இரயில்வேயைப் பொறுத்தவரை, மூடுபனியால் ஏற்படும் இடையூறுகள் (Fog-induced disruptions) பழக்கமாகிவிட்டன. இந்த காலகட்டத்தில், விமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் அதன் தாக்கத்தை ஓரளவுக்கு தணிக்கின்றன.
ஒவ்வொரு குளிர்காலத்திலும், விடுமுறை காலத்திற்கு பயணத்தைத் தொடங்கும் இந்தியப் பயணிகள் ஒரு வழக்கமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவை, மூடுபனி (fog) ஆகும். இந்த நேரத்தில், குறிப்பாக வட இந்தியாவில், குறைந்த பார்வைநிலை காரணமாக, விமான நிறுவனங்கள் மற்றும் இந்திய இரயில்வே இரண்டும் அடிக்கடி தாமதங்கள் மற்றும் ரத்து போன்ற செயல்பாட்டு இடையூறுகளால் பாதிக்கப்படுகின்றன.
தாமதங்கள் குறித்து கேட்டபோது, இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில், “இரயில்வே உட்பட அனைத்து போக்குவரத்து துறைகளிலும் மூடுபனியானது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதைத் தணிக்க நாங்கள் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இருப்பினும், மூடுபனியின் போது பாதுகாப்பு குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லோகோ பைலட்டுகளுக்கு (loco pilots) மூடுபனி பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுகின்றன. இதனுடன், மூடுபனி தொடர்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.
விமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கான சிறப்பு செயல்பாட்டு முறைகள் மூடுபனியின் தாக்கத்தை ஓரளவுக்கு தணியச் செய்துள்ளன. ஆனால், விமானப் பயணிகளின் எண்ணிக்கையின் கூடுதல், நாடு முழுவதும் ஏற்படும் செயல்பாடுகளில் டொமினோ விளைவைக் (domino effect) குறைக்க விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் எப்போதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இரயில்வேயைப் பொறுத்தவரை, மூடுபனியால் ஏற்படும் இடையூறுகள் பொதுவானவை. இதனால் கடுமையான வலையமைப்பில் சிக்கல், நீண்ட தாமதங்கள் மற்றும் டஜன் கணக்கான ரத்துகள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு துறைகளும் மூடுபனி இடையூறுகளை எவ்வாறு கையாள்கின்றன என்பது குறித்த விளக்கங்கள் இங்கே :
முதலாவதாக, வட இந்தியாவின் மூடுபனி ஏன் இவ்வளவு தொடர்ந்து இருக்கிறது?
வட இந்தியாவில் விமானம் மற்றும் இரயில் செயல்பாடுகளை அதிகம் பாதிக்கும் மூடுபனியின் வகை கதிர்வீச்சு மூடுபனி (radiation fog) ஆகும். இது தெளிவான குளிர்கால இரவுகளில் உருவாகிறது. இதனால், நிலப்பரப்பானது விரைவாக குளிர்ந்து, ஈரப்பதம் ஒடுங்கி, தேங்கி நிற்கும் காற்று மூடுபனியை சிக்க வைக்கும்போது உருவாகிறது. இந்த வகை மூடுபனி அடிக்கடி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பாதையில் மிகக் குறைந்த பார்வைத் தெளிவற்ற நிலையை உருவாக்குகிறது.
புகைமூட்டம் மூடுபனியின் தீவிரத்தை அதிகரிக்கிறது. இது அதை அடர்த்தியாக்கி நிலப்பரப்பின் மேற்பரப்பில் நெருக்கமாக இழுக்கிறது. சூரிய ஒளி தோன்றியவுடன் தூய மூடுபனி பொதுவாக விரைவாக மறைந்துவிடும். இது மூடுபனியைவிட, குறைந்த பார்வைத் தெளிவற்ற நிலைகளை புகைமூட்டம் நீண்ட காலம் நீடிக்கச் செய்கிறது. இந்திய விமான நிறுவனங்களின் விமானிகள் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், அதிக மாசு அளவுகள், பல ஆண்டுகளாக, இந்தியாவின் வடக்குப் பகுதிகளில், குறிப்பாக டெல்லியில் மூடுபனி தொடர்பான இடையூறுகளை அதிகப்படுத்தியுள்ளன.
குறைந்த பார்வைத் தெளிவற்ற நிலையில் விமானங்களும், விமான நிலையங்களும் எவ்வாறு இயங்குகின்றன?
மூடுபனி காரணமாக பார்வை தெரிவுநிலை வெகுவாகக் குறையும்போது, விமான நிலையங்கள் குறைந்த பார்வை தெரிவுநிலை நடைமுறைகளின் (Low Visibility Procedures (LVP)) கீழ் செயல்படத் தொடங்குகின்றன. இந்த நடைமுறைகள் குறைந்த பார்வை தெரிவுநிலை டேக்-ஆஃப் (Low Visibility Take-Off (LVTO)) மற்றும் கருவி தரையிறங்கும் அமைப்பு (Instrument Landing System (ILS)) CAT IIIB-ஐப் பயன்படுத்தி தரையிறக்கங்கள் போன்ற சிறப்பு செயல்பாடுகளை உள்ளடக்கியது.
CAT IIIB : CAT IIIB (வகை IIIB) என்பது விமானங்களை மிகக் குறைந்த தெரிவுநிலையில் தரையிறங்க அனுமதிக்கும் ஒரு உயர்-துல்லிய கருவி தரையிறங்கும் அமைப்பு (ILS)ஆகும், குறிப்பாக 50 முதல் 200 மீட்டர் வரையிலான ரன்வே விஷுவல் ரேஞ்ச் (RVR) மற்றும் 50 அடிக்குக் கீழே (அல்லது DH இல்லை) ஒரு முடிவு உயரம் (DH) கொண்டது . |
கருவி தரையிறங்கும் அமைப்பு (ILS) என்பது விமான நிலையங்களில் தரைபரப்பு அடிப்படையிலான ரேடியோ வழிசெலுத்தல் அமைப்பாகும் (radio navigation system). இது தரையிறங்கும் விமானங்களுக்கு துல்லியமான கிடைமட்ட மற்றும் செங்குத்து வழிகாட்டுதலை வழங்குகிறது.
மேலும், கருவி தரையிறங்கும் அமைப்பு (ILS) வகையைச் சேர்ந்த CAT IIIB, மிகக் குறைந்த தெரிவுநிலை நிலைகளில் விமானம் தரையிறங்குவதற்கான துல்லியமான அணுகுமுறைகளுக்கான மிக உயர்ந்த நிலைகளில் ஒன்றாகும். இது 50 மீட்டர் வரை பார்வை தெரிவுநிலை குறைவாக இருக்கும்போதுகூட விமானங்களை தரையிறங்க அனுமதிக்கிறது.
அனைத்து இந்திய விமான நிலையங்களும் இந்த திறன்களைக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய மைய விமான நிலையமான டெல்லி, சில விதிவிலக்குகளில் ஒன்றாகும். மிகக் குறைந்த பார்வை தெரிவுநிலை செயல்பாடுகளுக்கு வசதிகள் இல்லாத விமான நிலையங்களில், அடர்த்தியான மூடுபனியால் பாதிக்கப்பட்டால் விமான தாமதங்கள் அல்லது ரத்துசெய்தல் மட்டுமே சாத்தியமான வழிகளில் ஒன்றாகும். விமான நிலையங்களைத் தவிர, விமானங்களும் அவற்றின் பணியாளர்களும் CAT IIIB செயல்பாடுகளுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்று சான்றிதழ் பெற வேண்டும்.
மூடுபனியால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க, குறைந்த பார்வை தெரிவுநிலை நடவடிக்கைகளுக்குப் பயிற்சிபெற்ற போதுமான எண்ணிக்கையிலான விமானிகள் மூடுபனியால் பாதிக்கப்படும், குறைந்த பார்வை தெரிவுநிலை நடைமுறை (LVP) பொருத்தப்பட்ட விமான நிலையங்களுக்கு விமானங்களை இயக்கவும், திரும்பவும் கிடைப்பதை உறுதிசெய்ய விமான நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. பயிற்சி பெற்ற பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கூடுதலாக, விமான நிறுவனங்கள் CAT IIIB சான்றிதழ் பெற்ற விமானங்களை அத்தகைய விமான நிலையங்களில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றன.இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA)), டிசம்பர் 10 முதல் பிப்ரவரி 10 வரை குளிர்கால பருவத்திற்கான அதிகாரப்பூர்வ மூடுபனி காலகட்டமாக அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் நிகழ்நேர வானிலைத் தரவைக் (real-time weather data) கண்காணித்து, சிறந்த மூடுபனி முன்னறிவிப்புக்காக முன்கணிப்பு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
விமானங்களுக்கு ஏன் சில மூடுபனி இடையூறுகள் தவிர்க்க முடியாதவை?
குறைந்த பார்வை தெரிவுநிலை நடைமுறைகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளைத் தடுக்க உதவும் என்றாலும், அவை அதன் செயல்பாடுகளை மூடுபனியிலிருந்து முழுமையாக பாதுகாக்க முடியாது. குறைந்த பார்வை தெரிவுநிலை நடைமுறையின் (LVP) கீழ், பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக விமான இயக்கங்களுக்கு இடையிலான தூரம் மற்றும் நேரம் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் போன்ற குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது.
இது புறப்பாடு மற்றும் வருகையில் தாமதத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் இது விமான நிலையத்தில் நெரிசலையும் அதிகரிக்கிறது. விமானங்களின் தரைவழி இயக்கம், டாக்ஸிவேக்களிலிருந்து ஓடுபாதைகளுக்கும் (taxiways to runways), மற்றும் மீண்டும் வருவதற்கும் இடையேயான இயக்கம் அடங்கும். மிகவும் மோசமான பார்வை தெரிவுநிலையால் கணிசமாகக் குறைகிறது. இது விமான அட்டவணையில் தாமதங்களுக்கும் விமான நிலையத்தில் நெரிசலுக்கும் வழிவகுக்கிறது.
உதாரணமாக, டெல்லி விமான நிலையம் வழக்கமான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளின்போது ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 100 விமானங்களை இயக்கும் திறன் கொண்டது. ஆனால், குறைந்த பார்வை தெரிவுநிலை நடவடிக்கைகளின்போது திறன் 65 ஆகக் குறைகிறது. மூடுபனி தொடர்பான ஒவ்வொரு மணி நேர இடையூறும், டெல்லி விமான நிலையம் மீள்வதற்கு சுமார் இரண்டு-மூன்று மணிநேரம் ஆகும்.
கூடுதலாக, CAT IIIB தரையிறக்கங்கள் தொடரும், ஆனால் குறைந்த பார்வைத் திறனில் விமானம் புறப்படுவதற்குத் தேவையான பார்வைத் திறன் இல்லாத சூழ்நிலைகள் ஏற்படலாம். ஏனெனில், டெல்லி போன்ற விமான நிலையத்தில் CAT IIIB பொருத்தப்பட்ட விமானம் புறப்படுவதற்குத் தேவையான குறைந்தபட்ச தெரிவுநிலை 75 மீட்டர் ஆகும். CAT IIIB விமானம் தரையிறங்குவதற்கு 50 மீட்டர் ஆகும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில், விமானங்கள் தொடர்ந்து தரையிறங்கிக்கொண்டே இருக்கும், ஆனால் புறப்படத் திட்டமிடப்பட்ட விமானங்கள் புறப்பட முடியாது. இதன் விளைவாக, விமான நிலையத்தில் உள்ள நிறுத்துமிடங்கள் விரைவான் நெரிசலை ஏற்படுத்தும். இந்த வகையான நெரிசல் விமானங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் வழிவகுக்கும்.
மேலும், பார்வை தெரிவுநிலை 50 மீட்டருக்கும் குறைவாகக் குறைந்தால், பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு CAT IIIB கூட போதுமானதாக இருக்காது. அந்தச் சூழ்நிலையில், பார்வைத்திறன் மேம்படும் வரை தரையிறக்கங்கள் நிறுத்தப்பட வேண்டியிருக்கலாம்.
மூடுபனியால் பாதிக்கப்படும் விமான நிலையங்களுக்கு, விமானங்கள் திருப்பி விடப்பட வேண்டியிருந்தால், தெளிவான வானிலைக்கு ஏற்ற மாற்று விமான நிலையங்களை விமான நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. உதாரணமாக, டெல்லி விமான நிலையத்திலிருந்து திருப்பி விடப்படும் விமானத்திற்கு, தெளிவான வானிலைக்கு ஏற்ற மாற்று அகமதாபாத் விமான நிலையமாக இருக்கும். ஏனெனில், பிந்தைய இடத்தில் மூடுபனி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும். இருப்பினும், திசைதிருப்புவது குறித்த இறுதி முடிவு முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுவதில்லை. அருகிலுள்ள விமான நிலையங்களில் நிகழ்நேர வானிலை மற்றும் பார்வைத் தெளிவைச் சரிபார்த்தபிறகு அது எடுக்கப்படுகிறது. தங்கள் பொறியியல் ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ள மாற்று விமான நிலையங்களை மட்டுமே விமான நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றன.
விமான நிறுவன வலையமைப்புகளுக்கான சவால் : தொடர் விளைவு (cascading impact)
கடுமையான மூடுபனியால் ஏற்படும் இடையூறுகள் மூடுபனியால் பாதிக்கப்பட்ட விமான நிலையத்தின் செயல்பாடுகளை மட்டும் பாதிக்காது, மாறாக அது விமான நிறுவனத்தின் முழு வலையமைப்பு முழுவதும் ஒரு தொடர் விளைவை உருவாக்க முடியும். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாவின் முக்கிய மையமான டெல்லி போன்ற ஒரு பெரிய விமான நிலையத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது இது நிகழ வாய்ப்புள்ளது.
விமான நிறுவன வலையமைப்புகளும் தினசரி செயல்பாடுகளும் மிகவும் சிக்கலானவை. ஒரே விமானம், அதன் பணியாளர் குழுவுடன், ஒரேநாளில் வெவ்வேறு வழித்தடங்களில் பல விமானங்களை இயக்குகிறது. மேலும், ஒரு விமானம் தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அதன் விளைவு அதோடு நின்றுவிடுவதில்லை. அந்த விமானத்திற்கும் பணியாளர் குழுவிற்கும் தாமதங்களும் ரத்துசெய்தல்களும் நாள் முழுவதும் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்.
இதுபோன்ற இடையூறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், பெரிய மற்றும் அடர்த்தியான வலையமைப்புகள் மற்றும் அதிக விமானம் மற்றும் பணியாளர் பயன்பாட்டு நிலைகளைக் கொண்ட விமான நிறுவனங்களே அதிகம் பாதிக்கப்படும். இந்த அம்சங்கள் செயல்பாட்டுத் திறனைக் காட்டுகின்றன. இருப்பினும், அவை குறுகிய அறிவிப்பில் மாற்று விமானங்களையும் பணியாளர்களையும் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதை மிகவும் கடினமாக்குகின்றன.
இந்த தொடர் பாதிப்பிற்கு மற்றொரு காரணம் பணியாளர் ஓய்வு மற்றும் பணி நேர விதிகள் ஆகும். விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation (FDTL)) வழிகாட்டுதல்களில் பணி நேரம் மற்றும் விமான நேர வரம்புகள் உள்ளன. இதன் பொருள், விமானிகள் மற்றும் பணியாளர்கள் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பணி நேரத்தை கடந்தால், அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் அவர்கள் ஒரு விமானத்தைக்கூட இயக்கவில்லை என்றாலும் இது பொருந்தும்.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமானப் பணியாளர்களின் பணி நேரம் மற்றும் ஓய்வு நேர விதிகளை அமல்படுத்துவதில் மிகவும் கடுமையாகச் செயல்படுகிறது. ஏனெனில், சோர்வு என்பது விமானச் செயல்பாடுகளில் ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும்.
விமான நிலையங்களில் கடுமையான நெரிசல் ஏற்படும்போது, அதிக நேரம் வீணாகிறது. விமானங்கள் புறப்படுவதற்காகக் காத்திருக்கும்போது இது நிகழ்கிறது. விமானங்கள் தரையிறங்கிய பிறகு விமான நிறுத்தத்தைத் தேடும்போதும் இது நிகழ்கிறது. இந்தத் தாமதங்கள் குறைந்த பார்வைத் திறன் காரணமாக முந்தைய தாமதங்களுக்கு கூடுதலாக, பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்பட்டால் விமானப் பணி நேர வரம்பு (FDTL) விதிமுறைகள் காரணமாக பணியாளர் பற்றாக்குறை விமான நிறுவனங்களை மிக விரைவாகப் பாதிக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பற்றாக்குறையால் விரைவாகப் பாதிக்கப்படுகின்றன. மேலும், விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க பணியாளர்களைத் தேடுவதில் சிரமப்படுகின்றன.
இதனால்தான் விமான நிறுவனங்கள் மூடுபனி நேரத்தில் அதிக பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க முயற்சி செய்கின்றன. ஆனால், அதற்கும் வரம்புகள் உள்ளன. விமானப் பணி நேர வரம்பு (FDTL) இணக்கத்தை உறுதி செய்வதற்காக, மூடுபனி இடையூறுகளின்போது விமான நிறுவனங்கள் மாறும் குழு நிர்வாகத்தையும் தொடங்குகின்றன.
இப்போது, பனிமூட்டத்தின்போது இரயில்வே எப்படி இரயில் இயக்கங்களைக் கையாள்கிறது?
வட இந்தியாவில் இந்திய இரயில்வேக்கு குளிர்காலம் எப்போதும் ஒரு சவாலாகவே உள்ளது. பல சந்தர்ப்பங்களில் இரயில்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகலாம். இந்த சிக்கல்களைச் சமாளிக்க, இரயில்களில் மூடுபனி பாதுகாப்பு சாதனங்களை (fog safety devices (FSD)) வழங்குதல் மற்றும் தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பைப் (Automatic Train Protection System) பயன்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இரயில்வே துறை எடுத்து வருகிறது.
மூடுபனி பாதுகாப்பு சாதனம் (fog safety device) அல்லது மூடுபனி கடப்பு சாதனம் (fog pass device) என்பது பாதிக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள விமானிகளுக்கு வழங்கப்படும் ஜிபிஎஸ் அடிப்படையிலான, கையடக்க அமைப்பாகும் (GPS-based handheld system). புவி எல்லைக்குட்பட்டு அமைக்கப்பட்ட வரம்பிற்குள் ஏதேனும் கண்டறியப்பட்டால், இது ஒளி-ஒலி எச்சரிக்கை (audio and visual alarm) மூலம் இரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கிறது. நிலையங்கள், எச்சரிக்கை பலகைகள், சிக்னல்கள் மற்றும் தண்டவாள கடப்பு தடுப்புகள் (level-crossing gates) போன்ற பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது.
டிசம்பர் 2025-ல், இரயில்வே அமைச்சர் மாநிலங்களவில் மொத்தம் 25,939 மூடுபனி பாதுகாப்பு சாதனங்கள் இந்த பருவத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்த மூடுபனி பாதுகாப்பு சாதனங்களில் (FSD) கிட்டத்தட்ட 23% ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இது அதிக மூடுபனி பாதிப்புள்ள பகுதிகளில் அதிக இரயில்களை இயக்குகிறது.
இது தவிர, வடக்கு இரயில்வே மற்றும் வட மத்திய இரயில்வேயில் மாற்றியமைக்கப்பட்ட தானியங்கி சமிக்ஞை அமைப்பு (automatic signalling system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூடுபனியின்போது இரண்டு நிலையங்களுக்கு இடையில் இரண்டு இரயில்களாகக் கட்டுப்படுத்துகிறது. இரயில்வே மூடுபனி காலங்களில் பார்வைத் தெரிவுத்திறனை மேம்படுத்த சமிக்ஞை கருவிகளில் ஒளிரும் பட்டைகளையும் சேர்த்துள்ளது.
இரயில்வே தனது லட்சிய தானியங்கி இரயில் பாதுகாப்பு (Automatic Train Protection (ATP)) அமைப்பான கவாச் (Kavach) வலையமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு, லோகோமோட்டிவ் ஓட்டுநர்கள் (locomotive pilots) அடர்ந்த மூடுபனியின் போதும் தங்கள் இரயிலின் வேகத்தை பராமரிக்க முடியும் என்பதை உறுதி செய்யும். லோகோமோட்டிவ் உள்ளே நிறுவப்பட்ட முகப்பலகையில் (dashboard) தொடர்புடைய தகவல்கள் ஒளிரும் என்பதால், அவர்கள் சிக்னலுக்காக கேபினுக்கு வெளியேகூட பார்க்க வேண்டியதில்லை.
ஒரு ஓட்டுநர் அவ்வாறு செய்யத் தவறினால், கவாச் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பின் மேம்பட்ட பதிப்பான கவாச்-4.0, இரயில்வே வலையமைப்பில் பெரிய அளவில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கவாச்-4.0 மொத்தம் 738 வழித்தட கி.மீ.க்கு இயக்கப்பட்டுள்ளது. இதில் 633 வழித்தட கிலோமீட்டர்களை உள்ளடக்கிய டெல்லி-மும்பை வழித்தடத்தின் பல்வல்-மதுரா-நாக்டா பிரிவும் அடங்கும். மேலும், 105 வழித்தட கிலோமீட்டர்களை உள்ளடக்கிய டெல்லி-ஹவுரா வழித்தடத்தின் ஹவுரா-பர்த்வான் பிரிவும் இதில் அடங்கும். இந்த இரண்டு அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட வழித்தடங்களின் மீதமுள்ள பிரிவுகளில் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.