Showing posts with label goldilocks period. Show all posts
Showing posts with label goldilocks period. Show all posts

இந்தியப் பொருளாதாரம் சிறந்த காலகட்டத்தை நோக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அந்தச் சூழல் உருவாகவில்லை. -உதித் மிஸ்ரா

 

தனது வாராந்திர “Graphs, Data, Perspectives” எனும் கட்டுரையில், பழைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகள் இன்னும் முக்கியமானவை என்று உதித் மிஸ்ரா கூறுகிறார். ஏனெனில், புதிய மொத்த  உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையானது இந்தியாவின் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவை உண்மையில் குறைத்துக் காட்டியுள்ளதாகக் குறிபிட்டுள்ளார்.


        பொருளாதாரத்தில் ‘Goldilocks period’ (அல்லது Goldilocks economy) என்பது, பொருளாதாரம் "இன்னும் கொஞ்சம் சரியாக" (just right) இருக்கும் ஒரு சிறந்த காலகட்டத்தைக் குறிக்கிறது. இது குழந்தைக் கதையான Goldilocks and the Three Bears-லிருந்து வந்த பெயர். இது "மிகவும் சூடாகவும் இல்லை, மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லை — சரியாக இருக்கிறது" என்ற நிலையாகும். இத்தகைய காலம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவாக பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. 


கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய நிதிநிலைத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது, இந்தியப் பொருளாதாரம் ஒரு "கோல்டிலாக்ஸ் காலக்கட்டத்தில்" (Goldilocks period) இருப்பதாகப் பலர் நம்பினர். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதனை விவரித்திருந்தார். "கோல்டிலாக்ஸ் காலம்" என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் மிகச்சரியான நிலையில் இருப்பதைக் குறிக்கும். அதாவது, நிலையான வளர்ச்சி, குறைவான பணவீக்கம் மற்றும் குறைவான வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைத் தடையின்றிப் பெற்றிருக்கும் ஒரு சிறந்தகாலமாகும்.


அதன் பிறகு, நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.


முதலாவதாக, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் (GDP) கணக்கிடும் முறையை மாற்றியது; இதற்காக 2022–23-ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாக (Base Year) பயன்படுத்தியது. இதன் மூலம், 2011–12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட பழையமுறை, இந்தியப் பொருளாதாரத்தின் உண்மைநிலை அளவைவிட அதிகமாகக் காட்டியிருந்தது  தெரியவந்தது.


அதைத் தொடர்ந்து, ஈரானில் அமெரிக்கா நடத்திய போர் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது போன்ற காரணங்கள் சிக்கல்களை மேலும் அதிகரித்தன. கடந்த வாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவைவிட முன்னேறிச் சென்றன.

ஈரானில் மோதல் தொடர்ந்து வருவதால், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காக ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக மேற்கொள்ளப்படும் இறக்குமதியை பெரிதும் நம்பியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


உண்மையிலேயே இந்தியா ஒரு பொற்காலத்தை (Goldilocks moment) நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததா? போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவின் வளர்ச்சி போதுமானதாக இருந்ததா? அப்படி இருந்திருந்தால், அது எவ்வளவு வேகமான வளர்ச்சியாக இருந்தது?


சிந்திக்க வைக்கும் ஒரு கசப்பான உண்மை


பழைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகளை நாம் கவனித்தால் (அதில் கடந்த கால விவரங்கள் உள்ளதால்), இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, உண்மை நிலையானது சிந்திக்க வைப்பதாகவே உள்ளது.




இந்த அட்டவணை, குறிப்பிட்ட சில முக்கிய ஆண்டுகளுக்கான பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (நடப்பு விலையில் - Nominal GDP) மற்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டது - Real GDP) ஆகியவற்றைக் காட்டுகிறது.



இந்த வரைபடமானது, கடந்த 12 ஆண்டுகால (2014-லிருந்து), கடந்த 7 ஆண்டுகால (2019-லிருந்து), மற்றும் கடந்த 22 ஆண்டுகால (2004-லிருந்து) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (Compounded Annual Growth Rate (CAGR)) வழங்குகிறது.


இதன் இரண்டு முக்கியமான சாராம்சங்கள் பின்வருமாறு:


ஒன்று, கடந்த 12 ஆண்டுகளில் (ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2026 வரை) பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Nominal GDP) கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆண்டுக்கு 10%-க்கும் சற்றே அதிகமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 22 ஆண்டுகளில் இது சுமார் 12.3%-ஆக இருந்தது. இது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் காலப்போக்கில் குறைந்து வருவதையும், அந்த மந்தநிலை மேலும் மோசமடைந்து வருவதையும் காட்டுகிறது. குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு வெறும் 9.5% என்ற விகிதத்தில் மட்டுமே அதிகரித்துள்ளது.


இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சியைப் பார்த்தால், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்கு 6.2% என்ற அளவிலேயே மிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது கடந்த 22 ஆண்டுகால சராசரி வளர்ச்சியைவிடக் குறைவானதாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி ஆண்டுக்கு 5.5%-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.


சுருக்கமாகச் சொன்னால், கடந்த 12 ஆண்டுகளில் பதிவான 6%-க்கும் சற்று அதிகமான மற்றும் கடந்த 7 ஆண்டுகளில் பதிவான 5.5%-க்கும் குறைவான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி விகிதம், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு போதுமானதல்ல என்று தரவுகள் தெரிவிக்கின்றன.




தீவிரமாக ஆராய வேண்டும்


2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்த பிறகு வந்த ஆண்டுகளை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. அந்த ஆண்டுகளில் காணப்பட்ட அதிகப்படியான வளர்ச்சி விகிதங்கள் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அவை பெரும்பாலும் 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால் உருவான 'குறைந்த அடிப்படை' (low base effect) காரணமாகவே நிகழ்ந்தவை ஆகும்.


எனவே, நீண்டகால வளர்ச்சிப் போக்குகளைக் கவனிப்பது மிகவும் முக்கியம்; ஏனெனில் அவற்றைப் புறக்கணிப்பது பொதுமக்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் தவறாக வழிநடத்தக்கூடும். உதாரணமாக, கடந்த 2-3 ஆண்டுகளில் காணப்படும் வலுவான வளர்ச்சி, உண்மையாக இல்லாவிட்டாலும் கூட, ஒருவேளை மிகச் சிறப்பானது போலத் தோன்றலாம் என்கின்றனர்.


கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 5.5% கூட அதிகரிக்கவில்லை என்றால், கொள்கை வகுப்பாளர்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், உண்மையான வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்தங்களையும் தீவிரமாக ஆராய வேண்டும். இந்தியாவால் 6% வளர்ச்சியைக்கூடத் தக்கவைக்க முடியவில்லை என்றால், நிறுவனங்களின் வருவாய் ஏன் குறைவாக இருக்கிறது என்பதும், வெளிநாட்டு நேரடி முதலீடு (Net Foreign Direct Investment (Net FDI)) ஏன் எதிர்மறையாக மாறி, உலகளாவிய முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.


இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு, வெளிநாட்டு மூலதன முதலீடுகள் (Foreign Capital Inflows) குறைவாக வருவதும் ஒரு முக்கியமான காரணமாகும். மற்ற நாடுகளின் பணத்திற்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்து வரும் நிலையிலும், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக ஏன் தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.


பழைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவரங்களின் தரவுகள் மிகவும் முக்கியமானவை ஆகும்.  ஏனெனில், புதிய புள்ளிவிவரக் கணக்கீட்டு முறை இந்தியாவின் பொருளாதார அளவை முன்பு மதிப்பிட்டதைவிடக் குறைத்துக் காட்டியுள்ளது. எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் பொருளாதாரம் முன்பு கருதப்பட்டதைவிட இப்போது சிறியதாகக் கருதப்படுகிறது.

Original link:

The Indian economy’s goldilocks scenario that wasn’t.



Share:

இந்தியாவில் 'கோல்டிலாக்ஸ் பொருளாதாரம்' (Goldilocks economy) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


QuantEco Research நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் செய்த சூழ்நிலை பகுப்பாய்வு படி, 2026–27-ஆம் ஆண்டில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் $80 அளவில் இருந்தால், அதன் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும். ஆனால் விலை இதைவிட உயர்ந்தால், அதன் விளைவுகள் பாதிப்பு “மிகச் சிறியதாகவே” இருக்கும். ஆனால், எண்ணெய் விலை அதிகமாக உயர்ந்தால், அதன் தாக்கம் “நேரியல் அல்லாததும் மற்றும் பரந்த அடிப்படையிலானதாக”  (non-linear and broad based) மாறும். குறிப்பாக, 2026-27-ல் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஆக சராசரியாக இருந்தால், ரூபாய் மதிப்பு ஒரு $98.5 வரை பலவீனமடையலாம் என்று தெரியவந்துள்ளது.


        பொருளாதாரத்தில் ‘Goldilocks period’ (அல்லது Goldilocks economy) என்பது, பொருளாதாரம் "இன்னும் கொஞ்சம் சரியாக" (just right) இருக்கும் ஒரு சிறந்த காலகட்டத்தைக் குறிக்கிறது. இது குழந்தைக் கதையான Goldilocks and the Three Bears-லிருந்து வந்த பெயர். இது "மிகவும் சூடாகவும் இல்லை, மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லை — சரியாக இருக்கிறது" என்ற நிலையாகும். இத்தகைய காலம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவாக பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. 


இந்திய பொருளாதாரம் சமீபத்தில் சிறந்த வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது. பழைய மற்றும் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டிலும். 2025-26-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.7% இருந்த வளர்ச்சி, ஜூலை–செப்டம்பர் 2025 காலத்தில் 8.4% ஆக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 7.8 சதவீதமாக நிலைபெற்றது. பணவீக்கம் (Inflation) இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4% நடுத்தர இலக்கத்திற்குக் கீழே சீராக உள்ளது. 2024-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index (CPI)) படி, ஜனவரியில் பணவீக்கம் 2.75%-ஆக இருந்தது. ஆனால், இந்த  நேர்மறையான வளர்ச்சி-பணவீக்க சமநிலை தற்போது ஆபத்தில் உள்ளது. வலுவான வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் என்ற ‘Goldilocks’ நிலை புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலை குறியிட்டு தரவுகளிலும் தொடர்கிறது. ஆனால், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று Nomura நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் சோனல் வர்மா மற்றும் அவுர்தீப் நந்தி கூறினர்.


உங்களுக்குத் தெரியுமா?


பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவலின்படி,


2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2) இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 8.2% ஆக வளர்ச்சி கண்டது இது முந்தைய காலாண்டில் பதிவான 7.8% மற்றும் 2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பதிவான 7.4% ஆகிய அளவுகளைவிட அதிகமான அளவாகும். மேலும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் வலுவான செயல்பாடுகளால் மாற்றம் ஏற்பட்டு, உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added (GVA)) 8.1%-ஆக வளர்ச்சி கண்டது.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025-26-ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முன்பு கூறிய 6.8%-லிருந்து 7.3%-ஆக உயர்த்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி பல காரணங்களால் வளர்ச்சியடைந்து வருகிறது. அவை: வலுவான உள்நாட்டு தேவை, வருமானவரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (goods and services tax (GST)) சீரமைப்பு, குறைந்த கச்சா எண்ணெய் விலை, அரசின் மூலதன செலவினத்தை (capital expenditure (CAPEX)) முன்கூட்டியே அதிகரித்தல் மற்றும் குறைந்த பணவீக்கம் ஆதரவு அளிக்கும் எளிதான பண மற்றும் நிதி சூழ்நிலைகள் ஆகும்.


எதிர்காலத்தை பார்க்கும்போது, உள்நாட்டு காரணிகள் பொருளாதார செயல்பாட்டை தொடர்ந்து ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வேளாண்மை முன்னேற்றம், சரக்கு மற்றும் சேவை வரி சீரமைப்பின் நீடித்த பயன்கள், குறைந்த பணவீக்கம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் வலுவான நிதிநிலை ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. இதனுடன் சேர்ந்து, ஆதரவான பண மற்றும் நிதி சூழ்நிலைகளும் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.


வெளிப்புறக் காரணிகளில், சேவை ஏற்றுமதிகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வர்த்தக மற்றும் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் விரைவாக முடிவடையுமானால், அது வளர்ச்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும். நடைபெற்று வரும் சீர்திருத்தங்களும் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். தற்போதைய பேரியல் பொருளாதார (Macroeconomics) நிலை, உயர்ந்த வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ஒரு அரிதான “கோல்டிலாக்ஸ்” காலமாகக் கருதப்படுகிறது.


இந்திய பொருளாதாரம் தற்போது உயர்ந்த வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ‘கோல்டிலாக்ஸ்’ நிலையில் உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்ட முதல் முன்கூட்டிய கணிப்புகளின்படி, 2025-26 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு வளர்ச்சி வளர்ச்சி 7.4%-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரளவிலான (Nominal) வளர்ச்சி 8%-ஆக இருக்கும். நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் 2%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மோதல்கள் மற்றும் புவியியல் அரசியல் ஆபத்துகள் இருந்தாலும், அரசின் நிதி ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகள் காரணமாக உலகளாவிய மற்றும் அமெரிக்க மொத்த உள்நாட்டு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம். உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) சரக்கு வர்த்தக அளவு வளர்ச்சி கணிப்பை 0.9%-லிருந்து 2.4%-ஆக உயர்த்தியுள்ளது. எஸ். மகேந்திர தேவ் தனது “இந்திய பொருளாதாரத்தின் ‘கோல்டிலாக்ஸ்’ நிலை நீடிக்கலாம்” (Goldilocks phase of India’s economy can be sustained) என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


Original Link: What is the Goldilocks economy in India? 


Share:

ரூபாய், பணவீக்கம் மற்றும் வளர்ச்சி: உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இந்தியாவின் சரியான காலகட்டத்தை (Goldilocks era) எவ்வாறு அச்சுறுத்துகிறது? -சித்தார்த் உபாசனி




பொருளாதாரத்தில் ‘Goldilocks period’ (அல்லது Goldilocks economy) என்பது, பொருளாதாரம் "இன்னும் கொஞ்சம் சரியாக" (just right) இருக்கும் ஒரு சிறந்த காலகட்டத்தைக் குறிக்கிறது. இது குழந்தைக் கதையான Goldilocks and the Three Bears-லிருந்து வந்த பெயர். இது "மிகவும் சூடாகவும் இல்லை, மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லை — சரியாக இருக்கிறது" என்ற நிலையாகும். இத்தகைய காலம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவாக பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. 


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அமெரிக்கா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது போன்ற கடந்த சில ஆண்டுகள், உலகளாவிய அதிர்ச்சிகளுக்கு நிதிச் சந்தைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடியவை என்பதைக் காட்டுகின்றன.


உலகளாவிய எரிசக்தி உற்பத்தியாளர்களின் நம்பிக்கையில் இந்தியா எப்போதும் இருந்து வருகிறது. ஏனெனில், இந்தியாவானது அதன் எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகாலமாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அமெரிக்கா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது போன்றவற்றிலிருந்து தொடங்கி, இந்த உலகளாவிய அதிர்ச்சிகளுக்கு நிதிச் சந்தைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடியவை என்பதைக் காட்டுகின்றன.





கடந்த ஒரு வருடமாக நிதிச் சந்தைகளில் இருந்து பலவீனமான அந்நிய நேரடி முதலீடு மற்றும் போர்ட்ஃபோலியோ வெளியேற்றங்களுடன் (2025-ல் $11.8 பில்லியன் மற்றும் 2026-ல் இதுவரை $4 பில்லியன்) போராட வேண்டியிருந்த ரூபாயின் மதிப்பில் இதன் தாக்கம் ஏற்கனவே தெரிகிறது. டிசம்பரில் டாலருக்கு 90 மற்றும் 91-க்குக் கீழே சரிந்த இந்திய நாணயம், இந்த மாத தொடக்கத்தில் 92-ஐத் தாண்டியது. கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே இருந்தால், டாலருக்கு 100-ஐ கூட எட்டக்கூடும்.


குவாண்ட்இகோ ஆராய்ச்சியின் பொருளாதார வல்லுநர்களின் சூழ்நிலை பகுப்பாய்வின்படி, 2026-27-ஆம் ஆண்டில் எண்ணெய் சராசரியாக ஒரு பீப்பாய்க்கு $80-ஆக இருந்தால் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும் என்று அவர்களின் ஆய்வு காட்டுகிறது. இது 2025-26-ல் ஒரு பீப்பாய்க்கு $70 என்ற சராசரி விலையைவிட அதிகமாக இருக்கும். இருப்பினும், எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்தால் தாக்கம் மிகவும் வலுவாகவும் பரந்ததாகவும் மாறக்கூடும். 2026-27-ஆம் ஆண்டில் எண்ணெய் விலைகள் சராசரியாக ஒரு பீப்பாய்க்கு $100-ஆக இருந்தால், ரூபாய் மதிப்பு கணிசமாக பலவீனமடையக்கூடும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது. அந்த சூழ்நிலையில், ஒரு டாலருக்கு ரூபாய் மதிப்பு சுமார் 98.5-ஆக குறையக்கூடும்.


2026-27 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120-க்கு மேல் உயர்ந்து, அந்த விலையில் இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்தால், எண்ணெய் வர்த்தக பற்றாக்குறை $220 பில்லியனாக உயர்ந்து நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1%-ஐ விட அதிகமாக உயரக்கூடும் என்று DSP மியூச்சுவல் ஃபண்டின் கணக்கீடுகள் காட்டுகின்றன. "இந்த வகையான பற்றாக்குறைகள் குறிப்பிடத்தக்க நாணய மதிப்பு தேய்மானம், அதிகரித்த பணவீக்கம் மற்றும் பணப்புழக்க நெருக்கடிக்கு வழிவகுக்கும். முந்தைய அத்தியாயங்களில், பற்றாக்குறைகள் தொடர்ந்தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ரூபாய் மதிப்பு 10%-க்கும் அதிகமாக சரிந்தது," என்று நிதி நிறுவனம் புதன்கிழமை கூறியது.




கோல்டிலாக்ஸ் மண்டலத்திற்கு (Goldilocks zone) அச்சுறுத்தல்


இந்திய பொருளாதாரம் சமீபத்தில் பழைய மற்றும் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடரின் கீழ் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.7%-ஆக இருந்த வளர்ச்சி, 2025 ஜூலை-செப்டம்பர் மாதங்களில் 8.4% ஆக உயர்ந்து, 2025-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 7.8%-ஆகக் குறைந்தது. இதில் பணவீக்கமும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நடுத்தர கால இலக்கான 4%-ஐ விட குறைவாக நிலைபெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) தொடர் ஜனவரியில் 2.75%-ஆக இருந்தது. இருப்பினும், இந்த சாதகமான சமநிலை வலுவான வளர்ச்சி-பணவீக்கக் கலவை இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


"புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தொடரின்கீழ் வலுவான வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் பற்றிய கோல்டிலாக்ஸ் நிலை தொடர்கிறது. ஆனால் அதிக கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் சவால் செய்யப்படுகிறது," என்று நோமுரா பொருளாதார வல்லுநர்கள் சோனல் வர்மா மற்றும் ஆரோதீப் நந்தி ஆகியோர் புதன்கிழமை ஒரு குறிப்பில் தெரிவித்தனர்.


வளர்ச்சி, பணவீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட அதிர்ச்சி


சர்வதேச எரிசக்தி நிறுவனம் விலைகளைக் கட்டுப்படுத்த 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிட உள்ளது. இது அதன் வரலாற்றில் மிகப்பெரிய வெளியீட்டாக இருக்கும். மேலும், இது அதிகரித்துவரும் விலைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கும் என்ற தகவல் குறிப்பிட்டிருந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-ஐத் தாண்டியது. அதன் பிறகு, அவை சரிந்தன. இருப்பினும், புதன்கிழமை, விலைகள் மீண்டும் பீப்பாய்க்கு $90-ஐத் தாண்டின. ஆனால் ஈரான் நம்பினால், மோசமான நிலை இன்னும் முடிவடையாமல் போகலாம். இதன்பொருள், "பரஸ்பர தாக்குதல்களிலிருந்து" தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மாறும் என்றும், அமெரிக்கா எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் புதன்கிழமை கூறியது. "எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $200-ஆக உயரக்கூடும்" என்று ஈரானிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.


கடலில் ஏற்கனவே சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு அளித்துள்ளது. ஆனால் நோமுராவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் வர்மா மற்றும் நந்தி இது உதவியாக இருந்தாலும், "ஒரு மாற்றத்தை" ஏற்படுத்தாது என்று நினைக்கிறார்கள்.


இதற்கிடையில், எரிவாயு பற்றாக்குறை காரணமாக, இந்திய அரசாங்கத்தை சில துறைகளுக்கு மற்றவற்றைவிட முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வழிவகுத்துள்ளது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தியுள்ளது. மேலும் இந்த சிலிண்டர்களை நிரப்புவதற்கு முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலத்தை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தியுள்ளது. பம்புகளில் எரிபொருள் விலைகள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக மாறவில்லை என்றாலும், வீட்டு பணவீக்கம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, நோமுரா, 2026-27-ஆம் ஆண்டில் சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கத்திற்கான அதன் கணிப்பை 70 அடிப்படை புள்ளிகள் (bps) அதிகரித்து 4.5%-ஆக உயர்த்தியுள்ளது. அதேநேரத்தில், UBS தலைமை இந்திய பொருளாதார நிபுணர் தன்வி குப்தா ஜெயின், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-ஆக இருந்தால், அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 5%-ஐ தாண்டும் என்று எச்சரித்தார். எண்ணெய் விலையில் ஏற்படும் முழு அதிகரிப்பும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு, கலால் வரி குறைக்கப்படாவிட்டால் இது நடக்கும்.  


பொருளாதார வளர்ச்சிக்கும் இதே நிலைதான். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கணிப்புகள் 2026-27-ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை (மீண்டும், பழைய தொடரின்படி) 6.9-7% ஆகவும், அபாயங்கள் "சமமாக" இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இருப்பினும், பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே அபாயங்களைக் காண்கிறார்கள். மேலும், 2026-27-ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை சற்று குறைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, நோமுரா 2026-27-ஆம் ஆண்டிற்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து 7% ஆகக் குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 இல் தொடர்ந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 40 அடிப்படை புள்ளிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யூனியன் பாங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து (UBS) மற்றும் சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி (DBS) வங்கி மதிப்பிட்டுள்ளன.


உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்ததற்கான செலவை குடும்பங்கள் செலுத்தவில்லை என்றால், இந்திய அரசாங்கமும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் செலுத்த வேண்டியிருக்கும்.


“குடும்ப வாங்கும் சக்தியைப் பாதுகாத்து வணிகங்களை ஆதரிப்பதன் அவசியமும், 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் பரபரப்பான மாநிலத் தேர்தல் நாட்காட்டியும், சில்லறை எரிபொருள் விலை சரிசெய்தல்களுக்கு மிகவும் அளவிடப்பட்ட அணுகுமுறையைத் தூண்டக்கூடும். ஆரம்பகால உயர்வு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் உள்வாங்கப்பட வாய்ப்புள்ளது,” என்று DBS வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ராதிகா ராவ் புதன்கிழமை கூறினார். பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு மாற்றாக அரசாங்கம் கலால் வரிகளைக் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார்.


எப்படியிருந்தாலும், 2026-27 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசின் கவனமாக கட்டமைக்கப்பட்ட நிதி இலக்குகள் தற்போது ஆபத்துக்குள்ளாகியுள்ளன. அடுத்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3% நிதிப் பற்றாக்குறையையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் 55.6%-ஆகவும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.


புதிய தரவுத் தொடரின்கீழ் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முன்பைவிட 3-4% குறைவாக இருக்கும் என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மறுமதிப்பீடு செய்த பின்னர் இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவது ஏற்கனவே கடினமான ஒன்றாக மாறியிருந்தது. இப்போது, ​​எண்ணெய் விலைகள் உயர்ந்துகொண்டே இருந்தால் நிதிப் பற்றாக்குறையில் 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக UBS நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயின் சுட்டிக்காட்டியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியில் ரூ.2 குறைப்பு மத்திய அரசின் கருவூலத்தை ஒரு வருடத்தில் ரூ.32,000 கோடி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உர மானியம் அதிகரிப்பதால் செலவுகளும் அதிகரிக்கும். இது 2025-26-ஆம் ஆண்டிலேயே உர மானியத்திற்காக மேலும் ரூ.19,230 கோடி செலவிட நிதி அமைச்சகம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரியுள்ளது. "நிலையற்ற உலகளாவிய இயக்கவியல் மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார சூழலின்" எதிர்பாராத செலவினங்களைச் சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய பொருளாதார உறுதிப்படுத்தல் நிதி அமைக்கப்படுகிறது.


ஒட்டுமொத்தச் சூழலும் தொடர்ந்து நிச்சயமற்றதாகவும், மிக விரைவாக மாறிக்கொண்டிருப்பதாகவும் உள்ளது. போர் விரைவில் முடிவடைந்து, விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகள் விரைந்து நீக்கப்பட்டால், இந்தியாவின் மீதான இதன் தாக்கம் குறைவாகவே இருக்கக்கூடும்.


Original Link: Rupee, inflation, growth: How global energy shock threatens India’s Goldilocks era

Share: