இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பில்லியன்களை இழக்கிறதா? -சுரபி சந்தோஷ், பாயல் சேத், ஆஷிஷ் குமார்

 உத்தரப் பிரதேச அரசு நான்கு மாவட்டங்களில், கீழ்மட்ட முறையைப் பயன்படுத்தி நடத்திய சமீபத்திய சோதனையில், உண்மையான எண்ணிக்கை முந்தைய மதிப்பீடுகளை விட மிக அதிகமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு திட்டமும்,  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), பட்ஜெட் மற்றும் பொருளாதாரத் திட்டமும் ஒரு முக்கிய நிதி எண்ணைச் சார்ந்துள்ளது.  ஆனால், அந்த எண் துல்லியமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? இந்தியாவின் பொருளாதாரத்தின் உண்மையான அளவை, குறிப்பாக உள்ளூர் பகுதிகளில், நாம் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்வது? வளர்ச்சியில் நாம் அதிகக் கவனம் செலுத்தினாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறை குறிப்பாக மாவட்ட அளவில்  பழமையானதாகவும், அதிகம் மையப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும். இது பெரும்பாலும் களத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தவறவிடுகிறது. அறிக்கையிடப்பட்ட மற்றும் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையே பெரிய இடைவெளிகளைக் காட்டும் உத்தரபிரதேசத்திலிருந்து வரும் புதிய ஆதாரங்களை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. உள்ளூர் மட்டத்திலிருந்து தொடங்கி, இந்தியா தனது பொருளாதாரத்தை அளவிடும் முறையை மாற்றவேண்டும் என்று அது வாதிடுகிறது.


GDP-யைக் கணக்கிடுவதற்கான ஒரு பொதுவான வழி உற்பத்தி அணுகுமுறை என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களில் உருவாக்கப்பட்ட மதிப்பை மூன்று பகுதிகளில் சேர்க்கிறது:


1. முதன்மை (விவசாயம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள்),

2. இரண்டாம் நிலை (தொழில் மற்றும் உற்பத்தி), மற்றும்

3. மூன்றாம் நிலை (சேவைகள்).


ஒவ்வொரு பகுதியும் சேர்க்கும் மதிப்பு மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) என்று அழைக்கப்படுகிறது. இந்த GVA எண்கள் அனைத்தையும் கூட்டி, வரிகள் மற்றும் மானியங்களுக்கு ஏற்ப சரிசெய்வதன் மூலம் GDP கணக்கிடப்படுகிறது. இந்தியாவில், மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)) தேசிய அளவில் இந்த முறையைப் பயன்படுத்துகிறது.


துறைகள் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒதுக்கீடு இரண்டு முக்கிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அவை: மேலிருந்து கீழ் அணுகுமுறை (top-down approach) மற்றும் கீழிருந்து மேல் அணுகுமுறை (bottom-up approach).


இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகள் மேலிருந்து கீழ்நோக்கிய முறையைப் பின்பற்றுகின்றன. இந்த முறையில், CSO அமைப்பு மூலம் கணக்கிடப்படும் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டு, பின்னர் மாவட்டங்களுக்கு மேலும் பிரிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு வேலைவாய்ப்பு, தொழில்துறை வசதிகள் அல்லது நுகர்வு முறைகள் போன்ற குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த குறிகாட்டிகள் பெரும்பாலும் போதுமானதாக இல்லை. ஏனெனில், அவை ஒவ்வொரு இடத்திலும் உண்மையான உற்பத்தியை அளவிடுவதற்குப் பதிலாக, அனைத்து பிராந்தியங்களிலும் பொருளாதார செயல்பாடு ஒரே மாதிரியாக இருப்பதாகக் கருதுகின்றன.


மறுபுறம், கீழிருந்து மேல்நோக்கிய முறை மாவட்ட மட்டத்தில் தொடங்குகிறது. கணக்கெடுப்புகள் மற்றும் வணிகங்கள், பண்ணைகள், தொழில்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் போன்ற உள்ளூர் ஆதாரங்களில் இருந்து தரவு சேகரிக்கப்படுகிறது. இந்தத் தரவு பின்னர் மாநில அளவிலும் இறுதியாக தேசிய அளவிலும் இணைக்கப்படுகிறது. இந்த அணுகுமுறை முதன்மைத் துறையில் விவசாயம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


இடைவெளியை நிவர்த்தி செய்தல்


இந்த சிக்கலை சரிசெய்ய, மேலிருந்து கீழாக இருந்து கீழிருந்து மேல் முறைக்கு அணுகுமுறைக்கு மாற வேண்டும். இதன் பொருள் மாவட்ட மட்டத்திலிருந்து தொடங்கி, பின்னர் மாநில மற்றும் தேசிய மட்டங்களுக்கு தரவுகளை சேகரிப்பது. இந்த யோசனையைப் பின்பற்றி, உத்தரபிரதேச அரசு இந்த முறையை நான்கு மாவட்டங்களில் சோதித்தது: கான்பூர், கோரக்பூர், வாரணாசி மற்றும் மீரட். அவர்கள் இரண்டு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மையை அளவிடும் தொழிலாளர் நலன் ஆய்வு (Labour Force Survey (LFS)) மற்றும் உற்பத்தி மற்றும் சேவைகளில் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களால் சேர்க்கப்பட்ட மதிப்பை அளவிடும் இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் ஆய்வு (SUSE) ஆகியவை அடங்கும்.


இதில் முடிவுகள் ஆச்சரியமாக இருந்தன. இணைக்கப்படாத உற்பத்தித் துறையில் மட்டும், பழைய மேலிருந்து கீழ் முறையால் மதிப்பிடப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கான மொத்த மதிப்பு (GVA) ₹8.8 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், புதிய மாவட்ட அளவிலான ஆய்வுகள் உண்மையான மதிப்பு ₹17.6 லட்சம் கோடி என்பதைக் காட்டியது.  உதாரணமாக, மீரட்டின் உற்பத்தி மதிப்பு ₹4.82 லட்சம் கோடியாகக் கண்டறியப்பட்டது. இது முந்தைய மதிப்பீட்டான ₹1.94 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 147.6% வித்தியாசம் இருந்தது. வாரணாசி மற்றும் கான்பூர் முறையே 120.2% மற்றும் 78.8% பெரிய இடைவெளிகளைக் காட்டின. இதில் தேசிய மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள்கூட குறைத்து மதிப்பிடப்படுவதை இது தெளிவாகக் காட்டுகிறது.


இது ஒரு குறுகிய, ஒரு மாத முன்முயற்சி ஆய்வு மட்டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது பருவகால மாற்றங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இது பொருளாதார நடவடிக்கைகளை (குறிப்பாக விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில்) பெரிதும் பாதிக்கும். இருப்பினும், இந்த வரையறுக்கப்பட்ட ஆய்வுகூட உண்மையான மற்றும் மதிப்பிடப்பட்ட தரவுகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகளைக் காட்டியது. இது ஒரு வலுவான, தரவு அடிப்படையிலான அமைப்பின் அவசியத்தைக் காட்டுகிறது.


இந்தத் தவறுகள் வெறும் சிறிய பிழைகள் அல்ல. மாவட்ட அளவிலான பொருளாதார நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவது வெவ்வேறு பிராந்தியங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தவறான கருத்துக்களுக்கு வழிவகுக்கும் மற்றும் பொது வளங்களின் மோசமான விநியோகத்திற்கு வழிவகுக்கும். இன்னும் மோசமாக, இது அதிக ஆதரவு மற்றும் முதலீட்டிற்கு தகுதியான சில பகுதிகளின் உண்மையான பொருளாதார நிலைமையை மறைக்கிறது.


இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை அடைய உதவுவதற்கும்,  உத்தரபிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் மாவட்ட அளவிலான தரவுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல், மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கீழ்நிலை அணுகுமுறையைப் பயன்படுத்த தெளிவான காலக்கெடுவுடன் கூடிய தேசியத் திட்டம் தேவை.


இதற்கு சிறந்த தரவு அமைப்புகள், பயிற்சி பெற்ற கணக்கெடுப்பு பணியாளர்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் வலுவான கண்காணிப்பு ஆகியவற்றில் முதலீடுகள் தேவைப்படும். இதில் நன்மைகள் அதிகமாகவும், துல்லியமான தரவு, சிறந்த முடிவெடுத்தல் மற்றும் நியாயமான மேம்பாடு  போன்றவை மதிப்புக்குரியதாக இருக்கும்.


பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் சந்தோஷ் ஆராய்ச்சி உதவியாளராக சேத் இணை ஆராய்ச்சியாளராகவும் உள்ளனர். குமார், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் முன்னாள் இயக்குநர் ஜெனரல் மற்றும் பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் ஒரு சிறப்பு உறுப்பினர்.


Original article:
Share:

இந்திய சுகாதாரத் துறையை AI புத்தொழில் நிறுவனங்கள் எவ்வாறு மறுவரையறை செய்கின்றன? -ராகுல் பைட்

 செயற்கை நுண்ணறிவு (AI) இன்று பல தொழில்களை மாற்றி வருகிறது. மேலும், சுகாதாரப் பராமரிப்பு மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில், சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு பெரியதாகவும், போதுமான வளங்கள் இல்லாததாகவும் இருக்கும் நிலையில், AI-அடிப்படையிலான புத்தொழில் நிறுவனங்கள் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவர உதவுகின்றன. இந்த தொடக்க நிறுவனங்கள் மருத்துவ நோயறிதலை மேம்படுத்தவும், நோயாளிகளைக் கண்காணிக்கவும், மருந்து வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை மிகவும் திறமையாக்கவும் AI-ஐப் பயன்படுத்துகின்றன.


நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை மேம்படுத்த AI-க்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. குறிப்பாக, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும். இதை ஆதரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, AI-அடிப்படையிலான டிஜிட்டல் சுகாதார சேவைகளை உருவாக்க 1 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை ஒதுக்கியுள்ளது. பாரத் நெட் (Bharat Net) திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சிறந்த இணைய அணுகலுடன் இந்த நிதி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரப் பராமரிப்புக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் AI பயன்பாட்டை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் (National Digital Health Mission) மூலம் சுகாதாரப் பராமரிப்பை டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சி, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சுகாதார அடையாள அட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அதிக அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட தரவை உருவாக்கும், இது சுகாதாரப் பராமரிப்பில் AI பயன்பாட்டை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும்.


இந்தியாவின் சுகாதார அமைப்பு பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. நெரிசலான மருத்துவமனைகள், மிகக் குறைவான மருத்துவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் குறைந்த அணுகல். மருத்துவர்களை ஆதரிக்கும் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு பராமரிப்பை வழங்கும் ஸ்மார்ட், நிகழ்நேர கருவிகள் மூலம் இந்த சிக்கல்களைத் தீர்க்க AI புத்தொழில் நிறுவனங்கள் இப்போது உதவுகின்றன.


இந்த புத்தொழில் நிறுவனங்களில் சில Augsidius, Carewell360 மற்றும் VaidhyaMegha ஆகியவை அடங்கும்.


20,000-க்கும் மேற்பட்ட நோய்கள் மற்றும் சிகிச்சை வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை அணுகுவதன் மூலம் மருத்துவர்கள் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு ஸ்மார்ட் உதவியாளரான Augsidius AstraAI-ஐ உருவாக்கியுள்ளது.


Carewell360 சிறிய நகரங்களில் பெண்கள் சுகாதார சேவைகளை அணுகுவதை எளிதாக்குகிறது. இது தனியார், தேவைக்கேற்ப மகளிர் மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பராமரிப்பை வழங்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் (phygital) முறைகளின் கலவையைப் பயன்படுத்துகிறது.


நோயறிதலை விரைவுபடுத்தவும், நோயாளிகளை சிறப்பாக நிர்வகிக்கவும், மருத்துவமனை செயல்பாடுகளை மேம்படுத்தவும் வைத்யாமேகா (VaidhyaMegha) மருத்துவமனைகளுக்கு மேகக்கணினி அடிப்படையிலான AI கருவிகளை வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்கின்றன. Tata Elxsi AI அடிப்படையிலான இமேஜிங் கருவிகளில் செயல்படுகிறது.


நீரிழிவு நோய்க்கான AI-யால் இயங்கும் கண் பரிசோதனைகளை அதிக மருத்துவமனைகளுக்கு கொண்டு வருவதற்காக கூகிள் Forus Health மற்றும் AuroLab உடன் இணைந்துள்ளது.


AI திரைக்குப் பின்னால் உதவுகிறது. திட்டமிடல், மின்னணு சுகாதாரப் பதிவுகளை நிர்வகித்தல் (EHRs) மற்றும் பில்லிங் போன்ற பணிகளை தானியக்கமாக்க தொடக்க நிறுவனங்கள் AI-ஐப் பயன்படுத்துகின்றன. எத்தனை நோயாளிகள் வருவார்கள் என்பதைக் கணிக்க, பொருட்களை நிர்வகிக்க மற்றும் ஊழியர்களை மிகவும் திறமையாக நியமிக்க மருத்துவமனைகள் இப்போது AI-ஐப் பயன்படுத்தலாம். உரையாடும் இயலி (Chatbots) மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர், பின்தொடர்தல்களைச் செய்கிறார்கள் மேலும் இதில் மனநல ஆதரவையும் வழங்குகிறார்கள்.


இந்தியாவின் சுகாதார அமைப்பில் AI கருவிகள் மிகவும் முக்கியமானவை. அவை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. மேலும், AI மற்ற பணிகளைக் கையாளும் போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அதிகக் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.


AI-ன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுவதாகும். டெலிமெடிசின், மொபைல் சுகாதார கருவிகள் மற்றும் உள்ளூர் மொழிகளில் குரல் அடிப்படையிலான பயன்பாடுகள் மூலம், AI அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை எளிதாக அணுக உதவுகிறது.


Carewell360 மற்றும் SETV போன்ற தொடக்க நிறுவனங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை சரியான நேரத்தில் பெற உதவுகின்றன. பேச்சு மற்றும் உரையைப் புரிந்துகொள்ளும் AI கருவிகள் ஆங்கிலம் படிக்கவோ பேசவோ முடியாதவர்களுக்கு உதவுகின்றன. மொபைல் பயன்பாடுகள் மருத்துவ சேவைகளை மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு வருகின்றன. அதிகமான மக்கள் திறன்பேசிகளை பயன்படுத்துவதாலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (Ayushman Bharat Digital Mission (ABDM)) போன்ற அரசுத் திட்டங்களின் ஆதரவுடனும், இந்தக் கருவிகள் நாட்டில் எங்கும் சுகாதாரப் பராமரிப்பை கிடைக்கச் செய்கின்றன.


அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த இந்தியா பாடுபடுவதால், AI தொடக்க நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையான சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அரசாங்கம், மருத்துவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆதரவுடன், இந்த தொடக்க நிறுவனங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பெரிய சுகாதார தொழில்நுட்ப மாற்றத்திற்கு வழிவகுக்கும். இதில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், அனைவருக்கும் தரமான பராமரிப்புத் கிடைப்பதை உறுதி செய்யும்.


ராகுல் பைட், DST MATH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.


Original article:
Share:

கரிம-நடுநிலை உத்திகள் (carbon-neutral strategies) சந்தை தலைமையை தீர்மானிக்கும் -RS ஜலான்

 நவம்பர் 2021ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி COP26 உச்சி மாநாட்டில் இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலை ஆக மாற இலக்கு வைத்துள்ளதாக அறிவித்தார். 2023ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் 100வது சுதந்திர ஆண்டான 2047ஆம் ஆண்டுக்கான வளர்ந்த இந்தியா (Viksit Bharat) திட்டமானது அனைத்து அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது.


இந்த இலக்குகளை அடைய, இந்தியா புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் யோசனைகளை விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பெரிய மாற்றங்கள் தேவைப்படும், குறிப்பாக பொருளாதாரத்திற்கு முக்கியமான தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவில் பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்திற்கு தொழில்துறை ஒரு முக்கிய ஆதாரமாகும். ஆனால், இது வேலைகளை உருவாக்குகிறது, புதுமைகளை இயக்குகிறது மற்றும் நாட்டை போட்டித்தன்மையுடன் வைத்திருக்கிறது. எனவே, சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதோடு தொழில்கள் வளர வேண்டும். இது விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், இது எதிர்காலத்திற்குத் தயாராகுதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் மக்கள் மற்றும் சந்தைகளின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல் பற்றியது.


உற்பத்தி, கனரகத் தொழில்கள் மற்றும் மூலப்பொருட்கள் போன்ற தொழில்கள்  பெரும்பாலும் அதிக எரிசக்தி பயன்பாட்டில் சுத்தமான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, ஆற்றலைச் சேமிப்பது மற்றும் பசுமையான வழிகளில் உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்க வேண்டும்.  காலநிலை மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகம் மாறிவரும் நிலையில், சரியான கொள்கைகள், முதலீடுகள் மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.


இருப்பினும், இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைந்து அதன் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதால், புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் எதிர்காலத்தில் தேவைப்படும்.


இந்தியா ஏற்கனவே குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பல வணிகங்கள் உள் கார்பன் விலை நிர்ணயம் செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் தண்ணீரை சேமிப்பதில் கவனம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த மாற்றங்கள் முதலில் அதிக செலவு மிகுந்தாக இருக்கலாம். ஆனால், பணத்தை மிச்சப்படுத்துதல், நிறுவனத்தின் பிம்பத்தை மேம்படுத்துதல் மற்றும் வணிகங்களை மேலும் மீள்தன்மை கொண்டதாக மாற்றுதல் போன்ற நீண்டகால நன்மைகளைத் தருகின்றன.


சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, social, and governance (ESG)) தரநிலைகள் இப்போது ஒரு நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் நீண்டகால திட்டங்களின் முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முதலீட்டாளர்கள் வலுவான நிலைத்தன்மை நடைமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களை விரும்புகிறார்கள். எனவே, தெளிவான ESG தகவல்களைப் பகிர்வது இப்போது அவசியம். ஒரு தேர்வாக மட்டும் இருக்க கூடாது. இது முதலீட்டை ஈர்க்கவும் நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது. இதை அறிந்த பல நிறுவனங்கள் இப்போது காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்க வேகமாகச் செயல்படுகின்றன. இந்த முதலீடுகள் காலநிலை தொடர்பான அபாயங்களைக் குறைத்து, காலப்போக்கில் நிறுவனங்கள் வலுவாக வளர உதவுகின்றன.


இந்த மாற்றம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதைவிட அதிகமாக செயல்பட வேண்டும். இது முன்னேற்றத்தை நாம் எவ்வாறு வரையறுக்கிறோம் என்பதை மாற்றுவது பற்றியது. இப்போது, ​​இந்தியாவில் தொழில்துறை வெற்றி எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதன் மூலம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல், மக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கான நன்மைகளாலும் அளவிடப்பட வேண்டும்.


இந்தியாவின் இன்றைய நடவடிக்கைகள் அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு, குறைந்த உமிழ்வு தொழில்நுட்பம் மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளில் அதிக நிறுவனங்கள் பணத்தை முதலீடு செய்வதைப் பார்ப்பது நல்லது. இந்தப் படிகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, வணிக வெற்றிக்கும் முக்கியமானவை.


நிலையான தொழில்துறை கண்டுபிடிப்புகளில் உலகை வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. குறைந்த விலை பொறியியலில் நமது திறமை, வலுவான தொடக்க கலாச்சாரம் மற்றும் புதிய யோசனைகளைச் சோதித்துப் பரப்பும் திறன் இதற்குக் காரணம். பசுமை மாற்றம் நியாயமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம், வணிகங்கள் மற்றும் சமூகத்தில் குழுப்பணி இப்போது தேவை.


நிகர-பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கு மாறுவது நாடுகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ இடையிலான போட்டி அல்ல, இது காலத்திற்கு எதிரான ஒரு போட்டி. இதில் வணிகங்கள் முன்னிலை வகிக்க வேண்டும். புதிய விதிகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், சீக்கிரமாக செயல்பட வேண்டும். சில சமயங்களில் தேவைக்கு அப்பால் செல்ல வேண்டும். உண்மையான கேள்வி என்னவென்றால், நாம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது பற்றியது அல்ல. நாம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா என்பதுதான்.


உலகம் நிகர பூஜ்ஜிய உமிழ்வை நோக்கி நகரும்போது, ​​உண்மையான தலைவர்கள் விரைவாக தகவமைத்துக் கொண்டு பிரச்சினைகளை அனைவருக்கும் வாய்ப்புகளாக மாற்றுபவர்களாக இருப்பார்கள். அரசாங்க விதிகளை வெறுமனே பின்பற்ற வேண்டிய நேரம் இதுவல்ல. உலகப் பொருளாதாரம் மாறி, இந்தியா ஒரு முன்னணி நாடாக மாறும்போது, ​​காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்ள தொழில்துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


RS ஜலான் புது தில்லியின் GHCL நிர்வாக இயக்குநராக உள்ளார்.


Original article:
Share:

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இராஜதந்திரத்திற்கான அரசியல் சிக்கல்கள்.

 இந்தியா வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் இந்திய இராஜதந்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முக்கியமாக, பாகிஸ்தானுடனான இந்த மோதலுக்குப் பிறகு இந்திய அரசியல் ரீதியாக முன்னேறுவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க நடவடிக்கை கோரும்போது பொதுமக்களின் உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், ஒரு இறையாண்மையின் சக்தியைப் பயன்படுத்துவது அரசியலில் இருந்து பிரிக்கப்பட முடியாது என்பதால் இதை இந்தியாவால் புறக்கணிக்க இயலாது. அரசாங்கம் தனது விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, எப்படி, எப்போது, ​​எங்கு பதிலளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஆயுதப்படைகளுக்கு சுதந்திரம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக அங்கீகரித்தார். பயங்கரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்தியாவின் சொந்த இராணுவ பதில் அரசியல் தீர்ப்பு மற்றும் இராஜதந்திர ரீதியில் உத்தியின் அவசியமாக வடிவமைக்கப்பட வேண்டும். இதில் முக்கியமாக, இந்திய இராஜதந்திரத்திற்கு மூன்று அரசியல் சவால்கள் தனித்து நிற்கின்றன.


பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்பதை உலகிற்கு உணர்த்துவதே முதல் முன்னுரிமை ஆகும். பல நாடுகள் தாக்குதல் குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் பொறுப்பு என்று நம்பவில்லை. இந்தியாவின் வழக்கை விளக்கவும், பாகிஸ்தானின் ஈடுபாட்டிற்கான ஆதாரங்களை முன்வைக்கவும், வெளியுறவு அமைச்சகம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (United Nations Security Council (UNSC)) நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய நாடுகளை அணுகி வருகிறது. பாகிஸ்தான் தற்போது UNSC-யில் நிரந்தரமற்ற உறுப்பினராக பணியாற்றி வருவதால், கவுன்சிலானது ஒரு ராஜதந்திர போர்க்களமாக மாறியுள்ளது. UNSCயில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகளை எதிர்கொள்ள இந்தியா, அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது.


இரண்டாவது பிரச்சினை என்னவென்றால், இந்தியா இராணுவ நடவடிக்கையை கருத்தில் கொள்ளும்போது, ​​பல நாடுகள் நிதானத்தைக் கோருகின்றன. இந்த எதிர்வினை இயல்பானது மற்றும் எந்தவொரு மோதலிலும் நடக்கும். உதாரணமாக, "இது போரின் சகாப்தம் அல்ல" (this is not an era of war) என்று இந்தியா முன்னர் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அறிவுறுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை பரிசீலிக்கும்போது, ​​பொது மக்கள் நிதானத்திற்கான அழைப்புகளுக்கும், இந்தியா எதிர்கொள்ளும் உண்மையான அரசியல் சூழ்நிலைக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்ப்பதே இந்திய இராஜதந்திரத்திற்கான சவாலாகும். சிலர் நம்புவதற்கு மாறாக, பாகிஸ்தான் இராணுவம் வலிமையானது. எந்தவொரு இராணுவ மோதலிலும் இந்தியா எளிதான வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது. சாத்தியமான இராணுவ மோதலின்போது சர்வதேச ஆதரவைப் பெறுவது மிக முக்கியம்.


மூன்றாவதாக, தவிர்க்க முடியாத சர்வதேச இராஜதந்திர தலையீட்டை நிர்வகிப்பது பற்றியது. ஏனெனில், பெரிய சக்திகள் மற்றும் UNSC-களிடமிருந்து அணு ஆயுதப் போர் அதிகரிப்பைப் பற்றிய கவலைகள் உள்ளன. அவர்கள் பதற்றத்தைத் தணிப்பதை ஆதரிக்கிறார்கள் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள். 1986-87 இராணுவ நெருக்கடி மற்றும் 2019 பாலகோட் தாக்குதல் போன்ற கடந்தகால இந்தியா-பாகிஸ்தான் மோதல்களில் இந்த முறை தோன்றியுள்ளது. இந்த நெருக்கடிகளில், காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை கட்டாயப்படுத்த பாகிஸ்தான் சர்வதேச அழுத்தத்தைப் பயன்படுத்த முயன்றது. மறுபுறம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்தை இந்தியா அழுத்தம் கொடுக்க இந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான இந்த மோதல்களுக்குப் பிறகு இந்தியா அரசியல் ரீதியாக வலுவாக வெளிப்படுவதை உறுதி செய்வதில் இந்திய ராஜதந்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


Original article:
Share:

பிரதமர் மோடியின் பயணம் இந்திய-சவுதி இராஜதந்திரக் கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. -எம்.டி. முடாசிர் குவாமர்

 பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா வருகை முக்கியமானது. இது புதிய துறைகளில் இந்தியா-சவுதி அரேபியா ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இது அவர்களின் வளர்ந்து வரும் இராஜதந்திர கூட்டாண்மைக்கு பங்களிக்கிறது. மோடி-முகமது பின் சல்மான் சந்திப்பின் (Modi-MBS meeting) போது விவாதிக்கப்பட்ட இந்த புதிய ஒத்துழைப்புத் துறைகள் யாவை?


ஏப்ரல் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா பயணம் இந்திய-சவுதி உறவுகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் இருநாட்டு உறவுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அதே நாளில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அது குறைக்கப்பட்டது.


இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கு முக்கியமானது.


பிரதமர் மோடி இரண்டு நாள் பயணத்திற்காக ஏப்ரல் 22, 2025 செவ்வாய்க்கிழமை ஜெட்டாவிற்கு சென்றடைந்தார். அவரை பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் (MBS) ஆகியோர் அழைத்தனர். இருப்பினும், பிரதமர் அவர்கள் புதன்கிழமை இரவு இருந்து தங்குவதற்குப் பதிலாக, தாக்குதல் காரணமாக, புதன்கிழமை காலை அவர் நாடு திரும்பினார்.


பிரதமர் வருகையின் மதிப்பீடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தீவிரமடைந்து வருவதைக் காட்டுகிறது. இந்த ஒத்துழைப்பு புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் நடக்கிறது. அவர்களின் இருதரப்பு உறவுகளை ஒரு இராஜதந்திர கூட்டாண்மையாக மாற்றுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவும் சவுதி அரேபியாவும் இராஜதந்திர உறவுகளை தீவிரப்படுத்துகின்றன.


வர்த்தகம், வணிகம், முதலீடுகள், எரிசக்தி பாதுகாப்பு, வெளிநாட்டவர்கள், ஹஜ் மற்றும் மக்களிலிருந்து மக்கள் தொடர்புகள் (people-to-people contacts) போன்ற இந்தியா-சவுதி அரேபியா உறவுகளின் பாரம்பரிய அம்சங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இருப்பினும், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, இணைப்பு, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பு பிரதமரின் வருகையின் சிறப்பம்சமாக இருந்தது. இந்த வளர்ந்து வரும் பகுதிகளில் ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது மற்றும் உறவை பன்முக இராஜதந்திர கூட்டாண்மையாக வளர்க்க உதவுகிறது.


இதில், மோடியின் வருகையும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஏனெனில், இது பிராந்திய மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த காலத்தில் நடந்தது. உக்ரைன் மற்றும் காசாவில் நடந்த போர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாக நிச்சயமற்ற சர்வதேச பொருளாதார நிலைமை போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்கிறது. இந்த சூழலில், ஜி20 பொருளாதாரங்களான இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் பங்கு இன்னும் முக்கியமானது. பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலை நிலைநிறுத்துவதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.


இது சம்பந்தமாக, குறிப்பாக தென்மேற்கு ஆசியப் பகுதி உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது. இது ஒரு, கூட்டுறவு மற்றும் கூட்டு அணுகுமுறையை முக்கியமானதாக ஆக்குகிறது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற விவாதத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் சிலர் இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளனர்.


இந்தப் பயணத்தின் முடிவுகளைப் பார்க்கும்போது, ​​மோடிக்கும் MBS-க்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதைக் காண்கிறோம். இது வர்த்தகம், வாணிபம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் உறவுகள் போன்ற வழக்கமான சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது. வளர்ந்து வரும் இந்தோ-சவுதி ஒத்துழைப்பின் மூன்று முக்கியப் பகுதிகளை இந்த சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது. அவை, சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு (environment and food security), பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு (defense and counter-terrorism) மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு (cultural cooperation) போன்றவை ஆகும்.


சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவும் சவுதி அரேபியாவும் சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளன. இந்த பகுதிகளில் விவாதங்கள் மற்றும் செயல் திட்டங்களில் அவர்கள் பணியாற்றியுள்ளனர். இரு நாடுகளுக்கும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் பலங்கள் உள்ளன. இந்த பலங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை மற்றும் பூர்த்திசெய்யும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன.


பிரதமர் மோடி மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை, அவர்களின் நீண்டகால ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஒத்துழைப்பு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதில் உரங்களின் வர்த்தகமும் அடங்கும். இரு நாட்டு தலைவர்களும் நீண்டகால ஒப்பந்தங்களில் பணியாற்றவும் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தங்கள் விநியோகத்தைப் பாதுகாப்பது, பரஸ்பர முதலீடுகள் மற்றும் கூட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்தும். உணவுப் பாதுகாப்பில் நீண்டகால இராஜதந்திர ரீதியில் ஒத்துழைப்பை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள் ஆகும்.


இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக எரிசக்தி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. சமீபத்தில், இந்த இரு நாட்டு உறவுகள் ஒரு நாடுகடந்த உறவிலிருந்து ஒரு இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையாக வளர்ந்துள்ளன. நிலையான எரிசக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒத்துழைப்பைப் பற்றி இரு தரப்பினரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.


இதன் விளைவாக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளன. சூரிய ஆற்றல் திறனை ஆராய்வதில் இந்தியாவும் சவுதி அரேபியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன.


காலநிலை மாற்றத்தில் அதிக ஒத்துழைப்பு


காலநிலை மாற்றம் ஒத்துழைப்பின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக, இரு நாட்டு தலைவர்களும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் காலநிலை மாற்றத்தில் அதிக ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். 


காலநிலை மாற்ற விவாதத்தில் வடக்கு மற்றும் தெற்கு இடையே வளர்ந்து வரும் பிளவு காரணமாக இது முக்கியமானது. சவுதி அரேபியா மற்றும் இந்தியா போன்ற பெரிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் உலகத் தலைவர்களால் அதிகளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க இந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, பலதரப்பு அமைப்புகளில், குறிப்பாக கட்சிகளின் மாநாடு மற்றும் G20-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானது.


எனவே, இந்தியாவும் சவூதி அரேபியாவும், மோடி மற்றும் எம்பிஎஸ் இடையேயான இருதரப்பு சந்திப்பின்போது, ​​"ஆதாரங்களை விட கார்பன் உமிழ்வை மையமாகக் கொண்டு காலநிலை ஒப்பந்தங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டியதன் அவசியம்" குறித்து ஒப்புக்கொண்டன. கார்பன் உமிழ்வைக் குறைத்தல், காடு வளர்ப்பு மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் இரு தரப்பு முயற்சியையும் அவர்கள் பாராட்டினர். 


எடுத்துக்காட்டாக, சவுதி இராச்சியம் பசுமை முன்முயற்சி மற்றும் மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், சவூதி அரேபியாவால் கார்பன் உமிழ்வை நிர்வகிப்பதற்கும் காலநிலை மாற்ற நோக்கங்களை அடைவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்ட கார்பன் பொருளாதாரத்தின் (circular carbon economy) முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "சர்வதேச சோலார் கூட்டணி (International Solar Alliance), ஒரே சூரியன் - ஒரே உலகம் - ஒரே மின்கட்டமைப்பு (One Sun-One World-One Grid), பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (Coalition of Disaster Resilient Infrastructure (CDRI)) மற்றும் சுற்றுச்சூழலுக்கான மிஷன் வாழ்க்கை முறை ​​(Mission Lifestyle for Environment (LiFE)) மற்றும் உலகளாவிய பசுமை கடன் முன்முயற்சி (Global Green Credit Initiative), உள்ளிட்ட இந்திய முயற்சிகள் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டன.


பாதுகாப்பு, பாதுகாப்புத் தன்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு


பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை சமீபத்தில் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன. இதில் மிக முக்கியமான பகுதி, அதிகரித்து வரும் இராணுவங்களுக்கு இடையேயான உறவுகள் (military-to-military ties) ஆகும். இந்த உறவுகளில் கூட்டுப் பயிற்சி, பயிற்சிகள், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் வழக்கமான உயர்மட்டக் கூட்டங்களை நடத்துவது ஆகியவை அடங்கும். கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.


கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன. சைபர் பாதுகாப்பு (cybersecurity), எல்லைப் பாதுகாப்பு (border security) மற்றும் நாடுகடந்த குற்றம் (fighting transnational crime), போதைப்பொருள் (narcotics) மற்றும் போதைப்பொருள் கடத்தலை (drug trafficking) எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.


ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் பிரதமர் தனது பயணத்தை ஒரு நாள் குறைக்க வேண்டியிருந்தது. இதனால், இருநாட்டு தரப்பினரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். "எந்த காரணத்திற்காகவும் எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்." 


மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்டித்தபோது மோடியும் முகமது பின் சல்மானும் (MBS) பாகிஸ்தானைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டனர். பயங்கரவாதத்தை நிராகரிக்கவும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றவும், பொறுப்பானவர்களை விரைவாக நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டனர். பயங்கரவாதத்தை எந்தவொரு இனம், மதம் அல்லது கலாச்சாரத்துடனும் இணைப்பதையும் அவர்கள் நிராகரித்தனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதிலும் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை அவர்கள் பாராட்டினர்.


ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களை பயங்கரவாதிகள் அணுகுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் சவுதி அரேபியாவும் வலியுறுத்தின. இந்த முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமானது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழுவை உருவாக்குவதாகும். மோடி மற்றும் MBS தலைமையிலான இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மை கவுன்சிலின் கீழ் உள்ள இந்தக் குழு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை உறவுகளை வலுப்படுத்த உதவும்.


கலாச்சார உறவுகள்


வழக்கமாக, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் கலாச்சார உறவுகள் முக்கியமாக ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரைகள் (Hajj and Umrah pilgrimage) மூலம் காணப்படுகின்றன. மேலும், பல இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இது இந்தியாவில் உள்ள பல குடும்பங்களை ஆதரிக்க உதவுகிறது. தற்போது, ​​சுமார் 2.5 மில்லியன் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். இந்திய சமூகம் அதன் கடின உழைப்புக்கு பெயர் பெற்றது. சமீபத்தில், இந்தியாவில் இருந்து முதலீடுகள் மற்றும் வணிகங்களும் வளர்ந்து, இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.


சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளும் சுற்றுலா, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் போன்ற புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராயத் தொடங்கியுள்ளன. சவுதி அரேபியா தனது பார்வை-2030 (Vision 2030) திட்டத்தின் கீழ் பெரிய சீர்திருத்தங்களைச் செய்து வருவதால் இது முக்கியமானது. இந்தப் பகுதிகளில் திறனைத் திறக்க உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாடு பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக, இசை மற்றும் ராக் விழாக்கள், செங்கடல் திரைப்பட விழா மற்றும் NEOM, நியூ முராப்பா, முகாப், அல்-உலா மற்றும் திரியா போன்ற பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற நிகழ்வுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த வருகையின் போது, ​​வளர்ந்து வரும் கலாச்சார ஒத்துழைப்பை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். பாரம்பரியம், திரைப்படம், இலக்கியம் மற்றும் நிகழ்ச்சி மற்றும் காட்சி கலைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழுவை உருவாக்குவது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மை கவுன்சிலின் கீழ் நான்காவது அமைச்சரவைக் குழுவான சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அமைச்சர் குழுவை உருவாக்குவது ஒரு சிறப்பம்சமாகும். இதில் திறன் மேம்பாடு மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.


விரிவடையும் எல்லைகள்


இந்திய-சவுதி இருதரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளன. மேலும், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)), நிலையான வளர்ச்சி, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் பலவற்றின் மூலம் இணைப்பு போன்ற துறைகளில் அதிக ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. 


இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகள், ஹஜ் மற்றும் உம்ரா மற்றும் இந்திய வெளிநாட்டினரின் பங்களிப்புகள் ஆகியவை உறவின் முக்கிய அம்சங்களாகும். இரு தரப்பினரும் தங்கள் இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையை அங்கீகரிப்பதால், அவர்கள் புதிய எல்லைகளுக்கு விரிவடைந்து வருகின்றனர். இதில் இருவழி முதலீடுகள், எரிசக்தி பாதுகாப்பு, தளவாடங்கள், விநியோகச் சங்கிலி இணைப்புகள் (supply chain links) மற்றும் தொடர்பு (connectivity) ஆகியவை அடங்கும். இது அவர்களின் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 


பிரதமர் மோடியின் பயணம், இந்தியா-சவுதி அரேபியா உறவுகளில் வழக்கத்திற்கு மாறான பகுதிகளின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை ஒத்துழைப்பு, உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவை இந்த பகுதிகளில் அடங்கும். இந்த வருகை பாரம்பரிய ஒத்துழைப்பு பகுதிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இது இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


Original article:
Share:

பதட்டமான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (LoC) : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் எதைப் பற்றியது? -பஷீர் அலி அப்பாஸ்

 ஒரு வாரத்திற்கும் மேலாக, பாகிஸ்தான் இராணுவம் ஒவ்வொரு இரவும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் (Line of Control(LoC)) போர் நிறுத்தத்தை மீறி வருகிறது. ஒவ்வொரு மீறலுக்கும் இந்தியாவிலிருந்து பதிலானது தகுந்தளவில் கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தன்மை என்ன? இந்த மீறல்கள் ஏன் நடக்கின்றன? அவை ஏன் நிறுத்தப்படுகின்றன?


கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control(LoC)) மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள பல இராணுவப் பிரிவுகளில் வியாழக்கிழமை இரவும் தொடர்ந்து 8-வது நாளாக பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர். இது, இந்திய இராணுவம் இந்த ஒவ்வொரு மீறலுக்கும் "அளவீடு மற்றும் விகிதாசார முறையில்" (calibrated and proportionate manner) பதிலளித்துள்ளது.


ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் இந்தியாவின் பதிலடி, இதுவரை இரு தரப்பிலும் எந்த இறப்பையும் ஏற்படுத்தவில்லை.


ஆனால், பிப்ரவரி 2021-ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ இயக்குநரகங்கள் (Directorates General of Military Operations (DGMOs)) ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் போர்நிறுத்தத்தை புதுப்பித்ததில் இருந்து இந்த மீறல்கள் போர்நிறுத்தத்தின் மிகத் தீவிரமான முடிவைக் குறிக்கின்றன.


இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் எப்படி உருவானது? நெருக்கடி காலங்களில் போர் நிறுத்தத்தை மீறுவது எதைக் குறிக்கிறது?


கட்டுப்பாட்டுக் கோடு : இயற்கை மற்றும் பரிணாமம்


இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்பது ஒரு முறையான ஒப்பந்தத்தைவிட ஒரு புரிதலாக உள்ளது.


இரண்டு வழக்கமான இராணுவப் படைகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் பொதுவாக ஒரு போர் முடிந்த பிறகு நடக்கும். இது நிலப்பரப்பில் ஒரு கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு இராணுவப் படையும் இந்தக் கட்டுப்பட்டு எல்லைக் கோட்டில், சொந்த நாடுகளில் உள்ள பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.


இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இதுபோன்ற போர் நிறுத்தம் கடைசியாக டிசம்பர் 1971-ல் ஏற்பட்டது. இதற்கான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பெரும்பாலும் 1948-49 போருக்குப் பிறகு கராச்சி ஒப்பந்தத்தால் (1949) நிறுவப்பட்ட "போர் நிறுத்த எல்லைக் கோடு" (Ceasefire Line) போலவே இருந்தது.


சிம்லா ஒப்பந்தம் 1972-ல் கையெழுத்தானது. இது எல்லையை "கட்டுப்பாட்டு எல்லைக் கோடு" (LoC) என்று மறுபெயரிட்டது. இது ஒரு இராணுவ எல்லையாகும். இது இந்தியா அல்லது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பிராந்தியளவில் உரிமைகோரல்களைப் பாதிக்காது. இதன் பொருள், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை அல்ல. மாறாக, இரு நாட்டு இராணுவப் படைகளும் தற்போது நாடுகளின் நிலைகளை குறிப்பதற்காக வைத்திருக்கும் ஒரு கோடாகக் கருதப்படுகிறது.


கட்டுப்பாட்டு எல்லைக் கோடு சுமார் 740 கி.மீ தூரம் உடையது. இது காஷ்மீரில் உள்ள சங்கம் (Sangam) அருகே தொடங்கி சியாச்சின் பனிப்பாறைக்கு அருகிலுள்ள NJ-9842 புள்ளி Point (NJ-9842) வரை செல்கிறது. ஜம்மு பகுதியில், கட்டுப்பாடு எல்லைக் கோடு இந்தியாவிற்கான சர்வதேச எல்லையாக (International Border (IB)) மாறுகிறது. இந்தக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் பகுதி பஞ்சாபின் எந்தப் பகுதியையும் இந்தியாவானது உரிமை கோரவில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்த எல்லையை ஒரு "வேலை செய்யும் எல்லை"யாகக் (Working Boundary) கருதுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் இந்தியப் பகுதியின் அருகில் உள்ள ஜம்முவை உரிமை கோருகிறது. எனவே, இதனால் பாகிஸ்தான் இந்த எல்லையை தீர்க்கப்படாததாகக் கருதுகிறது.


பல ஆண்டுகளாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பயனுள்ள எல்லையாக மாறியுள்ளது.


அதன் இராணுவத்தின் இயல்பான தன்மையின் காரணமாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பெரும்பாலும் இரு நாடுகளின் படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் சர்வதேச எல்லையிலிருந்து (IB) வேறுபட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் வலுவான தற்காப்பு கட்டமைப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் உள்ளனர்.


இரு நாட்டு தரப்பினரும் மறுபக்கமாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் எந்தவொரு "ஒருதலைப்பட்ச மாற்றங்களையும்" (unilateral changes) செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் பனி உருகும்போது (snow melts) அல்லது குவியும் போது (accumulates seasonally) போன்ற பருவகால மாற்றங்கள் காரணமாக கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு இயற்கையாகவே மாறக்கூடும். இதில் இராணுவ வீரர்கள் அல்லது பொதுமக்கள் (எ.கா., மேய்ப்பர்கள்) போன்ற அங்கீகரிக்கப்படாத நபர்கள் எல்லையைக் கடப்பதைத் தடுக்கவும் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.


இரண்டு அணு ஆயுத நாடுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள், ஒருவருக்கொருவர் எதிரெதிரே நிலைநிறுத்தப்பட்ட போர் வரலாற்றைக் கொண்டிருப்பதால், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு எப்போதும் பதட்டங்களுக்கு உள்ளாகிறது.


எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் "எல்லை நடவடிக்கைக் குழுக்களின்" (Border Action Teams) தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட அர்த்தமற்றதாக்கியுள்ளன. ஏனெனில், 1989-ல் காஷ்மீரில் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இது குறிப்பாக உண்மையின் வெளிப்பாடாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, 1972-க்குப் பிறகு முதல் துப்பாக்கிச் சூடு நடந்தபோது போர் நிறுத்தம் காலாவதியானது.


அப்போதிருந்து, ஒரு சில பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு நிலை நிறுத்தப்படும் போதெல்லாம், இரு நாடு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்கிறார்கள். சில சமயங்களில், 1990-களில் அல்லது 2016 மற்றும் 2021-க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீறல்கள் நடந்தன. குறிப்பாக, 1990கள், இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளைப் பிரிவின் (Northern Command) இராணுவ வீரர்களால் "அனைவருக்கும் இலவசம்" (free for all) என்று பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன.


ஷேக்ஸ்பியரின் வழியில், போர்நிறுத்தம் பெரும்பாலும் "கடைபிடிப்பை விட மீறலில் அதிக மரியாதைக்குரியது" (more honoured in the breach than the observance) (ஹேம்லெட், சட்டம் I) என்று குறிப்பிடுகிறது.


மீறல்கள் : நிறுத்தமும் தொடக்கமும்


மீறல்கள் ஏன் நிகழ்கின்றன?, அவை ஏன் நிறுத்தப்படுகின்றன?


1972-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நெருக்கடியின் போதும் கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளன.


2016ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு எதிரான இந்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் போன்ற வரையறுக்கப்பட்ட சிறிய-ஆயுத துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் இருந்து முழு அளவிலான எல்லை தாண்டிய நடவடிக்கைகள் வரை இத்தகைய மீறல்கள் உள்ளன.


சில நேரங்களில், இந்த மீறல்கள் தரையில் உள்ள உள்ளூர் இயக்கவியலின் விளைவாக (local dynamics on the ground) இருக்கலாம். இந்த காரணிகள் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை அல்ல.


இந்த "தன்னாட்சி இராணுவ காரணிகள்" (ஹேப்பிமான் ஜேக்கப், ”லைன் ஆன் ஃபயர்: போர் நிறுத்த மீறல்கள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் விரிவாக்க இயக்கவியல்”, 2019) இரு இராணுவங்களும் எல்லையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதிலிருந்து எழுகின்றன. இதில் மறுபுறம் உள்ள பிரிவுகளை தொடர்ந்து "சோதிக்க" வேண்டிய அவசியம், இராணுவ வீரர்களின் மன உறுதியைப் பேணுதல், இராணுவ வெறுப்புகளைத் தீர்த்து வைத்தல் அல்லது மறுபக்கத்தைவிட மேன்மையைக் காட்ட வேண்டிய அவசியம் ஆகியவை இதில் அடங்கும்.


முன்னாள் வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எச் எஸ் பனாக் உட்பட பல இந்திய ஜெனரல்கள் கூறியது போல், ஒரு தரப்பினர் மற்றவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தடுக்கும் கடுமையான உத்திக்கான விதிகள் எதுவும் இல்லை.


இருப்பினும், எழுதப்படாத நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.


உள்ளூர் கமாண்டர்களுக்கு இடையேயான "கொடி சந்திப்புகள்" (flag meetings) மற்றும் புதுதில்லி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள இரண்டு இராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநரகங்களுக்கு இடையேயான தீவிர நிகழ்வுகளும் இதில் அடங்கும்.


இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அத்துமீறல்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதம் அளிக்கவில்லை, மேலும் அவ்வாறு செய்யவுமில்லை. கட்டுப்பாடு எல்லைக் கோடு ஒரு தனித்துவமான எல்லையாகும். இங்கு, வன்முறை பொதுவானது மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.


தற்போதைய நெருக்கடி: இப்போது என்ன?


2021-ம் ஆண்டில், இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இரண்டும் கட்டுப்பாட்டு எல்லை கோட்டில் போர் நிறுத்தத்தை மீறுவதை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன. இந்தியா-பாகிஸ்தான் கூட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் 2003 ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய "புரிந்துணர்வு" அடைய அவர்கள் இலக்கு வைத்தனர்.


பாகிஸ்தான் இராணுவம் புதிய உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் கையாண்டது. அது ஆப்கானிஸ்தானுடனான நிலைதன்மையின்மைக்குட்பட்ட எல்லையையும் எதிர்கொண்டது. இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை, போர் நிறுத்தம் லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) சீனாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் அதிகக் கவனம் செலுத்த அவர்களுக்கு வாய்ப்பளித்தது.


விதிமீறல்கள் வருடத்திற்கு ஒரு சில குறிப்பிட்ட சம்பவங்களாகக் குறைந்ததால், உள்ளூர் மக்கள் பயனடைந்தனர். எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள் எல்லையோர கிராமங்களை நேரடியாகப் பாதிக்கிறது. இதில் வெளிப்பட்ட தவறான குண்டுகள் அல்லது தோட்டாக்கள் பொதுமக்களைக் கொல்லும். மேலும், இதில் குறிப்பிடும்படியாக, மகத்தான பயிர் விளைச்சல் மற்றும் நிலையான வாழ்வாதாரங்களில் நன்மைகள் காணப்பட்டன.


இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த புரிதலைப் பேணுவதற்கு காரணங்கள் உள்ளன. 2019 முதல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் முறிந்ததிலிருந்து, இரு நாடுகளும் முக்கியமாக இராணுவ வழிகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன.


2021-ம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சங்கா கூறுகையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உள்ள முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்ய இயக்குநரகத்தில் உள்ள தீவிர நிகழ்வு கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் பயன்படுத்தப்படுகிறது. முக்கிய சம்பவங்களின் போது, ​​இயக்குநர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசுகிறார்கள்.


ஏப்ரல் 29 அன்று, இராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநர் (Director General of Military Operations(DGMO)) இருந்து பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் அவசர தொலைபேசி எண்ணில் பேசினர். பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் போர் நிறுத்த மீறல்களுக்கு இந்தியத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் இந்தியப் படைகள் மீது அழுத்தம் கொடுக்க உதவுகிறது. குறிப்பாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று அஞ்சுவதால், பாகிஸ்தானின் பலவீனங்களை சோதிக்கவும் இது அனுமதிக்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுப்பது மட்டுமே பிரச்சினை அல்ல. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் விவகாரத்தைப் போலவே, இந்தியாவும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை (International Border (IB)) தற்செயலாகக் கடந்ததிலிருந்து அவர் பாகிஸ்தான் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெருக்கடி காலங்களில், இந்த தற்செயலான கடவுகள் (accidental crossings) ஒரு தரப்பினரால் மறுபுறம் செல்வாக்கு செலுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன.


எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு என்பது பெரும்பாலும் நெருக்கடியின் போது இரு நாடு தரப்பினரும் எடுக்கும் முதல் நடவடிக்கையாகும். இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். ஏனெனில், இரு தரப்பினரும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் பல ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இருப்பினும், நிலைமை மோசமடையக்கூடிய ஆபத்து எப்போதும் உள்ளது.


பஷீர் அலி அப்பாஸ் புது தில்லியில் உள்ள இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலில் மூத்த ஆராய்ச்சி நிபுணராக உள்ளார்.


Original article:
Share: