மருத்துவ காப்பீட்டிற்கு (health insurance) 18% வரி ஏன்? - சீனிவாசன்மானஸ், ஆர் தஸ்கங்கா, நாராயண் ரத்

 மருத்துவ காப்பீட்டின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியைக் (GST) குறைப்பது சுகாதார பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கும். இது சுகாதார காப்பீட்டை மிகவும் மலிவு விலையில் மாற்றும்.


ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024-25 தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளில் 18 சதவீத ஜிஎஸ்டி பொருத்தமானது என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது. 


ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கூற்றுப்படி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தில் 18 சதவீத ஜிஎஸ்டி "வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு" போன்றது. சமூகத் தேவையாக உள்ள வணிகப் பிரிவின் வளர்ச்சிக்கு இந்த வரி தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா ​​தலைமையிலான, நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, சுகாதார காப்பீடு மீதான, குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கான, ஜி.எஸ்.டி வரியை குறைக்க பரிந்துரைத்தது. தொற்றுநோய்களின் போது, ​​இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) முன்னாள் தலைவர், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க நிதி அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார்.


ஜிஎஸ்டி குழு 13 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது. அவர்களின் பணி ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்த்து. அக்டோபர் இறுதிக்குள் ஒரு அறிக்கையை இந்த ஜிஎஸ்டி குழுவுக்கு சமர்ப்பிப்பதாகும்.


சுகாதாரக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை கணிசமாகக் குறைக்க அல்லது முழுமையாக நீக்குவதை இந்தக் கட்டுரை ஆதரிக்கிறது.


இந்தியாவில், தனிநபர் சுகாதாரக் காப்பீடு 1980-களில் உருவாகத் தொடங்கியது. இன்று, இது "2047-ஆம்ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு" (insurance for all by 2047) என்ற அரசாங்கத்தின் இலக்கை ஆதரிக்கும் நன்கு நிறுவப்பட்ட சேவையாகும்.


2017-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு, உடல்நலக் காப்பீட்டு  கட்டணங்களில் 15 சதவீத சேவை வரி இருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் மக்கள் தங்கள் உடல்நலத் தேவைகளைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுகாதாரப் பாதுகாப்பைப் பெற அவர்களை வழிநடத்தும் வரை, பலர் அதிக வரி விகிதத்தை எதிர்க்கவில்லை.


தொற்றுநோய்களின் போது சுகாதார காப்பீட்டாளர்கள் கணிசமான இழப்புகளை எதிர்கொண்டனர். சுகாதார காப்பீட்டில் அதிகரித்த கட்டணமும், 18 சதவீத ஜிஎஸ்டியும் இணைந்து மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கியது. எனவே, தொற்றுநோய் அதிக உடல்நலக் காப்பீட்டுச் செலவுகளின் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது.


மருத்துவ காப்பீட்டு பிரீமியத்திலிருந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 


ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைவருக்கும் உலகளாவிய சுகாதார காப்பீடு வழங்குகிறது. இருப்பினும், இந்த வசதிகள் பல வரம்புகளைக் கொண்டுள்ளன. அவை முக்கியமாக "பிரமிட்டின் அடிப்பகுதி" (bottom of the pyramid)  மூலம் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் இலக்கு அரசாங்க திட்டங்களிலிருந்து பயனடைகிறார்கள். "பிரமிட்டின் மேல்" (top of the pyramid) உயர் மதிப்பு கொள்கைகளை வாங்க முடியும்.  


இதற்கிடையில், நடுத்தர வர்க்கத்தினர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த குழுவில் பல்வேறு உழைக்கும் வர்க்கங்கள் முக்கியமாக, இதில் மூத்த குடிமக்கள் உள்ளனர். சில நடுத்தர வர்க்க நபர்கள், முதலாளிகளால் வழங்கப்படும் மருத்துவ வசதிகளைப் பெறுகிறார்கள். ஆனால், பலர் தாங்களாகவே நிர்வகிக்க விடப்படுகிறார்கள்.


இந்திய ஆரோக்கியம் காப்பீட்டுக் குறியீடு 2024 (ACKO India Health Insurance Index) சுகாதாரச் செலவுகள் ஆண்டுதோறும் 14 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இந்த செலவுகளில் 62 சதவிகிதம் அதிக கையுருப்புச் செலவு மீறி (out-of-pocket) செலவாகும்.


மொத்த நேரடி  கட்டண வருமானம் (Gross Direct Premium Income (GDPI)) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) 


2017-18 முதல் 2023-24 வரை, மொத்த நேரடி கட்டண  வருமானம் (GDPI) மற்றும் சுகாதாரக் கொள்கைகளிலிருந்து ஜிஎஸ்டி ஆகியவை தலா 19.27 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்வதை விளக்கப்படம் 1 காட்டுகிறது. 2020-21 இல், மொத்த நேரடி கட்டண வருமானம் (GDPI) மற்றும் GST இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. 2017-18 ஆண்டு முதல் 2023-24 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 2020-21 ஆண்டு மற்றும் 2023-24 ஆண்டுக்கு இடையில் மொத்த மொத்த நேரடி கட்டண வருமானம் (GDPI) மற்றும் ஜிஎஸ்டியில் 70 சதவீதத்திற்கும் மேல் சேகரிக்கப்பட்டது.


சுகாதார காப்பீடு ஊடுருவல் (Health insurance penetration), மொத்த உள்நாட்டு உற்பத்தியால் வகுக்கப்படும் மொத்த நேரடி கட்டண வருமானம் (GDPI) மற்றும் சுகாதார காப்பீடு அடர்த்தி, தனிநபர் ஜிடிபிஐ என அளவிடப்படுகிறது. இவை இரண்டும் 2017-18 ஆண்டு முதல் 2023-24 ஆண்டு வரை கணிசமாக அதிகரித்துள்ளன. சுகாதாரக் காப்பீடு ஊடுருவல் 0.22 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதார காப்பீடு அடர்த்தி ₹276 ரூபாயில் இருந்து ₹751 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.


2023-24 ஆம் ஆண்டில், சுகாதார காப்பீடு கொள்கைகள் ஜிஎஸ்டி மொத்த ஜிஎஸ்டியில் 2.05 சதவிகிதம் பங்களித்துள்ளது. இது 2017-18 ஆண்டில் 1.54 சதவீதம் அதிகமாகும்.






சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்க கோரிக்கை 


(i) மருத்துவக் காப்பீடு என்பது முதன்மையாக நலன் சார்ந்த திட்டமாகும். இது,  தொடர்ந்து அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டியில் ஏதேனும் குறைப்பு நிதிச் சிக்கல்களைக் குறைக்க உதவும். இது நடுத்தர குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானது.


(ii) அதிக நடுத்தர மக்கள் மருத்துவக் காப்பீடு பெறுவது பொதுக் காப்பீட்டின் பயன்பாட்டை அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த காப்பீட்டுத் தொகையையும் உயர்த்தும்.


(iii) வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 80D பிரிவின் கீழ், தனிநபர்கள் ஒவ்வொரு ஆண்டும் ₹25,000 ரூபாய் வரை உடல்நலக் காப்பீட்டு கட்டணங்களுக்கு வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் ₹50,000 வரை கோரலாம். அதிக மதிப்புள்ள காப்பீட்டுக்கான  திட்டங்களை வாங்க பலர் தயங்குகிறார்கள். ஏனென்றால், கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை கழிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, இந்த நபர்கள் காப்பீடு செய்யப்படாமல் உள்ளனர்.


(iv) இப்போதெல்லாம், வெளிப்புற காரணிகளால் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பொதுவானது. சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி மற்றொரு நிதிச் சுமையை சேர்க்கிறது.


(v) 18% ஜிஎஸ்டி விகிதத்துடன் கூடிய சேவைகளைப் பார்க்கும்போது, ​​உடல்நலக் காப்பீடு ஒரு ‘அத்தியாவசியமற்ற’ (non-essential) சேவையாகப் பார்க்கப்படுவது போல் தெரிகிறது. இந்த எண்ணம் மாற வேண்டும்.


(vi) சுகாதார காப்பீடு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட சுகாதார அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். ஜிஎஸ்டியை குறைத்து தேவையை அதிகரிப்பது இந்த அமைப்பை விரிவுபடுத்த உதவும். குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு இந்த விரிவாக்கம் முக்கியமானது.


(vii) ஜிஎஸ்டி குறைக்கப்பட்டாலும், அதிலிருந்து வரும் வருமானம் சுகாதார கட்டணத்தின் வளர்ச்சியால் ஆதரிக்கப்படும். பொருளாதார ஆய்வின்படி (2023-24), 2024 முதல் 2028 வரை ஒவ்வொரு ஆண்டும் சுகாதார கட்டணங்கள் 9.7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்குமுறை முயற்சிகள் காப்பீட்டை மிகவும் ஆர்வமாக மாற்ற உதவும்.


(viii) தற்போது, ​​சுகாதாரக் காப்பீட்டுப் பிரிவு, ஆயுள் அல்லாத துறையில் (non-life sector) அதிக மொத்த நேரடி கட்டண வருமானத்தை (GDPI) வழங்குகிறது. இது அதிக உரிமைகோரல்களைக் கொண்டுள்ளது. சில்லறை சுகாதாரக் கொள்கைகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டாலோ அல்லது அகற்றப்பட்டாலோ, அது அதிக நபர்களை ஈர்க்கக்கூடும். இருப்பினும், இது உரிமைகோரல்களின் வெளிச்செல்லும் அளவை அதிகரிக்கலாம்.


(ix) பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)) சமீபத்தில் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஒரு குடும்பத்துக்கு ₹5 லட்சம் பாதுகாப்பை வழங்குகிறது. முதியவர்கள் உட்பட முழு குடும்பத்தையும் ஈடுகட்ட ₹5 லட்சம் போதுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.  இருப்பினும், இந்த நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை குறைப்பதற்கு அல்லது ரத்து செய்வதற்கு எதிராக ஒரு காரணமாகப் பயன்படுத்தக் கூடாது.


(x) இறுதியாக, அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் வழக்கமான சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு இடையே GST மூலம் குறுக்கு மானியம் குறைந்தபட்சமாக வைக்கப்பட வேண்டும்.


சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டியை குறைப்பது / நீக்குவது அரசாங்கங்களுக்கு வருவாயைக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக, அவர்கள் விகிதங்கள் மற்றும் பொருட்களை மாற்றியமைக்க வேண்டும். மேலும், மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி விகிதங்களில் ஏதேனும் குறைப்பு, காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்களால் வருடாந்திர விகிதங்களில் உச்சவரம்புகளைக் கொண்டிருக்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) உறுதியான நடவடிக்கைகளுடன் பொருந்த வேண்டும். 


சீனிவாசன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ.யின் முன்னாள் முழு நேர உறுப்பினர். தாஸ் எஸ்பிஐ வங்கியின் முன்னாள் மூத்த பொருளாதார நிபுணர். ராத் ஒரு முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார்.  




Original article:

Share:

இந்தியா தனது கார்பன் வரவினம் (carbon credits) திறனை அடைவதற்கான வழிமுறைகள் - பி.வி.எஸ் சூரியகுமார், ராஜேஷ் குப்தா

 சமூகத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் வரவின சந்தைகளை (carbon credit markets) மறுஅளவீடு செய்வது முக்கியம். 


சமீபத்தில், சமூக ஆளுமைகளும் மற்றும் சமாரியர்களின் குழுவும் கார்பன் வரவினம் (Carbon Credits (CC)) பற்றி விவாதித்தனர். கார்பன் வரவினம் ஒரு பெரிய நிதி வாய்ப்பை பிரதிபலிக்கிறது என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், சந்தைக்கான முகவர்கள் பரிந்துரைப்பதை விட யதார்த்தம் மிகவும் சிக்கலானது. 


கார்பன் வரவினம் (Carbon Credit): 

ஒரு நிறுவனம் குறைவான அளவில் கார்பன் டைஆக்சைடை வெளியேற்ற அனுமதிப்பது ஆகும்.

1997-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கியோட்டோ நெறிமுறை, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தொடக்கத்தை அங்கீகரித்தது. வளிமண்டலத்தில் கார்பனைக் குறைக்கும் கட்டமைப்புகளையும் அறிமுகப்படுத்தியது. கார்பன் வரவினம் இந்த நிதி கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.


கார்பன் சந்தைகள் மாசுபடுத்துபவர்களுக்கு, பெரு நிறுவனங்கள் போன்ற, திட்டங்களுக்கு பணம் செலுத்த வழிகளை உருவாக்குகின்றன. கார்பன் கடன்களாக (CC) உமிழ்வை அடையாளப்படுத்துதல் செய்து வர்த்தகம் செய்வதன் மூலம் இதைச் செய்கிறார்கள். நிதி பெறும் திட்டங்களில் காடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், மீத்தேன் பிடிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் பசுமை இல்ல வாயு (Greenhouse gases (GHGs) வெளியேற்றத்தை பிடிக்க அல்லது தடுக்க உதவுகின்றன.


ஒரு உமிழ்வு திட்டத்திலிருந்து ஒரு கார்பன் குறைப்பு செய்யும் போது, ​​அது வளிமண்டலத்தில் இருந்து கார்பனைக் குறைக்கிறது. இதன் விளைவாக, உமிழ்ப்பான் ஒரு டன் பசுமை இல்ல வாயுக்களை (GHG) வெளியிடலாம். இந்த செயல்முறையானது இந்த நிறுவனங்கள் தங்களை "கார்பன் நடுநிலை" (carbon neutral) அல்லது "பசுமை" (green) என்று பதிவு செய்ய அனுமதிக்கிறது.


இரண்டு வகையான கார்பன் சந்தைகள் உள்ளன. அவை, தன்னார்வ (voluntary) மற்றும் இணக்கம் சார்ந்தவை (compliance-oriented) ஆகும். தன்னார்வ சந்தைகள் கட்டுப்பாடற்றவை மற்றும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் கார்பன் உமிழ்வை குறைக்க அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கின்றன. அவர்கள் தனியார் முதலீட்டை காலநிலை தீர்வுகளுக்கு அனுப்புவதன் மூலம் இதைச் செய்கிறார்கள். இணக்கம் சார்ந்த சந்தைகள் அரசாங்கத்தால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் தொழில்களுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துகின்றனர். உமிழ்வைக் கண்காணித்தல், கடன்களை வழங்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் ஆகியவை ஆகும்.


உலகளவில், 9,089 தன்னார்வ சந்தை திட்டங்கள் (voluntary market projects)  உள்ளன. இவற்றில் 1,636 திட்டங்கள் (18 சதவீதம்) இந்திய விநியோகர்களிடமிருந்து வந்தவை. இந்த விநியோகர்கள் இன்றுவரை 333 மில்லியன் கடன்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், இந்த சந்தைகளின் கட்டுப்பாடற்ற தன்மை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. 


பெரும்பாலும் சரிபார்க்க முடியாத உரிமைகோரல்கள், தகவல் சமச்சீரற்ற தன்மை மற்றும் நம்பகத்தன்மையற்ற நடத்துபவர்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு சதுப்புநில மறுசீரமைப்பு திட்ட (mangrove restoration project) மேம்பாட்டாளர் ஒவ்வொரு ஹெக்டருக்கும் ஆண்டுக்கு ₹15,000 செலுத்துவதாக உறுதியளித்தார். இதன்படி, "ஒரு வருடத்திற்கும் மேலாக நாங்கள் அவர்களிடம் இருந்து கேட்கவில்லை அல்லது எந்தப் பணத்தையும் பெறவில்லை" என்று ஒரு விவசாயி கூறினார்.


விவசாய பண்ணை உமிழ்வுகள் 


நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, நாட்டின் மொத்த கார்பன் உமிழ்வில் இந்திய விவசாயம் 13% பங்களிக்கிறது.  இந்தியாவில் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது இந்த கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவும். இந்த மாற்றத்தை அடிமட்ட இயக்கங்கள் மற்றும் ஒன்றிய அரசு ஆதரிக்கிறது. இயற்கை விவசாயம் உரம், நீர், எரிசக்தி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கிறது. இது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல்லுயிர் பெருக்கத்தையும் அதிகரிக்கிறது.


இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் குறைந்த இடுபொருள் செலவுகளால் பயனடைவார்கள். அவர்கள் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கலாம். அவர்கள் தங்கள் தயாரிப்புகளை "உண்மையான மற்றும் இயற்கையானவை" என்று சந்தைப்படுத்தினால் அவர்கள் சிறந்த விலையைப் பெறலாம். 


இயற்கை விவசாயத்தில் கார்பன் கடன் முறைகளை (carbon credit systems (CC)) செயல்படுத்தினால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முடியும். சில ஆய்வுகள் இந்த நன்மைகள் ஒரு ஹெக்டேருக்கு வருடத்திற்கு இரண்டு முதல் ஐந்து கார்பன் வரவுகள் என்று கூறுகின்றன. இது ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ₹1,000 முதல் ₹4,000 வரை சமமாகும்.


இந்தியாவில் நிகர விதைப்புக்கான பரப்பளவு 139 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்த பெரிய சந்தையளவு லாபகரமானதாக தோன்றுகிறது. இது புத்தொழில் நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தலின் ஆர்வத்தை விளக்குகிறது.


கார்பன் கடன்களை உருவாக்கக்கூடிய யதார்த்தமான விவசாயத் திட்டம் என்ன?


கார்பன் கடன்களை உருவாக்கக்கூடிய ஒரு யதார்த்தமான திட்டத்திற்கு சுமார் 10,000 ஹெக்டேர் விவசாய நிலம் தேவைப்படும். கார்பன் கடன்களை உருவாக்கி வழங்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதற்கான திட்ட செலவு சுமார் 4-5 கோடி ரூபாய் இருக்கும். இதில் பங்குதாரர் ஆலோசனைகள், நிலப் பதிவு சரிபார்ப்புகள், KYC சரிபார்ப்பு, ஒப்பந்த மேம்பாடு, தொழில்நுட்ப தழுவல், முறையியல் சவால்கள் மற்றும் தணிக்கைகள் ஆகியவை அடங்கும். கார்பன் தனிமைப்படுத்தப்படுவதால் இத்தகைய திட்டங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றன. கூட்டுறவுகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organizations (FPO)) அளவை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். 


2015-ஆம் ஆண்டின், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கார்பன் வரவினம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் கார்பன் தீவிரத்தை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியா தனது எரிசக்தி சேமிப்பு சட்டத்தை 2022-ஆம் ஆண்டில் திருத்தியது மற்றும் கட்டாய தொழில்களுக்கான இணக்க சந்தையை நோக்கி செயல்பட்டு வருகிறது.


 இந்த சந்தை இறுதியில் தன்னார்வ சந்தை வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். அக்டோபர் 2023-ஆம் ஆண்டில் பசுமை வரவினம் கட்டமைப்பு தன்னார்வ நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. சிறு விவசாயிகள் இயற்கை விவசாயத்தை கடைப்பிடிக்கவும், கார்பன் கடன்கலிருந்து பயனடையவும் உதவும் வகையில், வேளாண் அமைச்சகம் ஜனவரி 2024-ல் ஒரு கட்டமைப்பை வெளியிட்டது. 


சமூகத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்புகளை உருவாக்குவதன் மூலம் கார்பன் கடன் சந்தைகளை சீர்திருத்துவது முக்கியம். முழுமையான வெளிப்படைத்தன்மை, உள்ளூர் நிர்வாகம், கடுமையான சரிபார்ப்பு மற்றும் மேம்பாட்டாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களின் பொறுப்பு வகிப்பதாக இருக்க வேண்டும். 


சூர்யகுமார் நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநராகவும், குப்தா சி-ஜெம் நிறுவனராகவும் இருந்தவர்.




Original article:

Share:

புது டெல்லியில் மாலத்தீவு அதிபர் முய்சு : 'இந்தியா வெளியேறு' (India Out) பிரச்சாரத்திற்குப் பிறகு மாலத்தீவு அதிபரின் வருகையின் முக்கியத்துவம் - நேஹா பங்கா

 இந்தியா மற்றும் மாலத்தீவுகள் வரலாற்று ரீதியாக வலுவான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், முய்ஸுவின் தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிராகவே இருந்தன. இருப்பினும், மிகவும் நல்லிணக்க அணுகுமுறையை நோக்கி அவரது சமீபத்திய மாற்றத்திற்கு என்ன காரணம்?


முய்ஸு கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். அவரது தேர்தல் பிரச்சாரம் 'இந்தியா வெளியேறு' (India Out) இயக்கத்தை மையமாகக் கொண்டிருந்தது. முய்ஸு ஆட்சிக்கு வந்த உடனேயே, இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


முய்ஸுவின் இந்திய வருகை ஏன் முக்கியமானது? 


இந்தியாவும், மாலத்தீவும் எப்போதும் வலுவான உறவுகளை கொண்டுள்ளன. மேலும், மாலத்தீவுக்கு முக்கிய உதவி செய்யும் நாடாகவும் இந்தியா உள்ளது. 


எவ்வாறாயினும், முய்ஸு சீனாவுடன் நெருக்கமானவராகவும், இந்தியாவுடன் குறைந்த நட்பு கொண்டவராகவும் பார்க்கப்பட்டார். இவர் பதவியேற்ற பின்னர், முய்ஸு துருக்கி மற்றும் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணங்களை மேற்கொண்டார். அவரது சீன பயணம் இந்தியாவுக்கு வேண்டுமென்றே இராஜதந்திர அவமதிப்பாக பார்க்கப்பட்டது. ஏனெனில், முன்னாள் தலைவர்கள் வழக்கமாக இந்தியாவுக்கு தங்கள் முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டனர். இது நாடுகளின் உறவுகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. 


முய்ஸுவின் சீன பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, சில மாலத்தீவு துணை அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சமூக ஊடகங்களில் அவமதித்தபோது பதட்டங்கள் மோசமடைந்தன. லட்சத்தீவு தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நரேந்திர மோடியின் பதிவுகளை மாலத்தீவு துணை அமைச்சர்கள் கேலி செய்தனர். இது மாலத்தீவு மக்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையில் ஒரு பெரிய சமூக ஊடக மோதலைத் தூண்டியது. இது இராஜதந்திர தலையீட்டிற்கு வழிவகுத்துள்ளது. 


தனது நாட்டை "இழிவுபடுத்த யாருக்கும் உரிமம் இல்லை" என்று முய்ஸு இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தபோது உறவுகள் மேலும் மோசமடைந்தன. மாலத்தீவில் இருந்து இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெற மார்ச் 15 வரை அவர் காலக்கெடு விதித்துள்ளார். இந்திய இராணுவ வீரர்கள் மாலத்தீவு சென்று போர் மற்றும் மீட்பு பணிகளில் தங்கள் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர். இருப்பினும், இந்திய இராணுவ வீரர்களின் பரவல் குறித்து மாலத்தீவில் அச்சங்கள் வளர்ந்தன. இது 'இந்தியா வெளியேறு' பிரச்சாரத்திற்கு வழிவகுத்தது. 


இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாலத்தீவில் இருந்து சுமார் 80 இராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றது. அதன்பிறகு, முய்ஸு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மேலும் நாட்டைப் பொருட்படுத்தாமல் மாலத்தீவில் வெளிநாட்டு இராணுவம் இருப்பதை அவர் ஏற்கவில்லை என்று கூறினார்.


மாலத்தீவுடன் நல்லுறவைப் பேணுவது இந்தியாவுக்கு இராஜதந்திர ரீதியாக முக்கியமானது. சீனாவை நோக்கிய முய்ஸுவின் பார்வை இந்தியாவுக்கு கவலையை எழுப்பியது. இருப்பினும், பிரச்சாரத்தில் சொல்லாட்சி எப்போதும் கொள்கையாக மாறாது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் முய்ஸு இந்தியாவை வெளியேற்ற விரும்பவில்லை என்று அர்த்தம். 


இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எதையும் மாலத்தீவு ஒருபோதும் செய்யாது என்று முய்ஸு முன்பு கூறியிருந்தார். இந்தியா மாலத்தீவின் மதிப்புமிக்க நட்பு நாடு என்றும், எங்கள் உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றினாலும், பிராந்தியத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்று அவர் மேலும் கூறினார். 


மாலத்தீவு இப்போது பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கான தனது பயணத்திற்கு சற்று முன்பு, நிதி உதவியின் தேவை குறித்து பேசிய அவர், மாலத்தீவின் நிதி நிலைமையை இந்தியா புரிந்துகொள்வதாகவும், உதவ தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் தனது பேச்சுவார்த்தைகளின் போது முய்ஸு நாணய மாற்று ஏற்பாடு மற்றும் கடன் ஆதரவைக் கேட்பார் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 


கடந்த மாதம், உலக முகமையான மூடிஸ் (global agency Moody’s) மாலத்தீவின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. "இயல்புநிலை அபாயங்கள் பொருள் ரீதியாக உயர்ந்துள்ளன" என்று அவர்கள் கூறினர். மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 440 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் வாய்ப்பை எதிர்கொள்கிறது. இந்தத் தொகை ஒன்றரை மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானது. இதற்குப் பதிலடியாக, பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மாலத்தீவுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.


ஜனவரியில், மாலத்தீவுக்கான சுற்றுலாவை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கும், மாலத்தீவியர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜனாதிபதி முய்ஸு தனது மாநில பயணத்தின் போது, ​​தீவுக்கு அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவேற்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 குறைந்துள்ளதாக மாலத்தீவு செய்தி வெளியீடு ஆஷாதா தெரிவித்துள்ளது. இந்த சரிவால் சுமார் $150 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் பங்களிக்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியர்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளனர்.


திங்கட்கிழமை, புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அதிபர் முய்ஸுவுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இது அவரது ஐந்து நாள் இருதரப்பு பயணத்தின் ஒரு பகுதியாகும். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மேலும்,  X வலைதளத்தில் பதிவுடுகையில், ஜெய்சங்கர் பிரதமர் மோடியுடன் முய்ஸுவின் பேச்சுக்கள் "நமது நட்பு உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.




Original article:

Share:

ஜம்மு & காஷ்மீர் தேர்தல் -ரோஷினி யாதவ்

 ஜம்மு & காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் சிறப்பு என்ன? புதிய ஜம்மு & காஷ்மீர் சட்டசபைக்கு என்ன அதிகாரங்கள் இருக்கும்? 


தற்போது நடைபெற்ற ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். சட்டப்பிரிவு 370-வது சிறப்புச் சட்டம் ஜம்மு & காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளித்தது. அதன் நீக்கம் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகுத்தது. அவை, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகும்.


(1) ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாறியது. ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்துடன் யூனியன் பிரதேசமாக மாறியது. அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பட்டியலிடுகிறது. புதிய மாநிலங்களை உருவாக்குதல் மற்றும் தற்போதுள்ள மாநிலங்களின் பகுதிகள், எல்லைகள் அல்லது பெயர்களை மாற்றுவது தொடர்பான அரசியலமைப்பின் 3-வது பிரிவுக்கு மற்றொரு திருத்தம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஜம்மு & காஷ்மீரின் புதிய சட்டமன்றம் ஒரு யூனியன் பிரதேசதம் மற்றும் ஒரு சட்டமன்றத்தை கொண்டிருக்கும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.


(2) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தை வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு-239A ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் பொருந்தும் என்று 2019-ஆம் ஆண்டின் சட்டப்பிரிவு-13 கூறுகிறது. 


(3) ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றம் : ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019, ஆனது துணைநிலை ஆளுநர் தனது கருத்தில், பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த சட்டமன்றத்திற்கு இரண்டு உறுப்பினர்களை பரிந்துரைக்கலாம் என்று கூறுனார். 


ஜூலை 2023-ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மேலும் மூன்று நியமன உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யப் பரிந்துரைத்தது. இந்த உறுப்பினர்களில், காஷ்மீர் புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த இருவர். அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும். மற்றொருவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் இடம்பெயர்ந்தவர்களைச் சேர்ந்தவர் ஆவார். 


ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றம் புதுச்சேரி சட்டமன்றத்தைப் போன்றது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் (MLA) போலவே நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஜம்மு & காஷ்மீரைப் பொறுத்தவரை, ஐந்து உறுப்பினர்களை நியமிக்கலாம். 


(4) சட்டமன்றத்தின் அதிகாரங்கள் : 1947-ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் கட்டுப்பாட்டை மட்டுமே ஒப்படைத்தது. சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு & காஷ்மீருக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருந்தது.  இருப்பினும், காலப்போக்கில், சட்டங்களை உருவாக்கும் ஒன்றியத்தின் அதிகாரம் அதிகரித்தது. ஒன்றியப் பட்டியலில் (அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் I-இல் பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் மேலும் பல துறைகளைச் சேர்க்க இது நீட்டிக்கப்பட்டது.


2019-ன் மறுசீரமைப்புச் சட்டம் மிகவும் மாறுபட்ட அமைப்பை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பில், மாநில சட்டசபையை விட துணைநிலை ஆளுநர் ((Lieutenant Governor(LG)) மிகப் பெரிய பங்கு வகிக்கிறார் என்பது இரண்டு முக்கியமான விதிகளிலிருந்து இது தெளிவாகிறது.


முதலாவதாக, சட்டத்தின் பிரிவு 32 ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தின் சட்டமன்ற அதிகாரத்தை விளக்குகிறது. சட்டமன்றம் முழு யூனியன் பிரதேசத்திற்கும் அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் சட்டங்களை உருவாக்க முடியும் என்று அது கூறுகிறது. பிரிவு-1 மற்றும் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள "பொது ஒழுங்கு" (Public Order) மற்றும் "காவல்துறை" (Police) ஆகிய இரண்டு துறைகளைத் தவிர, பிரிவு-32  சட்டங்கள் மாநிலப் பட்டியலில் உள்ள பதிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, யூனியன் பிரதேசங்களுக்கு அந்த விஷயங்கள் பொருந்தும் வரை, பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமன்றம் சட்டங்களை உருவாக்க முடியும்.


இரண்டாவதாக, 2019-ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு-36 நிதி மசோதாக்களுக்கான சிறப்பு விதிகளை உள்ளடக்கியது. துணைநிலை அளுநரின் பரிந்துரை இல்லாமல் சட்டப் பேரவையில் ஒரு மசோதா அல்லது திருத்தத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது முன்வைக்கவோ முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அரசு மேற்கொண்ட அல்லது மேற்கொள்ளவிருக்கும் ஏதேனும் நிதிக் கடமைகள் தொடர்பான சட்டங்களின் திருத்தத்தை மசோதா குறிப்பிடுகிறது என்றால் இந்தத் தேவை பொருந்தும்.


(5) ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் : 2019-ம் ஆண்டு சட்டம் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. 


சட்டப்பிரிவு-53 அமைச்சர்கள் குழுவின் பங்கை விவரிக்கிறது. பின்வரும் சூழ்நிலைகளில் துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று அது கூறுகிறது:


1. ஒரு விவகாரம் சட்டப் பேரவைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்குப் புறம்பாக இருக்கும்போது.


2. சட்டப்படி துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் அல்லது ஏதேனும் நீதித்துறை செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.


3. இந்த விவகாரம் அகில இந்திய சேவைகள் (All India Services) மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணியகத்துடன் (Anti-Corruption Bureau) தொடர்புடையதாக இருக்கும்போது அதிகாரம் வழங்குகிறது.


துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தால், இவரது முடிவே இறுதியானது என்று அரசியலமைப்புப் பிரிவு-53  கூறுகிறது. துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதன் அடிப்படையில் அவரது செயல்களின் செல்லுபடியை யாரும் சவால் செய்ய முடியாது. கூடுதலாக, அமைச்சர்கள் துணைநிலை ஆளுநருக்கு என்ன அறிவுரை வழங்கினர் என்பதை நீதிமன்றங்கள் விசாரிக்காது.


ஜம்மு & காஷ்மீர் பல சவால்களை எதிர்கொள்கிறது. இதில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. சமீபத்தில், இந்த பிரச்சினை பிர் பஞ்சால் மலைகளுக்கு தெற்கே ஜம்மு பகுதிக்கு தொடர்ந்தது. ஆகஸ்ட் மாத அறிக்கைகள் ஜம்மு & காஷ்மீரில் ஒன்றிய அரசின் நிதியில் அதிகப்படியான நம்பிக்கை, குறைந்த விவசாய உற்பத்தி, மின் பற்றாக்குறை மற்றும் வேலை மற்றும் நில பாதுகாப்பின்மை போன்ற பல சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த பிரச்சனையில் மாற்றம் ஏற்பட, இதன் கவலைகள் பதிலளிக்கக்கூடிய மற்றும் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.


(1) கிழக்கின் சுவிட்சர்லாந்து : ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மார்ச் 1846-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள், முதல் ஆங்கிலோ-சீக்கியப் போருக்குப் பிறகு, காஷ்மீரை ஜம்முவின் டோக்ரா ஜாகிர்தாரான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் நானக்ஷாஹி ரூபாய்களுக்கு (Nanakshahee rupees) விற்றனர். 


இந்தியா சுதந்திரம் அடைந்த போது மகாராஜா ஹரி சிங் ஆட்சியாளராக இருந்தார். அவர் குலாப் சிங்கின் வழித்தோன்றல் ஆவார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, பிராந்தியங்களைப் பிரித்தெடுக்கத் தயாரானபோது, ​​அவர்கள் சமஸ்தானங்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்கினர். அவர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரலாம் அல்லது சுதந்திரமாக இருக்க தேர்வு செய்யலாம். இருப்பினும், சுதந்திரமாக இருப்பது நடைமுறையில் விருப்பமாக இருக்கவில்லை. "கிழக்கின் சுவிட்சர்லாந்து" (Switzerland of the East) போல காஷ்மீரை "முற்றிலும் நடுநிலை" ஆக்க வேண்டும் என்று கனவு கண்ட ஹரி சிங்கிற்கு இந்தத் தேர்வு ஈர்க்கப்பட்டது.


(2) ஹரி சிங் இந்தியாவிற்கு வருகை : ஜூன் 1947-ஆம் ஆண்டில், வைஸ்ராய் லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபு ஸ்ரீநகருக்கு வருகை தந்தார். இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அவர் ஹரி சிங்கிற்கு அறிவுறுத்தினார். ஆனால், இந்த பிராந்தியம் சுதந்திரத்தை விரும்புவதாகக் கூறினார். 


ஆகஸ்ட் 15, 1947-ஆம் ஆண்டில், ஹரி சிங் எந்த நாட்டிலும் சேர மறுத்துவிட்டார். பிரிட்டிஷாரின் கீழ் இருந்தது போல் வர்த்தகம் மற்றும் தகவல்தொடர்புகளை தொடர இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டுடனும் "நிலையான உடன்பாடுகளை" அவர் முன்மொழிந்தார். பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்தியா காத்திருக்க முடிவு செய்தது. 


ஒரு குறுகிய காலத்திற்கு, ஜம்மு & காஷ்மீர் தொழில்நுட்ப ரீதியாக சுதந்திரமாக இருந்தது. ஆனால், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், அக்டோபர் 22 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து ஊடுருவல்காரர்களின் படையெடுப்பை அது எதிர்கொண்டது.  


ஊடுருவல்காரர்கள் விரைவாக முன்னேறி, முசாபராபாத்தைக் கைப்பற்றி ஹரி சிங்கின் படைகளை உரியில் (Uri) தோற்கடித்தனர். மகாராஜா இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்டார்.  


அக்டோபர் 26 அன்று, ஒரு மூத்த இந்திய அதிகாரியான வி.பி. மேனன் பாதுகாப்புக் குழுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டார். ஹரி சிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்தியா உதவ வேண்டும் என்று கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் கூறினார். இதையடுத்து ஹரி சிங் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.




Original article:

Share:

இந்தியாவில் சிறந்த நகர்ப்புற நிர்வாகத்திற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவம் -ஜேக்கப் பேபி

 1992-ஆம் ஆண்டில் 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்றாவது அடுக்கு நிர்வாகமாக (third tier of governance) அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது. ஆனால், இந்த உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? சிக்கலான நகர்ப்புற சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? 


2024 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் பெய்த கனமழை குஜராத் முழுவதும் உள்ள நகரங்களை கடுமையாக பாதித்தது. வதோதராவில், பெய்த மழையால் வெள்ளம், மின் தடை மற்றும் தெருக்கள் கழிவுகளால் நிரம்பி, நகரத்தை கடுமையாக பாதித்தது. வதோதரா மாநகராட்சியின் பதிலை குடியிருப்பாளர்கள் விமர்சித்தாலும், மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய உள்ளாட்சி அமைப்பு கடுமையாக உழைத்து.

இந்த சம்பவம் நமது நகரங்களை நிர்வகிப்பதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பங்களிப்பையும், அவற்றின் இன்றைய சவால்களையும் வெளிகாட்டுகிறது. 


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban local bodies) 


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் அல்லது நகர பஞ்சாயத்துகள் நகர்ப்புற நிர்வாகத்தின் அடிப்படை அலகுகள் ஆகும். அவை குடிமக்களுக்கான முதல் தொடர்பு புள்ளியாகும் மற்றும் கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பாகும். 


கடந்த காலத்தில், இந்திய நகரங்கள் வணிகம் அல்லது மதம் போன்ற முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் முறைசாரா நிர்வாக அமைப்புகளைக் கொண்டிருந்தன. காலனித்துவ காலத்தில், ஆங்கிலேயர்கள் நகரங்களில் சுகாதார பிரச்சினைகளை தீர்க்க மேம்பாட்டு அறக்கட்டளைகள் போன்ற நிறுவனங்களை உருவாக்கினர்.

 

நகரத்தை சுத்தம் செய்வதற்கும், தொற்றுநோய்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் மேம்பாட்டு அறக்கட்டளைகள் பொறுப்பேற்றன. உதாரணமாக, பம்பாய் அல்லது கல்கத்தாவில் இருந்த இந்த அறக்கட்டளைகள் பரந்த தெருக்களைத் திட்டமிடுவதன் மூலமும், வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், நெரிசலைக் குறைப்பதன் மூலமும் பிளேக் போன்ற தொற்றுநோய்களை கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.  


இந்தியாவில் முதல் நகராட்சி அமைப்பு (first municipal body) 1687-ல் சென்னையிலும், அதைத் தொடர்ந்து பம்பாய் மற்றும் கல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. 1882-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பின் தந்தை (father of local self-government) என்று அழைக்கப்படும் ஆங்கிலேய ஆளுநர் ரிப்பன், உள்ளூர் சுய-அரசுகளுக்கான தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். இது நகரங்களை நிர்வகிக்க ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அரசாங்கத்தை உருவாக்க உதவியது.

1935-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கச் சட்டங்கள் உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அவற்றை மாகாண அல்லது மாநிலப் பாடங்களாக வகைப்படுத்தின.


அதிகாரப் பகிர்வு (Devolution of powers) 


இந்தியாவின் பல சுதந்திர போராட்ட வீரர்கள் நகராட்சி அரசியலில் தங்கள் அரசியல் வாழ்க்கையை உள்ளூர் அரசாங்கத்தில் தொடங்கினர். உதாரணமாக, சர்தார் வல்லபாய் படேல் அகமதாபாத்தில் நகராட்சி கவுன்சிலராக இருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, மாநகராட்சி தொடர்ந்து உருவாகின. ஆனால், வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்புடன் பெரும் தடைகளை எதிர்கொண்டன. அவர்கள் நிதி மற்றும் செயல்பாட்டு ஆதரவுக்காக மாநில அரசுகளை பெரிதும் நம்பியிருந்தனர்.

 

இந்திய அரசியலமைப்பின் பகுதி IX-A நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பு, பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. நகர்ப்புற திட்டமிடல், நில பயன்பாடு, பொது சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.


அரசியலமைப்பின் 12-வது அட்டவணை இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 18 செயல்பாடுகளை பட்டியலிடுகிறது. திருத்தத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளாட்சி வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் சம்பிரதாயத் தலைவராக செயல்படும் அதே வேளையில், அரசால் நியமிக்கப்படும் நகராட்சி ஆணையர்  நிர்வாக அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும்.

 

நகராட்சி அமைப்புகளுக்கு பல பொறுப்புகள் உள்ளன. அவர்கள் கழிவு சேகரிப்பு மற்றும் நகர திட்டமிடல் ஆகியவற்றை நிர்வகிக்கிறார்கள். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) போதுமான ஆதாரங்கள் அல்லது பணியாளர்கள் இல்லை. அவர்கள் மூன்று முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்: குறைந்த நிதி, வரையறுக்கப்பட்ட சக்தி மற்றும் பலவீனமான திறன்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி சிக்கல்கள் உள்ளன. அவர்களின் முக்கிய வருமான ஆதாரம் சொத்து வரியாகும். மேலும் அவர்கள் மாநில அரசாங்கத்தின் நிதியையும் நம்பியுள்ளனர். 1994-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அகமதாபாத் மாநகராட்சி பத்திரங்கள் போன்ற பத்திரங்கள் அல்லது பிற நிதிக் கருவிகள் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பணம் வசூலிக்கமுடியும் என்றாலும், இந்த வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்குத் தேவையான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப திறன்கள் அவர்களுக்கு இல்லை.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் (Urban local bodies (ULBs)) வாகன நிறுத்த கட்டணம் கட்டணம் மற்றும் வணிக வரிகள் போன்ற குறைந்த கட்டணங்களை வசூலிக்கின்றன.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் (மேயரை) மற்றும் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகத் தலைவர் (ஆணையார்). மேயரை விட நகராட்சி ஆணைருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இது குறிப்பாக அவசர காலங்களில் முடிவெடுப்பதில் குழப்பத்தையும் தாமதத்தையும் ஏற்படுத்தும். 2024-ஆம் ஆண்டின் பீகார் மாநகராட்சி மசோதா (Bihar Municipality (Amendment) Bill) மாநிலங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மீது கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் திறமையான தொழிலாளர்கள் இல்லை. நிதி ஆயோக் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு 75,000 பேருக்கும் ஒரு நகரத் திட்டமிடுபவர் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. இந்தியாவில் 5,000 தகுதி வாய்ந்த நகர திட்டமிடுபவர்கள் மட்டுமே உள்ளனர். 2031-ஆம் ஆண்டுக்குள் இதற்கு 3,00,000 தேவைப்படும். இந்த பற்றாக்குறை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகரங்களை நன்றாக நிர்வகிப்பது கடினமாக்குகிறது.


இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய, நகர அரசாங்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இந்தியா மாற்ற வேண்டும். பல நாடுகளில் நகரத் தலைவர்களுக்கு அதிகாரம் அதிகம். உதாரணமாக, லண்டன் மற்றும் நியூயார்க்கின் மேயர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். லண்டனில், மேயர் லண்டனுக்கான டிரான்ஸ்போர்ட்டை (Transport for London (TfL)) மேற்பார்வையிடுகிறார். TfL நகரின் போக்குவரத்தை நிர்வகிக்கிறது. 2040-ஆம் ஆண்டுக்குள் லண்டனில் 80% பயணங்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.


முன்னேற்றத்திற்கான வழி


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி சுதந்திரத்தை வழங்குவது அவர்கள் பணத்தை திரட்டவும், மாநில நிதியை குறைவாக சார்ந்திருக்க உதவும். பத்திரங்கள் போன்ற சந்தை உத்திகளைப் பயன்படுத்தி அல்லது நெரிசல் கட்டணம் மற்றும் வாகன நிறுத்த கட்டணம் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் அவர்கள் நிதியை உருவாக்க முடியும்.


வெவ்வேறு வருமான ஆதாரங்களைக் கொண்டிருப்பது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மிகவும் நெகிழ்வாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்க அனுமதிக்கிறது. அவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் நகரவாசிகளை ஈடுபடுத்தலாம். வரிப் பணம் எப்படிச் செலவிடப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல நகரங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பகுதியை இந்த நோக்கத்திற்காக ஒதுக்கி, உள்ளூர் பிரச்சனைகளை திறம்பட சமாளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவுகின்றன.


கடைசியாக, சிறந்த சேவைகளை வழங்க வல்லுநர்களை பணியமர்த்துவதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வளங்களை மேம்படுத்த வேண்டும். வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பல நகர பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.


இந்த சிக்கல்களைத் தீர்க்க, உள்ளூர் சார்ந்த அணுகுமுறை அவசியம். உள்ளூர் பிரச்சினைகளை உள்ளூர் மட்டத்தில் கையாள வேண்டும் என்று துணைக் கொள்கை (principle of subsidiarity) கூறுகிறது. இதன் பொருள், மாநில அல்லது மாநிலம் அல்லது  ஒன்றிய அரசாங்கங்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட சவால்களைச் சமாளிக்க தயாராக உள்ளன.




Original article:

Share: