பரவலாக்கப்பட்ட சமூகத் துறை திட்டங்களுக்கான ஒரு வரவு செலவுத் திட்டம் - அமர்ஜித் சிஹ்னா

 சிறந்த பள்ளிகள், சுகாதார வசதிகள், திறன் மையங்கள் மற்றும் பெண்கள் தலைமையிலான முன்முயற்சிகளுக்கு ஆளுகை மற்றும் நிதி சீர்திருத்தங்கள் முக்கியமானவை. 


இந்தியாவின் பேரியல் பொருளாதார மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை நம்பிக்கையை அளிக்கின்றன. கடினமான காலங்களில் கூட நாடு நல்ல பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. மத்திய வங்கியானது, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை, பணவீக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை பராமரித்து வருகிறது.


பல துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. இருப்பினும், அதிக பொருளாதார முன்னேற்றத்தை அடைய, இந்தியா கல்வி, திறன்கள் மற்றும் உற்பத்தித் திறனில் சிறந்த விளைவுகளைத் தேவை என்பதை பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.


மனித வளர்ச்சியில் சமூக பங்கேற்பு மேம்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து போன்ற பொதுத் துறைகளில் முடிவுகள் ஒரு சிக்கலாகவே உள்ளன. இதில் உள்ளடக்குவதற்கு ஒன்பது முக்கிய சவால்கள் உள்ளன. அவை, கண்ணியமான ஊதியங்கள், சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, அதிக பெண் தொழிலாளர் பங்கேற்பு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வியில் மேம்பட்ட விளைவுகள், உற்பத்தித்திறனுடன் திறன் மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சிப் பகுதிகளில் கண்ணியமான வாழ்க்கை மற்றும் காலநிலை மாற்ற பதில்கள் மூலம் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தை அணுகுதல் ஆகியவை அடங்கும். இந்த சவால்களை நிர்வாக சீர்திருத்தங்கள், அதிகரித்த நிதி மற்றும் சமூக பொறுப்புத் தன்மை மூலம் எதிர்கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை விரைவான வளர்ச்சியை அடைய உதவும்.


சில பொதுக் கொள்கைத் தலைவர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற பொது அமைப்புகளில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஏழைகளுக்கு ஆதரவான நலத்திட்டங்களின் வெற்றியிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் விரைவான உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு நிர்வாகத்திலும் நிதியிலும் சீர்திருத்தங்கள் அவசியம்.


பெண்களின் கூட்டு முயற்சிகள் மூலம் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான வெற்றிகரமான முயற்சிகள் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளன. இந்த முயற்சிகள் வீட்டுவசதி, சுகாதாரம், பாதுகாப்பான சமையல் எரிவாயு, மின்சாரம், வங்கிக் கணக்குகள், பெண்கள் கூட்டு முயற்சிகள் மற்றும் நானோ மற்றும் மைக்ரோ வணிகங்களை அணுகக்கூடிய லட்சபதி தீதிகள் (lakhpati didis) எனப்படும் பயனாளிகளின் சமூக வகுப்பை உருவாக்க உதவியுள்ளன. சமூக இணைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை, பெரிய அளவிலான மாற்றம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி அளிக்கிறது.


இந்த முயற்சிகளில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்கள் அதிக வெற்றியைப் பெற்றன. இது 2005-06 மற்றும் 2019-21 ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் பல பரிமாண வறுமையில் (multi-dimensional poverty) விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. கோவிட் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீட்சி குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. இருப்பினும், கண்ணியமான வாழ்க்கை, அதிக தனிநபர் வருமானம் மற்றும் தரமான வேலைவாய்ப்புக்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதில் இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.


ஆதாரங்களின் அடிப்படையில், விளைவுகளுக்கு நிதிநிலை அறிக்கையில் பின்வரும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன:


தொழில்நுட்ப உள்ளீடு  (Tech input)


முதலில், ஏழைகளுக்கான நலத்திட்டங்களின் வெற்றிகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இது தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கொள்கைகளைப் பயன்படுத்தி பரவலாக்கப்பட்ட சமூக நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு போதுமான இணைக்கப்படாத வளங்களால் இது ஆதரிக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கான ஒன்பது சவால்களுக்கு செயல்திறனுக்காக கடைசி மைலில் இதேபோன்ற அணுகுமுறைகள் தேவை. நிர்வாக சீர்திருத்தங்கள் விளைவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.  மனித மேம்பாட்டுத் துறைகளில் நிபுணர்களை வழங்குவதன் மூலமும், பரவலாக்கப்பட்ட சமூக நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலமும் இதைச் செய்யலாம். பள்ளிகள், சுகாதார வசதிகள், திறன் மையங்கள், ஊட்டச்சத்து மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்கள், பசுமை வளர்ச்சி, பெண்கள் தலைமையிலான பொருளாதார செயல்பாடு மற்றும் போதுமான சமூக நிறுவன நிதிகள் அனைத்தும் கடைசி மைலில் தேவைப்படுகின்றன. இவை சமூக மூலதனத்தால் வழிநடத்தப்படும் கடன் அணுகலை உறுதி செய்ய உதவும்.


கல்வி நிலையங்கள் 


இரண்டாவதாக, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற துணை வார்டு பிரிவிலும் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு மேல்நிலைப் பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட முன்பருவ பள்ளியை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். ராஜஸ்தான் இந்த அணுகுமுறையை வெற்றிகரமாக முயற்சித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறப்போடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டதும், பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர் பஞ்சாயத்து கல்வி அலுவலராகவும் பணியாற்ற வேண்டும். திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு தலைமை ஆசிரியருக்கு சமூக நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும்.


ஒரு சில PM SHRI பள்ளிகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு பஞ்சாயத்து அல்லது நகர்ப்புற துணை வார்டிலும் ஒருங்கிணைந்த சிறப்புப் பள்ளியை உருவாக்க வேண்டும். உயர் தரத்தை உறுதி செய்ய இந்தப் பள்ளிகள் நன்கு நிதியளிக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளி திறன் மேம்பாட்டிற்கான மையமாகவும் செயல்பட வேண்டும். பஞ்சாயத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் இருக்க வேண்டும். ஏனெனில், நாம் நோக்கமாகக் கொண்ட மாற்றத்திற்கு வலுவான தலைமை தேவை.  நிதி மற்றும் மனித வளங்களை நிர்வகிக்க உள்ளூர் அரசு அல்லது பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் இணைந்து பள்ளித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.


கேந்திரிய மற்றும் நவோதயா வித்யாலயாக்களைப் போலவே ஒருங்கிணைந்த பஞ்சாயத்து/சப் அர்பன் வார்டு மேல்நிலைப் பள்ளிகளையும் தன்னாட்சி பெற்றதாக மாற்ற வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், அவற்றுக்கான வலுவான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.


கல்லூரிகள் 


மூன்றாவதாக, ஒவ்வொரு பட்டதாரி கல்லூரியையும் பாடத்தையும் ஒரு இறுதிப் பாடமாக மாற்ற வேண்டும். அவை B.A., B.Com., or B.Sc உடன், உள்ளூர் வேலைவாய்ப்புப் பாடத்தில் சான்றிதழ் அல்லது டிப்ளமோவைச் சேர்க்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழக மானியக் குழு மும்பையின் செயிண்ட் சேவியர்ஸ் மற்றும் ரூயா கல்லூரி போன்ற கல்லூரிகள் தங்கள் பட்டமளிப்பு திட்டங்களுடன் வேலைவாய்ப்புப் படிப்புகளை வழங்க ஊக்குவித்தது. இந்த முயற்சி முதலாளிகள், இந்தக் கல்லூரிகளையும் அவற்றின் படிப்புகளையும் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை நாம் மிகப் பெரிய அளவில் செயல்படுத்த வேண்டும். இது வேலைவாய்ப்புப் சுற்றுச்சூழல் அமைப்பை உற்சாகப்படுத்தக்கூடும்.  இதை வெற்றிகரமாகச் செய்ய, முதலாளிகள் பாடநெறி வடிவமைப்பு மற்றும் நிதியுதவியில் பங்கேற்க வேண்டும்.


பெண்கள் கூட்டமைப்பு 


நான்காவதாக, பஞ்சாயத்து/நகர்ப்புற மட்டத்தில் மகளிர் கூட்டுறவின் சமூக மூலதனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் ஈடுபட வேண்டும். இது புதுமைகளை ஊக்குவிக்கவும், துறைகள் முழுவதும் நேர்மறையான விளைவுகளை அடையவும் உதவும்.  லட்சாதிபதி தீதிகளின் (lakhpati didis) தொலைநோக்கு இன்னும் அதிக வருமானத்தை இலக்காகக் கொண்டு விரிவுபடுத்தப்பட வேண்டும்.


பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஆதரிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கான குறைந்தது பத்து வசதியான குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களை அமைக்கவும். இது தாய்மார்களுக்கு திறன் மையங்கள், பள்ளிகள் மற்றும் வேலைகளில் கலந்துகொள்ள நம்பிக்கையை அளிக்கும். வளர்ந்த இந்தியாவிற்கு முறையாக ஊதியம் பெறும் பல பராமரிப்பாளர்கள் தேவை.


சமூக நடவடிக்கை 


ஐந்தாவதாக, பசுமை வளர்ச்சியானாது உந்துதல் தொழில்முறை மற்றும் அறிவியல் கொள்கைகளுடன் ஒருங்கிணைந்த, பரவலாக்கப்பட்ட சமூக செயல்பாட்டிலிருந்து வரும். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். காற்றின் தரத்தை மேம்படுத்துவது, நெருக்கடிகளின் போது மேல்நோக்கிய தீர்வுகளின் அடிப்படையில் அல்லாமல், சமூகம்  சார்ந்த நடவடிக்கைகளின் மூலம் நிகழும்.


ஆறாவதாக, ஒவ்வொரு வீட்டையும் ஒரு சுகாதார வசதி மற்றும் சுகாதார பணியாளர்களுடன் இணைக்க வேண்டும். பள்ளிகள், சுகாதார வசதிகள், அங்கன்வாடிகள், திறன் மையங்கள் போன்றவற்றை நமது நிறுவனங்களை மேம்படுத்த மகளிர் கூட்டு அமைப்புகளின் சமூக மூலதனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பின் பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது அட்டவணைகளைப் பயன்படுத்தி ஒருமுகப்படுத்தப்பட்ட சமூக நடவடிக்கையே விளைவுகளுக்கான வழியாகும். 


ஏழாவது, நமது வளர்ச்சி முயற்சிகளுக்காக உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் பெண்கள் கூட்டுறவைச் சேர்ந்த சமூகக் குழுக்களிடம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு பணம், பொறுப்புகள் மற்றும் ஆதரவை வழங்க வேண்டும். இந்தக் கருத்தை ஆதரிப்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. நகர்ப்புறங்களிலும் சுற்றுப்புற மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும். கூடுதலாக, வளர்ச்சியை ஆதரிக்க, பெண்கள் கூட்டுறவைப் போலவே இளைஞர்களுக்கான சமூகக் குழுக்களையும் உருவாக்க வேண்டும்.


முடிவுகளை மையமாகக் கொண்ட ஒரு பட்ஜெட் நமக்குத் தேவை. சமூக நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலமும், அடிப்படையிலிருந்து ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும், தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், இறுதி கட்டத்தை அடைவதில் கவனம் செலுத்துவதன் மூலமும் முடிவுகள் கிடைக்கும். மனித மேம்பாட்டினால் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் அதிக வளர்ச்சி வரும்.


 அமர்ஜித் சிஹ்னா கட்டுரையாளர் மற்றும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் (Centre for Social and Economic Progress) மூத்த ஆய்வாளர். 




Original article:

Share:

லால் பகதூர் சாஸ்திரி மற்றும் தாஷ்கண்ட் பிரகடனம். -குஷ்பு குமாரி

 இன்று ஜனவரி 11 ஆம் தேதி லால் பகதூர் சாஸ்திரியின் 59 வது நினைவு தினத்தைக் குறிக்கிறது. அவர் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்தவர். 


இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, அக்டோபர் 2, 1904 அன்று, முன்னர் முகல்சராய் என்று அழைக்கப்பட்ட பண்டிட் தீன் தயாள் உபாத்யாய நகரில் பிறந்தார்.  தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மறுநாளே, ஜனவரி 11, 1966 அன்று உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் காலமானார். அவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாததால், அவரது மரணத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. லால் பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் ஒரு எளிய பின்னணியைச் சேர்ந்தவர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது இளமை வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் உத்தரபிரதேச மாநில அரசாங்கத்திலும் ஒன்றிய அரசாங்கத்திலும் பணியாற்றினார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் (1889-1964) மறைவுக்குப் பிறகு 1964 இல் அவர் பிரதமரானார்.


2. அவரது குழந்தைப் பருவப் பெயர் லால் பகதூர் ஸ்ரீவஸ்தவா. இருப்பினும், அவர் சாதி அமைப்பை எதிர்த்தார். மேலும், தனது குடும்பப் பெயரைக் கைவிடத் தேர்ந்தெடுத்தார். 1925 ஆம் ஆண்டில் வாரணாசியில் உள்ள காசி வித்யாபீடத்தில் பட்டம் பெற்ற பிறகு அவருக்கு 'சாஸ்திரி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. “சாஸ்திரி” என்ற பட்டப்பெயர் புனித நூல்களில் அறிஞர் (scholar) அல்லது நிபுணர் என்று பொருள்.


3. ஆகஸ்ட் 15, 1947 அன்று, அவர் காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சரானார். அவரது காலத்தில், முதல் பெண் பேருந்து நடத்துனர்கள் நியமிக்கப்பட்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லத்திகளுக்குப் பதிலாக நீர்த்தாரைப் (jets of water) பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார்.


4. 1952 ஆம் ஆண்டில், சாஸ்திரி ஒன்றிய ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சரானார். ஆகஸ்ட் 1956 ஆம் ஆண்டில், தெலுங்கானாவின் மெஹபூப்நகரில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் 112 பேர் இறந்தனர். இந்த துயரத்தால் சாஸ்திரி மிகவும் பாதிக்கப்பட்டு விபத்துக்கு பொறுப்பேற்றார். அவர் தனது ராஜினாமாவை பிரதமரிடம் வழங்கினார். ஆனால், பிரதமர் நேரு ராஜினாமாவை ஏற்கவில்லை.


5. நவம்பர் 1956 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அரியலூரில் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து 144 பயணிகளின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. சாஸ்திரி தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மீண்டும் ராஜினாமா செய்தார். 


லால் பகதூர் சாஸ்திரி: A Life of Truth in Politics  என்ற  சுயசரிதையில் "ஒரு அமைச்சரவை அமைச்சர் தனது அமைச்சகத்திற்குள் ஏற்பட்ட ஒரு விபத்துக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்த முதல் நிகழ்வு இது என்று  எழுத்தாளரும் ஓய்வுபெற்ற அதிகாரியுமான சி.பி. ஸ்ரீவஸ்தவா (சாஸ்திரியுடன் பணிபுரிந்தவர்) எழுதினார்.


 "இவரை விட சிறந்த நண்பர் அல்லது சக ஊழியரை யாராலும் எதிர்பார்க்க முடியாது. சாஸ்திரி மிகுந்த நேர்மை, விசுவாசம், வலுவான மதிப்புகள், தெளிவான மனசாட்சி மற்றும் கடின உழைப்பு கொண்ட மனிதர்." என்று  ஜவஹர்லால் நேரு சாஸ்திரியைப் பற்றி குறிப்பிட்டார்.


6. ராஜினாமா செய்த ஒரு வருடத்திற்குள், லால் பகதூர் சாஸ்திரி மீண்டும் ஒன்றிய அமைச்சரவைக்குத் திரும்பினார். அவர் உள்துறை அமைச்சர் மற்றும் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். உள்துறை அமைச்சராக, அரசாங்கத்தின் அலுவல் மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க அவர் உதவினார். தென் மாநிலங்கள் இந்தி ஆதிக்கம் குறித்து கவலைப்பட்டபோது, ​​இந்திக்கு இணையாக ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.


7. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மே 27, 1964 ஆம் ஆண்டு அன்று இறந்த பிறகு, ஜூன் 9, 1964 அன்று சாஸ்திரி பிரதமராகப் பதவியேற்றார்.  1966 ஆம் ஆண்டு  வரை 581 நாட்கள் அவர் பிரதமராகப் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ​​சாஸ்திரி நாட்டை வழிநடத்தி புதிய யோசனைகளை அறிமுகப்படுத்தினார். உற்பத்தியாளர்களுக்கான உணவு தானிய விலைகளை அவர் நிர்ணயித்தார். இது குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price (MSP)) என்று அழைக்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை பரிந்துரைக்கும் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices (CACP)) என்று அழைக்கப்படும் விலை ஆணையத்தை அமைத்தார்.


தாஷ்கண்ட் பிரகடனம் (Tashkent Declaration)


1. 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர், ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் அறிவிக்கப்படாத போரை தொடங்கியது. 1962 ஆம் ஆண்டில் சீனாவிடம் தோல்வியடைந்த பிறகு இந்தியா மீண்டும் போராடாது என்று பாகிஸ்தான் நம்பியது. செப்டம்பர் 1 ஆம் தேதி, ஜம்முவுக்கு அருகிலுள்ள அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியது.


2. பதிலுக்கு, இந்திய இராணுவம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையைத் தாண்டி தாக்குதலைத் தொடங்கியது.  பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இதற்கு ஒப்புதல் அளித்தார். ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவிக்க ஊக்குவிக்க முயன்றது. இறுதியில், சோவியத் பிரதமர் அலெக்ஸி கோசிகின் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கானை உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டிற்கு அழைத்தார்.


3. தாஷ்கண்டில், ஜனவரி 10, 1966 ஆம் ஆண்டு அன்று, தாஷ்கண்ட் பிரகடனம் கையெழுத்தானது. இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகால அமைதி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.  இந்த பிரகடனத்தில் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தானின் ஜெனரல் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். சோவியத் யூனியன் மத்தியஸ்தம் செய்தது. இரு தரப்பினருக்கும் தெளிவான வெற்றி இல்லாமல் போர் முடிந்தது.


4. மறுநாள், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவருடன் தாஷ்கண்டில் இருந்த சி.பி. ஸ்ரீவஸ்தவா, சாஸ்திரிக்கு முன்னர் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால்,  அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று எழுதினார்.


5. அவரது வாழ்க்கை வரலாற்றின் முடிவுரையில், ஸ்ரீவஸ்தவா சாஸ்திரியின் மரணம் குறித்த வதந்திகளைப் பற்றி குறிப்பிட்டார். சிலர் சாஸ்திரி தனது விருப்பத்திற்கு மாறாக தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட சோவியத் தலைவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினர்.  ஸ்ரீவஸ்தவா இதை மறுத்தார். சாஸ்திரி அதில் சுதந்திரமாக கையெழுத்திட்டதாகவும், ஒரு பெரிய சாதனை உணர்வை உணர்ந்ததாகவும் கூறினார். பிரேத பரிசோதனை நடத்தப்படாததால் இந்த சந்தேகங்கள் எழுந்தன என்றும் அவர் கூறினார்.


6. 1965 ஆம் ஆண்டு அலகாபாத் மாவட்டத்தில் உள்ள உருவா கிராமத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தின் போது சாஸ்திரி "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" (Jai Jawan, Jai Kisan”) என்ற முழக்கத்தை உருவாக்கினார். பாகிஸ்தானுடனான நடந்து வரும் போர் மற்றும் இந்திய-சீனப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட கடுமையான உணவுப் பற்றாக்குறையின் போது இது நடந்தது. எல்லைகளைப் பாதுகாக்கும் இந்திய வீரர்களை "ஜெய் ஜவான்" என்று கூறி அவர்களை கௌரவித்தார். அதே நேரத்தில் "ஜெய் கிசான்" விவசாயிகள் தங்கள் சொந்த போராட்டங்களை எதிர்கொண்டதை அங்கீகரித்தார்.


7. தனது குறுகிய பதவிக்காலத்தில், சாஸ்திரியின் தலைமையின் கீழ், இந்திய வீரர்கள் எல்லையைப் பாதுகாத்தனர். விவசாயிகள் நாட்டிற்கு உணவளிக்க கடுமையாக உழைத்தனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு  இரண்டையும் சாஸ்திரி முக்கியமானதாகக் கருதினார்.


8. இந்தியாவை அணுசக்தி சக்தியாக மாற்றிய 1998 ஆம் ஆண்டு போக்ரான் அணுசக்தி சோதனைகளுக்குப் (Pokhran nuclear tests) பிறகு, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் "ஜெய் விஞ்ஞான்" அல்லது "அறிவியல் வாழ்க" (hail science) என்ற முழக்கத்தை சேர்த்தார். இது இந்தியாவின் தேசிய நல்வாழ்வுக்கு அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு படி மேலே சென்று, ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த "ஜெய் அனுசந்தன்"  அல்லது "அறிவியல் ஆராய்ச்சி" (hail research) என்ற வார்த்தையைச் சேர்த்தார்.




Original article:

Share:

சிலிகுரி வழித்தடம்: பாதுகாப்பு, இணைப்பு மற்றும் சவால்கள் -ராக்கி பட்டாச்சார்யா மற்றும் விமல் காவாஸ்

 பிராந்திய வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய சிலிகுரி வழித்தடத்தை (Siliguri Corridor) வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உள்துறை அமைச்சர் சரியாக வலியுறுத்தியுள்ளார். 


சிலிகுரி வழித்தடம் சமீபத்தில் தேசிய செய்திகளில் இடம்பிடித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது "கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான இராஜதந்திரப் பகுதி" என்று விவரித்தார். இது "வடகிழக்கு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பாக செயல்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். இது வடக்கு வங்காளத்தின் சிலிகுரிக்கு அருகிலுள்ள ராணிதங்காவில் சஷாஸ்திர சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) இன் 61-வது எழுச்சி தினத்தின் போது நடந்தது.


இந்த வழித்தடம் 1947-ம் ஆண்டில் பிரிவினையுடன் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டது. பீகார் மற்றும் மேற்கு வங்கம் (பிரதேசங்களை மாற்றுதல்) சட்டம் (Bihar and West Bengal (Transfer of Territories) Act), 1956 இன் கீழ் இந்தியாவின் உள் எல்லை மாற்றங்களால் மேலும் பாதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் பீகாரில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ஒரு நிலப்பகுதியை மாற்றியது. 1971-ம் ஆண்டில் வங்காளதேச விடுதலையால் இந்த வழித்தடமும் பாதிக்கப்பட்டது. 


முன்னதாக, இந்தியாவில் நடந்த ஆங்கிலோ-கோர்கா போர் (Anglo-Gorkha war) மற்றும் டுவார் போர் (Duar War)  பிரிட்டிஷ் போர்கள் காரணமாக பல பிராந்திய மாற்றங்கள் ஏற்பட்டன. சுகௌலி மற்றும் புனகா ஒப்பந்தங்களும் (treaties of Sugauli and Punakha) இந்த வழித்தடத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, 1950-ம் ஆண்டு அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்திற்கு இந்த நிலப் பாதை முக்கியமானதாக மாறியது. இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாகவும் மாறியது.


இந்த வழித்தடம் சுமார் 20 கி.மீ அகலமும் 60 கி.மீ நீளமும் கொண்டது. இது வடக்கே நேபாளம் மற்றும் பூட்டானுக்கும் தெற்கே வங்காளதேசத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய ஆறுகள், மஹானந்தா மற்றும் டீஸ்டா, வழித்தடத்தில் பாய்கின்றன. சீனாவிற்கும் அருகில் உள்ளது. அதன் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, வழித்தடத்தின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.


எல்லை தாண்டிய ஈடுபாடுகள் வடகிழக்கில் வர்த்தகம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், வழித்தடத்திற்கான திறந்த அணுகல் சட்டவிரோத நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளது. மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல், கள்ள நோட்டு சுழற்சி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு விரோதமான குழுக்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.  இது இந்த வழித்தடத்தை இந்தியாவிற்கு ஒரு பாதிக்கப்படக்கூடிய இடமாக மாற்றியுள்ளது. 1971-ம் ஆண்டில் வங்காளதேசம் உருவாக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் ஒரு பெரிய மக்கள்தொகை மாற்றம் ஏற்பட்டது. நேபாளம், பூட்டான் மற்றும் வங்காளதேசத்துடனான நுண்துளை எல்லைகள் "Siliguri Corridor or Chicken's Neck" பகுதியை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.


2024-ம் ஆண்டில் மட்டும்,  சஷாஸ்திர சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) 4,000 போதை கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்ததாகவும், அப்பகுதியைச் சுற்றி 16,000 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாகவும் ஷா தனது உரையில் தெரிவித்தார். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் தளமாக அதை மீண்டும் உருவாக்கக்கூடும். இது வடகிழக்கை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றும்.  இதனால், வங்காளதேசத்தில் வளர்ந்து வரும் அரசியல் சிக்கலும் அதை ஆபத்தானதாக ஆக்குகிறது. இந்த நடைபாதையைச் சுற்றி உலகளாவிய பயங்கரவாத குழுவான அன்சருல்லா பங்களா குழுவின் (Ansarullah Bangla Team) செயல்பாடு குறித்த சமீபத்திய சான்றுகள் இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை எச்சரிக்கையடையச் செய்துள்ளன. இந்த குழுவின் சந்தேகத்திற்குரிய உறுப்பினர்கள் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த 10 ஆண்டுகளில், கிழக்கு நோக்கிய கொள்கை (Act East Policy)  வடகிழக்கில் வேகமாக வளர உதவியது. உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் முதலீடுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. சும்பி பள்ளத்தாக்குக்கு (Chumbi Valley) அருகிலுள்ள சிலிகுரி வழித்தடம் (இந்தியா, பூட்டான் மற்றும் சீனா சந்திக்கும் இடம்) தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக செயல்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், மிகுந்த கவனம் செலுத்தப்படாவிட்டால், நன்மைகளை விட அபாயங்கள் அதிகமாக இருக்கலாம். கூடுதலாக, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மலைகள் மற்றும் டுவார்ஸ் பகுதிகளில் நீண்டகால அரசியல் விருப்பங்களை புறக்கணிக்கக்கூடாது.


இந்த வழித்தடம் புதிய வெளிப்புற சவால்களை எதிர்கொள்கிறது. எனவே, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசரம். இந்த சூழ்நிலையில், சிலிகுரி வழித்தடத்தை வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் SSB-யின் முக்கியத்துவத்தை உள்துறை அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். இது பிராந்திய வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான அதன் திறனைத் திறக்க உதவும். சிறந்த பாதுகாப்பிற்கு கூடுதலாக, கலாச்சார ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல் போன்ற மென்மையான நடவடிக்கைகளும் முக்கியமானவை. சுற்றுப்புற நிலைமை மாறும்போது, ​​இந்தியாவின் இராஜதந்திரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை ஆதரிப்பதில் சிலிகுரி வழித்தடத்தின் எதிர்காலம் முக்கியமாக இருக்கும்.


ராக்கி பட்டாச்சார்யா மற்றும் விமல் காவாஸ் எழுத்தாளர்கள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வடகிழக்கு இந்தியாவின் சிறப்பு ஆய்வு மையத்தின் பேராசிரியர்கள்.




Original article:

Share:

1.5°C வெப்பநிலையை மீறினால் என்ன நடக்கும்? - அமிதாப் சின்ஹா

 2024-ம் ஆண்டு 1.5 டிகிரி செல்சியஸ் புவி வெப்பமடைதல் வரம்பை மீறியது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்த முதல் ஆண்டாக இது மாறியுள்ளது. 


2024-ம் ஆண்டில் பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இந்தத் தரவு கோபர்னிக்கஸ் காலநிலை மாற்ற சேவையிலிருந்து வெளிவருகிறது.  இது ஐரோப்பிய நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்பு மையத்தால் (European Centre for Medium Range Weather Forecasting (ECMWF)) நிர்வகிக்கப்படுகிறது.


உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) ஐரோப்பிய நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) தரவு உட்பட ஆறு தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தியது. இந்த தரவுத்தொகுப்புகளின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.55 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர். ஆறு தரவுத்தொகுப்புகளும் 2024-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டு என்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால், அனைத்தும் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவு செய்யவில்லை.


ஒரு தன்னிச்சையான வரம்பு  


1.5 டிகிரி வரம்பு என்பது தன்னிச்சையாக தீர்மானிக்கப்பட்ட வரம்பு.  காலநிலை மாற்ற தாக்கங்களைப் பொறுத்தவரை, இந்த வரம்பைத் தாண்டியவுடன் புதிதாக எதுவும் நடக்கத் தொடங்காது. வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது காலநிலை தாக்கங்கள் மிகவும் கடுமையானதாகவும் அடிக்கடி மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று மட்டுமே அறிவியல் கூறுகிறது. 


2024-ம் ஆண்டு மீறல் 1.5 டிகிரி இலக்கு முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இலக்கு,  நீண்டகால வெப்பநிலை போக்குகளைக் குறிக்கிறது. பொதுவாக, இரண்டு முதல் முப்பதாண்டுகளுக்கு, வருடாந்திர அல்லது மாதாந்திர சராசரிகள் அல்ல. 


இந்த மீறல் ஆச்சரியமானது இல்லை. இந்த எல்லை 2027-ம் ஆண்டுக்கு முன்னர் கடக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியானது என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது. 


இதன் விளைவாக, இந்த புதிய தரவு காலநிலை மாற்றத்தின் சிக்கலைச் சமாளிக்க நாடுகளிடமிருந்து எந்தவொரு புதிய பதில் நடவடிக்கைகளையும் தூண்ட வாய்ப்பில்லை.  இதுவரை, அவர்களின் முயற்சிகள் போதுமானதாக இல்லை. 


உலகளாவிய உமிழ்வுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன. 2030-ம் ஆண்டு கார்பன் உமிழ்வு குறைப்புக்கான இலக்குகள் தவறவிடப்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, 2024-ம் ஆண்டில் ஏற்பட்ட மீறல் அடுத்த பத்தாண்டில் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறக்கூடும்.


"தொழில்துறைக்கு முந்தைய நிலையை விட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் பாரிஸ் ஒப்பந்தம் மீறப்பட்டதாக அர்த்தமல்ல.  இருப்பினும், தற்போதைய வெப்பமயமாதல் விகிதம் ஒரு பத்தாண்டிற்கு 0.2 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருப்பதால், பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5 டிகிரி இலக்கு 2030-ம் ஆண்டுக்குள் மீறப்படும் வாய்ப்பு அதிகம்" என்று ECMWF தெரிவித்துள்ளது.


2023, 2024 விதிவிலக்காக வெப்பம் 


2024-ம் ஆண்டு, 2023-ம் ஆண்டை விட இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டாக மாறியுள்ளது. 2023-ம் ஆண்டில், தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட வெப்பநிலை 1.45 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளும் விதிவிலக்காக அதிக வெப்பமாக சில சூழ்நிலைகளில் இருந்தன. ஜூலை 2024 தவிர, ஜூலை 2023-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் அதே மாதத்தின் சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமாக உள்ளது.


ECMWF படி, கடந்த பத்தாண்டின் விரைவான வெப்பமயமாதல் போக்கின் பின்னணியில் கூட 2023 மற்றும் 2024 ஆண்டுகள் தனித்து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக, முந்தைய வெப்பமான ஆண்டான 2016, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.29 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தது. இந்த ஆண்டு   கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அவ்வப்போது நிகழும் மிகவும் சக்திவாய்ந்த  எல்நினோவின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இது உலகளாவிய வானிலையை கணிசமாக பாதிக்கிறது. எல்நினோ பொதுவாக வெப்பமயமாதலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், அதற்கு நேர்மாறான லாநினா குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது.


எல்நினோ 2023 மற்றும் 2024-ம் ஆண்டில் ஏற்பட்டது. ஆனால், அது 2015-2016 நிகழ்வை விட பலவீனமாக இருந்தது.  ECMWF இன் கூற்றுப்படி, 2023 மற்றும் 2024 இல் அசாதாரண வெப்பமயமாதல் பல காரணிகளால் ஏற்படலாம். இருப்பினும், எந்த ஒரு காரணமும் இதற்கு இல்லை. மற்ற கடல் பகுதிகளில் "முன்நிகழ்ந்திராத" (unprecedented) எல்நினோ போன்ற அமைப்புகளை அவர்கள் ஒரு சாத்தியமான காரணமாகக் குறிப்பிட்டனர்.


கூடுதலாக, ஜனவரி 2022-ம் ஆண்டில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே நீருக்கடியில் எரிமலை வெடிப்பு மற்றும் 2024-ம் ஆண்டில் கப்பல் துறையிலிருந்து குறைந்த சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றம் வெப்பமயமாதலுக்கு பங்களித்திருக்கலாம். வளிமண்டலத்தில் உள்ள சல்பர் டை ஆக்சைடு சில சூரிய கதிர்வீச்சை பிரதிபலிக்கிறது, இது பூமியை அடைவதைத் தடுக்கிறது.


அசாதாரண வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம். இது 2024-ம் ஆண்டில் அதன் வழக்கமான 11 ஆண்டு சூரிய சுழற்சியின் போது சூரிய அதிகபட்ச கட்டத்தில் இருந்தது. இந்த சுழற்சியின் போது, சூரியனின் காந்த துருவங்கள் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு புரட்டுகின்றன. சூரிய அதிகபட்ச கட்டத்தில் பூமியை அடையும் சூரிய ஆற்றலின் அதிகரிப்பு வெப்பமயமாதலுக்கு பங்களித்திருக்கலாம் என்று ECMWF தெரிவித்துள்ளது. 


ஆனால், இவை சாத்தியங்கள் மட்டுமே. 2023-24 வெப்பமயமாதலுக்கான சாத்தியமான காரணங்கள் இன்னும் உறுதியான பகுப்பாய்வு பின்னர் வரும். 


2025 மற்றும் அதற்குப் பிறகு பார்க்கும்போது


2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட அசாதாரண போக்குகள் 2025 ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இந்த ஆண்டு மிகவும் வெப்பமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதிக குளிராகவும் இருக்காது. கடந்த பத்தாண்டுகளில், ஆண்டு வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.1 முதல் 1.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டு இந்த வரம்பிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்செயலாக, இங்கிலாந்து வானிலை அலுவலகம், கடந்த மாதம் வெளியிட்ட கணிப்பில், 2024 மற்றும் 2023 ஆண்டுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு மூன்றாவது வெப்பமான ஆண்டாக உருவாகக்கூடும் என்று கூறியது. 


உலக வானிலை அமைப்பின் (WMO) அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. 2028 ஆம் ஆண்டுக்கு முந்தைய வருடத்தில் தொழில்துறைக்கு முந்தைய அளவை விட ஆண்டு சராசரி வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று அது பரிந்துரைத்தது.  இப்போதிலிருந்து 2028 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை விட அதிகமாக இருக்க 50% வாய்ப்பு இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.




Original article:

Share:

மரபணு வரிசைமுறை (genome sequencing) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஒரு பெரிய தரவுத்தொகுப்பைத் தொடங்கினார். இது இந்திய உயிரியல் தரவு மையத்தில் (Indian Biological Data Centre) சேமிக்கப்பட்ட 8 பெட்டாபைட் (petabytes) தரவைக் கொண்டுள்ளது. அவர் இதை உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒரு "மைல்கல்" என்று அழைத்தார்.


2. புதுதில்லியில் நடந்த ஜீனோமிக்ஸ் தரவு மாநாட்டில் (Genomics Data Conclave) பதிவுசெய்யப்பட்ட உரையில், "ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India project) நாட்டின் உயிரி தொழில்நுட்ப புரட்சியில் ஒரு முக்கிய படியாகும். இந்த திட்டம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட மரபணு வளத்தை உருவாக்கும்.  இந்தியா புவியியல், உணவு மற்றும் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, மரபணு அமைப்பிலும் பன்முகத்தன்மை கொண்டது. எனவே, நாட்டின் மரபணு அடையாளத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்."


3. இந்த திட்டம் உயிரி மருந்துத் துறையை (biopharma sector) ஊக்குவிக்கும் என்று மத்திய அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்திய நோய்கள் இந்திய மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்படுவதையும் இது உறுதி செய்யும்.


4. தரவைப் பயன்படுத்த விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் திட்டங்களுக்கான அழைப்புக்கு பதிலளிக்க வேண்டும். அவர்கள் துறையுடன் ஒத்துழைக்க வேண்டும். இதனுடன் அரசாங்கம் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும்.


5. ஜீனோம் இந்தியா திட்டம் 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது இந்திய மக்கள் தொகையில் மரபணு மாறுபாடுகளின் விரிவான பட்டியலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




உங்களுக்குத் தெரியுமா?


1. ஒரு மரபணு என்பது ஒரு உயிரினத்தில் உள்ள அனைத்து மரபணுப் பொருட்களும் ஆகும். இது அதன் அனைத்து மரபணுக்களையும் உள்ளடக்கிய DNAவின் முழுமையான தொகுப்பாகும். மரபணுவில் உயிரினத்தை உருவாக்கவும் பராமரிக்கவும் தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன. மனிதர்களில், கருவுடன் கூடிய ஒவ்வொரு செல்லிலும் 3 பில்லியனுக்கும் அதிகமான DNA அடிப்படை ஜோடிகள் அடங்கிய முழு மரபணுவின் நகல் உள்ளது.


2. ஜீனோம் இந்தியா (Genome India) என்பது இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட ஒரு தேசிய திட்டமாகும். இது ஜனவரி 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் ஆரோக்கியமான நபர்களிடமிருந்து 10,000 மரபணுக்களை வரிசைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. ஜீனோம் இந்தியாவின் முக்கிய குறிக்கோள், இந்தியாவின் மக்கள்தொகையில் மரபணு மாறுபாடுகளின் முழுமையான பட்டியலை உருவாக்குவதாகும். இது நமது தனித்துவமான பன்முகத்தன்மையை கண்டறிய உதவும். இந்த திட்டம் மரபணுக்களை குறிப்பேடு (decoding) செய்வது மட்டுமல்ல. இது இந்திய மக்கள்தொகையின் மரபணு அமைப்பைக் குறிக்கும் மற்றும் அதன் பன்முகத்தன்மையைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும் ஒரு விரிவான குறிப்பை உருவாக்குவது பற்றியது.


4. மொத்தம் 8 பெட்டாபைட் தரவுகளைக் கொண்ட முழு தரவுத்தொகுப்பும் இந்திய உயிரியல் தரவு மையத்தில் (Indian Biological Data Centre (IBDC)) சேமிக்கப்படும்.  இது ஆராய்ச்சிக்கான டிஜிட்டல் பொது வளமாக அணுகக்கூடியதாக இருக்கும். 2022-ம் ஆண்டில் திறக்கப்பட்ட IBDC, இந்தியாவில் உள்ள ஒரே தரவுத்தளமாகும். இதற்கு முன்பு, இந்திய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் உயிரியல் தரவை அமெரிக்க அல்லது ஐரோப்பிய சேவையகங்களில் சேமிக்க வேண்டியிருந்தது.




Original article:

Share:

விவேகானந்தரின் போதனைகள் இளைஞர்களிடம் ஏன் எதிரொலிக்கின்றன? -திலீப் பி.சந்திரன்

 சுவாமி விவேகானந்தர் கீதையைப் படிப்பதை விட கால் பந்தாட்டத்தின் மூலம் இளைஞர்கள் சொர்க்கத்திற்கு அருகில் செல்ல முடியும் என்று கூறுவதன் பொருள் என்ன? ஜனவரி 12 அன்று கொண்டாடப்படும் அவரது 162 வது பிறந்த நாளில், உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அவரது பார்வையை மீண்டும் பார்ப்போம். 


கீதையைப் படிப்பதை விட கால்பந்தாட்டத்தின் மூலம் இளைஞர்கள் சொர்க்கத்திற்கு நெருக்கமாக இருப்பார்கள். ஏனெனில், கீதையின் உண்மையான புரிதலை உடல் வலிமை மற்றும் உயிர் சக்தியால் மட்டுமே அடைய முடியும். சுவாமி விவேகானந்தரின் இந்த வார்த்தைகள் ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஏனெனில், அவை ஆன்மீக மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான அடித்தளமாக உடல் நலனின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. 


எனவே, 1984-ம் ஆண்டில் இந்திய அரசு சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக (National Youth Day) அறிவித்தது. அவரது 162வது பிறந்த நாளில், ஆன்மீக வளர்ச்சி மற்றும் உடல் வலிமையின் சம முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவரது போதனைகளை மீண்டும் பார்ப்போம். 


சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்படும் நரேந்திர நாத் தத்தா ஜனவரி 12, 1863 அன்று பிறந்தார். முப்பத்தொன்பது ஆண்டுகள் (1863-1902) அவரது குறுகிய ஆயுட்காலம் இளமை ஆற்றலையும் வீரம் செறிந்த தேசத்தின் மறுமலர்ச்சியையும் அடையாளப்படுத்தியது. உதாரணமாக, "எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே" (arise, awake, and stop not till the goal is reached)  என்ற அவரது வரலாற்று அறைகூவல் காலனித்துவ இந்தியாவை அதன் நீண்ட தூக்கத்திலிருந்து எழுப்ப இந்தியத் தலைவர்களை ஊக்குவித்தது.  


1881-ம் ஆண்டில், இந்தியாவின் பிரம்ம சமாஜத்தின் நிறுவனர் கேசப் சந்திர சென் அவர்களால் விவேகானந்தர் வங்காளத்தின் மாபெரும் ஆன்மீக துறவி ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அறிமுகத்திற்குப் பிறகு விவேகானந்தர் ராமகிருஷ்ணருடன் தங்கினார். ராமகிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு, விவேகானந்தர் இந்து சமூகத்தை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தனது குருவிடமிருந்து கற்றுக்கொண்ட இரட்டை தத்துவத்தை (dualism) அத்வைத தத்துவத்தில் தனது சொந்த நம்பிக்கையுடன் சமரசம் செய்ய முயன்றார்.


கல்வியறிவற்ற மக்களுக்குப் புரிந்துகொள்வது எளிதாக இருந்ததால் இரட்டைவாதம் உலகளவில் பிரபலமாக இருந்தது என்று விவேகானந்தர் நம்பினார். இருப்பினும், பல பிரிவுகளைக் கொண்ட இரட்டை மதம் மற்ற நாகரிகங்களுக்கு எதிரான அதன் நிலையை பலவீனப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். அவர் பிரபலமாக, "நீங்கள் ஒரு இரட்டைவாதி என்றால், கடவுளுக்கு உதவ முயற்சிப்பது ஒரு முட்டாள்.  நீங்கள் ஒரு ஒற்றைவாதி என்றால், நீங்கள் கடவுள் என்பதை நீங்கள் அறிவீர்கள்..." என்று கூறினார்.


அத்வைத தத்துவத்தில், ஒவ்வொரு தனிமனிதனும் எல்லையற்ற உலகளாவிய ஆன்மாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது தனக்குத்தானே தீங்கு விளைவிப்பதற்கு சமம். விவேகானந்தரின் வேதாந்தம் இரட்டைவாதம் மற்றும் ஏகத்துவம் போன்ற வேறுபட்ட தத்துவங்களை ஒன்றிணைத்தது.


வேதங்களின் உச்ச அதிகாரத்தையும், உபநிடதங்களின் மாறாத தன்மையையும் அவர் நம்பினார். அவருக்கு, வேத மதம் உலகளாவியதாகவும் சகிப்புத்தன்மையுடனும் இருந்தது. இருப்பினும், பசி மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேதாந்தத்தின் உண்மைகள் சிறிதளவு ஈர்ப்பைக் கொண்டுள்ளன என்றும் அவர் நம்பினார். இந்தப் புரிதல் அவரை நடைமுறை வேதாந்தத்தின் தனது பதிப்பை அறிமுகப்படுத்த வழிவகுத்தது.


நடைமுறை வேதாந்தத்தின் சாராம்சம் கடவுள் பக்தியையும் மற்றவர்களுக்கான இரக்கத்தையும் இணைப்பதாகும். இந்தியாவில் வறுமைக்கான வேர் பொருள் முன்னேற்றத்தைப் புறக்கணிப்பதும், மன வலிமை மற்றும் துறவின் மீது அதிக கவனம் செலுத்துவதும் என்று விவேகானந்தர் நம்பினார். மத நூல்களைப் பிரசங்கிப்பதை விட வறுமையை ஒழிப்பதில் அவர் கவனம் செலுத்தினார். ஏழைகளுக்கு உணவு வழங்காமல் வேதங்களைப் கற்பிப்பது பயனற்றது மற்றும் அவமானகரமானது என்று அவர் உணர்ந்தார். "வெறும் வயிற்றுக்கு மதம் அர்த்தமற்றது" என்ற தனது குருவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, சமூக சேவை மூலம் மற்றவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.


செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் நடந்த உலக மதங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் (World Parliament of Religions) விவேகானந்தரின் உரை, உலகளவில் இந்து அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க உரையில், 19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளான தேசிய விழிப்புணர்வு, இந்து அடையாளம் மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றை அவர் விவாதித்தார். முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கான பாதையாக இந்து மதத்தின் தாராளவாத மற்றும் மனிதாபிமான பதிப்பை அவர் வழங்கினார்.


உண்மையில், விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் மத சகிப்புத்தன்மை முக்கிய கருப்பொருளாக இருந்தது. அவர் இந்து மதத்தை "மதங்களின் தாய்" (mother of religions) என்று குறிப்பிட்டார். மேலும், சகிப்புத்தன்மை மற்றும் உலகளாவிய ஏற்றுக்கொள்ளுதலின் அதன் மரபை வலியுறுத்தினார். உலகெங்கிலும் இருந்து துன்புறுத்தப்பட்ட பிரிவுகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் இந்து மதத்தின் வரலாற்று பங்கையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், இந்த சகிப்புத்தன்மை உணர்வு "தேசத்தின் இரத்தத்தில்" உள்ளார்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.  


இந்து மதமும், பௌத்த மதமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். "பௌத்தம் இல்லாமல் இந்து மதம் வாழ முடியாது அல்லது இந்து மதம் இல்லாமல் பௌத்தம் வாழ முடியாது. பிராமணர்களின் மூளையும் தத்துவமும் இல்லாமல் பௌத்தர்களும், பௌத்தர்களின் இதயம் இல்லாமல் பிராமணர்களும் நிற்க முடியாது என்பதை இந்தப் பிரிவு நமக்குக் காட்டியிருப்பதை உணருங்கள்."  


அனைத்து இருப்பின் ஒற்றுமை  


வன்முறைக்கு இட்டுச் செல்லும் மதவெறி, பிரிவினைவாதம் மற்றும் மதவெறியை விவேகானந்தர் முற்றிலுமாக நிராகரித்தார். இருப்பினும், மக்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கைகளைப் பற்றி அறியாத வரை மத வேறுபாடுகள் தொடரும் என்பதை அவர் உணர்ந்தார். இன்னொருவரின் கடவுளை கேலி செய்வது சொந்த மதத்தை கேலி செய்வதற்கு சமம் என்று அவர் வாதிட்டார். அவரைப் பொறுத்தவரை, இந்த ஒற்றுமை உணர்வு அனைத்து இருப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வேதாந்தம் மற்றும் ஒற்றுமைவாதத்தின் இலட்சியங்களிலிருந்து உருவானது.  


தனது சிகாகோ உரையில், அவர் கிறிஸ்தவ சமயப்பரப்பு நிறுவனங்களையும் விமர்சித்தார். பட்டினியால் வாடுபவர்களுக்கு உதவுவதை விட தேவாலயங்களைக் கட்டுவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர் என்று அவர் வாதிட்டார். "விதவையின் கண்ணீரைத் துடைக்கவோ அல்லது அனாதையின் வாய்க்கு ஒரு துண்டு ரொட்டியைக் கொண்டு வரவோ முடியாத கடவுளையோ அல்லது மதத்தையோ நான் நம்பவில்லை" என்று அவர் கூறினார். கடவுளைப் பற்றிப் பிரசங்கிக்கும் முன் பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் விவேகானந்தர் நம்பிக்கை கொண்டிருந்தார்.


கூட்டத்தின் இறுதி அமர்வில், தங்கள் மதம் தனியாக வாழ வேண்டும் என்று நம்புபவர்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.  உண்மையான மதம் வேற்றுமையில் ஒற்றுமையைத் தழுவுகிறது என்று அவர் கூறினார். இந்து மதத்தின் மையத்தில் சகிப்புத்தன்மை இருப்பதாக விவேகானந்தர் வலியுறுத்தினார். இருப்பினும், சகிப்புத்தன்மை பற்றிய அவரது கருத்து "மெலிதானது" மற்றும் "உடையக்கூடியது" என்று சில விமர்சகர்கள் வாதிட்டனர்.  


அவரது சொற்பொழிவு அமெரிக்காவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளை மேற்கத்திய நாடுகளில் பிரசங்கம் மற்றும் சொற்பொழிவு ஆற்றினார். அவர் 1897-ம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அவர் திரும்பிய பிறகு, இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சியின் ஒரு வீரராகப் பாராட்டப்பட்டார். அவர் 1897-ம் ஆண்டில் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். இந்த மிஷன் முக்கியமாக சமூக சேவை மற்றும் பிரசங்கத்தில் கவனம் செலுத்தியது.


”Discovery of India” என்ற நூலில், விவேகானந்தர் "மனச்சோர்வடைந்த மற்றும் மன உலைச்சல் அடைந்த இந்து மனதிற்கு ஒரு ஆற்றலாக வந்தார்" என்று ஜவஹர்லால் நேரு எழுதினார். விவேகானந்தரின் ஆன்மீக தேசியவாதம் பற்றிய கருத்து இந்திய தேசிய இயக்கத்தின் பல தலைவர்களைப் பாதித்தது. இதில் பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் அடங்குவர்.


19 ஆம் நூற்றாண்டில், இந்து மறை நூலும் ஆன்மீகமும் மக்களிடையே தேசிய உணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தன. தயானந்த சரஸ்வதி முதல் காந்தி வரையிலான தலைவர்கள் இந்த மரபைப் பயன்படுத்திக் கொண்டனர். அதே நேரத்தில், விவேகானந்தர் அதன் ஆரம்பகால மற்றும் குரல் விரிவுரையாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.  


விவேகானந்தரின் பணி முதன்மையாக அரசியல் அடிமைத்தனத்தை விட இந்தியாவின் கலாச்சார அவமானத்தை நிவர்த்தி செய்தாலும், இந்தியர்களை அடிமைப்படுத்துவதில் சுயராஜ்யம் இல்லாதது ஒரு முக்கிய காரணி என்று அவர் நம்பினார். ஆனாலும், அவரது பார்வை சுய ஆட்சிக்கு அப்பால் விரிவடைந்தது. ஏனெனில், அவர் முழு உலகத்தையும் ஆன்மீக ஒருமையாகக் கற்பனை செய்தார்.   


மேலும், விவேகானந்தரின் தேசியவாதம் ஒரு 'மையம்' (centre) என்ற கருத்தாக்கத்தைக் கொண்டது. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு மையம் உள்ளது என்றும் அதன் உயிர்வாழ்வு இந்த மையத்தைப் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வாதிட்டார். மதமே இந்தியாவின் மையம் என்று கண்டார். மேற்கின் பொருள் முதல்வாதத்தின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தியாவின் ஆன்மீக சுதந்திரம் முக்கியமானது என்று அவர் நம்பினார். மேலும், தேசத்தை புத்துயிர் பெற ஆன்மீக அலையைத் தொடங்க வலியுறுத்தினார். உலக ஆன்மீகத்தின் மையமாக இந்தியாவை அவர் உணர்ந்தார். மேலும், அதன் ஆன்மீக வலிமையால் உலகை வெல்லும் திறன் கொண்டது.   


வேதாந்த ஆன்மீகம் இந்தியாவின் அடிமைத்தனத்தைத் தீர்க்கும் என்று விவேகானந்தர் நம்பினார். மேற்கத்திய நாடுகளின் பொருள் முதல்வாதத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழியாகவும் அவர் இதைக் கண்டார். இந்திய நாகரிகம் அதன் ஆன்மீக அடித்தளத்தால் காலத்தின் சோதனையில் இருந்து தப்பிப்பிழைத்தது என்று அவர் வாதிட்டார். இதற்கு நேர்மாறாக, கிரேக்க, ரோமானிய மற்றும் எகிப்திய நாகரிகங்கள் நிலைத்திருக்கவில்லை. ஆன்மீகத்தையும் மதத்தையும் புறக்கணிக்கும் அரசியல் சுதந்திரம் அல்லது மத சீர்திருத்தத்திற்கான எந்தவொரு முயற்சியும் பயனற்றது என்று விவேகானந்தர் நம்பினார். ஆன்மீகத்தையும் மதத்தையும் "தேசத்தின் உயிர்நாடி" (life-blood of the nation) என்று அவர் கண்டார்.  இந்திய தேசியவாதத்தின் ஆரம்பகாலத் தலைவராக, விவேகானந்தர் நவீன பொருள் நாகரிகத்தை விமர்சித்தார். இந்தியாவில் தேசியவாதத்தின் கலாச்சார அடிப்படையை அவர் வலியுறுத்தினார்.


காலனித்துவ ஆட்சியின் போது, ​​ஆங்கிலேயர்கள் "ஆண்மை நிறைந்த காலனித்துவ முதலாளிகளுக்கும் "பெண்மை நிறைந்த இந்திய குடிமக்களுக்கும்" இடையே ஒரு பிளவை உருவாக்கினர். இது இந்திய தேசியவாதிகளை ஆண்மை பற்றிய ஒரு பூர்வீகக் கருத்தை புதுப்பிக்க முயன்றது. விளையாட்டு மற்றும் உடல் வலிமையை ஆதரித்த விவேகானந்தர், இந்தக் கருத்தை முதன்முதலில் ஊக்குவித்தவர்களில் ஒருவர்.  தேசிய சுதந்திரத்திற்கு உடல் வலிமை அவசியம் என்று அவர் நம்பினார். தேசிய மறுமலர்ச்சிக்கான முதல் படி உடலை வலுப்படுத்துவதாகும் என்று அவர் வாதிட்டார். இது இளைஞர்கள் தேசிய மறுமலர்ச்சிக்கு பங்களிக்க உதவும்.


கீதையைப் படிப்பதை விட கால்பந்து மூலம் இளைஞர்கள் சொர்க்கத்தை நெருங்க முடியும் என்று விவேகானந்தர் நம்பினார். கீதையைப் பற்றிய உண்மையான புரிதல் உடல் வலிமை மற்றும் உயிர்ச்சக்தி மூலம் வருகிறது என்பதை அவர் வலியுறுத்தினார். தேசத்தை மீண்டும் உருவாக்க, உடல் பலவீனத்தை வெல்வது மிக முக்கியம் என்று அவர் வாதிட்டார். தைரியம், வலிமை மற்றும் மீள்தன்மை போன்ற ஆண்மை குணங்களைத் தழுவுவது முக்கியம். தற்காப்பில் உடல் சக்தியைப் பயன்படுத்துவதை அவர் நியாயப்படுத்தினார். மேலும், அடக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மன்னிப்பை அவர் மதிப்பிட்டாலும், அது செயலற்ற தன்மை அல்லது பலவீனத்திலிருந்து வரக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.


உடல் வலிமையை ஆன்மீக ஒழுக்கத்துடன் இணைக்கும் "துறவற தேசியவாத ஆண்மையின்" ஒரு பதிப்பை விவேகானந்தர் பிரபலப்படுத்தினார். காலனித்துவ விளையாட்டுகள், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் உடல் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் விரிவாக எழுதினார். அடிமைத்தனத்தின் பிடியிலிருந்து இந்திய நாகரிகத்தை மீட்டெடுக்க மதம் மட்டும் போதாது என்று அவர் நம்பினார். அவரைப் பொறுத்தவரை, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் முன்வைக்கப்பட்ட சவால்களை சமாளிக்க பைசெப்ஸ் (biceps) மற்றும் கீதத்தால் (Gita) அடையாளப்படுத்தப்பட்ட உடல் வலிமைதான் வழி. ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடவும், அதிலிருந்து எழுந்து வயலுக்குச் செல்லவும் தயாராக இருக்குமாறு அவர் தனது சீடர்களை வலியுறுத்தினார்.  




Original article:

Share: