இந்தியாவின் தேசிய பாதுகாப்பபில் கடல் எல்லைகள் ஏன் முக்கியமானவை?

 இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட கடற்கரை நீளம், அதன் நிலம் மற்றும் கடல் எல்லைகளுக்கு இடையிலான இடைவெளி முன்னர் நினைத்ததை விடக் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.


இந்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இந்தியாவின் கடற்கரை நீளத்தில் கணிசமான அதிகரிப்பு தெரிய வந்துள்ளது. இப்போது அது 11098.81 கிலோமீட்டர் என்று அளவிடப்பட்டுள்ளது. இது முன்னர் மதிப்பிடப்பட்ட 7561.50 கிலோமீட்டரை விட அதிகமாகும். இந்த அதிகரிப்பு கடற்கரை அளவிடப்பட்ட விதத்திலும் பயன்படுத்தப்பட்ட அளவிலும் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்டது. இது 1970ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டது.


இந்தியாவின் கடற்கரை நீளத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளை வடிவமைக்கும் சூழலில் இந்தியாவின் கடல் எல்லைகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சிந்தனை அதன் நிலப்பரப்பு எல்லைகளிலிருந்து உருவாகும் அச்சுறுத்தல்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகத் தெரிந்தாலும், அதன் கடல் எல்லைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு, இந்தியாவை ஒரு கடல்சார் நாடாக மறுசிந்தனை செய்வது அவசியம். இந்த நோக்கில், இந்தியாவின் திருத்தப்பட்ட கடற்கரை நீளம், இந்தியாவின் புவியியலின் பல்வேறு எல்லைகள் எவ்வாறு தொடர்ந்து ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக அமைகிறது.


பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நீண்ட கால எல்லை ஆக்கிரமிப்பு வரலாறு இந்தியாவின் பாதுகாப்பு சிந்தனையை வடிவமைப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. இது தவிர, இந்தியாவின் பாதுகாப்பு எந்திரம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் நீடித்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்திய பஹல்காமில் தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சவால் மீண்டும் எழுந்துள்ளது.


இருப்பினும், இந்தியாவின் புவியியலின் கடல்சார் தன்மையைக் கருத்தில் கொண்டு, பல முக்கியமான கடல்சார் பாதுகாப்பு கவலைகள் அதன் தேசிய பாதுகாப்பு சிந்தனையை வழிநடத்துவதில் முக்கியமாக இடம்பெற வேண்டும். கடந்த கால அனுபவங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தயார்நிலையில் கடல் எல்லைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளன. 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் கடலில் இருந்து உருவாகும் அச்சுறுத்தல்கள் நிலப்பரப்பு அல்லது நாட்டின் பாதுகாப்புடன் எவ்வாறு ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாக  இருந்து வருகின்றன.


கூடுதலாக, பல பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்கள் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு சிந்தனைக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் மோசமான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள், சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள், சட்டவிரோதமான, அறிவிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (Illegal, Unreported and Unregulated (IUU)) மீன்பிடித்தல், கடற்கொள்ளை, கடல் பயங்கரவாதம், மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற நாடு கடந்த  குற்றங்கள், அத்துடன் நாட்டிற்குள் சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தல் ஆகியவை அடங்கும்.


கடல் எல்லைகளில் இருந்து எழும் இந்தப் பன்முகச் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது கடலோரப் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டிய முக்கியமான தேவை உள்ளது. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புக்கு ஒரு பெரிய ஊக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, ​​கடலோரப் பாதுகாப்பு சேவையான இந்திய கடலோரக் காவல்படை, இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியாவின் கடல்சார் சேவைகளின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஒத்திசைவு (synchronisation) மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இது செய்யப்பட்டது.


இது பரந்த செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவியது என்றாலும், இந்தியாவின் புவியியலின் பல எல்லைகளை தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியையும் இது குறிக்கிறது. இந்தியாவின் கடல்சார் மற்றும் பிராந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு நேரடியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால், இரண்டு எல்லைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடாது. எனவே, இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. மேலும் இதற்க ஒரு தீவிரமான, முறையான மற்றும் ஒருங்கிணைந்த உத்தி தேவை.


இந்தியப் பெருங்கடலில் அதிகார சமநிலை மாறி வருகிறது. ஏனெனில், சீனா இந்தப் பிராந்தியத்தில் அதிக ஈடுபாடு கொண்டு வருகிறது.  இந்தியப் பெருங்கடல் கடற்கரை நாடுகளிடையே சீனாவின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கு இந்தியாவிற்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சீனா தனது ஆராய்ச்சிக் கப்பல்களை இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் அனுப்ப முயன்று வருகிறது. இதனால் சீனா தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தக்கூடும் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஒட்டுமொத்த நிலைமை மேலும் பதட்டமாகி வருவதால், இந்தியா தனது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கலாம்.


சுவாரஸ்யமாக, இந்தியாவின் கடற்கரையின் திருத்தப்பட்ட நீளம், இந்தியாவின் பிராந்திய மற்றும் கடல் எல்லைகளின் குறைந்த வேறுபாட்டின் ஒரு முக்கியமான யதார்த்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் நில எல்லைகள் சுமார் 15,106.7 கி.மீ நீளம் கொண்டவை. முன்னதாக, கடல் எல்லைகள் அந்த அளவில் பாதி மட்டுமே இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இப்போது புதுப்பிக்கப்பட்ட நீளம் 11,098.81 கி.மீ. உள்ளது. திருத்தப்பட்ட நீளம் அதன் கடல் எல்லைக்கு இதே போன்ற முக்கியத்துவத்தை வழங்க வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கிறது.


இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் மாறுபட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், தேசிய பாதுகாப்புக்கான அதன் அணுகுமுறை காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். இந்தியா தனது பாதுகாப்பைத் திட்டமிடும்போது கடலின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கக்கூடாது என்பது முக்கியம். இந்தியாவின் கடற்கரையின் புதுப்பிக்கப்பட்ட அளவீடு, கடல் எல்லைகள் ஏன் முக்கியம் என்பதையும், அவை தேசிய பாதுகாப்புத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.


சயந்தன் ஹல்தார் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் கடல்சார் ஆய்வுகளில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிகிறார்.                  


Original article:
Share:

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது -ஆபிரகாம் தாமஸ்

 தேசிய கல்விக் கொள்கையை (NEP) பின்பற்ற மறுத்ததால், சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிறுத்தப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.


கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ₹2,151 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு  உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


செவ்வாயன்று, 2024–25 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSS) கீழ் நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்க மறுத்ததாலும், இந்தி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததாலும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியது.


நிதியை வழங்காததன் மூலம், மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி (co-operative federalism)  என்ற கருத்தை புறக்கணிக்கிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கல்வி குறித்து மாநிலங்கள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்க அரசியலமைப்பு அனுமதித்திருந்தாலும், மத்திய அரசு அதன் அதிகாரங்களை மீறி, தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாகப் பின்பற்றும்படி மாநிலத்தை கட்டாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அரசாங்கம், ஒன்றிய அரசு நிதி விடுவிப்பை தேசிய கல்விக் கொள்கை மற்றும் மற்றொரு ஒன்றிய திட்டமான PM SHRI பள்ளிகளை ஏற்றுக்கொள்வதோடு இணைக்க முயன்றதாக தெரிவித்துள்ளது.


ஏப்ரல் 8-ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என். ரவியின் 10 மாநில மசோதாக்களை கையெழுத்திடாமல் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களில் செயல்பட ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டுமா என்பது குறித்து ஒரு புதிய கேள்வி எழுப்பப்பட்டது.


தமிழ்நாடு அரசு தனது புதிய சட்ட வழக்கில், எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டம் (Prime Minister's Schools for Rising India (PM SHRI)) பள்ளிகளுக்கான ஒப்பந்தம் மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறது என்று கூறியது. ஆனால், தமிழ்நாடு அரசு இதை ஏற்கவில்லை. குறிப்பாக, இது மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையின் பிரிவு 4.13 க்கு எதிரானது என்பதால் மாநிலம் அதன் இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) விரும்புகிறது. மேலும், இந்த வகையான அழுத்தம் சட்டப்பூர்வமானது அல்லது மாநில சட்டங்களுக்கு எதிரினது என்றும் கூறியது.


ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கும் அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha Scheme (SSS)) கீழ் ஒன்றிய அரசு தனது "கட்டாயப் பங்கை" (obligatory share) நிறுத்தி வைப்பது, குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், (Right of Children to Free and Compulsory Education Act, 2009) செயல்படுத்துவதை முடக்கியுள்ளது மற்றும் 4.39 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், 221,000 ஆசிரியர்கள் மற்றும் 32,701 பள்ளி ஊழியர்களைப் பாதித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறியது.


2024–25 நிதியாண்டிற்கு, திட்ட ஒப்புதல் வாரியம், தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து விதிகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்த பிறகு, பிப்ரவரி 2024-ல் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.3,585.99 கோடியை வழங்க அனுமதித்தது. 60:40 செலவுப் பகிர்வு விதியின்படி, ஏப்ரல் 1, 2024 முதல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 2,151.59 கோடியை வழங்க வேண்டும்.


சமக்ர சிக்ஷா திட்டம் மற்றும் PM SHRI பள்ளிகள் திட்டங்களை இணைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி தவறானது என்று தமிழ்நாடு அரசு கூறியது. ஏனெனில், இரண்டு திட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவை மற்றும் தொடர்பில்லாதவை. இந்தத் திட்டங்கள் மூலம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயப்படுத்துவது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநிலத்தின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மேலும், அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலத்தின் சொந்த சட்டங்களுக்கு எதிரானது.


தேசிய கல்விக் கொள்கையின் கொள்கை நிலையை எப்போதும் எதிர்ப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக, ஒன்றிய அரசு அதை கட்டாயப்படுத்தாமல் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு  செயல்பட அனுமதி அளித்தது.


1968ஆம் ஆண்டு ஜனவரியில் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தையும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டது. இது 1967-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் (திருத்தம்) சட்டம் (Official Languages (Amendment) Act) மற்றும் தொடர்புடைய நாடாளுமன்றத் தீர்மானத்தை நிராகரித்தது. அந்தத் தீர்மானம் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்றும், இந்தி சேர்க்கப்படக்கூடாது என்றும் கூறியது. 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விதிகளின்படி, 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


ஒன்றிய அரசு நிதி உதவியைப் பயன்படுத்தி, மாநில அரசு தனது கொள்கையை செயல்படுத்துமாறு ஒன்றிய அரசு கட்டாயப்படுத்த முடியாது என்றும், அத்தகைய திணிப்பு மாநிலத்தின் சுயாட்சி மற்றும் அதன் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதற்கான அரசியலமைப்பு உரிமையை மீறுவதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன் மற்றும் சபரிஷ் சுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்த்தில்  வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.


Original article:
Share:

நீதித்துறையில் பெண்கள்: இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது -ரிதுபர்ணா பட்கிரி

 1950ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, உச்ச நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களிலும் மிகக் குறைவான பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வு பாலின நீதியை எவ்வாறு பாதிக்கிறது?


நீதிபதி லீலா சேத் ஒரு நாள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தபோது, பல காலடி ஓசைகளையும், மென்மையான குரல்களையும் கேட்டார். அவர் தனது வாசிப்பாளரிடம் ஏதேனும் சிறப்பு செய்திக்குரிய வழக்கு திடீரென அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என விசாரித்தார். இல்லை, இல்லை என்று வாசிப்பாளர் பதிலளித்தார்.  இந்த கூட்டம் ஒரு விவசாயிகள் குழு, அவர்களை பிரதமர் சரண் சிங் டெல்லிக்கு காட்சிகளைக் காண அழைத்துள்ளார். அவர்கள் இப்போதுதான் உயிரியல் பூங்காவைப் பார்த்துவிட்டு வந்துள்ளனர்: இப்போது அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதியைப் பார்க்க வந்துள்ளனர்."


ஒரு மாநில உயர் நீதிமன்றத்தின் (இமாச்சலப் பிரதேசம்) முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி லீலா சேத், 1978-ஆம் ஆண்டு நடந்த ஒரு கதையை தனது சுயசரிதையான ஆன் பேலன்ஸ்ல் (On Balance) பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் நீதிபதி எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தனர். இது ஒரு காலத்தில் ஒரு பெண்ணை ஒரு சக்திவாய்ந்த நீதித்துறைப் பணியில் பார்ப்பது எவ்வளவு அரிதானது என்பதைக் காட்டுகிறது. 40-ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் ஒரு பெண் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.


நீதித்துறையில் பாலின இடைவெளி


1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, உச்ச நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் மட்டுமே இருந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, நீதிபதி எம். பாத்திமா பீவி, 1989ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டு 39 ஆண்டுகளான பிறகும் தற்போது, தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 33 நீதிபதிகளில் இரண்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.  அவர்கள் நீதிபதி பேலா திரிவேதி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆவார்.


நீதிபதி திரிவேதி ஜூன் 9 அன்று ஓய்வு பெறுகிறார். ஆனால், வெள்ளிக்கிழமை (மே 16, 2025) அவரது கடைசி வேலை நாளாக குறிக்கப்பட்டது. இருப்பினும், அவரது ஓய்வு எதிர்பாராத திருப்பத்தைக் கண்டது. ஏனெனில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அவருக்கு பாரம்பரிய அதிகாரப்பூர்வ விடைபெறும் விழாவை நடத்தவில்லை. குறிப்பாக, நீதிபதி திரிவேதியின் ஓய்வுக்குப் பிறகு, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துவிடும்.


உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களிலும் நிலைமை சிறப்பாக இல்லை. உச்ச நீதிமன்ற பார்வையாளர் (Supreme Court Observer, 2021) தரவுகளின்படி, உயர் நீதிமன்றங்களில் 11.7% நீதிபதிகள் மட்டுமே பெண்கள் உள்ளனர். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, பாட்னா மற்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை. கீழ் நீதிமன்றங்களில், பெண் நீதிபதிகள் 35% மட்டுமே உள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் நீதித்துறை அமைப்பின் அனைத்து நிலைகளிலும் பாலின சமநிலையின்மை (gender imbalance) இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.


மேலும், சாதி மற்றும் மதத்தின் பார்வையில் இருந்து பார்க்கும்போது நிலைமை இன்னும் கவலைக்குரியதாகத் தெரிகிறது. கடந்த 75 ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பட்டியலினத்தவர் அல்லது பழங்குடி பெண் நீதிபதி இருந்ததில்லை. உச்ச நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை, ஒரே முஸ்லிம் பெண் நீதிபதி நீதிபதி எம். பாத்திமா பீவி மட்டுமே இருந்துள்ளார்.


தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியம் (Supreme Court collegium)  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனம் மற்றும் மாற்றத்திற்கான அமைப்பில் பெண்கள் யாரும் இல்லை.  இதில் அரசியலமைப்பு விதி இல்லை என்றாலும், கொலீஜியம் முறை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலமாக வளர்ந்துள்ளது. இந்த அமைப்பில், இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் இடம் பெற்றிருப்பார்கள். நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி ஆர். பானுமதி ஆகிய இரண்டு பெண் நீதிபதிகள் மட்டுமே கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ளனர்.


உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், அதிக பெண்கள் இருப்பது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். பெங்களூருவைச் சேர்ந்த சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம் (Centre for Law and Policy Research (CLPR)) 2025-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் சராசரியாக ஆண் நீதிபதிகளை விட ஒரு வருடம் குறைவாகவே பணியாற்றுகிறார்கள் என்று கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தக் குறுகிய பதவிக்காலம் அவர்கள் உயர் பதவிகளுக்கும், பின்னர் கொலீஜியப் பதவிகளுக்கும் உயரும் வாய்ப்புகளைப் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


உதாரணமாக, நீதிபதி பி.வி. நாகரத்னா இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், அவரது பதவிக்காலம் 36 நாட்கள் மட்டுமே நீடிக்கும்.




நீதித்துறையில் பாலின பன்முகத்தன்மை ஏன் முக்கியம்


நீதித்துறையில் பாலின பன்முகத்தன்மை இல்லாமையும் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவமும் பெரும்பாலும் இருக்கும் ஆணாதிக்க பாரபட்சங்களை வலுப்படுத்தும் தீர்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. இது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய சில தீர்ப்புகளில் இருந்து தெரிகிறது. உதாரணமாக, மார்ச் 11, 2025 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு ஜாமீன் வழங்கியது. அந்தப் பெண் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று கூறியது.


அதேபோல், மார்ச் 17, 2025 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு மைனர் சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்ட நபர்கள் மீது ஆதாரம் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கூறியது.


இரண்டு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. பலர் இந்த முடிவுகளை 'உணர்ச்சியற்றது' (‘insensitive’) மற்றும் 'மனிதாபிமானமற்றது' (‘inhuman’.) என்று அழைத்தனர். நீதிபதி பேலா திரிவேதி, "சட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், அனுதாபம் அளிக்க கூடாது" என்று கூறினார். இது ஒரு முக்கியமான விஷயம். இந்த வகையான தீர்ப்புகள் நீதித்துறையில் எவ்வளவு குறைவான பெண்கள் உள்ளனர் என்பதோடு தொடர்புடையதாக இருக்கலாம்.


ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டில், கோழிக்கோட்டில் உள்ள ஒரு நீதிபதி, பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்கினார். அந்தப் பெண்ணின் ஆடைகள் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதே ஆண்டு, மும்பை உயர் நீதிமன்றம், ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சிறுவன் என்று காரணம் கூறி ஜாமீன் வழங்கியது. இந்த வகையான தீர்ப்புகள் பாலியல் கருத்துக்களை ஆதரிக்கின்றன மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நீதியைப் பறிக்கின்றன.




நீதித்துறையில் பெண்களை இயல்பாக்குதல்


நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் நியமிக்கப்படுவது ஒரு சாதாரண நடைமுறையாக இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களாக மட்டுமல்லாமல், தங்கள் பணிகளைச் செய்யும் தனிநபர்களாகவும் பார்க்கப்பட வேண்டும். மேலும், பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை மட்டும் கையாள்வதில் பெண் நீதிபதிகள் மட்டுப்படுத்தப்படக்கூடாது.


நீதித்துறை அமைப்பில் பாலின விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொறுப்புணர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பது ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கும். ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற சில மாநிலங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் உள்ளன. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இத்தகைய இடஒதுக்கீடுகளுடன், சுத்தமான கழிப்பறைகள் மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளிலும் முன்னேற்றங்கள் இருக்க வேண்டும். இவை கீழ் நீதிமன்றங்களில்  நீதித்துறையில் அதிக பெண்கள் சேர உதவவும் ஊக்குவிக்கவும்.


மேலும், நீதித்துறையில் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த எத்தனை பெண்கள் பணிபுரிகிறார்கள் என்பதை சரிபார்க்க அரசாங்கம் தொடர்ந்து கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும். மிகக் குறைவான பெண் நீதிபதிகள் என்ற பிரச்சினையை சரி செய்ய இந்தத் தகவல் மிகவும் முக்கியமானது. இறுதியாக, நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பை இயல்பாக்குவது, மிகவும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ சட்ட அமைப்புக்கு முக்கியமானது.


Original article:
Share:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு 2006 என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


. 2021-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணையை (office memorandum) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ரத்து செய்தது. இது பிந்தைய நடைமுறை அனுமதிகளை வழங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை அறிமுகப்படுத்தியது. 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment (EIA)) அறிவிப்பை மீறும் செயல்களை முறைப்படுத்துவதற்கான இதே போன்ற அறிவிப்புகள் அல்லது அலுவலக உத்தரவுகளை வெளியிடுவதிலிருந்தும் இந்த தீர்ப்பு ஒன்றிய அரசை தடுத்தது.


. மார்ச் 2017-ல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC)) சார்பில் ஆறு மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்க ஒரு முறை வாய்ப்பு வழங்கியது. இது முதலில் ஒப்புதல் பெறாமல் வேலை செய்யத் தொடங்கிய, உற்பத்தியை அதிகரித்த அல்லது தங்கள் தயாரிப்புகளை மாற்றிய தொழிற்சாலைகளுக்கு பொருந்தும்.


. குறிப்பாக, ஒரு திட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், மனித ஆரோக்கியம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு (பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை) மீதான தாக்கத்தை ஆராய 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பு கீழ் முன் அனுமதி கட்டாயமாக  பெறப்பட்டிருக்க வேண்டும்.

. நீதிபதி Abhay S Oka மற்றும் நீதிபதி Ujjal Bhuyan அமர்வு, "சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தவர்களைப் பாதுகாக்க" அலுவலக நினைவுக்குறிப்புகளை வெளியிட்டதற்காக ஒன்றிய அரசைக் கண்டித்தது. மேலும், சுசுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வளர்ச்சியை நாம் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.


. ஒன்றிய அரசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவர்களைப் பாதுகாக்கத் தன் வழியிலிருந்து விலகிச் சென்றது. மேலும், நீதிமன்றத்தால் அத்தகைய முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும், பிரிவு 21 வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கும் (right to protection of life and personal liberty) உரிமையை நிலைநிறுத்த அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ ஆணையை நீதிமன்றம் கொண்டுள்ளது என்றும் நீதிமன்றம்  கூறியது.


. கடந்த காலங்களில், ஆரோக்கியமான மற்றும் மாசு இல்லாத சூழலுக்கான உரிமையை உள்ளடக்கிய வகையில், உச்ச நீதிமன்றம் பிரிவு 21-ன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2021ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணை (office memorandum (OM)) ஆகியவை பிரிவு 21 மற்றும் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்  என்று உரிமையை (right to equality before law) மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், அலுவலக குறிப்பாணை என்பது மீறல்களின் விளைவுகளைப் பற்றி "முழுமையாக அறிந்த" அனைத்து திட்ட ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்.


.  அமர்வு முந்தைய இரண்டு தீர்ப்புகளை மேற்கோள் காட்டியது. காமன் காஸ் VS  இந்திய யூனியன் (Common Cause VS Union of India (2017) மற்றும் அலெம்பிக் பார்மசூட்டிகல்ஸ் VS ரோஹித் பிரஜாபதி (Alembic Pharmaceuticals v. Rohit Prajapati (2020))  போன்ற வழக்குகளில் பின்னோக்கிய அனுமதிகள் சுற்றுச்சூழல் சட்டத்திற்கு எதிரானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.


. இது திட்டங்களுக்கு முதலில் அனுமதி பெறாமலேயே கட்டுமானத்தைத் தொடங்க அனுமதித்தது. 2021 அலுவலக குறிப்பாணையின் மூலம் விதிகளை மீறியதற்காக ஒன்றிய அரசை  நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது


. அலெம்பிக் வழக்கில், நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர், ஒரு திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பிறகு ஒப்புதல் அளிப்பது அடிப்படை சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிரானது மற்றும் EIA (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) அறிவிப்பின் நோக்கத்தை மீறுவதாகக் கூறினர்.


உங்களுக்குத் தெரியுமா?:


வனங்கள் அழிப்புக்கு காரணம் என்ன?


. வேகமான தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவை காடுகள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பதால் நிலைமை மிகவும் தீவிரமானது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2014-15 மற்றும் 2023-24 க்கு இடையில், இந்தியா வளர்ச்சித் திட்டங்களுக்காக சுமார் 1,73,300 ஹெக்டேர் வன நிலத்தை இழந்தது.


.  சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற கனிமங்கள் நிறைந்த மாநிலங்களில், சுரங்கத்திற்காக ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு வாக்கில், சுமார் 500 சுரங்கத் திட்டங்களுக்கு 1 லட்சம் ஹெக்டேர் காடுகள்  அழிக்கப்பட்டன.


. வடகிழக்கு இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளில், விவசாயம் மாறி வருதல் (ஜும்), விவசாயம் விரிவடைந்து வருதல் மற்றும் அதிக அளவில் மரம் வெட்டுதல் போன்ற காரணங்களால் காடுகள் முக்கியமாக அழிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் 2021 மற்றும் 2023-க்கு இடையில் அதிக வனப்பகுதியை இழந்தன.


.  இது தவிர, மனித செயல்பாடுகளாலும், நீடித்த வறட்சியாலும் தூண்டப்படும் அதிகரித்து வரும் காட்டுத் தீ, காடுகளின் சீரழிவுக்கு மேலும் வழிவகுக்கிறது. காலநிலை மாற்றம் வானிலையை வெப்பமாகவும் வறண்டதாகவும் மாற்றுவதன் மூலம் நிலைமை  மேலும் மோசமாகுகிறது.


. நவம்பர் 2023 முதல் ஜூன் 2024ஆம் ஆண்டுக்கு இடையில், இந்திய வன ஆய்வகம் 2,03,544 காட்டுத் தீ சம்பவங்களைப் பதிவு செய்தது. இத்தகைய அச்சுறுத்தும் போக்குகள் வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வலுவான மற்றும் தரமான சட்டக் கட்டமைப்பிற்கான அவசர தேவையை வலியுறுத்துகின்றன.

Original article:
Share:

ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு வழக்கு -சினேகா பிரியா யானப்பா, பிரதிக்ஷா உல்லால்

 அகதிகள் உரிமைகள் (refugee rights) குறித்த இந்திய நீதித்துறையின் நிலைப்பாடு சீரற்றதாக உள்ளது. மூன்று முக்கியமான வழக்குகள் இதை எடுத்துக்காட்டுகின்றன.


கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் N. கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு (division bench), 43 ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. டெல்லி காவல்துறை அகதிகளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு கொண்டு சென்றதாகவும், அவர்களை மியான்மருக்கு நாடு கடத்துவதற்காக சர்வதேச கடல் பகுதியில் இறக்கிவிட்டதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அமர்வானது, இதில் தலையிடவோ அல்லது தொலைபேசி ஆதாரங்கள் அல்லது ஐ.நா விசாரணை அறிக்கையை எடுத்துக் கொள்ளவோ ​​மறுத்துவிட்டது. இந்த வழக்கில் கோரப்பட்ட நிவாரணம், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, இந்திய தலைமை நீதிபதியின் உத்தரவை மேற்கோள்காட்டி, நீதிமன்ற அமர்வு நியாயப்படுத்தியது. பின்னர் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு ஜூலை 31, 2025 அன்று விசாரணைக்கு திட்டமிடப்பட்டது.


உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவிற்கு அருகில், அதிகரித்து வரும் அகதிகளின் நெருக்கடிகளை இந்திய அரசாங்கம் எவ்வாறு பார்க்கிறது என்பது குறித்து பெரிய கேள்விகள் எழுகின்றன. இந்திய அரசாங்கம் ரோஹிங்கியா அகதிகளை (Rohingya refugees) தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அது அவர்களை "சட்டவிரோத குடியேறிகள்" (illegal immigrants) என்று அழைக்கிறது மற்றும் அவர்களை அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்ப விரும்புகிறது.


இந்தக் கருத்து இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில உரிமைகளுக்கு எதிரானது. அரசியலமைப்புப் பிரிவுகள் 14 மற்றும் 21, குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட அனைவருக்கும் சமத்துவ உரிமை மற்றும் வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன. இதன் பொருள் இந்த உரிமைகள் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் மற்றும் அவற்றை மறுக்க முடியாது.


அரசியலமைப்பின் பிரிவு 51(c) இந்தியாவை சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தங்களை மதிக்கச் சொல்கிறது. மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் (Universal Declaration of Human Rights (UDHR)) மற்றும் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights (ICCPR)) போன்ற சர்வதேச விதிகளை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அகதிகளின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டால், அவர்களை நாடு கடத்துவதை இந்த விதிகள் இந்தியா தடுக்கின்றன.


உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் அரசியலமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முக்கியமான விதியானது, திருப்பி அனுப்புதல் கூடாது (non-refoulement) என்பதாகும். இதன் பொருள், நாடுகள் தங்கள் உயிருக்கு ஆபத்தில் இருக்கக்கூடிய இடங்களுக்கு மக்களை அனுப்புவதைத் தடுக்கிறது. இது சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் இது சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றன. எந்த சூழ்நிலையிலும் இதைப் புறக்கணிக்கவோ அல்லது மீறவோ முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.


முதலாவதாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) vs அருணாச்சலப் பிரதேச (National Human Rights Commission(NHRC) vs Arunachal Pradesh) வழக்கில், சக்மாக்கள் (Chakmas) இனக்குழு பற்றிய பிரச்சினையாகும். அவர்கள் 1964-ல் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்தனர். முதலில் அவர்கள் அசாமில் குடியேறி பின்னர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு, குடிமக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரையும் பாதுகாக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. சக்மாக்களைப் பாதுகாக்குமாறு நீதிமன்றம் அருணாச்சலப் பிரதேச அரசாங்கத்திடம் கூறியது. அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களை வெளியேற கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.


இரண்டாவதாக, கதேர் அப்பாஸ் ஹபீப் அல் குதைஃபி vs இந்திய ஒன்றிய வழக்கில் (Ktaer Abbas Habib Al Qutaifi vs Union of India), குஜராத் உயர் நீதிமன்றம், மறுகுடியமர்த்தல் கொள்கை (principle of non-refoulement) என்பது மறுகுடியமர்த்தல் கொள்கை பிரிவு 21 இன் ஒரு பகுதியாகும் என்று கூறியது. மனிதாபிமான சட்டம் குறித்த சர்வதேச ஒப்பந்தங்களைப் பின்பற்ற வேண்டிய கடமையை இந்தியாவுக்கு நினைவூட்டியது.


மூன்றாவதாக, டோங் லியான் காம் vs இந்திய ஒன்றிய (Dongh Lian Kham vs Union of India) வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தது, மறுகுடியமர்த்தல் கொள்கை அரசியலமைப்பின் பிரிவு 21 இன் ஒருங்கிணைந்ததாக அங்கீகரித்தது.


இருப்பினும், ரோஹிங்கியாக்களை நாடு கடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் தற்போது முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இந்த அணுகுமுறை சுருங்கிவிட்டதாகத் தெரிகிறது. வெளிநாட்டவரை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் உரிமை வரம்பற்றது மற்றும் முழுமையானது என்று தீர்ப்பளித்துள்ளது.


1951-ஆம் ஆண்டு அகதிகளின் நிலை குறித்த மாநாட்டுக்கோ அல்லது 1967-ம் ஆண்டு நெறிமுறைக்கோ கட்டுப்படவில்லை என்று இந்தியா கூறுகிறது. இதன் காரணமாக, 1951ஆம் ஆண்டு மாநாட்டின் பிரிவு 33(1) ஐப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா நம்புகிறது. இந்த விதியில் அகதிகளை அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் இடத்திற்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்ற கொள்கை உள்ளது.


இருப்பினும், இந்தக் கொள்கை அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இதில் அதிகாரப்பூர்வமாக அகதிகளாக அங்கீகரிக்கப்படாதவர்களும் அடங்குவர்.


ஒருவர் அகதியாக இருப்பது ஒரு நபரின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஒரு அரசாங்கம் அவர்களை அங்கீகரிக்கிறதா என்பதைப் பொறுத்தது அல்ல.


எனவே, ரோஹிங்கியாக்களை அகதிகளாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், சர்வதேச சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் கீழ் அவர்களின் அடிப்படை உரிமைகளை அது இன்னும் மதிக்க வேண்டும்.


இந்தியா தற்போது வெவ்வேறு அகதிக் குழுக்களை வெவ்வேறு வழிகளில் நடத்துகிறது. ஏனென்றால், நாட்டின் முடிவுகள் மாறுபட்ட மதிப்பீடுகள் மற்றும் அதன் புவிசார் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக, அகதிகள் வெவ்வேறு நிலைகளில் சிகிச்சை, பாதுகாப்பு மற்றும் உதவியை அனுபவிக்கின்றனர். உதாரணமாக, திபெத்திய அகதிகள் சிறந்த சிகிச்சையைப் பெறுகிறார்கள். அவர்கள் குடியிருப்பு அனுமதிகளைப் பெறுகிறார்கள், கல்வியை அணுகலாம் மற்றும் குடியேற அரசாங்கத்திடமிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள். மறுபுறம், இலங்கை அகதிகள் முகாம்களில் வைக்கப்பட்டு பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். சீரான தேசியக் கொள்கை இல்லாததால் இந்த சமமற்ற நிலைமை ஏற்படுகிறது. தெளிவான கட்டமைப்பு இல்லாமல், அகதிகளின் உரிமைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் முடிவுகளைப் பொறுத்தே அமைகிறத.


உலக ஒழுங்கு சகிப்புத்தன்மையை நோக்கி மாறி வருவதாகத் தெரிகிறது. இராணுவ மோதல்களும் காலநிலை மாற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. புவிசார் அரசியல் மாற்றங்களும் மக்களை வெளிநாட்டினரை வெறுக்க வைக்கின்றன.


இந்த மாறிவரும் உலகில், "அகதி" என்ற பாரம்பரிய யோசனையும் மாறி வருகிறது. ஒரு அகதி என்பது தங்கள் சொந்த நாட்டில் துன்புறுத்தல், மோதல் அல்லது வன்முறையிலிருந்து தப்பிக்கும் ஒருவரைக் குறிக்கிறது. இப்போது, ​​புதிய வகையான அகதிகள் உள்ளனர். இவர்களில் நாடற்ற நபர்கள் மற்றும் காலநிலை அகதிகளும் அடங்குவர். 


முந்தைய உலக ஒழுங்கிலிருந்து அகதி என்ற பழைய வரையறைக்கு அவர்கள் பொருந்தவில்லை. அனைத்து அகதிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் உதவி வழங்குவது இந்தியாவின் கருணைத் தலைமையைக் காட்டும். இது அமைதியின் அடிப்படையில் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்க உதவும்.


விதி சட்டக் கொள்கை மையத்தில் (Vidhi Centre for Legal Policy) கர்நாடக குழுவை யானப்பா வழிநடத்துகிறார். அவர் நகர்ப்புற நிர்வாகம், கல்வி மற்றும் தரவு மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விதிகளில் பணியாற்றுகிறார். உல்லால் விதி சட்டக் கொள்கை மையத்தில்  ஒரு ஆராய்ச்சியாளர். அவர் நகர்ப்புற நிர்வாகம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறார்.


Original article:
Share:

திட்ட அடிப்படையிலான தொழிலாளர்கள், அடையாளத்திற்கான ஒரு போராட்டம் -கே.ஆர். ஷ்யாம் சுந்தர்

 தொழிலாளர் சந்தை அடையாளத்திற்கான (labour market identity), திட்ட அடிப்படையிலான தொழிலாளர்களின் (scheme-based workers (SBW)) கோரிக்கை நியாயமான ஒன்றாகும்.


ஒன்றிய அரசு, அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அரசின் ஊதியக் குழுவில் உள்ள லட்சக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, 13,51,104 தொழிலாளர்களைக் கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers (AWW)) உள்ளனர். 9,22,522 தொழிலாளர்களைக் கொண்ட அங்கன்வாடி உதவியாளர்களும் (Anganwadi helpers (AWH)) உள்ளனர். அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHA)) 10,52,322 தொழிலாளர்கள் மற்றும் மதிய உணவுத் தொழிலாளர்கள் (Mid-Day-Meal workers (MDMW)) மொத்தம் 25,16,688 தொழிலாளர்கள் உள்ளனர்.


இந்த பணியாளர்கள் 1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) திட்டம், தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (National Rural Health Mission (NRHM)) மற்றும் மதிய உணவு திட்டம் (Mid-Day Meal scheme) போன்ற அரசு திட்டங்களில் ஒரு பகுதியாக உள்ளனர். மொத்தத்தில், சுமார் 60 மில்லியன் தொழிலாளர்கள் இந்த அரசு திட்டங்களில் பணிபுரிகின்றனர்.


இந்தத் திட்டங்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளைச் செய்கின்றன. அவை குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்தை கவனித்துக்கொள்கின்றன. அவை சமூகத்தை பொது சுகாதார அமைப்புடன் இணைக்கின்றன. இது பள்ளி சேர்க்கை மற்றும் ஊட்டச்சத்து சுகாதார சேவைகளை மேம்படுத்த உதவுகிறது.


அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது


இந்தத் தொழிலாளர்கள் முக்கியமான வேலையைச் செய்கிறார்கள். அதற்காக பிரதமராலும், உலக சுகாதார அமைப்பாலும் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு அதிகாரப்பூர்வ தொழிலாளர் தரநிலை, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அடிப்படை தொழிலாளர் உரிமைகள் கிடைக்கவில்லை. திட்ட அடிப்படையிலான தொழிலாளர்களை (SBW) பாதிக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள் உள்ளன. முதலாவதாக, அவர்கள் அரசாங்க ஊழியர்களைப் போலவே "தொழிலாளர்களாக" அங்கீகரிக்கப்பட விரும்புகிறார்கள். இரண்டாவதாக, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வேண்டும். மூன்றாவதாக, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வேண்டும். மேலும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரியப்படுத்த, மூன்று உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை, வேலைநிறுத்தங்கள் (strikes), சட்ட நடவடிக்கை (legal action) மற்றும் அதிகாரிகளுடன் பேசுதல் (சமூக உரையாடல்-social dialogue) ஆகியவை ஆகும்.


AITUC, BMS மற்றும் CITU போன்ற முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் பல வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்துள்ளன. ஊதிய பேச்சுவார்த்தைகளுக்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை. இதன் காரணமாக, தொழிற்சங்கங்கள் ஊதிய திருத்தங்களைக் கோரி அடிக்கடி மற்றும் சீரற்ற முறையில் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளன. மாநில அரசுகள் சில நேரங்களில் ஊதிய உயர்வுகளில் அதிக தாராள மனப்பான்மையைக் காட்டுகின்றன. தொழிற்சங்கங்கள் எவ்வளவு வலிமையானவை, ஆளும் கட்சியுடனான அவற்றின் தொடர்பு மற்றும் தேர்தல்கள் போன்ற அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் எவ்வளவு ஊதியத்தை உயர்த்துவது என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கின்றன.


மார்ச் 2025-ல், கேரளாவில் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் 13 நாள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். மாநில அரசாங்கங்கள் எப்போதும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களிடம் கருணை காட்டாததால், SBW சங்கங்களின் அடிக்கடி மற்றும் பெரிய அளவிலான போராட்டங்கள் நவீன காலங்களில் தொழிலாளர்களின் அணிதிரட்டலின் ஒரு சாதனையாகும்.


உதாரணமாக, 2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு, மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்க மகாராஷ்டிரா அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தைப் (Maharashtra Essential Services Maintenance Act) பயன்படுத்தியது. அங்கன்வாடிகள் செய்யும் பணியின் "அத்தியாவசிய" தன்மையை அரசாங்கம் அங்கீகரித்ததை இது காட்டுகிறது.


நீதித்துறையின் அணுகுமுறை


அங்கன்வாடிகள் நீதிமன்றங்களிடம் உதவி கோரி வருகின்றன. அவை முதலில் சில தோல்விகளைச் சந்தித்தன. ஆனால், பின்னர் சில வெற்றிகளைப் பெற்றன. 2006-ம் ஆண்டில், கர்நாடகா vs அமீர்பி &  மற்றும் பிறர் வழக்கில், (State Of Karnataka & Ors vs Ameerbi & Ors) அங்கன்வாடிகள் எந்த அதிகாரப்பூர்வ மாநில செயல்பாடுகளையும் செய்வதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், அவர்கள் எந்த சட்டத்தின் கீழும் அரசு பதவியை வகிக்கவில்லை. எனவே, அவர்கள் தொழிலாளர்களாக கருதப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த முடிவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவாக இருந்தது.


இருப்பினும், பின்னர் நீதிமன்றங்களிலிருந்து சில நிவாரணங்கள் கிடைத்தன. அவை, 2022 ஆம் ஆண்டில், அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வூதியம் முறைக்கு  தகுதியானவர்கள் (eligible for gratuity) என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதன் பொருள் அவர்கள் பணிக்கொடை செலுத்தும் சட்டம் (Payment of Gratuity Act), 1972 இன் கீழ் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இது Maniben Maganbhai Bhariya vs District Development Officer வழக்கில் மேற்கொள்ளப்பட்டது.


2024-ம் ஆண்டில், குஜராத் உயர் நீதிமன்றம் மற்றொரு முக்கியமான தீர்ப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளுக்கு கடினமான கடமைகள் மற்றும் முக்கியமான பொறுப்புகள் உள்ளன என்று நீதிமன்றம் கூறியது. கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act (RTE)) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act (NSF)) ஆகியவற்றின் கீழ் வேலை செய்வது இதில் அடங்கும்.


நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்தக் கொள்கை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் (AWWs மற்றும் AWHs) வழக்கமான அரசு ஊழியர்களாக மாற அனுமதிக்க வேண்டும். அவர்கள் வகுப்பு III மற்றும் வகுப்பு IV அரசு வேலைகளில் சேர்க்கப்பட வேண்டும்.


இந்தக் கொள்கை உருவாக்கப்படும் வரை, இந்தத் தொழிலாளர்களுக்கு வகுப்பு III மற்றும் வகுப்பு IV ஊழியர்களைப் போலவே குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


மத்திய தொழிற்சங்கங்கள், திட்ட அடிப்படையிலான தொழிலாளர்கள் (SBWs) தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன. அவர்கள் இதை இந்திய தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference (ILC)) எனப்படும் முத்தரப்பு மன்றத்தில் செய்து வருகின்றனர். ILC என்பது சமூக உரையாடலுக்கான ஒரு தளமாகும். இது காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டது. ILC-யின் 45வது அமர்வில், முத்தரப்பு மாநாட்டுக் குழு (tripartite Conference Committee) ஒருமனதாக ஒரு முடிவை எடுத்தது. மத்திய அரசு SBW-களை தன்னார்வலர்கள் (volunteers) அல்லது கௌரவத் தொழிலாளர்கள் (honorary workers) என்று அழைப்பதற்குப் பதிலாக "பணியாளர்கள்" (workers) என்று நடத்த வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். மேலும், SBW-க்கள் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், சுகாதார காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பிற சலுகைகளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.


வழக்கமான நிலைப்பாடு


அதிக செலவுகள் குறித்து அரசாங்கம் கவலைப்படுகிறது. ஏனென்றால் மக்கள் தொகை அதிகரிக்கும் போது அரசு ஊழியர்களாக பணிபுரியும் சமூக மற்றும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை (சமூக மற்றும் வீட்டுப் பணியாளர்கள்) அதிகரிக்கும். 2016ஆம் ஆண்டில், தொழிலாளர் அமைச்சர் மாநிலங்களவையில் பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கு நீண்ட காலம் தேவை என்று கூறினார். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த நிலையான காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசு, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்தக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாமதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில், அத்தகைய கொள்கைகளின் தேவையை கூட அது மறுக்கிறது. 


அதே நேரத்தில், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை (Integrated Child Development Services Scheme (ICDS)) தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த தனியார்மயமாக்கலைத் தடுக்க SBW குழுக்கள் அனைத்து மட்டங்களிலும் கடுமையாகப் போராடுகின்றன. SBWகளின் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள். பல பிரச்சினைகளை உள்ளடக்கிய அவர்களின் போராட்டம் தொடரும்.


அவர்கள் பாராட்டுகளை கேட்கவில்லை உண்மையான தொழிலாளர்களாக அங்கீகாரத்தை கேட்கிறார்கள். இது அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம். பாரம்பரிய மற்றும் நவீன (கிக்) துறைகளில், தொழிலாளர்கள் தங்கள் தொழிலாளர் சந்தை அடையாளத்திற்காக "தொழிலாளர்கள்" என்று அழைக்கப்பட்டு ஊதியம் பெற விரும்புகிறார்கள். அவர்கள் தர்மம் கேட்கவில்லை. அவர்கள் பல மணி நேரம் கடினமாக உழைப்பதால் "தொழிலாளர்கள்" என்று அங்கீகரிக்கப்பட விரும்புகிறார்கள்.


கே.ஆர். ஷ்யாம் சுந்தர், குர்கானில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் (Management Development Institute (MDI) பயிற்சிப் பேராசிரியராக உள்ளார்.


Original article:
Share:

முன்னேற்றம் வேகமாக மட்டுமல்ல, அவை எதிர்காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். -சஞ்சனா என்.டி.

 இந்தியாவிடம் காலநிலை அபாயங்களை ஆய்வு செய்து கணிக்க சரியான தகவமைப்பு உத்திகள் (adaptation strategies) இல்லை. எனவே, அது முன்கூட்டியே அவற்றுக்குத் தயாராவதற்குப் பதிலாக, அவை ஏற்பட்ட பிறகுதான் எதிர்வினையாற்றுகிறது.


adaptation strategies : தகவமைப்பு உத்தி என்பது மனித மற்றும் இயற்கை அமைப்புகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு செயல் திட்டமாகும்.


இந்தியாவின் காலநிலை எதிர்காலம் நிலையானது அல்ல. அதிகரித்து வரும் வெப்பநிலை, கணிக்க முடியாத பருவமழை மற்றும் வலுவான பேரிடர்களில் நாம் எதிர்கொள்கிறோம். இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த சிக்கல்களைத் தீர்க்க நாம் என்ன செய்கிறோம்? உலக வங்கியின் (World Bank) கூற்றுப்படி, இந்தியாவின் 80% க்கும் மேற்பட்ட மக்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களுக்கு உள்ளாகும் பகுதிகளில் வாழ்கின்றனர். வடகிழக்கில் ஏற்படும் கடும் வெள்ளம் மற்றும் மத்திய இந்தியாவில் பயிர்களை அழிக்கும் வெப்ப அலைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பிரச்சினைகள் ஒரு முறை மட்டுமே நிகழும் நிகழ்வுகள் அல்ல. அவை பொருளாதாரம், பொது சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களாகும். இதில், ஆபத்துக்கான தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், இந்த அபாயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது அவற்றுக்குத் தயாராகவோ இல்லாததால் இந்தியா இன்னும் சிக்கலில் உள்ளது. காலநிலை அபாயங்களை மதிப்பிடுவதற்கும் கணிப்பதற்கும் நாட்டில் முழுமையான அமைப்பு இல்லை. இதன் காரணமாக, காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் முன்கூட்டியே திட்டமிடப்படுவதற்குப் பதிலாக அவை பெரும் சேதத்திற்குப் பிறகு நிகழ்கின்றன.


காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் அபாயங்கள்


காலநிலை மாற்றம் (climate change) தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் மிகவும் கடுமையானதாகி வருகிறது. காலநிலை தொடர்பான அபாயங்களில் (Climate-Related Risks (CPR)) வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல், பருவமழை தன்மைகள் மாற்றுவது மற்றும் நீண்ட வறட்சி போன்ற நீண்டகால சிக்கல்களும் அடங்கும்.


முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் (early warning systems) மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் (weather forecasts) பேரிடர்களிலிருந்து உடனடி சேதத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், காலநிலை தொடர்பான அபாயங்களுக்கு (CPR) ஒரு நீண்ட கால திட்டம் தேவை. காலநிலை கணிப்புகள் நீண்ட கால போக்குகளைப் பார்க்கின்றன. இது கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கால காலநிலை ஆபத்துகளுக்குத் தயாராக உதவுகிறது.


உலகளாவிய காலநிலை நடவடிக்கை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, தடுப்பு (prevention) மற்றும் பாதுகாப்பு (cure) ஆகும். தடுப்பு என்பது தணிப்பு (mitigation) என்று அழைக்கப்படுகிறது. அதாவது உமிழ்வைக் குறைப்பது. பாதுகாப்பு என்பது தகவமைப்பு (adaptation) என்று அழைக்கப்படுகிறது, அதாவது தவிர்க்க முடியாத தாக்கங்களுக்குத் தயாராகுதல். உலகளாவிய தெற்கிற்கு (Global South) ஒரு காலத்தில் தகவமைப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, ​​உலகளாவிய வடக்கு காட்டுத்தீ, வெப்ப அலைகள் மற்றும் சூறாவளிகள் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறது. இது எல்லா இடங்களிலும் தகவமைப்பு தேவை (adaptation is needed everywhere) என்பதைக் காட்டுகிறது.


இருப்பினும், பெரும்பாலான நிதியுதவி தணிப்புக்குக் கொண்டுசெல்கிறது. வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்ற தகவமைப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உமிழ்வைக் குறைப்பதற்கு அதிக பணம் செலவிடப்படுகிறது. தகவமைப்புக்கு முதலீடு செய்வது உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் அதை நல்ல பொருளாதார ரீதியாகவும் அர்த்தமானதாகிறது. சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப செலவழிக்கும் ஒவ்வொரு $1க்கும், நமக்கு  $4 திரும்பக் கிடைக்கிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (The UN Environment Programme) கூறுகிறது. இது நாம் குறைவான பணத்தை இழப்பதாலும், பேரிடர்களைச் சரிசெய்வதற்கு குறைவாகச் செலவிடுவதாலும் நிகழ்கிறது.


காலநிலை தொடர்பான அபாயங்கள் (CPR) தீவிர வானிலை நிகழ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. இந்த நிகழ்வுகளுக்கு சமூகங்கள், வணிகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு எவ்வளவு வெளிப்படும் மற்றும் பாதிக்கப்படக்கூடியவை என்பதையும் அவை உள்ளடக்குகின்றன. CPR-ஐப் புரிந்துகொள்வதற்கான தெளிவான வழியை காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு வழங்குகிறது. CPR-இன் எதிர்பார்க்கப்படும் மதிப்பு மூன்று விஷயங்களைப் பொறுத்தது என்று அது கூறுகிறது. அவை ஆபத்து (hazard), வெளிப்பாடு (exposure) மற்றும் பாதிப்பு (vulnerability) ஆகும்.


வெள்ளம், சூறாவளிகள் மற்றும் வெப்ப அலைகள் போன்ற நிகழ்வுகள் ஆபத்துகளை (hazard) ஏற்படுத்தக்கூடியது. வெளிப்பாடு (exposure) என்பது இந்த ஆபத்துகளிலிருந்து யார் அல்லது என்ன ஆபத்தில் உள்ளனர் என்பதைக் குறிக்கிறது. பாதிப்பு (vulnerability) என்பது ஒரு அமைப்பு எவ்வளவு சிறப்பாகக் கையாள முடியும் மற்றும் சேதத்திலிருந்து மீள முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, ஆபத்து, வெளிப்பாடு மற்றும் பாதிப்பு ஆகியவை காலநிலை ஆபத்தின் உண்மையான அளவைக் காட்டுகின்றன.


நிதி நிலைத்தன்மையைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை நிறுவனங்கள் தன்னார்வ காலநிலை ஆபத்து வெளிப்படுத்தல்களிலிருந்து கட்டாய அறிக்கையிடலுக்கு நகர்கின்றன. இந்தியாவில், இந்திய ரிசர்வ் வங்கி அதன் விதிகளில் காலநிலை அபாயங்களைச் சேர்க்கிறது. CPR தகவல்களைப் பகிர்வதற்கான உலகளாவிய தரநிலைகளை IFRS ISSB S2 உருவாக்குகிறது. இவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்லாமல், வணிகங்களை நடத்துவதற்கும் இந்த அபாயங்களைப் புரிந்துகொள்வது இப்போது அவசியம் என்பதை இது காட்டுகிறது.


அவசரத் தேவை இருந்தபோதிலும், CPR மதிப்பீடுகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை நன்கு ஒருங்கிணைக்கப்படவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் தேசிய கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்த கட்டமைப்புகள் கொள்கை மற்றும் நிதி முடிவுகளை நேரடியாக வழிநடத்துகின்றன. இந்தியாவில், இந்த முயற்சிகள் பல அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் குழுக்களிடையே பரவியுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன மற்றும் வெவ்வேறு அபாயங்களில் கவனம் செலுத்துகின்றன.


IIT காந்திநகரின் வெள்ளம் வரைபடங்கள் (flood maps), இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department) பாதிப்பு புவி வரைபடங்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (National Institute of Disaster Management) பேரிடர் திட்டங்கள் போன்ற சில முக்கியமான ஆய்வுகள் இந்தியாவிடம் உள்ளன. இருப்பினும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் இணைக்கும் ஒற்றை அமைப்பு எதுவும் இல்லை.


நம்பகமான CPR கணிப்புகள் உலகளாவிய காலநிலை மாதிரிகளாலும் வரையறுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகளில் பிரதிநிதித்துவ செறிவு பாதைகள் (Representative Concentration Pathways) மற்றும் பகிரப்பட்ட சமூக பொருளாதார பாதைகள் (Shared Socioeconomic Pathways) ஆகியவை அடங்கும். இந்த மாதிரிகள் இந்தியாவின் உள்ளூர் காலநிலை நிலைமைகளை நன்கு பிரதிபலிக்கவில்லை.


தரப்படுத்தப்பட்ட காலநிலை ஆபத்து தரவுகளுக்கான மையக் களஞ்சியம் இல்லாமல், வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க போராடுகின்றன.



இடைவெளிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


காலநிலை இடர்களைக் கையாள்வதில் இந்தியா சில இடைவெளிகளைக் கவனித்துள்ளது. இதன் காரணமாக, அதன் தேசிய தகவமைப்புத் திட்டத்தில் (National Adaptation Plan (NAP)) காலநிலை அபாயங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இது பாரிஸ் ஒப்பந்தத்தின் 7வது பிரிவை பின்பற்றுகிறது. இந்தக் விதி அனைத்து நாடுகளும் 2025-ம் ஆண்டுக்குள் தேசிய தகவமைப்புத் திட்டங்களை (NAP) உருவாக்கி 2030-ம் ஆண்டுக்குள் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று கோருகிறது. இதற்கு உதவ, இந்தியா ஒரு தகவமைப்புத் தொடர்பை உருவாக்கி 2023-ல் அதன் முதல் அறிக்கையை அனுப்பியது. இன்னும் விரிவான NAP அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை ஒன்பது முக்கிய துறைகளை உள்ளடக்கியது மற்றும் மாவட்ட அளவில் தகவல்களை உள்ளடக்கும்.


இது ஒரு நல்ல தொடக்கமாகும். ஆனால், இந்தியா இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். இது ஒரு CPR மதிப்பீட்டு கருவியை உருவாக்க வேண்டும். இந்தக் கருவி பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும். பொதுத்துறையைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தைக் கையாளக்கூடிய கொள்கைகளை வடிவமைக்கவும், உள்கட்டமைப்பைத் திட்டமிடவும், வளங்களை திறம்படப் பயன்படுத்தவும் இது உதவும். தனியார் துறையைப் பொறுத்தவரை, இது அவர்களின் விநியோகச் சங்கிலிகளில் உள்ள அபாயங்களைச் சரிபார்க்கவும், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியைத் திட்டமிடவும், முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்.


எனவே, இந்தியாவிற்கு அதன் சொந்தத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு கருவி தேவை. இந்தக் கருவி உள்ளூர் காலநிலை மாதிரிகள், விரிவான இடர் மதிப்பீடுகள், காலநிலை இடர் தரவுகளுக்கான மைய இடம் மற்றும் தெளிவான, அறிவியல் அடிப்படையிலான முறைகளை இணைக்க வேண்டும். காலப்போக்கில் கருத்துகளைப் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் இது வழிகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியா ஒரு வளர்ந்த இந்தியாவாக (விக்சித் பாரத்) மாறுவதற்கு பாடுபடுகையில், வலுவான காலநிலை இடர் மதிப்பீடுகள் முன்னேற்றம் வேகமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்.


Original article:
Share: