DPDP மசோதா நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் -எஸ்.கே.மொஹந்தியானுஜ், குமார்

 டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவின் (Digital Personal Data Protection Bill’s) தரவு மீறல்கள் மற்றும் கடுமையான அபராதங்கள் குறித்த கட்டாய அறிக்கையிடல் மீதான முக்கியத்துவம் பொறுப்புக்கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 


நிதி சேவைகளுக்கான அணுகலை அதிகரிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கு  மிகவும் தொலைதூர பகுதிகளையும் சென்றடைகிறது. 


டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (DPDP) மசோதா தரவு பாதுகாப்புக்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது? செயலாக்கப்படுகிறது? மற்றும் சேமிக்கப்படுகிறது? என்பதை ஒழுங்குபடுத்துகிறது. கடன் வழங்குநர்கள், கட்டண சேவை வழங்குநர்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் BFSI துறையில் உள்ள பிற நிறுவனங்கள் போன்ற நிதித் துறையில் உள்ள நிறுவனங்களால் முக்கியமான வாடிக்கையாளர் தரவுக்கான விரிவான அணுகலைக் கருத்தில் கொண்டு, தரவு சேகரிப்பு (data collection), ஒப்புதல் (consent), செயலாக்கம் (processing) மற்றும் பதிவு செய்தல் (record-keeping) குறித்த DPDP-இன் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது மிக முக்கியமானது. 


ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள GDPR (General Data Protection Regulation) அமைப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவியது. மேலும், DPDP சட்டம் அத்தகைய உலகளாவிய தரங்களுடன் சீரமைக்க முற்படுகையில், இந்தியாவின் குறிப்பிட்ட சூழலை நிவர்த்தி செய்ய தனித்துவமான விதிகளை அறிமுகப்படுத்துகிறது. தரவு மீறல்கள் மற்றும் கடுமையான அபராதங்கள் குறித்து கட்டாயமாக புகாரளிப்பதற்கான மசோதாவின் முக்கியத்துவம் பொறுப்புக்கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது இணக்கத்திற்கு இன்றியமையாதது. 


இடர் மதிப்பீட்டைப் பொருட்படுத்தாமல், அனைத்து தரவு மீறல்களும், தரவு பாதுகாப்பு வாரியம் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று DPDP கட்டளையிடுகிறது. அதே வேளையில் GDPRக்கு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மீறல்களுக்கு மட்டுமே அறிவிப்பு தேவைப்படுகிறது. 


ஒப்புதலைப் பெறுதல் 


GDPR முறையைப் போலவே, DPDP கட்டமைப்பானது, வழங்கப்பட்ட ஒப்புதல் குறிப்பிட்ட செயல்முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த 'குறிப்பிட்ட' முறையில் ஒப்புதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தனிநபர்கள் எதை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதையும் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது பற்றிய தெளிவான தகவலுடன் தெரிவிக்கப்படுகிறது. அபராதங்களைப் பொறுத்தவரை, DPDP மிகவும் கடுமையானது. GDPR அதிகபட்சம் 20 மில்லியன் டாலர் அல்லது உலகளாவிய வருவாயில் 4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் ($ 30 மில்லியன்) அபராதம் விதிக்கப்படுகிறது. 


DPDP மசோதா வழங்கப்படுவதற்காக காத்திருக்கும் போது, நிறுவனங்கள் தடையற்ற அமலாக்கத்திற்கு தயாராக பல செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கலாம். முதலாவதாக, என்ன தரவு சேகரிக்கப்படுகிறது?, செயலாக்கப்படுகிறது? மற்றும் சேமிக்கப்படுகிறது? என்பதைப் புரிந்துகொள்ள நிறுவனம் முழுவதும் முழுமையான தரவு தணிக்கைகளை நடத்துவது அவசியம். அணுகல் கட்டுப்பாடுகள் (access controls) மற்றும் குறியாக்கம் (encryption) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவு பாதுகாப்பு கொள்கைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் இது ஒரு சரியான தருணம். தரவை அதன் உணர்திறன் மற்றும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப வகைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. 


கூடுதலாக, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தரவு பாதுகாப்பு கொள்கைகளில் பயிற்சித் திட்டங்களையும் நிறுவலாம். விழிப்புணர்வு மற்றும் பொறுப்பின் கலாச்சாரத்தை வளர்க்கலாம். இறுதியாக, பங்குதாரர்களுடன் அவர்களின் தரவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி வெளிப்படையான தகவல் தொடர்புகளைப் பராமரிப்பது, மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அனைவரும் சீரமைக்கப்பட்டு இணக்கத்திற்கு தயாராக இருப்பதை உறுதி செய்யும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு தயாராக இருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் ஒட்டுமொத்த தரவு பாதுகாப்பு முறையையும் மேம்படுத்தும். 


DPDP மசோதா இந்தியாவின் நிதிச் சேவைத் துறையில் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதன் மூலம், இது துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கும். இந்தியா தனது டிஜிட்டல் பயணத்தைத் தொடரும் நிலையில், DPDP மசோதா அதன் குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான நிதி நிலப்பரப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். 


CAMS-ல் மொஹந்தி இயக்குநராகவும், குமார் நிர்வாக இயக்குநராகவும் உள்ளனர்.



Original article:

Share:

GRAP நிலை IV ஏன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது? அதன் கீழ் என்னென்ன அனுமதிக்கப்படுகிறது?

 தேசிய தலைநகர் பகுதியான டெல்லிக்கு மாசு தொடர்பான கட்டுப்பாடுகளின் மிக உயர்ந்த நிலை ஏன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் என்னென்ன தடை செய்யப்பட்டுள்ளது? அடுத்த சில நாட்களில் காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதா?  


தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தில் (Graded Response Action Plan (GRAP)) நான்காம் கட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (நவம்பர் 18) டெல்லி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியது. தேசிய தலைநகர் பகுதியான டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் மற்றும் அதிக அளவு காற்று மாசுபாடு ஏற்பட்டதால், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Air Quality Management (CAQM)) திங்கள்கிழமை முதல் GRAP-இன் நான்காம் கட்டத்தை செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பித்தது.  


எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 441-ஆக இருந்தபோதிலும், GRAP-யை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள CAQM துணைக்குழு "முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும், காற்றின் தரம் மேம்படும் வரை காத்திருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.   


மேலும், தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (AQI) 450-க்கும் கீழே குறைந்தாலும் நான்காம் கட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மாசு தொடர்பான கட்டுப்பாடுகளின் மிக உயர்ந்த நிலை ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது? அதன் கீழ் அனுமதிக்கப்பட்டவை மற்றும் தடைசெய்யப்பட்டவை  என்னென்ன? 


GRAP என்றால் என்ன? 


தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (GRAP))  என்பது தேசிய தலைநகர் பகுதியான டெல்லி பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பை அடைந்தவுடன் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கத் தொடங்கும் அவசரகால நடவடிக்கைகளின் தொகுப்பாகும். 2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2017-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் (Environment Pollution (Prevention and Control) Authority (EPCA)) மாநில அரசு பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களுடன் நடத்திய பல கூட்டங்களுக்குப் பிறகு வகுக்கப்பட்டது. 


இயற்கையில் காற்றின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால், காற்றின் தரம் 'மோசம்' முதல் 'மிகவும் மோசம்' (‘poor’ to ‘very poor’) வரை குறையும்போது, இரண்டு பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். AQI 'மோசம்' பிரிவில் (201 முதல் 300 வரை) இருக்கும்போது GRAP-ன் நிலை I செயல்படுத்தப்படுகிறது. நிலை II என்பது 'மிகவும் மோசம்' பிரிவில் (301-400), நிலை III என்பது AQI 'கடுமையான' வகையாக (401-450) இருக்கும்போது மற்றும் இறுதியாக நிலை IV என்பது 'கடுமையான +' வகைக்கு (450 க்கும் மேல்) உயரும் போது இந்த GRAP-இன் நிலைகள் பின்பற்றப்படுகிறது . 




GRAP IV ஏன் இப்போது விதிக்கப்பட்டுள்ளது? 


காற்றின் தர சூழ்நிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கான முன்னறிவிப்புகளின் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) ஞாயிற்றுக்கிழமை மாலை 441-ஆக இருந்தது மற்றும் இரவில் வரம்பு நிலையை மீறியது. கடுமையான மூடுபனி, மாறுபட்ட காற்று, மிகவும் சாதகமற்ற வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் காரணமாக இந்த கடுமையான பிரிவில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


GRAP IV-ன் கீழ் என்ன அனுமதிக்கப்படுகிறது? 


1. டெல்லிக்குள் லாரி போக்குவரத்தை நிறுத்த வேண்டும் (அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் / அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகள் தவிர). இருப்பினும், அனைத்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied Natural Gas (LNG)) / அழுத்தப்பட்ட இயற்கை வாயு (Compressed Natural Gas (CNG)) / எலக்ட்ரிக் / பிஎஸ்-6 (BS- VI) டீசல் வண்டிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். 


2. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்பவை / அத்தியாவசிய சேவைகளை வழங்குபவை தவிர, மின்சார வாகனங்கள் / CNG / பிஎஸ்-6 டீசல் தவிர டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட இலகுரக வர்த்தக வாகனங்களை (எல்சிவி) டெல்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். 


காற்றின் தரம் மோசமடையும் போது பின்பற்ற வேண்டிய தெளிவான வழிமுறைகளை திட்டம் நிறுவியது.


3. டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 (BS- VI) மற்றும் அதற்கும் குறைவான டீசலில் இயங்கும் நடுத்தர சரக்கு வாகனங்கள் (Medium Goods Vehicles (MGVs)) மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் (Heavy Goods Vehicles (HGVs)) ஆகியவை அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்பவை / அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தவிர டெல்லியில் இயக்குவதற்கு கடுமையான தடையை அமல்படுத்த வேண்டும். 


4. நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம், குழாய்கள், தொலைத்தொடர்பு போன்ற பொதுத் திட்டங்களுக்கான கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 


5. டெல்லியில்  6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை  மற்றும் 11ம்  வகுப்புகளுக்கு, நேரடி வகுப்புகளை நிறுத்தி அதற்கு பதிலாக இணைய வழியில் பாடங்களை நடத்துவது குறித்து டெல்லி அரசாங்கம் அது குறித்த ஒரு முடிவை எடுக்கலாம். 


6. பொது, நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பலத்துடன் செயல்படவும், மீதமுள்ளவை வீட்டிலிருந்து வேலை செய்யவும் அனுமதிக்க டெல்லி அரசு முடிவு செய்யலாம். 


7. மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தகுந்த முடிவுகளை எடுக்கலாம். 


8. கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களை மூடுவது மற்றும் அவசரமற்ற வணிக நடவடிக்கைகளை நிறுத்துவத, ஒற்றைப்படை பதிவு எண்களின் அடிப்படையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் அவசர நடவடிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். 


மேலும், குடிமக்கள் சாசனத்தை (citizen charter) கடைப்பிடிக்கவும், பிராந்தியத்தில் காற்றின் தரத்தை நிலைநிறுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நோக்கம் கொண்ட GRAP நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த உதவுமாறு குடிமக்களை வலியுறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் சுவாச பிரச்சனை, இருதய பிரச்சனை, பெருமூளை அல்லது பிற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Original article:

Share:

நாடாளுமன்ற சிறப்புரிமைகளும், விலக்குரிமைகளும்

 அரசியலமைப்பின் 105(3)வது பிரிவின்படி, ஒவ்வொரு சபை, அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் குழுக்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் விதிவிலக்குகளை வரையறுப்பதற்கான எந்தவொரு சட்டமும் இதுவரை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படவில்லை. அத்தகைய சட்டம் இல்லாமல், 1978-ம் ஆண்டு அரசியலமைப்பின் நாற்பத்தி நான்காவது திருத்த சட்டத்தின் 15-வது பிரிவுக்கு முன்பு இருந்ததைப் போலவே, நாடாளுமன்றத்தின் அவைகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் விலக்குரிமைகள் ஆகியவை இருக்கும்.


நாடாளுமன்ற அவையின் அவமதிப்பு என்பது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலையும், புறக்கணிப்பு என வரையறுக்கப்படுகிறது. அத்தகைய அவையின் எந்தவொரு உறுப்பினரும் அல்லது அதிகாரியும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக அல்லது இடையூறாக இருக்கும் செயல்களும் இதில் அடங்கும். 


கூடுதலாக, இது குற்றத்திற்கு முன் உதாரணம் இல்லாவிட்டாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அத்தகைய தடைக்கு வழிவகுக்கும் செயல்களைக் குறிக்கிறது. அனைத்து சிறப்புரிமை மீறல்களும் சபையின் அவமதிப்பாகக் கருதப்பட்டாலும், ஒரு நபர், அவையின் எந்தச் சலுகைகளையும் மீறாவிட்டாலும், அவமதிப்புக் குற்றவாளியாகவே இருக்கமுடியும் என வரையறுக்கப்படுகிறது.




Original article:

Share:

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் கட்சிகளின் மாநாடு பற்றி… -ரோஷினி யாதவ்

 முக்கிய எடுத்துக்காட்டுகள்: 


. சனிக்கிழமையன்று நடந்த தணிப்பு வேலைத் திட்டத்தில் (Mitigation Work Programme (MWP)) வளர்ந்த நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் வரலாற்று ரீதியாக அதிக பங்களிப்பை அளித்துள்ளதாக இந்தியா, தெரிவித்தது. வளர்ந்த நாடுகள் தொடர்ந்து இலக்குகளை மாற்றிவிட்டன, காலநிலை நடவடிக்கையை தாமதப்படுத்துகின்றன. மேலும், உலகளாவிய கார்பன் நிதி நிலை அறிக்கையில் மிகப் பெரிய பகுதியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று இந்தியா சுட்டிக்காட்டியது.


. இந்தியாவின் துணை முன்னணி பேச்சுவார்த்தையாளர், நீலேஷ் சா, கடந்த வாரத்தில் வளரும் நாடுகளின் முக்கியமான பிரச்சினைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். உலகின் சில பகுதிகள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார். இந்தப் பகுதிகள் மாற்றங்களுக்கு காரணமாக இல்லாவிட்டாலும், மீட்டெடுக்க அல்லது மாற்றியமைக்க மிகவும் குறைவான திறனைக் கொண்டுள்ளன என்று கூறினார்.


. தணிப்பு வேலைத் திட்டம்  (Mitigation Work Programme) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் உள்ள COP27-ல் உருவாக்கப்பட்டது. MWP என்பது உமிழ்வைக் குறைப்பதற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நாடுகளுக்கு உதவுவதாகவும், குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க எந்த நாட்டையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வளரும் நாடுகள் தெரிவித்தன. இருப்பினும், அனைத்து நாடுகளிடமிருந்தும் உடனடி நடவடிக்கைக்கு MWP அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் விரும்புகின்றன.


 . சரியான நிதி உதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன்-வளர்ப்பு இல்லாமல், வளரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பொருளாதாரங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் விளைவுகளை மாற்றியமைக்க முடியாது என்று சாஹ் வலியுறுத்தினார்.


. 2009-ல், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கைக்கு ஆதரவாக 2020ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் $100 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்தன. இந்த இலக்கு 2022-ல் எட்டப்பட்டது. வழங்கப்பட்ட பணத்தில் சுமார் 70% கடன்களாக வந்தது இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நிதிச்சுமையை அதிகரித்தது. ஐ.நா. காலநிலை செயல்முறைக்கு தனியார் துறை பொறுப்பேற்காததால், அரசு நிதியில் இருந்து நிதி உதவி வர வேண்டும் என்று வளரும் பொருளாதாரங்கள் தெரிவித்து வருகின்றன.


  . பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவின் விலகல் COP29-ல் பேச்சுவார்த்தையாளர்களின் மன உறுதியை பெரிதும்பாதித்துள்ளது. இருப்பினும், சீனா, இங்கிலாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் முக்கியமான இடத்தில் உள்ளன.


உங்களுக்குத் தெரியுமா:


. பாகுவில் உள்ள நாடுகள் காலநிலை நிதி தொடர்பான புதிய ஒட்டுமொத்த அளவு இலக்கு (New Cumulative Quantitative Goal (NCQG)) என்ற ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தேவை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதை எவ்வாறு திரட்டுவது என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


. வளரும் நாடுகள் இந்தப் பணத்தின் பெரும்பகுதி பொது நிதியிலிருந்து, மானியங்கள் அல்லது சலுகைக் கடன்கள் வடிவில் வழங்க வேண்டும் என்று விரும்புகின்றன. இந்தப் பணம் அவர்களின் தேவைக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகள் எவ்வளவு பங்களிக்கத் தயாராக உள்ளன அல்லது மொத்தத்தில் எந்தப் பகுதி பொது நிதியிலிருந்து வர வேண்டும் என்று தெளிவாக கூறவில்லை.




Original article:

Share:

இன்னும் 45 ஆண்டுகள் உள்ள நிலையில், நிகர பூஜ்ஜிய கரிம உமிழ்வுக்கான (Carbon Emission) இந்தியாவின் பயணம் எவ்வளவு நிலையானது? - ரம்யா நடராஜன், காவேரி அசோக்

 இந்தியா தனது காலநிலை இலக்குகளை நோக்கி செயல்படும்போது அதன் மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெறுவது ஒரு சமநிலையை கட்டுப்படுத்தும் செயலைக் கொண்டுள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகளின் கட்சிகளின் வருடாந்திர மாநாடு (COP) கூட்டத்திற்கு முன்பு காலநிலை நடவடிக்கை மிகவும் கவனத்தை ஈர்க்கிறது. இருப்பினும், 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் COP29-ஐ விட பூமியின் காலநிலையை எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இது ஒரு முக்கிய சவாலை எடுத்துக்காட்டுகிறது. தேசிய நலன்கள் அதனுடன் ஒத்துப்போகாவிட்டாலும் கூட, ஒரு பொதுவான காரணத்திற்காக உலகளவில் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.


உதாரணமாக, பொருளாதார ரீதியாக வளர்ந்த ஒரு நாடு, தனிநபருக்கு போதுமான வளங்களைக் கொண்ட ஒரு நாடு, பாதையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், இந்தியா அதிக மக்கள் தொகை மற்றும் வளரும் நாடாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய இந்தியா உறுதியளித்துள்ளது. அப்போதிருந்து, இது பல கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது. மற்றவர்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்கும் பணியில் உள்ளனர். இந்த பயணம் சவால்கள் இல்லாமல் குறிப்பாக நிதி சார்ந்து இருக்காது என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், நிலம் அல்லது நீர் கிடைப்பது போன்ற பிற வளக் கட்டுப்பாடுகளும் முக்கியமானவை. இது இந்தியாவிற்கான நிலையான நீண்டகால பாதைக்கு கிடைக்கக்கூடிய தேர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. 



ஏன் நிகர பூஜ்ஜியம்? 


காலநிலை மாற்றம் ஒவ்வொரு நாளும் மிகவும் கவனிக்கப்படுகிறது. தீவிரமான மற்றும் மீளமுடியாத விளைவுகளைத் தவிர்க்க, உலக சராசரி வெப்பநிலை உயர்வை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். தற்போது, ​​1880-ம் ஆண்டில் இருந்து வெப்பநிலை ஏற்கனவே குறைந்தது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.


காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை மீதமுள்ள உலகளாவிய கார்பன் நிதிநிலை அறிக்கையை மதிப்பிட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான 50-67% வாய்ப்பாகும். மீதமுள்ள நிதிநிலை அறிக்கை 400-500 பில்லியன் டன்கள் (ஜிடி) CO2 ஆகும். தற்போது, ​​உலகளாவிய உமிழ்வுகள் ஆண்டுக்கு 40 GtCO₂ ஆகும்.


இதன் பொருள், கார்பன் நிதிக்குள் இருக்க நிகர உலகளாவிய உமிழ்வு கடுமையாக குறைக்கப்பட வேண்டும். பல நாடுகள் நிகர பூஜ்ஜிய இலக்குகளை அறிவித்துள்ளன. ஆனால், மொத்த உமிழ்வில் கூர்மையான சரிவு தேவை. 


நிகர பூஜ்ஜியம் சமமானதா? 


வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியது மற்றும் 2050-க்கு முன் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை மாற்ற வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வளரும் நாடுகளுக்கு காலநிலை நடவடிக்கைகளுடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்த அதிக நேரம் கொடுக்கும். ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.


வளர்ந்த நாடுகளும் காலநிலை நடவடிக்கைக்கு நிதியுதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேவையான நிதி கிடைக்கவில்லை. வளரும் நாடுகள், குறிப்பாக சிறிய தீவு நாடுகள், காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் நியாயமான பங்கை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன.


தற்போது, ​​காலநிலை மாற்றமோ அல்லது காலநிலை நடவடிக்கையோ நியாயமானதாக இல்லை. COP29 தேவையான அளவு நிதியுதவி குறித்த உடன்பாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலக அளவில் மிகக் குறைந்த அளவில் தனிநபர் கரிம உமிழ்வை இந்தியா கொண்டுள்ளது. இருப்பினும், பணக்காரர்களான 10% பேர் தனிநபர் உமிழ்வை ஏழ்மையானவர்களான 10%-ஐ விட 20 மடங்கு அதிகமாகக் கொண்டுள்ளனர். மொத்தத்தில், செல்வந்தர்கள் நாட்டின் கரிம உமிழ்வுகளில் கிட்டத்தட்ட பாதி பங்களிக்கின்றனர். காலநிலை மாற்றம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை மிகவும் கடுமையாக பாதிக்கிறது.


இந்தியா பல பிராந்தியங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவு மாசுபாடுகளைக் கொண்டுள்ளது. சில பகுதிகள் மற்றவற்றைவிட காலநிலை மாற்றத்திற்கு அதிகம் பங்களிக்கின்றன. வளர்ந்த உலகின் வாழ்க்கை முறையை அதன் முழு மக்களுக்கும் ஆதரிக்கும் வளங்கள் இந்தியாவிடம் இல்லை. முயற்சித்தால், இந்தியா கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 2040-ம் ஆண்டுகளில், நிலத்தடி நீர் குறைவதால் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஏர் கண்டிஷனிங் பயன்பாடு அதிகரித்து வருவதால் நகர்ப்புறங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படலாம். இயற்கையான வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் தீங்கு விளைவிக்கும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் பல்லுயிர்ப் பெருக்கத்தின் மீள முடியாத இழப்பும் ஏற்படலாம்.


வளர்ந்த நாடுகளின் வாழ்க்கை முறையை இந்தியா பின்பற்றினால், அது நீடிக்க முடியாததாகிவிடும். இது அடிப்படை தேவைகளை ஆபத்தில் ஆழ்த்திவிடும்.


ஒரு புதிய நுகர்வுக்கான வழித்தடம் 


நுகர்வு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் சூழ்நிலையில், இந்தியா அனைத்து இறுதி பயன்பாட்டு பயன்பாடுகளையும் மின்மயமாக்கும் சூழ்நிலையில், 2070-ம் ஆண்டுக்குள் மின் தேவை ஒன்பது முதல் பத்து மடங்கு வரை அதிகரிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதை முழுமையாக பூர்த்தி செய்ய 5,500 ஜிகாவாட் சூரிய மற்றும் 1,500 ஜிகாவாட் காற்று தேவைப்படும். தற்போது, ​​இந்தியாவில் 70 ஜிகாவாட் சூரிய சக்தியும், 47 ஜிகாவாட் காற்றாலையும் உள்ளது.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தினால் இந்த இலக்கு சாத்தியமாகும். இருப்பினும், இந்தியாவும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை பராமரிக்க வேண்டும், காடுகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், இந்த ஆற்றல் இலக்குகளை அடைவது மிகவும் கடினம். காலப்போக்கில் நில பயன்பாட்டு மாற்றங்களை மாதிரியாக்குவதன் மூலம், 3,500 GW சூரிய சக்தி மற்றும் 900 GW காற்றுக்கு அப்பால் செல்வதற்கு குறிப்பிடத்தக்க நில வர்த்தகம் தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


சுருக்கமாக, இந்தியா கடினமான சவாலை எதிர்கொள்கிறது. அதன் மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும். இது குறிப்பிடத்தக்க பொருள் மற்றும் ஆற்றல் தேவைகளின் நிலையை பூர்த்தி செய்ய வேண்டும். அதே நேரத்தில், இந்தியா அதன் காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு இலக்குகளை நோக்கி செயல்பட வேண்டும்.


பொருளாதார மாதிரிகளில் உள்ள குறைபாடுகளை அங்கீகரிப்பது முக்கியம். எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் குஸ்நெட்ஸ் வளைவு (environmental Kuznets curve) ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சியை கரிம உமிழ்வில் இருந்து பிரிக்கலாம் என்று கூறுகிறது. இருப்பினும், பணக்கார நாடுகள்கூட தங்கள் உமிழ்வை ஏழை நாடுகளுக்கு மாற்றியதைத் தவிர, இந்தப் பிரிவினையை அடையவில்லை. இதனால்தான், மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறைகளை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது.


அதற்கு பதிலாக, 'போதுமான நுகர்வுக்கான வழித்தடங்களை' (sufficiency consumption corridors) உள்ளடக்கிய ஒரு நீண்ட கால உத்தியை நாம் உருவாக்க வேண்டும். இவை நமது வளர்ச்சி இலக்குகளை ஆதரிக்கும் குறைந்தபட்ச நிலை மற்றும் நீடித்த வளர்ச்சியைத் தடுக்கும் அதிகபட்ச நிலை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நுகர்வு வழித்தடத்தைப் பராமரிப்பதற்கும், நம்மை நிலையான பாதையில் வைத்திருப்பதற்கும் தேவைக்கேற்ப நடவடிக்கைகளும் சமமாக முக்கியம். நமது மின் நுகர்வு 2070-ம் ஆண்டில் ஆறு முதல் ஏழு மடங்கு அதிகரிக்கலாம்.


தேவை மற்றும் அளிப்புக்கான அளவீடுகள் 


சில தேவை நடவடிக்கைகளில் சிறந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் குளிரூட்டிகள் இல்லாமல் வெப்ப வசதியை வழங்கும் செயலற்ற வடிவமைப்பு அம்சங்கள் ஆகியவை அடங்கும். ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துதல், நகர்ப்புறங்களில் பொது மற்றும் மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இரயில்வேயை மேம்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும். உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீண்ட தூர சரக்கு தேவையை குறைக்கலாம். கூடுதலாக, கவனமுள்ள உணவுத் தேர்வுகள் மற்றும் தொழில்களில் மாற்று எரிபொருட்கள், சில மின்மயமாக்கல் ஆகியவை முக்கியமானவை ஆகும்.


விநியோகப் பக்கத்திலும், இந்தியா ஆற்றல் உற்பத்தியை மேலும் பரவலாக்க வேண்டும். விவசாயத்திற்கு மேற்கூரை சோலார் செல்கள் மற்றும் சோலார் பம்புகளைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும். இந்தியாவும் அதன் ஆற்றல் கலவையை பல்வகைப்படுத்த அணுசக்தி உற்பத்தி திறனை விரிவுபடுத்த வேண்டும். இது இடைவிடாத ஆற்றல் மூலங்களைச் சார்ந்திருக்கும் ஒரு கட்டத்தை நிறைவு செய்யும். அணுசக்தி குறைந்த கார்பன் அடிப்படைத் திறன் ஆற்றலை (baseload energy) வழங்க முடியும். இது புதைபடிவ எரிபொருட்கள் மீதான பொருளாதாரத்தின் நம்பிக்கையை படிப்படியாக அகற்ற உதவுகிறது.


உலகம் அதன் நிகர பூஜ்ஜியம் மற்றும் பிற காலநிலை தொடர்பான இலக்குகளை நோக்கி நகர்வதால், அவற்றில் சிலவற்றைத் தவறவிடுவதற்கான அல்லது அவற்றின் சாதனையை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பும் அரசாங்கங்களுக்கு சுருங்குகிறது. நிச்சயமாக சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. உதாரணமாக அமெரிக்க அதிபராக யார்? என்பது போன்ற சில காரணிகள் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இருப்பினும், நாம் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள், தாமதமாகிவிடும் முன் நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.


ரம்யா நடராஜன் மற்றும் காவேரி அசோக் ஆகியோர் ஆராய்ச்சி அடிப்படையிலான சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுமையத்தில் (Center for Study of Science, Technology and Policy (CSTEP)) காலநிலை மாற்ற தணிப்பு குறித்து பணிபுரிகின்றனர்.




Original article:

Share:

ஒரு கட்டிடம் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடியதாக இருக்க வடிவமைப்பு எவ்வாறு உதவும்? - சந்தியா பாட்டீல்

 உயர் செயல்திறன் கட்டிடங்கள் நிலையான கட்டுமானத்தில் முன்னணியில் உள்ளன. ஒருங்கிணைந்த வடிவமைப்பு மற்றும் நிலையான பொருட்களின் பயன்பாடு மூலம் ஆற்றல் திறன், வள பாதுகாப்பு மற்றும் காலநிலை பின்னடைவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. இந்த கட்டிடங்கள் அவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க செயலற்ற மற்றும் செயலில் உள்ள உத்திகளைப் பயன்படுத்துகின்றன.


எரிசக்தி திறன், காலநிலை பின்னடைவு மற்றும் வள பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளை சமாளிக்கும் உயர் செயல்திறன் கட்டிடங்கள் (High-performance buildings (HPB)) நிலையான கட்டுமானத்தில் முன்னணியில் உள்ளன. காலநிலை மாற்றம் தீவிரமடைவதால், வளங்கள் பற்றாக்குறையாகி, நகரமயமாக்கல் அதிகரிக்கும் போது, உயர் செயல்திறன் கட்டிடங்கள் (HPB) குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும், வளங்களைப் பாதுகாப்பதற்கும், கணிக்க முடியாத வானிலையைத் தாங்குவதற்கும் கட்டமைக்கப்பட்டுள்ளன. நிலையான வாழ்க்கையை அடைவதிலும் பராமரிப்பதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.


உயர் செயல்திறன் கட்டிடங்களை (High-performance buildings (HPB)) உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த வடிவமைப்பு, வாழ்க்கைச் சுழற்சி அடிப்படையிலான பொருட்கள், திறமையான ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை, செயல்திறன் கண்காணிப்பு மற்றும் தட்பவெப்பநிலை தொடர்பான அம்சங்கள்   போன்ற முக்கிய நடைமுறைகள் தேவை. 


ஒருங்கிணைந்த வடிவமைப்பு என்றால் என்ன? 


உயர் செயல்திறன் கட்டிடங்களின் (HPB) மையத்தில் ஒரு ஒருங்கிணைந்த வடிவமைப்புக்கான அணுகுமுறை உள்ளது. இது கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், நிலைத்தன்மை ஆலோசகர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் ஒன்றிணைந்து செயல்படவும் அளவிடக்கூடிய செயல்திறன் இலக்குகளை அமைக்கவும் ஊக்குவிக்கிறது. இந்த இலக்குகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் 90% பகல்நேர வெளிச்சத்தை அல்லது வணிக கட்டிடங்களில் ஒரு டன் ஏர் கண்டிஷனிங்கிற்கு 700 சதுர அடி குளிரூட்டலை இலக்காகக் கொள்ளலாம். இந்த அணுகுமுறை அனைத்து கட்டிட அமைப்புகளும் சீராக இணைந்து செயல்படுவதை உறுதி செய்கிறது. இந்த அமைப்புகளில் காற்றுச்சீரமைத்தல், விளக்குகள் மற்றும் சுவர்கள், கூரைகள் மற்றும் ஜன்னல்கள் போன்ற கட்டிட அமைப்புகள் அடங்கும்.


திட்டத்தின் மெய்நிகர் பதிப்பை உருவாக்குவதன் மூலம் டிஜிட்டல் மாதிரி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது செயல்திறன் தொடர்பான விளைவுகளைக் கணிக்கவும், கணினி அளவை வழிகாட்டவும் மற்றும் வெவ்வேறு உத்திகளைச் சோதிக்கவும் குழுவிற்கு உதவுகிறது. இந்த திட்டத்தை உருவகப்படுத்துதல்கள் மூலம், கட்டுமானம் தொடங்கும் முன் ஆற்றல் சேமிப்பு மற்றும் வெப்ப வசதிக்கான இலக்குகளை அடைய இந்தக்குழு உத்திகளை சரிசெய்ய முடியும். இந்த அணுகுமுறை உயர் செயல்பாட்டுத் திறனை அடைய உதவுகிறது, நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட கால செலவுகளைக் குறைக்கிறது.


உயர் செயல்திறன் கட்டிடங்களில் (HPB) ஒருங்கிணைந்த வடிவமைப்பின் ஒரு எடுத்துக்காட்டாக, செயலற்ற வடிவமைப்பு உத்திகளின் ஆரம்பகால பயன்பாடு ஆகும். வடிவமைப்பாளர்கள் இயற்கையான சூரிய ஒளி மற்றும் வெப்பத்தைத் தக்கவைக்கும் (வெப்ப நிறை) பொருட்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த உத்திகள் வெப்பம் மற்றும் குளிரூட்டும் தேவைகளைக் குறைக்கின்றன. இதில், வடிவமைப்பாளர்கள் சரியான அளவிலான உபகரணங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.


பொருட்களை நிலையானதாக்குவது எது? 


பொருட்கள் நீடித்ததாகவும், ஆற்றல்-திறனுள்ளதாகவும் மற்றும் குடியிருப்பாளர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும். உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) குறிப்பாக குறைந்த கார்பன் உமிழ்வுகள் (உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகள்) மற்றும் அதிக மறுசுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கம் கொண்ட பொருட்களை விரும்புகின்றன. ஒரு பொருளின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் மிகவும் நிலையான விருப்பங்களைக் கண்டறியவும் வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீடு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.


கூடுதலாக, உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) ஆவியாகும் கரிம சேர்மங்களின் (காற்றில் எளிதில் ஆவியாகக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள்) செறிவைக் குறைப்பதன் மூலம் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த குறைந்த கார்பன் உமிழ்வால் உட்புறப் பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இது குடியிருப்பாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது மற்றும் கட்டிட செயல்திறனை மேம்படுத்துகிறது. 


எடுத்துக்காட்டாக, பெங்களூரில் வரவிருக்கும் இந்திய மனித குடியேற்றங்கள் நிறுவனம் (Indian Institute of Human Settlements (IIHS)) வளாகத்திற்கு, திட்டமிடுபவர்கள் அமைதி, ஆயுள் மற்றும் பாதுகாப்பான பொருட்களின் விலை ஆகியவற்றிற்கான பொருட்களை மதிப்பீடு செய்ய வாழ்க்கை சுழற்சி செலவு பகுப்பாய்வைப் பயன்படுத்துகின்றனர். இதில் குளிரூட்டும் உபகரணங்களின் அளவு மற்றும் ஆற்றல் பயன்பாடு 50 ஆண்டுகளில் அவற்றின் தாக்கம் அடங்கும். 


கட்டிடங்களுக்கு எவ்வாறு குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தலாம்? 


கட்டிடங்கள் 580 மில்லியன் டெராஜோல்களின் (million terajoules) மொத்த ஆற்றல் நுகர்வில் சுமார் 40% ஆகும். இது அவர்களின் வாழ்நாளில், பெரும்பாலும் தினசரி செயல்பாடுகளுக்கு 13,865 மில்லியன் டன் எண்ணெய்க்கு சமம். இந்த ஆற்றல் தேவையை குறைக்க, செயலற்ற மற்றும் செயலில் உள்ள உத்திகள் இரண்டும் தேவை. செயலற்ற வடிவமைப்புக்கான உத்திகள் இயற்கையான ஒளியைப் பயன்படுத்துகின்றன, கட்டிடத்தின் தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் செயற்கை விளக்குகள், வெப்பமாக்கல் மற்றும் குளிர்ச்சியைக் குறைக்க வெப்பத்தின்  தீவிரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த உத்திகள் உள்ளூர் காலநிலை மற்றும் கட்டிடத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இயந்திர அமைப்புகளை அதிகம் நம்பாமல் கட்டிடம் திறமையாக இயங்குவதை இது உறுதி செய்கிறது.


உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) ஆற்றல்-திறனுள்ள வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (Heating, Ventilation, and Air Conditioning (HVAC)) அமைப்புகள், விளக்குகள் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்துகின்றன. தானியங்கி விளக்கு கட்டுப்பாடு மற்றும் ஆக்கிரமிப்பு சென்சார்கள் (occupancy sensors) போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பங்களால் இவை ஆதரிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் நிகழ்நேர ஆற்றல் கண்காணிப்பு மற்றும் மேம்படுத்தலை அனுமதிக்கின்றன. இன்ஃபோசிஸ் ஹைதராபாத் வளாகம் இந்தியாவில் கதிரியக்க குளிரூட்டும் HVAC அமைப்பைக் கொண்ட முதல் HPB ஆகும். ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க இந்த அமைப்பு பகல்நேர கட்டுப்பாடுகள் மற்றும் பணி விளக்குகளை ஒருங்கிணைக்கிறது.


உயர்-செயல்திறன் கட்டிடங்களுக்கான (HPB) முக்கிய குறிக்கோள் நிகர-பூஜ்ஜிய ஆற்றல் ஆகும். இது நிகர-நேர்மறை ஆற்றல் செயல்திறன் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, அவை உட்கொள்வதைவிட அதிக அல்லது அதிக ஆற்றலை உருவாக்குகின்றன. மலிவு விலையில் சூரிய மற்றும் காற்றாலை தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் இந்த இலக்கை அடைவதை எளிதாக்குகிறது. அவை புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவுகின்றன.


உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) தண்ணீரை எவ்வாறு சேமிக்கின்றன? 


நீர் பற்றாக்குறை நாடு முழுவதும் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினையாகும். மேலும், உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) தண்ணீரைச் சேமித்து மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தீர்க்க உதவுகின்றன. அவை நீரின் தரத்தையும் மேம்படுத்துகின்றன. குறைந்த ஓட்டம் கொண்ட குழாய்கள் மற்றும் இரட்டை ஃப்ளஷ் கழிப்பறைகள் போன்ற திறமையான சாதனங்கள் நீர் பயன்பாட்டைக் குறைக்கின்றன. அதே நேரத்தில், மழைநீர் சேகரிப்பு கருவிகள் நீர்ப்பாசனம் மற்றும் சுகாதாரம் போன்ற குடிநீர் அல்லாத பயன்பாடுகளுக்கும் மழைநீரை சேகரிக்கின்றன. 


நடைமுறையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் நீர்ப்பாசனத்திற்காக சாம்பல் நீரை (greywater) மறுசுழற்சி செய்வதன் மூலமும், கட்டப்பட்ட ஈரநிலங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற உயிரியல் அமைப்புகளுடன் கருப்பு நீரை (blackwater) சுத்திகரிப்பதன் மூலமும் செயல்திறனை அதிகரிக்கின்றன. புயல் நீர் (stormwater) மற்றும் குளிர்ந்த நகர்ப்புற வெப்ப-தீவுகளை நிர்வகிக்க ஊடுருவக்கூடிய நடைபாதை மற்றும் பயோஸ்வேல்ஸ் (bioswales) போன்ற பசுமை உள்கட்டமைப்பு அமைப்புகளையும் உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) இணைக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் உள்ள இன்போசிஸ் வளாகங்கள், நீர் மேலாண்மை அமைப்பு மற்றும் ஏரோபிக் மெம்பரேன் பயோரியாக்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் கழிவுநீரில் 100% மறுசுழற்சி செய்கின்றன. இதனால், அவை பூஜ்ஜிய வெளியேற்ற தரநிலையைப் பெறுகின்றன. 


கண்காணிப்பு ஏன் முக்கியமானது? 


செயல்திறன் கண்காணிப்பு ஒரு உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) வடிவமைப்பு இலக்குகளை பூர்த்தி செய்கிறது மற்றும் திறமையாக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, ஒரு உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) ஆற்றல் நுகர்வு, நீர் பயன்பாடு மற்றும் உட்புற சுற்றுச்சூழல் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கிறது. இந்தத் தரவு வசதி மேலாளர்களுக்கு திறமையின்மையைக் கண்டறிய உதவுகிறது. இது அவர்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்க உதவுகிறது. தொடர்ச்சியான செயல்திறன் மதிப்பீடுகள் வடிவமைப்பை சரிபார்க்க முடியும். எதிர்கால திட்டங்களுக்கான நுண்ணறிவுகளையும் அவர்கள் வழங்க முடியும்.


எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.எச்.எஸ் பெங்களூரு வளாகத்தின் இரண்டாவது இணைப்பு ஸ்மார்ட் சாதனங்களின் நெட்வொர்க் மற்றும் வெப்ப ஒழுங்குமுறையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துகிறது. 


HPB-கள் காலநிலை அபாயங்களை எவ்வாறு கையாள முடியும்? 


கடுமையான வெப்பம் மற்றும் திடீர் வெள்ளம் போன்ற கணிக்க முடியாத வானிலையைக் கையாளும் வகையில் HPBகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சேர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. வலுவான பொருட்கள் மற்றும் பல்வேறு ஆற்றல் அமைப்புகள் கட்டமைப்பின் வலிமையை மேம்படுத்துகின்றன. செயலற்ற உயிர்வாழ்வு, மின்தடையின்போது கூட கட்டிடங்கள் வாழக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் காப்பு சக்தியை வழங்குகின்றன. கூடுதலாக, மழைநீர் சேகரிப்பு மற்றும் ஆன்சைட் சுத்திகரிப்பு அமைப்புகள் எப்போதும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்கின்றன.


உதாரணமாக, பெங்களூரில் உள்ள இன்போசிஸ் கிரசண்ட் கட்டிடம் வழக்கமான அலுவலக கட்டிடங்களைவிட மிகக் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சுமார் 8,000 பேருக்கு சேவை செய்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதுர மீட்டருக்கு 75 kWh ஆற்றலை மட்டுமே பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், பெரும்பாலான அலுவலகங்கள் 150 முதல் 200 kWh வரை பயன்படுத்துகின்றன. 90% இடம் குளிரூட்டப்பட்டதால், கட்டிடத்தின் மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புக்கு வழக்கமான அலுவலகங்களில் வழக்கமான 4-5 வாட்க்கு எதிராக சதுர அடிக்கு 3 வாட் தேவைப்படுகிறது. ஸ்மார்ட் வடிவமைப்பு எவ்வாறு ஆற்றலைச் சேமிக்கலாம் மற்றும் கட்டிடச் செலவுகளை அதிகரிக்காமல் செலவுகளைக் குறைக்கலாம் என்பதை இது காட்டுகிறது. 


இந்த நூற்றாண்டில் கட்டிடங்களுக்கான தரத்தை உயர்-செயல்திறன் கட்டிடங்கள் (HPB) அமைத்துள்ளன. அவை, நிலைத்தன்மை மற்றும் நெகிழ்ச்சியான கட்டமைக்கப்பட்ட சூழல்களுக்கான அளவுகோல்களையும் வழங்குகின்றன. காலநிலைக்கு நன்மை அளிப்பது மற்றும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது தவிர, HPBகள் ரியல் எஸ்டேட் மதிப்பை அதிகரிக்கின்றன. அவற்றைக் கட்டுவதற்கும் இயக்குவதற்குமான நடைமுறைகள் பரவி வருவதால், அனைத்து கட்டிடங்களையும் HPB ஆக மாற்றுவதே இலக்காக இருக்க வேண்டும்.


சந்தியா பாட்டீல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹியூமன் செட்டில்மென்ட்டில் நிலைத்தன்மை நிபுணர். அவர் ASSURE-க்கு தொழில்நுட்ப உதவியை வழங்குகிறார்.




Original article:

Share:

பிரதமர் மோடியின் வருகையுடன் இந்திய-நைஜீரிய உறவுகளின் சுருக்கமான வரலாறு -திவ்யா ஏ

 கண்டத்தில் நைஜீரியாவின் நிலைப்பாட்டையும், ஆப்பிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு மத்தியில் இந்தியா தங்கள் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்  ஆராய்வோம்.


ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக பிரேசில் செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) அதிகாலை நைஜீரியா சென்றடைந்தார். நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபுவுடனான சந்திப்பில் தனது தொடக்க உரையில், "நைஜீரியாவுடனான எங்கள் இராஜதந்திர கூட்டாண்மைக்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம்" என்று அவர் கூறினார். 


ஆப்பிரிக்க நாட்டிற்கு கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். நைஜீரியாவின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர் (the Grand Commander of the Order of Niger) தலைநகர் அபுஜாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு "இந்தியா-நைஜீரியா உறவுகளை வளர்ப்பதில் அவரது இராஜதந்திரம் மற்றும் உயர்தர நிலை பங்களிப்புக்காக" வழங்கப்பட்டது. இதன் மூலம் 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 


பிரதமர் தனது உரையில், இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று நட்பை குறிப்பிட்டார். இந்த அங்கீகாரம் உலகளாவிய தெற்கின் விருப்பத்தை அவர்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறினார். பயங்கரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவை நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றிய முக்கிய சவால்கள் என்றும் அவர் அடையாளம் கண்டார். 


இந்தியா-நைஜீரியா உறவுகளின் வரலாறு, கண்டத்தில் நைஜீரியாவின் நிலைப்பாடு மற்றும் ஆப்பிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு மத்தியில் ஆழமான உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்க்கிறோம். 


இந்தியா-நைஜீரியா இடையேயான 60 ஆண்டுகால உறவு 


இந்தியா மற்றும் நைஜீரியா, முறையே 1.4 பில்லியன் மற்றும் 220 மில்லியன் மக்கள்தொகை, பல மத, பல இன மற்றும் பல மொழி சமூகங்களைக் கொண்ட பெரிய, வளரும் மற்றும் ஜனநாயக நாடுகளாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அக்டோபர் 2007-ஆம் ஆண்டில் அபுஜாவுக்கு பயணம் செய்தபோது, நாடுகள் தங்கள் இருதரப்பு உறவின் நிலையை "இராஜதந்திர கூட்டாண்மை" நிலைக்கு உயர்த்தின. 


ஆனால், இந்த உறவுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. 1958-ஆம் ஆண்டில் இந்தியா தனது தூதரகத்தை லாகோஸில் நிறுவியதிலிருந்தும் மற்றும் 1960-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து நைஜீரியா சுதந்திரம் அடைந்தலிருந்து உயர்மட்டத்தில் அரசியல் தொடர்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 


1960-ஆம் ஆண்டு முதல் 80-ஆம் ஆண்டு வரை, சுதந்திர நைஜீரியாவின் ஆரம்ப ஆண்டுகளில் இந்திய ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.  கடுனாவில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் போர்ட் ஹார்கோர்ட்டில் கடற்படை போர் கல்லூரி ஆகியவற்றையும் இந்தியா நிறுவியது. 60,000 வலுவான இந்திய புலம்பெயர்ந்த சமூகம், இன்று மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. இது நீண்டகால இருதரப்பு உறவுக்கு மதிப்பு சேர்க்கிறது. 


"ஆப்பிரிக்காவில் நைஜீரியா ஒரு பெரிய மற்றும் நேர்மறையான பங்கைக் கொண்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவுடனான நெருங்கிய ஒத்துழைப்பு இந்தியாவுக்கு அதிக முன்னுரிமையாக உள்ளது" என்று பிரதமர் மோடி X-தளப் பதிவில் கூறினார். 


200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் நைஜீரியாவின் உற்பத்தித் துறைகளில் சுமார் 27 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன மற்றும் மத்திய அரசுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய முதலாளிகளாக உள்ளன. சலுகைக் கடன்கள் (100 மில்லியன் டாலர்) மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டங்கள் மூலம் மேம்பாட்டு உதவிகளை வழங்குவதன் மூலம் இந்தியா இரண்டு முனைகளில் நட்பு நாடாக உருவெடுத்துள்ளது. 


ஆப்பிரிக்காவில் நைஜீரியாவின் பங்கு 


நைஜீரியா, ஆப்பிரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மூன்றாவது பெரிய உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. அதன் பொருளாதாரம் கண்டத்தில் நான்காவது பெரியது மற்றும் அதன் மக்கள் தொகை மிக அதிகம். அதனால் தான் இது "ஆப்பிரிக்காவின் ராட்சதன்" (“Giant of Africa”) என்று குறிப்பிடப்படுகிறது. 


இது அனைத்து ஆப்பிரிக்க நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது. அதன் முன்னோடியான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு 1963-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் அதன் முக்கிய நிறுவனர்களில் ஒருவர் அப்போதைய நைஜீரிய அதிபர் நான்டி அசிகிவே ஆவார். கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆனது. 


கூடுதலாக, நைஜீரியா ஐக்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Petroleum Exporting Countries (OPEC)) போன்ற சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 


நைஜீரியாவுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த இந்தியாவின் திட்டங்கள், ஆபிரிக்காவில் அதன் கூடுதலான இராஜதந்திர நலன்களுடன் பொருந்துகின்றன. அங்கு சீனா ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்துள்ளது. மின்சார வாகனங்கள் போன்ற துறைகளுக்கு இந்தியாவுக்குத் தேவைப்படும் கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆப்பிரிக்கா முக்கிய நாடாக உள்ளது. 


இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில், சீனா ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தை பெரிதும் விரிவுபடுத்தியது. 2012-ஆம் ஆண்டில் சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 128 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்காவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே இது 100 பில்லியன் டாலராக இருந்தது. 


சீனா அதன் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் (Belt and Road Initiative (BRI)) கீழ் சாலைகள், இரயில் பாதைகள், அணைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பெரிதும் நிதியளிக்கிறது. தற்போது, சீனா ஆபிரிக்காவின் மிகப் பெரிய வணிகத்தின் நட்பு நாடாக உள்ளது. இந்த வணிக செயல்பாடு ஆண்டு $200 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. கண்டம் எங்கிலும் 10,000 க்கும் அதிகமான சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சீன வணிகங்களின் மதிப்பு 2015-ஆம் ஆண்டு முதல் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. தற்போதைய முதலீடுகளில் இது 300 பில்லியன் டாலர் உள்ளது. 


இந்த முன்னேற்றங்கள் மற்றும் நைஜீரியாவின் வளர்ச்சி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, ஆப்பிரிக்காவில் இந்தியா தனது பொருளாதார மற்றும் கலாச்சார முதலீடுகளைத் தொடரும். நைஜீரியா இல்லாமல் இது சாத்தியமில்லை. பிரதமர் தனது பயணத்தின் முடிவில், "ஆப்பிரிக்காவில் பழமொழி சொல்வது போல: 'ஒரு நண்பர் நீங்கள் பாதையைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக இருக்கிறார்' (‘A friend is someone you share the path with’”) எனக் குறிப்பிட்டார். 




Original article:

Share: