ஒரு இந்திய கடற்படைக் கப்பல் எவ்வாறு பண்டைய கடல்சார் மரபுகளை வெளிப்படுத்துகிறது? -மனஸ் ஸ்ரீவஸ்தவா

கப்பற்படையின் தைக்கப்பட்ட கப்பல் (stitched ship), பண்டைய கடல் வணிகப் பாதைகளை மீட்டெடுத்து ஓமனுக்குப் பயணம் மேற்கொள்ளும்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய கடற்படையின் தைக்கப்பட்ட கப்பலான இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) கௌண்டின்யா (Indian Naval Sailing Vessel (INSV) Kaundinya) , டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி கார்வாரில் இருந்து போர்பந்தருக்குப் புறப்பட்டது. போர்பந்தரில் இருந்து, டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி ஓமனுக்கு ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


2. இந்தியாவின் கடற்பயண மரபைக் கௌரவிக்கும் வகையில், இந்தக் கடற்பயணம் பண்டைய கடல் வணிகப் பாதைகளை மீட்டெடுக்கிறது.


3. அந்தக் கப்பல், அஜந்தா குகை ஓவியங்களில் காட்டப்பட்டுள்ள ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 


4. இதில் உலோக ஆணிகளுக்குப் பதிலாக பாரம்பரிய தையல் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் தேங்காய் நார், கயிறு, மரஇணைப்பு, இயற்கை பிசின்கள் மற்றும் பருத்திப் பாய்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 


5. இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) கௌண்டின்யா (Indian Naval Sailing Vessel (INSV) Kaundinya) மே மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பயணத்திற்கு முன்பு சோதனைகளுக்காக அது கார்வாரில் நிறுத்தப்பட்டிருந்தது.


6. இந்தத் திட்டம் இந்தியக் கடற்படை, கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹோடி புத்தாக்க (Hodi Innovations) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.


7. இந்திய கடற்படையைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழு இந்தக் கப்பலை இயக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  இவர்கள் பாரம்பரிய கைவினைஞர்களிடம் கயிறு பொருத்துதல், தச்சு வேலை போன்ற சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.


8. இந்தப் பாய்மரங்களில் கடம்ப வம்சத்தின் சின்னமான கண்டபெருண்டாவும் (இருதலைப் பறவை), சூரியனும் இடம்பெற்றுள்ளன.


9. வில்லில் சிம்ம யாளி உள்ளது, மற்றும் தளத்தில் ஹரப்பா பாணியிலான கல் நங்கூரம் உள்ளது.


10. இந்தக் கப்பலுக்குப் புகழ்பெற்ற இந்திய மாலுமியான கௌண்டின்யாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கௌண்டின்யா தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணித்தார் என்று ஒரு தொன்மக்கதை ஒன்று கூறப்படுகிறது. கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த பிறகு, அவர் ராணி சோமாவை மணந்து பூனன் (Funan) சாம்ராஜ்யத்தை நிறுவினார் என்றும் முதன்முதலில் தைக்கப்பட்ட கப்பல் (stitched ship) யோசனையை முன்வைத்தவருமான கௌண்டின்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்தக் கப்பலுக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் தெரிவித்தார்.


"தென்கிழக்கு ஆசியாவைப் பார்வையிட கடல்களைக் கடந்து உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய முதல் இந்திய மாலுமி கௌண்டின்யா ஆவார்," என்று சன்யால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


11. ஐரோப்பியர்களின் காலனித்துவம் வந்தபிறகு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயன்பாட்டில் இருந்த பாய்மரக் கப்பல்கள் (dhows) படிப்படியாக குறைந்துவிட்டன. பீரங்கிகளின் பின்னுதைப்பை (recoil) தாங்கும் திறன் அவற்றுக்கு மிகக்குறைவாக இருந்ததால், பீரங்கிகளைப் பொருத்திப் போரிட அவை பொருத்தமற்றவையாக ஆகிவிட்டன.


12. இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) கௌண்டின்யா இந்தியாவின் பழங்கால கடல்சார் மரபுகளை வெளிப்படுத்துகிறது. இது வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் வரலாற்றுப் பங்கையும், நவீன கடல்சார் இராஜதந்திரத்தையும்  குறிப்பிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.


13.  பண்டைய காலத்தில் இருந்தே தைக்கப்பட்ட பாய்மரக்  கப்பல்கள் கடலைக் கடக்கப் பயன்பாட்டில் இருந்தன என்பது நமக்குத் தெரியும் என்றும் குஜராத்தில் இருந்து ஓமன், பஹ்ரைன், மெசோபடோமியா வரை இந்தியர்கள் வணிகத்திற்காகப் பயணம் செய்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆகவே, இப்படிப்பட்ட கப்பல்களை எப்படி செய்வது என்பது நமக்குத் தெரியும் என்று சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.


“பிரச்சனை என்னவென்றால், ஹரப்பா காலத்தில் கடலுக்குச் செல்லும் கப்பல்கள் எப்படி இருந்தன என்பதற்கு துல்லியமான பதிவுகள் எதுவும் இல்லை. பண்டைய கப்பலின் மிகத் தெளிவான முதல் சித்திரம் உண்மையில் அஜந்தா ஓவியம்தான், அது ஒரு வகையான வடிவமைப்பாகத் தொடங்கி அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டது. பிறகு யுக்திகல்பதரு போன்ற சில வரலாற்று நூல்கள் இருந்தன. இந்தியப் பெருங்கடலுக்கு வந்த வேறு நாடுகளைச் சேர்ந்த பண்டைய பயணிகளின் சாட்சியங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம், அவர்கள் இந்த தைக்கப்பட்ட கப்பல்களைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்,” என்றார் அவர்.


14. யுக்திகல்பதரு (Yuktikalpataru) என்பது போஜராஜாவால் தொகுக்கப்பட்ட சமஸ்கிருத நூலாகும். இது கப்பல் கட்டும் முறை, பல்வேறு வகை கப்பல்கள், அவற்றின் அளவுகள், பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.


இந்தியப் பெருங்கடல் கப்பல் சாகர் (Indian Ocean Ship (IOS சாகர்)) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான இந்தியாவின் ஒரு முன்முயற்சியாகும். இதன்கீழ், இந்தியக் கடற்படைக் கப்பலான இந்தியக் கடற்படை கப்பல் சுனைனா (INS Sunayna), இந்தியா மற்றும் கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், செஷல்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் பணியாளர்களுடன் தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுகிறது.


ஆப்பிரிக்க நாடுகளுடன் நடத்தப்படும் ஒரு பெரிய பலதரப்பு கடல் பயிற்சிக்கு “ஆப்பிரிக்கா இந்தியா முக்கிய கடல்சார் ஈடுபாடு” (Africa India Key Maritime Engagement) என்று பெயர். இது சுருக்கமாக “AIKEYME” என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் சமஸ்கிருதத்தில் “ஒற்றுமை” ஆகும். இந்தப் பயிற்சி, பல்வேறு கடற்படைகளும் கடல்சார் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் முதல் பதிப்பை இந்தியக் கடற்படையும் தான்சானியா மக்கள் பாதுகாப்புப் படையும் (Tanzania Peoples’ Defence Force (TPDF)) இணைந்து நடத்தின.

Original link:

How is an Indian Navy ship showcasing ancient maritime traditions?


Share:

MGNREGA மறுசீரமைப்பு விளக்கம்: VB-G RAM G மசோதாவின் முக்கிய அம்சங்கள், முந்தைய திட்டத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பன குறித்து… -ஹரிகிஷன் சர்மா

முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவில் உள்ள முக்கிய மாற்றங்கள்: மாநிலங்களிடம் குறைந்த நிதி இருக்கும் நேரத்தில், அவற்றின் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும், இது 125 நாள் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பயனடைவதற்கான கால அளவையும் குறைக்கிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) மறுசீரமைப்பு விளக்கம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2005ஆம் ஆண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஊரக பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வலையாக (social security net) நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை திறம்பட மாற்றியமைக்க முன்மொழியும் ஒரு மசோதாவை அரசு கொண்டு வரப் பார்க்கிறது.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) மசோதா அல்லது VB-G RAM G மசோதா, ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலை நாட்களை ஆண்டுக்கு 100-லிருந்து 125-ஆக உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தில் ஒன்றிய அரசு பெரும்பாலான செலவை ஏற்றது போல் இல்லாமல், இந்த புதிய மசோதா நிதியை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இது மாநிலங்கள் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும்.


மேலும், முதன்முறையாக, இந்த மசோதா, அதிகபட்ச விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் இந்தத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் இருப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை என்று ஒன்றிய அரசால் கூறப்படுகிறது.


தற்போதைய ஊரகப் பகுதிகளில் உள்ள வேலை உறுதியளிப்பு கட்டமைப்பில் VB-G RAM G மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்கள் இங்கே:


உத்தரவாதமான கூலி வேலை நாட்கள் (Guaranteed wage employment days)


முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 5(1), திறமையற்ற உடல் உழைப்பைச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு ஊரகப் பகுதிகளில்  வசித்துவரும் குடும்பத்திற்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க முன்மொழிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளித்தாலும், கிடைக்கும் வேலைகளைப் பல தொழிலாளர்கள் பகிர்ந்துகொள்வதால், மிகச் சில குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்களுக்கு வேலை கிடைக்கிறது.


உதாரணமாக, 2024-25ஆம் ஆண்டில், ஒரு வீட்டிற்கு சராசரியாக வேலை நாட்கள் 50 மட்டுமே வேலை நாட்கள் கிடைத்தன.


உண்மையில், கடந்த நிதியாண்டில் 100 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாள் வேலை உச்சவரம்பை எட்டியுள்ளன. மொத்தம் 8.61 கோடி வேலை அட்டைகள் உள்ளன. இது வேலை செய்துவரும் 12.16 கோடி தொழிலாளர்களை உள்ளடக்கியுள்ளது..


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின் பிரிவு 3(1) ஒரு நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு "நூறு நாட்களுக்குக் குறையாத" வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆனால், ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பிரத்யேகமாகக் கோரினால் தவிர, 100 நாட்களுக்கு மேலான வேலைவாய்ப்புக்கான தரவுகளைப் பதிவு செய்ய அந்தத் திட்டத்தின் மென்பொருள் அனுமதிக்காததால், இது நடைமுறையில் ஒரு புதிய உச்சவரம்பாக மாறிவிட்டது.


இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தாண்டி கூடுதலாக 50 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை அரசாங்கம் அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும், 2016-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தத் தனியார் சொத்தும் அக்குடும்பங்களுக்கு இல்லாத பட்சத்தில், 150 நாட்கள் வேலை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது வேறு ஏதேனும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் ஊரக பகுதிகளில், 100 நாள் வரம்பிற்கு மேலாக, ஒரு வருடத்தில் கூடுதலாக 50 நாட்களுக்கு திறமையற்ற உடல் உழைப்பு வேலையை அரசாங்கத்தால் வழங்க முடியும்.


நிதிச் சுமையை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும்.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்களில் ஒன்று, நிதிப் பகிர்வு முறை (fund-sharing pattern) ஆகும். MGNREGA போல் இல்லாமல், ஒன்றிய அரசு முழு ஊதிய மசோதாவையும் செலுத்துகிறது. VB-G RAM G திட்டத்தின்கீழ், ஊதிய சுமையை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.


ஏற்கனவே பல மாநிலங்களிடம் செலவிடுவதற்குப் போதிய நிதி இல்லாத நிலையில், ஒன்றிய அரசு இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறையை முன்மொழிந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு வரிகளை அதிக அளவில் பயன்படுத்தியதன் காரணமாக மாநிலங்களின் வருவாய்  குறைந்துள்ளது. ஏற்கெனவே மாநிலங்களின் நிதிநிலை நல்ல நிலையில் இல்லாத நிலையில், பல மாநிலங்கள் பணப் பரிமாற்றம் (cash transfers,) போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும், சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல்கள் உள்ளிட்ட அதிகரித்து வரும் கடன் மற்றும் கட்டாயப் பொறுப்புகளையும் எதிர்கொண்டுள்ளன.


கடந்த நித்தியாண்டின் செலவினத் தரவுகளின் அடிப்படையில், இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு ஆண்டும் ரூ.30,000 கோடி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2024-25-ஆம் ஆண்டு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. இந்தத் தொகையில் ஒன்றிய அரசு ரூ.85,640 கோடியை வழங்கியதுடன், ரூ.73,337 கோடி மதிப்பிலான முழு ஊதியச் செலவையும் செலுத்தியது.


புதிய மசோதாவின் பிரிவு 22(1) இதை "ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டம்" என்று கூறினாலும், பிரிவு 22(2) கூறுகிறது: இந்தச் சட்டத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்) ஒன்றிய அரசு 90 சதவீதமும், மாநிலங்கள் 10 சதவீதமும் நிதி வழங்கும். சட்டமன்றங்களைக் கொண்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநிலங்கள் 40 சதவீதமும் நிதி வழங்கும்.


சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு முழு செலவையும் ஏற்கும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின்கீழ், ஒன்றிய  அரசு செலுத்துகிறது.


திறமையற்ற உடலுழைப்பு வேலைக்கான முழுமையான ஊதிய மசோதா.


திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் உட்பட (அட்டவணை II-இன்படி) இந்தத் திட்டம் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% வரை உள்ளடக்கியது.

நிர்வாகச் செலவுகளுக்காக மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் திட்டத்தின் மொத்த செலவில், திட்ட அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், மத்திய கவுன்சிலின் நிர்வாகச் செலவுகள், அட்டவணை II-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்.


மாநில அரசுகள் இதற்கு பணம் செலுத்துகின்றன:


வேலையின்மை உதவித்தொகைக்கான செலவு


அட்டவணை II-ன்படி, இந்தத் திட்டத்தின் மீதமுள்ள 25% பொருள் செலவுகள், திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் தனித்தனியாக வழங்கப்படும்.


மாநில அரசுகளுக்கான நிர்வாகச் செலவுகள்.


‘இயல்பான ஒதுக்கீடு’: மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை


புதிய “நெறிமுறை ஒதுக்கீடு” சூத்திரம், வளங்களை ஒதுக்கும் முறையை முற்றிலும் மேலிருந்து கீழான செயல்முறையாக (top-down process) மாற்றுகிறது. இந்த மசோதா இதை, “ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு” என்று வரையறுக்கிறது.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 4(5)-ன் படி: ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசாங்கம் தான் வகுக்கும் விதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும்.


பிரிவு 4(6)-ன் படி, ஒரு மாநிலம் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால், ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, அந்த கூடுதல் செலவை மாநிலமே ஏற்க வேண்டும்.


நெறிமுறை அடிப்படையிலான (Normative allocation) நிதி ஒதுக்கீடு என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் (MGNREGA) தற்போது செயல்படும் விதத்திலிருந்து வேறுபட்டது. தற்போது, ​​மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசுக்கு ஒரு வருடாந்திர பணித் திட்டத்தையும் ஒரு 'தொழிலாளர் வரவுசெலவுத் திட்டத்தையும்' சமர்ப்பிக்கின்றன. மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டம், மக்களுக்கு எவ்வளவு திறனற்ற வேலை தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மாநிலம் அதைத் தொகுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. பின்னர், ஒன்றிய அரசு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.


இந்த விதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின்கீழ் அதிக தேவை உள்ள மாநிலங்களைப் பாதிக்கக்கூடும். 2024-25ஆம் ஆண்டில், 5.78 கோடி குடும்பங்கள் (மேற்கு வங்காளத்தைத் தவிர்த்து) ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்திற்கான தேவை அதிகமாக இருந்தது.


விவசாயப் பருவத்தின்போது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் இடைநிறுத்தம்.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவானது, விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேலைவாய்ப்புத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.


"இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் எதுவாக இருந்தாலும், விவசாயப் பருவங்களின் உச்சத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை எளிதாக்கும் வகையில், துணைப்பிரிவு (2)-ன் கீழ் அறிவிக்கப்படும் உச்சத்தில் இருக்கும் பருவங்களில், இந்தச் சட்டத்தின்கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது" என்று வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மசோதாவின் பிரிவு 6(1) கூறுகிறது.


மாநிலங்கள் இந்த 60 நாள் காலக்கெடுவை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வேளாண்-காலநிலை மண்டலங்கள் (agro-climatic zones), உள்ளூர் விவசாய நடவடிக்கைகளின் முறைகள் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில், வெவ்வேறு பகுதிகளுக்கு அவை தனித்தனி அறிவிப்புகளை வெளியிடலாம்.


இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பது, விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. ஆனால், இது தொழிலாளர்கள் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய காலத்தையும் குறைக்கிறது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுவதால், இந்த விதி முக்கியத்துவம் வாய்ந்தது.


உதாரணமாக, காரீஃப் பருவத்தில் நெல் விதைப்பு காலம் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். அறுவடை செப்டம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.


முக்கிய ரபி பயிரான கோதுமை விதைப்பு அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை தொடர்கிறது. அறுவடை பிப்ரவரி முதல் ஜூன் வரை நடைபெறும்.


உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டங்கள்


இந்த மசோதாவின்படி, புதிய திட்டத்தின்கீழ் உள்ள அனைத்துத் திட்டங்களும் கிராம அளவில் தொடங்கப்பட்டு, பின்னர் வட்டார, மாவட்ட மற்றும் மாநில நிலைகளில் ஒருங்கிணைக்கப்படும். பின்னர் இந்தத் திட்டம், நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தக்கூடிய திட்டங்களை உள்ளடக்கிய 'வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்பு அடுக்கு' (Viksit Bharat National Rural Infrastructure Stack) எனப்படும் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படும்.


வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்புத் திட்டம் நான்கு கருப்பொருள் சார்ந்த மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: அவை


(அ) ​​நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பு


(ஆ) அடிப்படை உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்


(இ) வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பு


(ஈ) தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் ஆகும்.


இந்தத் திட்டங்கள் e PM Gati Shakti தேசிய முதன்மைத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.


வேலை அட்டைகளுக்குப் பதிலாக கிராமின் வேலைவாய்ப்பு (Gramin Rozgar) உத்தரவாத அட்டை


ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் திறமையற்ற உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு வயதுவந்த உறுப்பினருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்க வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா வழிவகை செய்கிறது. புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக, அத்தகைய நபர்கள் தாங்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயதுகள் மற்றும் முகவரிகளைச் சமர்ப்பிக்கலாம்.


மேலும், தனிமையில் உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொத்தடிமைத் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்கும். இந்த அட்டைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவை ஒரு தனித்துவமான நிறத்தைக் கொண்டிருக்கும்.


ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் தற்போதைய வேலை அட்டைகளைப் போல் இல்லாமல், கிராமின் வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சரிபார்ப்பின் பின்னர் அதைப் புதுப்பிக்கலாம்.


அதிக அபராதம்


புதிய மசோதாவின் பிரிவு 27, விதிகளை மீறினால் அதிக அபராதம் விதிக்க வழங்குகிறது. அபராதம் முன்பு ரூ.1,000-ஆக இருந்தது; இப்போது அது ரூ.10,000-ஆக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.


ஆண்டு பட்ஜெட்


இந்த ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) அரசாங்கம் ரூ.86,000 கோடியை ஒதுக்கியுள்ளது. புதிய திட்டத்திற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மொத்த ஆண்டுச் செலவை ₹1,51,282 கோடி என மதிப்பிட்டுள்ளது. மாநிலங்களின் பங்கு உட்பட இந்த திட்டத்திற்காக  ஒன்றிய அரசு ரூ.95,692 கோடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

original link:

MGNREGA Revamp Explained: Key features of VB-G RAM G Bill, how its different from earlier scheme.


Share:

காப்பீடு மட்டுமல்ல, இந்தியர்களுக்கு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பும் தேவை. -ரமா வி பாரு, விகாஷ் ஆர் கேஷ்ரி

பொதுச் செலவினங்களுக்கான (public spending) முக்கியத்துவம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். கிழக்கு ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சேவைகளை வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய வலுவான பொது அமைப்புகள் உள்ளன.


டிசம்பர் 12 உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) தினமாகும். இந்த ஆண்டின் கருப்பொருள், "தாங்க முடியாத சுகாதாரச் செலவுகள்? நாம் இதனால் நோயுற்று விட்டோம்!" (Unaffordable health costs? We’re sick of it!) என்பதாகும். இது சுகாதாரப் பராமரிப்பின் அதிகரித்துவரும் நிதிச் சுமையால் ஏற்படும் பெருகிவரும் விரக்தியை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினத்தைக் கடைப்பிடிக்கும்போது, ​​உலகளாவிய சுகாதாரக் காப்பீடு மற்றும் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது முக்கியம். உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்பது பரந்த நோக்கமுடையது. இது நோய்க்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், தடுப்பு, மேம்பாடு, குணப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நோய்த்தணிப்பு சேவைகள் உட்பட முழுமையான முதன்மை சுகாதாரப் பராமரிப்புக்கான நியாயமான அணுகலையும் உறுதி செய்கிறது.


உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பது, பல சர்வதேச உடன்படிக்கைகளில் எடுத்துரைக்கப்பட்டு, 1978-ம் ஆண்டு அல்மா-அட்டா பிரகடனத்தில் (Alma-Ata Declaration) உலக சுகாதார அமைப்பால் (World Health Organisation (WHO)) வலுப்படுத்தப்பட்ட, ஆரோக்கியத்திற்கான உலகளாவிய மனித உரிமையில் வேரூன்றியுள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் 2010-ம் ஆண்டு உலக சுகாதார அறிக்கை, நிதி சீர்திருத்தம் மற்றும் இடர் பாதுகாப்பு ஆகியவற்றை உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு வழியாக வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு குறித்த தீர்மானம் இந்த செயல்திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. பின்னர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நிலையான வளர்ச்சி இலக்குகளில் இணைக்கப்பட்டது.


நடைமுறையில், இந்தியா உட்பட பல நாடுகளில் சமீபத்திய சீர்திருத்தங்கள், முதன்மைப் பராமரிப்பு அணுகுமுறையை பலவீனப்படுத்தி, பொது சுகாதாரக் காப்பீடு மூலம் நிதிப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளன. இந்தத் திட்டங்கள் மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகளை ஈடுசெய்வதில் கவனம் செலுத்துகின்றன. மேலும், அவை வெவ்வேறு நோய்களுக்கான தொகுப்புகளையும் வரையறுக்கின்றன. நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. இத்தகைய செலவினங்கள், தொகுப்புகளால் ஈடுசெய்யப்படாத அல்லது போதுமான அளவு காப்பீடு செய்யப்படாமலோ அல்லது சேவை வழங்குநர்களால் காப்பீட்டு விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாலோ ஏற்படுகின்றன.


மாறாக, நன்கு நிதியளிக்கப்பட்ட பொது சுகாதார அமைப்புக்குள், வலுவான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்கள் முன்னுரிமையாகச் செயல்படும் வகையில் பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும்போது, ​​அதன் விளைவுகள் சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. பல கிழக்கு ஆசிய நாடுகள் காப்பீட்டு அணுகுமுறை மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டன. ஆனால், காலப்போக்கில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பையும் வலுப்படுத்தியுள்ளன. வயதான மக்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் இத்தகைய மாற்றங்களை அவசியமாக்கியுள்ளன. சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இப்போது ஏறக்குறைய அனைவருக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளது. இருப்பினும், இது அரசாங்கத்திற்கு மிகவும் செலவு மிக்கதாக இருந்துள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனா செலவுகளைக் கட்டுப்படுத்தவும், தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் பின்தொடர் பராமரிப்பில் கவனம் செலுத்தி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பை வலுப்படுத்துவதில் முதலீடு செய்யவும் முடிவு செய்தது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விரிவான மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


பொதுச் செலவினங்களுக்கான அர்ப்பணிப்பு என்பது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு நிலைகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். கிழக்கு ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சேவைகளை வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்புடன் வலுவான பொது அமைப்புகள் உள்ளன. ஒரு வலுவான பொதுத் துறை, தரம் மற்றும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் துறையைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரணாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த நாடுகளில், கொள்கைகளைத் தீர்மானிப்பதில் தனியார் துறைக்கு உள்ள செல்வாக்கு ஒரு தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.


இந்தியா சுதந்திரத்திற்குச் சற்று முன்பு போரே குழுவால் (Bhore Committee) பரிந்துரைக்கப்பட்டபடி, அனைவருக்கும் சுகாதார வசதி வழங்குவதில் இந்தியாவுக்கு ஒரு நீண்டகால அர்ப்பணிப்பு உள்ளது. ஒரு வலுவான ஆரம்ப சுகாதார அமைப்பு உருவாகும்வரை பொதுக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படக்கூடாது என்று அக்குழு அறிவுறுத்தியது. இருப்பினும், ஆரம்ப சுகாதாரத்திற்குத் தொடர்ச்சியாகப் போதிய நிதி ஒதுக்கப்படாததால், பொதுத் துறையின் சேவைகள் பலவீனமடைந்துள்ளன. இது தனியார் துறையைச் சார்ந்திருப்பதை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்புத் தரவுகள் (National Sample Survey data), ஏழைகள் பெருகிவரும் விலை உயர்ந்த தனியார் சுகாதார சேவைகளைச் சார்ந்து இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இது குடும்பக் கடன்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.


தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (National Rural Health Mission(NRHM), இப்போது National Health Mission (NHM)) போன்ற முன்முயற்சிகள் இருந்தபோதிலும், சுகாதார அமைப்பில் பலவீனங்கள் இன்னும் உள்ளன. சில மாநிலங்கள் பொதுசுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சுகாதார சேவைகளுக்கான அணுகலில் உள்ள சமமற்ற நிலைகளையும், சிகிச்சையின் அதிகரித்துவரும் செலவுகளையும் குறைக்க முயன்றன. 2008-ல், ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (Rashtriya Swasthya Bima Yojana) காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முன்முயற்சிகளின் மூலம், இந்தத் திட்டங்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை ஒரு நீடித்த கவனமாக மாற்ற உதவியது.


கோவிட் பெருந்தொற்று, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், பல நாடுகளில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்பதிலிருந்து அனைவருக்கும் சுகாதார சேவை என்ற நிலைக்கு மாற வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனத்தை ஈர்த்தது. பல சுகாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தின் சமூகத் தீர்மானிக்கும் காரணிகளில் பொது முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இந்தியா இந்த வழியைப் பின்பற்றுவது அவசியமாகிறது.


பாரு, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுப் பள்ளியின் பேராசிரியர் ஆவார். கேஷ்ரி, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுப் பள்ளியின் இணைப் பேராசிரியராகவும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள UNSW-யின் துணை மூத்த விரிவுரையாளராகவும் உள்ளார்.


Original link:

Not just insurance, Indians need universal healthcare


Share:

பயிர்க்கழிவுகளை எரிப்பதாலோ அல்லது பட்டாசுகளாலோ அல்ல: டெல்லி அதன் சொந்த உமிழ்வுகளால் மூச்சுத்திணறுகிறது -குஃப்ரான் பெய்க்

காற்று அசையாமல் இருக்கும்போது, ​​தேக்கநிலை ஏற்படுகிறது. காற்றோட்டம் தடைபடுகிறது. மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைப்புக்கு எந்தப் பாதுகாப்பு நிலையும் இல்லாமல் போய்விடுகிறது. வானிலை மோசமடையும்போது, ​​தப்பித்துக்கொள்ள வேறு வழியே இருப்பதில்லை. இருந்தபோதிலும், நமது உமிழ்வுகளைக் குறைகூறாமல், நாம் தொடர்ந்து வானிலையையே குறை கூறுகிறோம்.


டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படவில்லை, பண்டிகைகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. மேலும், குளிர்காலக் குளிரும் இன்னும் உச்சத்தை அடையவில்லை. இருந்தபோதிலும், டிசம்பர் 13 முதல் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) கடுமையான நிலைக்கு உயர்ந்ததுள்ளது. இது ஏன் நடந்தது?, இது நமக்கு என்ன கற்பிக்கிறது?


இந்த காற்றின் தரக் குறியீடு விரைவில் 'மிகவும் மோசமான' நிலைக்குக் குறையக்கூடும். இருப்பினும், அது மீண்டும் உயரும். இன்னும் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காவது இது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். PM 2.5 துகள்களின் அளவு மணிக்கு 380 µg/m³ (AQI 500-க்கு சமம்) என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மென்பொருள் கோளாறுகள் மற்றும் பரவலாக விவாதிக்கப்பட்ட பிற வரம்புகள் இருந்தபோதிலும், காற்றின் தரக் குறியீடு கிட்டத்தட்ட 500-ஐ எட்டியுள்ளது. இது ஒரு கடுமையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் ஒரு தீவிரமான எச்சரிக்கையை வழங்குகிறது.


இத்தகைய தீவிர மாசுபாடு, பகல் அல்லது இரவு நேரத்தைப் பொருட்படுத்தாமல், மாசுபாடு நீண்டகாலத்திற்கு, பொதுவாக 24-48 மணிநேரம் அல்லது அதற்கு மேல், உச்சக்கட்ட நிலைகளில் நீடிக்கும்போது ஏற்படுகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதன் பொருள், புதிய காற்று உள்ளே வரவில்லை, மற்றும் மாசடைந்த காற்று வெளியே செல்லவில்லை. சுமார் 500-700 மீட்டர் தீவிரம் கொண்ட ஒரு மேலோட்டமான வெப்பநிலை தலைகீழ் அடுக்குக் காரணமாக செங்குத்து பரவலையும் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, நிலையான மூலங்களிலிருந்து வரும் உமிழ்வுகள், கிட்டத்தட்ட காற்று இல்லாததால், பரவாமல், அவை வெளியிடப்பட்ட இடங்களிலேயே தங்கி, உள்ளூர்மயமாக்கப்பட்ட மாசுபாட்டு மையங்களை உருவாக்குகின்றன. ஆனால், நகரமெங்கும் பரவியுள்ள மாறும் மாசுபாட்டு மூலங்கள்தான் டெல்லியின் காற்றின் தரத்தில் ஏற்படும் இந்தத் திடீர் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன.


அறிவியல்பூர்வமாக, இந்த கடுமையான காற்றின் தரக் குறியீட்டு நிகழ்வு நகரத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது டெல்லியின் சொந்த உமிழ்வுகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வுகள், டெல்லி தனது காற்றின் தரக் குறியீட்டைக் கடுமையான நிலைக்குக் கீழே வைத்திருக்க தினசரி வளிமண்டல நீர்த்தலை எவ்வளவு நம்பியுள்ளது என்பதையும், இந்தச் சார்பு உண்மையான குற்றவாளியான உள்ளூர் மூல உமிழ்வுகளைப் பற்றி எவ்வாறு ஒரு மாயையை உருவாக்குகிறது என்பதையும் வெளிப்படுத்துகின்றன. மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், காலநிலை மாற்றம் காரணமாக இத்தகைய தேக்கநிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்று அசையாமல் இருக்கும்போது, ​​தேக்கநிலை ஏற்படுகிறது, காற்றோட்டம் தடைபடுகிறது. மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அமைப்புக்கு எந்தப் பாதுகாப்பு அரணும் இல்லாமல் போய்விடுகிறது. வானிலை செயலற்று இருக்கும்போது, ​​மறைந்துகொள்ள எங்கும் இடமில்லை. இருப்பினும், நமது உமிழ்வுகளுக்குப் பதிலாக நாம் தொடர்ந்து வானிலையையே குறை கூறுகிறோம்.


வளிமண்டலம் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் திறனை தற்காலிகமாக இழக்கும்போது, ஒரு சில நாட்களுக்கு மட்டும்கூட டெல்லியின் உமிழ்வுகளின் உண்மையான தீவிரம் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு பிரம்மாண்டமான மற்றும் நாமே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடியாக வெளிப்படுகிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் PM2.5 துகள்களின் உமிழ்வில் கிட்டத்தட்ட பாதி போக்குவரத்துத் துறையிலிருந்து (43 சதவீதம்) வருகிறது. மேலும், கழிவுகளை எரிப்பதிலிருந்து 15 சதவீதமும், குடியிருப்பு மற்றும் தொழில்துறை உமிழ்வுகளிலிருந்து தலா 13 சதவீதமும், மீண்டும் காற்றில் கலக்கும் தூசியிலிருந்து 8 சதவீதம் மட்டுமே வருகிறது. எனவே, கொள்கை வகுப்பாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய முன்னுரிமையான பகுதிகளைத்  தெளிவாகக் காட்டுகிறது.


கணக்கீடு எளிமையானது. இதுபோன்ற தீவிரமான காற்று தேக்க நிலைகளில், டெல்லி தனது உள்ளூர் உமிழ்வுகளை 50 சதவீதம் குறைத்தால், காற்று மாசுபாடு அளவு தோராயமாக 50 சதவீதம் குறையும். வானிலை மாறும்போது, ​​அதே கருத்து பொருந்தும். ஆனால், காற்று மண்டலம் முழுவதும் உமிழ்வுக் குறைப்புகள் செய்யப்பட வேண்டும். மாசுபாட்டைக் திறம்படக் குறைக்க, புகைக்கோபுரங்கள், மேக விதைப்பு, தண்ணீர் தெளித்தல் அல்லது காற்று சுத்திகரிப்பான்கள் போன்ற குறுகியகால வெளித்தோற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், மூல உமிழ்வுகள் மீது ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான, நீண்டகால நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.


கட்டுரையாளர், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், ஐஐஎஸ்சி வளாகத்தின் தலைவர் பேராசிரியர் மற்றும் SAFAR-இன் நிறுவனத் திட்ட இயக்குநர் ஆவார்.

Original link: 

It’s not stubble burning or firecrackers: Delhi is choking on its own emissions


Share:

புதிய நிலநடுக்க வரைபடம் இந்தியாவின் நிலநடுக்க ஆபத்தை எவ்வாறு குறைக்க முயல்கிறது? -அபினவ் ராய்

இந்திய தர நிர்ணய அமைப்பால் (Bureau of Indian Standards (BIS)) திருத்தப்பட்ட நிலநடுக்க வடிவமைப்பு நெறிமுறையின் (revised Earthquake Design Code) ஒரு பகுதியாக, இந்தியா புதுப்பிக்கப்பட்ட நிலநடுக்க மண்டல வரைபடத்தை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தத் திருத்தப்பட்ட வரைபடம் பல பத்தாண்டுகளில் நாட்டின் நிலநடுக்க அபாய மதிப்பீட்டில் (seismic hazard assessment) ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது? இது தற்போதுள்ள பாதிப்புகளை எவ்வாறு குறைக்கிறது?


இமயமலையின் பரந்த புவித்தட்டுப் பாதிப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டு, புதுப்பிக்கப்பட்ட நிலநடுக்க மண்டல வரைபடத்தில் அந்த முழுப் பகுதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மிக அதிக அபாயப் பகுதியான மண்டலம் VI-ன் (highest-risk Zone VI) கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பால் (BIS) திருத்தப்பட்ட நிலநடுக்க வடிவமைப்பு நெறிமுறை-2025 (IS 1893)-ன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட இந்த வரைபடம், இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதத்தை (நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதத்தைக் கொண்ட பகுதி) மிதமான முதல் அதிக நிலநடுக்க அபாய மண்டலங்களின் கீழ் வைத்துள்ளது.


பல பத்தாண்டுகளில் இந்தியாவின் நிலநடுக்க அபாய மதிப்பீட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் இந்தத் திருத்தப்பட்ட வரைபடம், குறிப்பாக இமயமலை மாநிலங்களில் நகரக் கட்டுமானம் மற்றும் திட்டமிடலின் எதிர்காலத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரைபடம், நிகழ்தகவு நிலநடுக்க அபாய மதிப்பீட்டு (Probabilistic Seismic Hazard Assessment (PSHA)) முறையைப் பயன்படுத்தி உலகளாவிய அறிவியல் தரநிலைகளின்படி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எந்தவொரு பகுதிக்கும் நில அதிர்வின் நிகழ்தகவு மற்றும் தீவிரம் ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.


திருத்தப்பட்ட வரைபடத்தில் உள்ள முக்கிய மாற்றங்களை நாம் ஆராய்வோம். மேலும், இது இந்தியாவின் நிலநடுக்க பாதிப்புக்குள்ளாகும் தன்மையை இந்த வரைபடம் எவ்வாறு கையாள முயல்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன் நோக்கம் ஒட்டுமொத்த அபாயத்தைக் குறைப்பதாகும்.

புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ள முக்கிய மாற்றங்கள்


முன்னதாக, இந்தியாவின் நிலப்பரப்பில் 59 சதவீதம் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டு, கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் தீவிரத்தின் அடிப்படையில் இந்தப் பகுதி நான்கு நிலநடுக்க மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை,


  1. மண்டலம்-II (குறைவு)


  1. மண்டலம்-III (மிதமானது)


  1. மண்டலம்-IV (அதிகம்)


  1. மண்டலம்-V (மிக அதிகம்)


மண்டலம்-V ஆனது, மிகவும் அதிக நிலநடுக்க செயல்பாடு கொண்ட பகுதியாக இருந்தது. அதேசமயம், மண்டலம்-II மிகக் குறைந்த செயல்பாடு கொண்டதாக இருந்தது. புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தில், மிக உயர்ந்த நிலநடுக்க அபாயப் பிரிவில் மண்டலம் VI என்ற மற்றொரு மண்டலம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் இப்போது மிதமான முதல் அதிக நிலநடுக்க அபாய மண்டலங்களின் கீழ் வருகிறது.


முன்னர், மண்டலங்கள்-IV மற்றும் V எனப் பிரிக்கப்பட்டிருந்த இமயமலைப் பகுதி, இப்போது முழுப் பகுதியிலும் (ஜம்மு & காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை) உள்ள அதிக நிலநடுக்க அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஒரே மிக அதிக அபாய மண்டலமான-VI-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, இமயமலையின் விரிவான புவித்தட்டுப் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை அங்கீகரிக்கும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வகைப்பாட்டின்படி, எந்தவொரு இரண்டு மண்டலங்களின் எல்லையில் அமைந்துள்ள நகரங்களும், ஊர்களும் இனி தானாகவே அதிக அபாய மண்டலத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.


இந்தத் திருத்தம், நாடுமுழுவதும் உள்ள பாதிப்புக்குள்ளாகும் பிராந்தியங்களின் பிளவுகள், நிலநடுக்க வடிவம், புவித்தட்டு இயக்கங்கள் மற்றும் அடிப்படையான பாறை அமைப்பு (ஒரு பாறை அல்லது பாறை உருவாக்கத்தின் இயற்பியல் தன்மை) குறித்த விரிவான தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு தீவிர நிலநடுக்க நிகழ்வுகளின் போதும், மக்களின் பாதுகாப்பு முக்கியமாக இரண்டு காரணிகளைச் சார்ந்துள்ளது. அவை, 


கட்டமைப்பு கூறுகள் (Structural Elements (SE)) : இவை ஒரு கட்டிடத்தின் சுமையைத் தாங்கும் பாகங்கள் ஆகும். இவற்றில் விட்டங்கள், தூண்கள் மற்றும் சுவர்கள் அடங்கும்.


கட்டிடக்கலை கூறுகள் மற்றும் பயன்பாட்டு வசதிகள் (Architectural Elements and Utilities (AEU)) : இவை கண்ணாடி ஜன்னல்கள், கூரைகள், மின்தூக்கிகள், குளிரூட்டும் குழாய்கள் மற்றும் சேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்கான பிற நிறுவல்கள் போன்ற, கட்டமைப்பு கூறுகளால் தாங்கப்படும் கட்டமைப்பு அல்லாத கூறுகள் ஆகும்.


பாரம்பரியமாக, நிலநடுக்கத்தைத் தாங்கும் வடிவமைப்பு பெரும்பாலும் கட்டமைப்பு உறுப்புகளை (SE) வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், கட்டமைப்பு அல்லாத உறுப்புகளுக்கு (AEU) ஏற்படும் சேதமும் மக்களின் பாதுகாப்பிற்கும் கட்டிடங்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும். அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள், மாநாட்டு மையங்கள், பால் மற்றும் உணவு விநியோகக் கடைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புகளும் அல்லது சேதங்களும் பெரும் சமூக-பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


திருத்தப்பட்ட 2025 நிலநடுக்க வடிவமைப்பு நெறிமுறையானது (Earthquake Design Code), கட்டமைப்பு கூறுகளின் வடிவமைப்பிற்கும், கட்டமைப்பு அல்லாத கூறுகளின் பாதுகாப்பிற்கும் தரநிலைகளை வகுப்பதன் மூலம் இந்த இடைவெளியை குறைக்க முற்படுகிறது. இந்த விதிகள், நிலநடுக்க போன்ற நிலநடுக்க விளைவுகளின் போது கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு அல்லாத கூறுகள் இரண்டிற்கும் ஏற்படும் சேதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, இந்தத் திருத்தங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDG)) அடைவதற்கு உதவும். அவை,


இலக்கு-9 (தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு) : இந்தத் திருத்தங்கள் மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குதல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல், மற்றும் புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கின்றன.


இலக்கு-11 (நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்) : நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளின் பாதுகாப்பு, அவற்றின் மீள்திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேம்படுத்துகின்றன.


இந்தியாவின் நிலநடுக்க பாதிப்புகள்


இந்தியத் தட்டு இன்னும் யூரேசியத் தட்டை நோக்கி ஆண்டுக்கு சுமார் 5 செ.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொடர்ச்சியான மோதல் இமயமலையின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இது புவியியல் ரீதியாக ஒரு இளம் பகுதி, இதன்பொருள் பாறைகள் இன்னும் சரிசெய்தல், மடிதல் மற்றும் உடைதல் போன்ற செயல்களுக்கு உட்படுகின்றன. இதன் விளைவாக, அந்த மலைத்தொடர் நிலையற்றதாகவே உள்ளது.

புவி மேலோட்டு அசைவுகள் நீண்டகாலப் பகுதியில் அதிக அளவு அழுத்தத்தை உருவாக்குகின்றன. இந்த அழுத்தம் திடீரென்று வெளியிடப்படும்போது, ​​அது பூமியின் மேற்பரப்பையும் அதன் மீதுள்ள அனைத்தையும் கடுமையாக உலுக்குகிறது. இந்தக் கடுமையான உலுக்கல் பொதுவாக நிலநடுக்கம் என்று அழைக்கப்படுகிறது. நிலநடுக்கங்கள் நேரடித் தாக்கங்களைத் தவிர, நிலநடுக்கங்கள் தீ, நிலச்சரிவுகள், திரவமாதல், சுனாமி போன்ற இரண்டாம் நிலை பேரிடர்களையும் தூண்டக்கூடும்.


இமயமலை இன்னும் சமநிலையை (அல்லது ஈர்ப்புச் சமநிலையை) அடையவில்லை. மேலும், அது இன்றும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, இப்பகுதி வெவ்வேறு தீவிரத்தன்மை கொண்ட அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது. இமயமலைத் தொடர்களுக்குக் கீழே, மூன்று முக்கிய பிளவு அமைப்புகள் உள்ளன. அவை,


முக்கிய மத்திய உந்தல் (Main Central Thrust (MCT)) : பெரிய இமயமலைக்கும் சிறிய அல்லது மத்திய இமயமலைக்கும் இடையில் அமைந்துள்ளது.


முக்கிய எல்லை உந்தல் (Main Boundary Thrust (MBT)) : சிறிய இமயமலைக்கும் வெளி இமயமலைக்கும் இடையில் அமைந்துள்ளது, இது சிவாலிக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.


முக்கிய முகப்பு உந்தல் (Main Frontal Thrust (MFT)) அல்லது இமயமலை முகப்புப் பிளவு (Himalayan Frontal Fault (HFF)) : வெளி இமயமலைக்கும் வட இந்திய சமவெளிகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.


இமயமலை முகப்புப் பிளவு (Himalayan Frontal Fault (HFF)) என்பது தென்கோடியில் அமைந்துள்ள பிளவு ஆகும். மேலும், இது அதிக மக்கள் தொகை கொண்ட மலை அடிவாரப் பகுதிகள் வழியாகச் செல்கிறது. சமீபத்திய நிலநடுக்க அபாயப் புதுப்பிப்பு, இந்தப் பிளவின் வழியே பிளவானது தெற்கு நோக்கிப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக உள்ளது. இத்தகைய பரவல் நிலநடுக்க அபாயங்களை டேராடூன் போன்ற பகுதிகளுக்கும் நீட்டிக்கக்கூடும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA))படி, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா 10 பெரிய நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வரலாற்று ரீதியாக, இந்தியா, குறிப்பாக இமயமலைப் பகுதி, சில சமயங்களில் 8.0 ரிக்டர் அளவைவிட அதிகமான சக்திவாய்ந்த நிலநடுக்க நிகழ்வுகளைக் கண்டுள்ளது.


குறிப்பாக, 50 முதல் 55 ஆண்டுகால இடைவெளியில் நான்கு பேரிடர் தரும் நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இவை ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, சொத்துக்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. அவை,


  • 1897 : ஷில்லாங் நிலநடுக்கம் (ரிக்டர் அளவு-8.7)


  • 1905 : காங்ரா நிலநடுக்கம் (ரிக்டர் அளவு–8.0)


  • 1934 : பீகார்-நேபாள நிலநடுக்கம் (ரிக்டர் அளவு-8.3)


  • 1950 : அசாம்-திபெத் நிலநடுக்கம் (ரிக்டர் அளவு-8.6)


சமீபத்தில், 2001-ம் ஆண்டு ஏற்பட்ட புஜ் நிலநடுக்கம், அதன் ரிக்டர் அளவு-7.9 என்ற அளவில் 12,932 உயிர்களைப் பலிகொண்டதுடன், 890 கிராமங்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியது. நவம்பர் 2024 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் நான்கு மாதங்களுக்குள் 159 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்ற உண்மையிலிருந்து இந்தியாவின் அதிக நிலநடுக்கப் பாதிப்புக்குள்ளாகும் தன்மையுள்ள நாடு என்று மேலும் தெளிவாகிறது.


திருத்தப்பட்ட வரைபடம் நிலநடுக்க அபாயத்தைக் குறைக்க எவ்வாறு முயல்கிறது?


நிலநடுக்க அபாயத்தைக் குறைக்க, திருத்தப்பட்ட வரைபடம் 'பாதிப்புப் பகுதி' (exposure window) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்கள்தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பின் செறிவு, நகர்ப்புற விரிவாக்க முறைகள் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்கிறது.


இந்த அணுகுமுறை நிகழ்தகவு அடிப்படையிலான பாதிப்பு மற்றும் பல அபாய மதிப்பீட்டு (Probabilistic Exposure and Multi-Hazard Assessment (PEMA)) முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மண்டலங்களை மறுசீரமைக்கும்போது, ​​​​இயற்பியல் மற்றும் புவியியல் காரணிகள் மற்றும் சாத்தியமான மனித மற்றும் பொருளாதார தாக்கங்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்வதே இதன் நோக்கமாக இருந்தது.


இந்த அணுகுமுறை அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு மிகவும் முக்கியமானது. அத்தகைய பகுதிகளில், மிதமான தீவிரம் கொண்ட நிலநடுக்கங்கள் கூட குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அனைத்து புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க கட்டப்பட வேண்டும் என்று இந்தியத் தரநிலைகள் பணியகம் (BIS) வலியுறுத்தியுள்ளது.


தற்போது மண்டலம் VI-ஆக மறுவகைப்படுத்தப்பட்டுள்ள இமயமலை மாநிலங்கள், கட்டிடக் குறியீடுகள், உள்கட்டமைப்பு வடிவமைப்பு விதிமுறைகள் மற்றும் நீண்டகால நகர்ப்புறத் திட்டமிடல் கட்டமைப்புகளைத் திருத்த வேண்டியிருக்கும். எதிர்காலத் தயார்நிலைக்கு, கட்டாய நில அதிர்வு தணிக்கைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது அவசியமாக இருக்கும்.


பேரழிவு அபாயக் குறைப்புக்கான பிரதமரின் 10 அம்சத் திட்டம்


நிலநடுக்கங்கள் பேரழிவுகளாகத் தனித்துவமான சவால்களை முன்வைக்கின்றன. ஏனெனில் அவற்றின் இருப்பிடம், நேரம் மற்றும் அளவு ஆகியவற்றை இன்னும் துல்லியமாக கணிக்க முடியாது. இது இழப்புகளைக் குறைக்கத் தயார்நிலை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை அவசியமாக்குகிறது. புஜ் நிலநடுக்கத்தின் (Bhuj earthquake) போது பெரிய அளவிலான அழிவு மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம், முக்கியமான புஜ் சிவில் மருத்துவமனை (Bhuj Civil Hospital) உட்பட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததே இதற்கு காரணம்.


இது பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், அவற்றின் மீள்தன்மையை மேம்படுத்தத் தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு விதிகளை ஒருங்கிணைப்பதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கலாச்சார, சமூக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான பழைய கட்டமைப்புகளின் மீள்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையும் உள்ளது.


பேரிடர் அபாயக் குறைப்புக்கான (Disaster Risk Reduction (DRR)) பிரதமரின் 10 அம்சத் திட்டமும், பேரிடர் அபாய மேலாண்மை முயற்சிகளின் செயல்திறனை மேம்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. அதன்படி, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், முன் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்புத் தரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அமல்படுத்துதல் ஆகியவை எதிர்கால நிலநடுக்கங்களின்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியமானவை.


அபினவ் ராய், டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உள்ள புவியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார்.

Original link:

How new quake map seeks to minimise India’s seismic risk? 


Share: