இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது என்ன? -ஜேக்கப் கோஷி

பருவமழையின் முக்கிய மண்டலத்தில் அமைந்துள்ள 15 மாநிலங்கள், வட்டார அளவிலான முன்னறிவிப்புகளைப் பெறும் முதல் மாநிலங்களாக இருப்பது ஏன்?


தற்போதைய நிகழ்வு :


இந்திய வானிலை ஆய்வு மையமானது (India Meteorological Department(IMD)), பருவமழையின் வருகை குறித்த வட்டார அளவிலான புதிய முன்னறிவிப்புகளை முதன்முறையாக வழங்கும் ஒரு முறையை செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அமைப்பானது, 15 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தை உள்ளடக்கி, 3,196 வட்டாரங்களை (Blocks) உள்ளடக்கியுள்ளது. இது இந்தியாவின் சுமார் 7,200 வட்டாரங்களில் பாதிவானவையாகும். இதுவரை, பருவமழையின் தொடக்கம் குறித்த மதிப்பீடுகள் அதிகபட்சமாக மாநில அல்லது மாவட்ட அளவில் மட்டுமே கிடைத்து வந்தன.


இந்த நுணுக்கமான துல்லியம் ஏன் முக்கியமானது?


வழக்கமான மாவட்ட அளவிலான வானிலை முன்னறிவிப்பு, இந்தியப் பருவமழையின் ஒரு அடிப்படை அம்சமான, சீரற்ற தன்மையை மறைக்கிறது. பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமாக பருவமழை தொடங்கும் தேதிகளான மும்பைக்கு ஜூன் 10, டெல்லிக்கு ஜூன் 29 போன்றவை, பருவமழை ஒரு நகரம் அல்லது மாவட்டத்தின் எல்லையை அடைவதைக் குறிக்கின்றன. ஆனால், ஒரே மாவட்டத்திற்குள், பருவமழை அதிகாரப்பூர்வமாகத் "தொடங்கிய" பிறகும்கூட, பல வட்டாரங்களிலும் கிராமங்களிலும் மழை பெய்யாமல் இருக்கலாம். பயிர்களை எப்போது விதைப்பது என்று முடிவுசெய்யும் ஒரு விவசாயிக்கு, பருவமழை மாவட்டத் தலைமையகத்தை அடைந்துவிட்டது என்று தெரிந்திருந்தாலும், அந்த விவசாயியுடைய சொந்த வட்டாரப்பகுதி இன்னும் வறண்டு இருந்தால் அதனால் பெரியளவில் எந்த பயனும் இல்லை. இந்த இடைவெளியைக் குறைத்து, விவசாயிகள் தங்கள் விதைப்பு நேரத்தைத் திட்டமிட உதவுவதற்காகவே, மிகத் துல்லியமான உள்ளூர் முன்னறிவிப்புகள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) நீண்டகால இலக்காக இருந்து வருகின்றன


புதிய அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?


இந்த அமைப்பு முக்கியமாக இரண்டு முன்னறிவிப்பு மாதிரிகளைப் பயன்படுத்துவதுடன், அவற்றின் முடிவுகளைத் துல்லியமாக மேம்படுத்துவதற்காக ஒன்றிணைக்கப்படுகின்றன. கேரளாவில் பருவமழை தொடங்கும் நாளிலிருந்து, இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால வானிலை தரவுகள் மற்றும் உலகளாவிய வானிலை மாதிரிகளைப் பயன்படுத்தி, முன்பைவிட மிகவும் நுணுக்கமான அளவில் பருவமழையின் நகர்வைக் கணிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.


இந்த ஒருங்கிணைப்புக் கட்டமைப்பானது, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் (Indian Institute of Tropical Meteorology) உருவாக்கப்பட்டது. இது அடுத்த நான்கு வாரங்களுக்கான நிகழ்தகவு முன்னறிவிப்புகளை வெளியிடுகிறது.


இது ஏன் இந்த முறையில் உருவாக்கப்பட்டது?


வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் தற்போதைய ஆலோசனை அமைப்பு, ஏறக்குறைய வாராந்திர முன்னறிவிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புதிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு, அந்த வழிமுறையுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஒரு புதிய வடிவத்திற்கு ஏற்ப மறுவடிவமைக்குமாறு அமைச்சகத்தைக் கேட்பதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கான அமைச்சகத்தின் தற்போதைய விநியோக முறைக்குப் பொருந்தும் வகையில் இந்திய வானிலை மையம் (IMD) இந்தத் தயாரிப்பை வடிவமைத்துள்ளது.



இந்தக் குறிப்பிட்ட 15 மாநிலங்கள் ஏன்?


இதில் உள்ளடக்கப்பட்டுள்ள மாநிலங்கள், வானிலை ஆய்வாளர்கள் பருவமழையின் முக்கிய மண்டலம் (monsoon core zone) என்று அழைக்கும் பகுதியின் அங்கமாக திகழ்கிறது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டபடி, இவை "பெரும்பாலும் மழையை நம்பி இருக்கும் மற்றும் தென்மேற்குப் பருவமழையின் இயக்கவியலுக்கு மிகவும் உணர்திறன் கொண்ட பகுதிகள்" ஆகும். மேலும், முன்னறிவிப்புப் பிழைகள் நேரடியாகப் பயிர் இழப்புகளாக மாறும் பகுதிகளும் இவைதான். இறுதியில், இந்தியா முழுவதும் வட்டார அளவிலான முன்னறிவிப்புகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். ஆனால், தற்போது பல மாநிலங்களில் கிடைப்பதைவிட கவனமான கண்காணிப்புத் தரவுகளின் வலையமைப்பு இதற்குத் தேவைப்படும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ரவிச்சந்திரன் கூறினார்.


அதன் முதல் பருவத்தில் இது எவ்வளவு சிறப்பாகச் செயல்படும்?


இந்த அமைப்பானது, இரண்டு சோதனைப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு இதற்கு ஒரு கடுமையான சோதனையாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையமும் (IMD) உலகளாவிய வானிலை மாதிரிகளும், ஜூலை மாதம் முதல் "இயல்பை விடக் குறைவான" மழைப்பொழிவை எதிர்பார்க்கின்றன. இந்த எல்-நினோ நிகழ்வானது, இந்தியாவில் பலவீனமான பருவமழையுடன் அடிக்கடி இணைந்து காணப்படுகிறது. வலுவான பருவமழையை முன்னறிவிப்பதை விட, ஒரு வட்டார (Block) அளவில் பலவீனமான மற்றும் சீரற்ற பருவமழையை முன்னறிவிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.


உத்தரப் பிரதேசம் குறித்த தனி அறிவிப்பு என்ன?


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), உத்தரப் பிரதேச மாநிலத்திற்காகவே பிரத்யேகமாக ஒரு 10-நாள்கொண்ட பருவமழை முன்னறிவிப்பு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாதிரி 1 கி.மீ துல்லியத் தெளிவுத்திறனில் செயல்படுகிறது. அதாவது, மிக நுணுக்கமான அளவில் வானிலை சார்ந்த அம்சங்களை இதனால் கண்டறிய முடியும். உத்தரப் பிரதேசத்தில் வழக்கத்திற்கு மாறாக விரிவான தானியங்கி வானிலை நிலையங்களின் வலையமைப்பு இருப்பதால் இது சாத்தியமாக அமைந்தது. இந்த நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள், இயல்பாக 12.5 கி.மீ. துல்லியத் தெளிவுத்திறனில் இயங்கும் 'மிதுனா' (Mithuna) எனப்படும் வானிலை முன்னறிவிப்பு மாதிரியை 1 கி.மீ துல்லியத்தில் செயல்படும் வகையில் "கீழ்நிலைப்படுத்தப்பட்டு" (downscaled) மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற உயர் துல்லியத்தன்மை கொண்ட வானிலை முன்னறிவிப்புகளை மற்ற மாநிலங்களுக்கும் வழங்குவதற்காக, அவர்கள் தங்கள் வானிலை நிலையத் தரவுகளை இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவதாக புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறினார்.


பரந்த கண்ணோட்டம் என்ன?


இரண்டு போக்குகள் ஒன்றிணைகின்றன. ஒன்று, வானிலை முன்னறிவிப்புகளை வெறும் வானிலை சார்ந்த துல்லியமாக மட்டும் இல்லாமல், விவசாயத்திற்குப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வேளாண் அமைச்சகத்தின் முயற்சியாகும். மற்றொன்று, பாரம்பரிய இயற்பியல் அடிப்படையிலான மாதிரிகளைச் செயற்கை நுண்ணறிவுடன் இணைப்பதற்கும், மாநில அளவிலான கண்காணிப்பு வலையமைப்புகள் இருக்கும் இடங்களில் அவற்றைச் சார்ந்திருப்பதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) அதிகரித்துவரும் விருப்பம். மேலும், மாநில அளவிலான கண்காணிப்பு வலையமைப்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ, அங்கெல்லாம் அவற்றை அதிகம் சார்ந்தும் வருகிறது. மேலும், எல்-நினோ உட்பட 2026-ம் ஆண்டுப் பருவமழை, அதைச் சோதித்துப் பார்ப்பதற்கான களமாக அமையும்.






Original Link: What has the IMD announced ahead of this year’s monsoon? 


Share:

'ரிட்ஜ்' (The Ridge) பகுதியை மீட்டெடுப்பதற்காக டெல்லி அரசு வகுத்துள்ள திட்டங்கள் ஏன் கவலையை ஏற்படுத்துகின்றன? -பிரதீப் கிரிஷன்

ஒரு வனப்பகுதியைச் சரியாக மீட்டெடுப்பதற்கு, அங்கு நடுவதற்கு ஏற்ற சரியான மர வகைகளைத் தேர்ந்தெடுப்பதே மிக முக்கியமான முதல் படியாகும். டெல்லி 'ரிட்ஜ்' பகுதியில் காடுகளை மறுவளர்ச்சி செய்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, அந்த மண்ணிற்கே உரிய 'பூர்வீக' மரங்கள் (Native trees) எவை என்பது குறித்த போதிய புரிதல் இல்லாததே ஆகும்.


தலைநகர் டெல்லியின் மிக முக்கியமான சூழலியல் பகுதிகளில் ஒன்றான மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதியில் உள்ள சுமார் 670 ஹெக்டேர் நிலப்பரப்பை, டெல்லி அரசு "பாதுகாக்கப்பட்ட காடு" (Reserved Forest) என்று அறிவித்துள்ளது. மேலும், அங்கு "சிறப்பு காடுகளை" (Vans) உருவாக்கவும், அந்த மண்ணிற்கே உரிய பூர்வீக மர வகைகளை நட்டு வளர்க்கவும் அதிகாரப்பூர்வமாகத் திட்டங்களை அறிவித்துள்ளனர்.


சுமார் 864 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதி, பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சியான டெல்லி ரிட்ஜ் அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகும். 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த டெல்லி ரிட்ஜ், நகரம் முழுவதும் ஆங்காங்கே பரவியிருக்கும் வனப்பகுதியாகும். இது டெல்லியின் "பசுமை நுரையீரல்" (Green lungs) போலச் செயல்பட்டு, நகரின் காற்றுத் தரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


இருந்தபோதிலும், மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதி ஏற்கனவே ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக (Reserved forest) இருந்து வருகிறது. இது முதன்முதலில் 1927-ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 4-ன்கீழ், 1994-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குப் பின்பற்றப்படும் அதே நடைமுறையைப் போலவே, முதல் அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நிலத்தின் மீதான உரிமைகளைத் தீர்க்கும் பணிகள் நடைபெறும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு, 1927-ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 20-ன்கீழ் வெளியிடப்படும் இரண்டாவது அறிவிப்பு, அந்தப் பகுதிக்கு 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்ற இறுதி அங்கீகாரத்தை வழங்குகிறது.


இதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, இருப்பினும் இந்த இரண்டாவது அறிவிப்பாணை, நீண்டகாலமாக நடந்திருக்க வேண்டிய ஒரு செயல்முறையை முழுமையடையச் செய்கிறது.


இருப்பினும், டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வைத்துள்ள மற்ற சில திட்டங்களும், அவை செயல்படுத்தப்பட உள்ள விதங்களுமே தற்போதைய கவலைக்குரிய விஷயமாக உள்ளன.


கறையான் தடுப்புத் திட்டம்


வனத்துறை சமீபத்தில் ஒரு ஒப்பந்தப்புள்ளியை (Tender) வெளியிட்டுள்ளது. அதில், மரக்கன்றுகளை நடும்போது கறையான் தடுப்புச் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ஆனால், கறையான்களை அழிக்க நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது, கரையான்களை மட்டும் கொல்லாமல், "உயிர் வளமுள்ள மண்" (Living soil) உருவாகக் காரணமான நுண்ணுயிரிகளையும் மற்றும் பூஞ்சைகளையும் சேர்த்தே அழித்துவிடும். டெல்லி மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதி தற்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், அங்கிருக்கும் மண் இன்னும் வளமாக இருப்பதுதான் அதன் மிகப்பெரிய பலமாகும்.


கறையான்களை முற்றிலும் ஒழிப்பதே ஒரே தீர்வா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கறையான்கள் வீடுகளில் உள்ள மரம், புத்தகங்கள், உடைகள் மற்றும் மின்சாரக் கம்பிகளைக்கூட கடுமையாக சேதப்படுத்தும் என்பது உண்மைதான். இருப்பினும், இயற்கைச் சூழலில் கறையான்கள் ஒரு பயனுள்ள பங்கினை வகிப்பதாக விஞ்ஞானிகளும் சூழலியல் வல்லுநர்களும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அவை காய்ந்த மரங்களை அழித்து கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வது மட்டுமல்லாமல், "சுற்றுச்சூழல் பொறியாளர்களாக" (Ecosystem engineers) செயல்படுகின்றன. இவை வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தவும், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன. குறிப்பாக வறண்ட நிலங்களில், மண்ணில் நைட்ரஜன் சத்தை நிலைப்படுத்தவும், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன.


வனத்துறை தனது ஒப்பந்தப்புள்ளியில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு எழுந்த விமர்சனங்களை அடுத்து, அவர்கள் உடனடியாகவும் பாராட்டுக்குரிய வகையிலும் செயல்பட்டு, அந்தத் ஒப்பந்தப்புள்ளியில் திருத்தம் செய்து நச்சுப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை ரத்து செய்தனர். 


சிறப்பு காடுகள் மற்றும் பூர்வீக மரங்கள்


டெல்லி வனத்துறை, ரிட்ஜ் (The Ridge) பகுதியில் தீர்த்தங்கர வனம், ரிது வனம், ராசி வனம் மற்றும் பஞ்சவடி வனம் போன்ற பெயர்களில் சிறப்பு வனங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ரிட்ஜ் பகுதியில் இத்தகைய கருப்பொருள் சார்ந்த காடுகளை (Themed forests) உருவாக்குவது 'வனப் பாதுகாப்புச் சட்டத்தை' (Forest Conservation Act) மீறும் செயலாக அமையக்கூடும் என்கின்றனர்.  குறிப்பாக, சிமெண்ட் அல்லது செங்கல் கட்டுமானங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால் அது சட்டவிரோதமானது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஆனால், வனத்துறையினர் இந்த வனப்பகுதிகளுக்குள் எந்த வகையான மரங்களை நடப்போகிறார்கள் என்பதுதான் இப்போது மிக முக்கியமான கவலையாக உள்ளது.

மத்திய ரிட்ஜ் (Central Ridge) பகுதியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட காடு வளர்ப்பு முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தியவுடனேயே அவை காய்ந்து இறந்துவிடுகின்றன. இந்த முயற்சிகளில் "வெற்றி" பெற்றது என்றால் அது தென்அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட விலாயதி கீகர் (Vilayati Keekar) மரம் மட்டும்தான். ஆனால், அந்த முயற்சியின் வெற்றியே இன்று பெரிய சிக்கலாக மாறியுள்ளது. ஏனெனில், ரிட்ஜ் பகுதியின் வறண்ட மற்றும் பாறைகள் நிறைந்த சூழலுக்கு ஏற்ப இயற்கையாக வளரக்கூடிய பிற மரங்களையும் புதர்களையும் அழித்துவிட்டு, இந்த வகை மரம் மட்டுமே தழைத்து வளர்ந்துவிட்டது.


டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தோல்விகளைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. ஏனெனில், அங்கு நடுவதற்கு ஏற்ற மரங்களின் பட்டியலைத் தயாரிப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல என்கின்றனர்.


டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியில் மரங்கள் செழித்து வளர வேண்டுமானால், அந்த நிலப்பரப்பில் நிலவும் துல்லியமான சூழலுக்கு முழுமையாகப் பொருந்தக்கூடிய மரங்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும். அதாவது, வடக்கு ஆரவல்லி மலைத்தொடரின் ‘குவார்ட்சைடிக்’ (Quartzitic) மண் வகைகளில் இயற்கையாக வளரக்கூடிய தாவரங்களை மட்டுமே கண்டெடுத்து நடவேண்டும். இதில் மரங்கள் மட்டுமின்றி புதர்கள், கொடிகள், மூலிகைகள் மற்றும் புற்கள் என அனைத்தும் அடங்கும். இவைதான் உண்மையான 'பூர்வீக' தாவரங்கள். ஆனால், சிக்கல் என்னவென்றால், "பூர்வீகத் தாவரங்கள்" என்ற சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது அல்லது பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.


Quartzitic soils (குவார்ட்சைடிக் மண்): இது ஒரு வகை கடினமான பாறை மண். ஆரவல்லி மலைத்தொடரில் இத்தகைய மண் அமைப்பு அதிகம் காணப்படும்.


டெல்லி அரசாங்கம், 'ரிட்ஜ்' (The Ridge) பகுதியில் அந்த மண்ணிற்கே உரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர வகைகளான வேம்பு, அரச மரம், ஈட்டி மரம் (Shisham), நாவல், புளி மற்றும் மா போன்ற மரங்கள் நடப்படும் என்று அறிவித்துள்ளது.


மாமரம் ஒரு "பூர்வீக" மரமா? நாட்டின் அரசியல் எல்லைகளுக்குள் (அதாவது இந்தியாவிற்குள்) காணப்படுகிறது என்று நீங்கள் கருதினால், அது பூர்வீக மரம் தான். ஆனால், டெல்லி ரிட்ஜ் (The Ridge) எனப்படும் மலைப்பகுதியின் சூழலியல் மண்டலத்திற்கு அது பூர்வீகமானது அல்ல. ரிட்ஜ் பகுதியில் ஒரு மாமரத்தை வளர்க்க வேண்டுமென்றால், அது உயிர்வாழும் காலம் முழுவதும் அதற்குத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.


டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ள மரங்களின் பட்டியல், இந்தப் பிரச்சனையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பட்டியலில் உள்ளவை அனைத்தும் இந்திய மரங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 'அரச மரம்' (Peepal) ஒன்றைத் தவிர, மற்ற எந்த மரமும் டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியின் மெல்லிய மண் படலத்தைக் கொண்ட, பாறைகள் நிறைந்த மற்றும் வறண்ட சூழலியல் அமைப்பில் இயற்கையாக வளரக்கூடியவை அல்ல.


வேப்ப மரம் மிகவும் உறுதியானது என்பதால், அந்தச் சூழலில் அது உயிர் பிழைக்கக்கூடும். ஆனால், ஈட்டி மரம் (Shisham), மரம் இமயமலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்தது; மலைகளிலிருந்து வேகமாக வரும் ஆறுகள் வேகம் குறைந்து வண்டல் மண்ணைப் படியவைக்கும் இடங்களில் மட்டுமே இவை வளரும், எனவே இவற்றுக்கு அதிக ஈரப்பதமும், ஆழமான, நீர் ஊடுருவக்கூடிய மண்ணும் தேவை. நாவல் மரங்கள் (Jamuns) அதிக நீர் தேவையுள்ள காடுகளைச் சேர்ந்தவை. இவை ஈரப்பதம் மிக்க காடுகளில் வளரக்கூடியவை, வறண்ட காடுகளில் வற்றாத நீரோடைகள் ஓடும் இடங்களில் மட்டுமே இவை உயிர்வாழும். புளிய மரம் உறைபனி மற்றும் கடும் குளிரைத் தாங்கும் திறன் அற்றது, மேலும் மாமரத்திற்கு மிக அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படும்.


இந்த மரங்களில் எதுவுமே 'ரிட்ஜ்' (The Ridge) போன்ற மலைப்பாங்கான மற்றும் வறண்ட நிலப்பரப்பில் செழித்து வளராது.


எனவே, "பூர்வீகம்" என்ற சொல் ஒரு நாட்டின் எல்லையைக் குறிக்கும் அடையாளமாக இருக்கக்கூடாது. மாறாக, அது ஒரு குறிப்பிட்ட சூழலியல் மண்டலத்தின் தனித்தன்மையைப் பொறுத்தே அமைய வேண்டும்.


வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் வழக்கமாக ஏற்படும் தோல்விகளுக்கான காரணங்கள் என்ன?


வன ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute (FRI)), 2026-27-ஆம் ஆண்டில் தொடங்கும் அடுத்த பத்தாண்டுகளுக்கான டெல்லியின் காடுகள் குறித்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளது. டெல்லி வனத்துறையின் பணிகளுக்கு வழிகாட்டியாக அமையவேண்டிய இந்தத் திட்டத்தில், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலியல் மீட்பு ஆகியவற்றிற்காக மரம் நடுவது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் 'ரிட்ஜ்' வனப்பகுதியை ஒரு மரத் தோட்டம் போலக் கருதுவதாகத் தெரிகிறது. சூழலியலை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த தெளிவான வழிமுறைகளை விளக்குவதற்குப் பதிலாக, மரங்களின் வருடாந்திர வளர்ச்சியை மதிப்பிடுவது போன்ற வணிகரீதியான அம்சங்களிலேயே இந்தத் திட்டம் அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.


டெல்லி ரிட்ஜ் (The Ridge) பகுதியில் நடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பூர்வீக மர வகைகளின் பட்டியலில், சில குறைபாடுகளும் சிக்கல்களும் உள்ளன.


அதிகாரிகள் சரியான மர வகைகளைத் தேர்வு செய்தாலும்கூட, நடைமுறையில் அவர்கள் வேறு சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வனத்துறை அந்தப் பகுதிக்கு ஏற்ற 42 வகையான மரங்களைக் கொண்ட ஒரு தெளிவான பட்டியலைத் தயாரித்தது. ஆனால், ரிட்ஜ் (The Ridge) பகுதியில் உண்மையான நடவுப் பணிகள் தொடங்கியபோது, பயன்படுத்தப்பட்ட 11 இனங்களில் 4 வகை மரங்கள் மட்டுமே வனத்துறை தயாரித்த அந்தப் பட்டியலில் இருந்தன. மீதமுள்ளவற்றில் மூன்று இனங்கள், அந்த மண்ணிற்குச் சம்பந்தமில்லாத அந்நிய நாட்டு வகை மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்படியானால், எங்கு தவறு நடந்தது? வனத்துறையானது, பல அரசு நிறுவனங்களைப் போலவே ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே பணிகளை மேற்கொள்கிறது. இந்த ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் செலவைக் குறைக்க மலிவான செடிகளை வாங்குகின்றனர். அவை எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட மர வகைகளின் பட்டியலோடு ஒத்துப்போவதில்லை. உண்மையில், புதிதாக மீட்டெடுக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் பரவலாக நடப்பட்டுள்ள மரம் ஒரு தென்அமெரிக்கத் தாவரமாகும். அதன் பழம் ஜிலேபி போல சுருண்டு இருப்பதால் இந்தியாவில் இது 'Jungle Jalebi' (சீனிப்புளிய மரம் அல்லது கொடுக்காய்ப்புளி) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு இந்திப் பெயர் (moniker) இருப்பதால், இது இந்த மண்ணிற்குரிய பூர்வீக மரம் என்று தவறாக நினைத்து, அனுபவமில்லாத ஒப்பந்ததாரர்கள் இதனைப் பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர்.


ஒரு வனப்பகுதியைச் சரியாக மீட்டெடுப்பதற்கு, அந்த மண்ணிற்கு ஏற்ற மர வகைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி என்றாலும், அதைத் தாண்டி இன்னும் பல நுணுக்கமான நடைமுறைகள் உள்ளன. தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய வனப்பகுதிகள் மற்றும் மியாவாக்கி (Miyawaki) எனும் அடர்வனக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களுக்கும், சூழலியல் மீட்டெடுப்பிற்கும் (Ecological restoration) எந்தத் தொடர்பும் இல்லை. டெல்லி ரிட்ஜ் பகுதியில் செழிப்பான ஒரு இயற்கை வறண்ட காட்டுப்பகுதியை மீண்டும் உருவாக்குவதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு இதுவாகும். எனவே, தவறான முறைகளைப் பின்பற்றி அந்த வாய்ப்பைச் சிதைத்துவிடாமல் இருப்பது மிகவும் அவசியமாகிறது.      

                 



Original Link: Why the Delhi government’s plans to restore the Ridge raise concerns.


Share:

மேற்காசிய நெருக்கடி, உரக் கொள்கை சீர்திருத்தத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருட்களின் இருப்பு என்பதே ஒரு பிரச்சனையாக இருக்கும்போது, ஒருவர் எந்த அளவிற்கு மானியம் வழங்க முடியும்?


இந்திய வேளாண் தொழிலாளர்கள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை பாதியாகக் குறைத்து, "இயற்கை விவசாயத்திற்கு" மாற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு நடைமுறைக்குச் சாத்தியமில்லாததாக இருக்கலாம். இருப்பினும், இந்த அழைப்பின் முக்கிய நோக்கம் தேவையற்ற உரப் பயன்பாட்டைக் குறைப்பதும், வேளாண் தொழிலாளர்கள் உரங்களை கவனமாகப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் மட்டுமேயாகும். இது நியாயமான மற்றும் மிக முக்கியமான ஒன்றாகும். பயிர்கள் நல்ல மகசூலைத் தரத் தேவையான நைட்ரஜன் (Nitrogen (N)), பாஸ்பரஸ் (Phosphorus (P)), பொட்டாசியம் (Potassium (K)) மற்றும் சல்பர் (Sulphur (S)) போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை உரங்கள் வழங்குகின்றன. ஆனால், இந்த உரங்களைத் தயாரிக்கத் தேவையான இயற்கை எரிவாயு, பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் சல்பர் ஆகியவற்றின் இருப்பு இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது, எனவே இந்தியா இறக்குமதியை பெருமளவு சார்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களாலும், சமீபகாலம் வரை உலக உர வர்த்தகத்தில் சுமார் 30% பங்கைக் கொண்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதாலும், இந்தியாவின் இந்த இறக்குமதி சார்ந்த நிலை இப்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், உரங்களுக்கு அதிகப்படியான மானியங்களை வழங்கியதன் மூலம் விலைமதிப்பற்ற அந்நியச் செலாவணியை செலவிட்டது மட்டுமல்லாமல், யூரியா (Urea) மற்றும் டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) போன்ற செறிவூட்டப்பட்ட உரங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும் தவறுகளைச் செய்துள்ளன. இது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களில் கடுமையான சமநிலையின்மையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு, விவசாயிகள் அம்மோனியம் சல்பேட் (20.5% நைட்ரஜன் மற்றும் 23% சல்பர்) மற்றும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (16% பாஸ்பரஸ் மற்றும் 11% சல்பர்) போன்ற உரங்களைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர், இவை யூரியா மற்றும் டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) போன்றவற்றால் மாற்றப்பட்டன. இவற்றில் முறையே நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் மிக அதிக அளவில் (46%) உள்ளன, ஆனால் மற்ற முக்கிய அல்லது சிறு ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை. மேலும், இந்த உரங்கள் திறமையற்ற முறையில் பயன்படுத்தப்படுகின்றன. யூரியாவில் உள்ள நைட்ரஜனில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயிர்களால் உறிஞ்சப்படுகிறது, மீதமுள்ளவை அம்மோனியா வாயுவாக மாறுகின்றன அல்லது நைட்ரேட்டாக மாறி நிலத்தடி நீருடன் கலந்து வீணாகின்றன. எனவே, ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக வழங்கக்கூடிய உரங்களே வேளாண் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றன.


அரசாங்கம் உரங்களின் சில்லறை விலையை அவற்றின் இறக்குமதிச் செலவுக்கு இணையாக உயர்த்த வேண்டும் அல்லது விலைக் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்க வேண்டும். தற்போது உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்திற்குப் பதிலாக, சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு சுமார் ரூ.5,000 வீதம் நேரடியாகப் பணமாக வழங்கலாம். உர மானியம் மற்றும் பிரதமர் கிசான் திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-Kisan)) ஆகியவற்றிலிருந்து சேமிக்கப்படும் நிதியை, வேளாண் தொழிலாளர்களுக்கான நேரடி வருமான ஆதரவுத் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, தற்போதைய உர மானிய முறை மற்றும் விலைக் கட்டுப்பாட்டு முறை நிதிரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் நீடிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உரங்கள் கிடைப்பதே பெரும் சிக்கலாக இருக்கும்போது, அதற்கு எவ்வளவு மானியம் வழங்க முடியும் என்பதற்கும் ஒரு வரம்பு உண்டு. எனவே, இந்தச் சூழலை நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டு வரும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Original Link: West Asia crisis opens space for fertiliser policy reform.


Share:

இந்தியா அதன் உணவு அமைப்பில் குறிப்பாக வெப்பம் தொடர்பான அழுத்தத்திற்கு எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது? -ரேணுகா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடபட்ட அறிக்கை ஒன்றில், கடுமையான வெப்பம், உலகளாவிய உணவு அமைப்புகளைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளி வருவதாக ஐ.நா. முகமைகள் எச்சரித்துள்ளன. இந்தியாவின் உணவு அமைப்பு எது போன்ற  பாதிப்புகளை எதிர் கொள்கிறது?


மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் அதிகரிப்பதும், கடும் வெப்பமானது வேளாண் உணவுப் பாதுகாப்பிற்கும் மிகவும்  முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organisation (FAO)) மற்றும் உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation (WMO)) ஆகியவை இணைந்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த அரை நூற்றாண்டில் தீவிர வெப்ப நிகழ்வுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது வேளாண் உணவு அமைப்புகள் மற்றும் நிலப்பரப்புகளின் மீது அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.


இந்தியாவின் உணவு அமைப்பானது வெப்பம் சார்ந்த அழுத்தங்களுக்கு ஏன்   எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது? இதனை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் வேளாண் கொள்கைக் கட்டமைப்பு போதுமானதாக உள்ளதா?


கடும் வெப்பமும் இந்தியாவின் உணவு அமைப்பும்: FAO-WMO அறிக்கை என்ன வெளிப்படுத்துகிறது.


காலநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பு — விளக்கவுரை


ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization of the United Nations (FAO)) மற்றும் உலக வானிலை அமைப்பு World Meteorological Organization (WMO)) ஆகியவற்றின் கூட்டு அறிக்கை, மிக அதிக வெப்பநிலை தற்போது உலகளாவிய வேளாண்-உணவு (agrifood) அமைப்புகளுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அந்த அபாயத்தின் முக்கிய கட்டத்தில் இந்தியா இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் வெப்பம் மற்றும் வேளாண்மை


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றின் சமீபத்திய கூட்டறிக்கை ஒன்றின்படி, கடந்த அரை நூற்றாண்டில் கடும் வெப்ப நிகழ்வுகளின் அதிர்வெண், தீவிரம் மற்றும் கால நிலை மாற்றங்கள் அதிகரித்துள்ளன. இது உலகளாவிய வேளாண் உணவு அமைப்புகளுக்கும் நிலப்பரப்புகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.



அதீத வெப்பம் (extreme heat)  என்றால் என்ன?


வரையறை


அதீத வெப்பம் என்பது, பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் அவற்றின் வழக்கமான வரம்புகளை விட நீண்ட காலத்திற்கு உயர்ந்து, பயிர்கள், கால்நடைகள், மீன்கள், காடுகள் மற்றும் மனிதர்களுக்கு உடல் ரீதியான அழுத்தத்தையும் நேரடி உடல்ரீதியான சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையாக வரையறுக்கப்படுகிறது. கால அளவையும் கொண்டிருக்கும் வெப்ப அலைகளைப் போல் இல்லாமல், கடும் அதீத என்பது முற்றிலும் வெப்பநிலையின் அளவைக் கொண்டே வரையறுக்கப்படுகிறது.

அதீத வெப்பம், “அச்சுறுத்தலை அதிகரிக்கும் காரணி”


‘அதிதீவிர வெப்பமும் விவசாயமும்’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, தீவிர வெப்பத்தை “பகலும் இரவும் உள்ள வெப்பநிலைகள் நீண்டகாலமாக வழக்கமான அளவை மீறி அதிகரிக்கும் ஒரு நிலையாகும். இது உணவு பயிர்கள், கால்நடைகள், மீன்கள், மரங்கள் மற்றும் மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்று  சுட்டிக் காட்டுக்கிறது.


தீவிர வெப்பம் குறித்த குறிப்புகள் வெப்ப அலைகளின் பின்னணியிலேயே குறிப்பிடப்பட்டாலும், தீவிர வெப்பம் என்பது முழுமையாக வெப்பநிலையின் அளவை மட்டுமே கொண்டு வரையறுக்கப்படுகிறது. மாறாக, வெப்ப அலைகள் என்பவை நாட்கள் முதல் மாதங்கள் வரையிலான, குறிப்பிட்ட கால அளவு ஏதும் இல்லாமல்  ஒரு காலப்பரிமாணத்தையும் உள்ளடக்கியுள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுக்கிறது.


முக்கிய வேளாண் உற்பத்தி (பயிர்கள், கால்நடைகள், மீன்வளம் மற்றும் காடுகள்) மீது கடும் வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்த அந்த அறிக்கை, அது ஒன்றோடொன்று இணைந்த அழுத்தங்களின் ஒரு சிக்கலான வலைப்பின்னல் மூலம் உணவு அமைப்பைப் பாதிக்கிறது என்று கூறுகிறது.


இது மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதை வேகப்படுத்துகிறது, பயிர்களின்மீது பாதிப்பை ஏற்பத்துகிறது மற்றும் நீர்வாழ் சூழல் மண்டலத்தின் வெப்பப் பண்பை மாற்றுகிறது. அதுமட்டுமின்றி, இது காட்டுத்தீக்கு வழிவகுத்து, பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், முழு உணவுச் சங்கிலியையும் சீர்குலைக்கிறது.


வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில், கடும் வெப்பம் என்பது ஏற்கனவே நிலவிவரும் பாதிப்புகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மோசமாக்கி, நிலைநிறுத்தும் ஒரு "அச்சுறுத்தலைப் அதிகரிக்கும்  காரணியாக" செயல்படுகிறது. உதாரணமாக,   நிலப்பரப்பில் அதிகமாக நெல் மற்றும் கோதுமை போன்ற ஒரே பயிரை மட்டும் பயிரிடும் முறையான ஒற்றைப் பயிர் சாகுபடியை இந்தியா சார்ந்திருப்பதும், அதனுடன் இணைந்த அதன் பிரம்மாண்டமான கடற்கரை மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் பெரும் மக்கள்தொகையும், பல வழிகளில் பாதிப்பை உருவாக்குகின்றன.


உணவு அமைப்புகள் மீதான தாக்கம்


உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு அமைப்பு, வெப்பநிலை மாற்றங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாகும். வெப்ப அலைகள் இந்தச் சங்கிலியின் ஒவ்வொரு முனையையும் சீர்குலைக்கின்றன. வெப்ப அலை ஆவியாதலை அதிகரித்து, மண் மற்றும் விளைநிலங்களை உலரச் செய்வதன் மூலம் மழைப்பொழிவு முறைகளைச் சீர்குலைக்கிறது. பயிர்களுக்குத் தேவையான நீர் உறிஞ்சுதலுக்குப் பதிலாக, இது  தீவிரமான மழைப்பொழிவுக்கு வழிவகுத்து, வெள்ளம் மற்றும் மண் அரிப்பை ஏற்படுத்துகிறது.


இது, உலக வேளாண் நிலப்பரப்பில் 80 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள மழையை நம்பிய வேளாண் பணிகளுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பநிலையானது கோதுமை போன்ற ரபி பயிர்களின் தானியம் நிரம்பும் நிலையையும் பாதிக்கிறது. இது பயிர்கள் முன்கூட்டியே முதிர்வடையவும், மகசூல் குறையவும் வழிவகுக்கிறது.


வெப்ப அலைகள் கால்நடைகளை, குறிப்பாக பால் மற்றும் கோழி வளர்ப்புத் துறையை, கடுமையாகப் பாதிக்கின்றன. ஏனெனில், அவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தமானது,  பால் மற்றும் முட்டை உற்பத்தியைக் குறைப்பதோடு, இறப்பு விகிதங்களையும் அதிகரிக்கிறது.


மீன்வளம் ஒரு தனித்துவமான மற்றும்  கண்ணுக்குப் தெரியாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதிகரித்துவரும் நீரின் வெப்பநிலை, நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனைக் குறைத்து, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இதனால் மீன்கள் ஆழமான மற்றும் குளிர்ந்த நீருக்கு இடம்பெயர்கின்றன அதீத வெப்ப அழுத்தம் காடுகளின் பாதுகாப்பை சீர்குலைத்து, காட்டுத்தீ அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த காட்டுத்தீக்கள் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழித்து, பழங்கள், தேன் மற்றும் மருத்துவத் தாவரங்களின் விளைச்சலையும் குறைக்கின்றன.


உணவு அமைப்பின் மீது வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக, கவனிக்கப்படாமல் விடப்படும் மிக முக்கியமான அம்சம், வேளாண்துறையில் பணியாற்றும் மக்கள்மீது அது ஏற்படுத்தும் விளைவாகும். 2019-ஆம் ஆண்டில் வெளியான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) அறிக்கையின்படி, உலக அளவில் வெப்ப அழுத்தத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய துறையாக வேளாண்துறையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உலகம் முழுவதும்  94 கோடி மக்கள் வேளாண்துறையில் பணிபுரிகின்றனர். 2030-ஆம் ஆண்டில், வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் உலகளாவிய வேலைநேர இழப்புகளில் 60 சதவீதம் இந்தத் துறையால் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் 


அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு வளரும் நாடு என்பதால், இந்தியா தனது உணவு அமைப்பில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வெப்பத்தால் எளிதில் பாதிப்படையக்கூடிய கோதுமை மற்றும் அரிசியை அதிக அளவில்  சார்ந்துள்ளது.


இந்தியாவின் உணவுக் கிண்ணம் (food bowl) என்று அழைக்கப்படும் இந்தோ-கங்கைச் சமவெளிகள், இறுதிக்கட்ட வெப்ப அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகும். பருவகால நிலை சராசரி வெப்பநிலையைவிட 1-2°C வெப்பநிலை உயர்ந்தால், தானி உற்பத்தி  குறைந்து (உலர்ந்து, இயல்பைவிடச் சிறியதாகி) கோதுமை விளைச்சல் கணிசமாகக் குறைந்துவிடும்.


2022-ஆம் ஆண்டின் வெப்ப அலை இதற்கு ஒரு தெளிவான உதாரணமாகும். இது சில மாநிலங்களில் கோதுமை விளைச்சலைக் குறைத்தது. இந்தியாவின் கலோரி உட்கொள்ளலில் 70 சதவீதத்திற்குப் அதிகமாக அரிசி, காலநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டதாகவும், மழையை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு பயிராகவும் உள்ளது. அதிகரித்து வரும் வெப்ப அலைகள், நெல் சாகுபடியையும் உணவுப் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் 45 சதவீதம் பேருக்கு வேளாண்மைத்துறை வேலைவாய்ப்பு அளிக்கிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு இது முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. வெப்பத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் நிதிச்சுமை ஆகியவற்றின் கலவையே உழவர்களின்  கவலைகளுக்கு  ஒரு முக்கிய காரணியாகும். வேளாண் தொழிலாளர்கள் திறந்தவெளியில் வேலை செய்வதால், கடும் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சராசரி தொழிலாளியைவிட வெப்பத்தால் இறப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு 20 மடங்கு அதிகமாக இருக்கும்.

மேலும், இந்தியப் பெருங்கடல் அதிக வெப்பமடைவது, மீன்வளத்தை சார்ந்து இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் அபாயங்களை ஏற்படுத்துகிறது. இது பவளப்பாறைகள் வெளுத்தல், மீன் இனங்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் கடல் உணவுச் சங்கிலிகளில் சீர்குலைவுகளை ஏற்படுத்தக்கூடும்.  இது போன்ற  அபாயத்தைச் சமாளிக்க இந்தியாவின் வேளாண் கொள்கைக் கட்டமைப்பு போதுமானதாக உள்ளதா?


வேளாண்கொள்கை கட்டமைப்பு


இந்தியாவின் வேளாண் கொள்கை அமைப்பு நீண்டகாலமாக, நிலைத்தன்மையைவிட உற்பத்தி அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. இதனால், அதிகரித்துவரும் காலநிலை அபாயங்களை சமாளிக்க நாட்டுக்கு போதிய தயாரிப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.  உழவர்களின் வருமான நிலைத்தன்மையை உறுதிசெய்ய அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) முறை, நடைமுறையில் கோதுமை மற்றும் அரிசியின் ஆதிக்கத்தை  அதிகரிக்க செய்துள்ளயுள்ளது. மின்சாரம் மற்றும் உரங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் காரணமாக, அரை வறண்ட பகுதிகளிலும் நீர்மிகு பயிர்களான நெல் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.


சிறுதானியங்கள் போன்ற பாரம்பரிய மற்றும் பருவநிலையைச் சார்ந்த பயிர்கள், அவற்றின் சூழலியல் நன்மைகள் இருந்தபோதிலும், உழவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பயனற்றவையாகவே இருக்கின்றன. அரசு சிறுதானியங்கள் (Shree Anna) திட்டத்தை ஆதரிக்கவும், பயிர் வகைகள் போன்ற பயிர் பல்வகைப்படுத்தலையும் தோட்டக்கலைப் பயிர்களையும் ஊக்குவிக்கவும் தொடங்கியுள்ள நிலையில், மாநில அளவிலான ஊக்கத்தொகைகள்  வேறு திசையில் செயல்படுகின்றன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செலவினத் துறையால் சுட்டிக்காட்டப்பட்டபடி, பல மாநிலங்கள் நெல் மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேலாக நிதி ஊக்கத்தொகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.




பாரம்பரிய பயிர்களும் விதைகளும், உள்ளூர் வெப்பம் மற்றும் வறட்சி நிலைகளைத் தாங்கும் வகையில் பல நூற்றாண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், காலநிலை மாற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டவையாக உள்ளன. இருப்பினும், இந்த விதைகள் மற்றும் பயிர்களில் பல, செழித்து வளர அதிக நீரும் நிலையான வெப்பநிலையும் தேவைப்படும் அதிக மகசூல் தரும் இரகங்களால் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல, மீன் வளர்ப்பில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வெப்பக் காப்பிடங்கள் (thermal shelters) அல்லது காடுகளில் வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயைத் தடுக்கும் எரிபொருள் மேலாண்மை போன்ற கொள்கைகள்  போதிய அளவில் உருவாக்கப்படவில்லை.


மற்றொரு முக்கிய இடைவெளி தொழிலாளர் பாதுகாப்பு ஆகும். இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் இன்னும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உருவாக்கபடவில்லை. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான விதிகள் இருந்தாலும், பருவநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகளின் தீவிரமடைந்துவரும் தாக்கத்தைக் கையாள்வதற்கான குறிப்பிட்ட மற்றும் அமல்படுத்தக்கூடிய சட்ட பாதுகாப்புகள் எதுவும் இல்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் (National Disaster Management Authority (NDMA)) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும், தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, ஏப்ரல் 2026-ல் நாடு தழுவிய வெப்ப அலை குறித்த ஆலோசனையை வெளியிடுகின்றன. இந்த அறிவுறுத்தல்கள் பொதுவாகக் கட்டுப்படுத்தாத தன்மையைக் கொண்டவை.


வேளாண் உணவு அமைப்புகளை அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக மாற்றுவதை நோக்கி


உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். இருப்பினும், 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் 8 சதவீதத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து பசியை எதிர்கொண்டனர். மேலும், 230 கோடி மக்கள் மிதமான முதல் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர். இதற்கிடையில், அதீத வெப்பம் உலகிற்கு ஒரு  முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. வெப்பமடைந்துவரும் இந்த உலகில் உணவுப் பாதுகாப்பின் எதிர்காலத்தை உறுதிசெய்ய, ஒரு பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறையும், ‘சம்பவங்களுக்குப் பின் செயல்படும் தப்பிப்பிழைப்பு’ (reactive survival’) என்ற நிலையிலிருந்து ‘முன்கூட்டியே செயல்படும் மீள்திறன்’ (proactive resilience) நிலைக்கு மாறுவதும்  முக்கியமான நடவடிக்கையாகும்.


மாநில அளவிலான நிதிச் சலுகைகளின் கட்டமைப்பை மறுசீரமைப்பதே மிகவும் பயனுள்ள தகவமைப்பு உத்திகளில் ஒன்றாக இருக்கும். இதில், அதிக நீர் தேவைப்படும் ஒற்றைப் பயிர் சாகுபடிக்கான ஊக்கத்தொகைகளைப் படிப்படியாக நீக்கி, வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு ஆதரவளிப்பது அடங்கும். ஏனெனில், இந்தப் பயிர்கள் பருவநிலை மாற்றங்களைத் ஏற்ற திறன் கொண்டவை மற்றும் மற்ற பயிர்களைவிட இதற்கு மிகவும் குறைவான நீரே தேவைப்படுகிறது.


சிறுதானிய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னிலை வகித்தாலும், அதன் ஒட்டுமொத்த உற்பத்தி கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியைவிட மிகவும் குறைவாக உள்ளது. பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய பயிர்களின் அதிக உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் முதலீட்டை அதிகரிப்பதும், அறுவடைக்குப்  பின்னர் இழப்புகளைக் குறைப்பதும் இந்த இடைவெளியைக் குறைக்க உதவக்கூடும்.


உணவு அமைப்பின் மனிதக் கூறினைப் பாதுகாப்பது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். வெளிப்புறப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குப் பணி நேர மாற்றம், நீர் அருந்தும் நடைமுறைகள் மற்றும் வெப்பக் காப்பீடு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில், துறைசார்ந்த வெப்பச் செயல் திட்டங்களை ஊரகத் தொழிலாளர் நலத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கலாம்.


மேலும், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான வெப்பப் புகலிடங்களை உருவாக்குவதன் மூலமும், மரம் அதிகமாக உள்ள  வனப் பொருட்களுக்கு அமைப்புரீதியான பாதுகாப்பை வழங்குவதன் மூலமும், ‘நீல’ மற்றும் ‘பசுமைப்’ பொருளாதாரங்களை உணவுப் பாதுகாப்பு உத்திகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும். பசிப் பிணி இல்லாத நிலையை (zero hunger) அடைவதற்கு, வேளாண் உணவு அமைப்புகளை மிகவும் சமத்துவமானதாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகவும் மாற்றியமைப்பதற்கான அதிக முயற்சிகள் தேவைப்படும்.


Original Link: How is India particularly vulnerable to heat-related stress on its food system? 


Share:

ஒருவர் தனது தாய்மொழியில் கற்கும் உரிமையை உச்சநீதிமன்றம் எவ்வாறு அங்கீகரித்தது? - அமால் ஷேக்

இராஜஸ்தானி மொழி தொடர்பான ஒரு வழக்கில், குழந்தைகள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் கல்வி பெறுவதை மறுக்க முடியாது என்றும், இது "ஒரு வசதி சார்ந்த விஷயம் அல்ல, மாறாக இருப்புரிமை சார்ந்த ஒரு விஷயம்" (not a matter of convenience, but a matter of existential rights) என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பல ஆண்டுகளாக, இராஜஸ்தானின் பெரும்பகுதிகளில் உள்ள குழந்தைகள் தங்கள் வீடுகளில் மார்வாரி, மேவாரி, ஷேகாவதி, ஹரௌதி மற்றும் இராஜஸ்தானி மொழியின் பிற வடிவங்களைப் பேசி வளர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வகுப்பறைகளுக்குள் நுழையும்போது, ​​அங்கு கற்பிக்கும் மொழி திடீரென மாறிவிடுகிறது. மே 12 செவ்வாயன்று, இந்த முரண்பாடு ஒரு அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


கல்வி நோக்கங்களுக்காக இராஜஸ்தானி மொழியை உள்ளூர் அல்லது பிராந்திய மொழியாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு கொள்கையை வகுக்குமாறு இராஜஸ்தான் அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், குழந்தைகள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் கல்வி பெறுவதை மறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒருவர் தனது சொந்த மொழியில் புரிந்துகொள்வதும், பிறரால் புரிந்துகொள்ளப்படுவதும் ஒரு வசதி சார்ந்த விஷயம் அல்ல, மாறாக அது இருப்புரிமை சார்ந்த ஒரு விஷயமாகும். ஏனெனில், சமூகத்திலும் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதற்கு, புரிந்துகொள்ளும் திறன் என்பது அவசியமாக முன்தேவையாக அமைகிறது," என்று குறிப்பிட்டது.




நவம்பர் 2024-ல், ஒரு பொதுநல மனுவை (PIL) தள்ளுபடி செய்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உயர்நீதிமன்ற உத்தரவில், மனுதாரர்கள் ஒரு "நடைமுறைப்படுத்தக்கூடிய சட்ட உரிமையை" நிலைநாட்டத் தவறிவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு எதைப் பற்றியது என்பது குறித்த விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது.


மனுவில் கோரப்பட்டவை என்ன?


மூன்றாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இராஜஸ்தானி மொழியைச் சேர்ப்பதற்கும், 'ஆசிரியர்களுக்கான இராஜஸ்தான் தகுதித் தேர்வு' (Rajasthan Eligibility Examination for Teachers (REET)) 2021-ல் அதை உள்ளடக்குவதற்கும், மேலும் தொடக்கக் கல்வியை இராஜஸ்தானி மொழியிலோ அல்லது அந்தந்தப் பகுதியின் உள்ளூர் மொழியிலோ கட்டாயமாக்குவதற்கும் கோரி மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.


இராஜஸ்தானி மொழி மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது. இது ஏற்கெனவே இராஜஸ்தானின் பல பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியலிடும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் இது இடம்பெறவில்லை.


மாநில அரசின் தரப்பு வாதம் இங்குதான் நிலைபெற்றது. அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எனவே, இராஜஸ்தானியை பயிற்று மொழியாகவோ அல்லது ஆட்சேர்ப்புக்கான ஒரு பாடமாகவோ சேர்ப்பதற்கு எந்தக் கொள்கைக் கட்டமைப்பும் இல்லை, எந்தக் கடமையும் இல்லை என்று மாநில அரசு வாதிட்டது. 8-வது அட்டவணை எந்தெந்த மொழிகளுக்கு குறிப்பிட்ட அரசியலமைப்புப் பாதுகாப்புகள் கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பதால், பிற மொழிகளைப் பேசும் குழந்தைகளுக்காக ஒரு மாநிலம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான உச்சவரம்பை நீதிமன்றம் நிர்ணயிக்கவில்லை.


உச்சநீதிமன்றம் இதை, அரசியலமைப்புச் சட்டக் கேள்வியைத் திறம்படத் தவிர்த்துவிடும் ஒரு தொழில்நுட்ப அடிப்படையின்மீது செயல்படும் "பொறுப்பற்ற பதில்" என்று குறிப்பிட்டது. பட்டியலில் இல்லாததை ஒரு காரணமாகக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது, "ஒரு கொள்கை இல்லாததை" சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகக் கருதுவதற்குப் பதிலாக, "தற்போதைய செயலற்றத் தன்மையை நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணமாக" மாற்றிவிடுகிறது என்று நீதிமன்றம் கூறியது.


அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?


ஒருவர் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை, அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இராஜஸ்தான் மாநிலம் இப்பிரிவுகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.


அரசியலமைப்பின் 350A-வது பிரிவானது, "மொழிச் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தொடக்கக் கல்வி நிலையில் (primary stage) தாய்மொழியில் கற்பிப்பதற்குப் போதுமான வசதிகளை ஒரு அரசு வழங்க வேண்டும்" என்று கோருகிறது. இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஒரு மாநிலத்தில், இராஜஸ்தானி பேசுபவர்கள் ஒரு மொழிச் சிறுபான்மையினர் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இந்தச் சட்டப்பிரிவு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பிற்குள் இராஜஸ்தானி பேசுபவர்கள் அடங்குவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அரசியலமைப்பு விதி 21A ஆனது, இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமையை உறுதி செய்கிறது. இதைத் தரமான கல்விக்கான உரிமையாக நீதிமன்றம் கருதியதுடன், ஒரு குழந்தையால் புரிந்துகொள்ள முடியாத கற்பித்தல் மொழியை இதற்குத் தகுதி பெறாது என்றும் தீர்ப்பளித்தது. மொழித் தடைகள் அல்லது அறிமுகமில்லாத பயிற்று மொழிகள் காரணமாக மாணவர்களால் போதுமான அளவு புரிந்துகொள்ள முடியாத அறிவுறுத்தலை, எந்தவொரு அர்த்தத்திலும் தரமான கல்வியாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.



அரசியலமைப்பு விதி 19(1)(a)-இன் கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமைக்கு பரந்த பயன்பாடு வழங்கப்பட்டது. "மொழி என்பது கருத்து வெளிப்பாட்டிற்கான ஒரு கருவியாகத் திகழ்வதால், அதுவே ஒரு தனிநபரின் மிகச்சிறந்த அம்சமாக அமைகிறது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. "சிந்தனைகள் வடிவம் பெறுவதற்கும், தனித்துவம் அங்கீகாரம் பெறுவதற்கும் அதுவே ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது."


மத்திய அரசால் வகுக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை (NEP), குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலும், முன்னுரிமையாக எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் கற்பிக்கப் பரிந்துரைக்கிறது. குழந்தைகள் நன்கு அறிந்த மொழியில் அடிப்படைக் கருத்துக்களை மிகவும் திறம்படப் புரிந்துகொள்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலும் உள்ள வகுப்பறைகளில் மொழித் தடைகளைக் களைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் இது கருத்தில் கொள்கிறது.


இராஜஸ்தானின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாட்டையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். ஏனெனில், அந்த மாநிலம் தனது பள்ளிப் பாடத்திட்டத்தில் குஜராத்தி, பஞ்சாபி மற்றும் சிந்தி மொழிகளைச் சேர்த்துள்ளது. இருப்பினும், இராஜஸ்தானி மொழியை மட்டும் அது விலக்கி வைத்துள்ளது. ஒரு மொழிக் குழு ஏன் சேர்க்கப்பட்டது, மற்றொன்று ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்குப் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை. இத்தகைய மாறுபட்ட அணுகுமுறை, அரசு பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின் கீழ், 'தன்னிச்சையான செயல்' என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


உச்சநீதிமன்றம் கூறியது என்ன?


முடிவடைந்த ஆசிரியர்களுக்கான இராஜஸ்தான் தகுதித் தேர்வு (REET) 2021 ஆட்சேர்ப்பு செயல்முறையை மீண்டும் தொடங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், கல்வியில் மொழி என்பது வெறும் "நிர்வாக வசதி அல்லது கற்பித்தல் விருப்பம்" (administrative convenience or pedagogical preference) சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது "அனைவரையும் உள்ளடக்குதல், அடையாளம் மற்றும் கற்றல் செயல்முறைக்கான அர்த்தமுள்ள அணுகல் ஆகியவற்றின் மிக அடிப்படையான அம்சம்" என்று மேலும் கூறியது.


அரசியலமைப்பு வாக்குறுதிகளுக்கும், களத்தில் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் இடையே உள்ள இடைவெளியை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. "காகிதத்தில் மட்டுமே இருக்கும் ஒரு உரிமை, அதற்கேற்ற நிர்வாக விருப்பமோ அல்லது செயலாக்கமோ இல்லாமல் இருந்தால், அது உண்மையில் உரிமையே அல்ல" என்று அது கூறியது.


குழந்தை தனது தாய்மொழியில் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிப்பது குறித்து, 19(1)(a) பிரிவின்கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உத்தரவாதமானது, அர்த்தமுள்ள மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் தகவல்களைப் பெறும் உரிமையை உள்ளடக்கியது என்றும், தொடக்கப் பள்ளி நிலையில் இது குழந்தையின் சொந்த மொழியைக் குறிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.


இது, 'கர்நாடக அரசு vs ஆங்கில வழி தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த நிர்வாகம்' (State of Karnataka vs Associated Management of English Medium Primary and Secondary Schools) என்ற வழக்கில், 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மொழிச் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில், பயிற்று மொழியாகக் கன்னடத்தையே கட்டாயமாக்கும் மாநில அரசின் கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பில், "ஒரு குழந்தைக்கோ அல்லது அக்குழந்தையின் சார்பாக அதன் பெற்றோருக்கோ அல்லது பாதுகாவலருக்கோ, பள்ளிக் கல்வியின் தொடக்க நிலையில் அக்குழந்தை எந்தப் பயிற்று மொழியில் கல்வி கற்க விரும்புகிறதோ, அந்த மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திர உரிமை உள்ளது."


'கல்வி உரிமைச் சட்டம்-2009'-ன் பிரிவு 29(2)(f) ஆனது, "பயிற்று மொழியானது, இயன்றவரை, அக்குழந்தையின் தாய்மொழியாகவே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. குழந்தைகள் தங்களுக்குப் பரிச்சயமான மொழியில் அடிப்படைப் புரிதல்களை மிக எளிதாகப் பயின்றுக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வேற்று மொழியில் கற்பிப்பது "அக்குழந்தையின் அடிப்படை வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தையும், அக்குழந்தையிடம் ஒருவித அந்நியத்தன்மை அல்லது அச்ச உணர்வை உருவாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டவாறு, இச்சட்டப் பிரிவை ஒரு "முக்கியமான விதிமுறை" என்று வர்ணித்தது.


இறுதியாக, 'தேசியக் கல்விக் கொள்கை-2020'-ன் (NEP-2020) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தாய்மொழி சார்ந்த கல்வி குறித்த ஒரு விரிவான கொள்கையை வகுக்குமாறும், கல்வி நோக்கங்களுக்காக 'இராஜஸ்தானி' மொழியை ஒரு உள்ளூர் மற்றும் வட்டார மொழியாக அங்கீகரிக்குமாறும் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், தொடக்க நிலையில் பயிற்று மொழியாகவும், ஒரு பாடமாகவும் அம்மொழியைப் படிப்படியாக அறிமுகப்படுத்துமாறும் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


Original Link: How Supreme Court endorsed the right to be taught in one’s mother tongue?


Share:

‘இரத்த வைரங்கள்’ என்பது என்ன? கிம்பர்லி செயல்முறை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? -குஷ்பூ குமாரி


‘குருதி வைரம்’ வர்த்தகத்தைத் தடுப்பதற்காக கிம்பர்லி செயல்முறையின் இடைக்காலக் கூட்டம் மும்பையில் நடைபெற்றுவரும் நிலையில், வைரங்கள், இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் பற்றிப் புரிந்துகொள்வோம்.


தற்போதைய செய்தி :

2026-ஆம் ஆண்டு மே 11 அன்று கிம்பர்லி செயல்முறை (Kimberley Process (KP)) இடைக்காலக் கூட்டம் இந்தியாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மாறிவரும் சர்வதேச சவால்களுக்கு இடையில், உலகளாவிய இயற்கை வைர மதிப்புச் சங்கிலியில் கண்காணிப்பு, இணக்கம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நான்கு நாள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான 'கிம்பர்லி செயல்முறையின்' தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.


இரத்த வைரங்கள் : போர் மற்றும் உள்நாட்டுப் போர்கள் நடக்கும் பகுதிகளில் (குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன், லைபீரியா, அங்கோலா போன்றவை) சட்டவிரோதமாக சுரங்கம் செய்யப்பட்டு, போராளிக் குழுக்களுக்கு நிதி திரட்ட உதவும் வைரங்கள் ஆகும். இந்த வைரங்களின் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் ஆயுதங்கள் வாங்கவும், போரைத் தொடரவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது, குழந்தைப் படைகள், மனித உரிமை மீறல்கள், அடிமை வேலை போன்றவை நடைபெறுகின்றன.


முக்கிய அம்சங்கள்:


1. 2026-ஆம் ஆண்டு இந்தியாவின் கிம்பர்லி செயல்முறை தலைமைப் பொறுப்பானது, இயற்கை வைரத் துறையில் நம்பகத்தன்மை, இணக்கம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகிய 3C-க்களால் வழிநடத்தப்படுகிறது. பொறுப்புடன் பெறப்பட்ட இயற்கை வைரங்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு, ஆக்கபூர்வமான உரையாடலும், சர்வதேச ஒத்துழைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வலியுறுத்துகிறது.


2. கிம்பர்லி செயல்முறைச் சான்றிதழ் திட்டத்தை (Kimberley Process Certification Scheme (KPCS)) செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் இணக்க வழிமுறைகள், பாரம்பரிய மற்றும் வண்டல் வைர உற்பத்தி, புள்ளிவிவரங்கள் மற்றும் இயற்கை வைர மதிப்புச் சங்கிலியில் நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றுவருகிறது.


3. போரால் பாதிக்கப்பட்ட வைரங்களின் (conflict diamonds) வர்த்தகத்தைத் தடுப்பதற்காக கிம்பர்லி செயல்முறையை பயன்படுத்தும் வழிமுறையே கிம்பர்லி செயல்முறைச் சான்றிதழ் திட்ட வழிமுறையாகும். 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், சட்டபூர்வமான செயல்முறையின் மூலம் மோதல் வைரங்கள் கிம்பர்லி செயல்முறை விதிமுறைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக, கிம்பர்லி செயல்முறையில் பங்கேற்ற நாடுகளால் தனித்தனியாக செயல்படுத்தப்படுகிறது.


4. தற்போது, ​​கிம்பர்லி செயல்முறையில் 60 பங்கேற்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக 86 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகள் ஒரே கூட்டணியாக பங்கேற்கின்றன.


5. ‘மோதல் வைரங்கள்’ (Conflict diamonds) அல்லது ‘இரத்த வைரங்கள்’ என அறியப்படும் செதுக்கப்படாத வைரங்கள் என்பவை, சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலவீனப்படுத்தும் நோக்கில் நடைபெறும் ஆயுத மோதல்களுக்கு நிதியளிப்பதற்காக, கிளர்ச்சி இயக்கங்களாலோ அல்லது  அந்த நாடுகளின் கூட்டாளிகளாலோ வெட்டி எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் ஆகும்.


6. அங்கோலா, சியரா லியோன், ருவாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறைக்கு நிதியளிப்பதில் வைரங்களின் பங்கு குறித்து 1990-களில் சர்வதேச கவனம் திரும்பியபோது, ​​இந்தச் சொற்கள் உலகளாவிய விவாதப் பொருளாகின.



7. வண்டல் வைரங்களை (alluvial diamonds) எளிதாக வெட்டியெடுப்பது, குறைந்த அளவிலான கண்காணிப்பு மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் ஆகியவை இணைந்து, இந்தக் கற்கள் சட்டப்பூர்வமான விநியோகச் சங்கிலிகளுக்குள்  செல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்தன.


8. இரத்த வைரங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், தென்னாப்பிரிக்க அரசாங்கம் 2000-ஆம் ஆண்டில் கிம்பர்லியில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டம் உலக வைர மன்றம், வைரம் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தது.


உலக வைர கவுன்சில் (World Diamond Council (WDC))


பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடைபெற்ற உலக வைர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் வாயிலாக, உலக வைரச் சந்தை கூட்டமைப்பு (World Federation of Diamond Bourses (WFDB)) மற்றும் சர்வதேச வைர உற்பத்தியாளர்கள் சங்கம் (International Diamond Manufacturers Association (IDMA)) ஆகியவற்றால் இது 2000-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ​​கிம்பர்லி செயல்முறைக்குள், வைர மற்றும் ஆபரணத் துறையின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக இது செயல்படுகிறது. 2002-ஆம் ஆண்டில், ​​கிம்பர்லி செயல்முறைக்குத் ஆதரவாக செயல்படும் வகையில், தொழில்துறை சார்ந்த சுய-ஒழுங்குமுறை அமைப்பான தனது 'உத்தரவாத முறைமையை' (System of Warranties (SoW)) உலக வைரச் சந்தை கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியது.


9. ​​கிம்பர்லி செயல்முறை என்பது, மோதல்களற்ற வைரங்களின் வர்த்தகத்திற்கு பொதுவான தரத்தை உறுதி செய்யும் நோக்கில், பங்கேற்கும் நாடுகளால் செயல்படுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச தேவைகளின் தொகுப்பை வழங்கும் ஒரு தன்னார்வ ஒப்பந்தமாகும்.


10. இந்த ஒப்பந்தத்தின்படி, பங்கேற்கும் நாடுகளுக்கு இடையேயான ஒவ்வொரு பட்டை தீட்டப்படாத வைரங்களின் ஏற்றுமதியுடனும், வைரங்கள் மோதல் அற்றவை என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் ​​கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உலகளாவிய விநியோகச் சங்கிலியிலிருந்து மோதல்கள் மூலம் பெறபட்ட  வைரங்களை அகற்றுவதற்கான ஒரு உறுதிப்பாடே ​​கிம்பர்லி செயல்முறை ஆகும். கிம்பர்லி செயல்முறையின்படி, இன்று கூட்டத்தில்  பங்கேற்றவர்கள் உலகளாவிய வர்த்தகத்தில் 99.8 சதவீதத்தை  தடுக்கின்றனர்.


வைரம் (Diamond)


1. வைரம் தூய கார்பனால் ஆனது. வைரங்களில், ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் இணைந்து, ஒரு திடமான முப்பரிமாண அமைப்பை உருவாக்குகிறது. இது அறியப்பட்டதிலேயே மிகவும் கடினமான இயற்கை பொருளாகும். மேலும், வைரம் மிக அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது.


2. இது உயர்ந்த ஒளிவிலகல் எண், அதிக ஒளிச்சிதறல் மற்றும் பளபளப்பு போன்ற சிறப்பான ஒளியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்தப்பண்புகளே வைரத்தை உலகின் மிகவும் பிரபலமான இரத்தினக்கல்லாக ஆக்குகின்றன.


இரத்த வைரங்கள், இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கான உலகளாவிய போட்டித் தன்மை கொண்டுள்ளன. 


இரத்த வைரங்கள் என்றால் என்ன?


வரையறை: சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலவீனப்படுத்தும் நோக்கில் நடைபெறும் ஆயுத மோதல்களுக்கு நிதியளிப்பதற்காக, கிளர்ச்சி இயக்கங்களாலோ அல்லது அந்த நாடுகளின் கூட்டாளிகளாலோ வெட்டி எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் பட்டைத் தீட்டப்படாத வைரங்கள் இரத்த வைரங்கள் ஆகும்.


1990-களின் நெருக்கடி: அங்கோலா, சியரா லியோன், ருவாண்டா மற்றும் லைபீரியாவில் வைரங்கள் வழியாக நடைபெறும் மோதல் நிதியுதவிமீது சர்வதேச கவனம் திரும்பியது.


குறைபாடு: வண்டல் வைரங்களை எளிதாக வெட்டியெடுப்பது, குறைந்த அளவிலான கண்காணிப்பு மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் ஆகியவை, கற்கள் சட்டப்பூர்வமான விநியோகச் சங்கிலிகளில் நுழைய வழிவகுத்தன.

2000-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, உலக வைர மன்றம், வைரம் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் குடிமைச் சமூகத்தை ஒன்றிணைத்து கிம்பர்லி கூட்டத்தைக் கூட்டியது.


2003-ஆம் ஆண்டில் கிம்பர்லி செயல்முறைச் சான்றிதழ் திட்டம் (Kimberley Process Certification Scheme (KPCS)) தொடங்கப்பட்டது. கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டம், ஒவ்வொரு பட்டை தீட்டப்படாத வைர ஏற்றுமதியும், மோதல் இல்லாத தோற்றத்தை உறுதிசெய்யும் ஒரு சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உலகளாவிய வர்த்தகத்தில் 99.8% கிம்பர்லி செயல்முறைக்கு ஏற்றதாக உள்ளது.


3. வைரம் இரண்டு வகையான படிவுகளில் காணப்படுகிறது:  முதலாவதாக அடிப்படை அல்லது அதி அடிப்படை (ultrabasic) இயைபு கொண்ட தீப்பாறைகளிலும், இரண்டாவதாக முக்கிய மூலங்களிலிருந்து உருவான வண்டல் படிவுகளிலும்  காணப்படுகிறது.


4. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2022-ன் படி, இந்தியாவின் வைர வயல்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:


(i) அனந்தபூர், கடப்பா, குண்டூர், கிருஷ்ணா, மகபூப்நகர் மற்றும் கர்னூல் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் தென்னிந்தியப் பகுதி;


(ii) பன்னா மண்டலத்தை உள்ளடக்கிய மத்தியப் பிரதேசத்தின் மத்திய இந்தியப் பகுதி;



(iii) சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராதின்-கோடாவலி பகுதி மற்றும் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள டோகாபால், துகாபால், முதலிய பகுதிகள்; மற்றும்


(iv) மகாநதி மற்றும் கோதாவரி பள்ளத்தாக்குகளுக்கு இடையில் அமைந்துள்ள மற்றும் ஒடிசாவை உள்ளடக்கிய கிழக்கிந்தியப் பகுதி.


5. ரஷ்யா (46%) மிகப்பெரிய தொழில்துறை வைர இருப்பைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து போட்ஸ்வானா (23%), காங்கோ (கின்ஷாசா) (12%), தென்னாப்பிரிக்கா (9%) மற்றும் ஆஸ்திரேலியா (1%) ஆகியவை உள்ளன. இந்திய கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி, தொழில்துறை வைரத்தின் உலக இருப்பு   130 கோடி காரட்டுகளாகும்.


ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள்


1. 2023-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான அரசின் நடவடிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் என்பவை, இயற்கையான வைரங்கள் வளரும் புவியியல் செயல்முறைகளைப் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் ஆகும். அவை "செயற்கை வைரங்கள்" (diamond simulants) போன்றவையல்ல, ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் வேதியியல், இயற்பியல் மற்றும் ஒளியியல்ரீதியாக வைரங்கள் ஆகும். எனவே அவற்றை "ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டவை" என்று அடையாளம் காண்பது கடினம்.


3. மொய்சானைட், கியூபிக் சிர்கோனியா (Cubic Zirconia (CZ)), வெள்ளை நீலக்கல், YAG போன்ற பொருட்கள், வைரத்தைப் போலவே தோற்றமளிக்க முயற்சிக்கும் "போலி வைரங்கள்" என்றாலும், அவற்றுக்கு வைரத்தின் பளபளப்பும் நீடித்து இருக்கும் தன்மையும் இல்லை. எனவே, அவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.


4. பெயரே காட்டுவது போல, இந்த முறையில் மிக அதிக அழுத்தத்தை உருவாக்கக்கூடிய கனரக அழுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை   730,000 psi அளவிலான அழுத்தத்தையும் குறைந்தது 1500° செல்சியஸ் வெப்பநிலையையும் உருவாக்குகின்றன. பொதுவாக கிராஃபைட் “வைர விதை” (diamond seed) ஆக பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, குறைந்த செலவுடைய கார்பன் வடிவமான கிராஃபைட், மிகவும் மதிப்புமிக்க கார்பன் வடிவமான வைரமாக மாறுகிறது.


5. மற்ற செயல்முறைகளில் “வேதி ஆவிப் படிவு” (Chemical Vapor Deposition (CVD)) மற்றும் “வெடிப்பு நானோவைரங்கள்” (detonation nanodiamonds) என அறியப்படுவதை உருவாக்கும் வெடிபொருள் உருவாக்கம் ஆகியவை அடங்கும்.


6. செயற்கை வைரங்களை உற்பத்தி செய்வதற்கு வேதி ஆவிப் படிவு  முறைக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அழுத்தமே தேவைப்படுகிறது. இந்தச் செயல்முறையில், வைரத்தின் மிகச்சிறிய படிகங்கள் ஒரு படலத்தின்மீது படியவைக்கப்படுகின்றன. இந்தப் படலத்தைச் சிக்கலான வடிவங்களில் உருவாக்கி, இயந்திரப் பாகம், நுண் சுற்றுகளில் உள்ள வெப்பக் கடத்திகள், குறுகிய அலை புற ஊதா, நுண்ணலை மூலங்கள் மற்றும் கதிர்வீச்சுக் கண்டறிவான்கள் போன்ற விரும்பிய இடங்களிலோ அல்லது கருவிகளிலோ பயன்படுத்தலாம்.


7. பூமியில் உள்ள இயற்கை வைரங்களின் இருப்பு குறைந்து வருவதால், நகைத்தொழிலில் மதிப்புமிக்க அந்த இரத்தினக்கல்லுக்குப் பதிலாக ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள்கள் (Lab-grown diamonds (LGDs)) மெதுவாக இயற்கை வைரங்களின் இடம்பிடித்து வருகின்றன. முக்கியமாக, இயற்கை வைரங்களைப் போலவே, வைரங்களுக்கு அவற்றின் தனித்துவமான பளபளப்பை வழங்குவதற்குத் தேவையான மெருகூட்டுதல் மற்றும் வெட்டுதல் போன்ற செயல்முறைகளுக்கு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்களும் உட்படுகின்றன.


Original Link: What are ‘blood diamonds’ and why does the Kimberley Process matter?


Share: