வெங்காய ஏற்றுமதி தடை குறித்து . . .

 முறையான திட்டமிடல் இல்லாமல் கொள்கைகள் வகுக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விலை உயரும் போது, ​​விவசாயிகள் மேலும் நஷ்டம் அடைகின்றனர். குறிப்பாக பணவீக்கம் அவர்களை பாதிக்கும் போது விவசாயிகள் அரசியலில் பேசுவது முக்கியம்.


வெங்காய ஏற்றுமதிக்கு ஆறு மாத தடையை ஒன்றிய அரசு சமீபத்தில் நீக்கியது. இருப்பினும், அவர்கள் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (minimum export price) விதித்தனர். இந்த முடிவு எடுக்கப்பட்ட நேரம் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் வெங்காயம் உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் தேர்தலுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது.  இது பொருளாதாரத்தை  மட்டும் குறிக்கவில்லை, அரசியல் நோக்கத்தையும் குறிக்கிறது.


வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை மட்டும் இதற்கு உதாரணம் அல்ல. இந்தியாவின் உணவுக் கூடையில் 39% உணவுப் பொருட்கள், பணவீக்கம் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் 4% இலக்கை எட்டாததற்கு முக்கிய காரணமாகும். இந்தியாவின் உணவுப் பணவீக்கம் பெரும்பாலும் காலநிலை தொடர்பான விநியோகப் பிரச்சினைகளால் ஏற்படுகிறது. எனவே, ஏற்றுமதியை தடை செய்வதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை உள்நாட்டு சந்தைகளில் இருந்து ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியை மாற்றுகிறது.


உணவு சந்தைகளில் இந்த அணுகுமுறை புத்திசாலித்தனமா? சுதந்திர சந்தைகளை ஆதரிக்கும் விமர்சகர்கள் பெரும்பாலும் இது சுதந்திர வர்த்தகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று வாதிடுகின்றனர். இருப்பினும், உள்நாட்டு பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எந்த நடைமுறை அரசாங்கமும் அனுமதிக்காது. பெரும்பாலான இந்தியர்கள் தாங்கள் விற்பதை விட அதிக உணவை வாங்குகிறார்கள். ஆனாலும், விவசாயிகள் பெரும்பாலும் சந்தை உச்சகட்டத்தில் இருக்கும்போது பாதிக்கப்படுகின்றனர். விலைகள் வீழ்ச்சியடையும் போது, அரசாங்கம் அவர்களுக்கு உதவவில்லை. விலைவாசி உயரும் போது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்கின்றன. அதிகரித்து வரும் காலநிலை நெருக்கடி இந்த தீவிர நிலைமைகளை விவசாயிகளுக்கு பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு நிலைமை சரியில்லை என்பது தெளிவாகிறது.


இந்த கொள்கை சார்பை அகற்ற என்ன செய்ய முடியும்? பல்வேறு பகுதிகள் மற்றும் பயிர்களைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட அனைவரும் சீர்திருத்தங்களை ஒப்புக்கொண்டு, அரசாங்கத்திடம் நியாயமான கோரிக்கைகளை கேட்க வேண்டும். இது ஏன் நடக்கவில்லை என்பதை விவசாயிகள் குழுக்களும் எதிர்க்கட்சிகளும் சிந்திக்க வேண்டும். அவர்கள் மாறத் தயாரா? அவர்கள் அரசாங்கத்திடம் சரியான விஷயங்களைக் கேட்கிறார்களா? விவசாயிகளுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை ஏற்க அரசியல் கட்சிகளும் அரசுகளும் தயாரா? இவை விவசாயிகள்  கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்.



Original article:

Share:

சீனா தனது Chang'e-6 விண்வெளித் திட்டத்திற்கு நிலவின் தொலைதூரப் பக்கத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? -அலிந்த் சௌஹான்

 சந்திரனின் தொலைதூரப் பக்கம் இருண்ட பக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், பூமியிலிருந்து அதை நம்மால் பார்க்க முடியாது என்பதால் மட்டுமே தவிர, சூரிய ஒளி கிடைக்காததால் அல்ல.


மே 3, வெள்ளிக்கிழமை அன்று, சந்திரனின் தொலைதூரப் பக்கத்திற்கு சீனா தனது இரண்டாவது விண்வெளி பயணத்தை செலுத்தியது. இந்தப் பணி, வெற்றிகரமாக இருந்தால், பூமியிலிருந்து நாம் பார்க்க முடியாத சந்திரனின் பக்கத்திலிருந்து மாதிரிகளை கொண்டு வரும் முதல் பணி இதுவாகும்.


இந்த விண்கலத்திற்கு சாங்'இ -6 (Chang'e-6) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Wenchang Space Launch Center) ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஏவப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலமானது அதன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றது. பின்னர், பிரிந்து சென்ற விண்கலம்  சந்திரனுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த பயணம் நிறைவடைய ஐந்து நாட்கள் ஆகும். சந்திரனின் தொலைதூர பக்கத்தை ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. இது சாங்'இ -6 பணி பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.


சந்திரனின் தொலைதூர பக்கத்தை ஏன் ஆராய வேண்டும்?


சந்திரனின் தொலைதூரப் பக்கம் பெரும்பாலும் இருண்ட பக்கம் (dark side) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அது பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது சந்திரனின் தெரியாத பின் பக்கமாக இருப்பதால் மட்டுமே தவிர, சூரிய ஒளி இல்லாததால் அல்ல. சந்திரன் எப்போதும் பூமிக்கு ஒரே பக்கத்தைக் காட்டுகிறது, ஏனெனில் அது ஒரே நிலையில் உள்ளது. அதனால்தான் நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். இது அருகிலுள்ள பக்கம் (near side) என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், மக்கள் தொலைதூரப் பக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், ஏனெனில் இது அருகிலுள்ள பக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இது ஒரு தடிமனான மேலோடு (thicker crust), அதிக பள்ளங்கள் மற்றும் குறைவான மரியாக்களைக் (craters and fewer maria) கொண்டுள்ளது. மரியா (maria) என்பது பண்டைய எரிமலை குழம்புகளால் உருவான படுகைகள், பள்ளங்கள், முகடுகள் ஆகும்.


தொலைதூர பக்கத்திலிருந்து மாதிரிகளைப் ஆய்வுசெய்வது  விஞ்ஞானிகளுக்கு சந்திரனின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிய உதவும். இப்போது வரை, ஆராய்ச்சியாளர்களால் அருகிலுள்ள பக்கத்திலிருந்த மாதிரிகளை மட்டுமே அணுக முடிந்தது. தொலைதூர பக்கத்தின் மாதிரிகள் அருகிலுள்ள பக்கத்திலிருந்து ஏன் மிகவும் வேறுபட்டது என்பதையும் இந்த ஆய்வுகள் மூலம் விளக்கக்கூடும்.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தின் (Johns Hopkins University’s Applied Physics Lab) கிரக புவியியலாளர் பிரட் டெனேவி, இந்த மாதிரிகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை சி.என்.என் க்கு வலியுறுத்தினார். அவற்றைக் கொணர்வது மற்றும் பல்வேறு புவி இயற்பியல் அளவீடுகளை நடத்துவது இந்த நீடித்த மர்மத்தை தீர்க்க முக்கியமானது என்று அவர் கூறினார்.


Chang'e-6 திட்டம் என்ன செய்யும்?


சாங்'இ -6 (Chang'e-6) விண்கலம் 53 நாட்கள் பயணமாகும். இது நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, சந்திரனின் சுற்றுப்பாதையைச் சுற்றி வரும். இதற்கிடையில், லேண்டர் (lander) சுமார் 2,500 கிலோமீட்டர் அகலமுள்ள சந்திர மேற்பரப்பில் உள்ள தென் துருவ-ஐட்கென் படுகையில் (South Pole-Aitken basin) தரையிறங்கும்.


இது சூரிய குடும்பத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தால் உருவான படுகையாகும். இந்த படுகையை உருவாக்கிய தாக்கம் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து தோண்டப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பொருள் சேகரிக்கப்பட்டால், அது சந்திரனின் உள் வரலாறு குறித்த முடிவுகளை  வழங்கக்கூடும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


முதலில், லேண்டர் மூலமாக, ஸ்கூப்பிங் (scooping) மற்றும் துளையிட்டு (drilling) மாதிரிகளை சேகரிக்கிறது. பின்னர், அது ஒரு ஏறும் வாகனத்தைப் பயன்படுத்தி அந்த மாதிரிகளை ஆர்பிட்டருக்கு அனுப்புகிறது. இறுதியாக, ஆர்பிட்டரின் சேவை தொகுதி மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருகிறது.


2019 ஆம் ஆண்டில் சாங்'இ -6 (Chang'e-6) திட்டம் மூலம் சீனா வரலாறு படைத்தது. சந்திரனின் தொலைதூர பக்கத்தில் தரையிறக்கத்தை அடைந்த முதல் சாதனை இதுவாகும். இந்த பணியின் போது, ஒரு ரோவர் சந்திரனின் வான் கர்மன் பள்ளத்தை (Von Karman crater) ஆராய்ந்தது.



Original article:

Share:

செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) என்றால் என்ன, மக்கள் அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள்? -பிஜின் ஜோஸ்

 மனிதர்களைப் போலவே சிந்திக்கும், கற்றுக்கொள்ளும் இயந்திரங்கள். மனிதர்களின் இருப்புக்கு வரமா அல்லது அச்சுறுத்தலா?


OpenAI இன் தலைவரான சாம் ஆல்ட்மேன் சமீபத்தில்,  செயற்கை நுண்ணறிவின்  (artificial intelligence (AI))  இறுதி வடிவம் போன்ற செயற்கை பொது நுண்ணறிவில் (Artificial General Intelligence (AGI)) பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் தனது நோக்கத்தைக் கூறினார். AGI AI வளர்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. ஆல்ட்மேனின் உற்சாகம் இருந்தபோதிலும், உலகளாவிய தொழில்நுட்ப சமூகத்தில் பலர் மிகவும் கவலைப்படுகிறார்கள். ஏன்?.


செயற்கை பொது நுண்ணறிவு  (Artificial General Intelligence (AGI)) என்றால் என்ன?


AGI என்பது செயற்கை பொது நுண்ணறிவைக் குறிக்கிறது. இது ஒரு மனிதனால் செய்யக்கூடிய எந்தவொரு அறிவார்ந்த பணியையும் செய்யக்கூடிய ஒரு வகை இயந்திரம் அல்லது மென்பொருள். பகுத்தறிவு, பொது அறிவைப் புரிந்துகொள்வது, சுருக்க சிந்தனை, பின்னணி அறிவைப் பயன்படுத்துதல், வெவ்வேறு சூழ்நிலைகளிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் காரணத்தையும் புதிய விஷயங்களையும் கண்டுபிடிக்கவும் உதவுகிறது. 


எளிமையான சொற்களில், AGI மனித அறிவாற்றல் திறன்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அது புதிய பணிகளைக் கையாளவும், புதிய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் அதன் அறிவை புதுமையான வழிகளில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மனிதர்கள் பல்வேறு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவை பள்ளியில், வீட்டில் அல்லது வேறு எங்கும் இருக்கலாம். மக்களுடன் பேசுவதன் மூலமும், விஷயங்களை கவனிப்பதன் மூலமும், புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலமும், கட்டுரைகளைப் படிப்பதன் மூலமும் நாம் கற்றுக்கொள்கிறோம். மனித மூளை இந்த அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொண்டு முடிவுகளை எடுக்கிறது. இந்த முடிவுகள் பிரச்சினைகளைத் தீர்க்க அல்லது புதியவற்றை உருவாக்க  உதவுகிறது. 


மனித மூளையைப் போலவே இந்த விஷயங்களையும் செய்யக்கூடிய AGI ஐ உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஒரு சூப்பர் நுண்ணறிவு ரோபோவை நண்பராகக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த ரோபோ சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளும், மனிதர்களைப் போலவே புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும், தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கும்.


நாம் ஏற்கனவே பயன்படுத்தும் AI இலிருந்து AGI எவ்வாறு வேறுபடுகிறது?


AGI மற்றும் AI ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு:


குறுகிய  செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) குறிப்பிட்ட பணிகளைச் செய்ய உருவாக்கப்பட்டது. இந்தப் பணிகளில் படத்தை அறிதல், மொழியாக்கம் செய்தல் மற்றும் சதுரங்கம் போன்ற  விளையாட்டுகளும் அடங்கும். இந்த பகுதிகளில் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட முடியும். இருப்பினும், இது வடிவமைக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


AGI, மறுபுறம், பரந்த அளவிலான திறன்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மிகவும் பொதுவான நுண்ணறிவு வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இதன் பொருள் இது மனித நுண்ணறிவைப் போலவே குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. 


அனைத்து AI முன்னேற்றங்களிலும் AGI முதலிடத்தில் உள்ளது. AI வளர்ச்சி எப்போதும் அதன் திறன்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ChatGPT ஒரு மனிதன் எழுதியதைப் போல ஒலிக்கும் உரையை உருவாக்க முடியும். இந்த நிகழ்வு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.


ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, AI மாதிரிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில்  கோடி கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. AGI-ஐ உருவாக்குவது இந்தப்  பயணத்தில் இறுதி இலக்கைக் குறிக்கிறது.


இது என்ன புது சிந்தனையை ?


செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) பற்றிய கருத்து முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று பெரும்பாலும் கருதப்படும் ஆலன் டூரிங் (Alan Turing) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.


1950 ஆம் ஆண்டில், டூரிங் 'கம்ப்யூட்டிங் மெஷினரி அண்ட் இன்டெலிஜென்ஸ்' (‘Computing Machinery and Intelligence’ (1950)) என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை எழுதினார். இந்த ஆய்வறிக்கையில், அவர் இப்போது டூரிங் சோதனை (Turing test) என்று அழைக்கப்படுவதை அறிமுகப்படுத்தினார். இந்த சோதனை இயந்திர நுண்ணறிவுக்கான அளவுகோலாக செயல்படுகிறது. டூரிங் சோதனையின் படி, ஒரு இயந்திரம் ஒரு இயந்திரமாக அடையாளம் காணப்படாமல் ஒரு மனிதனுடன் உரையாட முடிந்தால், அது மனித நுண்ணறிவை சாத்தியமாக்கியுள்ளது.


டூரிங் இந்த முக்கியமான கட்டுரையை எழுதியபோது, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி உணரப்படுவதற்கு அருகில் கூட இல்லை. கணினிகள் அப்போதுதான் தோன்றத் தொடங்கியிருந்தன. ஆயினும்கூட, டூரிங்கின் கருத்துக்கள் பரவலான விவாதங்களைத் தூண்டின. இந்த விவாதங்கள் அத்தகைய இயந்திரங்களின் சாத்தியமான உருவாக்கம் மற்றும் அவற்றின் சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்களை உள்ளடக்கியது.



AGI மனிதகுலத்திற்கு எவ்வாறு உதவ முடியும்?


AGI பல நேர்மறையான சாத்தியங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, சுகாதாரப் பராமரிப்பில், நோய்களைக் கண்டறிவது, சிகிச்சையைத் திட்டமிடுவது மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகளை எவ்வாறு வழங்குவது என்பதில் இது புரட்சியை ஏற்படுத்தும். மனித திறன்களுக்கு அப்பாற்பட்ட பெரிய தரவுத்தொகுப்புகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதைச் செய்யும்.


நிதி மற்றும் வணிகத் துறைகளில், AGI செயல்முறைகளை தானியக்கமாக்கலாம் மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்தலாம். இது நிகழ்நேர பகுப்பாய்வுகளை வழங்கலாம் மற்றும் துல்லியமான சந்தை கணிப்புகளை செய்யலாம்.


கல்வியில், AGI ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய தகவமைப்பு கற்றல் முறைகளை மாற்ற முடியும். இது தனிப்பயனாக்கப்பட்ட கல்வியை உலகளவில் அணுகக்கூடியதாக மாற்றும்.


OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஒரு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேர்காணலில் AGI பற்றி விவாதித்தார். AGI உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார மதிப்பை பெரிதும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இது உருமாறும் என்று அவர் நம்புகிறார். நம்பமுடியாத சிக்கல் தீர்க்கும் திறன்களையும் படைப்பாற்றலையும் வழங்குகிறது.


செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) பற்றிய சந்தேகத்தை எது இயக்குகிறது?


செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) பல  நன்மைகளை அளித்தாலும்,  சில காரணங்களுக்காக கவலைகளையும் எழுப்புகிறது. ஒரு முக்கிய பிரச்சினை AGI அமைப்புகளை உருவாக்க தேவையான பரந்த அளவிலான கணக்கீட்டு சக்தி (computational power). அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் மின்னணு கழிவுகளை உருவாக்குவதால் இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்.


AGI குறிப்பிடத்தக்க வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும். அதிகாரம் AGI-ஐ கட்டுப்படுத்துபவர்களின் கைகளில் குவிக்கப்படலாம். மேலும், AGI இன்னும் கருத்தில் கொள்ளாத புதிய வகையான பாதுகாப்பு அபாயங்களை அறிமுகப்படுத்தக்கூடும். அதன் வளர்ச்சி அதை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கான அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் திறனை விஞ்சக்கூடும். மனிதர்கள் AGI-ஐ அதிகம் சார்ந்து இருந்தால், அடிப்படை திறன்களையும் இழக்க நேரிடும்.


ஒரு பெரிய பயம் என்னவென்றால், AGI மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும். அதன் செயல்களை கணிக்க முடியாததாகவும், கட்டுப்படுத்துவது கடினமாகவும் இருக்கும். பல அறிவியல் புனைகதை படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, AGI மனித நலன்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகளுக்கு இது வழிவகுக்கும்.


முழுமையான செயற்கை நுண்ணறிவை உருவாக்கினால், அது மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று 2014 ஆம் ஆண்டில், ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) பிபிசியிடம், கூறினார்.


AI இன் வழிகாட்டி என்று அழைக்கப்படும் Yoshua Bengio, Geoffrey Hinton மற்றும் Yann LeCun ஆகியோரும் AGI வளர்ச்சியின் ஆபத்துகளை எச்சரித்துள்ளனர். ஹிண்டன் AGI இன் அபாயங்களை அணு ஆயுதங்களுடன் ஒப்பிட்டார்.


இந்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, பல வல்லுநர்கள் இன்று AGI வளர்ச்சி மனித மதிப்புகள் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




Original article:

Share:

'பத்திரிகை சுதந்திரம் என்பது எந்தவொரு நாடும் விட்டுக் கொடுக்க முடியாத விலைமதிப்பற்ற உரிமை' எனும் காந்தியின் கூற்று பொருள் நிறைந்தது. -ரிஷிகா சிங்

 மக்கள் ஒன்றுபட்டால் பெரிய சமூக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை காந்தி புரிந்து கொண்டார். பத்திரிக்கை சுதந்திரம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை பாதுகாப்பது முக்கியம்


மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day). இது பத்திரிகையின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டாடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை டிசம்பர் 1993 இல் அறிவித்தது. இது  வின்ட்ஹோக் பிரகடன தினத்தை (Declaration of Windhoek) முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.


வின்ட்ஹோக்கின் பிரகடனம் 1992 இல் நமீபியாவில் கையெழுத்திடப்பட்டது. இது யுனெஸ்கோ கருத்தரங்கின் போது "சுதந்திரமான மற்றும் பன்மைவாத ஆப்பிரிக்க பத்திரிகையின் ஊக்குவிப்பு" (Promotion of an Independent and Pluralistic African Press) என்ற தலைப்பில் நடந்தது. இந்த பிரகடனம் பத்திரிகையாளர்களின் குறிப்பிடத்தக்க பொறுப்புகள், ஏகபோகமற்ற ஊடகத்துறையின் முக்கியத்துவம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தியது.

ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) சமீபத்தில் பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசினார். பத்திரிகை சுதந்திரம் என்ற உரிமையை எந்த நாடும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி கூறியதை அவர் மேற்கோள் காட்டினார். உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் பெரும்பாலும் காந்தியை ஒரு அரசியல்வாதியாக அல்லது வெகுஜனத் தலைவராக விவாதிக்கிறார்கள். இருப்பினும், அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால், அவர் தன்னை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்தார். காந்தி பல பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களுக்கு எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். காந்தி ஏன் இந்த மேற்கோளைச் சொன்னார், இன்று அது ஏன் முக்கியமானது? என்று பார்க்கலாம்.


பத்திரிகையாளர் காந்தி 


குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கான கூட்டு செயல்பாட்டின் சக்தியை காந்தி அங்கீகரித்தார். தென்னாப்பிரிக்காவில் தனது ஆரம்ப நாட்களிலிருந்து, இந்திய சமூகத்தை அணிதிரட்ட அவர் பணியாற்றினார்.


காந்தி தனது 33 வயதில் இந்தியன் ஒப்பீனியன் என்ற செய்தித்தாளைத் தொடங்கினார். செய்தித்தாளுக்கு பல இலக்குகள் இருந்தன என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா சுட்டிக்காட்டுகிறார். இது வெள்ளை மக்களுக்கு பிறரின் தேவைகள் மற்றும் செயல்திட்டங்களை உணர்த்துதல். புலம்பெயர் மக்களை ஒன்றிணைத்தல். கூடுதலாக, இந்தியர்களுக்கு தங்கள் சொந்த பலவீனங்களை உணர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும்.


இந்த உதாரணம் பத்திரிகையின் சில காலமாற்ற கொள்கைகளை விளக்குகிறது. மக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளவும் பத்திரிகை ஒரு சிறந்த வழியாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் எண்ணங்கள், செயல்திட்டங்கள் மற்றும் இலக்குகளைக் கைப்பற்றும் ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இது செயல்படுகிறது.

மக்கள் தங்களுக்கு பொதுவானது மற்றும் கூட்டாக எதிர்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் பத்திரிகை உதவுகிறது. இது பல்வேறு விஷயங்களில் புதிய கண்ணோட்டத்தை வழங்க முடியும். அடிப்படையில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரைப் பற்றியும் அறிக்கையிடுவதன் மூலம் பத்திரிகை பல்வேறு சமூகக் குழுக்களை இணைக்க முடியும்.


பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை காந்தி உணர்ந்தார். இந்த கருத்து அரசியல் அடக்குமுறை மற்றும் பெருநிறுவன நலன்களிலிருந்து பாதுகாப்பை உள்ளடக்கியது.


1912ஆம் ஆண்டு இந்தியன் ஒப்பீனியனின் பதிப்பில், காந்தி விளம்பரம் பற்றிய தனது பார்வையில் மாற்றத்தை வெளிப்படுத்தினார். விளம்பரங்கள் நன்மை பயக்கும் என்று முதலில் நினைத்ததாக அவர் எழுதினார். இருப்பினும், சிந்தனையில், அவர் அவற்றை விரும்பத்தகாததாகக் கண்டார். போட்டியாளர்களை விஞ்சும் நோக்கில், விரைவில் பணக்காரர் ஆவதற்கு ஆர்வமுள்ளவர்களால் விளம்பரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் நம்பினார்.


காந்தியின் காலத்தில், பெரிய அளவிலான மக்களுடன் தொடர்புகொள்வதற்கு மிகக் குறைவான வழிகளே இருந்தன. இந்த வரம்புகள் இருந்தபோதிலும், காந்தி இந்தியாவில் பல செய்தித்தாள்களைத் தொடங்கினார். இதில் யங் இந்தியா (Young India) , நவஜீவன் (Navajivan) மற்றும் ஹரிஜன் (Harijan) ஆகியவை அடங்கும்.


மேற்கோளுக்கு என்ன பொருள் 


பத்திரிகை சுதந்திரம் சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும், ஆதிக்கம் செலுத்தும் சமூகக் குழுக்கள் ஊடக எழுத்தைக் கட்டுப்படுத்துகின்றன, தங்கள் சொந்த நலன்களையும் யோசனைகளையும் ஊக்குவிக்கின்றன.


ஒரு பத்திரிகையாளராக காந்தியின் பணியில் குறைபாடுகள் இருந்தன. சில மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் இந்தியன் ஒப்பீனியனை அதற்கு நிதியளித்த வணிகர்களின் வர்க்க நலன்களுக்கு சார்பானதாகக் கண்டனர் என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார். இது வணிகர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளான வரிவிதிப்பு மற்றும் வர்த்தகம் போன்ற பிரச்சினைகளை இந்த பத்திரிகை அடிக்கடி பேசியது.


ஆயினும்கூட, பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடுகள் இல்லாதது அதன் விமர்சனத்தை அனுமதிக்கும் மற்றும் பாடத் திருத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே, குறைபாடுகள் இருந்தாலும், சுதந்திரமான பத்திரிகை முக்கியமானது.


இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக இந்தியன் ஒப்பீனியன் வாதிட்டதையும் குஹா குறிப்பிடுகிறார். சில சமயங்களில் ஆப்பிரிக்கர்களின் நலன்களையும் ஆதரித்தது. ஐரோப்பிய விவசாயிகள் ஆப்பிரிக்க விவசாயிகளை வெளியேற்றியது குறித்தும், நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்தும் விவாதித்தது.


பத்திரிகை சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது, அரசாங்கம், அரசியல்வாதிகள் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்களையும், ஆணாதிக்கம், சாதிவெறி மற்றும் காலனித்துவம் போன்ற சித்தாந்தங்களை விமர்சிக்கும் வழிகளை கட்டுப்படுத்துகிறது. இந்த பத்திரிகை சுதந்திரம் இல்லாமல், மக்கள் தங்கள் கருத்துக்களை வழங்க வழி இல்லை. ஒரு நாட்டின் பிரச்சினைகளை புறக்கணிப்பது நாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.


எனவே, பத்திரிகை சுதந்திரம் என்பது எளிதில் வழங்கப்படாத ஒரு சலுகை, ஆனால் அது இல்லாதது ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.




Original article:

Share:

ஏன் நல்ல வானிலைச் சூழலில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்? - ராம்நாத் கோவிந்த்

 காலநிலை மாற்றம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இதற்கு நாம் கவனமாகச் சிந்தித்து அதைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த பிரச்சினையை சமாளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


தற்போது, இந்தியா அதன் பொதுத் தேர்தல்களை நடத்துகிறது. இது பல காரணங்களுக்காக ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள நிலையில், இந்த தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை மட்டும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு இந்த தேர்தலை ஆதரிக்கிறது. பல நாடுகளில் தற்போது தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் உலகளாவிய நிகழ்வுகளை வித்தியாசமாக பாதிக்கும். ஆனால், இந்தியத் தேர்தல்தான் ஜனநாயகத்தை கணிசமாக மேம்படுத்தும்.


காலத்தின் தேவையின் அடிப்படையில், வெளிப்படையாக, தேர்தல்களை முடிந்தவரை தகுதியுடைய அனைத்து மக்களையும் பங்கேற்பதாக மாற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் பற்றிய விழிப்புணர்வானது, வாக்காளர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கும், தொலைதூர இடங்களில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ததற்கும் பாராட்டப்பட வேண்டும். இதில், சிவில் சமூக அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் வாக்களிக்கும் உரிமை பற்றியும் மற்றும் கடமை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்களை உருவாக்கியுள்ளன.


முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் காட்டியுள்ளனர். இந்த பங்கேற்பு மிகுந்த திருப்திகரமானதாக உள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கும்போது வெப்பமான வானிலையை பார்வையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒரு பெரிய சவாலாகக்  குறிப்பிடுகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்தனர். குளிர்ந்த காலநிலையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஜனநாயக செயல்பாட்டில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்றிருப்பார்கள்.


இப்போது வானிலையானது ஒரு பெரிய விஷயமாக உள்ளது. 17வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் ஜூன் 16ம் தேதிக்கு முன்னதாகவே தேர்தல்கள் திட்டமிடப்பட வேண்டும். இதில், தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பு சில வாரங்களுக்குள் நடக்க வேண்டும். எனவே, தேர்தல் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தேர்தலானது நீண்டுள்ளது. இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் வெப்பமான பகுதியாக இருக்கும். தேர்தல் ஆணையம் தேர்தலை திட்டமிடும் போது வானிலையை கருத்தில் கொள்கிறது. ஆனால், அது ஜூன் 16 வரையிலான காலக்கெடுவைப் பின்பற்ற வேண்டும்.


ஏப்ரல் மாதத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department (IMD)) பல மாவட்டங்களில் வெப்ப அலைகள் பற்றி எச்சரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது விரைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  (National Disaster Management Authority (NDMA)) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health & Family Welfare (MoHFW)) அதிகாரிகளுடன் ஒரு பணிக்குழுவை உருவாக்கினர். ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதத்தின் விளைவுகளைச் சரிபார்ப்பதுதான் இந்த பணிக்குழுவின் முக்கிய பணியாக உள்ளது. அவர்கள் பிரச்சினைகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளை ஆலோசித்து திட்டமிடுகிறார்கள். வாக்குப்பதிவின் போது வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்துகிறது. வாக்குச்சாவடிகளில் நிழற்குடை, குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளிதுள்ளன. ஆனால், அவை தேர்தலின் ஒரு பகுதியை மட்டுமே கையாள்கின்றன. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வெப்பத்தையும் தூசியையும் தாங்கிக் கொண்டு வெளியில் பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுக்கூட்டங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மயங்கி விழுவதைப் பற்றி கேள்விப்பட்டது திடுக்கிடும் செய்தியானாலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த வெளிப்படையான ‘வாக்காளர் ஆர்வமின்மை’ பிரச்சாரத்தின் போது தொடங்கலாம். வாக்குச் சாவடி அமைப்புகள் பாராட்டுக்குரியவை என்றாலும், கிராமப்புற வாக்காளர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் பயணிக்கத் தயக்கம் காட்டலாம்.


இந்தியாவில் கோடைக்காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை காணப்படுகிறது. சில இடங்களில், இது 45 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும். மே மற்றும் ஜூன் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் போது இந்த தீவிர வானிலையானது பொதுவானதாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் புவி வெப்பமடைதல் காரணமாக, இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் இன்னும் மோசமடையக்கூடும்.


எனவே, வாக்காளர்கள், பிரச்சாரகர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு, தேர்தல் நேரம் குறித்து விவாதிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.


வானிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்கான அட்டவணையை பரிந்துரைக்க வேண்டிய நேரம் இது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நான் (இராம்நாத் கோவிந்த்) தலைமை வகிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட பணிகளில் இந்தத் தலைப்பு ஒரு பகுதியாக இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேர்தல் கால அட்டவணையைப் பற்றி என்னிடம் ஒரு ஆலோசனை உள்ளது, ஆனால் அது கமிட்டி பரிந்துரைத்ததில் இருந்து வேறுபட்டது. நான் எனக்காகவே பேசுகிறேன், கமிட்டியின் ஒரு பகுதியாக அல்ல. காலநிலை மாற்றம் என்பது அனைவரின் கவனம் தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சினை என்று நான் நம்புகிறேன். அதைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், குறிப்பாக ஜனநாயகத்திற்காக. வானிலை நன்றாக இருக்கும் போது அதிக மக்கள் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும், இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கு உதவும்.


கட்டுரையாளர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.




Original article:

Share:

இந்தியாவின் முதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குப் பெட்டியை எவ்வாறு பெற்றனர்? -சக்ஷு ராய்

 தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிக்கான வடிவம் மற்றும் சிறப்பம்சங்களை நிர்ணயித்தது. ஆனால் அவை சுமுகமாக செல்லவில்லை.


மக்களவை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது, இது மிகவும் முக்கியமானது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த கட்டம் முடிந்ததும், 543 மக்களவை தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குபதிவு நிறைவடைந்திருக்கும். அடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், மே 13 ஆம் தேதி அனைத்து தொதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.


அனைத்து இந்தியர்களுக்கும் வாக்குரிமை எப்படி கிடைத்தது


நம் நாட்டில் தேர்தல் என்பது சிக்கலான வரலாற்றைக் கொண்டது. அவற்றில் ஒன்றுதான் வயது வந்தோரின் வாக்குரிமை பற்றிய பேச்சு. காலனித்துவ ஆட்சியின் போது, ​​பலருக்கு படிக்கத் தெரியாது, அரசியல் குழுக்கள் இல்லை என்றும், அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் என்றும், அனைவரும் வாக்களிக்க அனுமதிப்பது வேலை செய்யாது என்றும் நிர்வாகிகள் கருதினர். நாம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் இதைப் பற்றி அதிகம் பேசினர். மக்களுக்கு படிப்பறிவு இல்லாத காரனத்தினால், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது நியாயமாக இருக்காது என்று நினைத்தனர். இறுதியில், வயது வந்த அனைவரும் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் என்று முடிவு செய்தனர்.


விவாதங்களின் போது, ​​அரசியல் நிர்ணய சபை செயலகம் 1947ல் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கியது. ஆர்னிட் ஷானி (Ornit Shani), தனது "இந்தியா எப்படி ஜனநாயகமானது" (How India Became Democratic) என்ற புத்தகத்தில், செயலகம் எடுத்த கவனமான நடவடிக்கைகளை விளக்குகிறார். அவர் கூறுகிறார், “பிரிவினையின் கொடூரமான சோகத்தின் பின்னணியில் உலகளாவிய உரிமையின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை உருவாக்கி, இறுதியில் வளமான அரசியல் கற்பனை தேவைப்படும் அரசியலமைப்பை எதிர்பார்த்து இந்திய மக்கள்தொகையில் 49% பேர் சேர்க்கப்பட்டது, அவர்களில் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள்.”


1950-ல் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான சட்டங்களை இயற்றியது. மேலும் பல காரணிகள் முதல் தேர்தலை தாமதப்படுத்தியது. தேவையான சட்டங்களை இயற்றுதல், மாநிலங்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்துதல், பீகாரில் வெள்ளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவை இதில் அடங்கும். அந்த ஆண்டு நவம்பரில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நவம்பர்-டிசம்பர் 1951 இல் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறினார்.


இந்த காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு செயல்முறை விவரங்களை இறுதி செய்து கொண்டிருந்தது. 1932 ஆம் ஆண்டின் இந்திய வாக்குரிமைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது, அக்குழு வயது வந்தோர் வாக்குரிமையை ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்த இந்த குழு பரிந்துரைத்தது. ஒவ்வொரு பெட்டியும் ஒரு தனித்துவமான நிறம் அல்லது சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வண்ணங்கள் / சின்னங்களை வேட்பாளர்களுக்கு எவ்வாறு ஒதுக்குவது மற்றும் வாக்குச் சாவடிகளின் வடிவமைப்பு மற்றும் இடம் குறித்த வழிகாட்டுதல்களையும் அது வழங்கியது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி எழுத்தரும் 1,000 வாக்காளர்களைக் கையாளலாம், ஆனால் அதற்கு மேல் முடியாது என்று விதி கூறுகிறது.


தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது. வாக்குப்பெட்டி ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் அளவிலும் இருக்க வேண்டும் என்று கூறுயது. பெட்டியின் மேற்புறத்தில் உள்ள ஸ்லாட் ஒரு ரூபாய் நோட்டின் அளவிலான வாக்குச் சீட்டை பொருத்தும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. பெட்டிகள் 20 கேஜ் எஃகு மூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆனையம் கட்டளையிட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான முதல் பொதுத் தேர்தலுக்கு சுமார் 19 லட்சம் எஃகு வாக்குப் பெட்டிகள் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிட்டு இருந்தது. இந்த பெட்டிகளை தயாரிக்க 6,000 டன் எஃகு தேவைப்பட்டது. ஒப்பிடுகையில், ஈபிள் கோபுரத்தை கட்டுவதற்க்கு 7,300 டன் இரும்பு தேவைப்படது.


நாடு முழுவதும் உள்ள பல உற்பத்தியாளர்களின் வடிவமைப்புகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ் (Godrej and Boyce) உற்பத்தி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் (Allwyn Metal Works) மற்றும் கல்கத்தாவைச் சேர்ந்த புங்கோ ஸ்டீல் பர்னிச்சர் (Bungo Steel Furniture) ஆகியவை இதில் அடங்கும். கோத்ரேஜ் வடிவமைத்த வாக்குப் பெட்டிகள் ஒரு தனித்துவமான பூட்டுதல் தொழில்நுட்ப முறையக் கொண்டிருந்தன. இந்த தொழில்நுட்பமானது ஒரு முத்திரையை உடைக்காமல் பெட்டிகளை சேதப்படுத்த முடியாது என்பதை உறுதி செய்தது. இதன் விளைவாக, கோத்ரெஜ் பெரும்பாலான வாக்குப் பெட்டிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றனர். பீகாரில், கோத்ரெஜ் தங்கள் பெட்டிகளுக்கும் தங்கள் போட்டியாளருக்கும் இடையிலான விலையில் உள்ள வித்தியாசத்தை மாநில அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்தது.


இருப்பினும், அனைத்து உற்பத்தியும் சீராக நடக்கவில்லை. ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் வாக்குச் சீட்டைச் செருகுவதற்கான பிளவின் அளவில் தவறு செய்து விட்டது. ஒரு ரூபாய் நோட்டின் அளவுள்ள வாக்குச் சீட்டைச் செருகுவதற்கு பதிலாக மடித்து வைக்கலாம் என்று அவர்கள் கருதினர். தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் இந்த வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது, மேலும் ஆயிரக்கணக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் தவறை உணர்ந்ததும், வாக்குச் சீட்டுகளை பெட்டியின் உள்ளே போடுவதற்க்காக பெட்டியின் துளையை பெரிதாக்க உத்தரவிட்டனர்.


பங்கோ ஸ்டீல் பர்னிச்சர் பல்வேறு மாநிலங்களுக்கு போதுமான வாக்குப் பெட்டிகளை தயாரிக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, மெட்ராஸ் மாகானம் மட்டுமே எஃகு மற்றும் மர வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்தியது. இதில் மரப்பெட்டிகள் சிறைக்கைதிகளால் செய்யப்பட்டவை.



வாக்குகளைப் பெறுதல்


வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்கும் வகையில் வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை கொண்டு குறியிடவும் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, ​​தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்துவதில் இருந்து அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பெட்டியைப் பயன்படுத்துவதற்கு மாறியது. வாக்குப்பெட்டிகளின் சேதமடையாத தன்மை பற்றிய கவலைகளையும் இது பகிரங்கமாக எடுத்துரைத்தது. இருப்பினும், தேர்தல்களில் பலத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், சில பிராந்தியங்களில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல் மற்றும் வாக்குச்சீட்டு திணிப்பு போன்ற சம்பவங்கள் வழக்கமாகிவிட்டன. தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை கைப்பற்றுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியது, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது.


பொதுத் தேர்தல்களில் பாரம்பரிய வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படாது. தேர்தல் ஆணையம் இப்போது குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது. வாக்குப்பெட்டி வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தாலும், அந்தக் காலத்தில் நிறுவப்பட்ட கொள்கைகள் இன்னும் நாட்டில் பொதுத் தேர்தல்களுக்கு வழிகாட்டுகின்றன.


எழுத்தாளர் ஒரு சட்டமன்றக் கண்ணோட்டத்தில் சிக்கல்களை பகுப்பாய்வு செய்கிறார் மற்றும் PRS சட்ட ஆராய்ச்சியில் பணியாற்றுகிறார்.




Original article:

Share:

மகாத்மாவைத் தேடி -ஜே.என்.சின்ஹா

 சம்பாரனின் பாரம்பரியத்தை ஆராய்வது மற்றும் காந்திய மதிப்புகளின் மறுமலர்ச்சிக்கான நம்பிக்கையை மீண்டும் கொண்டுவருவது.


வடக்கு பீகாரில் குளிர்காலத்தின் நடுப்பகுதியான சூழ்நிலையில், கல்வி சார்ந்த அர்ப்பணிப்பு காரணமாக நான் இங்கு சம்பாரனில் இருக்கிறேன். சம்பாரன்  பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இடமாக உள்ளது. இந்த இடம் வேத காலத்திலிருந்து நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, துறவிகள், தத்துவவாதிகள், மன்னர்கள் மற்றும் சமீபகாலமாக, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் என இந்த நிலம் பல முக்கிய நபர்களை ஈர்த்துள்ளது.


18 ஆம் நூற்றாண்டில், வணிகர்கள், பண்ணைக்காரர்கள் மற்றும் செல்வத்தை தேடுபவர்கள் (fortune seekers) போன்ற பல ஐரோப்பியர்கள் இங்கு வந்தனர். அவர்கள், இங்கு குடியேறி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தனர். ஆனால், சம்பாரன் பகுதியில் உள்ள மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆரம்பத்திலேயே கிளர்ந்தெழுந்தனர். 1917-ல் நடைபெற்ற காந்தியின் சத்தியாகிரகம் 1947 -ல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.


ஆம், எல்லாவற்றின் மையத்திலான மோதிஹாரியில் (Motihari) இருக்கிறேன். இந்த பகுதி இமயமலையின் அடிவாரத்தில் நீண்டுள்ளது. இது கந்தக் ஆறு (Gandak River) மற்றும் அதன் சிறிய ஆறுகளில் இருந்து தண்ணீரைப் பெறும் தட்டையான, வளமான நிலத்தின் ஒரு பெரிய நிலப்பகுதியாகும். கூடுதலாக, இது நிறைய தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டுள்ளது. இந்த நகரில் மோதி ஜீல் (Moti Jheel) என்ற மிகப்பெரிய ஏரி அமையப்பெற்றுள்ளது.


மோதிஹாரி நகரத்தின் அதிகாரத்துவ பகுதியானது ஒரு மாவட்டத்திற்கு பெரியதாக உள்ளது. இது பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும், காலனித்துவ காலத்திலிருந்து ஒரு அதிர்வை அளிக்கிறது. இங்கு, புதிதாக நிறுவப்பட்ட மகாத்மா காந்தி மத்தியப் பல்கலைக்கழகமானது (Mahatma Gandhi Central University) நமது காலத்தின் மிகச்சிறந்த சமாதான தூதுவர்களில் ஒருவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் இன்னும் கட்டப்பட்டு வருகிறது. அதனால், அதன் திட்டங்கள் அனைத்தும் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அதன் மையப்பகுதியானது நன்கு பராமரிக்கப்படுகிறது. 


அறிவியலும், சமூகமும் என்ற கருத்தரங்கில் காந்தியின் பார்வையைப் பற்றிப் பேசினேன். காலனித்துவம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான வரலாற்றின் மிகப்பெரிய போராட்டவாதிகளில் ஒருவரான காந்தி, மனிதகுலத்தின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றாதவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும், அவரது நெருங்கிய நண்பர்கள் இங்கு கௌரவிக்கப்படுவதில்லை. மேலும், ஐம்பது ஆண்டுகளாக இந்த பகுதியில் காந்தி தாக்கப்பட்ட வரலாற்றை பல்கலைக்கழகம் கற்பிக்கவில்லை, மேலும் அவர் முக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்த பல பாடங்களை உள்ளடக்கவில்லை. நான் குழம்பிவிட்டேன்!


பல்கலைக்கழகமானது இந்த கடுமையான முரண்பாட்டை நிவர்த்தி செய்து, மகாத்மா காந்தி எதிர்பார்த்த மனித குல முன்னேற்றத்திற்கான ஒரு மாற்று மாதிரியை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய மையமாக உருவாக முயற்சிக்கும் என்று நான் நம்புகிறேன்.


காந்தியின் காலம் தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது நம் உலகம் பிரச்சினைகள் நிறைந்துள்ளது. இதில், மோதிஹாரியில் வாழ்க்கை ஒரு விதிவிலக்காக உள்ளது. பொதுவாக, குழப்பமான போக்குவரத்து மற்றும் அழுக்கு மற்றும் கழிவுப் பொருள் குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. புகழ்பெற்ற மோதி ஜீல் (Moti Jheel), நகரத்தின் நடுவில் உள்ள ஒரு பெரிய ஏரியானது, ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்திருக்கலாம். ஆனால் அது பரிதாபகரமான நிலையில் உள்ளது. அடாவடித்தனமாக ஏரியை ஆக்கிரமிப்பு செய்வது நிலைமையை மோசமாக்குகிறது. மக்கள் அதை அலட்சியமாகப் பார்க்கிறார்கள். இது காந்திக்கு வருத்தத்தை அளித்திருக்கும்.


இந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கமும் சமூகமும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. நாம் மகாத்மா காந்தியிடமிருந்து கற்றுக்கொண்டு, இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க தன்னார்வ சேவை மற்றும் அகிம்சைவழி எதிர்ப்பு போன்ற எளிய தீர்வுகளைப் பயன்படுத்தலாமா?


எனது பயணத்தின் போது, உள்ளூரில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு சொற்பொழிவு வழங்குகிறேன். இது எளிமையானது ஆனால் ஊக்கமளிக்கக்கூடியது. குறிப்பாக, சத்தியாக்கிரக நாட்களில் காந்தி பயன்படுத்திய அதே மேசையிலிருந்து காந்தியைப் பற்றி பேசுவதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். பார்வையாளர்கள் சிறியவர்கள், ஆனால் ஆர்வமுள்ளவர்கள், ஊடகங்கள் சமூக அக்கறையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மையத்தில், வயதான தலைவரும், காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும் பள்ளி மாணவியும் காந்திய மதிப்புகளை பிரதிபலிக்கிறார்கள். காந்தியைப் போற்றும் கல்வியாளர்களையும் மற்றவர்களையும் நான் சந்திக்கிறேன். மேலும், அவர் அதிக சுதந்திரத்திற்கு வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.


மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் இந்தப் பணியைத் தொடரும் வகையில் உள்ளது. புவி கலாச்சார விஷயங்களில் பரிசோதனை செய்வதற்கும் புதுமைப்படுத்துவதற்கும் இது சரியான சூழலைக் கொண்டுள்ளது.




Original article:

Share:

பிரதமரின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது -துஷ்யந்த் தேவ்

 பிரதமர்  அனைவருக்கும் முன்மாதிரியாக இல்லா விட்டால், இந்திய ஜனநாயகம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும்.


நாட்டில் மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அரசியல் கட்சிகளின் அறிக்கைகளைப் பற்றி பேசுகிறார்கள். தங்கம், தாலி போன்ற மக்களின் சொத்துக்களைப் பறித்து சிறுபான்மை சமூகத்திற்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தலின் போது சொல்லப்படும் கதைகளை காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்தும் பிரதமரும், அவரது ஆலோசகர்களும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.





இரண்டு கட்சிகளின்  தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம்


'நியாய் பத்ரா' (‘Nyay Patra’) என்ற தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவர்கள் வெற்றி பெற்றால் அவற்றைப் பற்றி காங்கிரஸ் என்ன செய்ய விரும்புகிறது என்பது குறித்தும் அது பேசுகிறது. நியாயம், சிறுபான்மையினர், முதியவர்கள், ஊனமுற்றோர், LGBTQIA+ மக்கள், சுகாதாரம், இளைஞர்கள், கல்வி, விளையாட்டு, பெண்களுக்கு உதவுதல், விவசாயிகள், தொழிலாளர்கள், கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம், வரிகள் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாத்தல் போன்ற பல தலைப்புகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

 

'செல்வம்' (‘wealth’) பற்றிய பிரிவில், வணிகங்கள் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பொருளாதாரம் வேகமாக வளர்ந்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (gross domestic product (GDP)) இரட்டிப்பாக்க காங்கிரஸ் விரும்புகிறது. 'நலத்திட்டம்' (‘welfare’) பற்றிய பகுதியில், அனைவருக்கும் நன்மை செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. பணம் சம்பாதிப்பது அனைவருக்கும் உதவ வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், ஏழை மக்களுக்கு உதவுவது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். 


நவ சங்கல்ப் பொருளாதாரக் கொள்கை (Nav Sankalp Economic Policy) அனைவருக்கும் பொருளாதாரத்தை நியாயமானதாக மாற்றவும், அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவரவும் முயற்சிக்கும். 'நியாயம்' என்பதன் கீழ், "எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த பலர் இன்னும் பின்தங்கியுள்ளனர். அவர்கள் இந்திய மக்கள்தொகையில் 70% இருந்தாலும், அவர்களுக்கு சரியான வேலை  வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அனைத்து சாதிகளையும் கணக்கெடுக்கும், அவர்கள் எவ்வளவு வசதியானவர்கள் எனக் கணக்கிட்டு, பின்னர் அவர்கள் சிறப்பாக செயல்பட உதவ இந்த தகவலைப் பயன்படுத்துவோம். சிலரிடம் பணம் வாங்கி ராபின் ஹூட் போன்றவர்களுக்கு கொடுக்கும் திட்டம் காங்கிரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


இந்த அறிக்கை அரசியலமைப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை பிரதிபலிக்கிறது.  இந்திய இறையாண்மை (sovereign),  சமத்துவம் (socialist), மதச்சார்பற்ற (secular), ஜனநாயக (democratic), குடியரசாக (republic) இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. முகப்புரை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானம் (Preamble is the basic structure) என்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.


அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 39 (Article 39), ஆண், பெண் என அனைத்துக் குடிமக்களும் நலமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது. சமூக வளங்களின் கட்டுப்பாடு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதையும், பொருளாதாரம் செல்வந்தர்களுக்கு நியாயமற்ற முறையில் சாதகமாக இருக்கக்கூடாது என்பதையும் இது வலியுறுத்துகிறது.


 பிரிவு 38 (Article 38), மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது மற்றும் வருமானம், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிறது. 


பிரிவு 46 (Article 46) குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


பிஜேபி பொது  சிவில் சட்டத்தை விரும்புகிறது. இது பிரிவு 44 (Article 44) இன் கீழ் ஒரு வழிகாட்டுதல் கொள்கையாகும் (Directive Principle). இது உண்மையாக இருந்தால், பிரதமரும் பாஜகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆதரிக்க வேண்டும். மக்களை குழப்பும் வகையில் தேர்தல் அறிக்கையை தவறாக விமர்சிப்பது வருத்தமளிக்கிறது.


‘சங்கல்ப் பத்ரா’ (‘Sankalp Patra’) என்று அழைக்கப்படும் பாஜகவின் தேர்தல் அறிக்கை, ‘10 ஆண்டுகால ஆட்சி மற்றும் விகாஸ்’ என்று தொடங்குகிறது. அது 'கரிப் பரிவார் ஜன்' பற்றி பேசுகிறது மற்றும் பிஎம் கரீப் கல்யாண் அன்னா யோஜனாவின் (PM Garib Kalyan Anna Yojana) கீழ் 2020 முதல் 80+ கோடி குடிமக்கள் இலவச ரேஷன்களைப் பெறுகிறார்கள் என்று குறிப்பிடுகிறது. அக்கட்சி குடிமக்கள் கணக்குகளுக்கு நேரடியாக ₹34 லட்சம் கோடியை மாற்றியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  34 கோடிக்கும் மேலான குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர் என்றும், 4 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) மற்றும் பிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வாக்குறுதிகள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேஷன் தொடர்வது போன்ற மற்ற வாக்குறுதிகள், முகவுரையில் உள்ள இலக்குகளுக்கான பாஜகவின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. இதனால், காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சிப்பதில் பிரதமரும், பா.ஜ.க.வும் கடைசியில்தான் வரவேண்டும்.


தேர்தல் அறிக்கையை நிர்வகிக்கச் சட்டம் இல்லை


2013 ஆம் ஆண்டில், எஸ். சுப்பிரமணியம் பாலாஜி எதிராக தமிழ்நாடு அரசு & ஆர்எஸ் வழக்கில் (S. Subramaniam Balaji v. Government of Tamil Nadu & Ors), தேர்தல் அறிக்கைகளை நிர்வகிக்கும் சட்டம் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் உள்ளீடுகளுடன் வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். ஆகஸ்ட் 12, 2013 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் ஏப்ரல் 24, 2015 அன்று "தேர்தல் அறிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு வழிமுறைகளை" வெளியிட்டது. 


தேர்தல் அறிக்கைகளில் உள்ள வாக்குறுதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the People Act) பிரிவு 123 இன் கீழ் ஊழல் நடைமுறையாக கருதப்படவில்லை என்றாலும், இலவசங்களை வழங்குவது வாக்காளர்களை இன்னும் திசைதிருப்பும் மற்றும் நியாயமான தேர்தல்களை பாதிக்கும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.


மார்ச் 16, 2024 அன்று, தேர்தல் ஆணையம் மாதிரி நடத்தை விதிகளை (Model Code of Conduct (MCC)) வெளியிட்டது. சாதிகள், மதங்கள் அல்லது சமூகங்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளை மோசமாக்கும் நடவடிக்கைகளில் இருந்து கட்சிகளையும் வேட்பாளர்களையும் தடுக்கும் "பொது நடத்தை" என்பதன் கீழ் உள்ள விதிகளும் இதில் அடங்கும். மற்ற கட்சிகளை விமர்சிப்பது அவர்களின் கொள்கைகள், கடந்தகால செயல்கள் மற்றும் வேலை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட விஷயங்களில் அல்ல. சரிபார்க்கப்படாத கூற்றுகளின் அடிப்படையில் விமர்சிப்பதும் அனுமதிக்கப்படாது. மேலும், வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை தூண்டுவதும், தேர்தல் சட்டத்தின் கீழ் எந்தவொரு ஊழல் நடைமுறைகள் அல்லது குற்றங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.


1996 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியது. வாக்காளர்களை கவர மத உரைகளைப் பயன்படுத்துவது ஒரு ஊழல் நடைமுறை என்று அது கூறியது. அது மேற்கோள் காட்டிய ஒரு உதாரணம் பால் தாக்கரேவின் ஒரு அறிக்கை. இந்து மதத்தை பாதுகாக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். எனவே முஸ்லிம்களின் வாக்குகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தமானது, அப்படியே இருக்கும் என்றது அந்த அறிக்கை.


1996-ல் உச்ச நீதிமன்றம், இந்து மதத்தைப் பாதுகாப்பது மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளைப் புறக்கணிப்பது போன்ற பால்தாக்கரேயின் அறிக்கையைப் போன்று வாக்காளர்களை பாதிக்கும் வகையில் மதப் பேச்சுகள் ஊழல் நடவடிக்கைகள் என்று தீர்ப்பு வழங்கியது. 2017 ஆம் ஆண்டில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 123 ஐ (Section 123) நீதிமன்றம் விளக்கியது. டாக்டர். நீதிபதி தாகூரின் கருத்துப்படி, மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையிலான எந்த மேல்முறையீடும் இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது. மேலும், அது ஊழலாகக் கருதப்படும். எனவே, இந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு மேல்முறையீடும் ஊழல் நடைமுறையாகக் கருதப்படும்..


எதிர்க்கட்சிகளையும், சிறுபான்மை சமூகத்தையும் பிரதமர் விமர்சித்தார். தமக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களிடம்  கேட்காதது அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அவரது விமர்சனம் காட்டுகிறது. அவரது அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன. உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட ஊழல் நடவடிக்கைகளுக்கும் அவை சமம். பிரதமர் நடத்தை விதிகளை எழுத்திலும் உணர்விலும் நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும். அவர் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தவில்லை என்றால், புனிதமான ஜனநாயகம் பாதிக்கப்படும்.


இருந்தபோதிலும், சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  அரசியலமைப்பால் வழங்கப்பட்ட கடமையாகும். இந்த கடமையில் தேர்தல் ஆணையம் கணிசமாக தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தோல்வி, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பில்  குறைபாடுள்ளது என்பதைக் காட்டுகிறது.


துஷ்யந்த் தவே மூத்த வழக்கறிஞர் மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் முன்னாள் தலைவர்.




Original article:

Share: