சமீபத்திய மேக வெடிப்புகள் இந்தியாவிற்கு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் தேவை என்பதைக் காட்டுகின்றன

 மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் விரிவான வரைபடங்கள், வரலாற்று தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி நில பயன்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்ட முடியும். இது தள்ளிப்போட முடியாத ஒரு அவசியமாகும்.


மாறிவரும் பருவமழையிலிருந்து சமவெளிகள், மலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க கொள்கை வகுப்பாளர்கள் அதிகம் முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகி வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு இந்தியா, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.


டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில், நீர் தேங்குதல் மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. கடந்த பத்தாண்டுகளாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு சிறந்த வடிகால் அமைப்புகள் தேவை என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். நகர்ப்புற வடிகால்களை சரிசெய்வது பருவமழை சவாலின் முக்கியமான பகுதியாகும்.


சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் தீவிர வானிலையின்போது உயிர்களைக் காப்பாற்றவும் சேதத்தைக் குறைக்கவும் உதவும் என்பதும் தெளிவாகிறது. இதைச் செய்ய, துல்லியமான தரவு மற்றும் வலுவான தகவல் தொடர்பு அமைப்புகள் தேவை. இந்தியா சமீபத்தில்தான் இதுபோன்ற அமைப்புகளில் பணியாற்றத் தொடங்கியுள்ளது.


ஒரு வாரத்திற்குள், ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்புகள் மூலம் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இது இந்தியாவின் காலநிலை தகவல் அமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது. சிக்கலான செயல்முறைகள் காரணமாக மேக வெடிப்புகள் ஏற்படுகின்றன. பருவமழைக் காற்று குளிர்ந்த காற்றோடு கலந்து, இமயமலை மலைகள் அவற்றைப் பிடித்து, மிகப் பெரிய மேகங்களை உருவாக்குகின்றன.


இப்பகுதி எப்போதும் மேக வெடிப்புகளுக்கு ஆளாகிறது. ஆனால், புவி வெப்பமடைதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மேகங்கள் அதிக தண்ணீரைத் தக்கவைக்க முடியாதபோது, அவை திடீரென்று ஒரு சிறிய பகுதியில் மிக கனமழையாக அதை வெளியிடுகின்றன. மேக வெடிப்பு என்பது சுமார் 30 சதுர கி.மீ. பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவைக் குறிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இந்த சிறிய பகுதிகளில் பெரும்பாலானவற்றில் மழையை அளவிடும் கருவிகள் இல்லை. இருப்பினும், மேக வெடிப்புகளால் ஏற்படும் சேதம் அந்த இடத்திற்கு மட்டும் அல்லாமல், அவை நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் கீழ்நோக்கி அழிவை ஏற்படுத்துகின்றன.


இதில் மிகச் சிறிய பகுதிகளில் மழைப்பொழிவை கணிக்க முடியும். ஆனால், அதற்கு பல வானிலை கருவிகள் மற்றும் வலுவான கணினிகள் தேவை. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இப்போது இந்த தகவல் இடைவெளிகளை நிரப்புவதன் மூலமும், தரவை மிகவும் திறம்படப் பயன்படுத்துவதன் மூலமும் அதன் அமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறது.


அதிக மழையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணி வானிலை ஆய்வுத் துறைக்கு மட்டும் மிகப் பெரியது. பலவீனமான பகுதிகளில் உயிர்களைக் காப்பாற்ற, வானிலை அலுவலகம், விஞ்ஞானிகள், திட்டமிடுபவர்கள் மற்றும் உள்ளூர், மாநில மற்றும் தேசிய மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை. 


முதலாவதாக, கடந்தகாலத் தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி மேக வெடிப்பு பாதிப்புக்குள்ளான மண்டலங்களின் விரிவான வரைபடங்களை உருவாக்க வேண்டும். இந்த வரைபடங்கள் நில பயன்பாட்டுத் திட்டமிடலுக்கு வழிகாட்டும். கட்டுமானம் மற்றும் மேம்பாடு கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் காலநிலை அபாயங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும் அவை உதவும். இந்தப் பணி அவசரமானது மற்றும் தாமதப்படுத்த முடியாதாக உள்ளது.



Original article:

Share:

இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஆலைகள் -ரோஷ்னி யாதவ்

 உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் மாநிலத்தின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையைத் திறந்து வைத்து இன்று ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 72,000 டன் பசுமை எரிபொருளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஆலைகள் மற்றும் எரிபொருளாக ஹைட்ரஜன் ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. "இது உத்தரப் பிரதேசத்தின் முதல் ஆலை மற்றும் நாட்டில் இரண்டாவது ஆலை என்றும், இந்த ஆலை பச்சுமை ஹைட்ரஜனை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு  (compressed natural gas (CNG)) மற்றும் குழாய் இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)) உடன் கலப்பதை உறுதி செய்யும் என்பதால் இன்று ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று முதல்வர் கூறினார்.


2. ஒரு முன்னோடித் திட்டமாக, இந்த ஆலை நகர எரிவாயு விநியோக அமைப்புகளுக்கு இயற்கை எரிவாயுவுடன் (CNG மற்றும் PNG இரண்டும்) 2% பசுமை ஹைட்ரஜன் உடன் சேர்க்கும். 2 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ரஜனை உருவாக்கும் என்றும், கார்பன் வெளியேற்றத்தை சுமார் 500 டன் குறைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


துருப்பிடிக்காத எஃகு துறையில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை


1. இந்தியாவின் துருப்பிடிக்காத எஃகு துறையில் முதல் வணிக அளவிலான பசுமை ஹைட்ரஜன் ஆலை மார்ச் 4, 2024 அன்று ஹரியானாவின் ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட் (JSL) உற்பத்தி பிரிவில் மத்திய எஃகு மற்றும் பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியாவால் மெய்நிகர் முறையில் திறந்து வைக்கப்பட்டது.


2. இது துருப்பிடிக்காத எஃகு துறைக்கான உலகின் முதல் off-grid பசுமை ஹைட்ரஜன் ஆலை மற்றும் கூரை & மிதக்கும் சூரிய சக்தியுடன் கூடிய உலகின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை ஆகும்.


3. இந்தத் திட்டம் ஒரு அதிநவீன பசுமை ஹைட்ரஜன் வசதியாகும். இது அடுத்த இருபது ஆண்டுகளில்  சுமார் 2,700 மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றத்தையும் 54,000 டன் கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.


துறைமுகத் துறையில் இந்தியாவின் முதல் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make-in-India) பசுமை ஹைட்ரஜன் ஆலை


1. சமீபத்தில், துறைமுகத் துறையில் இந்தியாவின் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் பசுமை ஹைட்ரஜன் ஆலை, தீன்தயாள் துறைமுக ஆணையத்தால் (Deendayal Port Authority) கண்ட்லாவில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், மெகாவாட் அளவிலான உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் வசதியைக் கொண்ட முதல் இந்திய துறைமுகமாக கண்ட்லா மாறியது.


2. இந்திய பொறியாளர்களால் முழுமையாக உருவாக்கப்பட்ட இந்த ஆலை, மே 2025-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஒரு பெரிய 10 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் முதல் தொகுதி ஆகும்.


3. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 140 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும். இந்த திட்டம் தீன்தயாள் துறைமுக ஆணையத்தின் முந்தைய வெற்றிக்குப் பிறகு வருகிறது. அது இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார இழுவைப் படகை (Green Tug)  அறிமுகப்படுத்தியது.


பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் மிகவும் மிகுதியாக உள்ள தனிமம் மற்றும் எரிபொருளாக ஹைட்ரஜன்


1. இயற்கையில் மிகவும் பொதுவான தனிமமான ஹைட்ரஜன், மற்ற தனிமங்களுடன் இணைந்து மட்டுமே உள்ளது. மேலும், நீர் போன்ற இயற்கையாக நிகழும் சேர்மங்களிலிருந்து (இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவின் கலவையாகும்) பிரித்தெடுக்கப்பட வேண்டும். இது ஒரு சுத்தமான மூலக்கூறு. ஆனால், அதைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆற்றல் மிகுந்தது.


2. சுத்தமான எரிபொருள் மூலமாக ஹைட்ரஜனின் ஆற்றல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருந்தாலும், 1970-ஆம் ஆண்டுகளின் எண்ணெய் விலை நிகழ்வுகளுக்குப் பிறகுதான், ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு தீவிரமாகக் கருதப்பட்டது.


3. ஹைட்ரஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து வண்ணங்களால் வகைப்படுத்தப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கப்படும்போது, அது சாம்பல் ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. தற்போது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனில் பெரும்பாலானவை சாம்பல் ஹைட்ரஜனாகும்.


ஹைட்ரஜனின் பல நிறங்கள்.


4. கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு விருப்பங்களுடன் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் நீல ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது.


5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் மின்னாற்பகுப்பிகளைப் பயன்படுத்தி நீர் மின்னாற்பகுப்பிலிருந்து தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனைக் பசுமை ஹைட்ரஜன் குறிக்கிறது. இது ஹைட்ரஜன் உற்பத்திக்கான கிட்டத்தட்ட உமிழ்வு இல்லாத பாதையாகக் கருதப்படுகிறது.


6. பசுமை ஹைட்ரஜனுக்கு குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன:


(i) இது ஒரு சுத்தமான எரியும் மூலக்கூறாகும். இது போக்குவரத்து, இரசாயனங்கள் மற்றும் இரும்பு மற்றும் எஃகு போன்ற பல்வேறு தொழில்களை கரிமநீக்க செயல்முறைகளில்  பயன்படுகிறது.


(ii) புனரமைப்பு ஆற்றலை, மின்கட்டமைப்பு சேமிக்கவோ பயன்படுத்தவோ முடியாதபோது, அதைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம்.


பசுமை ஹைட்ரஜன் சான்றிதழ் திட்டம்


1. இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஆற்றல் மிகுந்த துறைகள் வளர்ந்துவரும் எரிபொருளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும், ஒன்றிய அரசு தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ் ஒரு சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் Carbon Credit Trading Scheme (CCTS)-ன் கீழ் உமிழ்வு விதிகளை அறிவித்துள்ளது.


2. ஒன்றிய  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏப்ரல் 29 அன்று அமைச்சகத்தால் 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தரத்தின் அடிப்படையில் பசுமை ஹைட்ரஜனை அளவிடுதல், கண்காணித்தல், அறிக்கையிடுதல், தளத்தில் சரிபார்த்தல் மற்றும் சான்றளிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.


3. ஏப்ரல் 27 அன்று, பசுமை ஹைட்ரஜன் சான்றிதழ் திட்டத்தின் நோடல் நிறுவனமான எரிசக்தி திறன் பணியகம் (BEE), CCTS-ன் கீழ் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி கடுமையாகக் குறைக்கும் துறைகளுக்கு கடன்களைப் பெறவும் வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கும் ஒரு நெறி முறையை அறிவித்தது.


4. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஒரு பசுமை ஹைட்ரஜன் தரநிலையை அறிமுகப்படுத்தியது, உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ ஹைட்ரஜனுக்கு 2 கிலோ கார்பன் உமிழ்வை இது கட்டுப்படுத்தியது. தரநிலையின் அடிப்படையில் சான்றிதழ் திட்டம், மின்னாற்பகுப்பு அல்லது உயிரி மாற்றத்திலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு மட்டுமே பொருந்தும்.


01. தேசிய பசுமை ஹைட்ரஜன் பணி என்றால் என்ன?


2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி சுதந்திரம் மற்றும் 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற லட்சியங்களில் பசுமை ஹைட்ரஜனின் பங்கை அங்கீகரித்து, 2023-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் (National Green Hydrogen Mission (NGHM)) அங்கீகரிக்கப்பட்டது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) ஆதரவுடன், NGHM, பசுமை ஹைட்ரஜனை இந்தியாவிற்கு ஒரு புதிய துறையாகக் கருதுகிறது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழித்தோன்றல்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.


02. NGHM-ன் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனுக்கான 2030 இலக்கு என்ன?


NGHM-ன் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனுக்கான 2030 இலக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் ஆகும். இது புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பங்களிக்கிறது. இந்த திட்டம் இலக்குகளை அடைவது 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியை ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் கோடி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) என்பவை யாவை? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— உச்ச நீதிமன்றம் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் (EVMs) புது தில்லியில் உள்ள அதன் வளாகத்திற்கு வரவழைத்து வாக்குகளை மீண்டும் எண்ணிய பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


— முந்தைய முடிவில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தை அணுகிய மோஹித் குமார், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பஞ்ச் குல்தீப் சிங்கை 51 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


— 2022-ல் நவம்பரில் நடந்த தேர்தலின் ஆரம்ப முடிவை மோஹித் சவால் செய்தார். ஒரு வாக்குச் சாவடியில் ஒரு தலைமை அதிகாரி தனக்கும் குல்தீப்புக்கும் இடையில் வாக்குகளை மாற்றியதாகக் குற்றம் சாட்டினார்.


—உச்ச நீதிமன்றம் EVM இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் முதல் நிகழ்வாக இந்த வழக்கு அமைந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.


— நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது மாநில கவுன்சில் தேர்தல்களின் முடிவுகளை, தேர்தல் நடத்தப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்வதன் மூலம் சவால் செய்யலாம்.


— உள்ளாட்சித் தேர்தல்களுக்கு எதிரான தேர்தல் மனுக்கள் மாவட்ட அளவிலான சிவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படவேண்டும். இந்த மனுவை, சம்பந்தப்பட்ட தேர்தலுடன் தொடர்புடைய வேட்பாளர் அல்லது வாக்காளர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மேலும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.


— மனுவில், அனைத்து முக்கிய உண்மைகளின் தெளிவான அறிக்கையும் இருக்க வேண்டும். அது "ஊழல் நடைமுறைகள்" என்று கூறினால், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள், செயலின் தேதி மற்றும் இடம் போன்ற விவரங்களை அது வழங்க வேண்டும்.


—நீதிமன்றங்கள்  கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேர்தலை ரத்து செய்யலாம். அவை:


• லஞ்சம் அல்லது தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தப்படுதல், குற்றப் பதிவுகளை மறைத்தல் அல்லது சமூகக் குழுக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துதல்.


• வெற்றி பெற்ற வேட்பாளர் தகுதியற்றவராகவோ அல்லது தேர்தல் நாளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராகவோ இருத்தல்.


• ஒரு வேட்பாளரின் வேட்புமனு தவறாக நிராகரிக்கப்பட்டிருத்தல்.


• ஒரு வேட்புமனு தவறாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருத்தால், அல்லது வாக்குகள் தவறாக எண்ணப்பட்டிருந்தால் அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தால்.


• அரசியலமைப்பு அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் நடந்திருந்தால், அது வேட்பாளாரின் முடிவை தெளிவாக பாதித்திருந்தால்.


—வழக்கமாக, தேர்தல் நடந்த இடத்தில் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், பானிபட் சர்பஞ்ச் தேர்தல் வழக்கில் (Panipat sarpanch election case), உச்சநீதிமன்றம் அதன் சொந்த வளாகத்தில் மீண்டும் எண்ணும் பணியைச் செய்தது.


—இது அரிதானது. ஆனால், சில நேரங்களில் நீதிமன்றங்கள் ஒரு தேர்தலை ரத்து செய்வது மட்டுமல்லாமல், மற்றொரு வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்கவும் செய்கின்றன. இதற்காக, மனுதாரர் அல்லது மற்றொரு வேட்பாளர் பெரும்பான்மை செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.


உங்களுக்குத் தெரியுமா?:


—இந்தியாவில் உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அவசியம். 1993ஆம் ஆண்டின் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் நகர்ப்புறங்கள் (நகராட்சிகள்) மற்றும் கிராமப்புறங்கள் (பஞ்சாயத்துக்கள்) இரண்டிலும் உள்ள உள்ளூர் சுய-அரசுகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கின. இந்த திருத்தங்கள், இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழக்கமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக மாநிலத் தேர்தல் ஆணையங்களை (SECs) நிறுவுவதற்கான விதிகளையும் அரசியலமைப்பில் உருவாக்கியது.


—எளிதில் சொன்னால், மாநில தேர்தல் ஆணையங்கள் (SECs) என்பது மூன்றாம் நிலை நிர்வாகத்திற்கான தேர்தல்களை நடத்தும் ஒரு அரசியலமைப்பு அதிகாரமாகும். இதில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நகராட்சிகள் அடங்கும்.


—73வது மற்றும் 74வது திருத்தங்கள் அரசியலமைப்பில் பகுதி IX மற்றும் பகுதி IXA-ஐச் சேர்த்தன. பகுதி IX (பிரிவுகள் 243 முதல் 243O வரை) பஞ்சாயத்துகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கையாள்கிறது. அதே நேரத்தில் பகுதி IXA (பிரிவுகள் 243P முதல் 243ZG வரை) நகராட்சிகளைக் கையாள்கிறது.


—பகுதி IX-ல் உள்ள பிரிவு 243K பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை வழங்குகிறது. பகுதி IXA-ல் உள்ள பிரிவு 243ZA நகராட்சிகளுக்கான தேர்தல்களை வழங்குகிறது.


—மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMகள்) வாக்களிப்பதையும் எண்ணுவதையும் எளிதாகவும் வேகமாகவும் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு EVM இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் வாக்குப்பதிவு அலகு (balloting unit) ஆகும்.


—இந்த இரண்டு பகுதிகளும் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அலகு தலைமை அதிகாரி அல்லது வாக்குப்பதிவு அதிகாரியிடம் வைக்கப்படும். அதே நேரத்தில் வாக்குப்பதிவு அலகு வாக்காளர்கள் வாக்களிக்க வாக்களிக்கும் பெட்டியின் உள்ளே வைக்கப்படும். இந்த அமைப்பு வாக்குப்பதிவு அதிகாரி ஒவ்வொரு வாக்காளரின் அடையாளத்தையும் சரிபார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.



Original article:

Share:

காலனித்துவ வேர்களில் இருந்து அரசியலமைப்பு வரை -கண்ணன் கே

 ஆகஸ்ட் 22-ம் தேதி UPSC முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி வருவதால், அக்டோபர் 1-ம் தேதி அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் தயாராகி வருகிறது. இந்த அரசியலமைப்பு அமைப்பு (constitutional body) எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைத் திரும்பிப் பார்க்க இதுவே சரியான தருணம். அது எவ்வாறு பரிணமித்துள்ளது மற்றும் நியாயமான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறையை எவ்வாறு தொடர்ந்து நிலைநிறுத்துகிறது என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது.


இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல், அரசு ஊழியர்களை 'இந்தியாவின் எஃகு சட்டகம்' (steel frame of India) என்று குறிப்பிட்டாலும், அவர்கள் 'நிரந்தர நிர்வாகி' (permanent executive) என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதன் காலனித்துவத்திலிருந்து தற்போதைய வடிவம் வரை, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) அதன் எஃகு சட்டகம் மற்றும் அதன் நிரந்தர நிர்வாகியை நாட்டிற்கு திறம்பட வழங்கியுள்ளது. மேலும் திறமைவாதத்தின் பாதுகாவலராக அதன் பங்கை நிலைநிறுத்தியுள்ளது.


ஆகஸ்ட் 22-ம் தேதி UPSC முதன்மைத் தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் நூற்றாண்டு ஆண்டு விழா அக்டோபர் 1, 2025 அன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த அரசியலமைப்பு அமைப்பைப் பார்க்க இது ஒரு நல்ல நேரம். அதன் உருவாக்கம், பரிணாமம், ஆணை மற்றும் இன்றைய சவால்களை எதிர்கொள்ள அது அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களை நாம் அறியலாம்.


இந்திய குடிமைப் பணி : ஆதரவாளரிடமிருந்து தகுதி அடிப்படையிலான அமைப்பு வரை


இந்தியாவின் குடிமைப் பணிகளின் அடிப்படைகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்குச் செல்கின்றன. 'இந்தியாவில் குடிமைப் பணியின் தந்தை' என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் கவர்னர் ஜெனரல் லார்ட் கார்ன்வாலிஸ், 1793-ம் ஆண்டு கார்ன்வாலிஸ் சட்டம் மூலம் இந்திய குடிமைப் பணியின் (Indian Civil Services (ICS)) அடித்தளத்தை அமைத்தார்.


ஆரம்பத்தில், குடிமைப் பணிகளுக்கான தேர்வு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்களின் (directors of the British East India Company) ஆதரவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், லார்ட் மெக்காலே குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 1854-ம் ஆண்டில் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதி அடிப்படையிலான அமைப்புடன் இது மாற்றப்பட்டது. 1853-ம் ஆண்டின் சாசனச் சட்டம், நிறுவனத்தின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது.


லார்ட் மெக்காலே குழுவின் பரிந்துரைகளின் பேரில், 1854-ம் ஆண்டில் லண்டனில் ஒரு குடிமைப் பணி ஆணையம் (CSC) அமைக்கப்பட்டது மற்றும் 1855-ல் போட்டித் தேர்வுகள் தொடங்கப்பட்டன. ஐரோப்பிய பாரம்பரியங்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்துடன் CSC ஐசிஎஸ் தேர்வுகளை லண்டனில் நடத்தியதால், இந்தியர்கள் வெற்றி பெறுவது கடினமாகிவிட்டது. இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், 1864-ம் ஆண்டு சத்யேந்திரநாத் தாகூர் ICS-ல் இணைந்த முதல் இந்தியரானார். அதைத் தொடர்ந்து, ஒரு சில இந்தியர்கள் ICS-ல் இணைந்தனர்.


1919-ம் ஆண்டு மாண்டேகு செல்ம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு, ICS தேர்வுகள் 1922 முதல் இந்தியாவில் நடத்தத் தொடங்கின. இதில், மூன்றில் ஒரு பங்கு பதவிகள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டன. லீ ஆணையத்தின் (1924) பரிந்துரைகளின் அடிப்படையில், அக்டோபர் 1, 1926 அன்று ஒரு பொது சேவை ஆணையம் நிறுவப்பட்டது. பின்னர், 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம், 1937-ம் ஆண்டு முறையாக கூட்டாட்சி பொது சேவை ஆணையத்தை (Federal Public Service Commission (FPSC)) நிறுவியது. 1950-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் FPSC ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது, இது பிரிவு 315-ன் கீழ் அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.

அதிகாரம் மற்றும் பொறுப்புகள்


UPSC ஆனது, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் உறுப்பினர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம், உறுப்பினர்களில் குறைந்தது பாதிப் பேர் அரசுப் பணியில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, எது முந்தையதோ அதுவரை நிலையான பதவிக் காலம் பணியாற்றுவார்கள். தேர்வுகள் மற்றும் நேரடி ஆட்சேர்ப்புக்கான அர்ப்பணிப்பு பிரிவுகளை உள்ளடக்கிய அதன் செயலகத்தால் ஆணையத்தின் பணிகள் ஆதரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புகழ்பெற்ற ஓய்வுபெற்ற IAS அதிகாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான டாக்டர் அஜய் குமார் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.


UPSC-ன் அரசியலமைப்பு ஆணை அரசியலமைப்பின் பிரிவுகள் 315-323-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 320 அதன் முக்கிய செயல்பாடுகளை விவரிக்கிறது. UPSC என்பது மூன்று அகில இந்திய சேவைகள் (IAS, IPS, IFS) மற்றும் பல்வேறு முக்கிய அரசு பதவிகளுக்கான நியமனங்களுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான இந்தியாவின் முதன்மையான அமைப்பாகும். இது பல்வேறு சேவைகள் மற்றும் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகளையும் உருவாக்கி திருத்துகிறது.


இந்த ஆணையத்தின் மிக முக்கியமான பணி, 24 விதமான வெவ்வேறு மத்திய சேவைகளுக்கு ஆட்களை நியமிக்கும் குடிமைப் பணித் தேர்வை (CSE) நடத்துவதாகும். மேலும், இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service (IES)) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (Combined Defence Services (CDS)) உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற பதவிகளுக்கான தேர்வுகளை இவை நடத்துகிறது.


எனவே, அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற இளம் மற்றும் தகுதி வாய்ந்த இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதே ஆணையத்தின் முதன்மை செயல்பாடாகும். அவ்வாறு செய்வதன் மூலம், எந்தவொரு அரசியல் ஆதரவும் இல்லாமல், வேட்பாளரின் திறமை, அறிவு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவின் தகுதி அடிப்படையிலான நிர்வாக அமைப்பை இது நிலைநிறுத்துகிறது.

மேலும், UPSC என்பது ஒரு ஆலோசனைத் தன்மையை வகிக்கிறது. ஒழுங்குமுறை அடிப்படிகளில் அரசாங்கத்தை வழிநடத்துகிறது மற்றும் உரிய செயல்முறை மற்றும் நியாயத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. ஆட்சேர்ப்பில் ஆணையத்தின் பங்கு சிறப்பு பதவிகளுக்கும் பொருந்துகிறது. அங்கு எழுத்துத் தேர்வு இல்லாமல், அவர்களின் தகுதிகள் மற்றும் நேர்காணல்களின் அடிப்படையில் நேரடியாக நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கிறது.


கூடுதலாக, இந்திய குடியரசுத் தலைவர் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான விஷயங்களில் UPSC உடன் ஆலோசனை நடத்துகிறார். பிரிவு 323-ன் கீழ், அதன் பணிகள் மற்றும் பரிந்துரைகளை விவரிக்கும் வருடாந்திர அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


அறிக்கையானது கோரப்பட்டால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் கூட்டு ஆட்சேர்ப்புகளை (joint recruitments) நடத்துவதற்கு உதவுவதும் ஆணையத்தின் பணியாகும். பிரிவு 321-ன் கீழ், UPSC-ன் செயல்பாடுகளை முதலில் ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு அப்பால் நீட்டிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், அமைப்பானது சில சமகால சவால்களை எதிர்கொள்கிறது.


சவால்கள் மற்றும் சீர்திருத்தங்கள்


UPSC-யின் சவால்களில் ஒன்று, நியாயமான மற்றும் தகுதி அடிப்படையிலான போட்டிக்கான அதன் உறுதியான உறுதிப்பாட்டைப் பராமரிப்பதாகும். ஏனெனில், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்கள் அதன் தேர்வை அனைவரும் அணுகக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற்கான ஒரு வழியாகக் கருதுகின்றனர். எனவே, தேர்வு செயல்முறையின் நேர்மையை உறுதி செய்வது மிக முக்கியம்.


மற்றொரு சவால், தேர்வு செயல்முறை நீண்டகாலம் எடுத்துக்கொள்வது குறிப்பாக CSE விஷயத்தில், இது பெரும்பாலும் முதல்நிலைத் தேர்வுகள் முதல் இறுதி முடிவுகள் வரை ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும். இது நீண்டகாலமாக என்பதால் விமர்சிக்கப்படுகிறது. ஆர்வலர்கள் தங்கள் திறன்களை பல ஆண்டுகள் முயற்சிகளில் செலவிட காரணமாகிறது. இதனால், பலர் இறுதித் தேர்வை அடைய முடியவில்லை.

மேலும், கள நிபுணர்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை இப்போது அதிகரித்து வரும் அங்கீகாரம் பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன சவால்களைச் சமாளிக்க இந்த நிபுணர்கள் தேவை. இது UPSC மூலம் பொது ஆட்சேர்ப்பை முக்கியமாக நம்பியிருக்கும் பழைய நடைமுறையிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.


இந்த சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, UPSC முக்கிய சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், விண்ணப்ப செயல்முறைகளை எளிதாக்கவும், அதன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரு முறை பதிவு (One Time Registration (OTR)) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இடஒதுக்கீடு சலுகைகள் குறித்த மோசடியான கூற்றுகளைத் தடுக்க, ஆரம்ப கட்டத்திலேயே ஆவணங்களைச் சமர்ப்பிப்பது போன்ற விண்ணப்ப விதிகளையும் UPSC கடுமையாக்கியுள்ளது. மகாராஷ்டிரா கேடர் IAS அதிகாரியின் சமீபத்திய வழக்கு, இத்தகைய கடுமையான விதிகள் ஏன் அவசியம் என்பதைக் காட்டுகிறது.


ஆணையம் அதன் தேர்வு முறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது. மேலும், நிர்வாகத்தின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு சிவில் சேவைகள் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக கள நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. முழு ஆட்சேர்ப்பு சுழற்சிக்கும் எடுக்கும் நேரத்தைக் குறைப்பது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இதற்கு சிறந்த திட்டமிடல் மற்றும் முடிவுகளை விரைவாக செயலாக்குவது தேவைப்படும். இது தாமதங்களை நிவர்த்தி செய்யவும் சிறந்த திறமையாளர்களைத் தக்கவைக்கவும் உதவும்.


சில சவால்கள் இருந்தபோதிலும், UPSC ஒரு துடிப்பான நிறுவனமாகவே உள்ளது. சீர்திருத்தங்கள் மூலம் இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. திறமையான மற்றும் உறுதியான அதிகாரத்துவத்தை உருவாக்குவதற்கு ஒரு வலுவான மற்றும் பயனுள்ள UPSC மிக முக்கியமானது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்கை நிறைவேற்ற இதுபோன்ற ஒரு அதிகாரத்துவம் அவசியம்.



Original article:

Share:

மண்டல் ஆணையம், அதன் பரிந்துரைகள் மற்றும் இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம் (1992) வழக்கில் முக்கிய தீர்ப்பு பற்றி . . . -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


இடஒதுக்கீட்டிற்கு தகுதியான வேட்பாளர்களிடையே நியாயத்தையும், சீரான தன்மையையும் உறுதி செய்வதற்கும், ஆட்சேர்ப்பு மற்றும் சேவை நிலைமைகள் குறித்த கொள்கையை உருவாக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Union government’s Department of Personnel and Training (DoPT)) பல ஆண்டுகளாக வெளியிட்ட சுற்றறிக்கைகளில் இருந்து எழுந்த சில முரண்பாடுகளை நீக்குவதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றியம்-1992 (Indra Sawhney vs Union of India) வழக்கில் அதன் முக்கியத் தீர்ப்பில், மண்டல் ஆணையம் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்புகளில் உள்ள வசதியான பிரிவுகள், "கிரீமி லேயர்" (creamy layer) என்று அழைக்கப்படுபவை, வேலை ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட வேண்டும் நீதிமன்றம் என்று கூறியது.


இதற்குப் பிறகு, செப்டம்பர் 8, 1993 அன்று, OBC இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றதாக இருக்கும் கிரீமி லேயரை அடையாளம் காணும் ஒரு சுற்றறிக்கையை DoPT வெளியிட்டது. இந்தப் பட்டியலில், உயர் அரசியலமைப்புச் சட்ட அதிகாரிகளின் மகன்கள் மற்றும் மகள்கள், அரசு, பொதுத்துறை மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள், தொழில்முறை வர்க்கம், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் ஆகியோருடன் சேர்த்து இதில் அடங்குவர். கூடுதலாக, "வருமானம்/செல்வத் தேர்வு" (income/wealth test) அறிமுகப்படுத்தப்பட்டது.


குறிப்பாக, பெற்றோரில் ஒருவர் குரூப் A அல்லது வகுப்பு I அரசுப் பணிக்கு நேரடியாகச் சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு தனிநபர் OBC ஒதுக்கீட்டிற்குத் தகுதியற்றவர். 40 வயதிற்கு முன்னர் ஒரு பெற்றோர் குரூப் A-க்கு பதவி உயர்வு பெற்றிருந்தால் அதே விதி பொருந்தும்.


பெற்றோர் இருவரும் குரூப் B வேலைகளுக்கு நேரடியாகச் சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு தனிநபர் கிரீமி லேயரின் ஒரு பகுதியாகக் கருதப்படுவார். ஆயுதப்படை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு, லெப்டினன்ட் கர்னல் பதவி வரை மட்டுமே ஒதுக்கீடு கிடைத்தது.


அரசுத் துறைக்கு வெளியே உள்ளவர்களுக்கு, வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், 2017 முதல் உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. இருப்பினும், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இந்த வரம்பில் கணக்கிடப்படவில்லை.


மேலே, உள்ள அளவுகோல்கள் முழுமையானவை அல்ல. குறிப்பாக அரசுத் துறைக்கு வெளியே உள்ள வேலைகளைப் பொறுத்தவரை இது அடங்கும். எனவே, அக்டோபர் 14, 2004 அன்று, DoPT விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இவை “OBC-களிடையே கிரீமி லேயர் தொடர்பான தெளிவுபடுத்தல்கள்” என்று அழைக்கப்பட்டன.


2014-ம் ஆண்டின் பிற்பகுதியில், 2004 “சரிபார்ப்புடன்” (clarification) அவர்களின் இணக்கத்தை தீர்மானிக்க பல்வேறு அதிகாரிகளால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களை DoPT ஆய்வு செய்யத் தொடங்கியது.


2016-24-ஆம் ஆண்டு தொகுதிகளை உள்ளடக்கிய 2015 மற்றும் 2023-ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வுகளுக்கு (Civil Services Examinations (CSE)) இடையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)) 100-க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற வேட்பாளர்களின் சாதிச் சான்றிதழ்களை நிராகரித்தது. இந்த வேட்பாளர்கள் செப்டம்பர் 1993 அளவுகோல்களின் கீழ் OBC ஆகக் கருதப்பட்டிருப்பார்கள். இருப்பினும், புதிய அளவுகோல்களின் கீழ் அவர்கள் கிரீமி லேயரின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டனர். இருப்பினும், இதே நபர்களில் பலர் பிற போட்டித் தேர்வுகளில் தோன்றினர். அந்தத் தேர்வுகளில், அதே சாதிச் சான்றிதழின் அடிப்படையில் அவர்கள் OBC ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.


DoPT-ஆல் கிரீமி லேயரில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தீர்க்கப்படாத வழக்கு, பல்வேறு பங்குதாரர் அமைச்சகங்களிடையே ஆலோசனைகளுக்கு வழிவகுத்தது. பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை 'சமநிலை' (equivalence) நிறுவப்பட்டிருந்தாலும், மற்றவற்றுக்கு இந்த செயல்முறை நிலுவையில் உள்ளது. மேலும், 2004-ல் வெளியிடப்பட்ட "சர்பார்த்தலுக்கு" பரந்த அளவிலான பணியாளர்களின் மகன்கள்/மகள்கள் அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் கிரீமி லேயரில் சேர்க்கப்படுகிறார்கள்.


உங்களுக்குத் தெரியுமா?


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) ஆரம்பத்தில் மத்திய அரசால் 1993-ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் 2018-ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (ரத்து செய்தல்) சட்டத்தின் (National Commission for Backward Classes (Repeal) Act) மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

NCBC "அரசியலமைப்பு (நூற்று இரண்டாவது திருத்தம்) சட்டம், 2018" (Constitution (One Hundred and Second Amendment) Act) மூலம் அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிவு 338-B சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்று அழைக்கப்படும் ஒரு ஆணையத்தை உருவாக்குகிறது.


ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் இந்திய அரசின் செயலாளர் பதவி மற்றும் ஊதியத்தை வகிக்கின்றனர். அவர்களின் சேவை நிலைமைகள் மற்றும் பதவிக்காலம் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.



Original article:
Share:

நிலையான விமான எரிபொருள் -ரோஷ்னி யாதவ்

 நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation (IOC)), பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து, உயிரி எரிபொருளை தயாரிப்பதற்கான நிலையங்கள் சமீபத்தில் பெற்ற சர்வதேச சான்றிதழைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்திற்குள் அதன் பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் வணிக அளவில் நிலையான விமான எரிபொருளை (sustainable aviation fuel (SAF)) உற்பத்தி செய்யயுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், SAF பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

முக்கிய அம்சங்கள் :


Contrails :  கான்ட்ரெயில்கள் - விமானங்களுக்குப் பின்னால், குறிப்பாக அதிக உயரத்தில் உருவாகும் புலப்படும் கோடு வடிவ மேகங்கள் ஆகும்.


1. நீர் நீராவி (water vapour), சூட் (soot), சல்பர் ஏரோசோல்கள் (sulfur aerosols), நைட்ரஜன் ஆக்சைடுகள் (nitrogen oxides (NOₓ)) ஆகியவற்றை வெளியிடுகிறது. இந்த உமிழ்வுகள் கான்ட்ரெயில்களை (Contrails) உருவாக்குவதற்கு பங்களிக்கின்றன. நீர் விமான வெளியேற்றத்தில் உள்ள சிறிய துகள்களை (ஏரோசோல்கள்) சுற்றி நீராவி ஒடுங்கி உறையும்போது உருவாகும் மேகங்கள் கான்ட்ரெயில்கள் ஆகும். இந்த காரணிகள் அனைத்தும் வளிமண்டலத்தில் கூடுதல் வெப்பமயமாதல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலில், இதை நிவர்த்தி செய்ய நிலையான விமான எரிபொருள் (SAF) ஒரு நம்பகமான மாற்றாக உருவெடுத்துள்ளது. விமானப் போக்குவரத்து உமிழ்வைக் குறைக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.


2. விமானத் துறை மற்றும் எரிசக்தி நிபுணர்களின் கூற்றுப்படி, உலகளாவிய விமானத் துறையின் கார்பன் குறைப்பு முயற்சிகளில் SAF மட்டுமே 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


3. நிலையான விமான எரிபொருள் (SAF) என்பது விமான உயிரி எரிபொருள் என்றும் அழைக்கப்படுகிறது. இது நிலையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதன் வேதியியல் அமைப்பு வழக்கமான விமான விசையாழி எரிபொருள் (aviation turbine fuel (ATF)) அல்லது ஜெட் எரிபொருளைப் போன்றது. இருப்பினும், வழக்கமான ஜெட் எரிபொருள் கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது.


4. SAF என்பது ஒரு 'டிராப்-இன்' (drop-in) எரிபொருளாகும். அதாவது விமானத்தின் தற்போதைய இயந்திரங்களில் எந்த மாற்றமும் தேவையில்லாமல் ATF உடன் கலக்கலாம்.


5. SAF-ஐ வெவ்வேறு மூலங்களிலிருந்து தயாரிக்கலாம். அவற்றுள்:


பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் (used cooking oil (UCO)) தாவரங்களிலிருந்து எண்ணெய் நிறைந்த விதைகள், பாசி எண்ணெய்கள் மற்றும் விலங்கு கொழுப்புகள் போன்ற எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் போன்றவை ஆகும்.


நகராட்சி திடக்கழிவு (Municipal solid waste (MSW))


மரக்கழிவுகள், கரும்பு சக்கை, சோள அடுப்பு, உமி மற்றும் வைக்கோல், சர்க்கரைகள் மற்றும் ஸ்டார்ச் போன்ற விவசாய மற்றும் வனவியல் எச்சங்கள் போன்றவைகளும் அடங்கும்.


6. SAF-ஐ உற்பத்தி செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் மூலப்பொருட்களின் வெவ்வேறு சேர்க்கைகளைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், SAF உண்மையிலேயே நிலையானதாக இருக்க, அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் உணவு உற்பத்தியுடன் போட்டியிடவோ, காடழிப்பை ஏற்படுத்தவோ அல்லது பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கவோ கூடாது என்பது முக்கியமாக உள்ளது.


SAF-ன் நன்மைகள்


1. SAF பல நன்மைகளை வழங்குகிறது. அதன் முக்கிய நன்மையானது, உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் திறன் மற்றும் தற்போதைய உலகளாவிய விமானக் கடற்படையுடன் அதன் இணக்கமானது. இதன் பொருள் விமானங்கள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் உள்கட்டமைப்புகளில் SAF-ஐப் பயன்படுத்த மாற்றங்கள் தேவையில்லை.


2. வழக்கமான ஜெட் எரிபொருளுடன் ஒப்பிடும்போது, SAF விமானப் பயணத்தில் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வை 80 சதவீதம் வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


3. விமானப் போக்குவரத்துத் துறையில் எரிபொருள் மூலங்களை பல்வகைப்படுத்துவது இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும், உலகளாவிய எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து துறையைப் பாதுகாக்கவும் உதவும். இதன் விளைவாக, இது மிகவும் நிலையான விமானப் போக்குவரத்துத் துறைக்கு வழிவகுக்கும். இந்த நிலைத்தன்மை விமானப் பயணத்தை மிகவும் மலிவு விலையிலும், அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றக்கூடும்.


4. மேலும், SAF ஐ ஏற்றுக்கொள்வது நிலைத்தன்மைத் துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


SAF-ஐ பரவலாக ஏற்றுக்கொள்வதற்கான தடைகள்


1. இந்த உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான செலவு வழக்கமான எரிபொருட்களின் விலையைவிட இரண்டு மடங்கு அதிகம். இது விமான நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான தத்தெடுப்பை கடினமாக்குகிறது. கூடுதல் செலவை நுகர்வோருக்கு வழங்காமல் அவர்கள் அவற்றை பரவலாகப் பயன்படுத்த முடியாது.


2. SAF-ன் உற்பத்தி, சேமிப்பு, கலத்தல் மற்றும் போக்குவரத்துக்கு புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவது தேவைப்படுகிறது. இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது ஏற்றுக்கொள்வதற்கான ஆரம்ப செலவில் குறிப்பிடத்தக்க தொகையைச் சேர்க்கும்.


3. மற்றொரு முக்கியப் பிரச்சினை SAF உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கிறது. தேவையான மூலப்பொருட்களின் பண்புகள் மற்றும் வகைப்பாடு ஆண்டு முழுவதும் நிலையான விநியோகத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


ISCC CORSIA என்றால் என்ன?


1. இந்த வார தொடக்கத்தில், ஹரியானாவில் உள்ள அதன் பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் SAF உற்பத்திக்கான ISCC CORSIA சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் நிறுவனமாக IOC ஆனது. SAF-க்கான சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான கரிம ஈடுசெய்தல் மற்றும் குறைப்புத் திட்டம் (Carbon Offsetting and Reduction Scheme for International Aviation (CORSIA)) அளவுகோல்களுக்கு இணங்குவதற்கான ஒரு சான்றிதழ் அமைப்பாக ISCC CORSIA உள்ளது.


2. SAF இன் வணிக உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு ISCC CORSIA தேவைப்படுகிறது. குறிப்பாக, CORSIA-ன் கட்டாய கட்டம் தொடங்குவதால், 2027-ம் ஆண்டு உலகளவில் SAF-ஐ ஏற்றுக்கொள்வதற்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும்.


3. சர்வதேச விமானங்களுக்குப் பொருந்தும் CORSIA, 2020 அளவைத் தாண்டி கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பையும் ஈடுசெய்ய உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழி SAF உடன் கலந்த ஜெட் எரிபொருளைப் பயன்படுத்துவதாகும். இது விமான நிறுவனங்கள் தங்கள் உமிழ்வை அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


4. இந்தியாவும் 2027 முதல் கட்டாய கட்டத்திற்கு இணங்க வேண்டும். CORSIA கட்டமைப்பிற்கு இணங்க, இந்தியாவின் தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு (National Biofuel Coordination Committee (NBCC)) சர்வதேச விமானங்களில் தொடங்கி 2027 முதல் SAF-ஐ ஜெட் எரிபொருளுடன் கலப்பதற்கான ஆரம்பகால அறிகுறிக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது.


5. குறிக்கும் இலக்குகள் : 2027-ம் ஆண்டில் 1 சதவீத கலப்பு மற்றும் 2028-ம் ஆண்டில் 2 சதவீதமாக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு விமானங்களுக்கான SAF கலப்பு விதிகளையும் அரசாங்கம் அறிவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சர்வதேச விமானங்களுக்கான கலப்பு 2027-ம் ஆண்டில் தொடங்கிய பின்னரே இவை வரும்.



Original article:

Share: