதியானதால் இது நடந்தது. இந்த விவசாயிகள் முக்கியமான ஆதரவைத் தவறவிட்டனர்.


இந்தப் பிரச்சினைகள் கடுமையான செலவுகளைக் கொண்டுள்ளன. குடிமக்கள் வருமானத்தை இழந்து சிக்கலான நடைமுறைகளைக் கையாள்வதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். பதிவுகளை கைமுறையாகச் சரிபார்ப்பதற்கும் தவறுகளைச் சரிசெய்வதற்கும் அரசாங்கங்கள் கூடுதல் வளங்களைச் செலவிட வேண்டும். இது வளர்ச்சித் திட்டங்களிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறது.


இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. குடிமக்களின் பதிவுகளை ஒருங்கிணைத்து, ஒன்றுடன் ஒன்று இயங்கக்கூடிய தரவுத்தளத்தில் புதுப்பிப்பதன் மூலம் முன்னெச்சரிக்கை சேவை வழங்கல் தொடங்குகிறது. உத்தரபிரதேசத்தின் குடும்ப ஐடி (Family ID) பல்வேறு ஆவணங்கள் மற்றும் தரவை இணைக்கிறது.  இது ஆதார், வாக்காளர் ஐடிகள், ரேஷன் கார்டுகள், வருமானம், சாதி, வரி பதிவுகள் மற்றும் வீட்டு நிலையில் பயன்படுத்தப்படும் திட்டங்களின் நிலையை இணைக்கிறது. இது நகல்களை நீக்கவும் பிழைகளைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த முழுமையான இணைப்பு, முதியோர் ஓய்வூதியம், சுகாதார காப்பீடு அல்லது வீட்டு மானியங்கள் போன்ற திட்டங்களுக்கான தகுதி முழுமையாக, ஒட்டுமொத்தமாக சரிபார்க்கப்படுவதை உறுதி செய்கிறது. இது மக்கள் தவறாக விலக்கப்படக்கூடிய தவறுகளைக் குறைக்கிறது.


குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வலுவான குறியாக்கம் (encryption) மற்றும் கடுமையான விதிகள் (strict protocols) தேவை. எடுத்துக்காட்டாக, உத்திர பிரதேசத்தின் குடும்ப ஐடி அமைப்பில், முழுமையான குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றன. இது அங்கீகரிக்கப்படாத அணுகலை நிறுத்துகிறது. தெளிவான தரவு பயன்பாட்டுக் கொள்கைகளும் உதவுகின்றன. அவை என்ன அனுமதிக்கப்படுகின்றன என்பதை விளக்குகின்றன மற்றும் தவறான பயன்பாட்டிற்கான தண்டனைகளை நிர்ணயிக்கின்றன. இந்த நிலைகள் பொது நம்பிக்கையை உருவாக்குகின்றன. அவை விவரக்குறிப்பையும் நிறுத்துகின்றன. இதன் விளைவாக, பெரிய தரவுத் திட்டங்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் சமூக ரீதியாக நீடித்ததாகவும் மாறும்.


உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் குறைக்க டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் தொடர்புகளுடன் இணைப்பது அவசியம். இது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்களைச் சேர்க்க உதவுகிறது. குஜராத்தில், மொபைல் ரேஷன் கார்டு குழுக்கள் (mobile ration‑card teams) கிராமங்களில் வீடு வீடாகச் சென்றன. ஸ்மார்ட்போன்கள் அல்லது இணைய அணுகல் இல்லாத வீடுகளை அவர்கள் பதிவு செய்தனர். உள்ளூர் தன்னார்வலர்கள் (local volunteers) இந்த மாதிரியைப் பின்பற்றலாம். இது தொலைதூர அல்லது டிஜிட்டல் முறையில் விலக்கப்பட்ட பகுதிகளில் கூட பதிவுகளைப் புதுப்பிக்க உதவும். இது அமைப்பில் உள்ள ஏதேனும் பார்வையற்ற இடங்களையும் (blind spots) நீக்குகிறது.


வெளிப்படைத்தன்மை நேரடி திட்டத் தரவைப் பகிர்வதன் மூலம் குடிமக்களை கூட்டமைப்புகளில் மாற்றுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் MGNREGA தரவுத்தளம் பயனாளிகளின் நிகழ்நேர பட்டியல்கள் மற்றும் கட்டண நிலைகளைக் காட்டுகிறது. இது சமூகங்கள் தங்கள் உரிமைகளைச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகளைப் புகாரளிக்க அனுமதிக்கிறது. திறந்த போர்டல்கள் ஊழலை நிறுத்த உதவுகின்றன. அவை சர்ச்சைகளைத் தீர்ப்பதையும் விரைவுபடுத்துகின்றன. நிர்வாகம் பொறுப்பானது, நியாயமானது மற்றும் மேற்பார்வைக்கு திறந்திருக்கும் என்பதை அவை காட்டுகின்றன.


சிறந்த தானியங்கி அமைப்புகள் கூட சில சிறப்பு நிகழ்வுகளைத் தவறவிடலாம். அதனால்தான் மனித உதவி மிகவும் முக்கியமானது. கேரளாவின் 2021 ஸ்மார்ட் கிச்சன் திட்ட (Smart Kitchen Scheme) உதவி எண் 10,000 குடும்பங்களை தளத்தரவைச் சேர்த்தது. இதில் தானியங்கி அமைப்புகளால் தவறவிடப்பட்ட சுமார் 40,000 பேர் அடங்குவர். அழைப்பு மையங்கள், உதவி மையங்கள் மற்றும் களக் குழுக்களைப் பயன்படுத்துவது இந்த இடைவெளிகளை நிரப்புகிறது. இது தகுதியான குடிமக்கள் முக்கியமான சேவைகளை அணுகுவதை உறுதி செய்கிறது.


ஒருங்கிணைந்த தரவுத்தளங்கள், தொடர்பு மற்றும் உதவி எண்களுக்கான நிதி சேமிப்பிலிருந்து வரலாம். சேர்க்கை மற்றும் விலக்குக்கான பிழைகளை சரிசெய்வதன் மூலம் இந்த சேமிப்பு சாத்தியமாகும். முன்னதாக, இதுபோன்ற பிழைகள் தகுதியற்றவர்களுக்கு பணம் செலுத்த வழிவகுத்தன. அவை விலையுயர்ந்த கைமுறை திருத்தங்களையும் ஏற்படுத்தின. இது அரசாங்கத்தின் பட்ஜெட்டை திருத்தியது.


முன்னோடித் திட்டங்கள் உத்வேகத்தை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, மகப்பேறு சலுகைகளுக்கு தாய்மார்களை தானாகச் சேர்க்க தமிழ்நாடு மருத்துவமனைத் தரவைப் பயன்படுத்தலாம். இது ஆந்திராவின் ரிது பரோசா மாதிரியைப் (Rythu Bharosa model) போன்றது. ஒரு மாநிலத்தில் ஒரு முன்னோடித் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டால், அது நாடு முழுவதும் தத்தெடுப்பை ஊக்குவிக்கும்.


ஹரியானாவின் PPP, கேரளாவின் ஸ்மார்ட் கிச்சன் மற்றும் உத்தரபிரதேசத்தின் குடும்ப ஐடி ஆகியவை முன்கூட்டியே விநியோகம் சிறப்பாக செயல்படுவதைக் காட்டுகின்றன. இந்தத் திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் நன்மைகளைப் பெற உதவியுள்ளன. தரவை ஒன்றிணைப்பதன் மூலமும், தரவை சேர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமும், நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமும், திட்டங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை இந்தியா மாற்ற முடியும். இது குடிமக்களை முதன்மைப்படுத்தும் ஒரு மென்மையான அமைப்பை உருவாக்கும். இது நீண்ட காகிதப்பணி செயல்முறையை நிறுத்தி, ஒவ்வொரு தகுதியுள்ள நபரும் அவர்களின் நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்யும்.


அங்கித் கோயல் கட்டுரையாளர் மற்றும்  சமக்ரா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆவார்.



Original article:

Share:

பெண்களைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்து என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு சமூக-கலாச்சார கட்டமைப்பாகும். -ரிதுபர்ண பத்கிரி

 பெண்கள் தங்கள் குடும்பத்தின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், அவர்கள் பெரும்பாலும் குறைவாகவே சாப்பிடுபவர்களாகவும், கடைசியாகவே சாப்பிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். அதிகமாக ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், ஊட்டச்சத்து கொள்கைகள் உண்மையில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைகளைக் கையாளுகின்றனவா?


சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மூன்று முக்கிய ஊட்டச்சத்து பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இவை ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் போன்றவைகளை உள்ளடக்கியது. உலகளாவிய பசி குறியீட்டின் (Global Hunger Index) (2020) படி, இந்தியா 107 நாடுகளில் 94வது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை (Global Nutrition Report), இந்தியா 2025ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளைத் தவறவிட வாய்ப்புள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.


இந்தக் கண்டுபிடிப்புகள், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்-5 (National Family Health Survey (NFHS)) தரவுகளுடன் ஒத்துப்போகின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 35.5% பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 19.3% பேர் உடல் எடை குறைவாகவும், 32.1% பேர் எடை குறைவாகவும் இருப்பதாக இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது.


2015-16இல் நடத்தப்பட்ட கடைசி கணக்கெடுப்பு (NFHS-4)க்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேம்பட்டிருந்தாலும், ஊட்டச்சத்து இன்னும் ஒரு கவலையாகவே உள்ளது. பெண்களுக்கு, ஊட்டச்சத்து என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல. இது சமூக மற்றும் கலாச்சார காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது. இதை மேலும் ஆராய்வோம்.


ஊட்டச்சத்து மற்றும் பாலினம்


ஊட்டச்சத்து என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு சமூக-கலாச்சார கட்டமைப்பாகும். பல காரணிகள் ஊட்டச்சத்தை பாதிக்கின்றன. கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், பாலின தன்மைகள், வீடுகளில் உணவு எவ்வாறு பகிரப்படுகிறது மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். NFHS-5 தரவுகளின்படி, 2019-21இல் 15-49 வயதுடைய பெண்களில் 57 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2015-16இல் 53 சதவீதமாக இருந்தது.


குறிப்பிடத்தக்க வகையில், கர்ப்பிணிப் பெண்களை விட (52.2 சதவீதம்) கர்ப்பிணி அல்லாத பெண்களில் இரத்த சோகையின் பாதிப்பு (57.2 சதவீதம்) அதிகமாக இருந்தது. குறிப்பாக சாதரண பெண்கள், சிறப்பு கவனிப்பு அல்லது சத்தான உணவை அரிதாகவே பெறுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது. உதாரணமாக, லீலா டியூப்பின் ”Women and Kinship: Perspectives on Gender in South and South-East Asia-1997”  போன்ற மானுடவியல் ஆய்வுகள், படித்த, உயர் நடுத்தர குடும்பங்களைத் தவிர, பொதுவாகப் பெண்களுக்குப் பால் சார்ந்த உணவுகள் கொடுக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுகின்றன. பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது, நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்பமாக இருக்கும்போது போன்ற சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே பால் சார்ந்த உணவுகளைப் பெறுகிறார்கள்.


மாதவிடாய் ஆரோக்கியத்தை புறக்கணிப்பது இரத்த சோகையை மோசமாக்குகிறது. சுமார் 59 சதவீத இளம் பெண்கள் (15-19 வயது) இரத்த சோகை உள்ளவர்கள் ஆவர். இந்த இரத்த சோகை கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது அபாயங்களை அதிகரிக்கிறது. இரத்த சோகை தவிர, ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் 33.1 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள் ஆவர். இது பல காரணங்களால் நிகழ்கிறது. இவர்களில் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களும் அடங்குவர். குழந்தை ஒரு பெண் என்பதால் பிரசவத்திற்குப் பிறகு கொடுக்கப்படும் குறைவான கவனிப்பு மற்றொரு காரணமாக அமைகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் எடை குறைவு விகிதங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெண்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது குறைவான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து பெறுகிறார்கள்.


மேலும், பெண்கள் தங்கள் குடும்பங்களின் ஊட்டச்சத்தை கவனித்துக் கொண்டாலும், அவர்கள் பெரும்பாலும் குறைவாக சாப்பிட்டு கடைசியாக சாப்பிடுபவர்கள். இது தலைமுறைகளாக ஊட்டச்சத்து சமத்துவமின்மை தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது. எடை குறைந்த தாய்மார்களுக்கு (18.5 கிலோ/மீ2 க்குக் குறைவான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட) பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவோ, மெலிந்தவர்களாகவோ அல்லது எடை குறைவாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


28 மாநிலங்களில், 21 மாநிலங்களில் இரத்த சோகை அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் அதிக விகிதங்கள் உள்ளன. அசாம், சத்தீஸ்கர் மற்றும் திரிபுராவில் 15 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு காணப்பட்டது, அதே நேரத்தில் பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் 5 சதவீதத்திற்கும் குறைவான சிறிய அதிகரிப்பு காணப்பட்டது.


பட்டியல் பழங்குடி (ST) சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இது சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல் இல்லாததைக் குறிக்கிறது. மறுபுறம், உயர் கல்வி நிலைகளைக் கொண்ட பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது, கல்வி ஊட்டச்சத்து பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் சிறந்த உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதை இது குறிக்கிறது.


அதிக பெண் கல்வியறிவு, தாமதமான திருமணம் மற்றும் பொது விநியோக முறையின் நல்ல அணுகல் ஆகியவற்றின் காரணமாக பாலினம் முழுவதும் ஒப்பீட்டளவில் ஊட்டச்சத்து சமத்துவத்திற்காக கேரளா தனித்து நிற்கிறது என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும். தாய்மார்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நிலை மேம்படுவதால் குழந்தைகளின் வளர்ச்சி குறைகிறது. இதற்கு நேர்மாறாக, தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பள்ளிக் கல்விக்கு அணுகல் இல்லாதவர்களாகவும், மிகக் குறைந்த செல்வச் சதவிகிதத்தில் உள்ளவர்களாகவும் உள்ளனர். 


