தேங்கி நிற்கும் கிராமப்புற ஊதியங்களின் முரண்பாடு -ஹரிஷ் தாமோதரன்

 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் கிராமப்புற ஊதியங்களில்  பிரதிபலிக்கவில்லை. அவை உண்மையான சரிசெய்யப்பட்ட- பணவீக்க விதிமுறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளன. ஓரளவு வளர்ச்சியின் காரணமாக உழைப்பு குறைவாக உள்ளது.


இந்தியப் பொருளாதாரம் 2019-20 ஆண்டு முதல் 2023-24 ஆண்டு வரை சராசரியாக ஆண்டு விகிதத்தில் 4.6% வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் (ஏப்ரல்-மார்ச்), 7.8% வளர்ச்சியைக் கண்டுள்ளது. விவசாயத் துறையின் வளர்ச்சி இந்த நேரத்தில் சராசரியாக 4.2% ஆகவும், முந்தைய காலகட்டத்தில் 3.6% ஆகவும் இருந்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான விகிதம் கிராமப்புற ஊதியங்களில் மாற்றங்களை பிரதிபலிக்கவில்லை.


தொழிலாளர் பணியகம் (Labour Bureau) 25 விவசாய மற்றும் விவசாயம் அல்லாத வேலைகளுக்கான தினசரி ஊதிய விகித விவரங்களை சேகரிக்கிறது. இந்தத் தரவு ஒவ்வொரு மாதமும் 20 மாநிலங்களில் உள்ள 600 மாதிரியை கிராமங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. இதில், குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைகள் ஊதியத்தில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் காட்டுகின்றன. ஏப்ரல் 2019-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2024 வரை அனைத்துத் தொழில்களிலும் உள்ள கிராமப்புற ஆண் தொழிலாளர்களுக்கான எளிய அகில இந்திய சராசரி விகிதத்தை பயன்படுத்துகின்றனர்.


ஊதிய வளர்ச்சியானது, இயல்பான (தற்போதைய மதிப்பு) மற்றும் உண்மையான (கிராமப்புற இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் வருடாந்திர பணவீக்கத்தைக் கழித்த பிறகு) போன்ற இரண்டு வழிகளில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு அனைத்து கிராமப்புற மற்றும் விவசாய தொழில்களையும் உள்ளடக்கியது. உழுதல், விதைத்தல், அறுவடை செய்தல், வணிகப் பயிர்களைப் பறித்தல், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம் மற்றும் தாவரப் பாதுகாப்பு ஆகியவை விவசாயத் தொழில்களாகும்.


2023-24 ஆண்டில் முடிவடைந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புற ஊதியங்களின் சராசரி இயல்பு வளர்ச்சி 5.2% ஆகும். விவசாயக் கூலிகளின் வளர்ச்சி 5.8% அதிகமாக இருந்தது.  இருப்பினும், பணவீக்கத்தை சரிசெய்யும்போது, ​​இந்த காலகட்டத்தில் சராசரி ஆண்டு வளர்ச்சி கிராமப்புற ஊதியங்களுக்கு -0.4% மற்றும் விவசாய ஊதியங்களுக்கு 0.2% ஆக இருந்தது.


நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), ஒட்டுமொத்த கிராமப்புற ஊதியங்கள் இயல்பான அடிப்படையில் கடந்த ஆண்டை விட 5.4% மட்டுமே அதிகரித்துள்ளது. உண்மையான அடிப்படையில், அதிகரிப்பு வெறும் 0.5% மட்டுமே. விவசாயத் தினக்கூலி இயல்பான அளவில் 5.7% மற்றும் உண்மையான அடிப்படையில் 0.7% அதிக விகிதங்களில் வளர்ந்துள்ளன.


இது தெளிவான கேள்வியை எழுப்புகிறது: சமீப காலங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் விவசாயத் துறை வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும் போது, ​​ஏன் உண்மையான கிராமப்புற ஊதியங்கள் எதிர்மறையாக இல்லை என்றால், ஏன் தேங்கி நிற்கின்றன? 


இந்த நிலைக்கு ஒரு காரணம் பெண்களிடையே, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் (Labour Force Participation Rates (LFPR)) ஆகும்.  LFPR என்பது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் சதவீதத்தை அளவிடுகிறது. அவர்கள் வருடத்தின் குறிப்பிடத்தக்க பகுதிக்கு வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள். 2018-19 ஆண்டில், அகில இந்திய சராசரி பெண்களின் LFPR 24.5% மட்டுமே. இது 2019-20 ஆண்டில் இந்த சதவீதம் 30% ஆக உயர்ந்து, 2020-21 ஆண்டில் 32.5% ஆக அதிகரித்துள்ளது. 2021-22ஆண்டில் இது 32.8% ஆக இருந்தது. 2022-23ஆண்டில் இந்த எண்ணிக்கை 37% ஆக உயர்ந்தது. 2023-24 ஆண்டில் (ஜூலை-ஜூன்)க்கான சமீபத்திய அதிகாரப்பூர்வ காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில், இது இப்போது 41.7% ஆக உள்ளது.


கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் (Labour Force Participation Rates (LFPR)) அதிகரிப்பு இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இது 2018-19  ஆண்டில் 26.4% இலிருந்து 2019-20 ஆண்டில் 33% ஆகவும், பின்னர் 2020-21 ஆண்டில் 36.5% ஆகவும், 2021-22 ஆண்டில்  36.6% ஆகவும், 2022-23ஆண்டில்  41.5% ஆகவும்,  இறுதியாக 47.23% ஆகவும் உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், ஆண்களின் LFPR, இந்தியா முழுவதும் 75.5%லிருந்து 78.8% ஆகவும், கிராமப்புறங்களில் 76.4%லிருந்து 80.2% ஆகவும் மட்டுமே அதிகரித்துள்ளது.


நிதி அமைச்சகத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பொருளாதார கணக்கெடுப்பு, கிராமப்புற பெண் LFPR (2018-19 முதல் 21.2 சதவீத புள்ளிகள்)  முன்னேற்றத்திற்கு முக்கியமாக நரேந்திர மோடி அரசாங்கத்தின் திட்டங்களான உஜ்வாலா (Ujjwala), ஹர் கர் ஜல் (Har Ghar Jal), சௌபாக்யா (Saubhagya) மற்றும் தூய்மை இந்தியா (Swachh Bharat) ஆகியவற்றைக் காரணம் காட்டியுள்ளது. 


இந்த முன்னோடி திட்டங்கள்,  சமையல் எரிபொருள், மின்சாரம், குழாய் குடிநீர் மற்றும் கழிப்பறைகளுக்கான வீடுகளின் அணுகலை கணிசமாக விரிவுபடுத்தவில்லை என்று கணக்கெடுப்பு கூறுகிறது. தண்ணீர் மற்றும் விறகு சேகரிப்பதில் செலவழித்த கிராமப்புற பெண்களின் நேரத்தையும் உழைப்பையும் அவர்கள் மிச்சப்படுத்தியுள்ளனர். எல்பிஜி சிலிண்டர்கள் (LPG cylinders) அல்லது மின்சார கலவை அரைப்பான்களைப் (electric mixer grinders) பயன்படுத்தி வேகமாக சமைக்க முடிவதால், பெண்கள் இப்போது வீட்டு வேலைகளைச் செய்வதற்குப் பதிலாக வீட்டிற்கு வெளியே உள்ள உற்பத்தி வேலைகளில் அதிக கவனம் செலுத்தலாம்.


பெண்களின் அதிக நேரம் கிடைத்தல் மற்றும் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) அதிகரிப்பு ஆகியவை கிராமப்புற தொழிலாளர்களின் ஒட்டுமொத்த அளவை கணிசமாக உயர்த்தியுள்ளன. தொழிலாளர் வழங்கல் வளைவு (labour supply curve) வலதுபுற மாற்றம், அதிக மக்கள் அதே அல்லது குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக உள்ளனர். இதன் விளைவாக, கிராமப்புற ஊதியங்களில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.


குறைந்த உழைப்பு மிகுந்த வளர்ச்சி


இரண்டாவது, குறைவான சாதகமான, விளக்கம் என்பது விநியோகத்தை சார்ந்தது அல்ல. ஆனால், உழைப்பின் தேவைப் பக்கத்தைப் பார்க்கிறது.



கிராமப்புற பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2018-19 ஆண்டு மற்றும் 2023-24 ஆண்டுக்கு இடையில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு 71.1% இல் இருந்து 76.9% ஆக உயர்ந்துள்ளது. இதன் பொருள் கிராமப்புற தொழிலாளர் அதிகமான பெண்கள்  பங்கேற்கும் போது, ​​அவர்கள் முதன்மையாக தொழிற்சாலைகள் அல்லது அலுவலகங்களில் வேலை செய்வதை விட விவசாயத்தில் பங்கு கொள்கிறார்கள்.  


இந்த மாற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. இதன் மூலம் பொருளாதாரத்தில் அதிக பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யலாம். ஆனால்,  இந்த செயல்முறை அதிக மூலதனம் சார்ந்ததாக மாறி வருகிறது. உழைப்பைப் பயன்படுத்துவதில் இது மிகவும் திறமையானது. இது குறைவான வேலைகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு நிறுவனங்களின் உற்பத்திக்கும் குறைவான பணியாளர்கள் தேவைப்படும் துறைகள் அல்லது தொழில்களில் இருந்து வளர்ச்சி இருந்தால், வருமானத்தின் பங்கு உயரும். உழைப்புடன் ஒப்பிடுகையில், நிறுவனங்களின் இலாபங்களை உள்ளடக்கிய மூலதனத்திற்காக அதிக வருமானம் உருவாக்கப்படுகிறது.  இது ஊதியம் மற்றும் பணியாளர் இழப்பீடு ஆகியவற்றைக் குறிக்கிறது.


எனவே, தொழிலாளர் திறனில் புதிதாக நுழைபவர்கள், குறிப்பாக பெண்கள், பெரும்பாலும் விவசாயத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. இந்தத் துறையில் ஏற்கனவே குறைந்த அளவு உற்பத்தித்திறன் உள்ளது, அதாவது ஒரு தொழிலாளிக்கான உற்பத்தி குறைவாக உள்ளது.  அதிக உழைப்பைச் சேர்ப்பது ஊதியத்தை மேலும் குறைக்கும். கூடுதலாக, கிராமப்புற விவசாயம் அல்லாத ஊதியங்கள் குறைவாக வளர்ந்தது மட்டுமல்லாமல், உண்மையான அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளன. இது விவசாயம் அல்லாத தொழிலாளர்களுக்கான தேவை குறைந்து வருவதைக் குறிக்கிறது.


வேகமாக நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நீடித்து நிலைத்திருக்கும் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலைமை சவாலாக உள்ளது. இந்த வணிகங்கள் உழைப்பு மிகுந்த மற்றும் நுகர்வு மூலம் இயக்கப்படும் வளர்ச்சியை அதிகம் நம்பியுள்ளன. தற்போது நடப்பது போல், வேலை வளர்ச்சி மற்றும் வருமானம் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் ஒத்துப் போகாதபோது அவற்றின் விற்பனை மற்றும் லாபம் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது.


மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருமானப் பரிமாற்றத் திட்டங்கள் நிலைமையைத் தணிக்க உதவியுள்ளன.


ஆக்ஸிஸ் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் நீல்காந்த் மிஸ்ராவின் கூற்றுப்படி, ஆந்திரா, அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் தற்போது பெண்களை இலக்காகக் கொண்ட இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துகின்றன. இந்த திட்டங்களின் கீழ் மொத்த வருடாந்திர நிதி வழங்கல் சுமார்.2 லட்சம் கோடி ரூபாய் என்றும், இது இந்தியாவின் வயது வந்த பெண் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கியது என்றும் மிஸ்ரா மதிப்பிடுகிறார். இது சுமார் 11 கோடி விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசின் ஆண்டுக்கு  6,000 ரூபாய் பரிமாற்றம் மற்றும் 81 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மாதத்திற்கு 5 கிலோ இலவச தானிய திட்டத்திற்கு மேல் உள்ளது. 


மகாராஷ்டிரா அரசாங்கத்தின் லட்கி பஹின் யோஜனா (Ladki Bahin Yojana) பெண்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு  குறைவான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்குகிறது.  ஆகஸ்ட் மாதத்தில் மாநிலத்தின் கிராமப்புற பெண் விவசாயிகள் சராசரியாக  ஒரு நாளைக்கு 311.5 ரூபாய் ஊதியம் பெற்றனர். கடுமையான காலங்களில்,  இந்த திட்டம் பயனுள்ள கூடுதல் வருமானத்தை வழங்குகிறது.




Original article:

Share:

இந்தியாவின் வளர்ச்சி தாக்கம் குறித்த ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் ஆய்வு -தீரஜ் மிஸ்ரா

 பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridors (DFC)) என்பது இரயில்வேயின் சரக்கு போக்குவரத்துக்கான குறிப்பிட்ட வழித்தடங்களாகும். அவை, ஏன் திட்டமிடப்பட்டன? மேலும், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கின்றன? என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridors (DFC)) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மற்றும் இந்திய இரயில்வேக்கான வருவாயையும் கணிசமாக அதிகரிக்கின்றன.


பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFC) சரக்கு போக்குவரத்திற்கான செலவுகள் மற்றும் பயண நேரங்களைக் குறைத்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குறைப்பு சில பொருட்களின் விலைகளை 0.5% வரை குறைக்க உதவியுள்ளது. கூடுதலாக, 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை இந்திய இரயில்வேயின் வருவாய் வளர்ச்சியில் 2.94% இரயில்வே வழித்தடங்கள் பங்களித்துள்ளன.


இந்த ஆய்வு எல்சேவியர் இதழில் வெளியிடப்பட்டதாவது, இது 2019-20 நிதியாண்டிற்கான மேற்கில்  உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் (Western Dedicated Freight Corridor (WDFC)) தரவை பகுப்பாய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசாங்கத்தால் கணக்கிடக்கூடிய பொது சமநிலை மாதிரியைப் பயன்படுத்தினர்.


பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridors (DFC)) என்றால் என்ன? 


பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFC) சரக்கு போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட வழித்தடங்கள் ஆகும். அவை அதிக போக்குவரத்து திறனை வழங்குகின்றன. ஏனெனில், சரக்கு இரயில்கள் வேகமாக செல்ல முடியும். இந்த வழித்தடங்கள் இரட்டை அடுக்கு கண்டெய்னர் இரயில்கள் மற்றும் கனரக இரயில்கள் இயக்க அனுமதிக்கின்றன. இதன் விளைவாக, இந்த வழிதடங்களில் பொருளாதார மையங்களில் அமைந்துள்ள தொழில்கள் மற்றும் தளவாட நிறுவனங்களுக்கான விநியோகச் சங்கிலி மேம்படுகிறது. இந்த முன்னேற்றம் ஏற்றுமதி-இறக்குமதி போக்குவரத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.


இரயில்வே அமைச்சகம் 2006-ஆம் ஆண்டில் இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடங்களைக் (DFC) கட்டத் தொடங்கியது. முதலாவது, கிழக்கில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடம் (Eastern Dedicated Freight Corridor (EDFC)) ஆகும். இது பீகாரில் உள்ள சோனாகர் முதல் பஞ்சாபின் சாஹ்னேவால் வரை 1,337 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாவது மேற்கில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடம் (Western Dedicated Freight Corridor (WDFC)) ஆகும். இது 1,506 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக முனையத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் தாத்ரி வரை செல்கிறது.


பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு மின்னூட்ட வழித்தடங்களுடன் கிழக்கில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடம் (EDFC) முழுமையாக இயக்கப்படுகிறது. மேற்குப்பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடம் (WDFC) 93% இயக்கப்படுகிறது. இது, பல்வேறு சிமென்ட் ஆலைகள் மற்றும் குஜராத்தில் உள்ள முந்த்ரா, கண்ட்லா, பிபாவவ் மற்றும் ஹசிரா போன்ற பெரிய துறைமுகங்களுக்கு சேவை செய்யும் மின்னூட்ட வழித்தடங்கள் உள்ளன. இது டிசம்பர் 2025-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மார்ச் 31, 2024 நிலவரப்படி, நிலம் கையகப்படுத்தும் செலவுகள் தவிர்த்து, பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFC) திட்டத்தை செயல்படுத்த ரூ.94,091 கோடி செலவிடப்பட்டுள்ளது. 


பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFC) ஏன் தேவைப்பட்டன? 


பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் தேவை இரண்டு காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டது. முதலாவதாக, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் ஹவுரா ஆகிய நான்கு பெருநகரங்களையும் அதன் இரண்டு மூலைவிட்டங்களையும் (டெல்லி-சென்னை மற்றும் மும்பை-ஹவுரா) இணைக்கும் இரயில்வேயின் தங்க நாற்கர சாலையின் அதிகப்படியான பயன்பாடு ஆகும். இந்த வழித்தடமானது மொத்த இரயில்வே நெட்வொர்க்கில் 16% மட்டுமே உள்ளது. ஆனால், இது 52% பயணிகள் போக்குவரத்திலும், 58% இரயில்வேக்கு வருவாய் ஈட்டும் சரக்கு போக்குவரத்திலும் கையாளுகிறது.


இரண்டாவதாக, மொத்த சரக்கு போக்குவரத்தில் இரயில்வேயின் பங்கு குறைந்து வருவதாகக் குறிப்பிடுகிறது. இந்த தரவு தேசிய இரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக தொகுக்கப்பட்டது.  இது 2030-ஆம் ஆண்டுக்குள் இரயில்வே மூலம் சரக்கு போக்குவரத்தின் பங்கு 45% ஆக உயர வேண்டும் என்று கருதுகிறது. 


2005-06 நிதியாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கையின் போது, பிரத்யேக சரக்கு வழித்தடங்களை (DFCs) உருவாக்குவதற்கான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 2006-ஆம் ஆண்டில், அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், லூதியானாவில் கிழக்கில் பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கு (EDFC) அடிக்கல் நாட்டினார். பின்னர் அக்டோபர் 2006-ஆம் ஆண்டில், மேற்கில் பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கான (WDFC) அடிக்கல் மும்பையில் நாட்டப்பட்டது.


அக்டோபர் 30, 2006-ஆம் ஆண்டில், பிரத்யேக சரக்கு வழித்தடம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)) இணைக்கப்பட்டது. இது வழித்தடங்களின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நோக்க வாகனமாக (Special Purpose Vehicle) செயல்படுகிறது.


மார்ச் 12, 2024 அன்று, பிரதம மந்திரி நரேந்திர மோடி பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் (DFC) மூன்று புதிய பிரிவுகளை திறந்து வைத்தார். முதலாவது மேற்கில் உள்ள  பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (WDFC) 135-கிமீ மகர்புரா-சச்சின் பிரிவு ஆகும். இரண்டாவது கிழக்கில் பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (EDFC) 179-கிமீ சாஹ்னேவால்-பில்கானி பிரிவு ஆகும். மூன்றாவது 222-கிமீ பில்கானி-குர்ஜா பகுதி, கிழக்கில் பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (EDFC) உள்ளது.


தற்போதைய நிலவரம் 


தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 325 இரயில்கள் இயக்கப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகமாகும். இது, பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (DFC) உள்ள சரக்கு ரயில்கள் வேகமானவை, கனமானவை மற்றும் பாதுகாப்பானவை. இவைகள் செயல்படத் தொடங்கியதில் இருந்து, DFCகள் 232 பில்லியன் மொத்த டன் கிலோமீட்டர்கள் (GTKMs) மற்றும் 122 பில்லியன் டன் கிலோமீட்டர்கள் (NTKMs) பேலோடைக் கொண்டு சென்றுள்ளன.


 பிரத்யேக சரக்கு வழித்தடம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)) படி, இந்திய இரயில்வேயின் 10% க்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து இப்போது  பிரத்யேக சரக்கு வழித்தடங்களால் (DFCs) கையாளப்படுகிறது. டி.எஃப்.சி.சி.ஐ.எல் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தில்  பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் (DFCs) தாக்கம் குறித்த விரிவான மற்றும் முழுமையான ஆய்வு நடந்து வருவதாகவும், இதற்கான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் கூறினார். 


இதுபோன்ற மேலும் நான்கு முன்மொழியப்பட்ட வழித்தடங்கள் உள்ளன. ஒன்று, கரக்பூர் முதல் விஜயவாடா வரையிலான கிழக்கு கடற்கரை நடைபாதை (1115 கி.மீ). இரண்டு, கிழக்கு-மேற்கு துணை வழித்தடம்-I பால்கர் முதல் டாங்குனி வரை (2073 கிமீ). மூன்று, கிழக்கு-மேற்கு துணை வழித்தடம்-2 ராஜ்கர்சவான் முதல் ஆண்டாள் வரை (195 கி.மீ) மற்றும் நான்கு, விஜயவாடாவிலிருந்து இடார்சி வரை (975 கி.மீ) வடக்கு-தெற்கு துணை வழித்தடம் ஆகும். 


ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வின் அடிப்படை 


இந்த ஆராய்ச்சி சரக்குப் போக்குவரத்திற்கான செலவுகள், தொழில் உள்ளீடுகள் மற்றும் மக்கள் தொகை தரவு உள்ளிட்ட பல்வேறு வகையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. இது பிராந்தியங்கள், தொழில்கள், நுகர்வோர் மற்றும் சரக்கு போக்குவரத்து வலையமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாடுகளையும் கருதுகிறது. பொருளாதார தரவு மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் இரயில்வே ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி மாதிரியின் துல்லியம் அளவீடு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது என்று டி.எஃப்.சி.சி.ஐ.எல் தெரிவித்துள்ளது. 


 பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFCs) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மேற்குப் பகுதிகள் பெரிதும் பயனடைகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்திற்கான கட்டணம் கணிசமாகக் குறைந்ததே இதற்குக் காரணம் ஆகும். இந்த ஆய்வு ஒரு 'சமூக-சமநிலை விளைவைக்' (social-equalizing effect) சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட மாநிலங்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளை அனுபவித்தன.




Original article:

Share:

தனிமனித உரிமை (Right to Privacy) -ரோஷினி யாதவ்

 கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், 'தனிமனித உரிமைக்கான வழக்கில்' (right to privacy case) முக்கிய மனுதாரருமான நீதிபதி கே.எஸ்.புட்டசாமி அக்டோபர் 28 அன்று காலமானார். தனிமனித உரிமை என்றால் என்ன? அடிப்படை உரிமைகளின் உரையாடலை அது எவ்வாறு வடிவமைத்தது?  


கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ’தனிமனித உரிமைக்கான வழக்கில்' (right to privacy case) முக்கிய மனுதாரருமான நீதிபதி கே.எஸ்.புட்டசாமி அக்டோபர் 28 அன்று தனது 98 வயதில் காலமானார். 


ஆதார் திட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்று நீதிபதி புட்டசாமி தொடர்ந்த வழக்கு பிரபலமானது. அவரது இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் தனிமனிதயுரிமைக்கான உரிமையை அங்கீகரிக்க வழிவகுத்தது. இந்த அங்கீகாரம் அரசியலமைப்பின் 21-வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி தனிமனித வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் கீழ் வருகிறது.


1. ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு, கே.புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (K.Puttaswamy vs. Union of India) வழக்கில் தீர்ப்பளித்ததாவது, "அரசியலமைப்புப் பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதியாக தனிமனிதயுரிமைக்கான உரிமை பாதுகாக்கப்படுகிறது" என்று நீதிமன்றம் ஒருமனதாக முடிவு செய்தது. இந்த உரிமையும் அரசியலமைப்பின் மூன்றாம் பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்.


2. மொத்தம் 22 மனுதாரர்கள் இருந்தனர். ஆனால், ஆதார் அடையாள அட்டையை எதிர்த்த முக்கிய மனுதாரர் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி ஆவார். 30 முந்தைய தீர்ப்புகளில் தனியுரிமை பிரச்சினையை எடுத்துரைத்துள்ளது.  இருப்பினும், இந்த வழக்கில் இந்திய அரசு தனிமனிதயுரிமை ஒரு அடிப்படை உரிமை அல்ல என்று வாதிட்டது. இந்த வழக்கில் எட்டு நீதிபதிகள் மற்றும் ஆறு நீதிபதிகள் கொண்ட அமர்வால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறியது. இதன் விளைவாக, இந்த விவகாரம் முதலில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும், பின்னர் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் இந்த வழக்கு மாற்றப்பட்டது. 


ஆதார் என்றால் என்ன?

  ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணாகும். இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) ஆதாரை வெளியிடுகிறது மற்றும் நிர்வகிக்கிறது. ஆதார் அட்டை என்பது UIDAI வழங்கிய அடையாள ஆவணமாகும். UIDAI பதிவுசெய்த பிறகு இந்த அட்டை வழங்கப்படுகிறது மற்றும் குடியுரிமை பெற்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவு உட்பட விவரங்களைச் சரிபார்த்த பிறகு வழங்கப்படுகிறது. 


   பல மனுதாரர்கள் ஆதாரை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். அதிகாரப்பூர்வமாக இந்த ஆதார் குறிப்பிடாவிட்டாலும், இது கட்டாயம் என்று கூறியுள்ளது. இந்தத் தேவை அவர்களின் தனிமனிதயுரிமைக்கான உரிமையை மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த அரசு, இந்தியர்களுக்கு தனிமனிதயுரிமைக்கான அடிப்படை உரிமை இல்லை என்று கூறியது. ஆனால், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வை இந்த பதிலை ஏற்கவில்லை. அனைத்து இந்தியர்களுக்கும் தனிமனிதயுரிமைக்கான அரசியலமைப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமை உண்டு என்று அவர்கள் ஒருமனதாகக் கூறினர்.


3. முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தனியுரிமைக்கான உரிமை என்பது பொதுவான சட்ட உரிமை என்று வாதிட்டார்.  இது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமை அல்ல என்றும் அவர் கூறினார்.  அதற்குப் பதிலளித்த நீதிமன்றம், ஒரு அரசியலமைப்பு உறுப்புக்கான உரிமையை வழங்குவது, மக்கள் கருத்துக்களிலிருந்தும், சட்டத்தால் ரத்து செய்யப்படுவதிலிருந்தும் அதற்கு விலக்கு அளிக்கும் என்று கூறியது. இது ஒரு பொதுவான சட்ட உரிமையைக் கொண்டிருக்காது. 


4. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மத்திய அரசின் அனைத்து வாதங்களையும் நிராகரித்தது.  எம் பி ஷர்மா (1954) மற்றும் காரக் சிங் வழக்குகளில் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை இது முற்றிலும் நிராகரித்தது. தனிமனித உரிமை, வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் மறைமுகமாக இருப்பதைக் கண்டறிந்த அதன் குறைந்த நீதிபதிகளை கொண்ட அமர்வு எடுத்த முடிவுகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.




இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21

இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துகிறது. வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் தன்னிச்சையான இழப்புக்கு எதிராக சில பாதுகாப்புகளை இது உறுதி செய்கிறது.


5. சமீப ஆண்டுகளில் பல சர்ச்சைகளில் தனிமனித உரிமை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இருப்பினும், அதன் தெளிவான வரையறை இன்னும் பெரும்பாலும் தெளிவாக இல்லை.


6. ஐஸ்வர்யா கிரிதர் மற்றும் நிதி சிங் குறிப்பிடுவதாவது, “உச்சநீதிமன்றம் தனிமனிதயுரிமை தொடர்பாக தன்னாட்சி, கண்ணியம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் கொள்கைகளை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வு அரசியலமைப்பு உரிமைகளின் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரே பாலின உறவுகள் உட்பட, அனைத்து பாலியல் உறவுகளையும் நீதிமன்றம் குற்றமற்றதாக்கியது. 


இந்த முடிவு தனிமனித உரிமையை அடிப்படையாகக் கொண்டது. இது கருத்து சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாதது ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் வாழ்க்கையின் இறுதிக் கவனிப்பு தொடர்பான தனியுரிமையைப் பார்த்து, கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உறுதி செய்தது.  புட்டசாமி வழக்கிலிருந்து, உச்ச நீதிமன்றம் தனியுமனித உரிமையின் நோக்கத்தை விவாதித்து விரிவுபடுத்தியுள்ளது.


7. அமெரிக்கா: அமெரிக்க அரசியலமைப்பு தனியுமனித உரிமையை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், உச்ச நீதிமன்றம் இந்த உரிமை இருப்பதைக் குறிக்க பல்வேறு திருத்தங்களை விளக்கியுள்ளது. குறிப்பாக, 1974-ஆம் ஆண்டின் தனியுரிமைச் சட்டம் குடிமக்கள் தங்கள் பதிவுகளை கூட்டாட்சி நிறுவனங்களால் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்க இயற்றப்பட்டது. 


இந்த சட்டம் முகமைகள் தாங்கள் பராமரிக்கும் தகவல்களின் வெளிப்பாடுகளின் பதிவை வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, வரி செலுத்துவது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் அல்லது குழந்தை ஆதரவு தொடர்பான வழக்குகளைத் தவிர, அரசாங்க விசாரணைகளிலிருந்து சமூக பாதுகாப்புகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் ஒரு கூட்டாட்சி ரீதியிலான சட்டம் உள்ளது. 


உங்களுக்கு தெரியுமா?

      தனிமனித உரிமை ஒரு வலுவான சர்வதேச சட்ட கட்டமைப்பால் பாதுகாக்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (1948) பிரிவு 12 ஆனது, தனிநபர்களின் தனிமனித உரிமையில் தன்னிச்சையான தலையீட்டிலிருந்து பாதுகாக்கிறது. இது அவர்களின் குடும்பம், வீடு, கடிதப் பரிமாற்றம், மரியாதை மற்றும் நற்பெயர் ஆகியவற்றுக்கான பாதுகாப்பை உள்ளடக்கியது. கூடுதலாக, குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 17 (International Covenant on Civil and Political Rights (ICCPR) 1966) இதே போன்ற பாதுகாப்பை வழங்குகிறது.


8. ஜெர்மனி: நாஜி ஆட்சியின் கீழ் ஜெர்மனியின் கடுமையான வரலாறு, தொடர்ச்சியான அரசாங்க கண்காணிப்பால் வகைப்படுத்தப்படுவது, தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிர்வாக ஊடுருவல்கள் குறித்து நாட்டை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வழிவகுத்தது. காலப்போக்கில், ஜெர்மனியர்கள் அந்தக் காலத்தின் சமூக மற்றும் தொழில்நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தனிமனித உரிமைச் சட்டங்களை உருவாக்கவும் புதுப்பிக்கவும் பணியாற்றியுள்ளனர். இதன் விளைவாக, தனிமனித உரிமை சட்டங்களை அமல்படுத்துவதில் ஜெர்மனி மிகவும் கடுமையான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 


9. ஸ்வீடன்: ஸ்வீடன் தனது குடிமக்களுக்கு தனிப்பட்ட அடையாள எண்களை வழங்கிய உலகின் முதல் நாடுகளில் ஒன்றாகும். மாநிலத்துடனான ஒவ்வொரு தொடர்புக்கும் இந்த எண்கள் அவசியம். அதே நேரத்தில், இணையவழி தரவுகளுக்கான விரிவான தனிமனித உரிமைச் சட்டங்களை நிறுவிய முதல் நாடுகளில் ஸ்வீடனும் இருந்தது. கணினிகளில் சேமிக்கப்படும் தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக 1973-ஆம் ஆண்டு தரவுச் சட்டம் (Data Act) உருவாக்கப்பட்டது. கூடுதலாக, தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும் உரிமை ஸ்வீடன் அரசியலமைப்பில் (Swedish constitution) சேர்க்கப்பட்டுள்ளது.


10. கனடா: கனடாவில் தனிமனித உரிமைச் சட்டம், கனடா மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாக 1977-ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. இது, பல ஆண்டுகளாக கணிசமாக அளவில் தனிமனித உரிமைத் தொடர்பான சட்டங்களை உருவாகியுள்ளது. முதலில், இது தரவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. 1983-ஆம் ஆண்டில், தனிப்பட்ட தகவல்களை அரசாங்கம் எவ்வாறு அணுகலாம் மற்றும் வெளியிடலாம் என்பதற்கான விதிமுறைகளைச் சேர்க்க சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 


11. ஐரோப்பிய ஒன்றியம் : மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டின் (European Convention on Human Rights (ECHR)) பிரிவு 8 ஒரு தனிநபரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பாதுகாக்கிறது. இருப்பினும், இந்த உரிமை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. கூடுதலாக, 1995-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவுப் பாதுகாப்புத் தொடர்பான உத்தரவு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தனிப்பட்ட தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை ஒழுங்குபடுத்துகிறது.




Original article:

Share:

தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (Ayushman Bharat) - குஷ்பு குமாரி

 தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (ayushman bharat) எவ்வாறு முதியோருக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது? 


ஆயுர்வேத தினமான அக்டோபர் 29 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் வய வந்தனா (Ayushman Vaya Vandana) என்ற மருத்துவ அட்டைகளை அறிமுகப்படுத்தினார். இந்த அட்டைகள் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY)) ஒரு பகுதியாகும். இது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, அவர்களின் வருமானம் அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், இது மருத்துவப் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்குகிறது.


1. 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். இந்த தொகை வீட்டில் இரண்டு வயதான பயனாளிகள் இருந்தால், இந்த காப்பீடு குடும்பத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். 


2. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குடும்ப உறுப்பினர்கள் ரூ.5 லட்சம் வரை கூடுதல் காப்பீட்டைப் பெறுவார்கள். இந்த கூடுதல் தொகை குறிப்பாக வயதானவர்களுக்கானது மற்றும் அவர்களின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த முதியோர் பயனாளிகள் இந்த கூடுதல் காப்பீட்டைப் பெற மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.


3. இந்த திட்டம் கிட்டத்தட்ட 6 கோடி தனிநபர்களை (4.5 கோடி குடும்பங்களிலிருந்து) உள்ளடக்கும். அவர்களில், 1.78 கோடி பேர் ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் உள்ளனர். "கூடுதல் காப்பீடு தொகைக்கு, நிதிப் பாதிப்பு மிகக் குறைவு" என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். 


4. மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (Central Government Health Scheme (CGHS)), முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (Ex-Servicemen Contributory Health Scheme) போன்ற பிற அரசு சுகாதாரத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே காப்பீடு பெற்றவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது தற்போதைய காப்பீட்டுக்கான மருத்துவப் பாதுகாப்பை தொடரலாம்.


5. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation (ESIC)) கீழ் உள்ளவர்கள் தற்போதுள்ள காப்பீடு மற்றும் ஆயுஷ்மான் பாரத் இரண்டையும் பெற தகுதியுடையவர்கள் ஆவார். ஏனென்றால், ESIC-க்கான காப்பீடு தொகைகள், காப்பீடு செய்யப்பட்டவர் மற்றும் அவர்களின் முதலாளியால் செலுத்தப்படுகின்றன.  அரசாங்கத்தின் மூலம் செலுத்தப்படுவது அல்ல.


6. இது மத்திய நிதியுதவி பெறும் திட்டம் மற்றும் இந்த திட்டத்தின் செலவில் மாநிலங்கள் 40% பங்களிக்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. 


உங்களுக்கு தெரியுமா?

AB PM-JAY என்பது உலகின் மிகப்பெரிய பொது மருத்துவக் காப்பீட்டு திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவப் பாதுகாப்பை  வழங்குகிறது. இந்த நன்மை தகுதியான குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். இந்த குடும்பங்கள் பொருளாதார நிலையின் அடிப்படையில் மக்கள்தொகையில் 40% கீழே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தனிநபர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் உள்ளடக்கியது.


AB PM-JAY என்பது உலகின் மிகப்பெரிய பொது மருத்துவக் காப்பீட்டு திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை மருத்துவப் பாதுகாப்பை வழங்குகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதற்கு தகுதியானவர்கள். இந்த குடும்பங்கள் வருமானத்தின்  அடிப்படையில் மக்கள்தொகையில் 40% கீழ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் இந்தத் திட்டம் மருத்துவத்திற்கான பாதுகாப்பை வழங்குகிறது.


இப்போது, ​​AB-PMJAY திட்டத்தை மூத்த குடிமக்களுக்கும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதம்:


1. அடுத்த முப்பதாண்டுகளில்  ஆயுட்காலம் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்தில் ஒரு பகுதியினர் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த மக்கள்தொகையின் மாற்றத்தை சமாளிக்க நலன்சார்ந்த கொள்கைகளில் தொலைநோக்கு மாற்றங்கள் தேவை. 


2. வயதான இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் அவர்கள் நீண்ட காலம் மருத்துவமனைகளில் தங்கி இருப்பார்கள். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள முதியோர்களின் சேர்க்கை விகிதம் 7% க்கும் அதிகமாக உள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் வரும் இளையவர்களுக்கான சேர்க்கை விகிதத்தை விட இது 3-4% இரு மடங்காகும்.


3. இந்திய முதியோர் அறிக்கை 2023-ன் படி, முதியவர்கள் பெரும்பாலும் எந்தவொரு சுகாதாரத் திட்டத்தாலும் காப்பீடு செய்யப்படுவதில்லை. தற்போது, 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவின் மக்கள்தொகையில் 20% க்கும் அதிகமானோர் ஏதேனும் அரசாங்க திட்டங்களின் கீழ் உள்ளனர் என்று குறிப்பிடுகிறது. 


4. முதியோர்களின் எண்ணிக்கையில் வயதான பெண்களே அதிகம். நிதி ஆயோக் நடத்திய ஆய்வில் முதியவர்களில் 58% பெண்கள் என்றும், இதில் 54% விதவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 


5. ஆரோக்கியத்திற்கான அதிகப்பட்ச தனிநபர் செலவுகள் (out-of-pocket expenditure (OOPE)) பெரும்பாலும் கடுமையான வறுமைக்கு வழிவகுக்கும் ஒரு நாட்டிற்கு இது முக்கியமானது. அதிகப்பட்ச தனிநபர் செலவுகளானது (OOPE) அனைத்து மருத்துவ செலவுகளில் 50% ஆகும். இந்தத் தொகை உலக சராசரியை விட இரண்டரை மடங்கு அதிகமாகும். இதில், இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.


6. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் நிலைப்பாட்டு அறிக்கையானது, குடும்பங்கள் அதிகளவில் பெருகிய முறையில், இவர்களுக்கான அணுகல் மற்றும் கவனிப்பின் தரம் ஆகியவை மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தை நாடும் நடத்தையில் முக்கிய தீர்மானிப்பதாக இருக்கும் என்று அங்கீகரித்தது. 


1. ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Yojana), பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) என்றும் அழைக்கப்படும் இது ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும். இது 2018-ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இது பொது மற்றும் தனியார் சுகாதார துறைகளை முழு நாட்டிற்கும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இணைக்கிறது.


2. இந்த நிதியுதவி பல்வேறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்கள் உட்பட தீவிர (இரண்டாம் நிலை) மற்றும் சிக்கலான (மூன்றாம் நிலை) பராமரிப்புக்கு பொருந்தும். இது முழங்கால் மாற்று (knee replacements), இதய பைபாஸ் (heart bypass), புற்றுநோய் சிகிச்சை (cancer surgeries) அல்லது நாட்பட்ட நிலைமைகளாக இருந்தாலும், ஆயுஷ்மான் பாரத் யோஜனா பயனாளிகளுக்கு நிதி சிரமம் இல்லாமல் தேவையான மருத்துவ பாதுகாப்பைப் பெற அதிகாரம் அளிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை உள்ளடக்குவதன் மூலம் இந்த திட்டம் மேலும் செல்கிறது. மேலும், விரிவான சுகாதார அனுபவத்தை உறுதி செய்கிறது. 


இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை, 2023 

ஆயுஷ்மான் பாரத் நிறுவனத்தின் செயல்திறன் குறித்த தணிக்கை அறிக்கையில், இந்த திட்டத்தின் பயனாளிகள் அடையாள அமைப்பில் (Beneficiary Identification System (BIS)) மொத்தம் 7,49,820 பயனாளிகள் ஒரு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) அறிக்கை தெரிவித்துள்ளது. இதில், 43,197 குடும்பங்களில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை (11 முதல் 201) உண்மைக்கு மாறானது என்று தரவு பகுப்பாய்வு வெளிப்படுத்தியது.


3. சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு (Socio-Economic Caste Census (SECC)) தரவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை இந்த திட்டம் குறிவைக்கிறது. இந்த தரவு குடும்பங்களை வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே (below the poverty line (BPL)) வாழ்பவர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக-பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் பின்தங்கியவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்துகிறது. 


4. PMJAY உள்நோயாளிகளின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை உள்ளடக்கியது. இதில் புற நோயாளிகள் தொடர்பான சேவைகள் இல்லை. இந்த சேவைகளை ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் (Ayushman Arogya Mandirs (AAMs)) கையாளுகின்றன. அவை, முன்பு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் என்று அழைக்கப்பட்டன. இலவச ஆலோசனைகளை வழங்கும் 1,75,000 ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் உள்ளன. அவர்கள் பல மருந்துகளையும் (172 வரை) மற்றும் நோயறிதல் சோதனைகள் (63 வரை) கட்டணமின்றி வழங்குகிறார்கள்.




Original article:

Share:

இந்திய சிறைகளில் இருந்து சாதிய பாகுபாட்டை அகற்றுவதில் ஒரு படி முன்னேற்றம் -ஆதித்யா ரஞ்சன், ஆஷ்னா தேவ்பிரசாத்

 சிறைச்சாலைகளில் சாதி அடிப்படையிலான நடைமுறைகளை இந்திய உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது என்றாலும், சிறைப் பதிவுகளிலிருந்து சாதிக் குறிப்புகளை நீக்குவதற்கான உத்தரவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.


சமீபத்தில் ஒரு முக்கிய செய்தி இணையதளத்திற்கு பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா அளித்த பேட்டியில், ஒரு முக்கியமான செய்தியை எடுத்துரைத்தார். இதில், இந்திய சிறைகள் உள்ள சாதிய பாகுபாடு  வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். மேலும், சுகன்யா சாந்தா மற்றும் வழக்கறிஞர் திஷா வடேகருடன் சேர்ந்து, கடந்த ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக மனு தாக்கல் செய்தனர். இதன் விளைவாக, சுகன்யா சாந்தா vs இந்திய ஒன்றியம் மற்றும் பிற (Sukanya Shantha vs. Union of India and Ors.) வழக்குகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இது சாதி அடிப்படையிலான பாகுபாட்டை நியாயப்படுத்தும் பல்வேறு மாநில சிறை குறிபேடுகளில் உள்ள சில விதிகளை நீக்கியது. 


பல மாநிலங்களில், சிறைக்கைதிகளுக்கு சாதி அடிப்படையில் வேலைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட சமூகத்தின் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கிடையில், "மேல் சாதி" (higher castes) கைதிகளுக்கு சமையல் போன்ற "கண்ணியமான" (dignified) வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்த நடைமுறைகளை சுரண்டல் (exploitative) என்று கண்டனம் செய்தது. இவ்வாறு, சாதி அடிப்படையில் உழைப்பைப் பிரிப்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தீண்டாமையை நிலைநிறுத்துகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. சிறைசாலைகளில் சாதி அடிப்படையிலான பிரிவினையை நீதிமன்றம் எடுத்துரைத்தது. இந்த பிரிவினை 'அரசியலமைப்புக்கு முரணானது' (‘unconstitutionally vague’) மற்றும் 'நிச்சயமற்றது' (‘indeterminate’) என அது அறிவித்தது. ஏனெனில், இத்தகைய பிரிவினை சிறைக்கைதிகளிடையே 'சாதிய வேறுபாடுகள் மற்றும் பகைமையை வலுப்படுத்துகிறது' என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது.


மேலும், அறிவிக்கப்படாத பழங்குடியினத்தைச் (de-notified tribes) சேர்ந்த கைதிகள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்றும்,  இந்த பழங்குடியினர் வரலாற்று ரீதியாக காலனித்துவ சட்டங்களின் கீழ் "பழக்கமான குற்றவாளிகள்" (habitual offenders) என்று முத்திரை குத்தப்பட்டனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, இந்த பிரிவினரைச் சேர்ந்த கைதிகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதால் இவர்களின் மனிதநேயத்தை முற்றிலும் பறிக்கப்படுகிறது.


அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் அடிப்படையில் கைதியின் சமத்துவத்திற்கான உரிமையை வலியுறுத்துவது தீர்ப்பின் மையமாகும். இது, 'நடுநிலையான' சிறை விதிகளின் நிலையை விமர்சிப்பதன் மூலம், இந்த கட்டமைப்புகள் மேலோட்டமாக, நியாயமானதாகத் தோன்றினாலும் உண்மையில் முன்முடிவுகளை (prejudices) வலுப்படுத்துகின்றன. இந்த விதிகள், விளிம்புநிலை வகுப்புகளைச் சேர்ந்த கைதிகள் கண்ணியமான அல்லது திறமையான வேலைக்கு தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடுவதை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதற்கு மாறாக, சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் தனிப்பட்ட திறன்கள் மற்றும் சீர்திருத்தத் தேவைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மேலும், ஒருவரின் சாதி அல்லது சமூக பொருளாதார பின்னணியின் அடிப்படையில் அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. சாதியின் அடிப்படையில் கைதிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் அவர்களின் கண்ணியத்தை மீறுகிறது. இது அரசியலமைப்புப் பிரிவு 21 மூலம் பாதுகாக்கப்படுகிறது.


'சாதியப் பாகுபாடு பார்க்கக் கூடாது' 


சிறையில் சாதி அடிப்படையிலான நடைமுறைகளை ஒழிக்க நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இருப்பினும், இந்த தீர்ப்பின் ஒரு பகுதியை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.  சிறைப் பதிவுகளில் இருந்து சாதிரீதியான குறிப்பேடுகளில் உள்ள விதிகளை நீக்குவதற்கான உத்தரவினை பிறப்பித்தது. இந்த உத்தரவு நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக விளக்கப்படவில்லை. குறிப்பாக, இப்போது நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றிய விவாதம் அதிகரித்து வருவதால் இந்த பாகுபாடு அதிகப்படியாகத் தெரிகிறது.


சாதி அமைப்பானது, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டதாகத் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருப்பினும், சாதி அடையாளம் இந்தியாவின் சமூக அமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதிகாரப்பூர்வ சிறைச்சாலை குறிப்பேடுகளில் இருந்து சாதிரீதியிலான தகவல்களை நீக்குவது மட்டும் பாகுபாடு மற்றும் பிரிவினையை அகற்றாது. இது, குடும்பப் பெயர்கள், சமூக உறவுகள் மற்றும் பிற குறிப்பிட்ட விதிகள் இன்னும் சாதியைக் குறிக்கின்றன. இது சிறைகளுக்குள் பாகுபாடு தொடர அனுமதிக்கும். சிறைப் பதிவேடுகளில் உள்ள சாதி பாகுபாடான குறிப்புகளை நீக்குவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. இது, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை தொடர்பான ஆழமான பிரச்சினைகளை புறக்கணிக்கிறது. 

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் விளிம்புநிலை சமூகங்கள், குறிப்பாக பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்த கைதிகள் அதிகமாக உள்ளனர். இந்த அதிகப்படியான பிரதிநிதித்துவம் சட்ட சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், குறைந்த அளவிலான சட்ட கல்வியறிவு மற்றும் வளங்களின் சமமற்ற விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த சமூகத்தைச் சேர்ந்த நபர்களை குற்றவாளிகளாக உட்படுத்தப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய, சிறைச்சாலைகளில் உள்ள சாதி அமைப்பு பற்றிய விரிவான தகவல்கள் நமக்குத் தேவை. 


இது, சாதி அடிப்படையிலான சலுகைகள் மற்றும் தடைகள் நீதிக்கான அணுமுறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த அணுகலை திறம்பட பயன்படுத்தப்படும் போது, ​​சாதிரீதியான தரவுகள் கைதிகளின் அனுபவங்களை மேம்படுத்தி அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும். சிறைகளில் உள்ள இன, மத மற்றும் பிற சமூக அடிப்படையிலான குழுக்கள் கைதிகளின் அனுபவங்களை கணிசமாக பாதிக்கின்றன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த குழுக்கள் கைதிகள் தங்கள் நேரத்தைச் சேவை செய்த பிறகு மீண்டும் ஒருங்கிணைக்க உதவுகின்றன.


இந்தச் சூழலில், சிறைப் பதிவேடுகளில் இருந்து சாதி தொடர்பான தகவல்களை நீக்க வேண்டும் என்ற உத்தரவு பொருத்தமற்றதாகத் தெரிகிறது. சாதிய பாகுபாடுகளைத் தகர்க்கும் அதிகாரம் அரசியல் சாசனத்துக்கு உண்டு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எவ்வாறாயினும், இந்த பிரச்சினைகளை நாம் ஒப்புக்கொள்ள மறுத்தால், இந்த பாகுபாடை தீர்க்க முடியாது.


நீதித்துறையின் சொந்த விருப்பம்


சிறைச்சாலைகள் மற்றும் பிற குற்றவியல் நீதி நிறுவனங்களிலிருந்து சாதியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு, நீதித்துறையானது அதன் சொந்த சாதி பாகுபாடு தொடர்பானவைகளை எதிர்கொள்ள வேண்டும். சமீப ஆண்டுகளில், அரசியலமைப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகள் சில சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளை கேலி செய்வதையும், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர்கள் எப்போதும் தலைமைப் பதவிகளில் இருக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடுதான் நாட்டை சீரழிக்கும் என்றும், கூடுதலாக, அவர்கள் ஒரு நகரத்தின் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியை "பாகிஸ்தான்" என்று குறிப்பிட்டுள்ளனர். 


நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் வகுப்புவாத மற்றும் சாதிவெறி கருத்துக்கள் பல நிகழ்வதை இன்னும் காணலாம். இந்த நிகழ்வுகள், சாதி அமைப்பில் உள்ள ஒரு ஆழமான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. கடந்த மாதம், நீதிபதிகள் தங்கள் சொந்த விருப்ப அடையாளங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. சாதிய, வகுப்புவாத மற்றும் பாலின கருத்துகளை கூறுவதை தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது. 


எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் முக்கியமான நீதித்துறையின் கண்ணியத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பதாகத் தோன்றியது. மாறாக, இந்த சார்புநிலைகள் நீதித்துறை தீர்ப்புகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நிவர்த்தி செய்வதாகும். நீதித்துறை இந்த பரிந்துரைகளைத் தாண்டி பாரபட்சத்தை மறைத்து, சாதிவாதம், வகுப்புவாதம் மற்றும் பாலினவாதத்திற்கு நீதிமன்ற வளாகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


சட்ட சீர்திருத்தங்கள் ஒரு படி மட்டுமே 


Ute Frevert இந்தப் பிரச்சினையை ”அவமானப்படுத்தும் அரசியல்” (The Politics of Humiliation) என்ற நூலில் விவாதிக்கிறார். ஒதுக்கப்பட்ட வகுப்பினர்களை அரசு திட்டவட்டமாக குறிவைக்கும் போது, ​​அது நிறுவன ரீதியான அவமானத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் விளக்குகிறார். இந்த அவமானம் அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியத்தை ஆழமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சிறைகளில், சாதி அடிப்படையிலான பாகுபாடு மனிதநேயமற்ற தீங்கு விளைவிக்கும் ஒரு நிகழ்வாக தூண்டுகிறது. இந்த பாகுபாடு கைதிகளின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கிறது


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். இந்த பாகுபாடு கடந்த காலத்திற்கான  எச்சம் அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இது இன்னும் மில்லியன் கணக்கானவர்களை, குறிப்பாக சிறையில் உள்ளவர்களை பாதிக்கிறது. 


இருப்பினும், சட்ட சீர்திருத்தங்களால் மட்டும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த அடக்குமுறையை சரிசெய்ய முடியாது. உண்மையான மாற்றத்திற்கு, சாதிய படிநிலைகளை ஆதரிக்கும் அதிகார அமைப்புகளை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். சட்டக் கட்டமைப்புகளை மட்டுமல்ல, அவற்றைத் தாங்கி நிற்கும் மனநிலையையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் இந்தியா தனது அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.


ஆதித்ய ரஞ்சன், U.K. லஃபரோ பல்கலைக்கழகத்தில் குற்றவியல், சமூகவியல் மற்றும் சமூகக் கொள்கையில் முனைவர் பட்ட ஆய்வாளராக (sociology and social policy at Loughborough University) உள்ளார். ஆஷ்னா தேவபிரசாத் சட்டம் பயின்றவர் மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட குற்றவியல் நீதி ஆராய்ச்சியாளராவார் (criminal justice researcher).




Original article:

Share: