மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ஒரு முக்கியச் செய்தி மட்டுமல்ல. அது நிதிசார் விகிதங்களை வடிவமைக்கிறது, பணவியல் கொள்கையை பாதிக்கிறது மற்றும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அடிப்படை ஆண்டு (base year) மாறும்போது, பொருளாதார வளர்ச்சியின் தரவுகள் அதற்கேற்ப மாறக்கூடும். ஆனால், இந்தப் புதிய தொடர் ஒரு வலுவான கேள்விக்கான பதிலையும் அளிக்கிறதா? இதன் பொருள், இந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக, நிலையானதாக மற்றும் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதா என்பதைக் காட்டுகிறதா?
இன்று உலகளாவிய பொதுக் கடன் அதிகரித்து வரும் சூழலிலும், அதே நேரத்தில், நிதி நிலைத்தன்மை குறித்த கவலைகள் பெருகி வரும் நிலையிலும், 'கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்' (debt-to-GDP ratio) போன்ற பேரியல் பொருளாதாரக் குறியீடுகள், பொருளாதார நிலைத்தன்மை குறித்த மிக முக்கியமான மதிப்பீட்டை வழங்குகின்றன. நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட 'நிதி ஆரோக்கியக் குறியீடு-2026' (Fiscal Health Index (FHI)), சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய 'நிதி கண்காணிப்பு அறிக்கையை' (Fiscal Monitor) மேற்கோள் காட்டி, ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த பத்தாண்டின் முடிவில் உலகளாவிய பொதுக் கடன், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 100%-ஐ எட்டக்கூடும்.
இந்தச் சூழலில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-க்கு மாற்றுவது என்பது வெறும் ஒரு தொழில்நுட்பரீதியான மேம்படுத்தலைவிட, அதற்கு பரந்த முக்கியத்துவம் உள்ளது. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடு அளவிடப்படும் கட்டமைப்பையும், நிதிசார் அளவீடுகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டு விளக்கப்படும் முறையையும் இது மாற்றக்கூடும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடப்படும் ஒரு முக்கியச் செய்தி மட்டுமல்ல, இது பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இது நிதி விகிதங்களை வடிவமைக்கிறது, பணவியல் கொள்கையை பாதிக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அடிப்படை ஆண்டு மாற்றப்படும்போது, பொருளாதார வளர்ச்சியின் தரவுக்கான விளக்கமும் மாறக்கூடும்.
புதிய தரவுத் தொகுப்புகள் கூறுவது என்ன?
2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள், பொருளாதாரத்தின் மாறிவரும் வேகத்தைப் பிரதிபலிக்கின்றன. கடந்த மாதம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), நாட்டின் பொருளாதார உற்பத்தியைப் பற்றிய விரிவான மற்றும் முழுமையான கண்ணோட்டத்தை வழங்குவதற்கான மூன்று முக்கியமான தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது.
முதலாவதாக, 2025-26 நிதியாண்டிற்கான தனது இரண்டாவது முன்மதிப்பீட்டை அமைச்சகம் வெளியிட்டது. திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டின்படி, 2025-26 நிதியாண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2024-25 நிதியாண்டில் பதிவான 7.1 சதவீதத்தைவிடச் சற்று அதிகமாகும். அடிப்படை ஆண்டு மாற்றத்திற்குப் பிறகும் பொருளாதார வளர்ச்சி நிலையாகவே நீடித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
இரண்டாவதாக, 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) (அக்டோபர்-டிசம்பர் 2025) மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை இந்த அமைச்சகமானது வெளியிட்டது. இந்த ஆண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 8.6 சதவீதம் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் மட்டும், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 84.54 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பிரதிபலிக்கிறது. பொருளாதாரச் செயல்பாடுகள் ஆண்டு முழுவதும் வலுவாகவே இருந்துள்ளன என்பதை இந்தக் காலாண்டுத் தரவுகள் காட்டுகின்றன.
மூன்றாவதாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரில் (GDP series) பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு முறையிலான மாற்றங்களை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி எவ்வாறு புதிய அடிப்படை ஆண்டின்கீழ் மாறுபட்ட முறையில் அளவிடப்படுகிறது என்பதை இந்தக் குறிப்பு விளக்குவதால், இந்தப் புள்ளிவிவரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று இந்தக் குறிப்பு விளக்குகிறது..
திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டு (revised base year) ஏன் தேவைப்பட்டது?
அடிப்படை ஆண்டு (Base Year) என்பது, பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கி, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஆண்டாகும். இருப்பினும், பொருளாதாரங்கள் காலப்போக்கில் மாற்றமடைகின்றன. ஒரு பழைய அடிப்படை ஆண்டை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தினால், அதன் விளைவாகக் கிடைக்கும் ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும்.
2011-12 மற்றும் 2022-23-க்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு தெளிவான மாற்றத்திற்கு உள்ளானது. 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதால் வணிகங்கள் மேலும் முறைப்படுத்தப்பட்டன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் (Digital payment systems) கணிசமாக அளவில் வளர்ந்தன. ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) இந்தியர்களிடையே அனைத்துப் பிரிவுகளிலும் விரும்பப்படும் பணப்பரிவர்த்தனை முறையாக மாறியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வேகமாக விரிவடைந்து, தூய்மையான ஆற்றல் மூலங்களை நோக்கிய ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது.
இந்த முன்னேற்றங்கள் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளிலும் ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தன. மேலும், பெருந்தொற்று ஆண்டுகள் (2019-20 மற்றும் 2020-21) உற்பத்தி மற்றும் தேவையைச் சீர்குலைத்தன. இதன் காரணமாக, பொருளாதாரத்தை அளவிடுவதற்கான ஒப்பீட்டு ஆண்டுகளாக இந்த ஆண்டுகள் பொருத்தமானவையாக அல்ல.
எனவே, 2022-23-ஐ புதிய அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுப்பது, பெருந்தொற்றுக்குப் பிந்தைய, நிலையான ஒரு பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள் புதிய துறைகளையும் மாறிவரும் போக்குகளையும் மிகவும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இருப்பினும், இதில் ஒரு முக்கியமான வரம்பு உள்ளது. பழைய மற்றும் புதிய அடிப்படை ஆண்டை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி விகிதங்களை நேரடியாக ஒப்பிட முடியாது. திருத்தப்பட்ட பழைய தரவுத் தொடர் வெளியிடப்படும் வரை, பொது விவாதங்கள் புதிய தரவுகளிலிருந்து மிக விரைவாக நீண்டகால முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
திருத்தப்பட்ட தொடரின் ஒரு முக்கிய பலம், அது அதிக தரவு மூலங்களைப் பயன்படுத்துவதாகும். முன்னதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு பெரும்பாலும் கணக்கெடுப்புகளுக்கு இடையேயான வெளிப்புறகணிப்புகளைச் (extrapolations) சார்ந்திருந்தது. இது குறிப்பாக முறைசாரா மற்றும் பதிவு செய்யப்படாத துறைகளுக்குப் பொருந்தியது. புதிய கட்டமைப்பு, பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர தரவைப் பயன்படுத்துகிறது. முறைசாரா நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் பெரும் பங்கை வழங்கும் ஒரு நாட்டிற்கு, இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
இப்போது நிர்வாகத் தரவுகள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி தரவுகள், மாநிலங்கள் முழுவதும் தனியார் பெருநிறுவனங்களின் உற்பத்தியைப் பகிர்ந்தளிக்க உதவுகின்றன மற்றும் காலாண்டு மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொது நிதி மேலாண்மை அமைப்பு (Public Financial Management System (PFMS)) அரசாங்கச் செலவினங்களை மிகவும் சரியான நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. இ-வாகன் தரவுத்தளத்திலிருந்து (e-Vahan portal) பெறப்படும் வாகனப் பதிவுகூட, நுகர்வை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
பதிலீட்டு விகிதங்களிலிருந்து உயர்-அதிர்வெண் டிஜிட்டல் பதிவுகளுக்கு (high-frequency digital records) மாறும் இந்த மாற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. இருப்பினும், இது புதிய கேள்விகளையும் எழுப்புகிறது. நிர்வாகத் தரவுகள் முக்கியமாக முறைசார்ந்த பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதால், முறைசாரா அல்லது ரொக்க அடிப்படையிலான பரிவர்த்தனைகள் போதுமான அளவு பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.
பொருளாதாரம் மேலும் முறைசார்ந்ததாக மாறும்போது, அளவிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கக்கூடும். தரவுப் பதிவு முறைகள் மேம்படுவதன் காரணமாக இது நிகழக்கூடும். இதன் பொருள், உண்மையான உற்பத்தி எப்போதும் அதிகரித்துள்ளது என்பதல்ல. எனவே, உண்மையான வளர்ச்சிக்கும் மேம்பட்ட புள்ளிவிவரத் தெளிவுக்கும் இடையிலான வேறுபாடு, புதிய தரவுகளின் பகுப்பாய்வுக்கு முக்கிய மையமாக உள்ளது.
பணவாட்டக் கட்டமைப்பின் விரிவாக்கம்
மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்களில் ஒன்று, மிக முக்கியமானவற்றில் ஒன்றாகவும் பணவாட்டக் கட்டமைப்பின் (deflation framework) விரிவாக்கமாகும். முன்னதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் சுமார் 180 விலைக் குறியீடுகளைச் சார்ந்திருந்தன. இப்போது, திருத்தப்பட்ட தொடரானது 600-க்கும் மேற்பட்ட நுணுக்கமான, பொருள்-நிலை பணவாட்டக் காரணிகளைப் பயன்படுத்துகிறது.
இது ஏன் முக்கியமானது? உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் எவ்வளவு சிறப்பாக அளவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது. பணவீக்கம் மோசமாக அளவிடப்பட்டால், உண்மையான வளர்ச்சியின் எண்ணிக்கைகள் துல்லியமற்றதாகிவிடும். முன்னர், பெரிய நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) அல்லது மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)) போன்ற ஒட்டுமொத்தக் குறியீடுகளுக்குப் பதிலாக, இப்போது தனிப்பட்ட கூறுகள் குறிப்பிட்ட துணைக்குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காய்கறி நுகர்வைச் சரிசெய்ய காய்கறி விலைகள் குறைக்கின்றன. ஆடைச் செலவினங்களைச் சரிசெய்ய ஆடை விலைகள் குறைக்கின்றன. இயந்திரங்கள், இயந்திரங்களுக்கென பிரத்யேகக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. கட்டுமானம், விரிவான உள்ளீட்டு-நிலை விலைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது.
இது துறைகளுக்கிடையேயான சிக்கல்களைச் சரிசெய்கிறது. அதாவது, ஒரு துறையில் ஏற்படும் கடுமையான விலை உயர்வு, மற்ற துறைகளில் உண்மையான வளர்ச்சியை தவறாகப் பாதிக்கக்கூடும். இந்த மாற்றம் அந்தப் பிரச்சனையைச் சரிசெய்கிறது. இந்தச் சீர்திருத்தம் தொழில்நுட்பரீதியானது. ஆனால் அதன் ஒட்டுமொத்த தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.
வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை மூலம் முரண்பாடுகளைக் குறைத்தல்
தேசிய கணக்கியலில், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) உற்பத்தி மற்றும் செலவின அணுகுமுறைகளுக்கு இடையிலான புள்ளிவிவர வேறுபாடு ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொடரானது வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை (Supply and Use Table (SUT)) கட்டமைப்பை ஒருங்கிணைக்கிறது. இந்தக் கட்டமைப்பு மொத்த வழங்கல், மொத்தப் பயன்பாட்டுடன் ஒப்பிடுகிறது. இது, மொத்த வழங்கல் உற்பத்தி மற்றும் இறக்குமதிகள் அடங்கும். மொத்தப் பயன்பாட்டில் நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அடங்கும். இது தரவுத்தொகுப்புகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் குறைக்க உதவுகிறது. இந்த அணுகுமுறை தரவுகளுக்குள் நிலைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துகிறது.
2025-26 நிதியாண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடரின் ஒரு முக்கிய தாக்கமானது நிதி விகிதங்களைப் பாதிக்கும். நிதிப் பற்றாக்குறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை அத்தகைய விகிதங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த விகிதங்களில், பற்றாக்குறையானது கடன் தொகுதியாகவும் (numerator), மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பகுதியாகவும் (denominator) இருக்கும். மறுஅடிப்படைப்படுத்தல் (rebasing) அல்லது சிறந்த அளவீடு காரணமாக பகுதி அதிகரிக்கும்போது, உண்மையான பற்றாக்குறை அல்லது கடன் மாறாமல் இருந்தாலும்கூட, விகிதம் தானாகவே குறைகிறது. இது பகுதி விளைவு (denominator effect) என்று அழைக்கப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:
இதற்கு ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அரசாங்கக் கடன் 100 ஆகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 ஆகவும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 50 சதவீதம் ஆகும். இப்போது, மேம்பட்ட அளவீட்டின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 220-ஆக உயர்த்தப்படுகிறது என்றும், கடன் 100 ஆகவே நீடிக்கிறது என்றும் ஒரு உதாரணமாகக் கொள்வோம். அரசாங்கம் ஒரு ரூபாய் கூட திருப்பிச் செலுத்தாத போதிலும், இந்த விகிதம் சுமார் 45 சதவீதமாகக் குறைகிறது.
காகிதத்தில், நிதி நிலைமை வலுவாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், எதுவும் மாறவில்லை. இதனால்தான் புள்ளிவிவர மேம்பாட்டை நிதி ஒருங்கிணைப்பு என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. உண்மையான ஒருங்கிணைப்பு என்பது அதிக வருவாய், கட்டுப்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் குறைந்த கடன் வாங்குதல் போன்ற வருவாயிலிருந்து வருகிறது. ஒரு பகுதியை (denominator) பொதுவாக அதிகரிப்பதால் மட்டும் இது வந்துவிடுவதில்லை.
சந்தைகள் மற்றும் தரமதிப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடன் வாங்கும் போக்கும், வட்டி செலுத்துதலை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனுமே முக்கியமானவை. மறுஅடிப்படைப்படுத்தலால் (rebasing) ஏற்படும் குறைந்த விகிதம், நிலைத்தன்மை குறித்த கேள்வியை மாற்றுவதில்லை. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) புதிய அடிப்படையுடன் சீரமைக்கப்படும்போது, அவை இதேபோன்ற சரிசெய்தல்களை எதிர்கொள்ளும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட கடன் வாங்கும் வரம்புகள் இயல்பாகவே மாறக்கூடும்.
பணவியல் கொள்கையைப் பொறுத்தவரை, இதன் தாக்கங்கள் பொதுவாக முக்கியமானவை. மிகவும் துல்லியமான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறதா அல்லது வேகம் குறைகிறதா என்பதை இந்திய ரிசர்வ் வங்கி புரிந்துகொள்ள உதவுகிறது. மேம்பட்ட தரவுகள் பணவீக்க மதிப்பீடு மற்றும் வட்டி விகித முடிவுகளை மேம்படுத்துகின்றன.
திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன செய்கிறது?, என்ன செய்யவில்லை?
திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரானது, இந்தியா தனது பொருளாதாரத்தை அளவிடும் முறையை மேம்படுத்துகிறது. இது மேம்படுத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் முறைசாராத் துறையை மிகவும் சீராகக் கண்காணிக்கிறது. இது மிகவும் விரிவான விலைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பணவீக்கம் சரிசெய்தல்களை மிகவும் துல்லியமாகவும், உண்மையான வளர்ச்சி மிகவும் கவனமாகவும் அளவிடப்படுகிறது.
மேலும், வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளின் (Supply and Use Tables) பயன்பாடு, உற்பத்தி மற்றும் செலவின மதிப்பீடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) போன்ற நிர்வாக அமைப்புகள் மிகவும் சரியான நேரத்தில் தரவுகளை வழங்குகின்றன. காலாண்டு மற்றும் ஆண்டு எண்ணிக்கைகளும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எளிமையாகச் சொன்னால், அளவீட்டுக்கான கணக்கீடுகள் மிகவும் துல்லியமாகியுள்ளது.
ஆனால் ஒரு சிறந்த அளவீடு, அதன்மீது நிற்கும் நபரை மாற்றிவிடுவதில்லை. மேம்பாடுகளுக்குப் பிறகும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியால் யார் பயனடைகிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை. அது சமத்துவமின்மை, வீட்டில் செய்யப்படும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள் அல்லது உற்பத்தியின் சுற்றுச்சூழல் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொள்வதில்லை. மேலும், இன்றைய 7 சதவீத வளர்ச்சி விகிதம் நாளை போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதற்கும் அது உத்தரவாதம் அளிப்பதில்லை.
ஒரு பொருளாதாரம் எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடுகிறது. ஆனால், அந்த உற்பத்தி எவ்வளவு நியாயமாகப் பகிரப்படுகிறது என்பதை அது அளவிடுவதில்லை. இந்தப் புதிய தொடர் புள்ளிவிவர நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. ஆனால் அது மட்டுமே ஒரு வலுவான கேள்விக்குப் பதிலளிப்பதில்லை. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதா? என்பதுதான்.