2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உயிரிப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும். -கிரண் மஜும்தார்-ஷா

 சீனாவைப் போல, மூலதனச் சந்தைகளையும், விதிமுறைகளையும் புதுப்பிப்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே முன்னேறுவதற்கான வழி.


இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் (bioeconomy) கடந்த பத்தாண்டுகளில் 16 மடங்கு வளர்ந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் $10 பில்லியனாக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் $165 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சரியான கொள்கைகளுடன், இது 2047-க்குள் $1.2 டிரில்லியனைத் தாண்டி, வளர்ந்த இந்தியாவின் (விக்சித் பாரத்) ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும் என்கின்றனர். ஆனால், இதற்கு அறிவியல்திறமை மட்டும் போதாது என்றும் இதற்கு வலுவான மூலதனச் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் நவீன, அறிவியல் அடிப்படையிலான ஒழுங்குமுறை அமைப்பு தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது.  இந்தப் பன்னாட்டு உயிரித்தொழில்நுட்பத் துறையில் சீனா ஒரு உறுப்பு நாடு என்கிற நிலையிலிருந்து உலகளாவிய தலைவர் என்கிற நிலைக்கு  உயர உதவிய இரண்டு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகிறது.


இந்தியாவிடம் அறிவியல் வலிமையும் திறமையும் இருக்கிறது, ஆனால் கண்டுபிடிப்புகள் வளர உதவும் அமைப்பு பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 


உயிரித்தொழில்நுட்பமானது மற்ற துறைகளிலிருந்து வேறுபட்டது: இதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. மேலும், ஆழமான அறிவியலை நம்பியுள்ளது. வளர்ச்சி அடைய நீண்டகாலம் ஆகும் என்று கூறப்படுகிறது. உலகளவில், உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சி நிலையிலேயே பொதுச் சந்தைகளில் நுழைகின்றன. எனவே, இது அவர்களுக்கு கடினமான காலங்களில் தாக்குப்பிடிக்க நீண்டகால மூலதனத்தை அளிக்கிறது.


இந்தியாவில், வருவாய் ஈட்டாத அல்லது ஆராய்ச்சி நிலையிலுள்ள உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், புதிய கண்டுபிடிப்பாளிகள் (innovators) பெரும்பாலும் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து  கிடைக்கும் பணத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த முதலீடும் குறைவாகவே உள்ளது, மேலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்கிறார்கள். அவரது குறைந்த மதிப்பீடுகள் புதிய தயாரிப்பு உருவாக்கத்தைக் குறைக்கிறது, மேலும் நம்பிக்கைக்குரிய இந்திய புத்தொழில் நிறுவனங்களை (Start-Up) வெளிநாடுகளுக்குச் செல்ல வழிவகுப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.


கடந்த பத்து ஆண்டுகளில், முதலீட்டு புதுமையானது எப்படி அறிவியல் புதுமைக்கு ஊக்கமளிக்கிறது என்பதை சீனா நிரூபித்துக் காட்டியுள்ளது:


ஷாங்காயில் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட STAR சந்தை (STAR Market), இலாபம் ஈட்டாத, வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் ஆழமான தொழில்நுட்ப நிறுவனங்களை, இலாபம் தேவைப்படாமல் பட்டியலிட அனுமதிக்கிறது. இது ஏற்கனவே 130 பில்லியன் டாலருக்கும் மேல் நிதி திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


ஹாங்காங்கின் உயிரித்தொழில்நுட்பப் பிரிவு (2018) லாபமற்ற உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்களும் பங்குச் சந்தையில் நுழைய அனுமதிக்கிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு, 25 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன.


2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில், சீனாவிற்கு உயிரியல் அறிவியல் துணிகர மூலதனமாக (life-sciences venture capital) 45 பில்லியன் டாலர் கிடைத்தது—இது இந்தியாவின் அளவைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிகம்.


சீனாவின் மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான (Research and Development (R&D)) செலவு 20 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் செலவு 3 பில்லியன் டாலர்கள் அளவில் மட்டுமே உள்ளது.


இந்த முதலீட்டுப் பெருக்கமானது சீனா விரைவாக உலகளாவிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாற உதவியுள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய தயாரிப்பு திட்டங்களைக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகியுள்ளன.


புதுமை மற்றும் உயிரித்தொழில்நுட்ப வாரியம் தேவை


NASDAQ, STAR மற்றும் ஹாங்காங்கைப் போலவே, தேசியப் பங்குச் சந்தை (NSE) மற்றும் பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) உள்ள ஒரு பிரத்தியேகப் பட்டியலிடும் பிரிவு (specialised listing board) வருமானம் ஈட்டாத மற்றும் ஆய்வுக் கட்டத்தில் உள்ள உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்களைப் பட்டியலிட அனுமதிக்க வேண்டும். இது, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property (IP)) சார்ந்த நிறுவனங்கள் பொறுமையுடன் முதலீடு செய்யும் (patient capital) நிதியைப் பெறவும், உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் பங்கேற்கவும், இந்திய தொடக்க நிலை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே வளரவும் உதவும் என்று வலியுறுத்துகின்றனர்.


அத்தகைய சீர்திருத்தம் உள்நாட்டு மூலதனத்தை விடுவித்து, உலகளாவிய நிறுவன முதலீட்டாளர்களை ஈர்த்து, இந்தியாவின் உயிரியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. 


ஒழுங்குமுறைச் சீர்திருத்தம்


தேவையான மூலதனம் இருந்தாலும், வேகமான மற்றும் தெளிவான விதிமுறைகள் இல்லாமல் புதிய கண்டுபிடிப்புகள் வளர முடியாது. ஆனால், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை கட்டமைப்பு இன்னும் மெதுவாகவும், பிளவுபட்டும், அதிகப்படியான அதிகாரத்துவத்துடனும் உள்ளது.


மனிதர்கள் மீதான முதல் சோதனை (FIH - First-in-Human) ஒப்புதல் பெறவே பெரும்பாலும் பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. ஒவ்வொரு கட்டத்திற்கும் (கட்டம் I, II, III) தனித்தனியான நிபுணத்துவக் குழுவின் (Subject Expert Committees (SECs)) ஆய்வு தேவைப்படுகிறது. இந்தக் குழுவின் ஒழுங்கற்ற கூட்டங்கள் அடிக்கடி தாமதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், மத்திய மருந்துகள் தர நிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பானது (Central Drugs Standard Control Organization (CDSCO)) mRNA, வட்ட வடிவ RNA (Ribonucleic Acid), CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats), CAR-T (Chimeric Antigen Receptor T-cell therapy), அல்லது AAV (Adeno-Associated Virus) மரபணு சிகிச்சைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவதற்குத் தேவையான நிபுணத்துவம் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.


சீனா பத்தாண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டது, ஆனால் சில சீர்திருத்தங்களால் அதை வெற்றிகரமாக சமாளித்தது. தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாக அமைப்பை (National Medical Products Administration (NMPA)) அறிவியல் அடிப்படையிலான, வலுவான ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றியது. மருத்துவ பரிசோதனை ஒப்புதல் நேரத்தை 40-60 சதவீதம் குறைத்தது, மேலும் பரிசோதனை கட்டங்களை ஒரே நேரத்தில் (இணையாக) நடத்த அனுமதி அளித்தது போன்ற மாறுதல்களைச் செய்தது. மேலும், சர்வதேச மருந்து ஒழுங்குமுறை தர நிர்ணய அமைப்பின் (International Council for Harmonisation of Technical Requirements for Pharmaceuticals for Human Use (ICH)) உறுப்பினரானது. இதனால் உலகத் தரத்தை எட்டியது மற்றும் புதிய மருந்துகளுக்கு விரைவான ஒப்புதல் முறையை அமல்படுத்தியது. இதன் பலனாக, பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்னதாகவே CAR-T (Chimeric Antigen Receptor T-cell therapy) சிகிச்சை முறைகளுக்கு மற்றும் மரபணு சிகிச்சை மருந்துகளுக்கு சீனா ஒப்புதல் அளித்தது என்கின்றனர். 


ஒழுங்குமுறைச் சுறுசுறுப்பு தெளிவான நம்பிக்கையை உருவாக்கியது. அது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்தது. இவை இரண்டும் இணைந்து உயிரித்தொழில்நுட்பத் துறையில் பெரிய ஏற்றத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. 








இந்தியாவிற்கான வாய்ப்புகள்


இந்தியா இரட்டைத் தூண் அமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் வேகமாக முன்னேற முடியும்:


மருத்துவ சோதனை நெறிமுறைகளின் அறிவியல் மதிப்பாய்வுக்கு (Indian Council of Medical Research (ICMR)) அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: வலுவான ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான திறமைகளுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு (ICMR) புதிய மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் மேம்பட்ட உயிரியல் தயாரிப்புகளுக்கு, குறிப்பாக ஆரம்பக்கட்ட சோதனைகளில், முக்கிய அறிவியல் ஆய்வு அமைப்பாக மாற முடியும்.


மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) உரிமம் வழங்குதல் மற்றும் மேற்பார்வையிடுவதில் கவனம் செலுத்தட்டும். மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமானது இறுதி அனுமதிகள், நல்ல உற்பத்தி முறைமைகள்  (Good Manufacturing Practice (GMP)) சோதனைகள், தள ஆய்வு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவற்றை கையாள வேண்டும்.


அறிவியல் ஆய்வை (ICMR) நிர்வாக உரிமம் வழங்கும் நடைமுறையிலிருந்து (CDSCO) பிரிப்பது அனுமதிகளை விரைவுபடுத்தும், அறிவியல் தரத்தை வலுப்படுத்தும், மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் என்று நம்பப்படுகிறது. 


இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சுழற்சி ஆற்றல்


மூலதனச் சந்தை சீர்திருத்தம், ஒழுங்குமுறை சீர்திருத்தம் இல்லாமல், புதுமை நிகழாது. மூலதனத்தின் அணுகல் இல்லாமல் ஒழுங்குமுறை சீர்திருத்தம், வளர்ச்சி வேகத்தை உருவாக்காது. ஆனால், இவை இரண்டும் சேர்ந்துதான் உலகளாவிய உயிரித்தொழில்நுட்பத் தலைமைக்கு உந்துசக்தியாக விளங்கும் சுழல் இயக்கத்தை  உருவாக்குகின்றன.


ஒரு புதுமை & உயிரித்தொழில்நுட்ப வாரியமும் (Innovation & Biotech Board), அறிவியல் அடிப்படையிலான இரட்டை ஒழுங்குமுறை அமைப்பும், வலுவான நிறுவன ஆதரவும் இருந்தால், இந்தியா ஆயிரக்கணக்கான ஆழ்தொழில்நுட்ப (deep-tech) தொடக்க நிறுவனங்களை உருவாக்கலாம், mRNA, RNAi, மரபணு சிகிச்சை, உயிர் ஒத்த மருந்துகள், உயிரியல் மருந்துகள் ஆகியவற்றில் உலகத் தலைமை பெறலாம், மருத்துவ ஆய்வு மற்றும் உயிரியல் உற்பத்தியில் உலகின் சிறந்த மையமாக உயரலாம், இலட்சக்கணக்கான உயர்மதிப்பு BioE³ வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். 2047-ஆம் ஆண்டுக்குள் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உயிரிப்பொருளாதாரம்  அமைக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


நம்மிடம் ஏற்கனவே அறிவியலும், திறமையும், சந்தை வாய்ப்புகளும் உள்ளன. இப்போது நமக்குத் தேவையெல்லாம் சீர்திருத்தத்திற்கான துணிச்சல் மட்டும்தான் என்கின்றனர்.


மூலதனச் சந்தை சீர்திருத்தம் மற்றும் ஒழுங்குமுறை நவீனமயமாக்கல் ஆகியவை தேசிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும். துணிச்சலான நடவடிக்கையின் மூலம், இந்தியா உலகின் மருந்துகள் விற்கப்படும் பொருளாதாரச் சந்தை என்கிற நிலையிலிருந்து, உலகின் மருந்து ஆய்வுக்கூடமாக மாறமுடியும் என்று கூறப்படுகிறது. 


எழுத்தாளர், Biocon குழுமத்தின் தலைவர்.

original link:

India can build a $1.2-trillion bioeconomy by 2047.


Share:

கடற்படை தினம் 2025: இன்று நினைவுகூரப்படும் 1971 வங்கதேச ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ போர் நடவடிக்கையின் கதை.

2025-கடற்படை தினம், இந்திய கடற்படை வங்காளதேசப் போர்: அதைத் தொடர்ந்து டிசம்பர்-4 அன்று கடற்படை தினமாகக் கடைப்பிடிக்க வழிவகுத்த ‘ஆபரேஷன் ட்ரைடண்ட்’ (Operation Trident) என்றால் என்ன?


கடற்படை தினம் 2025 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை அன்று, இந்திய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடற்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


நம் நாட்டின் கடல் எல்லைகளையும், தேசிய நலன்களையும் துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் வீரமிக்க ஆண்களையும் பெண்களையும் தேசம் வணங்குவாதாகத் அவர் தெரிவித்தார்.


இந்த நினைவு நாளின் தேதி காலப்போக்கில் மாறி உள்ளது. ராயல் இந்தியன் கடற்படை (Royal Indian Navy) தனது முதல் கடற்படைத் தினத்தை அக்டோபர் மாதம்  21-ஆம் தேதி, 1944-ஆம் ஆண்டு அனுசரித்தது. 1945-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், அது பம்பாய் (இப்போது மும்பை) மற்றும் கராச்சியில் டிசம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 1972-ஆம் ஆண்டு வரையிலும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி  கடைப்பிடிக்கப்பட்டது. அப்படியானால், இறுதியாக டிசம்பர் 4 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?


இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ட்ரைடென்ட்


டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி நினைவுகூரப்படும் கடற்படை தினமானது, 1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது கராச்சி துறைமுகத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்களுக்கு இந்தியக் கடற்படை பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஆப்ரேஷன் டிரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையைக் குறிக்கிறது.


கடற்படை நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, பாகிஸ்தான் விமானப்படை மேற்கு இந்தியாவில் உள்ள விமான நிலையங்களைத் தாக்கியபோது போர் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக, இந்தியா, டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலையில் போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஆபரேஷன் ட்ரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையானது புதிதாகப் பெறப்பட்ட சோவியத் ஓசா ஏவுகணைப் படகுகளைப் பயன்படுத்தி, கராச்சிக்கு அருகில் மூன்று கப்பல்களை மூழ்கடித்தது. இந்தப் படகுகளில் நான்கு SS-N-2 (P-15) ஸ்டைக்ஸ் வகை ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன.


இந்தியா கடற்படைக் கப்பல் கில்டான் (Indian Navy Ship (INS Kiltan)), கட்சால் (Katchall), நிபாட் (Nipat), நிகாட் (Nighat), மற்றும் வீர் (Veer) ஆகியவை பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான கைபர் (Pakistan Naval Ship (PNS Khaibar)) கப்பலை மூழ்கடித்தன. இதில் 222 பாகிஸ்தான் மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேலும்,. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் முஹாஃபிஸ் (PNS Muhafiz) மூழ்கடிக்கப்பட்டது; இதில் 33 மாலுமிகள் கொல்லப்பட்டனர். அத்துடன், வணிகக் கப்பலான எம்.வி. வீனஸ் சேலஞ்சர் (Merchant Vessel (MV) Venus Challenger) மூழ்கடிக்கப்பட்டது. இதே நாளில், இந்திய விமானப்படை கராச்சியின் கெமாரி எண்ணெய் சேமிப்புக் கலன்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது ஒரு தனிப்பட்ட நடவடிக்கை என்றாலும், இந்திய விமானப்படை இதன் பொறுப்பை ஏற்கவில்லை. இருப்பினும், இந்த தாக்குதல் ஆபரேஷன் ட்ரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையில் ஒரு முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்தனர்


டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி, இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் எஸ்.என். கோலிக்கு, “அங்கார்” என்ற குறியீட்டுச் சொல் கிடைத்தது. இது அந்த நடவடிக்கை வெற்றி பெற்றதற்கான அறிகுறிச் சொல் ஆகும். 1971-ஆம் ஆண்டு போர், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி  முடிவடைந்தது. அன்றைய தினம், மாலை 4:55 மணிக்கு டாக்காவில் பாகிஸ்தானின் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாசி சரணடைய கையெழுத்திட்டார். அப்போது ஜெனரல் ஜெ.எஸ். அரோரா அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த கணம் போரின் நீடித்த அடையாளமாக இன்றும் உள்ளது.


ஆபரேஷன் ட்ரைடென்ட்' கடற்படை நடவடிக்கையின் முதன்மையான அம்சங்கள் 


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்  முன்னதாக செய்தி வெளியிட்டதைப் போல, இந்தத் தாக்குதல்களின் பல அம்சங்கள் புதியவை. இதில், இப்பகுதியில் முதன்முறையாக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது, ஏவுகணை தூரத்தை அதிகரிக்க பெரிய கப்பல்களால் இழுத்துச் செல்லப்பட்டது, புத்திசாலித்தனமான தகவல் தொடர்பு முறைகள் மூலம் வானொலி அலை முடக்கத்தைக் (radio silence) கடைப்பிடிப்பது, மற்றும் கடலோர பாதுகாப்புப் படகுகளை தாக்குதலுக்கு பயன்படுத்தியது ஆகியன குறிப்பிடப்படுகின்றன.


ஏவுகணைப் படகுக் குழுவினர் ரஷ்யாவில் பயிற்சி பெற்றிருந்ததால், அவர்களுக்கு ரஷ்ய மொழி நன்கு தெரிந்திருந்தது. இந்த மொழியை அவர்கள் ரேடியோ தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்தினர். இது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவை ஏமாற்றியது. 'வினாஷ்' கப்பலின் தலைவரான விஜய் ஜெரத் அவர்கள், இந்த நடவடிக்கையின்போது காட்டிய பொறுமை மற்றும் தலைமைத்துவ நடவடிக்கைக்காக 'வீர சக்ரா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்திய கடற்படை ஏற்கனவே முழுமையான கடல் ஆதிக்கத்தை பெற்றுவிட்டதால், டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது ஏவுகணைத் தாக்குதலான “ஆபரேஷன் ட்ரையம்ப்” (Operation Triumph) ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.


இந்த நடவடிக்கையை வழிநடத்திய அதிகாரிகளைவிடவும், முன்னதாகச் செய்யப்பட்ட மேம்பாடுகளும் திட்டமிடலுமே பாராட்டப்பட வேண்டும் என்று கடற்படை அதிகாரியான அன்குஷ் பானர்ஜி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியா தன்னைச் சுற்றி இருந்த வளங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, தனது கடற்படை நிலையை எப்படி பலப்படுத்துவது என்று கவனமாகத் திட்டமிட்டது. இந்த 'மௌனமான' ஆண்டுகளில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன, புதிய தளங்கள் (கப்பல்கள்/விமானங்கள் போன்றவை) வாங்கப்பட்டன, மேலும், நடைமுறை அறிவு மேலாண்மை அமைப்புகள் நிறுவப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 


உதாரணமாக, 1969 மற்றும் 1970-ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா ஐந்து பெட்யா வகை நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்களை (கமோர்தா (Kamorta), கத்மத் (Kadmatt), கில்டான் (Kiltan), கவரத்தி (Kavaratti), கட்சால் (Katchall), நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை (கல்வேரி (Kalveri), காண்டேரி (Khanderi), கரஞ்ச் (Karanj), குர்சுரா (Kursura)), நிஸ்தார் (Nistar) என்ற நீர்மூழ்கிக் கப்பல் மீட்புக் கலத்தை, போலந்தில் கட்டப்பட்ட இரண்டு தரையிறங்கும் கப்பல்களை (கரியால் (Gharial), குல்டார் (Guldar)), மற்றும் ஐந்து ரோந்துக் கப்பல்களை (பன்வேல், புலிகாட், பனாஜி, பாம்பன், பூரி) வாங்கியது. 1970-71 ஆம் ஆண்டில், எட்டு சோவியத் ஏவுகணைக் கப்பல்கள் (நாஷக் (Nashak), நிபாட் (Nipat), நிர்பிக் (Nirbhik), வினாஷ் (Vinash), வீர் (Veer), விஜேதா (Vijeta), வித்யுத் (Vidyut)) வெவ்வேறு கட்டங்களில் ஏற்கப்பட்டு, வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. 


இதன் விளைவாக, இந்த நடவடிக்கையின்போது, ​​இந்திய தரப்புக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி, ஆபரேஷன் பைதான் (Operation Python) தொடங்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட பெரும் சேதங்கள்  பாகிஸ்தான் கடற்படையின் மன உறுதியை பெரிதும் பாதித்தது என்கின்றனர். இதன் காரணமாக டிசம்பர் 9-ஆம் தேதி ஏற்படும் வெடிப்பு சேதத்தைக் குறைக்க, பாகிஸ்தான் கப்பல்களில் உள்ள வெடிமருந்துகளைக் குறைக்க உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

original link:

 Navy Day 2025: Story of Operation Trident, the 1971 Bangladesh War operation commemorated today.


Share:

மக்கள்தொகை கணக்கெடுப்பு நாம் யார் என்பதைப் பற்றியது. அது சாதி மற்றும் இடப்பெயர்வைப் புறக்கணிக்க முடியாது. -எஸ் ஒய் குரைஷி

 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், வயது, கல்வி அறிவு அல்லது தொழில் ஆகியவற்றைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே கவனத்துடன், சாதியை முழுமையாகப் பதிவுசெய்ய வேண்டும். ஒரு ஜனநாயகத்திற்கு, அது சங்கடமாக இருந்தாலும், முழுமையான தகவல் தேவை.


ஒரு நாடு அதன் மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும்போது, அது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ஒரு குடியரசு தனது மக்கள் யார், யார் சேர்க்கப்பட்டுள்ளார்கள், யார் விடுபட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census) என்பது ஒரு முக்கியமான தருணம். 143 ஆண்டுகளாக, இந்தியா ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தடையில்லாமல் நடத்தி வந்துள்ளது. ஆனால், கடைசியாக 2011-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடந்தது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கவே இல்லை.


இதற்குப் பெருந்தொற்று (Pandemic) காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்திலும்கூட, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தக் கால தாமதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டில் முடிவடையும்போது, இந்தியா புதிய மக்கள்தொகை தரவுகள் இல்லாமல் 16 முதல் 17 ஆண்டுகள் கழித்திருக்கும். இது சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட தாமதம் ஆகும். இந்த இடைவெளி வெறும் எண்ணிக்கை அளவிலான பாதிப்பு மட்டும் இல்லை. மாறாக, பழைய தரவுகளைப் பயன்படுத்திதான் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தோர் வாழும் நகரங்கள், இன்னமும் அவை சிறிய ஊர்களாக இருப்பது போலக் கருதியே திட்டமிடப்படுகின்றன. நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்மானங்கள் (allocations) இன்றும் 2011-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா ஏற்கெனவே மாறிப்போன உலகிற்கு இன்னும் தனது வரவுசெலவுத் திட்டங்களை இன்னும் வகுத்துக்கொண்டிருக்கிறது. 2021 கணக்கெடுப்பை “தாமதமான 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு” என்று சொல்லாமல், அதை “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027” என்று அழைப்பது மிக முக்கியமானது. ஏனென்றால், 84-வது அரசியல் சாசனத் திருத்தப்படி பெண்களுக்கான இடஒதுக்கீடு “2026-க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு” முடிந்த பின்புதான் அமல்படுத்தப்பட வேண்டும். அதனால் 2027-ஐ “முதல் கணக்கெடுப்பு” என்று அதிகாரப்பூர்வமாக அழைத்தால் மட்டுமே சட்டப்படி சரியாக இருக்கும். ஆனால், இதன் விளைவாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு 2030-களின் நடுப்பகுதிக்கு முன்பு நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


2027-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும். இது மகளிர் இடஒதுக்கீட்டையும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசு நிர்ணயித்துள்ள 2029-ஆம் ஆண்டு என்கிற காலக்கெடு சாத்தியமற்றது என்கின்றனர். ஏனெனில், தொகுதி மறுவரையறை செய்வதற்கு பொதுவாக நான்கு முதல் ஆறு ஆண்டுகள் ஆகும். இந்தக் கணக்கெடுப்பு, 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடியும் வரை இது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீர்வு காணப்படாத மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கு எடுக்கப்படுமா என்பதுதான். சாதி விவரங்கள் சேர்க்கப்படுமா, தனியாக எடுக்கப்படுமா, அல்லது முழுவதுமாகத் தவிர்க்கப்படுமா என்பதை அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்கின்றனர்.


கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1931-ஆம் ஆண்டுதான் சாதிவாரியான முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு வழங்குவதற்காக, இந்தியா பட்டியலிடப்பட்ட சாதிகள் (Scheduled Castes - SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes - ST) ஆகியவற்றை மட்டுமே கணக்கெடுத்தது. அனைத்து சாதிகளையும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடுவது, புதிய தேசத்தில் சாதிப் பிரிவுகளை வலுப்படுத்தக்கூடாது என்ற நோக்கம் காரணமாகக் கூறப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census - SECC) அனைத்துச் சாதிகளையும் பதிவு செய்ய முயற்சித்தது. ஆனால், இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதற்கு அதிகாரப்பூர்வ காரணம் தரவுகளில் இருந்த சிக்கல்கள் என்று கூறப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், அந்தத் தரவுகள் இன்னும் பயன்படுத்தப்படாமல், வெளியிடப்படவும் இல்லை, நிராகரிக்கப்படவும் இல்லை என்ற நிலையிலேயே உள்ளன.


விரிவான சாதிவாரி தரவுகள் கிடைத்தால், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC) இட ஒதுக்கீடு, சமூகநீதி மற்றும் வளப்பங்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றியமைக்கும். விளிம்புநிலை சமூகங்களுக்கு (Marginalised communities) இது உதவும். தங்களுடைய கோரிக்கைகளை வலுவாக வைக்கத் தேவையான சரியான மக்கள் தொகை எண்ணிக்கையை இது அவர்களுக்கு அளிக்கும். துல்லியமான சாதித் தரவுகள் இல்லாமல் போகும்போது, கொள்கைகள் அனைத்தும் உண்மையான மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் அல்லாமல், வெறும் அரசியல் வாதங்களின் அடிப்படையிலேயே இயங்குவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்று கருதுகின்றனர். 


சாதி வாரிக் கணக்கெடுப்பு பற்றிய தெளிவு இல்லாமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அறிவிப்பது, நிர்வாகத்தின் குழப்பத்தையோ அல்லது தெளிவில்லாமலோ இருப்பதையே காட்டுகிறது. இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கலான விஷயங்கள் ஆகும். 2027-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், வயது, கல்வி அறிவு, அல்லது தொழில் போன்ற விவரங்களைச் சேகரிப்பதைப் போலவே, சாதி விவரங்களையும் முழுமையாகக் கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஜனநாயகம் நிலைத்து நிற்க வேண்டுமெனில் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்கின்றனர். 


மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 இடப்பெயர்வை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களைவிட்டு வெளியேறி வேலை செய்கிறார்கள். மும்பையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள் பீகாரிலும், ஹரியானாவில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்திலும் கணக்கெடுக்கப்படுகிறார்கள். தற்போதைய கணக்கெடுப்பு, மக்கள் காணப்படும் இடங்களிலேயே அவர்களைக் கணக்கிடுகிறது. ஆனால், இது அவர்களின் அரசியல் அல்லது குடியுரிமை உரிமைகளைப் பிரதிபலிக்கவில்லை. பட்டியலில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள், தாங்கள் வாழும் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படாமல், தங்கள் கிராமங்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் நகரங்களில் உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க முடிவதில்லை. சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க பணம் இல்லாததால், வாக்களிக்க முடிவதில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலர், தாங்கள் தற்போது வாழாத கிராமங்களின் பிரச்சினைகளுக்காக வாக்களிப்பதன் மூலம், தாங்கள் உண்மையில் வசிக்கும் நகரங்களில் குரலற்றவர்களாக  இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்




இது ஒரு சிக்கலை உருவாக்குகிறது : இடம்பெயர்ந்து வந்தவர்களையும் சேர்த்து, மொத்த மக்கள்தொகையின் அடிப்படையிலேயே நகர நிர்வாகங்கள் திட்டமிடப்படுகின்றன. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருப்பதால், அவர்களால் உள்ளூரில் வாக்களிக்க முடிவதில்லை. இதனால், நகர்ப்புற நிர்வாகம் மக்கள் பொறுப்புக் குறைவானதாகிறது. மேலும், கிராமப்புறங்கள் அங்கு வசிக்காத மக்களுக்கான வளங்களைத் திட்டங்கள் மூலம் பெறுகின்றன.


சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க, மக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், அங்கு 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்காவிட்டால், வேலை செய்யும் இடத்திலேயே பதிவு செய்து வாக்களிக்க தேர்தல் சட்டம் அனுமதிக்கிறது; சில சமயங்களில் அதைக் கட்டாயமாக்குகிறது. இதனால், பல மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பை பொருளாதாரத்திற்கு அளித்தாலும், வாக்களிக்க முடியாமல் போகாமல் இருக்க, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து வாக்காளர் பட்டியலை துரிதமாகப் புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது முக்கியமாக காகிதத்திற்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். இது கணக்கெடுப்பை வேகப்படுத்துகிறது, தவறுகளைக் குறைக்கிறது, நிகழ்நேர கண்காணிப்பை அனுமதிக்கிறது, மற்றும் முடிவுகளை விரைவுபடுத்துகிறது. ஆனால், சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது என்று எச்சரிக்கின்றனர்.  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பெயர், முகவரி, பயோமெட்ரிக்ஸ் (Biometrics) மற்றும் சாதி, வருமானம் மற்றும் குடியேற்ற வரலாறு போன்ற தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும். டிஜிட்டல் மயமாக்கப்பட்டவுடன், இந்தத் தரவை தேடலாம் மற்றும் தகவல்களை இணைய வழியிலயே இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  இது புள்ளிவிவரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா அல்லது ஆதார், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு அல்லது வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு முழுமையான குடிமகன் சுயவிவரங்களை உருவாக்கப் பயன்படுமா என்பதுதான் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்களைக் கணக்கிடுவதே தவிர, அவர்களைக் கண்காணிப்பது அல்ல என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அது காவல்துறையினருடன் பகிரப்படவோ அல்லது குடியுரிமைச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படவோ கூடாது. தரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்பம் கணக்கெடுப்பை வேகமாகவும் துல்லியமாகவும் மாற்ற முடியும், ஆனால், சட்டவிதிகள்தான் நம்பகத்தன்மையுடன் கூடிய பாதுகாப்பை வழங்குகின்றன.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது நியாயமானதாக இருக்க வேண்டும், ஒன்றிய அரசின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது. தரவு சேகரிப்பின்போது ஒவ்வொரு மாநிலமும் அதன் தரவை அணுக அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டவாரியான முன்னேற்றத்தை பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும். முடிவுகள் இறுதியாவதற்கு முன், தன்னாட்சி ஆய்வுகள் மூலம் தரவின் துல்லியம் சரிபார்க்கப்பட வேண்டும். தரவு தவறாகப் பயன்படுத்தப்படவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டுப் பகிரப்படவோ கூடாது. சாதி ரீதியான தரவு பத்தாண்டிற்கும்  மேலாக மறைக்கப்பட்ட 2011 -ஆம் ஆண்டின் நிகழ்ந்த சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) மீண்டும் நடக்கக்கூடாது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு எதைக் கணக்கெடுக்கிறதோ, அது வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கூட்டாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நடைமுறைகளைச் சார்ந்துள்ளது என்கின்றனர்.


2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் (Census 2027) அனைத்து எதிர்கால முடிவுகளுக்கும் வளங்கள், பிரதிநிதித்துவம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுக்குமான அடிப்படை ஆகும். ஆறுவருட தாமதம் ஏற்கெனவே சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது. மேலும் தாமதங்களையோ அல்லது முழுமையற்ற நடவடிக்கைகளையோ நாம் சகித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 விரிவானதாக (சாதி உள்ளடக்கப்பட்டதாக), துல்லியமானதாக (மக்கள் வாழும் இடத்திலேயே எண்ணப்படுவதாக), வெளிப்படையானதாக (மாநிலங்களுக்கு தரவு அணுகல் வழங்குவதாக), பாதுகாக்கப்பட்டதாக (எண்ணிக்கை கணக்கெடுப்பு கண்காணிப்பாக மாறாமல் இருப்பதாக) இருக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுப்பதை நிறுத்தும் குடியரசு, இறுதியில் அக்கறை செலுத்துவதையும் நிறுத்திவிடும். நியாயத்துடனும் தொலைநோக்குடனும் நாம் எண்ணும்போது, நீதியுடன் ஆட்சி செய்கிறோம். 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாம் எத்தனை பேர் என்பது மட்டுமல்ல. ஜனநாயகமாக நாம் யாராக இருக்கத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதாகும்.


குரேஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் "ஒரு ஆவணப்படுத்தப்படாத அதிசயம்: மாபெரும் இந்தியத் தேர்தல் உருவான விதம்" (An Undocumented Wonder: The Making of the Great Indian Election) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


original link:

Census is about who we are. It cannot ignore caste and migration.


Share:

சஞ்சார் சாத்தி, SIM-இணைப்பு மற்றும் இந்தியாவின் இணையப் பாதுகாப்பு முன்னெடுப்பு. -குஷ்பூ குமாரி

     சமீபத்தில், தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)), இணைய குற்றங்கள், நிதி மோசடி மற்றும் தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் என்ன, நாட்டில் அதிகரித்துவரும் இணைய மோசடி நிகழ்வுகள் குறித்து சமீபத்திய தரவுகள் எதை வெளிப்படுத்துகின்றன?


தற்போதைய செய்தி?


தொலைபேசி தயாரிப்பாளர்கள் அரசுக்குச் சொந்தமான சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை தொலைத்தொடர்புத் துறை (DoT) புதன்கிழமை ரத்து செய்தது. 2025ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு திருத்த விதிகளின் (Telecommunication Cybersecurity Amendment Rules) கீழ் வெளியிடப்பட்ட நவம்பர் 28 ரகசிய உத்தரவு, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் உட்பட இந்தியாவில் உள்ள திறன்பேசி நிறுவனங்களுக்கு, அரசு உருவாக்கிய சஞ்சார் சாத்தி எனப்படும் இணைய பாதுகாப்பு செயலியை முன்கூட்டியே நிறுவுமாறு உத்தரவிட்டது. இது டிஜிட்டல் உரிமைக் குழுக்களின் சாத்தியமான கண்காணிப்பு குறித்து மட்டுமல்லாமல், பெரிய மொபைல் போன் தயாரிப்பாளர்களின் வணிகங்களில் அதன் தாக்கம் குறித்தும் கவலைகளை அதிகரிக்க செய்தது.


எதிர்ப்பைத் தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த செயலி "விருப்பத்தேர்வு" என்றும், பயனர்கள் அதை நீக்கலாம் என்றும், இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.



சஞ்சார் சாத்தி செயலி பற்றி


ஜனவரியில் தொடங்கப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி, சந்தேகத்திற்குரிய மோசடி தொடர்பு மற்றும் தொலைந்து போன/திருடப்பட்ட மொபைல் போன்களைப் பற்றி புகாரளிக்கவும், வங்கிகள்/நிதி நிறுவனங்களின் நம்பகமான தொடர்பு விவரங்களைச் சரிபார்க்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.


செயலி பின்வரும் சேவைகளைச் செய்கிறது:


இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை சர்வதேச மொபைல் கருவி அடையாளங்களின் (International Mobile Equipment Identity (IMEI)) அடிப்படையில் கண்காணித்துத் தடுக்க அனுமதிக்கிறது.


 தொலைபேசிகளின் IMEI அடிப்படையில், இந்தியாவில் எங்கும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளைக் கண்காணித்துத் தடுக்க அனுமதிக்கிறது.


 தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைத் தடுக்கும் விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.


திருடப்பட்ட அல்லது தொலைந்து போன சாதனங்களைக் கண்டுபிடிப்பதில் காவல் அதிகாரிகளுக்கு உதவ முடியும். இது கள்ளச் சந்தையில் போலி தொலைபேசிகள் (counterfeit phones) நுழைவதைத் தடுக்கக்கூடும்.


 சாக்சு (Chakshu) விருப்பத்தேர்வு பயனர்கள் சந்தேகிக்கப்படும் மோசடி தகவல்தொடர்புகளை அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது வாட்சாப் போன்ற தளங்கள் வழியாகப் புகாரளிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், இணைய குற்றங்களைப் புகாரளிக்க சாக்சு-வைப் பயன்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது.


இன்றைய கட்டுரையில், நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடி வழக்குகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:


1. சந்தாதாரர் அடையாள தொகுதி (Subscriber Identification Module (SIM)) பிணைப்பு விதி: சமீபத்தில், பயன்பாட்டிற்கு பதிவுசெய்ய பயன்படுத்தப்படும் சந்தாதாரர் அடையாள தொகுதி இல்லாமல் பயனர்கள் தங்கள் சேவைகளை அணுகுவதைத் தடுக்க இணையவழி செய்தித் தளங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் டிஜிட்டல் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழி இந்த உத்தரவு என்று துறை கூறியுள்ளது.


இந்த உத்தரவுகள் வாட்ஸாப், டெலிகிறாம், சிக்னல், அரட்டை, ஸ்னாப்சாட், ஷேர்சாட், ஜியோசாட் மற்றும் ஜோஷ் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த தளங்கள் இப்போது 90 நாட்களுக்குள், அவற்றின் சேவைகள் தங்களுடன் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் சந்தாதாரர் அடையாள தொகுதியுடன் "தொடர்ந்து" இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சாதனத்தில் சந்தாதாரர் அடையாள தொகுதி இல்லையென்றால் அவர்கள் அதை பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. தொழில்நுட்ப ரீதியாக, இது சிம் சந்தாதாரர் அடையாள தொகுதி (Subscriber Identification Module (SIM)) பிணைப்பு விதி என்று அழைக்கப்படுகிறது. WhatsApp வலை போன்ற இணைக்கப்பட்ட சேவைகள் குறைந்தது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே வெளியேற வேண்டும்.


2. மொபைல் எண் சரிபார்ப்பு (Mobile Number Validation (MNV)) தளம்: தொலைத்தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பைப் புதுப்பித்துள்ளது. தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு (Telecommunication Cyber Security (TCS)) திருத்த விதிகள், 2024 மூலம், மொபைல் எண் சரிபார்ப்பு (MNV) தளத்தை முறைப்படுத்தியது. இது அடையாள மோசடி மற்றும் நிதி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் "சட்டவிரோதமான ஆள்மாறாட்டக் கணக்குகளின்" (Mule accounts) பெருக்கத்தை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு மொபைல் எண் உண்மையிலேயே கொடுக்கப்பட்ட சேவையின் பயனருக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த சேவை வழங்குநர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான, பரவலாக்கப்பட்ட மற்றும் தனியுரிமை உணர்வுள்ள வழிமுறையை வழங்குகிறது.



சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (International Mobile Equipment Identity (IMEI))

சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (IMEI) என்பது ஒரு தனித்துவமான 15 இலக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உங்கள் தொலைபேசியின் தனித்துவமான அடையாளத்தைப் போன்றது. நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது அல்லது உங்கள் செல்லுலார் சேவை வழங்குநர் மூலம் அழைக்கும்போது, ​​இந்த எண் உங்கள் சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுகிறது. உங்களிடம் இரட்டை SIM தொலைபேசி இருந்தால், ஒவ்வொரு ஸ்லாட்டுக்கும் தனித்தனியே இரண்டு IMEI எண்கள் இருக்கும்.

3. மறுவிற்பனை சாதனங்களில் IMEI-ஐ கட்டாயமாக சரிபார்ப்பு செய்தல்: மறுவிற்பனை அல்லது புதுப்பிக்கப்பட்ட சாதனங்களில் கையாளும் நிறுவனங்கள், மறுவிற்பனை செய்வதற்குமுன், ஒவ்வொரு சாதனத்தின் சர்வதேச மொபைல் உபகரண அடையாள (International Mobile Equipment Identity (IMEI)) எண்ணையும் கருப்புப் பட்டியலில் உள்ள IMEI-களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தின் மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று திருத்த விதிகள் கோருகின்றன. இது வாங்குபவர்களை கவனக்குறைவாக சட்டவிரோத அல்லது சமரசம் செய்யப்பட்ட சாதனங்களை வாங்குவதிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் திருடப்பட்ட மொபைல் உபகரணங்களைக் கண்காணிப்பதில் சட்ட அமலாக்கத்தை ஆதரிக்கிறது.


4. தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் (Telecom Identifier User Entity (TIUE)): தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனங்கள் (TIUEs) என்ற புதிய இணக்கப் பிரிவை தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) சேர்த்துள்ளது. இதில் மொபைல் எண்கள், IP முகவரிகள் மற்றும் IMEI எண் போன்ற தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை நம்பியிருக்கும் நிறுவனங்கள் அங்கீகாரத்திற்காகவோ அல்லது வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்வணிகத் தளங்கள் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவோ அடங்கும். இணைய மோசடிகளைச் சமாளிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, தொலைத்தொடர்பு-அடையாளங்காட்டி தரவை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது.


5. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)): 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம், நாட்டில் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், இணையக் குற்றங்களுக்கு எதிராகப் போராட ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2024-ல், நான்கு இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மைய தளங்கள் —இணைய மோசடி குறைப்பு மையம் (Cyber Fraud Mitigation Centre (CFMC)), ‘Samanvaya’ தளம், ஒரு இணைய கமாண்டோஸ் திட்டமும் சந்தேகப் பதிவேடும் (Suspect Registry) தொடங்கப்பட்டன. இது இணைய குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.


6. வங்கிகளுக்கான ‘bank.in’ டொமைன்: அதிகரித்து வரும் டிஜிட்டல் கட்டண மோசடியை எதிர்த்துப் போராட, இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரியில் இந்திய வங்கிகளுக்காக ‘bank.in’ என்ற சிறப்பு இணைய டொமைனை அறிமுகப்படுத்தியது. இணைய அச்சுறுத்தல்களைக் குறைப்பதும், இந்தியாவின் டிஜிட்டல் வங்கியில் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


7. புதிய e-Zero FOR: இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மின்னணு பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (Electronic Zero First Information Report) 1930 என்ற உதவி எண் அல்லது தேசிய இணையக் குற்ற அறிக்கையிடல் தளம் (National Cybercrime Reporting Portal (NCRP)) பதிவு செய்யப்படும் ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி மதிப்புள்ள இணைய நிதி குற்ற புகார்களை தானாகவே முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றும் முயற்சி இது.


டிஜிட்டல் இந்தியா திட்டம்மற்றும் பிற முயற்சிகள் தொடங்கப்பட்டதன் மூலம், 86%-க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் இப்போது இணைய இணைப்பை பெற்றுள்ளன. ஆனால், ஆன்லைனில் அதிகமான மக்கள் இருப்பதால், டிஜிட்டல் மோசடி மற்றும் இணைய குற்றங்களும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் அதிகரித்துவரும் இந்த இணைய குற்றங்கள் குறித்த சமீபத்திய எண்கள் இங்கே.


நாட்டில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்


1. வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இணைய குற்றங்கள் 31.2% அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் மோசடி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளது.


2. ‘இந்தியாவில் குற்றம்’ என்ற அறிக்கையின்படி, இணைய குற்றப் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022-ல் பதிவு செய்யப்பட்ட 65,893 வழக்குகளிலிருந்து 2023-ல் 86,420-ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் குற்ற விகிதம் 2022-ல் 4.8%-லிருந்து 2023-ல் 6.2%-ஆக அதிகரித்துள்ளது.


3. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRP) தொகுத்த தரவுகளின்படி, இந்தியாவில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி ரூ.33,165 கோடி மோசடி செய்துள்ளனர். இதில் 2024ஆம் ஆண்டில் ரூ.22,812 கோடியும் அடங்கும்.


4. 2021ஆம் ஆண்டில் ரூ.551 கோடியும், 2022ஆம் ஆண்டில் ரூ.2,306 கோடியும், 2023ஆம் ஆண்டில் ரூ.7,496 கோடியும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாக தரவு காட்டுகிறது. 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு நகரங்கள் இணைய குற்றங்களின் முக்கியப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


5. பிப்ரவரி 2025-ல் காஸ்பெர்ஸ்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று இணைய பயனர்களில் ஒருவர் கடந்த ஆண்டு ஆன்லைன் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கண்டறியப்பட்டது. ஜனவரி மற்றும் டிசம்பர் 2024-க்கு இடையில், இந்தியாவில் உள்ள பயனர்களின் கணினிகளில் 4,43,72, 823 இணையம் வழியாக இணைய அச்சுறுத்தல்களை நிறுவனம் கண்டறிந்துள்ளது.


Original link:

Sanchar Saathi, SIM-Binding and India’s Cybersecurity push.


Share:

நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் தேர்தல் செயல்முறை குறித்த ஒரு பார்வை - திலீப் பி சந்திரன்

 டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் மக்களவையில் நடைபெறும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம், சில முக்கியமான கேள்விகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்கள் பல்வேறு சட்ட நிறுவனங்களிடையே தேர்தல் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை எவ்வாறு வழங்குகின்றன? பல அடுக்கு தேர்தல் நிர்வாக அமைப்பு தேர்தல் நம்பகத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்யும் அளவுக்கு வலுவாக உள்ளதா?


இரண்டு நாட்கள் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டன. ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திவரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் கவனத்தைக் கொண்டுவரும்.


டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் மக்களவையில் நடைபெறும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம், சில முக்கியமான கேள்விகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்கள் பல்வேறு சட்ட நிறுவனங்களிடையே தேர்தல் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை எவ்வாறு வழங்குகின்றன? தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் செயல்முறைகள் யாவை? அரசியலமைப்பு வடிவமைப்பு, சட்டப்பூர்வ ஆணைகள் மற்றும் நடைமுறை பாதுகாப்புகளை ஒருங்கிணைக்கும் பல அடுக்கு தேர்தல் நிர்வாக அமைப்பு, தேர்தல் நம்பகத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்யும் அளவுக்கு வலுவாக உள்ளதா?


பீகாரில் சமீபத்தில் நடந்த தேர்தல், வலுவான நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற ஆயத்த பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் தேர்தல் முறை அதன் அரசியலமைப்பு கட்டமைப்பை மட்டுமல்ல, வலுவான நடைமுறைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கள அளவிலான நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்துத் தேர்தல்களையும் மேற்பார்வையிட, இயக்க மற்றும் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission (EC)) அதிகாரத்தை வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951, தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தேர்தல் கடமைகளை ஒதுக்குகின்றன. இந்த அதிகாரிகள் வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், வாக்குப்பதிவு நடத்துதல் மற்றும் வாக்குகளை எண்ணுதல் உள்ளிட்ட தேர்தல்களை நிர்வகிக்கின்றனர்.


அரசியலமைப்பு மற்றும் அடிப்படைச் சட்டம்


அரசியலமைப்பின் பகுதி XV-ல் உள்ள பிரிவு 324, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அலுவலகங்களுக்கு தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டம் தேர்தல் நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கவில்லை. மேலும், தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை கோடிட்டுக் காட்டவில்லை.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்


இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய, பிரிவு 327, தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதி மறுவரையறை மற்றும் தேர்தல் நிர்வாகத்தின் பிற தேவையான அம்சங்கள் போன்றவற்றிலும், அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அதன்படி, நாடாளுமன்றம் 1950 மற்றும் 1951-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை இயற்றியது.


1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை இட ஒதுக்கீடு, வாக்காளர்களின் தகுதி, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் பராமரித்தல், தேர்தல்களை நடத்துதல், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி மற்றும் தகுதி நீக்கம், தேர்தல் குற்றங்கள், தேர்தல் தகராறுகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை வழங்குகிறது.


தேர்தல்களை நடத்துவதை நிர்வகிக்கும் நடைமுறைகள், கட்டங்கள் மற்றும் நிர்வாக வழிமுறைகள் பற்றிய விரிவான விளக்கத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இதன்மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்ற அரசியலமைப்புரீதியான பார்வையை செயல்படுத்துகிறது.


தேர்தல் அதிகாரிகளின் கடமைகள்


1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பகுதி IV, தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கடமைகளை வகுக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் போன்ற மூத்த அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன.


தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (Chief Electoral Officers (CEO)) : தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, மாநிலங்களுக்குள் தேர்தல்களை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பொறுப்பு வகிப்பர்.


மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (District Election Officers (DEO)) : மாவட்ட அளவில், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEO) தங்கள் அதிகார வரம்பிற்குள் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பாவார். இது மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் (CEO) மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.


தேர்தல் அதிகாரிகள் (Returning Officers (RO)) மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகள் (Assistant Returning Officers (ARO)) : தேர்தல் ஆணையம், அந்தந்த மாநிலத்துடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் (RO) மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளை (ARO) நியமிக்கிறது. வேட்புமனு தாக்கல் முதல் முடிவுகள் அறிவிப்புவரை தங்கள் தொகுதிகளில் முழு தேர்தல் செயல்முறையையும் அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.


1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட முறையில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது தேர்தல் அதிகாரியின் (RO) பொதுவான கடமையாகும்.

மேற்பார்வையாளர்கள் (Observers) : கூடுதலாக, ஒரு தொகுதி அல்லது தொகுதிகளின் குழுவில் தேர்தல்களை நடத்துவதை மேற்பார்வையிடவும் அறிக்கை செய்யவும் தேர்தல் ஆணையம் மேற்பார்வையாளர்களை நியமிக்கிறது. கள ஆய்வில் அவர்களின் இருப்பு தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் உறுதி செய்கிறது.


தலைமை அதிகாரிகள் (Presiding Officers (PO)) : ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடிகளை நியமிப்பது மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் (DEO) கடமையாகும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் நியாயமான மற்றும் ஒழுங்கான வாக்குச் சாவடியை நடத்துவதற்கு தலைமை அதிகாரிகளின் (PO) பொறுப்பு. வாக்குச் சாவடியில் மிக முக்கியமான அதிகாரியாக, வாக்குச் சாவடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தலைமை அதிகாரிகள் (PO) முழு சட்டப்பூர்வ அதிகாரங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும், வாக்குச் சாவடியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாவார்கள் ஆவர்.


வாக்குச் சாவடிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தலைமை அதிகாரிகள் (PO) மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு (RO) இடையேயான இணைப்பாக துறை அலுவலர் செயல்படுகிறார். இது தேர்தல் நாளில் வாக்குப்பதிவு சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறது.


வாக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஏன் பயிற்சி அவசியம்?


வாக்குச்சாவடியை அமைத்தல், உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களுக்கு வாக்களிப்பு செயல்முறையை நிரூபித்தல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், வாக்குச்சாவடியின் இரகசியத்தன்மை மற்றும் அமைதியான நடத்தையை உறுதிசெய்தல், வாக்குச்சாவடியின் முடிவில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் கணக்கைத் தயாரித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic Voting Machine (EVM)) மற்றும் பிற பொருட்களை சீல் வைத்து பாதுகாத்தல், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுப் பொருட்களை சேகரித்து தேர்தல் அதிகாரிகளுக்கு (RO) திருப்பி அனுப்புதல், வாக்குச்சாவடிகளில் அறிவிப்புகளைச் செய்தல் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு (RO) சம்பவங்களை அறிவித்தல் ஆகியவை தலைமை அதிகாரிகளின் (PO) கடமைகளில் அடங்கும்.

தேர்தல்களின் சமீபத்திய விதிகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சோதனை (Voter verifiable paper audit trail (VVPAT)) மற்றும் பிற தேர்தல் பொருட்களின் செயல்பாடு குறித்து தலைமை அதிகாரிகள் (PO) அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், சிறிதளவு தவறும் முழு நடைமுறையையும் சீர்குலைக்கக்கூடும். இந்த காரணத்திற்காக, தலைமை அதிகாரிகள் (PO) பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.


தேர்தல் ஆணையம், வரவிருக்கும் தேர்தல்களுக்குத் தயாராவதற்கு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையர்களுக்கான இணையவழியில் விளக்க அமர்வுகளையும் நடத்துகிறது. பணியாளர்கள் கட்டாயப் பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறுவது தேர்தல் கடமையை மீறும் ஒரு கடுமையான செயலாகக் கருதுகிறது.


நியாயமான தேர்தலுக்கு வாக்குச் சாவடி அதிகாரிகள் ஏன் ஒருங்கிணைந்தவர்களாவர்?


வாக்கெடுப்பு அதிகாரி வாக்குச்சாவடியை நிர்வகிக்க உதவுவதற்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEO) போதுமான வாக்குச்சாவடி அதிகாரிகளை நியமிக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வாக்குச்சாவடி அலுவலர் இல்லாவிட்டால், வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமை அலுவலரின் கடமைகளை ஏற்க வேண்டும்.


ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலருக்கும் தெளிவான பொறுப்புகள் உள்ளன. அவை,


  • முதல் வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளர் பட்டியலின் குறிக்கப்பட்ட நகலை நிர்வகிக்கிறார்;

  • இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் அழியாத மை பூசுவதற்கும் வாக்காளர் பதிவேட்டைப் பராமரிப்பதற்கும் பொறுப்பு;

  • மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளர் சீட்டை வழங்குகிறார்;

  • நான்காவது வாக்குச்சாவடி அலுவலர் மின்னணு வாக்குச்சாவடி இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகை இயக்குகிறார்.


தேர்தல் அதிகாரிகள் (RO) மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகள் (ARO) தலைமை அதிகாரிகள் (Presiding Officers), வாக்குச்சாவடி அலுவலர்கள் (Polling Officers) மற்றும் நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வேறு எந்த அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்திற்குப் பணியமர்த்தப்பட்டதாகக் கருதப்படுவார்கள். இந்தப் பணியமர்த்தம் தேர்தல் அறிவிப்பிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படும்வரை நீடிக்கும்.


திலீப் பி. சந்திரன், கேரளாவின் சாலக்குடியில் உள்ள பி.எம். அரசு கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


original link:

Amid electoral reforms debate in Parliament, a look at India’s election process


Share: