1931-ம் ஆண்டு, மகாத்மா காந்தி, காங்கிரஸைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து பி. ஆர். அம்பேத்கரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு அம்பேத்கரின் பதில், இருவருக்கும் இடையிலான பல கருத்து வேறுபாடுகளின் முக்கியத்துவத்தை வெளிப்ப்படுத்தியது.
மகாத்மா காந்தி இறந்து எழுபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது மிக வலிமையான எதிரியான பி.ஆர். அம்பேத்கருடனான அவரது உறவு குறித்து உலகம் தொடர்ந்து விவாதித்து வருகிறது. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான உறவு என்பது இரண்டு தனிநபர்களுக்கிடையேயான ஒரு தத்துவார்த்த கருத்து வேறுபாடு மட்டுமல்ல. இது இந்தியச் சமூகம் குறித்த முரண்பட்ட கண்ணோட்டங்களுக்கு இடையேயான ஒரு வலுவான மோதலைப் பிரதிபலித்தது. அருந்ததி ராய் தனது 'தி டாக்டர் அண்ட் தி செயிண்ட்: சாதி, இனம் மற்றும் சாதி ஒழிப்பு-2017' (The Doctor and the Saint: Caste, Race, and Annihilation of Caste) நூலில் குறிப்பிட்டது போல், அவர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் மாறுபட்ட நலக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்களது போராட்டம் இந்தியாவின் தேசிய இயக்கத்தின் மையத்தில் அரங்கேறியது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த அவர்களின் வேறுபாடுகள் சுதந்திர இந்தியாவின் அடித்தளங்களை வடிவமைத்தன. மேலும், இந்த வேறுபாடுகள் இன்றும் நாடாளுமன்றத்தின் அவையில் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.
அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து
1931-ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியும் பி.ஆர். அம்பேத்கரும் முதன்முறையாக மும்பையில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் குறித்து காந்தி கேள்வி எழுப்பினார். இந்த விமர்சனத்தை அவர் தேசத்தின் மீதான தாக்குதலாகவே பார்த்தார். அம்பேத்கர் இதை வன்மையாக மறுத்ததுடன், தனக்குத் தாய்நாடு என்று எதுவும் இல்லை என்று பதிலளித்தார். மேலும், தங்கள் நிலையை உண்மையாகப் புரிந்துகொண்ட எந்தத் தீண்டத்தகாதவரும் இந்த நாட்டை நினைத்துப் பெருமைப்பட மாட்டார் என்றும் கூறினார்.
இது லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடுகளுக்கு இடையிலான பதற்றம் பகிரங்கமானது. அங்கு காந்தி குறிப்பிட்டதாவது, "நான் தீண்டத்தகாத மக்களின் பரந்த பெரும்பான்மையினரைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துவதாக” காந்தி அறிவித்தார். இந்த அறிவிப்பு அவர்களுக்கு இடையேயான முதல் முக்கியப் பொது மோதலாக அமைந்தது.
இருப்பினும், ஒடுக்கப்பட்ட வகுப்பினரைப் பற்றிய நீதிக்கான கேள்விகளை, அந்தச் சமூகத்தைச் சாராதவர்கள் எவராலும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பது அம்பேத்கரின் கருத்தாகும். ஒரே சமூக அடையாளத்தைப் பகிர்ந்துகொள்பவர்களால் மட்டுமே அவர்களுக்காக உண்மையாகப் பேச முடியும் என்று அவர் வாதிட்டார். இருப்பினும், காந்தி இந்த முன்மொழிவை உறுதியாக நிராகரித்தார். தனி வாக்காளர் தொகுதிகள் (separate electorate) இந்து சமூகத்தை உடைத்து, தீண்டத்தகாதவர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்று அவர் நம்பினார். "தீண்டாமை வாழ்வதைவிட இந்து மதம் இறந்துவிடுவதை நான் விரும்புகிறேன்" என்று அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
1932-ம் ஆண்டில், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட், வகுப்புவாதப் பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அந்த முடிவு தீண்டத்தகாதவர்களுக்கு 20 ஆண்டுகளுக்குத் தனித் தொகுதியை வழங்கியது. அந்த நேரத்தில், பூனாவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி, தனி வாக்காளர் தொகுதிகளுக்கான ஏற்பாடு திரும்பப் பெறப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்தார்.
மதம் குறித்து
காந்தி ஒரு தீவிர இந்து பக்தர். சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு தார்மீக வழிகாட்டியாக அவர் மதத்தைப் பார்த்தார். இந்து மதம் சீர்திருத்தத்திற்கும் மறுவிளக்கத்திற்கும் உட்பட்டது என்று அவர் நம்பினார். இந்த நம்பிக்கை பகவத் கீதை குறித்த அவரது வாசிப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. பிந்து பூரி தனது 'அடையாளம், சமூகம் மற்றும் நீதி குறித்த அம்பேத்கர்-காந்தி விவாதம்-2022' (The Ambedkar-Gandhi Debate on Identity, Community and Justice) என்ற நூலில் குறிப்பிடுவதுபோல, 1930-களில் இந்தியா, காந்தியைப் பொறுத்தவரை, யாகம் (தியாகம்) என்பது நெருப்பில் சடங்கு ரீதியான காணிக்கைகளைச் செலுத்துவது அல்ல. மாறாக, அது ஒருவரிடமிருந்து மிகவும் விலகி இருப்பவர்களுக்குத் தன்னலமற்ற சேவை செய்வதைக் குறித்தது. இந்த வகையான மறுவிளக்கத்தின் மூலம், சமூக சீர்திருத்தம் சாத்தியம் என்று காந்தி நம்பினார். மேலும், அத்தகைய சீர்திருத்தம் மதத்தைத் துறக்காமலேயே நிகழ முடியும் என்றும் அவர் நம்பினார்.
இதற்கு நேர்மாறாக, அம்பேத்கர் இந்து மதத்தை சீர்திருத்த முடியாத ஒன்றாகக் கருதினார். 1935-ம் ஆண்டிலேயே, "நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன், ஆனால் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்" (I was born a Hindu but I will not die a Hindu) என்று கூறி அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அவர் மேலும் வாதிட்டதாவது, "நீங்கள் சாஸ்திரங்களை மட்டும் நிராகரிக்கக்கூடாது, புத்தர் மற்றும் நானக் குறிப்பிட்டது போல் அவற்றின் அதிகாரத்தையும் மறுக்க வேண்டும். இந்துக்களிடம் உண்மையைச் சொல்லும் துணிச்சல் மக்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மதம் தான் சாதி புனிதமானது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஏமாற்றம் கொண்டிருந்தபோதிலும், அம்பேத்கர் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொண்டார். ஆன்மீகப் பிணைப்பிற்கான மனிதத் தேவையை அவர் அங்கீகரித்தார். சட்ட உரிமைகளோ அல்லது அரசியலமைப்பு உத்தரவாதங்களோ மட்டும் அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உட்பட கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக நீடித்த ஆய்வுக்குப் பிறகு, 1956-ல் அவர் பௌத்த மதத்திற்கு மாறினார். அவர் தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பௌத்த மதத்தைத் தழுவினார்.
நீதி பற்றி
காந்தி சட்டம் பயின்றிருந்தாலும், பிரிட்டிஷ் சட்ட அமைப்பைப் பற்றி அறிந்திருந்தாலும், சட்டத்தின் ஆட்சி மட்டுமே நீதியை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் நினைக்கவில்லை.அவர் மூன்றாம் தரப்பு நீதியை எதிர்த்தார். மேலும், சுருக்கமான சட்ட சமத்துவத்தை அறுதி சமத்துவத்தின் சமத்துவம் (samata), சமபாவனை (samabhava) மற்றும் சமநோக்கு (samadarshita) எனும் இலட்சியத்தால் மாற்றினார். இந்திய நெறிமுறை மரபிலிருந்தும், தர்மத்தின் வரலாற்று அர்த்தத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு, “நீதி நிலைத்திருக்க முடியும் ஒரே வழி, அது சமமான மனப்பான்மையிலும் (equi-mindedness), ஒடுக்கப்பட்டவராக இருந்தாலும் சரி, ஒடுக்குபவராக இருந்தாலும் சரி, "மற்றவரை" மதித்தலிலும் வேரூன்றியிருக்க வேண்டும் என்பதேயாகும்” என்று காந்தி வாதிட்டார்.
இருப்பினும், அவர் அமைப்புகளை முழுமையாக நிராகரிக்கவில்லை. பிந்து பூரி குறிப்பிடுவது போல, காந்தி ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் நீதியை அடைய முடியும் என்று நம்பினார். இந்த அணுகுமுறை, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் போன்ற நிலைகளை உள்ளடக்கியிருந்தது. இது அடக்குமுறையாளரின் மனமாற்றத்தின் மூலம் தனிநபர்களின் மாற்றத்தையும் உள்ளடக்கியிருந்தது.
மறுபுறம், அம்பேத்கர் நீதியை முதன்மையாக சட்டங்கள், உரிமைகள் மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் அநீதியைத் திருத்தவும் கூடிய அரசியலமைப்பு பாதுகாப்புகள் மூலம் அணுகினார். நீதி என்பது தார்மீக உணர்வுகள் அல்லது தனிப்பட்ட மனசாட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
Original Article : Why Gandhi and Ambedkar clashed: From separate electorates to Hinduism to concept of justice?. -Nikita Mohta