சிக்கிம் மற்றொரு குறிப்பிடத்தக்க மாநிலமாகும். ஏனெனில், இது பெண்களின் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எனவே, NFHS-5 தரவுகளின்படி பாலினம் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் வடகிழக்கில் மிசோரமிற்கு அடுத்தபடியாக மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த எண்கள், குறிப்பாக பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, உள்ளூர் அளவில் நல்ல நிர்வாகம் மற்றும் சிறந்த நடைமுறைகளின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றன. 


அதிகப்படியான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு


பெண்களிடையே வளர்ந்து வரும் மற்றொரு ஊட்டச்சத்து பிரச்சினை அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை விட அதிக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்கள் அதிகம். தற்போது, 41.3 சதவீத பெண்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர். கிராமப்புறங்களில் 21 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 33 சதவீத பெண்கள் அதிக ஊட்டச்சத்துள்ள நகர்ப்புறங்களில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. 


இதன் விளைவாக, பெண்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பெண்கள் முக்கிய பராமரிப்பாளர்களாக இருப்பதால் இது நிகழ்கிறது. அவர்கள் பெரும்பாலும் தங்களைக் கவனித்துக் கொள்ள, தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்க அல்லது உடல் செயல்பாடுகளைச் செய்ய சிறிது நேரம் கூட கிடைப்பதில்லை.


இது தவிர, பெண்கள் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உணவுகளில் பொதுவாக பல்வேறு வகைகள் இல்லை. புரத உட்கொள்ளல் பெரும்பாலும் மிகவும் குறைவாக இருக்கும். கலாச்சார பழக்கவழக்கங்கள் இதை மோசமாக்குகின்றன. பெண்கள் பெரும்பாலும் குறைவாகவும், நீண்ட நேரமாகவும் சாப்பிடுபவர்கள். இது அவர்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.


இந்திய அரசியலமைப்பு உணவு உரிமையை அங்கீகரிக்கிறது. இதன் பொருள் ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான உரிமை உள்ளது. இந்த உரிமை பிரிவு 21 இன் கீழ் வாழ்வதற்கான உரிமையின் (Right to Life) ஒரு பகுதியாகும். மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளின் (Directive Principles of State Policy) பிரிவு 47, ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபட வேண்டும் என்றும் கூறுகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) இலக்கு 2 இல் கூறப்பட்டுள்ளபடி, 2030-ம் ஆண்டுக்குள் பசியை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா உறுதிபூண்டுள்ளது.


இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் பல கொள்கைகளையும் திட்டங்களையும் தொடங்கியுள்ளது. இதில் 1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)), 1993-ல் தேசிய ஊட்டச்சத்து கொள்கை, 2017-ல் தேசிய சுகாதாரக் கொள்கை, 2017-ல் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) மற்றும் 2021-ல் தொடங்கப்பட்ட போஷன் 2.0 ஆகியவை அடங்கும்.


முந்தைய முயற்சிகளில் பெரும்பாலானவை குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களை மையமாகக் கொண்டிருந்தாலும், போஷன் 2.0 இளம் பருவப் பெண்களை நோக்கி இந்த பார்வையை விரிவுபடுத்தியது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மட்டுமே ஊட்டச்சத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால அணுகுமுறை தேவை என்பதைக் காட்டுகிறது. போஷன் 2.0, Poshan tracker எனப்படும் டிஜிட்டல் கண்காணிப்பு பயன்பாட்டின் மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் நிகழ்நேர கண்காணிப்பையும் ஊக்குவிக்கிறது. இது ஊட்டச்சத்தை மேம்படுத்த நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.


ஊட்டச்சத்து பணியை சமூக ரீதியாக எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது?


இந்தியாவில் பல கொள்கைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றின் செயல்பாடு மற்றும் செயல்திறன் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே வேறுபடுகின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers) போன்ற கீழ்நிலை சேவை வழங்குநர்கள் குறைந்த ஊதியம் மற்றும் அதிக வேலை செய்கிறார்கள். சில ஆய்வுகள், இந்தத் தொழிலாளர்கள் சில நேரங்களில் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கூடுதல் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் (take home ration (THR)) பொருள்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதைக் கண்டறிந்துள்ளன. இந்தப் பிரச்சனைகள் அவர்களைத் குறைத்து மதிப்பிடுகிறது. இதன் விளைவாக, குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.


ஊட்டச்சத்து சமூகநீதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. இந்தியா இதுவரை முக்கியமாக ஊட்டச்சத்து குறைபாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. ஆனால் இப்போது, அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. கொள்கைகளை முறையாக விரிவுபடுத்துவது உடல் பருமன் மற்றும் தொற்றாத நோய்களை எதிர்த்துப் போராட உதவும். மதிய உணவு மற்றும் THR பொருள்கள் போன்ற அரசு தலைமையிலான திட்டங்களில் ஆரோக்கியமான மற்றும் மிகவும் மாறுபட்ட உணவுமுறைகள் அடங்கும்.


ஊட்டச்சத்து-உணர்திறன் கொண்ட விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதற்கு தனியார்-பொது கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவை ஊட்டச்சத்து சேவைகளின் வரம்பையும் தரத்தையும் மேலும் விரிவுபடுத்த உதவும். பொருளாதார வல்லுநர்கள், சமூகவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களை உள்ளடக்கி ஊட்டச்சத்துக் கொள்கைகளுக்கு பல ஒழுங்குமுறை அணுகுமுறையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பெண் பிரதிநிதிகள் போன்ற நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை வைத்திருப்பது இந்தக் கொள்கைகளை சமூகத்தில் மிகவும் பயனுள்ளதாக மாற்றும்.



Original article:

Share:

இந்தியாவின் மின் துறைக்குத் தேவையான சீர்திருத்தம் -ஆர் வி ஷாஹி

 அனல் மின் நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கிறது. சீனா வேகமாக வளர்ந்து வருவதாலும், அமெரிக்கா கணிக்க முடியாததாக இருப்பதாலும், இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவான உறவுகளிலிருந்து பயனடையலாம்.


2015ஆம் ஆண்டில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்கான சல்பர் டை ஆக்ஸைடு (SO2) வரம்புகளை நிர்ணயித்தது. இது இந்தியாவில் உள்ள சுமார் 600 மின் நிலையங்களுக்கும் எரிவாயு கந்தக நீக்க (flue gas desulphurisation (FGD)) அமைப்புகளை நிறுவுவதை கட்டாயமாக்கியது. இந்த முறையை செயல்படுத்துவதற்கான அட்டவணை கடினமாக இருந்தது. மின் துறையுடன் தொடர்புடைய பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் சரியான கவலைகளை எழுப்பினர். இந்திய நிலக்கரியில் குறைந்த கந்தக (சல்பர்) உள்ளடக்கம் இருப்பதால், இந்த ஆலைகளில் பெரும்பாலானவற்றிற்கு FGD அமைப்பு அவசியமில்லை என்று இந்த நிபுணர்கள் வாதிட்டனர். இருப்பினும், இந்த அமைப்பின் செயல்படுத்தல் பல ஆலைகளில் தொடங்கப்பட்டது. பழைய மற்றும் புதிய மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார விநியோகத்தை நிறுவுவதற்கான மூலதனச் செலவு நிதி ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டது. இது ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு சுமார் ரூ.0.25 முதல் 0.30 வரை கட்டணங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதற்கு மின் உற்பத்தியாளர்கள் (Power generators) கவலைப்பட்டனர். ஆனால், விநியோக நிறுவனங்களும் மின்சார நுகர்வோரும் இன்னும் அதிகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் இன்னும் கவலைப்பட்டனர்.


அதிக செலவு மற்றும் நுகர்வோர் மீதான கூடுதல் சுமையைத் தவிர, இந்திய நிலக்கரியில் மிகக் குறைந்த சல்பர் உள்ளடக்கம் இருப்பதால், இந்த அமைப்பு தொழில்நுட்ப ரீதியாக தேவையா என்பது பற்றிய பிரச்சினையும் இருந்தது. மேலும் ஆராய்ச்சி முறையும் தேவைப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் FGDகள் தேவையா என்பதைச் சரிபார்க்க சல்பர் டை ஆக்ஸைடு (SO2) உமிழ்வுகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வு இருக்க வேண்டும் என்று மின்சார அமைச்சகம் மற்றும் IIT டெல்லி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நிதி ஆயோக், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Environmental Engineering Research Institute(NEERI)) அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வைத் தொடங்கியது. இதில், ஆராய்ச்சியாளர்கள் இந்திய நிலக்கரியின் அனைத்து அம்சங்களையும், விதிமுறைக்கு மாறாக SO2 உமிழ்வின் அளவையும் ஆய்வு செய்தனர். அவர்கள் ஒரு விரிவான அறிக்கையை தயாரித்து பரிந்துரைகளை வழங்கினர். "அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் சுற்றுப்புற SO2 செறிவு, ஒரு கன மீட்டருக்கு 80 மைக்ரோகிராம்கள் என்ற பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை விட மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் FGDகளை நிறுவவில்லை என்றாலும் இது உண்மைதான்" என்று அவர்களின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. மேலும், அடுக்குகளில் இருந்து SO2 வெளியேற்றத்திற்கான விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர். ஏனெனில், பூமத்திய ரேகைக்கு அருகில் இந்தியாவின் நிலை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து வேறுபட்டது. அவர்கள் தற்போதைய வழிகாட்டுதல்களை அமைத்துள்ளனர். இந்தியா மேலும் வலுவான சூரிய ஒளியைப் பெறுகிறது. இது அதிக தரை மட்ட வெப்பமாக்கல், வலுவான செங்குத்து காற்று இயக்கம் (வெப்பச்சலனம்), அதிக கலவை உயரம் மற்றும் சிறந்த காற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது.  FGD அமைப்பு முக்கியமாக சுண்ணாம்புக்கல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுண்ணாம்புக்கல்லை சுரங்கம் கொண்டு செல்வது ஒரு பெரிய கார்பன் தடயத்தை உருவாக்குகிறது. மேலும், CO2 (கார்பன் டை ஆக்சைடு) வளிமண்டலத்தில் SO2 ஐ விட அதிக நேரம் நீடிக்கும்.


திருத்தப்பட்ட அறிவிப்பில் FGD முழுமையாக திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை. இது இப்போது திடமான அறிவியல் ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வுகள் நாட்டில் சுமார் 600 மின் உற்பத்தி நிலையங்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்த உதவியது. முதல் குழுவில் மிகப் பெரிய நகரங்களுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அடங்கும். இரண்டாவது குழுவில் அதிக மாசுபட்ட பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அடங்கும். மூன்றாவது குழுவில் மற்ற அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன.


தரவு பகுப்பாய்வு, சுமார் 78 சதவீத மின் உற்பத்தி நிலையங்களுக்கு FGD அமைப்பு தேவையில்லை என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள் அதிக அளவு மூலதனச் செலவினங்களைச் சேமிக்க முடியும். சேமிக்கப்பட்ட பணத்தை அதிக மின் உற்பத்தி திறனை உருவாக்கப் பயன்படுத்தலாம். முக்கியமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்தப்படும்.


இந்த அறிவிப்பு மின் நுகர்வோருக்கு அதிக கட்டணங்கள் குறித்த அச்சங்களையும் நீக்கியுள்ளது. இந்தியாவின் நீண்டகால எரிசக்தி மாற்றத் திட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இருப்பினும், இந்த மாற்றம் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அடுத்த சில காலகட்டங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி தொடர்ந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். இந்த அறிவிப்பு நுகர்வோருக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தைத் திட்டமிடுவது குறித்த தெளிவான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.


எழுத்தாளர் இந்திய அரசின் முன்னாள் மின்சாரத்துறை செயலாளர் மற்றும் இந்திய எரிசக்தி மன்றத்தின் தலைவர் ஆவார்.



Original article:

Share:

துணை குடியரசுத்தலைவர் பதவிக்காலத்தின் இடையில் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? -ரித்திகா சோப்ரா

 இந்திய அரசியலமைப்பு செயல்முறை, தேர்தல் கணக்கீடு மற்றும் இடைக்கால ஏற்பாடுகளைப் பற்றிய ஒரு பார்வை.


துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் திங்கட்கிழமை இரவு தாமதமாக ராஜினாமா செய்ததால், நாட்டின் இரண்டாவது உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் அரிதான இடைக்கால காலியிடம் உருவாக்கியுள்ளது. இந்திய வரலாற்றில், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு  முன்பு ராஜினாமா செய்த மூன்றாவது துணை குடியரசுத் தலைவராக ஜக்தீப் தன்கர் உள்ளார். அவருக்கு முன்பு வி.வி. கிரி மற்றும் ஆர். வெங்கடராமன் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகினர். அவர்களைத் தொடர்ந்து முறையே கோபால் ஸ்வரூப் பதக் மற்றும் ஷங்கர் தயாள் ஷர்மா  ஆகியோர் பதவியேற்றனர்.


இப்போது துணைகுடியரசுத் தலைவரின் கடமைகளை யார் செய்வது?


அரசியலமைப்புச் சட்டத்தில் தற்காலிக துணைத் தலைவர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவராகவும் பணியாற்றுவதால், துணை குடியரசுத் தலைவர் இல்லாதபோது அவையை நடத்துவதற்கு மாநிலங்களவையின் துணைத் தலைவராக உள்ள ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவைக்குத் தலைமை தாங்குவார்.


தேர்தல் எப்போது நடைபெறும்?


குடியரசுத் தலைவர் பதவி காலியாகிவிட்டால், ஆறு மாதங்களுக்குள் அந்தப் பதவியை நிரப்ப வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், துணை குடியரசுத் தலைவருக்கு, குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் இல்லை. தேர்தல் "முடிந்தவரை விரைவில்" நடத்தப்பட வேண்டும் என்ற விதி மட்டுமே உள்ளது.  தேர்தல் ஆணையம் தேதியை முடிவு செய்து பின்னர் அறிவிக்கும். இந்தத் தேர்தல் 1952ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றுகிறது. வழக்கமாக, மக்களவை அல்லது மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் தேர்தலை நிர்வகிக்க தேர்தல் அதிகாரியாக மாறி மாறி செயல்படுவார்.


புதிய துணை குடியரசுத்தலைவர் எவ்வளவு காலம் பதவி வகிப்பார்?


தேர்ந்தெடுக்கப்படும் நபர், தங்கரின் மீதமுள்ள பதவிக் காலத்தை மட்டும் முடிப்பதில்லை. அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து புதிய ஐந்தாண்டு பதவிக் காலத்தைத் தொடங்குவார்.


இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  மக்களவை மற்றும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் உட்பட  உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழுமத்தால் துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் துனைத் தலைவர் தேர்தலில் மாநில சட்டமன்றங்கள் பங்கேற்காது.


புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒற்றை மாற்று வாக்கு (single transferable vote) மூலம் விகிதாசார பிரதிநிதித்துவம் எனப்படும் சிறப்பு முறையைப் பயன்படுத்தி இது ரகசியமாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளர்களை விருப்பத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறார்கள். மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்குக்கும் ஒரே மதிப்பு உண்டு.


தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, ஒரு வேட்பாளர் குறைந்தபட்ச வாக்குகளின் எண்ணிக்கையை பெற வேண்டும். இதில் செல்லுபடியாகும் மொத்த வாக்குகளை இரண்டாகப் பிரித்து ஒரு எண்ணைச் சேர்ப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது (பின்னங்கள் இருந்தால், அவை புறக்கணிக்கப்படும் வரை இந்த நடைமுறை தொடரும்). முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் இந்த எண்ணிக்கையை  பெறவில்லை என்றால், முதல் விருப்ப வாக்குகளில் மிகக் குறைவாகப் பெற்றவர் நீக்கப்படுவார் மற்றும் அவர்களின் வாக்குகள் மற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாம் விருப்பங்களின் அடிப்படையில் மாற்றப்படும். ஒரு வேட்பாளர் இந்த எண்ணிக்கையை எட்டும் வரை இந்த செயல்முறை தொடரும்.


துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்களுக்கான தகுதி அளவுகோல்கள் என்ன?


துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி பெற்றவராகவும், எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்டவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் குடியரசுத் தலைவர், ஆளுநர் அல்லது அமைச்சர் போன்ற பதவிகளைத் தவிர, மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் கீழ் ஆதாயம் தரும் எந்த பதவியையும் வகிக்கக்கூடாது.



Original article:

Share:

சங்க இலக்கியம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


• கலாச்சாரச் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முதல் காலகட்டத்திற்கு (Period 1), கி.மு. 5ஆம் முதல் 8ஆம் நூற்றாண்டு என்ற கால அளவு முற்றிலும் நியாயமற்றது” என்று கூறினார். நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில்,  மிகவும் பழமையான காலகட்டத்தை அதிகபட்சமாக கி.மு. 300க்கு முந்தையதாக கருதலாம் என்று அவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் சுமதியின் கேள்விக்கு அவர் அளித்த பதிலுடன் இணைக்கப்பட்ட குறிப்பில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.


• கீழடி என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பழமையான இடமாகும். பத்தாண்டுகளுக்கு முன்னர், அப்போதைய தொல்லியல் துறையின் (ASI - Archaeological Survey of India) மேற்பார்வை தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்த இடத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் நவீன நகர சமூகத்தின் ஆதாரங்களை கண்டறிந்தார்.


• கீழடி அறிக்கையின்படி, கார்பன் கணிப்பு மூலம் தமிழர் வரலாற்றில் சங்க காலத்துக்கு இணையான 2,160 ஆண்டுகள் பழமையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இது வரலாற்றை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தியது. முன் தொடக்க வரலாற்று காலம் (கிமு 8-5 ஆம் நூற்றாண்டு), முதிர்ந்த ஆரம்ப வரலாற்று  காலம் (கிமு 5-1 ஆம் நூற்றாண்டு) மற்றும் ஆரம்ப வரலாற்று காலம் (கிமு 1 ஆம் நூற்றாண்டு - கிபி 3 ஆம் நூற்றாண்டு) வரை இருந்தன.


உங்களுக்குத் தெரியுமா?:


• தமிழ்நாட்டில், தொல்பொருள் தளம் 2014ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த தளம் செங்கல் கட்டிடங்கள், உலைகள், வடிகால் அமைப்புகள், சின்னங்களுடன் கூடிய மட்பாண்டங்கள் மற்றும் சுடுமண் பொருட்கள் (terracotta artefacts) உள்ளிட்ட மேம்பட்ட பண்டைய நகரத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தது.


• ராமகிருஷ்ணா தனது இறுதி அறிக்கையை ஜனவரி 2023இல் சமர்ப்பித்தார். இந்த தளம் கிமு 8 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இருந்ததாகக் கூறினார். இது அடுக்கு பகுப்பாய்வு (stratigraphic analysis) மற்றும் AMS தேதியிட்ட கலைப்பொருட்களின் அடிப்படையில் இருந்தது.


• குறிப்பிடத்தக்க வகையில், இந்த கண்டுபிடிப்புகள்  வணிகத்தின் ஆதாரமாக கார்னீலியன் மணிகள் (carnelian beads) மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்கள் (Tamil-Brahmi inscriptions) பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்தறிவு  தென்னிந்தியாவில் முன்பு நம்பப்பட்டதை விட மிகவும் பழமையான செழிப்பான நாகரிகத்தை விவரிக்கின்றன.


• கீழடியில் கண்டறியப்பட்டவை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அவை நீண்டகால வரலாற்று தகவல்களை சவால் செய்கின்றன மற்றும் இந்திய துணைகண்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகரமயமாக்கல் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.


• சங்க இலக்கியம் (Sangam Literature): தென்னிந்தியாவின் மிகப் பழமையான இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட சங்க இலக்கியம், பழைய தமிழில் எழுதப்பட்ட உரைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இதில் 8 கவிதைத் தொகுப்புகள், 10 புலவர் பாடல்கள், ஒரு இலக்கண நூல் மற்றும் 18 சிறு படைப்புகள் உள்ளன. மொத்தமாக, 473 கவிஞர்களால் 2,381 கவிதைகளும், பெயர் தெரியாத எழுத்தாளர்களின் 102 கவிதைகளும் உள்ளன. சங்க உரைகளின் சரியான தேதிகள் குறித்து அறிஞர்கள் வேறுபட்டாலும், அவை பொதுவாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டவை என்று ஒரு பொதுவான புரிதல் உள்ளது.  சங்க கவிதைகள் அகம் (akam) மற்றும் புறம் (puram) என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அகமானது காதலை மையமாகக் கொண்டவை. புறமானது போர், மரணம், சமூகம் மற்றும் அரசு போன்ற தலைப்புகளை ஆராய்கின்றன.



Original article:

Share:

பல்வேறு அரசியலமைப்பு வரைவுகள் இந்தியாவை எவ்வாறு உருவகம் செய்தன -பிரத்மேஷ் கேர்

 1895 மற்றும் 1948ஆம் ஆண்டிற்கு இடையில், ஆரம்பகால தாராளமயம் முதல் காந்திய அதிகாரப் பரவல் வரை தீவிர சமூக உடைமை வரை மாறுபட்ட சித்தாந்தங்களை பிரதிபலிக்கும் பல்வேறு அரசியலமைப்பு வரைவுகள் முன்மொழியப்பட்டன.


1950ஆம் ஆண்டு அரசியலமைப்புடன் இந்தியா ஒரு குடியரசாக மாறுவதற்கு முன்பு, பல்வேறு அரசியல் சிந்தனையாளர்களும் இயக்கங்களும் 1895 மற்றும் 1948ஆம் ஆண்டிற்கு இடையில் பல்வேறு அரசியலமைப்பு வரைவுகளை முன்மொழிந்தன. இந்த வரைவுகள் ஆரம்பகால தாராளமயம், காந்திய அதிகாரப் பரவல் (decentralism) மற்றும் தீவிர சமூக உடைமை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பிரதிபலித்தன. இறுதி அரசியலமைப்பிற்கு முன்னர் இந்த ஐந்து முக்கிய அரசியலமைப்பு வரைவுகள் இறையாண்மை, நிர்வாகம், பொருளாதார நீதி மற்றும் கலாச்சார அடையாளம் குறித்த வெவ்வேறு கருத்துக்களை எடுத்துக்காட்டின.


ஆரம்பகால அரசியலமைப்பு பார்வைகள்


இந்திய அரசியலமைப்பு மசோதா (Constitution of India Bill) 1895, பெயர் தெரியாமல் எழுதப்பட்டது. ஆனால், பாலகங்காதர திலக் போன்ற ஆரம்பகால தேசியவாதிகளுடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்படுகிறது. இது பிரிட்டிஷ் பேரரசுக்குள் சுயஆட்சிக்கான அரசியலமைப்பை வடிவமைக்கும் ஆரம்பகால முயற்சிகளில் ஒன்றாகும். 110 பிரிவுகளைக் கொண்ட இந்த வரைவு பிரதிநிதித்துவ அரசாங்கம், தனிநபர் உரிமைகள், சட்ட சமத்துவம் மற்றும் அதிகாரங்களின் தெளிவான பிரிவினையை முன்மொழிந்தது. இது பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்தியது. அது முழுமையான சுதந்திரத்தைக் கோருவதை விட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் சுயராஜ்யத்தை விட ஆதிக்கத்திற்கான ஒரு விருப்பமாக இருந்தது.


இதற்கு நேர்மாறாக, 1944ஆம் ஆண்டு எம்.என். ராயின் வரைவு சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பு (M.N. Roy’s Constitution of Free India), தீவிர மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பங்கேற்பு ஜனநாயகத்தை மையமாகக் கொண்டது. மொழியால் ஒழுங்கமைக்கப்பட்ட மாகாணங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி இந்தியாவை ராய் முன்மொழிந்தார். மக்கள் அதிகாரத்தை நிர்வாகத்தின் மையமாக வலியுறுத்தினார். அவரது வரைவில் கொடுங்கோன்மையை எதிர்க்கும் உரிமை, குடிமை மற்றும் பொருளாதார பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான உரிமைகள் மசோதா மற்றும் உள்ளூர் ஈடுபாட்டை ஊக்குவிக்க குடிமக்கள் ஆகியவை அடங்கும். உள்ளூர் மக்களை முடிவெடுப்பதில் ஈடுபடுத்துமாறு குடிமக்கள் குழுக்களை ராய் பரிந்துரைத்தார். அதிகாரப் பரவலாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துவதில் ராயின் தொலைநோக்குப் பார்வையை அதன் காலத்திற்கு முந்தையதாக மாற்றும் வகையில், அடிமட்ட மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக குடிமக்கள் குழுக்கள் முன்மொழியப்பட்டன. இந்த ஆவணம் பாரம்பரிய தாராளமயத்திற்கு (liberalism) அப்பாற்பட்டது. நேரடி ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார சமத்துவத்தை (economic equity) ஊக்குவித்தது.


ராயின் வரைவில் ஒரு முக்கிய யோசனை என்னவென்றால், நாடாளுமன்ற இறையாண்மை கொண்ட உண்மையான அதிகாரம் சட்டமியற்றுபவர்களுக்கு மட்டுமல்லாமல், அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதாகும். இதை தெளிவுபடுத்தும் ஒரு வலுவான அரசியலமைப்பை அவர் விரும்பினார். குடிமக்கள் குழுக்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மக்களுக்கு அரசியல் பற்றி கற்பிப்பதிலும் ராய் நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் சாதாரண மக்கள் நாட்டை நிர்வாகம் செய்வதில் தீவிர பங்கு வகிக்க முடியும். இந்த வரைவின் தெளிவு மற்றும் துல்லியத்திலும் தனித்துவமானது: முகவுரையானது நாட்டை, "சுதந்திரமான, மதச்சார்பற்ற, கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் குடியரசு" என்று வரையறுத்தது. மேலும், அரசாங்கத்தின் அமைப்பு மாகாண சுயாட்சி மற்றும் பொது பங்கேற்பு மூலம் அதிகாரத்துவ மையவாதத்திற்கு எதிரான தடைகளை கற்பனை செய்தது. முக்கியமாக, ராயின் வரைவு பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை குடிமை உரிமைகளுடன் சமமான நிலையில் வைத்தது.  1950ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இறுதியில் அடிப்படை உரிமைகள்– அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) பிரிக்கப்படும் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் நியாயப்படுத்த முடியாத தன்மையைப் போல் இல்லாமல், ராயின் சமூக-பொருளாதார உரிமைகள் செயல்படுத்தக்கூடியவை மற்றும் கட்டமைப்பு கொண்டவையாக இருந்தன.


ஒரே மாதிரியான ஆனால் மதச்சார்பற்றவை


இந்து மகாசபா போன்ற வலதுசாரி குழுக்களுடன் இணைக்கப்பட்ட இந்துஸ்தான் சுதந்திர மாநிலச் சட்டம் (Hindusthan Free State Act, 1944) அரசியலமைப்பு, மற்ற வரைவுகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பார்வையை வழங்கியது. அது ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை விரும்பியது மற்றும் இந்தியாவை "இந்துஸ்தான் சுதந்திர மாநிலம்" (“Hindusthan Free State,”) என்று அழைத்தது. இந்த வரைவு ஒரு மொழி, ஒரு சட்டம் மற்றும் ஒரு பகிரப்பட்ட கலாச்சாரம் மூலம் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியது. இருப்பினும், பலர் கருதுவதைப் போல் இல்லாமல், இந்த வரைவு அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களுக்கும் மத சுதந்திரம் மற்றும் சம உரிமைகளை தெளிவாக ஆதரித்தது. பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தை சீர்குலைக்காத வரை, எந்தவொரு மதத்தையும் நம்புவதற்கும், பின்பற்றுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் உள்ள உரிமையை இந்த வரைவு ஆதரித்தது. அரசாங்கம் எந்த மதத்தையும் ஆதரிக்கவோ அல்லது அவர்களின் நம்பிக்கையின் காரணமாக மக்களை நியாயமற்ற முறையில் நடத்தவோ முடியாது என்று அது கூறியது. அதிகாரப்பூர்வ அரசு மதம் இருக்காது என்றும், பொது பணத்தை மத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்றும் வரைவு தெளிவுபடுத்தியது. வரைவு கலாச்சார ஒற்றுமையில் வலுவாக கவனம் செலுத்தியிருந்தாலும், இந்த விதிகள் நியாயம் மற்றும் மதத்தை அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டைக் காட்டின. தேசிய ஒற்றுமைக்கு அழுத்தம் கொடுக்கும் அதே வேளையில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்த கலவை வரைவின் பின்னணியில் உள்ள கருத்துக்களில் சில முரண்பாடுகளைக் காட்டுகிறது.


கூடுதலாக, 1944ஆம் ஆண்டு வரைவு பிரிவினை உரிமையை (right of secession) வெளிப்படையாகக் குறிப்பிட்ட சில வரைவுகளில் ஒன்றாகும். மாகாணங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் யூனியனில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறியது.  இது அதன் மற்றபடி ஒற்றையாட்சி நோக்குநிலையைக் கருத்தில் கொண்டு ஒரு அசாதாரண அம்சமாகும். இது ‘தார்மிக மற்றும் ஆன்மீக மதிப்புகளை’ (moral and spiritual values) மேம்படுத்த அரசுக்கு கட்டாயமாக்கியது. இதனால் அதன் அரசியலமைப்பு தர்க்கத்தில் ஒரு நாகரிக பணியை (civilisational mission) ஏற்படுத்திக்கொண்டது. அவசரகால அதிகாரங்கள் மற்றும் குடிமக்களின் கடமைகளுக்கான அதன் ஏற்பாடுகள் வலுவான அரசு-மைய மனப்பான்மையை (state-centric ethos) எதிரொலித்தன. அதே நேரத்தில் சட்டமன்றத்திற்கு நேரடி தேர்தல் மற்றும் வழக்கமான நீதித்துறை மறுஆய்வு (judicial review) போன்ற ஜனநாயக செயல்முறைகளையும் உள்ளடக்கியது.


தன்னாட்சி முறையிலிருந்து சமூக உடைமை ஜனநாயகம் வரை


மிகவும் வேறுபட்ட குறிப்பில், காந்தியத் தாராள இந்தியாவின் அரசியலமைப்பு (Gandhian Constitution for Free India), 1946இல் சீமான் நாராயண் அகர்வால் என்பவரால் மகாத்மா காந்தியின் முன்னுரையுடன் உருவாக்கினார். இது இந்திய மரபுகள் மற்றும் காந்தியின் அகிம்சை, வளங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் சுயசார்பு கிராமங்கள் பற்றிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஆட்சியின் அடிப்படை அலகாக தன்னிறைவு கொண்ட கிராம குடியரசுகளின் (gram swaraj) கூட்டமைப்பை முன்மொழிந்தது. தொழில்துறை முதலாளித்துவம் மற்றும் மேற்கத்திய சட்டவாதம் இரண்டையும் நிராகரித்து. காந்திய மாதிரியானது சட்ட அமலாக்கத்தை விட நெறிமுறை சுய-ஒழுங்குமுறையால் வழிநடத்தப்படும் பரவலாக்கப்பட்ட  நிர்வாகத்தை கற்பனை செய்தது. இந்தியாவை தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக ரீதியாக வலிமையாக்க காதி, விவசாயம் மற்றும் சிறு தொழில்களில் கவனம் செலுத்தியது. இருப்பினும், ஒரு பெரிய, நவீன நாட்டிற்கு இது வேலை செய்யாது என்று பலர் நினைத்தனர்.


சுவாரஸ்யமாக, இந்த வரைவில் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இது காந்திய அகிம்சையால் ஈர்க்கப்பட்ட அரசியலமைப்பில் முரண்பாடாகத் தெரிகிறது. வரைவின் பிரிவு 6, சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி ஒவ்வொரு குடிமகனும் ஆயுதங்களை வைத்திருக்கவும் எடுத்துச் செல்லவும் முடியும் என்று கூறியது. இந்த வரைவு காந்தியின் அகிம்சை யோசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தற்காப்பை அனுமதிக்கும் நடைமுறைத் தேர்வை இது காட்டுகிறது. அமைதியான நம்பிக்கைகளுக்கும் பாதுகாப்பின் தேவைக்கும் இடையிலான இந்த மோதல், ஒரு நாட்டை நடத்துவதன் யதார்த்தங்களுடன் நெறிமுறைகளை சமநிலைப்படுத்துவதன் சவாலைக் காட்டுகிறது.


1948ஆம் ஆண்டிற்குள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான சமூக உடைமை கட்சி, இந்திய குடியரசின் வரைவு அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபையால் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரைவுக்கு எதிர் முன்மொழிவாக வழங்கியது. இந்த ஆவணம் மார்க்சியம் மற்றும் ஜனநாயக சமதர்ம சிந்தனையில் உறுதியாக வேரூன்றியது, அனைத்து முக்கிய தொழில்கள், வங்கிகள் மற்றும் முக்கிய சேவைகளின் தேசியமயமாக்கலை ஆதரித்தது. இது உற்பத்தி சாசனங்களின் தனியார் உரிமையை நீக்குவதற்கு அழைப்பு விடுத்தது மற்றும் நில சீர்திருத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சாலைகள் மீதான கட்டுப்பாட்டை முன்மொழிந்தது. இந்த சமூக உடைமை வரைவு முக்கிய சமூக குழுக்களிலிருந்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒற்றை சட்டமன்றத்தை (unicameral legislature) கற்பனை செய்தது. இதனால், வர்க்க அடிப்படையிலான அமைப்புக்கு சார்பாக பாரம்பரிய தாராள்வாத பிரதிநிதித்துவ மாதிரியை நிராகரித்தது. அனைத்து நிலம் மற்றும் இயற்கை வளங்களும் தேசிய சொத்து என்றும், திட்டமிடல் சட்டமன்றத்துக்கு பொறுப்புடைய மத்திய திட்டமிடல் ஆணையத்தால் (Central Planning Commission) நடத்தப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், வரைவு பாலின சமத்துவத்திற்கான ஆரம்பகால அர்ப்பணிப்பையும் வழங்கியது மற்றும் எந்த வடிவத்திலும் சாதி பாகுபாட்டைத் தடை செய்தது. குடிமை சுதந்திரங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால், ஆவணம் பொருளாதார ஜனநாயகத்திற்கு முன்னுரிமை அளித்தது. செயல்முறை பாதுகாப்புகளை விட சமூக-பொருளாதார உரிமைகள் முன்னுரிமை பெற்றன. இது அதன் மறுபங்கீட்டு அர்ப்பணிப்புகளில் தைரியமானது என்றாலும், வரைவு அதன் நிர்வாக மற்றும் நீதித்துறை கட்டமைப்பில் குறைவான விவரங்களைக் கொண்டிருந்தது. தீவிர பொருளாதார மாற்றம் அரசியல் ஜனநாயகத்தை இயல்பாகவே ஆதரிக்கும் என்று கருதியது.


ஒப்பீட்டு பகுப்பாய்வு


ஒப்பீட்டு அடிப்படையில் பார்க்கும்போது, இந்த வரைவுகளை ஒன்றாகப் பார்க்கும்போது, அவை இந்தியாவின் எதிர்காலத்திற்கான வெவ்வேறு கருத்துக்களைக் காட்டுகின்றன. 1895ஆம் ஆண்டு மசோதா மற்றும் எம். என். ராயின் வரைவு இரண்டும் ஜனநாயகத்தை ஆதரித்தன. ஆனால், ராயின் வரைவு மிகவும் மேம்பட்டதாக இருந்தது. மக்கள் நேரடியாக பங்கேற்கவும் கிளர்ச்சி செய்ய உரிமையும் கூட இருந்தது. பழைய, மிகவும் முறையான மற்றும் உயரடுக்கை மையமாகக் கொண்ட 1895 மசோதாவைப் போலல்லாமல். மற்றொரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்துஸ்தான் சுதந்திர மாநிலச் சட்டமும் சமூக உடைமை கட்சி வரைவும் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க அல்லது பொருளாதாரத்தை நிர்வகிக்க ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை விரும்பியது. இதற்கு நேர்மாறாக, ராயின் மற்றும் காந்தியின் வரைவுகள் அதிகாரத்தை சமமாகப் பரப்புவதில் கவனம் செலுத்தின. அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுக் கட்டுப்பாட்டுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை ராய் விரும்பினார். அதே, நேரத்தில் காந்தி கிராமங்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையில் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்று விரும்பினார்.


பொருளாதார ரீதியாக, காந்தியின் எளிமையான மற்றும் விவசாய அடிப்படையிலான மாதிரியிலிருந்து, ராயின் ஜனநாயக பொருளாதார திட்டமிடல் மீதான முக்கியத்துவம் வரை, சோசலிஸ்ட் கட்சியின் முழுமையான அரசு சோசலிசம் (state socialism) வரை பல்வேறு மாதிரிகள் இருந்தன. இந்துஸ்தான் சுதந்திர அரசு வரைவு (Hindusthan Free State draft), பொருளாதார மறுவிநியோகம் குறித்து பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும், பொதுவாகக் கருதப்படுவதை விட சிக்கலான பார்வையை வழங்கியது. இது தேசிய ஒற்றுமையை முன்னுரிமையாகக் கொண்டிருந்தாலும், மத சுதந்திரம் மற்றும் சமத்துவம் (religious freedom and equality) ஆகியவற்றைச் சுற்றிய குறிப்பிட்ட தாராளவாத பாதுகாப்புகளை (liberal protections) உறுதி செய்தது. இதற்கிடையில், 1895ஆம் ஆண்டு மசோதா பொருளாதார தீவிரவாதம் இல்லாததை பிரதிபலித்தது. முதன்மையாக குடிமை உரிமைகள் (civil liberties) மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் (political representation) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. கலாச்சார மற்றும் அடையாள அரசியலும் (cultural and identity politics) குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டு வெளிப்பட்டது.  இந்துஸ்தான் சுதந்திர அரசு வரைவு ஒரே மாதிரியான, பெரும்பான்மைவாத கலாச்சார அடையாளத்தை (majoritarian cultural identity) முன்னிறுத்தியது. இது ராயின் வரைவு மற்றும் சமூக உடைமை கட்சியின் பார்வையில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை (pluralistic and secular ethos) கொள்கைகளுக்கு மாறாக இருந்தது. காந்திய மாதிரி, இந்திய பாரம்பரியங்களில் வேரூன்றியிருந்தாலும், கலாச்சார ஒருமைப்பாட்டை விட (cultural uniformity) தார்மீக மற்றும் சமூக நல்லிணக்கத்தின் (moral and communal harmony) மூலம் ஒற்றுமையை வலியுறுத்தியது.


குடிமை உரிமைகள் (civil liberties) குறித்து, 1895ஆம் ஆண்டு மசோதா (1895 Bill) மற்றும் ராயின் வரைவு மிகவும் வலுவானவையாக இருந்தன. இரண்டுமே விரிவான உரிமைகள் கட்டமைப்பை (rights frameworks) உள்ளடக்கியிருந்தன. சமூக உடைமை கட்சி வரைவு (Socialist Party draft) அரசியல் உரிமைகளை விட பொருளாதார உரிமைகளுக்கு (economic rights) முன்னுரிமை அளித்தது. ஆனால் காந்திய வரைவு முறையான உரிமைகளை விட கடமைகள் மற்றும் சமூக மதிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியது. இந்துஸ்தான் சுதந்திர அரசு வரைவு, தேசியவாத சித்தாந்தத்தை (ideologically nationalist) அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மத சுதந்திரம் (religious freedom) மற்றும் பாகுபாடு இன்மை (non-discrimination) ஆகியவற்றுக்கு வலுவான அரசியலமைப்பு உத்தரவாதங்களை (constitutional guarantees) வழங்கியது. இது தாராளவாதக் கொள்கைகள் (liberal principles) இல்லாதது என்ற கருதுகோளை எதிர்த்தது. மொத்தத்தில், இந்த அரசியலமைப்பு வரைவுகள் இந்திய அரசின் தன்மை குறித்து சுதந்திரத்துக்கு முந்தைய உயிரோட்டமான விவாதத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆளுகை, சமூகம் மற்றும் குடியுரிமை (governance, society, and citizenship) குறித்த பல்வேறு சித்தாந்த பன்முகத்தன்மையையும் வெவ்வேறு கருதுகோள்களையும் காட்டுகின்றன. இந்த வரைவுகள் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், ஒவ்வொன்றிலிருந்தும் சில கூறுகள் 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இடம்பெற்றன. ராயின் பரவலாக்கம் (decentralisation) மற்றும் உரிமைகள் குறித்த யோசனைகள், காந்தியின் பஞ்சாயத்து ராஜ் கருத்து, சோசலிஸ்ட்டுகளின் பொருளாதார நீதி (economic justice) மீதான அர்ப்பணிப்பு, மற்றும் 1895ஆம் ஆண்டு மசோதாவின் சட்டப்பூர்வ கட்டமைப்பு (legalistic structure) ஆகியவை அனைத்தும் தங்கள் தடயங்களை விட்டுச் சென்றன. இருப்பினும், அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு, குடியரசு பிறப்பதற்கு முன்பே ஜனநாயக கற்பனையை வெளிப்படுத்தியதில் இருக்கலாம். இது இந்தியாவின் வளமான அரசியலமைப்பு மரபுக்கும் அது ஒரு காலத்தில் சிந்தித்த ஏராளமான எதிர்காலங்களுக்கும் ஒரு சான்றாகும்.



Original article:

Share: