மது கட்டுப்பாடு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு . . .

 இந்திய உச்ச நீதிமன்றம் மது கட்டுப்பாட்டில் கூட்டாட்சி சமநிலையை வைத்திருக்கிறது.


மாநிலப் பட்டியலில் உள்ள “போதையூட்டும் மதுபானங்கள்” (‘intoxicating liquors’) என்பது தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மதுபானங்களையும் என்பதையும் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பிரிக்கும் கூட்டாட்சிக் கொள்கையை இந்த தீர்ப்பு  வலுப்படுத்துகிறது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் உள்ள  ஏழாவது அட்டவணையில், பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் “போதையூட்டும் மதுபானங்கள்” மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்மதுபானங்கள் ஆகிய இரண்டிற்கும் இவை பொருந்தும் என்று தெளிவுபடுத்தியது. மதுபானங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும். 


1951-ஆம் ஆண்டின் தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் (Development and Regulation) Act (IDRA)) மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும்  மதுபானங்களை நீக்கியதா என்பதே இங்கு முக்கிய பிரச்சனையாகும். எட்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 'போதை தரும் மதுபானங்கள் தொழில் தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் கீழ் வராது என்று முடிவு செய்தது. மது அருந்தும் ஒட்டுமொத்த தொழிற்சாலையையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுபான சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் வைத்திருக்க வேண்டும் மற்றும்  ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்குவது அதிகார பகிர்வை சீர்குலைக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது கருத்தை தெரிவித்தார்.


கூட்டாட்சி கொள்கைகளை ஆதரிக்கும் சமீபத்திய மாதங்களில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது முக்கியமான தீர்ப்பு இதுவாகும். ஜூலை மாதம், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, கனிம உரிமைகள் மற்றும் கனிம வளம் கொண்ட நிலங்களுக்கு (tax mineral rights and land with minerals) மாநிலங்கள் வரி விதிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மாநிலங்களின் அதிகாரம் பாராளுமன்றத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தது. கனிம உரிமை வழக்கைப் போலவே, '“போதையூட்டும் மதுபானங்கள்” வழக்கிலும் நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட கருத்தை முன்வைத்தார்.  


“போதையூட்டும் மதுபானங்கள்” என்ற சொல் மனிதர்கள் உட்கொள்ள கூடிய மதுபானத்தை மதுபானத்தை மட்டுமே  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தார். குடிக்கத் தகுதியற்ற அல்லது தொழில்துறை மதுபானங்களை சேர்க்கும் நோக்கம் இல்லை என்று குறிப்பிடுகிறார். அவரது பார்வையில், பாராளுமன்றம் 'நொதித்தல் தொழில்' (‘fermentation industries’) துறையைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், மனித நுகர்வுக்கு மதுவை விலக்குகிறது. இதன் காரணமாக, தொழிற்சாலைகளில் மதுவை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மாநிலங்கள் இழந்துவிட்டன. நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்துறை மது முக்கியமானது என்பதை நீதிபதி நாகரத்னா எடுத்துரைத்தார். இது இரசாயனத் தொழிலில் முக்கிய மூலப்பொருளாகவும், பெட்ரோலுடன் கலந்த திரவ எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட தொழிலாக, உட்கொள்ளக்கூடிய மதுபானத்தை தவிர்த்து, "நொதித்தல் தொழில்களை" ஒன்றிய அரசு வகைப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை நவீன முறையில் விளக்க முயற்சிக்கும்போது, அதன் அடிப்படை விதிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி நாகரத்னா எச்சரித்தார்.




Original article:

Share: