இந்தியாவுக்கு நிலையான மக்கள்தொகை தேவை, அதிக குழந்தைகள் அல்ல.

 தென் மாநிலங்களின் கவலைகளை நிதிக்குழு கவனிக்க வேண்டும். 


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழ்நாட்டின்  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சமீபத்திய கருத்துகள் பரவலான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவை இரண்டு குழந்தை விதிமுறைகள் (two-child norm) குறித்த நீண்டகால தேசிய ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இரண்டு முதல்வர்களும் உண்மையில் பெரிய குடும்பங்கள் மற்றும் அதிக குழந்தைகளை ஆதரித்து உள்ளனர். சென்னையில் நடந்த திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எங்களுக்கும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்கள் தகுதி பெறுவார்கள் என்ற சட்டத்தை நாயுடு இயற்றிய பிறகு இது நடந்தது.  இத்தகைய அறிக்கைகள் மூர்க்கத்தனமானவை மற்றும் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளுடன் அதன் வளர்ச்சி இலக்குகளை சமநிலைப்படுத்துவதில் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இவை குறுகிய மனநிலையை பிரதிபலிக்கின்றன.


மொத்த கருவுறுதல் விகிதத்தில் (Total Fertility Rate (TFR)) ஒட்டுமொத்த சரிவு நல்லது என்றாலும், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற சில மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று நிலை 2.1 யை விட மிக அதிகமாக உள்ளது.  இந்த மாநிலங்களுக்கு பொது சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த அதிக நிதி ஆதாரங்கள் தேவை.  இது அவர்களின் மக்கள்தொகையை நிலைப்படுத்த உதவும். 


இந்த அறிக்கைகளின் பின்னணியில் மூன்று பரந்த காரணங்கள் உள்ளன. முதலாவதாக, வட மாநிலங்கள் அவற்றின் மக்கள் தொகை அளவு காரணமாக ஒன்றிய அரசின் அதிகாரங்களில் பெரும் பங்கைப் பெறுகின்றன.  இரண்டாவதாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு வரவிருக்கும்  தொகுதி மறுவரையறையின் (delimitation) போது, தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் குறைவான இடங்களைப் பெறக்கூடும். மூன்றாவதாக, வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் அதிக  மூத்த குடிமக்களின் அதிக எண்ணிக்கை போன்ற பிரச்சனைகள் உள்ளது.

 

எவ்வாறாயினும், அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்கள்  பற்றிய அச்சங்கள் தவறானவை.  கடந்த 77 ஆண்டுகளில்,  நாடாளுமன்றத்தில் வட, மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தாலும், தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட வேகமாக முன்னேறியுள்ளன. தென்னிந்திய வளர்சிக்கு வட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. உண்மையில், மூத்த குடிமக்கள் தொகை பற்றிய தெற்கின் கவலைக்கான பதில், அதிக குழந்தைகளை பெறுவதில் இல்லை, மாறாக புலம்பெயர்ந்தோருக்கு இடமளிப்பதில் உள்ளது.


இருப்பினும், தென் மாநிலங்களின் கவலைகள் கவனிக்கப்பட வேண்டும். 16-வது நிதி ஆணையம், தற்போது அதிகாரப்பகிர்வு குறித்த மாநிலங்களின் கருத்துகளைத் தேடும் பணியில் உள்ளது.  15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மக்கள்தொகை அடிப்படையில் 12.5% பங்கை அளிக்கிறது. இருப்பினும், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு ஒவ்வொன்றும் 15% பெறுகின்றன. மேலும், வருமான தூரம் (மிக உயர்ந்த தனிநபர் வருமானத்திலிருந்து) 45% பங்கை கொண்டுள்ளது. மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வருமான தூரம் ஆகியவற்றிற்கு இந்த முக்கியத்துவம் தென் மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகிறது.  குறிப்பாக வரி மற்றும் நிதி செயல்திறனில் 2.5% பங்கையே பெறுகின்றன. இது பின்தங்கிய மாநிலங்களை ஊக்குவிப்பதோ அல்லது நிதி பொறுப்புள்ள தென் மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதோ இல்லை.  16-வது நிதிக்குழு இந்த ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தி, தென் மாநிலங்களின்  பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் விபரீதமான பேச்சுக்களையும் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 




Original article:

Share:

ஒடிசாவில் உள்ள சதுப்புநிலங்கள் டானா புயலின் தாக்கத்தை எவ்வாறு குறைத்தது?

 சதுப்புநிலக் காடுகளில், புதர்கள் போன்ற இடங்களில்  உப்புத்தன்மையை தாங்கக்கூடிய மரங்கள் உள்ளன. பொதுவாக அவை நன்னீர் மற்றும்  கடல் நீர் சந்திக்கும் பகுதிகள் மற்றும் கரையோரங்களில் வளர்கின்றன. 


வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய பூங்கா (Bhitarkanika National Park) மற்றும் தம்ரா துறைமுகத்திற்கு (Dhamra Port) அருகில் டானா புயல் கரையை கடந்தது. அதிர்ஷ்டவசமாக, முந்தைய புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க நடவடிக்கையால்  டானா புயல் சேதத்தை பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை. மாநில அதிகாரிகளின் முயற்சிகள் பேரிடரை கட்டுப்படுத்த உதவியது. எடுத்துக்காட்டாக, ஒடிசா ஒரு மில்லியன் மக்களை புயல் முகாம்களில் தங்கவைத்தது. பாதிப்பை குறைக்க உதவியதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். பிதர்கனிகாவில் வளமான சதுப்புநிலக் காடுகள் உள்ளதால் இது சாத்தியமானது.


சதுப்புநிலக் காடுகள் (mangroves) என்றால் என்ன? 


சதுப்புநிலக் காடுகளில், புதர்கள் போன்ற இடங்களில்  உப்புத்தன்மையை தாங்கக்கூடிய மரங்கள் உள்ளன. பொதுவாக அவை நன்னீர் மற்றும்  கடல் நீர் சந்திக்கும் பகுதிகள் மற்றும் கரையோரங்களில் வளர்கின்றன.  சதுப்புநிலக் காடுகள் பொதுவாக காற்று மூலம் சுவாசிக்கும் வேர்கள் மற்றும் மெழுகு போன்று சதைப்பற்றுள்ள இலைகளைக் கொண்டுள்ளன. மேலும், அவை பூக்கும் தாவரங்களாகும். சுந்தரவனக்காடுகள் (இந்தியா மற்றும் வங்காளதேசம் முழுவதும் பரவியுள்ளது) உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான சதுப்புநிலக் காடு ஆகும். புரோபகுலஸ் (propagules) எனப்படும் சதுப்புநிலக் காடுகளில் உள்ள தாய் மரத்தில் முளைத்து நீரில் விழுந்து மீண்டும் சதுப்புநில மரமாக வளர்கின்றன. 


சிவப்பு மாங்குரோவ், அவிசீனியா மெரினா, சாம்பல் சதுப்புநிலக்காடு, ரைசோபோரா போன்றவை சில பொதுவான சதுப்புநில மரங்களாகும். சதுப்புநிலக் காடுகள் கடலோர வன சுற்றுச்சூழல் அமைப்பைக் (littoral forest ecosystem) குறிக்கின்றன. அதாவது, அவை உவர் நீரில் செழித்து வளர்கின்றன. 


இந்தியாவில், பல இடங்களில் சதுப்புநிலக் காடுகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி கிருஷ்ணா டெல்டா, ஒடிசாவின் பிதர்கனிகா, அந்தமானில் உள்ள சதுப்புநிலக் காடுகள், கேரளா, குஜராத், தமிழ்நாடு போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். 


சதுப்புநிலக் காடுகள் புயல்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கின்றன? 


புயல்கள் தாக்கும் போது, ​​சதுப்புநில காடுகள் புயல் பேரிடருக்கு எதிராக ஒரு தடையாக செயல்படுகின்றன. புயல் என்பது கடல்நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். இது பெரும்பாலும் பெரிய அலைகளுக்கு வழிவகுக்கிறது. உலக வங்கி குழுவின் அறிக்கையின்படி சதுப்புநில மரங்களின் வேர்கள், உமிகள் மற்றும் இலைகள் நீரின் ஓட்டத்தைத் தடுக்கின்றன.


சோனெரேஷியா அபெடலா (Sonneratia apetala)  சதுப்புநில இனங்கள் அதிகளவு பேரிடர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை குறைத்தது என என்பதை குழுவின் வேறு அறிக்கை வெளிப்படுத்தியது.  குறிப்பாக, 50 மீட்டர் முதல் 2 கிலோமீட்டர் அகலம் வரை சதுப்புநிலப் பட்டைகள் அலையின் உயரத்தை 4 செ.மீ முதல் 16.5 செ.மீ வரை குறைத்தது. மேலும், இந்த சதுப்புநிலக் காடுகள் 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் அகலம் இருந்தபோது நீரின் வேகத்தை 29% முதல் 92% வரை குறைத்தது.


சதுப்புநிலங்களை கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம் புயலின் தாக்கத்தை மேலும் குறைக்கலாம். உதாரணமாக, ஒரு கரைக்கு முன்பு  சதுப்புநிலங்களை நடவு செய்வதால், நீர் ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.


பிடர்கனிகா சதுப்புநில காடுகளின் பரப்பளவு எவ்வளவு?


பிதர்கனிகா ஒரு குறிப்பிடத்தக்க சதுப்புநிலக் காடுகளைக் கொண்டுள்ளது. தற்போது, ​​ஒடிசா 231 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சதுப்புநிலக் காடுகளைக் கொண்டுள்ளது. இதன் பெரும்பகுதி பிதர்கனிகாவில் அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாக இந்தப் பகுதி இரண்டாவது இடத்தில் உள்ளது. கேந்திரபராவில் உள்ள பிதர்கனிகாவைத் தவிர, பாலசோர், பத்ரக், ஜகத்சிங்பூர் மற்றும் பூரி மாவட்டங்களிலும் சதுப்புநிலங்கள் உள்ளன. அவை கடலோர வனப்பகுதிகள் (coastal woodland) என்று அழைக்கப்படுகின்றன.


பிதர்கனிகாவில் 82 சதுர கி.மீ பரப்பளவில் அடர்த்தியான சதுப்புநிலக் காடுகளும், 95 சதுர கி.மீ பரப்பளவில் மிதமான சதுப்புநிலக் காடுகளும் உள்ளன. 672 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ள கடற்கரைப் பகுதிகள் 1975-ஆம் ஆண்டில் பிதர்கனிகா வனவிலங்கு சரணாலயமாக (Bhitarkanika Wildlife Sanctuary) அறிவிக்கப்பட்டன. இந்த சரணாலயத்தின் மையப் பகுதி 145 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது செப்டம்பர் 1998-ஆம் ஆண்டில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.


அக்டோபர் 1999-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூப்பர் புயல் (Super Cyclone) உட்பட கடந்த காலங்களில்  ஏற்பட்ட பல புயல்களின் தாக்குதலை இந்த பூங்கா தாங்கியுள்ளது. 




Original article:

Share:

'டிஜிட்டல் கைது' மோசடிகள்: பிரதமர் மோடியின் எச்சரிக்கை: எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?

 ஜனவரி முதல் ஏப்ரல் 2024 வரை, டிஜிட்டல் கைது மோசடிகளால் இந்தியாவில் பொதுமக்கள் ₹120.30 கோடி ரூபாய்  இழந்து உள்ளதாக  இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cybercrime Coordination Centre) தெரிவித்துள்ளது.


அக்டோபர் 27-ஆம் தேதி தனது வானொலி நிகழ்ச்சியான "மன் கி பாத்" (Mann Ki Baat) நிகழ்ச்சியில், "டிஜிட்டல் கைதுகள்" (“digital arrests”) விவகாரத்தை முன்னிலைப்படுத்தினார். இந்த மோசடிகள் குறித்து மக்களை எச்சரித்த அவர், “டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்திய  சட்டத்தின் கீழ் டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு இல்லை. இதுபோன்ற விசாரணைகளுக்காக எந்த அரசு நிறுவனமும் உங்களை தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 


  இத்தகைய மோசடிகள் எவ்வாறு வேலை செய்கின்றன? தொலைபேசி அல்லது  காணொளி அழைப்புகள் மூலம் கைது செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் மோசடி செய்பவர்கள் மக்களை எவ்வாறு ஏமாற்ற முடிந்தது?


டிஜிட்டல் கைது மோசடிகள் என்றால் என்ன? 


இந்த மோசடிகளில், குறிப்பிட்ட சில நபர்கள் அரசு அதிகாரிகள் போல் நடிக்கின்றனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை WhatsApp, Skype அல்லது பிற செயலிகள் மூலம் தொடர்புகொள்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை  கையாளுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக மோசடி செய்பவர்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர்.


மோசடி செய்பவர்கள் காவல்  அதிகாரிகளைப் போல உடை அணிகிறார்கள். போலி காவல் நிலைய பின்னணியை உருவாக்குகிறார்கள். அவர்கள் உண்மையானதாக தோற்றமளிக்க போலி அதிகாரப்பூர்வ பதக்கங்களைக்  (official badges) காட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துகிறார்கள் மற்றும் போலி ஆவணங்களைக் காட்டுகிறார்கள். அவர்கள் "டிஜிட்டல் கைது" செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களிடம் கூறுகிறார்கள். 


பாதிக்கப்பட்டவர்கள் அழைப்பை துண்டிக்கவோ அல்லது வீடுகளை விட்டு வெளியேறவோ வேண்டாம் என்று கூறுகின்றனர். இந்த அழைப்புகள் பல மணி நேரம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்கள் உத்தரவுகளைப் பின்பற்றாவிட்டால் என்ன மோசமான நிகழ்வுகள்  நடக்கும் என்பதை மோசடி செய்பவர்கள் விளக்குகிறார்கள். பிறகு பணம் கேட்கிறார்கள். பணம் செலுத்தினால் பாதிக்கப்பட்டவர்களை "விடுதலை" அல்லது வழக்கை முடித்து வைப்பதாக பொய்யான வாக்குறுதி அளிக்கிறார்கள்.

 


டிஜிட்டல் கைது மோசடி அழைப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி 


  மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் அறியாமையை பயன்படுத்தி பொய் சொல்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு மன அழுத்த சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். அவர்கள் தகவல் மூலம் பயத்தை உருவாக்கி அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர வைக்கிறார்கள். இந்த மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் காவல்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடிக்கிறார்கள் மற்றும்  போலி அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு நம்பிக்கையுடன் பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.  


இந்த மோசடிகள் செல்வந்தர்கள் உட்பட யாரையும் குறிவைக்கலாம். உதாரணமாக, இந்த மாதம், ஜவுளித் துறையின் தலைவரான எஸ்.பி.ஓஸ்வால், மத்திய புலனாய்வுப் பிரிவு  அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்பவர்களுக்கு ₹7 கோடியை இழந்தார். வர்த்மான் குழுமத்தின் தலைவரான ஓஸ்வால், ஸ்கைப் மூலம் அவர் இரண்டு நாட்கள் "டிஜிட்டல் காவலில்" வைக்கப்பட்டதாகக் கூறினார். 


மோசடி செய்பவர்கள் ஸ்கைப்பில் ஒரு போலி உச்ச நீதிமன்ற விசாரணையை நடத்தினர். அங்கு ஒருவர் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் போல் நடித்து, சட்ட விசாரணையை போலியாக உருவாக்கி, போலி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


சட்டச் சிக்கல்களைத் தீர்க்க காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மோசடி செய்பவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.  மோசடி செய்பவர்களின் அழைப்புகள் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க  அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மோசடி செய்பவர்கள் ஆதார் அல்லது வருமான வரி விவரங்களைக் கேட்கலாம். பாதுகாப்பாக இருக்க,  பிரதமர் மோடி மூன்று வழிமுறைகளை பரிந்துரைத்தார்


அத்தகைய அழைப்புகளை ஏற்க நேரிட்டால் பீதி அடைய வேண்டாம். உங்களால் முடிந்தால், அழைப்பை பதிவு செய்யுங்கள். எந்த அரசாங்க நிறுவனமும் ஆன்லைனில் உங்களை அச்சுறுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  1930 என்ற எண்ணை அழைத்து இணைய நிதி மோசடிகளை தேசிய உதவி எண்ணை அழைத்து அணுகி மோசடி குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கவும்.


டிஜிட்டல் கைது மோசடிகளை எதிர்கொள்ள அரசு என்ன செய்துள்ளது? 


இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) என்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒரு சிறப்புக் குழுவாகும். அதிகரித்து வரும் சைபர் கிரைம் வழக்குகளை நிவர்த்தி செய்வதே இதன்  முக்கிய நோக்கமாகும்.  ஜனவரி முதல் ஏப்ரல் 2024 வரை, இந்தியர்கள் இந்த மோசடிகளால் ₹120.30 கோடி  ரூபாய் இழந்துள்ளதாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) கண்டறிந்துள்ளது.


இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளைத் தடுக்க மைக்ரோசாப்ட்  நிறுவனத்துடன் இணைந்து  இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) பணியாற்றியுள்ளது. மேலும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் துவக்கி உள்ளனர். இந்தப் பிரச்னைகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுமாறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.


மே மாதம், அரசாங்கம் பல்வேறு சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியது.  இந்தக் குழு இந்தியர்களைக் குறிவைத்து, குறிப்பாக கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது.




Original article:

Share:

ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - அஜய் சிஹ்னா கற்பூரம்

 ஆதார் அடையாளச் சான்று மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 

 

பள்ளி விடுப்புச் சான்றிதழ் (School Leaving Certificate) போன்ற பிற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்த நோக்கத்திற்காகச் செயல்படுவதால், ஆதார் அட்டைகளை வயதுச் சான்றாகப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பு ஆதாரின் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) ஆதார் எண்களை வழங்குவதற்கு பொறுப்பான "அனைவருக்குமான  அடையாள உள்கட்டமைப்பு" (universal identity infrastructure) என்று ஆதாரை விவரிக்கிறது.


நீதிமன்றம் ஏன் இந்தத் தீர்ப்பை வழங்கியது? ஆதாருக்கான முதல் அட்டைகள் வழங்கப்பட்டதிலிருந்து ஆதார் தற்போது எவ்வாறு மாறிவிட்டது?


மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு கோருவதற்கு பெரும்பாலும் வயதுச் சான்று (Age proof) தேவைப்படுகிறது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சிகா ராம் என்ற நபரின் குடும்பத்திற்கான இழப்பீடு வழங்குவது குறித்து தீர்ப்பு  வழங்க வேண்டியிருந்தது. ஏப்ரல் 2015-ஆம் ஆண்டில், ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் (Motor Accident Claims Tribunal), காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடாக 19,35,400 ரூபாய்  வழங்க உத்தரவிட்டது.


மோட்டார் வாகனச் சட்டம், 1988 (Motor Vehicles Act(MVA)) இன் கீழ் இறப்பு தொடர்பான வழக்குகளுக்கான இழப்பீடு, குறிப்பிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த காரணிகளில் இறந்தவரின் வருமானம் மற்றும் வயது, அத்துடன் இவரை சார்ந்திருப்பவர்களின் நபர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும். இறந்தவரின் வயது ஒரு விரிவாக்கத்தை தீர்மானிக்க உதவுகிறது.  இந்த விரிவாக்கம் ஒரு எண்ணிக்கையை குறிக்கிறது. இது இறந்தவரின் சம்பாதிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.


மேல்முறையீட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை 9,22,336 ரூபாய் ஆக குறைத்தது. இவர் இறக்கும் போது இவரது ஆதார் அட்டையின்படி 47 வயதாக இருந்தார். அதாவது, மோட்டார் வாகனச் சட்டத்தின் (MVA) கீழ் 13-ன் விரிவாக்கத்தைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவரது பள்ளி விடுப்பு சான்றிதழின்படி விபத்து நடந்தபோது அவருக்கு உண்மையில் 45 வயது என்றும், அதற்கு பதிலாக பெருக்கி 14-க இருக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். 


சிறார் நீதிச் சட்டம் (Juvenile Justice Act): உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆதார் வயதுச் சான்றாக இல்ல என்பதைக் குறிக்கிறது.


உச்ச நீதிமன்றம் 13 பக்க தீர்ப்பை வழங்கியது. உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாக விமர்சித்தது. இந்த  உத்தரவில் “வக்கிரம், சட்ட விரோதம் அல்லது அதை செல்லாததாக்கும் வேறு ஏதேனும் சிக்கல்கள்” உள்ளதா என்பதில் மட்டுமே உயர் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (Juvenile Justice (Care and Protection of Children) Act), 2015-ன் பிரிவு 94 ஐ மேற்கோள் காட்டியது. இது "சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான சான்றிதழ்" சட்டத்தின் கீழ் ஒரு வாரியம் அல்லது குழுவின் முன் கொண்டு வரப்பட்ட ஒரு நபரின் வயதை தீர்மானிக்க ஆதாரமாக பயன்படுத்தப்படலாம்.  ஆதார் அட்டைக்கு பதிலாக ஒரு நபரின் வயதை தீர்மானிக்க பள்ளி விடுப்பு சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுடன் இது கூடுதலாக இருந்தது. 


நீதிபதி டாக்டர். ஏ.கே.சிக்ரி ஆதாரை "அடையாளச் சான்று" என்று விவரித்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் இந்த வாதம் குறிப்பிடுகிறது.  அத்துடன் ஆதார் "பிறந்த தேதிக்கான சான்று அல்ல" என்பதை மீண்டும் வலியுறுத்தும் UIDAI சுற்றறிக்கை ஒன்றை மீண்டும் வலியுறுத்தியது. 


இதனால் பள்ளி விடுப்புச் சான்றிதழில் வயது அடிப்படையில் இழப்பீட்டைக் கணக்கிட உச்ச நீதிமன்றம் 14-ஐ பெருக்கி குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்தை வழங்கியது.


பல ஆண்டுகளாக ஆதாருக்கான ஆணை எவ்வாறு விரிவடைந்துள்ளது? 


வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அரசாங்கத் திட்டங்களைப் பெற உதவுவதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் முதலில் ஆதார் ஒரு தனிப்பட்ட அடையாளமாக (unique ID (UID) முன்மொழியப்பட்டது. இது பின்னர், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாள அட்டைகளை பதிவு செய்து வழங்குவதற்கான தேசிய முயற்சியாக மாறியது. இருப்பினும், இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தை (UIDAI) மேற்பார்வையிட்ட நிதி அமைச்சகத்துக்கும்,  உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், இந்த திட்டம் முடங்கியது.  இந்திய தேசிய அடையாள ஆணைய (National Identification Authority of India (NIAI)) மசோதாவும் வாக்கெடுப்புக்கு முன் நிராகரிக்கப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆதாருக்கான முயற்சியை பாஜக எதிர்த்தது. தரவுத்தளத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகைகள் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை எழுப்பினர்.


2016-ஆம் ஆண்டு பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பிறகு நிலைமை மாறியது.  இந்திய தேசிய அடையாள ஆணைய (NIAI) மசோதா திரும்பப் பெறப்பட்டது.  மேலும், கட்சி ஜூலை 2016 இல் ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) மசோதாவை பண மசோதாவாக (Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits, and Services) Bill) அறிமுகப்படுத்தியது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 110-வது பிரிவு, பண மசோதா சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், மாநிலங்களவையின் எதிர்ப்புகளை மீறி மக்களவையில் சட்டமாக நிறைவேற்ற அதிகாரம் அளிக்கிறது. 


கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சட்ட மனுவைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் அல்லது மொபைல் சிம் கார்டு பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இருப்பினும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் உறுதி செய்தது. அரசாங்க சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளின் அடையாளங்களைச் சரிபார்க்க ஆதாரை பயன்படுத்தவும் இது அனுமதித்தது.


ஆதார் பதிவு தன்னார்வலமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் பயன்பாடு கணிசமாக விரிவடைந்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களைப் பெற ஆதார் சரிபார்ப்பு இப்போது அவசியம். அமேசான் பே (Amazon Pay) மற்றும் ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் (Aditya Birla Housing Finance) போன்ற தனியார் நிறுவனங்களும் ஆதாரை கோருகின்றன. ஜனவரி 2024-ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) கீழ் வேலை தேடும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.




Original article:

Share:

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நவம்பர் 10-ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வு பெற்ற  பின்பு, அவருக்குப் பிறகு பதவியேற்பார். இதன் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது? என்பது பற்றிய விவரம். 


அக்டோபர் 24-ம் தேதி, நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக (Chief Justice of India (CJI)) ஒன்றிய அரசு நியமித்தது. இந்த நியமனம், ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அளித்த பரிந்துரையை முறையாக அங்கீகரித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தலைமை நீதிபதி சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்ற  பின்பு,  அவருக்குப் பிறகு பதவியேற்பார்.  அவர் மே 13, 2025 அன்று ஓய்வு பெறும் வரை பதவியில் இருப்பார். தற்போது, தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக்காலமானது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்டதாக உள்ளது. 


தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான செயல்முறை என்ன?


மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி (உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பல வருட அனுபவத்தின் அடிப்படையில்) இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) பொறுப்பேற்கிறார். இந்த செயல்முறையானது ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறைக் குறிப்பாணையில்’ (Memorandum of Procedure (MoP) என குறிப்பிடப்படுகிறது) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதியின் நியமனத்தின் அடிப்படை : இந்திய தலைமை நீதிபதி நியமனம் அந்த பதவிக்கு தகுதியானவராக கருதப்படுபவரை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிக்கு பரிந்துரை வழங்கப்பட வேண்டும் என்று நடைமுறைக் குறிப்பாணை (Memorandum of Procedure (MoP)) கூறுகிறது. 1999-ஆம் ஆண்டில் நடைமுறைக் குறிப்பாணை (MoP) நிறுவப்படுவதற்கு முன்பே, தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மரபுப்படி உயர் பதவிக்கு உயர்த்தப்படுவது வழக்கம். 


நியமன செயல்முறை எவ்வாறு தொடங்குகிறது : நடைமுறைக் குறிப்பாணையின் (MoP) படி, ஒன்றிய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் ஒரு பரிந்துரையை குறிப்பிடும்போது நியமனத்திற்கான செயல்முறை தொடங்குகிறது. இந்த பரிந்துரை, அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதியிடம் (CJI) பரிந்துரை கோரப்படுகிறது. மரபுப்படி, தற்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெறும் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு செயல்முறை தொடங்க "பொருத்தமான நேரம்" (appropriate time) ஆகும். தலைமை நீதிபதி சந்திரசூட் தனது பரிந்துரை கடிதத்தை அக்டோபர் 17-ம் தேதி அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். 


ஒன்றிய அரசின் ஒப்புதல் : நடைமுறைக் குறிப்பாணையில் (MoP) குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள செயல்முறையின் படி, இந்திய தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையை வழங்குகிறார். இதன்பிறகு, மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர், பிரதமரிடம் பரிந்துரை செய்வார். அதன்பின்னர், பிரதமர் நியமனம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.


அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதால், ஒரு தலைமை நீதிபதியின் பதவிக்காலம் அவர்களின் முன்னோடி நீதிபதியின் ஓய்வு பெறும் வயதைப் பொறுத்தது.  எதிர்காலத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளின் பட்டியல் இங்கே குறிப்பிட்டுள்ளது. 

 

மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியை தலைமை நீதிபதியாக நியமிக்கும் மரபிலிருந்து எப்போதாவது விலகல் ஏற்பட்டுள்ளதா?


ஆம். இந்த மரபு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நிராகரிக்கப்பட்டது. அவரது அரசாங்கம் 1973-ஆம் ஆண்டில் நீதிபதி ஏ.என்.ரேவை இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. மேலும், மூன்று மூத்த நீதிபதிகளான ஜே.எம்.ஷெலட் (J.M. Shelat), கே.எஸ்.ஹெக்டே (K.S. Hegde) மற்றும் ஏ.என்.குரோவர் (A.N. Grover) ஆகியோரை மாற்றியது.


நீதிபதி ரே (Justice Ray) தனது மூத்த சக நீதிபதிகளைக் காட்டிலும் இந்திரா அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததாகக் கருதப்பட்டார். "அடிப்படை கட்டமைப்பு" கோட்பாட்டை (basic structure doctrine) வகுத்த கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை அறிவித்த மறுநாள் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வின் 7-6 தீர்ப்பில் நீதிபதி ரே சிறுபான்மையினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜனவரி 1977-ஆம் ஆண்டில், நீதிபதி எச்.ஆர்.கண்ணாவை நீக்கிவிட்டு, நீதிபதி எம்.எச்.பெக்கை தலைமை நீதிபதியாக நியமித்தது இந்திரா காந்தி அரசு நியமத்திற்கான மரபை மீண்டும் புறக்கணித்தது.  ஏ.டி.எம் ஜபல்பூர் vs ஷிவ் காந்த் சுக்லா (ADM Jabalpur vs. Shiv Kant Shukla) உத்தரவில் நீதிபதி கன்னா மட்டுமே கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இதில் நீதிபதிகள் ஏ.என்.ரே, பி என் பகவதி, ஒய்.வி.சந்திரசூட் மற்றும் எம்.எச்.பெக் ஆகியோர் அடங்கிய பெரும்பான்மை அமர்வில் தேசிய அவசரகால காலத்தில் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன என்பதை அரசாங்கத்துடன் ஒப்புக்கொண்டனர். 


நடைமுறைக் குறிப்பாணை (MoP) எப்படி உருவானது? 


முதல் நீதிபதிகள் வழக்கு (1981), இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993) மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு (1998) ஆகியவற்றில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக்கான செயல்முறையை நிறுவியது. இந்த செயல்முறை உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம், அதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.


1999-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நடைமுறைக் குறிப்பாணை (MoP), நியமன செயல்முறை மற்றும் மையமாகச் செயல்படுகிறது. இது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.  நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம் அமைப்பு ஒரு நீதித்துறை கண்டுபிடிப்பு என்பதால் இந்த மையம் முக்கியமானதாக உள்ளது. இது சட்டத்தால் நிறுவப்படவில்லை அல்லது அரசியலமைப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை.


2015-ம் ஆண்டில்,  உச்சநீதிமன்றம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உருவாக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்தது.  இந்த சட்டத்திருத்தம் நீதிபதிகளை பரிந்துரை செய்வதில் ஒன்றிய அரசுக்கு அதிக செல்வாக்கு செலுத்த அனுமதித்திருக்கும். இந்த தீர்ப்புக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் நடைமுறைக் குறிப்பாணை (MoP) மறுபரிசீலனை செய்யப்பட்டது. இருப்பினும், அது இன்னும் இறுதி செய்யப்படுவதாக கடந்த ஆண்டு வரை அரசாங்கம் கூறியுள்ளது.




Original article:

Share:

லடாக் நிர்வாகத்திற்கு அட்டவணை 6-க்கான கோரிக்கைகள் -ரோஷினி யாதவ்

 லடாக் நிர்வாகத்தின் எதிர்கால விவாதங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைப் பெற்ற பின்னர், லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 


லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஏன் போராட்டம் நடத்தினர்? 6-வது அட்டவணை என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன? லடாக்கை 6-வது அட்டவணையில் சேர்க்க முடியுமா? சட்டப்பிரிவு 371-ன் கீழ் சில மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து என்ன?


அக்டோபர் 21 அன்று, லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தின் எதிர்கால விவாதங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைப் பெற்ற பின்னர், தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதில், வாங்சுக் மற்றும் பிற ஆர்வலர்கள் லடாக்கின் நிர்வாகத்தில் கூடுதல் தன்னாட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள், குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்கவும், மேலும் இப்பகுதியில் ஒரு சட்டமன்றத்தை நிறுவவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


1. ஆகஸ்ட் 2019-ம் ஆண்டில், சட்டப்பிரிவு 370-வது பிரிவை நீக்கி, ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (J & K Reorganisation Act), 2019 இயற்றப்பட்ட பின்னர் லடாக் நிர்வாகத்தில் தன்னாட்சிக்கான கோரிக்கை மற்றும் இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 6-ல் சேர்ப்பது முக்கியத்துவம் பெற்றது. 


2. ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் (J & K Reorganisation Act), 2019-ம் ஆண்டில் லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக அங்கீகரித்தது. இருப்பினும், லடாக் "சட்டமன்றம் இல்லாத" யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, புது டெல்லி மற்றும் பாண்டிச்சேரியைப் போலவே ஜம்மு & காஷ்மீரும் தனிப்பட்ட முறையில் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது.


3. ஆறாவது அட்டவணை இந்திய அரசியலமைப்பின் 244-வது பிரிவின் ஒரு பகுதியாகும். இது பழங்குடியின நிர்வாகப் பகுதிகளை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த பிராந்தியங்கள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (Autonomous District Councils (ADC)) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (Autonomous Regional Councils (ARC)) என்று அழைக்கப்படுகின்றன.


4. ஆறாவது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள் உள்ளன. 


5. ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்படுவது லடாக் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (ARC) உருவாக்க அனுமதிக்கும். இந்த கவுன்சில்கள் பழங்குடியின பகுதிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாகும். அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக சட்டங்களை உருவாக்க முடியும். இதில் வன மேலாண்மை, விவசாயம், கிராமம் மற்றும் நகர நிர்வாகம், பரம்பரை, திருமணம், விவாகரத்து மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் போன்ற பகுதிகள் அடங்கும்.


6. இந்த அட்டவணை ARC கள் மற்றும் ADC களுக்கு நிலவரி வசூலிக்கவும், வரி விதிக்கவும், கடன் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும், தங்கள் பகுதிகளில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான உரிமங்கள் அல்லது குத்தகைகளில் இருந்து ராயல்டிகளை சேகரிக்கவும், பள்ளிகள், சந்தைகள் மற்றும் சாலைகள் போன்ற பொது வசதிகளை நிறுவவும் அதிகாரம் அளிக்கிறது. 


7. தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களின் (ADC) உட்கூறுகள் : இந்த கவுன்சில்கள் ஐந்து வருட காலத்துடன் 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். அசாமில் உள்ள போடோலாந்து பிராந்திய கவுன்சில் 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும் மற்றும் 39 தொடர்பான பிரச்சனைக்கான சட்டங்களை இயற்றும் உரிமை உள்ளது. தற்போது, வடகிழக்கில் 10 தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) உள்ளன. இதில், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்றும், திரிபுராவில் ஒன்றும் உள்ளது. 


8. 2019-ம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Tribes) லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது: 


(i) லடாக்கில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். 97 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.


(ii) இவை நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்கள் இப்பகுதியில் நிலம் வாங்குவதையோ அல்லது கையகப்படுத்துவதையோ தடுக்கிறது.


(iii) இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 


9. குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே எந்த பிராந்தியமும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மணிப்பூரில் கூட, தன்னாட்சி கவுன்சில்கள் ஆறாவது அட்டவணையின் ஒரு பகுதியாக இல்லை. இதேபோல், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் முற்றிலும் பழங்குடி மக்களைக் கொண்டிருந்தாலும், அவர்களும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறப்பு அந்தஸ்து மற்றும் சட்டப்பிரிவு 371 


1. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 371 மற்றும் 371-A முதல் J வரையிலான பிரிவுகள் சில மாநிலங்களுக்கு "சிறப்பு அந்தஸ்துகளை" (special provisions) வழங்குகின்றன. இந்த விதிகள் குறிப்பிட்ட மத மற்றும் சமூக குழுக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கின்றன. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் தலையீடு இல்லாமல் இந்த குழுக்களை தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கவும் அவர்கள் அனுமதிக்கிறார்கள்.


2. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் (சட்டப்பிரிவு-371) : "விதர்பா (Vidarbha), மராத்வாடா (Marathwada) மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகள்" மற்றும் குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா (Saurashtra) மற்றும் கட்ச் (Kutch) ஆகியவற்றிற்கு "தனித்தனி மேம்பாட்டு வாரியங்களை" (separate development boards) நிறுவ ஆளுநருக்கு "சிறப்பு அந்தஸ்து" உள்ளது. இது, மாநில அரசின் கீழ், மேற்கூறிய பகுதிகளில் வளர்ச்சிக்காக சமமான நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கு போதுமான வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கு சமமான அந்தஸ்தை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். 


இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு-371 படி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அரசின் செலவினங்களின் தேவையை மதிப்பிடுவதற்காக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு "வளர்ச்சி வாரியங்கள்" உருவாக்கப்பட வேண்டும். புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால், கூடுதல் சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


3. நாகாலாந்து (பிரிவு 371A) : இந்த விதி 1962-ஆம் ஆண்டில் 13-வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நாகா மதம் (Naga religion) அல்லது சமூக நடைமுறைகள் (social practices) குறித்து நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க முடியாது என்று கூறுகிறது. இது நாகா மரபுச் சட்டம் மற்றும் நடைமுறைகள் மற்றும் நாகா வழக்கத்தைப் பின்பற்றும் குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்திற்கும் பொருந்தும்.  கூடுதலாக, இது நிலம் மற்றும் அதன் வளங்களின் உரிமை மற்றும் பரிமாற்றத்தை உள்ளடக்கியது. 


மேலும், துயன்சாங் மாவட்டத்திற்கான 35 உறுப்பினர்களைக் கொண்ட பிராந்திய கவுன்சிலுக்கான ஏற்பாடு உள்ளது. இது சட்டமன்றத்தில் துயென்சாங் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. துயன்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் துயன்சாங் விவகாரங்களுக்கான அமைச்சராக உள்ளார். துன்சாங் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆளுநரே இறுதிக் கருத்தைக் கூறுவார்.


4. அஸ்ஸாம் (பிரிவு 371 பி, 22 வது திருத்தச் சட்டம், 1969) : மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் குழுவை அமைப்பதற்கும், இதன் செயல்பாடுகளை வரையறுப்பதற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் உருவாக்கலாம். 


5. மணிப்பூர் (பிரிவு 371 சி, 27 வது திருத்தச் சட்டம், 1971) : இந்திய குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றத்தில் ஒரு குழுவை அமைக்கலாம். இந்தக் குழுவில் மணிப்பூர் மலைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பர். இந்தக் குழு சரியாகச் செயல்படுவதை உறுதி செய்ய, குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு "சிறப்புப் பொறுப்பையும்" வழங்குவார்.  ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் அவர்கள், குடியரசுத் தலைவருக்கு இது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.


6. ஆந்திரா மற்றும் தெலுங்கானா (பிரிவு 371D, 32 வது திருத்தச் சட்டம், 1973; ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 ஆல் மாற்றப்பட்டது) : மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பொது வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருப்பதை குடியரசுத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு வகையான சிவில் சர்வீஸ் பதவிகள் அல்லது சிவில் பதவிகளை உள்ளூர் பணியாளர்களாக ஒழுங்கமைக்க குடியரசுத் தலைவர் மாநில அரசைக் கேட்கலாம். இந்தப் பதவிகளை ஒதுக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. கூடுதலாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு இதே போன்ற அதிகாரங்கள் உள்ளன.


சட்டப்பிரிவு 371-E ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது.  இருப்பினும், அரசியலமைப்பின் இந்தப் பிரிவில் உள்ள மற்ற விதிகளைப் போல இது ஒரு "சிறப்பு அந்தஸ்து" என்று கருதப்படவில்லை.


7. சிக்கிம் (பிரிவு 371 F, 36 வது திருத்தச் சட்டம், 1975) : சட்டப் பிரிவு 371-F மூலம், "மக்களின் பல்வேறு பிரிவுகளின் உரிமைகள் மற்றும் நலன்களை" பாதுகாப்பதற்காக, சிக்கிம் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு வழங்க சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


8. மிசோரம் (பிரிவு 371-G, 53 வது திருத்தச் சட்டம், 1986) : மிசோரம் மாநில கலாச்சாரம் தொடர்பான


  • மிசோரத்தின் மத மற்றும் சமூக நடைமுறைகள் (religious and social practices of the Mizos)

  • மிசோ வழக்கமான சட்டம் மற்றும் நடைமுறைகள் (Mizo customary law and procedure) 

  • மிசோ மரபுச் சட்டத்தின் அடிப்படையில் சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் (civil and criminal justice based on Mizo) ஆகியவை அடங்கும்.

  • இது நிலத்தின் உரிமை மற்றும் பரிமாற்றம்.


போன்ற அம்சங்களில் நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க முடியாது என்று இந்த விதி கூறுகிறது. எனினும், சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் இந்தச் சட்டங்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கலாம்.


9. அருணாச்சலப் பிரதேசம் (பிரிவு 371 H, 55-வது திருத்தச் சட்டம், 1986) : சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநருக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது. மேலும் "அமைச்சர் குழுவைக் கலந்தாலோசித்த பிறகு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அவர் தனது தனிப்பட்ட முடிவைப் பயன்படுத்துவார்". ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ஆளுநர் "தனது தனிப்பட்ட முடிவின்படி செயல்பட வேண்டும். ஆளுநரின் முடிவே இறுதியானது" மற்றும் "கேள்விக்கு அழைக்கப்படக்கூடாது... ”


10. கோவா (பிரிவு 371-I, 56 வது திருத்தச் சட்டம், 1987) : இது "கோவா மாநிலத்தின் சட்டமன்றத்தில் 30-க்கும் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்" என்று கூறுகிறது. 


10. கர்நாடகா (பிரிவு 371 J, 98 வது திருத்தச் சட்டம், 2012) : ஹைதராபாத்-கர்நாடகா பகுதிக்கு தனி மேம்பாட்டு வாரியம் (separate development board) அமைக்கப்படும். இந்த வாரியம் தனது செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் சட்டசபைக்கு தெரிவிக்கப்படும். இப்பகுதியின் மேம்பாட்டிற்க்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இப்பகுதி மக்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் சம வாய்ப்புகள் மற்றும் வசதிகள் அமைய வலியுறுத்தும்.


ஹைதராபாத்-கர்நாடகா பகுதியில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் இருப்பிடத்தின் அடிப்படையில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு, வேலைவாய்ப்புகளில் "விகிதாச்சார அடிப்படையில்" ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படலாம். 




Original article:

Share: