நிலையான வேளாண்மைக்கான நிதி இடைவெளிகளைக் குறைத்தல். -ஏ.அமரேந்தர் ரெட்டி, துளசி லிங்கரெட்டி

 உலகளவில், தகவமைப்பு நிதி குறைந்து வருகிறது. இந்தியா தனது உள்நாட்டு ஆதாரங்களை, குறிப்பாக தனியார் துறையிலிருந்து வலுப்படுத்த வேண்டும்.


நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல், முக்கிய சிறு வேளாண் பணிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வேளாண் உணவு உற்பத்தி முறையில் மீள்தன்மைக்கான நிதியுதவிக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க வேண்டும். தொடர்ச்சியான தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நவம்பர் 2025-ல் ஜெர்மன்வாட்ச் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு காலநிலை ஆபத்து குறியீட்டின்படி, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.               

                 

  சர்வதேச பொது நிதி ஓட்டங்களிலிருந்து தகவமைப்புக்குத் தேவையான நிதிக்கும் உண்மையான நிதிக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP)) வெளியிட்ட சமீபத்திய Adaptation Gap Report 2025 படி, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பருவநிலை மாற்ற ஒழுங்கீட்டு நிதி (Adaptation Finance) தேவைகள் 2035-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு $310–365 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஆண்டுக்கு $26 பில்லியன் என உள்ள நடப்பு நிதியோட்டத்துக்கு 12–14 மடங்கு அதிகமானது. இந்த சூழலில், இந்தியா உள்ளூர் பருவநிலை நிதி சூழலை (Domestic Climate Finance Ecosystem) பலப்படுத்தி, எதிர்கால உணவு பாதுகாப்பையும், உழவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.


உலகளவில், தகவமைப்பு நிதி திரட்டுதல் கணிசமாகக் குறைந்துள்ளது. இது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இருப்பினும், பிரேசிலின் பெலெமில் நடந்த COP30 மாநாட்டின் போது, ​​குறிப்பாக வேளாண்மையில் தகவமைப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) ஆகியவற்றால் நவம்பர் 2025-ல் வெளியிடப்பட்ட 'தேசிய தகவமைப்பு திட்டங்களில் வேளாண் உணவு அமைப்புகள் - ஒரு பகுப்பாய்வு' அறிக்கையின்படி, வேளாண் உணவு முறை மொத்த தகவமைப்பு நிதியில் 20 சதவீதத்தை மட்டுமே பெறுகிறது.


புதிய தளம்


இதைக் கருத்தில் கொண்டு, COP30-ல் இந்தியாவும் 13 வளரும் நாடுகளும் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund (GCF)) ஆதரவுடன் தேசிய தகவமைப்புத் திட்டத்திற்கான (NAP) செயல்பாட்டு வாகனமாக மாறக்கூடிய ஒரு புதிய நாட்டு தளத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டன. உள்நாட்டு பொது நிதி, தனியார் முதலீடு மற்றும் சர்வதேச பருவநிலை நிதிகளை இணைக்கும் ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தியாவில், வேளாண் துறையில் தகவமைப்பிற்கான உள்நாட்டு காலநிலை நிதி ஓட்டங்களின் நிலை குறித்து விரிவான மதிப்பீடு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், காலநிலை கொள்கை முன்முயற்சி (Climate Policy Initiative (CPI)) மூலம் கண்காணிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2021-22-ஆம் ஆண்டில் தகவமைப்பிற்கான மொத்த நிதியில் 24 சதவீதம் மட்டுமே ₹265 பில்லியன் ($3.6 பில்லியன்) ஆகும்.  இது ₹1,092 பில்லியன் ஆகும். வேளாண் காடுகள் வளர்ப்பு, பயிர் காப்பீடு, திறமையான நீர்ப்பாசனம், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு, மீள் பயிர் அமைப்பு மற்றும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பண்ணையில் விவசாய தகவமைப்பு நடவடிக்கைகளை இந்த மதிப்பீடு கண்காணித்தது. இருப்பினும், இந்தியாவில் வேளாண்மைக்கான தகவமைப்பு நிதியளிப்பு 2015ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு  வரை ஆண்டுதோறும் தேவையான $67 பில்லியனை விட  குறைவாகவே இருந்தது. இந்த பெரிய நிதி இடைவெளிக்கான முக்கிய காரணங்கள் தனியார் துறையின் மிகக் குறைந்த பங்கேற்பு மற்றும் சர்வதேச பொது ஆதாரங்களில் இருந்து வரையறுக்கப்பட்ட நிதி உதவி ஆகும்.


பொதுத்துறை நிதி ஆதாரங்கள், முக்கியமாக ஒன்றிய மற்றும் மாநில அரசு வரவு செலவுத் திட்டங்களிலிருந்து, 98-99 சதவீதமாக இருந்தன. அதே நேரத்தில் தனியார் நிதி,  ₹2.7 பில்லியனாக, வேளாண்மையில் தகவமைப்பிற்கான மொத்த உள்நாட்டு நிதியில் 1 சதவீதம் மட்டுமே உள்ளது.


தனியார் துறையின் மோசமான பங்களிப்புக்கு வேளாண்மையில் உள்ளார்ந்த முதலீட்டு அபாயங்கள் முக்கிய காரணமாகும். தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரித்த அதிர்வெண், வருமானத்திற்கான நீண்ட கர்ப்ப காலங்கள், தெளிவான வணிக நிகழ்வுகளை வரையறுப்பதில் சிரமங்கள் உள்ளன. மேலும், இத்தகைய முதலீடுகளிலிருந்து தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துபவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு உழவர்களாக உள்ளனர். சிறிய மற்றும் சிதறிய நிலப்பரப்புகள் காரணமாக, பொருளாதார அளவுகளை (Economies of Scale) அடைவது கடினமாகிறது. இதனால் தனியார் துறையில் பெரிய அளவிலான முதலீடுகள் செய்யும் ஆர்வம் குறைகிறது.


இத்தகைய சூழ்நிலையில், பொது நிதி, தனியார் நிதிகளை விட  முன்னுரிமை பெற வேண்டும். இருப்பினும், தனியார் துறை, கலப்பு நிதி, பொது-தனியார் கூட்டாண்மை, குறைந்தபட்ச உறுதியான வருமானத்துடன் கூடிய திட்டங்கள் போன்ற பொருத்தமான நிதி உத்திகள் மற்றும் கருவிகளுடன் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.


மேலும், நன்கு செயல்படும், திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான உள்ளூர் பருவநிலை நிதி சூழலை (Domestic Climate Finance Ecosystem) உருவாக்குவது முக்கியம். இதனால் நிதி தடையின்றி கிடைக்கும் மற்றும் பருவநிலை ஆபத்துகளை மதிப்பிடுவதற்கான முழுமையான அறிவு மற்றும் தரவுகள் உருவாகும்.


ரெட்டி, ராய்ப்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (indian agricultural research institute (ICAR)) தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனத்தின் கொள்கை ஆதரவு ஆராய்ச்சியின் இணை இயக்குநராக உள்ளார். மேலும், லிங்கரெட்டி மும்பையில் நிலையான நிதி மற்றும் வேளாண்மைக்கான மூத்த பொருளாதார நிபுணராக உள்ளார்.


Original article : Bridging funding gaps for sustainable farming. -A Amarender Reddy, Tulsi Lingareddy

Share:

2022–23 அடிப்படை ஆண்டாகக் கொண்டு புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் வெளியிடப்பட்டன. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) தேசிய வருமானக் கணக்குகளின் புதிய தொடரை வெளியிட்டுள்ளது. இது 2011-12-ஆம் ஆண்டிலிருந்து 2022-23-ஆம் ஆண்டுக்கு அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது. மேலும், தேசிய கணக்குகளை தற்போதுள்ள பொருளாதார நிலைகளுடன் சீரமைக்கும் நோக்கில் வழிமுறை சீர்திருத்தங்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடைசியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்பது ஆண்டிற்கு ஆண்டான பொருளாதார வளர்ச்சி அல்லது ஒரு நாட்டின் பொருளாதார அளவை மதிப்பீடு செய்யும் முக்கியமான அளவுகோல் ஆகும். “அடிப்படை ஆண்டு (base year)” என்பது கணக்கீடுகளுக்கான துவக்க ஆண்டாகக் குறிப்பிடப்படும் ஆண்டு ஆகும். இப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2022-23 ஆகும். 2022-23-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, அடுத்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கான "அடிப்படையாக" பயன்படுத்தப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டது 8-வது திருத்தமாகும்.


2. மொத்த மதிப்பு கூட்டளிற்கான இரட்டை பணவாட்ட முறை (Double-deflation method): 2022-23-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் முக்கியமான மாற்றங்களையும் கண்டுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது, பெயர் மதிப்பிலான  விலை மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்து நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தியாக மாற்றும் முறை ஆகும். வேளாண்மை மற்றும் சுரங்கத் துறை (mining and quarrying) தவிர மற்ற அனைத்து துறைகளின் மொத்த மதிப்பு சேர்க்கை (Gross Value Added (GVA)) கணக்கிடுவதற்கு புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பயன்படுத்திய “ஒற்றை விலைச் சீரமைப்பு முறை” (single-deflator), சில சமயங்களில் பொருள் விலைகள் குறைந்திருந்தாலும் அல்லது நுகர்வோர் விலைகளைப் போல வேகமாக உயராத நிலையிலும், வளர்ச்சி அளவு அதிகமாக காட்ட வேண்டிய சுழலிற்கு வழிவகுக்கும்.



ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் ஒற்றை விலைச் சீரமைப்பு முறையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இரட்டை விலைச் சீரமைப்பு முறையை பயன்படுத்துகிறது. உள்ளீடு மற்றும் வெளியீடுகளை அந்தந்த பணவீக்க விகிதங்களால் சரிசெய்கிறது. விலைச் சீரமைப்பு முறைகளும் மிகவும் நுணுக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை துல்லியமாக தெரிந்து கொள்ள அனுமதிக்கிறது.


3. தரவு மற்றும் கணக்கெடுப்புகளின் புதிய ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன: இது சரக்கு மற்றும் சேவை வரி, இ-வாகன், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு, காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு போன்றவற்றிலிருந்து தரவை இணைத்துள்ளது. மேலும், தேசிய கணக்கியல் தரவுகளை விநியோகம் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகள் (Supply and Use Tables) உடன் இணைப்பதன் மூலம், உற்பத்தி முறையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி  மற்றும் செலவின முறையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி  ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படும் வேறுபாட்டை குறைக்க புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) முயற்சி செய்கிறது.


4. இந்தியாவிற்கான தேசிய வருமானம் (GDP) பற்றிய முதல் மதிப்பீடுகள் 1949ஆம் ஆண்டு PC மஹலனோபிஸ் தலைமையில் “தேசிய வருமானக் குழுவால்” (National Income Committee) தொகுக்கப்பட்டன. இந்தக் குழுவின் தேசிய வருமானம் பற்றிய முதல் மற்றும் இறுதி அறிக்கைகள் முறையே 1951ஆம் ஆண்டு மற்றும் 1954-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.


5. பின்னர், அதிகமான மற்றும் தரமான புதிய தகவல்கள் கிடைத்ததால், மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)) மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையை முழுமையாக மறுபரிசீலனை செய்தது. தேசிய கணக்குத் தொடரின் அடிப்படை ஆண்டுகளை மாற்றுவதைத் தவிர, செயல்பாடுகளின் பாதுகாப்பு, சமீபத்திய தரவுத்தொகுப்புகளை இணைத்தல் மற்றும் சமீபத்திய சர்வதேச வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய கணக்குத் தொடரின் தொகுப்பில் மாற்றங்களை செய்ய மத்திய புள்ளிவிவர அலுவலகம்  முயற்சித்தது.


6. அடிப்படை ஆண்டை திருத்துவதற்காக, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை வகுப்பிற்கான நோக்கங்களுக்காக தேசிய கணக்கு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்குவதற்கான வழிமுறைகளில் புதிய தரவு மூலங்களைச் சேர்ப்பது மற்றும் மேம்பாடு குறித்து அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கும் பணியைக் கொண்ட தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவை (Advisory Committee on National Account Statistics (ACNAS)), பேராசிரியர் பி.என். கோல்டர் தலைமையில், மத்திய நிதி அமைச்சகம் இந்த ஆலோசனைக் குழுவை அமைத்தது.


7. கடந்த வாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உட்பட தேசிய கணக்குகளின் பல்வேறு மதிப்பீடுகளைத் தொகுப்பதில் உள்ள வழிமுறை மாற்றங்களை மையமாகக் கொண்ட வழிமுறை மேம்பாடுகள் குறித்த துணைக் குழுவின் அறிக்கையை வெளியிட்டது.


base year

8. தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, வரவிருக்கும் தொடருக்கான அடிப்படை ஆண்டாக நிதியாண்டு 2022–23-ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019–2021-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு, “சாதாரண” நிலைக்கு திரும்பிய சமீபத்திய ஆண்டாக 2022–23 இருப்பதால், அதையே புதிய அடிப்படை ஆண்டாக தேர்வு செய்துள்ளனர். 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகள் COVID-19 தொற்றுநோயால் பாதிப்புகளை சந்தித்தன. இது தற்காலிகமாக நுகர்வு முறைகள் மற்றும் தொழில்துறை உற்பத்தியை மாற்றியது.

9. 2011-12-ஆம் ஆண்டு தொடரில் பயன்படுத்தப்பட்ட விகிதாசார முறைக்கு பதிலாக சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட டென்டன்-விகிதாசார தரப்படுத்தல் முறையைப் பின்பற்றவும் இது பரிந்துரைத்தது. காலாண்டு தேசிய கணக்குகள் (Quarterly National Accounts (QNA)) தொடரில் செயற்கையான தொடர்ச்சிகளை நீக்குவதற்கும் குறிகாட்டிகளின் இயக்கத்தைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது காலாண்டு தேசிய கணக்குகளின் மதிப்பீடுகளை வருடாந்திர தேசிய கணக்குகள் (annual national accounts (ANA)) மதிப்பீடுகளுடன் சீரமைக்கிறது.

10. புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் காதின் கூற்றுப்படி, “தேசிய கணக்குகளில் தரப்படுத்தல் முறை, உயர் அதிர்வெண் தகவல்களை வருடாந்திர அளவுகோலால் வரையறுக்கப்பட்ட குறைந்த அதிர்வெண் தகவல்களின் தொகுப்புடன் (வருடாந்திர மாறிகளின் அடிப்படையில்) தொகுப்போடு இணைப்பதன் மூலம் காலாண்டு தொடர்களைப் பெறப் பயன்படுத்தப்படுகிறது. தரப்படுத்தல் முறை, காலாண்டு தேசிய கணக்குகள் (QNA) தரத்தை மேம்படுத்துகிறது. அவை வருடாந்திர தேசிய கணக்குகள் அளவுகோல்களுடன் ஒத்துப்போகும் மற்றும் காலாண்டு பொருளாதார குறிகாட்டிகளின் குறுகிய கால பரிமாணத்திற்கு ஏற்ப இருக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான காரணம்

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான காரணம், பொருளாதார நிலையை சரியாகப் புரிந்து கொண்டு அறிவிப்பது ஆகும். இது உண்மையான பொருளாதார வளர்ச்சியை (real economic growth) வெளி காட்ட உதவுகிறது. இது பணவீக்கத்தின் விளைவை நீக்கிய பின் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியாகும். சரியான தகவல் அளிப்பது மிக முக்கியம். ஏனெனில், அது அரசின் கொள்கை உருவாக்குனர்களுக்கு  (policymakers) உதவுகிறது. இது பெரிய நிறுவனங்களிடமிருந்து புதிய தொழில்முனைவோர் (entrepreneurs) உட்பட அனைவருக்கும் பயன்படும்.

2. இந்தியா முதலில்  வேளாண்  பொருளாதாரமாகத் தொடங்கியது.  பெரும்பாலான மக்கள் வேளாண்மை அல்லது தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பெரும்பாலான மொத்த உள்நாட்டு உற்பத்தி அந்த நடவடிக்கைகளிலிருந்தே வந்தது. ஒவ்வொரு ஆண்டையும்  கடந்து செல்லும்போது, ​​இந்தியாவின் பொருளாதார அமைப்பு மாறிக்கொண்டே வருகிறது.

3. இன்றைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பெரும்பகுதி 55% சேவைத் துறையிலிருந்து (services sector) வருகிறது. ஆனால், வேளாண்மை மற்றும் பிற துறைகள் 20%-க்கும் குறைவாக பங்களிக்கின்றன.  வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை தற்போதைய காலகட்டத்திலும் குறையவில்லை. வேளாண்மை துறையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை  கணக்கிடுவதற்கும், சேவைத் துறையிலிருந்து கணக்கிடுவதற்கும் வேறு தரவுத்தொகுப்புகள் மற்றும் வேறு முறைகள் தேவைப்படுகிறன.

4. மேலும், தரவுகளில் முன்னேற்றம் ஏற்படும்போதும், பொருளாதார இணைப்புகள் பற்றிய நமது புரிதல் சிறப்பாகும்போதும் இந்த முறைகளும் மாறுகின்றன. உதாரணமாக, 1999 வரை, இந்தியா ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரைத் திருத்தியது. ஒவ்வொரு முறையும், அடிப்படை ஆண்டு 1 என்ற இலக்கத்துடன் முடிவடையும் ஆண்டாக மாற்றப்பட்டது.

5. இந்திய பொருளாதாரத்தில் அங்கீகரிக்கப்படாத (informal/unorganised) துறை மற்றும் அமைப்புசாரா துறைக்கான பணியாளர் மதிப்பீடுகள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டன. எனவே, ஒவ்வொரு திருத்தத்திற்கும் அத்தகைய ஆண்டுகளை அடிப்படை ஆண்டுகளாக மாற்றுவது இயல்பான நடவடிக்கையாகும்.

6. இருப்பினும், 1993-94 தொடரிலிருந்து, மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)), ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (National Sample Survey Organisation (NSSO)) வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து பணியாளர் மதிப்பீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.

7. இதனால், 1999ஆம் ஆண்டு முதல், அடிப்படை ஆண்டு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் (2015-ஆம் ஆண்டு வரை) மாற்றப்பட்டது. இது, தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் (National Statistical Commission) பரிந்துரையின் படி, அனைத்து பொருளாதார குறியீடுகளும் குறைந்தது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை “மீண்டும் அடிப்படை மாற்றப்பட வேண்டும்” என்ற ஆலோசனைக்கு ஏற்ப செய்யப்பட்டது .

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான மூன்று அணுகுமுறைகள்

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் ஒரு ஆண்டில் உருவாகும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும். தற்போதைய விலைகளில் கணக்கிடப்படும் GDP பெயர்மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) என அழைக்கப்படுகிறது. ஆனால், விலை உயர்வால் மதிப்பு அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றால், இது சரியான அளவீடாக இருக்காது.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தியை துல்லியமாக அளவிட பொருளாதார வல்லுநர்கள் மூன்று அணுகுமுறைகளை நம்பியுள்ளனர்: அவை செலவு, வருமானம் மற்றும் தயாரிப்பு ஆகும். அனைத்து அணுகுமுறைகளிலிருந்தும் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரே மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடும் பொருளாதாரத்தின் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.

3. செலவு அணுகுமுறை: இது நான்கு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. அவை தனிப்பட்ட நுகர்வுச் செலவு (personal consumption expenditure (C)), முதலீட்டுச் செலவு (investment expenditure (I), அரசாங்கச் செலவு (government expenditure (G)) மற்றும் உலகின் பிற துறையின் (rest of the world sector (ROW)) மற்ற பகுதிகளின் நிகர ஏற்றுமதிகள் (X-M) ஆகும்.

4. வருமான அணுகுமுறை: இது அனைத்து மூலங்களிலிருந்தும் ஈட்டப்படும் வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. மேலும், ஊதியங்கள் மற்றும் சம்பளங்கள், உரிமையாளர்களின் வருமானம் (சுயதொழில் மற்றும் இணைக்கப்படாத வணிகங்களிலிருந்து கிடைக்கும் வருவாய்), வாடகை வருமானம், நிறுவன இலாபங்கள் மற்றும் ஈட்டப்படும் நிகர வட்டி (ஈட்டப்படும் வட்டியைக் கழித்தல் செலுத்தப்படும் வட்டி) ஆகியவை அடங்கும். கூடுதலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கருத்தில் நிகர மறைமுக வரிகள், புள்ளிவிவர முரண்பாடு, தேய்மானம் மற்றும் உலகின் பிற துறைக்கு செய்யப்படும் நிகர கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும்.

5. தயாரிப்பு அணுகுமுறை: வெளியீட்டு முறை (output method) அல்லது மதிப்பு கூட்டப்பட்ட முறை (value-added method) என்றும் அழைக்கப்படுகிறது. இது உற்பத்தியின் இடைநிலை நிலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தவிர்த்து, உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பையும் சேர்க்கிறது.


Original article : New series of GDP estimates with base year 2022-23 released. -Khushboo Kumari

Share:

நலிவடைந்த நிலையில் உள்ள குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்ளுக்காக (PVTGs) அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் யாவை? -குஷ்பூ குமாரி

 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (Pradhan Mantri Awaas Yojana - Gramin (PMAY-G)) திட்டத்தின் கீழ் வனப்பகுதிகளில் வீடுகள் கட்டுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது; வன உரிமைச் சட்டம் (Forest Rights Act (FRA)), 2006-ன் படி தனிநபர் வன உரிமைகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று Indian Express நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act (FRA)) பிரிவு 3-ன் கீழ், வன உரிமைகளை அங்கீகரிப்பது என்பது வன நிலத்தை உடைமையாக வைத்திருப்பது மற்றும் அங்கு வசிக்கும் உரிமையை உள்ளடக்கியது என்றும்,  கிராம சபையினால் உரிய நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புகள் பின்பற்றப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறது.


— ஒன்றிய அரசின் கருத்துக்கள் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யப்பட்டன. வனப்பகுதிக்குள் வீடுகள் கட்டுவதற்கு அனுமதிப்பதற்கான நோக்கம் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இது வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act), 1980-ன் விதிகளைக் கருத்தில் கொண்டும். அதே, சமயம் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


— 2006ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act), பழங்குடியினர் மற்றும் இதர வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் வரலாற்றுப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கிறது. அதேவேளையில், வனப் (பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) (Van (Samvardhan Evam Sanrakshan) Adhiniyam) பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act) என்பது வன நிலங்களைப் பயன்படுத்துவதையும், வனப் பகுதி அல்லாத பணிகளுக்காக வன நிலங்களை பயன்படுத்துவதையும் முறைப்படுத்துகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட முந்தைய ஆவணங்களில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PM Awas-Gramin Yojana) திட்டத்தின் கீழ் வீடுகள் போன்ற பயன்களைப் பெறுவது என்பது, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளின் ஒரு விரிவாக்கமே ஆகும் என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Tribal Affairs Ministry) தெரிவித்திருந்தது.


— மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி  மாவட்டத்தில் உள்ள பினேகா கிராமத்தில் வசிக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி பிரிவைச் சேர்ந்த (Particularly Vulnerable Tribal Group (PVTG)) சிறிய சகரியா (Sahariya) சமூகத்தினருக்கு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (Pradhan Mantri Awas Yojana - Gramin (PMAY-G)) திட்டத்தின் கீழ் வனப்பகுதியில் வீடுகள் கட்டுவது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு குடிமை மேல்முறையீடு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.


— தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் வனப் பாதுகாப்புச் சட்டத்தை (FCA) மீறுவதாகத் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 63 குடும்பங்களைக் கொண்ட அந்தச் சமூகம் தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.


— இந்த வழக்கின் தீர்ப்பானது, நலிந்த நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து அனைத்துப் பயனாளிகளையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். 


உங்களுக்குத் தெரியுமா:


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) என்பது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (Scheduled Tribes) ஒரு துணைப் பிரிவாகும். இவர்கள் சாதாரண பழங்குடியினரை விட அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் பாதிக்கப்படக்கூடிய  பழங்குடியின  குழுக்களின் பட்டியல் உருவாக்கப்பட்டது.


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) எனப்படும் நலிவடைந்த பழங்குடியின மக்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடம், குறைந்த மக்கள் தொகை மற்றும் தனித்துவமான சமூக-பொருளாதார, கலாச்சார பண்புகளால் பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பழங்குடியின மக்கள் அடிப்படை சேவைகளைப் பெறுவதில் சிரமம், சமூகப் பாகுபாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அல்லது இயற்கை பேரிடர்களால் தங்களது இடங்களை விட்டு வெளியேற்றப்படும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே அரசியல் பிரதிநிதித்துவம் இருப்பதால், முக்கிய முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இவர்களால் பங்கேற்க முடிவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


— பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது நாட்டின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கும் குறைந்த வருமானக் குழுக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக 2015-ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை வீட்டுக் கடன்-இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும்.


— பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஒன்று நகர்ப்புறங்களுக்கான திட்டம் (Pradhan Mantri Awas Yojana-Urban) மற்றும் மற்றொன்று கிராமப்புறங்களுக்கான (Pradhan Mantri Awas Yojana-Gramin/Rural) திட்டமாகும். இதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா   திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதேவேளையில் PMAY-G/R யோஜனா  கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின்  தேவைகளைப் பூர்த்தி  செய்கிறது.


Original article :What are the efforts made by the government for PVTGs? ( COMPLETED) -Khushboo Kumari

Share:

இந்தியத் தொண்டு நிறுவனங்கள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்க உதவும். -ரோகிணி நிலேகனி

 கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு, வேளாண்மை அல்லது மற்ற எந்தத் துறையாக இருந்தாலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சவால்களை நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சூழலில், எதிர்காலத்தை மறுசீரமைக்கத் தேவையான அதிக நிதி அபாயம் கொண்ட முதலீடுகளையும் (high-risk capital) மற்றும் நீண்ட காலப் பொறுமையுடன் கூடிய மூலதனத்தையும் (long-term patient capital) வழங்குவதில் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கின்றனர். 


பேரிடர் நிவாரணத்திற்காக நீங்கள் கடைசியாக எப்போது ஒரு நிறுவனத்திற்கு காசோலை அனுப்பினீர்கள்? இந்தக் கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், பலர் தாங்கள் அனுப்பியதாகச் சொல்லியிருக்கக் கூடும். ஆனால், அதன் பிறகு, நாட்டில் அதிகரித்து வரும் "பேரிடர் சோர்வை" (disaster fatigue) நாம் காண்கிறோம். இது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும் கவலைக்குரிய விஷயமாகப் பாரக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் பேரிடர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மக்களிடையே உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இந்திய நாட்டின் தொண்டு நிறுவனம் ஒன்று டால்பெர்க் (Dalberg) நிறுவனத்துடன் இணைந்து 'பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் - காலநிலை பேரிடர்களில் இருந்து உயிர் பிழைப்பதோடு மட்டுமின்றி, சமூகங்கள் செழிக்க ஆதரவளித்தல்' (Resilience — Moving beyond surviving climate disasters to supporting communities to thrive) என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யும் மனநிலையை இந்த அறிக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தற்போதைய காலநிலை மாற்றம் நம் அனைவரையும், குறிப்பாகப் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் உள்ள எளிய மக்களைப் பெருமளவில் பாதித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

2023-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 85 சதவீத மாவட்டங்கள் வெள்ளம், வறட்சி அல்லது சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இமயமலைத் தொடர் முதல் கடற்கரைப் பகுதிகள் வரை அனைத்துப் பகுதிகளும் இன்று அபாயகட்டத்திலேயே உள்ளன. அந்த ஆண்டில் 86 சதவீத நாட்களில் கடுமையான வெப்பம் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. நாம் முன்வைத்துள்ள தரவுகளும் கணிப்புகளும் உண்மையானால், வருங்காலத்தில் இதைவிட மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மிகவும் மோசமானது; நாடு தழுவிய அளவில் ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, ஏழைக் குடும்பங்கள் ஒரே ஒரு பேரிடரின் மூலம் தங்கள் ஆண்டு வருமானத்தில் 85 சதவீதம் வரை இழக்க நேரிடுகிறது. எனவே, சமூக அளவில் வலுவான தற்காப்பு மற்றும் மீண்டெழும் திறனை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சூறாவளி மற்றும் வெள்ளத்தின் போது உயிர்களைக் காப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது உண்மைதான் என்றாலும் அது மட்டுமே இப்போது போதுமானதல்ல என்றும், மக்கள் வெறுமனே உயிர் பிழைக்க மட்டும் விரும்பவில்லை என்றும், அவர்கள்  பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். 


உறுதியான மீள்திறனை உருவாக்க, நாம் வளர்ச்சியைப் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டும். உதாரணமாக, அணைகளை மாற்றி வடிவமைப்பது மற்றும் உள்ளூர் அளவில் நம்பிக்கை மற்றும் திறனை வலுப்படுத்துவதன் மூலம் சமூகம்  பேரிடர்களுக்கு முன்னும் பின்னும் திறம்பட செயல்பட முடியும் என்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் நிதி ரீதியாக அதிகாரம் பெற வேண்டும். மேலும், சந்தைகளும் இதில் ஒரு ஆக்கபூர்வமான பங்கினை வகிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய முதலீடுகள் புத்திசாலித்தனமானவை என்பதற்கு உலகளாவிய சான்றுகள் உள்ளன: பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு 1 டாலரும், பேரிடருக்குப் பிந்தைய மீட்புச் செலவுகளில் 15 டாலர் வரை மிச்சப்படுத்த உதவும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். 



கீழ்மட்ட அளவில் விரிவுபடுத்துவதற்குத் தயாராக உள்ள பல புதுமையான யோசனைகள் உள்ளன. சுயதொழில் புரியும் பெண்களின் சங்கம் (Self-Employed Women’s Association (SEWA) வெப்பக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 40°C-க்கு மேல் இருக்கும்போது தானாகவே இழப்பீடு வழங்குகிறது. இந்தத் திட்டம் தற்போது மூன்று மாநிலங்களில் 50,000 பெண் உறுப்பினர்களுக்குப் பயன் அளிக்கிறது. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு (Council on Energy, Environment and Water (CEEW)) ஒரு தேசிய காலநிலை மற்றும் வெப்ப அபாய வரைபடத்தை உருவாக்கியுள்ளதுடன், நடைமுறைச் செயல் திட்டங்களை உருவாக்க அரசாங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. ASAR மற்றும் Equinoct ஆகிய அமைப்புகள் கேரளாவின் எர்ணாகுளத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் கடல் அலை வெள்ளத்தைப் பதிவு செய்ய அந்தந்த சமூகங்களுக்கு ஆதரவளித்துள்ளன. நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழகம் (Sustainable Environment and Ecological Development Society (SEEDS) செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘e-disaster wallet’ ஒன்றை உருவாக்கியுள்ளது. இது ஒரு பேரிடருக்கு முன்பே ஏற்படக்கூடிய சொத்து இழப்புகளைச் சரிபார்க்க மக்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் பேரிடருக்குப் பிறகு அரசாங்க மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் விரைவாக அவர்களைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கின்றனர். 


கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் பிற துறைகளில் காலநிலை தொடர்பான சவால்களுக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது; எதிர்காலத்தை மறுசீரமைக்க அதிக நிதி அபாயம் கொண்ட நிதி முதலீடுகள் (high-risk funding) மற்றும் நீண்ட கால பொறுமை தேவைப்படும் மூலதனத்தை (long-term patient capital) வழங்குவதன் மூலம் பல தொண்டு நிறுவனங்கள் இதற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.


இதுவரை, பேரிடர்கள் மேலிருந்து-கீழ் நோக்கிய, தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை (top-down approach) மூலமே கையாளப்பட்டு வருகின்றன. அரசாங்கங்கள் பொதுவாக சமூகங்களுக்காகப் பணியாற்றுகின்றன. ஆனால், அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். மக்கள் தங்களின் சொந்த மீள்திறனை (resilience) உருவாக்குவதில் வெறும் பயனாளிகளாக இல்லாமல், செயலில் ஈடுபடும் முக்கியப் பங்குதாரர்களாக மாற வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கிராமப்புற அளவில் உடல்நலம், நிதி, மனித வளம், சமூகம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் ஒரு நாடு தழுவிய முயற்சியைத் தொடங்க இதுவே சரியான தருணம் என்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பெருந்தொற்று காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் காட்டிய அந்தப் பரிவுணர்வையும் பிணைப்பையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Panchayati Raj Institutions (PRI)) மூலமாக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதிப்புகளையும் எதிர்கொள்ள இந்தியா முழுத் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


ரோகிணி நிலேகனி, Rohini Nilekani Philanthropies (RNP) அமைப்பின் தலைவராகவும், 'Samaaj, Sarkaar, Bazaar: A citizen-first approach’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


Original article : Indian philanthropy can step in to mitigate climate disasters’ effects -Rohini Nilekani

Share:

சி.வி. ராமனின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை.

 1986-ஆம் ஆண்டு முதல், சி.வி.ராமன் அவர்கள் 'ராமன் விளைவை' (Raman Effect) கண்டறிந்ததைப் போற்றும் வகையில், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி இந்தியா தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை அவருக்குப் பெற்றுத் தந்த இந்த முக்கிய கண்டுபிடிப்பு, ஒளியைப் பற்றிய நமது புரிதலையே மாற்றியமைத்தது. பள்ளிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் கண்காட்சிகளுடன் நாடு இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், நம்மிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிய  அவரை நினைவு கூர்வோம்.


அசாத்தியத் திறமை கொண்ட மாணவர்


1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்த சந்திரசேகர வெங்கட ராமன், சிறுவயதிலேயே விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினார். அவரது தந்தை ஆர். சந்திரசேகர் ஐயர், இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால், ராமனுக்கு இயல்பாகவே இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். அவருக்கு வெறும் 18 வயது இருக்கும்போது, "செவ்வகத் துளையினால் ஏற்படும் சமச்சீரற்ற விளிம்பு விளைவு பட்டைகள்" (Unsymmetrical diffraction-bands due to a rectangular aperture) என்ற தனது முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை ஆங்கில இதழான ‘Philosophical Magazine’ இதழில் வெளியிட்டார்.


அந்தக் காலத்தில், அறிவியல் ஆராய்ச்சியை ஒரு முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. இராமன் லோகசுந்தரியை மணந்திருந்ததால், அவருக்கு நிலையான வருமானம் தரும் ஒரு வேலை தேவைப்பட்டது. 1907-ஆம் ஆண்டுப் படிப்பை முடித்த பிறகு, அவர் தனது மனைவியுடன் கல்கத்தாவிற்குச் சென்று, இந்திய நிதிச் சேவை (Indian Finance Service (IFS)) பிரிவில் துணை கணக்குத் தலைவராகப் (Assistant Accountant General) பணியில் சேர்ந்தார். தனது ஓய்வு நேரங்களில்,  இந்திய அறிவியல் வளர்ச்சி சங்கம் (Indian Association for the Cultivation of Science (IACS)) நிறுவனத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1917-ஆம் ஆண்டில், இயற்பியல் மீதான தனது ஆர்வத்தைப் பின்பற்றுவதற்காகத் தனது அரசு  வேலையை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முழுநேர இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்த அவர், அங்குள்ள புகழ்பெற்ற ‘Palit Chair’ பதவியை 15 ஆண்டுகள் வகித்தார். அந்தப் பதவியின் ஒரு நிபந்தனை என்னவென்றால், சர்வதேச அறிஞர்களுக்கு இணையாகக் கருதப்படுவதற்கு அவர் வெளிநாட்டில் பயிற்சி பெற வேண்டும் என்பதாகும். இருப்பினும், இராமன் தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தமக்கு வெளிநாட்டுப் பயிற்சி தேவையில்லை என்றும், மாறாக மற்ற நாட்டு அறிஞர்களுக்கே தம்மால் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.


ராமன் விளைவின் கண்டுபிடிப்பு


1921-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற ஆங்கிலயேப் பேரரசு பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சி.வி.ராமன் லண்டனிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அந்த கடல் பயணத்தின் போது, மத்திய தரைக்கடல் ஏன் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது என்று அவர் வியந்து சிந்தித்தார். கடலின் நீல நிறம் என்பது வானத்தின் பிரதிபலிப்பு மட்டுமே என்ற பொதுவான விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. உண்மையை கண்டறியும் உறுதியுடன், அவரும் அவரது மாணவர் கே.எஸ். கிருஷ்ணனும் பல ஆய்வக சோதனைகளை மேற்கொண்டனர். அவர்கள் பல்வேறு திரவங்களின் வழியாக ஒளியைச் செலுத்தி, சிதறிய ஒளியைக் கவனித்தனர். அதில் பெரும்பாலான ஒளி அதே நிறத்தில் இருந்தது, ஆனால் ஒரு சிறிய பகுதி மட்டும் சற்று மாறியிருந்தது. ஒளியானது மூலக்கூறுகளுடன் ஆற்றலைப் பரிமாறிக் கொண்டது என்பதை இது நிரூபித்தது. இந்த கண்டுபிடிப்பு தற்போது 'ராமன் விளைவு' (Raman Effect) என்று அழைக்கப்படுகிறது.


சி.வி. ராமன் அவர்கள்,  மாணவர்களை ஆர்வத்துடனும், சுதந்திரமாகவும் சிந்திக்க ஊக்குவித்த ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கினார். அவரது ஆய்வகத்தில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள், அவர்களின் அடிப்படை அறிவு மற்றும் தனித்துவமான சிந்தனையைச் சோதிக்கும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்க அவர் உதவினார். அவர் தனது மாணவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார். மேலும், அவர்களின் சோதனைகளுக்கான புதிய யோசனைகளையும் மேம்பாடுகளையும் நேரில் வழங்கினார். அவர் தன் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். மேலும், மாணவர்களும் எந்த நேரத்திலும் அவரது வழிகாட்டுதலைப் பெறலாம் என்பதை நன்கு அறிந்திருந்தனர்.


1930-ஆம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமையை சி.வி.ராமன் பெற்றார். இந்தச் சாதனை அவருக்குப் உலகளாவிய புகழைத் தேடித்தந்ததோடு, இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தது. ஒளிச்சிதறல் குறித்த தனது ஆராய்ச்சியின் போதே, அதாவது 1925-ஆம் ஆண்டிலயே, இப்பணிக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர் கணித்திருந்தார். ஸ்பெக்ட்ரோஸ்கோப் (spectroscope) கருவியை வாங்குவதற்கு நிதி திரட்டியபோது, இந்தக் கருவி கிடைத்தால் இந்தியாவிற்கு நோபல் பரிசைப் பெற்றுத் தருவேன் என்று தனது ஆதரவாளரிடம் அவர் உறுதியளித்தார். போதிய வசதிகள் இல்லாத காலக்கட்டத்திலும், குறைந்த ஆதாரங்களைக் கொண்டு மிகப்பெரிய அறிவியல் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு ராமனின் இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக் குறிப்பிடப்படுகிறது. 


சி.வி. இராமன் 1933-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை இந்திய அறிவியல் நிறுவனத்தின் (Indian Institute of Science (IISc)) இயக்குநராகப் பணியாற்றினார். அங்கு அவரே இயற்பியல் துறையை நிறுவி, தொடக்கத்தில் அதன் ஒரே ஒரு பேராசிரியராகவும் இருந்தார். அக்காலகட்டத்தில், விக்ரம் சாராபாயின் விண்வெளி கதிர் (cosmic rays) குறித்த ஆராய்ச்சிக்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 1948-ஆம் ஆண்டு பெங்களூரில் இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தைத் (Raman Research Institute) தொடங்கிய அவர், 1970-ஆம் ஆண்டில் அவரின் இறுதி காலம் வரையிலும், ஒளியியல், படிக இயக்கவியல், வைரத்தின் அமைப்பு, மலர்களின் நிறங்கள் மற்றும் மனித பார்வைத் திறன் ஆகிய துறைகளில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 


காலப்போக்கில், ராமன் விளைவின் கோட்பாடுகள் பல்வேறு அறிவியல் துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று இந்த விளைவு புற்றுநோய் கண்டறிதல், மருந்து மேம்பாடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற முக்கிய பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக அவரது மரபு இன்றும் நிலைத்திருப்பதோடு, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளையும் சோதனைகளையும் மேற்கொள்ள பல தலைமுறை அறிவியல் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.


Original article : Shining a light on the life of C.V. Raman


Share:

கேரளாவின் முரண்பாடு அதன் உலகளாவிய பார்வையைத் தூண்டக்கூடும் -சஷி தரூர்

 பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க நாடு பெருங்கடல்களைத் தாண்டிப் பார்க்க வேண்டும்.


"உலகமயமாக்கல்" (globalization) என்ற சொல் டாவோஸ் பொருளாதார வல்லுநர்களின் பொது மொழியாக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் செருலியன் அரேபிய கடலுக்கும் இடையில் இருந்த கேரளா ஏற்கனவே அதை அதன் சொந்த வழியில் நடைமுறைப்படுத்தி வந்தது. முசிரிஸின் அகழ்வாராய்ச்சியிலிருந்து வரலாறு நமக்குக் குறிப்பிடுகிறது. இங்கு ரோமானிய செஸ்டர்ஸ்களின் சத்தம் ஒரு காலத்தில் உள்ளூர் மலையாள மொழியை விட அதிகமாக இருந்திருக்கலாம். சீனர்கள், அரேபியர்கள், யூதர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அனைவரும் நமது மசாலாப் பொருட்கள் மற்றும் துணிகளைத் தேடி வந்தனர். இங்கு அவை தேவாலய மணிகள் (church bells), மியூசின்களின் அழைப்பு (muezzin’s call) மற்றும் கோயில் மந்திரங்கள் (temple chants) காற்றை ஒன்றாக நிரப்பின. இது நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியது.


பணம் அனுப்புவதிலிருந்து புதுமைக்கு மாறுங்கள்


இந்த வலுவான மனப்பான்மை "உலகளாவிய மலையாளி" (Global Malayalee) என்ற கருத்தாக மாறியுள்ளது. அவர்கள், மத்திய கிழக்கின் எண்ணெய் கிணறுகள் முதல் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வாரிய அறைகள் வரை, கேரளவாசிகள் எங்கும் நிறைந்து, ஆண்டுதோறும் ₹1.3 லட்சம் கோடி மதிப்புள்ள "பணம் அனுப்பும் பொருளாதாரத்தை" (Remittance Economy) உருவாக்குகிறார். கேரள மக்கள் 21-ம் நூற்றாண்டின் சிறந்த-வெளிநாட்டவர்களாக மாறிவிட்டனர். ஆனால், கேரளாவின் சவால் என்னவென்றால், இந்த "பணம் அனுப்பும் பொருளாதாரத்தை" (Remittance Economy) ஒரு "புதுமைப் பொருளாதாரமாக" (Innovation Economy) மாற்றுவதாகும். நீண்ட காலமாக, கேரளாவின் பொருளாதாரப் பேச்சு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் (automobile factories) அல்லது மகாராஷ்டிராவின் தொழில்துறை பெல்ட்களை (industrial belts) நாம் ஏன் உருவாக்க முடியாது என்று யோசித்து, அவை சுயவிமர்சனத்தில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், இந்த ஒப்பீடு ஒரு முக்கியமான உண்மையைத் தவறவிடுகிறது. கேரளா இதில் வேறுபட்டது. இது ஒரு விதிவிலக்கை கொண்டுள்ளது. மூன்றாம் உலக உள்கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில், நெதர்லாந்தின் மக்கள் தொகை அடர்த்தி (சதுர கிலோமீட்டருக்கு 901), சிங்கப்பூரின் கல்வியறிவு (96.2%) மற்றும் கோஸ்டாரிகாவின் சுற்றுச்சூழல் பலவீனம் ஆகியவற்றைக் கொண்ட, முதல் உலக சமூக குறிகாட்டிகளைப் பெருமைப்படுத்தும் ஒரு மாநிலம் கேரளம் ஆகும். கேரளாவின் நுட்பமான புவியியலில் ஆராய்ந்த இந்தியாவின் கனரக தொழில்துறை மாதிரிகளைத் திணிக்க முயற்சிப்பது ஒரு தவறு. இது கற்பனையின்மையைக் காட்டுகிறது. புகைமூட்டத் தொழில்களை உருவாக்குவதில் சென்னை அல்லது மும்பையுடன் போட்டியிடுவதில் கேரளாவின் எதிர்காலம் இல்லை. அதன் எதிர்காலம் வெளிப்புறமாகப் பார்ப்பதில் உள்ளது. அது கடல்களைக் கடந்து, அதன் வரம்புகளை பலங்களாக மாற்றிய சிறிய மாநிலங்களிலிருந்து அது கற்றுக்கொள்ள வேண்டும்.


கேரளா ஏற்கனவே உலகின் செவிலியர் தலைநகராக அறியப்படுகிறது. இப்போது அது அதன் குணப்படுத்தும் தோட்டமாக மாற வேண்டும். கேரளாவின் மக்கள்தொகையானது ஒரு சவாலையும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. இது இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் வயதான சமூகமாகும். இந்த நிலைமை ஒரு முரண்பாட்டை உருவாக்குகிறது. அதேநேரத்தில், அது ஆற்றலையும் உருவாக்குகிறது. கேரளா ஒரு தனித்துவமான மரபணு கலவையைக் கொண்டுள்ளது. அதன் மக்கள் திராவிட, ஆரிய, அரபு மற்றும் ஐரோப்பிய மரபணு அடையாளங்களைக் கொண்டுள்ளனர். இந்த பன்முகத்தன்மை சிறப்பு வாய்ந்தது. கேரளா பொது சுகாதாரப் பராமரிப்பைத் தாண்டி, அது துல்லியமான மருத்துவத்தில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். ஐஸ்லாந்து அதன் உயிரிதொழில்நுட்பத் துறையை வளர்க்க அதன் மக்கள்தொகை தரவுகளைப் பயன்படுத்தியது. அதேபோல், கேரளாவால் இதேபோன்ற ஒன்றைச் செய்ய முடியும். இது ஒரு "மரபணு பள்ளத்தாக்கை" (“Gene Valley”) நிறுவ முடியும். இது நோய் அபாயங்கள் மற்றும் பல்வேறு மக்களுக்கு குறிப்பிட்ட மருந்துகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதை வரைபடமாக்கலாம். இந்த வழியில், கேரளா அதன் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை ஒரு வலுவான அறிவியல் நன்மையாக மாற்ற முடியும்.


நமது மருத்துவ சாதனங்களை உருவாக்க பொறியியல் திறமை நம்மிடம் இருக்கும்போது, ​​80% மருத்துவ சாதனங்களை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? மருத்துவ தொழில்நுட்ப சக்தியாக மாறிய ஒரு சிறிய நாடான கோஸ்டாரிகாவை (Costa Rica) நாம் பார்க்க வேண்டும். ஸ்ரீ சித்ரா திருநாள் நிறுவனம் போன்ற நிறுவனங்களைப் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology) பயன்படுத்தி, உலகிற்கு உயர் மதிப்புள்ள மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்யலாம். இவற்றில் ஸ்டென்ட்கள், இதய வால்வுகள் மற்றும் அறுவை சிகிச்சை ரோபோக்கள் அடங்கும். இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக சந்தைக்கும் நாம் அவற்றை உற்பத்தி செய்யலாம். இரத்தப் பைகள் (blood bags) உற்பத்தியில் நாம் ஏற்கனவே முன்னணி நாடாக இருக்கிறோம். இது மேலும் விரிவடையும் திறன் நமக்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது.


நமது வயதான மக்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் மாற்ற வேண்டும். அதை ஒரு சுமையாகக் கருதக்கூடாது. அதற்கு பதிலாக, அதை ஒரு பொருளாதார வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மாதிரியை நாம் ஜப்பானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். நமது காலநிலைக்கு ஏற்ற மலைப்பகுதிகளில் "ஓய்வூதிய கிராமங்களை" (retirement villages) உருவாக்குவதன் மூலம், உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகள் உள்ள "சாம்பல் நாடோடிகளுக்கும்" (grey nomads) உலகத்தரம் வாய்ந்த உதவி வாழ்க்கையை வழங்க முடியும். கூடுதலாக, சீனா பாரம்பரிய சீன மருத்துவத்தை (Traditional Chinese Medicine (TCM)) அறிவியல் சரிபார்ப்பு மூலம் வெற்றிகரமாக உலகமயமாக்கியது போல, ஆயுர்வேதத்தை "ஆரோக்கியம்" (wellness) என்பதிலிருந்து "குணப்படுத்துதல்" (cure) என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும். நமது 1,200 வகையான மருத்துவ தாவரங்களை நவீன நோயறிதல்களுடன் இணைப்பதன் மூலம், கேரளாவை "கிழக்கின் சுகாதார நிலையம்" (Sanatorium of the East) என்று நிலைநிறுத்த முடியும்.



கேரளாவின் மிகப்பெரிய, ஆனால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்று அதன் உயிரியல் மரபணுக் குளம் (biological gene pool) ஆகும். பல்லுயிர் பெருக்கத்தின் உலகின் எட்டு "வெப்பமான பல்லுயிர் மையங்களில்" (hottest hotspots) கேரளாவும் ஒன்றாகும். 2022–23 தரவுகளின்படி, கேரளாவிடம் சுமார் 5,679 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. குறைந்த மகசூல் தரும் பயிர்களுக்கு கூடுதல் நிலம் இல்லாததால், கண்ணாடி வீடு விவசாயத்தின் டச்சு மாதிரியை (Dutch model of glasshouse farming) நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நெதர்லாந்து நாட்டில் குறைந்த நிலப்பரப்பு இருந்தபோதிலும், அது உலகின் இரண்டாவது பெரிய விவசாய உணவு ஏற்றுமதியாளராக உள்ளது. ஏனெனில், அது நிலப்பரப்பை விட தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. உப்பு-சகிப்புத்தன்மை கொண்ட பொக்காலி அரிசி (Pokkali rice) போன்ற காலநிலை-எதிர்ப்புத் தன்மை கொண்ட உள்ளூர் வகைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், அதிக மதிப்புள்ள மசாலா நல்லெண்ணெய்களை இணையாகப் பிரித்தெடுப்பதன் மூலமும், இது ஒவ்வொரு அங்குல நிலத்திலிருந்தும் அதிக வருவாய் ஈட்ட உதவும்.


கடல் ஓரத்தில் உள்ள சாத்தியக்கூறுகள்


கடலில் வேட்டையாடி சேகரிப்பவர்களாக இருப்பதை நிறுத்திவிட்டு விவசாயிகளாக மாற வேண்டும். நார்வேயைப் போலவே, நிலையான சால்மன் மற்றும் இறால் வளர்ப்பு மற்றும் கடல் பாசிகளிலிருந்து மருந்துகளைப் பிரித்தெடுப்பதில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் அறிவியல் பூர்வமான நிர்வகிக்கப்படும் குளிர்பதனக் கிடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் (Vizhinjam International Seaport) நமது நுழைவாயில், ஆனால் மதிப்பு கூட்டல் இல்லாத துறைமுகம் வெறும் ஒரு வாகன நிறுத்துமிடம் மட்டுமே. நாம் சிங்கப்பூரைப் பார்த்து, பொருட்களைச் சுத்திகரித்து, ஒன்று சேர்த்து, மீண்டும் பேக்கேஜ் செய்யும் ஒரு தளவாட நகரத்தை உருவாக்க வேண்டும். இது விழிஞ்சத்தை ஒரு போக்குவரத்து நிலையிலிருந்து உலகளாவிய பொருளாதார மையமாக மாற்றுகிறது. நாம் இந்தியப் பெருங்கடலின் எரிவாயு நிலையமாகவும் மாற முடியும். சிலியைப் போலவே, நமது துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களுக்கு பசுமை அம்மோனியாவை உற்பத்தி செய்ய நமது சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலைப் பயன்படுத்தலாம். இந்த வழியில், எதிர்கால கடல்சார் கடற்படைகளுக்கு நாம் எரிபொருளாக இருக்க முடியும்.

கனரக தொழில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், அது நிலையானது அல்ல என்பதால், நமது செழிப்புக்கான பாதை "எடையற்ற பொருளாதாரத்தில்" உள்ளது. இவை அதிக நுண்ணறிவு மற்றும் அறிவு தேவைப்படும் துறைகள் ஆகும். ஆனால், இவற்றிக்கு பெரிய அளவிலான இடம் தேவையில்லை மற்றும் அதிக சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தாது.


நாம் இந்தியாவின் துலூஸைப் (Toulouse of India) போன்றவர்கள். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் மற்றும் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் பாரம்பரியத்தின் காரணமாக, திருவனந்தபுரம் ஏற்கனவே ஒரு முக்கியமான விண்வெளி மையமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் தனியார் தொடக்க நிறுவனங்களை நாம் ஆதரிக்க வேண்டும். இது நானோ-செயற்கைக்கோள் ஏவுதல்கள் மற்றும் உந்துவிசை அமைப்புகளில் கவனம் செலுத்தும் வணிக "விண்வெளி கடற்கரையை" (“space coast”) உருவாக்க உதவும்.


அதே போல், பிரம்மோஸ் விண்வெளியின் இருப்பை துணை பாதுகாப்பு உற்பத்தி அலகுகளை நிறுவ பயன்படுத்த வேண்டும். "கிராஃபீன் நகரம்" என்று அழைக்கப்படும் மான்செஸ்டரின் உதாரணத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். இல்மனைட் மற்றும் மோனசைட் போன்ற நமது அரிய பூமி தாதுக்கள், எதிர்காலத்திற்கான மைக்ரோசிப்கள் மற்றும் சூப்பர் கண்டக்டர்கள் போன்ற மேம்பட்ட தயாரிப்புகளாக உருவாக்கப்பட வேண்டும். கொச்சியில் உள்ள கிராஃபீனுக்கான இந்திய கண்டுபிடிப்பு மையம் ஒரு ஆரம்பம் மட்டுமே. நாம் அதை மேலும் விரிவுபடுத்தி அதைச் சுற்றி ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும்.


கேரளாவில் வலுவான நிதி கல்வியறிவு மற்றும் உலகளாவிய பணப்பரிமாற்றங்களால் தூண்டப்படும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உலகின் கிரிப்டோ (crypto) மற்றும் நிதிதொழில் நுட்ப முன்னோடிகளை (fintech pioneers) ஈர்க்க, துபாய் சர்வதேச நிதி மையத்தை (Dubai International Financial Centre (DIFC)) போன்ற ஒரு உலகளாவிய நிதிதொழில் நுட்ப மையத்தில் ஒரு ஒழுங்குமுறை "சாண்ட்பாக்ஸ்" (sandbox) நமக்குத் தேவை. மேலும், தி ஹேக் அல்லது சிங்கப்பூரைப் போலவே, கேரளாவும் சர்வதேச வணிக நடுவர் மன்றத்திற்கான ஒரு இடமாக மாறலாம். நமது சட்ட நிபுணத்துவத்தையும் குமரகோம் போன்ற இடங்களின் அமைதியான "அமைதி ஈவுத்தொகையையும்" (peace dividend) பயன்படுத்தி, லண்டனின் செலவில் ஒரு சிறிய பகுதியிலேயே உலகளாவிய நிறுவன மோதல்களைத் தீர்க்க முடியும்.


மாற்றம் இங்கே தொடங்குகிறது


"கடவுளின் சொந்த நாடு" (God’s Own Country) என்பது ஒரு அற்புதமான முழக்கம். இது இயற்கை அழகை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இன்று இயற்கை அழகு மட்டும் போதாது. நவீன பயணிகள் ஆழமான அனுபவங்கள் மற்றும் செயல்பாட்டை விரும்புகிறார்கள். நாம் ஆசியாவின் மாண்ட்ரீலாக (Montreal) இருக்க முடியும். நமது துடிப்பான சினிமா கலாச்சாரத்தையும் கலை இளைஞர்களையும் பயன்படுத்தி ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டுக்கான போஸ்ட்-புரொடக்ஷன் துறையை உருவாக்கப் பயன்படுத்தலாம். இது உலகளாவிய கேமிங் ஸ்டுடியோக்கள் மற்றும் VFX ஹவுஸ்கள்/விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோக்களை ஈர்க்க வரிச் சலுகைகளை வழங்கலாம். கைவினைப்பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து "பாரம்பரிய ஆடம்பரத்தை" விற்பனை செய்வதற்கு நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். ஆரன்முள கண்ணாடி (Aranmula Kannadi) அல்லது நேர்த்தியான பாலராமபுரம் கைத்தறியைக் (Balaramapuram handloom) கவனியுங்கள். தற்போது, ​​இவை சுற்றுலாப் பயணிகளுக்கான ஆர்வமுள்ள பொருட்களாக மட்டுமே சந்தைப்படுத்தப்படுகின்றன. 


இத்தாலியின் டஸ்கனி (Tuscany) அல்லது பிரான்சின் லையோனைப் (Lyon) பார்க்க வேண்டும். கசவு புடவை ஏன் எளிய ஆடைகளாகப் பார்க்காமல் அதையும் மாற்றலாம். மிலன் அல்லது பாரிஸுடன் இணைந்து ஒரு "கேரள வடிவமைப்பு நிறுவனம்" (Kerala Design Institute) ஒன்றை நிறுவி, நமது கைவினைஞர்களை வடிவமைப்பாளர்களாக உயர்த்த வேண்டும். துணியை மட்டுமல்ல, பிராண்டையும் ஏற்றுமதி செய்ய வேண்டும். கேரளாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த கையால் நெய்யப்பட்ட துணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஆடம்பர பிராண்டை கற்பனை செய்து பாருங்கள். இந்த பிராண்ட் "நிலையான ஆடம்பரம்" (sustainable luxury) என்ற கருத்தை ஊக்குவிக்க முடியும்.


இறுதியாக, நமது காலநிலை பாதிப்பை நிபுணத்துவமாக மாற்ற வேண்டும். தங்கள் நீர் மேலாண்மை பொறியியலை உலகிற்கு விற்கும் டச்சுக்காரர்களைப் போலவே, கேரளாவும் பேரிடர்-எதிர்ப்பு உள்கட்டமைப்பிற்கான "வாழும் ஆய்வகமாக" மாற முடியும். குறைந்த விலை, வெள்ளத்தைத் தாங்கும் வீட்டுவசதி மற்றும் மண் நிலைப்படுத்தல் தொழில்நுட்பங்களை வெப்பமண்டல உலகிற்கு ஏற்றுமதி செய்யலாம்.


முன்னோக்கி செல்லும் பாதைக்கு ஒரு உளவியல் மாற்றம் தேவை. "பெங்களூரை எவ்வாறு முந்திச் செல்வது?" என்று கேட்பதை நிறுத்திவிட்டு, "ஆம்ஸ்டர்டாமுடன் எவ்வாறு ஒத்துழைப்பது? கொழும்புவுடன் எவ்வாறு போட்டியிடுவது? கியோட்டோவிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது?" என்று விசாரிக்கத் தொடங்க வேண்டும். கேரளா வரலாற்று ரீதியாக கிழக்குக்கும் மேற்கிற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறது. நாம் வெறும் பாலமாக இருப்பதை நிறுத்திவிட்டு, இலக்காக மாறத் தொடங்கிய நேரம் இது. உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த கருத்துக்களை எடுத்து மாற்றியமைக்கும் இடமாக கேரளா மாற வேண்டும். இந்தக் கருத்துக்களை மேம்படுத்த வேண்டும். பின்னர் அவை மனிதகுலத்திற்குத் திருப்பித் தரப்பட வேண்டும். அவை ஒரு தனித்துவமான மலையாள அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


சஷி தரூர் திருவனந்தபுரத்தின் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக (காங்கிரஸ்) நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர் மற்றும் 28 புத்தகங்களை எழுதிய விருது பெற்ற ஆசிரியர் ஆவார்.


Original article : Kerala’s paradox can spark its global vision -Shashi Tharoor

Share:

சர்வதேச சட்டம் இன்னும் வலுவிழக்கவில்லை, அதன் விதிகள் நிலைத்து நிற்கின்றன -பிரபாஷ் ரஞ்சன்

 சர்வதேச சட்டத்தின் வலுவின்மையானது, உலக சர்வாதிகாரர்களுக்கு உதவுகிறது.


அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள், இருநாடுகளும் பலத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அச்சுறுத்தல்களுடன், சர்வதேச சட்டத்தின் பயன்பாடு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சர்வதேச நாடுகளின் சில அறிஞர்கள், சர்வதேச சட்டத்தின் வலுவின்மை செய்தி குறித்து குறிப்பிடுகிறார்கள். குறிப்பிடப்பட்ட விதிகள் அல்லது விதிமுறைகள் இல்லாத உலகத்திற்கு ஒருவர் தயாராக வேண்டும் என்று வாதிடுகின்றனர். 2022-ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு இந்த பலவீனமான வாதம் தொடங்கியதுடன், காசா மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு இது மேலும் தொடர்ந்தது. டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவியானது, வெனிசுலாவில் சமீபத்திய சட்டவிரோத அமெரிக்காவின் நடவடிக்கைகள், பல சர்வதேச அமைப்புகளிலிருந்தும் அமெரிக்கா விலகியது மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி தற்போதைய சூழ்நிலையை உலக ஒழுங்கில் ஒரு "பிளவு" என்று விவரித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச சட்டம் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கிறது. சர்வதேச சட்டம் அதன் இருண்ட காலங்களில் ஒன்றைக் கடந்து செல்கிறது என்பது உண்மைதான் என்றாலும், அதன் வலுவின்மை என்று கூறுவது வெறும் அறிவுபூர்வமாக சோம்பேறித்தனமானது (intellectually lazy) மட்டுமல்ல, அது தவறாகவும் வழி நடத்தக்கூடும்.


பலத்தைப் பயன்படுத்துதல்


இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு உதாரணமாக, மிக அடிப்படையான சர்வதேச விதிமுறைகளில் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 2(4) இல் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச நாடுகளில் அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் பல நாடுகள் இந்த விதியை மீறியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற மீறல்கள் புதியவை அல்ல. கடந்த காலங்களிலும் இதே போன்ற மீறல்கள் நடந்தன. 1970-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பல போர்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் போட்டி காரணமாக, பிரிவு 2(4) வலுவிழந்துவிட்டது என்று சர்வதேச வழக்கறிஞர் தாமஸ் ஃபிராங்க் வாதிட்டார். 


கடந்த நாற்பது ஆண்டுகளில், அமெரிக்காவும் பிற அதிகாரத்துவ நாடுகளும் சோவியத்-ஆப்கானிஸ்தான் போர் (1979-89), பால்க்லேண்ட்ஸ் போர் (1982), வளைகுடாப் போர் (1990-91), மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான் (2001), ஈராக் (2003), சிரியா மற்றும் லிபியாவில் மோதல்கள் உட்பட பல போர்களில் ஈடுபட்டுள்ளன. சமீபத்திய போர்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்களைப் போலவே, இந்தப் போர்கள் அனைத்தும் பிரிவு 2(4)ஐ கடுமையாக பலவீனப்படுத்தின. ஆனால், அவை அதை அழிக்கவில்லை. சக்திவாய்ந்த நாடுகளை பொறுப்புக்கூற வைப்பதற்கான முக்கிய சட்ட வழி முறையாக இன்றும் தொடர்ந்து வருகிறது.


கொலம்பியா பேராசிரியர் மோனிகா ஹகிமி விளக்குவது போல, சர்வதேச உறவுகள் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் போது, ​​பொது அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் செயல்களை விளக்க வேண்டும். அவர்களின் செயல்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விதிகளின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே அதிகாரம் குறித்த அவர்களின் கூற்றுக்கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.


கூடுதலாக, சர்வதேச சட்டம் மட்டுமே சாதாரண மற்றும் குறைந்த சக்தி வாய்ந்த மக்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் திறனை வழங்கும் ஒரே அமைப்பு. இந்த சட்ட கட்டமைப்பு இல்லாமல், உலகம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.


இருப்பினும், இன்றைய பிரிவு 2(4) இன் விதிமீறல் கடந்த காலத்திலிருந்து இதே போன்ற செயல்களிலிருந்து வேறுபட்டது. கடந்த காலத்தில், அதிகாரத்துவம் வாய்ந்த நாடுகள் சர்வதேச சட்டத்தின் பகுப்பாய்வு கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தின. மேலும்,  மேலாதிக்கங்களுக்கு கூட இந்த நெறிமுறை கட்டமைப்பு தேவை என்பதை நிரூபித்தன. இது உரையாடல் மற்றும் விவாதத்திற்கான வாய்ப்பை உருவாக்கியது. எனவே, 1990ஆம் ஆண்டு மற்றும் 2000ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, தற்காப்புக்கான விளக்கத்தை சட்டப்பூர்வமாக விரிவுபடுத்தியது. இது நாடுகள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தடைக்கு விதிவிலக்காகும். அமெரிக்க சட்ட விளக்கங்கள் சரியானவையா? அல்லது அதன் ஏகாதிபத்திய வடிவமைப்புகளை மறைக்க ஒரு கருவியாக இருந்ததா? என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.


இன்றைய மக்கள்வாத-சர்வாதிகார உலகில், தலைவர்கள் மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின்படி தங்கள் செயல்களை விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ அரிதாகவே முயற்சி செய்கிறார்கள். அவர்களின் ஏகாதிபத்திய லட்சியங்கள் தெளிவாகத் தெரியும். அமெரிக்கா மீண்டும் மீண்டும் வெனிசுலா எண்ணெயைக் கோருவது இதைத் தெளிவுபடுத்துகிறது.


சர்வதேச சட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மக்கள்வாத-சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் எழுச்சி ஆகும். ஆபத்தை ஏற்படுத்துவது இராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பு மட்டுமல்ல, இந்த பரந்த அரசியல் போக்கும் ஆகும்.


இராணுவ நடவடிக்கை பயன்படுத்துவதைத் தாண்டிப் பார்க்கும்போது


அதே நேரத்தில், சர்வதேச சட்டத்தின் முழு அமைப்பையும் ஐக்கிய நாடுகள் சாசனமாகக் குறைப்பது தவறாகும். ஐக்கிய நாடுகளின் சாசனம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முக்கியமான தூணாக இருந்தாலும், கடந்த 80 ஆண்டுகளாக நிகழ்ந்த சர்வதேச நாடுகளை சட்டப்பூர்வமாக்குவதை அதுவே வரையறுக்கவில்லை. இன்று, சர்வதேச சட்டம் பரவலாகவும் பன்முகத்தன்மையுடனும் உள்ளது. சர்வதேச வர்த்தகம், வெளிநாட்டு முதலீடு, பொது விமானப் போக்குவரத்து, கடல்சார் வளங்கள், விண்வெளி, மனித உரிமைகள், காலநிலை மாற்றம், இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மற்றும் பல துறைகளை நிர்வகிக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தின் ஊனா ஏ. ஹாத்வே வாதிடுவது போல, சர்வதேச சட்டம் ஒரு சமூக நிகழ்வாக வளர்ந்து செழித்து வருவதை இது காட்டுகிறது.


சர்வதேச சட்டம் அமைதியாக செயல்படுகிறது


சர்வதேச சட்ட உருவாக்கமானது, எந்த தடையுமின்றி தொடர்கிறது. இது இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உயர் கடல் ஒப்பந்தம் (கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் நிலைத்தன்மையை நோக்கமாகக் கொண்டது), மற்றும் ஒரு தொற்றுநோய் ஒப்பந்தம் (தொற்றுநோய் தடுப்பை வலுப்படுத்துதல்) போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, உலகளாவிய (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) மற்றும் பிராந்திய மட்டங்களில் (மனித மற்றும் மக்கள் உரிமைகள் தொடர்பான ஆப்பிரிக்க நீதிமன்றம்) நூற்றுக்கணக்கான சர்வதேச நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, சர்வதேச நாடுகளின் நீதிமயமாக்கலை நிரூபிக்கின்றன. இந்த நீதிமன்றங்கள் பொதுவாக ஊடக கவனத்தை ஈர்ப்பதில்லை. இருப்பினும், அவை சிக்கலான மோதல்களை அமைதியாகவும் சட்டத்தின்படியும் தொடர்ந்து தீர்த்து வைக்கின்றன.


சுருக்கமாக, சர்வதேச வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் கூறுகையில், சர்வதேச சட்டத்தின் பெரும்பகுதி பின்னணியில் அமைதியாகவும் சுமூகமாகவும் செயல்படுகிறது. ஊடகங்கள் பெரும்பாலும் ஐ.நா. சாசனத்தின் மீறல்களில் கவனம் செலுத்தினாலும் இது நிகழ்கிறது. சர்வதேச சட்டத்தின் இந்த அமைதியான அமைப்பு பொருட்கள் மற்றும் மக்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்ல உதவுகிறது. இது தகவல் தொடர்பு அமைப்புகள் தேசிய எல்லைகளுக்கு அப்பால் செல்லவும் அனுமதிக்கிறது. இதன் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்க்கை பல வழிகளில் மேம்படுகிறது.


ஒரு சர்வாதிகார அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போது, ​​தாராளவாத அரசியலமைப்பு அமைப்பை நாம் கைவிடாதது போல, தற்போதுள்ள தாராளவாத சர்வதேச சட்ட அமைப்பை உலகளாவிய சர்வாதிகார நாடுகளிடமிருந்து  பாதுகாக்கவும் நாம் போராட வேண்டும். சர்வதேச சட்டம் வலுவிழந்துவிட்டது என்று கூறுவது அந்த உலகளாவிய சர்வாதிகார நாடுகளுக்கு மட்டுமே உதவும்.


பிரபாஷ் ரஞ்சன் ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் பேராசிரியர் மற்றும் துணை இயக்குநர் (ஆராய்ச்சி) ஆவார்.


Original article : International law is not dead, its rules stay resilient -Prabhash Ranjan

Share: