தேர்தலுக்குப் பிந்தைய சூழல்: நான்கு மாநிலங்கள், ஒரு பொருளாதாரச் சவால்.

 மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை விட மிக மெதுவாக இருப்பது மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் கவலைக்குரிய அளவில் இருப்பது ஆகியவை, பொருளாதார அமைப்பிற்குள் அதிகரித்து வரும் அழுத்தங்களின் வெளிப்பாடாகும். இந்தத் தேர்தல் முடிவுகள், பொருளாதாரப் பாதையைச் சீர்செய்வதற்கான ஒரு வாய்ப்பாக  கருதப்பட வேண்டும்.


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் தெளிவான முடிவுகள் அசாமில் ஆளுங்கட்சியின் வலிமையான மறுவருகையாக இருந்தாலும் சரி, அல்லது மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சரி புதிய அரசுகள் தங்கள் மாநிலப் பொருளாதாரங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு அவசரமாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுகின்றன. இதில் மிகவும் முக்கியப் பணியானது, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதேயாகும். இந்த நான்கு மாநிலங்களில், அசாம் மட்டுமே சிறந்த சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. 2014-15 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அசாம் மாநிலம்  11.4 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் (Compound Annual Growth Rate (CAGR)) பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 10.3 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அதே, வேளையில் கேரளா (8.6 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கத்தின் (9.1 சதவீதம்) வளர்ச்சி விகிதங்கள் இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. 2004 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த     வளர்ச்சி விகிதம் 12.3 சதவீதமாக இருந்துள்ளது. அசாம் மாநிலம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, வேகமாக வளர முடியும் என்பதை இந்த வளர்ச்சி காட்டுகிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்கள் மந்தமான வளர்ச்சியின் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் பின்னுக்கு செல்லும் நிலையில் உள்ளது.


இந்த நான்கு மாநிலங்களும் கடன் மற்றும் அதிகரித்துவரும் வட்டி செலுத்தும் சுமையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பொதுவாக, மாநில அரசுகள் கடன் வாங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அது போன்ற கடன்கள், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உற்பத்தி சார்ந்த  சொத்துக்களை உருவாக்குவதற்குச் செலவிடப்படுவதே  சிறந்த நடவடிக்கையாகும். இது போன்ற முதலீடுகளே பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் வரி வருவாய் அதிகரிப்பதன் மூலம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவும் மாநில அரசுகளுக்கு உதவும். ஆனால், வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) பற்றிய தரவுகளைப் பார்க்கும்போது, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் போன்ற  தினசரி நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கவே கடன் வாங்கி வருகின்றன என்பது தெரிய வருகிறது. மேலும், மாநில அரசுகள் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்களை அதிகரித்திருப்பதும் சமீபத்திய ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. அசாம் மாநில, மொத்த வருவாய் வருவாயில் 4.3 சதவீதம் என்ற பணப் பரிமாற்றங்களுக்கு செலவிடப்படுகிறது. மேற்கு வங்கம் இதில் அதிகமாக, 10 சதவீதத்தைச் செலவிடும் மாநிலமாக உள்ளது.


கடன் சுமையில் சிக்கிய அரசு நிதியும், மந்தமான பொருளாதார வளர்ச்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். உற்பத்தித்திறனற்ற திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும் என்பதற்காகப் கடன் வாங்கும் அரசுகள் பொருளாதார வளர்ச்சியைத் தீவிரமாகப் பலவீனப்படுத்துகின்றன.  மொத்த  உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) வளர்ச்சியைக் காட்டிலும்  மெதுவாக இருக்கும் தனிநபர் வளர்ச்சி விகிதமும், அச்சுறுத்தும் அளவை எட்டியுள்ள வேலையின்மையும், பொருளாதார அமைப்பிற்குள் அதிகரித்துவரும் அழுத்தங்களின் பிரதிபலிப்புகளாகும். இந்தச் சூழலை, பொருளாதாரப் பாதையைச்  சரி செய்வதற்கான இதை ஒரு வாய்ப்பாக  கருத வேண்டும்.


Orginal article:  Post polls, four states, one economic challenge.

Share:

அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation - AMOC) என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய  செய்தி: அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரம்மாண்டமான கடல் நீரோட்ட அமைப்பின் நிலைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள்  கவலையடைந்துள்ளனர். முன்னதாகக் கருதப்பட்டதைவிட மிகக் கடுமையாக அமைப்பு வலுவிழக்கக்கூடும் என்று புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


• உலகின் பெரும்பகுதியில் காலநிலையை ஒழுங்குபடுத்தும் அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)), 2100-ஆம் ஆண்டிற்குள் 59% வரை குறையக்கூடும். இதனால், இந்தியத் துணைக்கண்டம் போன்ற தொலைதூர வானிலை அமைப்புகளில்  கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


• இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தியாவிற்கு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஏனெனில், இங்கு கோடிக்கணக்கான மக்கள் தங்கள் விவசாய வாழ்வாதாரத்திற்கும் நீர் விநியோகத்திற்கும் கோடைகால பருவமழையைச் சார்ந்துள்ளனர்.

• அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (AMOC) அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருந்தாலும், அது செயலிழந்தால் பசிபிக் பெருங்கடலில்   குழப்பம் ஏற்படும்.


El Niño என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் வெப்பமயமாதல் ஆகும். இது உலகளாவிய வானிலையைச் சீர்குலைக்கிறது. உலகளாவிய கடல் நீரோட்டங்களும் காற்றின் போக்குகளும் ஒன்றுக்கொன்று ஆழமாக இருப்பதால், AMOC தென் அரைக்கோளத்தில் வெப்பத்தைத் தக்கவைத்து, வட பசிபிக் பகுதியைக் குளிர்ச்சியை வழங்குகிறது.


• இது எல் நினோவை இயக்கும் நுட்பமான வெப்பநிலை சமநிலையைக் குலைக்கிறது. பலவீனமான AMOC ஆனது எல்-நினோ நிகழ்வுகளை மேலும் கணிக்க முடியாததாகவும் தீவிரமானதாகவும் மாற்றும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக, 2015-16 மற்றும் 2023-24-ல் ஏற்பட்ட  சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வுகளாகும். உலகளவில் அதிக சீர்குலைவுகளை ஏற்படுத்தி, அமெரிக்காவில் வறட்சியைத் அதிகரிக்க செய்து, தெற்காசியாவில் மழைப்பொழிவைக் குறைத்தன.



• இந்தியாவைப் பொறுத்தவரை, அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சியின் வேகம் (Atlantic Meridional Overturning Circulation (AMOC)) முற்றிலுமாக குறைந்து வருவது  என்பது தொலைதூரக் கடலில் நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல, அது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படும் நேரடியான அச்சுறுத்தலாகும். ஏனெனில், அது உணவுப் பாதுகாப்பிற்கான நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாட்டின் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும்  கோடைப் பருவமழை, குறிப்பிட்ட உலகளாவிய வெப்பப் பரவல்களைச் சார்ந்துள்ளது. அட்லாண்டிக் வெப்பக் கடத்தியின் வேகம் குறையும்போது, ​​வடக்கு நோக்கிப் பயணிக்கும் வெப்பத்தின் அளவு குறைகிறது. இந்த நகர்வு, புவியின் வெப்பமண்டல மழையை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து விலகி, தெற்கு நோக்கி இழுக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• பூமியின் பெருங்கடல்களை, ஒரு பிரம்மாண்டமான, கண்ணுக்கு தெரியாத கடத்தும் காற்றைக் கற்பனை செய்து பாருங்கள். அட்லாண்டிக் பெருங்கடலில், இந்த அமைப்பு அறிவியல் ரீதியாக அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)) என்று அழைக்கப்படுகிறது.


• வெப்பமண்டலப் பகுதிகளிலிருந்து வரும் சூடான, உப்பு நிறைந்த மேற்பரப்பு நீர் கிரீன்லாந்தை நோக்கி வடக்கே  செல்கிறது. அது உறைபனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியை அடையும்போது, ​​நீர் குளுர்ச்சியடைந்து, அடர்த்தி அதிகரித்து, பல கிலோமீட்டர் ஆழ்கடலுக்குள் மூழ்குகிறது. பின்னர், அது ஒரு குளிர்ந்த ஆழ்கடல் நீரோட்டமாக மீண்டும் தெற்கு நோக்கி நகர்கிறது. இறுதியில் மேற்பரப்பிற்கு வந்து வெப்பமடைந்து. இந்தச் சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது.


இந்த மெதுவான இயக்கம், உலகம் முழுவதும் அதிக வெப்பத்தைக் கடத்துகிறது. இதன் வேகத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், ஒரு கன மீட்டர் நீர்  பயணத்தை முடிக்க  1,000 ஆண்டுகள் ஆகும். ஐரோப்பாவில் மிதமான காலநிலை நிலவுவதற்குக் இதுவே முக்கிய கரணியாகும். மேலும், இது ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் மழைப்பொழிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


• இந்தக் நீரோட்ட அமைப்பு, கடல் வெப்பநிலை மற்றும் உப்பு அளவுகளின் நுட்பமான சமநிலையைச் சார்ந்துள்ளது. இருப்பினும், மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பனியை அபாயகரமான வேகத்தில் உருக்கி, அதிக அளவிலான நன்னீரை வட அட்லாண்டிக்கில் கொட்டுகிறது. நன்னீர்   உப்புத்தன்மை குறைந்ததாகவும் இருப்பதால், அது எளிதில் மூழ்குவதில்லை. இது முழு அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி அமைப்புக்கும் ஒரு தடையாகச் செயல்படுகிறது.


• கடந்த 50 ஆண்டுகளில் 15% சரிவு ஏற்படும் என முந்தைய ஆய்வுகள் மதிப்பிட்டிருந்த நிலையில்,  தற்போதைய கடல் அளவீடுகளைப் பயன்படுத்தும் புதிய ஆராய்ச்சி, இதைவிட மிகக் கடுமையான சரிவு ஏற்படும் என்று கணித்துள்ளது. இது 2100-ஆம் ஆண்டிற்குள் நீரோட்டங்களை 59% வரை பலவீனப்படுத்தக்கூடும்.


• இது முக்கியமானது. ஏனெனில், AMOC என்பது ஒரு “காலநிலை மாற்றத்தின் திருப்புமுனை” (climate tipping point) ஆகும். சமநிலைப் புள்ளியைத் தாண்டிச் சாய்ந்த ஒரு நாற்காலியைப் போலவே, AMOC ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கடந்தவுடன், அது மீளமுடியாத வகையில் ஒரு புதிய, மந்தமான நிலைக்குச் சென்றுவிடும். சரியான காலக்கெடு குறித்து விஞ்ஞானிகள் விவாதித்தாலும், இது இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழக்கூடும் என்று சிலர் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நடந்தால், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். இது வட அமெரிக்காவில் தீவிரமான கடல்மட்ட உயர்வையும், உலகளவில் கடுமையான வானிலை சீர்குலைவுகளையும் அதிகரிக்க செய்யும்.


Orginal article:  What is Atlantic Meridional Overturning Circulation (AMOC)? -Priya Kumari Shukla

Share:

தேசிய குற்றப் பதிவுப் பணியக தரவுகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள். -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2026, மே 6 அன்று வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 6% குறைந்து, 2023-ஆம் ஆண்டின் 62.41 லட்சம் வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் 58.85 லட்சம் வழக்குகளாகப் பதிவாகியுள்ளது. இந்தப் பணியகம், 2024-ஆம் ஆண்டு  ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான குற்றத் தரவுகளை வழங்கியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. குற்ற விகிதம்: தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau (NCRB)), ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு பதிவான வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் குற்ற விகிதத்தைக் கணக்கிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் இது சரிவைக் கண்டது. 2023-ல் 448.3-லிருந்து 2024-ல் 418.9-ஆகக் குறைந்துள்ளது.


2. இணையவழிக் குற்றங்கள்: இந்தக் காலகட்டத்தில் இணையவழிக் குற்றங்கள் ஏறக்குறைய 18% அதிகரித்துள்ளது. இணையவழிக் குற்றங்கள் பிரிவின் கீழ் மொத்தம் 1,01,928 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2023-ல் 86,420 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை விட 17.9% அதிகமான  அளவாகும். இந்தப் பிரிவின் கீழ் குற்ற விகிதம் 2023-ல் 6.2-லிருந்து 2024-ல் 7.3 ஆக அதிகரித்துள்ளது.


3. பொருளாதாரக் குற்ற வழக்குகள்: இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரக் குற்றங்கள் 4.6% அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் இந்தப்பிரிவில் 2,04,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,14,379 வழக்குகளாக இருந்தது.


4. காணாமல் போன குழந்தைகள் (Missing children): 2024-ஆம் ஆண்டில் 98,375 குழந்தைகள் காணாமல் போனதன் மூலம், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து வருகிறது. இது 2023-ஆம் ஆண்டில் காணாமல் போன 91,296 குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் 7.8% அதிகமான  அளவாகும். இவர்களில் 75,603 பெண் குழந்தைகளும், 22,768 ஆண் குழந்தைகளும், 4 நான்கு மாற்றுப் பாலினக் குழந்தைகளும் அடங்குவர்.


தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) பற்றி


குற்றத் தரவுகளைத் தொகுப்பதற்காக, தேசிய குற்றப் பதிவுப் பணியகம்  1986-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் ஆண்டு அறிக்கை, வன்முறைக் குற்றங்கள், சாதி அடிப்படையிலான குற்றங்கள், பொருளாதார மோசடிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய முக்கியமான தரவுகளை வழங்குகிறது. இந்தத்தரவுகள் கொள்கை உருவாக்கம் மற்றும் சட்ட அமலாக்க முன்னுரிமைகளுக்கு வழிகாட்டுகின்றன.


ஆண்டு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர, இது "மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச குற்றவாளிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சமந்தபட்ட மாநிலங்களுக்குப் பரிமாறிக்கொள்ளுதல்" ஆகிய பணிகளிலும் ஈடுபடுகிறது. மேலும், தேசிய குற்றப் பதிவுப் பணியகம் இந்திய மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகளின் கைரேகைப் பதிவுகளுக்கான "தேசியக் காப்பகமாக" (national warehouse) செயல்படுவதுடன், கைரேகைத் தேடல் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளைக் கண்டறியவும் உதவுகிறது.


5. கொலை வழக்குகள்: இந்த ஆண்டில் 27,049 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது முந்தைய ஆண்டைவிட 2.4% என்ற மிகச்சிறிய அளவிலான வீழ்ச்சியைக் காட்டுகிறது. இந்தக்குற்றங்களுக்குப் பின்னால் உள்ள முதன்மையான நோக்கமாக பிரச்சனைகள் உள்ளன. இதைத் தொடர்ந்து தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது விரோதம் மற்றும் ஆதாயம் ஆகியவை மற்ற காரணிகளாக அமைந்திருந்தன.


2024- ஆம் ஆண்டு குற்றப் பதிவுப் பணியகம் :  இந்தியாவின் குற்றத் தரவுகள் பகுப்பாய்வு


சமூகம் மற்றும் அரசியல் — தரவு விளக்கவுரை


2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 58.85 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023-ஆம் ஆண்டைவிட 6% குறைவான அளவாகும். ஆனால், இணையவழிக் குற்றங்கள், சிறார் குற்றங்கள் மற்றும் காணாமல் போன குழந்தைகளின் புள்ளிவிவரங்கள் மிகவும் சிக்கலான ஒரு கதையைச் சொல்கின்றன.




6. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டைவிட 1.5% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 4.48 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் 4.41 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது போன்ற  குற்றங்களுக்கு கணவன் அல்லது உறவினர்களின் கொடுமையே முக்கிய காரணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவையும் காரணங்களாக உள்ளன.


2024-ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதத்தில் தெலங்கானா மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 128.6 குற்றச் சம்பவங்கள் என்ற விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக உயர்ந்த விகிதமாகும். இதற்கு அடுத்தபடியாக, 118.3 என்ற விகிதத்துடன் ஒடிசா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையிலும் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு மொத்தம் 13,396 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெருநகரங்களில் பதிவான இது போன்ற மொத்தக் குற்றச் சம்பவங்களில், கால் பகுதிக்கும் அதிகமானவை டெல்லியில் நிகழ்ந்துள்ளன.


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: நாட்டிலேயே சண்டிகர்  மாநிலத்தில் அதிகமான பாலியல் வன்கொடுமை குற்ற விகிதம் பதிவாகியுள்ளனது. இங்கு ஒரு லட்சம் மக்கள் தொகையில் 16 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

 

அதிகமான பாலியல் வன்கொடுமை விகிதத்துடன் சண்டிகர் 16.6 என்ற அளவில் இருந்தது. கோவா 13.3 என்ற பாலியல் வன்கொடுமை குற்ற விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2024-ல் 105 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் ராஜஸ்தான் 12.2 என்ற பாலியல் வன்கொடுமை விகிதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.




7. போக்குவரத்து தொடர்பான விபத்துகள்: இந்தியாவில், சராசரியாக ஒவ்வொரு நாளும் 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அறிக்கையின்படி, 2023-ல் 1.98 லட்சம் பேர் உயிரிழந்ததோடு ஒப்பிடுகையில், 2024-ல் போக்குவரத்து விபத்துகளில் 1.99 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது 0.79 சதவீதம் அதிகமாகும். உயிரிழப்புகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் (27,071), தமிழ்நாடு (20,390) மற்றும் மகாராஷ்டிரா (19,475) ஆகும்.


8. பட்டியல் சாதியினர் (Scheduled Castes (SCs)) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (STs)) மீதான வழக்குகள்: பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களுக்காக மொத்தம் 55,698 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2023-ல் 57,789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததைவிட 3.6% குறைவான அளவாகும். பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களும் 23.1% என்ற அளவில் சரிவைக் காட்டியுள்ளன; 2023-ல் 12,960 வழக்குகள் பதிவான நிலையில், 2024-ல் மொத்தமாக 9,966 வழக்குகள் பதிவாகியுள்ளன.


உத்தரப் பிரதேச மாநிலத்தில்  பட்டியல் சாதியினருக்கு எதிரான வழக்குகள் அதிகபட்சமாக 14,642 பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 7,765 வழக்குகளும், பீகாரில் 7,549 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பழங்குடியினருக்கு எதிரான 9,966 குற்ற வழக்குகளில், மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 3,165 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 2,282 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 830 வழக்குகளும் பதிவாகியுள்ளன.


9. மனிதக் கடத்தல்: மனிதக் கடத்தலுக்கு எதிரான வழக்குகள் 2.2% குறைந்து, மொத்தம் 2,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 6,018 பேர் கடத்தப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 2,297 குழந்தைகளும் 3,721 பெரியவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.


10. சட்டத்துடன் முரண்படும் சிறார்கள்: 2023-ஆம் ஆண்டைவிட சிறார்களுக்கு எதிரான வழக்குகள் 11.2% அதிகரித்துள்ளன. மேலும் 2024-ஆம் ஆண்டில் 34,878 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் (Special and Local Laws (SLL)) குற்றங்கள் தொடர்பான சட்டத்துடன் தொடர்புடைய சிறார்களாக (சட்டத்துடன் முரண்படும் சிறார்களாக) கைது செய்யப்பட்டவர்களில் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் மொத்தம் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு,   2013-ஆம் ஆண்டு முதல் 18 வயது வரை உள்ளவர்கள் ஆவார். 33,129 பேர் (77.7%) இந்த வயதைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


உச்சநீதிமன்றம் ‘அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்’ என்பதற்கான வரையறையை விரிவுபடுத்தியது.


1. அமிலத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களில், அமிலத்தை உட்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டு, வெளிப்படையான தழும்புகள் ஏதுமின்றி உள் காயங்களுக்கு உள்ளானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் கீழ் அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்று மே 4 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2. மாற்றுத்திறனாளிகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)), அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களைத் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த வரையறை சிறிய அளவிலேயே இருந்தது. மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் அட்டவணை 2(zc)-ன் கீழ், “அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்” (acid attack victim) என்பவர், “அமிலம் அல்லது அதுபோன்ற அரித்தழிக்கும் தன்மையுள்ள பொருளை வீசி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் உருக்குலைந்தவர்” (disfigured due to violent assaults by throwing of acid or similar corrosive substance) ஆவார். அமிலம் வலுக்கட்டாயமாக உட்கொள்ளப்பட்டவர்கள் இந்த வரையறைக்குள் வரவில்லை.


3. சிதைக்கப்பட்ட (disfigured) எனும் சொல்லைப் பயன்படுத்துவது, உடலின் வெளிப்புறச் சிதைவு சார்ந்த வரம்பை மட்டுமே குறுகியதாகத் தோன்றுகிறது. இதன் விளைவாக, அமிலம் வீசப்பட்டதால் ஏற்படும் உள் காயங்கள் அல்லது தழும்புகள் சார்ந்த வழக்குகளை இது வரம்பிற்கு வெளியே நிறுத்திவிடுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


4. இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராமல் உள்ளனர். சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாற்றுத்திறன் சான்றிதழ் என்பது நிதி உதவி, மறுவாழ்வுத் திட்டங்கள், மருத்துவ ஆதரவு போன்றவற்றைப் பெறுவதற்கான ஒரு வழியாகும். மாற்றுத்திறன் என்ற சான்றிதழ் இல்லாமல், பாதிக்கப்பட்டவரால் எதையும்  பெற முடியாது.


Orginal article:  NCRB data: 10 key takeaways you must know. -Khushboo Kumari

Share:

ஹஸ்தியோ அரந்த் பகுதி ஏன் “சத்தீஸ்கரின் நுரையீரல்” என்று குறிப்பிடப்படுகிறது? - பிரியா குமாரி சுக்லா

 மத்திய இந்தியாவின் "பசுமை நுரையீரல்" என்று அழைக்கப்படும் ஹஸ்தியோ-அரந்த் வனப்பகுதியில் உள்ள 1,742.6 ஹெக்டேர் அடர்ந்த காடுகளைப் பயன்படுத்தவும், அங்குள்ள 4.48 லட்சம் மரங்களை வெட்டவும் ராஜஸ்தான் மாநில மின் உற்பத்தி நிறுவனம் (Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Limited) அனுமதி கோரியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள அதன் கென்டே விரிவாக்க நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக (Kente Extension coal mine) இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்குப் ஈடாக, ராஜஸ்தானில் உள்ள ஏற்கனவே இருக்கும் பிற வன நிலங்களில் மரங்களை நடவு செய்யப்போவதாக அந்த நிறுவனம் முன்மொழிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய அம்சங்கள்:


• ராஜஸ்தான் மாநில மின் உற்பத்தி கழகமான (Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Limited), தனது சப்ரா (Chhabra) மற்றும் சூரத்கார் (Suratgarh) நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக, அக்டோபர் மாதம் 2015-ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றது. தற்போது, அதானி குழுமம் அந்த நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்தி இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

• வனப்பகுதிகளை வேறு பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கு அனுமதி வழங்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள வன ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)), பொதுத்துறை நிறுவனத்தின் இந்த முன்மொழிவை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.


• சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் முக்கியமான, இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், ‘Parsa’ மற்றும் ‘Parsa East Kete Basan’ ஆகிய திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதி சுரங்கத் தொழிலுக்கு அனுமதி இல்லாத பகுதி அல்லது 'தடை செய்யப்பட்ட மண்டலமாக' வகைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


• வன (பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) சட்டம், 1980-ன்படி (Van Sanrakshan Evam Samvardhan Adhiniyam, 1980), காடுகள் அழிக்கப்படுவதற்கு ஈடாக மரம் வளர்க்க (ஈடுசெய்யும் காடு வளர்ப்பு), காடு அல்லாத நிலங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை காடு வளர்ப்பிற்காகத் தரம் குறைந்த வனப்பகுதிகள் அல்லது இதர நிலங்கள் பயன்படுத்தப்பட்டால், அதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். காடு அல்லாத நிலங்கள் கிடைக்காத பட்சத்தில், வருவாய் வன நிலங்களில் காடு வளர்ப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். இவை அரசுப் பதிவேடுகளில் காடு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத அல்லது வனத்துறையினரால் நிர்வகிக்கப்படாத நிலங்களாகும். 'ஆரஞ்சு வன நிலங்கள்' (வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள காடுகள்) இந்த வகையிலேயே வருகின்றன. இத்தகைய நிலங்களைச் சட்டப்பூர்வமாக மாநில வனத்துறையின் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்வது அவசியமாகும்.


• கடந்த மார்ச் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டம் குறித்து ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 3,236.08 ஹெக்டேர் பரப்பளவில், 81 இடங்களில் ஈடுசெய் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலங்கள் ஏற்கனவே காடுகளாகவோ அல்லது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களாகவோ (ஆரஞ்சு வன நிலங்கள்) உள்ளன. மேலும், இதில் 1,051 ஹெக்டேர் நிலப்பரப்பு 'மிதமான அடர்த்தி கொண்ட காடு' வகையைச் சார்ந்தது என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• நிலக்கரியின் உள்நாட்டுப் பயன்பாடு (Captive use of coal) என்பது, ஒரு நிறுவனம் நிலக்கரியைத் தனது சொந்தத் தேவைக்காக மட்டுமே சுரங்கம் தோண்டி எடுப்பதைக் குறிக்கும். குறிப்பாக, இந்த நிலக்கரியானது எஃகு தயாரிப்பு, மின்உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்தி போன்ற அந்த நிறுவனத்தின் முதன்மைத் தொழில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அந்த நிறுவனத்திற்கு அனுமதி இருக்காது.

• ஹஸ்தியோ அரந்த் வனப்பகுதி அதன் அபரிமிதமான பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாக "சத்தீஸ்கரின் நுரையீரல்" என்று அழைக்கப்படுகிறது. இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விச் சபையின் (Indian Council of Forestry Research and Education (ICFRE)) கூற்றுப்படி, ஹஸ்தியோ அரந்த் என்பது "மத்திய இந்தியாவின் மிகப்பெரிய பிரிக்கப்படாத காடு" ஆகும். இது மனிதத் தலையீடு இல்லாத, இயற்கையான சால் மரங்கள் (Shorea robusta (Sal)) மற்றும் தேக்கு மரக் காடுகளால் உருவானதாகும்.


சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழும் பிராந்தியத்தில், சர்குஜா, கோர்பா மற்றும் சூரஜ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஹஸ்தியோ-அரந்த் நிலக்கரி வயல் (Hasdeo-Arand Coalfield) பரவியுள்ளது. இது மொத்தம் 1,879.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


• இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (Wildlife Institute of India) 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஹஸ்தியோ அரந்த் நிலக்கரி சுரங்கப் பகுதியில் (HAC - Hasdeo Arand Coalfield) உள்ள ஒன்பது விலங்கு இனங்கள், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1-ன்கீழ் சிறப்புப் பாதுகாப்பு பெற்றுள்ளன. இந்த இனங்களில் யானை, சிறுத்தை, கரடி, இந்திய சாம்பல் ஓநாய், தேன் வளைக்கரடி (Honey Badger), நான்கு கொம்பு மான், இந்திய அழுங்கு (Pangolin), மலபார் அணில் (Giant Squirrel) மற்றும் பழுப்புநிறப்புள்ளிப் பூனை (Rusty-Spotted Cat) ஆகியவை அடங்கும். மேலும், ஹஸ்தியோ பகுதி 92 பறவை இனங்கள், 25 பாலூட்டி இனங்கள் மற்றும் 16 பாம்பு இனங்களுக்குப் புகலிடமாக உள்ளது. இது யானைகளுக்கு வாழ்விடமாகவும், அவை இடம்பெயர்வதற்கான பாதையாகவும் இருப்பதுடன், புலிகளின் நடமாட்டத்திற்கான ஒரு முக்கியப் பாதையாகவும் செயல்படுகிறது.


• 2021-ஆம் ஆண்டு இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விச் சபையின் (ICFRE) அறிக்கையின்படி, இங்கு 640 வகையான பூக்கும் தாவரங்கள், 128 வகையான மருத்துவக் குணங்கள் கொண்ட தாவரங்கள் மற்றும் 40 வகையான மரக்கட்டை தரும் மரங்கள் காணப்படுகின்றன.


Orginal article:  Why Hasdeo Arand is referred to as the “lungs of Chhattisgarh”? -Priya Kumari Shukla

Share:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? - பிரியா குமாரி சுக்லா

 கடந்த வியாழக்கிழமை (மே 7), இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்திற்கான நியமனங்களை மேற்கொள்வதற்கு ஒரு முறையான சட்டத்தை இயற்றுவதில், நாடாளுமன்றம் பல ஆண்டுகளாகத் தாமதம் செய்து வந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 2023-ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிடும் வரை இந்தச் சட்டம் இயற்றப்படாததை, "தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சர்வாதிகாரம்" (Tyranny of the elected) என்று உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது.





முக்கிய அம்சங்கள்:


• நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ஐ (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்தது.


• சட்டரீதியாக இருந்த ஒரு இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 2024-ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. ஏனெனில், தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதியை (Chief Justice of India) இந்தச் சட்டம் நீக்கியது. அவருக்குப் பதிலாக, பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஒன்றிய அமைச்சரவை அமைச்சரை அந்தத் தேர்வுக் குழுவில் சேர்த்ததுதான் இந்த எதிர்ப்பிற்குக் காரணமாக அமைந்தது.



• பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமாரை நியமிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, புதிய நியமன முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, இந்த நியமனங்களைத் தள்ளிவைக்குமாறு கோரி ராகுல் காந்தி ஒரு மாறுபட்ட கருத்துக் குறிப்பை சமர்ப்பித்தார்.


• மார்ச் மாதம் 2023-ஆம் ஆண்டில் 'அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம்' (Anoop Baranwal vs Union of India) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை இயற்றும் வரை, ஒரு தற்காலிக நடைமுறையைப் பின்பற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, இந்தியக் குடியரசுத் தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை ஒரு மூவர் குழுவின் ஆலோசனையின் பேரிலேயே நியமிக்க வேண்டும். அந்தச் சிறப்புக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறுவார்கள் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


• அரசாங்கத்தின் தலையீடு இல்லாத ஒரு சுதந்திரமான அமைப்பின் மூலம், தேர்தல்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களைச் சுட்டிக்காட்டிய நீதிமன்ற அமர்வு, தேர்தலை நடத்துபவர்கள் எக்காரணம் கொண்டும் நிர்வாகத் துறையின் (அரசாங்கத்தின்) கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்று பி.ஆர். அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையை நினைவு கூர்ந்தது. தேர்தல் ஆணையம் "ஜனநாயகத்தின் பாதுகாவலனாக" செயல்படுகிறது என்றும், தேர்தல்களை மேற்பார்வையிடுபவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


• அனூப் பரன்வால் (Anoop Baranwal) தீர்ப்பானது, வாக்களிக்கும் உரிமையைப் பற்றிய புரிதலை மேலும் விரிவுபடுத்தியது. வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பிலிருந்து உருவானது என்றும், வாக்களிப்பது என்பது பிரிவு 19(1)(a)-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள 'கருத்துச் சுதந்திரத்தின்' ஒரு அங்கமாகும் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.


• தேர்தல் ஆணையத்தை நிறுவனரீதியாகவும், நிதிரீதியாகவும் வலுப்படுத்துமாறு நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் வலுவான வேண்டுகோள் விடுத்தது. தேர்தல் ஆணையத்திற்கென ஒரு தனிச் செயலகத்தை உருவாக்குவது குறித்தும், இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து அதற்கு நிதி வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் வளங்களைக் குறைப்பதன் மூலமோ அல்லது கட்டுப்படுத்துவதன் மூலமோ, அதன் செயல்பாடுகளில் நிர்வாகத்துறை (அரசாங்கம்) மறைமுகமாகத் தலையிடக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.


• மார்ச் மாதம் 2023-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரமும் ஒன்றிய அரசிடம் (நிர்வாகத் துறை) இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இந்த நியமன முறையில் அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பது "தீங்கானது" என்று நீதிமன்றம் கருதியது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூவரும் இடம் பெற வேண்டும் என்று கூறியது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஒருவேளை மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் இல்லையென்றால், அங்குள்ள மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் அந்தக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


உங்களுக்குத் தெரியுமா?


• நாடாளுமன்றத்தால் இது தொடர்பாக இயற்றப்படும் எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் பிரிவு 324(2) கூறுகிறது.


• 1991-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையச் சட்டம் (தேர்தல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவல் நடைமுறை) (Conditions of Service of Election Commissioners and Transaction of Business) Act, 1991), ஆணையர்களின் ஊதியம், பதவிக்காலம் மற்றும் ஆணையத்தின் செயல்பாடுகளைப் பற்றியதாகும். ஆனால், நியமனங்கள் குறித்து தேர்தல் ஆணையச் சட்டம் எதையும் குறிப்பிடவில்லை.


• இதற்கான சட்டம் ஏதும் இல்லாததால், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடமே (நிர்வாகத் துறை) இருந்தது. இதன்படி, ஒன்றிய சட்ட அமைச்சகம் தகுதியானவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு பிரதமருக்கு அனுப்பும்; பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அவர்களை நியமிப்பார். காலப்போக்கில், பெரும்பாலும் இந்திய ஆட்சிப்பணி போன்ற அரசு அதிகாரிகளே தேர்தல் ஆணையர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுவாக, ஆணையர்களில் மிகவும் மூத்தவராக இருப்பவரே 'தலைமை தேர்தல் ஆணையராக' பதவி உயர்வு பெறும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.


• 2022-ஆம் ஆண்டில், அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கில் (Anoop Baranwal vs Union of India), தற்போதைய நடைமுறை தேர்தல் ஆணையர் நியமனங்களை நடைமுறையில் ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதாகவும், இது தேர்தல்களை நடத்தும் அமைப்பின் சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


• நவம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற விசாரணையின் போது, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு மே மாதத்திலிருந்து அந்தப் பதவி காலியாக இருந்தது. ஒட்டுமொத்த நியமன நடைமுறையும் ஒரே நாளில் முடிக்கப்பட்டதைக் கண்டு நீதிமன்றம் ‘வியப்படைவதாக’ தெரிவித்தது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை குறித்து நாடாளுமன்றம் ஏன் மௌனம் காத்து வருகிறது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


Orginal article:  How Chief Election Commissioner of India and other Election Commissioners are appointed? -Priya Kumari Shukla

Share:

ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• பொதுவாக, ஒரு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோருவதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதும் வழக்கமான நடைமுறையாகும். அவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு, அந்தக் கட்சி, சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இருப்பினும், ஆளுநர் அர்லேகர் அவர்கள், விஜய் அவர்களை 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான குறைந்தபட்சம் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்திடம் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் சேரும்போது, மொத்த எண்ணிக்கை 113-ஆக உயர்கிறது.


• அதிக இடங்களை வென்ற மிகப்பெரிய கட்சியையே ஆட்சி அமைக்க முதலில் அழைக்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில் பலமுறை வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலும் ஆளுநர் மாளிகைகள் அரசியல் சர்ச்சைகளுக்கு உள்ளாவதால், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படும்போது எதிர்க்கட்சிகள் உதவிக்காக நீதிமன்றத்தை நாடுகின்றன.


• கடந்த 2018-ஆம் ஆண்டில், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அவர்கள் பி.எஸ். எடியூரப்பாவை முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்ததையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal Secular (JD(S))) கட்சிகள் நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தை அணுகின. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அறிவித்திருந்த போதிலும், ஆளுநர் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசத்தையும் ஆளுநர் வழங்கினார்.


• இருப்பினும், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India) தீபக் மிஸ்ரா இந்த வழக்கை இரவு முழுவதும் விசாரித்தார், ஆனால் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். ஒரு நாள் கழித்து, குதிரை பேரம் நடப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைக் கேட்ட இந்திய உச்சநீதிமன்றம், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை  36 மணி நேரத்திற்குள்ளாகவே நடத்த உத்தரவிட்டது. இறுதியில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது, அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்தது.


• மே மாதம் 2016-ஆம் ஆண்டு, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இதேபோன்ற ஒரு அரசியல் நெருக்கடியின்போது, இந்திய உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையையே இதற்கான "இறுதித் தீர்வு" என்று விவரித்தது. மேலும், அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பரிவு 164-ன்படி (Article 164) , மாநில முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார்; மேலும், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் ஆளுநர் நியமிக்கிறார். அதேபோல், அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் காலம் வரை (During the pleasure of the Governor) பதவியில் நீடிப்பார்கள் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.• இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்காக, மக்கள் ஆதரவைப் பெற்ற மற்றும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய கட்சியை ஆளுநர் அழைக்கிறார். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கான நேரத்தை ஆளுநர் தீர்மானிக்கிறார். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கும் 'தற்காலிக சபாநாயகர்' ஒருவரை ஆளுநர் நியமிக்கிறார். பொதுவாக, சபையில் உள்ள மூத்த சட்டமன்ற உறுப்பினரே இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.


Orginal article:  What Supreme Court of India said about the Governor’s role? -Priya Kumari Shukla

Share:

இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் ஒரு முக்கியத் திருப்புமுனை -ஆர்.கே.எஸ். பதௌரியா

 ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் உத்திக்கான கோட்பாடு (India’s strategic doctrine) கடுமையாகப் பரிணமித்துள்ளது.


ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கை, மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் துல்லியமாகவும், அதிகத் தீவிரத்துடனும் அழிப்பதன் மூலம் தொடங்கியது. இந்தத் தாக்குதல், ஏப்ரல் 22, 2025 அன்று எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்ட கோழைத்தனமான பஹல்காம் தாக்குதலுக்கு நேரடியான மற்றும் தீர்க்கமான பதிலடியாக அமைந்தது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவச் சிந்தனையிலும் கோட்பாட்டிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், தேசியப் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் இது ஒரு திருப்புமுனையாக அமைகிறது.

புதிய காலகட்ட இந்தியக் கோட்பாடு


இந்தியாவின் கடந்த காலத்தில், "எதிர்வினை கட்டுப்பாடு" (reactive restraint) என்ற நிலைப்பாடு, "ஆவண அணுகுமுறைக்கு" (dossier approach) ஒரு வலுவான ஆதரவை வழங்கியது. இதில் இந்தியா பெரும்பாலும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ஆதாரங்களை முன்வைப்பதையும் இராஜதந்திர அழுத்தத்தையும் நம்பியிருந்தது. இந்த இராணுவச் செயலற்ற தன்மை பெரும்பாலும் அசாதாரணமான கட்டுப்பாடு என்று விவரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளால் இந்த அணுகுமுறையை அடிக்கடி ஊக்குவித்தும் பாராட்டியும் வந்தன. அதேநேரத்தில், அணு ஆயுதம் ஏந்திய எதிரி நாட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளைத் தாக்குவது குறித்த "ஒருவேளை இப்படி நடந்தால் என்ன?" என்ற விவாதங்களும், இந்தியாவின் முடிவெடுப்பவர்களை வலுவாகப் பாதித்து, இராணுவ நடவடிக்கையை ஊக்கமிழக்கச் செய்தன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட "சகித்துக்கொள்ள முடியாத நிலை" (zero tolerance) கொள்கையை மேலும் வலுப்படுத்தினார். இந்த அணுகுமுறையின் கீழ், எந்தவொரு எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயலும் இனி ஒரு “போர்ச் செயலாகவே” கருதப்படும்.


இது, செயல்படுவதற்கான உத்திக்கு உறுதியையும், பதிலடி கொடுப்பதில் ஆயுதப் படைகளின் மீதுள்ள முழுமையான நம்பிக்கையையும் கொண்ட ஒரு தலைமையைப் பிரதிபலிக்கிறது. அரசியல்ரீதியான அபாயங்கள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை நேரடியாக எதிர்கொள்வதற்கான இந்த அசாதாரணமான உறுதியும், அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கும், வெளிப்புற அழுத்தங்களுக்கும் அடிபணிய மறுத்த இந்த அணுகுமுறை புதிய சிவப்பு கோடுகளை (new red lines) உருவாக்கியது.


ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு பரிணாம வளர்ச்சியிலும் ஒரு புதிய அத்தியாயத்தை வரையறுத்தது. ஒருங்கிணைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான மாற்றத்தின் போது, இந்த நடவடிக்கை இந்திய விமானப்படை (IAF), இந்திய கடற்படை மற்றும் இந்திய ராணுவம் ஆகிய முப்படைகளின் கள யதார்த்தங்களைச் சோதித்தது. பஹல்காம் நடவடிக்கைக்குப் பிறகு, படைகள் ஒரு தெளிவான அரசியல் நடவடிக்கையை எதிர்பார்க்கும் வகையில் தயாராக இருந்தன. அந்த நடவடிக்கை, நேரடியான மற்றும் தெளிவான முறையில் வந்ததுடன், படைகள் எதிர்பார்த்ததைவிட வலிமையானதாகவும் இருந்தது. இதில், முப்படைகளுக்கும் செயல்படுத்துவதற்கான முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

அதன் விளைவாக, ஒன்பது பயங்கரவாத இலக்குகள்மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள், முப்படைகளாலும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, முழு விழிப்புடன் இருந்த பாகிஸ்தானையும் மீறி முழுமையான வெற்றியை அடைந்தன. பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களை இலக்குகளாகத் தேர்ந்தெடுத்தது பலரால் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட இலக்குகளை தாக்கியது இந்தியாவின் பாராட்டுக்குரியது. பாகிஸ்தானும் உலகின் பிற நாடுகளும் ஒரு "புதிய இயல்புநிலை" என்பதன் யதார்த்தங்களை உணர்ந்து விழித்துக்கொண்டன. இந்த பயங்கரவாத மையங்களில் ஏற்பட்ட பெரும் அழிவைக் காட்டும் படங்களும் காணொளிகளும் அதிர்ச்சியூட்டின. இந்தத் தாக்குதல்களின் தன்மையும் வெற்றியும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.


அடுத்த இரண்டு நாட்களில், மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மற்றும் புத்திசாலித்தனமான இந்தியப் பதிலடி, அமைதியாகவும் ஆனால் உறுதியாகவும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவாகத் தவறாகப் புரிந்துகொண்டது. மே 9 மற்றும் 10 தேதிகளில், பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் சில முக்கிய, உயர் மதிப்புள்ள சொத்துக்களைத் தாக்க முயன்றபோது, இந்திய விமானப்படை கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள நூர் கான், சர்கோதா, முரிட் மற்றும் போலாரி உள்ளிட்ட 11 தளங்களைத் தாக்கும் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மூலம் அதை முறியடித்தது. இந்தத் தாக்குதல்களின் துல்லியத்தின் அளவையோ அல்லது அதனால் ஏற்பட்ட சேதத்தின் அளவையோ பாகிஸ்தான் கற்பனை செய்திருக்க முடியாது. அணு ஆயுதம் ஏந்திய ஒரு நாட்டிற்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலேயே இது மிகவும் தீர்க்கமான மற்றும் துல்லியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என உலகளாவிய பாதுகாப்பு பகுப்பாய்வு சமூகம் தற்போது அங்கீகரித்துள்ளது.


இராணுவத்தின் துணிச்சலுக்கு இதுவே உச்சநிலை.


பதற்றம் அதிகரிப்பதற்கான அபாயத்தின்மீது இது சிறந்த கட்டுப்படுத்தும் இந்த முழுமையான, ஒருங்கிணைந்த மற்றும் கவனமாக அளவிடப்பட்ட பதிலடி, இந்தியாவின் குடிமை மற்றும் இராணுவ அமைப்புகளுக்கு இடையேயான தடையற்ற ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கிறது. பொதுவான கருத்துப்படி, இந்தியாவின் சாதனைகள் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கி 88 மணி நேரத்திற்குப் பிறகு, மே 10-ம் தேதி நண்பகலில், இந்திய விமானப்படையால் 11 தளங்களில் ஏற்படுத்தப்பட்ட பெரும் அழிவினால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயிருந்தது. அதே நேரத்தில், நடவடிக்கைக்காகத் தயாராக இருந்த இந்தியக் கடற்படையின் நிலைநிறுத்தங்களைக் கராச்சி பதற்றத்துடன் கண்காணித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை நெடுகிலும் இந்திய இராணுவத்தின் தீவிரமான நடவடிக்கைகள், ஆளில்லா விமானத் தாக்குதல்களைச் சாத்தியமற்றதாக்கியிருந்தன. எஸ்-400 ஏவுகணை அமைப்பு உட்பட, வலுவான, வலையமைக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு, இந்தியப் பகுதிக்கு மேலாக மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் உட்பகுதி வரையிலும் வான்வெளியை முற்றிலுமாகத் தடுத்திருந்தது. இந்தச் சூழ்நிலை காரணமாக, பாகிஸ்தானுக்கு விரைவாகப் போர்நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.


அணு ஆயுத அச்சுறுத்தலின்கீழ் பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கலான தன்மைகளையும் அதன் நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டால், மே 10 அன்று மேற்கொண்ட தீவிரமான இலக்குத் தாக்குதலுக்கும், பதற்றம் அதிகரித்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்தி, போர் நிறுத்தத்தை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வந்ததற்கும் இந்தியப் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியும், முப்படைகளின் தளபதிகளும் பெரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். இது இராணுவத்தின் மிக உயர்ந்த அளவிலான துணிச்சலும் தைரியமும் ஆகும்.


இந்திய ஆயுதப் படைகள், அரசியல் தலைமையின் அறிவுறுத்தல்களை முழுமையாக நிறைவேற்றின. இதன் மூலம், விரைவான மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டின் திறன் குறித்து எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. மே 10 அன்று இந்தியாவின் நடவடிக்கைகளின் அளவையும் வேகத்தையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்தனர்.






போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்று. மேலும், போர் நிறுத்தத்தைக் கோரிய மக்களை பொதுவாக குறை கூற இயலாது. இந்த நிகழ்வுகளை உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கக்கூடாது. அனைத்து நோக்கங்களும் திட்டமிடப்பட்ட செயல் வரம்பும் மே 10-ஆம் தேதிக்குள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவு மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுவது ஒரு வலுவான உத்திசார் நடவடிக்கையைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய அறிவிப்பானது, பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கவும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடவும் வேண்டும் என்பதே இதன் முதன்மை செயதியாக உள்ளது. இந்தச் செய்தி பாகிஸ்தான் குடிமக்களுக்கும் பொருந்தும். இது அவர்களின் இராணுவத் தலைமையின் ஒரு பிரிவினரின் பொறுப்பற்ற செயல்களுக்கு கடுமையான மற்றும் தொடர்ச்சியான நினைவூட்டலாக அமைகிறது. இன்று உலகளாவிய டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை மற்றும் நிபுணத்துவ உத்திசார் பகுப்பாய்வு காலகட்டத்தில், இந்த நிகழ்வுகளின் உண்மையை அவர்களின் மக்களிடமிருந்து நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாது. அரசியல் என்னும் போர்வையில் மறைக்கப்பட்ட ஒரு இராணுவ ஆட்சியின் யதார்த்தங்களை அவர்கள் இப்போது எதிர்கொள்ள வேண்டும். மேலும், "ஆட்சி" மாற்றம் என்ற கருத்து இப்போது பொது விவாதத்திலும் சிந்தனையிலும் இடம்பெற வேண்டும்.


உள்நாட்டுப் பாதுகாப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துதல்


தொடர்ந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகள் இந்தியாவிற்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படைகள் எந்த நேரத்திலும் செயல்படுவதற்கு மிகவும் தயாராக இருக்க வேண்டும். 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையின் தொடக்கச் சுற்றுக்குப் பிறகு, எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய ஆயுதப் படைகள் ஏற்கனவே தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன என்று நாம் நம்புவோம். ”தன்னிறைவு இந்தியாவை” (Atmanirbharata) அடைவதற்காக, பாதுகாப்புத் தொழில் துறை உண்மையான அளவில் தனது செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பது சமமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாக்கமாகும். பெரிய அளவில் "புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி" செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


பாதுகாப்பு, வானூர்தியியல், விண்வெளி, சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் உள்ள பொது மற்றும் தனியார் தொழில்துறைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் சீர்திருத்தங்களில் அரசாங்கம் வலுவாகக் கவனம் செலுத்தியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது உள்நாட்டு அமைப்புகளின் சிறப்பான செயல்பாடு, இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனச் சூழலுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. "மாற்றத்தின் முகவராக" மாறுவதற்கான முக்கியப் பொறுப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகங்கள், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் ஓரளவிற்கு, இந்த அமைப்பில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களிடமே உள்ளது. இந்த அமைப்புகளுக்கு இனி நடவடிக்கையைத் தாமதப்படுத்தும் வாய்ப்பில்லாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட முழு தனியார் துறையையும், ஒரு 'தேசியம் தழுவிய' அணுகுமுறையின் மூலம் ஒரு உள்நாட்டுச் சூழலமைப்பில் உண்மையாக ஒருங்கிணைப்பதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகம் மற்றும் சீர்திருத்தங்களின் இந்த முக்கியமான காலகட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளது. மேலும், கணிக்க முடியாத புவிசார் அரசியல் சூழலானது, உண்மையான தற்சார்பு நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேம்படுத்துகிறது.


இறுதியில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான “மோடியின் சிவப்பு கோடுகள்” (Modi redlines) நிரந்தரமானவை. இந்த வரம்புகளும் கொள்கைகளும் இப்போது ஒரு புதிய இயல்புநிலையின் அங்கமாகிவிட்டன. இந்த மாற்றத்தை இனி பின்வாங்கச் செய்ய இயலாது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் உத்திசார் சிந்தனையை இதுவே வடிவமைக்கும். தேசம் இந்த அணுகுமுறைக்குக் குறைவாக எதையும் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கொள்கைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் எவருக்கும் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பார்கள். 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) வெற்றியடையப் பங்களித்த அனைவருக்கும் எனது வணக்கம்.


ஆர்.கே.எஸ். பதௌரியா, முன்னாள் விமானப்படைத் தளபதி (Air Chief Marshal) ஆவார். இவர் இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர்.


Orginal article:  A watershed moment in India’s defence posture -R.K.S. Bhadauria

Share:

எரிபொருள் நுகர்வோர் மீதான தாக்கத்தைக் குறைக்கும் வகையில், இந்தியா மேற்கு ஆசிய நெருக்கடியைக் கையாண்டது குறித்து . . . -சஞ்சய் குமார் கர்

 ஆனால், உலகளாவியளவில் கச்சா எண்ணெய் விலைகள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படாததாலும், அதிகரித்து வரும் நஷ்ட ஈடுகளால் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாலும், உள்நாட்டு எரிபொருள் விலையேற்றம் தற்போது தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல், உலகெங்கிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்குப் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz), அதன் மிகக் குறுகிய இடத்தில் வெறும் 21 மைல் அகலம் கொண்ட இந்த நீரிணை, ஈரானை ஓமானின் முசந்தம் தீபகற்பத்திலிருந்து (Musandam Peninsula) பிரிக்கும் ஒரு மெல்லிய நீர்வழியாகும். இதன் வழியாக, தினமும் சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் அதற்கு இணையான பொருட்களும், உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) ஐந்தில் ஒரு பங்கும் இதன் வழியாக கடந்து செல்லப்பட்டது.  இதற்கு மாற்றாக வேறு எந்த நீர்வழியும் தற்போது இல்லை. எனவே, இந்த ஹார்முஸ் நீரிணையானது மிகவும் பரபரப்பான மற்றும் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.


அதிகரித்த பதற்றம், மோதல் மற்றும் போர் சூழல்கள் வர்த்தகப் பாதையைப் பாதித்தன. இதன் விளைவாக, இந்தப் பாதை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(LNG) ஆகியவற்றின் போக்குவரத்து தடைபட்டது. ஹார்முஸ் நீரிணையை இந்தியா அதிக அளவில் சார்ந்திருப்பதால், அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40%-க்கும், திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியில் 80%-க்கும் மேலாகவும் வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது என்ற வர்த்தகப் புள்ளிவிவரங்களிலிருந்து இந்த உண்மை தெளிவாகிறது. எனவே, இந்தியாவின் எரிசக்தி வர்த்தகத்திற்கு இந்த நீரிணை மிகவும் இன்றியமையாதது. உலகின் 3-வது பெரிய எரிசக்தி நுகர்வோரான இந்தியாவிற்கு, இந்த மிகப்பெரிய ஒற்றை எரிசக்தி வர்த்தகப் பாதையில் ஏற்பட்ட தடையானது கடுமையான இடர்ப்பாடுகளை உருவாக்கியுள்ளது.

போர்க்கால அடிப்படையில்


இந்தியா பாரம்பரியமாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் மிகவும் வலுவான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகிறது. இதன் காரணமாக, அதிகரித்து வரும் சவால்களை இந்தியா மிகவும் திறம்பட கையாளும் திறன் கொண்டது என்று வாதிடுவது நியாயமானது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மேற்கு ஆசிய மோதலால் உள்நாட்டுப் பங்குதாரர்கள், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வோர், மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகப் பல அமைச்சகங்கள் தொடர்ந்து பணியாற்றின. வெளிநாட்டு தாக்கங்களை உள்நாட்டு நுகர்வோரிடமிருந்து விலக்கி வைப்பதற்காக, அரசாங்கம் உத்திகளை நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியது. உதாரணமாக, வீட்டு உபயோகம், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நுகர்வோர் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சாத்தியமான எல்பிஜி நெருக்கடியை அரசாங்கம் முன்கூட்டியே கணித்தது. சாத்தியமான அனைத்து சவால்களையும் மீறி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சரியான நேரத்தில் செயல்பட்டு அந்தச் சவால்களைத் தீர்த்தது. எல்பிஜி இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க பெட்ரோலியத் தொழில்துறையால் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துத் தடைகளையும் மீறி, பெட்ரோலியப் பொருட்களின் விநியோகப் பாதுகாப்பைப் பேணுவதற்காகத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன. நகர எரிவாயு விநியோக அமைப்புக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க அரசாங்கம் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை, எந்தவொரு சாத்தியமான நெருக்கடியையும் தவிர்க்க உதவியது.


உள்நாட்டுச் சந்தையில், எரிபொருள் விநியோகப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கம் டீசல் மற்றும் விமான டர்பைன் எரிபொருள் மீது தற்காலிக ஏற்றுமதி வரியை விதித்தது. இத்தகைய நடவடிக்கைகள், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்லாமல், சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உதவியது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பது போன்ற உத்திசார்ந்த நடவடிக்கைகள், உள்நாட்டு எரிபொருள் விலை கட்டுப்படியாகும்படி வைத்திருக்க உதவியது. மோதல் காலகட்டத்தில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தின. பிப்ரவரி 2026 முதல், ஜப்பான், ஸ்பெயின், தென் கொரியா, இஸ்ரேல், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை 24-35% வரை அதிகரித்துள்ளது. மிகவும் சமாளிக்க முடியாத சவால்கள் இருந்தபோதிலும், இந்திய அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் சீரான விநியோகத்தைப் பராமரித்து, விலை நிலைத்தன்மையை உறுதி செய்தது.  மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் தேர்தல்கள் காரணமாக எரிபொருள் விலையின் அதிகரிப்பை நிறுத்தி வைக்கப்பட்டதாகப் பலர் வாதிடலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எரிபொருள் விலை உயர்வின் சுமையைத் தாங்கிக்கொள்ள நடுத்தர வர்க்கத்தின் வரையறுக்கப்பட்ட திறனை அரசாங்கம் கவனமாக மதிப்பிட்டது. உயர்ந்து வரும் விலைகள் மற்றும் அவற்றின் பரந்த பொருளாதார விளைவுகளிலிருந்து உள்நாட்டு நுகர்வோருக்குப் போதுமான பாதுகாப்பு தேவை என்று அரசாங்கம் கருதியதாகத் தெரிகிறது.


அரசாங்கமும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் (oil marketing companies (OMC)) இந்த நிதிச் சுமையை தானாகவே ஏற்றுக்கொண்டன. கலால் வரி குறைக்கப்பட்ட பிறகும் கூட, மார்ச் மாத நடுப்பகுதிக்கும் ஏப்ரல் மாத இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அவற்றின் மதிப்பிடப்பட்ட வருவாய் இழப்புகள் சுமார் ₹30,000 கோடியாக உள்ளன. ஒருவேளை கலால் வரி குறைக்கப்பட்டிருக்காவிட்டால், இந்த இழப்புகள் ஏறக்குறைய ₹62,500 கோடியாக உயர்ந்திருக்கும். மேற்கு ஆசிய நெருக்கடியின் தொடர் விளைவுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளால் தவிர்க்க இயலவில்லை. இதில் விநியோகத் தடங்கல்கள், பெட்ரோலியப் பொருட்களின் பங்கீட்டு முறை மற்றும் விலை உயர்வு ஆகியவை இந்த விளைவுகளில் அடங்கும். இதுவரை, இதேபோன்ற வளக் கட்டுப்பாடுகளைக் கொண்ட மற்ற நாடுகளைவிட, இந்தியா இந்தச் சூழ்நிலையைச் சிறப்பாகவே கையாண்டுள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எதிர்காலத்தில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்த எரிபொருள் விலை உயர்வின் ஒரு பகுதியை நுகர்வோர்மீது சுமத்தக்கூடும் என்பதும், அத்தகைய முடிவுகளைக் கண்டு நுகர்வோர் விரைவில் ஆச்சரியப்படத் தேவையில்லை என்பதும் தெளிவாகிறது.




இராஜதந்திர கையிருப்புகள்


கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில், 5.33 மில்லியன் டன்கள் (MMT) அளவிலான 'இராஜதந்திர பெட்ரோலியக் கையிருப்புகளை' (Strategic Petroleum Reserves (SPR)) உருவாக்க அரசு எடுத்த முடிவு, நாட்டிற்குப் போதுமான பாதுகாப்பு அரணை வழங்குகிறது. மேற்கு ஆசிய நெருக்கடியானது, இந்தியா தனது இராஜதந்திர பெட்ரோலியக் கையிருப்பு (SPR) அளவை 10 மில்லியன் டன்களுக்கும் (MMT) மேலாக விரிவுபடுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. அழுத்தப்பட்ட உயிரிவாயு (compressed biogas) மற்றும் 20% எத்தனால் கலப்பு ஆகியவற்றின் மீதான கவனம், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க உதவுகின்றன. மிக முக்கியமாக, புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல் மூலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தும் அரசின் முயற்சி, தேசிய நலனுக்குப் பெரிதும் உதவும்.


மேலும், இடர்பாடுகளைக் குறைக்கவும், வர்த்தகத்தைச் சுலபமாக்கவும், அரசு பல்வேறு இராஜதந்திர மற்றும் உத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக, ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்தது, வெளியுறவு அமைச்சகத்தின் கடுமையான இராஜதந்திர நடவடிக்கையின் விளைவாகும். மேற்கு ஆசிய மோதல் காரணமாக, பாரசீக வளைகுடா வழியாகப் பெட்ரோலியம் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கான காப்பீட்டு (இடர்) பிரீமியம் கடுமையாக உயர்ந்தது. இது இறக்குமதியாளர்களுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியது. இந்திய நிறுவனங்களின் வர்த்தகத்தைச் சுலபமாக்கும் நோக்கில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ₹12,980 கோடி மதிப்பிலான 'பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பை' (Bharat Maritime Insurance Pool) உருவாக்கியது. மேலும், உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள், புவிசார் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் இந்தியக் கப்பல்கள் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலை ஆகியவற்றால் எழும் இடர்களைக் குறைக்க, இந்தத் தொலைநோக்குச் சிந்தனையுடனான உத்திசார்ந்த முடிவு இதற்கு உதவும். மேலும் இது, இந்திய மற்றும் வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு இடையே இயங்கும் கப்பல்களுக்கு உரிய நேரத்தில் ஆதரவை வழங்குகிறது.


பிரதமர் மோடி தலைமையிலான 'புதிய இந்தியா' (Naya Bharat), இடர்களைக் குறைப்பதிலும், சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், மேற்கு ஆசிய நெருக்கடியானது உலகளாவிய அளவில் கடைசியானதல்ல, ஆனால் இதுபோன்ற தாக்கங்களைச் சமாளிப்பதற்கான இந்தியாவின் தயார்நிலை முன்பைவிட சிறப்பாக உள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்ததால், 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்தன. வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகளின் சுமையை நுகர்வோர்மீது சுமத்தின. அவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலைகளை உயர்த்தினர்.


சில நாடுகள் தங்கள் உள்நாட்டுச் சந்தைகளைத் தக்கவைப்பதற்காக, பங்கீட்டு நடவடிக்கைகளை விதிப்பது மற்றும் அவசரகால நிதித் திட்டங்களைச் செயல்படுத்துவது வரை சென்றன. இருப்பினும், இந்தியா தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றமின்றி இருந்தன. இதனால், 33.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றிச் சென்றதுடன், விமான டர்பைன் எரிபொருள் விலைகளும் நிலையாக இருந்தன. இந்திய அரசாங்கமும், அதன் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து, ஒட்டுமொத்த எரிசக்தி விநியோகச் சங்கிலி (energy value chain) முழுவதிலும் ஏற்பட்டிருந்த பெரும் அழுத்தத்தை, திட்டமிட்டே ஏற்றுக்கொண்டன.


இருப்பினும், இந்தத் தற்காலிகப் பாதுகாப்பு அரண் காலவரையின்றி நீடிக்க முடியாது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறையும் அறிகுறிகள் தென்படாததாலும், அதிகரித்து வரும் நஷ்ட ஈடுகளால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாலும், உள்நாட்டு எரிபொருள் விலையேற்றம் என்பது தற்போது தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. இந்தியா தனது பாதுகாப்பு நிலையை பொருளாதாரரீதியாக சாத்தியமான அளவிற்கு நீட்டித்துள்ளது. மேலும், பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலையை மறுசீரமைப்பதற்கான தருணம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இக்கட்டுரையை, ராஜீவ் காந்தி பெட்ரோலியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சஞ்சய் குமார் கார் எழுதியுள்ளார்.


Orginal article:  India managed the West Asia crisis to reduce impact on fuel consumers -Sanjay Kumar Kar 

Share:

இந்தியத் தரவு அமைப்பில் உள்ள பெரும் சிக்கல் -அபிஷேக் ஷர்மா

 சிறந்த நிர்வாகத்தை அடைவதற்கு, இந்தியா தரவுத் தரப்படுத்தலை (data standardisation) உறுதி செய்ய வேண்டும்


நாடாளுமன்றத்தின் மற்றொரு கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், இந்த அவையில் ஒரு வழக்கமான போக்கு காணப்பட்டது. நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான பொறுப்புணர்வு வகிக்கும் பணிகளில் ஒன்றை நிறைவேற்றும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கேள்விகளைக் கேட்க எழுந்து நின்றனர். இருப்பினும், இந்தக் கேள்விகளில் பெரும்பகுதி, எத்தனை பள்ளிகளில் செயல்படும் கழிப்பறைகள் உள்ளன? ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எத்தனை ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டன? அல்லது ஒரு குறிப்பிட்ட திட்டத்தின்கீழ் எத்தனை பயனாளிகள் பயனடைந்தனர்? என்பது போன்ற, கணிக்கக்கூடிய ஒன்றையே பின்பற்றுகின்றன.


இந்தக் கேள்விகள் சில முக்கியமான பொதுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தாலும், இதில் கேட்கப்படும் தகவல்கள், தெளிவான, தரப்படுத்தப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிலையில், பொதுவெளியில் ஏற்கனவே கிடைக்கக்கூடியதற்கான சாத்தியக்கூறுகளை நிறைவேற்றிருக்க வேண்டும்.


இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து 17-வது மக்களவையில் (2019-24) கேட்கப்பட்ட நாடாளுமன்றக் கேள்விகளைப் பகுப்பாய்வு செய்ததில், அவற்றில் பெரும்பகுதி இதுபோன்ற அடிப்படையான உண்மைகளையே கோரியது என்பது தெரியவந்தது. ஆனால், இந்தியாவின் இந்த தரவு அமைப்பு சிதறிய நிலையில் உள்ளது மற்றும் வெவ்வேறு அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று சுமுகமாகச் செயல்பாட்டில் இல்லை என்ற மிக ஆழமான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த விவாதத்தில் மிகப்பெரிய பிரச்சினை தரவுத் தரப்படுத்தல் (data standardisation) ஆகும். ஆனால், அது குறைவான அளவிலே வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. பொதுவான தரநிலைகள் இல்லாமல், மிகவும் லட்சியமான கொள்கைத் திட்டங்கள்கூட நம்பகத்தன்மையற்றதாகவும் நிலையற்றதாகவும் ஆகிவிடும்.


சிக்கலின் கட்டமைப்பு


நிதிஆயோக் வெளியிட்ட தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தின் தொலைநோக்கு ஆவணத்தில், இந்தியாவின் தரவுச் சூழலமைப்பு சீரற்றதாகவே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் பகிரப்பட்ட குறிகாட்டிகளுக்குப் பொதுவான தரநிலைகளைப் பயன்படுத்தத் தவறுவதோடு, கால அளவு மற்றும் பிராந்தியம் போன்ற அடிப்படைப் பண்புகளைக் கூட வெவ்வேறு துறைகளால் வித்தியாசமாக வரையறுக்கப்படுகின்றன. இந்தியா இப்போது முன்னெப்போதையும்விட அதிக தரவுகளை உருவாக்குகிறது. இருப்பினும், மிகுதியான தரவுகள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருப்பதில்லை. தனிப்பட்ட அமைச்சகங்கள் தங்களின் சொந்தத் திட்டங்களுக்காகச் சேகரிக்கும் தரவுகளைப் பெரும்பாலும் தடையின்றிகூட ஒருங்கிணைக்க முடிவதில்லை. இதன் விளைவாக, தரவுகளை ஒன்றிணைக்கும் செயல்பாடு மெதுவாகவும், கடினமாகவும், பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆகிறது.


ஜூன் 2025-ல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) அறிக்கையின்படி, நலத்திட்டங்களுக்கான தரவுத்தளங்களில் ஒரே பயனாளியின் பெயர் பலமுறை பட்டியலிடப்படுவதால், ஆண்டுதோறும் 4% முதல் 7% வரை செலவினங்களின் அதிகரிப்பதால் நிதிசார் கசிவுகளுக்கு (fiscal leakages) வழிவகுக்கிறது. இத்தகைய செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்வதன் மூலம் எத்தகைய நிதிச் சேமிப்பையும் ஈட்டமுடியும் என்பதை, சமீபத்தில் அரசாங்கம் மேற்கொண்ட தரவுச் சுத்திகரிப்புப் பணிகள் (government data clean-ups highlight) சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) திட்டத்திலிருந்து தகுதியற்ற 17.1 மில்லியன் பெயர்களை நீக்குவதன் மூலம் 2024 நிதியாண்டில் ₹90 பில்லியன் சேமிக்கப்படும் என்றும், 35 மில்லியன் போலி எல்பிஜி இணைப்புகளை அகற்றுவதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் ₹210 பில்லியன் சேமிக்கப்படலாம் என்றும், 16 மில்லியன் போலி குடும்ப அட்டைகளை நீக்குவதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ₹100 பில்லியன் சேமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த செயல்திறன் குறைபாடுகள் குறிப்பிடத்தக்க கொள்கைரீதியான தாக்கங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, சுகாதாரத் துறையில், சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு, நோய் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் தடுப்பூசி பதிவேடுகளில் குழந்தைப் பருவ காசநோய் பாதிப்புகள் தனித்தனியாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், இதன் விளைவாக ஒரே நோயாளி பலமுறை கணக்கிடப்படுகிறார் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. இத்தகைய இரட்டிப்பு, முரண்பாடான மதிப்பீடுகளை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் முடிவெடுப்பவர்களை (decision-makers) நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுவதோடு, சிலர் தனிப்பட்ட அனுபவங்களுக்கோ அல்லது அரசியல் ஆதாயத்திற்கோ ஆதரவாகத் தரவுகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் வழிவகுக்கிறது.


கொள்கைரீதியான தாக்கங்களைத் தாண்டி, இந்தக் குறைபாடுகள் கருத்து மற்றும் பொருளாதாரரீதியான இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய புத்தாக்கக் குறியீடு-2024-ல் (Global Innovation Index 2024), இந்தியாவில் இரண்டு குறிகாட்டிகளுக்கான தரவுகள் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், எட்டு குறிகாட்டிகளுக்கான தரவுகள் காலாவதியானவையாக இருந்தன. இந்தக் குறிகாட்டிகளில் பல, ஒரு வருடத்திற்கும் மேலான பழைய புள்ளிவிவரங்களைச் சார்ந்திருந்தன.


ஒருங்கிணைந்த வழிமுறைகள் இல்லாமல், இத்தகைய குறியீடுகள் உண்மையான செயல்பாட்டை மறைப்பதோடு, முகமைகளுக்கு (அரசு நிறுவனங்களுக்கு) இடையேயான ஒருங்கிணைப்பில் உள்ள இடைவெளிகளையும் வெளிப்படுத்துகின்றன. பொருளாதாரரீதியாக, பொதுத்துறைத் தரவுகளின் கிடைக்கும் தன்மையையும் பகிர்வையும் மேம்படுத்துவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% வரை கூடுதலாகச் சேர்க்க முடியும் என்றும், தனியார் துறைத் தரவுகளையும் சேர்த்தால் இது 2.5% ஆக உயரும் என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) மதிப்பிடுகிறது. குறிப்பிடும்படியாக, மோசமான தரவு நிர்வாகமானது, தவறான முடிவுகளில் மட்டுமல்ல, வீணடிக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகளின் இழப்பிற்கும் வழிவகுக்கிறது.




தரவுகளுக்கான பொதுவான தரநிலை


இந்த செயல்திறன் குறைபாடுகளுக்கான ஒரு சாத்தியமான தீர்வை தேசிய தரவு நிர்வாக கட்டமைப்பு கொள்கையில் (National Data Governance Framework Policy (NDGFP)) காணலாம். இதில் முன்மொழியப்பட்டுள்ள இந்திய தரவு மேலாண்மை அலுவலகம் (India Data Management Office (IDMO)), அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் தரவுகளுக்கான பொதுவான விதிகள், தரநிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்கி அமல்படுத்துவதன் மூலம் சீர்திருத்தத்தின் முக்கியத் தூணாக விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும், அமைச்சகங்கள் முழுவதும் கட்டுப்படுத்தும் தரநிலைகளை அமைக்கவும், இணக்கத்தை தணிக்கை செய்யவும், வரையறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்த சர்ச்சைகளைத் தீர்க்கவும் இந்திய தரவு மேலாண்மை அலுவலகத்திற்கு (IDMO) உண்மையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், செயல்திறன் குறைபாடுகள் தொடர வாய்ப்புள்ளது.


மேலும், பொருளாதாரக் குறிகாட்டிகளுக்கான ஐ.நா.வின் தேசிய கணக்குகள் அமைப்பு (UN’s System of National Accounts) போன்ற உலகளாவிய புள்ளிவிவரக் கட்டமைப்புகளுடன் சீரமைப்பதும், அவற்றை ஒரு தேசிய புள்ளிவிவரத் தரநிலைகள் கையேட்டில் (National Statistical Standards Manual) ஒருங்கிணைப்பதும், நாடு தழுவிய அளவில் வரையறைகளையும் நடைமுறைகளையும் ஒன்றிணைக்கக்கூடும்.


எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் திறந்த தரவுத் தளமான “data.gov.in”, என்ற இணையத்தில் பொதுவான தகவல்களைப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் மற்றும் அரசாங்கத்தின் உள் தேவைகளுக்கும் சேவை செய்யும் ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் சீரான தரவுக் களஞ்சியமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். அமைச்சகங்கள் தரப்படுத்தப்பட்ட வடிவங்களில் தரவுத் தொகுப்புகளைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்நேர, மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களை அணுகுவதற்கு வழிவகுக்கும்.


ஒரு அளவுகோலாக


இறுதியாக, முன்னேற்றத்தைத் தக்கவைப்பதற்குப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானதாக இருக்கும். நிதி ஆயோக்கின் தரவு நிர்வாகத் தரக் குறியீடு, அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களுக்கான செயல்திறன் மதிப்பாய்வுகள் மற்றும் ஊக்கத்தொகைகளுடன் இணைக்கப்பட்ட ஒரு வருடாந்திர அளவுகோலாக இருக்க வேண்டும். ஏனெனில், தரவுத் தரத்தை மேம்படுத்துவதில் உள்ள ஆரோக்கியமான போட்டியானது, பொருளாதாரப் போட்டியைப் போலவே மாற்றத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்லும்.


தரவுத் தரப்படுத்தல் என்பது பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பணியாக மட்டுமே குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பும் ஒரு தேசம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அரசு நிர்வாகத்தின் இலக்கணமாகும். தரவு அறையில் உள்ள மிகப்பெரிய சிக்கலைச் சமாளிப்பது என்பது, இந்தியாவின் தரவுகளை அதன் நோக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்றதாக மாற்றும் தரநிலைகள், அமைப்புகள் மற்றும் மேலாண்மைக்கு உறுதியளிப்பதாகும்.


அபிஷேக் ஷர்மா ஒரு மூத்த கொள்கை மற்றும் அரசியல் ஆராய்ச்சியாளர்.


Orginal article:  The elephant in India’s data room -Abhishek Sharma

Share: