புடினின் தீவிர அணு மின் விற்பனை முயற்சி : சிறிய மட்டு உலைகள் (SMR), புதிய தலைமுறை பெரிய அணு உலைகள், இந்தியாவில் தொடர் உற்பத்தி -அனில் சசி

 இரஷ்ய அணுசக்தித் துறையைச் சேர்ந்த ஒரு பெரிய குழுவானது, அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையின்போது வர உள்ளது. ரஷ்யா என்ன வழங்குகிறது?, இந்தியாவுக்கு என்ன தேவை? என்பதை கீழே குறிப்பிட்டுள்ளது


ரஷ்ய அணுசக்தி நிறுவனமான, ரோசாட்டம் அரசு நிறுவனம் (Rosatom State Corporation), இந்தியாவில் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக அதன் சிறிய மட்டு உலைகளை (small modular reactors (SMR)) வலுவாக வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாக, அதன் பெரிய புதிய தலைமுறை அணுசக்தி உலை அடிப்படையிலான திட்டங்களை (large new-generation atomic power reactor-based projects) நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும்.


இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையின்போது கணிசமான அளவில் அணுசக்தித் தொழில்துறை குழு ஒன்று வர உள்ளது. மேலும், இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அஜித் குமார் மொஹந்தி மற்றும் மாஸ்கோவை தளமாகக் கொண்ட ரோசாட்டம் அரசு நிறுவனத்தின் (Rosatom State Corporation) இயக்குநர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் இடையே நவம்பர் 10 அன்று மும்பையில் நடைபெற்ற பணிக் கூட்டத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்யாவின் சிறிய மட்டு உலைகள் (small modular reactors (SMR)) முன்மொழிவு


சிறிய மட்டு உலைகளின் (SMR) புதிய துறையில் ரஷ்யா முன்னணியில் உள்ளது. இவை பெரும்பாலான பாரம்பரிய அணுசக்தி உலைகளின் உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட மேம்பட்ட அணு உலைகளாகும். இந்த சிறிய அளவுடன் கூட, அவை இன்னும் அதிக அளவு குறைந்த கார்பன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது, ​​இரண்டு சிறிய மட்டு உலைகள் (SMR) திட்டங்கள் உலகளவில் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளன. அவற்றில் ஒன்று சிறிய மட்டு உலைகள் (SMR) ‘அகாடெமிக் லோமோனோசோவ் மிதக்கும் மின் அலகு’ (Akademik Lomonosov floating power unit) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 35 மெகாவாட் (மெகாவாட் மின்சாரம்) இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது மற்றும் மே 2020-ல் வணிக ரீதியான செயல்பாட்டைத் தொடங்கியது. லோமோனோசோவ் (Lomonosov) என்பது தானாகவே நகர முடியாத ஒரு மின்படகு ஆகும். இது மிதக்கும் அணுமின் நிலையமாகவும் செயல்படுகிறது. இது பெவெக் துறைமுகத்தில் (Pevek harbour) நிறுத்தப்பட்டுள்ளது. இது ஆர்க்டிக் துறைமுக நகரமான பெவெக்கிற்கு வெப்பத்தை வழங்குகிறது. இது பிராந்திய சௌன்-பிலிபினோ மின் அமைப்புக்கும் (Chaun-Bilibino power system) மின்சாரத்தை வழங்குகிறது. இது உலகின் வடக்கே உள்ள அணு மின் நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது.


மற்றொரு செயல்பாட்டு சிறிய மட்டு உலைகள் (SMR) என்பது சீனாவில் HTR-PM எனப்படும் ஒரு செயல் விளக்கத் திட்டமாகும். இது டிசம்பர் 2021-ல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு டிசம்பர் 2023-ல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சிறிய மட்டு உலைகள் (SMR) தலைமைத்துவத்திற்கான போட்டியில் உள்ள பிற உலகளாவிய நிறுவனங்களில் நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட ஹோல்டெக் இன்டர்நேஷனல் (Holtec International), ரோல்ஸ் ராய்ஸ் SMR, நுஸ்கேலின் VOYGR SMR, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக்கின் AP300 SMR மற்றும் GE-ஹிட்டாச்சியின் BWRX-300 ஆகியவை அடங்கும்.


கூடங்குளம் திட்ட விரிவாக்கம்


நவம்பர் மாதம் சந்திப்பின் போது, ​​இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமும், இரஷ்யா-இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பின் முதன்மைத் திட்டமான தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் திட்டத்தின் (Kudankulam nuclear power project (KKNPP)) முன்னேற்றத்தை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். இரஷ்யாவின் முந்தைய தலைமுறை 'VVER-1000' உலை அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் திட்ட (KKNPP) அலகுகள் 1 மற்றும் 2 முறையே 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு தற்போது இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு மின்சாரம் வழங்குகின்றன. அலகு-3-ல், முன்-ஆணையிடும் நடவடிக்கைகள் (pre-commissioning activities) நடைபெற்று வருகின்றன. இதில், திறந்த அணு உலையில் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிப்பது போன்ற முக்கியமான மைல்கற்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், அலகு-4-ல் கட்டுமானம் மற்றும் நிறுவுவதன் பணிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மூன்றாம் கட்டமானது அலகு-5 மற்றும் 6 கட்டுமானத்தில் தீவிரமாக உள்ளன. இந்தத் திட்டம் மொத்தம் ஆறு மின் அலகுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அனைத்திலும் ‘VVER-1000’ அணு உலைகளைக் கொண்டிருக்கும். ஒருங்கிணைந்த நிறுவப்பட்ட திறன் 6000 MWe-ஆக இருக்கும்.

மாஸ்கோவிற்கான முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஒன்று, புதிய தலைமுறை 'VVER-1200' உலை மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட, இந்தியாவில் ரஷ்ய வடிவமைப்பின் உயர்திறன் கொண்ட அணுமின் நிலையங்களின் தொடர் கட்டுமானத்திற்கான வாக்குறுதியாகும். 'VVER-1200' உலை அலகுகளைக் கொண்ட இந்தியாவில் ஒரு புதிய அணுமின் நிலையத்திற்கான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் ரஷ்ய அதிகாரிகள் தரப்பால் முன்மொழியப்பட்டு வருகின்றனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமெரிக்காவிலிருந்து ஒரு குழு அடுத்த வாரம் வருவதால், புதிய பெரிய ஒப்பந்தங்கள் உடனடியாக கையெழுத்தாகாமல் போகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள், பெரிய மற்றும் சிறிய அளவிலான அணுமின் நிலையங்களுக்கான திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அணு எரிபொருள் சுழற்சியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இந்த கூட்டாண்மையின் விரிவாக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். அரசாங்கத்தின் இந்தியாவில் தயாரிப்போம் முன்முயற்சியின் (Make-in-India initiative) உந்துதலுக்கு ஏற்ப, இந்தியாவில் கருவிகள் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Ltd (RVNL)) போன்ற பயன்பாடுகள், ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் பாதை (Rishikesh-Karnaprayag line) உட்பட அதன் நான்கு செயல்பட்டுவரும் இரயில் திட்டங்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிய மட்டு உலைகளை (SMR) பயன்படுத்த ரோசாட்டோனுடன் (Rosatom) ஏற்கனவே விவாதித்து வருகின்றன.


மிதக்கும் N-ஆற்றல் திட்டம்


இந்தியாவில் ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட சிறிய மட்டு உலைகளை (SMR) உருவாக்குவது குறித்து, இரு நாடுகளும் ஒத்துழைப்பின் புதிய பகுதியைப் பற்றி விவாதிக்கின்றன. ஏப்ரல் 2024-ல், ரோசாட்டம் அதன் இந்தியக் கூட்டமைப்பு நாடுகளுக்கு நிறுவனத்தின் மிதக்கும் அணுசக்தி தீர்வுகள் பற்றிய தகவல்களை வழங்கியது. இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற உலகின் ஒரே நாடு ரஷ்யா ஆகும்.


சிறிய மட்டு உலைகள் (SMR) தொழில்நுட்பங்கள் வரையறுக்கப்பட்ட கட்ட உள்கட்டமைப்புடன் (grid networks) தொலைதூரப் பகுதிகளுக்கும், தனிப்பட்ட தொழில்துறை நிறுவனங்களுக்கும் சுத்தமான மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எரிசக்தி தேவையுள்ள தரவு மையங்கள் மற்றும் அடிப்படை மின்உற்பத்தி திறனை விரைவாக அதிகரிப்பது போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான தீர்வாக சிறிய மட்டு உலைகளை (SMR) இந்தியா பார்க்கிறது.


ரோசாட்டமின் எரிபொருள் நிறுவனமான TVEL எனும் எரிபொருள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவிற்கு அணு எரிபொருள் TVC-2M ஐ வழங்குகிறது. மேலும், இது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு புதிய திறன்களை வழங்குகிறது. இந்த, நிலையம் 18 மாத எரிபொருள் சுழற்சியின் கீழ் செயல்பட அனுமதிக்கிறது. இதன் மூலம் பாரம்பரிய 12 மாத சுழற்சியுடன் ஒப்பிடும்போது மின் அலகுகளின் பொருளாதார செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.


இந்தியாவின் அடிப்படை மின் உற்பத்தி : அணுசக்தி


குடிமை அணுசக்தித் துறையில், இந்தியா இப்போது சிறிய மட்டு உலைகளை (SMR) தொழில்துறை கார்பனை நீக்கத்திற்கு உதவும் ஒரு தொழில்நுட்பமாக முன்னிறுத்துகிறது. இதில் இந்த தொழில்நுட்பத்தைப் பரப்புவதில் தலைமைப் பங்கை வகிக்கும் நாட்டின் திறனையும் இது வலுவாக ஊக்குவித்து வருகிறது. இந்த மின்கட்டமைப்பை இயக்குபவர்களுக்கு ஓரளவு நெகிழ்வுத்தன்மையை வழங்கக்கூடிய அடிப்படை மின்ஆற்றலை வழங்குவதில் இவை முக்கியமானவை. குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் மாறுபாடுகளை சமநிலைப்படுத்த அடிப்படை மின் உற்பத்தியை அதிகரிப்பதன் சவாலை அதனுடன் கொண்டு வரும் மின்கட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சேர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் வெப்ப உற்பத்தி முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அணுசக்தி அதிக கார்பன்-நடுநிலையான ஒரு அடிப்படை சுமை உற்பத்தி விருப்பத்தை வழங்குகிறது.


இந்தியாவில் 24 செயல்பாட்டு அணு உலைகள் உள்ளன. அவை ஒன்றாக 7,943 MWe திறனை உருவாக்குகின்றன. மேலும், ஆறு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. இவை 4,768 MWe திறனைக் கொண்டுள்ளன. மேலும், 10 அலகுகள் திட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ளன. அவை சுமார் 7 GWe திறனைக் கொண்டது. 2047-ம் ஆண்டுக்குள் அதன் அணுசக்தி திறனை 100 ஜிகாவாட் ஆக விரிவுபடுத்த ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. இதற்காக, அது இரண்டு அணுகுமுறையை பின்பற்றத் திட்டமிட்டுள்ளது. இது, பெரிய திறன் கொண்ட அணு உலைகளை நிறுவுதல் மற்றும் புதிய அலகுகளின் வெளியீட்டை விரைவுபடுத்துவதை உறுதிசெய்ய சிறிய மட்டு உலைகளைப் (SMR) பயன்படுத்துதல் ஆகும்.


சிறிய மட்டு உலைகள் (SMR) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளது. 2033-ம் ஆண்டுக்குள் குறைந்தது ஐந்து உள்நாட்டு சிறிய மட்டு உலைகளை (SMR) வடிவமைத்து இயக்க திட்டமிட்டுள்ளது. தனியார் துறையின் பங்களிப்பை கொண்டுவர, அணுசக்தித் துறைக்கு ஆதரவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அணுசக்தி மசோதா-2025 உடன் இது முன்னேறி வருகிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் முக்கிய சட்டங்களை மாற்றியமைக்கும் இரண்டு முக்கிய திருத்தங்களில் இந்த மசோதாவும் ஒன்றாகும்.


இந்தத் திருத்தம், அணுமின் நிலையச் சட்டம், 1962-ஐ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை இந்தியாவில் அணு மின் நிலைய செயல்பாடுகளில் நுழைய அனுமதிக்க விரும்புகிறது. இந்த நிறுவனங்கள் புதிய அணுமின் திட்டங்களில் 49 சதவீதம் வரை சிறியளவிலான பங்கைப் பெறலாம். இந்தத் திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டங்களில் பங்குகளை முதலீடு செய்வதற்கான அடித்தளத்தையும் உருவாக்குகிறது. இது அணுமின் நிலையங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்த உதவும். இதுவரை, அணுசக்தி இந்தியாவின் மிகவும் மூடப்பட்ட துறைகளில் ஒன்றாகும்.


original link:

Putin’s N-power hard sell: SMRs, new-gen large nuke reactors, serial production in India


Share: