ஆதிக்கம் செலுத்தும் பட்டியல் வகுப்பினருடன் ஒப்பிடும்போது இடஒதுக்கீட்டுடன் கூட சில சாதி வகுப்பினர்கள் கணிசமாக குறைவாக பிரதிநிதித்துவம் கொண்டுள்ளன என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. இந்த சாதிகளுக்கு பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (Scheduled Caste(SC)) ஒதுக்கீட்டுக்குள் தனி இட ஒதுக்கீட்டை உருவாக்க அவர்கள் முன்மொழிகின்றனர்.
இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு புதன்கிழமை பிப்ரவரி 8 அன்று பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது.
சில மாநிலங்களில் இடஒதுக்கீடு இருந்தபோதிலும், ஆதிக்கம் செலுத்தும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்களுடன் ஒப்பிடும்போது சில வகுப்பினர் மிகவும் குறைவாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன என்று வாதிட்டன. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) ஒதுக்கீட்டில் உள்ள 15% க்குள் அத்தகைய சாதிகளுக்கு தனி ஒதுக்கீட்டை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதன் பலன்கள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
2004 ஆம் ஆண்டில், 'ஈ.வி.சின்னையா vs ஆந்திர மாநிலம்' (E.V. Chinnaiah vs State of Andhra Pradesh) என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அரசியலமைப்பின் 341 வது பிரிவின் கீழ் எந்த சமூகங்கள் இடஒதுக்கீடு சலுகைகளுக்கு தகுதியானவை என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், மாநிலங்கள் இதை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
தேவைப்படும் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை நியாயமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என்று கூறி, சின்னையா வழக்கின் தீர்ப்பின் முடிவை பல மாநிலங்கள் சவால் செய்கின்றன. எவ்வாறாயினும், சில பிரதிவாதிகள் சின்னையா தீர்ப்பை ஆதரிக்கின்றனர். மேலும், அனைத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
ஆரம்பம்
1975 ஆம் ஆண்டில், பஞ்சாப் அரசு தனது 25% பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) இடஒதுக்கீட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தது. முதல் பிரிவினர் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களாகக் கருதப்படும் பால்மீகி மற்றும் மசாபி சீக்கிய சமூகங்களுக்கு பிரத்தியேகமாக இடங்களை ஒதுக்கினர். கல்விக்கும், பொது வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை அளித்தனர். இரண்டாவது பிரிவில் மீதமுள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினர் அடங்குவர்.
இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட 3௦ ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அமர்வு 2000 முதல் இதேபோன்ற ஆந்திர சட்டத்தை ரத்து செய்தபோது சட்ட சவால்களை எதிர்கொண்டது. ஈ.வி.சின்னையா vs ஆந்திர மாநிலம்' (E.V. Chinnaiah vs State of Andhra Pradesh) என்ற வழக்கில், ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுப் பலன்களைக் கொண்ட பட்டியலிடப்பட்ட வகுப்பினர் சமூகங்களின் விரிவான பட்டியலை உள்ளடக்கியதால், இந்த சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது.
இவற்றில், துணை பிரிவில் உள்ள சமூகங்களை வித்தியாசமாக நடத்துவதன் மூலம் சமத்துவத்திற்கான உரிமையை மீறும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீண்டாமை காரணமாக வரலாற்று ரீதியான பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு அட்டவணையில் சில சாதிகளை அரசியலமைப்பு வகைப்படுத்துவதால், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) ஒற்றை, ஒரே மாதிரியான குழுவாக கருதப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
இடஒதுக்கீட்டிற்கான பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான (SC) பட்டியலை உருவாக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கிய அரசியலமைப்பின் 341 வது பிரிவை மேற்கோள் காட்டி, துணை பிரிவு உட்பட இந்த பட்டியலை மாநிலங்கள் "தலையிடவோ" (interfere) அல்லது "தொந்தரவு செய்யவோ" (disturb) முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம், 'டாக்டர் கிஷன் பால் vs பஞ்சாப் மாநிலம் (Dr. Kishan Pal vs State of Punjab), '1975 அறிவிப்பை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்தது.
மேல்முறையீடு
அக்டோபர் 2006 இல், பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவிப்பை செல்லாது என்று அறிவித்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பஞ்சாப் அரசு பஞ்சாப் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகளில் இட ஒதுக்கீடு) சட்டம் (Backward Classes (Reservation in Services) Act), 2006 ஐ நிறைவேற்றுவதன் மூலம் சட்டத்தை புதுப்பிக்க முயன்றது. இந்த சட்டம் பால்மீகி மற்றும் மசாபி சீக்கிய சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டில் முதல் முன்னுரிமையை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
2010 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த விதியை நிராகரித்தது. இதையடுத்து பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
2014 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் 'தேவிந்தர் சிங் vs பஞ்சாப் மாநிலம்' (Davinder Singh v State of Punjab) என்ற வழக்கில், 2004 இ.வி.சின்னையா தீர்ப்பின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மேல்முறையீட்டை அனுப்பியது. இதன் அடிப்படையில், அரசியலமைப்பு விளக்கம் உச்ச நீதிமன்றத்தின் குறைந்தது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வைக் கட்டாயப்படுத்துகிறது.
இ.வி.சின்னையா தீர்ப்பை மறுபரிசீலனை
2020 ஆம் ஆண்டில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, நீதிமன்றத்தின் 2004 முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. நீதிமன்றமும் அரசும் "அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது மற்றும் அப்பட்டமான யதார்த்தங்களுக்கு கண்களை மூடிக்கொள்ள முடியாது" என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் ஒரு சீரான குழு என்ற கருத்தை அது நிராகரித்தது. "பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் பட்டியலில் சமத்துவமற்றவர்கள் இருப்பதை வலியுறுத்தியது."
குறிப்பாக, ஈ.வி.சின்னையா தீர்ப்பின் முடிவைத் தொடர்ந்து, "கிரீமி லேயர்" (creamy layer) என்ற கருத்து பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) இடஒதுக்கீட்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'ஜர்னைல் சிங் vs லக்ஷமி நாராயண் குப்தா' (Jarnail Singh vs Lachhmi Narain Gupta) வழக்கில் 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் "கிரீமி லேயர்" (creamy layer) கருத்தை உச்ச நீதிமன்றத்திலும் சேர்ப்பதை உறுதிப்படுத்தியது. 'கிரீமி லேயர்' (creamy layer) கருத்து இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களுக்கு வருமான வரம்பை விதிக்கிறது. ஆரம்பத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Castes (OBC)) பொருந்தும் என்றாலும், இது 2018 இல் முதல் முறையாக பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SC) பதவி உயர்வுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.
துணை பிரிவின் அடிப்படையில் கிரீமி லேயர் (creamy layer) சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து அதிக வளமான சாதியினரை விலக்குவதற்குப் பதிலாக, மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
தேவிந்தர் சிங் அமர்வில் ஐந்து நீதிபதிகள் (ஈ.வி.சின்னையா) இருந்ததால், ஏழு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு இப்போது இந்த பிரச்சினையை அணுகுகிறது. ஒரு பெரிய அமர்வின் தீர்ப்பு மட்டுமே ஒரு சிறிய அமர்வின் திர்ப்பின் முடிவை மீற முடியும்.
இந்த துணை பிரிவின் உத்தி பஞ்சாபில் உள்ள பால்மீகிகள் மற்றும் மசாபி சீக்கியர்களை மட்டுமல்ல, ஆந்திராவில் மடிகா, பீகாரில் பாஸ்வான்கள், உத்திர பிரதேசத்தில் ஜாடவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் ஆகியோரையும் பாதிக்கும்.
இரு தரப்பு வாதங்களும்
பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங், அரசியலமைப்பு 341-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள மாநிலங்களை மாற்ற முடியாது என்று ஈ.வி.சின்னையா வழக்கில் கூறியது தவறு என்று கூறினார்.
இது, அரசியலமைப்பின் பிரிவு 16(4) மாநில சேவைகளில் "போதுமான பிரதிநிதித்துவம்" (adequately represented) இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடங்களை ஒதுக்க மாநில அரசை அனுமதிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த சொல் "போதுமானதாக" (adequately) மற்றும் "சமமாக" (equally) இல்லை என்பதால், இது குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று சிங் வாதிட்டார்.
பஞ்சாபின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional Advocate General) ஷதன் ஃபராசத், அரசியலமைப்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 342ஏ சின்னையா தீர்ப்பின் முடிவு இனி பொருந்தாது என்பதை தெளிவுபடுத்துகிறது என்று குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் பட்டியலில் இருந்து வேறுபட்டு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் தனி பட்டியலை வைத்திருக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் (Former Attorney General) கே.கே.வேணுகோபால் மீண்டும் நீதிமன்றத்தில் துணை பிரிவு கோரி வாதிட்டார். சின்னையா வழக்கில் தனது அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், துணை பிரிவு இல்லாமல், சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் பின்தங்கிவிடும், இது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை தோற்கடிக்கும் என்று கூறினார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, குடியரசுத் தலைவர் பட்டியலில் உள்ள அனைத்து சமூகங்களும் தீண்டாமை என்ற களங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். அரசியல் நிர்ணய சபை வேண்டுமென்றே இந்த சமூகங்களுக்கிடையேயான துன்பத்தின் அளவை ஒப்பிடுவதை தவிர்த்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் பிரிவில் பட்டியலிடப்பட்ட ஒரு சமூகம் இடஒதுக்கீடு பலன்களைப் பெறவில்லை என்றால், அவர்கள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் என்ற களங்கத்தை மட்டுமே தாங்குவார்கள் என்று ஹெக்டே வாதிட்டார். மற்றொரு இடையீட்டாளர் இந்தக் கருத்தை ஆதரித்தார். மாநிலங்கள் சில தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மற்றவர்களைவிட தேர்ந்தெடுத்து சாதகமாக நடத்த முடியாது என்று வலியுறுத்தினார்.
இந்த வாதத்தை கூடிய அமர்வானது ஒப்புக் கொண்டது. இது, இடஒதுக்கீடு தொடர்பான ஒதுக்கீட்டில் அரசியல் பரிசீலனைகள் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்க நீதிமன்றம் அளவுகோல்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அங்கீகரித்தார்.