மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்காக. - குர்பச்சன் சிங்

நான்கு புதிய தொழில்துறைகள் பொருளாதார வளர்ச்சியையும், சமூகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் மேம்படுத்த முடியும்.


முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் அவரது இணை ஆசிரியர்கள், தங்கள் புதிய ஆய்வில் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவது போல சுமார் 6 சதவீதம் அல்லாமல், 2011 முதல் 2023 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக சுமார் 4 முதல் 4.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. வளர்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதைப் பற்றி விவாதித்த பிறகு, இப்போது கவனம் கொள்கையின் பக்கம் திரும்புகிறது. கொள்கை முடிவுகள் எவ்வாறாயினும் முக்கியமானவை.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதத்தை நாம் எவ்வாறு உயர்த்த முடியும்? மேலும், உலக மகிழ்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில் (World Happiness Report) இடம்பெற்றுள்ள 147 நாடுகளில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. இந்த விவரம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 'மகிழ்ச்சி' ஒரு பாடமாகவே கற்பிக்கப்படும் இக்காலகட்டத்திலும், இந்த உண்மை புறக்கணிக்கப்படுவது வியப்புக்குரியது. இங்கு வலியுறுத்தப்படுவது மரபுசாரா சிந்தனைகள் மீதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அதிகரிக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைகள் மீதும் ஆகும்.


இந்தியாவில் உள்ள நான்கு "புதிய" தொழில்துறைகளை நாம் இப்போது ஆராய்வோம். இவை தற்போது மிகச் சிறிய அளவிலேயே உள்ளன. அவை குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்புத் தொழில் (safety industry), தூய்மைத் தொழில் (cleanliness industry), இடமாற்றத் தொழில் (relocation industry) மற்றும் மன அமைதி/ஓய்வுத் தொழில் (relaxation industry) ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த நான்கு தொழில்துறைகளையும் இணைக்கும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது.


உண்மையில், இந்தத் துறைகளிடமிருந்து கூடுதல் சேவைகளுக்கு வலுவான மற்றும் அவசரத் தேவை உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் குறைவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் பல வளங்கள் உள்ளன. இதன் காரணமாக, விநியோகத்தை அதிகரிக்க உண்மையான சாத்தியக்கூறு உள்ளது. இந்தத் துறைகள் வளர்ந்தால், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிக்க முடியும். இந்த வளர்ச்சி மக்களின் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும்.


பாதுகாப்புத் தொழில் (Safety industry)


பாதுகாப்புத் தொழிலிருந்து நாம் தொடங்குவோம். இந்தியா முழுவதும் பாதுகாப்பின்மை என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினையாகும். மேலும், "இயற்கைப்" பேரழிவுகளிலிருந்து நமக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இறுதியாக, சாலை மோதல்கள் (road rage), கூட்ட நெரிசல்கள், எரிவாயு கசிவுகள், இணைய ஊடுருவல்கள் (hacking), மோசடிகள், ஆக்கிரமிப்புகள், கந்துவட்டி கும்பல்கள் போன்ற தற்செயலான "காரணிகளிலிருந்து" குடிமக்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதற்கான கொள்கைசார்ந்த தீர்வை அறிந்துகொள்ள, நாம் இப்போது சில எளிய பொருளாதாரக் கோட்பாடுகளைச் சற்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.


முதலில், ஒரு எளிய உதாரணத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பிற்குத் தேவைப்படும் ஒரே உள்ளீடு (input) மனிதவளம் (manpower) மட்டுமே தேவைப்படுகிறது. இதற்கான செலவை ஈடுகட்ட, மக்கள் தாங்கள் வாங்கும் மற்ற எண்ணற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவை மிகச் சிறிய அளவில் குறைத்துக்கொண்டு, பாதுகாப்புச் சேவைக்காகச் சற்று கூடுதலாகச் செலவிட அவர்களை நாம் ஊக்குவிக்கலாம். இதன் விளைவாக, பாதுகாப்புத் தொழில் விரிவடையும்போது, ​​வேலையில்லாமல் இருந்த சிலருக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். இதனால் ஒட்டுமொத்தத் தேவை (aggregate demand) குறைந்துவிடாமல் பராமரிக்கப்படுவது மட்டுமல்லாமல், உண்மையில் அது மேலும் அதிகரிக்கவே செய்கிறது. பாதுகாப்புத் தொழிலிருந்து வெளிவரும் சேவைகளின் வெளியீடும் அதிகரிக்கிறது.


இது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) மக்களின் மகிழ்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கிறது. கூடுதல் உள்ளீடுகளில் மனிதவளம் மட்டுமல்லாமல், பொருட்கள் மற்றும் உபகரணங்களும் அடங்கும் என்ற பொதுவான சூழலில், பாதுகாப்புத் துறையில் சாத்தியமாகக்கூடிய அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அது இப்போதும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. அடுத்து, நாம் தூய்மைத் தொழில் குறித்துக் காண்போம். 


அரசாங்கம் 2014-ம் ஆண்டில் 'தூய்மை இந்தியா இயக்கம்' (Swachh Bharat Mission) ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் நடைமுறையில், அது முக்கியமாக திறந்தவெளியில் மலம் கழிப்பதைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது. இன்னும் பரந்த நோக்கில் பார்த்தால், பொது இடங்களில் தூய்மை என்பது இன்றும் ஒரு தீவிரமான பிரச்சினையாகவே நீடிக்கிறது. தூசி, கழிவுகள், கட்டுமான இடிபாடுகள், நீர் தேக்கம், புகை போன்ற முக்கியமான கவலைக்குரிய அம்சங்கள் இங்கு உள்ளன. தூய நீரின் தேவையை எவ்வளவு வலியுறுத்தினாலும் அது மிகையாகாது. காற்றின் தரக் குறியீட்டை (Air Quality Index (AQI)) கணிசமான அளவில் குறைக்க வேண்டியது அவசியமாகும்.


சுத்தத் துறையை விரிவுபடுத்துவதன் பொருளாதாரம், முன்னர் விளக்கப்பட்ட பாதுகாப்புத் துறையின் பொருளாதாரத்தைப் போன்றது. எனவே, அது இங்கே மீண்டும் விவாதிக்கப்படவில்லை. அடுத்து, இடமாற்றத் தொழிலை (Relocation industry) நாம் கருத்தில் கொள்வோம். இந்தியாவில் உள்ள பெருநகரங்கள், பெரும்பாலும் மக்கள் நெருக்கடியால் திணறுகின்றன.


இடமாற்றத் தொழில் (Relocation industry)


இந்த நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் நிலத்தின் அதிகப்படியான விலையாகும். இந்நிலை ஏற்படுவதற்கு, இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் பல இடங்களில் நிலவும் மனை வணிக துறையின் 'உரிம ஆட்சி' (License Raj) போன்ற காரணிகளே காரணமாக அமைகின்றன. மறுபுறம், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்,-2013' (Land Acquisition Act) போன்ற காரணிகளால் கிராமப்புற நிலங்களின் விலையும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும், மாநில அளவில் இச்சட்டத்தில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நில விலைகள் உயர்வாக இருப்பதற்கு மற்றொரு கூடுதல் காரணியும் உள்ளது.


இந்த நிலைமை நிதித்துறையில் ஒரு வகையான நிதி அடக்குமுறையாகும் (financial repression). இது மனை வணிக போன்ற மாற்றுச் சொத்துக்களுக்கான வலுவான தேவையை அதிகரிக்கச் செய்யும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பொது அதிகார அமைப்புகள் கூட, நிலங்களை மிகப்பிரம்மாண்டமான அளவில் 'குவித்து' (hoarding) வைத்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் நிலங்கள் கணிசமான அளவில் முழுமையாகப் பயன்படுத்தப்படாமலும், தவறான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டும் உள்ளன. விவசாயிகளிடம் அதிக 'சந்தை' விலையைக் கொண்ட நிலங்களை  வைத்துக்கொண்டாலும், அவற்றின் அடிப்படைப் பயன்பாட்டு மதிப்பு குறைவாகவே உள்ளது. இதனால் அவர்களின் விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக அவர்கள் கவலையுடன் உள்ளனர்.


மறுபுறம், நகர்ப்புற மக்கள் சிறிய அளவிலான, அதிக விலை கொண்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். குடிமக்களில் பெரும்பகுதியினர் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளிலும், குடிசைப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களும் மகிழ்ச்சியற்ற நிலையிலேயே உள்ளனர். மொத்தத்தில் நாட்டிற்குப் போதுமான அளவு நிலம் இருந்தபோதிலும், இத்தகைய நிலை நிலவுகிறது. கொள்கைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு மாற்றம், நிலத்தின் சராசரி விலையைக் குறைக்கக்கூடும். புதிய மலைவாழ் நிலங்கள் உள்ளடக்கிய புதிய நகரங்களை உருவாக்கலாம். அல்லது தற்போதுள்ள சிறிய நகரங்களை முறையாக விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம். 


இந்த முயற்சியில் திறமையான மனை வணிக மேம்பாட்டாளர்கள் ஈடுபட வேண்டும். அவர்களால் ஒரு முழுமையான சூழலமைப்பை உருவாக்க முடியும் அல்லது வழிகாட்ட முடியும். அத்தகைய சூழலமைப்பில், மக்கள் படிப்படியாக புதிய இடங்களுக்குச் செல்லத் தயாராக இருப்பார்கள். இடமாற்றம் ஒரே நேரத்தில் நடக்காமல், ஒவ்வொரு நிலையாக நடக்க வேண்டும். இதன் மூலம், திட்டமிட்ட வகையிலான கட்டுமானப் பணிகளை அதிகரிக்கவும், உயர்ந்த உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பெறவும் நம்மால் இயலும்.





ஓய்வுத் தொழில் (Relaxation industry)


இதுவரை நாம் பாதுகாப்புத் தொழில், தூய்மைத் தொழில், மற்றும் நிலத்தின் விலையைக் குறைக்கக்கூடிய இடமாற்றத் தொழில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுள்ளோம். இவை அனைத்தும் ஓய்வுத் தொழிலை விரிவுபடுத்துவதற்குப் பயனுள்ளதாக இருக்கும். இது மிகவும் மாறுபட்ட கலவையை உள்ளடக்கியது. இதில் அதிக பொதுப் பூங்காக்கள், திரையரங்குகள், மன்றங்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு வளாகங்கள், விடுமுறைத் தலங்கள் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவை அடங்கும். இதை மேலும் விரிவுபடுத்தி, நமது சொந்த வடிவிலான மதுபான விடுதிகளைக்கூட உருவாக்கலாம். தூய்மையான காற்றும் சிறந்த சுற்றுப்புறமும் நமக்குக் கிடைக்கும்போது, ஓய்வுத் தொழிலில் சிக்கனமான திறந்தவெளி சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளடக்கும். இப்போது ஓய்வுத் தொழிலில் முற்றிலும் மாறுபட்ட அம்சத்தைப் பார்ப்போம். ஓய்வுக்கு நேர்மாறானது மன அழுத்தம் (stress) ஆகும். பலருடைய வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வேறு சிலர், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சகித்துக்கொள்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகள் அதிக நேரத்தையும் பணத்தையும் விரையப்படுத்துவதால், அவர்கள் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர்க்கின்றனர்.


சில பொதுச் செலவினங்களை மறுஒதுக்கீடு செய்வதன் மூலமும், சில கொள்கைகளை மாற்றுவதன் மூலமும் நீதித்துறையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மக்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள், அவர்களால் தங்கள் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். அவர்களின் உரிமைகளில் தெளிவு கிடைக்கும். மேலும், வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இது அதிக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது.


கட்டுரையாளர் ஒரு தன்னிச்சை பொருளாதார நிபுணர். இவர் அசோகா பல்கலைக்கழகம், ISI (டெல்லி) மற்றும் JNU ஆகியவற்றில் கற்பித்துள்ளார்.


Original Link: For GDP growth that spurs happiness.


Share:

ஏகபோகச் சூழலில் ஒப்புதலுக்கு மதிப்பில்லை என்பதை வாட்ஸப் தனியுரிமை வழக்கு (WhatsApp privacy case) காட்டுகிறது. -கிருதி பார்கவா மற்றும் அருண் குமார் கௌஷிக்

பயனர் தரவுகளை மெட்டா நிறுவனம் எவ்வாறு கையாள வேண்டும் என்று கூறும் ஒரு சட்டம் மட்டும் இந்தியாவிற்குத் தேவையில்லை. மாறாக, அந்நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தைக் கொண்டு அது என்ன செய்ய முடியும் என்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு வலுவான கட்டமைப்பு தேவை.


நீங்கள் முதன்முதலில் வாட்ஸப் செயலியைப் (WhatsApp) பதிவிறக்கம் செய்த நாளை நினைத்துப் பாருங்கள். இந்த செயலியில் ஒரு தனியுரிமைக் கொள்கை (privacy policy) தோன்றும். அது நீளமாகவும், சட்டச் சொற்கள் நிறைந்ததாகவும் இருக்கும். பெரும்பாலான மக்கள் கீழே அதன் அடிப்பகுதிக்குச் சென்று, பெட்டியில் "ஒப்புக்கொள்கிறேன்" (agree) என்ற பொத்தானை தேர்வு செய்து நகர்வீர்கள். அதை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தொலைபேசி எண், சுயவிவரப் பெயர், புகைப்படம் மற்றும் பயன்பாட்டு விவரங்களை முகநூல் குழும நிறுவனங்களுடன் (Facebook’s group companies) பகிர்ந்துகொள்ள அந்தத் தளத்திற்கு நீங்கள் சம்மதித்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பகிர்வு முக்கியமாகப் பயனர் பாதுகாப்பிற்காக அல்ல. அது விளம்பரதாரர்களுக்கான விரிவான விவரங்களை உருவாக்குவதற்காகவே இருந்தது. உங்களின் தனிப்பட்ட செய்திகள் மறைகுறியாக்கம் (encryption) செய்யப்பட்டே இருக்கும் என்று வாட்ஸப் (WhatsApp) குறிப்பிடும். இருப்பினும், அது மற்ற வகை தரவு சேகரிப்புகளைத் தெளிவாக விளக்கவில்லை. அதாவது, மெட்டாடேட்டா, சிக்னல்கள், டிஜிட்டல் தடயங்கள் என அனைத்தையும் ஒன்றாக இணைக்கும்போது, செய்திகளைவிட ஒரு நபரைப் பற்றி அதிக தகவல்களை வெளிப்படுத்த முடியும்.


இந்தக் கண்ணுக்குத் தெரியாத பரிவர்த்தனைகள் இப்போது இந்திய உச்சநீதிமன்றத்தின் முன் வெளிப்பட்டுள்ளது. 2021-ல், வாட்ஸப் (WhatsApp) தனது தனியுரிமைக் கொள்கையைப் (privacy policy) புதுப்பித்தது. அதிலிருந்து விலகிக்கொள்ளும் விருப்பத்திற்குப் பதிலாக, "பல்வேறு தளங்களில் தரவுப் பகிர்வை ஏற்றுக்கொள்வது அல்லது செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்து" என்ற ஒரு கடுமையான இறுதி எச்சரிக்கையை அது விடுத்தது. இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India), ரூ.213.14 கோடி அபராதமும், விளம்பரங்களுக்காகப் பயனர் தரவைப் பகிர்வதற்கு ஐந்தாண்டுத் தடையும் விதித்தது. மெட்டா நிறுவனம் இதை எதிர்த்து தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அத்தீர்ப்பாயம் அபராதத்தை உறுதிசெய்ததுடன், தரவுப் பகிர்வு மீதான ஐந்தாண்டுத் தடையை அது நீக்கியது.


பின்னர் மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதற்குச் சிறிதும் அனுதாபம் காட்டாமல், இந்த நடைமுறையை "தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான ஒரு கண்ணியமான வழி" (decent way of committing theft of private information) என்றும் "அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்குதல்" (Mockery of Constitutionalism) என்றும் குறிப்பிட்டது. தலைமை நீதிபதி, வாட்ஸப் செயலிருந்து விலகுவது என்பது "நாட்டிலிருந்தே விலகுவதற்கு" ஒப்பானது என்று குறிப்பிட்டார். ஒரு நிறுவனத்திற்கு ஏகபோக அதிகாரம் இருக்கும்போது, பயனர்களுக்கு உண்மையான தேர்வு இருப்பதில்லை என்பதே அதன் பொருளாகும். எனவே, பயனர்களின் ஒப்புதல் உண்மையாகவே தன்னார்வமானது அல்ல. எனவே, அந்நிறுவனம் தரவுகளைப் பகிர்வதை நிறுத்த வேண்டும் அல்லது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படும் என்றும் "மிகக் கடுமையான நிபந்தனைகளை" எதிர்கொள்ள நேரிடும் என்றும் நீதிமன்றம் மெட்டா நிறுவனத்தை எச்சரித்துள்ளது.


இந்த விவகாரம் வெறும் ஒழுங்குமுறை சார்ந்த தகராறு மட்டுமல்ல, இது ஒரு வலுவான கேள்வியை நீதிமன்றம் எழுப்புகிறது. நீதிபதி பாக்சி, இந்த விவாதத்தை தனியுரிமையிலிருந்து பொருளாதார மதிப்புக்கு மாற்றினார். இந்தியப் பயனர்களின் நடத்தை தரவுகள் மூலம் பில்லியன் கணக்கில் விளம்பர வருவாய் ஈட்டப்பட்டால், அந்த இலாபங்களுக்கு யார் உரிமையாளராக வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.


கண்காணிப்பு முதலாளித்துவத்தின் (surveillance capitalism) பின்னணியில் உள்ள கருத்து இதுதான். இது, நிறுவனங்கள் மனித நடத்தை யாரிடமிருந்து தோன்றுகிறதோ அவர்களுக்கு இழப்பீடு வழங்காமல், அந்த நடத்தை சேகரிக்கப்பட்டு விற்கப்படும் ஒரு பொருளாதார அமைப்பாக இருக்க அறிஞர் ஷோஷனா ஜுபாஃப்பால் உருவாக்கப்பட்ட ஒரு சொல்லாகும். பயனர்கள் "நுகர்வோர் மட்டுமல்ல, அவர்களும் பொருட்கள்தான்" என்ற சொலிசிட்டர் ஜெனரலின் கருத்து, இணையம் "இலவசமானது" என்ற கருத்தின் மீதான வளர்ந்து வரும் அதிருப்தியை இந்தக் கூற்று சுட்டிக்காட்டுகிறது. தரவுகள் சேகரிக்கப்பட்டவுடன், அதிலிருந்து யார் லாபம் அடைகிறார்கள் என்பது குறித்து இந்தியச் சட்டம் பெரும்பாலும் தெளிவாகக் கூறவில்லை. "வாடகை-பகிர்வு" (rent-sharing) குறித்த நீதிமன்றத்தின் குறிப்பு, இந்த மௌனம் இனிமேலும் நீடிக்காது என்பதை உணர்த்துகிறது.


பிரச்சனை லாபத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது அதைவிட ஆழமானது. நீங்கள் ஏன் வாட்ஸப் செயலியை (WhatsApp) பயன்படுத்தத் தொடங்கினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த அனைவரும் ஏற்கனவே அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால்தான் நீங்கள் முக்கியமாக அதில் இணைந்தீர்கள். பொருளாதார வல்லுநர்கள் இதை 'பாதைச் சார்புநிலை' (path dependency) என்று என்று விவரிக்கிறார்கள். அதாவது, பலர் ஒரு தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்றவர்கள் அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமாகிவிடுகிறது. வெளியேறுவது மிகவும் செலவு மிக்கதாகவோ அல்லது சிரமமானதாகவோ ஆகிவிடுகிறது. காலப்போக்கில், முதல் முடிவு ஒரு உண்மையான தேர்வாகத் தோன்றுவதில்லை. இப்படித்தான் பெருநிறுவனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அதிகாரத்தைக் கட்டமைத்து வலுப்படுத்துகின்றன. அவர்கள் கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை, மாறாக, மக்கள் எளிதில் வெளியேற முடியாதபடி தங்கள் தளங்களை மிகவும் பரவலாக உருவாக்குகிறார்கள்.


இதேபோன்ற ஒரு சிக்கல் முன்பே நிகழ்ந்துள்ளது. 2021-ம் ஆண்டின், வாட்ஸப் செயலியின் (WhatsApp) 2021 புதுப்பிப்பு (update), புவியியல் அடிப்படையில் ஒரு இரு-அடுக்கு அமைப்பை (two-level system) உருவாக்கியது. பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையால் (General Data Protection Regulation (GDPR)) பாதுகாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பயனர்கள், புதிய தரவுப் பகிர்வு விதிமுறைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தியா உட்பட மற்ற எல்லா இடங்களிலும், இந்தப் புதுப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த வேறுபாடு தொழில்நுட்பரீதியானது அல்ல, ஒழுங்குமுறைரீதியானது. சட்டம் தேவைப்பட்ட பிராந்தியங்களில் மட்டுமே வாட்ஸப் செயலி (WhatsApp) கடுமையான விதிகளைப் பின்பற்றியது.


ஐரோப்பிய ஒன்றியம் தனது ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பல கட்டங்களாக உருவாக்கியது. 2018 முதல் நடைமுறையில் உள்ள பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR), நிறுவனங்கள் தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு சேகரிக்கின்றன மற்றும் பயன்படுத்துகின்றன என்பதை நிர்வகிக்கிறது, தகவலறிந்த ஒப்புதலைக் கோருகிறது. மேலும், இது பயனர்களுக்குத் தங்கள் தரவை அணுகவும், திருத்தவும், நீக்கவும் உரிமை வழங்குகிறது. இந்தியாவின் 2023-ம் ஆண்டின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) இதன் சில கூறுகளைப் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், இது இன்னும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை. மேலும், இதைச் செயல்படுத்தத் தேவையான விரிவான விதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் காத்திருக்கின்றன. காகிதத்தில் இதன் கட்டமைப்பு ஒரே மாதிரியாகத் தோன்றலாம். நடைமுறையில், அவற்றை அமல்படுத்தும் நிறுவனங்களின் வலிமை வேறுபடுகிறது.


தனியுரிமைச் சட்டங்களுக்கு அப்பால் நாம் பார்க்கும்போது, இந்த ஒப்பீடு மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. ஒரு நிறுவனம் தரவு விதிகளைப் பின்பற்றினாலும், சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. இப்பிரச்சினையைக் கையாள்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மேலும் இரண்டு கூடுதல் சட்ட அமைப்புகளை அறிமுகப்படுத்தியது.


டிஜிட்டல் சேவைகள் சட்டம் (Digital Services Act (DSA)), முக்கியமான தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களைத் தடை செய்கிறது. மேலும், குழந்தைகளை இலக்காகக் கொண்ட சுயவிவர அடிப்படையிலான விளம்பரங்களையும் இது தடை செய்கிறது. இந்தச் சட்டம் dark patterns எனப்படும் பயனர்களை ஏமாற்றி, அவர்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வைக்கும் ஒரு நயவஞ்சகமான வடிவமைப்புகளை வெளிப்படையாகச் சட்டவிரோதமாக்குகிறது. வாட்ஸப் செயலி (WhatsApp) ஒப்புதல் வழிமுறையில் உச்ச நீதிமன்றம் விமர்சித்ததை, டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA) ஏற்கனவே ஐரோப்பாவில் தடை செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற அளவிலான பாதுகாப்பு இல்லை.


டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (Digital Markets Act (DMA)) இதைவிட ஒரு படி மேலே செல்கிறது. இது ஆதிக்கம் செலுத்தும் தளங்களை "கேட்கீப்பர்கள்" (gatekeepers) என வகைப்படுத்துகிறது. இவை, முழு சந்தைகளுக்குமான அணுகலைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சக்திவாய்ந்த நிறுவனங்களாகும். செப்டம்பர் 2023-ல், ஐரோப்பிய ஆணையம் முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸப் (WhatsApp), மெசஞ்சர் (Messenger) மற்றும் அதன் விளம்பரச் சேவைகள் முழுவதும் மெட்டாவை ஒரு கேட்கீப்பராக வகைப்படுத்தியது. இதற்கான தகுதி வரம்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் மாதந்தோறும் 45 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்க வேண்டும். வாட்ஸப் (WhatsApp) பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. இருப்பினும், இந்தியச் சட்டத்தின்கீழ் இதற்கு இணையான வகைப்படுத்தும் முறை எதுவும் இல்லை.


டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் (DMA) 5-வது பிரிவு, வெளிப்படையான, அபராதமற்ற ஒப்புதல் இல்லாமல், பல்வேறு தளங்களில் தனிப்பட்ட தரவுகளை இணைப்பதை கேட்கீப்பர்களுக்குத் தடை செய்கிறது. இந்த கட்டுப்பாடு டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP) சட்டத்தில் இல்லை. டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA), இடைசெயல்பாட்டுத் திறனையும் (interoperability) கட்டாயமாக்குகிறது. இதன் பொருள், மற்ற செய்திப் பரிமாற்றத் தளங்களின் பயனர்கள் வாட்ஸப் பயனர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிய வேண்டும். இது ஒரு கட்டமைப்புரீதியான வழியில் மாற்றுச் செலவுகளைக் குறைக்கிறது. இது போட்டியை மிகவும் உண்மையானதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் ஆக்குகிறது. இந்தியாவில் அத்தகைய தேவை இல்லை. டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP), செயலிகளின் அளவைப் பொருட்படுத்தாமல், அனைத்து செயலிகளுக்கும் ஒரேமாதிரியான விதிகளைப் பயன்படுத்துகிறது. சமமற்ற ஒரு சந்தையில், வாட்ஸப் செயலியையும் ஒரு புத்தொழில் நிறுவனத்தையும் சமமான பங்களிப்பாளர்களாகக் கருதுகிறது.


ஐரோப்பியச் சட்டத்தை முழுமையாக பின்பற்றக்கூடாது என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம். பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR), டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA) மற்றும் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) ஆகியவை ஒரு குறிப்பிட்ட சட்ட மற்றும் அரசியல் மரபிலிருந்து உருவானவை. இந்தியா அவற்றை மாற்றங்கள் இல்லாமல் ஏற்றுக்கொண்டால், அது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அந்தச் சட்டங்கள் இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருந்தாமல் போகலாம். ஆகவே, அவற்றை நேரடியாகப் பின்பற்றுவது நியாயமான கவலைகளை எழுப்பக்கூடும். இருப்பினும், இந்தச் சட்டங்களின் பின்னணியில் உள்ள அடிப்படைக் கருத்து எல்லா இடங்களிலும் பொருந்தும். குடிமக்களின் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு நிறுவனம், அவர்கள் இல்லாமல் வாழமுடியாத உள்கட்டமைப்பையும் கட்டுப்படுத்தும்போது, தனியுரிமைச் சட்டம் மட்டும் அவர்களைப் பாதுகாக்க முடியாது. தரவுகளை எவ்வாறு கையாள்வது என்று மெட்டா நிறுவனத்திற்குச் சொல்லும் ஒரு சட்டம் மட்டும் இந்தியாவிற்குத் தேவையில்லை. மாறாக, சந்தையில் நிறுவனம் தனது ஆதிக்க நிலையை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமைப்பு தேவை.


இந்திய உச்சநீதிமன்றம் இதை உணர்ந்துள்ளது. நீதித்துறை சுட்டிக்காட்டும் வழியை சட்டமன்றமும் நிர்வாகத்துறையும் பின்பற்றத் தயாராக இருக்கின்றனவா என்பதே இப்போது முக்கியமான கேள்வியாகும்.


பார்கவா ஒரு பொதுக் கொள்கை மாணவர். கௌஷிக் புனேவில் உள்ள ஃபிளேம் பல்கலைக்கழகத்தில் பொருளியல் கற்பிக்கிறார்.


Original Link: WhatsApp privacy case shows consent is meaningless in a monopoly.


Share:

ஒரு தொன்மையான மலைத்தொடரை எவ்வாறு வரையறுப்பது? ஒரு நுட்பமான சமநிலையைப் பாதுகாப்பதன் மூலம். — அனூப் சிங்

வரைபடத்தை புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ள இதுவும் ஒரு நல்ல நேரமாகும். ஏனெனில், ஆரவல்லி மலைத்தொடர் 2011-ஆம் ஆண்டு, திறமையான இயக்குநர் ஜெனரலான மறைந்த ஆர்.டி. ஜகாட்டி தலைமையில் வன ஆய்வு நிறுவனம் (Forest Survey of India (FSI)) மூலம் நுணுக்கமாக வரைபடமாக்கப்பட்டது.


ஒரு தொன்மையான மலைத்தொடரை வரையறுக்கும், மேலும் சிக்கலானதாகத் தோன்றும் ஒரு பணியை ஒரு புதிய நிபுணர் குழு மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அப்போதைய இந்திய வன ஆய்வுத் துறையின் (Forest Survey of India (FSI)) தலைமை இயக்குநராக (DG) இருந்தபோது, ஆரவல்லிக்கு 100 மீட்டர் உயரத்தை அடிப்படையாகக் கொண்ட வரையறையை நான் ஏன் எதிர்த்தேன் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

வரைபடத்தை புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ள இதுவும் ஒரு நல்ல நேரமாகும். ஏனெனில், மிகவும் திறமையான தலைமை இயக்குநர், மறைந்த ஆர். டி. ஜகாதி அவர்களின்கீழ், இந்திய வன ஆய்வுத் துறையால் (FSI) ஆரவல்லி மலைகள் 2011-ஆம் ஆண்டிலேயே துல்லியமாக வரைபடமாக்கப்பட்டன.


பிப்ரவரி 19, 2010 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ராஜஸ்தானின் ஆரவல்லி மலைகளில் உள்ள சுரங்கப் பகுதிகளை வரைபடமாக்கும் பணியை, உச்சநீதிமன்றத்தின் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு வன ஆய்வுத் துறைக்கு வழங்கியது.


பின்னர், அராவள்ளி மலைத்தொடரின் வரைபடத்தை பிற வரைபட அமைப்புகளிடமிருந்து பெற முடியாததால், இந்திய வன ஆய்வுத்துறை (FSI) தானாகவே கடினமான வரைபட பணியை மேற்கொண்டது. அதன் பிறகு, 2011 ஏப்ரல் 13 அன்று, ராஜஸ்தானின் 15 மாவட்டங்களுக்கான ஆரவல்லி மலைத்தொடரின் வரையறுக்கப்பட்ட வரைபடத்தை சமர்ப்பித்தது.


அராவலி குன்றுகள் மற்றும் மலைத்தொடர்களுக்கு ஒரு சீரான வரையறையைக் கண்டறியும் வகையில், 2024 மே 9 அன்று உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டபோது, ​​இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.


குழு தனது அறிக்கையை 2025 அக்டோபர் 3 அன்று தனது பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்தது. இந்திய வன ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநராக, நான் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தேன். கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக, ஒரு குறிப்பு மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தை அடிப்படையாகக் கொண்ட வரையறையை நான் எதிர்த்திருந்தேன். 2025 நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இந்தப் பத்திரிகையின் பல அறிக்கைகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டிசம்பர் 29 அன்று, உச்சநீதிமன்றம் நவம்பர் மாதத் தீர்ப்புக்குத் தடை விதித்து, இந்தப் பிரச்சனையை ஆராய ஒரு புதிய குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது.


இந்தக் குழு அமைக்கும் செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கும்போது, சில முக்கிய அம்சங்களை குறிப்பிடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.


ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை, பரப்பு, பரவல், எல்லை நிர்ணயம் மற்றும் உயர நிலைப்பகுதிகளின் பிரிவுகள் குறித்து சமீபத்திய ஆய்வு, நான் இந்திய வன ஆய்வுத்துறையின் (FSI) இயக்குனராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. நான் நெதர்லாந்தின் ITC-ல் தொலை உணர்தல் (Remote Sensing) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (Geographic information system (GIS))  பற்றிப் படித்தேன். மேலும், அமெரிக்காவின் ESRI நிறுவனத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றினேன். இந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஒரு அளவான புரிதல் உள்ளது என்று நான் கூறுகிறேன்.


தலைமை இயக்குநராகப் பணியாற்றியபோது, ஆரவல்லியிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளை விலக்குவதால் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறிய, ராஜஸ்தானின் 15 மாவட்டங்களுக்கான தரவுகளை நான் பகுப்பாய்வு செய்திருந்தேன். 2011-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அரசு, ஆரவல்லி மலைகள் அந்த மாவட்டங்களில் மட்டுமே காணப்படுவதாகக் கூறியிருந்ததால், 15 மாவட்டங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.


இந்த 15 மாவட்டங்களுக்கான டிஜிட்டல் உயர வரைபட (contour) தரவுகள் வன ஆய்வு நிறுவனத்திடம் இருந்தன. இந்த தரவுகள் 2011-ஆம் ஆண்டு 1:50,000 அளவிலான Survey of India நிலவரைபடங்களிலிருந்து டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்டன. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2011-ல் 3-டிகிரி சரிவு (slope) அளவுகோலை பயன்படுத்தி அராவள்ளி மலைத்தொடரின் எல்லையை உச்சநீதிமன்றத்திற்கு இந்திய வன ஆய்வுத்துறை முன்மொழிந்தது. மேலும், 2025-ஆம் ஆண்டு இந்திய வன ஆய்வுத் துறையின் (Forest Survey of India (FSI)) மேற்கொண்ட பகுப்பாய்வு முடிவுகள் கடந்த நவம்பரில் இந்த செய்தித்தாளில் வெளியிடப்பட்டன. அதை  நாம் அட்டவணை 1-ன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்த ஆய்வின் துல்லியம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், முன்னாள் தலைமை இயக்குனர் இந்திய வன ஆய்வுத் துறையில் பணியாற்றிய ஜகாதியின் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய நில அளவைத் துறை தாள்களை அடிப்படையாகக் கொண்ட தரவுத்தொகுப்பை மாற்றாமல், முன்மொழியப்பட்ட குழுவால் இந்த ஆய்வு மீண்டும் செய்யப்பட வேண்டும்.


செப்டம்பர் 22, 2025 தேதியிட்ட இந்திய வன ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, 62 மாவட்டங்கள் ஆரவல்லியில் சேர்க்கப்படுவதற்குத் தகுதி பெறுகின்றன. இதற்கு மாறாக, சுற்றுச்சூழல் செயலாளரின் குழு அக்டோபர் 3, 2025 அன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 37 மாவட்டங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது. கோட்டைகளுக்குப் புகழ்பெற்ற சவாய் மாதோபூர் மற்றும் சித்தூர்கர் போன்ற முக்கிய மாவட்டங்கள், ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்திலும், கலாச்சார அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரிய தளங்களிலும் "ராஜஸ்தானின் மலைக்கோட்டைகள்" (Hill Forts of Rajasthan) என சேர்க்கப்பட்டுள்ளதால், செயலாளரின் குழுவால் ஆரவல்லி மாவட்டங்களின் பட்டியலிலிருந்தும் அவை விலக்கப்பட்டன.


சேர்க்கப்பட வேண்டிய மாவட்டங்களும், அவற்றைச் சேர்ப்பதற்கான காரணங்களும் இந்திய வன ஆய்வுத் துறையின் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அட்டவணை காட்டுவது போல, இதில் ஏற்பட்டுள்ள இடைவெளி வெளிப்படையானதாக உள்ளது. அதை நாம் அட்டவணை 2-ன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இதைச் சரிசெய்யாவிட்டால், பல மாவட்டங்களில் மலைகள் குரல் கொடுக்கக்கூட வாய்ப்பின்றி அழிக்கப்பட்டு விடும் நிலைக்கு ஆளாகும்.


சுற்றுச்சூழல் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம், இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) போன்ற பல்வேறு அரசு முகமைகள், குறிப்பிட்ட சில மாவட்டங்களை 'ஆரவல்லி'  மண்டலத்தின்கீழ் ஏன் சேர்த்து வருகின்றன என்பதற்கான காரணங்களை அறிந்துகொள்ள, இந்தப் புதிய குழுவானது இந்திய வன ஆய்வுத் துறையின் செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு  அறிக்கையையும் ஆய்வு செய்ய வேண்டும்.


புதிய குழு, முன்பு இந்திய வன ஆய்வுத் துறை (FSI) பயன்படுத்திய 3-டிகிரி சரிவு அளவுகோலின் நம்பகத்தன்மையையும் மீண்டும் பரிசீலிக்கலாம். இது காலத்தால் சோதிக்கப்பட்ட முறையாகும். ஆரவல்லிப் பகுதியில் மலைகளை மிகவும் துல்லியமாக அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.


ராஜஸ்தானின் 8 சதவீதம் மட்டுமே காடுகளாலும் மரங்களாலும் சூழப்பட்டுள்ளது  என்று 2023-ஆம் ஆண்டு இந்திய வன அறிக்கை (India State of Forest Report (ISFR)) தெரிவிதுள்ளது. இதில் பெரும்பாலான பகுதி ஆரவல்லி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நுட்பமான சமநிலையை குலைக்காமல் இருக்க ஆரவல்லி மலைப்பகுதியின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.


சிங் என்பவர் இந்திய வன ஆய்வு மையத்தின் (FSI) முன்னாள் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.


Original Link: How to define an ancient hill range? By protecting a delicate balance?.


Share:

இந்தியாவில் 'கோல்டிலாக்ஸ் பொருளாதாரம்' (Goldilocks economy) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


QuantEco Research நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் செய்த சூழ்நிலை பகுப்பாய்வு படி, 2026–27-ஆம் ஆண்டில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் $80 அளவில் இருந்தால், அதன் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும். ஆனால் விலை இதைவிட உயர்ந்தால், அதன் விளைவுகள் பாதிப்பு “மிகச் சிறியதாகவே” இருக்கும். ஆனால், எண்ணெய் விலை அதிகமாக உயர்ந்தால், அதன் தாக்கம் “நேரியல் அல்லாததும் மற்றும் பரந்த அடிப்படையிலானதாக”  (non-linear and broad based) மாறும். குறிப்பாக, 2026-27-ல் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஆக சராசரியாக இருந்தால், ரூபாய் மதிப்பு ஒரு $98.5 வரை பலவீனமடையலாம் என்று தெரியவந்துள்ளது.


        பொருளாதாரத்தில் ‘Goldilocks period’ (அல்லது Goldilocks economy) என்பது, பொருளாதாரம் "இன்னும் கொஞ்சம் சரியாக" (just right) இருக்கும் ஒரு சிறந்த காலகட்டத்தைக் குறிக்கிறது. இது குழந்தைக் கதையான Goldilocks and the Three Bears-லிருந்து வந்த பெயர். இது "மிகவும் சூடாகவும் இல்லை, மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லை — சரியாக இருக்கிறது" என்ற நிலையாகும். இத்தகைய காலம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவாக பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. 


இந்திய பொருளாதாரம் சமீபத்தில் சிறந்த வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது. பழைய மற்றும் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டிலும். 2025-26-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.7% இருந்த வளர்ச்சி, ஜூலை–செப்டம்பர் 2025 காலத்தில் 8.4% ஆக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 7.8 சதவீதமாக நிலைபெற்றது. பணவீக்கம் (Inflation) இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4% நடுத்தர இலக்கத்திற்குக் கீழே சீராக உள்ளது. 2024-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index (CPI)) படி, ஜனவரியில் பணவீக்கம் 2.75%-ஆக இருந்தது. ஆனால், இந்த  நேர்மறையான வளர்ச்சி-பணவீக்க சமநிலை தற்போது ஆபத்தில் உள்ளது. வலுவான வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் என்ற ‘Goldilocks’ நிலை புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலை குறியிட்டு தரவுகளிலும் தொடர்கிறது. ஆனால், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று Nomura நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் சோனல் வர்மா மற்றும் அவுர்தீப் நந்தி கூறினர்.


உங்களுக்குத் தெரியுமா?


பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவலின்படி,


2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2) இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 8.2% ஆக வளர்ச்சி கண்டது இது முந்தைய காலாண்டில் பதிவான 7.8% மற்றும் 2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பதிவான 7.4% ஆகிய அளவுகளைவிட அதிகமான அளவாகும். மேலும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் வலுவான செயல்பாடுகளால் மாற்றம் ஏற்பட்டு, உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added (GVA)) 8.1%-ஆக வளர்ச்சி கண்டது.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025-26-ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முன்பு கூறிய 6.8%-லிருந்து 7.3%-ஆக உயர்த்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி பல காரணங்களால் வளர்ச்சியடைந்து வருகிறது. அவை: வலுவான உள்நாட்டு தேவை, வருமானவரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (goods and services tax (GST)) சீரமைப்பு, குறைந்த கச்சா எண்ணெய் விலை, அரசின் மூலதன செலவினத்தை (capital expenditure (CAPEX)) முன்கூட்டியே அதிகரித்தல் மற்றும் குறைந்த பணவீக்கம் ஆதரவு அளிக்கும் எளிதான பண மற்றும் நிதி சூழ்நிலைகள் ஆகும்.


எதிர்காலத்தை பார்க்கும்போது, உள்நாட்டு காரணிகள் பொருளாதார செயல்பாட்டை தொடர்ந்து ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வேளாண்மை முன்னேற்றம், சரக்கு மற்றும் சேவை வரி சீரமைப்பின் நீடித்த பயன்கள், குறைந்த பணவீக்கம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் வலுவான நிதிநிலை ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. இதனுடன் சேர்ந்து, ஆதரவான பண மற்றும் நிதி சூழ்நிலைகளும் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.


வெளிப்புறக் காரணிகளில், சேவை ஏற்றுமதிகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வர்த்தக மற்றும் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் விரைவாக முடிவடையுமானால், அது வளர்ச்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும். நடைபெற்று வரும் சீர்திருத்தங்களும் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். தற்போதைய பேரியல் பொருளாதார (Macroeconomics) நிலை, உயர்ந்த வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ஒரு அரிதான “கோல்டிலாக்ஸ்” காலமாகக் கருதப்படுகிறது.


இந்திய பொருளாதாரம் தற்போது உயர்ந்த வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ‘கோல்டிலாக்ஸ்’ நிலையில் உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்ட முதல் முன்கூட்டிய கணிப்புகளின்படி, 2025-26 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு வளர்ச்சி வளர்ச்சி 7.4%-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரளவிலான (Nominal) வளர்ச்சி 8%-ஆக இருக்கும். நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் 2%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மோதல்கள் மற்றும் புவியியல் அரசியல் ஆபத்துகள் இருந்தாலும், அரசின் நிதி ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகள் காரணமாக உலகளாவிய மற்றும் அமெரிக்க மொத்த உள்நாட்டு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம். உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) சரக்கு வர்த்தக அளவு வளர்ச்சி கணிப்பை 0.9%-லிருந்து 2.4%-ஆக உயர்த்தியுள்ளது. எஸ். மகேந்திர தேவ் தனது “இந்திய பொருளாதாரத்தின் ‘கோல்டிலாக்ஸ்’ நிலை நீடிக்கலாம்” (Goldilocks phase of India’s economy can be sustained) என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


Original Link: What is the Goldilocks economy in India? 


Share:

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA) மற்றும் இந்திய ஒன்றியத்திற்கு இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? - பிரியா குமாரி சுக்லா

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திருத்தச் சட்டம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ல் (Transgender Persons (Protection of Rights) Act, 2019) முக்கிய மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு தேசிய சட்டப்பணிகள் ஆணையம் vs இந்திய ஒன்றியம் (National Legal Services Authority v. Union of India - NALSA) இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'பாலினத்தை சுய-அடையாளம் காணும் உரிமையை' நீக்கவும், அதற்குப் பதிலாக அடையாள அங்கீகாரத்திற்காக 'மருத்துவச் சான்றிதழைப்' பெறுவதை நடைமுறைப்படுத்தவும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.


முக்கிய அம்சங்கள்:


• மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் (Social Justice and Empowerment) துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026-ஐ (Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026) கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் மாதம் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். இருப்பினும், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர், இருபாலீர்ப்பு உடையவர் மற்றும் மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட LGBT+ (Lesbian, Gay, Bisexual, Transgender, and others) அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


• 2019-ஆம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [Transgender Persons (Protection of Rights) Act, 2019], ஒரு நபர் பிறக்கும்போது ஒதுக்கப்பட்ட பாலின அடையாளத்துடன் ஒத்துப்போகாதவர்களை திருநங்கைகள் என வரையறுத்தது. ஆனால், தற்போதைய புதிய சட்டத் திருத்தமானது தங்களால் கட்டுப்படுத்த முடியாத உயிரியல் காரணங்களால் (Biological reasons) கடுமையான சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்பவர்களை மட்டுமே பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு கூறுகிறது. இந்த அணுகுமுறையானது 2014-ஆம் ஆண்டிற்கு முந்தைய புரிதலுக்கு மீண்டும் செல்வது போல் உள்ளது, அதாவது ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க உயிரியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


• இந்த மசோதா திருநங்கைகளை மிகவும் குறுகிய வரம்பிற்குள் வரையறுக்கிறது. அதாவது, 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த பரந்த வரையறைக்குப் பதிலாக, சமூக-கலாச்சார அடையாளங்கள் கொண்டவர்கள் (கிண்ணர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, பேடி போன்றவர்கள்) அல்லது குறிப்பிட்ட பிறவி உயிரியல் மாற்றங்களுடன் பிறந்தவர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது. குறிப்பாக, இதற்குமுன் இருந்த 'இடைநிலை பாலினத்தவர்' (intersex) என்ற விரிவான விளக்கத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக முதன்மை பாலின பண்புகள் (primary sexual characteristics), வெளிப்புற பிறப்புறுப்பு (external genitalia) மற்றும் குரோமோசோம்கள் (chromosomes) பாலின சுரப்பிகளின் வளர்ச்சி (Gonadal development) மற்றும் ஹார்மோன் உற்பத்தி அல்லது அதன் செயல்பாடு போன்ற மருத்துவரீதியான குறுகிய பட்டியலின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை இந்த மசோதா வகைப்படுத்துகிறது.


• இந்த மசோதா ஒரு புதிய மற்றும் தனித்துவமான பிரிவை உருவாக்குகிறது: இதில் உடல் உறுப்புகளைச் சிதைத்தல் (mutilation), ஆண்மை நீக்கம் செய்தல் (emasculation), உடல் உறுப்பைத் துண்டித்தல் (amputation), அல்லது அறுவை சிகிச்சை (surgical), வேதியியல் (chemical) அல்லது ஹார்மோன் (hormonal) சிகிச்சை முறைகள் மூலம் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டோ (force), ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டோ, தூண்டப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ அல்லது தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தியோ திருநங்கை அல்லது திருநம்பி அடையாளத்தை ஏற்குமாறு வற்புறுத்தப்பட்டால், அந்த நபர் அல்லது குழந்தை இந்தப் புதிய பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உங்களுக்குத் தெரியுமா?


• ஏப்ரல் மாதம் 2014-ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் திருநங்கைகளை "மூன்றாம் பாலினத்தவராக" அங்கீகரித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பின் மூலம், அவர்களைச் சமூகரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward Classes (SEBC)) கருதி, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமைந்ததால், இந்த முக்கியமான முடிவு "தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு  (NALSA) தீர்ப்பு" என்று அழைக்கப்படுகிறது.


• இந்தத் தீர்ப்பில், திருநங்கைகள் எதிர்கொள்ளும் பயம், அவமானம், சமூக அழுத்தம், மனச்சோர்வு மற்றும் களங்கம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு இன்மை), 19 (பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம்) மற்றும் 21 (வாழ்வு மற்றும் தனிநபர் சுதந்திரம்) ஆகியவற்றின்கீழ் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.


• மேலும், 2018-ஆம் ஆண்டில்தான் இந்திய உச்சநீதிமன்றம் தன்பாலின ஈர்ப்பை குற்றமற்றதாக்கியதன் மூலம் தனிநபரின் சுயாட்சி மற்றும் முடிவெடுக்கும் தனியுரிமையின் வரம்பை விரிவுபடுத்தியது. தன்பாலின உறவுகளைக் குற்றமாகக் கருதிய இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 377-ன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியதன் மூலம், இந்தச் சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், இந்தப் பிரிவு பாலினச் சிறுபான்மையினரான பால்புதுமையினர் (LGBTQ) சமூகத்தினரைத் துன்புறுத்துவதற்கும் அவர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.


• 2021-ஆம் ஆண்டில், நேரடி பணி நியமன முறை மூலம் நிரப்பப்படும் அனைத்து வகையான அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல் மற்றும் ஒரே மாநிலமாக கர்நாடகா மாநிலம் திகழ்கிறது. இதற்காக, கர்நாடக மாநில அரசுப் பணிகள் (பொது ஆட்சேர்ப்பு) விதிகள், 1977-ன் [Karnataka Civil Services (General Recruitment) Rules, 1977] விதி 9-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளுடன் கூடுதலாக 'மற்றவர்கள்' (Others) என்ற தனிப்பிரிவைச் சேர்க்குமாறு மாநில குடிமைப்பணி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


Original Link: What was the Supreme Court’s verdict in National Legal Services Authority vs Union Of India, 2014?


Share:

இந்தியாவில் டிஜிட்டல் உரிமைகள் என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (Information Technology Act) பிரிவு 69A-ன்படி, (Section 69A of the IT Act, 2000) சமூக ஊடகங்களில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தடுக்கும் அல்லது முடக்கும் அதிகாரம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் (IT Ministry) மட்டுமே உள்ளது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்த அதிகாரத்தை மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை ஆகிய அமைச்சகங்களுக்கும் வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம்  செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• இந்த மாற்றத்தினால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பாதிக்கப்படும் என்கின்றனர். ஏனெனில், பல்வேறு அரசு துறைகளிடமிருந்து உள்ளடக்கங்களைத் தடை செய்யக் கோரும் உத்தரவுகள் இனி இந்த தளங்களுக்கு நேரடியாக வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


• இணையத்தில் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக, சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இரண்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


• தற்போது ஐந்து அமைச்சகங்கள் இது குறித்து பரிசீலித்து வந்தாலும், வரும் காலங்களில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளும் இதில் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களை நீக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நேரடியாக உத்தரவிடும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பாக,  இணையதள பிரபலங்கள் (influencers) பகிரும் தவறான நிதித் தகவல்கள் குறித்து இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத் தெரியுமா?


• தற்போது, இந்தியாவில் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு இரண்டு இணையான வழிமுறைகள் உள்ளன. ஒன்று தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) 69(A) பிரிவின்கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு அதிகாரிகள் இத்தகைய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்புகின்றனர், பின்னர் அந்த அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்து அதைத் தடுப்பதற்கான உத்தரவை வெளியிடுகிறது.


• தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act (IT Act)) பிரிவு 79(3)(b)-ன்கீழ் செயல்படும் மற்றொரு வழிமுறை, பல்வேறு அமைச்சகங்கள் இணையதளங்களுக்கு நேரடியாகத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வழிவகை செய்கிறது. இது பொதுவாக உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான சகயோக் இணையதளம் (Sahyog Portal) மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.


• சமூக ஊடக நிறுவனங்கள் தேவையற்ற உள்ளடக்கங்களை விரைவாக அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்திவரும் நிலையில், இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கான கால அவகாசம் (Blocking Timelines) 24–36 மணிநேரத்திலிருந்து 2–3 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


• அரசாங்கத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது விதிமுறை இணக்கக் கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக, சட்டவிரோதமானது அல்லாத, ஆனால் அரசாங்கத்தை விமர்சிக்கும் பல பதிவுகள் பாதிக்கப்படுவதாகப் இணையதளப் பயனர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


• பொதுவாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றின் நலன் கருதியோ அல்லது குற்றங்களைத் தடுப்பதற்கோ, பொது மக்கள் தகவல்களை அணுகுவதை முடக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த நடைமுறை, தகவல் தொழில்நுட்ப (பொதுமக்கள் தகவல்களை அணுகுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புகள்) விதிகள், 2009-ன்கீழ் நிர்வகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 


• வழக்கமாக, ஒரு அரசு நிறுவனம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது அந்தக் கோரிக்கையானது ஒரு குழுவால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே, குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான உத்தரவுகள் சமூகஊடகத் தளங்கள் போன்ற இடைநிலை நிறுவனங்களுக்குப் பிறப்பிக்கப்படுகின்றன. அவசர காலங்களில், மறுஆய்வு செய்வதற்கு முன்பே இடைக்காலத் தடையை விதிக்க உத்தரவிட முடியும் என்கின்றனர். ஆனால், இந்த இரண்டு சூழல்களிலும், சமூக ஊடக நிறுவனங்களுக்கு இறுதியான தடை உத்தரவை தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே அனுப்புவதாகத் தெரிவிக்கின்றனர்.


Original Link: What are the digital rights in India?


Share:

இந்திய தவளைகளுக்கு, குடிமக்கள் அறிவியல் முதல் சரணாலயங்கள் வரை ஆதரவு கிடைக்கிறது. -கார்த்திகேயன் வாசுதேவன்

இந்தியா 450-க்கும் மேற்பட்ட இருவாழ்வி இனங்களின் (amphibian species) தாயகமாக உள்ளது. அவற்றில் பல, காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களால் இந்த நிலையை மாற்றி வருகின்றன. மேலும், சாதாரண குடிமக்களும் இப்போது இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.


மார்ச் 20 அன்று கடைபிடிக்கப்படும் உலகத் தவளை தினம் (World Frog Day), உலகின் அதிக எண்ணிக்கையிலான இருவாழ்விகளான தவளைகளின் பங்கைக் கொண்டாடுகிறது. தவளைகள் நன்னீர் மற்றும் நிலச் சூழல் மண்டலங்களுக்கு இடையேயான இடைமுகப்பில் வாழ்கின்றன, பூச்சிகளை உண்கின்றன, பதிலுக்கு அவை மற்ற முதுகெலும்பிகளால் உண்ணப்படுகின்றன. இதனால், பூச்சிகளின் உயிர்மப்பொருளை முதுகெலும்பிகளின் உயிர்மப்பொருளாக மாற்றுவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.


தவளைகளை இழந்தால், தாவரங்களை வேட்டையாடும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், அதேநேரத்தில் நிலத்தில் வாழும் பல முதுகெலும்பிககளுக்கான உணவு ஆதாரம் குறைவதற்கும் வழிவகுக்கும். இது நன்னீர் மற்றும் நிலச் சூழல் மண்டலங்கள் இரண்டையும் சரிசெய்ய முடியாத அளவிற்குச் சேதப்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக, 1980-களிலிருந்து, தவளை மற்றும் பிற இருவாழ்விகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருகிறது. 2023-ல், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) உலகளாவிய நீர்நில வாழ் உயிரினங்கள் மதிப்பீட்டு அறிக்கை, 37 இனங்கள் அழிந்துவிட்டதாகவும், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறியது. இதனால், இருவாழ்விகள் இப்போது முதுகெலும்பிகளிலேயே மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான குழுவாகக் கருதப்படுகின்றன.


இருவாழ் உயிரினங்களின் எண்ணிக்கைக் குறைவதற்கான முக்கிய வரலாற்று காரணம், சைட்ரிடியோமைகோசிஸ் (chytridiomycosis) எனப்படும் ஒரு நோயாகும். இது தவளைகளில் பாட்ராகோகைட்ரியம் டெண்ட்ரோபாட்டிடிஸ் (Batrachochytrium dendrobatidis (Bd)) என்பதாலும், சாலமண்டர்களில் பாட்ராகோகைட்ரியம் சாலமாண்ட்ரிவோரன்ஸ் (Batrachochytrium salamandrivorans (Bsal)) என்பதாலும் ஏற்படும் ஒரு பூஞ்சை நோயாகும். இந்த நோய் அவற்றின் தோலைப் பாதிக்கிறது. இருவாழ் உயிரினங்களுக்குத் தோல் ஒரு மிக முக்கியமான உறுப்பாக இருப்பதால், இது அவற்றைப் பாதுகாப்பதுடன், சுவாசிப்பதற்கும், எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க அயனிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும் ஒரு உறுப்பாக அமைகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், உலகளவில் 60%-க்கும் மேற்பட்ட நீர்நில வாழ் உயிரினங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் 63 இனங்களின் அழிவுகரமான அபாயத்தைக் குறைத்து, பாதிப்பைப் பாதியாகக் குறைத்துள்ளன.


ஆனால் இன்று, 39% இனங்களின் அழிவுக்கு காலநிலை மாற்றமும், 37% இனங்களின் அழிவுக்கு வாழ்விட இழப்புமே மிக முக்கியமான காரணிகளாக உள்ளன.





இந்தியச் சூழல்


இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட இருவாழ்வினங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய கால் பங்கு 'அச்சுறுத்தலுக்கு உள்ளானவை' (threatened) என்றும், ஐந்தில் ஒரு பங்கு 'தரவுப் பற்றாக்குறை உள்ளவை' (data deficient) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பா.டெண்ட்ரோபாட்டிடிஸ் (B.dendrobatidis) மற்றும் பா.சாலமாண்ட்ரிவோரன்ஸ் (B.salamandrivorans) பூஞ்சைகளின் தாக்கம் கணிசமானதாக இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்பட்டதைப் போல இது பெருமளவிலான இறப்பை ஏற்படுத்தவில்லை.


பா.டெண்ட்ரோபாட்டிடிஸ் மற்றும் பா.சாலமாண்ட்ரிவோரன்ஸ் ஆகிய இரண்டுமே ஆசியாவில் தோன்றி, தவளைக் கால்கள் மற்றும் சாலமண்டர்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் வர்த்தகத்தின் மூலம் உலகெங்கிலும் பரவின. 1987-ல், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தைச் (Bombay Natural History Society) சேர்ந்த ஹுமாயூன் அப்துல் அலி, விவசாயப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்கை எடுத்துரைக்கும் ஒரு அறிவியல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, இந்த வர்த்தகம் தடை செய்யப்பட்டது. இருப்பினும், அதற்குள், பா.டெண்ட்ரோபாட்டிடிஸ் ஆசியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்குப் பரவியதால், தவளை மற்றும் சாலமண்டர் இனங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.


இந்தியாவின் நிலைமையே சற்று தனித்துவமானது. 2015 வரை, பா.டெண்ட்ரோபாட்டிடிஸின் நிலை குறித்து விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. 2023-ல்தான் அதற்கான கண்டறியும் சோதனை முறை வெளிவந்தது. இருப்பினும், இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் இருவாழ்விகளின் இறப்புகள் பெரிய அளவில் பதிவு செய்யவில்லை என்றாலும், கடந்த இருபது ஆண்டுகளில் இருவாழ் உயிரினங்களின் நிலை மேம்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டறியவில்லை. எந்தவொரு உயிரினத்தைப் பற்றியும் நீண்டகால கண்காணிப்புத் தரவுகள் அவர்களிடம் இல்லாததால், அதற்கான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவது கடினமாக உள்ளது.


உண்மையில், உலகளவில் 'தரவுப் பற்றாக்குறை' (data deficient) உள்ள இருவாழ் உயிரினங்களில் கணிசமான பங்கு இந்தியாவில்தான் உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 157 அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களில், ஆறு மட்டுமே 1972-ம் ஆண்டின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன.


இந்தியாவில் ஏற்படும் காலநிலை மாற்றமும் ஒரு கடுமையான சவாலாக உள்ளது. பருவ காலங்களுக்கும், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இயற்கை சுழற்சிகளுக்கும் இடையே ஏற்படும் பொருத்தமின்மை ஒரு பொதுவான விளைவாகும். உதாரணமாக, முன்கூட்டியே தொடங்கும் பருவமழையைத் தொடர்ந்து வரும் நீண்ட வறண்ட காலம், இனப்பெருக்கத்தை மோசமாகப் பாதிக்கக்கூடும். அதே நேரத்தில், பல பிராந்தியங்களில் மேற்பரப்பு நீர் மட்டங்கள் அல்லது இருவாழ்விகளின் எண்ணிக்கை குறித்த நீண்டகாலத் தரவுகள் விஞ்ஞானிகளிடம் இல்லை. இந்தத் தரவுகளின் பற்றாக்குறையால், காலநிலை மாற்றம் இருவாழ்விகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.


கவனிக்க வேண்டிய நேரம்


ஒவ்வொரு ஆண்டும் பருவமழை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவை வந்தடைகிறது. இந்தப் பருவம் தவளைகளின் சத்தம் ஒலியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், முதிர்ந்த ஆண் தவளைகள் துணையை ஈர்ப்பதற்காகக் சத்தம் இடுகின்றன. பெண் தவளைகள் பல ஆண் தவளைகளுடன் இணைந்து, தங்கள் முட்டைகளை நீரில் இடுகின்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தத் தீவிரமான இனப்பெருக்கச் செயல்பாடு விரைவாகக் குறைகிறது. அப்போது, தாமதமாக இனப்பெருக்கம் செய்யும் சில தவளைகளும், முதல் முறை இனப்பெருக்கம் செய்யும் தவளைகளும் இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து முதிர்ந்த இருவாழ்விகளும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யாவிட்டாலும், இந்த அதிக இனப்பெருக்கச் செயல்பாடு ஒட்டுமொத்த இனத்தின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.


இனப்பெருக்கச் செயல்பாட்டின் நோக்கம், அதிக எண்ணிக்கையிலான தலைப்பிரட்டைகளை உருவாக்குவதாகும். இந்தத் தலைப்பிரட்டைகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் செழித்து வளரும் பாசிகளை அதிக அளவில் உணவாக உட்கொள்கின்றன. இதன் விளைவாக, அவை விரைவாக வளர்கின்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, அவை உருமாற்றத்தின் மூலம் தங்கள் வடிவத்தை மாற்றிக்கொண்டு, அவை சிறிய தவளைக்குஞ்சுகளாக மாறுகின்றன. பின்னர் அவை நீரிலிருந்து நிலத்திற்கு நகர்கின்றன. இந்த நிலையில், மற்ற விலங்குகளால் உண்ணப்படுவதால் அவற்றில் பல இறந்துவிடுகின்றன. தவளைகளின் குறுகிய ஆயுட்காலம் காரணமாக, மழை மற்றும் ஓடைகள், குட்டைகளில் மேற்பரப்பு நீர் கிடைக்கும் நேரத்துடன் அவற்றின் சிக்கலான இனப்பெருக்க நடத்தைகளின் நேரம் மிகவும் முக்கியமானதாகும்.


வேறு சில முக்கியமான பாதுகாப்பு முயற்சிகளில், 1985-ல் மேற்கு வங்கத்தின் ஜோரேபோக்ரியில் சாலமண்டர் சரணாலயம் (salamander sanctuary) உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு இனப்பெருக்கத்திற்கான கூட்டம் இல்லை என்றாலும், 2011-ல் கல்வி நோக்கங்களுக்காகத் தவளைகளை அறுத்துப் பார்ப்பதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு தடை விதித்தது. மேலும், டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு மிருகக்காட்சிசாலையில் இமாலய சாலமண்டர்களுக்காக (Himalayan salamanders) நடைபெற்றுவரும் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டம் ஆகியவை அடங்கும்.


பங்கேற்பதற்கான வழிகள்


சமீபகாலங்களில் பல வெற்றிக் கதைகள் உருவாகியுள்ளன. அவற்றுள், உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கே.வி. குருராஜாவால் ஒருங்கிணைக்கப்பட்ட 'மலபார் மரத் தவளை வரைபடத் திட்டம்' (Mapping Malabar Tree Toad Project) என்ற குடிமக்கள் அறிவியல் திட்டம் ஆகும். மற்றொரு உதாரணம், கேரளாவின் மூணாரில், கனன் தேவன் ஹில்ஸ் பிளான்டேஷன்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த எஸ். ஹரிகிருஷ்ணன் மேற்கொண்ட இருவாழ்விகள் மீட்புத் திட்டம் மற்றும் பர்கா சுப்பா தலைமையிலான இமாலய சாலமண்டர் பாதுகாப்புத் திட்டம் (Himalayan Salamander Conservation Project) ஆகியவை அடங்கும். இத்திட்டத்தில், அவர் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CSIR-Centre for Cellular and Molecular Biology(CSIR-CCMB)), ஒரு நீண்டகாலத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டம் நீரோடைத் தவளைகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கிறது. மகாராஷ்டிர மாநில வனத்துறையுடனான கூட்டு முயற்சியாக, தில்லாரி பாதுகாப்புப் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


ஹைதராபாத்தில் உள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா (Padmaja Naidu Himalayan Zoo) மற்றும் நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) ஆகியவையும் தங்கள் விலங்கு சேகரிப்புகளின் இருவாழ்விகளை முக்கியமாகக் காட்சிப்படுத்துவதோடு, பார்வையாளர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், பல இளம் தொழில் வல்லுநர்கள் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.


தனது அரசியலமைப்பில் பாதுகாப்பு நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு தேசத்தில், குடிமக்கள் பங்கேற்க பல வழிகள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் தனது நேரத்திலிருந்து சில நிமிடங்களை ஒதுக்கி, நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்ப்பட்ட தவளைகளின் ஒலிகளைப் பதிவு செய்யலாம் அல்லது புகைப்படம் எடுத்து, அவற்றை iNaturalist போன்ற குடிமக்கள் அறிவியல் வலைத்தளங்களில் பகிரலாம். இத்தகைய நடவடிக்கைகள், புலிகள் மற்றும் பாண்டாக்கள் போன்ற ஒரு சில பிரபலமான உயிரினங்கள்மீது மட்டும் கவனம் செலுத்துவதிலிருந்து மாறுபட்டதை கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ள உதவும்.


          iNaturalist என்பது உங்களைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளைக் கண்டறிந்து, புகைப்படங்கள் மூலம் அடையாளம் காண உதவும் ஒரு உலகளாவிய இயற்கை ஆர்வலர் சமூக செயலியாகும்.


இன்னும் சில மாதங்களில் பருவமழை வரவிருக்கிறது. இருவாழ் உயிரினங்களின் பாதுகாப்பில் நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும்.


கார்த்திகேயன் வாசுதேவன், ஹைதராபாத்தில் உள்ள CSIR-செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் தலைமை விஞ்ஞானி ஆவார். அவர் ஒரு ஊர்வனவியல் நிபுணர். அவர் இருவாழ்விகளைப் பாதிக்கும் நோய்களின் சூழலியலை ஆய்வு செய்கிறார்.


Original Link: India’s frogs are finding allies from citizen science to sanctuaries 


Share: