ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏன் ஒரே நேரத்தில் முக்கியமானது மற்றும் முக்கியமற்றதாக இருக்கிறது? -ரோஷன் கிஷோர்

 நிதி விளைவுகள் தெளிவாக இல்லை என்றாலும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான "சீர்திருத்தங்களில்” ஒன்றாகும்.


கடந்த வாரம், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துடன் (New Pension Scheme (NPS))  இணைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தத் தொகை கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதியாகும். இந்த உத்தரவாதமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme (OPS)) கீழ் அரசு ஊழியர்கள் பெற்றதைப் போன்றது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியில் தொடர்ந்து செலுத்துவார்கள். ஊழியர்களின் பங்களிப்பை விட ஏற்கனவே அதிகமாக இருந்த அரசின் பங்களிப்பு 14%-லிருந்து 18% ஆக உயரும். இது பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் (OPS) ஒப்பிடும்போது அரசாங்கத்திற்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான  விலையை அரசாங்கத்திற்குக் குறைக்கிறது.


நிதி தாக்கத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாவிட்டாலும், குறுகிய காலத்தில் அது பெரிதாக இருக்காது என்றாலும், இந்திய வரலாற்றில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) ஒரு பெரிய மாற்றமாகும். ஏனென்றால், இதற்கு முன் இல்லாத குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உத்தரவாதம் மீண்டும் கொண்டு வருகிறது. இந்த மாற்றம் என்பது ஓய்வூதியத்திற்கான அதிகப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மேலும், குடிமக்கள், அரசாங்கம் மற்றும் சந்தை ஆகியவற்றுக்கு இடையே அபாயங்கள் மற்றும் வெகுமதிகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதை இது மாற்றுகிறது. இது புதுத் தாராளமயக் (neoliberalism) கொள்கை கருத்துக்களில் பெரிய மாற்றமாகும். 


இந்த பெரிய மாற்றம் ஏன் இந்தியாவில் அதிக அரசியல் அல்லது செய்தி கவனத்தைத் தூண்டவில்லை? மற்ற விவகாரங்களுடன் ஒப்பிடுகையில், அரசும் பாஜகவும் இதை பெரிதாக எடுத்துரைக்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த ஒரே பொருளாதார முடிவு சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.


முதல் காரணம், பொது விவாதங்கள் பெரும்பாலும் மூலதனத்திற்கு பயனளிக்கும் கொள்கைகளை உயர்த்தி, குறைத்து மதிப்பிடுவது அல்லது செய்யாதவற்றை விமர்சிப்பது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏன் சீர்திருத்தமாகப் பாராட்டப்படவில்லை என்பதை இது விளக்குகிறது. நிதி விளைவுகள் இருந்தபோதிலும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் முதலீட்டாளர்களாலும் மூலதனச் சந்தைகளாலும் வரவேற்கப்பட வாய்ப்பில்லை.


இருப்பினும், அவர்களின் எதிர்ப்பு குறையக்கூடும். ஏனெனில், இந்த திட்டம் முதலீட்டிற்கான ஒரு பெரிய நிதியை உருவாக்கும். ஜூலை 31 நிலவரப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (New Pension Scheme (NPS)) ₹12.8 லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளது. இது இந்தியாவில் உள்ள எந்த தனியார் பரஸ்பர நிதியை (private mutual fund) விட அதிகமாகும்.


அனைத்து மாநிலங்களும் இணைந்தாலும், சுமார் 10 மில்லியன் மக்களை மட்டுமே பாதிக்கும் என்பதால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 550 மில்லியன் தொழிலார் நலன் அமைப்பு இருப்பதால், இந்த எண்ணிக்கை மிகவும் சிறியது. எனவே, தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியாத அளவுக்கு அரசு ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.


உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு சோவியத் யூனியன் இருந்ததைப் போன்றது அரசாங்க வேலைகளில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் ஒரு முக்கியமான பாதுகாப்பாகும் . பல கம்யூனிஸ்டுகள் தங்கள் சொந்த நாடுகளில் ஒருபோதும் புரட்சி ஏற்படாது என்று தெரியும். இருப்பினும், கம்யூனிசம் என்ற எண்ணம் முற்றிலும் சாத்தியமற்றது அல்ல என்பது உறுதியானது. இதேபோல், ஓய்வூதிய கொடுப்பனவுகளை உறுதியளிக்கும் ஒரு அரசாங்கம் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காணலாம். உண்மைகள் மற்றும் கருத்து ஆகியவற்றின் கலவையானது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை உலக அளவில் சிறப்பானதாக தோற்றுவிக்கிறது.


இந்தியாவில் அரசாங்க வேலைகள் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற வசதிகளுக்கு வெளியே ஒரு பெரிய உலகம் உள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம். பெரும்பாலான மக்கள் அரசு வழங்கும் மிகக்குறைந்த நலத்திட்டங்களை மட்டுமே பெற்று வாழ்கின்றனர். அவர்கள் அரசு ஊழியர்களின் சலுகை பெற அரசு வேலையில் சேர விரும்புகிறார்கள். ஒரு சில அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு கோடிக் கணக்கான விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கின்றனர்.


தற்போதைய அரசாங்க ஊழியர்களைவிட மிகப் பெரிய வேலை தேடுபவர்களின் இந்த பெரிய குழு, தொழிலாளர் சந்தை நிலைமைகள் அல்லது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்தை அல்லது வணிகங்களை பாதிக்குமா?


அரசாங்க ஊழியர் சங்கங்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன மற்றும் பரந்த ஆதரவை உருவாக்க முயற்சிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தின் முடிவில் நடந்த வேலைநிறுத்தங்கள் அல்லது அவசரநிலைக்கு முந்தைய ரயில்வே வேலைநிறுத்தம் போன்ற சில வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் நடவடிக்கைகளை இந்தியா கண்டுள்ளது. இருப்பினும், இவை கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்களாக காணப்படுகின்றன. முறையான துறை தொழிற்சங்கங்களின் இந்த குறுகிய கவனம் ஒட்டுமொத்த இடதுசாரி அரசியலில் ஏற்பட்ட சரிவால் ஏற்பட்டதா அல்லது சரிவை ஏற்படுத்தியதா என்பது தெளிவாக இல்லை. 


புதிய அரசியல் குழுக்கள் நலன்புரி உரிமைகளுக்கும் அரசாங்க வேலைகளுக்கும் இடையிலான இடைவெளியை மேம்படுத்துவதில் எது தடுக்கிறது? அவர்கள் மூன்று முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்: மக்கள் பெரும்பாலும் வர்க்க ஒற்றுமையை விட சாதி விசுவாசத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பொது எதிரிக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்றிணைப்பது கடினம். ஏனெனில், பலர் உரிமையாளர்களும் ஊழியர்களும் சுரண்டப்படும் சிறிய நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறுவதற்கு பெரும் பணம் தேவைப்படுகிறது மற்ற பெரிய பொருளாதாரங்களைப் போல் இல்லாமல், ஊதியம் மற்றும் விலை உயர்வுகளால் இந்தியாவின் பணவீக்கம் நிலையில்லாததிற்கு, உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான அடிப்படை ஏற்றத்தாழ்வே (fundamental imbalance) காரணமாகும்.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) போன்ற கொள்கைகள், அவற்றின் தத்துவ மற்றும் பொருளாதார இலக்குகள் இருந்தபோதிலும், எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.  பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்குவதற்கு முன்பே இது இந்தியாவின் வளர்ச்சி மாதிரியின் விமர்சனமாக இருந்ததால் இது முரண்பாடாக உள்ளது. அப்போது, ​​சலுகை பெற்ற அரசு ஊழியர்களின் ஒரு சிறிய குழுவும், ஏராளமான மக்களும் இந்தக் குழுவில் சேர நம்பிக்கையுடன் இருந்தனர்.


சீர்திருத்தங்கள் மிகவும் சலுகை பெற்ற ஒரு சிறிய குழுவை உருவாக்கி, கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய  மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை இந்த மாற்றங்கள் மேம்படுத்தவில்லை. அரசாங்கம் உத்தரவாதமளிக்கப்பட்ட ஓய்வூதியங்களை மீண்டும் கொண்டுவருவது தொழிற்சங்கங்களை சீர்குலைக்கும் மாற்றங்களின் வெற்றியைக் காட்டிலும் நல்ல ஊதியம் தரும் வேலைகளை வழங்குவதில் சந்தைகளின் தோல்வியையே காட்டுகிறது.


ரோஷன் கிஷோர், அரசியல் பொருளாதார ஆசிரியராக உள்ளார்.



Original article:

Share:

புதிய குற்றவியல் சட்டங்களில், ஒரு தவறவிட்ட வாய்ப்பு -அமித் தேசாய்

 இந்திய அரசாங்கத்தின் தேசிய சைபர் கிரைம் முகமை (National Cyber Crime Reporting Portal), இணைய மிரட்டல்கள், பின்தொடர்தல் மற்றும் மின்னஞ்சல் ஹேக்கிங் போன்ற புதிய குற்றங்களை அங்கீகரிக்கிறது. இருப்பினும், பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.


தொடக்கத்தில், மில்லினியத்தின்(millennium,) ஜென் இசட் (Gen Z), போன்றவை குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றத்தைக் குறித்தது. பொருளாதார வளர்ச்சி, இணையப் புரட்சி மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கியது. இந்த மாற்றம் இந்தியாவின் பொருளாதார முறையை மாற்றியது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொலைத்தொடர்பு புரட்சிக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.


இந்த எல்லையற்ற உலகத்துடன் இணைக்க, சட்ட முன்னேற்றங்கள் தேவைப்பட்டன. ஆதார் சட்டம்,  ஜிஎஸ்டி, நிறுவனங்கள் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், திவால் மற்றும் திவால் குறியீடு, தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டம் ஆகியவை இந்த பரிணாமத்தை பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து தேசிய பெருமைக்கு ஆதாரமாக மாறியது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவை மின்-தாக்கல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உந்துதல் சட்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது சட்ட அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தை குறிக்கிறது.


எல்லா முறைகளும் மாற வேண்டுமா?


இந்தக் கேள்வி இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பைப் பாதிக்கும் சட்டங்களுக்குப் பொருந்தும். பழைய சட்டங்கள், சமீபத்தில் மாற்றப்பட்டு, 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டன. இந்த சட்டங்கள் அறிவுசார் சீர்திருத்த காலத்தில் இயற்றப்பட்டது, பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் உள்ள முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒரே சீரான தன்மையை நோக்கமாகக் கொண்டது. லார்ட் மெக்காலே தலைமையிலான இந்தியாவின் முதலாவது சட்ட ஆணையம், பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒரே மாதிரியான சட்டம் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. இந்திய தண்டனைச் சட்டம்IPC (Indian Penal Code( IPC)) ஒழுக்கத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொலை போன்ற மனித நடத்தைகளைக் குறிக்கிறது. சட்ட விதிகளைப் பொருட்படுத்தாமல் இந்தக் குற்றங்கள் தொடரும்.


பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS))  ஆனது இந்திய தண்டனைச் சட்டம் IPC (Indian Penal Code( IPC)) இன் பெரும் பகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டது மற்றும் 19 புதிய குற்றங்களை மட்டுமே சேர்க்கிறது. அவை மற்ற சட்டங்களிலிருந்து பெறப்பட்டவை. பாரதிய நியாய சன்ஹிதா சம்ஹிதா (Bharatiya Nyaya Sanhita Samhita (BNSS)) ஒன்பது புதிய பிரிவுகளையும், பாரதிய சன்ஹிதா சட்டம் (Bharatiya Sanhita Act) (BSA)) இரண்டையும் மட்டுமே சேர்க்கிறது. செய்யப்பட்ட திருத்தங்கள் வளர்ந்து வரும் சமூக நடத்தைகளை நிவர்த்தி செய்யவில்லை.


21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம், இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு  ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. புவிசார் அரசியல் எல்லைகள் பெருமளவில் கரைந்துவிட்டன. இது "சைபர்," "விர்ச்சுவல்," "டிஜிட்டல்," "மின்னணு" மற்றும் "தரவு" கோளங்களில் புதிய குற்றவியல் நடத்தைகளுக்கு வழிவகுத்தது. மக்களின் தனிப்பட்ட தகவல் இப்போது ஆன்லைனில் உள்ளது மற்றும் பாதிக்கப்படக்கூடியது.


நெட்ஃபிக்ஸ் தொடரான ​​*ஜம்தாரா* ஜார்கண்டில் சைபர் கிரைம் குற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் வலைத்தளம், இணைய மிரட்டல் (cyberbullying), பின்தொடர்தல் (stalking), ஈமெயில் ஃபிஷிங் (email phishing) மற்றும் ஆன்லைன் மோசடி போன்ற குற்றங்களை அங்கீகரிக்கிறது. இருப்பினும், பாரதிய நியாய சன்ஹிதா சம்ஹிதா இந்த இணைய அம்சங்களைக் குறிப்பிடவில்லை. "தரவு" மற்றும் "விர்ச்சுவல்" போன்ற சொற்கள் இல்லை, "டிஜிட்டல்" பிரிவு 2(8) இல் ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சூழலில் "சைபர்" மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


தரவு திருட்டு பாரதிய நியாய சன்ஹிதா சம்ஹிதா  சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக இன்னும் வகைப்படுத்தப்படவில்லை, ஏனெனில் BNS இல் உள்ள "சொத்து" என்பதன் வரையறைக்கு "தரவு" பொருந்தாது.


மாற்றம் அவசியம், ஆனால் எல்லாம் மாற வேண்டியதில்லை. இயற்பியல் உலகில் உருவான குற்றவியல் சட்டம், முழுமையாக மீண்டும் இயற்றப்படக் கூடாது. இது காலப்போக்கில் சமூக தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டது.


21-ஆம் நூற்றாண்டுக்கு என்ன தேவை:


21 ஆம் நூற்றாண்டுக்கு பாரதிய அபாஷி (மெய்நிகர்) அல்லது டிஜிட்டல் தண்ட் சன்ஹிதா தேவைப்பட்டது. பங்களாதேஷ் மத்திய வங்கி $100 மில்லியன் மோசடி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி குரல்கள் மற்றும் ஆழமான தொழில்நுட்ப குற்றங்கள் ஆகியவை எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். நவீன குற்றங்களுக்கான காலாவதியான குற்றவியல் நடை முறை சட்டப் பிரிவுகளுடன் புகார்தாரர்கள் போராடுகிறார்கள். மேலும், குற்றவியல் நடை முறை சட்டத்தின் பிரிவு 378-ன் கீழ் தரவு திருட்டை வரையறுக்க நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றன.


குழப்பம் மற்றும் தவறான பயன்பாட்டை தவிர்க்க சட்டங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) திட்டத்தில் பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம்  ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளன, ஆனால் அந்தச் சட்டங்கள் வழங்கும் பாதுகாப்புகள் இல்லாமல் உள்ளன. இந்த பிரிவுகளை பயன்படுத்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இது தவறாக பயன்படுத்தபடுவதற்கு வழிவகுக்கும்.


பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) பல்வேறு குற்றங்களை பாலின-நடுநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் "பாலியல் வன்முறை" என்பது பாலினம் சார்ந்ததாகவே உள்ளது. மேலும், தவறான நடவடிக்கைகள் என்பது இனி குற்றமாகாது. தற்கொலை முயற்சிக்கான புதிய குற்றம் அரசியல் கருத்து வேறுபாடு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் போன்ற அடிப்படை உரிமைகளை பாதிக்கலாம்.


தொழில்நுட்பம் சட்டங்களை விட வேகமாக முன்னேறுகிறது. மாறிவரும் குற்றச் செயல்களுக்கு ஏற்ப புதிய சட்டங்கள் தேவை. நீதியரசர் பகவதி (Justice Bhagwati) இதை ஒரு மரத்துடன் ஒப்பிட்டார்: மரத்துடன் பாதுகாப்பு பட்டை வளரவில்லை என்றால், அது மரத்திற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது உதிர்ந்து விடும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் அமைய வேண்டும்.



Original article:

Share:

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PM Jan Dhan Yojana) நிதிச் சேர்க்கையை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்துள்ளது. -சௌமியா காந்தி கோஷ்

 பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு முறையான நிதி அமைப்பில் சேர்ந்துள்ளனர். எதிர்கால அரசாங்க திட்டங்கள் இந்த கணக்குகளை மற்ற திட்டங்களுடன் இணைத்து ஒட்டுமொத்த பொருளாதார  வளர்ச்சிக்கு (economic empowerment) உதவும்.


அனைவருக்கும் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் சமத்துவமின்மைகளைக் குறைக்கவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் நிதிச் சேர்க்கை (Financial inclusion) உதவுகிறது. ஆகஸ்ட்-28, 2014 அன்று, வங்கி கணக்கு இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும்  வங்கிச் சேவை வழங்க பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா  (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் (JAM trinity) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 7.5 கோடி வங்கி கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு இரண்டு கட்டங்களில் வங்கிச் சேவை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டது.


இன்று, 80% பெரியவர்கள் முறையான வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இது 2011-ல் 50% ஆக இருந்தது. உலகளவில் நிதி சேர்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி, கணக்கு உரிமையில் (account ownership) வெகுவாகக் குறைந்துள்ளது. குடும்பங்களை மையமாகக் கொண்ட முந்தைய அணுகுமுறையை போல் இல்லாமல்,  தனிநபர்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட, அடிப்படை சேமிப்புக் கணக்குகளால் இந்த முன்னேற்றம் ஏற்படுகிறது.


வங்கிகள், 53 கோடி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளைத் தொடங்கி, ரூ.2.31 லட்சம் கோடியை நிலுவை தொகை வைத்துள்ளன. இது மார்ச் 2015-ல் ரூ.15,670 கோடியுடன் இருந்த 14.7 கோடி கணக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகும் பொதுத்துறை வங்கிகள் இந்தக் கணக்குகளில் 78%-ஐ கையாளுகின்றன. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளின் சராசரி இருப்பு மார்ச் 2015-ல் ரூ 1,065-ல் இருந்து ஆகஸ்ட் 2024-ல் ரூ4,352 ஆக அதிகரித்துள்ளது. இந்த கணக்குகளில் 81.2% தற்போது செயல்பாட்டில் உள்ளது. 55.6% பெண்கள் மற்றும் 66.6% கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் (semi-urban areas) உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 9.4 கோடியுடன் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகள் உள்ளன. அதைத் தொடர்ந்து 6 கோடி  வங்கி  கணக்குகள் பீகாரில் உள்ளது.


ஜன்தன் கணக்குகள் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. காப்பீட்டுத் தொகை, தனி நபர் கடன் வசதிகள் (overdraft facility) மற்றும் மேம்படுத்தப்பட்ட சேமிப்புப் பழக்கம் ஆகியவை இதில் அடங்கும். அவை சமூகத்தில் நல்ல விளைவுகளை  ஏற்படுத்துகிறது.  உ.பி., மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா  (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) கணக்குகளின் பயன்பாடு காலப்போக்கில் திருட்டுகள் குறைவதற்கு வழிவகுத்தது. மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா தொடக்கத்தில் இருந்தே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தைக் கண்டுள்ளன. குஜராத் மற்றும் கர்நாடகாமாநிலங்கள் நல்ல பலனை பெற்றுள்ளன. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில், மது மற்றும் புகையிலைக்கு மக்கள் குறைவாகச் செலவிடுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளில், நேரடி பயன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) மூலம் ரூ.38.49 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு, ரூ.3.48 லட்சம் கோடி தேவையற்ற செலவுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மயமாக்கல், மின் வணிகம் (e-commerce) மற்றும் கட்டண முறைகளையும் ஆதரித்துள்ளது. ஜூலை 2024-க்குள், இந்தியா 55.7 பில்லியன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (Unified Payments Interface (UPI)) பரிவர்த்தனைகளைக் கண்டுள்ளது. எதிர்காலத்தில், நிதி சேர்க்கையை மேம்படுத்த நான்கு முக்கிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் பிரச்சினையின் விநியோகப் பக்கம் (supply-side) மற்றும் தேவைப் பக்கம் (demand-side) ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்கின்றன.


முதலில், நிதிச் சேர்க்கையை ஊக்குவிக்கும் அமைப்பையும் ஆதரவையும் மேம்படுத்த வேண்டும். கூட்டாண்மை மூலம் நிதி உள்ளடக்கத்தில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். ஆதரவு மற்றும் நிதிக் கல்வியை வழங்குவதன் மூலம் தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்கள் வளர உதவ வேண்டும். கூடுதலாக, அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்.


இரண்டாவதாக, மைக்ரோ-இன்சூரன்ஸ் (micro-insurance) மற்றும் கிரெடிட் போன்ற நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாம் மிகவும் பரவலாகவும் குறைந்த விலையிலும் வழங்க வேண்டும். இருப்பினும், புதிய பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா  (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகக் கடனில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க, அவர்கள் மீது அதிகவட்டி விதிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface) செலவுகளைக் குறைப்பதன் மூலமும், பணப் பட்டுவாடாவை விரைவுபடுத்துவதன் மூலமும், வளர்ச்சிக்கு அனுமதிப்பதன் மூலமும் கடன் செயல்முறையை மிகவும் திறமையானதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விரைவான விநியோகம் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


மூன்றாவதாக, நுகர்வோர் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய மற்றும் சிக்கலான டிஜிட்டல் தயாரிப்புகளில் நுகர்வோரின் நம்பிக்கையைப் பராமரிக்க இது அவசியம். விதிமுறைகளையும் மற்றும் கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பாதுகாப்புக்கும் புதுமைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.


நான்காவது, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா  (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தில் உள்ள பலர் நிதி அமைப்புக்கு புதியவர்கள். அவர்கள் பெரும்பாலும் ஒழுங்கற்ற அல்லது பருவகால வருமானங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களால் சிறிய அளவில் மட்டுமே சேமிக்க முடியும். அவர்களின் தேவைகள் வழக்கமான நுகர்வோரிடமிருந்து மிகவும் வேறுபட்டவை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதி தயாரிப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும். 


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா  (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY))  திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிடத்தக்க முயற்சிக்குப் பிறகு முறையான நிதி அமைப்பில் சேர்ந்துள்ளனர். எதிர்கால அரசாங்க திட்டங்கள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளை மற்ற அரசாங்க திட்டங்களுடன் இணைக்க வேண்டும். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான தற்போதைய பொருளாதார ஆதரவுக்கான முழுமையானஅணுகுமுறையை உறுதி செய்யும்.



Original article:

Share:

கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்: காரணம் என்ன? -அபூர்வா விஸ்வநாத்

 ஏப்ரலில் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, ​​பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) ஜாமீன் விதிகளில் பெண்களுக்கு முக்கிய விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் முடிவை  உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.


ஆகஸ்ட் 27, 2024 அன்று, டெல்லி கலால் கொள்கை தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) வழக்குகளில் பாரத ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi (BRS)) தலைவர் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளது. ஏப்ரல் 1, 2024ல் நீதிமன்றம் கவிதாவுக்கு ஜாமீன் தர  மறுத்துவிட்டது. நீதிபதி ஸ்வரணா காந்தா ஷர்மா, கவிதா "நன்கு படித்த" பெண் என்பதால், "பாதிக்கப்படக்கூடியவர்" என்று கருத முடியாது என்று தீர்ப்பளித்தார். எனவே, பெண்களுக்கான விதிவிலக்கு அவருக்கு  பொருந்தாது. நீதிபதி காவேரி பவேஜாவும் இதே தீர்ப்பை வழங்கியுள்ளார்.


டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டமாக மாறினால், படித்த எந்தப் பெண்ணும் ஜாமீன் பெற முடியாது என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.


சட்டம் என்ன சொல்கிறது?


 ​​பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) பிரிவு 45 பணமோசடி குற்றச்சாட்டில் ஜாமீன் வழங்கிறது. இது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ல் உள்ள ஜாமீன் வழங்கும் முறையை போன்றது. ஜாமீன் கோரும் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக முதன்மையான வழக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது சட்டம்.


பிரிவு 45(1) கூறுகிறது: “இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் ஜாமீனில் அல்லது அவரது சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட மாட்டார்

 

 (i) அத்தகைய விடுதலைக்கான விண்ணப்பத்தை எதிர்ப்பதற்கு அரசு வழக்கறிஞருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


 (ii) அரசு வழக்குரைஞர் விண்ணப்பத்தை எதிர்த்தால், அவர் அத்தகைய குற்றத்தில் குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் இருக்கும் போது அவர் எந்தக் குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி அளிக்கிறது.


இந்த தரநிலைக்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது: "பதினாறு வயதிற்குட்பட்ட அல்லது ஒரு பெண் அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது பலவீனமான ஒரு நபர், சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தினால், ஜாமீனில் விடுவிக்கப்படலாம்." இந்த விதிவிலக்கு பெண்கள் மற்றும் சிறார்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ளதைப் போன்றது.


2023-ஆம் ஆண்டில், தில்லி உயர் நீதிமன்றம் பெண்களுக்கு விதிவிலக்கு அளித்து, யூனிடெக் குழுமத்தின் இயக்குநர் சஞ்சய் சந்திராவின் மனைவி 49 வயதான ப்ரீத்தி சந்திராவுக்கு ஜாமீன் வழங்கியது.


அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)), கவிதாவின் வழக்கைப் போலவே, குற்றம் சாட்டப்பட்டவர் "இல்லத்தரசி" அல்ல என்று ஒரு வாதத்தை முன்வைத்தது. இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) அல்லது  நமது அரசியலமைப்பு, ஒரு இல்லத்தரசி, ஒரு தொழிலதிபர் அல்லது ஒரு அரசியல் பிரமுகர் என்ற வேறுபாட்டைக் காட்டவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது.


இவ்வாறு, பரந்த வகைப்பாட்டிற்குள் படித்த பெண்கள், வேலையில் உள்ள பெண்கள், உயர் சமூகப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் என்ற தற்காலிக மாயையான துணை வகைப்பாட்டை உருவாக்குவதன் மூலம், பிரிவு 45(1) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிமுறைக்குள் எந்த வகையான பெண் வரத் தகுதியுடையவள் என்பதை வாதிடுவதற்கு பதிலாக, "பெண்" என, எதிர்மனுதாரரால் வாதம் செய்யப்படுவது தவறான அனுகுமுறையாகக் கருதப்படுகிறது," என்று நீதிமன்றம் கூறியது.


எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனுக்குத் தகுதிபெறுவதற்கு "வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் ஆபத்து" அல்லது "சாட்சிகளை சேதப்படுத்தியவர்கள்" ஆக இருக்க முடியாது என்று நீதிமன்றம் ஒரு தகுதியைச் சேர்த்தது.


கவிதா வழக்கு


கவிதாவின் வழக்கறிஞர்கள் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவரது கட்சிக்காரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உரிமை உண்டு என்று வாதிட்டனர்.


கவிதா "நன்கு படித்தவர்" மற்றும் "சமூகத்தில் நல்ல பதவியில் உள்ளார்" என்று நீதிபதி பவேஜா குறிப்பிட்டார், எனவே பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிவிலக்கின் கீழ் அவரை "பாதிக்கப்படக்கூடிய" பெண்ணாக கருத முடியாது.


பொதுவாக 45வது பிரிவு ஜாமீன் வழங்க அனுமதித்தாலும், பெண்களுக்கு ஜாமீன் மறுக்கப்படும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சி செய்தல், ஆதாரங்களை சேதப்படுத்துதல் அல்லது சாட்சிகளை சேதப்படுத்துதல் போன்ற மூன்று நிபந்தனைகளை பட்டியலிடும் பிரீத்தி சந்திரா வழக்கின் வழிகாட்டுதல்களை நீதிபதி குறிப்பிட்டார். 


கவிதா "விசாரணைக்கு முன் தனது தொலைபேசி ஆதாரங்களை அழித்துவிட்டார்" மற்றும் "சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்" என்று ஆதாரங்கள் காட்டுகின்றன என்று பவேஜா குறிப்பிட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் தொடர்ந்து இச்செயலில் ஈடுபடுவார் என  நீதிபதி குறிப்பிட்டார்.



Original article:

Share:

பல்லுயிரியல் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

 பல்லுயிரியல் (biodiversity) எவ்வாறு நம்மைத் பாதுகாக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது நமது சொந்த நலனுக்காக முக்கியமானது. பல்லுயிர் ஒரு சமூகம் அல்லது சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள உயிரினங்களுக்கு இடையே உள்ள மாறுபாட்டை அளவிட முயற்சிக்கிறது. ஆனால் பல்லுயிர் எவ்வாறு அளவிடப்படுகிறது? பல்லுயிர் பெருக்கத்தை அளவிட ஒரே ஒரு சிறந்த வழி உள்ளதா?


நாம் முடிவில்லாத உலகில் பல்வேறு அமைப்பில் வாழ்கிறோம். இந்த வகை, அனைத்து  மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலும் உள்ளது.  இந்த வகையை விவரிக்க பல்லுயிர் (biodiversity) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். பல்லுயிர் என்றால் என்ன?, அது ஏன் முக்கியமானது?, அது எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை ஆராய்வோம். இதன் மூலம் நமது உலகின் இயற்கை அழகையும் அதிசயத்தையும் அறிந்து கொள்வோம்.


பல்லுயிர் (biodiversity) என்றால் என்ன?


பல்லுயிர் (biodiversity) எவ்வாறு நம்மைத் பாதுகாக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது நமது நல்வாழ்வுக்கு முக்கியமானது. பூமியில் உள்ள அனைத்து பன்முகத்தன்மையும் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் உருவாகியுள்ளது. நாம் அவர்களுடன் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளோம்.  தாவரங்கள் மற்றும் விலங்குகள் நமக்கு தேவையான உணவு மற்றும் மருந்தை வழங்குகின்றன. நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் பூஞ்சை கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றன. பல்வேறு வகையான வாழ்க்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. உறுதியான நன்மைகளைத் தவிர, அழகு, உத்வேகம், தளர்வு மற்றும் கலாச்சாரம் போன்ற அருவமான நன்மைகளையும் இயற்கை வழங்குகிறது.


உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (The United Nations Convention on Biological Diversity) பல்லுயிரியலை பின்வருமாறு வரையறுக்கிறது, அனைத்து மூலங்களிலிருந்தும் வாழும் உயிரினங்களுக்கிடையேயான மாறுபாடு, மற்றவை, நிலப்பரப்பு, கடல் மற்றும் பிற நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவை பகுதியாக இருக்கும் சுற்றுச்சூழல் வளாகங்கள்: இதில் இனங்கள், இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையே உள்ள பன்முகத்தன்மை அடங்கும்.."


பல்லுயிர் அளவை அளவிடுதல்


பல்லுயிர் ஒரு சமூகம் அல்லது சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள உயிரினங்களுக்கிடையே உள்ள மாறுபாட்டை அளவிடுகிறது. இது பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு வழிகளில் அளவிடப்படுகிறது. எந்த ஒரு முறையும் சிறந்தது அல்ல; தேர்வு நிலையை மட்டுமே பொறுத்தது.


எடுத்துக்காட்டாக, நீங்கள் மக்களை அவர்களின் வம்சாவளியின்படி குழுவாக்கலாம். அவர்களை பரம்பரை பரம்பரையாகக் கண்டறியலாம்.  இன்று,  இது பைலோஜெனி (phylogeny) எனப்படும். இது  டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படுகிறது. பைலோஜெனடிக் பன்முகத்தன்மை (அல்லது மரபணு வேறுபாடு) உயிரினங்களுக்கிடையேயான பரிணாம தொடர்பை வைத்து  இந்த வகை பன்முகத்தன்மையை அளவிடுகிறது. ஆனால், இந்த உள்ளுணர்வு முறை அளவிட சிக்கலானது.


மற்றொரு அணுகுமுறை ஆக்கிரமிப்பின் மூலம் மக்களைக் குழுவாக்குவதாகும். இது சமூகத்தில் அவர்கள் எவ்வாறு வெவ்வேறு பாத்திரங்களைச் செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. உயிரியலில், செயல்பாட்டு பன்முகத்தன்மை (அல்லது சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை) வெவ்வேறு உயிரினங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலுக்குள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை அளவிடுகிறது. உதாரணமாக, இரண்டு பூச்சி சமூகங்களை ஒப்பிடுக:


A சமூகத்தில் சாண வண்டுகள், மஞ்சள் சாண ஈக்கள் மற்றும் மில்லிபீட்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான செயல்பாடுகளைச் செய்கின்றன. B சமூகத்தில் சாண வண்டுகள், தரையில் கூடு கட்டும் தேனீ, கிரிக்கெட்டுகள் மற்றும் எறும்புகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன.


A சமூகம்  B சமூகத்தை விட சமூகம் மிகவும் செயல்பாட்டு ரீதியாக வேறுபட்டது. இரண்டிலும் தலா நான்கு இனங்கள் இருந்தாலும் கூட. அவற்றின் இன பன்முகத்தன்மை மிகவும் பொதுவான அளவீடு ஆகும்.  இது ஒரு பகுதியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுகிறது. எடுத்துக்காட்டாக, 10 இனங்களில் ஒவ்வொன்றிலும் 10 தாவரங்கள் உட்பட 100 தாவரங்களைக் கொண்ட ஒரு சமூகம், 10 இனங்களின் செழுமையைக் கொண்டுள்ளது. 100 தாவரங்களைக் கொண்ட மற்றொரு சமூகம், ஒரு இனத்தில் 91 மற்றும் மற்ற 9 இனங்களில் ஒவ்வொன்றும் 10 இனங்கள் உள்ளது. இருப்பினும், இரண்டாவது சமூகம் குறைவான வேறுபட்டது.  பன்முகத்தன்மையை சிறப்பாக அளவிட சூழலியலாளர்கள் செழுமையையும் மிகுதியையும் இணைக்கும் அளவீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.


 பல்லுயிர் பெருக்கத்தின் பிரபலமான நடவடிக்கைகள்


சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த மக்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது சில இனங்கள் மீது கவனம் செலுத்துகின்றனர். 


முதன்மை இனங்கள் (flagship species) : புலிகள் அல்லது பாண்டாக்கள் போன்ற கவர்ச்சியான இனங்கள் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகின்றன. அவை பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை அடையாளப்படுத்துகின்றன. ஆனால், அவை மட்டுமே முக்கியமான இனங்கள் அல்ல.


கீஸ்டோன் இனங்கள் (Keystone species) :  இந்த இனங்கள் அவற்றின் மிகுதியுடன் ஒப்பிடும்போது அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, தாவர இனப்பெருக்கத்திற்கு தேனீக்கள் முக்கியமானவை.


சுற்றுச்சூழல் பொறியாளர்கள் (Ecosystem engineers) : சவன்னாவில் (savannahs) உள்ள கரையான்கள் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கும், அவற்றின் சூழலை கணிசமாக மாற்றும் இனங்கள்.


குறிப்பான் இனங்கள் (Indicator species) :  இந்த இனங்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் குறிக்கின்றன. உதாரணமாக, மரங்களில் உள்ள லைகன்கள் சுத்தமான காற்றைக் குறிக்கின்றன.


ஆக்கிரமிப்பு இனங்கள் (Invasive species) :  இவை ஒரு பகுதியில் "முதலில்" இல்லாத இனங்கள். ஆனால், அவை வேகமாக பரவி உள்ளூர் இனங்களை இடம்பெயர்க்கின்றன. லாந்தனா கமாரா, ஆங்கிலேயர்களால் தோட்டத் தாவரமாக கொண்டு வரப்பட்ட ஒரு அலங்கார புதர், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து, காடுகளின் அடிப்பகுதியை முழுவதுமாக கைப்பற்றுகிறது.


ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பல்வேறு வரம்புகள் உள்ளன. ஒரு கீஸ்டோன் இனங்களின் (keystone species) இருப்பு எப்போதும் ஒரு சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்காது. மேலும்,  ஆக்கிரமிப்பு இனங்கள் (invasive species) இருப்பது தானாகவே மோசமானவை என்று அர்த்தமல்ல. பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது சிக்கலானது. அதன் மீது செய்ற்படுத்தப்படும் நடவடிக்கைகளை நாம் அங்கீகரிப்பது முக்கியம்.



Original article:

Share:

சீன ராணுவத்தில் தொடரும் குழப்பம் -அனுஷ்கா சக்சேனா

 இராணுவத் தலைமையின் மாற்றங்கள் சீர்திருத்தத் திட்டத்தில் உள்ள பலவீனங்களை காட்டியுள்ளன.


ஆகஸ்ட் 1, 2024-ஆம்  ஆண்டு, சீன மக்கள் விடுதலை இராணுவம்  (People’s Liberation Army (PLA)) நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு விழாவை பிரமாண்ட நிகழ்வுகளுடன் கொண்டாடியது.  இந்த வாரத்தில் இராணுவத் தலைமைத்துவத்தில் அமைதியான பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, ஜெனரல் வு யானன் மற்றும் ஜெனரல் ஹுவாங் மிங் ஆகியோர் முறையே தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு தளபதிகளாக கடந்த மாதத்தில் பொறுப்பேற்றனர். இந்த நியமனங்கள் ஆகஸ்ட் 1 விழாக்களின் போது நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டது. அவற்றின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய கேள்விகளை சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) 

எழுப்புகிறது.


தெற்கு பகுதியில் பரபரப்பு


தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸுடன் சீனா மோதலில் ஈடுபட்டு, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து விமர்சனங்களை பெற்றுள்ளது.  இது பிராந்திய பாதுகாப்பை மோசமாக்கியுள்ளது. ஜனாதிபதி ஜி ஜின்பிங், "ஒரு நூற்றாண்டில் காணாத ஆழமான மாற்றங்களை" குறிப்பிட்டுள்ளார். இது பல்வேறு பிராந்திய மோதல்களுக்குத் தயாராக இருக்கும் ஒரு உயர்மட்ட இராணுவப் படையாக சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) மாற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


இதற்கு உறுதுணையாக சீனா வலுவான தகவல் போர் படையை அமைத்துள்ளது. தெற்கு  பகுதியில்  இருந்து ஜெனரல் வாங் சியுபினை அமைதியாக அகற்றுவது, சீனாவின் கடற்படை சக்தியை வலுப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்ததைக் குறிக்கலாம். இருப்பினும், இந்த வெளிப்படையான காரணிகளுக்கு அப்பால், தெற்கு பகுதியில்  உள்ள உள் அரசியலும் ஜெனரல் வாங் சியுபின் மாற்றத்துடன் ஏதாவது செய்யக்கூடும்.


ஜூன் 2024 இல், சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான மத்திய இராணுவ ஆணையம் (Central Military Commission (CMC)) அரசியல் பணி மாநாட்டை நடத்தியது. அதன்பிறகு, மாநாட்டின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஆய்வு அமர்வை நடத்தியது. சமீபத்திய கூட்டு கடற்படை பயிற்சி மோசமான முடிவுகளைக் காட்டியது. சில அரசியல் அதிகாரிகள் போர்க்கால பணிகளில் மோசமாக செயல்பட்டனர்.


ஏப்ரல் 2024-ல், இராணுவ அதிகாரிகள் பழைய மற்றும் புதிய அதிகாரிகளுக்கு இடையிலான பதட்டங்களைப் பற்றி விவாதித்தனர். பரஸ்பர ஆதரவின் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர் மற்றும் தவறுகளை அச்சமின்றி புகாரளித்து சரிசெய்யக்கூடிய "தவறு சகிப்புத்தன்மை" அமைப்பை உருவாக்கினர்.


சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) 2015-ஆம்  ஆண்டு சீர்திருத்தங்கள் தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள போர்க்கால அணிதிரட்டலுடன் ஒரு சிறந்த இராணுவப் படையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தெற்கு பகுதியின் வெளியீடுகள் இந்த சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.


சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) அமைப்பின் தாக்கங்கள்


ஜெனரல் வு யானனின் தலைமை தெற்கு பகுதியல் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்த, கட்சித் தலைவர்களுடனும், மத்திய இராணுவ ஆணையம் (Central Military Commission (CMC))  கூட்டுப் பணியாளர் துறையில் துணைத் தலைவராகவும் இருந்த வூவின் விரிவான அனுபவமும், சென்ட்ரல் பகுதியின் கமாண்டர் என்ற அவரது முந்தைய அனுபவமும் பயன்படுத்தப்படலாம்.


வூவின் நியமனம் முதல், தெற்கு பகுதியில் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியது. ஆகஸ்ட் 7 அன்று, அதன் திறன்களை சோதிக்க ஸ்கார்பரோ தீவுகளுக்கு அருகே கூட்டு கடல் மற்றும் வான்வழி ரோந்துகளை நடத்தியது. வூவின் கீழ், பகுதியில் போர் தயார்நிலை மற்றும் அரசியல் ஒற்றுமை மிகவும் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளக்கூடும். 


மேலும், தென் சீனக் கடலில் அடிக்கடி இராணுவ வலிமையைக் காட்டுவது ஒரு முக்கிய செயல்திறன் நடவடிக்கையாக மாறும்.


சீன மக்கள் விடுதலை இராணுவத்தின்  (PLA) மாற்றங்கள், சீர்திருத்த செயல்முறை இன்னும் தொடர்கிறது மற்றும் முழுமையடையவில்லை என்பதைக் காட்டுகிறது. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக  ஏற்படும் தலைமை மாற்றங்களால் குறிக்கப்பட்ட உள் எழுச்சியின் நிலை தொடர்கிறது. புதிய தலைமையானது, நூற்றாண்டின் நடுப்பகுதியில் "உலகத் தரம் வாய்ந்த" இராணுவமாக மாறும் இலக்கை நோக்கி நகர்வதற்கு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியாவிற்கான பாடங்கள்


இந்த சீன மக்கள் விடுதலை இராணுவதின்  (PLA) தலைமை மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சீன மக்கள் விடுதலை இராணுவதின்  கமாண்டர்கள் அவர்களின் திறமைக்காக மட்டுமல்ல, கட்சி-அரசின் நோக்கங்களுக்கான விசுவாசத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சீனா இந்தியாவின் முக்கிய போட்டியாளர் மற்றும் இராணுவ சவாலாக இருப்பதால், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின்  தலைமை பரிணாமம் மற்றும் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வது இந்தியாவிற்கு முக்கியமானது.



Original article:

Share:

இந்தியா ஒரு பராமரிப்பு சூழல் அமைப்பை (care ecosystem) உருவாக்க வேண்டும் -ராமா பாரு, பல்லவி குப்தா

 இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது   தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.


2022-ல் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கான உலகளாவிய சராசரி (female labour force participation rate (FLFPR)) 47.8% ஆக இருந்தது. 2022-23-ல் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37% ஆக இருந்தது என்று பொருளாதார ஆய்வு 2023-24 காட்டுகிறது. 2017-18ல் 23.3% ஆக இருந்தது. இருப்பினும், இந்த அதிகரிப்பில் கணக்கிடப்பட்ட பெண்களில் 37.5% பேர் "வீட்டு வணிகங்ளில் ஊதியம் பெறாத உதவியாளர்கள்". இதன் பொருள் அவர்கள் குடும்ப வணிகங்களில் ஊதியம் பெறாமல் வேலை செய்கிறார்கள். இது வழக்கமான வீட்டு வேலைகளிலிருந்து வேறுபட்டது.


பாலின சமத்துவமின்மையைக் (gender inequality) குறைக்க பொருளாதாரத்தில் பெண்களின் ஈடுபாடு முக்கியமானது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் தங்கள் குடும்பங்களில் பெரும்பாலான பொறுப்புகளைச் சுமப்பதுதான். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோரைக் கவனித்துக்கொள்வதும் இதில் அடங்கும். இதை தவிர,  பல்வேறு வீட்டு வேலைகளையும் பெண்கள் மேற்கொள்கிறார்கள். இந்தியாவில், 15-64 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு நாளும் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் ஆண்களை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.


குழந்தைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல் (Responding to childcare needs)


தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, குழந்தை பராமரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சில மாநில அரசுகள் அங்கன்வாடி இணையதளத்தை பயன்படுத்தி ஆதரவு சேவைகளை உருவாக்குகின்றன. 2024-25 பட்ஜெட், குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் சக்சம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.0 (Poshan 2.0 program) திட்டத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிதியுதவியை 3% அதிகரித்துள்ளது. சிறந்த குழந்தை பராமரிப்புக்கான கொள்கைகளை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.


சில மாநிலங்களில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு வகையான சமூகம் சார்ந்த குழந்தைகள் காப்பகங்கள் (குழந்தை பராமரிப்பு மையங்கள்) இயங்கி வருகின்றன. இந்த மையங்களை விரிவுபடுத்த முடியுமா மற்றும் தேவையான நிதி வழங்க முடியுமா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமான பெண்கள் பணிபுரிய உதவும் வகையில் அதிக குழந்தை பராமரிப்பு மையங்கள் தேவை.


குழந்தை பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது வரம்புக்குட்பட்டது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்கிறார்கள். எனவே, அவர்களுக்கு வேலை செய்ய உதவ, அவர்களின் பராமரிப்பு பணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளிப்புற பராமரிப்பாளர்களுக்கான (outside caregivers) தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு நிலையான விதிகள் எதுவும் இல்லை. வீட்டுப் பணியாளர்கள் பெரும்பாலும் பயிற்சி பெறாத பராமரிப்பாளர்களாக மாறுகிறார்கள். பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வேலைவாய்ப்பு தரநிலைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை.


பொறுப்புகளை பகிர்தல் (Offloading responsibilities)


பெண்களின் பராமரிப்பு கடமைகளை குறைக்க, வீட்டு பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தேவை. இந்த அமைப்பு, நியாயமான ஊதியம் மற்றும் மரியாதையைப் பெறும் நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களால் பாதுகாப்பான, தரமான, மலிவு விலையில் பராமரிப்பை வழங்க வேண்டும்.


முதலில், வயது, வருமானம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் என்ன வகையான பராமரிப்பு சேவைகள் தேவை என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். அடுத்து, பொது, தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகள் உட்பட, பராமரிப்பு வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் நாம் அடையாளம் காண வேண்டும்.


அதிக உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக பராமரிப்பின் தேவை அதிகரித்து வருவதால், பராமரிப்புப் பணியாளர்களின் தரம் மற்றும் இருப்பு ஆகியவை முக்கிய கவலையாக மாறியுள்ளது. குடும்பங்கள் நேரடியாக மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பராமரிப்புப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. சில ஒழுங்கமைக்கப்பட்ட சேவைகள் தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிக்கின்றன மற்றும் வீட்டுச் செவிலியர் மற்றும் வாழ்க்கையின் இறுதிப் பராமரிப்பு உட்பட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இருப்பினும், தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் இல்லாமல், சேவையின் தரம் இடத்திற்கு இடம் மாறுபடும்.


தேவையான கொள்கைகளை உருவாக்குதல் (Need for policy intervention)


பராமரிப்புப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் உள்ள இடைவெளியை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். வீட்டு மேலாண்மை மற்றும் பராமரிப்பு வழங்குவோர் துறை திறன் குழு, சுகாதாரத் துறை திறன் குழு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இந்தப் பயிற்சி மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கும் முக்கிய நிறுவனங்களாகும். கடின உழைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமாக தேவைப்படும் பராமரிப்பு துறைக்கு உரிய மரியாதை மற்றும் நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க அரசு புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். 


உலகப் பொருளாதார மன்றத்தின் “பராமரிப்பு பொருளாதாரத்தின் எதிர்காலம்” (‘Future of Care Economy’)  என்ற அறிக்கை மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது: பராமரிப்பு பொருளாதாரத்தால் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும். வணிகங்கள் பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்யலாம் அல்லது வேலை வாய்ப்புகளை வழங்கலாம். மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது கவனம் செலுத்துவது.

 

வாழ்க்கைப் பாதையில் பராமரிப்பு தேவைகளை உள்ளடக்கிய விரிவான கொள்கை நமக்குத் தேவை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும்.


ராமா ​​வி. பாரு, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவம் மற்றும் சமூக நலப் பேராசிரியர்; பல்லவி குப்தா  புது டெல்லி சுகாதார அமைப்பில் சிறப்பு நிபுணராக உள்ளார்



Original article:

Share: