இந்தியாவில் காலநிலை தாங்குதிறனை எவ்வாறு வலுப்படுத்துவது? -அபினவ் ஜிந்தால், ஷ்வேதா ராய்

 புதுமையான நிதிக் கருவிகளும், அளவுரு தூண்டுதல்களை பயன்படுத்தும் காலநிலை இணைப்பு காப்பீடும் முக்கியமானவை.


2024ஆம் ஆண்டு இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டாக இருந்தது — தொழில்மயமாக்கல் காலத்துக்கு முன்பைவிட 1.55°C அதிகமான வெப்பநிலை இருந்தது. ஆபத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடர்களைக் குறைக்கவும், ஐ.நா. பொதுச் சபை அக்டோபர் 13-ஆம் தேதியை சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு (reduce disasters) தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் வெப்பநிலை உயர்வு, உயிர்கள், உணவு, நீர் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்கள் வேகமாகப் பெருகும் என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. தெளிவாக, காலநிலை நடவடிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், செயலற்றத் தன்மை இன்னும் விலை உயர்ந்தது மற்றும் பொது நிதியை பாதிப்படைய செய்யும். வாழ்வாதாரங்களை அழிக்கும் மற்றும் வளர்ச்சி முன்னேற்றங்களை நடுநிலையாக்கும் காலநிலை அதிர்ச்சிகளை அதிகரிக்கிறது. பிரேசில் 30-வது காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக, காலநிலை லட்சியத்தை அதிகரிப்பதோடு, நாடுகள் முன்னோடியில்லாத அளவிலும் வேகத்திலும் தகுதி ஏற்படுத்தல் மற்றும் காலநிலை நெகிழ்ச்சித்திறனுக்கான நிதி திரட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவிலும், காலநிலை தொடர்பான பேரிடர்கள் அவ்வப்போது நடக்கின்றன. 365 நாட்களில் 322 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில், இந்தியா உலகில் 3-வது மிகப்பெரிய எண்ணிக்கையிலான இயற்கை பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொண்டது. வெள்ளத்தைக் கொண்டுவரும் கனமழை மற்றும் அதிகரித்து வரும் வெப்ப அலைகள் தொழில் மையங்களை கடுமையாக தாக்குகின்றன. உற்பத்தியை நிறுத்துகின்றன, உள்கட்டமைப்பை பாதிக்கின்றன மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை அழிக்கின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இதுபோன்ற தொடர்ச்சியான பாதிப்புகள் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன. சுகாதார சேவைகளைப் பாதிக்கின்றன. கல்வியை சீர்குலைக்கின்றன மற்றும் கடன் சுழற்சிகளை அதிகரிக்கின்றன. இதுபோன்ற முன்னோடியில்லாத அளவிலான பேரழிவுகளை நிவர்த்தி செய்வதற்கு உடனடி மற்றும் புதுமையான தீர்வுகள் தேவை.


இந்தியப் பொருளாதாரம் இந்தக் காலநிலை தாக்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, நமது தகவமைப்பு கட்டமைப்புகளும் கொள்கைகளும் அதன் இடத்தில் இருக்க வேண்டும். இதற்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்தியா இந்தப் பிரச்சினையை மிகுந்த தீவிரத்துடனும் அவசரத்துடனும் அணுகுகிறது. இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குக்கான உறுதிப்பாடு, துறைகள் தோறும் முயற்சிகளாலும் திட்டங்களாலும் ஆதரிக்கப்படுகிறது, இதில் கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme - CCTS) போன்ற ஒழுங்குமுறை உந்துதல்கள், காலநிலை நிதி மீதான வரைவு வழிகாட்டுதல்கள், பாராமெட்ரிக் இன்சூரன்ஸ் போன்ற புதுமையான தன்மை அணுகுமுறைகள், பசுமை எஃகு தரநிலை வகைப்பாடு (green steel taxonomy) போன்ற துறைசார்ந்த தீர்வுகள், காலநிலை தாங்குதிறன் வாய்ந்த விவசாயம் மற்றும் பசுமை பத்திர வழிகாட்டுதல்கள் மற்றும் காலநிலை நிதி தரநிலை வகைப்பாடு (climate finance taxonomy) மூலம் தரநிலை அமைப்பை இறுக்குதல் ஆகியவை அடங்கும். இந்த முன்முயற்சிகள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து பங்குதாரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் சாதகமான சூழலை அடித்தளமாக அமைக்கின்றன.


புதுமையான நிதிக் கருவிகள்


மற்ற வளர்ந்து வரும் நாடுகளைப் போல, இந்தியா காலநிலை அபாயங்களை கட்டுப்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியையும் சமநிலையில் வைக்க முயற்சிக்கிறது. காலநிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், வெப்பஅலை, வெள்ளம், வறட்சி, புயல், கடல் நிலை உயர்வு போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க உதவும் நிதி இன்னும் ஆரம்பகட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எளிய மற்றும் விரைவான பணம் செலுத்துவதற்கான அளவுரு காப்பீடுகள்; காலநிலைக்கு ஏற்ற பயிர் மற்றும் கால்நடை பொருட்கள்; நம்பகமான அடையாள அட்டைகள் மூலம் அவசரகால ரொக்கப் பாதைகள்; சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (small and medium enterprises (SMEs)) சலுகை, ஆபத்துக்கு ஏற்ற கடன் கிடைக்கும் தன்மை மற்றும் குளிர்விக்கும் முறைகளில் முதலீடுகள், வானிலை தொடர்பான நிகழ்வுகள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலான பின்னடைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய பயனுள்ள நீர் மேலாண்மை ஆகியவை சில நம்பத்தகுந்த காலநிலை மீள்தன்மை அணுகுமுறைகளில் அடங்கும்.


உலகளவில் பயன்படுத்தப்படும் சில புதுமையான காலநிலை நெகிழ்ச்சி கருவிகளில் பின்வருவன அடங்கும்:


காலநிலை-தாங்குதிறன் கடன் உட்பிரிவுகள் (Climate-Resilient Debt Clauses (CRDCs)) பெரிய காலநிலை பேரிடர் ஏற்பட்டபோது ஒரு நாடு கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த அனுமதிக்கும். இது மீண்டும் மீண்டும் புயல் மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் Caribbean நாடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.


பேரிடர் தாமதக் கடன் விருப்பங்கள் (Catastrophe Deferred Drawdown Options (Cat-DDOs)) அவசர காலங்களில், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில், விரைவான பணத்தை வழங்குவதற்காக உடனடியாக நிதி வழங்கப்படுகிறது.


முன்னறிவிப்பு அடிப்படையிலான அல்லது எதிர்பார்ப்பு நிதியுதவி (Forecast-based or anticipatory financing) இது முன்-ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகள் முழுவதும் அறிவியல் முன்னறிவிப்புகளின் அடிப்படையில் காலநிலை பேரிடர்களின் எதிர்பார்ப்பின் பேரில் நிதிகளை வெளியிடுகிறது; செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இழப்பு மற்றும் சேதத்தைக் குறைக்க இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.

காப்பீடு-இணைக்கப்பட்ட பத்திரங்கள் (Insurance-Linked Securities (ILS)) இவை காப்பீடு செய்யப்பட்ட பேரழிவு இழப்புகளைப் பொறுத்து நிறுவன லாபம் அல்லது வட்டி விகிதங்களைவிட அதன் வருமானம் சார்ந்துள்ள முதலீடுகளாகும். மிகவும் பொதுவான காப்பீடு-இணைக்கப்பட்ட பத்திரங்கள் என்பது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் பேரிடர் பத்திரங்கள் ஆகும்.


ஒரு நம்பிக்கைக்குரிய கருவி


இந்தியா காலநிலை-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை (climate-linked insurance scheme) ஆராய்ந்து வருகிறது. இது அளவுரு தூண்டுதல்களைப் பயன்படுத்துகிறது, எ.கா., குறிப்பிட்ட மழைப்பொழிவு, வெப்பநிலை, பூகம்பத்தின் தீவிரம், காற்றின் வேகம் வரம்புகள் சில முன் பேரிடர் நடவடிக்கைகள் வரம்புகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரம்புகளை எட்டும்போது, ​​பணம் தானாகவே செலுத்தப்படும். இது அரசாங்க பேரிடர் நிதிகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மக்களுக்கு விரைவாக உதவி கிடைக்கிறது. இந்த வகையான காப்பீடு இந்தியாவின் நாகாலாந்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மேலும், சில அமெரிக்க மாநிலங்கள், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற காலநிலைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியா வலுவான டிஜிட்டல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இதில் நேரடி நலன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) மில்லியன் கணக்கான பயனாளிகளுக்கு வெற்றிகரமாக வரவு வைக்கப்படுகின்றன, முன்னறிவிப்பு அடிப்படையிலான பண ஆதரவுத் திட்டங்களை செயல்பாட்டுரீதியாக சாத்தியமாக்குகின்றன. உண்மையில், இந்தியாவின் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டு செலுத்துதல்கள் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) திட்டத்தின்கீழ் நேரடி நலன் பரிமாற்றங்கள்  மூலம் அதிகளவில் பணம் அனுப்பப்படுகின்றன. இது பரந்த குழுவிற்கு அளவுரு காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வலுவான வாய்ப்பை  உருவாக்குகிறது.


குறிப்பிடத்தக்க வகையில், உருவாகிவரும் அளவுரு வெப்பத் திட்டங்கள் (emerging parametric heat programs) அதிகாரமற்ற பெண் தொழிலாளர்களுக்கான SEWA-ன் அதிகமான வெப்பத்தால் ஏற்படும் காப்பீடு, பயனாளிகளுக்கு நேரடி வருமான ஆதரவுடன் தானியங்கி தூண்டுதல்களை இணைப்பதற்காக அல்லது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) வழிகாட்டப்பட்ட இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்கள் (Heat Action Plans (HAPs)) ஆரம்ப எச்சரிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள், குளிர்வித்தல்/நீர் அணுகல் மற்றும் வெப்ப அலைகளுக்கு முன்பும் போதும் செயல்பாட்டு படிகள் நேரடி நலன் பரிமாற்றங்கள் வழியாக அமைப்பது இந்தியாவில் பயனுள்ள பாராமெட்ரிக் காப்பீட்டு திட்ட செயல்படுத்தலுக்கான தயார்நிலையின் செய்திகளாக இருக்கலாம்.


உலகளாவிய காலநிலை மீள்தன்மை கருவிகள் ஆரம்ப வழிகாட்டுதலை வழங்கக்கூடும் என்றாலும், இந்தியாவில் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப இவற்றை சோதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா நெகிழ்ச்சியான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு தகவமைப்பு நிதி இடைவெளியை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் மற்றவைகளை பாதுகாக்கும் நிதிக் கருவிகளும் தேவை. காலநிலை மீள்தன்மைக்கான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதை நோக்கி இந்தியா நகரும்போது, ​​காப்பீட்டு மற்றும் நிதி ஒழுங்குமுறை நிறுவனங்கள் காப்பீட்டு பாதுகாப்புகளைக் குறைப்பதிலும், மீட்பு நேரத்தையும் மையமாகக் கொண்டு படிப்படியாக கொள்கைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும், மீட்பு நேரத்தைக் குறைக்கும் அதே வேளையில் அரசாங்க கருவூலத்தின் மீதான சுமையையும் குறைக்கிறது.


கட்டமைப்புகளிலிருந்து நடவடிக்கைக்கு


இந்தியாவில் வலுவான காலநிலை சகிப்புத்தன்மை அமைப்பை உருவாக்குவது சவாலானது. பேரழிவுகள் மற்றும் இழப்புகள் பற்றிய போதுமான தரவு இல்லாதது, உதவிக்கான தெளிவற்ற தூண்டுதல்கள், அரசாங்க உதவி இல்லாமல் அதை மலிவு விலையில் மாற்றுவது, எச்சரிக்கைகள், உதவி தேவைப்படும் நபர்களின் பட்டியல்களை இணைப்பது மற்றும் காலநிலை நிகழ்வுகளின்போது தானாகவே விரைவான ஆதரவை வழங்க ஒற்றைக் கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI))  மற்றும் ஆதார்-இணைக்கப்பட்ட நேரடி நலன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) போன்ற கட்டண முறைகள் ஆகியவை சிக்கல்களில் அடங்கும்.


இருப்பினும், இவை அனைத்திற்கும் பெரிய அளவிலான திட்டமிடல், தொழில்நுட்பம், நோக்கம் மற்றும் செயல்படுத்துதல் தேவைப்படுகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் தெளிவற்ற அவசியத்தைக் குறிப்பிட தேவையில்லை. தனியார் மூலதனமும் அரசாங்க கொள்கைகளுக்கு விருப்பத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும். அதே, நேரத்தில் ஒழுங்குமுறையாளர்கள் விரிவான எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும். 

காப்பீட்டுடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள் (பேரழிவு பத்திரங்கள்) ILS cat மற்றும் பாராமெட்ரிக் காலநிலை காப்பீட்டுக்கான சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ((International Financial Services Centres Authority (IFSCA))) வரைவு கட்டமைப்பை நாடு முழுவதும் சோதனை முறையில் செயல்படுத்துவதன் மூலம், இந்தியா இந்த முனைகளில் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பது ஒரு நல்ல செய்தியாகும். இங்கு முக்கிய வழிகாட்டும் சக்தியாக இருக்கக்கூடியது செயல்திறன் மற்றும் அவசரம்.


ஜிந்தால் ஒரு மூத்த ஆசிரியரும் ஆற்றல் பொருளாதார நிபுணரும் ஆவார், மற்றும் ராய் ஒரு முன்னணி வங்கியில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை ஆபத்து பிரிவின் துணைத் தலைவராக உள்ளார்.



Original article:

Share:

அமெரிக்காவில் தானியங்கி வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண (EAD) நீட்டிப்புகள் முடிவுக்கு வந்ததால், இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஏற்படக்கூடிய தாக்கம். -விதீஷா குந்தமல்லா

 பணி அங்கீகாரம் காலாவதியான பிறகும் புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால், 540 நாட்கள் வரை தொடர்ந்து பணியாற்ற புலம்பெயர்ந்தோரை அனுமதித்த விதியை இந்த மாற்றம் ரத்து செய்கிறது. எந்த நுழைவனுமதி (விசா) பிரிவுகள் அதிகம் பாதிக்கப்படலாம், அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


அமெரிக்காவில் சிறப்புத் தொழிலாளர்களுக்கான H-1B நுழைவனுமதி (விசா)  கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக பல வாரங்களுக்கு முன் உயர்த்தியது. இப்போது  டிரம்ப் தலைமையிலான நிர்வாகமானது, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents (EADs)) தானியங்கி நீட்டிப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.


அக்டோபர் 30 முதல், தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு, புதுப்பித்தல் நிலுவையில் இருக்கும்போது, ​​இனி தானியங்கி பணி அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security (DHS)) கடந்த அக்டோபர் 29-ஆம் நாள் அறிவித்தது.


ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தின்போது நிறுவப்பட்ட விதியானது புலம்பெயர்ந்தோர் தங்கள் புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால், காலாவதியான பிறகு 540 நாட்கள் வரை தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் பழைய விதியை ரத்து செய்கிறது. இது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய நிபுணர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. 


அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் என்றால் என்ன?


அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, குடியுரிமை அல்லது தேசிய வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், அனைத்து ஊழியர்களும் நாட்டில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்டிருப்பதை பணியமர்த்துவோர் உறுதிசெய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் (படிவம் I-766/EAD) வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்கும் வழியாகும்.


முன்னதாக, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் (Employment Authorization Documents) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களைச் சரியான நேரத்தில் தாக்கல் செய்த விண்ணப்பதாரர்களுக்கு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் (US Citizenship and Immigration Services (USCIS)) செயலாக்க தாமதங்களை ஈடுசெய்யும் வகையில் அவர்களின் ஆவணங்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​540 நாட்கள் வரை பணி அங்கீகாரம் தானாகவே வழங்கப்பட்டது.


ஹூஸ்டனைச் சேர்ந்த குடியுரிமை வழக்கறிஞரான ராகுல் ரெட்டி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியது பின்வருமாறு, "உங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகிவிட்டால், நீட்டிப்பு செயல்படுத்தப்படும்வரை நீங்கள் 180 நாட்கள் தொடர்ந்து பணியாற்றலாம். ஆனால், நீண்ட தாமதங்கள் காரணமாக, இது 540 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது." என்று கூறினார்.


புதிய விதிமுறை பல விசா வகைகளுக்குப் பொருந்தும், அவற்றில் H-4 (H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள்), L-2 (L-1 விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அல்லது அவர்களின் வெளிநாட்டு கிளையிலிருந்து அமெரிக்க நிறுவனத்தால் மாற்றப்பட்டவர்கள்), மற்றும் குடியேற்ற நிலையைச் சரிசெய்ய வேண்டிய சில விண்ணப்பதாரர்கள் (கிரீன் கார்டுகள்) ஆகிய விசா வகைகள் அடங்கும்


"இந்த விதி இரண்டு முக்கியப் பிரிவு மக்களை பாதிக்கிறது - ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள், தகுதி நிலைக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் H-4 விசா வைத்திருப்பவர்கள்" என்று வழக்கறிஞர் ரெட்டி கூறினார்.


வர்ஜீனியாவைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர் ராஜீவ் கன்னா மேலும் கூறுகையில், இந்தக் கொள்கை ஏற்கனவே பலவீனமாக இருந்த "H-4 வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் பாதுகாப்பை முற்றிலுமாக நீக்குகிறது". "மிகவும் பாதிக்கப்பட்ட H-4 வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு, பிரச்சனை என்னவென்றால், உங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகும் போதெல்லாம், உங்கள் தகுதியும் காலாவதியாகிறது. இது உண்மையில் பலருக்கு உதவவில்லை. ஆனால் எங்களுக்கு கூடுதல் நேரம் கிடைத்தது என்ற நிம்மதியாவது இருந்தது. அதுவும் இப்போது போய்விட்டது." "இந்திய நாட்டினருக்கு, இது மிகவும் கடுமையானது," என்று கூறினார். "பெரும்பாலான பிற நாடுகளுக்கு, கிரீன் கார்டு வரிசை தற்போது உள்ளது. இந்தியர்கள் பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர், எனவே இந்த 540 நாள் பாதுகாப்பு ஒரு முக்கியமான கால அவகாசமாக இருந்தது." என்று கருத்து தெரிவித்துள்ளார்


H-4 விசா வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் கொள்கை மாற்றம் பெரிய இடையூறுக்கு வழிவகுக்கும் என்று வழக்கறிஞர் கன்னா கூறினார். சரியான நேரத்தில் நீட்டிப்பு இல்லாமல், அவர்கள் வேலை செய்வதை நிறுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, ஒப்புதல் எப்போது வரும் என்று தெரியாததால், அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்பதை பணியமர்த்துவோர்களிடம் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நிறுவனங்கள் அவர்களுக்குப் பதிலாக வேறு நபர்களை பணியமர்த்தும் என்று ரெட்டி கூறினார்.


இதனை ஒப்புக்கொண்ட கன்னா, “இந்திய H-4 மனைவிமார்களில் கணிசமான துணைப்பிரிவு உள்ளது. அவர்களுக்கு வேலை செய்யும் திறன் இல்லாவிட்டால், நிறைய திறமையும் கல்வியும் வீணாகின்றன. தாக்கம் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, ஒரு தொகுப்பு உளவியல் தாக்கமும் உள்ளது, ஆயிரம் வெட்டுகளால் ஏற்படும் மெதுவான மரணம் போன்றது.” என்று கூறினார்.

மாற்றத்திற்கான காரணம் என்ன?


ஒரு வெளிநாட்டவரை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிப்பதற்கு முன்பு சரியான "சரிபார்ப்பை" உறுதி செய்ய தானியங்கி நீட்டிப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது, ஆனால், பல வழக்கறிஞர்கள் இந்தக் கருத்தில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


"H-4 விசாவில் உள்ளவர்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவொரு பின்வாசல் வழியாகவும் அமெரிக்காவிற்குள் வரவில்லை. எனவே, எந்தவொரு உண்மையான சிக்கலைத் திருத்துவதற்கான முயற்சி என்பதைவிட, ஒரு சாக்குப்போக்காகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது" என்று கன்னா கூறினார். தேசியப் பாதுகாப்பை ஒரு கவலையாக மேற்கோள் காட்டுவது ஆதாரமற்றது என்று கூறினார். “வன்முறையில் ஈடுபடக்கூடியவர். "வன்முறையில் ஈடுபடக்கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகாரத்தைத் தடுக்க விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். அது அபத்தமானது, ஏனென்றால் குற்றங்களைச் செய்ய மக்களுக்கு வேலை அனுமதி தேவையில்லை." என்றும் அவர் வாதிடுகிறார்.


இந்த நடவடிக்கை சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளுமா?


பொதுவாக, இந்த அளவிலான மாற்றங்களுக்குப் பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக ஒரு அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம், 60 நாட்கள் ஆகும். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இந்த செயல்முறையைத் தவிர்த்து, இதை "இடைக்கால இறுதி விதியாக" (Interim Final Rule) வெளியிட்டது.


"மாற்றப்பட வேண்டிய ஒவ்வொரு ஒழுங்குமுறையும் அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் காலத்தைக் கடந்து செல்ல வேண்டும்," என்று கன்னா கூறினார். "இந்த இடைக்கால இறுதி விதி அதை முற்றிலுமாகத் தவிர்க்கிறது, இல்லாத ஒரு அவசரநிலையை உருவாக்குகிறது. அவர்கள் அக்டோபர் 29 அன்று  இந்தத் திருத்த விதியை அறிவித்தனர். அடுத்த நாளிலிருந்து உங்களுக்கு இந்தப் பாதுகாப்பு இருக்காது என்று கூறினர். சட்டத்தின்படி நிர்வாகம் இப்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.


ரெட்டி இதை "தெளிவான நடைமுறை மீறல்" என்று அழைத்தார். மேலும், அவரது குழு நீதிமன்றத்தில் இந்த விதியை எதிர்த்து வாதம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். "அவர்கள் வேலை அங்கீகார ஆவண புதுப்பித்தல் விண்ணப்பங்களை 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும். ஒரு வேலை அங்கீகார ஆவணத்தை மதிப்பாய்வு செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு முன்பே  கூறியுள்ளது. அவர்களின் திறமையின்மை காரணமாக, இப்போது மாதங்கள் ஆகின்றன. எனவே, அவர்களின் வேலை அங்கீகார ஆவண புதுப்பித்தல் தாமதமானால் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின்மீது வழக்குத் தொடருமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஏனெனில், நீங்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், குடியேற்றத்துறை வழக்கமாக நீதிபதியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வழக்கை அவசரமாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது. 


இது பரந்த குடியேற்றப் போக்குகளுக்கு எவ்வாறு பொருந்துகிறது?


டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் சித்தாந்தம் மற்றும் வாக்குறுதிகளுக்கு ஏற்ப, சட்ட மற்றும் சட்டவிரோத குடியேற்றம் இரண்டையும் கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண பின்வாங்கல் பார்க்கப்படுகிறது.


தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பே புதுப்பித்தல்களுக்கு விண்ணப்பிப்பதும், ஏற்படக்கூடிய வேலை இடையூறுகளுக்குத் தயாராக இருப்பதுமே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிறந்த நடவடிக்கையாக இருக்குமென்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், செயலாக்கத்தை விரைவுபடுத்த சிலர் வழக்குத் தொடர வேண்டியிருக்கலாம் என்றும்  ரெட்டி கூறினார்.



Original article:

Share:

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.. -ரோஷ்னி யாதவ்

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) சமீபத்தில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-03 CMS-03 என்ற சக்திவாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த ஏவுதல் இஸ்ரோவின் வளர்ந்து வரும் இராஜதந்திர சுயாட்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான  சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துகிறது? இஸ்ரோவின் மூன்றாம் தலைமுறை ஏவுதல் வாகனக் குறி (Launch Vehicle Mark (LVM3)) என்ற ஏவுதள வாகனத்தில் செய்யப்பட்டுள்ள புதிய 'பாகுபலி' மேம்பாடுகள் என்னென்ன? 


ஏன் செய்திகளில்?


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (ISRO) LVM3-M5 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது. தற்போது இந்திய மண்ணிலிருந்து மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளது. இது இஸ்ரோவின் சீராக மேம்பட்டு வரும் திறன்களின் நிரூபணமாக இருப்பதால், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


முக்கிய  அம்சங்கள் :


1. 4,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை (LVM3-M5) இந்திய மண்ணிலிருந்து தொலைதூரப் புவிநிலைச் சுற்றுப்பாதையில் (Distant Geosynchronous Transfer Orbit (GTO)) இஸ்ரோ முதன்முறையாக நிலைநிறுத்தியுள்ளது.


2. CMS-03 என்ற இந்தச் செயற்கைக்கோள், 4,410 கிலோ எடை கொண்ட, பல-அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (multi-band communication satellite) ஆகும். இது இந்திய நிலப்பரப்பு உட்பட பரந்த கடல் பகுதியிலும் சேவைகளை வழங்கும். இந்தச் செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகளுக்குச் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. GSAT-7R என்றும் அழைக்கப்படும் CMS-03 செயற்கைக்கோள், 2013ஆம் ஆண்டு ஏரியன்-5 ராக்கெட்டில் ஏவப்பட்ட GSAT-7 செயற்கைக்கோளுக்கு மாற்றாக உள்ளது. இது அதன் ஆயுட்காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.


4. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக இந்திய கடற்படையின் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். இது விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் எல்லை குறித்த விழிப்புணர்வு திறன்களை பகுப்பாய்வு செய்யும்.


5. GSAT-7R இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வலுவான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும்.  இந்தச் செயற்கைக்கோளில் பல தகவல் தொடர்பு அலைவரிசைகளின் வழியாக குரல், தரவு மற்றும் காணொளி இணைப்புகளை ஆதரிக்கும் திறன் கொண்ட கருவிகள் (transponders) உள்ளன. இந்தச் செயற்கைக்கோள் அதிகத் திறன் கொண்ட அலைவரிசையுடன் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படையின் கடல்சார் செயல்பாட்டு மையங்களுக்கு இடையே தடையற்ற மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு இணைப்புகளை செயல்படுத்தும், ”என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.


6. குறிப்பிடத்தக்க வகையில், இஸ்ரோ இதை விட கனமான செயற்கைக்கோளை ஏவியுள்ளது. 2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட GSAT-11 5,800 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக இருந்தது. ஆனால், அதற்காக ஐரோப்பாவின் ஏரியன்-5 (Ariane-5) என்கிற விண்கலம் பயன்படுத்தப்பட்டது. 3,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள அதன் அனைத்து கனமான செயற்கைக்கோள்களையும் அனுப்புவதற்கு இஸ்ரோ ஐரோப்பிய நாட்டின் விண்காலத்தையே  நம்பியிருந்தது.


7. CMS-03 ஏவுதலின் மூலம், LVM3 ராக்கெட்டின் அதிக எடையைத் தூக்கிச் செல்லும் திறனை இஸ்ரோ நிரூபித்துள்ளது. எனவே, LVM3-M5 ஏவுதல் விண்வெளி திட்டங்களுக்கு வெளிநாட்டு சார்புநிலையைக் குறைப்பதற்கும் வரவிருக்கும் பணிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும். மேலும் சிக்கலான பணிகளைச் செயல்படுத்துவதில் இஸ்ரோவின் வளர்ந்து வரும் இராஜதந்திர சுயாட்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான  சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.


ஏவு வாகனம் மார்க்-3 (LVM3)


8. முன்னர் GSLV Mk-3 என அழைக்கப்பட்ட LVM3, இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த விண்கலம் ஆகும். இது 8,000 கிலோ வரை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கும், 4,000 கிலோ வரை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டது.


9. LVM3 திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரங்களின் கலவையைப் பயன்படுத்துகிறது. ஏற்கனவே சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் OneWeb செயற்கைக்கோள்கள் போன்ற முக்கியப் பணிகளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, அதிக எடை கொண்ட செயற்கைக்கோளுக்கு இடமளிக்க, இலக்கு வைக்கப்பட்ட சுற்றுப்பாதை குறைவாக இருந்தது (அதன் மிக உயர்ந்த புள்ளியில் சுமார் 29,970 கி.மீ).


10. சந்திரயான்-3 ராக்கெட்டை சுமந்து சென்ற LVM3-M4 ஒப்பிடும்போது இதன் சுமை தாங்கும் திறனை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில்  இஸ்ரோ விண்கலத்தை மாற்றியமைத்தது. அதன் எடை திறனுக்காக இந்த வாகனம் அதன் எடை தாங்கும் திறனுக்காக  'பாகுபலி' என்று அழைக்கப்பட்டது. இந்த வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை C25 நிலையாக இருந்தது. இது 28,000 கிலோ எரிபொருளை சுமந்து 20 டன் உந்துதலை உற்பத்தி செய்தது. இப்போது இது 32,000 கிலோ எரிபொருளை சுமந்து 22 டன் உந்துதலை உற்பத்தி செய்யும் C32 நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ஏவுதள வாகனங்கள்


1. செயற்கைக்கோள்கள் தாங்களாகவே விண்வெளிக்குச் செல்வதில்லை. அவை விண்கலங்கள் அல்லது துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)) போன்ற விண்கலங்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. பூமியின் ஈர்ப்பு விசையை மீறி, செயற்கைக்கோள்கள் போன்ற கனமான பொருட்களை விண்வெளியில் செலுத்துவதற்குத் தேவையான மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உருவாக்கும் சக்திவாய்ந்த உந்துவிசை அமைப்புகளை விண்கலங்கள் கொண்டுள்ளன.

Knowledge Nugget: India’s heaviest communication satellite — What you must know for UPSC Exam

2. இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Small Satellite Launch Vehicle (SSLV)) என்பது மூன்று திட உந்துவிசை நிலைகளுடன் கட்டமைக்கப்பட்ட மூன்று-நிலை ஏவுதள வாகனமாகும். இது ஒரு முனைய நிலையில் (terminal stage) திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகச் சீரமைப்புத் தொகுதியைக் (Velocity Trimming Module (VTM)) கொண்டுள்ளது. இது செயற்கைக்கோளை நிலைநிறுத்தத் தயாராகும் போது அதன் வேகத்தை சரிசெய்ய உதவுகிறது.

3. துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)) என்பது இந்திய செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களின் மூன்றாம் தலைமுறை ஆகும். முதன்முதலில் 1994ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை 50-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான PSLV ஏவுதல்கள் நடந்துள்ளன. அதிக வெற்றி விகிதத்துடன் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் (2,000 கி.மீ.க்கும் குறைவான உயரத்தில்) பல்வேறு செயற்கைக்கோள்களை தொடர்ந்து செலுத்துவதால் இது "இஸ்ரோவின் வேலைத்திறன்மிகு குதிரை" (the workhorse of ISRO) என்றும் அழைக்கப்படுகிறது. 

4. புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள், புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் (geosynchronous transfer orbit) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் பொதுவாக புவி சுற்றுப்பாதையில் (geostationary Earth orbit) வைக்கப்படுகின்றன. இது பூமியின் பூமத்திய ரேகைக்கு மேலே 35,786 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சுற்றுப்பாதையாகும்.

5. புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள்  (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)) அதிக திறன் கொண்டவை. ஏனெனில், செயற்கைக்கோள்களை விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்கு அனுப்புவதற்கு இவை உதவுகிறது. பழைய ஏவுதள வாகனங்களை விட, புதிய ஏவுதள வாகனங்ளில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனைக் கொண்ட கிரையோஜெனிக் இயந்திரங்கள் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை அதிக உந்துசக்தியை  வழங்குகின்றன.

Original article:

Share:

வழக்கறிஞர் உரிமை புனிதமானது. அதனால்தான் வழக்கறிஞர் அழைப்பாணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமானது. -குமார் கார்த்திகேயா

 வழக்கறிஞரின் கடமை வாதாடுவது. அரசின் கடமை உண்மையை விசாரணை செய்வது. எந்த ஒரு நபரும் மற்ற நபரின் அதிகாரத்தை பறிக்க (usurp)  முடியாது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியபோது, அது வழக்கறிஞர் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அரவிந்த் தாதர் மற்றும் வேணுகோபால் இருவரும் அனுபவம் வாய்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆவர். சில நாட்களுக்குள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் இந்திய வழக்கறிஞர் கவுன்சில் ஆகியவற்றின் எதிர்ப்புகளுக்குப் பிறகு, அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணைகளை திரும்பப் பெற்றது மற்றும் அமலாக்க இயக்குநரின் முன் அனுமதி இல்லாமல் எந்த வழக்கறிஞரையும் அழைக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டது. ஆனால், அழைப்பாணைகள் அனுப்பப்பட்டிருப்பது, ஏற்கனவே வழக்கறிஞர் மற்றும் கட்சிக்காரர் இடையே இருந்த (attorney-client privilege) ரகசியங்கள் இனி பாதுகாப்பாக இருக்காது என்ற கவலையை உருவாக்கியுள்ளது.


இதனால் உச்சநீதிமன்றம் இந்த பிரச்சினையை தானாக (suo motu) எடுத்துக் கொண்டு, ஒரு வழக்கறிஞர் சட்ட ஆலோசனை வழங்கியதாலோ அல்லது நீதிமன்றத்தில் ஒருவருக்காக ஆஜரானதாலோ அவரை விசாரணைக்கு அழைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியது. அக்டோபர் 31 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வழக்கறிஞர் தொழில் அமைதியாக இழந்து வந்த சமநிலையை மீட்டெடுத்தது. வழக்கறிஞர்களின் சுதந்திரம் என்பது அவர்களின் தொழிலுக்கான சிறப்பு உரிமை மட்டுமல்ல - அரசியலமைப்பையும் நீதியையும் பாதுகாப்பதற்கு அவசியமான ஒன்று என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.


வெளிப்படையாக தாதர் மற்றும் வேணுகோபாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளுக்காக இருந்த போதிலும், தானாக முன்வந்து (suo motu) தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் அகமதாபாதில் தொடங்கின. அந்த நகரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒரு பணக்கடன் தகராறில் ஜாமீன் மனு மட்டுமே தாக்கல் செய்த ஒரு வழக்கறிஞருக்கு அறிவிக்கை அனுப்பினார். "வழக்கின் உண்மையான விவரங்கள் மற்றும் சூழ்நிலைகளை தெரிந்துகொள்வதற்காக" அவர் காவல்துறையால் அழைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் தலையிட மறுத்தபோது, இந்த விவகாரம்  தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையில் நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் என் வி அஞ்சாரியா கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு மட்டுமல்ல, அனைத்து வழக்கறிஞர்களையும் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்பதை நீதிமன்றம் உணர்ந்தது. காவல்துறையினர் தங்கள் வேலையைச் செய்வதற்காக ஒரு வழக்கறிஞரை அழைக்க முடிந்தால், பாதுகாப்பு உரிமை (right to defence) என்பது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையாக இல்லாமல் அரசால் வழங்கப்படும் ஒரு சலுகையாக மாறும்.


இந்த தீர்ப்பு ஷேக்ஸ்பியரின் ‘ஹென்றி VI’ நாடகத்திலிருந்து “நாம் முதலில் செய்ய வேண்டியது, எல்லா வழக்கறிஞர்களையும் கொன்றுவிடுவோம்” என்ற ஒரு வரியுடன் தொடங்குகிறது. உச்ச நீதிமன்றம் அந்த வார்த்தைகள் வழக்கறிஞர்களுக்கு அவமதிப்பு அல்ல, மாறாக ஒரு எச்சரிக்கை என்று விளக்கியது. அவற்றைச் சொல்லும் கிளர்ச்சியாளன் சட்டமின்மையை கனவு காண்கிறான். அதை அடைய, அவன் முதலில் சட்டத்தைப் பாதுகாப்பவர்களை அமைதிப்படுத்த வேண்டும்.


பாரதிய சாக்ஷய ஆதினியத்தின் (Bharatiya Sakshya Adhiniyam) பிரிவு 132, வழக்கறிஞருக்கும் அவரது கட்சிக்காரருக்கும் இடையேயான உறவின் ரகசியத்தன்மையை பாதுகாக்கிறது. இந்தப் பிரிவு 1872-ன் இந்திய சாட்சிய சட்டத்தின் (Indian Evidence Act) பிரிவு 126-ல் முதலில் எழுதப்பட்ட கொள்கையை தொடர்கிறது. ஒரு கட்சிக்காரர் தொழில்முறை சேவையின்போது வழக்கறிஞரிடம் ரகசியமாகத் தெரிவிப்பது, அது சட்டவிரோதச் செயலை மேலும் தூண்டுவதற்காகவோ அல்லது வழக்கறிஞரின் ஈடுபாட்டுக்குப் பிறகு நிகழ்ந்த குற்றத்தை வெளிப்படுத்துவதற்காகவோ இருந்தால் தவிர, வெளியிடப்பட முடியாது. இந்த ரகசிய உரிமை வழக்கறிஞருக்கு அல்ல, கட்சிக்காரருக்கே சொந்தமானது. இந்த சட்டம் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெளிப்படையாக பேச அனுமதிக்கிறது. தங்கள் சொந்த வார்த்தைகள் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்று நம்புவதற்கு இந்த சட்டம் உதவியாக உள்ளது.


விசாரணை அமைப்பு ஒரு வழக்கறிஞரை வெறுமனே அவர் ஒரு கட்சிக்காரருக்கு ஆலோசனை வழங்கியதற்காக அல்லது பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக விசாரணைக்கு அழைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அவ்வாறு செய்வது "முழுமையாக ஏற்க முடியாதது" (completely untenable) என்று உச்சநீதிமன்றம் கூறியது. இத்தகைய நடத்தை பிரிவு 19(1)(g)-ன் கீழ் தொழில் செய்ய உள்ள உரிமை (right to practise) மற்றும் பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை (right to life and liberty) ஆகிய இரண்டையும் மீறுகிறது. ஒரு வழக்கறிஞர் ஒரு குற்றத்தில் பங்கேற்றால் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படலாம். அப்போதுகூட, சட்டத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


விஷாகா அல்லது ஜேக்கப் மேத்யூ போன்ற வழக்குகளைப் போல் இல்லாமல், நீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கவில்லை. சட்டபூர்வமான கட்டமைப்பு ஏற்கனவே போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. பிரிவு 132-ன் கீழ் சலுகை தெளிவாக உள்ளது மற்றும் விசாரணை அமைப்புகள் அதன்படி கட்டுப்படுத்தப்படுகின்றன. நீதிமன்றம் ஒரே ஒரு நடைமுறை பாதுகாப்பை மட்டும் சேர்த்தது. ஒரு அதிகாரி ஒரு வழக்கறிஞரை விசாரணைக்கு அழைக்க விரும்பினால், முதலில் காவல்துறை கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத உயர் அதிகாரியின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதிகாரி சம்மனுக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் பிரிவு 132-ன் கீழ் எந்த விதிவிலக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். வழக்கறிஞர் அல்லது கட்சிக்காரர் பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita) பிரிவு 528-ன் கீழ் உயர்நீதிமன்றத்தில் அழைப்பாணையை சவால் செய்யலாம்.


ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பற்றிய கேள்வியையும் நீதிமன்றம் பரிசீலித்தது. வழக்கறிஞர்-கட்சிக்காரர் உரையாடல்கள் தனிப்பட்டவை. ஆனால், ஆவணங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதில்லை. அவற்றை நீதிமன்றத்தால் மட்டுமே அழைக்க முடியும், காவல்துறையால் நேரடியாக அழைக்க முடியாது. ஒரு டிஜிட்டல் சாதனம் சரிபார்க்கப்பட்டால், அது வழக்கறிஞர் மற்றும் கட்சிக்காரர் இருவரும் இருக்கும்போது செய்யப்பட வேண்டும். மேலும், பிற கட்சிக்காரருடன் தொடர்புடைய அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த சட்டம் சட்டபூர்வமான விசாரணையை அனுமதிக்கும் அதே வேளையில் தேவையற்ற விசாரணைகளைத்  (Fishing inquiries) தடுக்கிறது.

 

பின்னர் அமர்வு, நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட உள்-நிறுவன ஆலோசகர்கள் (in-house counsels) அதே பாதுகாப்பை பெறுகிறார்களா என்பதை பரிசீலித்தது. அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியது. சம்பளம் பெறும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சட்டத்தின் (Advocates Act) கீழ் ஒரு "வழக்கறிஞர்" அல்ல. எனவே, பிரிவு 132-ன் கீழ் சலுகையை கோர முடியாது. முதலாளிகளுடனான அவர்களின் தொடர்புகள் இன்னும் பிரிவு 134-ன் கீழ் ரகசியமாக இருக்கலாம். ஆனால், அந்த ரகசியத்தன்மையின் நோக்கம் வரம்புக்குட்பட்டது. சுதந்திரம், சலுகையின் அடித்தளம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயரை மேற்கோள் காட்டி, நீதிமன்றம் வழக்கறிஞர்கள் நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அமைப்புகளைப் போன்றவர்கள் என்றும் சிலர் தவறு செய்யலாம். ஆனால், அது அனைத்து வழக்கறிஞர்களையும் வரையறுக்காது. ரகசியத்தன்மை என்பது குற்றங்களை மறைப்பதற்காக அல்ல. அது இருப்பதால் அனைவரும், அவர்கள் யாராக இருந்தாலும், ஒரு வழக்கறிஞரிடம் பயமின்றி பேச முடியும். மக்கள் வழக்கறிஞர்களை நம்புவதை நிறுத்தினால், முழு சட்ட அமைப்பும் வீழ்ச்சியடையும்.


தீர்ப்பு பிரிவு 20(3)-ன் கீழ் சுய குற்றச்சாட்டுக்கு (self-incrimination) எதிரான அரசியலமைப்பு பாதுகாப்புடன் சலுகையை இணைக்கிறது. ஒரு குடிமகன் ஒரு வழக்கறிஞரிடம் பேசுவது என்பது அமைதியாக இருப்பதற்கான ஒரு நபரின் உரிமையின் ஒரு பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக, வழக்கறிஞர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்காரர்கள் மற்றும் அவர்கள் தரும் கருத்துகளுக்காக அதிகரித்துவரும் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய நடைமுறைகள் தொழில்முறை சுதந்திரத்தை மட்டுமல்ல, நீதி நியாயமாக இருக்கும் என்ற குடிமகனின் நம்பிக்கையையும் குறைத்து விடுகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த நம்பிக்கையை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறது. விசாரணையும் அச்சுறுத்தலும் ஒன்றல்ல என்று உச்சநீதிமன்றம் அரசுக்கு தெரிவிக்கிறது.


இத்தகைய செயல்கள் சட்டபூர்வ சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல் அடிப்படை உரிமைகளையும் (fundamental rights) மீறுகின்றன என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இந்தத் தீர்ப்பு புதிய கோட்பாட்டை கண்டுபிடிக்கவில்லை. மறைக்கப்பட்டிருந்த ஒரு உண்மையை மீட்டெடுக்கிறது. வழக்கறிஞரின் கடமை பாதுகாப்பது ஆகும். அரசின் கடமை விசாரிப்பது ஆகும். எந்த ஒரு தனி நபரும் மற்றவரின் அதிகாரத்தை பறிக்க முடியாது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கறிஞர்களுக்கான உரிமை மட்டும் அல்ல. மாறாக, வழக்கறிஞர் உரிமைக்கான குடிமகனின் உரிமையின் மீண்டும் உறுதிப்படுத்தலாகும். தாதர் மற்றும் வேணுகோபால் ஆகியோருக்கு அனுப்பிய அறிவிக்கைகளை அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) திரும்பப் பெற்றபோது, ​​அது அழுத்தத்தின் பேரில் திரும்பப் பெற்றது. உச்சநீதிமன்றம் இப்போது அந்த திரும்பப்பெறுதலை அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. சட்டத்தை பிரதிநிதித்துவத்திற்கான உரிமை, கருணை சார்ந்தது அல்ல என்று உச்சநீதிமன்றம் நமக்கு நினைவூட்டுகிறது. அது சுதந்திரத்தின் முதல் நிபந்தனையாகும்.


எழுத்தாளர் டெல்லியைச் சேர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சட்ட ஆராய்ச்சியாளர்.



Original article:

Share:

இயற்கை-இணைப்புக் குறியீட்டிலிருந்து, 'வளர்ச்சிக்கு எதிராக சுற்றுச்சூழல்' பற்றிய ஒரு படிப்பினை

 இயற்கையுடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் நாடுகளை, புதிய ஆய்வறிக்கை தரவரிசைப்படுத்துகிறது. திறன் சார்ந்த வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க முடியாது என்று நினைக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு ஒரு முக்கியமான செய்தியை வழங்குகிறது.


கடந்த முப்பது ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் விதிகளை உருவாக்கும் அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது ஒரு முக்கியமான விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது: இயற்கையைப் பாதுகாக்க முயல்பவர்களுக்கு, இயற்கையோடு சேர்ந்து வாழும் அனுபவம் குறித்து அதிகம் தெரிவதில்லை. அவர்களின் நல்ல நோக்கங்களைத் தவிர்த்து, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் தவறான பிரிவை ஏற்படுத்துவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

'ஆம்பியோ' (Ambio) என்ற பத்திரிகையில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை, மக்கள் இயற்கையுடன் எவ்வளவு தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அளவிட 61 நாடுகளில் 56,968 பேரை ஆய்வு செய்தது. 'இயற்கைத் தொடர்பு' (Nature-connectedness) என்பது ஒரு உளவியல் கருத்தாகும். இது மக்களுக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவை அளவிடுகிறது. இத்தகைய தொடர்புகள் மக்களின் நல்வாழ்வைப்  பாதிக்கின்றன என்றும், மக்கள் சுற்றுச்சூழலுடன் எவ்வாறு செயல்படுகிறார்கள் போன்ற அனைத்துமே தொடர்புடையவை என்றும் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


ஆய்வின்படி, நேபாளம் இயற்கையுடன் மிகவும் தொடர்புடைய நாடாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் உள்ளன. இந்தியா 22வது இடத்தில், நடுப்பகுதியில் மேல் எல்லையில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து, ஸ்பெயின், ஜப்பான், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகள் இயற்கையுடன் மிகக் குறைந்த பிணைப்பைக் கொண்டுள்ளன. அரசியல் செயல்பாடுகளுக்கும் மக்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனி, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஈரானை விட மிகவும் வலுவான பசுமை குழுக்களை கொண்டுள்ளன. ஆனால், இந்த ஆய்வின்படி, அங்கே உள்ள மக்கள், மனிதர்களைத் தவிர வேறு உயிரினங்களுடன் (அதாவது விலங்குகள் அல்லது இயற்கையுடன்) பிணைப்பை ஏற்படுத்துவது குறைவாக உள்ளது. "ஆன்மீகம்" என்பது ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதற்குச் சாதகமானத் தொடர்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உலக வங்கியின் வணிகம் செய்வதற்கான எளிதான குறியீட்டில் (Ease of Doing Business index) உயர் இடத்தைப் பெறுவது அதற்கு நேர்மாறாக இணைக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றாகச் செல்ல முடியாது, "முன்னேற்றம்" மற்றும் "வளர்ச்சி" ஆகியவை தனித்தனியானவை என்ற பழைய சிந்தனைக்கு நாம் திரும்பிச் செல்கிறோம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறதா? என்கிற சந்தேகம் எழுகிறது.  இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடம் என்னவென்றால், செவிகொடுத்துக்கேட்பது, கற்றுக்கொள்வது மற்றும் சமநிலையைக் கண்டறிவதுதான். பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மக்களும் "வளர்ச்சி"யை விரும்புகிறார்கள். நகரங்களையும் நாடுகளையும் மேலும் "பசுமை" மற்றும் "திறன்" சார்ந்து மாற்றுவதற்காக திட்டமிடுவதற்கு முன், இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களிடம் பேசுவதும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவுதும் தான் இதற்கான வழியாக இருக்கலாம்.



Original article:

Share:

அணுசக்தி சட்டம் (1962) பற்றி . . . -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


குளிர்கால கூட்டத்தொடரின் காலக்கெடுவதற்கான இலக்கு வைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், உலகளாவிய அணுசக்தி ஒத்துழைப்புகளைத் தேடுவதற்கான இந்தியாவின் முயற்சி இரண்டு முக்கிய கொள்கை இலக்குகளால் வழிநடத்தப்படுகிறது என்று அந்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். முதலாவதாக, நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வரம்புகளைக் கடப்பதற்கும் இந்தியாவுக்கு அவசரமாக மாற்று அடிப்படை மின்தேவை ஆதாரங்கள் (base load power sources) தேவை. இரண்டாவதாக, அணுசக்தி ஒத்துழைப்புகளுக்கான வெளிப்புற அணுகல் தொழில்நுட்பத்தின் தேவையை விட மூலதனத்தின் தேவையால் அதிகம் இயக்கப்படுகிறது.


இந்தியாவின் தற்போதைய அணுசக்தி தொழில்நுட்பமான அழுத்தப்பட்ட கன நீர் உலை (Pressurised Heavy Water Reactor (PHWR)) அளவை அதிகரிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும் இது நிகழ்கிறது. மேற்கு ஆசியாவின் இறையாண்மை நிதிகள் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் ஆரம்பகாலத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக ஒரு அதிகாரி கூறினார். அணுசக்தியை விரிவுபடுத்தும் இந்தியாவின் இலக்கை அடைய நிதியளிக்க அவர்கள் உதவ விரும்புகிறார்கள். சிறிய மட்டு அணு உலைகளின் (small modular reactors (SMR)) உற்பத்திச் சங்கிலியில் நுழைவதும் அவர்களின் தேவையில் அடங்கும்.


எதிர்காலத்தில் அணுசக்தியை வணிக ரீதியாக போட்டித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு சிறிய மட்டு அணு உலைகள் (SMR) இப்போது முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.


முதல் திருத்தம் இந்தியாவின் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில்  (Civil Liability for Nuclear Damage Act 2010 (CLNDA)) சில விதிகளைத் தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அணு விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதற்கும், பணம் செலுத்துவதற்கான பொறுப்பு மற்றும் நடைமுறைகளை வரையறுப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இது அமெரிக்காவிலிருந்து வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் மற்றும் பிரான்சிலிருந்து EDF போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் ஒரு தடையாகக் கருதப்படுகிறது.


இந்தச் சட்டம், "செயல்படுத்துபவரின் பொறுப்பை" (liability of operators) விநியோகர்களின் பொறுப்பு என்று மாற்றுகிறது. ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாட்டாளர் பொதுவாக அரசுக்குச் சொந்தமான இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India Ltd (NPCIL)) போன்ற ஒரு நிறுவனமாக இருக்கும். அதே நேரத்தில், விநியோகர்கள் வெளிநாட்டு உலை உற்பத்தியாளர்களாகவோ அல்லது L&T அல்லது வால்சந்த்நகர் நிறுவனம் போன்ற உள்நாட்டு உபகரண நிறுவனங்களாகவும் இருக்கலாம்.


அணுசக்தி மற்றும் வழக்கமான மின் திட்டங்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு விற்பனையாளர்கள் இந்த விதியைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அணுசக்தி விபத்து ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொறுப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, இந்தியாவின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்வது குறித்த கவலைகளுக்கு, செயல்பாட்டாளர்களின் 'பரிந்துரை உரிமை' (‘right of recourse’) என்ற விதியை ஒரு காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். இதைச் சமாளிக்க, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பொறுப்புகளை வரம்பிடுதல் மற்றும் அரசு ஆதரவு நிதி திரட்டல் உள்ளிட்ட தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.


திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது பெரிய திருத்தம் அணுசக்தி சட்டத்தை 1(Atomic Energy Act, 1962)  மாற்றுவதை கவனம் செலுத்துகிறது. இது தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையங்களை இயக்குவதில் பங்கேற்க அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் புதிய அணுசக்தி திட்டங்களில் 49 சதவீத உரிமையை வைத்திருக்க முடியும். இந்தத் திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்த இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும்.


இதுவரை, அணுசக்தி இந்தியாவின் மிகவும் மூடப்பட்ட துறைகளில் துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, அதன் வணிகத் திறனைப் பயன்படுத்த உதவும் ஒரு சீர்திருத்த உந்துதலாக இந்த சட்டத் திருத்தங்களின் தொகுப்பு பார்க்கப்படுகிறது.


சிவில் அணுசக்தித் துறையில், இந்தியா இப்போது சிறிய மட்டு உலைகளை (SMRs) ஊக்குவித்து வருகிறது. இவை வழக்கமான உலைகளின் திறனில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொண்ட மேம்பட்ட உலைகளாகும். ஆனால், இன்னும் அதிக அளவு குறைந்த கார்பன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தொழில்துறை உமிழ்வைக் குறைப்பதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக இந்தியா இதைப் பார்க்கிறது. இந்த தொழில்நுட்பத்தை உலகளவில் பரப்புவதில் முன்னணிப் பங்கை வகிக்கும் அதன் திறனையும் நாடு ஊக்குவித்து வருகிறது.


மின் நிலைய செயல்பாட்டாளருக்கு ஓரளவு நெகிழ்வுத்தன்மையை வழங்கக்கூடிய அடிப்படை தேவை சக்தியை வழங்குவதில் இவை முக்கியமானவையாக உள்ளது. குறிப்பாக, மின்நிலையங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைச் சேர்ப்பதன் கட்டாயம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் மாறுபாடுகளை சமநிலைப்படுத்த அதிக அடிப்படை தேவை உற்பத்தியைத் தூண்டும் சவாலைக் கொண்டுவருகிறது. இந்த விஷயத்தில் அனல் மின் உற்பத்தி முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அணுசக்தி மிகவும் கார்பன்-நடுநிலை அடிப்படை சுமை உற்பத்தி விருப்பத்தை வழங்குகிறது.


நாட்டிற்குள் சிறிய மட்டு உலைகளை (small modular reactors (SMR)) ஊக்குவிப்பதற்காக, இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) மார்ச் 2024-ல் ஒரு ஏலத்தை வெளியிட்டது. இந்த ஏலம் இந்தியாவின் சொந்த அணு உலைகளின் சிறிய பதிப்பிற்கானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா பவர் மற்றும் அதானி பவர் போன்ற முக்கிய தனியார் நிறுவனங்கள், மேலும் மூன்று நிறுவனங்களுடன் சேர்ந்து, SMR அடிப்படையிலான அணுசக்தி திட்டங்களை அமைப்பதில் முறையான ஆர்வத்தைக் காட்டியுள்ளன.


குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்களில் சுமார் 16 தளங்கள் தற்காலிகமாகக் குறிக்கப்பட்டுள்ளன. பாரத் சிறிய மட்டு உலைகள் (Small Modular Reactors (SMR)) இந்திய அணுசக்திக் கழகத்தின் (NPCIL) மேற்பார்வையின் கீழ் கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு நடத்தும் நிறுவனம் செயல்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் சொத்து உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும், அதே நேரத்தில் வெற்றிகரமான ஏலதாரர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படும் நிகர மின்சாரத்தின் மீது உரிமைகளைப் பெறுவார்கள்.


அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy (DAE)) ஒரு பகுதியாக இருக்கும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா குறைந்தது மூன்று சிறிய மட்டு அணு உலை (SMR) முன்மாதிரிகளை உருவாக்கி வருகிறது. இந்த முன்மாதிரிகள் மூன்று முக்கிய வகையான உலைகளைக் குறிக்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா? :


சிறிய மட்டு உலைகள் (SMR) அடிப்படையில் ஒரு யூனிட்டுக்கு 30MWe முதல் 300 மெகாவாட் மின்சாரம் (MWe) வரை மின் திறன் கொண்டவை. இந்தியாவிலும் பிற இடங்களிலும் தற்போது நிறுவப்பட்டுள்ள வழக்கமான அணு உலைகள் பொதுவாக 500 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


சிறிய மட்டு உலைகள் (SMR) எளிமையான மற்றும் மட்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் பாகங்கள் ஒரே இடத்தில் உருவாக்குவதற்குப் பதிலாக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படலாம். இது செலவுகளைக் குறைக்கிறது மற்றும் வெவ்வேறு இடங்களில் நிறுவுவதை எளிதாக்குகிறது. இந்த நன்மைகள் காரணமாக, சிறிய மட்டு உலைகள் (SMR) சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் முன்னுதாரணமாக மாறிவிட்டன.



Original article:

Share:

உள்ளூர் நில அமைப்பு காற்று மாசுபாட்டுக்கு எவ்வாறு பங்களிக்கிறது? -அபினவ் ராய்

 டெல்லியில் காற்றின் தரம் "மிகவும் மோசமான" நிலைக்கு தள்ளினாலும், மெதுவான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை தலைநகரில் காற்றானது கடுமையான நிலைமையை நோக்கி மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இடம்சார்ந்த காரணிகள் மற்றும் உள்ளூர் நிலப்பரப்பு காற்று தர சவால்களை (air quality challenges) எவ்வாறு மேலும் அதிகரிக்கின்றன?


இந்திய தலைநகரம் தொடர்ந்து மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இது பல நாட்களாக 'கடுமையான' அல்லது 'மிகவும் மோசமான' வரம்பில் உள்ளது. நவம்பர் 3 திங்கட்கிழமை அன்று, PM2.5 செறிவின் அளவு 168 µg/m³ ஆக அளவிடப்பட்டது. இது 24 மணி நேரத்திற்கு உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) வரம்பான 15 µg/m³-ஐ விட மிக அதிகமாகும்.


அண்டை மாநிலங்களில் வாகன உமிழ்வு மற்றும் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது போன்ற காரணிகள் காற்று மாசுபாட்டிற்குப் பின்னால் உள்ள சில முக்கிய காரணிகளாக இருந்தாலும், மெதுவான காற்று மற்றும் குறைந்து வரும் வெப்பநிலை நிலைமையை மோசமாக்குகிறது. இந்த நிலைமைகள் விரைவில் தலைநகரில் காற்றானது கடுமையான நிலைமைக்கு வழிவகுக்கும்.


ஆனால் இந்த காரணிகளைத் தவிர, உள்ளூர் நிலப்பரப்பு காற்று மாசுபாட்டை எவ்வாறு பாதிக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பொது சுகாதார பிரச்சினைகளைத் தவிர, இது என்ன வகையான சமூக-பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது? காற்று மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் என்ன இலக்குக்கான தலையீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது?


காற்று மாசுபாட்டிற்கான உலகளாவிய மையமாக தெற்காசியா


IQAir-ன் 2024 உலக காற்று தர அறிக்கை (World Air Quality Report) இந்தியாவை 5-வது மிகவும் மாசுபட்ட நாடாக மதிப்பிட்டுள்ளது. இந்தியாவின் சராசரி PM2.5 செறிவு 50.6 µg/m³ ஆகும். அதிக மாசு அளவுகளைக் கொண்ட நாடுகள் சாட் (Chad) (91.8 µg/m³), வங்காளதேசம் (78.0 µg/m³), பாகிஸ்தான் (73.7 µg/m³), மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு (58.2 µg/m³). தஜிகிஸ்தான் 6-வது இடத்தையும், நேபாளம் 7-வது இடத்தையும் பிடித்தன.


தெற்காசியா காற்று மாசுபாட்டிற்கான உலகளாவிய இடமாக மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்தப் பகுதியில் உள்ள பல நகரங்கள், குறிப்பாக குளிர்காலத்தில், மிக உயர்ந்த காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) நிலைகளைப் பதிவு செய்கின்றன. புது தில்லி மிகவும் மாசுபட்ட தலைநகராக தரவரிசைப்படுத்தப்பட்டது. உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்களும் அடங்கும்.


மேலும், காற்று மாசுபாடு ஒரு இடத்தில் மட்டும் நின்றுவிடாது. அது நீண்ட தூரம் பயணித்து எல்லைகளைக் கடக்க முடியும். உலக வங்கி இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள ஆறு "வான்வெளிப் பகுதிகளை" அடையாளம் கண்டுள்ளது. இந்த காற்றுவெளிப் பகுதிகள் புவியியல் மற்றும் காலநிலையால் வரையறுக்கப்பட்ட பகுதிகள், அவை மாசுபடுத்திகள் அவற்றின் குறுக்கே செல்ல அனுமதிக்கின்றன.


1. மேற்கு/மத்திய இந்தோ-கங்கை சமவெளி : இதில், பஞ்சாப் (பாகிஸ்தான்), பஞ்சாப் (இந்தியா), ஹரியானா, ராஜஸ்தானின் சில பகுதிகள், சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை அடங்கும்.


2. மத்திய/கிழக்கு இந்தோ-கங்கை சமவெளி : பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் வங்காளதேசம் ஆகியவை அடங்கும்.


3. மத்திய இந்தியா 1 : ஒடிசா மற்றும் சத்தீஸ்கரை உள்ளடக்கியது.


4. மத்திய இந்தியா 2 : கிழக்கு குஜராத் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவை உள்ளடக்கியது.


5. வடக்கு/மத்திய சிந்துநதி சமவெளி : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியது.


6. தெற்கு சிந்து சமவெளி மற்றும் அதற்கு மேற்கே:  தெற்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தான், ஈரானின் கிழக்குப் பகுதி வரை நீண்டுள்ளது.


குளிர்காலத்தில், வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகிறது. இதன் விளைவாக, மாசுபடுத்திகள் பாகிஸ்தானின் பஞ்சாபிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் வரை எல்லைகளைக் கடக்கின்றன. அதேபோல், வங்காளதேசத்தில் உள்ள பல நகரங்கள் இந்தியாவிலிருந்து வரும் மாசுபாட்டை எதிர்கொள்கின்றன. காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த, பிராந்திய அளவிலான முயற்சிகளின் அவசியத்தை இந்த நிலைமை சார்ந்த யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டினாலும், உள்ளூர் புவியியல் அம்சங்கள் காற்றின் தர சவால்களை மேலும் அதிகரிக்கின்றன.


உள்ளூர் நிலவமைப்பு காற்றின் தரத்தை எவ்வாறு தீர்மானிக்கிறது?


காற்றின் தரத்தை நிர்ணயிப்பதில் உள்ளூர் நிலவமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. டெல்லி இந்தோ-கங்கை சமவெளிகளுக்குள் (Indo-Gangetic plains (IGP)) ஒரு கிண்ண வடிவ பகுதியில் அமைந்துள்ளது. இது வடக்கில் இமயமலை, தென்மேற்கில் ஆரவல்லி மலைகள் மற்றும் தெற்கில் மால்வா மற்றும் தக்காண பீடபூமிகளால் சூழப்பட்டுள்ளது.


இந்த வகையான நிலப்பரப்பு மாசுபடுத்திகள் பரவுவதை கடினமாக்குகிறது. இமயமலை வடக்கு நோக்கி கனமான மற்றும் மாசுபட்ட குளிர்காலக் காற்றின் இயக்கத்தைத் தடுக்கிறது. இதன் விளைவாக, காற்று வங்காள விரிகுடாவை அடைவதற்கு முன்பு வடக்கு சமவெளிகளில் கிழக்கு நோக்கி நகர்கிறது.


மேலும், பருவமழைக்குப் பிறகு, காற்றில் ஈரப்பதம் குறைவாகவும், வெப்பநிலை குறைவாகவும், காற்றின் வேகம் குறைவாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில், மாசுபடுத்திகள் தரைக்கு அருகில் இருக்கும். இது அவற்றின் "கலக்கும் உயரத்தை" (mixing height) குறைக்கிறது, இது மாசுபடுத்திகள் பரவக்கூடிய உயரமாகும்.


குளிர்காலத்தில், வெப்பநிலை தலைகீழ் நிலைமைகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில், குளிர்ந்த காற்று மற்றும் மூடுபனிக்கு மேலே சூடான காற்றின் ஒரு அடுக்கு இருக்கும்போது, அது இந்த மூடுபனி மாசுபடுத்திகளுடன் கலக்கும்போது, ​​அது புகைமூட்டத்தை உருவாக்குகிறது. புகைமூட்டம் தெரிவுநிலையைக் குறைத்து "கலங்கல்நிலை தீவு விளைவு" (Turbidity Island effect) என்று அழைக்கப்படுவதை உருவாக்குகிறது.


பயிர்க் கழிவுகளை எரித்தல் மற்றும் பண்டிகைகளின்போது பட்டாசுகள் வெடித்தல் போன்ற பருவகால காரணிகள், ஏற்கனவே மோசமைடைந்த காற்றின் தரத்தை மேலும் அதிகரிக்கின்றன. நிலக்கரி மற்றும் உயிரி எரிப்பு, வாகன உமிழ்வு, தொழில்துறை மாசுபாடு, செங்கல் சூளைகள், முறையற்ற கழிவு மேலாண்மை, கட்டுப்பாடற்ற கட்டுமான தூசி, காடழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மாசுபாடு ஆகியவை ஆண்டு முழுவதும் காற்றின் தொடர்ச்சியான மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த மாசுபாட்டின் இந்த அனைத்து ஆதாரங்களும் ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளன.


உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முன்னணி ஆபத்து காரணியாக காற்று மாசுபாடு உள்ளது.


உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் 99 சதவீதம் பேர் பரிந்துரைக்கப்பட்ட காற்று தரங்களை பூர்த்தி செய்யாத பகுதிகளில் வாழ்கின்றனர். காற்று மாசுபாடு இப்போது உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முன்னணி ஆபத்து காரணியாக மாறியுள்ளது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட லான்செட் உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த கூடுதல் அறிக்கை, 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 1.7 மில்லியன் இறப்புகள் மனிதனால் ஏற்படும் PM2.5 மாசுபாட்டால் 1.7 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்று கூறுகிறது. இது 2010 முதல் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆரம்பகால மரணங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 339.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9.5 சதவீதமாகும்.


குறிப்பாக, இந்திய-கங்கை சமவெளிகள் உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மேலும், குளிர்காலத்தில் டெல்லியின் காற்றின் தரம் மோசமடைகிறது. இது மோசமானது (201-300), மிகவும் மோசமானது (301-400), கடுமையானது (401-500) மற்றும் இன்னும் சில நேரங்களில் இந்த அளவுகளை மீறுகிறது.


ஆபத்தான காற்றை சுவாசிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்குகிறது. இது ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்தும். இது பிற நுரையீரல் நோய்கள், நோயெதிர்ப்பு அமைப்பு பிரச்சினைகள் மற்றும் இதயப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக குழந்தைகளில் இது மூளை வளர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.


குழந்தைகளுக்கு பெரியவர்களை விட ஒப்பீட்டளவில் அதிக சுவாச விகிதம் உள்ளது மற்றும் உடல் எடையின் அலகுக்கு அதிக காற்றை சுவாசிக்கின்றனர், இது ஒரே சூழலுக்கு ஆளாகும்போது அவர்களை பெரியவர்களை விட அதிக பாதிக்கப்படச் செய்கிறது. இது சுகாதார செலவுகளை அதிகரிக்கிறது, நாட்டின் உற்பத்தி திறனை மேலும் தடை செய்கிறது. இது காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் அவசரத் தேவையை அடிக்கோடிடுகிறது.


கொள்கை மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள்


காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (Graded Response Action Plan (GRAP)) இரண்டாம் நிலை டெல்லியில் நடைமுறையில் உள்ளது. 2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்ட (GRAP), பல்வேறு காற்று தர அறிக்கை (AQI) வகைகளின் கீழ் இலக்கு தலையீடுகளை செயல்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. கூடுதலாக, 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை (முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் 2015-ல் இயக்கப்பட்டது) பயன்பாட்டில் இருந்து அகற்றுவதை கட்டாயமாக்கும் கொள்கை இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது இப்போது இறுதித் தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (National Clean Air Programme (NCAP)) ஜனவரி 2019-ல் தொடங்கப்பட்டது. இது 131 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் விரிவான கண்காணிப்பு, பல்வேறு துறைகளில் இருந்து உமிழ்வைக் குறைத்தல் மற்றும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புகை எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், புகை கோபுரங்களை அமைத்தல், ஒரு முன்னோடி மேக விதைப்புத் திட்டத்தைத் தொடங்குதல் மற்றும் BS III மற்றும் BS IV இயந்திரங்களைக் கொண்ட வணிக வாகனங்களின் நுழைவை கட்டுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் புகை கோபுரங்கள் போன்ற நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட செயல்திறனைக் காட்டியுள்ளன. மேக விதைப்புக்கு குறிப்பிட்ட வானிலை நிலைமைகள் தேவை, அதிகளவில் செலவாகும். மேலும், ஒரு குறிப்பிட்ட பகுதியை உள்ளடக்கியது. இது தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு இது நீடித்து நிலைக்க முடியாததாக ஆக்குகிறது.


கடந்த மாதம் டெல்லி அரசாங்கம் IIT கான்பூருடன் இணைந்து மேக விதைப்பு முறையை முயற்சித்தது. அந்த முயற்சி தோல்வியடைந்தது, குறுகியகால மற்றும் எதிர்வினை நடவடிக்கைகள் காற்று மாசுபாடு சவால்களை திறம்பட சமாளிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.


இந்த ஆண்டு, தீபாவளியின்போது, ​​உச்சநீதிமன்றம் பட்டாசுகள் மீதான மொத்த தடையை ஓரளவு தளர்த்தியது. இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை சோதனை அடிப்படையில் அனுமதித்தது. இருப்பினும், டெல்லி-NCR பிராந்தியம் தீபாவளிக்கு அடுத்தநாள் காலையில் "மிகவும் மோசமான" முதல் "கடுமையான" பிரிவுகளில் AQI-ஐ பதிவு செய்தது. குறிப்பாக, தீபாவளி இரவில் 39 கண்காணிப்பு நிலையங்களில் 28-ன் தரவுகள் காணாமல் போயின, இது ஒரு பெரிய தரவு இடைவெளியைக் காட்டுகிறது.


காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான மற்றும் மிகவும் முன்னெச்சரிக்கையான அணுகுமுறையின் அவசியத்தை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இது உரிமைகள் சார்ந்த பிரச்சினையாகக் கூட கருதப்பட வேண்டும்.


எதிர்வினை உத்திகளிலிருந்து தடுப்பு உத்திகளுக்கு மாற வேண்டிய அவசியம்


2022-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலை அணுகுவதை உலகளாவிய மனித உரிமையாக அறிவித்தது. சுவாசிக்கக்கூடிய காற்றின் தர வரம்புகள் தொடர்ந்து மீறப்படுவது, எதிர்வினையாற்றும் உத்திகளிலிருந்து தடுப்பு உத்திகளுக்கு அணுகுமுறையை மாற்றக் கோரும் ஒரு தீவிரமான பொது சுகாதார அவசரநிலையை முன்வைக்கிறது. இதற்கு தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் பரந்த அளவிலான, ஒருங்கிணைந்த கொள்கைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பின்னர் இந்தக் கொள்கைகளை உள்ளூர் மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு சரிசெய்யலாம்.


சுத்தமான பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பாதசாரி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்யவேண்டிய அவசியமும் உள்ளது. தூய்மையான போக்குவரத்திற்கான ஒருங்கிணைந்த கொள்கைகள், மேம்படுத்தப்பட்ட கட்டுமான நடைமுறைகள், அதிகரித்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தழுவல், வைக்கோல் எரிப்பைக் குறைக்க நிலையான விவசாய முறைகள், கடுமையான உமிழ்வு கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றை முறையாக செயல்படுத்துவது அவசியம். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும், ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை உறுதிசெய்வதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை.



Original article:

Share: