பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது எவ்வாறு? -டிசிஏ சீனிவாச ராகவன்

 போட்டித் தேர்வில் தகுதி பெறாத மாணவர்களுக்கு, பயிற்சிக்காக அவர்கள் செலுத்திய கட்டணத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை மீண்டும் வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.


50 இடங்களுக்கு 100 போட்டித் தேர்வர்கள்  இருந்தால், வெற்றி வாய்ப்பு 50 சதவீதம் ஆகும். ஆனால், 1,000 இடங்களுக்கு 10,000 போட்டித் தேர்வர்கள்  இருந்தால், வெற்றி வாய்ப்பு 10% ஆக குறைகிறது.


  இங்கு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை நூறு மடங்கு அதிகரித்துள்ளது. இது தற்போதைய காலத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கிடைக்கக்கூடிய வேலைகளை விட அதிகமான போட்டித் தேர்வர்கள் உள்ளனர். இது தீர்க்க முடியாத சிக்கலாக உள்ளது.


வாய்ப்புகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று யோசிக்கும் ஒவ்வொரு நபரும் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பார்கள். இருப்பினும், அவர்கள் தங்களின்  பயிற்சிக்கு பணம் செலுத்தலாம். பயிற்சி நிறுவனங்கள் ஒரு நல்ல  வாய்ப்பை ஏற்படுத்தி தருவது போல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், இந்த பயிற்சி நிறுவனங்கள் 100 சதவீத வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பது இல்லை.


பயிற்சி நிறுவனத்தில் சேர்வது முதலீட்டு ஆலோசனை அல்லது குதிரை பந்தயம் போன்ற முறையை ஏற்படுத்துகிறது. தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை புறக்கணிக்கின்றனர். பந்தயம் கட்டவோ அல்லது பயிற்சி நிறுவனத்தில் சேரவோ யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். இவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பொறுத்தது.


பயிற்சி நிறுவனங்கள் பந்தய முறையில் இருந்து  முற்றிலும் வேறுபட்டவை. இத்தனை நிறுவனங்கள் தங்களது அமைப்பில் நிறைய தந்திர முறைகளை  வைத்துள்ளனர். இந்நிறுவனங்கள் ஒரு புத்தகத் தயாரிப்பாளரைப் போன்று செயல்படுகிறது. ஒரே ஒழுங்குமுறை சிக்கல் என்னவென்றால், கட்டணங்கள் நியாயமான முறையில் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும்,   


தோல்வியுற்ற விண்ணப்பதாரர்கள் தங்கள் கட்டணத்தில் 60% திரும்பப் பெறுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி நிறுவனம் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் செலுத்திய தொகையை பின்பு வழங்க வேண்டும். இந்த அணுகுமுறை விண்ணப்பதாரர்களுக்கும் பயிற்சி நிறுவனத்திற்கும் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்தும்.



Original article:

Share:

உள் இட ஒதுக்கீடு மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எவ்வாறு நிலையான சமத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார் -அபூர்வா விஸ்வநாத் , அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 கடந்த ஏழு ஆண்டுகளாக, தலைமை நீதிபதி சந்திரசூட் பல தீர்ப்புகள் மூலம் இடஒதுக்கீடு என்பது  தகுதியின் ஒரு பகுதி, அவை விதிவிலக்கு அல்ல என்று வலியுறுத்தினார்.


பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினரிடையே (Scheduled Tribes) உள் இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையில் சமத்துவத்திற்கான  மைல் கல்லைக் குறித்தது.  இத்தீர்ப்பில்,  தலைமை நீதிபதி சந்திரசூட், நிலையான சமத்துவத்தை (substantive equality)  உயர்த்திக் காட்டி உள்ளார்.  மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வரலாற்று அநீதிகளை சட்டம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும்  கூறியுள்ளார் .


அரசியலமைப்புச் சட்டம், இன்று சமத்துவ ஏற்பாட்டின் மூலம் மிகக் கணிசமான வாய்ப்புக்களை முன்னெடுத்துச் செல்கிறது. இடஒதுக்கீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அதன் நன்மைகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்குத் கிடைப்பதை உறுதிசெய்கிறது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இடஒதுக்கீடு குறித்த சட்டத்தை நீதிமன்றம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு சமத்துவத்துவம் என்பது முக்கியமான கருத்து.


இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வை கடந்த ஏழு ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொடர்ச்சியான தீர்ப்புகளில், இடஒதுக்கீடு என்பது தகுதியின் ஒரு அம்சம், தகுதிக்கு விதிவிலக்கு அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் சமத்துவத்தைப் பற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட்  1ல்

வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு (sub-classification) தொடர்பான தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் வரலாற்று ரீதியாக நடவடிக்கையை எவ்வாறு விளக்கியது என்பதை அவர் பகுப்பாய்வு செய்துள்ளார்.


சமத்துவத்தை கட்டுப்படுத்துவது 


உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு முறையான மற்றும் வரம்புக்குட்பட்ட அணுகு முறையை எடுத்தது. அதில் இடஒதுக்கீட்டை சம வாய்ப்புக் கொள்கைக்கு விதி விலக்காகக் கருதியது.  தி ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் vs செம்பகம் துரைராஜன் (1951) (The State of Madras vs Champakam Dorairajan) வழக்கில், நீதிமன்றத்தின் பார்வையில் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியது.  அரசியலமைப்பின் 16(4) வது பிரிவு போன்று இதை அனுமதிக்கும் வெளிப்படையான விதி எதுவும் இல்லை என்றது. 1951-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பி. வெங்கடரமண vs தி ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் (B. Venkataramana vs The State of Madras), வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில், பொது வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு ஹரிஜனங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை மட்டுமே "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" (backward classes) என்று கருதலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இந்த தீர்ப்புகள், 1951-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை பாராளுமன்றம் இயற்றுவதற்கு வழிவகுத்தது. இது பிரிவு 15(4)யை சேர்த்தது. இது மதம், இனம், சாதி, மொழி, அல்லது எந்த குடிமகனுக்கும் எதிராக பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் பிரிவு  29 க்கு விதிவிலக்காகும். பிரிவு  29  மதம், இனம், சாதி அல்லது மொழி அடிப்படையில் கல்வி சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது.


 இந்திரா சாவ்னி vs யூனியன் ஆஃப் இந்தியா (1992)  (Indra Sawhney vs  Union of India) வழக்கின்  தீர்ப்பில் சமத்துவக் கொள்கைக்கு விதிகள் 15(4) மற்றும் 16(4) விதிவிலக்குகள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் இடஒதுக்கீடு   வரம்பை  50%  ஆக நிர்ணயம் செய்தது.


சமத்துவத்தின் ஒரு அம்சமாக, 1958-ஆம் ஆண்டு, மைசூர் மாநிலம் பிராமண சமூகத்தைத் தவிர அனைத்து சமூகங்களுக்கும் கல்வி நிறுவனங்களில் 75% இடங்களை ஒதுக்கியது. பின்னர், எம் ஆர் பாலாஜி v மைசூர் மாநிலம் (1962) (M.R .Balaji  vs  State of Mysore) வழக்காக  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம் முதல் முறையாக இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பை பரிந்துரைத்தது. 2019-ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்ட 10% பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (Economically Weaker Section (EWS)) ஒதுக்கீட்டைத் தவிர்த்து, இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

கேரள மாநிலம் எதிர் vs  தாமஸ்  (1975) (State of Kerala  vs  N.M Thomas) என்ற வழக்கின் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் சமத்துவக் குறியீட்டிற்காக தீர்ப்பை வழங்கியது என தலைமை நீதிபதி  சந்திரசூட் கூறினார். பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு பட்டியல் இனத்தவருக்கு (Scheduled Castes) அரசுப் பணிகளுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்ட கேரளச் சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. சம வாய்ப்புக் கொள்கைக்கு சட்டம் விதிவிலக்கல்ல என்று தீர்ப்பளித்தது.


திறனைக் கட்டுப்படுத்துதல்


அரசியலமைப்பின் 335வது பிரிவு வேலைகளில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) இடஒதுக்கீட்டை அனுமதிக்கிறது ஆனால், இது நிர்வாகத் திறனைப் பாதிக்கக் கூடாது என்கிறது. இடஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்ற விவாதங்களில், இடஒதுக்கீடுகள் செயல்திறனைப் பாதிப்பதாகக் கருதப்பட்டது,


இந்த பார்வை பல தீர்ப்புகளில் பிரதிபலித்தது, இதில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை நீக்கியது. 1992-ஆம் ஆண்டு இந்திரா சாவ்னி தீர்ப்பில், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவது நிர்வாகத்தில் திறமையைக் குறைக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


1995-ஆம் ஆண்டில், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடுகளை அனுமதிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கேட்ச்-அப் விதி (catch-up rule) ரத்து செய்யப்பட்டது. "செயல்திறனை" பராமரிக்க அரசியலமைப்பு ரீதியான நடைமுறை செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


கேட்ச்-அப் (catch-up rule) விதியின் கீழ், இடஒதுக்கீடு காரணமாக, பட்டியலின பிரிவு நபர், பொதுப்பிரிவில் தனது மேலதிகாரியை விட முன்னதாக பதவி உயர்வு பெற்றிருந்தால், பொதுப்பிரிவு நபர், இடஒதுக்கீடு பிரிவுக்கு மேல் மூப்புத்தன்மையை மீண்டும் பெற அனுமதிக்கப்படுவார். 


அரசியலமைப்பு 77வது திருத்தச் சட்டம் (1995), "தொடர்ச்சியான பணிமூப்பை "(consequential seniority) அனுமதிக்கும் பிரிவு 16(4A)யை சேர்த்தது. அடுத்த பதவி உயர்வுக்கு, பொதுப் பிரிவில் ஒதுக்கப்பட்ட பிரிவு நபர், முன்னதாக பதவி உயர்வு பெற்றதன் மூலம் தனது சக நபரை விடப் பெற்ற மூப்பு தக்கவைக்கப்படும். 2006-ஆம் ஆண்டில், திறன் மூப்பு குறித்த சட்டம் உறுதி செய்யப்பட்டது. ஏனெனில், அது நிர்வாகத் திறனைச் சற்றுக் குறைத்தது. ஆனாலும்  அதை முழுமையாக நீக்கவில்லை.


திறமையை சிறிது அளவு பாதித்தாலும், உண்மையான சமத்துவத்தை உறுதிப்படுத்த, இடஒதுக்கீடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள் முடிவு செய்ததாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் தீர்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் தகுதி பற்றிய விவாதத்தை மறுவரையறை செய்து. இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கான சிறப்பு விதிவிலக்காக இல்லாமல், உண்மையான சமத்துவத்திற்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என்றார்.


பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) மக்களுக்கான மதிப்பீட்டுத் தரநிலைகள், "திறமையின்மைக்கு" வழிவகுக்கிறது என்ற விமர்சனத்திற்கு தீர்வு காண கீழ்கண்ட கூற்றை கூறியுள்ளார், 

"தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது அதிக திறன் பெற்ற நபர் என்றும் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெறுபவர் திறனற்றவர் என்றும் அர்த்தம் இல்லை என்கிறார். மாறாக, நிர்வாகத்தினை  திறம்பட வைத்திருக்க குறைந்தபட்ச மதிப்பெண்ணை எட்டினால் போதும்” என்கிறார்.


இடஒதுக்கீடு திறமையின்மையை ஏற்படுத்துகிறது என்ற கருத்து, உண்மையில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) பிரிவினருக்கு, பதவி உயர்வு கிடைப்பதைத் தடுக்கிறது என்று தலைமை நீதிபதியின் முக்கிய கருத்து. அதனால் தான் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார். இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு எதிரானது என்ற கருத்தை அரசியலமைப்புத் திருத்தங்கள் தெளிவாக நிராகரிக்கின்றன என்று தலைமை நீதிபதி வாதிடுகிறார்.



Original article:

Share:

கட்சித்தாவல் தடை சட்டம் (Anti-defection law) : தனிச் சிறப்புகள், வரம்புகள் மற்றும் சீர்திருத்தங்கள்

 ஒரு நிலையான அரசாங்கம் ஆட்சியில் தொடரவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாறுவதை தடுக்க கட்சித்தாவல் தடை சட்டம் (Anti-defection law) உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது? சட்டத்தின் முக்கிய வரம்புகள் என்ன? பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் அதன் வரம்புகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன?


 இந்திய தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே குழுவை அசல் சிவசேனா கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று முடிவு செய்தது. அவர்களுக்கு கட்சியின் பெயரும் அதன் சின்னமான வில்லும் அம்பும் வழங்கப்பட்டது. இதன் மூலம்,  ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு, பாலாசாகேப் தாக்கரே நிறுவிய கட்சியின் அசல் வழித்தோன்றலாகவும் அங்கீகரிக்கப்பட்டது. 


மார்ச் 2021-ல், மாநிலங்களவையில் நியமனம் செய்யப்பட்ட 12-உறுப்பினர்களில் எட்டு பேர்  பாஜகவில் இணைந்தனர். கூடுதலாக, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வபன் தாஸ்குப்தா தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்பு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால் அவர் ராஜினாமா செய்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.


மக்களவை மற்றும் மாநிலங்களவை வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அடிக்கடி கவிழும் நிலை ஏற்பட்டது. 


கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-defection law) என்றால் என்ன? அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது. சட்டத்தில் சீர்திருத்தம் தேவையா?


கட்சித்தாவல் தடை சட்டம் (Anti-defection law)என்றால் என்ன ?


1985-ஆம் ஆண்டில், 52-வது அரசியலமைப்பு திருத்தத்தினால், பத்தாவது அட்டவணை மூலம் கட்சித்தாவல் தடை  சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டவணையின்படி, மாநில சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது அரசியல் கட்சியிலிருந்து தானாக முன் வந்து ராஜினாமா செய்தாலோ அல்லது அவரது கட்சி வழங்கிய அறிவுறுத்தலுக்கு மாறாக சபையில் வாக்களிக்காமல் இருந்தாலோ அவையில் இருந்து நீக்கப்படலாம். 


ஒரு கட்சி கொறடா (whip) வாக்களிக்கும் வழிமுறைகளை அந்த கட்சிக்கு வழங்குகிறார். கொறடா என்பவர் ஒரு அரசியல் கட்சி தனது உறுப்பினர்களை சபையில் நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்படும் நபர். சட்டமன்றக் கட்சி (legislature party) என்பது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களை மட்டுமே குறிக்கிறது. அரசியல் கட்சி (political party) என்பது அதன் உறுப்பினர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் உட்பட ஒரு கட்சியின் முழு அமைப்பாகும். குறிப்பாக, 1967-ஆம் ஆண்டு  பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிலையான ஆட்சியை உறுதிப்படுத்த கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. 



நியமனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை சட்டம் எவ்வாறு கையாள்கிறது?


மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் அனுபவமுள்ள நபர்கள் நல்ல அறிவுடன் முக்கியமான விவாதங்களில் பங்கேற்க முடியும் என்று கோபால்சாமி அய்யங்கார் (N. Gopalswami Ayyangar) கூறினார். இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் விதிவிலக்கான சாதனை என்பது பொதுவான அளவுகோலாகும். இதன் விளைவாக, மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டனர். 


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், வேட்புமனு தாக்கல் செய்த ஆறு மாதங்களுக்குள் அரசியல் கட்சியில் சேரலாம். ஆனால், முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு கட்சியில் சேர்ந்தால், அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம். மேலும், கட்சி  கொறடாவின் உத்தரவை மீறியதற்காக அவர்கள் தகுதி நீக்கத்தை சந்திக்க நேரிடும்.


தகுதி நீக்கம் செயல்முறை (Process of disqualification)


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான செயல்முறை:


1. மனு (Petition): மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரிடம் மற்றொரு உறுப்பினரின் கட்சித்தாவல் குறித்து புகார் தாக்கல் செய்வதன் மூலம் எந்தவொரு சபை உறுப்பினரும் செயல்முறையைத் தொடங்கலாம். சபாநாயகரோ அல்லது தலைவரோ தகுதி நீக்க நடவடிக்கையை தாங்களாகவே தொடங்க முடியாது. ஒரு உறுப்பினர் முறையான புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கையை தொடங்க முடியும்.


2. முடிவெடுக்கும் அதிகாரம்: மக்களவை சபாநாயகர், மாநிலங்களவையின் தலைவர் அல்லது மாநில சட்டப் பேரவைத் தலைவர், கட்சித் தாவல் தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பார்.


3. காலக்கெடு: முடிவெடுப்பதற்கு சட்டம் கடுமையான காலக்கெடுவை அமைக்கவில்லை.  இது தாமதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு வழிவகுக்கிறது. 


4. நீதிமன்ற மறு ஆய்வு (Judicial Review): சபாநாயகரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். முக்கியமான நீதிமன்ற கிஹோடோ ஹோலோஹன் எதிராக ஜாசில்ஹு மற்றும் பலர் (Kihoto Hollohan vs. Zachillhu (1992)) வழக்கு  பத்தாவது அட்டவணையின் ஒரு பகுதியான கட்சித் தாவல் தடைச் சட்டம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. இந்தச் சட்டம், பேச்சுரிமை மற்றும் வாக்களிக்கும் சுதந்திரம் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளை (fundamental rights) மீறாது என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. 


தகுதி நீக்கம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், நீதிமன்றங்கள் தவறான நோக்கங்கள், கடுமையான தவறுகள் அல்லது நியாயமான நடைமுறைகளை மீறும் வழக்குகளில் மட்டுமே தலையிடும். 


விதிவிலக்குகள் (Exceptions): சட்டமன்றக் கட்சியில் மூன்றில் ஒரு பங்கு பிரிந்து புதிய குழுவை உருவாக்கினால் உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். இந்த விதி 2003-ல் 91-வது திருத்தத்தின் (91st Amendment in 2003) மூலம் நீக்கப்பட்டது.


இரண்டாவதாக, ஒரு சட்டமன்றக் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வேறு கட்சியில் சேர ஒப்புக்கொண்டால், அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க சட்டம் அனுமதிக்கிறது. இது போன்ற சூழலில் அந்த உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படமாட்டர்கள்.  


உதாரணத்திற்கு:


 2021-ல், மேகாலயாவில் உள்ள 17-காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில்  12 பேர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். 2019-ல், ராஜஸ்தானில் உள்ள 6 பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும் காங்கிரஸில் இணைந்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறில் நான்கு பேர் பாஜகவில் இணைந்தனர். சாதிக் அலி vs இந்திய தேர்தல் ஆணையம் (1971)  (Sadiq Ali versus Election Commission of India (1971)) வழக்கில் எந்தப் பிரிவை அசல் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கிறது என்பதைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு மூன்று-சோதனை சூத்திரத்தை (three-test formula) நிறுவியது.  எந்தப் பிரிவை அசல் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய இந்த சூத்திரம் உதவுகிறது.


மூன்று அடிப்படை சோதனைகள்:


1. நோக்கங்கள் மற்றும் நோக்கங்களின் சோதனை: இது கட்சியின் இலக்குகளை ஆராய்கிறது.

2. கட்சி அரசியலமைப்பின் சோதனை: இது உள்கட்சி ஜனநாயகத்தை சரிபார்க்கிறது.

3. பெரும்பான்மைக்கான சோதனை : இது சட்டமன்ற மற்றும் கட்சி நிர்வாகிகள் இரண்டிலும் எந்தக் குழு அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்கிறது. முதல் சோதனை பெரும்பாலும் போட்டி குழுக்களிடமிருந்து போட்டியிடும் உரிமைகோரல்களை உள்ளடக்கியது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாததால் தான் பெரும்பாலான கட்சி தாவல்கள் நடக்கின்றன.

 

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் சில வரம்புகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன:


கட்சியின் சர்வாதிகாரம் (Dictatorship of Party): கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) அரசியல் உறுதித்தன்மையைக் காக்க வேண்டும். இது ஜனநாயகக் கொள்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், சட்டம் அவர்களை வாக்காளர்களுக்குப் பதிலாக கட்சித் தலைவர்களிடம் அதிக பொறுப்புக்கூற வைக்கிறது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் (representative democracy) முக்கிய யோசனையை சவால் செய்கிறது.


வரையறுக்கப்பட்ட அரசியல் தேர்வு: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி சுயேச்சை உறுப்பினர்கள் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தவுடன் அவர் நீக்கம் செய்யப்படுவர். சுயேச்சை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இந்த நடைமுறை பொருந்தும். மறுபுறம், நியமன உறுப்பினர்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன் ஆறு மாத அவகாசம் உள்ளது. இது சுயேச்சையான பிரதிநிதிகளுக்குக் கிடைக்கும் அரசியல் விருப்பங்களைப் பற்றிய கவலையை உருவாக்குகிறது.


பகுதி சட்டம் (Partial Law):


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் வழக்குகளை கையாள்வதற்கான தெளிவான காலக்கெடு சட்டத்தில் இல்லை. இது உறுப்பினர்களின் பெரிய குழுக்களை கட்சிகளை மாற்ற அனுமதிக்கிறது. இது சூழலுக்கு ஏற்ற கூட்டணிகள் மற்றும் "குதிரை பேரத்திற்கு” (horse-trading) வழிவகுக்கிறது. இது அரசியல் அமைப்பை சீர்குலைக்கலாம்.  சட்டம் தனிப்பட்ட கட்சித் தாவல்களை மட்டுமே தடுக்கிறது. ஆனால், பெரிய அளவிலான கட்சித் தாவல்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, உள்கட்சி ஜனநாயகம், ஊழல் மற்றும் தேர்தல் மோசடி போன்ற பிரச்சினைகளை சட்டம் கையாளவில்லை. தனிப்பட்ட உரிமைகளுடன் கட்சி விதிகளை சமநிலைப்படுத்தவும், ஜனநாயகம் மற்றும் அரசியல் உறுதித்தன்மையை பாதுகாக்க  சட்டத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


கட்சித் தாவல் தடைச் சட்டங்களில் மேற்கூறிய வரம்புகளை நிவர்த்தி செய்ய ஏதேனும் குழுக்கள் சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளனவா? 


1. தினேஷ் கோஸ்வாமி கமிட்டி (1990) (Dinesh Goswami Committee (1990)) தகுதி நீக்கம் பற்றிய பரிந்துரைகளை வழங்கியது. இரண்டு வழக்குகளில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. முதலில், ஒரு உறுப்பினர் தானாக முன்வந்து அரசியல் கட்சியை விட்டு வெளியேறும்போது. இரண்டாவதாக, குறிப்பிட்ட கட்சி உத்தரவுகளுக்கு எதிராக உறுப்பினர் வாக்களிக்கும்போது, தீர்மானங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, பண மசோதாக்கள் மற்றும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் வாக்குகள் ஆகியவை அடங்கும்.  

சட்டப்பூர்வ தகுதி நீக்கம் குறித்த முடிவை சபாநாயகரோ அல்லது அவைத் தலைவரோ எடுக்கக்கூடாது. மாறாக, அது சூழ்நிலையைப் பொறுத்து ஜனாதிபதி அல்லது ஆளுநரால் செய்யப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய தகுதியிழப்புகளைப் போலவே, தகுதி நீக்கம் தொடர்பான கேள்வியையும் தேர்தல் ஆணையம் கையாள வேண்டும்.


2. இந்திய சட்ட ஆணையம் (2015)  (Law Commission of India (2015)) ஒரு முன்மொழிவைக் கொண்டிருந்தது. தகுதி நீக்க மனுக்களில் யார் முடிவெடுப்பார்கள் என்பதை அவர்கள் மாற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்தது. தற்போது, ​​தலைமை அதிகாரிக்கு (சபாநாயகர் அல்லது தலைவர்) இந்த அதிகாரம் உள்ளது. அதை ஜனாதிபதி அல்லது ஆளுநரிடம் வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள்.


3. 2020-ல், உச்ச நீதிமன்றம் ஒரு பரிந்துரை செய்தது. இது கே.எம்.சிங் vs மணிப்பூர் சபாநாயகர் (K. M. Singh v. Speaker of Manipur case (2020)) வழக்கில்,  அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. இந்த மாற்றம் தகுதி நீக்க மனுக்கள் மீதான சபாநாயகரின் அதிகாரத்தை மாற்றும். இந்த மாற்றம் நீதிமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும்.


4. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குழுவை அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்தியாவின் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றார். மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் (Rahul Narwekar) இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார். 84-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பிர்லா இதனை அறிவித்தார். அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை (Tenth Schedule) ஒரு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்களால் கட்சி விலகுவதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க அதில் கடுமையான விதிமுறைகள் உள்ளன.


கட்சித் தாவல் தடைச் சட்டம் ஒரு விவாதப் பொருளாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை நிலையாக வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதன் மூலம் இதைச் செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக சிலர் பார்க்கிறார்கள். எனினும், அரசியல் அமைப்பை நிலையாக வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். தனிப்பட்ட லாபத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.



Original article:

Share:

ஹசீனாவின் வீழ்ச்சி ஏன் ஆச்சரியமளிக்கவில்லை? மற்றும் இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும்?

 ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஆட்சியின் வீழ்ச்சி எச்சரிக்கைக்கான அறிகுறிகளைக் கவனிக்காதவர்களை மட்டுமே ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும். இப்போது, அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், சேதத்தைக் குறைக்க இந்தியா கடினமாக உழைக்க வேண்டும். பொதுவாக, அண்டை நாடுகளின் உறவின் முக்கிய அம்சங்களைப் பாதுகாப்பது முக்கியமாகும். 


ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி, ஆகஸ்ட் 5-ம் தேதி இருவரும் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கினர். இதற்கிடையில், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் டாக்காவில் உள்ள அவரது வீட்டை சூறையாடி, பொருட்களை எடுத்துச் சென்றனர். 


வங்காளதேச இராணுவத்தின் தலைவர் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் (General Waker-uz-Zaman), தொலைக்காட்சி உரையில் நாட்டின் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார்.  எதிர்காலத்தில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரைக்கு முன், ஜெனரல் வேக்கர் (General Waker) இராணுவ தலைமையகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் வங்காளதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும், சில சிந்தனையாளர்களும் கலந்து கொண்டனர்.


தற்போது, வங்காளதேசத்திற்கு எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது?  பல வாரங்களாக நடந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தமை ஆகியவை இந்த நிகழ்வுகளுக்கு வழிவகுத்தன. 76 வயதான ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சி எச்சரிக்கையான அறிகுறிகளைப் புறக்கணித்தவர்களை மட்டுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். 


வங்காளதேசத்தின் பல பகுதிகளில் நிலைமை மோசமாகி வருகிறது. இதை உலகம் பல மாதங்களாக, பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறது. அரசியல் ரீதியாக, 2014, 2018 மற்றும் 2024 தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, எதிர்கட்சியினர் ஒன்று தேர்தல்களைப் புறக்கணித்தனர் அல்லது ஒடுக்குமுறை காரணமாக வெளியேற்றப்பட்டனர். இந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் (Awami League) முறையே 300 இடங்களில் 234, 257 மற்றும் 224 இடங்களை வென்றது.


ஹசீனாவின் கட்சியான, அவாமி லீக் (Awami League) தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஹசீனாவின் ஆட்சியில், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு இடமளிக்கவில்லை. பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (Bangabandhu Sheikh Mujibur Rahman) மகளின் தனிப்பட்ட சர்வாதிகாரம் (personal authoritarianism) பல ஆண்டுகளாக சீராக வளர்ந்துள்ளது. அவர் ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் சின்னமாக பார்க்கப்பட்டார். அவரது, சர்வாதிகார ஆட்சியில் அரசியல் எதிரிகள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்பாளர்கள் மத்தியில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவை, மர்மமான முறையில் காணாமல் போதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. பின்னர், அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் விமர்சகர்கள், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஹசீனாவின் முக்கிய போட்டியாளரான, நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 78 வயதான இவர், ஊழல் குற்றச்சாட்டில் 2018-ல் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கலீதா அவர்கள் மருத்துவமனையில் உள்ளார். மேலும், வங்காளதேச தேசியவாத கட்சியின் (BNP) உயர்மட்ட தலைவர்கள் சிறையில் உள்ளனர். கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். 


கோவிட்-19 தொற்றுநோய் வங்காளதேசத்தின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது மற்றும் அதன் வளர்ச்சிக்கான மாதிரியை நிறுத்தியது. மற்ற நாடுகளின் தேவையின் குறைவால், வங்காளதேசத்தின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலை பாதித்தது. நாட்டின் உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கு இந்தத் தொழில் முக்கியமானதாக இருந்தது. 2022 முதல், டாலருடன் ஒப்பிடும்போது வங்காளதேச டாக்காவின் மதிப்பானது 40% க்கும் அதிகமாக அளவில் தேய்மானம் அடைந்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கு மேல் குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டில், வங்காளதேசத்தின் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து $4.7 பில்லியன் கடன் வாங்கியுள்ளது. ஆண்டின் இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கடன் $100 பில்லியனைத் தாண்டியது. இதனால், பணவீக்கம் தற்போது 10%க்கு அருகில் உள்ளது. 

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) தரவுகளின்படி, வங்காளதேசத்தில் 170 மில்லியன் மக்களில் கால் பகுதியினர் 15 முதல் 29 வயதுடையவர்கள் ஆவார் என  வங்காளதேச புள்ளியியல் பணியகத்தின் (Bangladesh Bureau of Statistics)  தரவை பிரோதோம் ஆலோ (Prothom Alo) நாளிதழ் மேற்கோள் காட்டியுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் 1.8 முதல் 1.9 மில்லியன் இளைஞர்கள் வேலை சந்தையில் (job market) நுழைகிறார்கள். இதற்கிடையில், பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான வேலை பற்றாக்குறையின் போது, ​​ஜூன் 5 அன்று வங்காளதேச உயர் நீதிமன்றம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது. இந்த முடிவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது. இறுதியில் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க வழிவகுத்துள்ளது.   

 

வங்கதேசத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்த முற்போக்கு சக்திகளுக்கு திங்கள்கிழமை ஒரு சோகமான நாளாக இருந்தது. நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர், வங்கதேச தேசியவாதத்தின் மதச்சார்பற்ற மற்றும் நவீனமயமாக்கல் வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், அவரது உறுதியான அரசியலானது தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான பாதுகாப்பாக செயல்பட்டது. இந்த தீவிரவாதம் ஏற்கனவே, இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்புக்கான சவால்களை உருவாக்கும் திறனைக் காட்டியுள்ளது. மேலும், வங்காளதேசத்தையே பின்னோக்கிய திசையில் கொண்டு செல்கிறது. 


இருப்பினும், வங்காளதேசத்தின் முழுமையான வரலாற்றின் தனது சொந்த பதிப்பை விமர்சகர்கள் மீது வளர்ப்பதில் ஹசீனாவின் இடைவிடாத முயற்சி மற்றும் அதன் மறுபக்கத்துடன் ஈடுபட மறுத்தது.  


வங்காளதேசம் போராட்டம் மற்றும் ஆழமான சமூக பிளவுகளுக்கு மத்தியில் பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே, நாடு மதச்சார்பற்ற தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் தேசியவாதிகள் என்று பிளவுபட்டது. 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரை ஆதரிக்காத முஸ்லீம் தேசியவாதிகள் இடையே பிரிக்கப்பட்டுள்ளது.  

 

பல ஆண்டுகளாக, ஹசீனா முஸ்லீம் தேசியவாதிகளையும், அவர்களின் வாரிசுகளையும் இரும்புக் கரம் கொண்டு கையாண்டார். மேலும், ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) மற்றும் பிற இஸ்லாமிய சக்திகளால் போராட்ட மாணவர்களின் அணிகள் ஊடுருவியதாக அவர் மீண்டும் மீண்டும் கூறினார். 


தெருவோர வன்முறைக்கான ஆரம்ப எதிர்வினையாக, போராட்டக்காரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒதுக்கீட்டை ஏன் வெறுக்கிறார்கள் என்றும், அதற்குப் பதிலாக வங்காளதேசத்தில் பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையைப் பயன்படுத்தி, "இராசாக்கர்களின் பேரக்குழந்தைகளுக்கு" (grandchildren of razakars) நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்களா என்றும் ஹசீனா கேட்டிருந்தார். இராசாக்கர்கர்கள் என்பது, பங்கபந்து தலைமையிலான தேசியவாத இயக்கத்தை நசுக்க பாகிஸ்தான் இராணுவத்தால் அமைக்கப்பட்ட மிருகத்தனமான கூலிப்படையை குறிக்கிறது. 


இறுதியில், அவரது ஜனநாயக விரோத ஆட்சி, இஸ்லாமிய, இந்து விரோத சிறுபான்மையினர் மற்றும் பாகிஸ்தான் சார்பு அரசியலை அவரது நாட்டில் திரும்புவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. பிரிவினை அரசியலில் வேரூன்றிய வங்காளதேச சமூகத்திற்குள் பிளவு நீடிக்கிறது. திங்கட்கிழமை நடந்த சம்பவங்களில் இது தெளிவாகத் தெரிந்தது. 


இந்தியாவானது, இப்போது ஒரு வலிமையான இராஜதந்திர சவாலை எதிர்கொள்கிறது. ஹசீனா பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான உறவுகள் சீராக மேம்பட்டன. இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு (anti-India extremists) எதிரான அவரது நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. சமீபத்திய நெருக்கடி வங்காளதேசத்தின் உள்விவகாரம் என்று இந்தியா கூறிவருகிறது. 


ஹசீனாவின் சர்வாதிகாரத்திலிருந்து விலகி இருப்பதே சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய சவாலாக உள்ளது. அதே நேரத்தில், வங்காளதேசத்துடன் சிறந்த உறவை உருவாக்க அவருடன் தொடர்ந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. ஹசீனாவின் ஆட்சியின் கீழ் இந்த உறவை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டாலும், இதன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க செலவுகளும் உள்ளன. 


இப்போது, ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும், சேதத்தை குறைக்க இந்தியா தீவிரமாக செயல்பட வேண்டும். பொதுவாக, அண்டை நாடுகளின் உறவின் முக்கிய அம்சங்கள் பாதுகாக்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது குறுகிய காலத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.  



Original article:

Share:

நீட் தேர்வை எவ்வாறு மறுசீரமைக்கப்பட வேண்டும்? -பாலாஜி சம்பத்

 தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency) வெளியிடப்பட்ட NEET-UG இறுதி முடிவுகளின் தரவு இந்த ஆண்டு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 15% அதிகமாகும்.


ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை அன்று, உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செயல்முறையை முழுமையாக மறுசீரமைக்க அரசுக்கு காலக்கெடு விதித்தது.


இதற்கான, மறுசீரமைப்பு என்னவாக இருக்க வேண்டும்? இதில் சில முக்கிய மாற்றங்கள் தேவை.


தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள NEET-UG இறுதி முடிவுகளின் தரவு, இந்த ஆண்டு தேர்வு எழுதுபவர்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 லட்சம் தேர்வர்கள் அதிகரித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 15% அதிகரித்துள்ளது. இது ஒரு முறை நிகழ்வல்ல, ஒரு காலத்தின் தொடர்ச்சியாக உள்ளது.


2021-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் NEET தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட விகிதத்தில் அதிகரித்து வருவதாக தேசிய தேர்வு முகமையின்  தரவு காட்டுகிறது. 2021-ல் 15.9 லட்சம் மாணவர்கள் NEET தேர்வு எழுதினர். இந்த எண்ணிக்கை 2024-ல் 23.3 லட்சமாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு 12% ஒட்டுமொத்த அதிகரிப்பைக் காட்டுகிறது.


நாடு முழுவதும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், நீட் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அதிகரிப்பு குறிப்பாக செங்குத்தானது (particularly steep). இந்த செங்குத்தான உயர்வின் பெரும்பகுதி பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளது. அங்கு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 25-30% உயர்ந்துள்ளது.


12-ம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக நீட் தேர்வுக்கு முயற்சிப்பதால் இந்த உயர்வு இல்லை. மாறாக, மாணவர்கள் நீட் தேர்வை பலமுறை மீண்டும் எழுதுவதே இதற்கு முக்கிய காரணமாகும். முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்த பல மாணவர்கள் சமீபத்திய 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நீட் தேர்வை மீண்டும் எதிர்கொள்கிறார்கள். இதனால், நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்த போக்கு ஏன் ஆபத்தானது?


இரண்டு அல்லது மூன்று முறை தேர்வை மீண்டும் மீண்டும் எழுதுபவர்கள் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை விட நியாயமற்ற விதத்தில் நன்மையைக் (unfair advantage) கொண்டுள்ளனர். மறுபடி எழுதுபவர்கள், நீட் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாம். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகும் போது பள்ளிக்குச் சென்று வாரியத் தேர்வுகளுக்குப் (board exams) படிக்க வேண்டும். திரும்பத் திரும்ப மாணவர்கள் அதிகரிப்பதால், 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இதே நிலை நீடித்தால், விரைவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை. மேலும், பல வருடங்கள் திரும்பத் திரும்ப ஆரம்ப நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


இது 12-ம் வகுப்பு மாணவருக்கு அநீதியாக இருப்பதைத் தவிர, இந்த முறை மீண்டும் மீண்டும் எழுதுபவர்களுக்கும் மோசமானது. இதில், லட்சக்கணக்கான மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்குத் தள்ளுவது, அவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெறுவது அவர்களின் மிகவும் பயனுள்ள கற்றல் ஆண்டுகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி அல்ல. 


மருத்துவ இடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வை நடத்தினாலும், பெரும்பாலான மாணவர்களால் மருத்துவ சீட் பெற முடியாது. தற்போதைய அமைப்பு மாணவர்கள் தங்கள் வாழ்வின் பொன்னான ஆண்டுகளை தேர்வுகளுக்குத் தயாராவதில் வீணடிக்க ஊக்குவிக்கிறது.


தற்போது, ​​நீட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் (cut-off) மிகவும் குறைவாக 720-க்கு 164 மதிப்பெண்கள் ஆக உள்ளது. அதாவது, இதில் 13 லட்சம் மாணவர்கள் சுமார் 1.1 லட்சம் மருத்துவ இடங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே, கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 13 மடங்கு தகுதி பெற்றுள்ளது. 


இதனால், நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்ற நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவனுக்கு மருத்துவ சீட் கிடைக்காமல், 200 மதிப்பெண்களுக்குக் குறைவான மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவன் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. NEET தேர்வுக்கான தகுதி மதிப்பெண் (cut-off) குறைவாக இருக்க தனியார் கல்லூரி நிர்வாகத்தின் வெளிப்படையான அழுத்தம் உள்ளது. இருப்பினும், இந்த முறை பெரும்பாலான மாணவர்களுக்கு நியாயமற்றது.


இதைத் தீர்க்க, நீட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் (cut-off) அளவை கணிசமாக உயர்த்த வேண்டும். தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை, கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு குறைவாக இருப்பதை இது உறுதி செய்யும். தற்போது, ​​1.1 இலட்சம் இடங்கள் உள்ளன. எனவே, முதல் 2.2 இலட்சம் மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றிருக்க வேண்டும். 

அரசு பள்ளி மாணவர்களுக்கான கிடைமட்ட ஒதுக்கீடு (Horizontal quota)


கடின உழைப்பாளி மற்றும் புத்திசாலி மாணவர்கள் கூட சிறப்பு பயிற்சி இல்லாமல் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்று நம்ப முடியாத அளவுக்கு நீட் போட்டியாக மாறிவிட்டது. இன்று, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, முழுநேர பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக 2-3 ஆண்டுகள் செலவிடும் திரும்ப எழுதும் மாணவர்களுக்கு நீட் சாதகமாக உள்ளது. பணக்காரர்களும் உயர் நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே இதைச் செய்ய முடியும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் பணத்தைச் செலவழிக்க முடியாது அல்லது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்ளவோ முடியாது.


NEET தேர்வு என்பது ஏழைகளுக்கு எதிரான நியாயமற்றதாக உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரிகள் பெரும்பாலும் குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் பணியாற்றுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மருத்துவர்களை அதிகமாகக் கொண்டிருப்பது அவசியம்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைமட்ட ஒதுக்கீட்டை (horizontal quota) அறிமுகப்படுத்த வேண்டும். இந்த ஒதுக்கீடு வறுமை கோட்டிற்கு கீழ் (Below Poverty Line (BPL)) என்பது போன்று வருமான அடிப்படையிலானதாக இருக்கலாம். நீட் தேர்வில் ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் இது பயன்படுத்தப்பட வேண்டும். 2020-ம் ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைமட்ட ஒதுக்கீட்டை (horizontal quota) தமிழ்நாடு அரசு  அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றம் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை வியத்தகு முறையில் அதிகரித்தது. இந்த அணுகுமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்.


12-ம் வகுப்புக்கு மட்டும் மாணவர்கள் எளிதாக அரசுப் பள்ளிக்கு மாறலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு, தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவது போல,  9 ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்  கற்றிருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கலாம்.



Original article:

Share:

ஆய்வக இரசாயனங்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டது ஏன்? -ஜேக்கப் கோஷி

 நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான இரசாயனங்கள் என்ன? அறிவியல் ஆராய்ச்சிக்கு இந்த இரசாயனங்கள் எவ்வளவு முக்கியம்? எத்தனால் (Ethanol ) நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகிறதா?


விஞ்ஞானிகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து, இறக்குமதி (imported) செய்யப்பட்ட ஆய்வக இரசாயனங்கள் மீதான சுங்க வரி உயர்வை நிதி அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது.  


ஆய்வக இரசாயனங்கள் (laboratory chemicals) என்றால் என்ன?


இறக்குமதி செய்யப்பட்ட இரசாயனங்கள், காரணிகள் (reagents) மற்றும் நொதிகள் (enzymes) ஆய்வக இரசாயனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஏறக்குறைய எல்லா துறைகளிலும் அறிவியல் ஆராய்ச்சிக்கு இந்த இரசாயனங்கள் மிகவும் முக்கிமானவை. இந்த இரசாயனங்கள் ஆக்ஸிஜனேற்றிகள், அரிக்கும் அமிலங்கள் (corrosive acids) மற்றும் ஒடுக்கப்பட்ட வாயுக்கள் (compressed gas) ஆகியவை அடங்கும். ஆராய்ச்சியாளர்கள் சோதனைகளை நடத்தவும் புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆராய்ச்சிக்கு கூடுதலாக, மருத்துவ நோயறிதல் தொழில் இந்த ஆய்வக இரசாயனங்களை நம்பியுள்ளது. புனல்கள், பீக்கர்கள், சோதனைக் குழாய்கள் மற்றும் பர்னர்கள் போன்ற ஆய்வக கருவிகள் இந்த இரசாயனங்களுடன் தொடர்புடையவை. இந்த இரசாயனங்கள் அபாயகரமானவை மற்றும் பல்வேறு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவற்றின் இறக்குமதி கவனமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.


இந்த இரசாயனங்களில் பெரும்பாலானவை விலை உயர்ந்தவை. சுங்கத் துறை ஆய்வக இரசாயனங்களை கரிம அல்லது கனிம இரசாயனங்கள் என இரு வகைகளாக வரையறுக்கிறது. 500 கிராம் அல்லது அதற்கும் குறைவான தொகுப்புகள் மட்டுமே ஆய்வக இரசாயனங்களாக பயன்படுத்த வேண்டும். இந்த இரசாயனங்களின் தூய்மை, அல்லது பிற அம்சங்களால் அடையாளம் காணப்பட வேண்டும். 


பிரச்சனை என்ன ?


ஜூலை 23 அன்று, பட்ஜெட் ஆவணங்கள் ஆய்வகம் இரசாயனங்கள் மீதான அடிப்படை சுங்க வரியை (Basic Customs Duty (BCD)) 10%-லிருந்து 150%-ஆக உயர்த்தியது. உதாரணத்திற்கு, முன்பு ₹1,00,000 ஆக இருந்த ஒரு தொகுப்பு இரசாயனம் இப்போது ₹2,50,000-ஆக விலை உயரும். கூடுதலாக, ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்கள் மீதான வரி 25% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர், இது ‘தவறான நடவடிக்கை’ என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். பல மூத்த விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை தொடர்பு கொண்டனர். இருப்பினும், சுங்க வரிகளில் மாற்றங்கள் நிதி அமைச்சகம் (Ministry of Finance) மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் (Commerce Ministry) கையாளப்படுகின்றன.


இறக்குமதி செய்யப்பட்ட இரசாயனங்கள் ஏன் அவசியம்?


மருந்துகள் மற்றும் சிக்கலான இரசாயனங்கள் தயாரித்தல் மற்றும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து (indian research institutions) போதுமான உள்ளூர் தேவை இல்லை என்று உயிரியலாளர் டாக்டர் வினோத் ஸ்காரியா தி இந்துவிடம் கூறினார். இந்த தேவை இல்லாததால், நிறுவனங்கள் சிறப்பு இரசாயனங்கள் தயாரிக்கத் தேவையான பெரிய முதலீடுகளைச் செய்யத் தயங்குகின்றன. சோதனை ஆராய்ச்சியின் முக்கிய பகுதி மற்ற நாடுகளில் செய்யப்பட்ட சோதனைகளின் முடிவுகளைப் பிரதிபலிக்கிறது. இதற்கு பெரும்பாலும் அந்த சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட சரியான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.


பிரச்சனை எப்படித் தீர்க்கப்பட்டது?


150% சுங்க வரியைத் தவிர்ப்பதற்காக 'ஆய்வக இரசாயனங்கள்' என்று கொண்டுவரப்பட்ட எத்தனால் இறக்குமதியில் ஆட்சி செய்ய விரும்பியதால் சுங்கத் துறை இதைச் செய்தது.. எத்தனாலில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. தானிய அடிப்படையிலான எத்தனால் (sourced from grain): ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படுகிறது மற்றும் இயல்பு நீக்கப்பட்ட எத்தனால் (denatured ethanol): எத்தனால் சேர்க்கைகளுடன் கலந்து குடிக்க முடியாததாக ஆக்குகிறது. இந்த வகை எத்தனால் ஆய்வகங்கள் மற்றும் வணிக அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. 


புதிய நிதி அமைச்சக விதிகள் இன்னும் இந்த இரசாயனங்கள் கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம். வரி விகிதம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஆய்வக இரசாயனங்களும், ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு விற்கப்படாது என்பதான கடிதத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.



Original article:

Share: