மாதாந்திர தவணைகளில் (EMIs) மாற்றம் இல்லை: இந்திய ரிசர்வ் வங்கி ஏன் மீண்டும் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது? -ஹிதேஷ் வியாஸ் , ஜார்ஜ் மேத்யூ

 இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியக் கொள்கை: பணவியக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee (MPC) முடிவுகளுக்குப் பின்னால் உள்ள சிந்தனை என்ன? FY24 க்காக தேசிய புள்ளியியல் அமைப்பால் (NSO) கணிக்கப்பட்ட 7.3% இலிருந்து, FY25 இல் 7% வளர்ச்சியை ஏன் கணித்துள்ளது?


வீடுகள், வாகனங்கள், தனிநபர் மற்றும் பிற நோக்கங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இப்போதைக்கு அப்படியே இருக்கும். வியாழக்கிழமை பிப்ரவரி 8, இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) முதன்மை கொள்கை கருவியான ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்தது.


இந்த முடிவு, எதிர்பார்த்தபடி, பணவியக் கொள்கைக் குழுவின் (MPC) ஆறு உறுப்பினர்களில் 5-1 பெரும்பான்மையால் அவர்களின் இருமாத கொள்கை மதிப்பாய்வின் போது எடுக்கப்பட்டது.


மத்திய வங்கி பணவியக் கொள்கை நிலைப்பாட்டை "இணக்கப்பாட்டை திரும்பப் பெறுதல்" (withdrawal of accommodation) என்றும் பேணி வருகிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றத்தைக் குறிப்பிடும் அதே வேளையில், நடப்பு நிதியாண்டு FY24 க்கான தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின்  (National Statistical Office) 7.3% கணிப்புடன் ஒப்பிடும்போது, 2025 நிதியாண்டில் 7% குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை கொள்கை குழு கணித்துள்ளது.


அரசாங்கம், பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டில், 2023-24 ஆம் ஆண்டில் 8.9% உடன் ஒப்பிடும்போது, பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 10.5% அதிக பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியை எதிர்பார்க்கிறது.


உணவு விலைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை மத்திய வங்கி 5.4% ஆக பராமரித்துள்ளது.


பணவியக் கொள்கைக் குழுவின் (MPC) உறுப்பினர் ஜெயந்த் வர்மா மற்றவர்களுடன் உடன்படவில்லை மற்றும் ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்கு வாக்களித்தார். கொள்கை நிலைப்பாட்டை "சமரசத்தை திரும்பப் பெறுதல்" (withdrawal of accommodation) என்பதில் இருந்து "நடுநிலை" (neutral) என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால நிதிக்காக வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதமாகும். ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான பணவியக் கொள்கைக் குழு (MPC), இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறித்து முடிவுகளை எடுக்கிறது. பணவியக் கொள்கைக் குழுவின் (MPC), தீர்மானங்கள் பற்றிய மேலதிக விபரங்கள், சூழல் மற்றும் விளக்கங்களுக்கு பின்வரும் தகவல்களைப் பார்க்கவும்.


முதலாவதாக, கடன் மற்றும் வைப்பு விகிதங்களுக்கு என்ன நடக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்?


கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் பெரும்பாலும் மாறாமல் இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியால் சில்லறை கடன்கள் மீதான ஆபத்தானது சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, சில வகை சில்லறை கடன்கள் மிகவும் விலை உயர்ந்ததாக மாறக்கூடும். இது பல வங்கிகள் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (Marginal Cost of the Fund-based Lending Rate (MCLR)) விளிம்பு செலவை உயர்த்த வழிவகுத்தது.


வெளிப்புற அமர்வுமதிப்பின் கடன் விகிதங்கள் என அழைக்கப்படும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இது கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் சமமான மாதாந்திர தவணைகள் (EMIs) அப்படியே இருக்கும்.


இருப்பினும், நிதிகளுக்கான பரஸ்பர நிதிகளின் (mutual funds (MFs)) போட்டியின் காரணமாக, வங்கிகள் வைப்பு வளர்ச்சியில் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, வைப்பு விகிதங்கள் குறிப்பிட்ட வகைகளில் அதிகரிக்கக்கூடும்.


ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏன் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது?


ரெப்போ விகிதத்தை மாற்றாததற்கு முக்கிய காரணம், சில்லறை பணவீக்கம் (retail inflation) இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% ஐ விட அதிகமாக உள்ளது.


அக்டோபரில் 4.87 சதவீதமாகவும், செப்டம்பரில் 5.02 சதவீதமாகவும் இருந்த சில்லறை பணவீக்கம் (retail inflation) நவம்பரில் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி FY25 க்கான 4.5% சில்லறை பணவீக்கத்தை (retail inflation) கணித்துள்ளது.


எதிர்கால பணவீக்க போக்கு உணவு பணவீக்க கண்ணோட்டத்தால் பாதிக்கப்படும் என்றும், உணவு விலைகளை பாதிக்கும் பாதகமான சூழல்  நிகழ்வுகள் காரணமாக நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்றும் ஆளுநர் சக்திகானந்த தாஸ் குறிப்பிட்டார்.


இது தொடர்ச்சியான ஆறாவது பணவியக் கொள்கையைக் குறிக்கிறது. அங்கு பணவியக் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை 6.5% ஆக பராமரித்துள்ளது. கடைசி அதிகரிப்பு பிப்ரவரி 2023 இல் 6.25% இலிருந்து 6.5% ஆக இருந்தது. மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில், கொள்கை விகிதம் 250 bps அதிகரிப்பைக் கண்டது. அங்கு ஒரு அடிப்படை புள்ளி ஒரு சதவீத புள்ளியின் நூறில் ஒரு பகுதிக்கு சமம் ஆகும்.


கொள்கை நிலைப்பாட்டில் ஏன் எந்த மாற்றமும் இல்லை?


சமீபத்திய வாரங்களில் பணப்புழக்கத்தில் பற்றாக்குறை இருந்தபோதிலும், இந்திய ரிசர்வ் வங்கி அதன் கொள்கை நிலைப்பாட்டை "சமரசத்தை திரும்பப் பெறுதல்" (withdrawal of accommodation) என்று வைத்திருக்கிறது. இந்த முடிவு முழுமையற்ற பரிமாற்றம், 4% இலக்குக்கு மேல் பணவீக்கம் மற்றும் அதை தொடர்ந்து இலக்குக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளால் பாதிக்கப்படுகிறது என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் விளக்கினார்.


இருப்பினும், சில ஆய்வாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கி "சமரசத்தை திரும்பப் பெறுதல்" (withdrawal of accommodation) என்பதில் இருந்து 'நடுநிலை' (neutral) நிலைப்பாட்டிற்கு மாறுவதற்கு ஒரு கட்டாய காரணம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கடந்த சில காலாண்டுகளில் நிதி நிலைமைகள் இறுக்கமடைந்துள்ளன. உண்மையான வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. மேலும் பணவீக்கம் குறைந்து வருவதால் அவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கூடுதலாக, பணப்புழக்க நிலைமைகளும் இறுக்கமடைந்துள்ளன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.




Original article:

Share:

சில பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கு மற்றவர்களை விட அதிக இடஒதுக்கீடு சலுகைகள் கிடைக்குமா: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீர்ப்பின் விவாதம் என்ன? - அஜோய் சின்ஹா கற்பரம், அபூர்வா விஸ்வநாத்

 ஆதிக்கம் செலுத்தும் பட்டியல் வகுப்பினருடன் ஒப்பிடும்போது இடஒதுக்கீட்டுடன் கூட சில சாதி வகுப்பினர்கள் கணிசமாக குறைவாக பிரதிநிதித்துவம் கொண்டுள்ளன என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. இந்த சாதிகளுக்கு பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Scheduled Caste(SC)) ஒதுக்கீட்டுக்குள் தனி இட ஒதுக்கீட்டை உருவாக்க அவர்கள் முன்மொழிகின்றனர்.


இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு புதன்கிழமை பிப்ரவரி 8 அன்று பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது.


சில மாநிலங்களில் இடஒதுக்கீடு இருந்தபோதிலும், ஆதிக்கம் செலுத்தும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்களுடன் ஒப்பிடும்போது சில வகுப்பினர் மிகவும் குறைவாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன என்று வாதிட்டன. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) ஒதுக்கீட்டில் உள்ள 15% க்குள் அத்தகைய சாதிகளுக்கு தனி ஒதுக்கீட்டை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதன் பலன்கள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


2004 ஆம் ஆண்டில், 'ஈ.வி.சின்னையா vs ஆந்திர மாநிலம்' (E.V. Chinnaiah vs State of Andhra Pradesh) என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அரசியலமைப்பின் 341 வது பிரிவின் கீழ் எந்த சமூகங்கள் இடஒதுக்கீடு சலுகைகளுக்கு தகுதியானவை என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், மாநிலங்கள் இதை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பளித்தது.


தேவைப்படும் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை நியாயமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என்று கூறி, சின்னையா வழக்கின் தீர்ப்பின் முடிவை பல மாநிலங்கள் சவால் செய்கின்றன. எவ்வாறாயினும், சில பிரதிவாதிகள் சின்னையா தீர்ப்பை ஆதரிக்கின்றனர். மேலும், அனைத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.


ஆரம்பம்


1975 ஆம் ஆண்டில், பஞ்சாப் அரசு தனது 25% பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) இடஒதுக்கீட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தது. முதல் பிரிவினர் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களாகக் கருதப்படும் பால்மீகி மற்றும் மசாபி சீக்கிய சமூகங்களுக்கு பிரத்தியேகமாக இடங்களை ஒதுக்கினர். கல்விக்கும், பொது வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை அளித்தனர். இரண்டாவது பிரிவில் மீதமுள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினர் அடங்குவர்.


இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட 3௦ ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அமர்வு 2000 முதல் இதேபோன்ற ஆந்திர சட்டத்தை ரத்து செய்தபோது சட்ட சவால்களை எதிர்கொண்டது. ஈ.வி.சின்னையா vs ஆந்திர மாநிலம்' (E.V. Chinnaiah vs State of Andhra Pradesh) என்ற வழக்கில், ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுப் பலன்களைக் கொண்ட பட்டியலிடப்பட்ட வகுப்பினர் சமூகங்களின் விரிவான பட்டியலை உள்ளடக்கியதால், இந்த சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது.


இவற்றில், துணை பிரிவில் உள்ள சமூகங்களை வித்தியாசமாக நடத்துவதன் மூலம் சமத்துவத்திற்கான உரிமையை மீறும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீண்டாமை காரணமாக வரலாற்று ரீதியான பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு அட்டவணையில் சில சாதிகளை அரசியலமைப்பு வகைப்படுத்துவதால், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) ஒற்றை, ஒரே மாதிரியான குழுவாக கருதப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.


இடஒதுக்கீட்டிற்கான பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான (SC) பட்டியலை உருவாக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கிய அரசியலமைப்பின் 341 வது பிரிவை மேற்கோள் காட்டி, துணை பிரிவு உட்பட இந்த பட்டியலை மாநிலங்கள் "தலையிடவோ" (interfere) அல்லது "தொந்தரவு செய்யவோ" (disturb) முடியாது என்று நீதிமன்றம் கூறியது.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம், 'டாக்டர் கிஷன் பால் vs பஞ்சாப் மாநிலம் (Dr. Kishan Pal vs State of Punjab), '1975 அறிவிப்பை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்தது.


மேல்முறையீடு


அக்டோபர் 2006 இல், பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவிப்பை செல்லாது என்று அறிவித்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பஞ்சாப் அரசு பஞ்சாப் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகளில் இட ஒதுக்கீடு) சட்டம் (Backward Classes (Reservation in Services) Act), 2006 ஐ நிறைவேற்றுவதன் மூலம் சட்டத்தை புதுப்பிக்க முயன்றது. இந்த சட்டம் பால்மீகி மற்றும் மசாபி சீக்கிய சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டில் முதல் முன்னுரிமையை மீண்டும் அறிமுகப்படுத்தியது.


2010 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த விதியை நிராகரித்தது. இதையடுத்து பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


2014 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் 'தேவிந்தர் சிங் vs பஞ்சாப் மாநிலம்' (Davinder Singh v State of Punjab) என்ற வழக்கில், 2004 இ.வி.சின்னையா தீர்ப்பின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மேல்முறையீட்டை அனுப்பியது. இதன் அடிப்படையில், அரசியலமைப்பு விளக்கம் உச்ச நீதிமன்றத்தின் குறைந்தது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வைக் கட்டாயப்படுத்துகிறது.


இ.வி.சின்னையா தீர்ப்பை மறுபரிசீலனை


2020 ஆம் ஆண்டில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, நீதிமன்றத்தின் 2004 முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. நீதிமன்றமும் அரசும் "அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது மற்றும் அப்பட்டமான யதார்த்தங்களுக்கு கண்களை மூடிக்கொள்ள முடியாது" என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒரு சீரான குழு என்ற கருத்தை அது நிராகரித்தது. "பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் பட்டியலில் சமத்துவமற்றவர்கள் இருப்பதை வலியுறுத்தியது."


குறிப்பாக, ஈ.வி.சின்னையா தீர்ப்பின் முடிவைத் தொடர்ந்து, "கிரீமி லேயர்" (creamy layer) என்ற கருத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) இடஒதுக்கீட்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


'ஜர்னைல் சிங் vs லக்ஷமி நாராயண் குப்தா' (Jarnail Singh vs Lachhmi Narain Gupta) வழக்கில் 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் "கிரீமி லேயர்" (creamy layer) கருத்தை உச்ச நீதிமன்றத்திலும் சேர்ப்பதை உறுதிப்படுத்தியது. 'கிரீமி லேயர்' (creamy layer) கருத்து இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களுக்கு வருமான வரம்பை விதிக்கிறது. ஆரம்பத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Castes (OBC)) பொருந்தும் என்றாலும், இது 2018 இல் முதல் முறையாக பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) பதவி உயர்வுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.


துணை பிரிவின் அடிப்படையில் கிரீமி லேயர் (creamy layer)  சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து அதிக வளமான சாதியினரை விலக்குவதற்குப் பதிலாக, மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.


தேவிந்தர் சிங் அமர்வில் ஐந்து நீதிபதிகள் (ஈ.வி.சின்னையா) இருந்ததால், ஏழு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு இப்போது இந்த பிரச்சினையை அணுகுகிறது. ஒரு பெரிய அமர்வின் தீர்ப்பு மட்டுமே ஒரு சிறிய அமர்வின் திர்ப்பின் முடிவை மீற முடியும்.


இந்த துணை பிரிவின் உத்தி பஞ்சாபில் உள்ள பால்மீகிகள் மற்றும் மசாபி சீக்கியர்களை மட்டுமல்ல, ஆந்திராவில் மடிகா, பீகாரில் பாஸ்வான்கள், உத்திர பிரதேசத்தில் ஜாடவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் ஆகியோரையும் பாதிக்கும்.


இரு தரப்பு வாதங்களும்


பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங், அரசியலமைப்பு 341-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள மாநிலங்களை மாற்ற முடியாது என்று ஈ.வி.சின்னையா வழக்கில் கூறியது தவறு என்று கூறினார்.


இது, அரசியலமைப்பின் பிரிவு 16(4) மாநில சேவைகளில் "போதுமான பிரதிநிதித்துவம்" (adequately represented) இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடங்களை ஒதுக்க மாநில அரசை அனுமதிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த சொல் "போதுமானதாக" (adequately) மற்றும் "சமமாக" (equally) இல்லை என்பதால், இது குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று சிங் வாதிட்டார்.


பஞ்சாபின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional Advocate General) ஷதன் ஃபராசத், அரசியலமைப்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 342ஏ சின்னையா தீர்ப்பின் முடிவு இனி பொருந்தாது என்பதை தெளிவுபடுத்துகிறது என்று குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் பட்டியலில் இருந்து வேறுபட்டு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் தனி பட்டியலை வைத்திருக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த பிரிவு அதிகாரம் அளிக்கிறது.


முன்னாள் அட்டர்னி ஜெனரல் (Former Attorney General) கே.கே.வேணுகோபால் மீண்டும் நீதிமன்றத்தில் துணை பிரிவு கோரி வாதிட்டார். சின்னையா வழக்கில் தனது அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், துணை பிரிவு இல்லாமல், சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் பின்தங்கிவிடும், இது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை தோற்கடிக்கும் என்று கூறினார்.


பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள அனைத்து சமூகங்களும் தீண்டாமை என்ற களங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். அரசியல் நிர்ணய சபை வேண்டுமென்றே இந்த சமூகங்களுக்கிடையேயான துன்பத்தின் அளவை ஒப்பிடுவதை தவிர்த்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.


குடியரசுத் தலைவர் பிரிவில் பட்டியலிடப்பட்ட ஒரு சமூகம் இடஒதுக்கீடு பலன்களைப் பெறவில்லை என்றால், அவர்கள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் என்ற களங்கத்தை மட்டுமே தாங்குவார்கள் என்று ஹெக்டே வாதிட்டார். மற்றொரு இடையீட்டாளர் இந்தக் கருத்தை ஆதரித்தார். மாநிலங்கள் சில தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மற்றவர்களைவிட தேர்ந்தெடுத்து சாதகமாக நடத்த முடியாது என்று வலியுறுத்தினார்.


இந்த வாதத்தை கூடிய அமர்வானது ஒப்புக் கொண்டது. இது, இடஒதுக்கீடு தொடர்பான ஒதுக்கீட்டில் அரசியல் பரிசீலனைகள் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்க நீதிமன்றம் அளவுகோல்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அங்கீகரித்தார்.





Original article:

Share:

வாராக்கடன்கள், மோசடிகள் மற்றும் கொள்கை முடக்கம், வளர்ச்சி ஆண்டுகளின் நன்மதிப்பைத் தவிர்த்த வெள்ளை அறிக்கையின் சிவப்புக் கொடிகள் -உதித் மிஸ்ரா, அஞ்சல் மேகஸைன்

 மோசமான கடன், அதிக பணவீக்கம், ஊழல் வழக்குகள் மற்றும் கொள்கை முடக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை இந்த அறிக்கை உள்ளடக்கியது. அதன் அரசியல் நோக்கம் தெளிவாக உள்ளது. அவை : 2024 பிரச்சாரத்திற்கு களம் அமைப்பதாகும். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்ததன் பின்னணியில் இந்த எதிரொலிப்பு ஒத்துப்போகிறது.


மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை, "நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது" (when we formed the government) என்று தொடங்குகிறது. இது பாரம்பரியத்திலிருந்து அசாதாரண விலகலாகக் கருதப்படுகிறது. நிறுவன ரீதியாக, அமைச்சகம் பொதுவாக அரசாங்கத்துடன் ஒத்ததாக இல்லை என்று முன்னாள் நிதிச் செயலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (United Progressive Alliance (UPA)) பத்தாண்டு கால ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தின் மிக மோசமான நிலையை இந்த நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது.


இந்திய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இந்த வெள்ளை அறிக்கை, மோசமான கடன்கள் முதல் அதிக பணவீக்கம், ஊழல் வழக்குகள் மற்றும் கொள்கை முடக்கம் வரையிலான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் ரீதியாக பேசப்படுவதன் நோக்கம் தெளிவாக உள்ளது: 2024 பிரச்சாரத்திற்கு களம் அமைத்தல். நாடாளுமன்றத்தில் காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்ததுடன் இந்த நாளிதழின் பிரதிபலிப்பு ஒத்துப்போகிறது.


குறிப்பாக, முந்தைய 2004-05 அடிப்படை ஆண்டின் அடிப்படையில் 2004-05 முதல் 2008-09 வரையிலான முதல் பதவிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 8.8% ஐ தாண்டியது போன்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) சாதனைகளை இந்த அறிக்கை குறிப்பிடுவதைத் தவிர்க்கிறது.


2004-2008 வரையிலான வளர்ச்சிக்கு முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய நிலைமைகளே காரணம் என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் அல்லது அதன் சொந்த குறைபாடுகளைத் தவிர்த்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வெற்றிகளை முன்னிலைப்படுத்த அது தேர்ந்தெடுத்த தரவுகளைப் பயன்படுத்துகிறது.


உதாரணமாக, 2013 ஆம் ஆண்டில், மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) இந்தியாவை பலவீனமான ஐந்து (fragile five) உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக குறிப்பிட்டது. ஆனால் வெள்ளை அறிக்கை இந்தியாவின் தற்போதைய முதல் ஐந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவரிசையை ஒப்புக் கொள்கிறது. 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் 'பலவீனமான ஐந்து' (fragile five) பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பதவிக் காலத்தின் முடிவில் கொள்கை முடக்கம் மற்றும் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகம் நன்கு அறியப்பட்டிருந்தாலும், அதிக பணவீக்கம் அமெரிக்க பெடரல் ரிசர்வின் (US Federal Reserve) மந்தமான தந்திரம் மற்றும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகளால் பாதிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2007-08 ஆம் ஆண்டில் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் ஆணையை நிறைவேற்றியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது (global financial crisis) இது பின்னடைவை நிரூபித்தது. இது பல பொருளாதாரங்களுக்கு ஒரு திருப்புமுனையாகும். மேலும், இது மற்ற பெரிய பொருளாதாரங்களைப் போலல்லாமல், இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை குறிப்பிடத்தக்க பின்னடைவு இல்லாமல் தக்க வைத்துக் கொண்டது.


அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் 2011 உரையை வெள்ளை அறிக்கை மேற்கோள் காட்டி, "இந்தியா, மற்ற பொருளாதாரங்களைப் போலல்லாமல், 2008 நிதி கொந்தளிப்பால் தீவிரமாக பாதிக்கப்படவில்லை" என்ற அவரது அறிக்கையை வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும், அதே உரையில் முகர்ஜியும் இந்தியா இந்த நெருக்கடியிலிருந்து முற்றிலும் விதிவிலக்கல்ல என்பதை ஒப்புக் கொண்டார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சரியான நேரத்தில் நிதி தூண்டுதல் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்கத்தைத் தணிப்பதிலும், விரைவான மீட்சியை எளிதாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தன. அதன், அடுத்த ஆண்டே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதமாக உயர்ந்தது.


தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் திவால் மற்றும் திவால் குறியீடு (Insolvency and Bankruptcy Code (IBC)), மூலதன செலவினங்களை அதிகரித்தல் மற்றும் வணிக வங்கி இருப்புநிலைகளில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்தல் போன்ற குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை சாதித்தது. இருப்பினும், வேலைவாய்ப்பு தொடர்பான சவால்கள் இன்னும் நீடிக்கின்றன.


2017-18 ஆம் ஆண்டில் 6% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 3.2% ஆக படிப்படியாக குறைந்து வருவதை வெள்ளை அறிக்கை எடுத்துக்காட்டினாலும், அது கவலைகளை முழுமையாக குறைக்கவில்லை. அவ்வப்போது தொழிலாளர் படை கணக்கெடுப்புகளின் தரவு, ஊதியம் பெறாத தொழிலாளர்களின் அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது. இது 2017-18 இல் 13.6% ஆக இருந்து 2022-23 இல் 18.3% ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக, சம்பள தொழிலாளர்களின் பங்கு இதே காலகட்டத்தில் 22.8% முதல் 20.9% வரை குறைந்துள்ளது.




Original article:

Share:

எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) அளிக்கும் அறிவியல் மற்றும் நெறியியல் கவலைகள் -சிமந்தினி கோஷ்

 நம்பிக்கை மற்றும் சொல்லாட்சியில் உயர்வானது, அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சிப்பின் சோதனைகள் இரகசியமாக மறைக்கப்பட்டு, தனியுரிமை உரிமைகளை பெரிய அளவில் சேதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


டெலிபதி (Telepathy) என்று அழைக்கப்படும் நியூராலிங்க் (Neuralink) சாதனத்தின் முதல் மனித பொருத்துதல் வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லார் எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் / எக்ஸ் இல் பகிர்ந்து கொண்டார். அதில் மீட்பு மற்றும் ஆரம்ப தரவு சேகரிப்பு (recovery and initial data collection)  நடந்து வருவதுடன் அவை நன்றாக முன்னேறி வருகிறது. நியூராலிங்க் (Neuralink) ஒரு தொழில்நுட்ப தொடக்கமாகும், மேலும் அவற்றின் பிரத்யேக சிப் என்பது தனிப்பட்ட நியூரான்களிலிருந்து விரிவான தரவைப் பதிவுசெய்து கணினிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் பொருத்தக்கூடிய சாதனமாகும். இந்தக் கணினி குறிப்பிட்ட பணிகளைச் செயல்படுத்த, தரவுக்குள் உள்ள குறியிடப்பட்ட நோக்கங்களை விளக்கும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குரங்கு பொருத்தப்பட்ட சிப்பைப் பயன்படுத்தி கணினியில் வீடியோ கேம் விளையாடுவதைக் காட்டும் வீடியோவுடன் நியூராலிங்க் (Neuralink) உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. முதல் மனித பயன்பாட்டைப் பற்றிய சமீபத்திய அறிவிப்பு நால்வகை (quadriplegic) நபர்களுக்கான எண்ணங்கள் மற்றும் நோக்கங்கள் மூலம் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் திறனை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த குறுகிய கால இலக்கு உற்சாகத்தையும் ஊகத்தையும் உருவாக்கும் அதே வேளையில், நிறுவனத்தின் பரந்த பார்வை மிகவும் லட்சியமானது. நியூராலிங்க் (Neuralink) "இன்று நிறைவேறாத மருத்துவத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு சுதந்திரமாக மீட்டெடுக்கவும், நாளை மனித திறனைத் வெளிப்படுத்தவும் ஒரு பொதுவான மூளை இடைமுகத்தை உருவாக்க" விரும்புகிறது. ஆரோக்கியமான மனிதர்களில் அறிவாற்றல் திறன்களை மாற்றியமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது குறிக்கோள், நெறிமுறை மற்றும் சட்ட கவலைகளை எழுப்புகிறது.


பூர்த்தி செய்யப்படாத மருத்துவத் தேவைகளுக்கு டெலிபதி (Telepathy) உள்வைப்புகளைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் குறுகிய கால இலக்கில் நாம் கவனம் செலுத்தினாலும், மனித மூளையில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும்போது அதன் செயல்பாடு குறித்த ஆழமான பரிசோதனை அவசியம். விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்த எச்சரிக்கையை வலியுறுத்துகின்றனர். ஆய்வு பங்கேற்பாளர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். தொழில்முறை அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் பங்கேற்பாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு அவற்றின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு கிடைப்பது மிக முக்கியம். அறிவியல் கண்டுபிடிப்புகளின் துறையில், இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் பிரதிபலிப்பு மற்றும் அறிவியல் சமூகத்தின் ஆய்வுகளைத் தாங்கும் மூல தரவுகளின் திறன் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த பகுதிகளில் எலான் மஸ்கின் நிறுவனத்திடம் குறைவாக உள்ளது. சில நிகழ்வுகள் தவிர, வளர்ச்சி மற்றும் முன் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லை. அறுவைசிகிச்சை மற்றும் நெறிமுறை மீறல்களால் குரங்குகள் இறப்பது பற்றிய செய்திகள் பொதுவான பார்வையிலிருந்து விரைவில் மறைந்துவிட்டன. சிப்பில் பயன்படுத்தப்படும் பொருள் குறித்து போட்டியாளர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். ஆனால் அது போட்டியாளர்களால் தயாரிப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாக நிராகரிக்கப்படுகிறது.


நியூராலிங்க் (Neuralink) அதன் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தைப் பாதுகாக்க தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health (NIH)) நிதியுதவியை நிராகரித்தது. கூட்டாட்சி நிதியுதவி பெற்ற ஆராய்ச்சியுடன் தொடர்புடைய கூடுதல் மேற்பார்வை மற்றும் தரவு பகிர்வு ஆணைகளைத் தவிர்த்தது. பதிவு தேவைப்படும் வழக்கமான கல்வி-நிதியுதவி மருத்துவ பரிசோதனைகளைப் போலல்லாமல், முதன்மை ஆய்வில் அத்தகைய பொது பதிவு இல்லை. ஆனால், இணைய சிற்றேட்டில் குறைந்தபட்ச தகவல்கள் கிடைக்கின்றன. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் இருந்தபோதிலும், மேற்பார்வையில் கடந்தகால குறைபாடுகள் நோயாளி பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகின்றன. அறிவியலில் பிரதிபலிப்பு மற்றும் நம்பகத்தன்மையின் அடித்தளம் வெளிப்படையான தரவைச் சார்ந்துள்ளது, இது செயல்முறை முழுவதும் இல்லை.


சோதனை பதிவு செய்யப்படாததால், அதன் நிலைமைகள் அல்லது ஆய்வு நெறிமுறை பற்றிய விவரங்களை அணுகுவது சவாலானது. சிற்றேடு வரையறுக்கப்பட்ட தகவல்களை வழங்குகிறது. தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் (amyotrophic lateral sclerosis - ALS))  அல்லது முதுகெலும்பு காயம் (spinal cord injury) போன்ற நிலைமைகளிலிருந்து நால்வகை (quadriplegic) பாதிப்பு கொண்ட வயது வந்த நோயாளிகளுக்கு இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தகுதியான பங்கேற்பாளர்கள் காயத்திற்குப் பிறகு ஒரு வருடம் வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் நம்பகமான முழுநேர பராமரிப்பாளரைக் கொண்டிருக்க வேண்டும். வழக்கமான MRI scans அல்லது டிரான்ஸ்கிரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் (Transcranial Magnetic Stimulation (TMS)) போன்ற குறிப்பிட்ட நடைமுறைகள் தேவைப்படும் நிலைமைகளைக் கொண்ட நபர்களை உள்ளடக்கியது, இது சாத்தியமான அபாயங்களைக் குறைக்கிறது.


வலிப்புத் (seizures) தாக்கங்களைக் கொண்டவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், அயல் பொருள்கள் மூளைக்குள் நுழையும் போது, ​​அது குறிப்பிட்ட கிளியல் செல்களின் அடுக்குடன் அவற்றை இணைக்க முனைகிறது. இந்த "கிளியல் வடுக்கள்" (glial scars) வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு தொடர்புடையதாக அறியப்படுகிறது. இது மூளைக்குள் 1,024 பதிவு மின்முனைகள் வரை த்ரோடிங் (threading) செய்வது மைக்ரோ காயங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் இந்த உள்வைப்புகள் மைக்ரோப்ளீட்கள் (microbleeds), பக்கவாதம் அல்லது பிற மூளைக் காயங்களின் அபாயத்தை அதிகரிக்காது என்பதை நியூராலிங்க் (Neuralink) அறிவியல் சமூகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய நோயறிதலால் கண்டறிய முடியாத நுண்ணிய காயங்கள் குவிந்து கடுமையான நரம்பியல் நிலைமைகளுக்கு பங்களிக்கும். இந்த ஆய்வு நிலையான மின்முனை பதிவு திறனை நிரூபிக்க வேண்டும். இது தற்போதுள்ள மூளை-கணினி இடைமுகங்களில் (Brain-Computer Interfaces (BCIs)) ஒரு பொதுவான சிக்கலை நிவர்த்தி செய்ய வேண்டும். அங்கு செயல்திறன் காலப்போக்கில் குறைகிறது. முதன்மை ஆய்வில் (PRIME study) போதுமான பாதுகாப்பு தரவுகளை சேகரிக்க 18 மாதங்கள் முதன்மை கண்காணிப்பு மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை அவ்வப்போது பின்தொடர்தல் ஆகியவை அடங்கும். எவ்வாறாயினும், மருத்துவ சோதனை களஞ்சியத்தில் ஆய்வு பதிவு செய்யப்படாதது மற்றும் ஆய்வு நெறிமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது பற்றிய கவலைகள் முடிவுகளின் முறையான வெளியீடு குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. ஏனெனில் பல புகழ்பெற்ற மருத்துவ பத்திரிகைகள் இப்போது பதிவுசெய்யப்பட்ட சோதனை முடிவுகளை விரும்புகின்றன.


நியூராலிங்க் (Neuralink) பதிவு செய்த தரவு யாருக்கு சொந்தமானது என்பது முக்கிய நெறிமுறை சார்ந்த கவலையாக உள்ளது. டிஜிட்டல் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நபரின் நோக்கங்களை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் தரவின் உரிமை யாருக்கு இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நோக்கங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை தனிநபர்களிடமே உள்ளது. தனியுரிம பயன்பாட்டின் மூலம் தரவு பதிவுக்கான தனியுரிம தொழில்நுட்பத்தை உட்படுத்துவது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: சோதனை பங்கேற்பாளர்கள் பதிவுசெய்யப்பட்ட தரவின் உரிமையை வைத்திருப்பார்களா, அல்லது நியூராலிங்க் (Neuralink) அதை சொந்தமாக்குமா? நியூராலிங்க் தரவை வைத்திருந்தால், மூன்றாம் தரப்பினரின் சார்பாக "ஒரு செயலைச் செய்யும் நோக்கத்துடன்" (intent to carry out an action) தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. தற்போதைய சோதனை மருத்துவ ரீதியாக குறைபாடுடைய மக்களை உள்ளடக்கியது. இது தரவு உரிமையாளர் சிக்கலை கவனிக்காமல் இருப்பதை எளிதாக்குகிறது. இருப்பினும், மருத்துவ பயன்பாட்டிற்கு அப்பால் நியூராலிங்கின் பரந்த பார்வையைக் கருத்தில் கொண்டு, தரவு உரிமையின் நெறிமுறைகளைத் தீர்ப்பது மிக முக்கியமானது. இந்த விஷயத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவது முன்னோடியில்லாத அளவில் மனித நிறுவனம் மற்றும் தனியுரிமையை ஆபத்தில் ஆழ்த்தும்.


முடிவில், நியூராலிங்க் (Neuralink) சோதனைகளுக்கு இடமளிப்பதற்குப் பதிலாக, அது உருவாக்கும் தரவு மற்றும் அதன் சாதனத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் பயனடையக்கூடும். விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது நம்பிக்கையை வளர்க்காது. மேலும் விஞ்ஞானிகள் பெறுநிறுவனங்களை மிக எளிதாக நம்ப வேண்டாம் என்று கற்றுக்கொண்டுள்ளனர். நியூராலிங்க் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் விஞ்ஞான சமூகத்திடமிருந்து எச்சரிக்கையான நம்பிக்கையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தைக் கொண்டுள்ளனர்.


கட்டுரையாளர் அசோகா பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share:

ராமனின் நீதி மணி -தேவனுர மகாதேவா

 கடவுள்களை மதிப்பிடும் ஒரு உணர்வு கொண்ட பழங்குடி சமூகங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முடிவது - அக்கடவுள்களை  வணங்குவது மற்றும் அவர்களின் தெய்வீகத்தை கேள்விக்குள்ளாக்குவது.


"கடவுள்களின் மதிப்பாய்வு மற்றும் டாக்டர் கான் எனும் முஸ்லீம் தெய்வம்" (Evaluation of Gods and A Muslim Deity named Dr Khan) என்ற பஞ்சு கங்கோலியின் மனதைத் தொடும் கட்டுரை என்னை உண்மையிலேயே கவர்ந்தது. சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பல பழங்குடி சமூகங்களில், சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இந்த சமூகங்களில் உள்ள விழிப்புணர்வானது கடவுள்களை மதிப்பிடுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு நம் உலகிற்கு வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு வெளிப்பாடு போல் உணர்கிறது.


பஸ்தார் மாவட்டத்தில், பங்காரம்தேவி பல்வேறு பழங்குடி சமூகங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய கடவுள். ஒவ்வொரு ஆண்டும் "படோ ஜாத்ரா" (Bhado Jatra) திருவிழாவின் போது, 240 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் தங்கள் கடவுள்களை பங்காரம்தேவிக்கு கொண்டு வருகிறார்கள். அந்த கடவுளின் முன்னிலையில், பூசாரிகள் இந்த கடவுள்களை பரிசோதிக்கிறார்கள். கடந்த ஆண்டைக் காட்டிலும் தங்கள் பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காத தெய்வங்கள் தெய்வீகத்தன்மை பறிக்கப்படுகின்றன. தெய்வீக சக்தி இல்லாமல், அவை வெறும் மரம் மற்றும் கல்லால் செய்யப்பட்ட சிலைகளாக அவை பங்காரம்தேவியின் கோவிலின் கொல்லைப்புறத்திற்கு வெளியேற்றப்பட்டு, ஏதோ ஒரு மூலையில் குவிந்து கிடக்கின்றன. பின்னர் அவை வெயிலின் கீழ் தொடர்ந்து சுருங்கி, மழை மற்றும் குளிரின் தாக்கத்தைத் தாங்குகின்றன, மேலும் அவை பெரும்பாலும் சில புதர்களில் சிக்கி அல்லது பழைய மரத்தின் வேர்களில் சாய்ந்திருப்பதைக் காணலாம்.


பஸ்தாரின் கேஷ்கல் மலையில் (Bastar’s Keshkal hill), டெரகோட்டா மேடையுடன் கூடிய ஒரு சிறிய கோயில் உள்ளது. சிவலிங்கம் போன்ற ஒரு கருப்பு மரத்துண்டு அங்கு வைக்கப்பட்டு, மண் விளக்கால் ஏற்றப்படுகிறது. "சுர்டோங்கர்" (Surdongar) திருவிழாவின் போது, கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன. கடவுளின் தரிசனத்தை நாடி ஆயிரக்கணக்கானோர் ஈர்க்கப்படுகிறார்கள். டாக்டர் கான் என்று அழைக்கப்படும் இந்த கடவுளிடம் மற்ற கடவுள்களும் கூட வருகை தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.


சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்தார் பகுதியில், காலரா மற்றும் பெரியம்மை போன்ற நோய்களை எதிர்கொண்டது. டாக்டர் கான் என்ற முஸ்லிம் மனிதர் வந்து, பல உயிர்களைக் காப்பாற்றி, அங்கேயே தங்கி மக்களுக்கு சேவை செய்தார் எனவும், அவரது மரணத்திற்குப் பிறகு, உள்ளூர் பழங்குடியினர் அவரை ஒரு கடவுளின் நிலைக்கு உயர்த்தினர் எனவும், மேலும் அவர்கள் அவரை வணங்கத் தொடங்கினர் எனவும் நம்பப்படுகிறது. இவை அனைத்தையும் இன்னும் பலவற்றையும் நீங்கள் இங்கே எமது சொந்த நிலத்தில் கண்டுகொள்ள முடியும்.


ஆனால் நம் கடவுள்களை மதிப்பிடுவதற்கான விழிப்புணர்வு நமக்கு இருக்கிறதா? எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நாங்கள் மதிப்பீடு கூட செய்வதில்லை. எனவே, நமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பயனற்ற கடவுள்களை ஆராய்ந்து தூக்கி எறியும் உணர்வு நம் மண்ணுலக மூதாதையர்களான பழங்குடி சமூகங்களுக்கு உண்டு. ஆனால், அதே ஆதிவாசிகளின் வழித்தோன்றல்களான நாம் மூடநம்பிக்கை கொண்டவர்களாக மாறிவிட்டோம். எங்கள் ஆதிவாசி வேர்களுக்கான தொடர்பு இழந்துவிட்டதால், ஒரு மக்களாக நாம் இனி விழிப்புடன் இல்லாமல் நம் முன்னோர்களின் சிறந்த நடைமுறைகளை இன்னும் பொருத்தமாக வைத்திருக்க முடியாது.


நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் மதிப்பீடு செய்யும் உணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியம், நீதித்துறை, நமது சுதந்திரமான அமைப்புகளின் இறையாண்மை, ஆளும் மத்திய அரசால் கூட்டாட்சி அமைப்பு பலவீனமடைவது, சமூக நீதி, பெண்கள் இடஒதுக்கீடு, சுவாமிநாதன் அறிக்கை மற்றும் கல்வி, சுகாதாரம், வேலையின்மை போன்ற பிரச்சினைகள், இவை அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். நமது விலைமதிப்பற்ற இயற்கை வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் செலுத்தும் இழப்புகள், அதிகாரத்திற்கு நெருக்கமான பெருநிருவனங்கள் எவ்வாறு தேவையற்ற முறையில் பயனடைகின்றன என்பதைக் காண நாம் கண்களைத் திறக்க வேண்டும்.


அடுத்து நாம் செய்ய வேண்டியது இதுதான்: கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்குகளுக்காக நம்மை அணுகும்போது, "உங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் நாங்கள் மதிப்பீடு செய்வோம். இனியும் பொய்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று உணர்த்துவது. இந்த எச்சரிக்கையை நாம் கொடுத்தால், எவ்வளவு சிறிய படிகள் இருந்தாலும் நாடு முன்னேற முடியும்.


அதிகாரத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தும் சம்மோகனாஸ்திரம் (கூட்டு ஹிப்னாஸிஸ் ஆயுதம்), துவேசாஸ்திரம் (வெறுப்பின் ஆயுதம்), அசஹாஸ்திரம் (சகிப்பின்மையின் ஆயுதம்), பிரமாஸ்திரம் (மாயையின் ஆயுதம்) போன்ற மோசடி ஆயுதங்களின் செல்வாக்கிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இதனால் உண்மையான பிரச்சினைகளால் நாம் கலங்காமல் இருக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்மை அடிபணிய வைக்க பயன்படுத்தப்படுகின்றன.


முதலில், இந்த மாயையின் திரையை நாம் அடையாளம் காண வேண்டும். உதாரணமாக, "இந்துத்துவம்" (Hindutva) என்பது "இந்து" (Hindu)வை வெல்வதா?. இதுதான் சதுர்வர்ண அமைப்பின் இந்துத்துவமா? "சனாதனம்" (Sanatana) என்ற கருத்து கூட இப்போது பரப்பப்படுகிறது. ஆனால் சனாதனம் என்பது என்ன? சனாதனத்தின் மனிதாபிமானம் மற்றும் ஆரோக்கியமான மதிப்புகளை நாம் பின்பற்ற வேண்டும், அதன் குறைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.


இரக்கம், பொறுமை, அன்பு, சகவாழ்வு, சம நீதி மற்றும் "மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் செய்யுங்கள்" என்ற பழமொழி ஆகியவை இன்றும் நல்ல சனாதன நெறிமுறைகளாக நம்மை வழிநடத்துகின்றன. இருப்பினும், சதுர்வர்ண அமைப்பு, சாதிப் பாகுபாடு, சகிப்பின்மை, வெறுப்பு ஆகியவையும் சனாதன நெறிமுறைகளே. இந்த எதிர்மறை மதிப்புகள் மோதலைத் தூண்டுகின்றன மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


தற்போது, இந்த நேர்மறை மற்றும் எதிர்மறை சனாதன மதிப்புகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. இந்தியாவின் கூட்டு உணர்வு சாத்தியமான சிக்கல்களில் இருந்து நம்மை இழுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று நம்புகிறேன். நமக்குத் தேவையான ஒன்று தங்கள் பயிர்களின் ஆரோக்கியத்திற்காக தங்கள் நிலத்தை களையெடுக்கும் விவசாயிகளின் ஞானமாக செயல்பட வேண்டும்.


அயோத்தியின் ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கொண்டாடும் அதே வேளையில், வாக்குறுதிகளை மதித்து, ராமரின் வசனபாலனே (vachanapalane) அர்ப்பணிப்பை இந்தியா கொண்டாட வேண்டும். ராமரின் அரண்மனைக்கு வெளியே "நீதியின் மணி" (A Bell of Justice) தொங்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு நாள், ஒரு குதிரை மணி அடிப்பதைக் கண்டு, ராம் இந்த பசியுள்ள குதிரைக்கு நியாயம் வழங்குகிறார். அயோத்தியில் நீதியின் மணி நிறுவப்படட்டும், அங்கு போராடும் அனைத்து உயிரினங்களும் அதை ஒலிக்கட்டும். டெல்லி தர்பார் செவி சாய்க்குமா என்பதுதான் கேள்வி.


கன்னட எழுத்தாளரான மகாதேவா, கர்நாடகாவில் தலித் இயக்கத்தின் முன்னோடி. அவர் பல சமூக மற்றும் அரசியல் இயக்கங்களில் உறுப்பினராக உள்ளார் பி.அமுல்யா உண்மையான கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.




Original article:

Share:

மேம்பட்ட இந்தியா (Viksit Bharat) என்ற நிலையை நோக்கி இந்தியா நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது -சவுமியா காந்தி கோஷ்

 பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் (Monetary and fiscal policies) நிலையான வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கத்தின் ஒரு கட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.


கடந்த வாரத்தில், இடைக்கால மத்திய பட்ஜெட் (interim Union budget) மற்றும் நாணயக் கொள்கை (monetary policy) இரண்டும் இந்திய பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கத்தால் குறிக்கப்பட்ட கோல்டிலாக்ஸ் கட்டத்திற்கு (Goldilocks phase) களம் அமைத்துள்ளன.


வியாழக்கிழமை, நாணயக் கொள்கைக் குழு (monetary policy committee) கொள்கை ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்தது. 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு 7% ஆக உள்ளது. மேலும் எதிர்பார்க்கப்படும் விகிதமானது பணவீக்கம் 4.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு பணவீக்கம் 4% க்கும் குறையும் என்று எதிர்பார்த்து. இதில், முதல் விகிதக் குறைப்பு ஆகஸ்ட் அல்லது ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி கணிப்புகள் பழமைவாதமாகத் தோன்றலாம். ஆனால் அவை அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகின்றன. இது நாட்டின் வலுவான வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்துகிறது.


வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பொறுத்தவரை, இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து சில்லறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises(MSME)) கடன்கள் மற்றும் முன்பணங்களையும் உள்ளடக்கும் வகையில் முக்கிய உண்மை அறிக்கை தேவையை விரிவுபடுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர வட்டி விகிதம் மற்றும் கடனுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த நிதி அர்ப்பணிப்பு பற்றிய தெளிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவலறிந்த கடன் முடிவுகளை எடுப்பதற்கான விரிவான தகவல்களுடன் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.


கட்டண அங்கீகாரத்திற்கான தொழில்நுட்பம் புதுப்பிக்கப்பட்ட கவனத்தைப் பெறுகிறது. தொழில்நுட்பம் உருவாகும்போது, பணம் செலுத்துவதை அங்கீகரிக்க பல்வேறு வழிகளுக்கான விரிவான கட்டமைப்பு நமக்குத் தேவை. இந்த பகுதியில் முறையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கொள்கை அடிப்படையிலான "டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்கான கட்டமைப்பை" (Framework for authentication of digital payment transactions) ஆராய்வோம்.


கூடுதலாக, தற்போது 37 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மற்றும் 47 நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறையை (Aadhaar Enabled Payment System (AePS)) வலுப்படுத்துவதும், டிஜிட்டல் கட்டண அங்கீகாரத்திற்கான கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதும் டிஜிட்டல் மோசடியைத் தடுக்க உதவும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தில் (Central Bank Digital Currency(CBDC)) முன்மொழியப்பட்ட மாற்றங்கள் தொலைதூர பகுதிகளிலிருந்து மக்களை மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) அமைப்பிற்குள் கொண்டு வரக்கூடும், இது அதன் ஏற்றுக்கொள்ளலை கணிசமாக அதிகரிக்கும்.


கடன் தேவை வைப்பு வளர்ச்சியை விட அதிகமாக இருந்தபோதிலும், அரசாங்க நிதிகளின் வெளியீட்டை ஒழுங்குபடுத்தும் சரியான நேரத்தில் (JIT) இதற்கான செயல்முறையை அறிமுகப்படுத்துவது, முன்பணங்கள் மீதான பலனை  உறுதிப்படுத்தக்கூடும். இது குறுகிய கால கடன்களை வலுப்படுத்துகிறது. ஏனெனில் கடன் மற்றும் வைப்பு விகிதம் 80-ஐ எட்டுவதற்கு சிறிது தூரத்தில் இருந்தாலும், அதிகரித்து வரும் கடனுக்கான தேவையை பூர்த்தி செய்ய வைப்பு அல்லாத ஆதாரங்களை நாட வேண்டும்.


அம்ரித் காலில் (Amrit Kaal) வளர்ந்த இந்தியாவின் பார்வைக்கு முன்னுரிமை அளித்த இடைக்கால மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து இந்த பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, புதுமை மற்றும் இணைப்பு, மேம்பாட்டு இந்தியாவிற்கான (Viksit Bharat) சரியான தொனியை அமைத்தல், அடையக்கூடிய இலக்குகளுக்கான கூட்டு முயற்சிகளை வலியுறுத்துதல் ஆகியவற்றில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியது.


இடைக்கால பட்ஜெட்டின் மதிப்பீடுகளின்படி, மூலதன செலவினங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.18.4 டிரில்லியன் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டுச் செலவினங்கள் மற்றும் மூலதன உருவாக்கத்திற்கான மானியங்களைக் கருத்தில் கொண்டு இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6% ஆகும். இது சுமார் 13% வளர்ச்சியைக் குறிக்கிறது. பொதுத்துறை முதலீடுகளில் இந்த நிலையான கவனம் 2027-28 ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிதி ஒருங்கிணைப்பு பாதை (fiscal consolidation path) தொற்றுநோய்களின் போது விதிவிலக்கான விலகலால் பாதிக்கப்படுகிறது. முதன்மை பற்றாக்குறை நிதியாண்டு 2021-ல் 5% க்கும் அதிகமாக ஒப்பிடும்போது, நிதியாண்டு 2025-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 அடிப்படை புள்ளிகள் முதல் 1.5% வரை மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பொதுக் கடன் குறைந்துள்ளது மற்றும் FY24 இல் 58.1 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து FY25-ல் 90 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் கடன் நிலையான பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சியும், பணவீக்கமும் எதிர்பார்த்தபடி சென்றால், நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீத இலக்கை விடக் குறைவாக இருக்கும். மேலும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) சந்தை மூலதனம் இப்போது சுமார் 40 டிரில்லியனாக உள்ளது, அரசாங்கத்தின் பங்கு சுமார் 27 டிரில்லியனாக உள்ளது. சாதகமான சந்தை நிலைமைகள் பின்னர் பங்கு விலக்கலுக்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.


கிராமப்புறப் பொருளாதாரத்தின் நிலை குறித்த சில கவலைகளைத் தீர்க்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். சாலைகள் மற்றும் ரயில்வே போன்ற உடல் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், கடைசி மைல் வரை சிறந்த இணைப்பை வழங்குவதன் மூலம் கிராமப்புற தேவை மற்றும் விநியோகத்தை மாற்றுகின்றன. விவசாயிகள் இப்போது பொருட்களை வாங்கவும் விற்கவும் நீண்ட தூரம் வசதியாக பயணிக்க முடியும். இருப்பினும், இந்த பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நகர்ப்புற / பெரு நகர்புற பகுதிகளில் புகாரளிக்கப்படுகின்றன. அவை முதன்மையாக கிராமப்புற குடியிருப்பாளர்களால் நடத்தப்பட்டாலும், கிராமப்புறங்களுக்கான அறிவிக்கப்பட்ட எண்கள் அவர்களின் தேவையை துல்லியமாக பிரதிபலிக்காது. உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக, நகரங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களை தொலைதூர பகுதிகள் உட்பட சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒருங்கிணைப்பது கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். கூடுதலாக, FY14 முதல் FY23 நவம்பர் வரையிலான கிராமப்புற தொழிலாளர்களுக்கான சராசரி ஊதியங்கள் குறித்த தரவை பகுப்பாய்வு செய்வது அதிகரித்து வரும் போக்கை வெளிப்படுத்துகிறது. நிதியாண்டு 2005 முதல் நிதியாண்டு 2014 வரையிலான காலத்திற்கு மாறாக, சராசரி ஊதியங்கள் இப்போது சராசரி ஊதியங்களுக்கு நெருக்கமாக உள்ளன. சமீபத்திய பட்ஜெட்டில் 8.3 மில்லியனுக்கும் அதிகமான சுய உதவிக் குழுக்கள் (self-help groups) மூலம் நிதி ரீதியாக வெற்றிகரமான பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு சாதகமானது.


கட்டுரையாளர் பாரத ஸ்டேட் வங்கியின் குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர்.




Original article:

Share:

16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் பயிற்சி அளிக்க வேண்டுமா? -பிரிசில்லா ஜெபராஜ்

 இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் பயிற்சி நிறுவனமானது, மாணவர்களின் தற்கொலைகள், தீ விபத்துகள், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் பற்றிய புகார்கள், அதிகப்படியான கட்டணங்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளால் நீண்டகாலமாக அறியப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், இட ஒதுக்கீட்டில் வந்த மாணவர்களின் தொடர் தற்கொலைகளால் கல்வி அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிடத் தூண்டியது. இது, பயிற்சி மையங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்கவோ, தவறான வாக்குறுதிகளை வழங்கவோ அல்லது தரவரிசை அல்லது நல்ல மதிப்பெண்களை உத்தரவாதம் செய்யவோ முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். விமலா ராமச்சந்திரன் மற்றும் அர்ஜுன் மோகன் ஆகியோர் இந்த வழிகாட்டுதல்களைப் பற்றியும், பயிற்சி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்பதையும் பிரிசில்லா ஜெபராஜ் அவர்களின் உரையாடலில் கேள்வி மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதிக்கின்றனர்.


வழிகாட்டுதல்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்க கட்டுப்படுத்துகின்றன. இந்த புதிய விதியின் தாக்கம் என்னவாக இருக்கும்?


விமலா ராமச்சந்திரன்: இது ஒரு நல்ல யோசனை, ஏனென்றால் சிறு குழந்தைகள் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பள்ளி பாடத்திட்டத்தின் சுமை மிகப் பெரியதாக இருக்கும்போது தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவது அல்லது ஒரு நல்ல படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி அவர்கள் சிந்திப்பது கடினம். எனவே, அவர்களின் குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை எடுப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக கருதப்படுகிறது.


அர்ஜுன் மோகன்: இன்றைய குழந்தைகளுக்கு அதிக பணிச்சுமை இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற நீங்கள் 4 ஆம் வகுப்பிலிருந்து படிக்க ஒரு நாளைக்கு 18 மணி நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை. வழக்கமாக, JEE மற்றும் NEET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ள மாணவர்கள் 7 ஆம் வகுப்பிலிருந்தே ஒரு அடித்தள திட்டத்தைத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கி, பின்னர் முறையான அட்டவணை மூலம் பயன்பாட்டு அளவிலான கருத்துக்களை ஆராய்கிறார்கள். JEE அல்லது NEET-ல் அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்கள் ஆரம்பத்தில் விண்ணப்ப மட்டத்தில் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்பதால் இது மிகவும் முக்கியமானது.


இந்த வகையான அடிப்படை கற்பித்தல் பள்ளியில் நடக்க வேண்டாமா? வளர்ந்து வரும் பயிற்சித் தொழில் நமது கல்வி முறையின் தோல்வியைக் குறிக்கிறதா?


விமலா ராமச்சந்திரன்: ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. முதலாவதாக, பள்ளியில் கற்பிக்கப்படுவது இறுதித் தேர்வால் தீர்மானிக்கப்படுகிறது. இது மனப்பாடம் செய்வதில் மிகவும் கவனம் செலுத்துகிறது. பள்ளிகள் தேர்வுக்குத் தேவையானதை மட்டுமே கற்பிக்கின்றன. இதன் பொருள் எல்லா பள்ளிகளும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதில்லை. இரண்டாவதாக, ஒரு குழந்தை மருத்துவக் கல்லூரிக்குச் செல்கிறது என்றால், அது பெரும்பாலும் பெற்றோரின் விருப்பமாக உள்ளது, இது குழந்தையின் விருப்பமாக கருதவில்லை. பெற்றோர்கள் 6 அல்லது 7 ஆம் வகுப்பிலேயே குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறார்கள். இது அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் 10 அல்லது 11 ஆம் வகுப்பில் அவர்களின் உண்மையான ஆர்வங்களை ஆராய விடாமல் தடுக்கிறது.


பயிற்சியானது பள்ளி அமைப்பை மாற்றியமைக்கிறதா?


அர்ஜுன் மோகன்: வெளிப்படையாகச் சொல்லலாம். அதிக போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகரித்த போட்டி காரணமாக தேர்வுகள் மிகவும் சவாலானதாகிவிட்டன. மேலும் மாணவர்கள் அந்த நிலையை அடைய உதவும் வகையில் பயிற்சி நிறுவனஙகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. வலுவான அரசுப் பள்ளி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்கள் அதிக அளவு கல்வி மற்றும் பயிற்சியைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.


விமலா ராமச்சந்திரன்: தற்போது, பள்ளியின் அமைப்பு செயலிழந்துள்ளது. ஏனெனில் ஆசிரியர்கள் முக்கியமாக மாணவர்கள் உண்மையில் கற்றுக்கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தாமல் பாடத்திட்டத்தை கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அதிக சவால்கள் அல்லது வறுமை உள்ள பகுதிகளில், பள்ளியின் அமைப்பு மோசமாக இருக்கும். அதனால்தான் பயிற்சி மையங்கள் உருவாகின்றன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், 10 அல்லது 12-வது வாரியத் தேர்வுகள், சிவில் சர்வீசஸ், ரயில்வே தேர்வுகள் அல்லது வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கும் இது உதவுகிறது. பல குழந்தைகள் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தை நிர்வகிக்க பயிற்சி மையங்களில் கலந்துகொள்கிறார்கள். இது நிழல் கல்வி முறை (shadow education system) என்று அழைக்கப்படுகிறது. போட்டித் தேர்வு தயாரிப்பு என்பது புலப்படும் பகுதியாக இருக்கும்போது, பயிற்சி அனைத்து மட்டங்களிலும் நடக்கிறது.


இணையவழி பயிற்சிக்கு இந்த வழிகாட்டுதல்கள் எவ்வாறு பொருந்தும்?


அர்ஜுன் மோகன்: வழிகாட்டுதல்கள் இன்னும் ஒழுங்கமைக்கப்படும் வரை நான் காத்திருப்பேன். காலப்போக்கில் அவை மேம்படும் என்று நாங்கள் பெறும் பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.


பயிற்சி மையங்கள் இருப்பது பெற்றோர்கள் பள்ளி முறையை பயனுள்ளதாகக் கருதவில்லை என்பதைக் குறிக்கிறது. ஒரு இணையவழி நிறுவனமாக, நல்ல ஆசிரியர்களுக்கான அணுகல் ஏன் பெருநகரங்களில் மட்டுமே இருக்க வேண்டும்? என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். சிறந்த ஆசிரியர்களை மூன்றாம் அடுக்கு மற்றும் சிறிய நகரங்களுக்கு கொண்டு வர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். மேலும், இதன் மூலம் எல்லா இடங்களிலும் உள்ள மாணவர்களுக்கு உயர்தர கல்விக்கான அணுகலை வழங்குகிறோம்.


விமலா ராமச்சந்திரன்: இறுதியாக முக்கிய பொறுப்புடையதாக கருதப்படுவது மாநில அரசுதான். கல்வி பொதுப்பட்டியலின் கீழ் வருகிறது. எனவே மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட முடியும் என்றாலும், அவற்றின் செயல்திறன் மாநில அரசுகள் அவற்றை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைப் பெரிதும் சார்ந்துள்ளது. கல்வி அதிகாரத்துவம் நிழல் கல்வி முறையை (shadow education system) கண்காணிப்பது ஒருபுறம் இருக்க, செயல்படக்கூடிய பள்ளிகளை மேற்பார்வையிட கூட போராடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது அனைத்து மட்டங்களிலும் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும். மேலும், வழிகாட்டுதல்களின் தாக்கம் அவற்றை செயல்படுத்தும் அரசாங்க அமைப்பைப் போலவே நன்றாக இருக்கும்.


அர்ஜுன் மோகன்: பயிற்சி மையங்கள் சென்று பதிவு செய்ய வேண்டிய ஒரு தகுதிவாய்ந்த அதிகாரத்தைப் பற்றி வழிகாட்டுதல்கள் பேசுகின்றன. இது உள்ளூர் நகராட்சியா அல்லது மாவட்ட கல்வி ஆணையமா? மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறினாலும் இந்த விவரங்கள் இன்னும் வரவில்லை.


வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மனநல தலையீடுகள் மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுமா?


விமலா ராமச்சந்திரன்: சிறுவயதிலிருந்தே குழந்தைகள் மீது இத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஏற்படும் பாதகமான பாதிப்புகள் குறித்து எங்களுக்கு பெரிய அளவிலான கிடைக்கக்கூடிய பொதுக் கல்வி முறை தேவை. இதில், நமது ஊடகங்கள் மற்றும் பள்ளி அமைப்பும் முக்கியப் பங்காற்ற வேண்டும். பெற்றோர்கள் மற்றும் சமூகங்களுடன் உரையாடுவது முக்கியம். அரசியல் கட்சிகள் கூட அதை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மீது அதிக அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, குழந்தையின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும். சிஸ்டத்தை மாற்றுவதற்கு வழிகாட்டுதல்கள் அல்லது பள்ளிகளில் ஆலோசகர்களைக் கொண்டிருப்பதை விட அதிகம் தேவைப்படுகிறது.


அர்ஜுன் மோகன்: நான் பெற்றோரை பயிற்ச்சி மையத்தின் வரிசையில் வைப்பேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக தொடர்பில் இருக்க வேண்டும். அவர்கள் எந்த வகையான அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். இன்றைக்கும் பல பெற்றோர்கள், ஒரு சிறந்த பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் பெறாவிட்டால் தாங்கள் அழிந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள், இது உண்மையல்ல.


ஊடகங்கள், சமூகம் மற்றும் பெற்றோர்கள் ஒரு பங்கை வகிக்கிறார்கள். ஆனால் இந்த வகையான அழுத்தத்தை உருவாக்குவதில் பயிற்சித் துறையும் சில பங்கைக் கொண்டுள்ளது என்று நீங்கள் நினைக்கவில்லையா?


அர்ஜுன் மோகன்: போட்டியால் அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோர்கள் பயிற்சிக்கு பணம் செலுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் குழந்தை ஒரு குறிப்பிட்ட தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு நீங்கள் பதிவுபெறும் போது, விரிவான பாடத்திட்டம், பட்டறைகள், தேர்வுகள் மற்றும் போலி ஆவணங்கள் உள்ளன. எப்போது சொல்வது என்பதைத் தீர்மானிப்பது சவாலானது, "இது குழந்தைக்கு சரியான பொருத்தமாக இருக்காது; அவர்கள் வேறு தொழிலை பரிசீலிக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கு பயிற்சி மையத்தால் மட்டும் பதிலளிக்க முடியாது. கட்டுப்பாடுகள் மற்றும் அழுத்தத்தைக் குறைப்பது பற்றி நாங்கள் பேசும்போது, பெற்றோர்கள் நிறைய பணத்தை முதலீடு செய்கிறார்கள். தங்கள் குழந்தை தங்கள் கனவுகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில், அவர்கள் செலுத்திய சேவையை நாங்கள் நிறைவேற்றுவதால், அந்த பெற்றோருக்கும் எங்களுடைய முழு அர்ப்பணிப்பு உள்ளது.


வழிகாட்டுதல்கள் பயிற்சித் துறையின் 'தவறான மற்றும் தவறான விளம்பரத்தை' (false and misleading advertising) குறிப்பிடுகின்றன. நிறுவனங்கள் உயர் பதவிக்கு வாக்குறுதி அளிக்கும்போது, அவை அழுத்தத்தை உருவாக்குகின்றன என்று நீங்கள் கூறுவீர்களா?


அர்ஜுன் மோகன்: ஒவ்வொரு துறையிலும் நடக்கும் தவறான விளம்பரங்களில் ஈடுபடும் தொழில்துறையில் உள்ள சில கூறுகளைப் பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம். நிறுவப்பட்ட பெரிய போட்டியாளர்கள், குறிப்பாக கல்வியாளர்களில் கவனம் செலுத்துபவர்கள், ஒரு தரவரிசையை வெளியிடும்போது இதுபோன்ற நடைமுறைகளை நாடுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.


ஒரு மாணவர் ஒரு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டால், அவர்களின் கட்டணம் சார்பு தரவு அடிப்படையில் (pro rata basis) திருப்பித் தரப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.


அர்ஜுன் மோகன்: கல்வி என்பது ஒரு சேவைத் தொழில். வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மேலும், இது மத்திய அல்லது மாநில அரசின் வரம்பிற்குள் வருகிறதா? இந்த சட்ட சிக்கல்களில் தெளிவுக்காக நான் காத்திருப்பேன்.


விமலா ராமச்சந்திரன்: பயிற்சித் தொழில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (Consumer Protection Act) கீழ் வரும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால் இந்த சட்டம் நாடு முழுவதும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் கட்டணத்தைத் திரும்பக் கேட்கச் செல்லலாம் என்ற உண்மையை அறிந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.


விமலா ராமச்சந்திரன், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.


அர்ஜுன் மோகன் பயிற்சி மற்றும் எட்டெக் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பைஜூஸின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.




Original article:

Share: