பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுத்தல். -நிஜாரா தேகா

 பெண்கள் குரல் கொடுக்காவிட்டால் சட்டம் அதிகாரமற்றதாகவே இருக்கும்.


அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், கண்ணியம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை உறுதியளிக்கிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 (Protection of Women from Domestic Violence Act) ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், பெண்கள் தங்கள் துன்பங்களுக்குப் குரல் கொடுக்காதபோது, ​​இந்த உரிமைகளின் அர்த்தத்தை இழக்கின்றனர். பெண்கள் வீடுகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் அச்சமின்றிப் பேசும் வரை, சட்டங்களும் கொள்கைகளும் தார்மீகப் பெருமை நிறைந்த வெற்று வார்த்தைகளாகவே இருக்கும்.


பல இந்திய வீடுகளில், மௌனமானது வார்த்தைகளைவிட சத்தமாகப் பேசுகிறது. அமைதியின் வெளிப்பாடு மௌனம் அல்ல, மாறாக வலிக்குப் பிறகு வரும் மௌனத்தின் நிலையாகும். கீழ்ப்படிதல் என்பது நல்லொழுக்கம் என்றும், சகிப்புத்தன்மை என்பது வலிமை என்றும், கணவரின் கோபம் அக்கறையின் வெளிப்பாடு என்றும் கற்பிக்கப்பட்ட பெண்களின் மௌனமாகப் பார்க்கப்படுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)) இந்த மனநிலை எவ்வளவு ஆழமாக செல்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (45 சதவீதம்) மற்றும் ஆண்கள் (44 சதவீதம்) ஒரு கணவன் தனது மனைவியை சில சூழ்நிலைகளில் அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள். மனைவி வாதிட்டால், தனது பொறுப்புகளை புறக்கணித்தால் அல்லது பெரியவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் அது நியாயமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.


இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, கலாச்சாரம் மக்களின் சரி மற்றும் தவறு உணர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. வன்முறை பொதுவானதாக மாறும்போது, ​​சட்டம் அதன் அதிகாரத்தை இழக்கிறது. பல இந்திய வீடுகளில், வன்முறை மிகவும் பொதுவானது, பெண்கள் பெரும்பாலும் அதை அத்துமீறல் என்று அங்கீகரிக்கவில்லை. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), என்பது ஒரு விரிவான மற்றும் கடுமையான கணக்கெடுப்பாகும். இது, பெண்கள் எதை வெளிப்படுத்த உணர்கிறார்கள் என்பதை அளவிடுகிறது. அவர்கள் அமைதியாக எதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அல்ல.


கலாச்சாரம் சட்டத்தை மீறும் போது


2023-24-ஆம் ஆண்டு அஸ்ஸாம் முழுவதும் எனது களப்பணியின் போது, வன்முறையை ஒரு மீறல் அல்ல, வழக்கமானது என்று பேசிய பல பெண்களை நான் சந்தித்தேன். வற்புறுத்தல் அல்லது கட்டுப்பாடு பற்றி கேட்டபோது, ​​சிலர் பதட்டமான புன்னகையுடன், அதை "திருமண வாழ்க்கையின் ஒரு பகுதி" என்று கூறினர். அதை வன்முறை என்று பெயரிடுவது, உணர்ச்சி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆபத்தானது என்று அவர்கள் கூறினர். "அவர் கோபமாக இருக்கும்போது மட்டுமே அடிப்பார்," என்று ஒரு பெண் என்னிடம் கூறினார், அது ஒரு வகையான கட்டுப்பாடு போல என்று நினைக்கிறேன்.


உலகம் முழுவதும், பெண்கள் பெரும்பாலும் துஷ்பிரயோகத்தை ஏற்றுக்கொள்வதால் அல்ல, மாறாக அவமானம், நிதி நெருக்கடி அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவார்கள் என்ற பயத்தில் அமைதியாக இருக்கிறார்கள். இந்த மௌனம் உயிர்வாழ்வதற்கான ஒரு வழியாகிறது. அரசியலமைப்பு சமத்துவம், கண்ணியம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை உறுதியளிக்கிறது. மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 (Protection of Women from Domestic Violence Act) ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இருப்பினும், கலாச்சாரம் பெரும்பாலும் நடைமுறையில் இந்த உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS) தரவுகளின்படி, 18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 32 சதவீதம் பேர் தங்கள் கணவர்களிடமிருந்து உடல், பாலியல் அல்லது உணர்ச்சிரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 14 சதவீதம் பேர் மட்டுமே உதவியை நாடியுள்ளனர். ஆணாதிக்கம் நேரடிக் கட்டுப்பாடு மூலம் மட்டுமல்ல, அன்றாட பழக்கவழக்கங்கள் மூலம் தொடர்கிறது. இதில் நகைச்சுவைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மௌனம் மூலம் நகர்கிறது.


இந்தியாவில், பொதுவாக மற்றவர்கள்-குறிப்பாக பிரபலமானவர்கள் பேசத் தொடங்கிய பின்னரே பெண்கள் பேசத் தொடங்குகிறார்கள். ஒரு பொது நபர் வன்முறையைப் பற்றிப் பேசும்போது, ​​ஆயிரக்கணக்கான சாதாரண பெண்கள் நீண்டகாலமாக உணர்ந்ததற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். சக்திவாய்ந்த ஒருவர் முதலில் பேசுவதற்காக பெண்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? வலுவான மாற்றம், ஒவ்வொரு பெண்ணும், நகர அலுவலகத்திலோ அல்லது கிராமப்புற முற்றத்திலோ, தயக்கமின்றி, 'இது ஏற்றுக்கொள்ள முடியாதது' (This is not acceptable) என்று சொல்ல அனுமதிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.


கல்வியும் பொருளாதார சுதந்திரமும் அவசியம், ஆனால் அவை போதுமானவை அல்ல. படித்த பெண்கள் இன்னும் மௌனமாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்கள் இன்னும் கட்டுப்படுத்தப்படலாம். உண்மையான மாற்றம் பொருள் சார்ந்த அதிகாரமயமாக்கலைத் (material empowerment) தாண்டி சமூக தைரியத்தை வளர்க்க வேண்டும் — பெண்களின் சகிப்புத்தன்மையை போற்றும் மற்றும் எதிர்ப்பை கிளர்ச்சியாக கண்டிக்கும் விதிமுறைகளை சவால் செய்யும் தைரியம்.


இந்த தைரியத்தை குடும்பத்திலிருந்து வெளிப்புறமாக வளர்க்க வேண்டும். வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மரியாதை என்பது பலவீனம் அல்ல, வலிமை என்று கற்பிக்க வேண்டும். பள்ளிகளில் பச்சாதாபம், சம்மதம் மற்றும் சமத்துவத்தை குடிமக்கள் கல்வியின் ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும். ஊடகங்கள், எதிர்க்கும் பெண்களை இகழ்ந்து சித்தரிக்காமல், மரியாதை அளிக்கக்கூடிய ஆண்களை ஏளனம் செய்யாமல் காட்ட வேண்டும். நிறுவனங்கள் பெண்களின் சாட்சியங்களை சந்தேகத்துடன் அல்ல, ஒற்றுமையுடன் நடத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் பேசும்போது சமூகம் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும் — அவர்களின் நோக்கங்களை கேள்வி கேட்காமல், அவர்களின் வலியை சந்தேகிக்காமல், அவர்களின் வார்த்தைகளை அதிகப்படுத்தல் என்று நிராகரிக்காமல். உண்மையான சுதந்திரம் சட்டத்தின் எழுத்தில் இருந்து அல்ல, மௌனத்தை எதிர்க்கும் பெண்களின் குரலில் இருந்து பாயும்.




எழுத்தாளர் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) உறுப்பினர்.



Original article:

Share:

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் எவ்வாறு நுகர்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன? -மீரா மல்ஹான்

 வருமானக் குழுக்களிடையே செலவினங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஜிஎஸ்டி-2.0 பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் வெற்றி, அதிகரித்த நுகர்வு அல்லது சேமிப்பில், கூடுதல் வருமானத்தை நுகர்வோர் எவ்வாறு பயன்படுத்தத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது.


செப்டம்பர் 22-ம் தேதி அமலுக்கு வந்த அடுத்த தலைமுறை பொருட்கள் மற்றும் சேவை வரி (Next-Gen Goods and Services Tax (GST)) சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, மின்னணு சாதனங்கள் முதல் நுகர்வோர் பொருட்கள்வரை நுகர்வு தேவையில் கடுமையான உயர்வு ஏற்பட்டது. மேலும், வங்கிக் கடனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது.


செப்டம்பர்-அக்டோபர் 2025 காலகட்டத்தில், வங்கி முன்பணங்கள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. இந்த உயர்வுக்கு காரணம் குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பண்டிகை காலத்தால் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.


ஜிஎஸ்டி திறம்பட செயல்பட வேண்டுமென்றால், அது முதலில் இருந்ததைவிட குறைவான வரி அடுக்குகளைக் (tax slabs) கொண்டிருக்க வேண்டும் என்று வாதிட்ட வணிகங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஜிஎஸ்டி-2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, பொதுமக்களின் கைகளில் அதிக பணத்தை வைத்து தேவையைத் தூண்டுவதாகும்.


ஆனால் ஜிஎஸ்டி பொதுவாக எவ்வாறு செயல்படுகிறது? அதன் முக்கிய பகுதிகள் யாவை? இந்தியாவின் வரி முறையில் இது ஏன் ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது? இதைப் புரிந்து கொள்ள, ஜிஎஸ்டி-இன் அடிப்படைகளைப் பார்ப்போம்.


சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்றால் என்ன?


ஜிஎஸ்டி என்பது ஒரு மறைமுக வரி ஆகும். அதே சமயம், இதற்கு நேர்மாறாக, வருமான வரி என்பது நேரடி வரியாகும். இது முதன்முதலில் 2017-ம் ஆண்டில் 2016-ம் ஆண்டின் 101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது முன்னர் விதிக்கப்பட்ட பல மத்திய மற்றும் மாநில வரிகளை GST மாற்றியது. GST-ன் கீழ் பின்வரும் வரிகள் மாற்றப்பட்டன:


ஜிஎஸ்டியால் மாற்றப்பட்ட மத்திய கலால் வரிகள் (Central Excise Taxe) : 


1. மருத்துவ மற்றும் கழிப்பறை தயாரிப்புச் சட்டத்தின் கீழ் கலால் வரிகள் நீக்கப்பட்டன.


2. சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரிகள் மாற்றப்பட்டன.


3. கூடுதல் சுங்க வரிகள், எதிர் வரி (Countervailing Duty (CVD)) மற்றும் சிறப்பு கூடுதல் வரி (Special Additional Duty (SAD)) உள்ளிட்டவை நீக்கப்பட்டன.


4. சேவை வரி ஜிஎஸ்டி-ஆல் மாற்றப்பட்டது.


5. மத்திய விற்பனை வரியும் (Central Sales Tax (CST)) மாற்றப்பட்டது.


6. பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகம் தொடர்பான அனைத்து கூடுதல் கட்டணங்கள் மற்றும் கூடுதல் வரிகள் நீக்கப்பட்டன.


ஜிஎஸ்டியால் மாற்றப்பட்ட மாநில வரிகள்


1. மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரி (Value Added Tax (VAT)) மாற்றப்பட்டது.


2. ஆடம்பர வரி நீக்கப்பட்டது.


3. உள்ளூர் சுங்க வரி (Octroi) உள்ளிட்ட நுழைவு வரி மாற்றப்பட்டது.


4. விளம்பரங்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டன.


5. சில பொருட்களின் மீதான கொள்முதல் வரி மாற்றப்பட்டது.


6. பொழுதுபோக்கு வரியும் நீக்கப்பட்டது.


இருப்பினும், மேல் வரிகள் (cesses) மற்றும் கூடுதல் வரிகள் (surcharges) போன்ற சில வரிகள் இன்னும் ஜிஎஸ்டியின் கட்டமைப்பின்கீழ் சேர்க்கப்படவில்லை. இவை குறிப்பிட்ட நிதி அல்லது கொள்கை நோக்கங்களுக்காக பொருட்களில் சேர்க்கப்படும் கூடுதல் வரிகள் ஆகும். குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க ஒரு மேல் வரி வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நிலநடுக்கங்கள் அல்லது வெள்ளம் போன்ற போது பேரிடர் நிவாரணத்திற்காக இதைப் பயன்படுத்தலாம். மேலும், கல்வி வரி (education cess) அல்லது தூய்மை இந்தியா வரி (Swachh Bharat cess) போன்ற திட்டங்களையும் இது ஆதரிக்கலாம். மேல் வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் மத்திய அல்லது மாநிலங்களால் விதிக்கப்படும் வரிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.



மறைமுக வரியின் ஒரு வடிவமான மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவும் கால அளவிற்காகவும் விதிக்கப்படும் மேல் வரிகளுடன் ஒப்பிடும்போது, ​​கூடுதல் வரிகள் நேரடி வரியின் ஒரு வடிவமாகும். மேலும், அவை பொதுவாக அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு விதிக்கப்படுகின்றன. இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் பயன்பாட்டில் உள்ளது. ஒரு மேல் வரியிலிருந்து பெறப்பட்ட வருவாய் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, அதேசமயம் கூடுதல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் அரசாங்கம் அவசியமாகக் கருதும் எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.


ஜிஎஸ்டி போன்ற ஒருங்கிணைந்த வரி முறைக்கான (unified tax system) தேவை எவ்வாறு தோன்றியது?


ஆனால், ஜிஎஸ்டி போன்ற ஒருங்கிணைந்த மறைமுக வரி முறையின் தேவை ஏன் ஏற்பட்டது? இந்தியாவில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தங்கள் செலவினங்களுக்கு நிதியளிக்க வரிகளிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பெருமளவில் சார்ந்துள்ளன. இந்தச் சார்பு மறைமுக வரிகளைச் சார்ந்தே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளபோதிலும், மறைமுக வரிகள் இன்னும் அரசாங்கத்தின் மொத்த வருவாயில் பெரும் பங்கை வகிக்கின்றன.


2023 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில், நேரடி வரி வசூல் 16.42 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கிடப்பட்டது. அதே நேரத்தில், மறைமுக வரி வசூல் 29.08 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது (RBI தரவு). GST 1.0 செயல்படுத்தப்பட்ட பிறகு, மறைமுக வரிகளை ஒரே கட்டமைப்பில் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்ததால் இது முதன்மையானதாக அடையப்பட்டது.


ஜிஎஸ்டிக்கு முன்பு, இந்தியாவின் வரி முறையானது பல பிரிவாக இருந்தது. இது ஒரு 'அடுக்கு விளைவாக' அதாவது மக்கள், வரி மீது வரி செலுத்தியிருந்தனர். இது நியாயமான மற்றும் திறமையான மறைமுக வரி முறையின் யோசனைக்கு எதிரானது. இதன் காரணமாக, குறைந்த வருமானக் குழுக்கள் அதிகம் பாதிக்கப்பட்டன, மேலும் பல மறைமுக வரிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய, நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் கீழ் அரசாங்கம் 2017-ல் ஜிஎஸ்டி 1.0 ஐ அறிமுகப்படுத்தியது.


ஜிஎஸ்டி 1.0 : முக்கிய நன்மைகள் மற்றும் சவால்கள்


ஜிஎஸ்டி 1.0-ஐ அமல்படுத்தியதன் பின்னணியில் உள்ள முதன்மையான நோக்கங்களில் ஒன்று, முந்தைய மறைமுக வரி முறையின் 'அடுக்கு விளைவு' (cascading effect) மற்றும் குறைந்த வருமானக் குழுக்கள் (lower-income groups) மீதான அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதாகும். அவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கம் நான்கு வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியது. அவை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும்.


ஜிஎஸ்டி 1.0-ன் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பெட்ரோலியம் மற்றும் மனித நுகர்வுக்கான மதுபானம் போன்ற பொருட்கள் பழைய கலால் வரி முறையின் கீழ் தொடர்ந்து இருந்தன. புகையிலை, சிகரெட், பான் மசாலா, மெல்லும் புகையிலை போன்ற பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டு 28% ஜிஎஸ்டி விகிதத்திற்கும் கூடுதல் இழப்பீட்டு செஸ் வரிக்கும் உட்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டிக்கு மாற்றப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்புகளை ஈடுசெய்ய இந்த மேல் வரி வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி 1.0 ஒரு முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தமாகும். இருப்பினும், அதன் செயல்படுத்தல் பல சிக்கல்களை எதிர்கொண்டது. அவற்றுள்,


1. GST வலைதளத் தரவுத்தளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள்.


2. அதிக இணக்கச் செலவுகள்


3. ஆரம்ப கட்டத்தில் அடிக்கடி கொள்கை மாற்றங்கள்


4. இறுதிப் பொருளின் விலையை விட உள்ளீடுகளின் விலை அதிகமாக இருந்த ஒரு தலைகீழ் வரி அமைப்பு (Inverted duty structure) ஆகும். இது பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவுக்கு வழிவகுத்தது. இது சிறு நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.


5. நிதி வெளியிடுவதில் தாமதம்


6. விநியோகச் சங்கிலி இடையூறுகள்


7. பங்குதாரர்களிடையே சரியான தகவல் மற்றும் தயார்நிலை இல்லாமை.


இந்தச் சிக்கல்கள் இருந்தபோதிலும், 2017 முதல், தொற்றுநோய் ஆண்டுகளில் (2020-2021) தவிர, ஜிஎஸ்டி வசூல் சீராக அதிகரித்தது. கட்டாய மின்-விலைப்பட்டியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மோசடி கண்டறிதல் போன்ற டிஜிட்டல் கருவிகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாக வரி வசூல் மேம்பட்டது. 2024-25 நிதியாண்டின் நிலவரப்படி, ஜிஎஸ்டி வசூல் 22.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 9.4% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த முன்னேற்றம் ஜிஎஸ்டி 2.0-ஐ அறிமுகப்படுத்த வழிவகுத்தது.


ஜிஎஸ்டி 2.0-ன் எதிர்பார்க்கப்படும் தாக்கம்


வரி முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்ற வணிகங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக ஜிஎஸ்டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி அடுக்குகள் (tax slabs) குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் விருப்பமான விளக்கத்திற்கு இடமளிப்பதாகவும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஜிஎஸ்டி 2.0 செப்டம்பர் 3, 2025 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 22, 2025 அன்று செயல்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:


1. வரி அடுக்குகளைக் குறைத்தல் - நான்கு விகிதங்களிலிருந்து இரண்டாக (5% மற்றும் 18%) குறைத்தல்.


2. உயர் ரக கார்கள் மற்றும் காற்றூட்ட பானங்களுக்கு 40% புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது.


3. எளிமைப்படுத்தப்பட்ட இணக்க அம்சங்கள் (compliance procedures)


4. காப்பீட்டில் விலக்கு - தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள்


இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டைப் பாதிக்கும் உலகளாவிய தடைகளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் கைகளில் அதிக பணத்தை வைப்பதும், தேவையை அதிகரிப்பதும் ஆகும். நேரடி வரி குறைப்புகளைப் போலன்றி, இது ஒரு சிறிய பிரிவினரை மட்டுமே உள்ளடக்கியது. ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரி முறையை சீர்திருத்துவது, ஒரு பெரிய தளத்தை அடைவதன் மூலமும், வருமானக் குழுக்களிடையே செலவினங்களை ஊக்குவிப்பதன் மூலமும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


யார் ஆதாயம் அடைகிறார்கள்?, யார் சரிசெய்கிறார்கள்?


குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் முதன்மை பயனாளிகள் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் (Fast-Moving Consumer Goods (FMCG)) நுகர்வோர் ஆவர். அதே நேரத்தில், ஒப்பீட்டளவில் நஷ்டமடைபவர்கள் 'தீவினை' பொருட்களின் (sin goods) நுகர்வோர் ஆவர். இருப்பினும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நுகர்வோர் தளம் கணிசமாக அதிகமாக இருப்பதால், ஒட்டுமொத்த தாக்கம் நேர்மறையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வணிகங்கள் தங்கள் அமைப்புகளை புதிய வரி விகிதங்களுக்கு ஏற்ப மறுசீரமைக்க நேரம் தேவைப்படும். அதே நேரத்தில், இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கலாம். குறைந்த விகிதங்கள் காரணமாக அரசாங்கம் ஆரம்பத்தில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இருப்பினும், இந்த இழப்பை பின்னர் அதிக பொருளாதார வளர்ச்சி, சிறந்த வரி இணக்கம் மற்றும் அதிக நுகர்வோர் செலவு மூலம் மீட்டெடுக்க முடியும். வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களைத் தவிர, காப்பீட்டு கொள்கைதாரர்களும் ஜிஎஸ்டி 2.0 இலிருந்து பயனடைவார்கள். முன்னதாக, காப்பீட்டில் 18% வரி விதிக்கப்பட்டது, ஆனால் GST 2.0-ன் கீழ், அது இப்போது 0% ஆக உள்ளது.


இருப்பினும், காப்பீட்டு நிறுவனங்கள் இனி தரகு (brokerage), பங்குகள் (commissions) மற்றும் சந்தைப்படுத்தல் (marketing) போன்ற செலவுகளுக்கு உள்ளீட்டு வரி வரவைப் பெற முடியாது. இதன் விளைவாக, நிறுவனங்கள் சேவை செலவுகளை இன்னும் ஈடுகட்ட வேண்டியிருப்பதால், முழு பலனையும் நுகர்வோருக்கு வழங்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த விலக்கு அளிப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, குறிப்பாக அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் வயதான மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு, ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதாகும்.


ஏழைகளுக்கான பல சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மருத்துவ சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகி வருவதால் இந்தத் திட்டங்கள் போதுமானதாக இல்லை. எதிர்காலத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் நுகர்வோருக்கு அனைத்து நன்மைகளையும் வழங்க முடியும். இந்த யோசனை நடத்தை பொருளாதாரத்திலிருந்து (behavioural economics) வருகிறது, இது உந்துதல் கோட்பாடு (Nudge Theory) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மக்கள் சிறந்த தேர்வுகளைச் செய்ய வழிகாட்டும் கொள்கைகளை உருவாக்குவதாகும். இது நுகர்வோர் காப்பீட்டை வாங்க ஊக்குவிக்கிறது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை கொள்கைதாரர்களுக்கு நன்மைகளை வழங்கத் தூண்டுகிறது.


எனவே, ஜிஎஸ்டி 2.0-ன் எதிர்கால நன்மைகள் அனைத்து பங்குதாரர்களும் இந்த நன்மைகளை எவ்வளவு சிறப்பாகப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. மேலும், நுகர்வோர் தங்கள் கூடுதல் வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது. இது அவர்கள் அதிகமாகச் செலவிட விரும்புகிறார்களா அல்லது அதிகமாகச் சேமிக்கிறார்களா என்பதைப் பொறுத்தது.



Original article:

Share:

அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) என்பது என்ன? -ரோஷ்ணி யாதவ்

 

CITES : Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora -  அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு


முக்கிய அம்சங்கள் :


அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) என்பது 185 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும். இந்தியா 1976-ல் CITES-ல் இணைந்தது. இதில், ஒவ்வொரு உறுப்பு நாடும் அதன் சொந்த CITES அதிகாரிகளை நியமிக்கிறது. சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் CITES அதிகாரிகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பாக அனுமதிகள் இல்லாமல் அழிந்துவரும் உயிரினங்களை சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய முடியாது.


பிப்ரவரி மாதம், ஜெனீவாவில் நடந்த கடைசிக் கூட்டத்தில், குஜராத்தில் உள்ள "பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் (Greens Zoological Rescue & Rehabilitation Center (GZRRC)) வசதிக்கு ஏற்ப நோக்கக் குறியீடு Z (விலங்கியல் பூங்கா) கொண்ட உயிருள்ள விலங்குகளின் வர்த்தகம்" தொடர்பாக பல நாடுகள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அழிந்துவரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) நிலைக்குழுவானது கவனத்தில் கொண்டது. மேலும், "உயிருள்ள வனவிலங்குகள் சட்டப்பூர்வமாக கையகப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதை இந்திய அதிகாரிகள் எவ்வாறு உறுதிசெய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள" ஒரு சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளுமாறு CITES செயலகத்தைக் கேட்டுக் கொண்டது.


இந்த ஆய்வுக் குழு செப்டம்பர் 15 முதல் 20 வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது. இந்த பயணத்தின்போது, ​​வந்தாராவில் உள்ள பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ஜாம்நகரில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில் யானை நல அறக்கட்டளையின் (Radha Krishna Temple Elephant Welfare Trust (RKTEWT)) வசதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.


அதன் 14 பக்க அறிக்கையில், இந்தியாவிற்கு CITES ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிகள் இல்லாமல் எந்த இறக்குமதியும் நடைபெறவில்லை என்பதை அந்தக் குழு குறிப்பிட்டது, ஆனால் “பல இறக்குமதிகள் இன்னும் மாதிரிகளின் தோற்றம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன”, “மூலம் மற்றும் பரிவர்த்தனை நோக்கக் குறியீடுகளின் பயன்பாடு, மற்றும் இந்தியாவால் உரிய விடாமுயற்சியின் பயிற்சி” ஆகியவை கோரப்பட்ட விலக்குகள்.


அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) சில நிபந்தனைகளின் கீழ் வனவிலங்கு வர்த்தகத்தை அனுமதிக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டது. ஆனால், இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மிருகக்காட்சிசாலையானது அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மிருகக்காட்சிசாலையிலிருந்து அல்லது அதற்கு மட்டுமே விலங்குகளை வாங்க, விற்க அல்லது மாற்ற முடியும் என்று அது கூறுகிறது. இந்த விதியின் காரணமாக, இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வனவிலங்குகள் மூலக் குறியீடு C (captive bred-சிறைபிடிக்கப்பட்ட இனத்திற்கானது) மற்றும் நோக்கக் குறியீடு Z (zoo-மிருகக்காட்சிசாலைக்கானது) ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளன.


பல விலங்குகள் நிறுவப்பட்ட வணிக இனப்பெருக்க வசதிகளிலிருந்து வந்ததாக அறிக்கை குறிப்பிட்டது. இந்த வசதிகள் பொதுவாக விலங்குகளை விற்கின்றன. ஏற்றுமதி வசதிகள் தங்கள் சொந்த நாடுகளில் உயிரியல் பூங்காக்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்றும் அது கூறியது. பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ராதா கிருஷ்ணா கோயில் யானை நல அறக்கட்டளையின் (RKTEWT) செயல்பாடுகள் தற்செயலாக காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக பிடிப்பதை ஊக்குவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த இது உதவும், அவை பின்னர் சிறைபிடிக்கப்பட்டவையாக அறிவிக்கப்படுகின்றன.


பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ராதா கிருஷ்ணா கோயில் யானை நல அறக்கட்டளை (RKTEWT) ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்படும் மாதிரிகளின் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியா ”அதன் இறக்குமதி நடைமுறைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்து, காடுகளில் இருந்து பெறப்பட்ட விலங்குகள் சிறைபிடிக்கப்பட்ட இனமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, வலுவான சோதனைகளை செயல்படுத்த வேண்டும்" என்று அறிக்கை பரிந்துரைத்தது.


அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டு (CITES) செயலகம், தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இறக்குமதிகளையும், இதே போன்ற கவலைகளை எழுப்பும் பிற நிகழ்வுகளையும், காங்கோ, ஜெர்மனி, கயானா, ஈராக், மெக்சிகோ, சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மூல அல்லது போக்குவரத்து நாடுகளுடன் சரிபார்த்து, இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் உண்மையில் சிறைபிடிக்கப்பட்டவையா என்பதைச் சரிபார்க்கவும், இல்லையென்றால், பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைத்தது.


நவம்பர் 23 அன்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் கூடவுள்ள CITES நிலைக்குழு, இந்தியாவிடம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று CITES செயலகம் பரிந்துரைத்தது.



உங்களுக்குத் தெரியுமா?


ஒவ்வொரு இனத்திற்கும் எவ்வளவு பாதுகாப்புத் தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு (CITES) மூன்று பிற்சேர்க்கைகளில் இனங்களை பட்டியலிடப்பட்டுள்ளன.


பின்இணைப்பு-I அழிவின் அபாயத்தை எதிர்கொள்ளும் உயிரினங்களை பட்டியலிடுகிறது. இந்த இனங்களின் மாதிரிகளின் வர்த்தகம் அரிதாகவே அனுமதிக்கப்படுகிறது. கொரில்லாக்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சிங்கங்கள் போன்ற "விதிவிலக்கான சூழ்நிலைகளில்" (exceptional circumstances) மட்டுமே அனுபதிக்கப்படுகிறது.


பின்இணைப்பு-II, தற்போது அழிவை எதிர்கொள்ளாத ஆனால் எதிர்கால அபாயங்களைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம் தேவைப்படும் இனங்களை பட்டியலிடுகிறது. எடுத்துக்காட்டுகளில் சில வகையான நரிகள் மற்றும் நீர்யானைகள் அடங்கும்.


பின்இணைப்பு-III, குறைந்தது ஒரு நாட்டில் பாதுகாக்கப்படும் இனங்களை பட்டியலிடுகிறது. அந்த நாடு தங்கள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த மற்ற CITES உறுப்பினர்களிடம் உதவி கோரியுள்ளது. உதாரணங்களில் இந்தியாவைச் சேர்ந்த வங்காள நரி (Bengal fox) மற்றும் பொன்னிறக் குள்ளநரி (Golden Jackal) ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வகைக்கும் வர்த்தகத்திற்கான அதன் சொந்த விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.



Original article:

Share:

திரிசூல் மற்றும் BRASS TACKS-ன் மரபு -ரோஷ்ணி யாதவ்

 ஏன் செய்திகளில்?


முப்படையின் பாதுகாப்புச் சேவைகளும் குஜராத்தில் உள்ள சதுப்பு நிலமான சர் க்ரீக் பகுதியையும் (Sir Creek sector), சௌராஷ்டிரா கடற்கரையையும், கட்ச் பாலைவனத்தையும் (Rann of Kutch), இராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகளையும் உள்ளடக்கிய ‘திரிஷூல்’ (Trishul) என்ற பெயரிடப்பட்ட ஒரு முக்கியமான பயிற்சியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ஆப்பரேஷன் சிந்தூரைத் (Operation Sindoor) தொடர்ந்து நடைபெறும் இந்த 'திரிஷூல்' பயிற்சி, பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள்  முப்படைப் பிரிவினருக்கு தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் 1987-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 'ஆப்பரேஷன் பிராஸ் டாக்ஸ் IV' (Exercise BRASS TACKS IV) என்ற பெயரில் ஒரு இராணுவப் பயிற்சியை நடத்தியபோதும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. இதன் பின்னணியில், நாம் 'திரிஷூல்' பயிற்சி பற்றி அறிந்துகொள்வோம் 'பிராஸ் டாக்ஸ் IV' பயிற்சியை பற்றிய செய்தியை மறுபரிசீலனை செய்வோம்.


முக்கிய   அம்சங்கள்:


1. இந்த பயிற்சியானது மேற்கு கடற்கரை மற்றும் கழிமுகப் பகுதிகளில் (creek sectors) தரைவழி நகர்வுகள், விமான நடவடிக்கைகள் மற்றும் கடற்படைச் சொத்துக்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஒரு பல-கள செயல்பாட்டு கட்டளையை (multi-domain theatre of operations) திட்ட வரைபடமாக்குகிறது.


2. குஜராத் கடற்கரை மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதியை உள்ளடக்கி - தரைப்படையின் தெற்குப் பிரிவு கட்டளை (Army Southern Command), மேற்குக் கடற்படை கட்டளை (Western Naval Command), மற்றும் தென்மேற்கு விமானப்படை கட்டளை (South Western Air Command) ஆகியவை பயிற்சியில் பங்கேற்கும் முக்கிய அமைப்புகளாகும்.


3. ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதிறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள், இந்திய விமானப்படையின் போர் மற்றும் ஆதரவு விமானங்கள் ஆகியவற்றின் பெரிய அளவிலான நிலைநிறுத்தல்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்தியத் தரைப்படை மற்றும் இந்தியக் கடற்படையின் நீர்நிலப் பிரிவுகளை (amphibious component) உள்ளடக்கிய நீர்நிலச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் ஐஎன்எஸ் ஜலாஷ்வா (INS Jalashwa)  தரையிறங்கு தளக் கப்பல் (Landing Platform Dock) மற்றும் தரையிறங்குதளப் பயன்பாட்டு கப்பல்கள் (Landing Craft Utility vessels - LCUs) ஆகியவை அடங்கும். இது போன்ற பலதரப்பட்ட நிலப்பரப்பு மற்றும் பணி வரம்புகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை அடைவதே இதன் நோக்கமாகும்.


4. மூன்று படைகளும் T-90 மற்றும் அர்ஜுன் டாங்கிகள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள், ரஃபேல் மற்றும் சுகோய்-30MKI போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பல்வேறு போர்க்கப்பல்கள் உள்ளிட்ட முழு வளங்களையும் திறன் மற்றும் ஆற்றலுக்காக செயல்பாட்டு ரீதியாக சோதனை செய்கின்றனர். பயிற்சிகளில் சேர்க்கப்பட்ட அல்லது சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு தளங்கள் மற்றும் கருவிகளும் பங்கேற்கக்கூடும். 


5. முப்படைகளின் சொத்துக்கள் மின்காந்த நிறமாலையிலும் (electromagnetic spectrum), மின்னணு மற்றும் தகவல் போர்க்களத்திலும் சோதிக்கப்படும்.


6. "திரிசூல் பயிற்சி, 'ஒருங்கிணைப்பு (Jointness), ஆத்மநிர்பரதா (தன்னம்பிக்கை) (Atmanirbharta) மற்றும் புதுமை (Innovation)' என்பதைக் குறிப்பிடும்விதமாக 'JAI’ என்ற உணர்வின் மூலம் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.


பிராஸ் டாக்ஸ் (BRASS TACKS) பயிற்சிகள்


1. 1987-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பிராஸ் டாக்ஸ் IV (Exercise BRASS TACKS IV) எனப் பெயரிடப்பட்ட ஒரு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


2. பிராஸ் டாக்ஸ் IV என்பது 1986-ஆம் ஆண்டு கோடையில் தொடங்கிய நான்கு பயிற்சிகளின் வரிசையில் இறுதிக் கட்ட பயிற்சியாகும். பிராஸ் டாக்ஸ் I மற்றும் II ஆகியவை ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், இந்திய இராணுவத்தின் மூத்த தளபதிகளின் நிர்வாகம், தகவல் தொடர்பு மற்றும் தளவாடத் திறன்களைச் சோதிக்கும் நோக்குடன் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஜெனரல் கே. சுந்தர்ஜி அப்போது இராணுவப் படைத் தலைவராக இருந்தார். மேலும், இந்தப் பயிற்சிக்கு அவரே பிரதான சக்தியாக இருந்தார்.


3. இந்தப் பயிற்சியின் பின்னணியில் உள்ள இந்தியாவின் நோக்கங்களைப் பகுப்பாய்வு செய்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பானது, பிராஸ் டாக்ஸ் IV இந்திய இராணுவத்தின் வழக்கமான வருடாந்திர பயிற்சி சுழற்சியைப் பொருந்துவதாக நம்பியது. இந்திய இராணுவம் வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ராஜஸ்தானில் படைப்பிரிவின் அல்லது பல படைப்பிரிவுகளின் பயிற்சிகளுடன் அதன் பயிற்சி சுழற்சியை நிறைவு செய்யும் என்று கூறியது.


4. பிராஸ் டாக்ஸ் பயிற்சிகள் போருக்கான முன்னோடியாக இல்லை என்பதை சான்றுகள் சுட்டிக்காட்டுவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் பகுப்பாய்வு கூறியது.


5. திரிசூல் பயிற்சிக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் தனது படைகளை நிலைநிறுத்தியது போலவே, பிராஸ் டாக்ஸ் IV பயிற்சியின்போதும் செய்தது. அப்போது, அந்த நகர்வுகள் குறித்து இந்திய தரப்பிலிருந்து எந்தவிதமான தகவல்களும் அறிவிக்கப்படாததால், இந்தியப் படைகளின் நோக்கம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசியல் தலைமைகளிடையே ஒருவிதமான அச்சம் நிலவியது.


இந்தியாவின் சமீபத்திய கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சிகள்


1. யுத் அப்யாஸ் (Yudh Abhyas): அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியான 'யுத் அப்யாஸ்'-ன் 21வது பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14 ஆம் தேதி வரை அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெயின்ரைட்டில் (Fort Wainwright) நடைபெற்றது. சுங்க வரி (tariffs) விவகாரம் மற்றும் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது தொடர்பாக டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கமான சூழ்நிலை இருந்தபோதிலும், இந்த இராணுவப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையேயான நிலையான இராஜதந்திர மற்றும் தற்காப்பு உறவுகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


2. மித்ர சக்தி (Mitra Shakti): இந்தியா - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான 'மித்ரா சக்தி'யின் 10வது பயிற்சி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் 25 ஆம் தேதிவரை, மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. மித்ரா சக்தி என்பது இந்தியா மற்றும் இலங்கையில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சி நிகழ்வு ஆகும். அதன் கடைசி பயிற்சி நடைமுறை புனேவில் நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.


3. கடற்படைக் கூட்டுப் பயிற்சி (Passage Exercise): இந்திய கடற்படையின் மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான INS தபார், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பி-8 கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை இங்கிலாந்தின்  ஏர்போர்ன் ஸ்ட்ரைக் குழுமத்துடன் (Carrier Strike Group) இணைந்து, வடக்கு அரபிக் கடலில் ஜூன் 9 மற்றும் 10, 2025 ஆம் நாளன்று கடற்படை கூட்டுப்பயிற்சியில் (PASSEX) பங்கேற்றன. இந்தக் கூட்டுப் பயிற்சியானது இந்திய கடற்படைக்கும், ராயல் கடற்படைக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதுடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளுக்கான ஆழமான உறவைப் பறைசாற்றுகிறது.


4. நாடோடி யானை (Nomadic Elephant): இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சியின் 17வது பயிற்சி நடைமுறை, மங்கோலியாவின் உலான்பாதரில் (Ulaanbaatar) 2025-ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 13 வரை நடத்தப்பட்டது. இது இந்தியாவிலும் மங்கோலியாவிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். 2024-ஆம் ஆண்டில் மேகாலயா மாநிலத்தில் உள்ள உம்ரோயில் (Umroi) நடத்தப்பட்டது.


5. டஸ்ட்லிக் (Dustlik): இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஆறாவது பயிற்சி 'டஸ்ட்லிக்' புனேவின் ஔந்த்தில் (Aundh) உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் (Foreign Training Node (FTN)) 2025-ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. டஸ்ட்லிக் பயிற்சி என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2023-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் உள்ள டெர்மெஸிலும் (Termez) உத்தரகண்டில் உள்ள பித்தோராகரிலும் (Pithoragarh) நடத்தப்பட்டது. பல்வேறு சூழல்களிலும் நிலப்பரப்புகளிலும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதும் ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவதுமே  இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.


Original article:

Share:

தடுப்புக் காவல் (Preventive detention) என்பது என்ன? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— குற்றம் சாட்டப்பட்ட இர்ஃபான் இப்ராஹிம் ஷேக் என அடையாளம் காணப்பட்டவர், செப்டம்பர் 19 அன்று நகர காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கலவரத்தைத் தவிர, “மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும்” “செயற்கை நுண்ணறிவால்-உருவாக்கிய பதிவு” தொடர்பாக குறைந்தது ஒரு குற்றமாவது பதிவு செய்யப்பட்டுள்ளது.


— அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் செல்லுபடி தன்மையை எதிர்த்து, ஒரு வழக்கறிஞர் மூலம் ஷேக் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இலேஷ் வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது.


— தடுப்புக்காவல் உத்தரவுக்கு எதிராக வாதிட்ட ஷேக்கின் வழக்கறிஞர், வதோதரா நகர காவல்துறையினரால் கூறப்பட்ட தடுப்புக்காவலின் காரணங்கள் “பொது ஒழுங்குடன் எந்த தொடர்பும் இல்லை” என்றும், ஆனால் அது சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விவகாரம் என்றும், சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் (Prevention of Anti-Social Activities Act (PASA) சட்டத்தின்படி, ஒரு நபருக்கு எதிரான குற்றத்தைப் பதிவு செய்வது பொது ஒழுங்கில் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று கூற முடியாது என்றும்  ஷேக்கின் வழக்கறிஞர் கூறினார்.


- உச்சநீதிமன்றத்தின் முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவு வழங்கியது  அதன் படி, "கைது செய்யப்பட்டவர் மீது கூறப்படும் நடவடிக்கைகள் பொது ஒழுங்கைப் பராமரிப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று கூறுவதற்கு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம் என்றும் தடுப்புக்காவல் அதிகாரியின் (detaining authority) தனிப்பட்ட தீர்ப்பை செல்லுபடியானதாகவோ அல்லது சட்டப்பூர்வமானதாகவோ கருத முடியாது என்று விவரித்தது.


உங்களுக்குத் தெரியுமா?


- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்கு எதிரான பாதுகாப்பை விதிக்கிறது. இருப்பினும், இந்த பிரிவில் ஒரு விதிவிலக்கு உள்ளது. இது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வழக்கமான சட்டப் பாதுகாப்புகள் பொருந்தாது என்று பிரிவு 22(3)(b) கூறுகிறது. பிரிவுகள் 22(4) முதல் 22(7) வரை தடுப்புக் காவல் நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது (preventive detention operationalises) என்பதை விளக்குகிறது.


- முதலில், “பொது ஒழுங்கை” நிலைநாட்ட தேவைப்பட்டால், மாநில அரசு, பொதுவாக மாவட்ட நீதிபதி (district magistrate) மூலம் ஒருவரைக் காவலில் வைக்க உத்தரவிடலாம். மாநில அரசு இந்த அதிகாரத்தை காவல்துறைக்கும் வழங்கலாம்.


- பிரிவு 22(4)-ன் கீழ் ஒருவரை மூன்று மாதங்களுக்கு மேல் காவலில் வைக்க வேண்டும் என்றால், ஒரு ஆலோசனைக் குழு அதை அங்கீகரிக்க வேண்டும். இந்த குழுக்கள் அரசால் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளைக் இந்த குழு கொண்டிருக்கும். காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் பொதுவாக குழுவின் முன் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்க முடியாது. குழு தடுப்புக்காவலை உறுதி செய்தால், தடுப்புக்காவல் உத்தரவை எதிர்த்து காவலில் வைக்கப்பட்ட நபர் (detainee) நீதிமன்றத்தை நாடலாம்.


- அரசியலமைப்பின் பிரிவு 22(5), அரசு “முடிந்தவரை விரைவாக” தடுப்புக்காவலின் காரணங்களை கைதிக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவை எதிர்த்துப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஆரம்ப வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.


- தடுப்புக்காவலுக்கான அடிப்படையாக இருக்கும் அனைத்து காரணங்களையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். தடுப்புக்காவலை நியாயப்படுத்த புதிய காரணங்களை பின்னர் சேர்க்க முடியாது. இந்தக் காரணங்கள் தடுப்புக் காவலில் உள்ள நபருக்கு புரியும் மொழியில் விளக்கப்பட வேண்டும்.


- ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிரிவு 22(6)-ஆல் ஓரளவு பலவீனமாக்கப்படுகிறது. அதன்படி, பிரிவு 5-ல் எதுவும் பொது நலனுக்கு எதிரான உண்மைகளை வெளிப்படுத்த மாநிலத்தை கட்டாயப்படுத்தாது.



Original article:

Share:

வாக்காளர் பட்டியலை உடனடியாகச் சரிசெய்யுங்கள், ஆனால் பீகார் வழியில் அல்ல. -பிரவீன் சக்ரவர்த்தி

 இந்திய வாக்காளர் பட்டியலில் உள்ள கடுமையான சிக்கல்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது, ஆனால் அதன் சிகிச்சைமுறை நோயின் பாதிப்பைவிட மோசமாக இருக்கக்கூடாது.


சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இரண்டு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான பதிவு எண் இல்லை. அதேபோல், இந்தியாவில் 20 கோடி நபர்கள்  ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள். எந்த இரண்டு நபருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிம எண் இல்லை. ஒவ்வொரு எண்ணும் தனித்துவமானது. ஒரே நபரிடம் பல ஓட்டுநர் உரிமங்கள் இருக்கலாம் (சட்டவிரோதமானது என்றாலும்), ஆனால் ஒவ்வொரு ஓட்டுநர் உரிம எண்ணும் தனித்துவமானது.


ஒவ்வொரு வாகனப் பதிவு எண் அல்லது ஓட்டுநர் உரிம எண் அல்லது எந்த அடையாள அட்டை எண்ணும் தனித்துவமானது என்பதும், இரண்டு பதிவுகளும் ஒரே எண்ணைக் கொண்டிருக்க முடியாது என்பதும் வெளிப்படையான ஒன்று. இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) வாக்காளர் பட்டியல்களில் இந்த எளிய மற்றும் அடிப்படைக் கொள்கை மீறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில வாக்காளர்களைப் போலவே வங்காளத்தில் உள்ள வாக்காளர்களுக்கும் அதே வாக்காளர் அடையாள எண் உள்ளது. இந்தப் போக்கு பல மாநிலங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 2008-ஆம் ஆண்டில், அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் புகைப்பட அடையாள அட்டைகளை (Electoral Photo Identity Card (EPIC)) வழங்கியதாக பெருமையாகக் கூறினார். எந்தவொரு அடையாள அமைப்பிற்கும் மிக அடிப்படையான விதி, அடையாள எண் தனித்துமானதாக இருக்க வேண்டும், பலருக்கு ஒரே எண் இருக்கக்கூடாது என்பதை அவர் அறியவில்லை போலிருக்கிறது என்று விமர்சிக்கப்படுகின்றனர். 


பெரும் கவலைக்கு காரணம்


இது இன்னும் மோசமாகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தால், உங்களுக்கு தெரியாமலேயே  உங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை, படிவம் 8-ஐப் பயன்படுத்தி வேறு எண்ணாக மாற்ற முடியும். பின்னர், மாற்றபட்ட எண்ணையும் உங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கான ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி, உங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இது அவ்வளவு எளிமையானது. இப்படித்தான் கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 6,000 உண்மையான வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்ற தகவலை  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2025, செப்டம்பர் 18-ஆம் தேதி  அம்பலப்படுத்தினார்.


ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவரது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த தேர்தல் ஆணையம், அமைதியாகவும் மறைமுகமாகவும் இந்த செயல்முறையை மாற்றியது. இப்போது ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணை மட்டுமே பயன்படுத்துகிறது. இது வரவேற்கத்தக்க மற்றும் நேர்மறையான மாற்றமாக இருந்தாலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை  இணைப்பதற்கான இந்த நடவடிக்கை எந்தவிதமான முன்னறிவிப்பு அல்லது விவாதமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையானது இந்திய தேர்தல் ஆணையம் அதன் வாக்காளர் பட்டியல் மேலாண்மை அமைப்பில் உள்ள குறைபாடுகளைத் தெளிவான மற்றும் உள்ளார்ந்த முறையில் ஒப்புக்கொள்வதாகும். இந்தக் குறைபாடுகள் தேர்தல் முடிவுகளைக் கையாளவும் திரித்துப் பாதிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

  

நவம்பர் 5-ஆம் தேதி 2025, அன்று ராகுல் காந்தி கூறியுள்ளபடி, இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் நகல், போலி மற்றும் உண்மையில் இல்லாத வாக்காளர்களால் நிறைந்துள்ளன என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. தனித்துவமான வாக்காளர் அடையாள எண்கள் இல்லாதது மற்றும் வாக்காளர் விவரங்களை யாரையும் மாற்ற அனுமதிப்பது என்பது தரவுத்தளங்கள் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட இளம் வயது மென்பொறியாளர்கூட செய்யாத அடிப்படை அமைப்பு பிழைகள் என்று கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் அதன் தரவுத்தள மேலாண்மை திறன்களில் மிகவும் திறமையற்றது என்பது தெளிவாகிறது. வாக்காளர் பட்டியல் இந்தியாவின் மிக முக்கியமான தரவுத்தளமாக இருப்பதால் இது கவலைக்குரிய ஒன்றாகும். இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் சரிசெய்யப்பட்டு, மிகவும் திறமையான நபர்கள் மற்றும் செயல்முறைகளால் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டியது என்பது தெளிவாகிறது.


பீகார் வழியில் சிறப்பு தீவிர திருத்தம் மோசமானது.


இந்தச் சூழலில், வாக்காளர் பட்டியல்களைத் சரிசெய்ய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR) என்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்தியாவின் வாக்காளர் பட்டியல்களைத் சரிப்படுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஆரம்பத்தில் இருந்து பட்டியலைச் சிக்கலாக்கிய அதே அதிகாரிகளிடமே, அதே நடைமுறையின்கீழ் இந்தச் சரிசெய்யும் பணியை ஒப்படைக்க முடியுமா?. தலைமைத் தேர்தல் ஆணையர் நடத்திய செய்தியாளர் சந்திப்புகளில் காணப்படுவது போல், இந்தியத் தேர்தல் ஆணையம்  வெளிப்படையாகவே ஒருபக்கச் சார்புடையதாகவும் மற்றும் கட்சி சார்ந்ததாகவும் செயல்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல்களைச் சுத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்துவதற்குகெனச் சொந்த நடைமுறைகள் மற்றும் விதிகளைக் கொண்டுவரத் தேவையான நம்பிக்கையும் தகுதியும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன. இந்தப் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒவ்வொரு அடியிலும் ஈடுபடுத்தி, ஒரு கூட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முதலாவதாக, பீகார் பாணியிலான சிறப்பு தீவிர திருத்தம் மற்ற மாநிலங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வழி அல்ல என்கின்றனர். பீகார் மாநிலத்தில் இந்த நடவடிக்கை தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இருந்தது என்றும் பட்டியலில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீக்குதல் என்ற தவறான காரணத்தின் அடிப்படையில் உண்மையான வாக்காளர்களை நீக்கும் ஒரே நோக்கத்துடன் அவசரப்படுத்தப்பட்டது.


இரண்டாவதாக, தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கு ஆதார் அடையாள அட்டை அடிப்படையாகவும் ஒருங்கிணைந்ததாகவும் உள்ளது. ஆனால், ஆதார் பயன்பாடு குறித்து தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே குழப்பத்தையும் தவறான கருத்துகளையும் உருவாக்கி வருகிறது. ஆதார் குடியுரிமைக்கு ஆதாரமல்ல எனவும், எனவே அதைப் பயன்படுத்த முடியாது எனவும் கூறுகிறது. இது உண்மைதான். ஆதார அடையாள அட்டை  வைத்திருக்கும் அனைவரும் வாக்காளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒவ்வொரு வாக்காளரும் ஆதார் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதார் இணைப்பு மூலம் வாக்காளர் பட்டியலில் நகல், போலி மற்றும் உண்மையற்ற பதிவுகளை நீக்குவது மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த முறையாகும். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான மற்றும் மாற்ற முடியாத ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே இருப்பதை உறுதி செய்வதற்கும் சிறந்த முறையாகும். ஆதார் மற்றும் நகல் நீக்கத்திற்கான தேவையை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதன் மூலம், தேர்தல் ஆணையம் தொழில்நுட்பரீதியாக அறியாமையாகவோ அல்லது வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்தோடோ செயல்படுகிறது என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. 


மூன்றாவதாக, உண்மையான வாக்காளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைப் பதிவுசெய்ய வேண்டும். வாக்காளர்களை இணையவழியில்  படிவங்களைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வதன் மூலமோ அல்லது ஒரு மையத்திலிருந்து அவற்றைச் சேகரித்து தாங்களாகவே பதிவு செய்யும் முறையிலோ நடந்திடக்கூடாது. வாக்காளர்கள் தங்களிடம்  வரச் சொல்வதற்குப் பதிலாக, பீகாரில் செய்தது போல, இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்காளர்களைத் தேடிச் செல்ல வேண்டும். தெலுங்கானா போன்ற ஒரு மாநிலம், இரண்டு மாதங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 3.5 கோடி மக்களுக்கு முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பைச் செய்ய முடியுமென்றால், இந்தியத் தேர்தல் ஆணையமும் இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எந்தவொரு உண்மையான வாக்காளரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான். பீகாரில் செய்தது போல, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த வேலையை ஒரு மாதத்தில் அவசர அவசரமாக முடிக்க முடியாது என்பதையும் இது குறிக்கிறது. பீகாரில் செய்தது போல் ஒரு மாதத்தில் இந்தப் பயிற்சியை ECI அவசரமாகவும் மோசமான முறையிலும் செய்ய முடியாது என்பதையும் இது குறிக்கிறது. தூய்மையான வாக்காளர் பட்டியல்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் அடிப்படையானவை என்பதால் இந்தத் தீவிர திருத்தப் பணியை அவசரமாகவும், மோசமான முறையிலும் தேர்தல் ஆணையம் செய்யக் கூடாது.


எதிர்க்கட்சிகள் சொல்வதைக் கேளுங்கள்


சிறப்பு தீவிர திருத்தப்பணி  செயல்முறையில் அரசியல் கட்சிகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் புகார்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை. ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் வாக்களிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அனைத்து எதிர்க்கட்சிகளும் போலி வாக்காளர்கள் பெருமளவில் சேர்க்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்குக் கூட்டுக்கடிதம் ஒன்றை எழுதின. ஆனால், இது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் 75 லட்சம் புதிய மற்றும் மர்மமான வாக்குகள் எவ்வாறு பதிவானது என்பது புதிராக உள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக, பெரும்பான்மையைப் பெற மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குச் சரியாக 75 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. இந்தியத் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் புகாரை இன்னும் தீவிரமாக பரிசீலித்திருந்தால்  மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும்.


தேர்தல் ஆணையம் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் ஒரு கேலிக்கூத்தாக இருக்கின்றன. அங்குத் தேர்தல் ஆணையம் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்பதாகக் கூறி, பின்னர் அதன் சொந்த விதிகள் மற்றும் நடைமுறைகளை மட்டுமே வெளியிடுகிறது. மாநிலத் தலைநகரில் உள்ள மாநிலத் தலைமையிலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சாவடியிலும் - அனைத்து மட்டங்களிலும், ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்கப்படும் ஒரு செயல்முறையாக சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை இருக்க வேண்டும். இந்தக் கூட்டங்கள் காணொளிப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் அளிக்கும் பரிந்துரைகள், புகார்கள் மற்றும் யோசனைகள் தெளிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்க்கட்சிகளின் மிக முக்கியமான மற்றும் வலுவான கோரிக்கை என்னவென்றால், சிறப்பு தீவிர திருத்த செயல்முறைக்குப் பிறகு, புகைப்பட வாக்காளர் பட்டியலின் இறுதி, ஒருங்கிணைந்த மற்றும் இயந்திரம் படிக்கக்கூடிய டிஜிட்டல் நகலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கை.


தேர்தல் ஆணையம் திடீரென ஒரு நாள் விழித்தெழுந்து, சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. 2024-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் ஹரியானாவில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தெளிவான முரண்பாடுகளை அம்பலப்படுத்திய பிறகு, தேர்தல்களை பாதிக்கும் வகையில் இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் கையாளப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. நாட்டின் வாக்காளர் பட்டியலில் உள்ள கடுமையான சிக்கல்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டு அதை சரிசெய்ய நடவடிக்கையெடுப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் சிகிச்சைமுறை என்பது  நோயின் பாதிப்பைவிட மோசமானதாக இருக்கக்கூடாது. பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு மோசமான யோசனை என்பதை தலைமைத் தேர்தல் ஆணையர் புரிந்து கொள்ள வேண்டும்.


பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய வல்லுநர் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வுத் தலைவராக உள்ளார்.



Original article:

Share: