இந்தியா தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. உடனடியாக செயல்பட வேண்டிய நேரம் இது. -நீரஜ் சிங் மானஸ்

 நீர்-பாதுகாப்பான பொருளாதாரம் என்பது காலநிலை மீள்தன்மையின் அடிப்படையாகும். இது வேளாண்மைப் பாதுகாக்கிறது, நகர்ப்புற வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்கிறது. உண்மையான பிரச்சினை கருவிகள் இல்லாதது அல்ல, மாறாக விரைவாகவும் உறுதியாகவும் செயல்பட நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான்.


இந்தியா கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடி நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது. உலக மக்கள்தொகையில் 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது. ஆனால், அதன் நன்னீர் வளங்களில் 4 சதவீதம் மட்டுமே உள்ளது. இது கடுமையான நீர் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றம் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது. 2018ஆம் ஆண்டில், நிதி ஆயோக் கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை (Composite Water Management Index) வெளியிட்டது. 600 மில்லியன் இந்தியர்கள் ஏற்கனவே அதிக முதல் தீவிரமான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று எச்சரித்தது. 2030ஆம் ஆண்டுக்குள், நீர் தேவை கிடைக்கக்கூடிய விநியோகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். உலக வள நிறுவனம் (World Resources Institute) உலகில் மிகவும் நீர் பற்றாக்குறை உள்ள 17 நாடுகளில் இந்தியாவை 13 வது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது. பாசன விவசாயத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் குடிநீரில் 85 சதவீதம் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ளது.


2024ஆம் ஆண்டு நிலத்தடி நீர் தர அறிக்கை, இந்தியாவின் நீர் ஆதாரங்களில் 70 சதவீதம் மாசுபட்டுள்ளதாகக் காட்டுகிறது. இந்த மாசுபாடு மக்களின் ஆரோக்கியத்தையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அச்சுறுத்துகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் இன்னும் ஏன் சிதறல் கொள்கைகளையும் (fragmented policies) பலவீனமான முயற்சிகளையும் கொண்டிருக்கிறோம்? தண்ணீர் நமது நாட்டின் முன்னேற்றத்தின் உயிர்நாடி. நமக்கு இன்னும் வலுவான நடவடிக்கை தேவை.


இந்தியாவின் நீர்வளத்தைப் பாதிக்கும் தற்போதைய நெருக்கடியாக காலநிலை மாற்றம் உள்ளது. இந்திய விவசாயத்தில் 55% ஐ ஆதரிக்கும் பருவமழை கணிக்க முடியாததாகிவிட்டது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) 2024 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் 55% தாலுகாக்களில் கனமழை 10% அதிகரித்துள்ளது. இதனால் பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதமடையும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்தியாவின் 33% நிலம் வறட்சியை எதிர்கொள்கிறது. நாட்டின் 48% மண் ஈரப்பதத்தை இழக்கிறது என்று 2024 Conscious Planet அறிக்கை கூறுகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருக்குகின்றன. இது மில்லியன் கணக்கான மக்களை ஆதரிக்கும் கங்கை மற்றும் சிந்து போன்ற ஆறுகளை அச்சுறுத்துகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர் பற்றாக்குறை 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 12% வரை குறைக்கக்கூடும். இது பெரும் பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று உலக வங்கி எச்சரிக்கிறது.


இந்தியாவின் நீரில் 80 சதவீதத்தை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறது. மேலும், காலநிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. 2018-19ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, மழைப்பொழிவு 100 மிமீ குறைந்தால், காரீப் பருவத்தில் விவசாயிகளின் வருமானம் 15 சதவீதமும், ரபி பருவத்தில் 7 சதவீதமும் குறையும் என்று காட்டுகிறது. காலநிலை மாற்றம் விவசாய வருமானத்தை சராசரியாக 15-18 சதவீதம் குறைக்கக்கூடும். இந்தியாவின் விவசாய நிலத்தில் கிட்டத்தட்ட பாதியை உள்ளடக்கிய நீர்ப்பாசனம் செய்யப்படாத பகுதிகளில், வருமானம் 25 சதவீதம் வரை குறையக்கூடும். இதுபோன்ற போதிலும், நீர்ப்பாசனம் பெரும்பாலும் திறமையற்றது. மேலும், நெல் மற்றும் கரும்பு போன்ற நீர் அதிகம் உள்ள பயிர்கள் இன்னும் பரவலாக பயிரிடப்படுகின்றன.


நுண் நீர்ப்பாசனம் 50 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்க முடியும். இருப்பினும், அரசாங்க மானியங்களுடன் கூட, இது 9 சதவீத சாகுபடி நிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உலக வங்கியால் ஆதரிக்கப்படும் அடல் பூஜல் யோஜனா (Atal Bhujal Yojana), நீர் பற்றாக்குறை உள்ள ஏழு மாநிலங்களில் சமூக தலைமையிலான நிலத்தடி நீர் மேலாண்மையை ஊக்குவிக்கிறது. இது 8,000 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது. இது நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், நீர் நெருக்கடியின் அளவோடு ஒப்பிடும்போது அதன் அளவு மிகவும் சிறியது.


நகர்ப்புற இந்தியாவில் கடுமையான நீர் பிரச்சினைகள் உள்ளன. பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி போன்ற நகரங்கள் நகர்ப்புற நீர் பிரச்சினைகள் எவ்வளவு மோசமாகலாம் என்பதைக் காட்டுகின்றன. 2019ஆம் ஆண்டில், சென்னை அதன் நீர்த்தேக்கங்கள் வறண்டபோது தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர். 2030ஆம் ஆண்டுக்குள், 100 மில்லியன் மக்களைப் பாதிக்கும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று நிதி ஆயோக் எச்சரிக்கிறது.


நீர் பாதுகாப்பின்மை பொது சுகாதாரத்தையும் பாதிக்கிறது. சுமார் 70% நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன. நிதி ஆயோக்கின் 2018ஆம் ஆண்ட தரவுகளின்படி, நீரினால் பரவும் நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் 200,000 இறப்புகளுக்கு காரணமாகின்றன. ஃப்ளூரைடு (Fluoride) மற்றும் ஆர்சனிக் (arsenic) தண்ணீரை மாசுபடுத்துகின்றன. இது 19 மாநிலங்களில் 230 மில்லியன் மக்களை பாதிக்கிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனை போன்ற ஆறுகளை மாசுபடுத்துகிறது. இதனால், அவற்றைப் பயன்படுத்த பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. உலக வங்கியின் "One Health" அணுகுமுறை மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை இணைக்கிறது. இந்த அணுகுமுறை நோய் விகிதங்களைக் குறைப்பதன் மூலம் பில்லியன் கணக்கானவர்களைச் சேமிக்க முடியும். இருப்பினும், அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது.


காலநிலை மீள்தன்மையை உருவாக்குவதற்கு தைரியமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. தேசிய நீர் இயக்கம் (National Water Mission) 2025-ம் ஆண்டுக்குள் நீர் பயன்பாட்டுத் திறனை 20% மேம்படுத்த விரும்புகிறது. இருப்பினும், முன்னேற்றத்தை அளவிடுவதற்கு வலுவான அடிப்படை தரவு இல்லை. CEEW பரிந்துரைத்த நீர் கணக்கியல், நீர் சேமிப்பை அளவிட உதவும். சேமிக்கப்பட்ட தண்ணீரை முக்கியமான துறைகளுக்கு அனுப்பவும் இது உதவும். காலநிலை தன்மைகள் மற்றும் 2023ஆம் ஆண்ட தொடங்கப்பட்ட இந்தியாவின் பசுமை கடன் திட்டம் போன்ற நிதி கருவிகள், தகவமைப்புக்கான நிதி இடைவெளியை நிரப்ப உதவும். 2019-20ஆம் ஆண்டில், தகவமைப்பு நிதி ஒரு நபருக்கு ₹260 மட்டுமே செலவிடுகிறது. இது தணிப்புக்காக செலவிடப்பட்ட ஒரு நபருக்கு ₹2,200 ஐ விட மிகக் குறைவு.


300 பெரிய அணைகளை பழுதுபார்த்து நவீனமயமாக்க உலக வங்கி $1 பில்லியன் திட்டத்தைக் கொண்டுள்ளது. மேகாலயாவில் நீர் அறுவடைக்கு ஆதரவாக ஆசிய வளர்ச்சி வங்கி $50 மில்லியன் கடனை வழங்கியது. இவை நல்ல முன்னேற்றமான படிகள் ஆகும்.


ஆனால், உலகளாவிய நீர் நிதி இடைவெளி மிகப் பெரியது. இது, 2030ஆம் ஆண்டுக்குள் $6.7 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய, தனியார் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். சிலி மற்றும் பெரு போன்ற நாடுகள் இதை எவ்வாறு செய்ய முடியும் என்பதைக் காட்டுகின்றன.


நிலையான நீர் மேலாண்மைக்கு சமூக பங்கேற்பு மிகவும் முக்கியமானது. 2019ஆம் ஆண்டு முதல், ஜல் சக்தி அபியான் (Jal Shakti Abhiyan) மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பதன் மூலம் 1,50,000 நீர்நிலைகளை புதுப்பிக்க உதவியுள்ளது. இருப்பினும், விழிப்புணர்வு மற்றும் உள்ளூர் ஈடுபாடு இன்னும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் தண்ணீரை எடுக்கும் பொறுப்பை ஏற்கும் பெண்கள், முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை (Integrated Water Resources Management (IWRM)) ஈரநில மறுசீரமைப்பு போன்ற இயற்கை முறைகளை நிகழ்நேர நீர் கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. இந்த அணுகுமுறை தண்ணீருக்கான நியாயமான அணுகலை உறுதி செய்ய உதவும். தனிமையில் வேலை செய்வதைத் தவிர்க்க நீர், ஆற்றல் மற்றும் காலநிலை கொள்கைகளை சீரமைப்பதும் முக்கியம். எடுத்துக்காட்டாக, சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துவது நிலத்தடி நீர் பயன்பாட்டைக் குறைக்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.


இந்தியாவின் தண்ணீர் நெருக்கடி, பெரிய மாற்றங்களுக்கான அவசரத் தேவையைக் காட்டுகிறது. நீர்-பாதுகாப்பான பொருளாதாரம் காலநிலை மீள்தன்மைக்கான அடிப்படையாகும். இது விவசாயம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கிறது. இதை செயல்படுத்துவதற்கு கருவிகள் நம்மிடம் உள்ளதா என்பது முக்கிய கேள்வி அல்ல. மாறாக, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட நமக்கு விருப்பம் உள்ளதா என்பதுதான். 1.4 பில்லியன் மக்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ள நிலையில், நாம் இன்னும் காத்திருக்க முடியாது.


எழுத்தாளர் கொரியா குடியரசின் பார்லி கொள்கை முன்முயற்சியில் தெற்காசியாவிற்கான சிறப்பு ஆலோசகர்.



Original article:

Share:

காலநிலை நிதி (climate finance) என்பதன் பொருள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


  • கடந்த ஆண்டு, அஜர்பைஜானின் பாகுவில் நடந்த COP29 கூட்டத்தில், காலநிலை நிதி பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இதில், வளர்ந்த நாடுகள் 2035ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட ஒப்புக்கொண்டன. இந்தத் தொகை வளர்ந்த நாடுகள் தற்போது வழங்க வேண்டிய தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இருப்பினும், வளரும் நாடுகள் தங்களுக்குத் தேவை என்று கூறும் ஆண்டுக்கு 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை விட இது இன்னும் மிகக் குறைவு.


  • ஜெர்மனியின் பான் நகரில் நடந்த தற்போதைய வருடாந்திர காலநிலை பேச்சுவார்த்தையில், திங்களன்று ஒரு முறையான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், வளரும் நாடுகள் கடுமையாக அளவுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்ட பிறகு இது நடந்தது. 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ந்த நாடுகளின் கடமையைப் பற்றி விவாதிக்க ஒரு பிரத்யேக செயல்திட்டத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இந்தக் கடமை வளரும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதை உள்ளடக்கியது.


  • பாரிஸ் ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு இரண்டு கடமைகளை வைக்கிறது. முதலாவதாக, அவர்கள் நிதியை "வழங்க வேண்டும்" (பிரிவு 9.1). இரண்டாவதாக, அவர்கள் "காலநிலை நிதியைத் திரட்டுவதில் முன்னணியில் இருக்க வேண்டும்" (பிரிவு 9.3). இந்த இரண்டு கடமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஆனால், அவை தனித்தனியானவை. ஒன்று மற்றொன்றை ரத்து செய்யவோ அல்லது மீறவோ இல்லை.


  • 2035ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டுவதற்கான புதிய வாக்குறுதி, பிரிவு 9.1 இன் கீழ் உள்ள கடமையைத் தவிர்க்கிறது. கடந்த ஆண்டு பாகுவில் நடந்த கூட்டத்தின் முடிவில் வளரும் நாடுகள் மிகவும் அதிருப்தி அடைந்தன. இந்தியா 300 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை "மோசமான ஏழை" (abysmally poor) என்று அழைத்தது. பின்னர், போதுமான காலநிலை நிதி இல்லாமல், அதன் எதிர்கால காலநிலை நடவடிக்கைகளின் இலக்குகளை குறைக்க வேண்டியிருக்கும் என்றும் இந்தியா கூறியது.


  • கடந்த வாரம் தொடங்கிய பான் காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, இந்தியா மற்ற வளரும் நாடுகளிடமிருந்து ஆதரவைத் திரட்டியது. பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 9.1 எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி விவாதிக்க ஒரு புதிய செயல்திட்டதை அவர்கள் ஒன்றாகக் கோரினர். ஆனால், வளர்ந்த நாடுகள் இந்தக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தன. காலநிலை நிதி பேச்சுவார்த்தைகளின் பல்வேறு பகுதிகளின் கீழ் இந்த பிரச்சினை ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். எனவே, புதிய மற்றும் தனி செயல் திட்டத்திற்கான உருப்படி தேவையில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.

உங்களுக்குத் தெரியுமா? :


  • போதுமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படாதது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. மேலும், வளர்ந்த நாடுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அது கூறியது. இந்தத் தோல்வி நம்பிக்கையை உடைக்க காரணமாகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 9.1 என்பது ஒரு தார்மீக கட்டாயம் மட்டுமல்ல, சட்டப்பூர்வக் கடமையும் கூட என்று இந்தியா கூறியது. இந்தக் கடமை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) பிரிவு 4.3-ல் இருந்து நேரடியாக வருகிறது.


  • காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கான பரந்த கொள்கைகளை வகுக்கும் உலகளாவிய சர்வதேச ஒப்பந்தமான 1992 கட்டமைப்பு மாநாடு, வளர்ந்த நாடுகளுக்கு, பிரிவு 4.3 இல், வளரும் நாடுகள் காலநிலை நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் "ஒப்புக்கொள்ளப்பட்ட முழு செலவுகளை" பூர்த்தி செய்ய "புதிய மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்குவதை" கட்டாயமாக்குகிறது.


  • முறையான ஆலோசனையின் விளைவாக, இந்த ஆண்டு இறுதியில் பிரேசிலின் பெலெமில் நடைபெறவிருக்கும் COP30 காலநிலை மாநாட்டின் போது இதேபோன்ற கூட்டத்திற்கு முன் வைக்கப்படும் ஒரு 'அறிக்கை' வெளியிடப்படும்.


  • வளரும் நாடுகள் பெலெமில் ஏதாவது சாதிக்க நம்புகின்றன. பிரிவு 9.1 ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்க ஒரு தனி பணிநிலையத்தை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இந்த இலக்கு இன்னும் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கலாம். இருப்பினும், வளரும் நாடுகள் ஒரு விஷயத்தில் திருப்தி அடையலாம். காலநிலை நிதி பிரச்சினையை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வளர்ந்த நாடுகள் வழக்கமாகத் தவிர்க்க முயற்சிக்கும் ஒரு விவாதத்திற்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.


Original article:

Share:

சுற்றித் திரியும் வெடிமருந்துகள் என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


  • வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத குழுக்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் பிறகு, இரு நாடுகளும் மூன்று நாட்களுக்கு ஒருவருக்கொருவர் பதிலடி தாக்குதல்களை நடத்தின. இறுதியாக, அவர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.


  • பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய இராணுவத்தின் தயார்நிலையை மேம்படுத்த, அவசரகால கொள்முதல் (Emergency Procurement (EP)) அமைப்பு, மற்ற பாதுகாப்பு கொள்முதல்களுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான நீண்ட கொள்முதல் செயல்முறையைப் போலல்லாமல், விரைவான நடைமுறைகளைப் பயன்படுத்தி உபகரணங்களை விரைவாக வழங்க அனுமதிக்கிறது. இது போன்ற அவசரகால கொள்முதல்களின் ஆறாவது சுற்று இதுவாகும்.


  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, EP செயல்முறையின் (EP mechanism) மூலம் வாங்கப்படும் சில முக்கிய உபகரணங்களில் ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள் (Integrated Drone Detection and Interdiction Systems (IDDIS)), குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள் (Low Level Lightweight Radars (LLLR)) மற்றும் VSHORADகள் ஆகியவை அடங்கும். அதில், ஏவூர்திகள் (Launchers) மற்றும் ஏவுகணைகள் (Missiles) போன்றவை உள்ளன.


  • இதில் சுற்றித் திரியும் அல்லது மிதக்கும் ஆயுதங்களும் அடங்கும். இது செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (Vertical Take-Off and Landing (VTOL)) அமைப்புகளையும் கொண்டுள்ளது. குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் (Bulletproof jackets (BPJ)), பாலிஸ்டிக் ஹெல்மெட்கள் (ballistic helmets) மற்றும் விரைவு எதிர்வினை சண்டை வாகனங்கள் (Quick Reaction Fighting Vehicles (QRFV)) கனரக மற்றும் நடுத்தர ​​ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 


  • செவ்வாயன்று, பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. EP செயல்முறையின் கீழ் 13 ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது. இந்த ஒப்பந்தங்கள் ரூ.1,981.90 கோடி மதிப்புடையவை. இந்த தொகை இந்திய இராணுவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.2,000 கோடியின் மொத்த செலவில் ஒரு பகுதியாகும்.


  • சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நவீன தளங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் துணைக்கருவிகளின் விரைவான கையகப்படுத்தல் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த கையகப்படுத்துதல்கள் இந்திய இராணுவத்தின் திறன்களை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. அவை இராணுவத்தின் சரக்குகளையும் வலுப்படுத்தியுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா? :


  • 2020ஆம் ஆண்டு சீனாவுடனான லடாக் மோதல் தொடங்கியபோது ஆயுதப்படைகளுக்கு கொள்முதல் செய்வதற்கான அவசர அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 2019ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டு துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பிறகும் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன.


  • விரைவாகக் கண்காணிக்கப்பட்ட பெரும்பாலான பாதுகாப்பு கொள்முதல்கள் 2020ஆம் ஆண்டு தொடங்கின. அவை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. இந்த நேரத்தில், இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்கள் பல முறை நீட்டிக்கப்பட்டன. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இராணுவ முட்டுக்கட்டை காரணமாக இது நடந்தது.


  • கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயுதப் படைகள் நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள், சுற்றித் திரியும் அல்லது மிதக்கும் ஆயுதங்கள், திரள் ட்ரோன்கள் மற்றும் எதிர்-யுஏவி அமைப்புகளை வாங்கியுள்ளன. இவை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட்டன. அவை தாக்குதல், கண்காணிப்பு மற்றும் தளவாடங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று சேவைகளும் இந்திய நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளையும் (anti-drone systems) வாங்கின.


  • ஆயுதப் படைகள் அவசரகால சக்திகளைப் பயன்படுத்தி பல்வேறு ஆயுத அமைப்புகளையும் வாங்கியுள்ளன. ரஃபேல் போர் விமானங்களுக்கான HAMMER ஆகாயத்திலிருந்து தரைக்கு (air-to-ground) துல்லிய-வழிகாட்டப்பட்ட ஆயுத அமைப்பு, ஸ்பைஸ் குண்டுகள் மற்றும் மேன் போர்ட்டபிள் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் (Man Portable Air Defence System (MANPADS)) ஆகியவை இதில் அடங்கும். இராணுவத்தின் T-72 மற்றும் T-90 முக்கிய போர் டாங்கிகளுக்கான APFSDS எனப்படும் கவச-துளையிடும் (armour-piercing) வெடிமருந்துகளும் இதில் அடங்கும்.


Original article:

Share:

குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் குறித்து பாலின இடைவெளி குறியீடு வெளிக்கொணர்வது என்ன? -ரிதுபர்ண பத்கிரி

 உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் (Global Gender Gap Index), இந்தியாவின் தரவரிசையில் குறையும் கருவுறுதல் விகிதம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? கருவுறுதல் மற்றும் அதன் தேர்வை பாதிக்கும் முக்கிய காரணிகள் யாவை?


ஜூன் 24 அன்று, சர்வதேச இராஜதந்திர பெண்கள் தினம் (International Day of Women in Diplomacy) அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ​​பெண்கள் இராஜதந்திரத்தில் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். கட்டமைப்புக்கான தடைகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தத் தடைகள் பெண்கள் உலகளாவிய முடிவெடுக்கும் நிலைகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கின்றன. பாலின சமத்துவத்தை அடைவதற்கு இதுபோன்ற பாத்திரங்களில் பெண்களை ஆதரிப்பது அவசியம்.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 ஒரு பெரிய உலகளாவிய கவலையைக் காட்டுகிறது. இந்த அறிக்கையில், இந்தியா 148 நாடுகளில் 131வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டை உலக பொருளாதார மன்றம் உருவாக்குகிறது. இது 2006ஆம் ஆண்ட முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடு பொருளாதாரம், அரசியல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளில் பாலின சமத்துவத்தை அளவிடுகிறது.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை முந்தைய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு உதாரணம் 1984-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான மேம்பாட்டு நிதியம் (United Nations Development Fund for Women (UNIFEM)), மற்றொன்று 1995ஆம் ஆண்டில் பெய்ஜிங் பெண்கள் உலக மாநாடு ஆகும். இந்த முயற்சிகள் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க உதவியது. 2015ஆம் ஆண்டில், பாலின சமத்துவம் மீண்டும் உலகளாவிய முன்னுரிமையாக மாறியது. இது நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் செயல் திட்டங்களில் நிலையான வளர்ச்சி இலக்கு 5 ஆக சேர்க்கப்பட்டது. இது 2030ஆம் ஆண்டுக்குள் இதை அடைவதே இலக்கு ஆகும்.


கொள்கை வகுப்பாளர்கள் இதை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துவதால் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை முக்கியமானது. பாலின வேறுபாடுகளைக் குறைப்பதில் முன்னேற்றத்தைச் சரிபார்க்க அவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் சமநிலை மதிப்பெண் 64.1 சதவீதம். இந்த மதிப்பெண் தெற்காசியாவில் மிகக் குறைவான ஒன்றாகும். சுகாதாரம் மற்றும் ஆயுட்காலம் பிரிவில், இந்தியா முன்னேறியுள்ளது. பிறப்பு மற்றும் ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றில் பாலின விகிதத்தில் இது சிறந்த மதிப்பெண்களைக் காட்டுகிறது.


கருவுறுதல் விகிதம் மற்றும் பாலின சமத்துவமின்மை குறைதல்


இருப்பினும், இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலைகள் உள்ளன. மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) ஒரு பெண்ணுக்கு இருக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund’s (UNFPA)) உலக மக்கள்தொகை அறிக்கை 2025 இன் படி, இந்தியாவின் TFR 2.0 ஆகக் குறைந்துள்ளது. 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)) இதைத் தெரிவித்துள்ளது.


மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2 இன் மாற்று நிலையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இரண்டு குழந்தைகள் தங்கள் இரண்டு பெற்றோரை மாற்ற முடியும். இருப்பினும், சில குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்பே இறக்கின்றனர். எனவே, உண்மையான மாற்று நிலை 2.1 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் TFR இப்போது இந்த மாற்று நிலை 2.1 க்குக் கீழே குறைந்துள்ளது.


குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவின் நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க சுதந்திரம் மற்றும் தேர்வுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் காரணங்கள் அனைத்தும் குறைவான குழந்தைகளைப் பெறுவது அல்லது இல்லாதது குறித்த தம்பதிகளின் முடிவுகளைப் பாதிக்கின்றன. எனவே, கருவுறுதல் என்பது தனிப்பட்ட தேர்வைப் பற்றியது மட்டுமல்ல. இது சமூகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


UNFPA மற்றும் YouGov நடத்திய ஒரு கணக்கெடுப்பு இந்தியா உட்பட 14 நாடுகளில் நடத்தப்பட்டது. 20 சதவீத மக்கள் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாமல் போகலாம் என்று கூறியதாகக் கண்டறிந்துள்ளது. பருவநிலை மாற்றம், போர் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற எதிர்கால கவலைகள் தங்களை குறைவான குழந்தைகளைப் பெறத் தேர்வு செய்வதாக ஐந்தில் ஒருவர் கூறியுள்ளனர்.


இந்தியாவில், குழந்தைகளைப் பெற விரும்பும் இளைஞர்களுக்கு நிதி சிக்கல்கள் ஒரு பெரிய சவாலாக உள்ளன. அவர்களில் சுமார் 38% பேர் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். வேலையின்மை மற்றும் வேலை பாதுகாப்பின்மை 21% இளைஞர்களைப் பாதிக்கிறது. இடமின்மை மற்றும் அதிக வாடகை போன்ற வீட்டுவசதி பிரச்சினைகள் 22% ஐ பாதிக்கின்றன. மேலும், 18% பேர் மோசமான குழந்தை பராமரிப்பு வசதிகள் குழந்தைகளைப் பெறுவதை கடினமாக்குகின்றன என்று கூறுகிறார்கள்.


குழந்தைகளைப் பெற முடிவு செய்வதில் சுகாதாரப் பராமரிப்பு மற்றொரு முக்கிய காரணியாகும். உலகெங்கிலும், மூன்றில் ஒருவருக்கு எதிர்பாராத கர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், 14% பேர் கருவுறுதல் அல்லது கர்ப்பம் தொடர்பான மருத்துவ சேவையைப் பெறுவதில் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர். குறைந்தது 15% பேர், குழந்தைகள் வேண்டாமென்றோ அல்லது குறைவான குழந்தைகள் வேண்டாமென்றோ இருப்பதற்கு மோசமான உடல்நலம் அல்லது நாள்பட்ட நோய்கள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.


இனப்பெருக்கத் தேர்வுக்குப் பின்னால் உள்ள சமூகக் காரணிகள்


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருவுறுதல் விகிதங்கள் பரவலாக வேறுபடுகின்றன. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) 2019-21 இதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐந்து மாநிலங்கள் மட்டுமே ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று அளவை விட அதிகமாக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்கள் பீகார் (2.98), உத்தரபிரதேசம் (2.35), ஜார்கண்ட் (2.26), மேகாலயா (2.91), மற்றும் மணிப்பூர் (2.17) போன்றவை ஆகும்.


இதற்கு நேர்மாறாக, பல தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் மாற்று அளவை விடக் குறைவாக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் கருவுறுதல் விகிதங்களை 1.6 முதல் 1.9 வரை கொண்டுள்ளன.


மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், இது இப்போது 1.6 ஆகவும், கிராமப்புறங்களில், இது 2.2 ஆகவும் உள்ளது. அதிக கருவுறுதல் விகிதங்கள் பெரும்பாலும் பொது உள்கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அவை பெண்களின் கல்வி மற்றும் நிறுவனத்தின் குறைந்த மட்டங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. மறுபுறம், குறைந்த கருவுறுதல் விகிதங்கள் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகின்றன.


கருவுறுதல் சரிவு (decline in fertility) என்பது பெண்களின் தனிப்பட்ட விருப்பத்தின் விளைவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மைநிலை  மிகவும் சிக்கலானது. பெற்றோரை, குறிப்பாக தாய்மையை ஆதரிக்கும் நிலைமைகளை உருவாக்குவதில் மாநிலமும் சமூகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் பொருள் சுகாதாரப் பராமரிப்புக்கான நியாயமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் இனப்பெருக்க சுதந்திரத்தைப் பாதுகாத்தல் என்பதாகும்.


மேலும், தாய்மையை உயிரியல் ரீதியாக தீர்மானிக்க முடியாது மற்றும் மகப்பேறு விடுப்பு, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் போன்ற அரசின் ஆதரவு நடவடிக்கைகளால் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, 24,000 பெண் ஊழியர்களை உள்ளடக்கிய பெண்களின் குரல் ஆய்வு 2024 (Voice of Women Study), மருத்துவ ரீதியாக அவசியமான மகப்பேறு விடுப்பு போன்ற குடும்ப நட்புக் கொள்கைகளைப் (family-friendly policies) பயன்படுத்துவது கூட பணியிடத்தில் பெண்களுக்கு நற்பெயரைச் செலவழிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. பெண்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம், பகுதிநேர பணியிடங்களுக்கு தள்ளப்படுகிறார்கள், தொழில் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துகிறார்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை அதிகரிக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக, பெற்றோர் முறை என்பது ஒரு செலவாகக் கருதப்படுகிறது.


எனவே, வீழ்ச்சியடைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை பரந்த சமூக மற்றும் நிறுவன சிக்கல்களின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களும் பெண்களும் பெற்றோராக மாறுவது குறித்த தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் UNFPA மற்றும் YouGov கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்தியாவில், பெண்கள் அரிதாகவே மகப்பேறு முடிவுகளை தனியாக எடுக்கிறார்கள். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கான விருப்பம், சமூக அழுத்தம் போன்றவை குழந்தைகளைப் பெறுவது குறித்த பெண்களின் தேர்வுகளை பாதிக்கிறது.


லீலா துபே மற்றும் பிரேம் சௌத்ரி போன்ற அறிஞர்களின் சமூகவியல் ஆய்வுகள் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக, ”பெண்கள் மற்றும் உறவுமுறை: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாலினம் குறித்த ஒப்பீட்டு பார்வைகள்” (Women and Kinship: Comparative Perspectives on Gender in South and South-East Asia) என்ற தனது புத்தகத்தில், உறவுமுறை அமைப்புகள் பாலின உறவுகளை வடிவமைக்கின்றன என்று டியூப் விளக்குகிறார். இந்த அமைப்புகள் பெரும்பாலும் பெண்களை விட ஆண்களை அதிகம் மதிக்கின்றன. இதேபோல், சவுத்ரி, தனது ”தி வெயில்டு வுமன்: ஷிஃப்டிங் பாலின சமன்பாடுகள் இன் ரூரல் ஹரியானா” (The Veiled Women: Shifting Gender Equations in Rural Haryana) என்ற படைப்பில், இந்தியாவில் மகள்களைப் பெறுவதற்கு எதிரான சார்புகளைப் பற்றி எழுதுகிறார்.


கொள்கை மட்டத்தில், நம்பிக்கையை வளர்ப்பது முக்கியம். இந்த நம்பிக்கை நிலையான மற்றும் உரிமைகள் சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். உதாரணமாக, 2024ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சி சட்டங்களில் மாற்றங்களைச் செய்தது. முன்னதாக, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிடுவதை இந்தச் சட்டங்கள் தடை செய்தன. ஆனால், மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்துவிட்டதால், பழைய கொள்கை நீக்கப்பட்டது.


NFHS 2019-21இன் படி, ஆந்திரப் பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.47 ஆக இருந்தது. கிராமப்புறங்களில், TFR 1.78 ஆக இருந்தது. இரண்டு எண்களும் 2.1 என்ற மாற்று அளவை விட மிகக் குறைவு. இருப்பினும், தம்பதிகளுக்கு அதிக குழந்தைகளைப் பெறச் சொல்வது மட்டும் போதாது. பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கும் உறுதியான நடவடிக்கைகள் தேவை. இவை பெற்றோரை ஒரு யதார்த்தமான தேர்வாக மாற்ற உதவும்.


சமூக நிலையில், குறைவான குழந்தைகளைப் பெறுவதா அல்லது குழந்தைகளைப் பெறாமலிருப்பதா என்ற முடிவு, வீட்டில் பாலின நிலைகளிலும் பாதிக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office (NSO)) நடத்திய நேர பயன்பாட்டு கணக்கெடுப்பு, 41% பெண்கள் பராமரிப்பில் பங்கேற்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 21.4% ஆண்கள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். பெண்கள் ஒரு நாளைக்கு 140 நிமிடங்கள் பராமரிப்பு நடவடிக்கைகளில் செலவிடுகிறார்கள். ஆண்கள் ஒரு நாளைக்கு 74 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள். 


இந்திய சமூகம் வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு பணிகளை பெரும்பாலும் பெண்களின் வேலையாக எவ்வாறு பார்க்கிறது என்பதை இது காட்டுகிறது. இது பெரும்பாலும் பெண்களை குழந்தைகளைப் பெற தயங்க வைக்கிறது அல்லது குறைவாகவே தேர்வு செய்கிறது. பெண்களின் ஊதியம் பெறாத வீட்டு வேலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் கொள்கைகளுக்கான அவசரத் தேவையை இது எடுத்துக்காட்டுகிறது. ”Valuing Work: Time as a Measure”  என்ற 1996ஆம் ஆண்டு வெளியான தேவகி ஜெயின் போன்ற பெண்ணிய பொருளாதார வல்லுநர்கள் இந்தக் கருத்தை ஆதரித்துள்ளனர்.


குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தைச் சமாளிக்க, வீட்டுக் கடமைகள் மற்றும்  பெற்றோர் பொறுப்புகள் போன்ற  பாரம்பரிய பாலினத் தன்மைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இது வெறும் "பெண்களின் பிரச்சனை" (women’s problem) மட்டுமல்ல. இதற்கு சமூகம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவரின் நடவடிக்கையும் தேவை. இந்தியாவில், குழந்தைகளைப் பெறுவது பற்றிய முடிவுகள் சாதி, மதம் மற்றும் ஆணாதிக்கத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.



Original article:

Share:

பழங்குடியின மக்களுக்கான ஒன்றியத்தின் தொடர்பு கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிய வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும். ஆனால் அது எளிதல்ல.

 பழங்குடியின மக்கள் அடிப்படை ஆவணங்களைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு திட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆதார் (Aadhaar) மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் (Ayushman Bharat cards) அடங்கும். இந்தத் திட்டங்கள் வன உரிமைகள் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் நில உரிமைகளைப் பெறவும் உதவுகின்றன. கூடுதலாக, அவை ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கான அணுகலை வழங்குகின்றன.


ஜூன் 15 அன்று, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ஒரு தொலைத்தொடர்பு திட்டத்தைத் தொடங்கியது. இது பெரும்பாலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் சுமார் 1 லட்சம் கிராமங்களை மையமாகக் கொண்டது. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) மற்றும் தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA)) ஆகிய இரண்டு நலத்திட்டங்களை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்குவதே இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.


பழங்குடியினருக்கு ஆதார் அட்டைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள், வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிமைகள், ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகள் போன்ற முக்கிய ஆவணங்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது ஏற்கனவே உள்ள திட்டங்களில் சேரவும் அவர்களுக்கு உதவுகிறது. பழங்குடி மக்களுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், "சமூக அணிதிரட்டல் மூலம் பங்கேற்பு நிர்வாகத்தை" (participatory governance through community mobilisation) ஊக்குவிப்பதும் இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள்களாகும். இந்த இலக்குகள் மிகவும் நேர்மறையானவை. இருப்பினும், சவால்கள் இருக்கும்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், பழங்குடியின மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டில், அரசாங்கம் PM JANMAN ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி DAJGUA திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டம் 63,843 கிராமங்களில் உள்கட்டமைப்பு சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இருப்பினும், பல பழங்குடி மக்கள் இன்னும் இந்தத் திட்டங்களிலிருந்து பயனடையவில்லை. இதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், கடினமான புவியியல் சூழ்நிலைக் காரணமாக சில பகுதிகளை அடைவது கடினம். குறிப்பாக பழங்குடி குழுக்களில் மற்றொரு கடுமையான பிரச்சினை நிலமின்மை ஆகும். நவம்பர் 2024ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தப் பிரச்சினையை எழுப்பினார். பழங்குடியினர் பகுதிகளில் நிலம் வழங்க உதவுமாறு நிதி ஆயோக்கை அவர் கேட்டுக் கொண்டார்.


மற்றொரு சவால் என்னவென்றால், பழங்குடி மக்கள் பெரும்பாலும் இந்தத் திட்டங்களை அணுகத் தேவையான ஆவணங்களைப் பெற முடியாது. உதாரணமாக, அக்டோபர் 2024ஆம் ஆண்டில், புனேவில் உள்ள பல கட்கரி ஆதிவாசி மக்கள் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதில் சிரமப்படுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. பழங்குடி துணைத் திட்டங்களின் (Tribal Sub Plans (TSP)) கீழ் சலுகைகளைப் பெற இந்த ஆவணங்கள் தேவை. 1984ஆம் ஆண்டில் டிம்பே அணை (Dimbhe Dam) கட்டப்பட்டதால் அவர்கள் இடம்பெயர்ந்த பிறகு அவர்களின் கிராமம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.


சுதந்திரம் பெற்றதிலிருந்து, அணைகள், சுரங்கங்கள், வனவிலங்கு சரணலாயங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் உருவாக்கம்  காரணமாக மில்லியன் கணக்கான பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் தனித்துவமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதைச் செய்ய, அரசியல் செயல்களை விட நல்லாட்சி முக்கியமானது. இந்த மக்கள் தொடர்பு பிரச்சாரம் இதன் முதல் படியாக இருக்கலாம்.


Original article:

Share:

2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கை -ரோஷ்னி யாதவ்

 சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கை, 2024-ஆம் ஆண்டில் சிறந்த நடைமுறை-நிலை கிராஃபிக் சுகாதார எச்சரிக்கை அடையாளங்களைக்  கொண்ட நாடுகளில் இந்தியாவை அடையாளம் காட்டுகிறது. இந்த அறிக்கை எதைப் பற்றியது?


தற்போதைய செய்தி என்ன?:


புகையிலை பயன்பாடு உலகின் மிகப்பெரிய சுகாதார ஆபத்துகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றில் 7 மில்லியனுக்கும் அதிகமானவை புகையிலையை நேரடியாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்து வந்தவை என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Health Metrics and Evaluation (IHME)) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அதிக புகையிலை நுகர்வு சவாலை சமாளிக்க, மக்கள் புகைபிடிப்பதை விட்டுவிட உதவும் ஒரு பயனுள்ள வழியாக சுகாதார எச்சரிக்கைகள் உள்ளன. அதனால் தான் உலக சுகாதார அமைப்பின் 2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கையின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். இது புகையிலையின் ஆபத்துகள் குறித்து மக்களை எவ்வாறு எச்சரிப்பது என்பது பற்றிப் பேசுகிறது.




முக்கிய அம்சங்கள்:


1. 2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கை, உலக சுகாதார அமைப்பால் Bloomberg தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஆறு நிரூபிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு MPOWER புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இது கவனம் செலுத்துகிறது.


2. புகையிலை கட்டுப்பாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பு மாநாடு (WHO Framework Convention on Tobacco Control (WHO FCTC)) மற்றும் அதன் வழிகாட்டுதல்கள், புகையிலை கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் நாடுகள் அடித்தளத்தை வழங்குகின்றன. இதை உண்மையாக்க உதவும் வகையில், உலக சுகாதார அமைப்பு MPOWER நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.


3. WHO FCTC-இல் உள்ள புகையிலைக்கான தேவையைக் குறைப்பதற்கான பயனுள்ள தலையீடுகளை நாடு அளவில் செயல்படுத்துவதில் MPOWER நடவடிக்கைகள் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. MPOWER நடவடிக்கைகள் -


M– புகையிலை பயன்பாடு மற்றும் தடுப்புக் கொள்கைகளைக் கண்காணித்தல்;


P– புகையிலை புகையிலிருந்து மக்களைப் பாதுகாத்தல்;


O– புகையிலையை விட்டு வெளியேற உதவி வழங்குதல்;


W– புகையிலையின் ஆபத்துகள் குறித்து எச்சரித்தல்;


E– புகையிலை விளம்பரத்தில் தடைகளை அமல்படுத்துதல்; மற்றும்


R– புகையிலை பொருட்களுக்கான வரிகளை உயர்த்துதல் ஆகும்.


4. 2007 ஆம் ஆண்டில் 9 நாடுகளுக்கு மட்டுமே இந்த நடவடிக்கைகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 110 நாடுகள் இந்த நடவடிக்கைகளைக் கோருகின்றன. இந்த விதிகள் இப்போது உலக மக்கள்தொகையில் 62% பேரைப் பாதுகாக்கின்றன. மேலும், 25 நாடுகள் எளிய பேக்கேஜிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன.


2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்


1. 2025 அறிக்கை W அளவீட்டில் கவனம் செலுத்துகிறது (புகையிலையின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கிறது) மேலும் 6.1 பில்லியன் மக்கள் சிறந்த நடைமுறை மட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு MPOWER நடவடிக்கையால் பாதுகாக்கப்படுவதால், பல நாடுகள் புகையிலைக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்றன என்பதைக் காட்டுகிறது.

சுகாதார எச்சரிக்கைகளும் பொது ஊடக பிரச்சாரங்களும் ஒரு விரிவான புகையிலை கட்டுப்பாட்டு ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது சிறப்பாக செயல்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

2. நான்கு நாடுகள் இப்போது முழுமையான MPOWER அடையாளத்தை அடைந்துள்ளன. மேலும், ஏழு நாடுகள் ஒரே ஒரு நடவடிக்கை மட்டுமே குறைவாக உள்ளன. அதே நேரத்தில் 40 நாடுகள் இன்னும் சிறந்த நடைமுறை அளவில் எந்த MPOWER நடவடிக்கையும் இல்லை.

3. இந்த அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் படமுள்ள சுகாதார எச்சரிக்கைகளில் ஏற்பட்டுள்ளது என்று வெளிப்படுத்துகிறது. இது உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

4. அறிக்கையின் படி, இந்தியா 2024-ஆம் ஆண்டில் சிறந்த நடைமுறை அளவிலான சுகாதார எச்சரிக்கை  அடையாளங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

5. அனைத்து MPOWER நடவடிக்கைகளிலும், சிகரெட் பெட்டிகளில் பெரிய அளவிலான கிராஃபிக் சுகாதார எச்சரிக்கைகள் 2007ஆம் ஆண்டு  முதல் மிகவும் மேம்பட்டுள்ளன. அதிகமான நாடுகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன. மேலும், அதிகமான மக்கள் இப்போது வலுவான எச்சரிக்கைக் கொள்கைகளால் மூடப்படுகிறார்கள். மேலும், இந்த எச்சரிக்கைகளின் சராசரி அளவு 2007ஆம் ஆண்டில் 28% இலிருந்து 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 60% ஆக அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு முதல், இந்தியா இரண்டு துறைகளில் சிறந்து விளங்குகிறது: மக்கள் புகையிலையை விட்டு வெளியேற உதவுதல் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய்தல் ஆகும். வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற பிற துறைகளிலும் இது உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிகரெட் பெட்டிகளில் மிகப் பெரிய சுகாதார எச்சரிக்கைகள் உள்ளன. இது பெட்டியின் 85%-ஐ உள்ளடக்கியது. 10 நாடுகளில் மட்டுமே பெரிய எச்சரிக்கைகள் உள்ளன. டாக்டர் விநாயக் மோகன் பிரசாத், உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் தலைவர் தலைவராக உள்ளார். 

6. 'W' நடவடிக்கையில், இந்தியா 2016ஆம் ஆண்டு முதல் மிக உயர்ந்த குழுவில் உள்ளது. 'E' நடவடிக்கையில், இந்தியா நேரடி மற்றும் மறைமுக புகையிலை விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் நல்கைகளை (sponsorships) தடை செய்துள்ளது.

7. உலக சுகாதார அமைப்பின் அறிக்கை புகையிலை கட்டுப்பாட்டில் முன்னேற்றத்தை பராமரிக்கவும் துரிதப்படுத்தவும் நடவடிக்கை தேவை என்று எச்சரித்துள்ளது. ஏனெனில், அதிகரித்து வரும் தொழில்துறை தலையீடு புகையிலை கொள்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை சவால் செய்கிறது.

8. குறிப்பிடத்தக்க வகையில், புகையிலை வரி என்பது இந்தியாவில் குறைந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட MPOWER நடவடிக்கையாகும்.

உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டுக்கான ப்ளூம்பெர்க் பரோபகார விருதுகள் (Bloomberg Philanthropies Awards for Global Tobacco Control)

  1. புகையிலையை விட்டு வெளியேற பலருக்கு உதவியதற்காக உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டுக்கான 2025 ப்ளூம்பெர்க் தொண்டு நிறுவன விருதை வென்ற ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


உலக புகையிலை இல்லா தினம்

புகையிலையின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நுகர்வோரை அந்தப்பழக்கத்தை விட்டுவிட ஊக்குவிக்கும் பயனுள்ள கட்டுப்பாட்டு கொள்கைகளை ஊக்குவிக்கவும், உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினமாக (World No Tobacco Day) கடைப்பிடிக்கிறது. 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் "புகையிலை தொழில்துறை தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்" ஆகும். இது ஆக்கிரமிப்பு புகையிலை சந்தைப்படுத்தலில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்கவும் எதிர்கால அடிமைத்தன விகிதங்களைக் குறைக்கவும் அரசாங்கங்களை அழைக்கிறது.


  1. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு செல் (National Tobacco Control Cell), திங்கள்கிழமை (ஜூன் 23) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற உலக புகையிலை கட்டுப்பாட்டு மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

  2. இந்தியாவுக்கு புகையிலை நிறுத்துதலை ஊக்குவிப்பதற்கான 'O' வகை விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மற்ற நாடுகளில் மொரிசஸ், மெக்ஸிகோ, மான்டினேக்ரோ, பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும்.

புகையிலைக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் (Measures taken by India to fight against Tobacco)

  1. இந்தியா தொலைக்காட்சி, வானொலி, அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்கள் உட்பட அனைத்து ஊடக வடிவங்களிலும் புகையிலை விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவியை (tobacco advertising, promotion and sponsorship (TAPS)) கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

  2. பொழுதுபோக்கு ஊடகங்களில் புகையிலை பயன்பாட்டின் சித்தரிப்பைக் கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு 2012-ஆம் ஆண்டில் புகையிலை இல்லாத திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி விதிகளை (Tobacco-Free Films and Television Rules) அறிமுகப்படுத்தியது. இது சினிமா மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய தளங்களில் கவனம் செலுத்துகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா அனைத்து உட்புற பொது இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்துள்ளது. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகள் உள்ளன உணவகங்கள்/குடிப்பழக்க வசதிகள்/இரவு கிளப்புகளிலும் விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களிலும் குறிப்பிட்ட புகைபிடிக்கும் அறைகள் உள்ளன.

  1. அதிகமான மக்கள் டிஜிட்டல் ஒளிப்பரப்புத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு மாறுவதால், இந்தியா தனது புகையிலை கட்டுப்பாட்டு கொள்கைகளை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. மே 31, 2023 அன்று உலக புகையிலை இல்லா தினத்துடன் இணைந்து, அரசாங்கம் 2012 சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இது over-the-top ஒளிப்பரப்புத் தளங்களுக்கும் அதன் பாதுகாப்பை விரிவுபடுத்தியது. இந்த நடவடிக்கையுடன், டிஜிட்டல் ஒளிப்பரப்பு உள்ளடக்கத்திற்கு குறிப்பாக புகையிலை கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக இந்தியா ஆனது.

  2. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியா பொது சுகாதாரத்திற்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, வளர்ந்து வரும் ஊடக நுகர்வு போக்குகளுக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றியமைப்பதில் முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இருப்பினும், தற்போதைய தேசிய TAPS தடையை விற்பனை இடங்களில் புகையிலை விளம்பரத்தை தடை செய்வதன் மூலமும் புகையிலை தொழில்துறை நிதியுதவியை முழுமையாக தடை செய்வதன் மூலமும் மேலும் வலுப்படுத்த முடியும்.

முதல் 10 மிகப்பெரிய புகையிலை உற்பத்தி நாடுகள் (Top 10 largest tobacco-producing countries)

  1. புகையிலையின் சுகாதார அபாயங்கள் குறித்த பரவலான விழிப்புணர்வு இருந்தபோதிலும், மூல புகையிலை தொழில் தொடர்ந்து செழித்து வளர்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 5.8 மில்லியன் டன்கள் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. இதில் சீனா இந்த உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது என்று ஸ்டேடிஸ்டா (Statista) கூறுகிறது.

  2. அதே ஆண்டில், இந்தியாவும் பிரேசிலும் முறையே சுமார் 0.8 மில்லியன் மற்றும் 0.7 மில்லியன் டன்கள் பதப்படுத்தப்படாத புகையிலையை உற்பத்தி செய்தன என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organisation (FAO)) கூறுகிறது.

  3. 2023 ஆம் ஆண்டின் படி உலகின் முதல் 10 மிகப்பெரிய புகையிலை உற்பத்தி நாடுகள்:

தரவரிசை

நாடு

பதப்படுத்தப்படாத புகையிலை உற்பத்தி (மெட்ரிக் டன்கள்)

1

சீனா (பிரதான நிலப்பகுதி)

2,296,700

2

இந்தியா

769,671

3

பிரேசில்

683,469

4

இந்தோனேசியா

238,806

5

ஜிம்பாப்வே

236,815

6

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

196,160

7

பாகிஸ்தான்

151,858

8

டான்சானியா ஐக்கிய குடியரசு

122,859

9

அர்ஜென்டினா

107,880

10

கொரியா மக்கள் ஜனநாயக குடியரசு

87,427

4. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தி செய்யப்படாத புகையிலை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக உள்ளது. இதன் உற்பத்தி அளவு 770,000 டன்கள் ஆகும்.

Original article:

Share: