பின்நோக்கிய வரித் தாக்கல்

 சுரங்க நிறுவனங்கள் மீது நியாயமற்ற சுமை சுமத்தப்பட்டது. 


மாநில அரசுகள் ஏப்ரல் 2005 முதல் சுரங்க நிறுவனங்களிடமிருந்து வரிகளை வசூலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. மேலும், நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாநிலங்கள் உண்மையில் அத்தகைய வரிகளை வசூலிக்க முடியும் என்று தீர்ப்பளித்தபோது, ஜூலை 2024 முதல் முன்தேதியிட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று சுரங்க நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்த தீர்ப்பு நிதிய கூட்டாட்சிக்கு ஒரு அடியாக இருந்தாலும், முன்தேதியிட்டு வரிகள் (retrospective taxes) பற்றிய மிகவும் கவலைக்கிடமான பிரச்சினையை மீண்டும் எழுப்பியுள்ளது. 


2007-ம் ஆண்டில் அரசாங்கம் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் சொத்துக்களின் உரிமையாளர் வேறு நாட்டில் குடியிருந்தாலும், சொத்துக்கள் இந்தியாவில் இருப்பதால் அவர்கள் மிகப் பெரிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியது நினைவுகூரத்தக்கது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வருமான வரி விதிகள் சொத்துக்களை மறைமுகமாக மாற்றுவதற்கு வழிவகை செய்யாததால் வரிச் சட்டத்தை இந்த வழக்கில் பயன்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இது 2012-ம் ஆண்டில் அரசாங்கத்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 9 க்கு பிரபலமற்ற பின்னோக்கிய திருத்தத்திற்கு (infamous retrospective amendment) வழிவகுத்தது. இது 1962 முதல் இந்தியாவில் வைத்திருக்கும் சொத்துக்களை மறைமுகமாக மாற்றுவதற்கு வரி விதிக்க அனுமதித்தது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆனது. . பின்னோக்கி வரிவிதிப்பு அச்சுறுத்தல் தீர்க்கப்பட்டது போல் மற்றும் வணிகங்கள் நிம்மதி அடைந்தது போல், சுரங்க நிறுவனங்கள் முன்னோக்கி வரி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது.


இந்த தீர்ப்பின் பொருளாதார மற்றும் வணிக விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம். வணிகங்கள் மிகவும் அமைதியற்றதாக உணரலாம். ஏனெனில், அவர்களின் எதிர்கால பொறுப்புகள் குறித்து உறுதியாக இருக்க முடியாது. இந்த நாளிதழில் வெளியான ஒரு அறிக்கை, சுரங்க நிறுவனங்களுக்கான பின்னோக்கிப் பொறுப்பு ₹1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு நிதிச்சுமை தவிர, இதற்கான தீர்ப்பு மற்றவர்களுக்கு செலவுகளை அதிகரிக்கலாம். ஏனென்றால், சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வாங்குபவர்களுக்கு கூடுதல் வரியை செலுத்துவதால், இதற்கான செலவுகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.


கடனுறுதி வில்லங்கக் கோட்பாடு (doctrine of promissory estoppel) இறையாண்மைக்குப் பொருந்தாதா, இல்லையென்றால், ஏன் பொருந்தாது என்று சாதாரண மக்கள் நியாயமாகக் கேட்கலாம். தனிநபர்களுக்குப் பொருந்தும் இந்தக் கோட்பாடு என்னவென்றால், ஒரு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பினர் ஒரு வாக்குறுதியை அளித்தால், அதன் அடிப்படையில் மற்ற கட்சி ஒரு குறிப்பிட்ட எதிர்பார்க்கப்பட்ட மற்றும் நியாயமான முறையில் செயல்படுகிறது. இதில், முதல் தரப்பு அதன் வாக்குறுதியை மீறினால், அந்த மீறப்பட்ட வாக்குறுதி செயல்படுத்தத்தக்கது. ஒரு தரப்பினர் இறையாண்மை கொண்டவர் என்பதாலும், வாக்குறுதி வரி விதிப்பைப் பற்றியது என்பதாலும், அந்த வாக்குறுதியை மீற அனுமதிக்கக்கூடாது என்று நியாய விதிகள் பரிந்துரைக்கின்றன. இறையாண்மை எழுத்துப்பூர்வமாக எதையும் உறுதியளிக்கவில்லை என்று வாதிடலாம். மேலும், நீதிமன்றங்கள் சட்டத்தை விளக்குவது தங்கள் வேலை என்று கூறலாம். இதற்கிடையில், கடனுறுதி வில்லங்கக் கோட்பாட்டின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், வாக்குறுதி எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற நாடுகளில் முன்தேதியிட்டு சட்டம் இயற்றப்படுவதும் உண்மைதான். இவை பெரும்பாலும் கடந்தகால தவறை சரிசெய்வதற்கான முயற்சிகளாக இருந்தாலும், இறையாண்மை உரிமை தன்னிச்சையாக பயன்படுத்தப்படுவதில்லை. அந்த உரிமை அல்லது கோட்பாட்டால் மட்டுமே நீதிமன்றங்கள் வழிநடத்தப்படுகின்றன என்பதும் உண்மை அல்ல. 



Original article:

Share:

இன்றைய ’பக்க நுழைவு' (Lateral Entry) முறைக்கு முன், நேருவின் அரசு 'திறந்த சந்தையில்' (Open Market) இருந்து பணியமர்த்தியது -ஷ்யாம்லால் யாதவ்

 திறந்த சந்தை ஆட்சசேர்ப்புகளில் (open-market recruitments) SC மற்றும் ST-களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மாநில அரசுப் பணிகளில் இருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை.


நரேந்திர மோடி அரசாங்கம் அதிகாரத்துவத்தில் "பக்கவாட்டு நுழைவுகளை" (lateral entries) அறிமுகப்படுத்துவதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு அரசாங்கம் "திறந்த சந்தையிலிருந்து" (open market) பல நியமனங்களைச் செய்தது. பல்வேறு துறைகளில் தங்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்தனர்.


மோடி அரசாங்கம் 2018-ல் பக்கவாட்டில் நுழைபவர்களுக்கான (lateral entrants) முதல் காலியிடங்களை விளம்பரப்படுத்தியது. செவ்வாயன்று, ஒன்றிய அரசின் 45 பணியிடங்களை நிரப்ப, ஐந்தாவது சுற்று நியமனங்களுக்கான ஆகஸ்ட் 17 அன்று அறிக்கை வெளிப்படுத்தியதை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டது.


பல எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தின் முக்கிய கூட்டணி கட்சிகளும் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். மேலும், இதற்கான இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் பணி நியமனம் செய்யப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.


1946-ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் நெருங்க, ஒன்றிய அமைச்சரவை ஒரு முடிவை எடுத்தது. முக்கிய தலைவர்களின் மாநாட்டிற்குப் பிறகு, அவர்கள் இந்திய நிர்வாகப் பணி (Indian Administrative Service (IAS)) மற்றும் இந்திய காவல் பணி (Indian Police Service (IPS)) ஆகியவற்றை உருவாக்க முடிவு செய்தனர். இந்த புதிய பணிகள் முறையே இந்திய குடிமைப் பணி (Indian Civil Service (ICS)) மற்றும் இந்திய காவல் (Indian Police (IP)) ஆகியவற்றிற்கு பதிலாக அமைக்கப்பட்டன.


சுதந்திரத்திற்குப் பிறகு, கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் உதவுவதற்கு நாட்டிற்கு அதிகாரிகள் தேவைப்பட்டனர். அப்போது தகுதியான அதிகாரிகள் அதிகம் இல்லை. இந்திய குடிமைப் பணி (Indian Civil Service (ICS)) அதிகாரிகளின் கடைசி குழுவானது 1943 இல் பணியமர்த்தப்பட்டதாலும், இதற்கான முதல் குழு, இந்திய நிர்வாகப் பணி (Indian Administrative Service (IAS)) அதிகாரிகள் 1948-ல் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.


1950 களின் நடுப்பகுதி வரை, ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு சுமார் 7,000 பேர் விண்ணப்பித்ததாகவும், இதில் சுமார் 200 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கும் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த நல்ல அதிகாரிகளின் தேவை இருந்தது.


சிறப்புத் திறன் (specialized skills) கொண்ட அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1948-49 மற்றும் 1956-ல் சிறப்பு பணியிடங்களின் தேவைகள் (special recruitment drives) ஏற்பாடு செய்யப்பட்டன. இதில், சர்தார் வல்லபாய் படேல் 1948-49ன் போது துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த சிறப்புத் தேவைகள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் வருடாந்திர காலி பணியிடங்களுடன் கூடுதலாக இருந்தன.


ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (UPSC) சிறப்புத் தேர்வுகளை மேற்கொண்டது. இருப்பினும், இவை அவசரகால பணியிட வாரியத்தின் (Emergency Recruitment Board) பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்பட்டன.


1949-ம் ஆண்டில், சிறப்பு பணியிட விண்ணப்பதாரர்களின் பதிவுகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் நேர்காணல்களை நடத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. 1956-ல் காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையை உள்ளடக்கியது. இந்த அவசரகால பணியிடங்கள் இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) மற்றும் பல ஒன்றிய பணிகளுக்காகவும் செய்யப்பட்டன.


சிறப்புப் பணியிடங்கள், இந்தியாவிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையேயும் மிகவும் திறமையான நபர்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்திற்கு அவர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. மே 30, 1956 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ஜிபி பந்த் மக்களவையில் ஆற்றிய உரையில், “புத்திசாலித்தனமான பணியாளர்கள் குறைந்துள்ளனர். மேலும், இங்கே ஒன்றியத்தில், துணைச் செயலாளர் (Deputy Secretaries) பதவிகள் மற்றும் இந்திய நிர்வாகப் பணி (IAS) போன்ற பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் யாரும் இல்லை” என்றார்.


காலிப் பணியிடங்களின் செயல்முறை


ஆரம்ப காலத்தில் குடிமைப் பணித் தேர்வில் கலந்து கொள்ள அதிகபட்ச வயது வரம்பு 24 ஆக இருந்தது. 25 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு திறந்த சந்தை பணியிடங்கள் (Open market recruitments) நடத்தப்பட்டது. பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்சவரம்பு 45 ஆண்டுகள் ஆகும். இப்போது இரத்துசெய்யப்பட்ட பக்க நுழைவு (lateral entry) முயற்சிக்கான வயது வரம்பு ஒன்றாக உள்ளது.


1948-49-ல் நடந்த சிறப்பு பணியிடங்களின் முதல் சுற்றில் 82 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இது அவசரகால பணியிட வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்தது. இரண்டாவது சுற்றில், உள்துறை இணை அமைச்சர் பி.என் தாதர், ஏன் திறந்த சந்தை பணியிடங்கள் தேவை? என்பதை விளக்கினார்.


இந்த அவசரகால பணியிட சேவைகளில் இருந்து மட்டுமின்றி, திறந்த சந்தையிலிருந்தும் விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு திறக்கப்படும். இருப்பினும், இதுபோன்ற பணிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம். அதிக எண்ணிக்கையிலான இந்திய நிர்வாகப் பணி (IAS) அதிகாரிகள் தேவை. எனவே, அதிக பணியாளர்கள் ஒரு பரந்த குழுவில் இருந்து பணியமர்த்தப்படுவார்கள், என்று அவர் மக்களவையில் மார்ச் 23, 1956 அன்று கூறினார்.


1956-ம் ஆண்டில், திறந்த சந்தையில் இருந்து விண்ணப்பிக்கும் போட்டியாளர்களுக்கு குறைந்தபட்ச வருமானம் ரூ.300 என வரம்பை அரசாங்கம் நிர்ணயித்தது. இந்த கோரிக்கை நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.


வேலையில்லாத இளைஞர்கள் இதனால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் வாதிட்டார். மேலும், அவர் கூறுகையில், “இது இந்திய குடிமைப் பணியின் (Indian Civil Service (ICS)) பழைய பாரம்பரியத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். இந்திய குடிமைப் பணிக்கு (ICS) பணியிடங்கள் என்பது பிரபுத்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியமான சூழ்நிலை நிலவியது. சாதாரண குடிமக்கள் இந்திய குடிமைப் பணிக்கு (ICS) தகுதி பெறவில்லை. இந்த இந்திய நிர்வாகப் பணி (IAS) பணியிடங்கள்  விதி அந்த பழைய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இது நாட்டின் மிக முக்கியமான நிர்வாகப் பணிக்கான விண்ணப்பதாரர்கள் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் குழந்தைகளுக்கு உட்படுத்துகிறது, ”என்று கோபாலன் மக்களவையில் மே 30, 1956 அன்று கூறினார்.


1956-ம் ஆண்டில், இந்த பணியிடங்களுக்கு 22,161-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1,138 பட்டியல் வகுப்பினர் விண்ணப்பங்களும், 185 பட்டியல் பழங்குடியினர் விண்ணப்பங்களும் இதில் அடங்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்வெழுத அனுமதிக்க, இந்தியாவுக்கு வெளியே 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கான தேர்வு டிசம்பர் 28, 1956 அன்று நடத்தப்பட்டது.


பணி நியமனங்களில் ஒதுக்கீடுகள்


திறந்த சந்தை பணியிடங்களில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மாநில அரசுப் பணிகளில் இருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை.


பட்டியல் வகுப்பினர் (SC) ஒதுக்கீடு 12.5% ​​ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) ஒதுக்கீடு 5% ஆகவும் இருந்தது. இந்த ஒதுக்கீடுகள் வழக்கமான போட்டித் தேர்வுகள் மற்றும் திறந்த சந்தையில் இருந்து சிறப்பு பணியிடங்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பணி கிடைப்பதன் அடிப்படையில் ஒதுக்கீடுகள் நிரப்பப்பட்டன. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரை பணியமர்த்துவதற்கான நிபந்தனைகளை முடிந்தவரை தளர்த்துவதாக அரசு கூறியது.


உள்துறை அமைச்சர் பந்த் அவர்கள், ஏப்ரல் 24, 1958 அன்று மக்களவைக்கு அறிவித்தார். UPSC தயாரித்த உண்மையான பட்டியலில், பட்டியல் வகுப்பினர் 26 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, யு.பி.எஸ்.சி., தரநிலைகளை தளர்த்துமாறு கேட்டுக் கொண்டனர். UPSC இந்த விதிமுறையை ஒப்புக்கொண்டு மேலும் 133 உறுப்பினர்களை சேர்த்தது. இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, யுபிஎஸ்சி ஆணையமானது இறுதிப் பட்டியலை வெளியிட்டது.


1956-ல் திறந்த சந்தையில் இருந்து இறுதி பணியிட சேர்ப்பில், 7 பட்டியல் வகுப்பினர் (SC) மற்றும் 3 பட்டியல் பழங்குடியினர் (ST) தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1949-ல் 82 ஐஏஎஸ் அதிகாரிகள் திறந்தவெளிச் சந்தையில் இருந்து பணியமர்த்தப்பட்டனர். இவர்களில், ஒருவர் எஸ்டி, 12 பேர் எஸ்சி அதிகாரிகள் ஆவார்.



Original article:

Share:

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : இந்தியாவின் மத்திய ஐரோப்பிய நுழைவு - சி.ராஜா மோகன்

 சமீபத்திய வரலாற்றின் பெரும்பகுதியில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா பெரும் வல்லரசுகளின் போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மெக்கின்டர் சகாப்தத்தைப் போலல்லாமல், அவர்கள் இப்போது தங்கள் சொந்த விதியை எழுதுவதிலும் பிராந்திய புவிசார் அரசியலை மறுவடிவமைப்பதிலும் அதிக அதிகாரம் கொண்டுள்ளனர். 


இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் போலந்து மற்றும் உக்ரைன் பயணம், கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஐரோப்பாவின் சுயவிவரத்தை உயர்த்துவதற்கான முயற்சியின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. ஐரோப்பா பெரும் அதிகார மோதலின் மையக் கட்டத்திற்குத் திரும்பியிருக்கும் நேரத்தில், இந்தியாவின் ஐரோப்பியக் கொள்கையில், மோடியின் வருகை ஒரு விடுபட்ட இணைப்பை தொடர செய்யும். 

 

உக்ரேனுக்கான போர், இப்போது அதன் மூன்றாவது ஆண்டில், மத்திய ஐரோப்பாவில் புதிய அரசியல் குழப்பத்தின் அடையாளமாக உள்ளது. இது முழு உலகத்தையும் நிலையின்மைக்கு உட்படுத்துகிறது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் புவிசார் அரசியல் சிந்தனையாளர் ஹால்ஃபோர்ட் மக்கிண்டர் என்பவர், “கிழக்கு ஐரோப்பாவை யார் ஆள்கிறார்களோ, அவர் இதயத்தை ஆள்கிறார்; இதயத்தை ஆள்பவர், உலகத் தீவைக் கட்டளையிடுகிறார்; உலகத் தீவை ஆள்பவன், உலகைக் கட்டளையிடுபவன்" என கூறுகிறார்.

 

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கான இந்த புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தில் இந்தியா ஒரு செயலற்ற பார்வையாளராக இருக்க முடியுமா? இந்த வாரம் பிரதமரின் போலந்து மற்றும் உக்ரைன் பயணம் இந்தியாவின் பதில் தெளிவான ‘இல்லை’ என்பதற்கான அறிகுறியாகும். மொரார்ஜி தேசாய் வார்சா சென்ற 1979-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் போலந்து செல்வது இதுவே முதல் முறையாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு மத்தியில் ரஷ்யாவின் பகுதியில் இருந்து உக்ரைன் வெளிவந்ததிலிருந்து எந்த இந்தியப் பிரதமரும் கீவ் சென்றதில்லை. கிவ், ரஷ்ய எல்லைக்குள் அதன் தொடர்ச்சியான தாக்குதலுடன் முன் வரிசையை மாற்றியதால் இது வருகிறது. 

 

பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மோடியின் வார்சா மற்றும் கீவ் பயணம் உக்ரைன் மீதான ஒரு புதிய இந்திய அமைதி முயற்சியைப் பற்றியதாக இருக்கலாம். ஒன்றிய அரசை பொறுத்த வரை இந்த வரலாற்று பயணத்தை ‘ஒரு முறை’ நிகழ்வாக பார்க்க முடியாது.  இந்தியாவைப் பொறுத்தவரை இது போலந்து மற்றும் உக்ரைன் மற்றும் இன்னும் பரந்தளவில் மத்திய ஐரோப்பாவுடன் ஒரு நிலையான நீண்டகால ஈடுபாட்டிற்கான விதிமுறைகளை அமைப்பதாக இருக்க வேண்டும். 


ரஷ்யாவும் உக்ரைனும் நீண்ட மற்றும் பகிரப்பட்ட வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கையைக் கொண்டுள்ளன என்பதையும், இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட ஒருவருக்கொருவர் நன்கு அறிவார்கள் என்பதையும் இந்தியா அறியும். மாஸ்கோ ஒரு சமாதான தூதரைத் தேடாமல் இருக்கலாம். உக்ரைன் போரில் அதிக செல்வாக்கு செலுத்தும் அமெரிக்காவை எவ்வாறு அணுகுவது என்பதும், பொருத்தமானதாகக் கருதும்போது வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை நடத்துவதும்  அதிபர் விளாடிமிர் புடினுக்குத் தெரியும். 


உக்ரைனைப் பொறுத்தவரை, அமைதித் தாக்குதல் என்பது ரஷ்யாவுக்கு எதிரான அதன் இராஜதந்திர நிலைப்பாட்டை வலுப்படுத்த ஆதரவைப் பெறுவதாகும். மாஸ்கோவும் கியேவும் நவம்பரில் அமெரிக்க தேர்தல்களுக்காக காத்திருக்கின்றன மற்றும் அடுத்த நிர்வாகம் வாஷிங்டனில் பொறுப்பேற்பதற்கு முன்பு களத்தில் தங்கள் இராணுவ நிலையை மேம்படுத்த போட்டி போடுகின்றன. சீனா, இந்தியா உட்பட ஏனைய வல்லரசுகள் சமாதானத்தை ஊக்குவிப்பதில் ஒரு நிலையைக் கொண்டிருக்கலாம். 


மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கும் இடையிலான அரசியல் குடியேற்றங்களின் விலகல் விளைவாக இன்று உக்ரேனிய போர் உள்ளது. உக்ரேனில் போர் முடிவின் தன்மை ஐரோப்பாவில் ஒரு புதிய ஒழுங்கிற்கான கட்டமைப்பையும் வரையறுக்கும். அந்த புதிய ஐரோப்பிய ஒழுங்கின் தன்மை என்னவாக இருந்தாலும், எழுச்சி பெற்று வரும் போலந்து மற்றும் தற்போதைய ஐரோப்பிய போர்க்களம் எதுவாக இருந்தாலும், உக்ரேன் அதில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும். இந்தியா தனது ஐரோப்பிய ஈடுபாட்டை தீவிரப்படுத்த முற்படுகையில், போலந்தும் உக்ரைனும் முக்கியமான நீண்டகால கூட்டாளிகளாக உருவெடுக்கும். மாஸ்கோ மற்றும் மத்திய ஐரோப்பாவுடனான உறவை பூஜ்ஜியத் தொகை விளையாட்டாகக் (zero-sum game) கருதவில்லை என்பதன் அடிப்படையிலேயே, பிரதமரின் ரஷியப் பயணத்திற்குப் பிறகு, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இந்தியா சென்றது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய பல ஆண்டுகளாக, ஐரோப்பா இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒப்பீட்டளவில் குறைந்த முன்னுரிமையாகவே இருந்து வருகிறது.  இது ஐரோப்பாவின் பெரிய நான்கு நாடுகளான ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடனான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. கடந்த காலங்களில், இந்தியா ஐரோப்பாவில் இந்த எல்லையை விரிவுபடுத்த முயன்றுள்ளது. பிரதமராக தனது முதல் இரண்டு பதவிக்காலங்களில், மோடி ஐரோப்பாவிற்கு 27 முறை பயணம் செய்து 37 ஐரோப்பிய அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களை இந்தியாவில் வரவேற்றார். வெளியுறவு அமைச்சராக தனது முதல் பதவிக்காலத்தில், சுப்பிரமணியம் ஜெய்சங்கர் 29 முறை ஐரோப்பாவிற்கு பயணம் செய்து 36 ஐரோப்பிய சகாக்களை டெல்லியில் வரவேற்றார். 


இந்தியாவின் முன்னுரிமைகளில் ஐரோப்பாவை உயர்த்துவது, இந்தியா இடையேயான வருடாந்திர உச்சிமாநாடுகளை நிறுத்தி வைத்திருந்த இத்தாலி போன்ற முக்கிய  நட்பு நாடுகளுடன் நீடித்த சில சிக்கல்களை சரிசெய்யும் முயற்சியுடன் சேர்ந்தது. மோடி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை புதுப்பித்தது, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க (European Free Trade Association(EFTA)) குழுமத்துடன் ஒரு வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கையை ஏற்படுத்தியது. ஐரோப்பாவுடன் ஒரு வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை நிறுவியது, இங்கிலாந்துடன் ஒரு தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்முயற்சியைத் தொடங்கியது, பிரான்சுடன் ஒரு கூட்டு பாதுகாப்பு தொழில்துறை சாலை வரைபடத்தை கோடிட்டுக் காட்டியது, இந்தோ-பசிபிக்கில் ஐரோப்பாவுடன் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடங்கியது, அத்துடன் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தை (India-Middle East-Europe corridor (IMEC)) வெளியிட்டது. 


பெரும் வல்லரசுகளுக்கு துணைபுரியும் வகையில், டெல்லி ஐரோப்பாவின் பல சிறிய நாடுகளுடன் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. நோர்டிக் மற்றும் பால்டிக் (Nordics and Baltics) உட்பட ஐரோப்பாவின் பல துணை பிராந்தியங்களுடன் இந்தியா கூட்டு இராஜதந்திரத்தை தொடங்கியுள்ளது. மத்திய ஐரோப்பாவுடன் இணைவது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த மாதம் மோடியின் ஆஸ்திரியா பயணம்  மற்றும் இந்த வாரம் போலந்து மற்றும் உக்ரேனுக்கு பயணம் செய்தது அந்த இராஜதந்திர நடவடிக்கையில் ஒரு பகுதியாகும். மத்திய ஐரோப்பாவின் ஒரு விரைவான ஆய்வு ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் மிகப்பெரிய நிலப்பரப்பை உக்ரைன் கொண்டுள்ளது என்ற உண்மையை சுட்டிக்காட்டும். போலந்து மற்றும் உக்ரைன் ஐரோப்பிய மக்கள்தொகை தரவரிசையில் (ரஷ்யா உட்பட) ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன. போலந்து மத்திய ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் ஐரோப்பாவில் எட்டாவது இடத்தில் உள்ளது. 


கடந்த 30 ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சி, ஒரு பெரிய மக்கள் தொகை அடித்தளம் (38 மில்லியன்), ஐரோப்பாவின் இதயத்தில் அதன் அமைவிடம் மற்றும் செலவினங்கள் (இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் அதிகம்) ஆகியவை போலந்தை கணக்கிட வேண்டிய சக்தியாக மாற்றியுள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்று போலந்தும் ஓரளவு  சுயாட்சி கொண்ட வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையை ஏற்றுள்ளது. 


உக்ரைனின் பொருளாதாரம் போரால் சிதைந்துள்ளது. ஆனால் அமைதி தீர்வுக்குப் பிறகு அதன் புனரமைப்புக்கான வாய்ப்பு உலகெங்கிலும் உள்ள புவிசார் பொருளாதார வழித்தடங்களில் வைத்துள்ளது. சோவியத் ஆயுதத் தொழில்துறையின் கணிசமான பகுதியை மரபுரிமையாகப் பெற்றிருந்த உக்ரைன், இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அதன் பாதுகாப்புத் தொழில்துறையை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் எதிர்பார்க்கிறது. உலகின் தானியக் களஞ்சியங்களில் ஒன்றாக உக்ரைனின் இயற்கையான வலிமை வரவிருக்கும் ஆண்டுகளில் அதன் மூலோபாய முக்கியத்துவத்தை சேர்க்கிறது. 


அதன் சமீபத்திய வரலாற்றின் பெரும்பகுதியில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா மீண்டும் மீண்டும் அதன் பிராந்திய பகுதிகளை எல்லைகளை மறுசீரமைத்தது மற்றும் பிராந்திய நாடுகளை மேலாதிக்க சக்திகளின் செல்வாக்கு மண்டலங்களுக்குள் கட்டாயப்படுத்திய பெரும் சக்திகளின் போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்கின்டர் சகாப்தத்தைப் (Mackinder era) போலல்லாமல், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா இப்போது தங்கள் சொந்த பாதையை தீர்மானிப்பதில் பிராந்திய புவிசார் அரசியலை மறுவடிவமைப்பதிலும் அதிக அதிகாரத்தைக் கொண்டுள்ளன. வார்சோ மற்றும் கியேவுக்கான மோடியின் பயணம், ஐரோப்பாவின் மையத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றத்தை அங்கீகரிப்பதும், மத்திய ஐரோப்பிய அரசுகளுடன் இருதரப்பு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதும் ஆகும். 


சி.ராஜா மோகன், கட்டுரையாளர், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனம்.



Original article:

Share:

காலநிலை மீள்தன்மை (climate resilience) மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான நிலையான வேளாண்மை குறித்து . . . - டாக்டர் மனீஷ் மான் மற்றும் நிகேத் ஜெயின்

 காலநிலை மீள்தன்மை (climate resilience), சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (environmental sustainability) மற்றும் உணவுப் பாதுகாப்பு (food security) போன்ற பல பிரச்சினைகள் நிலையான வேளாண்மையை நோக்கி செல்வதற்கு வழிவகுக்கிறது. நிலையான வேளாண்மை (sustainable farming) என்றால் என்ன, இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க அது எவ்வாறு உதவுகிறது?


நிலையான வேளாண்மை (sustainable farming) இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைக்கு முக்கியமானது மற்றும் 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய  உமிழ்வை (net-zero emissions) அடைவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயப் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டில், நிலையான விவசாயத்திற்கான இந்தியாவின் அணுகுமுறையை பிரதமர் நரேந்திர மோடி முன்மாதிரியாகக்  எடுத்துரைத்தார்.


பாரம்பரிய விவசாயத்திலிருந்து நிலையான முறைகளுக்கு இந்த மாற்றம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் வளர்ந்து வரும் மக்கள்தொகை பற்றிய கவலைகளை அதிகரித்துள்ளது. ஆனால் நிலையான வேளாண்மை என்றால் என்ன, இந்த சவால்களுக்கு அது எவ்வாறு உதவுகிறது?


உலகெங்கிலும் உள்ள வேளாண்மை இப்போது தீவிர முறைகளிலிருந்து மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளுக்கு மாற வேண்டும். நிலையான வேளாண்மை என்பது எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை பாதிக்காமல் இன்றைய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. எதிர்காலத்திற்கான இயற்கை வளங்களை பாதுகாக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலை, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் பாரம்பரிய கலாச்சார தொடர்ச்சி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்.  


நிலையான விவசாயத்தின் (sustainable agriculture) சில முக்கிய கொள்கைகள்:


உற்பத்தித் திறனை அதிகரித்தல் (Increasing productivity) : உணவைப் பாதுகாப்பாக வைத்திருக்க, விவசாய உற்பத்தியை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், குறைந்த நீர் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நிலையான வேளாண்மை சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தை குறைக்கும் அதே வேளையில் நமக்கு போதுமான உணவு இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் (Protecting and enhancing natural resources) : விவசாய வளர்ச்சி அதிகரிக்க, மண் மற்றும் நீர் போன்ற இயற்கை வளங்களை நாம் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். வேளாண்மை இந்த வளங்களைச் சார்ந்துள்ளது. எனவே, அவற்றின் நிலைத்தன்மை நீடித்த உற்பத்திக்கு முக்கியமானது. இந்தியாவில், 60% விவசாய நிலங்கள் மழையை நம்பியுள்ளன. மேலும், இந்த நிலங்கள்  நாட்டின் 40% உணவை உற்பத்தி செய்கிறது. இந்த சூழலில், நிலையான வேளாண்மை என்பது மண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பது, தண்ணீரை திறம்பட நிர்வகிப்பது, நீர் மாசுபாட்டைக் குறைப்பது  மற்றும் பசுமை இல்ல வாயு (greenhouse gases) உமிழ்வைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் (Improving livelihoods and fostering inclusive economic growth) : வளங்களை அணுகுவது கிராமப்புறங்களில் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைக்க உதவும். விவசாயத்திற்கு அதிக உழைப்பு தேவைப்படுவதால், அதிக விவசாய வருமானம் வறுமையைக் குறைக்கும். நிலையான வேளாண்மை நல்ல வேலை வாய்ப்பை வழங்கும்.


மக்கள், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பின்னடைவை மேம்படுத்துவது முக்கியமானது. தீவிர வானிலை விவசாயத்தை சீர்குலைத்து விவசாய சந்தையில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும். விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளை இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களுக்கு தாங்கக்கூடியதாக மாற்றுவதன் மூலம், பெரிய விலை மாற்றங்களைத் தவிர்த்து, நிலையான உற்பத்தித்திறனையும் நிலையான சந்தைகளையும் உறுதிசெய்ய முடியும்.

 

புதிய சவால்களுக்கு ஏற்ப நிர்வாகத்தை மாற்றியமைத்தல் (Adapting governance to new challenges): நிலையான உற்பத்திக்கு முழுமையாக மாற, தனியார் மற்றும் பொதுத்துறை இரண்டும் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இணைந்து செயல்பட வேண்டும். புதிய, நிலையான உற்பத்தி முறைகளை பயன்படுத்த விவசாயிகள் ஊக்கம் பெற வேண்டும். இந்த மாற்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பயனுள்ள கொள்கைகள், சட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதும் இதில் அடங்கும்.


இந்தக் கொள்கைகள் நிலையான (Sustainable Development Goals (SDGs)) வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகின்றன:


- SDG1: வறுமையைக் குறைத்தல் (Reducing Poverty)

- SDG2: பூஜ்ஜிய பசி (Zero Hunger)

- SDG3: நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு (Good Health and Well-Being)

- SDG5: பாலின சமத்துவம் (Gender Equality)

- SDG6: சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் (Clean Water and Sanitation)

- SDG8: ஒழுக்கமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (Decent Work and        

   Economic Growth)

- SDG11: நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள் (Sustainable Cities and Communities)

- SDG12: பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி (Responsible Consumption and 

   Production)

- SDG13: காலநிலை நடவடிக்கை (Climate Action)

- SDG14: தண்ணீருக்கு கீழே வாழ்க்கை (Life Below Water)

- SDG15: நிலத்தில் வாழ்க்கை (Life on Land)

- SDG16: அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் (Peace, Justice, and Strong 

   Institutions)


நிலையான வேளாண்மையின் (sustainable agriculture) முறைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்:


இயற்கை வேளாண்மை (Organic farming) : நிலையான விவசாயத்திற்கு இயற்கை வேளாண்மை முக்கியமானது. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பது மற்றும் பயிர்களை வளர்ப்பதற்கு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கிறது, இது மண்ணின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. பயிற்சிகளில் பயிர்களின் சுழற்சிமுறை மற்றும் உரம்  போன்ற கரிம உரங்களைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும். இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழலுக்கு நல்லது. மாசுபாடு மற்றும் இரசாயனங்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை கணிசமாக குறைக்கிறது. மேலும், கிராமப்புற வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. 


விவசாய உற்பத்தித்திறன் சில நேரங்களில் இங்கே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும்போது இயற்கை  வேளாண்மையில் விளைச்சல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேம்பட்ட மண் வளம், குறைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மேம்பட்ட பின்னடைவு ஆகியவற்றின் நீண்டகால நன்மைகள் இயற்கை வேளாண்மையை நிலையான விவசாய நடைமுறைகளின் முக்கிய அங்கமாக ஆக்குகிறது. 


பயிர் சுழற்சி (Crop rotation) : அடுத்தடுத்த பருவங்களில் ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை முறையாக மாறி மாறி பயிரிடும் நடைமுறை பயிர் சுழற்சி முறையாகும். இந்த முறை பூச்சி மற்றும் நோய் சுழற்சிகளை உடைப்பதன் மூலமும், இரசாயன உள்ளீடுகளை நம்பியிருப்பதைக் குறைப்பதன் மூலமும் மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் கணிசமாக மேம்படுத்துகிறது. 


வேளாண் காடு வளர்ப்பு (Agroforestry) : பயிர் அல்லது விலங்கு உற்பத்தி அமைப்புகள் உட்பட விவசாய நிலப்பரப்புகளில் மரங்களை வளர்க்கும் நடைமுறையாகும். இது மிகவும் மாறுபட்ட மற்றும் நெகிழ்திறன் கொண்ட விவசாய முறையை உருவாக்குகிறது. சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் முக தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் விவசாயத்தை மேலும் நிலையானதாக மாற்ற உதவுகிறது. மரம், பழங்கள் மற்றும் பிற மரம் சார்ந்த பொருட்களுடன் பாரம்பரிய பயிர்களின் உற்பத்தியை நிரப்புவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வேளாண் காடுகள் இயற்கையாகவே பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பயனுள்ள பூச்சிகள் உட்பட பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடங்களை வழங்குவதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. 


ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (Integrated pest management (IPM)): 


ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது நிலையான வேளாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும். குறைவான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இயற்கை வேட்டையாடுபவர்களைப் பயன்படுத்துதல், வேளாண் நடைமுறைகளை மாற்றுதல் மற்றும் வாழ்விடங்களை மாற்றுதல் போன்ற பல்வேறு முறைகளை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயன்படுத்துகிறது. அனைத்து பூச்சிகளையும் அகற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, பயனுள்ள பூச்சிகளைப் பாதுகாத்து ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் போது சேதத்தைத் தவிர்க்க பூச்சிகளின் எண்ணிக்கையை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறைவாக வைத்திருக்கிறது.

 

பூஜ்ஜிய உழவு (Zero tillage) : பூஜ்ஜிய உழவு, உழவு இல்லாத வேளாண்மை  (no-till farming) என்றும் அழைக்கப்படுகிறது. இது பாரம்பரிய உழவு முறைகள் மூலம் மண் அடுக்குகளுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் பயிர்களை வளர்க்கும் நடைமுறையாகும். இந்த அணுகுமுறை மண் கட்டமைப்பைப் பாதுகாக்கிறது மற்றும் இயற்கை வளத்தை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக ஏராளமான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றன. இந்த அமைப்பு சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி விதைகளை நேரடியாக மண்ணில் விதைப்பதை உறுதி செய்கிறது. இந்த முறை மண் அரிப்பை (soil erosion) கணிசமாகக் குறைக்கிறது மற்றும் மண்ணில்  தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துகிறது.


நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை (hydroponics) மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு (aquaponics) : நீரியல் வளர்ப்பு (hydroponics) என்பது மண்ணின் தேவை இல்லாமல், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட நீர் ஊடகத்தில் தாவரங்களை வளர்க்கும் நுட்பமாகும். இந்த முறை மிகவும் வள-திறமையானது மற்றும் பாரம்பரிய மண் அடிப்படையிலான விவசாய முறைகளைவிட கணிசமாக குறைந்த நீர் தேவைப்படுகிறது. இது நிலைத்தன்மை இலக்குகளுடன் சரியாக சீரமைக்கப்படுகிறது. இந்த முறை கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை உள்ளடக்கியிருப்பதால், அதிகப்படியான பயன்பாடு காரணமாக நிலம் சீரழியும் அபாயத்தை இது கணிசமாகக் குறைக்கிறது மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தேவையை மேலும் குறைக்கிறது. 


நீரியல் தாவர வளர்ப்பு (aquaponics) :  என்பது வளரும் தாவரங்களையும் மீன் வளர்ப்பையும் இணைக்கும் ஒரு முறையாகும். மீன் கழிவுகள் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும். தாவரங்கள் மீன்களுக்கான தண்ணீரை சுத்தம் செய்ய உதவுகின்றன.


காலநிலை மாற்றம் (Climate change) : இந்திய வேளாண்மை பருவமழையை மிகவும் சார்ந்துள்ளது. இதனால் அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை மாற்றங்களால் வேளாண்மை பாதிக்கப்படும். காலநிலை மாற்றம் பயிர் விளைச்சலைக் குறைக்கும், இது உணவின் அளவு மற்றும் தரம் இரண்டையும் பாதிக்கிறது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும்  பாதிக்கும். 


மக்கள்தொகை (Population) : வளர்ந்து வரும் மக்கள்தொகை, ஏற்கனவே அழுத்தமாக உள்ள நமது விவசாய முறைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். நிலையான, இயற்கை விவசாய முறைகளுக்கு மாறுவது பயிர் விளைச்சலைக் குறைக்க வழிவகுக்கும், இது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சறுத்தலாக மாறும். பலர் வேலைகளுக்காக விவசாயத்தை நம்பியுள்ளனர். இது ஒரு தீவிர கவலையாக உள்ளது.

 

போதுமான அறிவு இல்லாமை (Lack of knowledge) : புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது, மக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. நிலையான முறைகளைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்க பிரச்சாரங்கள், பட்டறைகள் மற்றும் வெற்றிக் கதைகளைப் பகிர்வதன் மூலம் விழிப்புணர்வை மேம்படுத்தலாம்.

 

அதிக மூலதன செலவு (High capital cost) : நிலைத்தன்மை விலை உயர்ந்ததாக இருக்கலாம். நிலையான விவசாயத்தைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் பொருட்களுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. சிறு விவசாயிகள் கடனைப் பெற போராடுகிறார்கள். இது அவர்களுக்கு நிலையான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதை கடினமாக்குகிறது.

 

சந்தை அணுகல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் (Market access and post-harvest losses) : இந்தியாவில், விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்வதும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைச் சமாளிப்பதும் நிலையான விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. நிலையான வேளாண்மை பெரும்பாலும் அழிந்து போகக்கூடிய மற்றும் மாறுபட்ட பயிர்களை உற்பத்தி செய்கிறது, அவை நல்ல கையாளுதல் மற்றும் சேமிப்பு தேவைப்படும். இருப்பினும், குளிர்பதன கிடங்கு பற்றாக்குறை மற்றும் மோசமான போக்குவரத்து போன்ற பிரச்சனைகள் அறுவடைக்குப் பிறகு அதிக பயிர் இழப்புக்கு வழிவகுக்கும். இது லாபத்தை குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை பின்பற்றுவதை கடினமாக்குகிறது.


"ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" (‘One Earth, One Family and One Future’) அணுகுமுறை மூலம் நிலையான வேளாண்மை மற்றும் உணவு முறைகளில் உள்ள சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும். நிலையான வேளாண்மைக்கான தேசிய திட்டம் (National Mission For Sustainable Agriculture (NMSA)) இதற்கு ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், இது காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தில் (National Action Plan on Climate Change  (NAPCC)) எட்டு பணிகளில் ஒன்றாகும்.


  மேம்படுத்தப்பட்ட பயிர் விதைகள், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, நீர் பயன்பாட்டுத் திறன், பூச்சி மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட பண்ணை நடைமுறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, விவசாய காப்பீடு, கடன் ஆதரவு, சந்தைகள், தகவல் அணுகல் மற்றும் வாழ்வாதார பல்வகைப்படுத்தல் போன்ற இந்திய விவசாயத்தை உள்ளடக்கிய பத்து முக்கிய பரிமாணங்களை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான தழுவல் நடவடிக்கைகள் மூலம் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதை நிலையான வேளாண்மைக்கான தேசிய திட்டம் (National Mission For Sustainable Agriculture (NMSA)) நோக்கமாகக் கொண்டுள்ளது. 


நிலையான வேளாண்மைக்கான தேசிய திட்டம் (National Mission For Sustainable Agriculture (NMSA))  நிலையான வேளாண்மையின் பின்வரும் நோக்கங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது: 


  உள்ளூர் விவசாய முறைகள் மூலம் விவசாயத்தை அதிக உற்பத்தி, நிலையான, லாபம் மற்றும் காலநிலைக்கு ஏற்றதாக மாற்றுவதன் மூலம்  விவசாயத்தை மேம்படுத்தலாம். மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்கவும். மண் பரிசோதனை மூலம் மண் ஆரோக்கியத்தை நிர்வகித்தல், உரங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துதல் மற்றும் குறைந்த தண்ணீரில் அதிக பயிர்களை வளர்க்க நீர் பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.


வேளாண்மை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய இயக்கம் (National Mission on Agriculture Extension & Technology) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (National Food Security Mission) போன்ற பிற திட்டங்களுடன் இணைந்து செயல்படும் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் காலநிலை மாற்றம் மற்றும் தணிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும்.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் (Integrated Watershed Management Programme (IWMP)) திட்டம், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (Rashtriya Krishi Vikas Yojana (RKVY)) போன்ற பிற திட்டங்கள் / இயக்கங்களின் ஆதாரங்களைப் பயன்படுத்துதல். முக்கிய வழங்கல்களை நிறைவேற்றுவதற்காக துறைகளுக்கிடையேயான மற்றும் அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். 


காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் நமது விவசாய முறைகளை வலுப்படுத்துவதற்கும் நிலையான வேளாண்மை (sustainable agriculture) முக்கியமானது. வளங்களை தேவையறிந்து பயன்படுத்துவதன் மூலமும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும், நியாயமான வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும் இது உதவுகிறது. இந்த அணுகுமுறை நீடித்த சுற்றுச்சூழல் ஆரோக்கியம், பொருளாதார வெற்றிக்கு வழிவகுக்கிறது.



Original article:

Share:

வயநாட்டு துயரத்துக்குப் பிறகு, சாமானிய மக்கள் தங்கள் பாரம்பரிய உரிமையைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்க வேண்டிய நேரம் இது -மாதவ் காட்கில்

 இன்று, பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழல் சேதத்தின் செலவுகளை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது அனைத்து வகையான அரசியல்வாதிகளுடனும் அதிகார வர்க்கத்துடனும் கூட்டணி வைத்து பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களின் ஒரு சிறிய குழுவின் குறுகிய நலன்களுக்கு சேவை செய்கிறது. ஆனால் இங்கே நான்கு சிறிய, ஆக்கப்பூர்வமான படிகள் மக்கள் ஒன்றிணைந்து வள மேலாண்மையில் ஒரு பெரிய கருத்தைக் கோருகின்றன 


கிறிஸ்துவின் அன்பைப் பற்றிய போதனைகளைக் கொண்டு மகாத்மா காந்தி ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். புதிய ஏற்பாட்டின் மத்தேயு 5:5 வசனம், "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்" என்பது அவருக்கு குறிப்பாக முக்கியமானதாக இருக்கிறது. இன்றைய இந்தியாவில், பெரும்பான்மையானவர்கள் சுற்றுச்சூழல் சேதத்தின் செலவுகளை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது அதிகார வர்க்கத்தினருடனும், அனைத்து வகையான அரசியல்வாதிகளுடனும் கூட்டணி வைத்துள்ள பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களின் ஒரு சிறிய குழுவின் குறுகிய நலன்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், அண்மையில் வயநாட்டில் உள்ள மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவால், துன்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள் தேசத்தின் மனசாட்சியை எழுப்பத் தொடங்கியுள்ளன.


மலைப்பிரதேசங்களில் பாறைகளை வெட்டியெடுத்தல், சுரங்கம் தோண்டுதல், சாலைகள் அமைத்தல் மற்றும் மலைச்சரிவுகளில் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற மனித தலையீடுகளின் வளர்ந்து வரும் வேகத்தினால் அனைத்து இயற்கை அமைப்பிலும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் உள்ள உள்ளூர் சமூகங்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பின்னர் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று நமது மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (Western Ghats Ecology Expert Panel (WGEEP)) பரிந்துரைத்தது. 


ஆரம்பத்தில் வளர்ச்சிக்கு எதிரானது என்று அரசாங்கத்தால் மறைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (WGEEP) அறிக்கை, மே 2012 இல் தகவல் அறியும் உரிமை விசாரணையால் தூண்டப்பட்டபோது, இதன் தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டது. அது வெளிவந்தபோது, தவறான தகவல்களின் பிரச்சாரத்தின் ஆதரவுடன் எதிர்ப்பு அலை தீவிரமடைந்தது. ஆனால் பல்வேறு மேற்குத் தொடர்ச்சி மலை மாநிலங்களில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடமிருந்தும் கணிசமான அளவு ஆதரவு இருந்தது. குறிப்பாக கேரளாவில் இது தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால், மலையாள மொழிபெயர்ப்பால் தகவல்கள் கணிசமான எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைந்தது. ஆகையால், விரிவுரைகளுக்கும், தங்களின் வருகைகளுக்கும் பல அழைப்புகள் கிடைத்தன. அதே சமயம் மிரட்டல்களும் வந்தன. எனக்கு காவல் பாதுகாப்பு அளிப்பது புத்திசாலித்தனம் என்று கேரள அரசு முடிவு செய்தது. 2013-ம் ஆண்டில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செம்பன் முடிக்கு நான் அத்தகைய ஒரு பயணத்தை மேற்கொண்டேன். இந்த மலைகளில் உள்ள இரண்டு இராட்சத குவாரிகளில் கிரானைட் குவாரி மற்றும் உடைத்தல் பத்தாண்டு காலமாக நடந்து வருகிறது. டீசல் உமிழ்வு மற்றும் குவாரி தூசி ஆகியவை உள்ளூர் மக்களிடையே ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் காசநோய் வழக்குகளைத் தூண்டின. நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நீரோடைகளும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுரங்கத் தொழிலாளர்களைப் பற்றிய திகில் கதைகள் இருந்தன. பெரும்பாலும் ஜார்க்கண்ட் பழங்குடியினர் சுரங்கங்களால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான அனைத்து தொடர்புகளையும் இழந்துவிட்டனர். மேலும், தற்செயலான மரணம் ஏற்படும் போதெல்லாம், குவாரி உரிமையாளர்கள் உடலை ஆழமான குவாரி குழியில் வீசி, பாதிக்கப்பட்டவரின் அனைத்து தடயங்களையும் அழித்ததாக வதந்தி பரவியது. 


தற்போது நடைபெற்று வரும் குண்டுவெடிப்பை நிறுத்துமாறு புவியியல் ஆய்வு மையம் (Geological Survey) கடுமையாக பரிந்துரைத்துள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இந்த அறிவுரையை புறக்கணித்து, குவாரி நடத்துபவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்தது. இதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாமல், குவாரி மற்றும் உடைப்பதை எதிர்த்து மக்கள் ஒரு ஆண்டுகால தீவிரமாக இயக்கத்தைத் தொடங்கினர். மார்ச் 21, 2013 அன்று, போராட்டக்காரர்கள், பெரும்பாலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பஸ்ரீ பிரிவுகளைச் (Kudumbashree units) சேர்ந்த பெண்கள், செம்பன் முடிக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் வலுக்கட்டாயமாக நடவடிக்கைகளை நிறுத்தினர்.


2013-ம் ஆண்டில், குவாரி தொழிலாளர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான அனைத்து தொடர்புகளையும் இழந்தனர். இருப்பினும், 2015-க்குப் பிறகு நிலைமை வியத்தகு முறையில் மாறியது. உள்ளூர் மொழி ஆதரவு மற்றும் ஆடியோ/வீடியோ அம்சங்களுடன் கூடிய அலைபேசிகள் சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் மாறியது. இன்று, மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் தொலைதூர நக்சல்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் படிக்காத பழங்குடியினர் ஒருவருக்கொருவர் மற்றும் வெளியில் உள்ள நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். பீகாரில், நிலமற்ற கல்வியறிவற்ற பெண்கள், தங்கள் ஆடுகளைப் படம் எடுக்க, தங்கள் அலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இந்தப் படங்களைப் பதிவேற்றி, தங்கள் ஆடுகளை இணையவழியில், சில சமயங்களில் 500-600 கிமீ தொலைவில், OLX போன்ற தளங்களில் 40 சதவீதம் அதிக விலையில் விற்கிறார்கள்.


எனவே, இவ்வாறு அதிகாரம் பெற்ற, இதுவரை இந்தியாவில் உள்ள சாமானியர்கள், இப்போது தங்கள் நாட்டின் வளங்களுக்கு உரிமை கோர முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இயற்கையாகவே, இது சிறிய மற்றும் ஆக்கபூர்வமான படிகளுடன் தொடங்க வேண்டும். வயநாட்டு மக்களுக்காகவும், அதேபோன்று இருக்கும் பிற நாட்டு மக்களுக்காகவும் இதுபோன்ற நான்கு படிகளை நான் முன்மொழிகிறேன். முதலில், அனைத்து பாறை குவாரிகளையும் குடும்பஸ்ரீ குழுக்களிடம் (Kudumbashree groups) ஒப்படைக்க வேண்டும். 1991-ம் ஆண்டு கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள முற்போக்கான மெந்தா (லேகா) கிராமத்தில் இதேபோன்ற மகளிர் சேமிப்புக் குழுவின் அனுபவம், பெண்கள் இதுபோன்ற சவாலை திறம்படக் கையாள முடியும். இதனால், உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுற்றுச்சூழலை கவனமாக கவனித்து லாபம் ஈட்ட முடியும் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவதாக, மேலும் சுற்றுலா விடுதிகளை அனுமதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, பழங்குடியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும்விடுதிகளுக்கான துறையை ஒதுக்குங்கள். இது கோவாவில் ‘வேலிப்’ பழங்குடியினரால் (Velip tribe) திறம்பட செய்யப்பட்டுள்ளது மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. மூன்றாவதாக, தேயிலை தோட்டத் தொழிலாளர்களை ஒழுக்கமான ஊதியத்தில் பணியமர்த்தும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேயிலை மாநில நிர்வாகத்தை ஒப்படைத்து அவர்களுக்கு கண்ணியமான வீடுகளை வழங்க வேண்டும்.


நான்காவதாக, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை (Wildlife Protection Act(WLPA)) சட்டப்பூர்வமாக கேள்விகேட்க வேண்டும். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (WLBA) கீழ், விலங்குகளை வேட்டையாடுவதற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதைத் தடுக்கிறது. உதாரணமாக, வீடுகள் மற்றும் வயல்களில் இருந்து விலங்குகளை விரட்டுவதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி தேவை. இருப்பினும், இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 100 மற்றும் 103, தீங்கு விளைவிக்கவோ அல்லது மரணமடையவோ அனுமதிக்கிறது. அதில் ஒன்று, தவறு செய்பவரின் தாக்குதல் மரணம் அல்லது கடுமையான காயம் பற்றிய நியாயமான பயத்தை உருவாக்குகிறது. இரண்டாவது, தவறு செய்பவர் வீடு அல்லது சொத்து அத்துமீறல் அல்லது கொள்ளை செய்கிறார். காட்டுப் பன்றிகளும், யானைகளும் அவ்வப்போது மக்களைக் கொன்று குவித்துள்ளன. பெரும்பாலும் விவசாயிகளின் உடைமைகளில் அத்துமீறி நுழைந்து விவசாய விளைபொருட்களைக் கொள்ளையடித்துள்ளன. புலிகளும் சிறுத்தைகளும் மக்களையும் அவர்களின் கால்நடைகளையும் கொல்கின்றன. தமது அடிப்படை உரிமை மீறல்களை இனியும் எமது மக்கள் சகித்துக் கொள்ளக் கூடாது. 


சாமானிய மக்கள் தங்கள் அமைதியான நிலைமையை உதறித் தள்ளிவிட்டு, தங்கள் நியாயமான பரம்பரையைக் கோரும் ஒரு புதிய விடியலை நாம் விரைவில் காண்போம் என்று நான் நம்புகிறேன். 


கட்டுரையாளர் ஒரு சூழலியலாளர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர்கள் குழுவின் தலைவர் ஆவார்.



Original article:

Share: