மாநில அளவில் அதிகாரப் பரவலாக்கத்தின் தோல்விகள் -ஆதித்ய சின்ஹா

 சரியான நேரத்தில் தேர்தல்கள் மற்றும் மாநில நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட போதிலும், மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகள் இன்னும் நிதிப் பிரச்சினைகளுடன் போராடுகின்றன.


அதிகாரப் பரவலாக்கம் (decentralization), முழுமையடையாதபோது, ​​அது ஒரு ஆழமான முரண்பாட்டை உருவாக்குகிறது. இது சுயாட்சியின் மாயையைத் தருகிறது. ஆனால், உண்மையான அதிகாரத்தை வழங்கவில்லை.  உண்மையான பரவலாக்கம் (True decentralisation) என்பது பணிகளை மறுபகிர்வு செய்வதற்கு அப்பாற்பட்டது. இதற்கு அதிகாரத்தின் முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இது பொறுப்பின் தெளிவான விநியோகத்தையும் கோருகிறது. கூடுதலாக, அது நிர்வாகத்தில் சட்டபூர்வமான தன்மையை உறுதி செய்ய வேண்டும்.


ஒரு அமைப்பு அரசாங்கத்தின் கீழ் அடுக்குகளுக்கு அதிகாரம் அளிப்பதாகக் கூறுகிறது. இருப்பினும், அது அவர்களுக்குச் செயல்படுவதற்கான வழிமுறைகளை மறுக்கிறது. இது ஒரு காஃப்கேசிய கட்டமைப்பை (Kafkaesque structure) உருவாக்குகிறது. இந்த கட்டமைப்பில், பொறுப்பு வெவ்வேறு நிலைகளில் பரவியுள்ளது. இருப்பினும், கட்டுப்பாடு மேலே குவிந்துள்ளது.


இந்தியா ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. 73வது மற்றும் 74வது அரசியலமைப்புத் திருத்தங்கள் உள்ளூர் நிர்வாகத்தின் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் நிதி வளங்களையும், அதிகாரத்துவத்தையும் இறுக்கமாகக் கட்டுப்படுத்துகின்றன. பஞ்சாயத்துகளும் நகராட்சிகளும் (நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்-ULBs) திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பானவையாகச் செயல்படுகிறது. ஆனால், நிதி சுதந்திரம் அல்லது நிர்வாக அதிகாரம் இல்லாமல், அவை தாங்களாகவே செயல்படுவதற்குப் பதிலாக அரசாங்கத்தைச் சார்ந்தே உள்ளன.


மாநில அரசாங்கங்களில் கூட, அதிகாரம் பெரும்பாலும் நிறுவனங்களிடையே பரவலாக்கப்படுகிறது. இருப்பினும், இது பொதுவாக அரசியல் மற்றும் அதிகாரத்துவ உயரடுக்கால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த முழுமையற்ற செயல்முறை திறமையின்மையை விட அதிகமாக ஏற்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் காலப்போக்கில் மாற்றியமைக்கும் ஒரு நிர்வாகக் கருத்தை இது பலவீனப்படுத்துகிறது. உண்மையான பரவலாக்கம் என்பது அதிகாரத்தை மாற்றுவது மட்டுமல்ல. இது அதிகாரத்தை மறுபரிசீலனை செய்வதையும் உள்ளடக்கியது. அதிகாரம் சாதாரணமாக மரபுவழி உரிமையாகக் கடத்தப்படாமல், சட்டபூர்வமான தன்மை, திறன் மற்றும் உண்மையான சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


அரசியலமைப்பின் 11வது மற்றும் 12வது அட்டவணைகள் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கின்றன. இருப்பினும், அவை காலாவதியானவை மற்றும் இந்தியாவின் மாறிவரும் நிர்வாகத் தேவைகளுடன் பொருந்தவில்லை.


இதில் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (Rural Local Bodies (RLB)) கழிவுநீர் மேலாண்மையில் கட்டுப்பாடு வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, அவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளுக்கு சரியான கழிவுநீர் அமைப்பு இல்லை. நகர்ப்புறங்களைப் போல செயல்படும் ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக கிராமப்புறமாக வகைப்படுத்தப்படும் இடங்களில் இந்தப் பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது.


இந்தப் பகுதிகள் இன்னும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளால் (RLB) நிர்வகிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, முக்கியமான நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் சரியான நிர்வாகத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்த சேவைகளை வழங்குவதற்கு எந்த குறிப்பிட்ட அமைப்பும் பொறுப்பல்ல. இதன் விளைவாக, மாவட்ட நிர்வாகம் இந்த சேவைகளுக்கான பொறுப்பை முறைசாரா முறையில் ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருள் அடிப்படை உள்கட்டமைப்பை அணுகுவது முறையான அமைப்பை விட அதிகாரிகளின் முடிவுகளைப் பொறுத்தது. தெளிவான அதிகாரம் இல்லாதது சேவை வழங்கலை பலவீனப்படுத்துகிறது. குடியிருப்பாளர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பை விட தற்காலிக நிர்வாகத் தேர்வுகளை நம்பியுள்ளனர்.


சமீபத்திய முன்னேற்றம்


மேலும், ஒவ்வொரு மாநிலமும் பஞ்சாயத்துகளின் நிதி நிலையை மதிப்பாய்வு செய்யவும், மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து வரிகள் (taxes), தீர்வை வரிகள் (duties), சுங்கங்கள் (tolls), கட்டணங்கள் (fees) மற்றும் மானியங்கள் (grants) ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் ஒவ்வொரு மாநிலமும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதிக் குழுவை (State Finance Commission (SFC)) அமைக்க வேண்டும் என்று அரசியலமைப்புப் பிரிவு 243 (I) கட்டளையிடுகிறது.


அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் (Constitutional Amendment Act (CAA)) இணக்கச் சட்டங்கள் ஆணையத்தின் கட்டமைப்பை வரையறுக்கின்றன. அவை, அதன் உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையையும் குறிப்பிடுகின்றன. பின்னர், ஆணையத்தின் பரிந்துரைகள் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன.


பகுதி IX சேர்க்கப்பட்டதிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கானச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பஞ்சாயத்து தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. மேலும், பல மாநிலங்கள் பல மாநில நிதிக் குழுக்களை (SFC) நிறுவியுள்ளன.


இருப்பினும், இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகள் இன்னும் நிதி வரம்புகளுடன் போராடுகின்றன. இந்த நிதி பற்றாக்குறை அவற்றின் வளர்ச்சியையும் செயல்திறனையும் கட்டுப்படுத்துகிறது. அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்குப் (CAA) பிறகு அவற்றின் கடமைகளும், பொறுப்புகளும் அதிகரித்துள்ளதால் சிக்கல் மோசமடைந்துள்ளது.


இந்த சிக்கலை நன்கு புரிந்துகொள்ள, புதிதாக வெளியிடப்பட்ட “மாநிலங்களில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரப் பகிர்வு நிலை குறியீடு-2024” ஐப் (Status of Devolution to Panchayats in States Index) படிக்க வேண்டும். இது ”பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்” (Ministry of Panchayati Raj) மற்றும் ”இந்திய பொது நிர்வாக நிறுவனம்” (Indian Institute of Public Administration) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்க்கையை, VN அலோக் எழுதியுள்ளார்.


தரவுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தற்போதைய அமைப்பில் உள்ள குறைபாடுகளையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பஞ்சாயத்து நிதிகளில் மூன்று முக்கிய சிக்கல்கள் உள்ளன.


நிதிச் சிக்கல்கள்


முதலாவதாக, குறைந்த வருவாய் உருவாக்கம் மற்றும் குறைந்தளவிலான நிதி சுதந்திரம் ஆகியவை முக்கியமான சவால்களாக உள்ளன. பஞ்சாயத்துகள் முதன்மையாக சொத்து வரியை நம்பியுள்ளன. ஆனால், மோசமான நிர்வாகம் குறைந்த வசூல் விகிதங்களுக்கு வழிவகுக்கிறது. சொந்த மூல வருவாயானது அவர்களின் மொத்த செலவினத்தில் 5-10 சதவீதத்தை மட்டுமே பங்களிக்கிறது. இதனால், அவர்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கங்களின் நிதியை பெரிதும் சார்ந்திருக்க கட்டாயப்படுத்துகிறது.


கூடுதலாக, வருவாய் வசூல் மாநிலங்கள் முழுவதும் வேறுபடுகிறது. சில பஞ்சாயத்துகள் தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு வரிகளை வசூலிக்க முடியும். மற்றவை இந்த அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை. முத்திரை வரிகள் (stamp duties) மற்றும் வாகன வரிகள் (vehicle taxes) மீதான கூடுதல் கட்டணம் போன்ற ஒதுக்கப்பட்ட வருவாயையும் மாநிலங்கள் கழிக்கின்றன. இது பஞ்சாயத்துகளின் நிதித் திறனை மேலும் கட்டுப்படுத்துகிறது.


மேலும், வரி மதிப்பீடு மற்றும் அமலாக்கத்திற்கான வலுவான அமைப்புகள் இல்லாதது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பலர் தங்கள் வரிக்கான பொறுப்புகளை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது வசூலிக்கப்படும் வரியின் அளவைக் குறைக்கிறது. உள்ளூர் அரசாங்கங்கள் (பஞ்சாயத்துக்கள்) தங்கள் சொந்த வருவாயை உயர்த்த போராடுகின்றன. இதன் விளைவாக, குடிநீர், சுகாதாரம் மற்றும் கிராமப்புற சாலைகள் போன்ற அடிப்படை சேவைகளை அவர்களால் வாங்க முடியாது. பெரிய பொருளாதார மற்றும் நலத்திட்டங்களையும் அவர்களால் ஆதரிக்க முடியவில்லை.


இரண்டாவதாக, பலவீனமான நிதிப் பகிர்வு, மானியங்களை அதிகமாகச் சார்ந்திருத்தல், மற்றும் நிதிப் பயன்பாட்டில் திறமையின்மை ஆகியவை பஞ்சாயத்துக்கான நிதியை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிப் பகிர்வை பரிந்துரைக்க வேண்டும் என்று அரசியலமைப்பு மாநில நிதிக் குழுக்களை (SFC) கட்டாயப்படுத்தினாலும், பல மாநிலங்கள் அவை உருவாக்கத்தை தாமதப்படுத்துகின்றன அல்லது அவற்றின் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறிவிடுகின்றன.


இதன் விளைவாக, மாநில அரசுகள் பெரும்பாலும் தற்காலிக மற்றும் கணிக்க முடியாத இடமாற்றங்களை வழங்குகின்றன. இது பஞ்சாயத்து நிலையில் நிதித் திட்டமிடலை சீர்குலைக்கிறது. பெரும்பாலான நிதி உதவி MGNREGA, ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் (Swachh Bharat Mission) போன்ற மத்திய நிதியுதவி திட்டங்கள் (Centrally Sponsored Schemes (CSS)) மூலம் வருகிறது. இந்தத் திட்டங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. வளங்களை ஒதுக்குவதில் பஞ்சாயத்துகளின் நெகிழ்வுத்தன்மையைக் கட்டுப்படுத்துகின்றன.


கூடுதலாக, பல மாநிலங்கள் இன்னும் தனித்தனி நிறுவனங்கள் மூலம் சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் போன்ற சேவைகளை கட்டுப்படுத்துகின்றன. இது பஞ்சாயத்துகள் இந்த வளங்களை நேரடியாக நிர்வகிப்பதைத் தடுக்கிறது. நிதி வழங்கப்பட்டாலும் கூட, அதிகாரத்துவத்தில் தாமதங்கள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் அவற்றின் பயன்பாட்டை மெதுவாக்குகின்றன. இது மோசமான சேவை விநியோகத்திற்கு வழிவகுக்கிறது.


மூன்றாவதாக, பலவீனமான நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட கடன் வாங்கும் சக்தி மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகும். பஞ்சாயத்துகள் வரிகளை சரியாக மதிப்பிடவோ அல்லது வசூலிக்கவோ முடியாததால் பணத்துடன் போராடுகின்றன. அவற்றில் திறமையான ஊழியர்கள் மற்றும் சரியான நிர்வாகம் இல்லாததால், அவற்றின் நிதி நிலைமை மோசமடைகிறது.


உள்ளூர் அதிகாரசபை கடன் சட்டம்-1914 (Local Authorities Loans Act) உள்ளூர் அரசாங்கங்களை கடன் வாங்க அனுமதிக்கிறது. இருப்பினும், பஞ்சாயத்துகள் கடன் வாங்குவதில் கடன் வாங்கும் தகுதி மற்றும் கடன் வாங்கும் அதிகாரங்கள் குறித்த தெளிவு இல்லாததால் அவை அரிதாகவே கடன் வாங்குகின்றன. நிதிகளுக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைக்கும் தெளிவான அமைப்பும் இல்லை. இது நிதியின் திறமையற்ற பயன்பாடு, ஊழல் மற்றும் பொதுச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமைக்கு வழிவகுக்கிறது.


பல மாநிலங்கள் பஞ்சாயத்துகளின் நிதித் தரவை வெளியிடுவதில்லை. இது பொதுமக்களின் ஆய்வைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் ஜனநாயக பொறுப்புணர்வை பலவீனப்படுத்துகிறது. மேலும், மாநில அரசுகள் இன்னும் உள்ளூர் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது உள்ளூர் மட்டங்களுக்கு அதிகாரம் மற்றும் வளங்களை திறம்பட மாற்றுவதை கட்டுப்படுத்துகிறது.


பிரச்சினை நிதி பற்றியது மட்டுமல்ல. அடிப்படைத் தேவைகளை எவ்வாறு வழங்குகிறோம் என்பதை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையிலான தற்போதைய பிரிவு வளர்ச்சியை மெதுவாக்குகிறது. கிராமப்புறங்களை நகர்ப்புறமாக மாற்றுவது விஷயங்களை மேம்படுத்துமா? நமது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவசியமில்லை. கேள்வி என்னவென்றால், உண்மையில் செயல்படும் ஒரு நிர்வாக மாதிரியை உருவாக்க 73வது மற்றும் 74வது திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டுமா?

ஆதித்ய சின்ஹா எழுத்தாளர் மற்றும் ஒரு பொதுக் கொள்கை நிபுணர் ஆவார்.



Original article:

Share:

புதிய வருமான வரி சட்டம் ஒரு துணிச்சலான சீர்திருத்தம் -சஞ்சய் நாயர்

 புதிய வருமான வரி மசோதா (2025), ஐந்து முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது. அரசாங்கம் இவற்றை "5Cகள்" என்று அழைக்கிறது. அவை ஒருங்கிணைப்பு (consolidation), தெளிவு (clarity), தொடர்ச்சி (continuity), உறுதிப்பாடு (certainty) மற்றும் சரியான தன்மை (correctness) ஆகியவை ஆகும்.


புதிய வருமான வரி மசோதா (2025), இந்தியாவின் மிகவும் சிக்கலான சட்டங்களில் ஒன்றை எளிமைப்படுத்துவதற்கான ஒரு லட்சிய மற்றும் தனித்துவமான முயற்சியாகும். வரி முறையை சீர்திருத்த இந்திய அரசாங்கம் கடுமையான முயற்சியை (Herculean) மேற்கொண்டது. இந்தப் பணி மிகவும் சவாலானது. இது பல ஆண்டுகால வரிச் சட்டங்கள் கவனமாகவும் விரிவாகவும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் மற்றும் உட்பிரிவும் முழுமையாக ஆராயப்பட்டது. அமைப்பை மிகவும் திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீனமாகவும் மாற்றுவதற்கான வலுவான உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. இந்த முயற்சி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறையின் பிற துறைகளிலும் இதேபோன்ற துணிச்சலான சீர்திருத்தங்களை இது ஊக்குவிக்க வேண்டும்.


60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய வருமான வரிச் சட்டம் பல திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கு உட்பட்டது. இது வரி செலுத்துவோர் மற்றும் நிர்வாகிகள் இருவருக்கும் ஒரு சிக்கலான ஆவணமாக மாற்றியது. அதன் தொடக்கத்திலிருந்து, இந்தச் சட்டம் கிட்டத்தட்ட 65 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 4,000 க்கும் மேற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது.


இதன் விளைவாக, இந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வதும் பின்பற்றுவதும் கடினமாகிவிட்டது. அதில் தேவையற்ற விதிகள் இருந்தன மற்றும் சிக்கலான மொழி பயன்படுத்தப்பட்டது. இணக்கத்தை மிகவும் சவாலானதாக மாற்றும் பல குறுக்கு இணைப்புகளும் இருந்தன.


சட்டத்தைத் திருத்துவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது என்பதை அரசாங்கம் உணர்ந்தது. அதற்கு பதிலாக, அதற்கு முழுமையான மறுசீரமைப்பு தேவைப்பட்டது. நவீன பொருளாதார நிலைமைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றுவதே குறிக்கோளாக இருந்தது.


 புதிய வருமான வரி மசோதா, 2025, ஐந்து முக்கிய இலக்குகளில் கவனம் செலுத்துகிறது. அவை, ஒருங்கிணைப்பு (consolidation), தெளிவு (clarity), தொடர்ச்சி (continuity), உறுதிப்பாடு (certainty) மற்றும் சரியான தன்மை (correctness) ஆகியவை ஆகும்.


இந்தச் சட்டச் சீர்திருத்தம் சாதாரணமான நடவடிக்கை அல்ல. ஆறு மாத காலப்பகுதியில், நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes (CBDT)) மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs (CBITC)) ஆகியவற்றின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒரு ஒத்திசைவான, நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பயனுள்ள வரிக் குறியீட்டை உருவாக்க அயராது உழைத்தனர். இந்த முயற்சியின் அளவு தீவிரமான சீர்திருத்தங்களைச் சிந்திக்கும் எந்தவொரு அரசாங்கத் துறைக்கும் தடையை எழுப்புகிறது. வரிவிதிப்பில் இத்தகைய பெரிய சட்ட திருத்தம் செய்யப்படுமானால், தொழிலாளர் சட்டங்கள், பெருநிறுவன விதிமுறைகள் அல்லது சுற்றுச்சூழல் கொள்கைகள் போன்ற நிர்வாகத்தின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற தெளிவு மற்றும் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.


புதிய மசோதாவின் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று சிக்கலான தன்மையைக் குறைப்பதாகும். மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை 5.12 லட்சத்தில் இருந்து 2.6 லட்சம் வார்த்தைகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாயங்கள் 47ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரிவுகளின் எண்ணிக்கை 819ல் இருந்து 536 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அட்டவணைகள் மற்றும் விதிமுறைகளின் அறிமுகம் விதிகளின் கட்டமைக்கப்பட்ட, தெளிவான விளக்கத்தை வழங்குகிறது. வரியானது இணக்கத்தை எளிதாக்குகிறது. மேம்படுத்தப்பட்ட தெளிவானது வரி இணக்கத்தை அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக வருவாய் வசூலை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மசோதா பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. இது "மதிப்பீட்டு ஆண்டு" (assessment year) மற்றும் "முந்தைய ஆண்டு" (previous year) என்ற காலாவதியான சொற்களை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட "வரி ஆண்டு" (tax year) என்ற வார்த்தையுடன் மாற்றுகிறது. இந்த மாற்றம் இந்தியாவின் வரி முறையை சர்வதேச தரங்களுடன் சீரமைக்கிறது. இது குழப்பத்தைக் குறைத்து இணக்கத்தை எளிதாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும். மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளைத் தொடங்க தேவையான தகவல்களின் வரையறையையும் இந்த மசோதா விரிவுபடுத்துகிறது. இது வரி நிர்வாகத்தில் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த மசோதா வரி இணக்கத்திற்கான எளிமைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குகிறது. அதாவது, இதில் தாக்கல் செய்தல், கண்காணித்தல் மற்றும் பணம் செலுத்துதல்களை எளிதாக்க இணையவழி தளங்களைப் பயன்படுத்துவதை இது ஊக்குவிக்கிறது.


மேலும், வரி-மீட்பு வழிமுறைகள் (Tax-recovery mechanisms) மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையானதாக மாற்றப்பட்டு, அதிகாரத்துவ திறமையின்மையைக் குறைக்கிறது. திருத்தப்பட்ட வருமானத்தின் மீதான வரிக்கான அரசியலமைப்புப் பிரிவு 267 இன் கீழ் விதிகளையும் மசோதா அறிமுகப்படுத்துகிறது. இது, வரி செலுத்துவோர் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ளாமல் தாக்கல் செய்வதில் உள்ள பிழைகளை சரிசெய்ய அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கை தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் அதிக வரி செலுத்துவோர் நட்புரீதியான முறையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டிஜிட்டல் நிதிக்கான விதிகளை அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அரசியலமைப்புப் பிரிவு 2(111) இன் கீழ் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் (virtual digital assets (VDA)) வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சிகள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன. இந்த மாற்றம் புதிய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வலுவான வரிவிதிப்பு முறையை உருவாக்க உதவுகிறது.


இதேபோல், மூலங்களில் வரி கழித்தல் (tax deducted at source (TDS)) விதிகளை எளிமைப்படுத்துவது வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் இணங்குவதை எளிதாக்குகிறது. இந்த விதிகள் இப்போது ஒரே பிரிவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பூஜ்யம் அல்லது குறைந்த TDS மற்றும் மூலத்தில் வரி வசூலிக்கப்பட்ட (TCS) சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதியையும் இந்த மசோதா விரிவுபடுத்துகிறது. இது அனைத்து வகையான பணம் வழங்கல்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். இது வரி செலுத்துவோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.


சர்வதேச வரிவிதிப்பு கண்ணோட்டத்தில், புதிய மசோதா, வரி ஒப்பந்தங்களில் முன்னர் தெளிவாக வரையறுக்கப்படாத விதிமுறைகளை தெளிவுபடுத்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை மேலும் கணிக்கக்கூடியதாக மாற்றும் மற்றும் குழப்பத்தைக் குறைக்கும். தொடர்புடைய நிறுவனங்களின் (associated enterprises (AE)) வரையறையில் செய்யப்பட்ட மாற்றங்களும் முக்கியமானவை. அவை நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்துகின்றன. இது பரிமாற்ற விலை நிர்ணய விதிகளைப் (transfer pricing regulations) பாதிக்கலாம் மற்றும் கடந்த கால நீதிமன்றத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.


இந்த மசோதா வெறும் சட்டமன்ற புதுப்பிப்பு மட்டுமல்ல. இது ஒரு நோக்க அறிக்கை ஆகும். இது இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இதை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், பயனர் நட்புறவாகவும் மாற்றுவதே இதன் நோக்கம். இந்த சீர்திருத்தம் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். 


சஞ்சய் நாயர் அசோசாமின் தலைவர் ஆவர்.



Original article:

Share:

தொகுதி மறுவரையறை குழப்பம் -ப சிதம்பரம்

 தென் மாநிலங்களிlல் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதியானது வெற்று வாக்குறுதியாகும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படாது என்ற வாக்குறுதி எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.


1977-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 42 வது திருத்தத்திலிருந்து தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மாநிலங்களுக்கு ஒரு கவலையாக இருந்து வருகிறது. இது அரசியலமைப்பின் 81 மற்றும் 82 வது அரசியலமைப்பு பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகள் "ஒரு குடிமகன், ஒரு வாக்கு" (one citizen, one vote) என்ற கொள்கையை தெளிவாகக் கூறுகின்றன.


பிரிவு 81 மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. மாநிலங்களில் இருந்து 530 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் (UT) 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படகூடாது. தற்போது, ​​மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 13 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


துணைப்பிரிவு (2)(a): “ஒவ்வொரு மாநிலமும் மக்கள்தொகையின் அடிப்படையில் பல இடங்களைப் பெறும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடங்களின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகையைப் பொறுத்து இருக்கும். இடங்களுக்கும் மக்கள்தொகைக்கும் உள்ள விகிதம் முடிந்தவரை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்” ஆகும்.


இருப்பினும், 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை, மாநிலங்களின் மக்கள் தொகை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கணக்கிடப்படும்.


பிரிவு 81 இன் படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை மீண்டும் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த செயல்முறை 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டது.


 எனவே, பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 1971-ம் ஆண்டில் 'ஒரு குடிமகன் ஒரு வாக்கு' (one citizen, one vote) கொள்கையை மீறியதால் முடக்கப்பட்டது.

ஜனநாயகம் & கூட்டாட்சி 


‘ஒரு குடிமகன், ஒரு வாக்கு’ (‘one citizen, one vote’) என்ற கொள்கை ஜனநாயகத்தின் அடிப்படை விதி. இருப்பினும், 1776 ஆம் ஆண்டில், இந்தக் கொள்கை கூட்டாட்சி என்ற கருத்துடன் முரண்படுகிறது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்தனர். கடந்த 250 ஆண்டுகளாக தங்களுக்குப் பயன்படும் ஒரு தீர்வை அவர்கள் கண்டறிந்தனர்.


அமெரிக்காவில், பிரதிநிதிகள் சபையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை அவ்வப்போது மீண்டும் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், செனட்டில், மக்கள்தொகை அளவைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 உறுப்பினர்களுடன் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.


அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் ஒரு ஜனநாயகம் மற்றும் கூட்டமைப்பு ஆகும். 1971 ஆம் ஆண்டில், மக்கள்தொகை அளவை அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவத்தின் சிக்கலை இந்தியா உணர்ந்தது. இருப்பினும், ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, இந்தியா 2026 வரை இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை ஒத்திவைத்தது.


கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட இருந்தது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.


2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது தொகுதி மறுவரையறைக்கு வழிவகுக்கும். இதன் பொருள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை மீண்டும் தீர்மானிக்க வேண்டும். விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட சில மாநிலங்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படும். மறுபுறம், 2.0 அல்லது அதற்கும் குறைவான மொத்த கருவுறுதல் விகிதத்தை (total fertility rate (TFR)) அடைந்த மாநிலங்கள் இடங்களை இழக்கும்.


இது பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். 'ஒரு குடிமகன், ஒரு வாக்கு' என்ற கொள்கை பாதிக்கப்படும்.


குறைத்தல் & அதிகரித்தல்


மக்களவையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை தற்போது 530+13 ஆக முடக்கப்பட்டுள்ளது. பிரிவு 81 மற்றும் 82 இன் படி தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தொகுதி மறு நிர்ணயம் செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் பாதகமாக இருக்கும். இந்த மாநிலங்களில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை அடங்கும்.


தற்போது, ​​இந்த மாநிலங்கள் வைத்திருக்கும் மொத்த இடங்களின் எண்ணிக்கை 129 ஆகும். இருப்பினும், தொகுதி மறு நிர்ணயம் நடந்தால், அவற்றின் இடங்கள் 103 ஆகக் குறையக்கூடும். இது இந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை கணிசமாக இழக்கச் செய்யும்.


ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க மக்கள்தொகை விகிதாச்சாரக் கொள்கை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கொள்கையைப் பயன்படுத்துவது தென் மாநிலங்களை எதிர்மறையாக பாதிக்கும். ஏனெனில், இந்த மாநிலங்கள் தங்கள் கருவுறுதல் விகிதத்தை வெற்றிகரமாகக் குறைத்து மற்றும் மக்கள்தொகையை உறுதிப்படுத்தியுள்ளன. மக்கள்தொகை கட்டுப்பாட்டை அடைவது 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தேசிய இலக்காக இருந்தது. தற்போது, இன்னும் தொடர்கிறது.


தற்போது, ​​தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் உள்ள 543 இடங்களில் 129 இடங்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஏற்கனவே போதுமானதாக இல்லை என்று கருதப்படுகிறது. அவர்களின் பிரதிநிதித்துவம் 543 இடங்களில் 103 ஆகக் குறைக்கப்பட்டால், அவர்களின் குரல் இன்னும் பலவீனமடையும்.


தென் மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வலுவான வாக்குறுதி அல்ல. இருப்பினும், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என்ற வாக்குறுதி எதுவும் இல்லை.


தெற்கு மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் இருப்பதையும், மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கான இடங்களை அதிகரிப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய விரும்பினால், மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்த செயல்முறை இடங்களின் மறுவரையறை என்று அழைக்கப்படுகிறது.


இந்த சாத்தியமான அதிகரிப்புக்குத் தயாராவதற்கு, மக்களவையின் புதிய அறை 888 உறுப்பினர்களை அமர வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​மக்களவையில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அரசாங்கம் மக்களவையில் இடங்களை 888 ஆக அதிகரித்தால், தென் மாநிலங்கள் தங்கள் விகிதாசார குரலை இழக்கும்.


தற்போது, ​​தென் மாநிலங்களில் 543 இடங்களில் 129 இடங்கள் உள்ளன.  இது மொத்த இடங்களில் 23.76% ஆகும். இருப்பினும், இடங்கள் 888 ஆக அதிகரித்தாலும், தென் மாநிலங்களுக்கு இன்னும் 129 இடங்கள் இருக்கும். இதன் பொருள் அவற்றின் இடப் பங்கு 14.53% ஆகக் குறையும்.


சுருக்கமாக, தென் மாநிலங்களுக்கான இடங்களைக் குறைக்க மாட்டோம் என்ற வாக்குறுதி தவறாக வழிநடத்துகிறது. ஏனென்றால், மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கான இடங்களின் அதிகரிப்பு, மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை தானாகவே குறைக்கும்.


எப்படியிருந்தாலும், ‘ஒரு குடிமகன், ஒரு வாக்கு’ (one citizen, one vote) என்ற கொள்கையை கடைப்பிடிப்பதற்காக கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம். கருவுறுதல் விகிதத்தைக் குறைப்பதற்கும், மக்கள்தொகையை நிலைப்படுத்துவதற்கும் செலுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விலையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதங்கள் (ஆதாரம் : NHFS-5) இதை சிறப்பாக விளக்க உதவும்.



குறைப்பு 

அதிகம்

              ஆந்திரா                  1.70  

பீகார்                              3.0

கர்நாடகம்     1.70  

உத்திரப்பிரதேசம்    2.35

கேரளா       1.80 

மத்திய பிரதேசம்      2.0

தமிழ்நாடு         1.80 

இராஜஸ்தான்              2.0

                தெலுங்கானா       1.82




தோல்வியடைந்தவர்கள் மற்றும் ஆதாயமடைபவர்கள்


மக்களவையில், குறைந்த மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) உள்ள மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும். மறுபுறம், அதிக கருவுறுதல் விகிதம் உள்ள மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தைப் பெறும். ராஜ்யசபாவில், உறுப்பினர் எண்ணிக்கை ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு ஆதரவாக சாய்ந்துள்ளது. இது அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறது.


மத்திய அரசு அரசியலமைப்பின் 81 மற்றும் 82 வது பிரிவுகளை கண்டிப்பாக பின்பற்றினால், அது மோதலை ஏற்படுத்தும். தென் மாநிலங்கள் இந்த மறு நிர்ணயத்தை கடுமையாக எதிர்க்கின்றன. குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவதை அவர்கள் விரும்பவில்லை.


இந்த நிலைமை ஒரு தவிர்க்க முடியாத சக்தி ஒரு அசையாத பொருளை சந்திப்பது போன்றது. தீர்க்கப்படாவிட்டால், அது கடுமையான முரண்பாடு மற்றும் பேரழிவிற்கு வழிவகுக்கும். உண்மையான கேள்வி என்னவென்றால் ஒரு இணக்கமான தீர்வைத் தேட நமக்கு ஞானம் இருக்கிறதா? என்பது தான்.



Original article:

Share:

சர்க்கரை மற்றும் கோதுமை ஏன் இப்போது முக்கிய உணவுப் பணவீக்க சிக்கல்களாக உள்ளன? -ஹரிஷ் தாமோதரன்

 நிலையற்ற இருப்பு நிலைகள் மற்றும் நிச்சயமற்ற உற்பத்தி தன்மைகள் சர்க்கரை மற்றும் கோதுமை போன்ற இரண்டு பொருட்களுக்கும் பணவீக்கக் குறைப்பின் இறுதி கட்டத்தை கடினமாக்கியுள்ளன.


தற்போது, ​​ராபி (குளிர்கால-வசந்த) பயிர் இன்னும் வயலில் இருக்கும் நேரம் இது. குறிப்பாக, கோதுமை இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. இதன் காரணமாக, மகசூல் குறித்து முழுமையாக உறுதியாகச் சொல்ல முடியாத நிலை உள்ளது.


உற்பத்தி கவலைகள் கோதுமையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சர்க்கரையைப் பொறுத்தவரை நிலைமை சமமாக மோசமாக உள்ளது. சர்க்கரையின் உற்பத்தி வாய்ப்புகள் நிச்சயமற்றவை. சர்க்கரையின் இருப்பு நிலையும் நிச்சயமற்றதாகத் தெரிகிறது. இது முக்கியமானது. ஏனெனில், இது உணவு பணவீக்கத்தை பாதிக்கலாம். இன்று, கோதுமை மற்றும் சர்க்கரை இரண்டும் நிச்சயமற்ற உற்பத்தி மற்றும் இருப்பு நிலைமைகளை எதிர்கொள்கின்றன.


கோதுமை: இருப்புக்களை நிர்வகித்தல்


கோதுமைக்கு நல்ல செய்தி என்னவென்றால், ஏப்ரல் 1 முதல் புதிய பயிர் கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்பு தொடக்க இருப்புக்கள் கிடைப்பதுதான்.


கடந்த ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி, அரசு கிடங்குகளில் 75.02 லட்சம் டன் (லிட்டர்) கோதுமை கையிருப்பில் இருந்தது. 2008-ஆம் ஆண்டு 58.03 லிட்டராக இருந்தபோது, ​​இந்த தேதியில் இதுவே மிகக் குறைவு.  இது தேவையான குறைந்தபட்ச கிடப்பு (buffer) அளவான 74.6 லிட்டரை விட சற்று அதிகமாகும்.


கையிருப்பானது 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவதற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் ஒரு முக்கிய காரணம். 2023-24 ஆம் ஆண்டில் (ஏப்ரல்-மார்ச்), இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் (Food Corporation of India's stocks) இருந்து சாதனை அளவில் 100.88 லட்சம் டன் கோதுமை விற்கப்பட்டது. இந்த கோதுமை திறந்த சந்தையில் இறக்கப்பட்டது. இந்த விற்பனையில் பெரும்பகுதி 2023 நவம்பரில் தொடங்கி தேர்தலுக்கு முன்பு நடந்தது. இதில் பாரத் அட்டா திட்டத்தின் (Bharat Atta scheme) கீழ் விற்கப்பட்ட 6.73 லட்சம் டன்களும் அடங்கும். இது ஒரு கிலோவிற்கு ரூ.27.5 மானிய விலையில் கோதுமை மாவை வழங்கியது.


அந்த நேரத்தில் நடந்த ஆக்ரோஷமான திறந்த சந்தை விற்பனை கோதுமை விலையை குறைக்க உதவியது. இருப்பினும், இது ஒரு ஆபத்தான நிலையாகும்.


2023-24 கோதுமை பயிர் முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே மோசமாக மாறியிருந்தால், அரசு நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும். இருப்பை நிரப்ப போதுமான கோதுமையை கொள்முதல் செய்ய அவர்கள் போராடியிருப்பார்கள்.  இது இருப்பு அளவை விட சற்று அதிகமாக இருந்தது.


அதிர்ஷ்டவசமாக, 2023-24 ஆம் ஆண்டில் உற்பத்தி நியாயமானதாக இருந்தது. இது அரசாங்கத்திற்கு 266 லட்சம் டன் (லிட்டர்) கோதுமையை கொள்முதல் செய்ய அனுமதித்தது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளில் கொள்முதலை விட அதிகமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு 262 டன் மற்றும் 2022 ஆம் ஆண்டு 188 டன் என்ற அளவில் இருந்தது.


இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டு கொள்முதல் முந்தைய நான்கு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 341-434 டன் வரம்பை விட இன்னும் மிகக் குறைவாகவே இருந்தது (அட்டவணையைப் பார்க்கவும்).



இந்த முறை நரேந்திர மோடி அரசு எச்சரிக்கையாக உள்ளது. 2024-25 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் திறந்த சந்தை விற்பனைத் திட்டம் (Open Market Sale Scheme (OMSS)) மற்றும் பாரத் அட்டா திட்டத்தின் கீழ் 9.59 லட்சம் டன் (lt) கோதுமையை மட்டுமே விற்பனை செய்துள்ளது. முழு நிதியாண்டிற்கும் அரசாங்கம் 30 லட்சம் டன்களுக்கு மேல் விற்கக்கூடாது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, அரசாங்க கோதுமை கையிருப்பு சுமார் 140 lt ஆக இருந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய கொள்முதல் பருவத்தின் தொடக்கத்தில், கையிருப்பு சுமார் 120 lt ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் தொடக்க இருப்பு 75 lt உடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகமாகும்.


டெல்லியில் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2,950-3,000 விலையில் மொத்தமாக விற்கப்படுகிறது. ஒரு வருடம் முன்பு, விலை குவிண்டாலுக்கு ரூ.2,400-2,450 ஆக இருந்தது.


கோதுமை விலையைக் கட்டுப்படுத்த மோடி அரசு இந்த ஆண்டு வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, அதிகப்படியான திறந்த சந்தை விற்பனை மற்றும் இருப்பு குறைப்பு மூலம் விலைகளைக் குறைக்க அரசாங்கம் முயற்சித்தது. இருப்பினும், இந்த ஆண்டு, அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை.


அதற்கு பதிலாக, விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இருப்பு வரம்புகளை விதித்துள்ளது. வர்த்தகர்கள் 250 டன்களுக்கு மேல் கோதுமையை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் 4 டன் கோதுமையை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த இருப்பு வரம்புகள் மார்ச் 31 வரை பொருந்தும்.


இது வெப்பநிலையைப் பற்றியது


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசாங்கத்திடம் அதிக இருப்பு உள்ளது. இது சிறிது நிம்மதியைத் தருகிறது மற்றும் அதே அளவில் அதிகமாக வாங்க வேண்டிய தேவையைக் குறைக்கிறது.


தற்போது, ​​திறந்த சந்தை விலைகள் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.2,425 ஐ விட அதிகமாக உள்ளன. டெல்லியில், விலைகள் குவிண்டாலுக்கு ரூ.2,950 முதல் ரூ.3,000 வரை உள்ளன. மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜைன் மற்றும் இந்தூர் மண்டிகளில் விலைகள் குவிண்டாலுக்கு ரூ.2,600 முதல் ரூ.2,650 வரை உள்ளன.


புதிய பயிர் வந்தவுடன் விலைகள் குறையக்கூடும். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில், இது மார்ச் 2 முதல் 3வது வாரம் வரை நடக்கும். மத்திய பிரதேசத்தில், இது மார்ச் 3வது வாரம் முதல் ஏப்ரல் 1வது வாரம் வரை இருக்கும். ராஜஸ்தானில், இது ஏப்ரல் தொடக்கத்தில் இருக்கும். விலைகள் எவ்வளவு குறையும் என்பது பயிரின் உற்பத்தியைப் பொறுத்தது.


மத்திய இந்தியாவில் ஒரு அபரிமிதமான பயிர் இருப்பதாக நில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை இப்படி இல்லை. குளிர்காலம் தாமதமாக வந்ததால் முந்தைய பயிரின் மகசூல் குறைவாக இருந்தது. இது பயிரின் வளர்ச்சியைப் பாதித்தது. கூடுதலாக, ஜனவரி மாதத்தில் பனிமூட்டமான வானிலை மோசமான மகரந்தச் சேர்க்கை மற்றும் விதை உருவாவதற்கு வழிவகுத்தது.


இந்த முறை பெரிய வெப்பநிலை மாற்றங்கள் அல்லது மூடுபனி/புகைமூட்டம் பிரச்சினைகள் எதுவும் இல்லை. புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural Research Institute) முதன்மை விஞ்ஞானி ராஜ்பீர் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் கோதுமை மகசூல் கடந்த ஆண்டை விட 15-20% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.


வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் கோதுமை விளைச்சல் பற்றியது முக்கிய கவலை. இந்த பிராந்தியங்களில் பயிர் தற்போது தானியங்கள் நிரப்பும் நிலையில் உள்ளது.


இந்த கட்டத்தில், மகசூல் தொடர்பாக ஒரு பொதுவான விதி உள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கூடுதல் நாளும் ஒரு ஹெக்டேருக்கு 40-50 கிலோ கோதுமை விளைச்சலை அதிகரிக்கலாம்.


அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை தாண்டாத வரை மகசூல் மேம்படும். வெப்பநிலையில் திடீர் ஏற்ற இறக்கங்களும் இருக்கக்கூடாது.


இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோதுமை தானியங்கள் ஸ்டார்ச் மற்றும் பிற ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ந்து குவிக்கும்.


தற்போது, ​​வெப்பநிலை சாதாரண வரம்பிற்குள் உள்ளது. ஏப்ரல் வரை இதே நிலை நீடித்தால், வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டைப் போலவே சிறப்பாக இருக்கும். மத்திய இந்தியாவில், இந்த முறை ஏற்கனவே மகசூல் நன்றாக உள்ளது. இது நடந்தால், சந்தைகளிலோ அல்லது அரசாங்க கிடங்குகளிலோ கோதுமைக்கு பற்றாக்குறை இருக்காது. இது கோதுமை விலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.


சர்க்கரை : இனிப்பாக இல்லை


அனைத்து வெளியீட்டு மதிப்பீடுகளும் மோசமாகிவிட்ட நிலையில், சர்க்கரையில் விஷயங்கள் அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை.


இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆரம்பத்தில் 2024-25 பருவத்திற்கான (அக்டோபர்-செப்டம்பர்) மொத்த சர்க்கரை உற்பத்தியை 333 லட்சம் டன் (லிட்டர்) என்று மதிப்பிட்டுள்ளது. பெட்ரோலுடன் கலப்பதற்காக எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 40 லிட்டர் சர்க்கரையைக் கழித்த பிறகு, நிகர உற்பத்தி 293 லிட்டராகக் குறைந்துள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டில் 319 லிட்டரிலிருந்து குறைவு.


ஆனால், அரவை பருவம் (crushing season) அதிகரித்து வருவதால், மதிப்பீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 28-ம் தேதிக்குள், நிகர உற்பத்தி 220 டன் மட்டுமே இருந்தது.  இது 2023-24 ஆம் ஆண்டில் இதே நேரத்தில் 255 டன்னாக இருந்தது. கூடுதலாக, 533 ஆலைகளில், 186 கரும்பு பற்றாக்குறை காரணமாக கரும்பு அரைப்பதை நிறுத்திவிட்டன. அதே நேரத்தில், 72 ஆலைகள் மட்டுமே கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டன.


சமீபத்திய தொழில்துறை மதிப்பீடுகள் நிகர சர்க்கரை உற்பத்தி சுமார் 265 டன்களாக இருக்கும் என்று கணித்துள்ளன. சிலர் அதை 255 டன்களாக மாற்றக் கூடும் என்று  மதிப்பிட்டுள்ளனர். 79.23 டன் திறந்த இருப்பு, 285 டன் உள்நாட்டு நுகர்வு மற்றும் 10 டன் ஏற்றுமதியுடன் (ஜனவரி 20 அன்று அரசாங்கம் அனுமதித்தது), 265 டன் உற்பத்தி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 49.23 டன் கிடைக்கும்.


சமீபத்திய தொழில்துறை மதிப்பீடுகள் நிகர சர்க்கரை உற்பத்தி 265 லட்சம் டன் (லிட்டர்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மதிப்பீடுகள் இது சுமார் 255 லிட்டராக இருக்கும் என்று கூட கணிக்கின்றன. அக்டோபர் 1 ஆம் தேதி சர்க்கரையின் தொடக்க இருப்பு 79.23 லிட்டராக இருந்தது. இந்த ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட உள்நாட்டு நுகர்வு சுமார் 285 லிட்டராகும். ஜனவரி 20 ஆம் தேதி, அரசாங்கம் 10 லிட்டராக சர்க்கரை ஏற்றுமதியை அனுமதித்தது. நிகர உற்பத்தி 265 லிட்டரை எட்டினால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சர்க்கரையின் இறுதி இருப்பு 49.23 லிட்டராக இருக்கும்.


உத்தரபிரதேசத்தில் (உ.பி.) தொழிற்சாலை சர்க்கரை விலை தற்போது கிலோவுக்கு ரூ.40.10-41.10 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில், விலைகள் கிலோவுக்கு ரூ.38-38.70 ஆக உள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த விலைகள் அதிகரித்துள்ளன. 

ஒரு வருடம் முன்பு, உத்தரபிரதேசத்தில் (உ.பி.) விலைகள் கிலோவுக்கு ரூ.37.30-38.50 ஆக இருந்தன. மகாராஷ்டிராவில், அதே நேரத்தில் விலைகள் கிலோவுக்கு ரூ.33.80-34.25 ஆக இருந்தன. விலை உயர்வு காரணமாக, சர்க்கரையின் மீது இருப்பு வரம்புகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. விலைகளைக் கட்டுப்படுத்த வரும் மாதங்களில் சர்க்கரை இறக்குமதி செய்வதையும் அரசாங்கம் எளிதாக்கலாம்.


2023-24 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெய்த மழையின் தாக்கம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மழைப்பொழிவு இந்த பகுதிகளில் பயிர் வளர்ச்சியை பாதித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் (உ.பி.) ஆதிக்கம் செலுத்தும் கரும்பு வகையான கோ-0238, சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது சிவப்பு அழுகல் நோய் மற்றும் மேல் தளிர் துளைப்பான் பூச்சி தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக மாறியுள்ளது. இந்த அதிகரித்த உணர்திறன் பயிர் விளைச்சலை மேலும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.



Original article:

Share:

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (2019) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: ஜெய்ப்பூர் II மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் மற்றும் விமல் பான் மசாலா உற்பத்தியாளர்களான ஜே.பி. இண்டஸ்ட்ரீஸ் ஆகியோருக்கு பான் மசாலா பற்றிய தவறான விளம்பரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் பேரில் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. தயாரிப்புகளில் குங்குமப்பூ கலப்பதை தவறாக விளம்பரப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். குங்குமப்பூ ஒரு கிலோ ₹4 லட்சம் விலையில் விற்கப்படுவதாகவும், குட்கா வெறும் ₹5 மட்டுமே விலையில் விற்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிக விலை காரணமாக, குங்குமப்பூவின் வாசனையை கூட தயாரிப்பில் சேர்க்க முடியாது என்று அவர் வாதிட்டார். 


• வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act), 2019-ன் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார்:


பிரிவு 35: விற்கப்படும் அல்லது டெலிவரி செய்யப்படும் எந்தவொரு பொருட்களைப் பற்றியும் புகார் அளிக்கலாம். விற்கப்படும் அல்லது டெலிவரி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட பொருட்களைப் பற்றியும் புகார் அளிக்கலாம்.


பிரிவு 89: தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரத்தை உருவாக்கும் எந்தவொரு உற்பத்தியாளரோ அல்லது சேவை வழங்குநரோ தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. விளம்பரம் நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். கூடுதலாக, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


• இந்த தயாரிப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அவர் கூறினார். இந்த உண்மை தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். இதை அறிந்திருந்தும், நிறுவனம் தவறான மற்றும் தவறான விளம்பரங்கள் மூலம் தயாரிப்பை விளம்பரப்படுத்துகிறது. இந்த விளம்பரங்கள் பொதுமக்களை பான் மசாலாவை குங்குமப்பூ என்று முத்திரை குத்தி வாங்க ஊக்குவிக்கின்றன. இந்த தவறான தகவலால், மக்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். இந்த தவறான தகவல் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.


உங்களுக்குத்  தெரியுமா?:


• 2019-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்பட்டது. பொருட்கள் அல்லது சேவைகளின் தரம் அல்லது அளவு குறித்து தவறான தகவல்களை வழங்குவது போன்ற குற்றங்களை இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. நுகர்வோரை ஏமாற்றும் தவறான விளம்பரங்களையும் இது உள்ளடக்கியது. பொருட்கள் அல்லது சேவைகள் ஆபத்தானவை அல்லது பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.


• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 2(28) எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவை தொடர்பாகவும் "தவறாக வழிநடத்தும் விளம்பரம்" என்பதை வரையறுக்கிறது: (i) ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் தவறான விளக்கத்தை அளிக்கிறது அல்லது (ii) தவறான உத்தரவாதத்தை வழங்குகிறது அல்லது அதன் தன்மை, பொருள், அளவு அல்லது தரம் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்துகிறது. அல்லது (iii) உற்பத்தியாளர், விற்பனையாளர் அல்லது சேவை வழங்குநரால் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகக் கருதப்படும் தவறான எண்ணத்தை உருவாக்குகிறது அல்லது (iv) நுகர்வோரிடமிருந்து முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைக்கிறது.


Original article:

Share: