விவசாய உற்பத்தி மற்றும் தேவையில் பருவமழையின் தாக்கத்தை புறக்கணிக்க முடியாது

 அரசாங்கம் தனது சந்தை தலையீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். 


வடகிழக்கு பருவமழையின் சீரற்ற தாக்கம் ராபி பயிர் (rabi crop) வளர்ச்சியை பாதிக்கலாம். இந்த ஆண்டின் இறுதியில் அரசாங்கம் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தென் மாநிலங்களில் நீர்த்தேக்கங்கள் குறைவாக இருப்பதாக  செய்தித்தாள் செய்திகள் வெளியிட்டுள்ளது. மேலும், ராபி பயிர்களின் விதைப்பு குறைவாக இருப்பதாக தரவு காட்டுகிறது. ரபி அரிசி, நிலக்கடலை மற்றும் பருப்பு வகைகள், முக்கியமாக பருப்பு உற்பத்தி குறைவதை இது அறிவுறுத்துகிறது.


முக்கிய ராபி பயிர்களான (rabi crop) கோதுமை மற்றும் கடுகு ஆகியவை வட மாநிலங்களில் விளைகின்றன என்பது உண்மைதான். இங்கு, நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உள்ளது. இந்த பருவத்தில் கடுகுக்கான பரப்பளவு 1.7% அதிகரித்துள்ளது, கோதுமை பரப்பளவு 1.2% குறைந்துள்ளது. இருப்பினும், இது மிகப்பெரிய கவலை அல்ல. சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்புகளின் அதிக இறக்குமதி காரணமாக விலை உயர்வு கட்டுப்படுத்தப்படலாம். கோதுமை மற்றும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சிறந்ததாக இல்லாவிட்டாலும், அவை எடுக்கப்படுகின்றன. ஆனால், நெல், நிலக்கடலை மற்றும் பயறு வகைகளின் உற்பத்தி குறைந்ததன் விளைவை நாம் புறக்கணிக்க முடியாது. இது குறிப்பாக தீபகற்ப மாநிலங்களில் கிராமப்புற தேவையை பாதிக்கிறது. பொருளாதாரம் உயர்ந்த நிலைக்குச் செல்லும் போது, கவனிக்காமல் இருக்க முடியாது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) சமீபத்திய அறிக்கை வடகிழக்கு பருவமழை சீரற்றதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தின் உள்பகுதியிலும், கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் டிசம்பர் மாதத்தில் மழை குறைந்துள்ளது. இருப்பினும், தென் தீபகற்பத்தில் இயல்பை விட 126% அதிக மழை பெய்துள்ளது. இதனால் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மாநிலங்களிலும் காரீஃப் காலத்தில் மழை குறைவாக இருந்தது. இது குறிப்பாக பருப்பு உற்பத்தியை பாதித்தது. இந்த ராபியில் பருப்பு சாகுபடி பரப்பு 7% குறைந்துள்ளது. இது 153 லட்சம் ஹெக்டேரிலிருந்து 142 லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. குளிர்கால நெல் விதைப்பும் 13.3% குறைந்துள்ளது. 23ஆம் நிதியாண்டில் 16.5 லட்சம் ஹெக்டேரில் இருந்து 14.4 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் நான்கு மில்லியன் டன்கள் குறைவதற்கு வழிவகுக்கும். இது 23ஆம் நிதியாண்டில் 135 மில்லியன் டன்களுடன் ஒப்பிடப்படுகிறது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவிலும் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இது சீரற்ற மழையின் காரணமாகும். காரீஃப் நிலக்கடலை சாகுபடி 3.3% குறைந்துள்ளது. 23ஆம் நிதியாண்டில் 45.3 லட்சம் ஹெக்டேரிலிருந்து 43.8 லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. ராபி நிலக்கடலை பரப்பில் மேலும் சரிவு இருக்கலாம். இது ஒரு லட்சம் ஹெக்டேர் குறைந்து 3.3 லட்சம் ஹெக்டேராக இருக்கும்.


பண்ணை உற்பத்தியிலுள்ள நெருக்கடியை கையாளும் போது, நாம் இரண்டு நடுத்தர கால கொள்கை சிக்கல்களை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக, நெல் விளைச்சலில் ஒரு சிறிய குறைவு நம்மை மிகவும் கவலையடையச் செய்யக்கூடாது. ஏனெனில் வறண்ட நிலங்களில் நெல் சாகுபடியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இரண்டாவதாக, ஏற்றுமதி தடை அல்லது இறக்குமதி விதிகளில் திடீர் மாற்றங்கள் விவசாயிகளின் உணர்வுகளையும் எதிர்கால உற்பத்தியையும் பாதிக்கும். 24ஆம் நிதியாண்டில் பருப்பு வகைகளின் இறக்குமதி மூன்று மில்லியன் டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 31 சதவீதம் அதிகம். சிறந்த சந்தை தலையீடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். விரைவான மாற்றங்கள் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களின் சாகுபடியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ரத்து செய்யலாம். உற்பத்தி குறையும் போது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் விவசாயிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இந்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.




Original article:

Share:

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் - முன்பை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர் -சஞ்சய பாரு

 சமீப காலம் வரை, பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-resident Indians (NRIs)) இந்தியக் குடியுரிமையைப் பேணி வந்தனர். ஆனால் இப்போது, மற்ற நாடுகளில் உள்ள நட்பு குடியுரிமைக் கொள்கைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான எளிமை காரணமாக, அதிகமான இந்தியர்கள் மற்ற நாடுகளின் குடிமக்களாக மாறத் விரும்புகிறார்கள்.


பணம் செலுத்துபவர்கள் அல்லது அரசாங்கத்துடன் நல்ல தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே அரசாங்க வேலைகளைப் பெறுகிறார்கள் என்ற உணர்வு உள்ளது, 303 இந்தியர்கள் சட்ட விரோதமாக நிகரகுவாவுக்கு விமானம்  மூலம் சென்றபோது பிடிபட்டனர் இது பற்றிய சமீபத்திய செய்திகளைக் சேகரிக்கும் பத்திரிகையாளரிடம் மெஹ்சானாவைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். “நல்ல ஊதியம் தரும் தனியார் வேலைகள் இல்லை. எனவே, இந்தியாவில் இருந்துகொண்டு நிரந்தரமாகப் போராடுவதை விட, கனடாவிலோ, அமெரிக்காவிலோ ஏதாவது ஒரு வீட்டு வேலையில் இருந்துகொண்டு நன்றாகச் சம்பாதிப்பது நல்லது.


பல நூற்றாண்டுகளாக, குஜராத்தில் இருந்து பல இந்தியர்கள் வேலைக்காக வேறு இடங்களில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், 2020களில், இந்தியாவின் சூழ்நிலைகள் மக்களை விரக்தியிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்துகின்றன. தி இந்து நாளிதழின் அறிக்கையின்படி, நவம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது கிட்டத்தட்ட 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-20 ஆம் ஆண்டில் பிடிபட்ட 19,883 இந்தியர்களுடனும், 2021-22 ஆம் ஆண்டில் 63,927 பேருடனும் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.


ஏப்ரல் 2014 முதல் 'குஜராத் மாடல்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், நரேந்திர மோடியின் தலைமையில் குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவிலும் உலகெங்கிலும் மிகவும் பாராட்டப்பட்டது என்று கூறப்பட்டது. இது குஜராத்தின் வளர்ச்சி சார்ந்த நிர்வாகத்தையும் முன்னேற்றப் பயணத்தில் மக்களின் தீவிரப் பங்கேற்பையும் எடுத்துக்காட்டியது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏதோ தவறு நடந்துள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. 


விரக்தியடைந்த இந்தியர்கள் சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேடி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள், அதே சமயம் செல்வந்தர்கள், பெரும்பாலும் பெரும் செல்வந்தர் (high net worth individuals (HNIs)) என்று அழைக்கப்படுபவர்கள், வெளிநாட்டில் குடியேற விசாக்களை வாங்குகின்றனர். லண்டனை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் (Henley & Partners) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில், 7,500 பெரும் செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்களாகவும் குடிமக்களாகவும் இருந்தனர். உலகளாவிய முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி  (Morgan Stanley), 2014 மற்றும் 2018 க்கு இடையில், 23,000 இந்திய கோடீஸ்வரர்கள் மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். 


பொருளாதார காரணங்களுக்காகவோ அல்லது பிற வாய்ப்புகளுக்காகவோ இடம்பெயர்வு போக்கு கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏழைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் செல்வந்தர்களின் இடம்பெயர்வு அதிவேகமாக அதிகரித்துள்ளது. ஏழைகள் பணப்பட்டுவாடா மற்றும் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் அதே வேளையில், தொழில் வல்லுநர்கள் தங்கள் சந்தைப்படுத்தக்கூடிய திறமையைப் பயன்படுத்தி வேலை விசாக்களைப் பெறுகிறார்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் வெளிநாட்டு குடியுரிமையை வாங்குகிறார்கள். பணக்கார இந்தியர்களுக்கு குடியுரிமையை விற்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களில் தொடங்கி, கட்டாயக் குடியேற்றத்தின் வரலாறு இந்தியர்களுக்கு உண்டு. பலருக்கு சிறந்த வாழ்க்கை உறுதியளிக்கப்பட்டது, ஆனால் அடிமைத்தனத்தில் முடிந்தது. 1970கள் மற்றும் 1980களில், இந்தியத் தொழிலாளர்கள் வளைகுடா பகுதியில் வெளிநாட்டில் வேலை செய்ய தூண்டப்பட்டனர், கடினமான சூழ்நிலையில் வேலை செய்தனர்.


சுவாரஸ்யமாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, வளைகுடா தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, எந்தக் குழுவும் தாயகம் திரும்பத் தேர்வு செய்யவில்லை. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முன்னாள் இந்திய குடிமக்களாக விருப்பம் வழங்கப்பட்டது, ஆனால் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் தங்க விரும்பினர். காலப்போக்கில், அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மேம்பட்டன, மேலும் அவர்கள் பெரும்பாலும் கிழக்கு இந்திய கிராமங்களில் உள்ள தங்கள் உறவினர்களை விட உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தனர். வளைகுடாவில், தொழிலாளர்கள் சிறந்த நிலைமைகளுக்காக போராடினர் மற்றும் வீடு திரும்புவதற்கு பதிலாக இரட்டை குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையை கோரியுள்ளனர். 


ஒவ்வொரு ஆண்டும், 2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர், மேலும் பல்வேறு பகுதிகள் மற்றும் தொழில்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர், இப்போது கிட்டத்தட்ட 30 மில்லியனாக உள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) இப்போது குடியுரிமை இல்லாத சீனர்களை விட அதிகமாக உள்ளனர். கடந்த காலத்தில், பல  வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை வைத்திருந்தனர், ஆனால் பல நாடுகளில் உள்ள கவர்ச்சிகரமான குடியுரிமைக் கொள்கைகள் மற்றும் அந்நியச் செலாவணியை எளிதாக அனுப்புவது அதிக இந்தியர்களை வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற வழிவகுத்தது.  

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜூலை 21, 2023 அன்று நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில் 225,260 இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையை துறந்ததாகக் குறிப்பிட்டார், இது 2020 இல் 85,256 ஆக இருந்தது. 2011 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 1,663,440 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். 2023 இன் முதல் ஆறு மாதங்களில், 87,026 பேர் ஏற்கனவே இதைச் செய்திருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் பல இந்திய குடிமக்கள் உலகளாவிய வேலை வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அவர்களில் சிலர் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்ததாகவும் அமைச்சர் விளக்கினார்.     

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஒரு சொத்து என்று அரசாங்கத்தில் பலர் நம்புகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை "மூளை வங்கி"(brain bank) என்று குறிப்பிட்டார்.  இந்தியாவுக்குள் அனுப்பப்படும் பணம் கடந்த ஆண்டு 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு செங்குத்தாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு இந்தியர்கள் ஒரு "மூளை வங்கி" என்ற அபத்தமான கூற்றை நியாயப்படுத்த இந்த பண வரவுகள் "மூளை வரவுகளுடன்" பொருந்தவில்லை.  

வெற்றிகரமான, செழிப்பான மற்றும் செல்வாக்குமிக்க புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு நன்மை செய்வதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அறிவு மற்றும் நிபுணத்துவ பரிமாற்றங்களை ஊக்குவிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார். நிதி வரவுகளை கணக்கிடுவது எளிதானது என்றாலும், அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் ஓட்டம் தெளிவற்றதாகவே உள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் வீட்டிலுள்ள கடினமான சூழ்நிலைகளால் இடம்பெயர்கின்றனர், அதே நேரத்தில் பணக்கார இந்தியர்கள் அரசாங்க நிறுவனங்களைப் பற்றிய கவலைகளால் வெளியேறுகிறார்கள். வெளிநாட்டில் சேருவதற்கு உதவும் கல்விக்கான தேவை அதிகரித்து வருவது, நடுத்தர வர்க்கம் எப்படி இந்தியாவை விட்டு வெளியேற விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. 

இந்த போக்கு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களால் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை, ஏனெனில் அவர்களின் பெரும்பாலான குழந்தைகள் ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டனர். இருப்பினும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது கணிசமாக அதிகரித்து வருகிறது. இது உலகளாவிய தொழிலாளர் பற்றாக்குறையால் இயக்கப்படுகிறது, இது இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான தேவைக்கு வழிவகுத்தது. அதே போன்று, மோடியின் "புதிய இந்தியா" (“New India”) விலிருந்து வெகு தொலைவில், சிறந்த, பாதுகாப்பான வாழ்க்கைக்கு இடம்பெயர வேண்டும் என்ற பலரின் விருப்பத்தால் அது வடிவமைக்கப்பட்டு வருகிறது.


வெளிநாட்டு இந்தியர்கள் மத்தியில் மத தீவிரவாதிகளால் முன்வைக்கப்படும் சவால்களை அரசாங்கம் உணர்ந்துள்ளதால், புலம்பெயர்ந்தோர் ஒரு நன்மையாகவும் பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அவர்கள் இல்லாத பாதிப்பை உணர்ந்து இப்போது முதியோர் இல்லங்களில் முதலீடு செய்கின்றனர். இதற்கிடையில், பணக்காரர்கள் துபாய், சிங்கப்பூர், லண்டன், லிஸ்பன் மற்றும் கேமன் தீவுகள் போன்ற பல்வேறு கவர்ச்சியான இடங்களில் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.    


எழுத்தாளர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், இந்தியப் பிரதமரின் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.   




Original article:

Share:

அமெரிக்காவின் தலைமையிலான உலகளாவிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துக் கொண்டிருக்கவில்லை -சி. ராஜா மோகன்

 உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவை சீனா முந்தியது, ஐரோப்பாவை அமெரிக்க மேலாதிக்கத்திலிருந்து விடுவித்து, ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக உருவெடுத்தது என்ற கோட்பாடுகள் தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஒழுங்கு சீர்குலைகிறதா? உக்ரேனில் இராணுவ நிலைப்பாடு, மத்திய கிழக்கில் விரிவடையும் மோதல் மற்றும் ஆசியாவில் சீனாவின் உறுதிப்பாடு ஆகியவை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய உலகம் உலகளவில் சிரமங்களை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டலாம். அமெரிக்காவில் வளர்ந்து வரும் அரசியல் பிளவு மற்றும் 2024 இல் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை மேற்குலகின் உணர்வை வலுப்படுத்துகின்றன.  


மேற்குலகின் தற்போதைய பின்னடைவுகளை உலக அரசியலில் ஒரு முக்கிய தருணமாகக் கருதும் "கிழக்கு" அரசியல் உயரடுக்கின் பல பிரிவினரிடையே வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது. நான்கு நூற்றாண்டுகளின் மேற்கத்திய ஆதிக்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவைப் பற்றியது. மேற்குலகின் தொடர்ச்சியான சுயவிமர்சனம் மற்றும் பிற நாடுகளின் எழுச்சி பற்றிய கவலை ஆகியவை உலக ஒழுங்கில் ஒரு புதிய நூற்றாண்டைப் பற்றிய இந்த கருத்துக்கு பங்களிக்கின்றன. இந்தியாவும் இந்த கருத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 


மேற்குலகம் அழிந்து வருகிறதா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள். இந்தியா, குறிப்பாக, மேற்கு நாடுகளுடன் அதன் நல்லுறவை மதிக்கிறது மற்றும் அதன் வீழ்ச்சியை விரும்பவில்லை. ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்காவை சீனா மாற்றுவதை டெல்லி விரும்பவில்லை. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெரிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உதவுவதில் மேற்கு நாடுகளை ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா பார்க்கிறது.


மேற்குலகின் வீழ்ச்சி பற்றிய விவாதம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆயினும் கூட, கடந்த நூறு ஆண்டுகால கொந்தளிப்பில் இருந்து தப்பிய புவிசார் அரசியல் கருத்து இருந்தால், சர்வதேச கம்யூனிசம் (international communism), பான்-ஆசியவாதம் (pan-Asianism), பான்-அரபிசம் (pan-Arabism), பான்-இஸ்லாமிசம் (pan-Islamism),  மற்றும் மூன்றாம் உலகவாதம் (third-worldism) போன்ற பிற கருத்துக்கள் மறைந்துவிட்டாலும், மேற்கு நாடுகளின் கருத்து நிலைத்திருக்கிறது.


மேற்குலகம் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து காலனித்துவ பேரரசுகளை இழந்துள்ளது. நாஜி ஜெர்மனி, இம்பீரியல் ஜப்பான் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சவால்களையும் இது வென்றுள்ளது. இப்போது, ​​இது சீனாவுடன் ஒரு புதிய போட்டியில் உள்ளது. மேலும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது. மிக சமீப காலம் வரை, சீனா அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், ஐரோப்பாவை அமெரிக்க மேலாதிக்கத்திலிருந்து விடுவித்து ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக வெளிப்படும் என்றும் பரவலாகக் கருதப்பட்டது.


அந்த கனவுகளில் சில உண்மைக்கு எதிராக மோதிக் கொண்டன. வளர்ச்சியின் மந்தநிலை மற்றும் மக்கள்தொகை சரிவு, சீனா எந்த நேரத்திலும் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்த வாய்ப்பில்லை. இருப்பினும், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டணி மேற்கத்திய ஆதிக்கத்திற்கு சவால் விடக்கூடும். ரஷ்யாவும் சீனாவும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன. ரஷ்ய அதிபர் புதின், அவரது கடுமையான பேச்சுகள் இருந்தபோதிலும், ரஷ்யா ஒரு பெரிய பங்கைக் கொண்டிருக்கும். ஒரு புதிய ஐரோப்பிய ஏற்பாட்டிற்கு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் தேவை. ஒருமுறை மேற்கத்திய ஆசிய ஒழுங்கைப் பற்றிப் பேசிய ஜி ஜின்பிங், இப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமெரிக்க தலைமையிலான உலகளாவிய ஒழுங்கை தூக்கியெறிய விரும்பவில்லை, ஆனால் கண்ணியமாக இணைந்து வாழ விரும்புவதாகக் கூறுகிறார்.


ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும், சில அரசியல் குழுக்கள் மேற்கத்திய நாடுகளைப் போலவே இருக்க விரும்புகின்றன மற்றும் அமெரிக்கா தலைமையிலான அமைப்புடன் இணைந்து செயல்படவும் விரும்புகின்றன. அவர்கள் மேற்கத்திய அல்லாத அல்லது மேற்கத்திய எதிர்ப்பு பாதையை விரும்பும் மற்றவர்களுடன் போரிட வேண்டியிருந்தது. மேற்கத்தியவாதிகள் இப்போது செல்வாக்கு செலுத்தவில்லை, ஆனால் அவை இன்னும் அரசியல் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புதினும், ஜி ஜின்பிங்கும் மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவுக்கான பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். இருப்பினும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அவர்களின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளை அமெரிக்காவிற்கு நெருக்கமாகத் தள்ளி மேற்குலகின் செல்வாக்கை வலுப்படுத்துகின்றன. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பலர், தொலைதூர ஆனால் சக்திவாய்ந்த நட்பு நாடான, பிராந்திய சக்திகளை சமநிலைப்படுத்த உதவுவதற்கு அமெரிக்காவைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.     


மத்திய கிழக்கில் கதை வேறு இல்லை. ஈரான் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான ஒழுங்கை உலுக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு மாற்று வழியை ஊக்குவிக்கும் அளவுக்கு அது வலுவாக இல்லை. பல அரபு ஆட்சிகள் ஈரான் மற்றும் ஹமாஸ் போன்ற அதன் பினாமிகள் இஸ்ரேலை விட தங்கள் இருப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கின்றன. பல அரபு நாடுகளுக்கு, தொலைதூர அமெரிக்கா ஒரு மதிப்புமிக்க மற்றும் தெஹ்ரானுக்கு எதிரான ஒரே சமநிலையாக உள்ளது.


மேற்கு நாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு அரணாக BRICS இன் சாத்தியமான பங்கைப் பற்றி என்ன? அர்ஜென்டினா சமீபத்தில் குழுவில் சேர மறுத்துவிட்டது, கடந்த ஆண்டு அவர்கள் அழைக்கப்பட்ட போதிலும். இந்தோனேசியாவும் தாங்கள் முன்பு சேரத் தயாராக இல்லை என்று கூறியது. தவிர, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் BRICS மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) போன்ற  அமைப்புகளை பாதித்துள்ளன. அங்கு இரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு பங்களிக்கும் இந்த குழுக்களுக்குள் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.


G7 இன் உலகளாவிய பொருளாதார செல்வாக்கு குறைகிறதா? ஆம், முக்கியமாக ஐரோப்பாவின் சரிவு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் G7 இன் பங்கு குறைந்து வருகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா கிட்டத்தட்ட 24%   குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பாவின் பொருளாதார சரிவு, ரஷ்யா தொடர்பான பாதுகாப்பு கவலைகள், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஒற்றுமையை பலப்படுத்தும்.


உலகின் பிற பகுதிகள் வளர்ந்து வரும் நிலையில், புதிய அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மேற்கு நாடுகள் முன்னணியில் உள்ளன. வலுவான பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் மேற்கத்திய நாடுகளுக்கு சவால்களை கையாள உதவுகின்றன. மேற்கத்திய கல்வி, ஆராய்ச்சி, கலை மற்றும் கலாச்சாரம் இன்னும் குறிப்பிடத்தக்க உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் உட்பட பலர் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் சட்டப்பூர்வமாகவோ அல்லது இல்லாமலோ செல்ல விரும்புகிறார்கள். அவர்களின் அரசியல் தலைவர்களின் சார்ந்துள்ள தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அதிருப்தியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள திறமையான நபர்கள் மீதான மேற்கு நாடுகளின் ஈர்ப்பைக் குறைக்காது.


தற்போதைய கட்டத்தில், இந்தியாவும் மேற்கு நாடுகளும் இப்போது வலுவான உறவுகளைக் கொண்டிருந்தாலும், இரு தரப்பிலிருந்தும் சில இந்திய அரசியல்வாதிகள் எழுச்சி பெறும் கிழக்கு மற்றும் வீழ்ச்சியடையும் மேற்கு என்ற கருத்தை நம்ப முனைகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மேற்கு நாடுகளுக்கு எதிரான குறைகளை, பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ, பழையதாகவோ அல்லது புதியதாகவோ, அவர்கள் தூண்டப்படும்போதெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள்.


உலகளாவிய செல்வாக்கை உயர்த்துவதில்  இந்தியா கவனம் செலுத்துகிறது மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான கருத்தியல் போர்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இந்தியா ஏற்கனவே இதுபோன்ற மோதல்களை கடந்த காலங்களில் அனுபவித்தது மற்றும் அவற்றிலிருந்து கற்றுக் கொண்டது. 21 ஆம் நூற்றாண்டில், இந்தியா இரண்டு பத்தாண்டுகளாக மேற்கத்திய நாடுகளுடன் உற்பத்தித் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இது மேற்குலகுடனான அதன் இராஜதந்திரக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையையும் பேச்சுவார்த்தைத் திறனையும் அளிக்கிறது.




Original article:

Share:

புகையிலையிலிருந்து டிக்டாக் வரை : பெருநிறுவனங்களின் உத்திகள் நமக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன -விக்ரம் படேல்

 சமூக ஊடக அடிமைத்தனம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகள் பெருநிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்த வேண்டும்.


உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கு மத்தியில், சமீபத்தில்  பன்னாட்டு மன்னிப்பு அவையினால்  (Amnesty International) வெளியிடப்பட்ட 'இருளில் தள்ளப்பட்டது' (Driven into Darkness) என்ற வெளியீடு கவனிக்கப்படாமல் போனது. ஏனெனில் உலகளாவிய அளவில் இளைஞர்களின் மனநல நெருக்கடிக்கு பிரபலமான சமூக ஊடக தளமான TikTok எவ்வாறு பங்களிக்கிறது என்பதை அறிக்கை ஆவணப்படுத்தியதால் இது ஒரு கவலைக்கிடமாக உள்ளது. TikTok இன் வணிக மாதிரியானது "ஆழ்ந்த பாரபட்சமான மற்றும் ஆக்கிரமிப்பு மாதிரியான கண்காணிப்பு லாபத்திற்காக" நம்பியிருப்பதாக மற்றொரு அறிக்கை காட்டுகிறது. TikTok வேண்டுமென்றே அதன் உள்ளடக்கத்தின் மூலம்  அடிமையாக்குகிறது என்று மன்னிப்பு சபையின் ஆய்வு வெளிப்படுத்தியது. இது பயனர்களை அதிகம் ஈடுபடுத்த சமூக ஊடக நிறுவனங்களிடையே போட்டிக்கு வழிவகுத்தது. எளிமையான சொற்களில், இந்த நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்களை அடிமையாக்கும் வழிமுறைகளை உருவாக்கியது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் முரண்பாடான தகவல் என்னவென்றால், சமூக ஊடக நிறுவனங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கின்றன. அதே நேரத்தில் இளைஞர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமையாக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துகின்றன.


பல நிறுவனங்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அதே நேரத்தில் நிறைய பணம் சம்பாதித்துள்ளன. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். முதல் உதாரணம், ஓரளவு சரித்திரம் என்றாலும், இன்னும் தகவல் தருகிறது. ஹார்வர்டு பல்கலைகழகத்தின் சக ஊழியரான ஆலன் பிராண்ட், "சிகரெட் செஞ்சுரி" (The Cigarette Century) என்ற புத்தகத்தை எழுதினார். மில்லியன் கணக்கான மக்களைக் கொன்ற ஒரு பொருளை விற்பனை செய்வதன் மூலம் புகையிலை தொழில் நம்பமுடியாத அளவிற்கு லாபம் ஈட்டியது. 1950 வாக்கில், அமெரிக்காவில் உள்ள அனைத்து ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்களும் சிகரெட் புகைக்கும் அளவுக்கு விளம்பரம் மற்றும் பொது உறவுகள் புகைபிடிப்பதை எவ்வாறு பொதுவானதாக மாற்றியது என்பதை புத்தகம் காட்டுகிறது. அதைவிட முக்கியமானது என்னவென்றால், 1920களிலேயே புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய சான்றுகள் இருந்தபோதிலும், 40 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு மருத்துவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் பெறுவதன் மூலம் புகையிலைத் தொழில் பொதுமக்களைக் குழப்பியது. அமெரிக்காவும், பல உலக நாடுகளும் இறுதியாக நடவடிக்கை எடுத்தன. இதற்கான, சான்றுகள் அதிகமாக இருந்தபோது, ​​தொழில்துறையானது "பாதுகாப்பான குறைந்த தார்" (safer low-tar) சிகரெட்டுகளை ஊக்குவிக்கத் தொடங்கியது மற்றும் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் பொது சுகாதார பிரச்சினைகளை தீர்க்க சுதந்திரமாகத் தோன்றிய நிதியுதவி முயற்சிகள் மேற்கொண்டன.


இரண்டாவது உதாரணம் மிகவும் சமகாலமானது மட்டுமல்ல, இன்னும் வெளிவருவதற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தொழில்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலின் விளைவாக பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் தொழிலால் இயக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மரணங்கள் மற்றும் நோய்களின் தினசரி எண்ணிக்கையை நாம் பார்க்கும்போது, ​​இது வரவிருக்கும் பேரழிவின் ஆரம்பம் மட்டுமே. வெள்ளம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக முழுப் பகுதிகளும் வாழத் தகுதியற்றதாக மாறக்கூடும். புகையிலைத் தொழிலைப் போலவே, புதைபடிவ எரிபொருள் தொழிலும் தங்கள் தயாரிப்புகள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நீண்ட காலமாக அறிந்திருக்கிறது. கல்வித்துறையில் சந்தேகம் கொண்டவர்களுக்கு நிதியளிப்பதன் மூலமும், காலநிலை மாற்றத்தை மறுக்கும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் அவர்கள் உலகை ஏமாற்ற முடிந்தது. சான்றுகள் புறக்கணிக்க மிகவும் தெளிவாகத் தெரிந்தபோது, குறிப்பாக காலநிலை மாற்றம் பணக்காரர்களையும் சக்திவாய்ந்தவர்களையும் கூட பாதிக்கத் தொடங்கியது. அவர்கள் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவதற்கும் நிதியளிப்பு முயற்சிகளைத் தொடங்கினர். 


இதே காரியத்தைச் செய்த மற்ற நிறுவனங்களின் பட்டியலைத் தொடரலாம். ஆனால் உண்மையான ஆபத்து நிறுவனங்களால் அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் எப்பொழுதும் செய்வதாகக் கூறுவதை அவர்கள் செய்கிறார்கள் - பணம் சம்பாதிக்கிறார்கள். உண்மையான பிரச்சனை என்னவென்றால், நம்மை பிரதிநிதித்துவப்படுத்த நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கங்கள் பெருநிறுவன உலகின் முகவர்களாக மாறிவிட்டன. இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் உயிர்வாழ பெருநிறுவனங்களின் நேரடி மற்றும் மறைமுக பங்களிப்புகளைச் சார்ந்துள்ளது.


நவம்பர் 2023 இல், மெட்டா மீது வழக்குத் தொடர 41 அமெரிக்க மாநிலங்கள் இணைந்தது ஒரு சிறப்பு தருணம். இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக்கை (Facebook) அடிமையாக்கி குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். TikTok மீதான மன்னிப்பு சபையின் அறிக்கையின் அதே முடிவை அடைந்த ஒரு பெரிய விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு வந்தது. இளம் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் அளவு, அவர்களின் தரவைச் சேகரித்தல் மற்றும் குழந்தைகளின் தனியுரிமை தொடர்பான சட்டங்களை மீறுவதன் மூலம் அவர்களை ஏமாற்றுவதன் மூலம் அவர்களிடமிருந்து பணம் சம்பாதிப்பதற்கான திட்டத்தை நிறுவனம் பயன்படுத்தியதாக கூட்டாட்சி சட்டங்கள் புகார் கூறுகிறது. புகையிலை, சோடா, நொறுக்குத் தீனி போன்ற தொழில்கள், அதனால் ஏற்படும் தீங்கை அறிந்து இளைஞர்களை வேண்டுமென்றே சிக்க வைக்கின்றன. OpenAI இன் சமீபத்திய சிக்கல்கள் குறுகிய காலத்தில் பெரிய செயற்கை நுண்ணறிவு இலாபத்திற்கான ஆசை மற்றும் மனிதகுலத்தின் உயிர்வாழ்விற்கான நீண்ட கால ஆபத்துகளுக்கு இடையே இதேபோன்ற போரை வெளிப்படுத்துகின்றன.


பெருநிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டு என்பது நமது சமூகங்கள் மற்றும் பூமியின் உயிர்வாழ்வதற்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறுவது மிகையாகாது. பல ஜனநாயக நாடுகளில், பணத்தின் செல்வாக்கு ஒரு பிரச்சனை, ஆனால் நமது வாக்குகளும் குரல்களும் இன்னும் முக்கியம். பெருநிறுவன தலைவர்கள் தங்கள் தயாரிப்புகளால் ஏற்படும் தீங்குகளுக்கு பொறுப்பேற்க விதிகள், வரிகள் மற்றும் அபராதங்களை அமல்படுத்துவதன் மூலம் நமது அரசியல் தலைவர்கள் நம்மை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நாம் கோர வேண்டும். நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறியது போல், சமூக இயக்கங்கள் மூலம் கூட்டு நடவடிக்கையும் நமக்குத் தேவை. "பொது மக்கள் செயலற்றவர்களாகவும், அலட்சியமாகவும், நுகர்வோர் அல்லது வெறுப்பால் திசைதிருப்பப்பட்டவர்களாகவும் இருக்கும் வரை, சக்தி வாய்ந்தவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம்."


எழுத்தாளர் பால் ஃபார்மர் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உலகளாவிய சுகாதார பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share:

இந்தியாவை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டம் மற்றும் மாலத்தீவில் அதன் தாக்கம் -அபிஜித் சிங்

 இந்தியாவுடனான நீரியல் (hydrography pact) ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்று மாலத்தீவு முடிவு செய்தது, மேலும் சீனாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் அவர்களின் ஆர்வத்தை அது காட்டுகிறது.


மாலத்தீவு  சமீபத்தில் இந்தியாவுடனான தங்கள் கடல் பகுதியில் கூட்டு நீரியல் ஆய்வுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இந்திய ஊடகங்கள் மற்றும் முதன்மையான வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, இது இந்தியா-மாலத்தீவு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடையாளமாக பார்க்கப்பட்டது.


டிசம்பர் 2023-ம் ஆண்டின் மையப்பகுதியில், மாலத்தீவுகள் தங்கள் தீவுகளில் இருந்து இந்திய இராணுவ இருப்பை அகற்றுமாறும். புது தில்லியை அதிகாரப்பூர்வமாகக் கோரிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்தது. இந்தியாவுடனான இராணுவ ஒத்துழைப்பைப் பற்றிய தங்கள் விருப்பமின்மையைக் காட்ட, மாலத்தீவு  டிசம்பரில் சமீபத்தில் நடந்த கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பவில்லை.

  

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான நம்பிக்கை மோசமான நிலையில் உள்ளது. நவம்பர் 2023 இல் மொஹமது முய்ஸு மாலத்தீவின் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, புது தில்லியில் இருந்து விலகி இருக்க மாலத்தீவு முயற்சி செய்து வருகிறது. நீரியல் ஒப்பந்தத்தை முடிப்பது அதன் சுதந்திரத்தையும் கட்டுப்பாட்டையும் காட்டுவதற்கான ஒரு வழியாகும் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று மாலத்தீவு விரும்புகிறது, ஆனால் அது இல்லை. இந்தியாவுடனான தனது உறவை சமநிலைப்படுத்துவதற்குப் பதிலாக, மாலத்தீவு சீனாவுடன் அரசியல் ரீதியாக தன்னை இணைத்துக் கொண்டது. நீரியல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காத முய்ஸு அரசாங்கத்தின் முடிவு, இறையாண்மை பற்றிய எந்த கவலையையும் விட பெய்ஜிங்குடனான அதன் சிறப்புத் தொடர்பைப் பற்றியதாகத் தெரிகிறது. மாலத்தீவு கடற்பரப்பில் இருந்து இந்திய நீரியல் கப்பல்களை அகற்றுவது, சுற்றியுள்ள கடல்களில் கடல்சார் ஆய்வுகளில் சீனாவுக்கு உதவுவதாகத் தெரிகிறது.


நீரியலின் இரட்டை இயல்பு


நீரியலின் தரவு சிவிலியன் மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு உதவி செய்ய முடியும். கடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பாதுகாப்பான வழிசெலுத்தல், கடல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற விஷயங்களுக்கு உதவுகிறது. அதே நேரத்தில், ஒரு நாட்டின் கடலோர வசதிகள் மற்றும் இராணுவ சொத்துக்களை கண்காணிப்பது போன்ற இராணுவ நோக்கங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படலாம். 


நீரியல் தொடர்பான கொள்கையில் சீனா தனித்து நிற்கிறது, ஏனெனில் அது அதன் கடல் மற்றும் கடலடி ஆய்வுகளை முக்கியமாக இராஜதந்திர நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது. ஷி யான் (Shi Yan ) போன்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் அடிக்கடி காணப்படும் யுவான் வாங் (Yuan Wang) தொடர் போன்ற உளவுத்துறை-கண்காணிப்பு-உளவுக் கப்பல்களைப் பயன்படுத்தி, சீனா ஒரு விரிவான கடல்சார் ஆராய்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் இருப்பு சீனாவின் வளர்ந்து வரும் கடற்படையால் ஓரளவு மறைக்கப்படுகிறது. ஆனால் சீனாவைப் பொறுத்தவரை, தொலைதூர கடல்களில் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் கடல்சார் இராஜதந்திரத்திற்கு இந்த ஆய்வுகள் மற்றும் உளவுத்துறை மிகவும் முக்கியமானது. கடந்த ஆண்டு சீன அதிகாரிகள் இலங்கை மற்றும் மாலத்தீவுகளை தங்கள் கடல் ஆய்வுக் கப்பல்கள் நிறுத்த அனுமதி கோரி பலமுறை அணுகியது தற்செயல் நிகழ்வு அல்ல. 

 

சீனாவின் ஆய்வுகள் குறித்து  


 சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் திறன்களை மேம்படுத்த சீனாவின் கடல் ஆய்வுகள் முக்கியமானவை என்று இந்திய நிபுணர்கள் நம்புகின்றனர். கடலின் வெப்பநிலை மற்றும் நீரோட்டங்கள் மற்றும் சுழல் போன்ற பிற நிகழ்வுகளைப் படிப்பது சோனார் அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது, இது எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதை எளிதாக்குகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். கடல் சூழலைப் புரிந்துகொள்வது, சீன நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதைத் தவிர்க்கவும், கரையோரப் போருக்கான நிலையை மேம்படுத்தவும் அனுமதிக்கும் அமைப்புகளை உருவாக்க உதவுகிறது. 


இருப்பினும், நட்புறவு கொண்ட தெற்காசிய நாடுகளின் கடல் பகுதியில் சீனாவின் கடல்சார் ஆய்வுகள் இந்திய நீரியல் கப்பல்கள் பிராந்தியத்தில் இருப்பதால் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வெளிநாட்டு கப்பல்களின் நீருக்கடியிலான சென்சார் செயல்பாட்டை கண்காணிக்கும் திறன் இந்திய கடற்படைக்கு உள்ளது. இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளின் கடல் பகுதியில் இந்தியக் கடற்படையின் செயல்பாடுகள் சீனாவின் சொந்த கடல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்று சீன கடலியல் ஆய்வு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


மாலத்தீவில் சீனா கடற்படை தளம் அமைக்க விரும்புவதாக புதுதில்லியில் பேசப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் லட்சத்தீவுகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள இடமான மகுனுதூ அட்டோலில் ஒரு கடல் கண்காணிப்பு மையத்தை சீனா திட்டமிட்டிருந்தது. அந்த நேரத்தில், மாலத்தீவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீர்மூழ்கிக் கப்பல் தளமாக இருப்பது போன்ற இராணுவப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம் என்று கவலைப்பட்டனர். சீனா அந்த திட்டத்தை மீண்டும் தொடர்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதை நிராகரிக்க முடியாத ஒன்றாக ஆக்குகின்றன.


மாலத்தீவின் கவலைகள்


இந்தியாவின் நீரியல் தொடர்பான நடவடிக்கைகளில் உளவுத்துறை சேகரிப்பில் அடங்கும் என்று மாலத்தீவு கவலை கொண்டுள்ளது. இந்த கவலைகள் ஆதாரமற்றவை அல்ல, ஏனெனில் மாலத்தீவு கடற்பரப்பில் இந்தியாவின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை என்பதால் அல்ல, மாறாக நீரியல் கொள்கைகளை நிர்வகிக்கும் சட்டங்களும் விதிகளும் இராணுவ ஆய்வுகளுக்கு ஒத்ததாக இருப்பதால். கடல் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) ஒரு கடலோர நாட்டிற்கு அதன் பிராந்திய கடல்களுக்கு வெளியே செய்யப்படும் நீரியல் அல்லது இராணுவ ஆய்வுகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வெளிப்படையாக வழங்கவில்லை. ஒரு கடலோர அரசு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone (EEZ)) கடல் அறிவியல் ஆராய்ச்சியை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதன் பொருள் நீரியல் ஆய்வுகளை நடத்தும் வெளிநாட்டு கடல்சார் முகவர்கள் கடலோர மாநிலத்தின் பிராந்திய கடல்களுக்கு அப்பால் கடல்களை வரைபடமாக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

நீரியல் ஆய்வு என்பது அறிவிற்காக தரவுகளை சேகரிப்பது மட்டுமல்ல என்பதை   உணரும்போது வித்தியாசம் தெளிவாகிறது. கடல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கடல்சார் தொழில் அல்லது ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கு இது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உதவுகிறது. இருந்தபோதிலும், இந்தியா உட்பட பல கடற்படைகள் தங்கள் பிராந்தியங்களில் நீரியல் ஆய்வுகளை நடத்துவதில் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளன. உதாரணமாக, இந்திய கடற்படை 1990 களில் இருந்து மொரிஷியஸுக்கு நீரியல் ஆய்வுக்கு உதவி வருகிறது. அவர்கள் மொரீஷியஸின் பரந்த பிரத்தியேக பொருளாதார மண்டலங்களை வரைபடமாக்குகின்றனர் மற்றும் மொரிஷியன் நீரியல் ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கூட திறன்களை உருவாக்குகின்றனர்.


மாலத்தீவின் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாகும். கடல் ஆய்வுகளை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது இந்தியா அல்ல, சீனாதான் என்பதை முய்ஸு அரசு புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அரசியல் காரணங்களுக்காக பெய்ஜிங்குடன் ஒரு இராஜதந்திர கூட்டாண்மைக்கான விருப்பம் மாலத்தீவுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.             


அபிஜித் சிங், புது தில்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனில் (Observer Research Foundation (ORF)) கடல்சார் கொள்கை முன்முயற்சியின் தலைவராக உள்ளார்.




Original article:

Share:

ராஜ்பவனுக்கு தீவிர சீர்திருத்தங்கள் தேவை -காளீஸ்வரம் ராஜ்

 எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் நடத்தையைப் பற்றி சிந்திக்கவும், அவர்களின் விதிமீறல்களின் சட்டரீதியான விளைவுகளைப் புரிந்து கொள்வதற்கான நேரம் இது.


கேரள ஆளுநர் தவறான காரணங்களுக்காக தற்போதைய செய்திகளில் இடம்பிடித்துள்ளார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, தனக்கு எதிரான சுவரொட்டிகளைக் அகற்றுமாறு போலீசாரிடம் கூறினார். மேலும் அவர் இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆர்வலர்களை "குற்றவாளிகள்" என்றும், முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அவரது வருகைக்குப் பின், தெளிவான நெறிமுறைகளை மீறி, எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிக்கோடு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பொதுவானதாகி வருவதால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் நடத்தையைப் பற்றி சிந்திக்கவும், அத்தகைய பிறழ்வுகளின் சட்டரீதியான விளைவுகளைப் புரிந்து கொள்வதற்கான நேரம் இது.


அரசியலமைப்புச் சட்டம் பொதுச் செயல்பாட்டாளர்களின் தனிப்பட்ட நடத்தையைக் கையாளும் என்று எதிர்பார்க்க முடியாது; இது ஆளுநர்களின் செயல்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி மட்டுமே பேசுகிறது. எவ்வாறாயினும், அரசியலமைப்பு ஒழுக்கம் என்ற கருத்து ஆளுநர்களை அவர்களின் பொது நடத்தையில் நிர்வகிக்க வேண்டும். தேசிய தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசம் vs. இந்திய யூனியன் (National Capital Territory of Delhi vs. Union of India (2018)) வழக்கில், உச்ச நீதிமன்றம் "அரசியலமைப்பு கலாச்சாரம்" (constitutional culture) என்ற கருத்தின் அடிப்படையில் "அரசியலமைப்புச் சட்டத்தின் தார்மீக விழுமியங்களை" (constitutional morality)  நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. அரசியலமைப்பு நெறிமுறைகள் அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் மீது பொறுப்புகளை சுமத்துவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது. துணைவேந்தராக செயல்படும் போதும், திரு. கான் ஆளுநராகவே இருக்கிறார். அவரது நடவடிக்கைகள் அரசியலமைப்பு ஒழுக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பது விவாதத்திற்குரிய விஷயம். 


அதிகாரத்திற்கான வரம்புகள்

 

அரசியலமைப்பின் 361வது பிரிவு ஆளுநர்களுக்கு வரையறுக்கப்பட்ட மற்றும் நிபந்தனைக்குட்பட்ட விலக்குரிமையை மட்டுமே வழங்குகிறது. ஆளுநர்கள் தங்கள் அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளின் செயல்பாடு மற்றும் செயல்திறனுக்காகவோ அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ நிலையில் அவர்களால் செய்யப்பட்ட அல்லது செய்யப்படுவதாகக் கூறப்படும் எந்தவொரு செயலுக்கும் எந்த நீதிமன்றத்திலும் பதிலளிக்க தேவையில்லை என்று அது கூறுகிறது. இருப்பினும், இந்த அதிகாரத்திற்கான வரம்புகள் அவர்களின் அதிகாரப்பூர்வ கடமைகளுடன் தொடர்பில்லாத தவறான நடத்தைக்காக அவர்களைப் பாதுகாக்காது.


    2006 ஆம் ஆண்டு ராமேஸ்வர் பிரசாத் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா (Rameshwar Prasad v. Union of India) வழக்கில், பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைப்பதில் ஆளுநர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததைக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் உந்துதல் மற்றும் விசித்திரமான நடத்தை நீதித்துறை மறுஆய்வுக்கு ஏற்றது என்று கூறியது. ஆயினும்கூட, அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகளுக்கு ஆளுநர்கள் விலக்கு கோர முடியுமா என்ற கேள்வி ராமேஷ்வர் பிரசாத் வழக்கில் இல்லை. இருப்பினும், "பதவியின் புனிதத்தை" பராமரிக்க "சரியான நபர்களை" கவர்னர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


2023 ஆம் ஆண்டு கௌஷல் கிஷோர் வெர்சஸ்  உத்திரப்பிரதேச மாநில அரசு (Kaushal Kishor v. State of Uttar Pradesh) வழக்கில் பொது அலுவலர்கள் (public functionaries) இழிவான கருத்துக்களைக் கூறுவது குறித்த கேள்வி எழுந்தது. அரசு அதிகாரிகளுக்கான கருத்துச் சுதந்திரம் அரசமைப்புச் சட்டத்தின் 19(2) பிரிவின்படி, "நியாயமான கட்டுப்பாடுகள்" மூலம், பொதுச் அலுவலர்களின் கருத்துச் சுதந்திரத்தை குறைக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அமைச்சர்கள் சூழலில், நீதிபதி பி.வி. நாகரத்னா, பொதுச் அலுவலர்களின் அறிக்கை அரசாங்கத்தின் கருத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அது அமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார். அரசு சார்பற்ற நபர்களுக்கு எதிரான அடிப்படை உரிமைகளை அமல்படுத்தும் முறை குறித்த நீதிபதி நாகரத்னாவின் பார்வையில் இருந்து பெரும்பான்மையான கருத்து வேறுபட்டாலும், பொதுச் செயல்பாட்டாளர்களின் தனிப்பட்ட பொறுப்பு, அவர்களின் பொதுக் கடமையுடன் தொடர்பில்லாத விஷயங்களில் கருத்து வேறுபாடு இல்லை. உதாரணமாக, ஒரு பொது அதிகாரி குற்றம் செய்தாலோ அல்லது அவதூறில் ஈடுபட்டாலோ, அவர்களின் அதிகாரபூர்வமான கடமையுடன் தொடர்பில்லாதிருந்தால், அவர்களுக்கு சட்டத்தின் கீழ் எந்த விலக்குகளும் இல்லை.


கமிஷன் அறிக்கைகள்


1988 ஆம் ஆண்டு சர்க்காரியா கமிஷன் அறிக்கை (Sarkaria Commission Report) சில ஆளுநர்கள் பாரபட்சமற்றவர்களாகவும், அவர்களின் பதவிக்காலத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவதாகவும் விமர்சித்தது. இந்த பிரச்சனை காலப்போக்கில் இன்னும் மோசமாகிவிட்டது. ஆளுநர்கள் உள்ளூர் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது, ஆனால் அது நடக்கவில்லை.


நீதிபதி எம்.எம். புஞ்சி கமிஷன் (Justice M.M. Punchhi Commission) அறிக்கை (2010), ஆளுநர்கள் தங்கள் கடமைகளை நியாயமாக செய்ய அரசியலமைப்பு அனுமதிப்பதைத் தாண்டி கூடுதல் அதிகாரங்களை வழங்கக்கூடாது என்று கூறியது. இவர்களை பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிப்பது  சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். கேரளாவில் ஆளுநரின் வேந்தர் பொறுப்பை நீக்க அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, மேலும் மசோதாவிற்க்கு கவர்னரின் ஒப்புதலுக்காக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. அதன் பின்னரே அவர் மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் சட்டபேரவையின் அனுமதியின்றி  வேந்தராக பல்கலைக்கழகத்திற்குச் சென்றது ஜனநாயக சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருக்கவில்லை.


எதிர்காலத்தில், சர்க்காரியா அறிக்கையின்படி, ஆளுநர் நியமனங்களில் முதலமைச்சரை கலந்து ஆலோசிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 155வது பிரிவை திருத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தியத் தலைமை நீதிபதியின் குறிப்பிடத்தக்க உள்ளீட்டைக் கொண்ட ஒரு தனி அமைப்பு, தேர்வு செயல்முறையை மேம்படுத்த ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பாக இருக்கும். கவர்னர்கள் பதவிக்காலத்திற்குப் பிறகு எந்த அதிகாரப் பொறுப்பும் வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ தடையும் இருக்க வேண்டும். எனவே ராஜ்பவன்களுக்கு முறையான மாற்றங்கள் தேவை.


காளீஸ்வரம் ராஜ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்




Original article:

Share:

உலகளாவிய அணுசக்தி ஒழுங்கு சிக்கல்களை சந்தித்து வருகிறது -ராகேஷ் சூத்

 உலகளாவிய அணுசக்தி ஒழுங்கு (global nuclear order (GNO)) பனிப்போரின் போது நிறுவப்பட்டது மற்றும் ஒப்பீட்டளவில் நிலையானது. ஆனால் அது இப்போது உலகளாவிய அரசியலில் மாற்றங்கள் காரணமாக சவால்களை எதிர்கொள்கிறது.


எந்தவொரு உலகளாவிய ஒழுங்குமுறையும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு, இரண்டு நிபந்தனைகள் தேவை. முதலாவதாக, பெரும் அதிகாரவர்க்கத்தினர் அதை ஒப்புக் கொள்ள வேண்டும், இரண்டாவதாக, அது ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை செய்ய வேண்டும். உலகளாவிய அணுசக்தி ஒழுங்கு (global nuclear order (GNO)) வேறுபட்டதல்ல, தற்போது, அது சிரமங்களை எதிர்கொள்கிறது.


பனிப்போரின் பாடங்கள்    


உலகளாவிய அணுசக்தி ஒழுங்கு பனிப்போரின் போது நிறுவப்பட்டது. அப்போது, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை மேற்கத்திய மற்றும் சோசலிச முகாம்களை வழிநடத்தின. 1962இல் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி மற்றும் பொதுச் செயலாளர் நிகிதா குருசேவ் இருவரும் இரண்டு அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டனர். முதலாவதாக, இரண்டு பெரிய அணுசக்தி வல்லரசுகளாக இருந்ததால், ஒரு அணுசக்தி சார்ந்த போருக்கு இட்டுச் செல்லும் பதட்டங்களைத் தடுப்பதற்கான வழிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. இரண்டாவதாக, அணு ஆயுதங்களின் ஆபத்துகளை உணர்ந்து, அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்த விரும்பினர். இந்த பொதுவான புரிதல் உலகளாவிய அணுசக்தி ஒழுங்கை உருவாக்க வழிவகுத்தது.


கியூபா நெருக்கடியின் போது, ஜனாதிபதி கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி மற்றும் சோவியத் தூதர் அனடோலி டோப்ரினின் ஆகியோருக்கு இடையேயான இரகசிய தொடர்பு சேனல் (secret back-channel) நெருக்கடியை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கான, முதல் படி 1963 இல் ஒரு ஹாட்லைன் (hotline) நிறுவப்பட்டது. இது தலைவர்களுக்கு இடையே நேரடி தகவல்தொடர்புகளை அனுமதித்தது. இந்த ஹாட்லைன் (hotline) பின்னர் அணுசக்தி அபாயக் குறைப்பு மையங்களாக மேம்படுத்தப்பட்டது. ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இரண்டு அணுசக்தி வல்லரசுகளும் தங்கள் அணு ஆயுதப் போட்டிகளைக் கட்டுப்படுத்தவும், இராஜதந்திர நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் இலக்காகக் கொண்டுள்ளன.


அணு ஆயுதப் பரவலைத் தடுக்க, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் 1965 இல் அணு ஆயுதங்களின் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (Nuclear Non-Proliferation Treaty (NPT)) அறிமுகப்படுத்தினர். ஆரம்பத்தில், இது 60க்கும் குறைவான நாடுகளை உள்ளடக்கியது, ஆனால் இப்போது இன்று 191 நாடுகளின் ஆதரவாளர்களுடன் உலகளாவிய அணுசக்தி ஒழுங்கின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. 


1975 ஆம் ஆண்டில், உலகளாவிய அணுசக்தி ஒழுங்கின் மூன்றாவது அம்சம் நடைமுறைக்கு வந்தது. இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) கையெழுத்திடவில்லை மற்றும் 1974 இல் ஒரு அமைதியான நிலத்தடி அணு சோதனையை நடத்தியது. ஏழு நாடுகள் (அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் மேற்கு ஜெர்மனி) லண்டனில் கூட்டங்களை நடத்தி, அணுசக்தி தொழில்நுட்பம் அமைதியான நோக்கங்களுக்காக மாற்றப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தற்காலிக ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அவசரமாகத் தேவை என்று முடிவு செய்தன. முதலில்  இது லண்டன் கிளப் (London Club) என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது இன்று 48 நாடுகளை உள்ளடக்கிய அணு விநியோகர்களை ஒரு குழுவாக மாற்றியது. அவை அனைத்தும் அணுசக்தி பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கான பொதுவான விதிகளைப் பின்பற்றுகின்றன. நெருக்கமான உறவால், சோவியத் யூனியனும் இந்தியாவும் உலக அணுசக்தி ஒழுங்கை நிலைநிறுத்தின. 1971 இல் இந்தோ-சோவியத் ஒன்றியம் நட்புறவு ஒப்பந்தத்தில் (Friendship Treaty) கையெழுத்திட்டிருந்தாலும், சோவியத் ஒன்றியம் லண்டன் கிளப்பின் நிறுவன உறுப்பினராக இருந்தது.


உலகளாவிய அணுசக்தி ஒழுங்கு பொதுவாக இரண்டு முக்கிய அம்சங்களில் வெற்றிகரமாக உள்ளது. முதலாவதாக, 1945 முதல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான வெறுப்பு உள்ளது. இது அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டு செயல்முறை எவ்வளவு தூரம் தடையைப் பாதுகாக்க உதவியது அல்லது அது வெறும் அதிர்ஷ்டமா என்பது விவாதத்திற்குரிய காரணமாகும். ஆனால் மனிதகுலம் அணு யுகத்தில், 75 ஆண்டுகளாக அணுசக்தி பேரழிவைத் தவிர்க்க முடிந்தது என்பதே உண்மை. 


இரண்டாவதாக, அணு ஆயுதங்கள் பரவாமல் தடுக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. 1970 களில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கும் என்று கணிப்புகள் இருந்தபோதிலும், (1968 இல் ஐந்து நாடுகள் - அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா அணு ஆயுதங்கள் இருந்தன) அதன் பிறகு நான்கு நாடுகள் மட்டுமே அணுசக்திகளாக உருவாகியுள்ளன: அவை, இந்தியா, இஸ்ரேல், வட கொரியா , மற்றும் பாகிஸ்தான் ஆகும். பனிப்போருக்குப் பிறகும், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது ஒரு பொதுவான இலக்காகவே இருந்தது, மாஸ்கோவும் வாஷிங்டனும் இணைந்து சோவியத் அணு ஆயுதங்களை வழங்கிய பெலாரஸ், உக்ரைன் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளை அணுவாயுதமற்றதாக்க முயற்சிகள் மேற்கொண்டன. 1995 இல், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty (NPT)), ஆரம்பத்தில் 25 ஆண்டுகளுக்கு கையெழுத்தானது, இது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. 


இருப்பினும், சில அம்சங்களில், முடிவுகள் கலவையாக உள்ளன. ஆயுதக் கட்டுப்பாட்டு முயற்சிகள் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கிடையேயான அணு ஆயுதக் கட்டுப்பாட்டை நிறுத்தவில்லை. உண்மையில், அவர்களின் அணு ஆயுதங்கள் 1962 இல் 28,000 குண்டுகளில் இருந்து 1980 களின் முற்பகுதியில் 65,000 குண்டுகளாக அதிகரித்தன. ஆயினும்கூட, அவர்களின் தொடர்ச்சியான உரையாடல் மற்றும் சில ஒப்பந்தங்கள் ஆயுதக் கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவியது. 1980களின் பிற்பகுதியில் இருந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் அணு ஆயுதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. இப்போது 12,000 குண்டுகளுக்கு கீழ் குறைந்துள்ளன, இருப்பினும் இது பெரும்பாலும் பனிப்போரின் முடிவு மற்றும் சோவியத் ஒன்றியம் உடைந்ததன் காரணமாகும்.


இரண்டு அணுசக்தி கொண்ட மேலாதிக்கங்களும் உறுதிசெய்யப்பட்ட இரண்டாவது அணுஆயுத நிறுத்தத் திறனின் அடிப்படையில் 'இராஜதந்திர நிலைத்தன்மை' என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டன. இது இரு தரப்புக்கும் அணு ஆயுதப் போரைத் தொடங்குவது சாத்தியமற்றதாக்கியதன் மூலம் ஒரு நிலையான தடுப்பை உறுதி செய்தது. ஆயுதக் கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் ஒரே மாதிரியான அணுசக்தி திறன்கள் இருப்பதை உறுதிசெய்ததுடன், அதை நிலையாக வைத்திருந்தது. நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கு பாதுகாப்பான தகவல் தொடர்பு வழிகளும் இருந்தன. இரண்டு வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் அணுசக்தி தடுப்பு பற்றிய இந்த யோசனைகள் பனிப்போருக்கு அப்பால் நீடித்தன, ஆனால் இப்போது கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.


புவிசார் அரசியலை மாற்றுதல்


இன்றைய அணுசக்தி உலகம் இருமுனை உலகம் அல்ல. அமெரிக்கா இன்னும் உறுதியான சீனாவை எதிர்கொள்கிறது, பிராந்திய ரீதியாகவும் உலகளவில் செல்வாக்கை மீண்டும் பெறுவதில் உறுதியாக உள்ளது. இந்த போட்டி பனிப்போரில் இருந்து வேறுபட்டது, ஏனெனில் இரு பொருளாதாரங்களும் நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன. மேலும் சீனா ஒரு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக போட்டியாளர். தென் சீனா மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை இருப்பது குறித்து சீனா அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் 1996ல் தைவான் ஜலசந்தி நெருக்கடி (Taiwan Strait crisis) ஏற்பட்டதில் இருந்து, அது தனது கடற்படை மற்றும் ஏவுகணை திறன்களை சீராக வளர்த்து வருகிறது.


உலகளாவிய அரசியலை மாற்றுவது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்களில் அதன் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டில், அமெரிக்கா பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை (Anti-Ballistic Missile (ABM)) உடன்படிக்கையை விட்டு வெளியேறியது. மேலும் 2019 ஆம் ஆண்டில், ரஷ்யா விதிகளை பின்பற்றவில்லை என்பதால், இடைநிலை-தடுப்பு அணுசக்தி (Intermediate-Range Nuclear Forces (INF)) ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. எஞ்சியுள்ள ஒரே ஒப்பந்தமான புதிய தொடக்கம் (New START), 2026 இல் காலாவதியாக உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது புதிய தொடக்கத்துக்கான (New START) சரிபார்ப்பு சந்திப்புகள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படவில்லை. ஜெனீவாவில் ஜனாதிபதிகள் ஜோ பிடன் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பிற்குப் பிறகு 2021 இல் இராஜதந்திர நிலைத்தன்மை பற்றிய விவாதங்கள் தொடங்கியது. ஆனால் உக்ரைனில் ஏற்பட்ட மோதலால் இந்த பேச்சுக்கள் வீழ்ச்சியடைந்தன.


கடந்த ஆண்டு, ரஷ்யா ஒருதலைப்பட்சமாக அமெரிக்காவுடன் பொருந்தக்கூடிய விரிவான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) பின்பற்றுவதை நிறுத்தியது. மேலும்,  அணுசக்தி பரிசோதனை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகளை எழுப்பியது. அமெரிக்க-ரஷ்யாக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்ததால், இரண்டு பெரிய அணுசக்தி போட்டியாளர்கள் இருக்கும் சூழ்நிலை இப்போது உள்ளது. மேலும் அவர்கள் இன்னும் நடைமுறையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி பரிசீலித்து வருகின்றனர். கூடுதலாக, உக்ரைனின் நிலைமை குறித்து வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு (North Atlantic Treaty Organization(NATO)) மற்றும் அமெரிக்காவிற்கு அணுசக்தி அச்சுறுத்தல்கள் போன்ற ரஷ்யாவின் நடவடிக்கைகள், அணுசக்தி பிரச்சினைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. இராஜதந்திர நிலைத்தன்மையை உருவாக்கும் பழைய யோசனைகள் இனி செல்லுபடியாகாது.


அணுப் பரவல் தடையின் மீதான பனிப்போரின் போக்கை இயக்கியுள்ளது. மேலும், அணு ஆயுத தொழில்நுட்பம் என்பது 75 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பமாகும். அமெரிக்கா தனது கொள்கைகளில் நடைமுறையில் இருந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. 1960 மற்றும் 70களில் இஸ்ரேல் அணு ஆயுதங்களை உருவாக்கியபோதும், 1980களில் அதன் அணுசக்தித் திட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்தபோதும் அது திரும்பிப் பார்த்தது. மிக சமீபத்தில், அணுசக்தி அல்லாத நாடான ஆஸ்திரேலியாவுடனான AUKUS அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் (ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட) அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை பின்பற்றுபவர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.


1970 களில், அமெரிக்கா வியட்நாமை விட்டு வெளியேறிய பிறகு, தென் கொரியா தனது சொந்த அணு ஆயுத திட்டத்தை உருவாக்க பரிசீலித்தது. இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ், 1975-76 இல் தென் கொரியாவிற்கு மறு செயலாக்க ஆலையை வழங்குவதற்கான தனது வாய்ப்பை பிரான்ஸ் திரும்பப் பெற்றது. மேலும் தென் கொரியா ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர வற்புறுத்தப்பட்டது. சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தென் கொரியர்களில் 70% தங்கள் சொந்த தேசிய அணுசக்தித் தடுப்பை உருவாக்கும் யோசனையை ஆதரிப்பதாகவும், 40% அமெரிக்க அணு ஆயுதங்களை (1991 இல் அகற்றப்பட்டது) தங்கள் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதை ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகின்றன.


1977 முதல் 1988 வரை, சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தியதால், தைவானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டது. ஜப்பான் அதன் கடந்த காலத்தின் காரணமாக ஒரு வலுவான அணுசக்தி எதிர்ப்பு உணர்வைக் கொண்டிருந்தாலும், ஜப்பானில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் பாதுகாப்பு செலவினங்களை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.


பனிப்போரின் போது, அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அணுசக்தி ஒப்பந்தம் வழங்கியது, அது அவர்களை நெருக்கமாக்கியது. இன்று, அமெரிக்கா தனது உள்நாட்டுப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. அதன் நட்பு நாடுகளை, குறிப்பாக கிழக்கு ஆசியாவில் உள்ளவர்களை, அதன் 'நீட்டிக்கப்பட்ட தடுப்பு' (extended deterrence) உத்தரவாதங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகியவை அவ்வாறு செய்ய விரும்பினால், அவற்றின் சொந்த அணுசக்தி தடுப்புகளை விரைவாக உருவாக்குவதற்கான தொழில்நுட்ப திறனைக் கொண்டுள்ளன. அமெரிக்க நடைமுறைவாதம் இறுதியில் அதிக சுதந்திரமான அணுசக்தி தடுப்பு திறன்களைக் கொண்டிருப்பது சீனாவுடனான போட்டியைச் சமாளிக்க சிறந்த வழியாகும் என்ற முடிவுக்கு வழிவகுக்கும். 


ராகேஷ் சூட் ஒரு முன்னாள் இராஜதந்திரி ஆவார், இவர் 2013-14 ஆம் ஆண்டில் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடைக்கான பிரதமரின் சிறப்புத் தூதராகப் பணியாற்றியவர் மற்றும் தற்போது இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலில்   உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share: